எதிரியை அழிக்க கற்பழிப்பு வழக்கு

டில்லியில் காவல்துறையினரும் உளவியல் நிபுணர்களும் இணைந்து நிகழ்த்திய ஒரு கருத்தாய்வின்படி, டில்லியில் பதியப்பட்டுள்ள கற்பழிப்பு வழக்குகளில் ஐந்தில் ஒரு பங்கு கேசுகள் பொய்யாக சித்தரிக்கப்பட்டவை என்று கண்டறிந்திருக்கிறார்கள். தங்கள் எதிரிகளை பழிதீர்க்க இத்தகைய கற்பழிப்பு வழக்குகள் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பது தெரியவந்துள்ளது. சில கேசுகளில் குடும்ப சச்சரவுகளில்கூட வேண்டாதவர்களை துன்புறுத்த ஒரு இளம் பெண்ணை “ஐயோ, கற்பழித்து விட்டானே!” என்று கூச்சலிடச் செய்த நிகழ்வுகளைக் கண்டிருக்கிறார்கள் இந்தக் குழுவினர்.

இன்னும் 15% வழக்குகளில் சில இளம் பெண்கள் தன் இச்சைப்பட்டு செக்ஸில் ஈடுபட்டபின், அதன் பின் விளைவுகளை நினைத்து பயப்பட்டு, சம்பத்தப்பட்ட ஆண்கள்மேல் கற்பழிப்பு புகார்களை அளித்துள்ளார்கள் என்பதும் வெளிவந்துள்ளது.

ஆதாரம் : டைம்ஸ் ஆஃப் இந்தியா

நீங்கள் நினைக்கலாம், அவர்கள் வேறு வகை வழக்குகளை பதிவு செய்து எதிரிகளோடு சண்டையிட்டிருக்கலாமே, ஏன் கற்பழிப்பு வழக்கைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள், என்று.

இங்குதான் நம் சட்டமியற்றுபவர்களின் முட்டாள்தனம் தெளிவாகிறது. எந்தவித சாட்சியமும் தேவையில்லை, சாட்சியச் சட்டம் (Evidence act) இதில் அமுல் செய்யப்படமாட்டாது. ஒரு பெண்ணோ அவருடைய பெற்றோரோ புகார் கொடுத்தால் போதும், முழுமையாக கூற்றம் நிரூபிக்கப்படக்கூட அவசியமில்லை, குற்றம் சாட்டப்பட்ட ஆணுக்கு (கவனியுங்கள், ஆணுக்கு மட்டும்!) தணடனை என்று சட்டமியற்றினால் அது துர்பிரயோகம் (தவறான பயன்பாடு) செய்யப்படாமல் இருக்குமா?

கற்பழிப்பு, வரதட்சணை சாவு, வரதட்சணை கேட்டு துன்புறுத்தல், மனைவியை தற்கொலைக்குத் தூண்டுதல் (கனவனை மனைவி தூண்டினால் இந்தச் சட்டம் பாயாது) இதுபோன்ற சட்டங்கள் இத்தகைய வகையைச் சார்ந்தவை. இவை அநேகமாக பொய் வழக்குகள்தான். இத்தகைய வழக்கு நடைமுறையில் நிறைய பணம் விளையாடுகிறது.

அசத்தியமேவ ஜயதே!

கள்ளத் தொடர்புச் சட்டம்: திருத்த ஆண்கள் கோரிக்கை

சென்னை: "இந்தியாவில் கள்ளத் தொடர்புகளின் பாதிப்பு பெருகிவிட்டது. இது தொடர்பான சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்" என, தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்புச் சங்கம், முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது: சமீப காலமாக இந்தியாவில் கள்ளத் தொடர்புகளும், அதன் காரணமாக கொலைகளும் அரங்கேறி வருகின்றன.


இந்தச் சமூக அவலத்தில் தவறு செய்யும் கணவன்,மனைவி மட்டும் பாதிக்கப்படுவது இல்லை. அவர்களது குழந்தைகள் அனாதைகளாகி விடுகின்றனர். இது இந்திய கலாசாரத்திற்கு முற்றிலும் விரோதமானது. இது உடனடியாக தடுக்கப்பட வேண்டும். இப்பிரச்னையின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ள மத்திய அரசு இந்தியத் தண்டனைச் சட்டம் 497ல் சில திருத்தம் கொண்டுவர முடிவு செய்து, மாநில அரசுகளின் கருத்தைக் கேட்டுள்ளது.
இதுவரை இந்திய தண்டனைச் சட்டம் 497ல், கள்ளத் தொடர்பில் ஈடுபடும் ஆண்கள் மட்டுமே தண்டனை பெற்றுள்ளனர். பெண்களுக்கு விதி விலக்களித்து, பாதிக்கப்பட்டவராக பாவித்து விடுவித்ததன் விளைவாக, இன்று இந்தியாவில் கள்ளத் தொடர்புகளின் பாதிப்பு பெருகிவிட்டது. "சட்டங்கள் கடுமையானால் தான் குற்றங்களை குறைக்க முடியும்' என்பதை கருத்தில் கொண்டும் இந்திய கலாசாரம் மற்றும் பண்பாட்டை பாதுகாக்கவும், கள்ளத் தொடர்பில் ஈடுபடும் ஆண் - பெண் இருவரும் தண்டனைக்கு உட்பட்டவர்கள் தான் என்கிற வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள தமிழக அரசும், மத்திய அரசும் பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
செய்தி: தினமலர்

ஒரு பொய் வழக்கின் பாதிப்பு

இபிகோ 498A பிரிவின்கீழ் போடப்படும் பொய் வழக்குகளில் யாரை வேண்டுமானாலும் குற்றவாளியாகச் சேர்த்துவிடலாம். கணவன், அவனுடைய வயதான பெற்றோர்கள், அவனுடைய உடன்பிறந்த பெண்கள், அவர்களுடைய 2, 3 வயதுக் குழந்தைகள், அண்டை வீட்டுக்காரர்கள், அவர்களுடைய நண்பர்கள், மேலும் (கற்பனையில் ஜோடிக்கப்பட்ட) வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்திய நிகழ்வின்போது, உடனிருந்து அதற்குத் துணை போனதாக தங்களுக்கு வேண்டாதவர்கள் பெயர்களையும் சேர்த்துக் கொள்ளலாம். இந்தச் சட்டத்திற்குத்தான் விசாரணையே கிடையாதே! புகார் கொடுத்தவுடனேயே, அந்தப் புகாரில் பட்டியலிடப்பட்ட அனைவரையும் - அது 85 வயது மூதாட்டியாக இருந்தாலும் சரி, 3 வயது குழந்தையாக இருந்தாலும் சரி - கைது செய்து லாக்கப்பில் போட்டு விடுவார்கள். அதுவும் வெள்ளியன்று இரவு. அவர்கள் திங்கட்கிழமை கோர்ட்டு திறந்த பிறகுதான் ஜாமீனுக்கு மனு கொடுக்கமுடியும். அங்கும் சென்று அவர்களுக்கு ஜாமீன் கொடுக்கக்கூடாது என்று கடுமையாக வாதிடுவார்கள்.

இந்த 498A வழக்குகளின் பரிமாணத்தை ஒரு கற்பனை உதாரணத்தின் மூலம் விளக்க முற்படுகிறேன்.

இதுபோல் 498A வழக்குப் போடும் ஒரு மனைவி எல்லா தமிழ் வலைப் பதிவுகளையும் விடாமல் படிப்பவர். “கோண்டு மாமா” என்னும் வலைப்பதிவர் ’தன் “கார்”தான் ஒசத்திக் கார்’ என்று கூவிக் கொண்டிருக்கிறார் என்பதால் அவர்மேல் மிகுந்த கோபம். அவர்மேல் பழி வாங்க இதுதான் தக்க தருணம் என்று முடிவு செய்து அந்தப் பெண்குலத் திலகம், தன் புகாரில் ’பலான “கோண்டு” என்பவர் தன் கணவனின் நண்பர். அவரும் சேர்ந்துதான் என்னைக் கொடுமைப் படுத்தினார்’ என்று சேர்த்து விட்டார்.

அவ்வளவுதான். அவரும் கைது செய்யப்பட்டார். பாவம், அப்போதுதான் அவர் ஒரு வலைப்பதிவர் சந்திப்பில், மைசூர் போண்டாவைப் பிய்த்து சாம்பாரில் தோய்த்து வாயில் போட்டுக்கொண்டு, போண்டாவுக்கு ஸ்காண்டினேவியா மொழியில் என்ன பெயர் என்று விளக்கிக் கொண்டிருந்தார்!

அவரைக் கைது செய்யப் போவதாகக் கூறியவுடன் பாவம் கோண்டு மாமா திகைத்துப் போய்விட்டார். ஆனாலும் சிறிது நேரத்தில் சுதாரித்துக் கொண்டு, “கைது செய்வதுதான் செய்கிறீர்கள். எப்படியும் நான் சீக்கிறமே ஜாமீன் வாங்கிவிடுவேன். ஆனால் என் வலைப்பதிவுக்குச் சென்று இரண்டு பின்னூட்டம் போட்டு விட்டுச் செல்லுங்கள்” என்று அந்த காவல்துறையினரைக் கேட்டுக்கொண்டதாக ஒரு செய்திச் சிதறல்!

(மேலே குறிப்பிடப்பட்ட கதை முழுதும் கற்பனையே)

ஐ.பி.எஸ். அதிகாரிக்கு 83 வயதில் விவாகரத்து

டிசம்பர் 28,2008 - நன்றி: தினமலர்

புதுடில்லி: மனைவியை விட்டு பிரிந்து 40 ஆண்டாக தனியாக வாழும் ஐ.பி.எஸ்.,அதிகாரிக்கு 83 வயதில் இப்போது விவாகரத்து கிடைத்துள்ளது.

டில்லியில் வசிப்பவர் கிஷன் பலானி; ஐ.பி.எஸ்., அதிகாரி. இவர் மனைவி விமலா; கருத்துவேறுபாடு காரணமாக நாற்பதாண்டாக இவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்தாண்டு குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கோரி மனு செய்தார் கிஷன்.

இதை விசாரித்த கோர்ட்,"இருவரும் பல ஆண்டாக பிரிந்து வாழ்வதால், இவர்கள் சேர்ந்து வாழ வாய்ப்பே இல்லை' என்று முடிவுக்கு வந்து, ஆதாரங்கள் அடிப்படையில் கிஷனுக்கு விவாகரத்து அளித்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, டில்லி ஐகோர்ட்டில் விமலா அப்பீல் செய்தார். இதன் மீதான விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, "எனக்கு மார்பக புற்றுநோய் உள்ளது. இதற்கு என் கணவர், கருத்து வேறுபாடு காரணமாக, மருத்துவ சிகிச்சை அளிக்காமல் மறுத்து வருகிறார்” என்று குற்றம் சாட்டினார்.

மத்திய அரசின் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் படி கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், விமலா காலம் தாழ்த்தி, தொடர்ந்து கணவர் மீது புகார் கூறி வந்தார். இந்த நிலையில், சமீபத்தில் ஐகோர்ட்டில் அப்பீல் மீதான இறுதிக்கட்ட விசாரணை நடந்தது. விசாரணைக்குப் பின், கிஷனுக்கு மனைவியிடம் இருந்து விவாகரத்து அளித்த குடும்ப நல கோர்ட் உத்தரவை உறுதி செய்தது.

நீதிபதி குப்தா தன் தீர்ப்பில்,"நாற்பதாண்டாக கணவன் - மனைவி என்று எந்த வகையிலும் இருவரும் சேர்ந்திருக்கவில்லை. இந்த நிலையில், உடல் நிலை சரியில்லாத போது, அவருக்கு சிகிச்சை அளிக்க கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், கணவன் மீது தொடர்ந்து குற்றம் சாட்டிக்கொண்டிருப்பது சரியல்ல. நாற்பதாண்டாக, தனிமையில் தவிப்பதையும், மன வேதனை அடைந்திருப்பதையும் கணவன் சொல்வதை கோர்ட் ஏற்றுக்கொள்கிறது. அவருக்கு விவாகரத்து அளிப்பது சரிதான் என்றும் முடிவு செய்கிறது' என்று தெரிவித்தார்.
----------------------
நம் நாட்டில் திருமண சட்டங்கள் எவ்வளவு அறிவுக்கு ஒவ்வாததாக அமைந்திருக்கின்றன தெரியுமா!

கணவனைத் தற்கொலைக்குத் தள்ளிய காரிகை

”மனைவியின் பொய்ப்பேச்சை மட்டும் கேட்டு கணவனுக்கு எதிராக காவல்துறை கடுமையாகச் செயல்படும்போது கணவனைக் காப்பாற்றுவது யார்? அந்த ஆண்டவன்தான் காப்பாற்றவேண்டும்!” என்று கூறியபடியே தன் தலையில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு
முயன்றான் ஒரு அப்பாவிக் கணவன்.

இது 2008 டிசம்பர் 24-ம் நாள் சென்னை நீலாங்கரை காவல்நிலையம் முன்பு நிகழ்ந்தது. அந்த கணவனின் பெயர் மோஹன். வயது 38. வெட்டுவான்கனியைச் சேர்ந்தவர்.

ஆனால் அவr தன்மேல் தீயைப் பற்Raவைத்துக்கொள்ளுமுன் ஒரு போலீஸ்காரரால் தடுக்கப்பட்டார். அதன்பின் அந்தக் கணவன் தற்கொலைக்கு முயற்சித்ததற்காக கைது செய்யப்பட்டான்.

அவன் ஏன் தற்கொலைக்குத் துணிந்தான்?

அவனுடைய மனைவி, கணவன் தன்னைக் கொடுமைப்படுத்தியதாக அவன்மேல் ஒரு பொய்ப் புகார் அளித்துள்ளாள். அந்தப் புகார் உண்மையானதுதானா என்பதை விசாரிக்காமல் போலீசார் இந்தக் கணவனை கைது செய்ய அவனுடைய வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

”நான் தினக்கூலிக்காரன். என் சொல்ப ஊதியத்தில்தான் என் குடும்பம் நடக்கிறது. அன்றாட வாழ்க்கைக்கான தேவைகளுக்கே என் ஊதியம் போதாமல் கஷ்டப்படும் நிலை. ஆனால் திடீரென்று என் மனைவி ரூ.5000 கொடுத்து ஒரு செல்ஃபோன் வாங்கியிருக்கிறாள். அந்தப் பணம் அவளுக்கு எங்கிருந்து வந்தது என்று கேட்டதற்காக நான் அவளைக் கொடுமை
செய்ததாக போலீசில் புகார் கொடுத்திருக்கிறாள். இந்த நாட்டில் ஒரு பெண் என்ன சொல்கிற்றாளோ, அதுதான் உண்மையாக ஏற்கப்படுகிறது. ஆண்கள் என்றாலே அவர்கள் எல்லோரும் கயவர்கள், கிரிமினல்கள் என்று முடிவு செய்துவிடுகிறார்கள். இந்த நிலையைக் கண்டு வெறுத்துப் போய்த்தான் நான்
தற்கொலைக்கு முயற்சித்தேன்” என்கிறார் அந்த மோகன்.

அது சரி, ஒரு மனைவி தற்கொலைக்கு முயற்சித்தால் என்றால்உடனே அவளுடைய கணவனை வளுடைய தற்கொலைக்குத் தூண்டினான் என்று கூறி கைத்து செய்துவிடுகிறார்களே. ஏன் அந்த மனைவியை இந்தக் கேசில் கைது செய்யவில்லை?

நல்ல மனம் படைத்த நண்பர்களே, நீங்கள் அனைவரும் சென்னை போலீஸ் கமிஷன்ருக்கு, போன் மூலமாகவோ, ஈமெயில் மூலமாகவோ, உடனே அந்தப் பெண்ணை கைது செய்யும்படி கோருங்கள்!

சென்னை போலீஸ் கமிஷனர் ஃபோன் நம்பர்: 044-044 - 28511003
ஈமெயில் : cop(@)vsnl.net

சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் : 044 - 23452549
ஈமெயில் : copmount(@)hotmail.com

J2
அடையாறு 044-24913552

செய்தி - மைநேஷன்

மூலம்: டெக்கன் கிராணிகிள்

மகன் செத்தாலும் பரவாயில்லை, புருஷன் மேல் போட்ட வழக்குதான் முக்கியம்!

சென்னை: மூளை செயலிழந்த சேலம் சிறுவனின் உடலுறுப்புகளை தானம் கொடுப்பதில் தந்தை கையெழுத்திட மறுத்ததால், சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே பூசாரிப்பட்டியைச் சேர்ந்தவர் கீதா. இவரது மகன் நாஞ்சில் வளவன் (8). கடந்த திங்கள் கிழமை பள்ளிக்குச் சென்றபோது மயங்கி விழுந்துவிட்டதாக கீதாவிற்கு தகவல் வந்தது. நாஞ்சில் வளவனின் மூளை செயலிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். நாஞ்சில் வளவனின் உடலுறுப்புகளை தானம் செய்வதாக கீதா கூறினார். சிறுவன், நேற்று அதிகாலை சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டான்.
டாக்டர்கள் செய்தது என்ன? : பரிசோதித்த டாக்டர்கள், நாஞ்சில் வளவனின் சிறுநீரகம் மற்றும் கல்லீரலை எடுத்து மற்றவர்களுக்கு பொருத்தலாம் என்றும், சிறுநீரகத்தை, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 15 வயது பெண்ணுக்கு பொருத்தலாம் என்றும் தெரிவித்தனர்.

உடலுறுப்பு தானம் பெறுவதற்கு முன், சம்பந்தப்பட்டவரின் பெற்றோரிடம் கையெழுத்து வாங்குவது வழக்கம். அது போல் நாஞ்சில் வளவனின் பெற்றோரிடம் கையெழுத்தை டாக்டர்கள் கேட்டனர். தாய் கீதா மட்டும் கையெழுத்து போட்டார். தந்தை வரவில்லை எனக் கூறினர்.டாக்டர்கள், "தந்தையின் ஒப்புதல் கையெழுத்து இருந்தால் தான் உடல் உறுப்பு தானம் செய்ய முடியும்; அதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். இல்லையேல் சட்டசிக்கல் ஏற்படும்' என்று கூறினர்.

மருத்துவமனை நிர்வாக அதிகாரிகள், நாஞ்சில் வளவனின் தந்தை இளங்கோவிடம் டெலிபோனில் பேசினர்.இளங்கோ, தனது மகனின் உடலுறுப்புகளை தானம் செய்ய பேச்சளவில் சம்மதம் தெரிவித்தார். எழுத்துப் பூர்வமாக கொடுக்க மறுத்துவிட்டார். இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம், நாஞ்சில் வளவனின் உடல் உறுப்புகளை தானம் பெறுவதை நிறுத்தி வைத்துள்ளது.

இரண்டு ஆண்டு சிறை எதற்கு?

இளங்கோவிற்கும், கீதாவிற்கும் ஒன்பது ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இரண்டு ஆண்டுகளில் இளங்கோ, வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கீதா, போலீசில் புகார் செய்துள்ளார். இதன் பிறகு இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.வரதட்சணை கொடுமை சம்பந்தமாக தொடுக்கப்பட்ட வழக்கில் இளங்கோவிற்கு இரண்டு ஆண்டு சிறை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இளங்கோ இந்தத் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்துள்ளதாக தெரிகிறது. கீதாவும் இளங்கோவிற்கு தண்டனையை அதிகரிக்கக் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளாராம்.தன் மீது உள்ள வழக்குகளை வாபஸ் வாங்கினால் வந்து கையெழுத்திடுவதாக இளங்கோ கூறியுள்ளார்.

அதைக் கேட்ட கீதாவும், உறவினர்களும், "நாஞ்சில் வளவன் செத்தாலும் பரவாயில்லை; வழக்கை வாபஸ் வாங்க முடியாது" என்று மருத்துவமனையில் கூச்சலிட்டனர்.மேலும், "மருத்துவமனை நிர்வாகம், நாஞ்சில் வளவன் உடலுறுப்புகளை தானம் பெற்றே தீரவேண்டும்' எனக் கூறி கீதா, மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து கூச்சலிட்டு, அழுது புரண்டார். அப்போது போலீசார் வந்து கீதாவை சமாதானப்படுத்தி, அப்புறப்படுத்தினர்.
மறுபடியும் டாக்டர்கள் மற்றும் போலீசார், இளங்கோவிடம் பேசினர். அவர்கள், இளங்கோவை அழைத்து வர சேலம் போலீசார் ஏற்பாடு செய்திருப்பதாகக் கூறியுள்ளனர்.இளங்கோ வருவாரா வரமாட்டாரா என புரியாத நிலையில், உறுப்பு தானம் பெற ஓர் உயிரும், தானம் அளிக்க போராடிவரும் ஓர் உயிரும் காத்துக் கொண்டிருக்கின்றன.

கணவன்-மனைவி பிரச்னை - லஞ்ச பெண் எஸ்.ஐ. கைது

அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் “கட்டப் பஞ்சாயத்து” நிலையங்களாக மாறிவருகின்றன. இதற்கு முன்பே ஒரு இன்ஸ்பெக்டர் லஞ்ச ஊழலில் கைதானார்.

முழுதும் தவறான பயன்படுத்தலுக்காகவே ஒரு சட்டத்தை (Sec 498A of IPC) இயற்றிவிட்டு, அதை அமுல்படுத்தும் துறையினர் யோக்கியர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க இயலுமா?

மிரட்டி காசு பிடுங்கும் கூட்டுக் களவாணித்தனத்திற்காகவே இந்தச் சட்டம் பயன்படுகிறது.

இந்தச் செய்தியை வாசியுங்கள்:-

டிசம்பர் 24,2008 - தினமலர்

சென்னை: கணவன், மனைவி பிரச்னையில் வழக்குப் பதிவு செய்ய 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ., கைது செய்யப்பட்டார். சென்னை மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய எஸ்.ஐ., அனிதா; போலீசாக இருந்தவர், 2004ம் ஆண்டு போலீஸ் இட ஒதுக்கீட்டில் எஸ்.ஐ.,யாக தேர்வானார்.மயிலாப்பூரைச் சேர்ந்தவர் அபர்ணா, அழகு கலை நிபுணராக உள்ளார். இவரது கணவர் சதீஷ், டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக மூன்று ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். தனியாக வாழ்ந்து வந்த அபர்ணாவுக்கு, தொல்லைகள் கொடுத்தார் சதீஷ். "பிரிந்து வாழும் கணவர் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொல்லை கொடுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மயிலாப்பூர் போலீசில் அபர்ணா புகார் கொடுத்தார். எஸ்.ஐ., அனிதா விசாரணை நடத்தினார். மனைவி அபர்ணா மீது, மயிலாப்பூர் போலீசில் சதீஷ் புகார் கொடுத்தார். அப்புகாரை பதிவு செய்த எஸ்.ஐ., புகார் மனு ரசீது கொடுத்தார். அபர்ணா கொடுத்த புகாரை கிடப்பில் போட்டார். இவரது புகாரில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய 1,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். முன்தொகையாக 500 ரூபாய் கொடுத்த அபர்ணா, மீதித் தொகையை பிறகு தருவதாக கூறிச் சென்றார். இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி., லட்சுமியிடம் புகார் கொடுத்தார். டி.எஸ்.பி., சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

ரசாயன கலவை பூசப்பட்ட 500 ரூபாய் லஞ்ச பணத்தை எஸ்.ஐ.,யிடம் அபர்ணா கொடுத்தார். அதை வாங்கிய எஸ்.ஐ., அனிதாவை, தனிப்படை போலீசார் கைது செய்தனர். மயிலாப்பூர் அப்பாசாமி தெருவில் வாடகை வீட்டில் எஸ்.ஐ., வசித்து வந்தார். தனிப்படை போலீசார், எஸ்.ஐ.,யின் வீட்டில் சோதனை நடத்தினர். விசாரணைக்கு பின் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
----------

தொடர்பான பதிவுகள்:-

1. கட்டப்பஞ்சாயத்து போலீஸ்
2. பெண் போலீஸாருக்கு ஐகோர்ட்டு சாட்டையடி!
3. வாலிபரின் கையை உடைத்த பெண் போலீஸ்

ஆண்பாவ சாபத்தில் சிக்கிய திருச்சி போலீஸ்

”ஐயோ, இது ஆண்டவனுக்கே அடுக்காது. இனிமே அதுகூட குடும்பம் நடத்த முடியாது. தினமும் நான் படற பாடு எனக்குத்தான் சார் தெரியும். எப்படியாவது என்னை இந்த நரகத்திலேயிருந்து காப்பாத்துங்க...”


இப்படி அலறும் குரலுக்குச் சொந்தக்காரர் ஒரு பெண் என்று நினைத்தால்,... சாரி! திருச்சியைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரின் குரல்தான் இது!

மேலும் வாசியுங்கள்:-






>


செய்தி: ஜூனியர் விகடன்

நாத்தனார்கள் ஜாக்கிறதை

நீங்கள் ஆண்பிள்ளையா? உங்களுக்கு உடன் பிறந்த சகோதரி யாரேனும் உண்டா? அப்படியானால் உங்கள் திருமணத்தால் அவர்களும் சிறைவாசம் அனுபவிக்க நேரிடும். இந்தச் செய்தியை வாசியுங்கள்.
------------
வடமதுரை அருகே பெண்ணிடம் வரதட்சணை கொடுமை - கணவர், நாத்தனார் கைது.

வடமதுரை,டிச.21-2008

பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக, அவரது கணவர் மற்றும் நாத்தனாரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த பெண்ணின் மாமனார், மாமியார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உள்ள காப்பிளியப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது28). கம்பி கட்டும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரோஜா (23). இவர்களுக்கு திருமணம் நடந்து 4 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.திருமணத்திற்கு முன்பு கார்த்திக் வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். அதில் நஷ்டம் ஏற்படவே கம்பி கட்டும் வேலைக்கு சென்றார்.

இந்நிலையில் கார்த்திக் தனது மனைவியிடம், மீண்டும் வட்டிக்கு பணம் கொடுக்கப்போகிறேன். எனவே உன் பெற்றோரிடம் ரூ.1 லட்சம் பணம் வாங்கி வா என்று கேட்டு கொடுமைப் படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் கணவர்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ரோஜா வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னக்கிளி வழக்கு பதிவு செய்து, கார்த்திக் மற்றும் ரோஜாவின் நாத்தனார் கவிதா ஆகியோரை கைது செய்தார்.மேலும் ரோஜாவின் மாமனார் முத்துதேவர், மாமியார் சுப்பம்மாள் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இன்னொரு கணவனைக் கொன்ற காரிகை

விவசாயி மீது காரை ஏற்றி படுகொலை செய்த மனைவி

பழனிசெட்டிபட்டி, டிச.20- 2008

தேனி அருகே விவசாயி மீது காரை ஏற்றி படுகொலை செய்த மனைவி உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தேனி அருகே உள்ள கோடாங்கிப்பட்டியை அடுத்துள்ள திருச்செந்தூர் கிராமத்தினை சேர்ந்தவர் பாண்டி(வயது65), விவசாயி. இவருக்கும் இவரது மருமகன்களான ஜெயபிரபு(29), ரமேஷ் ஆகியோருக்கும் சொத்து பிரிப்பது தொடர்பாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை 8 மணியளவில் தேனி- போடி சாலையில் பாண்டி நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக எதிரே வந்த கார் இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பாண்டி சம்பவ இடத்தி லேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து பாண்டியின் உறவினர் வல்லவன் (42), பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாண்டியின் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பாண்டி விபத்தில் இறக்கவில்லை என்பதும், சொத்து பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரது உறவினர்களே கொலை செய்ததும் தெரிய வந்தது.

அவரை அவரது மனைவியான பாக்கியலட்சுமி, மருமகன்கள் ஜெயப்பிரபு, ரமேஷ் மற்றும் உறவினரான அனுமந்தன் பட்டியைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோர் காரை ஏற்றி கொலை செய்ய திட்டமிட்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.இதனை அடுத்து பாண்டியை காரை ஏற்றி கொன்றதாக அவரது மனைவி பாக்கியலட்சுமி உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கள்ளத்தொடர்பை கண்டித்ததால் கணவரை குத்திக்கொன்ற மனைவி

கொலையும் செய்வாள் பத்தினி!

சென்னை, டிச.19-2008: செய்தி: தினத்தந்தி

கள்ளத்தொடர்பை கண்டித்த கணவரை கத்தியால் குத்திக்கொன்றுவிட்டு இளம்பெண் தப்பியோடிவிட்டார்.

சென்னை லாட்ஜில் நடந்த பரபரப்பான இந்த படுகொலை சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:

சென்னை டி.பி. சத்திரம் மெயின் ரோடு 156-வது பிளாக்கை சேர்ந்தவர் பிரவீன் (வயது 32). ஆட்டோ டிரைவர். இவருக்கும் பெரம்பூரை சேர்ந்த நிக்கோலஸ் (வயது 27) என்பவருக்கும் 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. நிக்கோலஸ் ஆங்கிலோ-இந்திய பெண் ஆவார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

திருமணம் ஆனது முதல் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. நிக்கோலசுக்கு நிறைய ஆண் நண்பர்களுடன் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதை பிரவீன் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரவீனை விட்டு நிக்கோலஸ் பிரிந்து சென்றுவிட்டார். மனைவியை சேர்த்து வைக்கும்படி பிரவீன், போலீஸ் கமிஷனிரிடம் மனு கொடுத்தார். போலீசார் இருவரையும் சமாதானப்படுத்தி சேர்த்து வைத்தனர்.

கடந்த 10 நாட்களாக பிரவீனும், நிக்கோலசும் வீட்டிற்குச் செல்லாமல் குழந்தைகளுடன் அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்தனர்.

ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தாலும் அவர்களுக்கு இடையே இனிமையான வாழ்க்கை நடக்கவில்லை. தொடர்ந்து சண்டை போட்டபடியே இருந்தனர். இந்த நிலையில், நேற்று மாலை நிக்கோலஸ் லாட்ஜ் அறையில் இருந்து பதறியபடி வெளியே கைகளில் ரத்தக்கறையோடு ஓடிவந்தார்.

இந்த காட்சியைப் பார்த்ததும் லாட்ஜ் மானேஜர் என்னவோ ஏதோ என்று பதறியபடி அறைக்கு ஓடினார். அங்கு அவர் கண்ட காட்சி அதிர்ச்சியடைய வைத்தது. பிரவீன் ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டு படுக்கையில் பிணமாக கிடந்தார்.

அவரது நெஞ்சு கத்தியால் குத்தி பிளக்கப்பட்டிருந்தது. மூன்று குழந்தைகளும் அவரைச்சுற்றி அழுதபடி நின்றனர்.

தப்பியோட்டம்

இந்த சம்பவம் தொடர்பாக உடனே அமைந்தகரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் அண்ணாநகர் துணை கமிஷனர் பாண்டியன் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் விஜயகுமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்மோகன்ராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பிரவீனின் உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். கணவரை கொலை செய்துவிட்டு நிக்கோலஸ் தப்பியோடியது தெரிய வந்தது. அவரை பிடிக்க போலீசார் வலைவிரித்துள்ளனர்.

தந்தையை இழந்து, தாயையும் கொலைகாரியாக பறிகொடுத்துவிட்டு மூன்று குழந்தைகளும் கதறி அழுதபடி இருந்த காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

------------

இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளிவந்துள்ள இதுபற்றிய துண்டுச் செய்தி: “எங்கள் தாய்தான் எங்கள் அப்பாவைக் குத்திக் கொன்றுவிட்டாள்” என்று அந்தக் குழந்தைகள் கதறியவண்ணம் இருந்தன என்பதுதான்.

அதனால்தான் சொல்கிறேன், வேண்டாம் இந்தத் திருமணம் என்னும் பாம்புப் புற்று என்று!

ஐயோ பாவம் ஆண்கள் - ராணி கட்டுரை

தினத்தந்தி குழுமத்திலிருந்து வெளிவரும் "ராணி" வார இதழ் 21-12-2008 தேதியிட்ட பதிப்பில் இந்த இபிகோ 498A சட்டத்தின்படி தொடுக்கப்படும் பொய் வழக்குகளில் சிக்கித் தவிக்கும் ஆண்கள் மற்றும் அவர்தம் பெற்றோர் பற்றி விரிவாக எழுதியுள்ளார்கள். அதன் மின்வடிவை இதன்கீழ் இட்டிருக்கிறேன். அதைப் பெரிதாக்கி வாசித்துவிட்டு, உங்கள் மேலான கருத்துகளை தெரிவியுங்கள். மேலும் இதுபோல் கெடுமதி கொண்ட பெண்கள் பொய் வழக்குகளைப் போட்டு குடும்ப வாழ்வு முறையையே கேலிக்கூத்தாக்கும் அவலத்தை தங்கள் வலைபதிவுகளிலும் எழுதி ஆண்களை எச்சரிக்கைப் படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.



வரதட்சணை கொடுத்த மணப்பெண் மீது வழக்கு


புதுடில்லி: மணக்கப்போகும் மணமகனுக்கு வரதட்சணை தந்ததாக மணப்பெண், அவரின் தாய், சகோதரர் மீது டில்லி பெருநகர கோர்ட்டில் போலீஸ் வழக்கு போட்டுள்ளது.


வரதட்சணை வாங்கியதாகத்தான், இதுவரை குற்றம்சாட்டி, போலீஸ் வழக்கு போட்டுள்ளது; தண்டனையும் வாங்கித் தந்துள்ளது; ஆனால், வரதட்சணை கொடுத்ததாக வழக்கு போட்டுள்ளது இதுவே முதன் முறை.


டில்லி நொய்டா பகுதியை சேர்ந்தவர் ஹரி; இவர் மனைவி சரிதா திடீரென தன் தாய் வீட்டுக்கு சென்று விட்டாள். "என்னை இன்னும் வரதட்சணை கேட்டு கொடுமை செய்கிறார் கணவர். அவருக்கு நாங்கள் கொடுத்த வரதட்சணை பணம் 12 லட்சம், காரை பறித்து எனக்கு விவாகரத்து பெற்றுத்தர வேண்டும்" என்று போலீசில் புகார் செய்தார் சரிதா.


இதையடுத்து, ஹரியை அழைத்து சிறையில் அடைத்த போலீசார், அவர் மீது வரதட்சணை கொடுமை வழக்கு (IPC Sec 498A) பதிவு செய்தனர்.


"மிக அதிகமாக வரதட்சணை தந்ததாக கூறும் அவர்கள் பொருளாதார நிலையை போலீசார் ஆராய்ந்து, அதன்பின், என் மீது வழக்கு போட வேண்டும். நான் நிரபராதி' என்று கூறிய ஹரி, மனைவி சரிதா மீது பதிலுக்கு புகார் தந்தார்.ஆனால், போலீசார் அதை ஏற்க மறுத்து விட்டனர். இதையடுத்து, தகவல் உரிமை சட்டத்தின் படி மனு செய்த அவருக்கு சாதகமான பதில் தகவல் கமிஷனரிடம் இருந்து வந்தது."என் மீது என் மனைவி கொடுத்த புகாரில் ஆதாரம் இல்லை; போலீசார் எந்த வகையில் வழக்கு பதிவு செய்துள்ளனர்" என்று தெரிய வேண்டும் என்று மனுவில் கேட்டிருந்தார் ஹரி."மனைவியின் வாய்வழி வாக்குமூலத்தின் ஆதராத்தின் பேரில்தான் ஹரி மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது" என்று தகவல் உரிமை சட்டப்படி, அவருக்கு பதில் வந்தது.


இதையடுத்து, கோர்ட் டில் பதில் மனு தாக்கல் செய்தார் ஹரி. "என் மீது திட்டமிட்டு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால், வரதட்சணை தடை சட்டத்தின் கீழ், என் மனைவி மீது நான் கொடுத்த புகாரை நிராகரித்து விட்டனர்" என்று மனுவில் கூறியிருந்தார்.அவர் கோரிக்கையை ஏற்ற பெருநகர கோர்ட் மாஜிஸ்திரேட், "வரதட்சணை கொடுத்தாலும் சட்டப்படி குற்றம். இந்த வகையில் மோசடி செய்த குற்றத்துடன், இந்த வழக்கையும், சரிதா, அவர் தாய், சகோதரர் மீது போலீஸ் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்.

(செய்தி: தினமலர்)

=================


இந்த நேர்மையற்ற சமூகத்தில் ஒரு ஆண்மகன் தன் உரிமையை நிலைநாட்ட, தனக்கு நேரும் அநியாயத்தை எதிர்த்து எப்படிப் போராடவேண்டியுள்ளது பார்த்தீர்களா?


ஆனால் திருமணம் என்ற புதைகுழியைத் தவிர்த்தால் ஆண்கள் நிம்மதியாக வாழலாம்.

500 தாத்தா, பாட்டிகள் வழக்கு


புதுடெல்லி, டிச.14: விவாகரத்து பெற்ற கணவன், மனைவியிடம் சிக்கித் தவிக்கும் தங்களுடைய பேரக் குழந்தைகளை பார்க்கவும், கொஞ்சவும் உரிமை கோரி 500க்கும் மேற்பட்ட தாத்தா, பாட்டிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.


வெளிநாட்டு கலாசாரமாக இருந்த விவாகரத்து, இப்போது இந்தியாவிலும் அதிகளவில் சாதாரணமாக நடக்கிறது. குறிப்பாக, டெல்லி மற்றும் மும்பை மாநகரங்களில் 40 சதவீத திருமணங்கள் விவாகரத்தில் முடிவதாக சமீபத்தில் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இதனால் பிரிந்து வாழும் கணவன், மனைவிக்கு இடையே அவர்களின் குழந்தைககள் சிக்கித் தவிக்கின்றனர். 99 சதவீத விவாகரத்து வழக்குகளில் பிள்ளைகள் தாயிடமே ஒப்படைக்கப் படுகின்றனர். பிள்ளைகளை பார்க்க தந்தைக்கு ஒரு வாரம் முறையோ அல்லது மாதம் ஒரு முறைதான் அனுமதி அளிக்கப்படுகிறது.


இது ஒருபுறம் இருக்க, "கணவன் - மனைவி இடையே ஏற்படும் சண்டையால் பேரக் குழந்தைகளை பார்க்கவும், பேசவும் முடியாமல் எங்களின் உரிமை பறிக்கப்படுவது எந்த வகையில் நியாயம்?" என்று டெல்லியில் 500க்கும் மேற்பட்ட தாத்தா, பாட்டிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

எனவே, விவாகரத்து செய்யும் பெற்றோரால் பாதிக்கப்படும் பிள்ளைகள், தாத்தா, பாட்டிகளுக்காக தனி வழிமுறை வகுக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் இவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். வயதான காலத்தில் எங்களுக்கு பேரக் குழந்தைகளிடம் பேசுவதும், கொஞ்சுவதையும் விட என்ன சுகம் இருக்கப் போகிறது. எனவே, விவாகரத்து பெற்ற கணவன், மனைவியிடம் யாரிடம் பேரக்குழந்தைகள் இருந்தாலும் அவர்களை எந்த நேரத்திலும் சென்று பார்க்கவும், பேசி கொஞ்சவும் எங்களுக்கு உரிமை அளிக்க வேண்டும் என்று மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

குழந்தைகளின் உரிமை

"பிரிந்த பெற்றோரின் பிள்ளைகளின் உரிமை அமைப்பு" (Children's Right Initiative for Shared Parenting - CRISP) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனமே, பாதிக்கப்பட்ட தாத்தா&பாட்டிகள் சார்பாக குரல் கொடுக்கிறது. இதன் தலைவர் குமார் ஜாகிர்தர் (இவர் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளேயின் மனைவியின் முந்தைய கணவர்) கூறுகையில், "விவாகரத்து பெறும் கணவனும் மனைவியும், தங்கள் குழந்தைகள் யாரிடம் இருக்க வேண்டும் என்பது பற்றி பல ஆண்டுகள் வழக்கு நடத்துகின்றனர். ஆனால், குழந்தைகளின் உரிமையைப் பற்றி யாரும் நினைத்து பார்ப்பது கிடையாது. கணவன் & மனைவி இடையே ஏற்படும் சண்டையால் குழந்தைகளும், அவர்களின் தாத்தா&பாட்டிகளும் ஏன் பாதிக்கப்பட வேண்டும்?" என்று கொதிக்கிறார்.

தனிக்குடுத்தனம் வைக்கவில்லையா, போடு வரதட்சணை வழக்கு!

சென்னை, டிச.13-2008 : செய்தி - தினத்தந்தி

பட்டதாரி மனைவி கொடுத்த வரதட்சணை கொடுமை புகாரின் பேரில், திருமணமான 8 மாதத்தில் புதுமாப்பிள்ளை கைது செய்யப்பட்டார்.

சென்னை ராயப்பேட்டை, சைவ முத்தையா தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 28). இவர் மெக்கானிக் வேலை பார்க்கிறார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடந்தது. இவரது மனைவி பெயர் கல்பனா (25).

திருமணத்திற்கு பிறகு கல்பனா கணவரின் வீட்டில் கூட்டு குடும்பத்தில் வாழ்ந்து வந்தார். மாமியார் திலகம், மைத்துனர் மகாலிங்கம், மைத்துனிகள் மீனாட்சி, மகாலட்சுமி ஆகியோரும் ஒரே வீட்டில் வாழ்ந்தனர்.
3 மாதங்கள் இனிதாக கழிந்த இல்லற வாழ்க்கையில் புயல் வீசி முருகன்-கல்பனா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் பிரிந்தனர். கல்பனா, கணவர் முருகனை விட்டு பிரிந்து பெருங்களத்தூரில் வசிக்கும் தனது பெற்றோர் வீட்டுக்கு போய்விட்டார்.

இந்த நிலையில், கல்பனா ராயப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

"நான் பட்டப்படிப்பு படித்துள்ளேன். திருமணத்தின்போது எனக்கு 25 சவரன் நகைகளையும், ரூ.50 ஆயிரம் ரொக்கப்பணத்தையும் என் பெற்றோர் வரதட்சணையாக கொடுத்தனர். மேலும் 15 சவரன் நகைகள் வரதட்சணையாக வேண்டுமென்று எனது கணவர் வீட்டில் வற்புறுத்தி வந்தனர். நாங்கள் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்ததால் எனது கணவரோடு நான் சந்தோஷமாக வாழ முடியவில்லை. தனிகுடித்தனம் செல்வதற்கு என் கணவரும் விரும்பவில்லை.

"செக்ஸ்' குறும்பு"

எனது கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில், என் கொழுந்தன் மகாலிங்கம் `செக்ஸ்' சேட்டைகள் செய்வார். இடுப்பை பிடித்து கிள்ளுவார். நான் குளித்துவிட்டு ஆடை அணிவதை ரகசியமாக பார்த்து ரசிப்பார்.
இதுபற்றியெல்லாம் என் கணவரிடம் கூறியபோதும், அவர் கண்டுகொள்வதில்லை. எனது மாமியாரும், மைத்துனிகளும் எனக்கு பெரும் தொல்லை கொடுத்து வந்தனர்.

இதனால் எனது கணவரை விட்டு பிரிந்து வந்துவிட்டேன். என் கணவரை மீண்டும் என்னோடு சேர்த்து வைத்து, தனி குடித்தனம் செல்லவும் உரிய ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு கல்பனா புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகார் மனு மீது உரிய விசாரணை நடத்தும்படி துணை கமிஷனர் மவுரியா உத்தரவிட்டார்.

பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிமேகலை, இந்த புகார் மனு தொடர்பாக விசாரணை நடத்தினார். முருகனையும், கல்பனாவையும் அழைத்து வந்து கவுன்சிலிங் மூலம் விசாரணை நடத்தி இருவரையும் ஒன்று சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். முருகன் தனி குடித்தனம் செல்ல விரும்பவில்லை என்றும், இதனால் கல்பனாவோடு சேர்ந்து வாழ முடியாது என்றும், ஜெயிலுக்கு போகவும் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

போலீசாரின் சமாதான முயற்சி பலிக்கவில்லை. இதனால் முருகன், அவரது தாயார், தம்பி மற்றும் தங்கைகள் இருவர் மீதும் வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முருகன் மட்டும் கைது செய்யப்பட்டார். மற்றவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது

-------------

இவள் தன் மச்சினன் செக்ஸ் குறும்பு செய்தான் என்றாள். இன்னும் சில பெண்குல சிகரங்கள் 80 வயது மாமனாரும், 3 வயது குழந்தையும் செக்ஸ் தொல்லை கொடுத்தார்கள் என்று புகார் கொடுப்பார்கள். இன்னும் சில புதுமைப் பெண்கள், "கணவனும் அவனுடைய தாயாரும் செக்ஸ் விளையாட்டுக்களில் ஈடுபட்டார்கள். தட்டிக் கெட்ட என்னை அடித்தர்கள்" என்று புகார் கொடுத்த கேசுகள் உண்டு. இதுபோல் பல "டெம்பிளேட்டுக்களை" வக்கீல்கள் கைவசம் வைத்திருப்பார்கள். கணவன்மேல் பொய்க் கேசு போடச் செல்லும் பத்தினிப் பெண்கள் தங்களுக்குத் தேவையான பொய்க் குவியல்களைப் பொறுக்கிக் கொள்வார்கள்!

ஆண்களே, இந்தக் கொடுமை உங்களுக்கு நிகழ வேண்டுமா? உங்களைப் பெற்ற பாவத்திற்காக உங்கள் பெற்றோர்களும் உடன் பிறப்புக்களும் இத்துணை கொடுமைகளையும் சிறுமைகளையும் அனுபவிக்கவேண்டுமா?

சிந்தியுங்கள்!

குடும்பத்தில் பிரச்னையா, போடு வரதட்சணை வழக்கு!

சமீபத்தில் "இப்படிக்கு ரோஸ்" என்னும் டி.வி நிகழ்ச்சியில் வழக்கறிஞர் அஜிதா என்பவர் (இவர் ஒரு பெண்ணியவாதி) ஒரு திடுக்கிடும் உணமையை வெளிப்படுத்தினார். அதாவது ஒரு மணமான பெண் தன் குடும்பத்தில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டு அதனால் மனக்கசப்பு தோன்றி, அதை எப்படித் தீர்த்து வைப்பது என்று இவர் போன்ற வக்கீல்களை அணுகினால், இவர்கள் அந்தப் பெண்களுக்கு உடனே சர்வ சாதாரணமாகக் கொடுக்கும் அறிவுரை, "IPC SEc. 498A-யில் (வரதட்சணைக் கொடுமைச் சட்டம்) கேசு போடலாம்" என்பதுதான்!

ஏனெனில் இதச் சட்டத்தின்படியான புகாரில் என்ன வேண்டுமானலும் எழுதலாம். சட்டம் மிகக் கடுமை என்பதால் கணவனையும் அவருடைய பெற்றோரையும் உடனே கைது செய்ய வைக்கலாம். வக்கீலுக்கும் சிரமப்பட்டு சட்ட நுணுக்கங்களுடன் வாதாடி வழக்கு நடத்த வேண்டிய தேவை இல்லை.

இது போன்ற புகாருக்கென்றே ஒரு template வைத்திருப்பார்கள். அதில் முதல் பாகத்தில் திருமணத்தின்போது இவ்வளவு நகை போட்டோம், இவ்வளவு பணம் கொடுத்தோம் என்றெல்லாம். இருக்கும். பின்னர் மேலும் பணம், நகை கேட்டு என்னைத் துன்புறுத்தினார் என்று எழுதப்படும்."துன்புறுத்தினார்(கள்)" என்பது மிக முக்கிய வாசகம். அது இல்லையென்றால் இந்த் 498A சட்டத்தை சேர்க்க முடியாது.

இதோ இன்றைய தினத்தந்தியில் வெளி வந்துள்ள செய்தியை காணுங்கள்.

திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகின்றது. இரண்டாவது குழந்தை இறந்து பிறந்த பிறகு ஒரு மனக்கசப்பு தோன்றியிருக்கிறது. அதற்குத் தீர்வு? போடு, 498A வழக்கு!
-----------

தேவகோட்டை அருகே நகை, பணம் கேட்டு மனைவியை சித்ரவதை செய்ததாக கணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தேவகோட்டை அருகே உள்ள சாலக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 34). இவருக்கும் தேவகோட்டை அருகே உள்ள கோட்டூர் நைனாவயல் கிராமத்தை சேர்ந்த தமிழ்செல்வி (29) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் போது 24 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை வழங்கப்பட்டது. இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் 2-வது குழந்தை பிறந்து இறந்தது. இதைத் தொடர்ந்து இருவருக்கும் கருத்து வேறு பாடு ஏற்பட்டது.

இதற்கிடையில் பாலசுப்பிர மணியன் வரட்சணையாக மேலும் தனக்கு பணம்-நகை தரவேண்டும் என தமிழ் செல்வியை கொடுமைப் படுத்தினாராம். இது குறித்து தமிழ் செல்வி தேவகோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ் பெக்டர் அமலராணி, சப்- இன்ஸ் பெக்டர் அனுராதா ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
--------------
கணவனையும் அவனுடைய பெற்றோரையும் கைது செய்து கொடுமைப் படுத்தி, ஆண்களை "வேண்டாமையா திருமணம் என்னும் புதைகுழி" என்று ஓடவைத்து, இந்திய நாட்டின் பாரம்பரிய குடும்ப வாழ்வு முறையே நாசம் செய்து முடிப்பதாக கங்கணம் கட்டிக் கொண்டு இது போன்ற கொடுங்கோல் சட்டங்களை நடைமுறைப் படுத்தி வருகின்றனர்.

நீங்கள் நினைக்கலாம், "அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏதோ சிலர் இந்தச் சட்டத்தை தவறாக பயன் படுத்துவார்களாக இருக்கும்; இதைப் போய் இந்த ஆள் பெரிது படுத்தி ஒரு வலைப்பதிவில் ஓலமிட்டுக் கொண்டிருக்கிறானே" என்று!

உண்மையில் இந்தப் பிரச்னையின் பயங்கரம் உங்களுக்குத் தெரியுமா? மத்திய அரசு ஆண்டு தோறும் குற்றங்கள் பற்றிய ஒரு புள்ளி விவரத்தை வெளியிடுகிறது. அது "தேசிய குற்றத் தரவு மையம்" (National Crime Records Bureau) என்னும் நிறுவனம் தயாரித்து அளிக்கிறது. அதனை http://ncrb.nic.in/ என்னும் வலைத்தளத்தில் காணலாம். அதில் கண்டுள்ளபடி 2007-ஆம் ஆண்டில் மட்டும் இந்த 498A சட்டத்தின்கீழ் பதியப்பட்ட வழக்குகள் 75,930 ஆகும். இது முந்தைய ஆண்டைவிட 20.3% அதிகம். இந்தச் சட்டத்தினால் இதுவரை சுமார் 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆண்டுதோறும் அதிகரித்து வரும் இந்தச் சட்ட துஷ்பிரயோகம், இன்னும் ஓரிரண்டு ஆண்டுகளில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவரையாவது பாதிக்கப்பட்டவராக ஆக்கிவிடும் என்பது திண்ணம்.

ஆண்கள் ஜாக்கிறதை!

நூதன வாடகைத்தாய் கலாசாரம்

சென்னையில் பரவும் நூதன வாடகைத்தாய் கலாசாரம் - ரூ.5 லட்சம் கொடுத்தால், சந்தோசத்தையும் கொடுத்து, குழந்தையும் பெற்றுக் கொடுப்பார்கள் - செல்போனில் பேசி அழைக்கிறார்கள்

சென்னை, டிச.8- செய்தி: தினமலர்

சென்னையில் பணம் வாங்கிக்கொண்டு, சந்தோசத்தையும் கொடுத்து, குழந்தையும் பெற்று கொடுக்கும் வாடகைத்தாய் கலாசாரம் தற்போது வேகமாக பரவி வருகிறது.

பணம் வாங்கிக் கொண்டு குழந்தை பெற்றுக்கொடுக்கும் வாடகைத்தாய் கலாசாரம் வெளிநாடுகளில் பிரபலமாக உள்ளது. இந்த கலாசாரம் இந்தியாவிலும் வட மாநிலங்களிலும் உள்ளது. தற்போது சென்னை நகரிலும் வேகமாக பரவி வருகிறது.

தற்போது செல்போனில் மர்ம பெண் ஒருவர் பேசி `வாடகைத்தாய் வேண்டுமா? அழகான பெண்கள் 5 பேர் உள்ளனர். ரூ.5 லட்சம் கொடுத்தால் ஒரு வருடம் உங்களுடன் தங்கி இருப்பார்கள். உங்கள் உயிர் அணுவையும், உங்கள் மனைவியின் கரு முட்டையையும் செயற்கை முறையில் சேர்த்து கரு உண்டாக்கி அந்த கருவை வயிற்றில் சுமந்து குழந்தை பெற்று கொடுக்கவும் தயார். அல்லது நீங்கள் குழந்தை பெற தகுதி உடையவராக இருந்தால், உங்கள் மனைவி சம்மதத்தோடு உங்களோடு உல்லாசமாக இருந்து, இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக் கொடுக்கவும் தயாராக உள்ளோம்' என்று சொல்கிறார்.

சென்னை கே.கே.நகரில் வாடகைத்தாய் சங்கம் வைத்துள்ளதாகவும், அந்த பெண்மணி சொல்கிறார். இந்த தகவல் சென்னை போலீசாருக்கும் தெரிய வந்துள்ளது.

உடல் உறவு மூலம் குழந்தை பெற்று கொடுப்பது சட்டப்படி தவறானது என்றும், அது வாடகைத்தாய் முறையில் வராது என்றும், அது நூதனமான விபசாரம் என்றும், போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.

இது பற்றி போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

---------------

ஆனால் நம்நாட்டு சட்டங்கள், நீதிபதிகள், ஊடகங்கள், சமுதாயத்திலுள்ள பெரிய மனிதர்கள் ஆகியோர் ஆண்கள்தான் கெட்டு அலைகிறார்கள் என்று ஓலமிடுகின்றனர்!

மனைவி தற்கொலை கேசுகள்

மனைவி தற்கொலை செய்துகொண்டதற்கு கணவனும் அவனுடைய பெற்றோரும்தான் காரணம் என்று அந்த மனைவியின் பெற்றோரோ அல்லது உறவினரோ, மரணத்திற்குப் பின் புகார் கொடுத்தால், அவர்கள் உடனே கைது செய்து விடுவார்கள். "வழக்குதான் நடக்குமே, வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டுத்தானே தண்டனை வழங்கப்படுகிறது" என்று நீங்கள் கேட்கலாம். அது நியாயமான கேள்வி. ஆனால் பலர் அறியாத ஒன்று என்னவென்றால், இதுபோன்ற மனவி தற்கொலை கேசுகளுக்காக தனிச் சட்டங்கள் உள்ளன. பொதுவான சட்டங்களான, சாட்சிகள் சட்டம் (Evidence Act) போன்றவை இவற்றிற்குப் பொருந்தா. மேலும் குற்றம் முழுதும் நிரூபிக்கப்படவேண்டாம். வெறும் சந்தேகம் மட்டும் இருந்தால் போதும் என்கிறது இந்தச் சட்டங்கள்.

ஆகையால்தான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன், இந்தியாவில் இந்தியப் பெண்களை மணந்துகொள்வது இந்திய ஆண்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் மிகவும் ஆபத்தானது. ஜாக்கிறதை!

இப்போது செய்திகளை வாசியுங்கள்:

1.மனைவியைத் தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை

தஞ்சாவூர் அருகே மனைவியை வரதட்சணைக் கேட்டு துன்புறுத்தி தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு ஆறாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபாநாசம் வடுகத்தெருவை சேர்ந்தவர் நாகராஜன் மகன் சக்திவேல் (26). இவர் பாபநாசத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் காசாளராக பணிபுரிந்து வந்தார். கபிஸ்தலம் தென்சறுக்கை கீதா மகள் ஜெயசுதா (20). இவர் பாபநாசத்தில் மளிகை கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது சக்திவேலுக்கும், ஜெயசுதாவுக்கு காதல் மலர்ந்து, இருவரும் 2006ம் ஆண்டு ஆக., மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்துக்கு பின் சக்திவேல் வரதட்சணைக்கேட்டு ஜெயசுதாவை அடிக்கடி துன்புறுத்தி வந்தார். 2007ம் ஆண்டு ஏப்., 26ம் தேதி பிரசவ செலவுக்காக ஜெயசுதா வங்கியில் இருந்து ரூ.ஆயிரத்தை எடுத்து வந்தார். அந்த பணத்தை தருமாறு சக்திவேல், ஜெயசுதாவை அடித்து துன்புறுத்தினார்.

இதனால், மனமுடைந்த ஜெயசுதா உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்தார். பலத்த தீக்காயமடைந்த ஜெயசுதா தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, 2007ம் ஆண்டு அக்., ஏழாம் தேதி இறந்தார்.

இதுகுறித்து, ஜெயசுதாவின் தாயார் கீதா கொடுத்தப்புகாரின் பேரில் பாபநாசம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். தஞ்சாவூர் மாவட்ட செஷன்ஸ் நீதிபதி சதீஸ்குமார் வழக்கை விசாரித்து சக்திவேலுக்கு வரதட்சணைக்கேட்டு துன்புறுத்தியதற்காக ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.ஐநூறு அபராதமும், தற்கொலைக்கு தூண்டியதுக்காக ஆறாண்டு சிறை தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து, தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.
===========

2. பெண் தற்கொலை முயற்சி:வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவன் கைது

கோவையில் வரதட்சணை கேட்டு கணவன் கொடுமைப்படுத்தியதால் பெண் தற்கொலை செய்ய முயன்றார். இதையடுத்து அவரது கணவனை போலீசார் கைது செய்தனர்.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை குனியமுத்தூர் அம்மன் காலனியை சேர்ந்த தங்கவேல் மகன் விவேகானந்தன் (வயது 32). இவருக்கும் கோவை நீலிக்கோணம்பாளையம் ரங்கே கவுடர் வீதியை சேர்ந்த சத்தியநாராயன் மகள் கிரிஜாவுக்கும் (24) கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது 10 பவுன் நகை வழங்கப்பட்டதாக தெரிகிறது.

இவர்களுக்கு தற்போது 4 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்த நிலையில் கிரிஜாவிடம் அவரது கணவர் விவேகானந்தன் உனது அண்ணன் ரமேஷ்குமாரிடம் சென்று ரூ.11/2 லட்சம் வாங்கி வரும்படி சித்ரவதை செய்ததாக தெரிகிறது. இது தொடர்பாக கணவன்-மனைவி இருவருக்கு இடையே அடிக்கடி சண்டை நடந்தது.

இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி சம்பவத்தன்று விவேகானந்தன் விஷபாட்டிலை கையில் வைத்துக்கொண்டு பணம் வாங்கிவராவிட்டால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று விவேகானந்தன் மிரட்டியதாக கூறப்படுகிறது.

அப்போது கிரிஜா அந்த விஷபாட்டிலை வாங்கி விஷத்தை குடித்துவிட்டார். இதையடுத்து அவர் ஆபத்தான நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இது குறித்து கிரிஜாவின் அண்ணன் ரமேஷ்குமார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கோவை மேற்கு பகுதி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனிராபேகம் வழக்குப்பதிவு செய்து, கிரிஜாவின் கணவன் விவேகானந்தனை கைது செய்தனர். விவேகானந்தன் மீது வரதட்சணை கொடுமை சட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
அதேபோல் சித்ரவதைக்கு உடந்தையாக இருந்த விவேகானந்தனின் பெற்றோரை போலீசார் தேடி வருகிறார்கள்.
===========

3. பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில்கணவன் உள்பட 3 பேருக்கு ஜெயில்தண்டனைசேலம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கணவன், மாமனார், மாமியார் ஆகியோருக்கு ஜெயில்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கு பற்றிய விவரம் வருமாறு:-

மேச்சேரி போலீஸ் சரகத்துக்குட்பட்ட கொட்டனூர்புதுரை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகள் புஷ்பா என்கிற கிருஷ்ணவேணி (வயது20). இவருக்கும், மேச்சேரி அருகே உள்ள ஆண்டினிர் கொப்பம் என்ற கிராமத்தை சேர்ந்த அசோகன் என்பவருக்கும் கடந்த 2004-ம் ஆண்டு ஜுன் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது 6 பவுன்தங்க நகை, மாப்பிள்ளைக்கு மோதிரம் என புஷ்பாவின் பெற்றோர் வரதட்சணையாக கொடுத்தனர். புஷ்பா தனது மாமியார் லட்சுமி (45), மாமனார் குப்புசாமி(52) ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார்.

வீட்டில் புஷ்பாவுக்கு சரியாக சமைக்க தெரியவில்லை என்றும், கழி எப்படி கிண்டுவது என தெரியவில்லை என்றும் கூறி அடிக்கடி கணவன், மாமியார் மற்றும் மாமனார் கிண்டல் செய்து சித்ரவதை செய்தனர்.

இந்த மனவேதனையால் புஷ்பா அருகில் உள்ள காட்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கடந்த 16.2.2005 அன்று நடந்தது. இது குறித்து மேச்சேரி போலீசார் புஷ்பாவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவன் அசோகன், மாமியார் லட்சுமி, மாமனார் குப்புசாமி ஆகியோரை கைது செய்தனர்.

இவர்கள் மீதான வழக்கு விசாரணை சேலம் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் நீதிபதி கோபால் விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்கினார்.

3 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அசோகனுக்கு 7 ஆண்டு ஜெயில்தண்டனையும், ரூ.1000 அபராதமும், குப்புசாமி அவரது மனைவி லட்சுமி ஆகியோருக்கு தலா 3 ஆண்டு ஜெயில்தண்டனையும், தலா ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

தந்தைமை

இந்தியாவிலுள்ள நீதிபதிகளில் பெரும்பான்மையோர், தம்பதிகள் விவாகரத்தினால் பிரியும்போது, குழந்தைகளின் காப்புப் பொறுப்பை மனைவிகள் கையில்தான் ஒப்படைக்கிறார்கள். கணவனை ஒரு குற்றமும் இழைக்காதவனாகவும், பண்பும், பாசமும் உள்ளவனாகவும் அந்த நீதிபதி ஒப்புக் கொண்டாலும்கூட குழந்தையை மட்டும் பெண்கள் வசம்தான் ஒப்படைக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் மனத்தில் பெண்கள்தான் குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பார்கள், தந்தை ஒரு பொறுப்பற்றவன் என்னும் எண்ணக் கட்டமைப்பு நங்கூரம் பாய்ச்சியிருக்கிறது.


இது எவ்வளவு தவறான கருத்தியல் என்பதை பல பெண்கள் மீண்டும் மீண்டும் தாங்கள் பெற்ற குழந்தைகளைக் கொடூரமாகக் கொன்றும், பொறுப்பற்ற முரையில் வெறி கொண்டு பிற ஆண்களுடன் தவறன உறவு கொண்டும், தன்னலமே பெரிதாகக் கொண்டு குழந்தைகளைக் கவனிக்காமலிருந்தும் செவ்வெனே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனலும் குழந்தைகளை தந்தை வசம் நீதிபதிகள் ஒப்படைப்பதில்லை. சமீபத்தில் ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி குழந்தையின் விருப்பத்தைக் கேட்டபோது அது தெள்ளத் தெளிவாக தன் தந்தையிடம்தான் வளருவேன் என்று கூறி அழுதும்கூட அந்த நீதி(!)பதி குழந்தையை மனைவியிடம்தான் ஒப்படைத்தார்.

இதில் பெரிய கொடுமை என்னவென்றால், தகப்பனுக்கு வாரத்திற்கு ஒரு முறை "எட்டிப் பார்க்கும் உரிமை" (visiting right) மட்டும்தான் கொடுக்கப்படும். அதுவும் பலமுறை அது அவனுக்குக் கிட்டுவதில்லை. அந்த நாள் பார்த்து அந்தப் பெண்மணி குழந்தையை எடுத்துக் கொண்டு வேறு ஊர் சென்று விடுவாள். இதுபோல் நடந்தால் இதற்கு நிவாரணம் பெற கணவன்தான் தன் கைக்காசு சிலவு செய்து கோர்ட்டில் contempt of court கேசு போடவேண்டும். அது வாய்தா மேல் வாய்தாவாக இழுக்கும். அதற்குள் குழந்தை பெரிதாக ஆகிவிடும். அதற்கு தந்தையே நினைவிருக்காது. மேலும் தந்தையைப் பற்றி ஒரு தவறான கருத்தாக்கம் அந்தப் பிஞ்சு மனத்தில் பதிக்கப்படும்.

ஆனால், இப்போது நன்றாகக் கவனியுங்கள்.
இப்போது நான் சொல்லப்போவதுதான் கொடுமையிலும் கொடுமை, ஒலிம்பிக் கொடுமை. அந்தக் குழந்தையைக் கண்ணால் காணக்கூட உரிமையில்லாத அந்தக் கணவன்தான், குழந்தையின் பராமரிப்பு, படிப்பு முதலிய அனைத்து சிலவுகளுக்கும் மாதா மாதம் பணம் கொடுக்கவேண்டும். அதுவும் அந்தப் பெண்ணின் கையில். அப்படித்தான் தீர்ப்புக்கள் வழங்கப் படுகின்றன. Can there be a worse irony in this world!
அவள், குழந்தையின் நலனுக்கு அதைச் சிலவு செய்யாமல் அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு எந்தவித ஜல்ஸா செய்தாலும் கேள்வி கேட்க முடியாது.

என்ன சட்டமோ, என்ன கோர்ட்டோ, என்ன நீதியோ. அநியாயமய்யா இது!

சரி. இந்தத் தந்தைமார்கள் குழந்தைகளின் நலனுக்காக என்னவெல்லாம் செய்கிறார்கள் தெரியுமா? ஒருமுறை டிரெயினில் செல்லும்போது பார்த்தேன். மேல் இருக்கையில் படுத்திருந்த கணவன் ஒவ்வொரு முறையும் இறங்கி வந்து குழந்தைக்கு டயபர் மாற்றுவது, ஃபீடிங் பாட்டிலில் பால் ஊற்றி குழந்தைக்கு ஊட்டுவது போன்ற அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருந்தான். அந்த மகாராணி ஒய்யாரமாக தனக்கு ஒன்றுமே முடியவில்லை என்று முனகிக் கொண்டிருந்தாள். ஆனால் அடிக்கு ஒருதரம் விருத்துப் போண்டிருந்த தலைமுடியை ஸ்டைலாகக் கோதி விட்டுக் கொள்வதில் மட்டும் குறைவில்லை!

பெரும்பாலான குடும்பங்களில் இந்தக் கதைதான்.

சரி. இங்கே பாருங்கள். இரவு முழுதும் கியூ வரிசையில் நின்று காத்துக் கிடக்கிறார்களே, தங்கள் குழந்தைகளுக்கு நல்ல பள்ளியில் இடம் கிடைக்கவேண்டுமென்று, அவர்கள் யார்?




கள்ளத்தொடர்பை கண்டித்த கணவன் எரித்துக் கொலை - மனைவிக்கு ஆயுள் தணடனை

குடும்ப வன்முறைச் சட்டப்படி வன்முறை என்பது கணவனால் மட்டுமே செய்யப்படுவது. பாதிக்கப்பட்டவர் என்றால் மனைவிதான் என்று தீர்மானமாக அமைக்கப்பட்டுள்ளது.

கணவன் முகத்தைத் திருப்பிக் கொண்டால்கூட அது மனரீதியான வன்முறையாகக் கருதப்படும். அதன்பேரில் மனைவி உடனே வழக்குத் தொடர்ந்து அந்தக் கணவனை அவனுக்குச் சொந்தமான தன் வீட்டிலிருந்தே வெளியேற்றலாம்! ஆமாம் ஐயா, இந்தக் கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. (திருமணம் இந்திய ஆண்களுக்கு ஒரு புதைமணலாக ஆகிவிட்டது!)

ஆனல் மனைவி எத்தகைய வன்முறையை செய்தாலும் - உள ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ - இந்தச் சட்டத்தின் அடிப்படையில் கணவனுக்கு எந்தவித பரிகாரமும் கிட்டாது. இது அநியாயமான சட்டமல்லவா?

பெண்கள் என்ன வன்முறையே செய்யாதா மெல்லியலாளர்களா?

இதோ இந்தச் செய்தியை வாசியுங்கள்:-

விழுப்புரம் : கள்ளத் தொடர்பை கண்டித்த கணவனை எரித்து கொலை செய்த மனைவிக்கு, விழுப்புரம் கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் அடுத்த பிள்ளையார் குப்பத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(40). இவரது மனைவி சுலோச்சனா(32), கூலி வேலை செய்கிறார்.

களமருதூர் சதாசிவம்(48) மேஸ்திரியாக உள்ளார். சதாசிவத்திடம் சுலோச்சனா வேலை செய்த போது, இருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை கண்டித்ததால், கடந்த 2006ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி ராஜேந்திரன் மீது சுலோச்சனா, சதாசிவம் சேர்ந்து மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தனர். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். திருநாவலூர் போலீசார் வழக்கு பதிந்து சுலோச்சனா, சதாசிவத்தை கைது செய்து, விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சின்னப்பா, குற்றம் சாட்டப்பட்ட சுலோச்சனாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

~ டிசம்பர் 06,2008 - தினமலர்

தந்தையின் உறவே தெரியாமல் வளர்க்கப்பட்ட குழந்தை

திருநெல்வேலியைச் சேர்ந்த பவானி என்னும் 38 வயதுள்ள இந்து, தமிழ், பிராமின், ஐயர் பெண்மணிக்கு, ஜெண்டிலான, ஒத்துப் போகக்கூடிய, கடவுள் பக்தியுள்ள, அட்ஜஸ்ட் செய்யக்கூடிய, குடும்பப் பாங்கான கணவன் வேண்டுமாம். “மேரே ஜீவன் சாத்தி" என்னும் வலைத்தளத்தில் தன் ஃபோட்டோவையும் போட்டு விளம்பரம் கொடுத்துள்ளாள். அவளைப் பற்றி அந்த விளம்பரத்தில் கொடுத்துள்ள விவரத்தைக் காணுங்கள்:-

“அவளுடைய சொந்த பிசினஸ் நன்கு நடந்து வந்த வேளையில் திருமணம் நடந்தது. பிறகு மணவாழ்விலிருந்த பிரச்னையால் பிசினசைக் கவனிக்க முடியவில்லை.

விவாகரத்து பெற்ற அவள் இனி பிசினசை பெருக்கி நடத்தவோ, அல்லது வேறு வேலை பார்க்கவோ, அல்லது வீட்டு வேலை பார்த்துக்கொண்டு வீட்டோடு இருக்கவோ ரெடி. இயல்பில் அவள் மிகவும் ஒத்துப் போகக்கூடிய, புரிந்து கொண்டு அனுசரிக்கக் கூடிய,அக்கரையுடன் நலம் பேணக்கூடிய, குடும்பப் பாங்கான, கடவுள் பக்தியுள்ள, அனைத்து குடும வேலைகளும் தெரிந்த நல்ல பெண்."

சரி. அடுத்து அவள் கொடுத்திருக்கும் தன் "நல்ல குணங்களை"ப் பற்றிய சான்றுகளைப் பாருங்கள்:-

"அவளுடைய முந்தைய திருமணம் முறிந்ததற்குக் காரணம் அவளுடைய பொறுப்பற்ற, அக்கறையற்ற கணவன் தான். அவனும் அவனுடைய குடும்பத்தினரும் மிகவும் கொடுமைப் படுத்தினார்கள்.

மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு "இருவரும் ஒப்புதலளித்த" (Mutual consent) விவாகரத்து நிகழ்ந்தது. 2002-ல் கணவனிடமிருந்து பிரிந்தவள் 2004-ல் விவாகரத்து பெற்றாள்.

முந்தைய கணவனுக்குப் பிறந்த குழந்தையைப் பார்க்க அதன் தந்தைக்கு எந்த உரிமையும் இல்லை. அவனுடன் எந்த தொடர்பும் என் குழந்தைக்கு நான் அனுமதிக்கவில்லை. அந்தக் குழந்தையைப் பொறுத்தவரை தன் தந்தை யார் என்பதே அவளுக்குத் தெரியாது. தந்தை என்று ஒரு உறவு உள்ளது என்பதே அவளுக்குத் தெரியாமல் அவள் வளர்க்கப்பட்டுள்ளாள். ("As far as the child is concerned, she has no idea who her father is, and has never been made aware of fatherhood.")"

எப்படிப் போகிறது கதை! நிசசயம் அவள் Sec 498A of IPC, மற்றும் என்னென்ன சட்டங்கள் உண்டோ எல்லாவற்றைய்ம் அந்தக் கணவன் மற்றும் அவனுடைய பெற்றோர்கள் மேல் போட்டுத் தாக்கி, ஏராளமான பணத்தைய்ம் கறந்து கொண்டு விவாகரத்து பெறிருப்பாள்.

இப்போது அடுத்த முட்டாள் எவனாவது சிக்குவானா என்று பார்க்க தூண்டில் போடுகிறாள்.

என்ன, இந்த 38 வயது விளக்கில் விட்டில் பூச்சியாக விழ ஆசையா? சென்று பார்க்க இங்கே:
http://www.jeevansathi.com/profile/matrimonial-1014291W4.htm

ஆண்களின் உயிர் ஒரு செல்லாக்காசு

ஆம். இந்தியாவில், அதுவும் உச்ச நிதிமன்ற நீதிபதிகளின் கருத்தில்.

ஆந்திராவில் வெங்கடேஸ்வர ராவ் என்னும் கேந்திரீய வித்யாலயா ஆசிரியர் சாந்தி என்னும் பெண்ணை திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு மறுநாள் முதலிரவன்று அந்த மனைவி, தன் தாயார், மற்றும் திருமணத்திற்கு வந்திருந்த அனைத்து உறவினர் முன்னால் தன் கணவன் அழகாக இல்லை, தனக்குப் பொருத்தமானவன் இல்லை, மேலும் அவனுக்கு ஆண்மையில்லை என்று அவனை பலவிதமாகத் திட்டி அவமானப் படுத்தியிருக்கிறாள். அந்த அவமானம் பொறுக்க முடியாமல் அந்தக் கணவன் தற்கொலை செய்து மாண்டிருக்கிறான். அந்த சாந்தி தன் கனவனை தற்கொலைக்குத் தூண்டிய குற்றவாளி என கீழ்க்கோர்ட்டில் தனடனை கொடுத்திருக்கிறார்கள். அதை எதிர்த்து பதிந்த மேல்முறையீட்டின் போது உச்சநீதி மன்ற நிதிபதி பசாயத் கூறியிருக்கும் தீர்ப்பு இது:

“அவலட்சணம், ஆண்மையில்லை என்பதெல்லாம் வெறும் கோபத்தில் சர்வ சாதாரணமாகச் சொல்லும் வார்த்தைகள். அவையெல்லாம் ஒருவனை தற்கொலைக்குத் தூண்டும் என்று கருதமுடியாது.” இதைச் சொல்லி உச்ச நிதி மன்றம் அந்த மனைவி சாந்தி மேல் குற்றம் இல்லை என்று சொல்லி தீர்ப்பளித்து விட்டது.

(செய்தி: டைம்ஸ் ஆஃப் இந்தியா)

ஆனால் இதேபோல் கணவன் திட்டி மனைவி தற்கொலை செய்து கொண்டிருந்தால், உடனே எந்தவித தற்கொலை கடிதம் இல்லையென்றாலும் கணவன் தான் குற்றவாளி என்று ஆட்டோமேட்டிக்காக கைது செய்து, கோர்ட்டுகளும் திர்ப்பு சொல்லி தூக்கு தண்டனை விதித்து விடுவார்கள். இது 100% கேசுகளில் நிகழ்வது. பெண்கள் தற்கொலைக்கென்றே தனிச் சட்டங்கள் இருக்கின்றன. அவை திருமணத்தின்பின் 7 வருடங்களுக்குள் மனைவி இறந்தால் கணவன் தான் குற்றவாளி. இதற்கு சாட்சிகளே தேவையில்லை என்கின்றன.

ஒரு பெண் தன் கணவனை நீ அழகில்லை, உனக்கு ஆண்மையில்லை என்று சொன்னால், அதற்காக அவன் ஏன் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்? அவள் கண்ணெதிரிலேயே இன்னொரு பெண்ணுடன் கலவையில் ஈடுபட்டு தன் ஆண்மையை நிருபிக்க வேண்டாமா!

பயங்கரவாதிகளிடம் போரிட்டு குண்டடி பட்டு சாவதற்கு மட்டும் ஆண்மகன்தான் வேண்டுமோ. அங்கு செல்வதுதானே, இந்த புரட்சிப் பெண்கள்.

இந்த நாடு ஒரு வெட்கக்கேடான நாடு. இந்த நாட்டில் ஆண்மகனாகப் பிறந்து ஒரு இந்தியப் பெண்னை திருமணமும் செய்து கொள்பவன் ஒரு சாபக்கேடு பிடித்தவன். அவன் கட்டும் தாலியில் எழுதியிருக்கும் வாசகங்கள், “498A", "DV Act"என்பவைதான்.

வழக்கறிஞர் மற்றும் போலீசார் கருத்து

கணவர்களையும் அவர்களின் பெற்றோர் மற்றும் உடன்பிறந்த பெண்களையும் பொய் வழக்கு போட்டு கொடுமைப் படுத்தும் மனைவிகளைப் பற்றி வழக்கறிஞரும் காவல் துறையினரும் உண்மையை உடைத்துச் சொல்கிறார்கள் பாருங்கள்.

நன்றி: அவள் விகடன் (ஒரு பெண்களுக்கான வார இதழ்) - படத்தின்மேல் கிளிக் செய்து பெரிதாக்கி வாசியுங்கள்.


பாழ்பட்ட சமூகம்

பெண்களுக்காகவே நடத்தப்படும் “அவள் விகடன்” இதழில் வெளிவந்துள்ள கடிதங்கள் மூலம் இன்றைய நாட்களில் ஆண்களைப் பெற்று அவர்களுக்கு திருமணம் செய்விக்கும் பெற்றோரின் அவல நிலையை சிலர் சோகத்துடன் விவரிப்பதைக் காண்போம்:- (கிளிக் செய்து பெரிதாக்குங்கள்)








இதுபற்றி சட்ட நிபுணர்களின் கருத்து என்ன என்பதை அடுத்த இடுகையில் காண்போம்!

கள்ளத் தொடர்பினால் பிறந்த குழந்தையைக் கொலை செய்த தாய்

ஏழு நாள் குழந்தையை கொலை செய்த இருவருக்கு ஐகோர்ட் ஜாமீன் மறுப்பு

நவம்பர் 25,2008. செய்தி: தினமலர்

மதுரை : தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே கள்ளத் தொடர்பினால் பிறந்த ஏழு நாளான பெண் குழந்தையை கொலை செய்த தாய்க்கும், கள்ளக்காதலருக்கும் ஜாமீன் வழங்க, மதுரை ஐகோர்ட் கிளை மறுத்து விட்டது.

வீரபாண்டி அருகே பாலார்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயராஜ்(46). இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். அதே ஊரைச் சேர்ந்த சின்னன் மகள் ஒச்சம்மாள்(37). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் உள்ளார். கணவரை பிரிந்த ஒச்சம்மாள், ஜெயராஜின் தோட்டத்தில் வேலை செய்து வந்தார்.

அப்போது, இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. இதில் கர்ப்பமுற்ற ஒச்சம்மாளுக்கு, டொம்புசேரி அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் செப்., 20-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது.இது ஊருக்கு தெரிந்தால் அசிங்கம் எனக் கருதிய ஜெயராஜ், செப்., 26ம் தேதி பெண் குழந்தையை கொலை செய்தார். பிறகு, மஞ்சள் பையில் வைத்து பைக்கில் எடுத்துச் சென்று முல்லையாற்றில் வீசினார். வீரபாண்டி போலீசார் விசாரித்து ஜெயராஜையும், ஒச்சம்மாளையும் கைது செய்தனர்.இருவரும் ஜாமீன் கோரி ஐகோர்ட் கிளையில் மனு செய்தனர். அவர்களை ஜாமீனில் விட அரசு கூடுதல் வக்கீல் சிவ.அய்யப்பன் ஆட்சேபம் தெரிவித்தார். அதை ஏற்று ஜாமீன் மனுவை நீதிபதி கே.என்.பாஷா தள்ளுபடி செய்தார்.

நல்ல பிசினஸ்

நகரி: பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில், சாப்ட்வேர் இன்ஜினியர்கள் இருவரை திருமணம் செய்து தலைமறைவாகி விட்டு, மூன்றாவதாக இன்னொருவரை மணக்க நிச்சயதார்த்தம் முடித்துள்ள இளம்பெண்ணை திருப்பதி போலீசார் கைது செய்தனர்.

ஆண்கள் மட்டுமே பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளதாக அனைவரும் கூக்குரலிடுகின்றனர். இதற்கு நேர்மாறாக, ஆந்திர மாநிலம் குண்டூர் நகரை அடுத்த, பிராடிபேட்டையைச் சேர்ந்த வெங்கடேஸ்வரராவ் பூர்ணவல்லி தம்பதியரின் மகளான தீப்தி(24)யும் செயல்பட்டுள்ளார்.

பிளஸ் 2 வரை படித்துள்ள இவருக்கு, சத்யதீப்தி, சாய்தீப்தி என்ற பெயர்களும் உண்டு. இவரது தந்தை ஆறு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால், தாய், மகள் இருவருமாக தனியாக வசித்து வந்தனர். மகளுக்கு நல்லமுறையில் திருமணம் செய்து வைக்க, பூர்ணவல்லிக்கு வசதி இல்லாததால், பெரிய அளவில் பணம் சம்பாதிக்க திட்டம் தீட்டினர். இதற்கு பொறியியல் படித்த சாப்ட்வேர் இன்ஜினியர்களை திருமணம் செய்ய முடிவெடுத்து, திருமண போர்வையில் அவர்களை பிளாக்மெயில் செய்ய திட்டமிட்டனர். இதன்படி, திருப்பதி மாதவநகரைச் சேர்ந்த கோதண்டராம நாயுடுவின் மகன் பாலசுப்பிரமணியம்(30) என்ற சாப்ட்வேர் இன்ஜினியரை தேர்ந்தெடுத்து, 2004ம் ஆண்டு இருவரின் பெற்றோர் சம்மதத்துடன் திருப்பதியில் தனியார் ஓட்டல் ஒன்றில் திருமணம் நடந்து முடிந்தது.

திருமணமான மூன்று தினங்களுக்கு பின் பிறந்த வீடான குண்டூருக்கு சென்று வருவதாக, கணவரிடம் கூறிச்சென்ற தீப்தி, மீண்டும் கணவரின் திருப்பதி வீட்டிற்கு திரும்பவில்லை. இதைத் தொடர்ந்து பாலசுப்பிரமணியம் மனைவியை தேடிச் சென்று குண்டூரில் விசாரித்ததில், அவர் எங்கு உள்ளார் என்ற விவரம் கிடைக்காமல் திருப்பதிக்கு திரும்பி விட்டார். சில மாதங்கள் கழிந்தபின், பாலசுப்பிரமணியத்திற்கு போன் செய்து பேசிய தீப்தி, "என்னை கொடுமைப்படுத்துவதாகக் கூறி போலீசில் புகார் செய்து கோர்ட்டுக்கு போவேன்' என, போன் மூலம் மிரட்டினார். அதன்பின், பாலசுப்பிரமணியத்திடம் ஒரு தொகையை பெற்றுக் கொண்டு தலைமறைவாகி விட்டார்.

பின்னர், தீப்தி என்ற பெயரில், கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரான தனசேகர ரெட்டியை, இன்டர்நெட்டில் சாட்டிங் செய்து காதலில் விழ வைத்து, இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். முதல் கணவரான பாலசுப்பிரமணியத்தை மிரட்டி பணம் பறித்தது போலவே, தனசேகரிடமும் பணம் பறித்துக் கொண்டு தலைமறைவாகி விட்டார். இதையடுத்து, திருமணம் நடந்த 2006ம் ஆண்டு குண்டூர் போலீசில் தனசேகர் புகார் செய்ததின் பேரில் தாய், மகள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.

அதன்பின்னும் மோசடியை தொடர முடிவு செய்த இந்த இளம்பெண், மீண்டும் தன் பெயரை சாய்தீப்தியாக மாற்றிக்கொண்டு மற்றொரு இளைஞரை தேடிப்பிடித்து அவரை திருமணம் செய்துகொள்ள நிச்சயதார்த்தமும் செய்து கொண்டார். இந்த தகவலை அறிந்து கொண்ட திருப்பதியைச் சேர்ந்த முதல் கணவரான பாலசுப்பிரமணியம், கடந்த மாதம் திருப்பதி பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதையடுத்து, மோசடியில் ஈடுபட்ட தாய், மகள் இருவரின் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில், சொந்த வேலை காரணமாக திருப்பதிக்கு வந்து கொண்டிருந்த பூர்ணவல்லி, அவரது மகள் தீப்தி இருவரையும் திருப்பதி போலீசார் கைது செய்தனர். பின்னர் மாஜிஸ்திரேட் முன், ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இது தினமலர் செய்தி.

ஆனால் என்ன? அவர்களுக்கு ஒரு பிரச்னையுமில்லை.இந்தப் பெண் பொலபொலவென்று கண்ணீர் சிந்தினால் போதும். உடனே என்.ஜி.ஓக்களும், ரேணுகாக்களும், ஊடகங்களும், பெண்ணியலாளர்களும், மேலும் இளம் பெண்களைக் கண்டாலே ஒரு டிரம் ஜொள்ளு விடும் சில கிழட்டுகளும் சேர்ந்து “ஐயகோ! இந்த ஆணாதிக்க நாட்டில் பெண்களின் நிலையைப் பார்த்தாயா! ஒரு இளம் பெண் தன் தொழிலை தடையின்றி நடத்த வழியில்லையே” என்று ஓலமிடுவார்கள். அவர்களும் ஒரு குறையுமின்றி வெளிவந்து விடுவார்கள். தொழிலும் ஜாம்ஜாமென்று நடக்கும்.

அடுத்த பலியாடு ஆக நீங்கள் தயாரா?

குடும்ப வன்முறை புகாரில் மாமியாருக்கு விலக்கு

மும்பை: குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ், குடும்பத்தில் உள்ள கணவன் மற்றும் ஆண் உறவினர் மீது தான் வழக்கு போட முடியும். மாமியார், நாத்தனார் போன்றவர்கள் மீது வழக்கு தொடர முடியாது!

மும்பையில் ஒரு வழக்கில் முலந்த் பெருநகர கோர்ட் அளித்த தீர்ப்பால் பெரும் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் முதன் முறையாக இப்படி ஒரு தீர்ப்பை இந்த கோர்ட் அளித்துள்ளது.

இனி வரும் வழக்குகளில் இந்த தீர்ப்பு முன்னுதாரணமாக இருக்கும்.

மும்பை முலந்த் பகுதியை சேர்ந்தவர் விஷால்; அவர் மனைவி பிரியங்கா. 2005ல் இவர்களுக்கு திருமணம் நடந்தது. கடந்தாண்டு இவர்களுக்கு இடையே மோதல் ஆரம்பித்தது. "என்னை என் கணவரும், அவரின் அம்மா ஷீலாவும் உடல், மனரீதியாக கொடுமைப்படுத்துகின்றனர்" என்று புகார் கூறி, பெருநகர கோர்ட்டில் வழக்கு போட்டார் பிரியங்கா. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் தேஷ்பாண்டே அதிரடி தீர்ப்பை அளித்தார்.

"குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் படி, கணவன் மற்றும் ஆண் உறவினர் மீது தான் வழக்கு போட முடியும். மாமியார், நாத்தனார் போன்ற பெண்கள் மீது இந்த சட்டத்தில் வழக்கு போட வழியில்லை" என்று கூறி, மாமியார் மீதான புகாரை நிராகரிக்க உத்தரவிட்டார். குடும்ப வன்முறை தடுப்பு சட்டம், 2006ல் கொண்டு வரப்பட்டது. குடும்பத்தில் கணவன் - மனைவி இடையே பிரச்னை ஏற்படும் போது, மனைவிக்கு பாதுகாப்பு அளிக்க இந்த சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

குடும்பத்தில் திருமணத்தின் மூலம் கணவனாக இருக்கும் ஆணோ, ஒன்றாக சேர்ந்து வாழும் "லிவ் இன் பார்ட்னரோ" வன்முறையில் ஈடுபட்டால், அந்த ஆண்கள் மீது வழக்கு போடலாம்" என்று தான் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. இதைச்சுட்டிக்காட்டிய மாஜிஸ்திரேட்,"பெண்கள் மீது இந்த சட்டத்தில் வழக்கு போட வழியில்லை என்பதால், விஷால் மீதான குற்றச்சாட்டு குறித்து மட்டும் வழக்கு விசாரணை நடக்கும்" என்று அறிவித்தார்.

இதுகுறித்து வக்கீல்கள் தரப்பில் கூறும்போது, "குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ், மாமியார், நாத்தனார்கள் ஆகிய குடும்பத்தில் உள்ள பெண்கள் மீது புகார் தாங்கிய மனுக்கள் குவிந்துள்ளன. இந்த தீர்ப்பால், இந்த பெண்கள், வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவர்" என்று தெரிவித்தனர்.

--------------

”மனரீதியான கொடுமை” - இதை மனைவி செய்வதில்லையா? கணவன் முகத்தை திருப்பிக்கொண்டு சென்றாலே அது ஒரு மனரீதியான கொடுமை என்று இந்த சட்டத்தில் கேசு போடுகிறார்கள். மனைவி கணவனை எவ்வளவு கொடுமை செய்தாலும் அவள்மேல் எந்தவித நடவடிக்கையும் எடுக்கமுடியாது.

இதுபோன்ற ஒருதலைப் பட்சமான, மோசமான, முட்டாள்தனமான சட்டம் வேறொன்று இருக்கமுடியுமா?

பெற்றோரைப் படுகொலை செய்த பேதைப்பெண்


”நான் உங்கள் முன் “மிஸ் மீரட்” என்ற பட்டத்துடன் நிற்பதற்குக் காரணம் என் தாய்தான்” என்று குதூகலத்துடன் ஆர்ப்பரித்தாள் பிரியங்கா 2005-ல், உ.பியிலுள்ள மீரட் நகரத்தில்.


அதே பிரியங்கா நவம்பர் 11 அன்று தன் தந்தையையும் தாயையும் தன் பிரியமான தோழி(!)யுடன் சேர்ந்து கொடூரமான முறையில் படுகொலை செய்துவிட்டு அதைப்பற்றி சிறிதும் விசனமில்லாமல் டிவி கேமரா முன் “ஆம், என் பெற்றோர்களை நான்தான் கொன்னேன்” என்று ஆரவாரமாக பேட்டியளிக்கிறாள்.

போலிசார் அவர்கள் இருவரையும் கைது செய்தபோது அவர்களிடமிருந்து பிரியங்காவின் சகோதரர் கௌரவின் பெயரில் அவருடைய தந்தை சேமித்திருந்த ரூ.6 லட்சத்திற்கான வைப்புநிதி பத்திரம், ரூ. 50 ஆயிரம் ரொக்கம், அந்த சகோதரன் கௌரவ் பெயரில் அவள் தந்தை எழுதி வைத்திருந்த உயில், தாயினுடைய நகைகள், மேலும் தந்தையினுடைய சேவிங்க்ஸ் கணக்கு மற்றும் செக் புத்தகங்கள், 7 லட்சத்திற்கான நிரந்தர வைப்புப் பத்திரங்கள், அவருடைய செல்ஃபோன், அந்த வயதான பெற்றோரின் வீட்டுப் பத்திரங்கள் போன்றவற்றையும் கைப்பற்றினர்.

மீரட்டின் போலீஸ் கண்காளிப்பாளர் தன் பேட்டியில் கூறியது:

பிரியங்கா அவளுடைய தோழி அஞ்சுவுடன் தன் தாயாரிடம் சென்று பணம் கேட்டு தகராறு செய்திருக்கிறாள். அவர் கொடுக்க மறுத்ததால் வெறி கொண்டு அவரை நெஞ்சை நெறித்துக் கொன்றாள்.
அந்த தாயாரின் ஓலத்தைக் கேட்டு அந்த நேரத்தில் அங்கு வந்த தன் தந்தையின் கழுத்தை ஒரு கத்தியால் அறுத்துக் கொன்றுவிட்டு தன் தோழியுடன் பணம், பத்திரங்கள், நகைகள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டாள் அந்த பிரியங்கா.

போலீசார் அவளைப் பிடித்து கைது செய்தபின் பல டிவி சேனல்களில் அவளைப் பேட்டி கண்டார்கள். அப்போது அவள் தன் பெற்றோர் இருவரையும் கொன்றதற்கான சிறிதளவு வருத்தமோ குற்ற உணர்வோ இல்லாமல் புதிதாக பல கற்பனைக் கதைகளைக் கூறத் தொடங்கிவிட்டாள். அதாவது தான் பெண் என்பதால் சிறுவயதில் கொடுமைப் படுத்தப்பட்டதாகவும் ஆதலால் தன் பெற்றோரைக் கொன்றது சரியே என்று வாதாடினாள்.

அவளுடைய கூற்றுக்கள்:

1. அவளுடைய தந்தை அவளை மிகவும் கொடுமைப் படுத்தினார். அவளை ஒரு தவறான முறையில் பிறந்தவளாகக் குறிப்பிட்டு (illegitimate child) சிறுமைப் படுத்துவார்.
2. அவளுடைய சகோதரன் கௌரவ் அவளை அடித்துத் துன்புறுத்துவான்
3. பெற்றோர் அவளை ஃபேஷன் டிசைன் துறையில் தொடர்ந்து ஈடுபட அனுமதிக்கவிலை. அதனால் அவள் தன் தோழியுடன் சேர்ந்து வாழ முடிவு செய்து வீட்டை விட்டு ஓடிவிட்டாள்.
4. அப்போது அந்த தோழி அஞ்சுவின் உறவினன் அஜேந்திரா என்பவனுடன் பழக்கம் ஏற்பட்டது. அபவளுடைய தந்தை அந்த அஜேந்திராதான் தன் மகளைக் கடத்தியிருப்பதாக போலிஸில் புகார் கொடுத்தார்
5. அந்த அஜேந்திராவும் அவனுடைய மாமாவும் பிரியங்காவை மானபங்கப் படுத்தியதாக அவள் தேசிய மகளிர் வாரியத்தில் புகார் கொடுத்தாள்
6. பிறகு அவள் நோய்டா, சஹாரன்பூர் போன்ற இடங்களில் ஃபேஷன் டிசைன் வேலைக்காக அலைந்திருக்கிறாள். அங்கும் தருண் என்பவனுடன் பழக்கம் ஏற்பட்டு அவனும் இவளை ஏமாற்றினான்.

இப்படி பலவாரியாக பேட்டி கொடுத்த வண்னம் இருந்தாள். CNN-IBN, NDTV போன்ற சேனல்களில் தேடினீர்களானால் அவளுடைய கம்பீரமான (!) பேட்டிகள் கிடைக்கும்.

அதுசரி, தந்தை கொடுமைப் படுத்தியதாக இப்போது கண்ணீர் விடும் பெண் ஏன் தாயைக் கொல்லவேண்டும்? அதுவும் தன்னை மிஸ்.மீரட்டாகப் பெருமை பெறவைத்த தாயை?

பெற்றோர் சொல்லைக் கேட்காமல் தன் தோழியுடன் (அது என்ன தோழியோ) சுற்றி சீரழிந்துவிட்டு, தன் சகோதரனுக்கு பணம் கொடுத்துவிட்டார்கள் என்பதற்காகவே தன் பெற்றோரைப் படுகொலை செய்திருக்கிறாள் இந்த 26 வயது பேய்ப்பெண்!

ஆனால் நம் நாட்டில் ஆண்கள் மட்டுமே குற்றம் இழைப்பவர்கள் எனவும், பெண்கள் என்ன குற்றம் செய்தாலும் தண்டனையே கிடையாது எனவும் பெண்கள் அனைவரும் அன்பும், பண்பும், இரக்கமும் பொங்கி வழியும் குணம் உள்ளவர்களாகவும், சட்டங்களும், அமைச்சுகளும், கோர்ட்டுகளும் அறுதியிட்டுக் கூறுகின்றன. பெற்றோர்கள் பிரியும்போது குழந்தைகள் தாயிடம்தான் ஒப்படைக்கப்படுகின்றன.

என்ன உலகமடா இது!
இந்திய ஆண்களே, திருமணம் என்னும் படுகுழியில் விழுந்து உங்கள் வாழ்வையும் உங்கள் பெற்றோர் வாழ்வையும் சீரழித்துக்கொள்ளாதீர்கள்

போலி வரதட்சணை புகார்களை கண்டித்து டிசம்பர் 6-ந் தேதி ஆண்கள் பாதுகாப்பு சங்கம் போராட்டம்

போலியாக வரதட்சணை புகார்களை பதிவு செய்யக்கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் டிச.6-ல் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.

இது பற்றி ஆண்கள் பாதுகாப்பு சங்கத் தலைவர் அருள்துமிலன், துணைத் தலைவர் லிங்கம் ஆகியோர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:-

பொய்யான புகார்கள்

போலீஸ் நிலையங்களில், ஆண்களுக்கு எதிராக கொடுக்கப்படும் வரதட்சணை புகார்களில் பெரும்பாலானவை பொய்யானவையாக உள்ளது. வரதட்சணை கொடுமை ஒருபுறம் இருந்தாலும், வரதட்சணை புகார்கள், ஆண்களை பழிவாங்கவே பயன்படுத்தப்படுகிறது. அதற்காகத்தான் ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தை தொடங்கியிருக்கிறோம். இதற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். குறிப்பாக, விவாகரத்து பெற்ற ஆண்கள் பலரும் இதற்கு ஆதரவு தரமுன்வந்துள்ளனர்.

தற்போது இங்கு ஆண்களுக்கு, ஒருநாள் இலவச சட்ட முகாம் நடத்துகிறோம். இதில், போலியான வரதட்சணை வழக்குகள் எப்படி எதிர்கொள்வது என்பது போன்ற பல்வேறு ஆலோசனைகளை தருகிறோம்.

ஆண்கள் ஆணையம் வேண்டும்

போலீஸ் நிலையங்களில் போலியாக வரதட்சணை புகார்களை பதிவு செய்யக்கூடாது, போலியான புகார் என்று தெரிந்தால் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும்; குடும்ப வன்முறை சட்டத்தில் திருத்தம் செய்யும்போது, ஆண்கள் ஆணையத்தை கலந்தாலோசிக்க வேண்டும்; சுயஉதவிக்குழுக்களில் உள்ள சிலர், குடும்ப ஆண்களுக்கு எதிராக குழு பெண்களுக்கு தவறான ஆலோசனை வழங்குகிறார்கள். இதற்கு தடை விதிக்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் வரும் டிச.6-ந் தேதி 2008 அன்று எங்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தார்கள்.

செய்தி: தினத்தந்தி

கணவனை பிரிந்த மனைவி வேலை பார்த்தாலும் ஜீவனாம்சம் பெறலாம்: மும்பை ஐகோர்ட் உத்தரவு

நாக்பூர் : கணவனை விட்டு பிரிந்த மனைவி வேலை பார்ப்பவராக இருந்தாலும், அவருக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என, மும்பை ஐகோர்ட்டின் நாக்பூர் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் பல்தானாவைச் சேர்ந்தவர் ரவீந்திர பாட்டீல். இவரின் மனைவி கவிதா. இருவருக்கும் ஒரு வயது குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக ரவீந்திர பாட்டீலும், கவிதாவும் பிரிந்தனர். உடன் தனக்கும், குழந்தைக்கும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் எனக் கோரி, நாக்பூர் செசன்ஸ் கோர்ட்டில் கணவருக்கு எதிராக கவிதா வழக்குத் தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த செசன்ஸ் கோர்ட், "கவிதாவுக்கு மாதம் 400 ரூபாயும், குழந்தைக்கு 500 ரூபாயும் ஜீவனாம்சமாக வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார் ரவீந்திர பாட்டீல். வழக்கு விசாரணைக்கு வந்த போது, "என் மனைவி பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்க்கிறார். மாதம் 1,800 ரூபாய் சம்பாதிக்கிறார். அதனால், அவருக்கு ஜீவனாம்சம் தர வேண்டியதில்லை' என, ரவீந்திர பாட்டீல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு கவிதாவோ, "2000ம் ஆண்டில், என் கணவர் வீட்டை விட்டு துரத்திய பின்னரே, நான் பள்ளியில் வேலைக்கு சேர்ந்தேன். எனக்கும், என் குழந்தைக்கும் அவர் பராமரிப்பு செலவை தராததால், நான் வேலைக்கு செல்ல நேரிட்டது. அந்த வேலையும் நிரந்தரமான வேலை அல்ல' என, தெரிவித்தார்.
கவிதா தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஏற்றுக் கொண்ட மும்பை ஐகோர்ட்டின் நாக்பூர் பெஞ்ச் நீதிபதிகள் கூறியதாவது: கவிதாவுக்கும், அவரின் குழந்தைக்கும் ரவீந்திர பாட்டீல் மாதம்தோறும் பராமரிப்புத் தொகை வழங்க வேண்டும். பிரிந்த மனைவியையும், அவரின் குழந்தையையும் கவுரவமாக வாழ வைக்க வேண்டியது கணவரின் கடமை. அதனால், மனைவி வேலை பார்க்கிறார் எனக் கூறி, அவருக்கு பராமரிப்புத் தொகை கொடுக்க மறுக்க முடியாது.

கணவரால் கைவிடப்பட்ட உதவியற்ற பெண், வேலை பார்க்கிறார் எனக் கூறியும், அந்த வேலை மூலம் கிடைக்கும் சம்பளத்தில் அவர் தன்னையும், குழந்தையையும் பராமரித்துக் கொள்வார் என, நினைத்துக் கொண்டும் ஜீவனாம்சம் தர மறுக்க முடியாது. ஒருவர் தன் அனைத்து அடிப்படை தேவைகளையும் நிறைவேற்ற போதுமான பணத்தை கொண்டிருக்க வேண்டியது அவசியம். பணவீக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கும் தற்போதைய சூழ்நிலையில், வாழ்க்கைத் தேவைக்கான அலவன்ஸ் கேட்பதை குற்றம் சொல்ல முடியாது. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

----------------

நண்பர்களே, திருமணத்திற்குப்பின் வாழ்நாள் பூராவும் ஒரு கணவன் எதிர் கொள்ள வேண்டிய பிரச்னைகள் என்னென்ன; சட்டங்கள் எந்த அளவுக்கு கணவனுக்கு எதிராக இருக்கின்றன; மேலும் ஒரு மனைவி கணவனை விட்டுச் சென்றாலும், குற்றம் முழுதும் மனைவியின் மேல் இருந்தாலும் கணவன் தன்னை விற்றாவது அவளுக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்று சட்டங்களும், அதன்பேரில் அளிக்கப்படும் தீர்ப்புகளும் அமைகின்றன என்பதை விளக்கமாகத் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? இந்தப் பதிவில் மறுமொழி இடுங்கள். விளக்கமளிக்கிறேன்.

மகன் வெட்டிக் கொலை : தாய்க்கு ஆயுள்தண்டனை

தந்தையர் எவ்வளவுதான் தங்கள் குழந்தைகள்மேல் பாசம் வைத்து அரவணைத்து அவர்களை ஆளாக்கப் பாடுபட்டாலும், கோர்ட்டுகள் அவர்களை வில்லன்களாகத்தான் காண்கின்றன. குழந்தை பெற்ற பிறகும்கூட தன் ஈகோ மேலீட்டாலும், சுயநலத்தாலும், அல்லது கள்ளக் காதலனுடன் உள்ள ஈடுபாட்டாலும் கணவனை விட்டுப் பிரிந்து சென்ற மனைவியிடம்தான் கோர்ட்டுகள் குழந்தைகளை ஒப்படைக்கின்றன - தந்தை என்னதான் நல்லவனாக இருந்தாலும் சரி.

ஒரு தீர்ப்பின்போது குழந்தை தன் தகப்பனுடன்தான் வாழ்வேன் என்று கதறியிருக்கிறது. அப்படியும் அந்தக் குழந்தையை தாயிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். ஆனால் அந்தக் குழந்தையின் பெயரைச் சொல்லி தந்தையிடமிருந்து கப்பம் வசூலிக்க மட்டும் தவறுவதில்லை. மாதம் இவ்வளவு ரூபாய் கொடுக்கவேண்டும், அதுவும் அந்த மனைவியின் கையில் - என்று தீர்ப்பளிக்கிறார்கள். குழந்தையின் நலத்திற்கு நேரடியாகப் பயன்படும் வழியில் செய்தாலும் பரவாயில்லை. அந்தப் பணத்தை அந்தப் பெண்மணி எதற்குப் பயன்படுத்துவாளோ!

இதுதான் இன்றைய இந்தியாவில் தந்தையர்களின் நிலை.

சரி, தாய்மையின் பெருமையை சற்று நோக்குவோமா?


நவம்பர் 18,2008,00:00 IST: செய்தி - தினமலர்

திருநெல்வேலி : மகனை வெட்டிக் கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. நெல்லையை அடுத்துள்ள தாழையூத்தில் சலூன் கடை நடத்திவந்தவர் தெய்வேந்திரன்(30). இவரது தந்தை மாணிக்கம் விக்கிரமசிங்கபுரம், அகஸ்தியர்பட்டியில் 2007 அக்டோபரில் இறந்தார். அவரது இறுதி நிகழ்ச்சிக்கு மனைவி விஜயலட்சுமியுடன் தெய்வேந்திரன் சென்றிருந்தார். தெய்வேந்திரனின் தாயார் பூவம்மாள்(50), தந்தை இறந்துவிட்டதால், தாம் தனியாக இருப்பதாகவும் தம்முடன் அகஸ்தியர்பட்டியில் இருக்கும்படி கேட்டுக்கொண்டார். தெய்வேந்திரன் மறுத்தார். மனமுடைந்த பூவம்மாள் 2007 அக்டோபர் 23 காலையில், வீட்டில் படுத்திருந்த மகன் தெய்வேந்திரனை கோடாரியால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தன்னையும் அரிவாளால் வெட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். பின்னர் கைதானார். வழக்கை விசாரித்த நெல்லை முதன்மை அமர்வு நீதிபதி விஜயராகவன், தாய்க்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

கணவனாவது குழந்தையாவது!

புதுடில்லி :"எனக்கு வேலை தான் முக்கியம்; பதவி உயர்வை விட முடியாது; கணவன் முக்கியமல்ல' என்று கூறிய பெண், சுப்ரீம் கோர்ட்டில் விவாகரத்து பெற்றாள்.

நவம்பர் 19,2008,00:00 IST - செய்தி - தினமலர்

டில்லியைச் சேர்ந்த ஒரு ஆணும் பெண்ணும், குழந்தைப் பருவம் முதல் ஒருவரை ஒருவர் அறிவர். பருவம் வந்ததும் காதலிக்கத் துவங்கிய அவர்கள், பின் திருமணமும் செய்து கொண்டனர்.

திருமணம் நடக்கும் போது, மனைவி, டில்லியில் உள்ள மத்திய அரசின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் (எய்ம்ஸ்) பயோ கெமிஸ்ட்ரி துறையில் பணியாற் றிக் கொண்டிருந்தார்.அதன்பின் பிஎச்.டி., படிப்பை தொடர்ந்தார். தன் படிப்பிலும், பதவி உயர்விலும் நாட்டம் கொண்ட அந்தப் பெண், குழந்தை பிறந்தால், தன் எதிர் காலம் பாழ்பட்டு விடும் என நினைத்து, இரண்டு முறை தன் கருவைக் கலைத்தார்.பின்னர் அமெரிக்க அரசின் உதவித் தொகை கிடைத்ததால், அங்கு படிக்கச் சென்றார். அத்துடன் தனியாகவும் வாழத் துவங்கினார்.

"நமக்கு குடும்பம் தான் முக்கியம்; கருவை கலைக்காதே' என்று சொன்ன கணவரை புறக்கணித்தாள் மனைவி. இதனால், மனைவியிடமிருந்து தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் எனக் கோரி, 1996ம் ஆண்டில் டில்லி கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். விவாகரத்து கோரும் மனுவுடன், ஆதாரமாக தன் மனைவி தனக்கு எழுதிய கடிதங்களின் நகல்களை சமர்ப்பித்தார்.அதில், "நான் என் ஆராய்ச்சி படிப்பு விஷயத்தில் அதிக ஆர்வமாக உள்ளேன். அதனால், தனியாகவே வாழ விரும்புகிறேன்' என, அந்தப் பெண் குறிப்பிட்டிருந்தார்.அந்த கடிதங்களின் அடிப்படையில், கீழ்கோர்ட் அவருக்கு விவாகரத்து வழங்கியது. இதை எதிர்த்து ஐகோர்ட்டில், அவரின் மனைவி வழக்குத் தொடர்ந்தார். ஆனால், அவரின் மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்து விட்டது. விவாகரத்து வழங்கி கீழ்கோர்ட் பிறப்பித்த உத்தரவு சரியே என, தீர்ப்பளித்தது.இதையடுத்து, அந்தப் பெண் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் தாக்கர், ஜெயின் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கூறியதாவது: இந்த வழக்கில் விவாகரத்து வழங்கி ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு சரியே. வேலை மற்றும் பதவி உயர்வு மீது கொண்ட ஆவல் காரணமாக, மனுதாக்கல் செய்த பெண், தன் கணவரை தவிக்க விட்டுள்ளார். சந்தோஷமான திருமண வாழ்வை அவருக்கு கொடுக்கத் தவறி விட்டார்.திருமண வாழ்க்கையை புறக்கணித்து விட்டு, வேலையிலேயே கவனம் செலுத்தியதன் காரணமாக, அவரின் கணவரை உளரீதியாக கொடுமைப்படுத்தியுள்ளார்.

அதனால், இந்து திருமண சட்டம் 1985ன்படி, விவாகரத்து வழங்கப்பட்டது சரியானதே.இந்த வழக்கில் தொடர்புடைய பெண், தன் கணவரின் ஒப்புதல் இல்லாமல், இரண்டு முறை கருவைக் கலைத்து, பெண்களுக்கே உரிய குணாதிசயங்களை மீறி செயல்பட்டுள்ளார். இந்திய சமூக அமைப்பு மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்றும், வெளிநாட்டுக் கலாசாரமே தனக்கு பிடித்திருப்பதாகவும், கணவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுவே விவாகரத்து வழங்க போதுமானது. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

----------------

இன்னும் எவ்வளவு காலமய்யா பெண்பாவம் என்னும் கதையை விரட்டுக் கொண்டிருப்பீர்கள்!

ஆண்களே, திருமணம் என்பது ஒரு புதைமணல் (Quicksand). அதில் சிக்கிக் கொண்டு சீரழியாதீர்கள்.

மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம் போர்க்கொடி


"வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது"

மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம் போர்க்கொடி. போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பு மனு

சென்னை, நவ.20 - தினத்தந்தி

சர்வதேச ஆண்கள் தினத்தையொட்டி நேற்று மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கத்தினர் உரிய சட்ட பாதுகாப்பு கேட்டு போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பான மனு ஒன்றை கொடுத்தனர்.

ஆண்கள் தினம்

ஆண்டுதோறும் நவம்பர் 19-ந் தேதி சர்வதேச ஆண்கள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. பெண்கள் தினம், குழந்தைகள் தினத்தில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதுபோல, ஆண்கள் தினத்தை ஆண்கள் நலனை காக்கும் வகையில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. சர்வதேச ஆண்கள் தினத்தையொட்டி நேற்று சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


"இந்திய குடும்ப பாதுகாப்பு இயக்கம்'' என்ற அமைப்பு சென்னையில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு முழுக்க, முழுக்க ஆண்களின் நலனுக்காக செயல்படுகிறது. இந்த அமைப்பில் இந்தியா முழுவதும் 50 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.


பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் குறிப்பாக, மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பு சார்பில் சென்னையில் நேற்று மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. போலீசார் அனுமதி வழங்காததால், இந்த பேரணி ரத்து செய்யப்பட்டது.

போலீஸ் கமிஷனரிடம் மனு

ஆனால், இந்த பேரணியில் கலந்துகொள்ள வந்த ஏராளமான ஆண்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். கமிஷனர் ராதாகிருஷ்ணனை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். மனு கொடுத்துவிட்டு வெளியே வந்ததும் இந்த அமைப்பை சேர்ந்த சுரேஷ்ராம் என்பவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-


இந்த சமுதாயமும், அரசியல் சட்டமும் பெண்களுக்கு சாதகமாக உள்ளது. ஆண்கள் தவறு செய்தால் சட்டம் தண்டிக்கிறது. ஆனால் தவறு செய்யும் பெண்களை சட்டம் தண்டிப்பதில்லை.

ஆண்கள் கள்ளக்காதலில் ஈடுபட்டால் போலீசில் பிடித்து கொடுக்கிறார்கள். பெண்கள் கள்ளக்காதலில் ஈடுபட்டால் இரக்கப்படுகிறார்கள். மணமேடையில் ஆண் தாலி கட்ட மறுத்தால் வரதட்சணை கொடுமை சட்டத்தில் கைது செய்கிறார்கள். மணமேடையில் பெண் வேறு ஒருவனோடு ஓடி போனால் விருப்பப்படி அவள் வாழலாம் என்று சொல்கிறார்கள்.

திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் மனைவி இறந்தால், மனைவியின் சாவுக்கு கணவன் காரணம் இல்லை என்பதை ஆர்.டி.ஓ. விசாரணையில் நிரூபிக்க வேண்டியதுள்ளது. அதே நேரத்தில் ஆண் இறந்தாலோ, பெண்களுக்கு எந்த பாதிப்பும் இருப்பதில்லை.

ஆண் தற்கொலை அதிகம்

இந்தியாவில் தற்போதைய கணக்குப்படி ஆண்டுக்கு 55 ஆயிரம் ஆண்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இவர்களில் 40 சதவீதம் பேர் பெண்களால் பாதிக்கப்பட்டுதான் உயிரை இழக்கிறார்கள். பெண்கள் ஆண்டுக்கு 28 ஆயிரம் பேர் தான் தற்கொலை செய்கிறார்கள்.

எனவே, புள்ளி விவர கணக்கை பார்த்தால், தற்போது பெண் ஆதிக்கம் தான் அதிகமாக உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும். வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டம் பெண்களுக்கு சாதகமாக உள்ளது. அதை தவறாக பயன்படுத்தி கணவன்மார்கள் கைது செய்யப்படுகிறார்கள்.

கணவர்கள் மட்டுமல்ல, அவர்களின் தாய், தந்தையும், சகோதரிகளும் கூட கைதாகிறார்கள். வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தில் தவறு செய்யும் பெண்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டமும் ஆண்களுக்கு எதிராக தவறாக பயன்படுத்தப்படுகிறது. கணவர்கள் முறைத்து பார்த்தால்கூட உடனே புகார் கொடுத்துவிடுகிறார்கள். இந்த சட்டங்களால் அமைச்சராக இருந்த ஒருவரும் பாதிக்கப்பட்டார். எம்.பி. ஒருவரும், நீதிபதி ஒருவரும்கூட பாதிக்கப்பட்டதை செய்திகளாக பார்த்துள்ளோம்.

எனவே வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தையும், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தையும் தவறாக பயன்படுத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்தோம்.

மதிக்கிறோம்

நாங்கள் பெண்களை மதிக்கிறோம். ஆனால், அதே நேரத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் உரிமை, ஆண்களுக்கும் சமமாக வழங்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. பெண்களை காப்பாற்றும் சட்டம், ஆண்களையும் காப்பாற்ற வேண்டும் என்று தான் எங்கள் சங்கம் கேட்கிறது.
சர்வதேச ஆண்கள் தினத்தில் கணவர்களின் உரிமையை காப்பாற்ற இந்த போராட்டத்தை நடத்தினோம்.


இவ்வாறு அவர் கூறினார்.

மனைவிகளின் கொடுமை

கமிஷனரிடம் மனு கொடுக்க வந்தவர்கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளையும் கையில் பிடித்தபடி வந்தனர். மனு கொடுக்க வந்தவர்கள் அனைவருமே மனைவிகளால் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டவர்கள் என்று கூறினார்கள். ஒருவர் மனைவியின் கொடுமையால், தனது தாயார் இறந்துபோனதாக தெரிவித்தார்.


இன்னொருவர் கூலிப்படையை அனுப்பி தன்னுடைய மனைவியே தன்னை அடித்து உதைத்தாள் என்று வேதனையோடு கூறினார். வந்தவர்கள் அனைவருமே மனைவிகளின் கொடுமைகளை நெஞ்சில் சுமந்தவர்களாக வந்திருந்தனர்.

ஆண்களுக்கென்று ஒரு நாள்

நவம்பர் 19-ம் நாளை உலக ஆண்கள் தினமாக அனுசரிக்கிறார்கள். அன்றைய தினம் இந்தியாவில் பல நகர்ங்களில் தர்ணாவும் ஊர்வலமும் நிகழ்த்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். முக்கியமாக இன்றைய நிலையில் இந்திய ஆண்கள் எதிர்கொள்ளும் சட்டபூர்வ பயங்கரவாதத்தையும், ஆண்களை பொருளாதார ரிதியிலும் மன ரீதியாகவும் கொடுமைப் படுத்தி அடித்து நொறுக்கி அழியச் செய்யும் நோக்கத்தில், சில பெண்கள் சார்ந்த NGO நிறுவனங்களும் அரசு இயந்திரமும் கைகோர்த்துக் கொண்டு ஆணெதிர் சட்டங்களால் அனைத்து ஆண்களையும் அவர்களைப் பெற்ற பாவத்திற்காக அவர்தம் பெற்றோர்களையும் தாக்கி வரும் இந்த நிலையையும் எதிர்த்துப் போராடும் நாளாக இந்த நாள் அமைகிறது.

சில கோஷங்கள்:

1. We demand a separate ministry for men.

ஆண்கள் நலனுக்கென்று தனி அமைச்சகம் தேவை

2. Fathers are not visitors, they are parents too!

தந்தையரெல்லாம் விருந்தினரல்ல; அவர்களும் பெற்றோரே

3. Husbands are not free ATM machines

கணவன்மாரெல்லாம் இலவச ATM மெஷின்களல்ல

4. Stop men’s suicide

ஆண்களின் தற்கொலைகளை தடுத்திடுக

5. Stop creating a fatherless society

தகப்பனற்ற சமுதாயம் உருவாகும் நிலையை மாற்றுக.

6. Offence is an offence, men or women.

ஆணோ, பெண்ணோ, குற்றம் குற்றமே!

7. Punish women too for domestic violence.

குடும்ப வன்முறைக்கு பெண்களுக்கும் வேண்டும் தண்டனை

8. Banish alimony

ஜீவனாம்சத்தை ஒழித்திடுங்கள்

9. Stop legal terrorism

சட்டரீதியான் பயங்கரவாதத்தை நிறுத்துக

10. Stop elder abuse

வயது முதிர்ந்தோரைத் துன்புறுத்தாதீர்

11. Make laws gender-neutral

சட்டங்களை ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவாக அமைத்திடுக.

12. Stop bias against men

ஆண்களுக்கு எதிரான ஒருதலைச்சார்பை நீக்குக

13. All men are not criminals; all women are not angels

அனைத்து ஆண்களும் குற்றவாளிகளல்ல; அனைத்து மகளிரும் புனிதர்களல்ல
-
14. Stop false cases on men

ஆண்கள்மேல் பொய் வழக்கு போடாதீர்

15. Draconian anti-male laws kill the family system

ஆணெதிர் கொடுங்கோன்மைச் சட்டங்களால் குடும்பமுறையே அழிபடும்

16. Men have only obligations and responsibilities, but no rights

ஆண்களுக்கு பொறுப்பும், கடமையும்தான் உள்ளது; உரிமைகள் ஒன்றும் கிடையாது

17. Men are forced to pay for the estranged wife; but what does he get in return?

பிரிந்துபோன மனைவிக்கு கொடுக்க வேண்டுமாம் கப்பம்; ஆனால் கணவன் பதிலுக்குப் பெறுவது என்ன?

கள்ளக்காதலால் விபரீதம் : பெற்ற குழந்தைகளை தாயே கொன்ற கொடுமை

நவம்பர் 18,2008 - செய்தி: தினமலர்

தஞ்சாவூர் : தஞ்சாவூரில் சிறுவர்கள் இருவர் கொல்லப்பட்ட வழக்கில், தாயின் கள்ளக்காதலே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ரோடு இந்திரா நகரைச் சேர்ந்தவர் முருகையன்; இவரது மனைவி ரேவதி(32). இவர்களது மகன்கள் விக்னேஷ் (8) மற்றும் தினேஷ் (6). "கடந்த 11ம் தேதி வீட்டில் விளையாடிய விக்னேஷ், தினேஷ் இருவரையும் காணவில்லை' என, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார் ரேவதி. "சரவணன் (31) என்பவர், நான் தனியாக இருப்பது தெரிந்து என்னிடம் தவறாக நடக்க முயன்றார். அதற்கு நான் உடன் படாததால் அவர் என் மகன்களை கடத்தி இருக்கலாம்' என புகார் செய்தார்.

விசாரணையில், பட்டுக்கோட்டை அருகே புதுஆறு கிளை வாய்க்காலில் கரை ஒதுங்கிய விக்னேஷின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து எஸ்.பி., சம்பத்குமார் கூறியதாவது:

கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்ததால், ரேவதிக்கு பல ஆண்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த சரவணனுடனும் தொடர்பு ஏற்பட்டது. இந்நிலையில், ரேவதிக்கும் அவரது உறவினர் காட்டுக்குறிச்சி குணசேகரனுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அதற்கு சரவணன் எதிர்ப்பு தெரிவித்தார். ரேவதி, குணசேகரன் இருவரும் ஆலோசித்து, "குழந்தைகள் இருவரையும் கொலை செய்து, அந்தப் பழியை சரவணன் மீது போட்டு விடலாம்' என முடிவு செய்தனர். அதன்படி, விக்னேஷையும், தினேஷையும், பெரியகோவில் அருகே கல்லணைக்கால்வாய்க்கு (புதுஆறு) குணசேகரன் அழைத்து சென்றார். அங்கு இருவரையும் ஒருவர்பின் ஒருவராக ஆற்றில் தள்ளி கொலை செய்துள்ளார். இவ்வாறு எஸ்.பி., சம்பத்குமார் தெரிவித்தார்.
================

பாரதி குறிப்பிட்ட புதுமைப் பெண் இவள்தானோ!

சரி. சட்டம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்:

The Protection Of Women From Domestic Violence Act, 2005, Section 3

(a) "aggrieved person" means any woman who is, or has been, in a domestic relationship with the respondent and who alleges to have been subjected to any act of domestic violence by the respondent;

q) "respondent" means any adult male person who is, or has been, in a domestic relationship with the aggrieved person and against whom the aggrieved person has sought any relief under this Act:Provided that an aggrieved wife or female living in a relationship in the nature of a marriage may also file a complaint against a relative of the husband or the male partner;

3. Definition of domestic violence.-
For the purposes of this Act, any act, omission or commission or conduct of the respondent shall constitute domestic violence in case it -
(a) harms or injures or endangers the health, safety, life, limb or well-being, whether mental or physical, of the aggrieved person or tends to do so and includes causing physical abuse, sexual abuse, verbal and emotional abuse and economic abuse; or
(b) harasses, harms, injures or endangers the aggrieved person with a view to coerce her or any other person related to her to meet any unlawful demand for any dowry or other property or valuable security; or
(c) has the effect of threatening the aggrieved person or any person related to her by any conduct mentioned in clause (a) or clause (b); or(d) otherwise injures or causes harm, whether physical or mental, to the aggrieved person.

http://www.vakilno1.com/bareacts/Domestic-Violence/Domestic-Violence-Act-2005.htm
--------------------
இந்தச் சட்டப்படி ஆண்கள்தான் குடும்ப வன்முறையில் ஈடுபடுவார்கள். பெண்கள் பாவம், மெல்லியலார்கள். வாயில் விரலை விட்டால் கடிக்கக்கூடத் தெரியாத பேதைகள்.

அப்பாவி ஆண்களே, வேண்டாம் உங்களுக்கு திருமணம் என்னும் புதைகுழி. தப்பித்துப் பிழையுங்கள்.

கள்ளக் காதலனுடன் உடன்கட்டை!

பெரியகுளம்: பெரியகுளத்தில் கள்ளக்காதலன் கொலை செய்யப்பட்டதால் கள்ளக்காதலி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுவல்லவோ கற்பு!
செய்தி: தினமலர்


தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை காந்திஜி தெருவை சேர்ந்தவர் முத்து (40). இவருக்கும் பாண்டி (42) என்பவரது மனைவி செங்கொடிக்கும் (37) கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் பாண்டி மனைவியை பிரிந்து விட்டார். செங்கொடியின் தந்தை பாலு (62) தனது மகளின் வாழ்க்கையை சீரழித்து விட்டதாக ஆத்திரமடைந்து முத்துவை ஈட்டியால் குத்தி நேற்று முன்தினம் கொலை செய்தார். வத்தலக் குண்டு காந்திநகரில் கள்ளக்காதலன் வீட்டில் வசித்து வந்த செங்கொடி கள்ளக் காதலன் முத்து கொலை செய்யப்பட்ட தகவலை கேட்டு விஷம் குடித்தார். வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
------------------
இதற்கும் அந்த பரிதாப பாண்டியை காரணமாக்கி அவர்மேல் வரதட்சணைக் கொடுமை வழக்கு போட்டாலும் போடுவார்கள்! சட்டம்தன் கைவசம் இருக்கிறதே, போட்டுத் தாக்கவேண்டியதுதானே!
இது போன்ற பெண்களுக்கு திருமணம் ஒன்று வேறு கேடா!

தொடரும் பொய் வழக்குகள்

இன்றுதான் செய்தித்தாள்களில் படித்தோம் - காவல்துறையினர் சகட்டுமேனிக்கு மக்களைக் கைதுசெய்து அவர்களின் தனிமனித உரிமைக்கும், சமூகத்தின் அவர்களுக்கு இருக்கும் மதிப்பு, நற்பெயர் இவற்றிற்கும் களங்கம் விளைவிக்கும் போக்கை நிறுத்தவேண்டும் என்று, இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி அவர்கள் ஒரு தீர்ப்பில் கூறியுள்ளதை. தகுந்த விசாரணையின்றி, வெறும் புகார்களின் அடிப்படையிலோ, சந்தேகத்தின் அடிப்படையிலோ ஒரு தனி மனிதனின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் கைது, சிறையிலடைத்தல் போன்ற செயல்பாடுகளைத் தவிர்க்க வெண்டும் என்று அந்த நீதிபதி வலியுறுத்தியிருக்கிறார்.

ஆனால் நடப்பது என்ன? ஒரு பெண் ஒரு கிழிந்த காகிதத்தில் "என்னை என் கணவர், அவருடைய தாய், தந்தை, அண்ணன், அண்ணி, தங்கை, அவளுடைய ஒரு மாத சிசு அனைவரும் வரதட்சணை கேட்டு கொடுமை செய்தார்கள்" என்று கிறுக்கிக் கொடுத்தால் போதும். உடனே அவர்கள் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படுவார்கள். திங்கள் மாலை வரை ஜாமீனில் வெளிவரக்கூடாது என்பதற்காகவே!

இதுபோன்ற சட்டம் ஒன்றை வைத்துக்குக் கொண்டு, கணவர்கள், அவர்களுடைய வயதான பெற்றோர் போன்றவர்களின் உயிருடனும், உரிமைகளுடனும் ஒரு கோர விளையாட்டை நடத்திக் கொண்டிருக்கிறார்கள், கெடுமதியும் பேராசையும் பிடித்த பேய்ப்பெண்கள் சிலர். இத்தகைய கொடுமைக்கு காவல்துறையும் துணைபோகிறது. உச்ச நீதிமன்றமே இதனை "சட்டபூர்வமான பயங்கரவாதம்" என்று வர்ணித்துள்ளது.

மேலும் சென்னை உயர்நீதி மன்றத்தில் இதுபோன்ற புகார்கள் வந்தால் உடனே கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது; தீரவிசாரித்த பின்னர் தேவை இருந்தால் மட்டுமே கைது செய்யவேண்டும்; மேலும் கண்வனின் பெற்றோர், உறவினர்களைக் கைது செய்யக்கூடாது என்று ஒரு தீர்ப்பில் ஆணையிட்டுக் கூறியிருக்கிறார்கள். இதனை காவல்துறைத் தலைவர் அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் அனுப்பியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஆனால் அந்தக் கொடுமை தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதன்கீழ் இன்றைய தினமணியில் வெளிவந்துள்ள செய்தியைப் பாருங்கள்:

வள்ளியூர், நவ. 12: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே வரதட்சிணை கேட்டு மனைவியை கொடுமை செய்ததாக, அவரது கணவர் உள்ளிட்ட 3 பேரை போலீஸஜ்ர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
திசையன்விளை அருகே உள்ள அழகப்பபுரத்தைச் சேர்ந்த சங்கரலிங்கம் ஆசாரி மகன் மகராஜன் (22). இவர் பலசரக்கு கடை நடத்தி வருகிறார்.
இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த துரைராஜ் மகளான அருணாவுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் காதல் திருமணம் நடைபெற்றது.
பின்னர், அருணாவை மகராஜனின் அண்ணன் குமார் (31), தாய் சுப்பம்மாள் ஆகிய இருவரும் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தினராம்.
இதுதொடர்பாக அருணா திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பேரில், ஆய்வாளர் ஜெயராஜ் வழக்குப் பதிந்து மகராஜன், குமார், சுப்பம்மாள் ஆகிய மூவரையும் கைது செய்தார்.
-----------------
இதுபோல் தொடர்ந்து நடந்தால் இந்திய ஆண்கள் திருமணம் என்னும் சமூகக் கட்டமைப்பு முறையின்மீதே நம்பிக்கை இழந்துவிடுவார்கள் என்பது திண்ணம்!

உங்களை வரதட்சணை பொய் வழக்கு தீண்டிவிட்டதா?

கவலைப் படாதீர்கள். உங்களுக்கு உதவி செய்ய இதுபோல் பாதிக்கப்பட்ட ஆண்கள் தொடங்கியிருக்கும் "இந்திய குடும்ப பாதுகாப்பு இயக்கம்" (Save Indian Family Foundation) என்றும் அமைப்பு என்றும் தயாராக இருக்கிறது.

இதை மிக அவசரமாக இங்கு நான் அறிவிக்க விழைந்ததற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது.

சமீபத்தில் நாக்பூரில் ஒரு இளைஞர் ஒரு பெண்ணை காதலித்து மணந்தார். அவள்மேல் இருந்த ஆசையால் அவள் கேட்டதெல்லாம் செய்தார். அவர் கொட்டிய அன்பினால் திளைத்த அந்தப் பெண் இவனைத் தன் கையில் பொம்மைபோல் ஆட்டுவிக்கலாம் என்று முடிவு செய்து, அவரையும் அவருடைய பெற்றோரையும் சுடு சொற்களாலும் வேறுபல தீங்குகளாலும் கொடுமைப் படுத்தத் தொடங்கினாள். தாங்க முடியாத அந்தக் கணவன் அவளைக் கண்டித்தான். அவ்வளவுதான் - அந்த நச்சுப் பாம்பு 498A என்னும் வரதட்சணைச் சட்டத்தைக் கையிலெடுத்து அவனையும் அவனுடைய பெற்றோரையும் தீண்டிவிட்டது. அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த அவமானத்தைத் தாங்காத அந்தக் கணவன் "தன் தற்கொலைக்கு இதுபோல் பொய்க் கேசுபோட்டு சித்திரவதை செய்த தன் மனைவியே காரணம்" என்று எழுதி போலீசுக்கு அனுப்பி விட்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டான்.

இதுவே ஒரு பெண் செய்திருந்தால் உடனே அந்தக் கணவனையும் அவருடைய பெற்றோரையும் கைது செய்து 7 வருடம் உள்ளே தள்ளியிருப்பார்கள். அனால் இந்தத் தற்கொலையின் பேரில் ஒரு கேசு கூட பதிவு செய்யப்படவில்லை.

உடனே மேற்கூறிய அமைப்பினர் (Save Indian Family Foundation) சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து ஃபோன் செய்து, பத்திரிக்கையாளர்களைக் கூட்டி விவரம் அளித்த பிறகு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

நண்பர்களே, உங்கள் மீதோ, உங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினர் மீதோ இதுபோல் பொய் வரதட்சணை கேஸ் பதியப்பட்டால் உடனே கீழ்க்கண்ட நபர்களைத் தொடர்பு கொள்ளுங்கள். தற்கொலை ஒரு தீர்வல்ல. அநிதியை எதிர்த்துத் துணிவுடன் போராடுங்கள்:

  1. திரு. சுரேஷ் - 9941012958
  2. திரு. கிரீஷ் - 9381026333
  3. திரு. ராம்குமார் - 9941315784
  4. திரு. அமர்நாத் - 9840587653
  5. திரு. அரவிந்த் - 9941162085
  6. திரு. தீபக் - 9965108787
  7. திரு. பிரான்சிஸ் - 9962004649
  8. திரு. கலைச்செல்வன் - 9445119559
  9. திரு. ரஞ்சன் - 9840443555

பெண்கள் தற்கொலைதான் இன்றைய முதல்பக்க நியூஸ். ஊடகங்கள் எல்லாம் குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைத்து ஊரைக் கூட்டும். ஆனால் ஆண்டுதோறும் 56000 மணமான ஆண்கள் தற்கொலை செய்துகொள்வதாக மத்திய அரசின் புள்ளிவிவர அமைப்பு கூறுகிறதே (National crime Records Bureau), எந்த ஊடகமாவது இதைப் பற்றி மூச்சுவிடுகிறதா என்று பாருங்கள்!

ஏனிந்த நிலை தெரியுமா? பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறோம், அவர்களுக்கு தொண்டு செய்கிறோம் என்று சொல்லிக்கொண்டு பல இயக்கங்கள், நிறுவனங்கள் இயங்குகின்றன. அவைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை, தனியார் நிறுவனங்கள் தவிர மத்திய மாநில அரசு இவை மூலம் கொள்ளை கொள்ளையாகப் பணம் கிட்டுகிறது. அதைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்பதற்காக நாடெங்கும் பெண்கள் தொடர்ந்து கொடுமைப் படுத்தப்படுவது போலவும், ஆண்கள் அனைவரும் ராக்ஷசர்கள்போல் கையில் எப்போதும் ஆயுதம் ஏந்தி பெண்களைக் குத்திக்கொண்டு திரிவது போலவும் ஒரு பொய்ச் சித்திரத்தை விதைத்து அதை இடைவிடாமல் பயாஸ்கோப்பு காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மை நிலை தெளிவாக வெளியே தெரிந்தால் இவர்களுக்குக் கொட்டோ கொட்டென்று கொட்டிக் கொண்டிருக்கும் குபேரபுரி கொள்ளை போய்விடும்! ஆண்களுக்கு உதவி செய்ய எந்த நிதியும் கிடையாது. இதனால்தான் ஆண்கள்நிலை இந்தியாவில் இழிநிலையாக உள்ளது!

தாய்மையின் மேன்மை

கண்ணில் படுபவரிடம் குழந்தையை கொடுத்துவிட்டு 'எஸ்கேப்' ஆகும் பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு


சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில், பெற்ற குழந்தையை, கண்ணில்படுபவர்களிடம் கொடுத்து விட்டு, தாய்மார்கள் தப்பிச் செல்லும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

சேலம் அரசு பொது மருத்துவமனைக்கு, சேலம், நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் சிகிச்சைக்காக நாள்தோறும் வருகின்றனர். இலவச சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையை நாடி வரும் மக்கள், தற்போது, பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகின்றனர்.
கடந்த சில மாதங்களாக, இங்கு பிரசவத்திற்காக வரும் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒரு நாளில், 30 முதல் 40 பேருக்கு இங்கு பிரசவம் நடக்கிறது. தவறான உறவால் கர்ப்பம் தரிக்கும் பெண்கள் சிலர், போலி முகவரி கொடுத்து, பிரசவத்திற்கு, "அட்மிட்' ஆகின்றனர். குழந்தை பிறந்த மூன்று, நான்கு நாட்களில், யாரிடமாவது குழந்தையை கொடுத்து, சற்று நேரம் பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு, "எஸ்கேப்' ஆகி விடுகின்றனர். மீண்டும் அந்த பெண்கள் திரும்பி வராததால், குழந்தையை வைத்துக் கொண்டு தவிப்பவர்கள், போலீசார் உதவியுடன் மருத்துவமனை டாக்டர்களிடம் ஒப்படைக்கின்றனர்.

சில நாட்களுக்கு முன், பள்ளிப்பாளையத்தை சேர்ந்த ரேணுகா என்பவர், தனக்கு குறைபிரசவத்தில் பிறந்த பெண் குழந்தையை, அதே வார்டில் இருந்த மற்றொரு பெண்ணிடம் கொடுத்துவிட்டு தலைமறைவானார். மற்றொரு பெண், மருத்துவமனை வளாகத்திற்குள் நின்று கொண்டிருந்த பார்வதி என்பவரிடம், "குழந்தையை வைத்திருங்கள் பாத்ரூம் சென்று வருகிறேன்' என கூறி சென்றார். நீண்ட நேரமாகியும் வராததால், பார்வதி, மருத்துவமனை போலீஸ் எஸ்.ஐ., அம்பிகாவிடம் நடந்த சம்பவத்தை கூறினார். அந்த குழந்தையை மருத்துவமனையில் வைத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குழந்தையை தவிக்க விட்டு செல்லும் தாய்மார்களின் எண்ணிக்கை சேலம் அரசு மருத்துவமனையில் அதிகரித்த வண்ணம் உள்ளது. தவறான உறவுகளால் கர்ப்பம் தரிக்கும் பெண்கள், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். சேலம் அரசு மருத்துவமனை டீன் டாக்டர் சண்முகம் கூறுகையில், "நாள்தோறும் ஆயிரக்கணக்கான பெண்கள் பிரசவத்துக்கு வந்து செல்கின்றனர். டோக்கன் முறையை மருத்துவமனையில் அமல்படுத்தி வருகிறோம். குழந்தைகளை தவிக்க விட்டு செல்லும் பெண்களை, போலீஸ் உதவியுடன் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆதரவற்ற குழந்தைகளை சமூக நலத்துறை மூலம், தொட்டில் குழந்தை திட்டத்தில் ஒப்படைப்போம்' என்றார்.