Showing posts with label crisp. Show all posts
Showing posts with label crisp. Show all posts

"என்னை தொடாதே. அந்த தகுதி உனக்கு இல்லை"

சிறுமி பர்பி, கண்ணீர் மல்க கூறுகையில்,"அப்பாவை பார்க்க வேண்டும் என, கேட்கும்போதெல்லாம், அம்மா என்னை கடுமையாக அடித்து துன்புறுத்துவார். விடுமுறை நாட்களில் அம்மா என்னுடன் நேரத்தை செலவிட மாட்டார். அவரது தோழிகளை வீட்டுக்கு வரவழைத்து பேசிக் கொண்டிருப்பார்" என்றார்.இவ்வாறு பர்பி கூறிக்கொண்டிருக்கும் போது, அவளது தாய் அனாமிகா வேகமாக வந்து, சமாதானப்படுத்த முயன்றார். இதைப் பார்த்த பர்பி, ஆவேசமாக,"என்னை தொடாதே. அந்த தகுதி உனக்கு இல்லை' என, அழத் துவங்கினாள்."


நீதிபதி அளித்த உணமையான சாக்லேட்!

செய்தி: தினமலர் - நவம்பர் 23,2009


கோல்கட்டா : வழக்கு விசாரணைக்காக கோர்ட்டுக்கு வந்த பத்து வயது சிறுமியை, நீதிபதியே, கடைக்கு அழைத்துச் சென்று சாக்லேட் வாங்கி கொடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் கோல்கட்டா கோர்ட்டில் நடந்தது. தனது தந்தையுடன் வசிக்க வேண்டும் என்ற, அந்த சிறுமியின் நீண்ட நாள் ஆசையையும் நீதிபதி நிறைவேற்றி வைத்தார்.

கோல்கட்டாவைச் சேர்ந்தவர் ராணா. இவரது மனைவி அனாமிகா. இவர்களுக்கு பத்து வயதில் பர்பி என்ற பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக ராணாவும், அனாமிகாவும் பிரிந்து வாழ்கின்றனர். குழந்தை பர்பி, அம்மாவுடன் தங்கி இருந்தாள். ஆனாலும், அப்பாவுடன் தங்கியிருக்க வேண்டும் என்பது தான், அவளது விருப்பம். குழந்தையை யார் வைத்துக் கொள்வது என்பதில் அனாமிகாவுக்கும், ராணாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. வேறு வழியின்றி இருவரும் கோர்ட் படியேறினர். கோல்கட்டா மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது.

விசாரணையின்போது, பர்பியும் கோர்ட் டுக்கு அழைத்து வரப்பட்டாள். "தந்தையுடன் தான், வசிப்பேன்' என, பர்பி உறுதியாக தெரிவித்தாள். இருந்தாலும், நீதிபதி முகோபாத்யாயா, இதில் அவசரப்பட்டு முடிவு எடுக்க விரும்பவில்லை. தந்தையின் மிரட்டல் காரணமாக, பயந்து போய் குழந்தை இவ்வாறு கூறுகிறதா என்பது உட்பட பல்வேறு சிந்தைனைகள் அவரது மனதில் ஓடின.நீதிபதி முகோபாத்யாயா, தனது இருக்கையை விட்டு எழுந்தார். நேராக சிறுமி பர்பி இருக்கும் இடத்துக்கு வந்தார். அடுத்ததாக கோர்ட்டில் நடந்த நிகழ்வு தான், அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

பர்பியின் கையை பிடித்து வெளியில் அழைத்துச் சென்றார், நீதிபதி. அருகில் இருக்கும் கடைக்குச் சென்று, சாக்லேட் வாங்கி கொடுத்தார். மகிழ்ச்சியுடன் அதை வாங்கிக் கொண்டாள், பர்பி. பின்னர், சிறுமிக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக பேச்சுக் கொடுத்தார்."இங்கே பார். இப்போது இருந்து நான் உனக்கு நண்பன். எந்த பள்ளியில் படிக்கிறாய்? உனது பொழுது போக்கு என்ன? உன் நண்பர்கள் யார்?' என, சிறுமியின் மனதுக்குள் இருப்பதை சிறிது, சிறிதாக கேட்டுத் தெரிந்து கொண்டார். நீதிபதியின் மென்மையான அணுகுமுறையால், அவர் மீது பர்பிக்கு நம்பிக்கை ஏற்பட்டது.

மீண்டும் கோர்ட்டுக்கு அழைத்து வந்தார். விசாரணை தொடர்ந்தது."உனக்கு ஏன் அம்மாவிடம் இருக்க பிடிக்கவில்லை' என, விஷயத்துக்கு வந்தார், நீதிபதி.இதற்கு சிறுமி பர்பி, கண்ணீர் மல்க கூறுகையில்,"அப்பாவை பார்க்க வேண்டும் என, கேட்கும்போதெல்லாம், அம்மா என்னை கடுமையாக அடித்து துன்புறுத்துவார். விடுமுறை நாட்களில் அம்மா என்னுடன் நேரத்தை செலவிட மாட்டார். அவரது தோழிகளை வீட்டுக்கு வரவழைத்து பேசிக் கொண்டிருப்பார்' என்றார்.இவ்வாறு பர்பி கூறிக்கொண்டிருக்கும் போது, அவளது தாய் அனாமிகா வேகமாக வந்து, சமாதானப்படுத்த முயன்றார். இதைப் பார்த்த பர்பி, ஆவேசமாக,"என்னை தொடாதே. அந்த தகுதி உனக்கு இல்லை' என, அழத் துவங்கினாள்.

பர்பியின் வாக்குமூலத்தை கேட்ட நீதிபதி, தனது தீர்ப்பை வாசித்தார். "பர்பியை அவளது தந்தையுடன் தங்கியிருக்க இந்த கோர்ட் உத்தரவிடுகிறது' என்றார். இதைக் கேட்ட பர்பி மகிழ்ச்சி அடைந்தாள். நேராக நீதிபதி இருக்கும் இடத்துக்கு சென்று,"நன்றி நீதிபதி அங்கிள்' என, கூறி விட்டு, வேகமாக தனது தந்தையின் கையை பிடித்தபடி, கோர்ட்டை விட்டு வெளியேறத் துவங்கினாள். சென்று கொண்டிருக்கும்போதே, நீதிபதியை நோக்கி தனது தலையை திருப்பி, மெல்ல புன்னகைத்தாள். அங்கு கூடியிருந்தவர்களின் முகங்களிலும் புன்னகை அரும்பியது.

============

இதுபோன்ற உணமையான "நீதி"பதிகளும் உள்ளனர்!

ஆண்களுக்கென்று ஒரு நாள்!

அகில உலக ஆண்கள் தினம் (International Men's Day) நாளை (19-11-2009) அன்று கொண்டாடப்படுகிறது. இது 1999-இல் மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள டிரினிடாட் & டொபாகோ நாட்டில் தொடங்கப்பட்டது. ஐ.நா-வால் அங்கீகரிக்கப்பட்ட தினமாகவும் இது விளங்குகிறது.

உலகில் ஆண்களைக் கெளரவப்படுத்தவும் ஆண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு கருதியும் இது கொண்டாடப்படுகிறது. மகத்தான தியாகங்கள் பல புரிந்து வரும் ஆண்குலத்தின் பெருமையை சமுதாயம் அங்கீகரிக்க இந்த நாள் ஒரு நினைவு படுத்தும் நாளாகவும் அமைகிறது.

இவ்வாண்டுக்கான உலக ஆண்கள் தினம் (International Men's Day) 2009 நவம்பர் 19-ம் நாள் இந்தியா மற்றும் உலக நாடுகள் அனைத்திலும் அனுசரிக்கிறார்கள். அன்றைய தினம் இந்தியாவில் டில்லி, மும்பை, லக்னௌ, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை போன்ற பல நகரங்களில் தர்ணாவும் ஊர்வலமும் நிகழ்த்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

ஆண்களுக்கென்று ஏன் ஒரு தனியான நாள் கொண்டாடப்பட வேண்டும் என்னும் கேள்வி இன்னும் சிலருக்கு எழுகிறது. சிறப்பான செயல்பாடுகள் அனைத்துமே பெண்களை முன்னிறுத்தித்தான் செய்யப்பட வேண்டும் என்னும் மனப்போக்கு மக்கள் மனத்தில் ஆழப் பதிந்து நிற்கிறது. ஆணுக்கும் பிரச்னைகள் உண்டு, அவனுக்கும் தீமைகள் இழைக்கப் படுகின்றன என்பதை அங்கீகரிக்கவே ஒரு போராட்டம் நடத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது!

சென்னையில் நாளை (19-11-2009) அன்று காலை அகில இந்திய ஆண்கள் நல சங்கம் - "AIMWA" (All India Men's Welfare Association) சில ஆண்கள் கல்லூரிகளுக்குச் சென்று கொள்கை விளக்கக் கையேடுகளை வினியோகம் செய்வர். பிறகு கார், மற்றும் இரு சக்கர ஊர்தியில் ஊர்வலமாகச் சென்று "ஆண்கள் பாதுகாப்பு இயக்கம்" நிகழ்த்தப் போகும் தர்ணாவில் கலந்து கொள்வர்.

இந்த தர்ணா நாளை (19-11-2009) காலை 11-00 மணி முதல் 12-00 மணி வரை சென்னை பார்க் டவுன் "மெமோரியல் ஹால்" எதிரில் நிகழ இருக்கிறது. இந்த இடம் சென்னை பொது மருத்துவ மனைக்கு எதிரிலும், இன்னொரு பக்கம் பார்க் டவுன் அஞ்சல் நிலையத்திற்கு எதிரிலும் உள்ளது.

ஆர்வமுள்ளவர்கள் சென்று பங்கெடுத்துக் கொள்ளலாம்.

நாளை இது பற்றி ஒரு செய்திக் குறிப்பும் வெளியாகும்.

நன்றி.

பிஞ்சு மகனின் வாழ்வைக் குலைக்கும் தாய்

எல்லாமே பணத்திற்காகத்தான்!

இப்போதெல்லாம் மணமான பெண்கள் 498A மற்றும் குடும்ப வன்முறை போன்ற சட்டங்களின் கீழ் பொய் வழக்கு போட்டு கணவனையும் அவனுடைய பெற்றோரையும் கைது செய்ய வைத்து, கோர்ட்டுக்கு இழுத்து, தன் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி சிறிதும் அக்கரையில்லாமல் அத்தனை பேர்களுடைய வாழ்வையும் அலங்கோலம் செய்வதன் அறுதி நோக்கம் என்ன? பணம், ஐயா, பணம்!

இல்லாவிட்டால் ஏன் சில வக்கீல்கள் குடும்பம் சம்பந்தமான எந்த விதப் பிரச்னையையும் இதுபோன்ற பொய் வழக்குகளாக மாற்றும் குடிசைத் தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள்! இதுபோல் கேசு மேல் கேசாகப் போட்டு, பெண்கள் கண்ணீர் சிந்தினால், "அவர்கள் கேட்ட பணத்தைக் கொடு" என்று கண்ணை மூடிக்கொண்டு கணவன் மீது ஆணையிடும் போக்கு கொண்ட நிதிபதிகளின் உதவியால் கணவனிடமிருந்து ஜீவனாம்சம், மெயிண்டனென்ஸ் என்னும் வகையில் ஒரு கணிசமான தொகையைக் கறந்து விடலாம் என்பதுதான் அவர்களது குறிக்கோள். ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி சொன்னது போல் இந்தவித சட்டங்களின் நடைமுறை ஒரு Legal Extortion!

அதுபோல் குழந்தைகளின் காப்புப் பொறுப்பு அளிப்பதிலும் பிரச்னைகளைச் செய்து தன் குழந்தைகளையே பணம் பிடுங்குவதற்காக பிணைக்கைதிகளாக மாற்றும் போக்கும் பல பெண்களுக்கு இருக்கிறது. இதற்கு தெரிந்தோ தெரியாமலோ நீதிபதிகளும் துணை போகிறார்கள்.

இந்த நிலை மாற வேண்டுமானால், குடும்ப நல நீதிபதிகளாக பெருமளவில் இளைஞர்களை நியமிக்க வேண்டும்; அவர்களில் 50% இளம் பெண்கள் இருக்கவேண்டும். அவர்களுக்குத்தான் தற்கால சமூக நிலை பற்றி முழுதாக புரிந்து கொள்ள இயலும்.

இப்போது ஒரு "மாஜி" தாயின் திருவிளையாடலைப் பாருங்கள்!

மாஜி 'தாய்' வழக்கால் தத்து மகன் அச்சம்

அக்டோபர் 16,2009. தினத்தந்தி

மும்பை: பத்து ஆண்டுக்கு மேல் விலகி இருந்த மாஜி மனைவி, திடீரென மகன் மீது உரிமை கோரி கோர்ட்டுக்கு சென்றாள். தத்து கொடுக்கப்பட்ட மகன் நிலை இப்போது கேள்விக்குறியாக உள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையை சேர்ந்தவர் ராகேஷ் மேத்தா. இவரது மகன் கரண் மேத்தா(12). இச்சிறுவனை, அவரது உறவினர், திரண் என்பவருக்கு ராகேஷ் தத்து கொடுத்தார்; இதை அவரின் மாஜி மனைவி எதிர்த்து உள்ளார். "அவருக்கு மகன் மீது அன்பில்லை என்ற அடிப்படையில், கரண் மேத்தாவை, அவரின் முன்னாள் மனைவி மீத்தாவிடம் ஒப்படைக்க வேண்டும்' என்று குடும்ப நலக் கோர்ட் நீதிபதி, வி.ஜே.லோகியா உத்தரவிட்டார். அதற்கு, ராகேஷ் ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெற்றதோடு, மேல் முறையீடும் செய்துள்ளார்.ராகேஷ் தனது மனுவில் கூறியிருப்பதாவது:

கரணின் ஒன்றரை வயதிலேயே அவன் தாய், அவனை விட்டு சென்று விட்டார். அதன் பின், 2006ம் ஆண்டு, இருவரும், விவாகரத்து பெற்றோம். 2007ம் ஆண்டு, மறுமணம் செய்து கொண்டேன். மீத்தா, கடந்தாண்டு, குடும்ப நலக் கோர்ட்டில் கரணை தன்னிடம் ஒப்படைக்க கோரி மனு தாக்கல் செய்யும் வரை, அவனை சந்திக்கவில்லை. அதன், பின், கரணை தன்வசம் இழுக்க, அவனை ஐந்து முறை சந்தித்துள்ளார். ஆனால், கரண் மீத்தாவிடம் பேச மறுத்துள்ளான். கரணின் நல்வாழ்விற்காகவே, குழந்தைகள் இல்லாத தம்பதியருக்கு, அவனை தத்து கொடுத்தேன். அவர்கள் தங்கள் சொத்தை கரணுக்கு முறைப்படி வழங்குவதற்காக, இத்தகைய ஏற்பாட்டை செய்தனர். மேலும், கரண் என் இரண்டாவது மனைவியுடன் சந்தோஷமாக உள்ளான். எனவே, கரணை என்னுடன் இருக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

பெண் குழந்தைகளை 39 முறை கத்தியால் குத்திப் படுகொலை செய்த தாய்!

இந்தியாவின் நீதிமன்றங்களில் வரும் பெரும்பான்மையான விவாகரத்து வழக்குகளில் குழந்தைகளின் காப்புப் பொறுப்பு தாயின் வசம்தான் முழுமையாக ஒப்படைக்கப்படுகிறது. எவ்வளவுதான் தந்தை தன் குழந்தைகளின் மீது பாசம் வைத்திருந்தாலும், அவர்களின் நல்வாழ்வுக்காக எத்தகைய தியாகமும் செய்பவனாக இருந்தாலும், அதே நேரத்தில் அந்தத் தாய் குழந்தைகள் மீது சிறிதளவும் பாசம் இல்லாதவளாக, "தான், தன் சுகம்" என்று இருப்பவளாக இருந்தாலும், இந்திய நீதிமன்றங்கள் குழந்தைகளை தந்தைகள் வசம் ஒப்படைப்பதில்லை.

தந்தை என்பவர் வெறும் "விசிட்டர்" என்பது நீதிமன்றங்களின் முடிபு. ஆனால் நடைமுறையில் அந்த "விசிட்டுகள்" கூட அந்தத் தந்தைகளுக்குக் கிட்டுவதில்லை. ஏதேனும் சாக்கு போக்கு சொல்லி தந்தையர்களிடம் குழந்தைகளைக் காண்பிக்காமல் ஏமாற்றும் தாய்க்குலங்கள் அநேகம். அந்தக் கணவன் பிறகு கோர்ட்டுக்கு நடையாய் நடந்து "எனக்கு குழந்தையைக் காண்பியுங்கள்" என்று போராட வேண்டும்!

ஆனால் இதில் முரண்நகை என்னவென்றால், குழந்தைகளைக் கண்னால் காண்பதற்குக் கூட வாய்ப்புக் கிட்டுகிறதோ இல்லையோ, அந்த மாஜி மனைவியின் சிலவுக்கும் குழந்தைகளின் பராமரிப்புச் சிலவுக்கும் மாதா மாதம் அந்த கணவன் தான் பணம் கொடுத்து அழவேண்டும்! இல்லாவிட்டால் சிறை தண்டனை!!

இத்தகைய ஒருதலைச் சார்பான, ஆணுக்கு எதிரான, சட்டங்கள், தீர்ப்புகள் மலிந்தது இந்த நாடு.

சரி, இந்த நாட்டில் பிறந்த ஒரு தாயார் தன் குழந்தைகளை என்ன செய்தார், விவாக ரத்து பெற்ற தன் கணவன் மீது கொண்ட வெறுப்பால் தன் குழந்தைகள அவள் எப்படிக் கொன்றாள் என்பதை வாசியுங்கள்:-

2 மகள்களை கொன்ற இந்திய பெண். 33 ஆண்டு சிறைத் தண்டனை.

லண்டன், செப்.23- 2009

இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ்ஷைர் நகரில் வசிக்கும் இந்தியப்பெண் ரேகா குமாரி பேக்கர். 41 வயதான இவர் அங்கு உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்தார். அவருக்கு டவீனா பேக்கர், ஜாஸ்மின் பேக்கர் என்று 2 மகள்கள் இருந்தனர். டவீனாவுக்கு வயது 16. இளையவளுக்கு வயது 13. இருவரையும் கடந்த 2007-ம் ஆண்டு ஜுன் மாதம் 13-ந்தேதி அவர்களது தாயார் கத்தியால் குத்தி கொன்றார். 39 முறை கத்தியால் குத்தினார்.

இரு பெண் குழந்தைகளும் தூங்கிக் கொண்டிருந்தன. அவர்கள் உயிர் பிரிந்த பின்னும் மேன்மேலும் கத்தியால் குத்திக் கொண்டெ இருந்திருக்கிறார்.
மகள்களை யார் கவனித்துக்கொள்வது என்பது தொடர்பாக அவருக்கும், அவரது முன்னாள் கணவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து தான் அவர் கொலை செய்தார்.

Indian Express reports:

Kumari-Baker’s ex-husband, businessman David Baker, said “not a day passes” when he does not think of Davina and Jasmine. “I was robbed of my daughters by an act of calculated viciousness,” he said.

Times Of India reports:

The elder daughter Davina Baker, 16, was stabbed 39 times while her sister Jasmine Baker, 13, was attacked 29 times with a kitchen knife in a frenzied attack by their mother in 2007.

அந்த ரேகா குமாரி என்னும் பெண் பேயின் திருமுகத்தைக் கண்டு "ஆகா, இவளல்லவா, பெண்குலத்திலகம்" என்று துதிபாடத் துடிப்போருக்காக அந்தப் பெண்ணின் படத்தை இந்த வலைப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.

மனோரமா ஆச்சி, எங்கே இருக்கீங்க? அந்த புதுமைத் தாய் தன் இளம் பெண் குழந்தைகளை 39 முறை கத்தியால் குத்தியதற்கும் அவளுடைய கணவனின் ஆண்மையின்மை தான் காரணமா? "தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை எப்படி வேண்டுமானாலும் கொல்ல உரிமை வேண்டும்" என்பதற்காக எப்போது போராட்டம் தொடங்கப் போகிறீர்கள்?

மனைவிகளின் கொடுமையால் பாதிக்கப்பட்ட இந்திய கணவர்களின் மாநாடு

சிம்லாவில் மனைவியால் பாதிக்கப்பட்ட கணவர்கள் மாநாடு
சனிக்கிழமை, ஆகஸ்ட் 15, 2009.

சிம்லா: மனைவிகளின் கொடுமையால் பாதிக்கப்பட்ட இந்திய கணவர்களின் மாநாடு சுதந்திர தினமான இன்று சிம்லாவில் நடக்கிறது.

இந்தியாவில் கடந்த நூற்றாண்டு வரை பெண்கள் வீட்டு அடிமைகளாக நடத்தப்பட்டனர். திருமணத்துக்கு தந்தைக்கும், திருமணத்துக்கு பின் கணவருக்கும், வயதான காலத்தில் மகனுக்கும் அடிமைகளாக இருந்தனர்.

மேலும், ஒவ்வொருவரின் வாழ்க்கையின் முக்கிய கட்டமான திருமணத்தின் போது பெண்கள் வரதட்சனை என்ற பெயரில் பெரும் கொடுமைகளை அனுபவித்து வந்தனர். இதையடுத்து இந்தியாவில் வரதட்சனை ஒழிப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், தற்போது 21ம் நூற்றாண்டில் தகவல் தொழில்நுட்பம், பொறியியல், வி்ஞ்ஞானம் என அனைத்து துறைகளிலும் பெண்கள் நன்றாக முன்னேற்றம் கண்டுள்ள நிலையில் சிலர் இந்த வரதட்சணை ஒழிப்பு சட்டம் போன்றவற்றை தங்களது சொந்த லாபத்துக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

கணவன்மார்களை தங்களது கைக்குள் வைத்துள்ளவும், பிடிக்காத கணவரை கழட்டிவிடவும் வரதட்சணை வழக்கு தொடருவேன் என மிரட்டும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. இது தொடர்பாக நீதிமன்றத்துக்கு போனால் மானம் போய்விடும், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்பதால் பல ஆண்கள் அஞ்சி பேசாமல் இருந்துவிடுகின்றனர்.

மேலும், இது போன்ற வழக்குகளில் குழந்தைகள் தாயாரிடம் இருக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்படுவதால் குழந்தைகளை பிரிய விரும்பாத நல்ல தந்தையாக இருக்க நினைக்கும் ஆண்களும் பெரும் துன்பத்துக்கு ஆளாகி வருகிறார்கள்.

ஆண்கள் இது போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருவதை ஒரிசா பெண்கள் கமிஷனும் ஒத்துகொண்டுள்ளது. கணவனை கொடுமைப்படுத்த வரதட்சணை கேட்கபதாக பெண்கள் பொய் புகார் கொடுப்பது அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இது போன்ற பெண்களால் பாதிக்கப்பட்ட கணவர்கள் ஒன்றிணைந்து, ஹிமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் மாநாடு ஒன்றை இன்று துவக்கியுள்ளனர்.

இது குறித்து இந்திய குடும்ப அடிப்படைகளை காப்பாற்றுங்கள் என்ற பெங்களூர் அமைப்பின் உறுப்பினர் விரக் துலியா என்பவர் கூறுகையில்,

எங்கள் மாநாட்டை சுதந்திர தினத்தின் போது நடத்த திட்டமிட்டோம். இதன் மூலம் எங்கள் பிரச்சனையை அனைவரின் கவனத்துக்கும் கொண்டு வரலாம் என நம்புகிறோம்.

மூன்று நாள் நடக்கும் இந்த மாநாட்டில் சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களை சேர்ந்த 100 ஆண்கள் உரிமை அமைப்பிகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். அவர்கள் மனைவிகளால் பாதிக்கப்பட்ட சுமார் 30 ஆயிரம் கணவர்களின் பிரதிநிதிகளாக பங்கேற்கின்றனர்.

ஒரு வாரத்தில் 350 ஆண்களுக்கு பாதிப்பு...

ஆண்களின் உரிமைகளை காப்பதற்கு சுமார் 100 ஹெல்ப்லைன் எண்களை பயன்படுத்தி வருகிறோம். இந்த எண்களுக்கு வாரத்துக்கு 300 முதல் 350 போன்கள் வருகின்றன. எங்களது சங்கம் சார்பில் இது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லியை சந்தித்து மனு கொடுக்க இருக்கிறோம் என்றார்.

செய்தி: தட்ஸ்தமிழ்

பொங்கியெழும் கணவர்கள்!

"ரௌத்ரம்" - ஆம், அநியாயத்தை எதிர்த்துப் பொங்கியெழும் நியாயமான கோபம்!

இதைத்தான் காண்கிறோம் அவர்களின் கண்களில்!

ஆண்களை வதைக்கும் கொடுங்கோன்மை சட்டங்களைக் கைக்கொண்டு தொடுக்கப்படும் பொய் வழக்குகளில் சிக்கி, வயதான பெற்றோர்களுடன் சேர்ந்து கைதாகி சிறைக்குச் சென்று தங்கள் வாழ்வைத் தொலைத்து நிற்கும் பாதிக்கப்பட்ட கணவர்களின் கண்களில்!

ஆம். அவர்கள் முடிவெடுத்து விட்டனர். அவர்களுக்கு விடுதலை இல்லை. சுதந்திரம் இல்லை. ஒட்டுமொத்தமான ஆண்களுக்கும் அவர்களுடைய பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகளுக்கும் எதிராக தொடுக்கப்பட்டுள்ள ஒருதலைப்பட்சமான சட்டங்கள் களையப்படும் வரை. அவை 100% துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கெடுமதியும் கள்ளக்காதல் வெறியும் பிடித்து அலையும் பல பெண்கள், அவர்களுக்குத் துணை போகும் சில பெண்ணியவாதிகள், சில பணத்தாசை பிடித்த வக்கீல்கள் மற்றும் பல மேட்டுக்குடிப் பெண்டிரைக் கொண்ட பெண்கள் இயக்கக் கும்பல் - இவர்கள் ஒன்று சேர்ந்து பல லட்சங்களைக் கொள்ளையடிக்கும் (extortion and legal terrorism) இந்த நடைமுறை தடுக்கப்படும் வரை அவர்களுக்கு சுதந்திரம் இல்லை.


அதனால் வரும் ஆகஸ்டு 15-ம் நாள் சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் பங்கு கொள்ளப் போவதில்லை என்று இத்தகைய பாதிக்கப்பட்ட கணவர்கள் மற்றும்
அவர்களின் பெற்றோர், உடன்பிறப்புகளுக்காகப் பாடுபடும் இந்திய குடும்பப் பாதுகாப்பு இயக்கத்தினர் (Save Indian Family Foundation) முடிவெடுத்துள்ளனர்.

இந்தச் செய்தியை அவ்வியக்கத்தின் சென்னைப் பிரிவின் அமைப்பாளர் திரு. சுரேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.


நம் நாட்டின் பல இடங்களில் இத்தகைய கொடுங்கோன்மைச் சட்டங்களின் தவறான பயன்பட்டால் பொய் வழக்கு போடப்பட்டு சீரழியும் ஆண்கள் மற்றும் அவர்களுடைய் பெற்றோர் துயர் களைய இந்த இயக்கம் பாடுபடுகிறது. இத்தகைய சட்டங்களில் முக்கியமானவை இந்திய குற்றவியல் சட்டம் 498A பிரிவு (IPC Sec 498A) மற்றும் குடும்ப வன்முறைச் சட்டம் (Domestic Violence Act) ஆகும்.


திரு. சுரேஷ் மேலும் கூறுகிறார்:-


ஆண்களுக்கு எதிராக ஒருதலைப் பட்சமான சட்டங்கள் பல நம் நாட்டில் இருக்கின்றன. உதாரணமாக கள்ளக்காதலில் ஒரு ஆண் ஈடுபட்டால் அது குற்றம். அந்த ஆண் உடனே கைது செய்யப்படுவான். ஆனால் ஒரு பெண் சோரம் போனால் அது சட்டப்படி குற்றமில்லை. அதாவது உங்கள் மனைவி உங்கள் எதிரிலேயே இன்னொருவனுடன் கலவியில் ஈடுபட்டால் அந்த மனைவியின்மீது நடவடிக்கை எடுக்க இந்தியாவில் எந்த சட்டமும் இல்லை. ஆனால் கணவன் இது போல்
செய்தால் உடனே கைது. அவன்மேல் அத்துணை சட்டங்களும் பாயும். இதுதான் இந்திய சட்டங்களின் ஒருதலைப் பட்சமான கட்டமைப்பு (Blatant discrimination against men).


அதே போல் குடும்ப வன்முறைச் சட்டம் மனைவிக்கு எத்தகைய வன்முறையிலும் ஈடுபட சுதந்திரம் கொடுத்திருக்கிறது. ஏனெனில் கணவன் மட்டும்தான் வன்முறையில் ஈடுபடுவான் என்று கூறுகிறது அந்தச் சட்டம். அதன்படி கணவன் முகத்தைத் திருப்பிக் கொண்டாலோ, கேள்விக்கு பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தாலோ அது குற்றம்; அந்த மனைவி உடனே கிரிமினல் கோர்ட்டில் புகார் கொடுத்து அந்தக் கணவன்மீது நடவடிக்கை எடுக்க வைக்கலாம். ஆனால் அந்த மனைவி கணவனையும் அவனுடைய பெற்றோரையும் கண்டபடித் திட்டலாம், உணவு கொடுக்க மறுக்கலாம், அடிக்கலாம், அனைத்து வன்முறைகளிலும் ஈடுபடலாம். அவை குற்றமேயில்லை, இந்தச் சட்டத்தின்படி!



இப்படி ஒரு பாலருக்கு மட்டும் எத்தகைய குற்றமும் புரிய முழுச் சுதந்திரம் கொடுத்துவிட்டு, அனைத்து ஆண்களையும் அவர்கள் ஆணாகப் பிறந்ததாலேயே குற்றம் புரிந்தவர்களாகக் கருதப்படும் நிலை இந்தியாவில் இன்று இருக்கிறது (It is a crime to be born a male in India!).



இந்தச் சட்டங்களின் அடிப்படையில் ஆண்களுக்கு மட்டும் பொறுப்புக்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. அவனை விட்டுப் பிரிந்தபின்னும் அவனது முன்னாள் மனைவிக்கு கணவன் ஜீவனாம்சம் கொடுக்கவேண்டும். ஆம், விவாகரத்து பெற்ற பின்னும் கூட மாஜி மனைவிக்கு மெயிண்டெனென்ஸ் என்ற பெயரில் பணம் கொடுத்து அழவேண்டும்! ஆனால் மனைவிக்கு மட்டும் எவ்விதப் பொறுப்பும் கிடையாது, கடமையும் கிடையாது! மனைவிக்கு இருப்பது உரிமை மட்டுமே, கணவனுக்கு இருப்பதெல்லாம் கடமை மட்டுமே, எவ்வித உரிமையும் கிடையாது! என்ன அநியாயமய்யா இது! இப்படித்தான் இந்திய திருமணச் சட்டங்களும் குற்றவியல் பிரிவு 125 (Sec 125 of CrPC) போன்ற பல சட்டங்களும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.


பெற்றோர் இருவருடைய அரவணைப்பும் குழந்தைகளுக்குத் தேவை என்பதற்காகப் பாடுபடும் இயக்கமான "Children's Rights Iniative for Shared Parenting" (CRISP) என்னும் அமைப்பின் தலைவர் திரு. குமார் ஜாகீர்தார் (இவர்தான் கிரிகெட் விளையாட்டுக்காரர் அனில் கும்ப்ளேயின் மனைவியுடைய முந்தைய கணவர் - தான் பெற்ற குழந்தையை கண்ணால் காணும் உரிமையைக் கூட நீதிமன்றங்களின் மூலம் பெற இயலாமல் தவிப்பவர்) இன்னொரு மிகவும் பரபரப்பான சிக்கலைப் பற்றிச் சொல்கிறார்:


"இந்திய ஜனத்தொகையில் 40% குழந்தைகள். ஆனால் அந்தக் குழந்தைகளின் நலத்தை கவனிக்க ஒரு தனி அமைச்சகம் கிடையாது. குழந்தை என்றாலே பெண்கள்தான் அவர்களின் போஷகர்கள் என்று முடிவு செய்துவிடுகிறார்கள். தந்தைகளின் உரிமைகளைப் பற்றியோ, அந்தத் தந்தையின் அரவணைப்பு குழந்தைகளுக்கு கட்டாயம் தேவை என்பதைப் பற்றியோ இந்தச் சமுதாயமும் சட்டங்களை இயற்றுபவர்களும் சிந்திப்பதில்லை. பெண்களின் தேவைகளும் குழந்தைகளின் தேவைகளும் ஒன்றல்ல. விவகரத்து பெற்ற பெண் மறுமணம் செய்துகொள்வது அந்தப் பெண்ணின் நோக்கில் தேவையாக இருக்கலாம். ஆனால் அது அந்தக் குழந்தைக்கு நன்மை விளைவிக்கக் கூடியதா என்பதை எண்ணிப் பார்ப்பதில்லை. ஆனால் தம்பதிகள் பிரியும்போது குழந்தைகளை பெரும்பாலும் பிரிந்து சென்ற மனைவியின் வசம்தான் நீதிபதிகள் ஒப்படைக்கிறார்கள். அவர்கள் கணிப்பில் ஒட்டுமொத்த ஆண்கள் சமுதாயமும் கிரிமினல்கள், பொறுப்பற்றவர்கள் போலும்! இயற்கையின் நியதிப்படி ஒரு தந்தை தன் குழந்தைகளுக்கு அளிக்கும் பங்களிப்பை தாய் ஈடு செய்யமுடியாது. ஒரு குழந்தையின் வளர்ச்சியில் தந்தையின் பங்கு கணிசமானது. அது இந்தக் குழந்தைகளுக்கு மறுக்கப்படுகிறது."


இந்திய குடும்பப் பாதுகாப்பு இயக்கம் வரும் ஆகஸ்டு 15 அன்று மேற்கொள்ளப்போகும் நடவடிக்கைகள் பற்றி திரு. சுரேஷ் விளக்கினார்:


"அன்றைய தினம் காலையில் சென்னையில் நாங்கள் எங்கள் பிரச்னைகளைப் பற்றியும், இன்றைய சமூகத்தில் இத்தகைய ஆணெர்ப்புச் சட்டங்களால் நம் குடும்ப வாழ்வு முறையே எப்படிச் சிதறிப்போகின்றது என்பதைப் பற்றியும் இந்தச் சட்டங்களில் உடனடியாகத் திருத்தங்கள் செய்யவேண்டிய கட்டயம் பற்றியும் விளக்கும் துண்டுப் பிரசுரங்களை மெரீனா கடற்கரையில் வினியோகிக்கப் போகிறோம். மேலும் தமிழக ஆளுனர் அவர்களிடமும் சட்ட அமைச்சரிடமும் எங்கள் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் அளிக்க இருக்கிறோம்.


அன்றைய தினம் நாடு தழுவிய அளவில் எங்கள் போராட்டம் நிகழவிருக்கிறது. ஆகஸ்டு 15, 16 தேதிகளில் சிம்லாவில் நாட்டின் பல மாநிலங்களிலிருந்தும் இந்த இயக்கத்தின் தொடர்புள்ள 14 அரசு சாரா குழுமத்தினர் வந்து கூடி இரண்டாவது தேசிய மகாநாட்டை நடத்துகிறார்கள்."


இதுபற்றி Save Indian Family Foundation இயக்கத்தின் உறுப்பினர் திரு. விராக் அவர்கள் கூறுகிறார்:-


"இந்த அமைப்பின் முதல் மாநாடு கோவாவில் சென்ற ஆண்டு நடந்தது. இந்த ஆண்டின் மாநாட்டில் இந்த அமைப்பைச் சார்ந்த 14 அரசு சாரா இயக்கங்களிலிருந்து நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் சுமார் 100 செயல் வீரர்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். எங்கள் வாழ்வாதாரங்கள்யும், பெற்றோர் நலத்தையும் பாதிக்கும் இந்த மாபெரும் பிரச்னைகளை நாங்கள் எதிர்கொள்வதற்கான செயல் திட்டங்கள் பற்றியும், ஆண்கள் நலத்திற்காக ஒரு பிரத்தியேக ஆணையம் மற்றும் அமைச்சகம் - National Commission for Men and a seperate ministry for men's welfare (பெண்களுக்கு இருப்பது போலவே) கொண்டு வரவேண்டிய கட்டாயத்தை உணர்த்துவது பற்றியும் விவாதித்து செயல் திட்டங்களை வகுத்து முடிவெடுக்க இருக்கிறோம்.
இந்த மாநாட்டிற்கு சென்னையிலிருந்து 9 உறுப்பினர்கள் கலந்து கொள்ள விருக்கிறார்கள்.


வெகு நாட்களாக தங்கள் மேல் சுமத்தப்படும் கொடுமைகளையும் சித்திரவதைகளையும் மௌனமாக தாங்கிக் கொண்டிருந்த ஆண்கள் கடைசியில் இனிப் பொறுக்கமுடியாது என்று பொங்கியெழுந்துவிட்டனர்!

(செய்தி மற்றும் படம் உதவி - டைம்ஸ் ஆஃப் இந்தியா)

கல்லைத் தல்லையில் போட்டுக் கொன்றாள் கணவனை

மற்றுமொரு கள்ளக் காதல் கொலை.

கோகுல் என்பவர் மறுமொழியில் கூறியுள்ளதுபோல் விவாகரத்தை சுலபமாகப் பெற முடிந்தால் இத்தகைய கொலைகளையாவது தடுக்கலாம். ஆனல் விவாகரத்து சட்டங்கள் தெளிவாக இல்லை. தற்கால சமூக அமைப்பு, மனநிலை, கண்ணோட்டம், ஊடகங்களின் தாக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்தச் சட்டங்கள் மாற்றப்படவேண்டும்.

தவிர நீதிபதிகளும் மனத்தளவில் விவாக ரத்துக்கு எதிராக இருக்கிறார்கள்.

இதில் உள்ள மற்றுமொரு பிரச்னை, ஜீவனாம்சம், குழந்தைகளின் பொறுப்பை யார் கையில் ஒப்படைப்பது போன்றவை. இவற்றையெல்லாம் ஒழுங்கு செய்து சீராக்கினல் இந்த கள்ளக் காதல் கொலைக்கு முற்றுப் புள்ளி வைக்கலாம்.

ஆனால் நம் அரசியவாதிகளும் பெண்ணிய அமைப்பாளர்களும் வேறு வேலை இருக்கிறதே! ஆண்களையும் அவனைப் பெற்றவர்களையும் கைது செய்து பணம் கறப்பதிலேயே அவர்கள் குறியாயிருப்பதால் முறையான செயலாகத்திற்கு அவர்களுக்கு நேரமும் இல்லை, முனைப்பும் இல்லை!

இனி செய்தி:-

-----------------------

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரைக் கொன்ற மனைவி கள்ளக் காதலனுடன் கைது.

ஆப்பிள் ஜுசில் தூக்கமாத்திரை கலந்து கொடுத்து தலையில் கல்லை போட்டு கொன்றது அம்பலம்

ஓசூர், ஜுன்.29- 2009. செய்தி - தினத்தந்தி

கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை. செய்த மனைவி கள்ளக் காதலனுடன் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சூளகிரி பக்கம் உள்ள காளிங்கவரம் பிரிவு ரோட்டில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் தலையில் கல்லை போட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தவர் கிருஷ்ணகிரி மாவட்டம் தவளம் கிராமத்தை சேர்ந்த திம்மராயன் மகன் முனிரத்தினம் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரது மனைவி காயத்ரி மற்றும் உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்களும் பிணமாக கிடந்தவர் முனிரத்தினம்தான் என்று உறுதி செய்தனர்.

திடுக்கிடும் தகவல்கள்

இதையடுத்து அவரை யார் கொலை செய்தார்கள்? எதற்காக கொலை செய்தார்கள்? என்று விசாரணை நடத்திய போது
இந்த கொலையில் துப்பு துலங்கியது. முனிரத்தினம் சொந்தமாக வேன் வாங்கி அதை அவரே ஓட்டி வந்தார். இந்த வேனை வாங்குவதற்கு கிருஷ்ணகிரி-சென்னை ரோட்டில் மெக்கானிக் கடை வைத்து இருக்கும் கிருஷ்ணன் என்கிற முத்து (வயது 29) உதவி செய்துள்ளார்.

அப்போது முனிரத்தினத்தின் வீட்டுக்கு கிருஷ்ணன் அடிக்கடி வந்து சென்றார். இந்த வேளையில் அவருக்கும் முனிரத்தினத்தின் மனைவி காயத்ரிக்கும் (32) பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.

இதை அறிந்த முனிரத்தினம் தனது மனைவி காயத்ரியை கண்டித்தார். இதனால் தங்களது கள்ளத் தொடர்புக்கு இடைனிறாக இருக்கும் கணவர் முனிரத்தினத்தை தீர்த்துக்கட்ட காயத்ரியும், கிருஷ்ணனும் திட்டம் போட்டதாக தெரிகிறது.

இதன்படி 17.6.09 அன்று இரவு முனிரத்தினத்தை கிருஷ்ணன், மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரிக்கு அழைத்து சென்றார். அங்கு ஏற்கனவே வாங்கி வைத்திருந்த 4 தூக்க மாத்திரையை ஆப்பிள் ஜுசில் கலந்து முனிரத்தினத்துக்கு கொடுத்தார்.

அதை குடித்த முனிரத்தினம் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, அவரை கிருஷ்ணன் தனது பட்டறையில் இருந்த வேனில் ஏற்றிக்கொண்டு சூளகிரி அருகே உள்ள காளிங்கவரம் பிரிவு ரோட்டிற்கு சென்றார். தூங்கிக் கொண்டு இருந்த முனிரத்தினத்தின் தலை மற்றும் கை பகுதியில் பெரிய பாறாங்கல்லை போட்டு கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இந்த கொலைக்கு காயத்ரியும் உடந்தையாக இருந்தார்.

பின்னர் அவர்கள் தங்களுக்கு ஒன்றும் தெரியாதது போல நடித்து வந்தனர். இதைத்தொடர்ந்து காயத்ரியிடம் , போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் தனது கணவரை இழந்து துயரப்படுவதாக கூறி அழுது புலம்பினார். இருந்த போதிலும் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

எப்படியும் போலீசாரிடம் சிக்கி விடுவோம் என்று பயந்த காயத்ரி தனது கள்ளக் காதலன் கிருஷ்ணனுடன் திடீரென தலைமறைவாகிட்டார். இதையடுத்து அவர்கள் பெங்களூர், மும்பை, பூனா, அகமதாபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி திரிந்தனர்.

காயத்ரி திடீரென தலைமறைவு ஆனதால் போலீசாருக்கு அவர் மீதான சந்தேகம் மேலும் வலுத்தது. அவரை போலீசார் வலை வீசி தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ஓசூருக்கு திரும்பி வந்த காயத்ரி மற்றும் கிருஷ்ணனை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரிடமும் நடத்திய விசாரணையில், அவர்கள் சேர்ந்து முனிரத்தினத்தை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். பின்னர் நடந்ததை போலீசாரிடம் வாக்கு மூலமாக அளித்தனர்.

தந்தையர் தினப் போராட்டம்

குழந்தைகளுக்கு பெற்றோர் இருவரின் அன்பும் அரவணைப்பும் தேவை என்னும் உரிமையைப் பெறப் போராடும் அமைப்பான Children's Rights Initiative For Shared Parenting (CRISP) என்ற பெயரில் செயல்படும் அரசு சாரா பெற்றோர்களின் கூட்டமைப்பு வரும் ஜூன் 20, 2009 அன்று பெங்களூரில் ஒரு மாபெரும் தர்னா ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார்கள்.

அன்றைய தினம் தாங்கள் பெற்ற குழந்தைகளைக் கண்ணால் காணக்கூட வாய்ப்பு மறுக்கப்பட்ட பல தந்தையர்கள் பெங்களூரு எம்.ஜி. சாலையிலுள்ள மகாத்மா காந்தி சிலையருகே கூடி குழந்தைகளின் வாழ்வில் தந்தையருக்கு இருக்கும் முக்கிய பங்கு பற்றி சமுதாயத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த முயன்றிருக்கிறார்கள்.

மணமுறிவுகள் பெருகிவரும் இன்னாளில் குழந்தைகளின் காப்புரிமையை நிதிமன்றங்கள் மனைவியின் கையில் மட்டுமே அளிக்கிறார்கள். இதனால் குழந்தைகளுக்கு தந்தையின் பாசமும் அன்பும் அரவணைப்பும் கிட்டுவதேயில்லை. அனைத்து தந்தைமார்களுக்கும் தங்கள் குழந்தைகளின் மேல் பாசமேயில்லாதது போல் ஒரு தவறான, உண்மைக்குப் புறம்பான, பயங்கரமான மற்றும் முட்டாள்தனமான கருத்தாக்கம் இன்று சமுதாயத்தில் பல பென்ணியவாதிகளால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய தவறான கண்ணோட்டத்தால் பாதிக்கப்படுவது குழந்தைகளின் மனநலம் தான் என்பதை இவர்கள் உணர்வதில்லை. உணர்ந்தலும் அதில் அவர்களுக்கு அக்கரையுமில்லை. தகப்பனிடமிருந்து குழந்தையைப் பிரித்து வைப்பதை ஏதோ ஒரு போரில் வெற்றி வாகை சூடியது போன்ற களிப்பில் போதை கொண்டு, தஙகள் ஈகோவை திருப்தி செய்துகொள்கிறார்கள். இதற்கு சட்டமும், நீதிமன்றங்களும் துணை போகின்றன. ஆனால் ஒரு குழந்தையின் சரியான வளர்ச்சிக்கு தந்தை, தாய் இருவரின் அன்பும் அரவணைப்பும் பங்களிப்பும் தேவை என்பதை இவர்கள் மறந்து விடுகிறார்கள்.

இது பற்றிய விரிவான செய்தி இங்கே.

'டிவி'பார்க்காதே என திட்டிய மாமியாரை கொலை செய்த மருமகள்

ஏப்ரல் 30,2009 தினமலர்

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே "டிவி' பார்க்கும் தகராறில் தன்னை திட்டிய மாமியாரை, கட்டையால் அடித்துக் கொலை செய்த மருமகளும், கொலையை மறைத்த மகனும் கைதுசெய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அடுத்த குப்பனாபுரம் கூலித்தொழிலாளி உடையார்(38), அவரது மனைவி பொன்னுத்தாய்(33), இரு குழந்தைகள் உள்ளனர்.


பொன்னுத்தாய் "டிவி'நிகழ்ச்சிகளை விரும்பி பார்ப்பார்.அதுதொடர்பாக அவருக்கும் மாமியார் ஆறுமுகத்தாயிக்கும் (55) அடிக்கடி தகராறு ஏற்படும்.


கட்டையால் அடித்துக் கொலை:


நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் பொன்னுத்தாய் "டிவி' பார்த்துக்கொண்டிருந்தார். எரிச்சலடைந்த ஆறுமுகத்தாய், ""வீட்டுவேலைகளை பார்க்காமல் "டிவி' மட்டும் பார்த்தால் எப்படி' 'என கேட்டுள்ளார். அதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பொன்னுத்தாய், அங்கிருந்த கட்டையால் மாமியார் ஆறுமுகத்தாயின் பின் தலையில் ஓங்கி அடித்தார். அதில் காயமடைந்த ஆறுமுகத்தாய் இறந்துபோனார்.

இயற்கை மரணம் என்று கூறி ஆறுமுகத்தாயின் உடல் இறுதிசடங்கிற்கு கொண்டு செல்ல தயாராக இருந்த நேரத்தில் தகவலறிந்து அங்கு வந்த கடம்பூர் இன்ஸ்பெக்டர் பீர்முகைதீன், உடலைகைப்பற்றினார். மாமியாரை கொலை செய்த மருமகள் பொன்னுத் தாய், அவர் இறந்ததை போலீசுக்கு தெரியாமல் மறைக்க முயன்ற ஆறுமுகத்தாயின் மகன் உடையாரை கடம்பூர் போலீசார் கைது செய்தனர்.

தந்தையைக் கொல்ல மகனை ஏவிய தாய்க்குலம்!

சரஞ்சீத் சிங் மல்ஹி என்பவர் பஞ்சாப் விவசாய பல்கலைக் கழக பேராசிரியர். லூதியானாவிலுள்ள அவருடைய வீட்டிற்குள் திடீரென்று புகுகின்றனர் சுமார் பதினெட்டு பிராயம் மதிகத்தக்க மூன்று பையன்கள். அவர்கள் மூவரும் அவர்மீது பாய்ந்து கத்திகளால் சரமாறியாகக் குத்திவிட்டு தாங்கள் வந்த மாருதி காரில் தப்பி விடுகின்றனர். சிறிது நேரத்தில் அக்கம்பக்கத்தினர் அவரை மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அவர் பிணமாகி விட்டார்.

அந்த பேராசிரியரைக் குத்தியது யார்? அவருடைய மகனேதான்! தன் நண்பர்களையும் துணை சேர்த்துக் கொண்டு இந்தக் கொடுமையை இழத்திருக்கிறான் அவன். அந்த இளம் பையனை தன் தந்தையையே கொலை செய்யுமளவுக்குத் தூண்டியது யார்? அவனுடைய தாயார்தான்! வாழ்க தாய்க்குலப் பெருமை!

பேராசிரியர் மல்ஹியும் அவருடைய மனைவியும் பிரிந்து வாழ்கின்றனர்.சிம்ரட் என்ற மகனையும் சிம்ரன் என்ற மகளையும் தன்னுடனேயே அழைத்துச் சென்றுவிடுகிறாள் மனைவி. பிறகு அந்த மகன் மனத்தில் தந்தைமேல் அதீத வெறுப்புணர்ச்சியை வளர்க்கிறாள். அந்த வெறுப்பியல் மனப்பான்மையின் மேலீட்டால் அந்த இளைஞன் போதைக்கு அடிமையாகி “டிரக் அடிக்ட்” ஆகிறான். அவன் பல முறை தன் தந்தையைக் கொலை செய்ய முயற்சிக்கிறான். கடைசியில் 2009 மார்ச் 26-ம் நாள் தீர்த்துவிடுகிறான். தற்போது அந்த கொலைகார சிம்ரட்டையும் அவனுக்குத் துணைபோனவர்களையும், கொலையைத் தூண்டிய மனைவி நிமஞ்சீத் கௌரையும் காவல் துறை கைது செய்திருக்கிறது.

இனிமேல் இதுபோல் நிறைய நடக்கும். அதற்காகத் தானே பாப் தலையும் லிப்ஸ்டிக்குமாக பெண்ணியவாதிகள் கொலை வெறியைப் பரப்பி வருகிறார்கள்!

செய்தி இங்கே: http://tinyurl.com/killer-motherhood

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க மாணவி ஆர்த்தி ஆர்வம்

வாங்கம்மா, வாங்க! நீங்கதான் பாக்கி.

ரேணுகா சவுத்திரி, கிரிஜா வியாஸ் மற்றும் இங்க இருக்கிற AIDWA வக்கீல்கள் எல்லாரும் சேர்ந்து பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிச்சு, பல்லாயிரக்கணக்கான வயோதிகத் தாய்மார்களையும் கர்ப்பிணிப் பெண்களையும் பொய் வழக்குகளில் கைது செய்வித்து அதனால் பெரும் லாபமடைந்து பெண் குலத்திற்கு மாபெரும் தொண்டுகளை ஆற்றி வருகிறார்கள்.

வாங்கம்மா, நீங்களும் சேர்ந்து கும்மி அடியுங்க. இதில நல்ல வருமானம் இருக்கு!

-------------

பெரியகுளம்: தினமலர் நடத்திய போட்டியில் பரிசு பெற்ற பெரியகுளம் கல்லூரி மாணவி ஆர்த்தி எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ்., படித்து பெண் சிசுக்கொலை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க பாடுபடுவேன் என தெரிவித்தார். பெரியகுளம் ஜெயராஜ் செல்லத்துரை கல்லூரி தகவல் தொழில் நுட்பம் (ஐ.டி.,) முதலாமாண்டு மாணவி ஆர்த்தி (18). இவர் சென்னையில் 2008ம் ஆண்டு டிச., மாதம் தினமலர், தி ஹிந்து, ஏர் இந்தியா ஆகிய நிறுவனங் கள் இணைந்து வழங்கிய நேர்காணல் போட்டியில் கலந்து கொண்டார். ஆர்த்தி எழுதிய கட்டுரைகளுக்கு தேனி மாவட்ட அளவில் 2ம் இடம் கிடைத்தது. "விழிப்புணர்வு பற்றிய ஓட்டம்' என்ற ரேங் அவார்டு (சீல்டு) வழங்கப் பட்டது.எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ்., படித்து பெண் சிசுக்கொலை, பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க பாடுபடுவேன் என ஆர்த்தி தெரிவித்தார்.

குழந்தைகள் நலனுக்கு தந்தையின் அன்பும் அடிப்படைத் தேவை

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சுழற்பந்து வீச்சாளருமான அனில் கும்ப்ளேயின் மனைவியினுடைய முன்னாள் கணவர் திரு. குமார் ஜாகீர்தார். இவருடைய குழந்தை முன்னாள் மனைவியிடம்தான் கோர்ட்டாரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவருக்கு தன் குழந்தையை “பார்க்கும்” உரிமைதான் தரப்பட்டது. ஆனால் அவருக்கு குழந்தையை காண்பிக்காமல் தங்களுடன் பல ஊர்களுக்குக் கொண்டு சென்று குமாரை தவிக்கவிடுகின்றார் அவருடைய முன்னாள் மனைவி. இதை எதிர்த்து, தனக்கு குழந்தைக் காண அனுமதிக்கப்பட்டிருக்கும் உரிமையைப் பெற்றுத்தரக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார், குமார் ஜாகீர்தார்.


அதோடு நில்லாமல் தன்னைப்போல் குழந்தையை அன்புடன் கொஞ்சி விளையாடி வளர்க்கும் உரிமைகள் பறிக்கப்பட்டு, தன் பெற்ற குழந்தையையே காணக் கிடைக்காமல் ஏங்கித்தவிக்கும் தந்தையர்களின் உரிமைகளை நிலை நிறுத்த “இரு பெற்றோர்களுடனும் தான் வளர வேண்டும் எனக்கேட்கும் குழந்தைகளின் உரிமை இயக்கம்” (Child Rights Initiative for Shared Parenting - "CRISP”) என்னும் ஒரு அமைப்பைத் தொடங்கி குழந்தைகள், தந்தைகள் மற்றும் தாத்தா, பாட்டிகளின் உரிமைகளுக்காகப் பாடுபட்டுக்கொண்டிருக்கிறார்.
இந்த CRISP இயக்கத்தின் சென்னைக் கிளை நேற்று துவங்கப்பட்டது. அது பற்றிய “இந்தியன் எக்ஸ்பிரஸ்” செய்தியின் தமிழாக்கம் இது:

”ஆண்டொன்றுக்கு சுமார் இரண்டு லட்சம் குழந்தைகள் மணமுறிவினால் பாதிக்கப்பட்டு ஒற்றைப் பெற்றோரால் (single parent) வளர்க்கப்படுகிறார்கள். இதனால் அந்தக் குழந்தைகளின் மனநலம் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.
விவாகாகரத்து பற்றி தீர்ப்பளிக்கும் நீதிபதிகள், குழந்தைகளின் காப்புப் பொறுப்பை யாரிடம் அளிப்பது என்ற முடிவை கணவன், மனைவியினிடையே பரஸ்பரம் தொடுக்கப்படும் புகார்களின் அடிப்படையில் எடுக்காமல் அந்தக் குழந்தையின் நலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு தீப்பளிக்க வேண்டும்” என்றார் திரு. குமார்.

”குழந்தைகளுக்கும் உரிமைகள் உண்டு என்பதை நினைக்காமல் ஒருதலைச் சார்புடன் (biased) முடிவெடுத்து நீதிபதிகள் பெண்கள் கையிலேயே குழந்தைகளை ஒப்படைக்கிறார்கள்”

”இந்த முறையற்ற செய்கையினால் குழந்தைகள் தகப்பனின் அனபைப் பெறமுடியாமலேயே வளர்கிறார்கள். தங்கள் தந்தையிடமிருந்து முழுதுமாகப் பிரிக்கப்படுகிறார்கள்”

“இந்திய நகரங்களில் சுமார் 40% (ஐந்தில் இரண்டு) திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன. இதுபோன்ற குடும்ப விவகார வழக்குகள் நீதிமன்றங்களில் ஆமை வேகத்தில் நகர்ந்து குழந்தைகளின் காப்புப் பொறுப்பை நிர்ணயிக்க ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பிடிக்கிறது.
அதன் பின்னும் அளிக்கப்படும் தீர்ப்புகளில் தந்தை குழந்தையைக் காணும் உரிமை ஒரு மாதத்திற்கு ஒரு மணி நேரம் மட்டுமே கிட்டுகிறது. ஒரு டிவி சீரியலை விடக் குறைந்த நேரம் இது” என்று விசனப் படுகிறார் திரு. குமார்.

ஆனால் அந்தக் குழந்தையின் பராமரிப்புச் செலவிற்கு பணம் கொடுப்பது என்னவோ அந்தத் தந்தைதான். இது ஒரு கொடுமையான முரண்நகை (irony)!

மேலும் இந்திய நீதிமன்றங்கள் தங்கள் மனத்தில் ”கணவன் என்றால் பொருளீட்டுபவன்; மனைவிதான் குழந்தைகளைக் கவனிப்பவள்” என்னும் பழையகால அனுமானத்திலேயே உழன்றுகொண்டு கனவன்மார்களுக்கு எதிராகவே தீப்பளித்துவருகின்றனர். இன்றைய மாறுபட்ட சமூகச் சூழலை அவர்கள் கருத்தில் கொள்வதில்லை என்றும் அங்கலாய்க்கிறார் திரு குமார் ஜாகீர்தார்.