Showing posts with label protest-day. Show all posts
Showing posts with label protest-day. Show all posts

கோவை கூட்டத்தைப் பற்றிய செய்திகள்

தினகரன் - கோவை பதிப்பு - பக்கம் - 13 (5-09-2009)

தம்பதிகள் ஒற்றுமைக்கு விழிப்புணர்வு இயக்கம்

கோவை, செப். 5: பிரிவில் இருந்து தம்பதிகளை பாதுகாக்க விழிப்புணர்வு இயக்கம் துவக்கப்பட்டுள்ளது.

சென்னை மந்தைவெளியில் இந்திய குடும்ப பாதுகாப்பு இயக்கம் செயல்படுகிறது. இதன், மாநில அமைப்பாளர் சுரேஷ்ராம் கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் குடும்ப பிரச்னை தொடர்பாக ஆண்டுக்கு 75 ஆயிரம் வழக்குகள் பதிவாகின்றன. ஒரு வழக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டு முதல் அதிகபட்சம் 5 ஆண்டு வரை நடக்கிறது. குடும்பம் சிதைந்து விடுகிறது. இந்திய அளவில் கடந்த 2005-ம் ஆண்டு புள்ளி விவரப்படி 52 ஆயிரத்து 483 கணவன்களும், 28 ஆயிரத்து 188 மனைவிகளும் குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 2006ல் 55 ஆயிரத்து 452 கணவன்களும், 29 ஆயிரத்து 869 மனைவிகளும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
குடும்ப வழக்குகள், குடும்ப பிரச்னை தொடர்பாக கணவன், மனைவி இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், 40 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். மாவட்ட அளவிலும் இந்த இயக்கம் விரிவு படுத்தப்படுகிறது.

கோவை மாவட்ட அமைப்பாளராக பிரகாஷ், ஈரோடு மாவட்ட அமைப்பாளராக கிருஷ்ணா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். குடும்ப பிரச்னையால் பாதிக்கப்பட்ட ஆண், பெண்கள் தங்கள் குடும்பம் மற்றும் இந்திய கலாச்சாரத்தை பாதுகாக்க இந்த இயக்கத்தை தொடர்பு கொள்ளலாம். சட்டஉதவி மற்றும் ஆலோசனை இலவசமாக அளிக்கப்படும். இதுதொடர்பான தகவல்களுக்கு 99410-12958, 96294-50331 ஆகிய மொபைல் போன்களில் தொடர்பு கொள்ளலாம்.

=================

முக்கிய குறிப்பு:-

மேற்கண்ட அறிவிப்பை வாசித்துவிட்டு சில பெண்மணிகள் இந்த இயக்கத்தின் செயல்வீரர்களைத் தொடர்பு கொண்டுள்ளார்கள். அவர்கள் அனைவருமே கண்வன்மார் மீது 498A வழக்குத் தொடுத்து தம் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள். அவர்களுடன் நிகழ்ந்த உரையாடல் பற்றிய விவரங்களை அடுத்த இடுகையில் காணலாம்!

==================

-------------------

7-9-2009. நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் - சென்னைப் பதிப்பு - பக்கம்: 6


தந்தையர் தினப் போராட்டம்

குழந்தைகளுக்கு பெற்றோர் இருவரின் அன்பும் அரவணைப்பும் தேவை என்னும் உரிமையைப் பெறப் போராடும் அமைப்பான Children's Rights Initiative For Shared Parenting (CRISP) என்ற பெயரில் செயல்படும் அரசு சாரா பெற்றோர்களின் கூட்டமைப்பு வரும் ஜூன் 20, 2009 அன்று பெங்களூரில் ஒரு மாபெரும் தர்னா ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார்கள்.

அன்றைய தினம் தாங்கள் பெற்ற குழந்தைகளைக் கண்ணால் காணக்கூட வாய்ப்பு மறுக்கப்பட்ட பல தந்தையர்கள் பெங்களூரு எம்.ஜி. சாலையிலுள்ள மகாத்மா காந்தி சிலையருகே கூடி குழந்தைகளின் வாழ்வில் தந்தையருக்கு இருக்கும் முக்கிய பங்கு பற்றி சமுதாயத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த முயன்றிருக்கிறார்கள்.

மணமுறிவுகள் பெருகிவரும் இன்னாளில் குழந்தைகளின் காப்புரிமையை நிதிமன்றங்கள் மனைவியின் கையில் மட்டுமே அளிக்கிறார்கள். இதனால் குழந்தைகளுக்கு தந்தையின் பாசமும் அன்பும் அரவணைப்பும் கிட்டுவதேயில்லை. அனைத்து தந்தைமார்களுக்கும் தங்கள் குழந்தைகளின் மேல் பாசமேயில்லாதது போல் ஒரு தவறான, உண்மைக்குப் புறம்பான, பயங்கரமான மற்றும் முட்டாள்தனமான கருத்தாக்கம் இன்று சமுதாயத்தில் பல பென்ணியவாதிகளால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய தவறான கண்ணோட்டத்தால் பாதிக்கப்படுவது குழந்தைகளின் மனநலம் தான் என்பதை இவர்கள் உணர்வதில்லை. உணர்ந்தலும் அதில் அவர்களுக்கு அக்கரையுமில்லை. தகப்பனிடமிருந்து குழந்தையைப் பிரித்து வைப்பதை ஏதோ ஒரு போரில் வெற்றி வாகை சூடியது போன்ற களிப்பில் போதை கொண்டு, தஙகள் ஈகோவை திருப்தி செய்துகொள்கிறார்கள். இதற்கு சட்டமும், நீதிமன்றங்களும் துணை போகின்றன. ஆனால் ஒரு குழந்தையின் சரியான வளர்ச்சிக்கு தந்தை, தாய் இருவரின் அன்பும் அரவணைப்பும் பங்களிப்பும் தேவை என்பதை இவர்கள் மறந்து விடுகிறார்கள்.

இது பற்றிய விரிவான செய்தி இங்கே.

உரிமை மறுக்கப்பட்ட மகளிர் தினம்

நிகழும் மார்ச் 8-ம் நாள் உலக மகளிர் தினம்.

அன்றைய தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 1-30 மணி வரை புதுடில்லியிலுள்ள தேசிய மகளிர் ஆணையத்தின் (National Commission for Women - NCW) முன் ஒரு தர்ணா நிகழ உள்ளது.

தர்ணாவில் ஈடுபடுவோர்- “அகில இந்திய மறக்கப்பட மகளிர் அணி” (All India Forgotten Women) மற்றும் “தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் இயக்கம்” (Mothers and Sisters Initiative - MASI) என்னும் இரு இயக்கங்களைச் சேர்ந்த பெண்மணிகள்.

கோரிக்கைகள்:-

1. தேசிய மகளிர் ஆணையமும் பெண்கள் மேம்பாட்டுத்துறை அமைச்சகமும் பெண்களின் மேம்பாட்டுக்காக உழைக்கிறோம் என்று கூறிக்கொண்டு நம் நாட்டின் முடும்ப வாழ்வு முறையையே அழித்துக் கொண்டு வருகிறார்கள். பலவித கொடுங்கோன்மை சட்டங்களைக் கட்டமைத்து நம் குடும்பங்களிலுள்ள ஆண்களையும், அவர்களின் தாய்மார்களையும், உடன் பிறந்த சகோதரிகளையும் சொல்லொணாத் துயரங்களுக்கு உட்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய செயல்பாடுகள் உடனே நிருத்தப்பட வேண்டும். இல்லையெனில் நாம் சமூகத்தில் குடும்ப வாழ்வு முறை என்பதே அடியோடு அழிந்துபோகும் நிலை உருவாகிவிடும் அபாயம் இருக்கிறது.

2. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் நம் நாட்டில் 1,23,497 பெண்கள் IPC 498A சட்டத்தைக் கையெடுத்து பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இது அரசு அளித்துள்ள புள்ளிவிவரம். ஏன், இவர்கள் பெண்கள் இல்லையா? இத்தகைய சட்டங்கள் உண்மையில் எந்தப் பெண்ணுக்கும் மேன்மையளிக்கவில்லை. ஆனால் அது கெடுமதியுள்ள பெண்கள், வக்கீல்கள் போன்றோரால் கட்டப் பஞ்சாயத்து செய்து காசு பிடுங்கும் ஆயுதமாகத்தான் பயன்படுத்தப்படுகிறது. உடனே இந்தச் சட்டமும் குடும்ப வன்முறைச் சட்டமும் (DV Act) சட்ட வல்லுனர்கள் பலர் அறிவுரைத்துள்ளபடி திருத்தப்பட வேண்டும்.

3. சமீபத்தில் பாராளுமன்றத்தில் சட்டமாக்கப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பெற்ற குற்றவியல் செயல்முறை விதிகளின் (CrPC) 41-வது பிரிவின் திருத்தத்தை உடனே அமுல் படுத்த வேண்டும். இந்தத் திருத்தத்தின் மூலம் தேவையற்ற கைது நடவடிக்ககள் நிறுத்தப்பட்டு காவல் துறையும் வக்கீல்களும் இந்திய குடிமக்களிடம் பொறுப்புடன் நடந்து கொள்ள வழிவகுக்கிறது. ஆனால் அதை அமுல் செய்தால் எங்கே தற்போதுள்ள “இம்” என்றால் கைது என்னும் நிலையில் அவர்கள் ஜாமீன் எடுப்பது போன்ற செயல்களுக்காக பெற்றுக்கொண்டிருக்கும் வருமானம் குறைந்து விடுமோ என்ற நினைப்பில் அந்தத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதை ஏற்காமல் உடனே அந்த சட்டத் திருத்தத்தை அமுல் செய்ய வேண்டும்.

4. இத்தகைய பெண்ணியவாதிகளால் நடத்தப்படும் ஆணையமும் மற்றும் பல பெண்ணிய என்.ஜி.ஓக்களும் சேர்ந்து பெண்களின் மனத்தில் நெறி சார்ந்த குடும்ப வாழ்வுக்கு எதிரான விஷ வித்துக்களை விதைத்து, பன்னாட்டு வணிக நிறுவனங்களின் விற்பனைகளை அதிகரிக்க அவர்களை தன்னிச்சையாக செலவழித்து ஓட்டாண்டியாகும் நிலையை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் மங்களூரில் ஒரு மதுபானக் கடையில் நிகழ்ந்த கண்டிக்கத்தக்க வன்முறைக்கு எதிர்வினையாக இந்த பெண்கள் வாரியமும், பெண்கள் நலனுக்கான மத்திய அமைச்சர் ரேணுகா சவுத்திரியும் எடுத்த செயல்பாடுகள் என்ன?

அந்த “பப்”பில் நிகழ்ந்த வன்முறைக்குக் காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வற்புத்த வேண்டும். இனிமேல் இவ்வாறான வன்முறை நிகழாமல் காக்கப்படவேண்டும். அதை விடுத்து, “ஏ இந்திய இளம் பெண்களே! மதுபானக் கடைகளை நிரப்புங்கள். இஷ்டப்படி யாருடன் வேண்டுமானாலும் ஆடிப்பாடி தண்ணியடித்துக் கூத்தடியுங்கள் இது உங்கள் அடிப்படை உரிமை. அதை நிலை நிறுத்துங்கள்” என்று அறைகூவல் விடுத்திருக்கிறார்கள். இதை “பப் பரோ ஆந்தோளன்” (Pub Bharo Andolan) என்று நாமகரணம் சூட்டி அதை ஒரு மாபெரும் வெற்றி என்றுவேறு கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஏன்? அவர்களின் நோக்கம் என்ன? மதுபானக்கடைகளில் வியாபாரம் தழைக்கவேண்டும் என்பது தானே! பெண்கள் வாழ்வு எப்படி நாசமாகப் போனால் அவர்களுக்கென்ன அக்கறை! பெண்ணைப் பெற்ற்வர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருக்கிறார்கள். இந்தப் பெண்ணிய வாதிகள் உண்மையில் பெண்களுக்கு நன்மையா செய்கிறார்கள்? எந்தப் பெற்றோர் தங்கள் பெண் மதுபானக் கடையில் தண்ணி போட்டு கூத்தடிக்க ஒப்புவார்கள்?

5. 498A, DvAct போன்ற சட்டங்களின் அடிப்படையில் நிகழும் ஆணழிப்புச் செயல்பாடுகள் உடனே நிறுத்தப்பட வேண்டும். அனைத்து குடும்பம் சார்ந்த சட்டங்களும் இருபாலர்களுக்கும் பொதுவாக பொருந்தும்படி மாற்றியமைக்கப்பட வேண்டும். இல்லையெனில் இந்தியாவில் கூடிய சீக்கிறமே ஒரு “தகப்பன் பெயர் தெரியாத சமூகம்” உருவாகி நிற்கும் அபாயம் இருக்கிறது!

தர்ணாவின்போது வைக்கப்படும் கோரிக்கைகள் (ஆங்கிலத்தில்):

On the occasion of International Women’s Day 2009, we make the following demands to the Government of India:


  • We demand immediate implementation of CrPC Amendments 2008 to protect us and our dear ones from legal terrorism and human rights violations.

  • We demand equal protection to men and women under law.

  • We demand laws and policies that promote family harmony.

  • We demand severe penalty for anyone misusing legal provisions to settle personal scores.

  • We demand that balanced, responsible, family-loving women are given charge of the Ministry of Women and Child Development and the National Commission for Women.

  • We demand a Ministry for Men to cater to the needs and welfare of our brothers and sons.

மேல் விவரம் இங்கே.

14-02-2009 அன்று பெங்களூரில் தர்ணா

இந்திய குடும்ப நல வாழ்வை பேணிக்காக்கும் அமைப்பினர் (Save Indian Family Foundation) வரும் 14-02-2009 அன்று பெங்களூரில் ஒரு தர்ணா நடத்த இருக்கிறார்கள்.

இடம்: எம்.ஜி சாலை - மகாத்மா காந்தி சிலை எதிரில்

நேரம்: காலை 10-00 மணீ முதல் பிற்பகல் 1-00 மணி வரை

பங்கு கொள்வோர்: சட்டபூர்வ வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இந்தக் கொடுமையை எதிர்க்கும் நல்மனது படைத்தவர்கள்.

இவர்களில் பொறியாளர்கள், மென்பொருளாளர்கள், வக்கீல்கள், எழுத்தர்கள், டாக்டர்கள், அரசு பணியாளர்கள், என்.ஆர்.ஐ-க்கள், சார்ட்டட் அக்கவுண்டண்ட்கள், வணிகத்துறையினர், பெண்கள் இன்னும் பலர் அடங்குவர்

இந்த தர்ணா எவ்விதக் கோரிக்கைகளை முன்வைத்து நிகழ்த்தப்படுகிறது?

  1. ஆண்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு (பெண்களுக்கு உள்ளது போலவே) ஒரு தேசிய ஆணையமும் ஆண்கள் நல்வாழ்வு அமைச்சகமும் வேண்டும்
  2. தேங்கி நிற்கும் ஆயிரக்கணக்கான குடும்ப வழக்குகளை மேலும் நிறைய நீதிபதிகளை நியமித்தும், மாலை நேர நீதிமன்றங்களை அமைத்தும் விரைவில் தீர்க்க வேண்டும்
  3. மக்களின் - முக்கியமாக இளைஞர்களின் - வாழ்வைப் பெருமளவில் பாதிக்கும் கொள்கை முடிவுகளை எடுப்பதில் அவர்களுடைய் பங்களிப்பையும் பெறவேண்டும்.
  4. தற்போது பெண்ணிற்கு மட்டும் மேன்மை தந்து ஆண்களை ஒடுக்கும் சட்டங்களை ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவாகப் பொருந்தும்படி மாற்றியமைக்க வேண்டும். அதற்கு முன்னோடியாக “மனைவி”, “கணவன்” போன்ற சொற்களை நீக்கிவிட்டு இருவருக்கும் பொருந்தும் “வாழ்க்கைத் துணை” அல்லது “துணைவர்” (spouse) என்றே குறிப்பிட வேண்டும்.
  5. மனைவி கணவனிடமிருந்து தற்போது பலவித சட்டப் பிரிவுகளில் ஒரே நேரத்தில் ஜீவனாம்சம்/மானியம் பெறும் அமைப்பு இருக்கிறது. இதை முறைப்படுத்தி, ஆண், பெண் இருவரும் வேலை பார்த்து நல்ல ஊதியம் பெற்று வரும் மாறுபட்ட சமூக நிலையை கருத்தில் கொண்டு சட்டங்களில் முறையான மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்.
  6. ”குடும்ப வன்முறைச் சட்டம்” தற்போது ஒருதலைப் பட்சமாக இருக்கிறது. அதில் வன்முறை என்பது (மனத்தளவிலோ, உடலளவிலோ) கண்வன் தான் செய்வான் என்று எழுதப் பட்டிருக்கிறது. அதை நியாயமான முறையில் மாற்றி, மனைவி தன் கணவன் மற்றும் மாமியார், மாமனார்க்குச் செய்யும் கொடுமைகளையும் அதில் உள்ளடக்கி, அத்தகைய கொடுமைகளுக்களுக்கான நிவாரணங்களையும் அச்சட்டத்தில் சேர்க்கவேண்டும்.
  7. குடும்ப விவகாரங்களில் போலீஸ் தலையிடுதலை நிறுத்தவேண்டும். அவர்கள் தற்போது செய்வதுபோல் குடும்பப் பிரச்னைகளில் நுழைந்து அறிவுரைகளோ, பரிந்துரைகளோ, பஞ்சாயத்தோ அளிக்கக்கூடாது
  8. பச்சிளங் குழந்தைகளின் காப்புப் பொறுப்பை நிர்ணயிக்கும் போது அக் குழந்தைகளை நேரிடையாக விசாரிக்கும் வழக்கத்தை நிறுத்தவேண்டும். இந்தச் செயல் அந்த பிஞ்சு மனங்களை நோகச் செய்யும் கொடூரமான ஒரு செயல். சூதறியா அக்குழந்தைக்கு தாயும் தந்தையும் சமம் தான். அந்த நிலையில் அக்குழந்தையிடம், “நீ தாயிடம் இருக்க விரும்புகிறாயா, தந்தையிடமா?” என்று விசாரிக்க முயலும் போது, அந்த நேரத்தில் காப்புரிமை பெற்றுள்ள பெற்றவர் மற்றவருக்கு எதிராக குழந்தையின் மனத்தைத் திருப்ப எத்தனிக்கும் அபாயம் உள்ளது.
  9. குற்றவியல் சட்டஙகளின் அடிப்படையில் வழக்கு நடக்கும்போது பொய்ப் புகார் கொடுத்தவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் கிரிமினல் வழக்குகளை சட்டப்படி புகார்கள் உணமையா பொய்யா என்று தீர விசாரித்து அதன்படி தீர்ப்புகள் அளிக்கப்பட வேண்டும். அவற்றில் எவ்வித சமரச இணக்கமும் மேற்கொள்ளக் கூடாது.
  10. பலவித சூழல்களின் தாக்கத்தால் நம் நாட்டில் தற்போது குடும்பச் சச்சரவுகள் மிக அதிகமாகி விட்டன. அதனால் பலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலை இருக்கிறது. இதற்குத் தீர்வு காணவும், நம் நாட்டின் பண்பாட்டின் அடிப்படையில் இணக்கமான குடும்ப வாழ்வு முறையை வளப்படுத்தவும் ஒரு தேசிய அளவிலான கருத்துப் பரிமாற்றத்தை நிகழ்த்தி உரிய தீர்வுகளைக் காண வேண்டும்.
  11. வருமான வரி விதித்தலில் ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் இருபாலருக்கும் ஒரே விதமான வரி விகிதம் இருக்கவேண்டும்..
  12. தற்போது நீதிமன்றங்களும், காவல் துறையும், நடுவர்களும் ஆண்களுக்கு எதிரான கண்ணோட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆண்கள் என்றாலே கிரிமினல்கள் போலவும், பெண் என்றாலே ஆண்களால் கொடுமைப் படுத்தப்பட்டவர்கள் போலவும் ஒரு கருத்தாக்கம் அவர்கள் மனத்தில் ஆழப் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. இது உண்மை நிலைக்கு மாறாக உள்ளது என்பதால், அத்துறைகளைச் சார்ந்தவர்களை ஆண்களுக்கும் இணக்கமான மனப்பான்மையையுடன் அவர்களின் பிரச்னைகளை அணுகும்படியான மனமாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் (sensitization of their minds towards the problems of men). தற்போதுள்ள ஆண்களை அச்சுறுத்திப் பணிய வைக்கும் நடைமுறை முற்றிலும் நிறுத்தப்படவேண்டும்.
  13. மணமுறிவு நிகழும்போது ஜீவனாம்சம்/மானியம் போன்ற பணம் சார்ந்த ஈட்டுத் தொகை வழங்கும் முறையை நிறுத்த வேண்டும். தவிர்க்க இயலாத சில கட்டங்களில்தான் இவை அளிக்கப்பட வேண்டும். அதுவும் மாறுபட்ட பொருளாதார சூழலைக் கருத்தில் கொண்டு, கணவன், மனைவி இருவருடைய உண்மையான வருமானத்தையும் கண்டறிந்து அதற்கேற்ப நடுநிலையுடன் வழங்கப்பட வேண்டும்.

அனைவரும் வருக!

498A சட்டம் பெருமளவில் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்கிறார் இந்தியாவின் தலைமை நீதிபதி

இதையே முன்பு இந்திய குடியரசுத் தலைவரும் கூறியுள்ளது உங்களுக்கு நினைவிருக்கும்.


சிங்கத்தின் குகையிலேயே உண்மையைப் போட்டு உடைத்துள்ள தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் அவர்களைப் பாரட்டுகிறோம்!

நம் அரசும் நிதிபதிகளும் இதுபோன்ற கொடுங்கோன்மை சட்டங்களைத் திருத்த முயல்வதை எதிர்த்துக்கொண்டு, இந்தியாவின் குடும்ப வாழ்க்கை முறையை முழுதுமாக ஒழித்துக்கட்ட கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படும் "தேசிய பெண்கள் ஆணையம்" (National Council for Women - NCW) 31-01-2009 அன்று நிகழ்த்திய “திருமணச் சட்டங்கள் - பிரச்னைகளும் சவால்களும்” என்பது பற்றிய கருத்தரங்கில் பேசிய இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திரு கே.ஜி.பாலகிருஷ்ணன் அவர்கள் இந்திய சமூகத்திற்கே எதிரான Sec 498A IPC பற்றி ஆணித்தரமாக “இந்தச் சட்டம் முழுதுமாக துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது” ("It is being grossly misused") என்று கூறி, தான் உண்மையான நீதியரசர் என்பதை நிரூபித்திருக்கிறார்!

மேலும் அவர், ”கணவன், மனைவியிடையே நிகழும் கருத்து வேற்றுமைகளுக்கும் பிரச்னைகளுக்கும் சிறிதும் தொடர்பில்லாத நபர்களைக் கூட அநியாயமாக புகார்களில் சேர்த்து அவர்களைத் துன்பப்படுத்துகிறார்கள் ("relatives not involved with a matrimonial dispute were unfairly implicated") என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ஆனால் இந்த கொடுங்கோன்மை சட்டத்தினால் பெருமளவு பண ஆதாயம் பெற்றுவரும் இந்த ஆணையத்தின் தலவராக இருக்கும் கிரிஜா வியாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில் “இந்தச் சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்பதை ஒத்துக்கொள்ள முடியாது. மக்களுக்கு போதிய அறிவு இல்லாததனால் பொய் கேசு போடுகிறார்கள். இதனால் வக்கீல்களும் போலீஸ்காரர்களும் தவறான ஆதாயம் பெறுகிறார்கள். ஆனால் இந்தச் சட்டத்தைத் திருத்த அவசியமில்லை” என்று கூறியிருக்கிறார்.

இந்த ஆணையம் நம்முடைய வரிப்பணத்தைக் கொண்டு நடத்தப்படும் ஆணையம். நம் பணத்தைக் கொண்டு நம் ரத்தத்தையே உறிஞ்சுகின்றது இந்த நச்சுப்பாம்பு!!

தலைமை நீதிபதி மேலும் பேசுகையில் “இதுபோன்ற சட்ட துஷ்பிரயோகத்தை அறிந்துதான் சமீபத்தில் குற்றவியல் செயல்பாட்டு நெறிமுறை (CrPC) திருத்தப்பட்டிருக்கிறது. இது ஒரு நல்ல சட்டத் திருத்தம். காவல் துறையினர் தகுந்த காரணமில்லாமல் கைது நடவடிக்கை எடுப்பதை இது நிறுத்திவிடும். பொய் கேசுகளில் கைது செய்வதையும் இது தடுக்கும். இது சமூகத்திற்கு நல்லது.” என்று அடித்துச் சொல்லியிருக்கிறார்.

இந்த சட்டத் திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலையும் பெற்று அமுலுக்கு வந்துவிட்டது. ஆனால் இதையும் அந்த கிரிஜா வியாஸ் எதிர்த்திருக்கிறார்.
ஏன்?

சிம்பிள்! இவர்கள் அடித்து வரும் பகல் கொள்ளை நின்றுவிடுமே என்கிற கிலி அய்யா! மக்களின் நல்வாழ்வைப்பற்றி இவர்களுக்கு என்ன கவலை. பல கனவுகளுடன் குடும்ப வாழ்வில் அடியெடுத்து வைக்கும் பெண்களின் மனத்தில் விஷ வித்தை விதைத்து இதுபோன்ற பொய் கேசுகளைப் போட வைத்து கணவன் மற்றும் அவர்களுடைய குடுமபத்தினர் மட்டுமின்றி, புகார் கொடுத்த பெண்களின் மணவாழ்க்கையையும் சீரழித்து இந்நாட்டை அந்நிய சக்திகளுக்கு அடிமைப் படுத்தும் கேடுகெட்ட முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள் இக்கெடுமதியினர்.

பெண்களைப் பற்றி இவர்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் கீழ்மட்ட சமுதாயத்தினருக்கு ஏதேனும் செய்யட்டுமே.

போலி வரதட்சணை புகார்களை கண்டித்து டிசம்பர் 6-ந் தேதி ஆண்கள் பாதுகாப்பு சங்கம் போராட்டம்

போலியாக வரதட்சணை புகார்களை பதிவு செய்யக்கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் டிச.6-ல் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.

இது பற்றி ஆண்கள் பாதுகாப்பு சங்கத் தலைவர் அருள்துமிலன், துணைத் தலைவர் லிங்கம் ஆகியோர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:-

பொய்யான புகார்கள்

போலீஸ் நிலையங்களில், ஆண்களுக்கு எதிராக கொடுக்கப்படும் வரதட்சணை புகார்களில் பெரும்பாலானவை பொய்யானவையாக உள்ளது. வரதட்சணை கொடுமை ஒருபுறம் இருந்தாலும், வரதட்சணை புகார்கள், ஆண்களை பழிவாங்கவே பயன்படுத்தப்படுகிறது. அதற்காகத்தான் ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தை தொடங்கியிருக்கிறோம். இதற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். குறிப்பாக, விவாகரத்து பெற்ற ஆண்கள் பலரும் இதற்கு ஆதரவு தரமுன்வந்துள்ளனர்.

தற்போது இங்கு ஆண்களுக்கு, ஒருநாள் இலவச சட்ட முகாம் நடத்துகிறோம். இதில், போலியான வரதட்சணை வழக்குகள் எப்படி எதிர்கொள்வது என்பது போன்ற பல்வேறு ஆலோசனைகளை தருகிறோம்.

ஆண்கள் ஆணையம் வேண்டும்

போலீஸ் நிலையங்களில் போலியாக வரதட்சணை புகார்களை பதிவு செய்யக்கூடாது, போலியான புகார் என்று தெரிந்தால் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும்; குடும்ப வன்முறை சட்டத்தில் திருத்தம் செய்யும்போது, ஆண்கள் ஆணையத்தை கலந்தாலோசிக்க வேண்டும்; சுயஉதவிக்குழுக்களில் உள்ள சிலர், குடும்ப ஆண்களுக்கு எதிராக குழு பெண்களுக்கு தவறான ஆலோசனை வழங்குகிறார்கள். இதற்கு தடை விதிக்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் வரும் டிச.6-ந் தேதி 2008 அன்று எங்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தார்கள்.

செய்தி: தினத்தந்தி

498A சட்டத்தின் கொடுமைகள் பற்றிய விழிப்புணர்வு


IPC Sec 498A வரதட்சணைக் கொடுமைச் சட்டத்தின் தவறான பயன்பாட்டின் பயங்கரத்தை மக்களுக்கு அறிவுறுத்தும் நோக்கில் சில தன்னார்வ நிறுவனங்கள் சேர்ந்து ஆந்திராவிலுள்ள விசாகப்பட்டணத்தில் ஒரு கூட்டம் நடத்தினார்கள். இதில் இந்திய குடும்பமுறை பாதுகாப்புக் குழுமம் (Save Indian Family Foundation), பாரதத்தைக் காப்போம் இயக்கம் (பாரத் பசாவோ சங்கடன்) போன்றவை பங்கெடுத்துக்கொண்டன.

அச்சமயம் நடந்த பத்திரிக்கையாளர் நேர்காணலில் தெரிவிக்கப்பட்ட உண்மைகள்:

1. இந்த 498A சட்ட செயலாக்கத்தை இந்திய உச்ச நீதிமன்றம் "சட்டபூர்வமான பயங்கரவாதம்" (Legal terrorism) என்று வர்ணித்துள்ளது.

2. இந்தச் சட்டத்தின்படி ஒரு பெண் வேறெந்தத் தகவலும் அளிக்காமல் தன்னை வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தினர் என்று மட்டும் கூறினால் போதும், அவளுடைய புகாரில் குறிப்பிடப்பட்ட அனைவரையும் (அது 100 வயது ஆன கிழவர்களாக இருந்தாலும் சரி, 3 மாதக் குழந்தையாக இருந்தாலும் சரி) அவர்களை உடனே எந்தவித முன்னறிவிப்போ, வாரண்டோ இல்லாமல், ஜாமீன் அளிக்காமல் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். ஏனென்றால் வேறெந்தச் சட்டதிலுமில்லாமல் இந்தச் சட்டத்தில் மட்டும் உள்ள பயங்கரம் இது. The IPC Sec 498A is cognizable, non-bailable and non-compoundable. இதைவிட கொடுங்கோன்மையான சட்டம் இந்தியாவில் கிடையாது.

3. இந்தச் சட்டத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்ப்டும் புகார்களில் பெரும்பகுதி பொய்யானவை; தவறான நோக்கம் கொண்டவை என்பதை நிரூபிக்கும் வகையில் சில தரவுகள் கொடுக்கப்பட்டன. 2006-ம் ஆண்டில் மட்டும் 63,128 வழக்குகள் இந்த 498A சட்டத்தில் பதியப்பட்டன. ஆனால் அதில் 2% கேசுகளில் மட்டுமே குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டன. மற்ற 98% கேசுகள் தள்ளுபடி செய்யப்பட்டன.

4. ஆனால் இதுபோன்ற பொய்யான புகார்களை எழுதி கேசு போடும் பெண்களைத் தண்டிக்க வழியேதும் இல்லை.

5. இன்னொரு கொடுமை என்னவென்றால் இதுபோன்ற புகார்களின் தொடக்க வரிகளே, தான் இவ்வளவு வரதட்சணை கொடுத்தேன் என்றுதான் இருக்கும். சட்டப்படி வரதட்சணை கொடுப்பதும் குற்றம்தான். ஆனால் அவர்களுக்கு எந்தவித தண்டனையும் இந்த சட்டத்தின்பேரில் கொடுக்கப்படுவதில்லை.

6. இந்த சட்ட துஷ்பிரயோகம் நகரங்களில் வாழும், நன்கு படித்து நல்ல வேலையிலிருக்கும் பெண்களால்தான் பெரும்பாலும் நிகழ்த்தப்படுகிறது (mostly software engineers and NRIs).

7. தேசீய குற்றத் தரவுகள் மையம் (National Crime Records Bureau) தரும் குறிப்புகளின்படி இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 55,000 மணமான ஆண்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஆனால் 28,000 மணமான பெண்கள்தான் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஆனால் மக்கள் மனத்தில் பெண்கள்தான் பெரும்பாலும் கொடுமைப் படுத்தப்பட்டு தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்பதுபோன்ற பிரமையை ஏற்படுத்திவிடுகிறார்கள்.

8. இந்த 498A சட்டத்தின் தவறான பயன்பாட்டினால் எந்தவித விசாரணையுமின்றி இதுவரை 1,15,000 பெண்கள் கைது செய்யப்பட்டு சிரையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் சிறு குழந்தைகளிலிருந்து மிகவும் வயதானவர்களும் அடங்குவர்.

9. இந்த 498A சட்டத்தின்படி ஒருவர் அவருக்கு எதிராக ஒரு பெண் புகார் கொடுத்தவுடனேயே குற்றவாளியாக முடிவெடுக்கப்பட்டு கைது, சிறை போன்ற கொடுமைகளுக்கு ஆட்படுத்தப்படுகிறார். கேசு நடத்தி அதிலிருந்து விடுபடுவதற்குள் எல்லாவித சிறுமைகளுக்கும், பணச் செலவுக்கும் ஆளாகி முழுத் தண்டனையும் அனுபவித்துவிடுகிறார். இது எந்த ஒரு நாகரிகமான நாட்டிலும் நடக்கக்கூடாத கேவலமான நிலை.

10. இந்தக் கூட்டத்தில் பங்கெடுத்த அனைத்து தன்னார்வ குழுமங்களும், இந்தச் சட்டம் கணவனிடமிருந்து பணம் கறக்க நினைக்கும் கெடுமதியினருக்குத் துணை போகின்றதேயன்றி அடிப்படையில் பெண்களுக்கு எந்தவித நன்மையும் செய்யவில்லை என்று ஒருமனதாக முடிவெடுத்தார்கள்.

11. இந்தக் குழுக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த பிரச்னைகளை மக்களுக்கும் ஆட்சியினருக்கும் தெரியப்படுத்தும் நோக்கத்தில் வரும் 19-11-2008 அன்று கோவாவில் ஒரு மாபெரும் தர்ணா மற்றும் ஊர்வலத்தை நிகழ்த்த இருக்கிறார்கள்.

12. முக்கிய கோரிக்கைகள்:

i) இந்த 498A சட்டப்பிரிவு Bailable, compoundable and Non-cognizable ஆக மாற்றப்படவேண்டும்
ii) இதுபோன்ற பெண்கள் தரப்புக்கு ஒருதலைச் சார்புள்ள அனைத்துச் சட்டங்களும் ஆண், பெண் இருபாலருக்கும் சமமாகப் பொருந்துமபடி மாற்றியமைக்கப்படவேண்டும் (They should be made gender-neutral)

போராட்டம்!

இந்திய பாரம்பரிய குடும்ப வாழ்வு முறையைக் காக்கும் மையத்தினர் (Save Indian Family Foundation) 23-02-2008 அன்று காலை சென்னை மயிலாப்பூரிலுள்ள நாகேஸ்வரராவ் பூங்கா அருகே ஒரு அமைதிப் போராட்டமும் மனிதச் சங்கிலியும் நிகழ்த்தினர். வரதட்சிணை சட்டத்தின் தவறான செயல்பாட்டினால் பாதிக்கப்பட்ட பல ஆண்களும் பெண்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு கோஷமிட்டனர். ஒரு பெண்மணி தன் சிறு குழந்தையையும் தூக்கி வந்து நின்றது, அவர் எவ்வளவு தூரம் இந்த சட்ட துன்புருத்தலால் பாதிக்கப் பட்டிருந்தார் எனப்தைக் காட்டியது!

இந்த போராட்டத்தில் வினியோகிக்கப் பட்ட கையேட்டில் கண்டிருந்தவை:-

கோரிக்கைகள்
  1. இருபாலரிடையே சமநிலை வேண்டும்
  2. பெண்களுக்குள்ளது போல், ஆண்களின் மேம்பாட்டுக்காகவும் மத்திய அமைச்சரவையில் தனித் துறை வேண்டும் (Men’s Welfare Department)
  3. சட்டத்தின் செயல்பாட்டில் ஆண், பெண் இருபாலருக்கும் சமமான அணுகுமுறை வேண்டும்
  4. பல சட்டங்களினூடே “கணவன்”, “மனைவி” என்று குறிப்பிடப்படும் இடங்களிலெல்லாம் “துணைவர்” (spouse) என்னும் சொல் பயன்படுத்தப்பட வேண்டும்.
  5. தவறு செய்பவர்கள் இருவரில் யாராக இருந்தாலும் சமமான அடிப்படையில் அணுகப்பட வேண்டும் (Equal Punishment)
  6. பெண்களுக்கும் தங்கள் பிறந்த வீட்டில் சமமான சொத்துரிமை வழங்கப்பட வேண்டும்
=============================

சட்ட தீர்திருத்தங்கள் வேண்டும்

  1. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 51A(e) பிரிவு தற்போது பெண்களின் கண்ணியத்தையும் தன்மானத்தையும் பாதுகாக்கிறது. பெண்களுக்கு மட்டும் பொருந்தும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டப்பிரிவு ஆண்களுக்கும் சேர்த்து இத்தகைய பாதுகாப்பு அளிக்கும் வண்ணம் மாற்றப்படவேண்டும் (Article 51A(e) of the Constitution of India is to be amended to include men also).
  2. “கொடுமை” என்பது சட்டப்படி எதைக் குறிப்பிடுவது என்பதை தற்போது போலீசும், புகாரளிக்கும் மனைவியும்தான் முடிவு செய்கிறார்கள். நியாயப்படி அதனை உச்ச நீதிமன்றமோ அல்லது சட்டசபை/பாராளுமன்றமோதான் தீர்மானிக்கவேண்டும். அதுவரை 498அ பிரிவின் செயலாக்கம் நிறுத்தி வைக்கப்பட வேண்டும்
  3. பாராளுமன்ற விளக்கங்கள் சட்டமாகாது. அத்தகைய விளக்கங்கள் தெளிவில்லாமலும், குழப்பங்கள் நிறைந்தும் இருப்பதால் அவை உச்ச நீதிமன்றத்தால் சட்டப்படி செல்லத்தக்கவையல்ல என்று தீர்வு சொல்லப்படவேண்டும்.
  4. வரதட்சிணை ஒழிப்புச் சட்டமும் கொடுங்கோன்மையான ‘498அ’ பிரிவும் ஸிவில் சட்டப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, அவற்றின் மேல் நடவடிக்கை “Civil Procedure Code”-படி அமைதல் வேண்டும்.
  5. சட்டப்பிரிவு ‘498அ’ உடனடி ஜாமீன் பெறத்தக்கதாகவும் (bailable), நேரடிக் குற்றமாகக் கருதப்படாததாகவும் (Non-Cognizable) மாற்றப்பட வேண்டும்.
  6. இச்சட்டத்தின்படியான போலீஸ் விசாரணைகள் நியாயமாகவும், விரைவாகவும் நடைபெற வேண்டும்.
  7. மல்லிமத் கமிஷனின் பரிந்துரைப்படி ஆண், பெண் யாராக இருந்தாலும் ஒழுக்கமற்ற கள்ளத் தொடர்பு வைத்திருப்பவர்களை சட்டப்படி கடுமையாக தண்டிக்க வேண்டும்.
  8. அரசுப் பணியாளர்கள் போலிஸினால் கைது செய்யப்பட்டால் தாற்காலிக வேலைநீக்கம் செய்யும் நடைமுறை உள்ளது. இதில் விதிமாற்றம் செய்யப்பட வேண்டும்.

விவாகரத்துச் சட்டங்களை எளிதாக்குக

  • மீள்பெற இயலாத வகையில் திருமண பந்தம் முறிந்து விட்டால் உடனடியாக விவாகரத்து வழங்கப்பட வேண்டும்.
  • ‘498அ’ பிரிவின்கீழ் மனைவி புகார் கொடுத்து (குற்றச்சாட்டுக்கள் உண்மையோ, பொய்யோ) அது காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டால் (FIR), சட்டப்படி திருமணம் ரத்து செய்யப்பட்டதாகக் கொண்டு அதற்கான ஆவணம் உடனடியாக வழங்கப்பட வேண்டும். ஏனெனில் அத்தகைய குற்றச்சாட்டு எழுந்தபின் சேர்ந்து வாழ்தல் என்பது ஒவ்வாத ஒன்று என்பதை அனைவரும் அறிந்த உண்மை.
  • குழந்தைகளின் கண்காணிப்பு உரிமம் (custody), கணவன், மனைவி இருவருக்கும் சமமான நிலையில் வழங்கப்பட வேண்டும். அதேபோல் அந்தக் குழந்தைக்கான சிலவுகளும் இருவராலும் சம அளவில் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். தற்காலத்தில் இருபாலரும் சம அளவில் பொருளீட்டும் நிலை இருப்பதால் (பல இடங்களில் பெண் ஆணைவிட அதிகம் சம்பாதிக்கும் நிலை இருக்கிறது), அச்செலவு முழுவதும் கணவனுடைய சுமைதான் என்னும் நியதி மாற்றப்படுதல் அவசியம்.
  • சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி குடும்ப வழக்குகள் பதிவு செய்ய்ப்பட்ட ஆறு மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும்.
  • நஷ்ட ஈடு மற்றும் பேணுதலுக்கான துகை சரியான அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டும். மேலும் பட்டப் படிப்பு மற்றும் தொழில் சார்ந்த கல்வி பெற்றுள்ள மனைவிக்கு கணவன் ஏதும் பராமரிப்புத் துகை கொடுக்கவேண்டாம் என்பது சட்டமாக்கப்பட வேண்டும்.
  • குடும்ப நீதிமன்றங்களில் நீதிபதிகளும் வக்கீல்களும் “திருமணத்தைக் காப்பாற்றுகிறோம்” என்னும் தவறான அனுமானத்தில், அத்திருமண பிணைப்பைத் தொடர இஷ்டமில்லாத தம்பதிகளை சேர்ந்து வாழும்படி வற்புறுத்தல் நிறுத்தப்பட வேண்டும்.

முதியோர்களை துன்புறுத்துதலை நிறுத்துக

  • 498அ சட்டப்பிரிவின் கீழ் முதியோர்களை கைது செய்தல் சட்ட பூர்வமாக நிறுத்தப்பட வேண்டும்.
  • முதியோர்கள் தங்கள் மகன், மகளுடன் வசிக்கும்போது, அவர்களின் திருமணத்திற்குப்பின் வெளியே துரத்தப்படுவதைத் தடுக்க, அவர்களுக்கு சட்டபூர்வ பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.
  • மருமகள் தன் கணவனைப்போல் கணவனின் பெற்றோரையும் பேணுவது அவர்தம் கடமை என்பதை சட்டபூர்வமாக்க வேண்டும்.
  • பாட்டன்மாருக்கும் தம் பேரக்குழந்தைகளின் போஷிப்பு மற்றும் சென்று காணும் வசதி சட்டமாக்கப்பட வேண்டும்.
  • தனியாரால் நடத்தப்படும் முதியோர் காப்பகங்கள் நீக்கப்படவேண்டும். அவை வணிக முறையில் புற்றீசல் போல் தோன்றுவதால் திருமணம் ஆனவுடனேயே பெற்றோரை அங்கு அனுப்பி விடலாம் என்னும் எண்ண்ப் போக்கு மகன்/மருமகள்களுக்குத் தோன்றிவிடுகிறது.
=======================
மேலதிக விவரங்களும் புகைப்படங்களும் அடுத்த இடுகையில்!
இதுபோன்ற பிரச்னைகள் இருப்பவர்கள் உதவி பெறுவதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:-
99410 12958 / 98807 10551 (சென்னை)
நன்றி!

498a எதிர்ப்பு தினக் காட்சிகள்

டில்லியில் நடந்த எதிர்ப்பு தினத்தின் சில காட்சிகளை இங்கே காணலாம். முழுவதும் காண இங்கே செல்லுங்கள்.