ஆண் உயிரின் விலை என்ன?

நம் நாட்டில் திருமணமான ஆண்களின் தற்கொலை, பெண்கள் தற்கொலை எண்ணிக்கையைவிட இரண்டு மடங்கு என்று அரசின் தரவுகளே (தேசீய குற்றத் தரவுகள் மையம் (National Crime Records Bureau)) தெரிவிக்கின்றன. (சுட்டி) ஆனாலும் மணமான பெண்கள்தான் பெருமளவு தற்கொலை செய்து கொள்வது போன்ற ஒரு பொய்யான தோற்றத்தை சில பெண்ணியவாதிகளும், அவர்கள் சார்ந்த சில என்.ஜி.ஓ இயக்கங்களும் தங்கள் சுயநலத்திற்காகப் பரப்பி வருகின்றன. இந்த மாயத் தோற்றம் ஊடங்கள் மூலமும் திட்டமிட்டுப் பரப்பப்படுவதால் இதை (தமிழக சுகாதார அமைச்சர் உட்பட) பலர் அப்படியே நம்பி விடுகிறார்கள்.

மேலும் ஊடகங்களுக்கும் இது உதவியாக இருக்கிறது. ஏனெனில், "இளம் பெண் தற்கொலை", "அழகி தற்கொலை", "மாமியார் கொடுமையால் இளம் மனைவி தற்கொலை" - இப்படியெல்லாம் வெளிவந்தால்தான் அது பரபரப்பான நியூஸ்! "ஆண் தற்கொலை", "கணவன் மாண்டான்" என்று எழுதினால் ம்ஹூங், அதை யாரும் சீந்த மாட்டார்கள். சாதாரணமாகவே செய்தித்தாள்களில் செய்தி வெளியாவதில் ஒரு அமைப்புமுறை (pattern) இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். ஒரு சம்பவத்தில் 10 பேர் மாண்டால், "3 இளம் பெண்கள் உட்பட 10 பேர் பலி" என்றுதான் எழுதுவார்கள்!

இத்தகைய பொய்மை பரவுவதால் பலர் ஆதாயம் அடைகின்றனர். "ஐயகோ, இந்த நாட்டில் இன்னமும் ஆயிரக் கணக்கான பெண்கள் ஆண்களின் கைகளில் சிக்கி கொடுமைப் படுவதால் தற்கொலை செய்துகொண்டு மடிகிறார்களே" என்னும் கூப்பாட்டை அணையாமல் ஊதிக் கொண்டிருந்தால்தான் ஐ.நாவைச் சார்ந்த UNIFEM மற்றும் மக்கள் வரிப்பணத்திலிருந்து கணிசமான துகை இந்த நபர்கள் கையில் சிக்கும்! அதை வைத்து பெண்களின் துயர் துடைப்பதாகச் சொல்லிக்கொண்டு, சில மேட்டுக்குடிப் பெண்கள் "பப்"பிற்குச் சென்று தண்ணி போடும் உரிமைக்காகவும், ஏர் ஹோஸ்டஸ்கள் பொய் வழக்கு போடும் உரிமைக்காகவும், குடும்பப் பெண்களை தங்கள் வாழ்வைச் சிதைத்துக் கொண்டு கோர்ட்டு வராண்டாவில் லோலோவென்று அலைய வைக்கவும் போராடுகிறோம் என்று சிலவுக் கணக்கு எழுதிக் கொண்டிருக்கலாம்!!

ஆணின் உயிரின் மதிப்பை அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்:



(நன்றி: "பெண்கள் நாட்டின் கண்கள்")

சரி. இப்போது இந்த அப்பாவி ஆணின் தற்கொலைக் கதையை வாசியுங்கள்:

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை சந்தித்தபின் புதுமாப்பிள்ளை `திடீர்' தற்கொலை

தாயாருக்கு உருக்கமான `எஸ்.எம்.எஸ்.'

தாம்பரம், அக்.31- 2009. செய்தி - தினத்தந்தி

சென்னையை அடுத்த குரோம்பேட்டை சாஸ்திரி காலனியை சேர்ந்தவர் யோமஹாசன் (வயது 27). பி.பி.ஏ. பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு சமீபத்தில் உறவினர் பெண்ணை திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை சந்தித்து விட்டு நேற்று முன்தினம் இரவு வந்த யோமஹாசன் வீட்டில் சோகமாக இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டில் படுக்கையறையில் தூங்க சென்றவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

யோமஹாசன், இறப்பதற்கு முன்பு தனது செல்போனில் தாயாருக்கு எஸ்.எம்.எஸ். டைப் செய்து வைத்திருந்தார். அதில் `எனது சாவுக்கு யாரும் காரணமல்ல, எனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணிற்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுங்கள்' என்று அதில் இருந்தது.

யோமஹாசன் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது மர்மமாக உள்ளது. இது தொடர்பாக குரோம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கள்ளக்காதலனை எரித்துக்கொன்ற அபலைப்பெண்

துறையூர். தினமலர் - 30-10-2009

துறையூர் அருகே கள்ளத்தொடர்பை துண்டித்துக்கொள்வதாக கூறிய கள்ளக்காதலனை எரித்துக்கொன்ற காதலியை போலீஸார் கைது செய்தனர்.

துறையூர் அருகே கண்ணனூரை சேர்ந்த லாரி டிரைவர் சேகர்(35). இவர் கடந்த 27ம் தேதி கண்ணனூர் அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறம் குழந்தை என்பவரின் சோளைக்காட்டில் எரிந்து கருகிய நிலையில் நிர்வாணமாக இறந்து கிடந்தார். சேகரின் மர்ம மரணம் குறித்து புலிவலம் போலீஸார் விசாரித்து வந்தனர்.

போலீஸ் விசாரணையில், சேகருக்கும் அதே ஊரை சேர்ந்த கணவனால் கைவிடப்பட்டு தனியே வசித்த தனலட்சுமி(55)க்கும் கள்ளக்காதல் இருந்தது தெரிந்தது. இருவருக்கும் கடந்த 15 ஆண்டாக தொடர்பு இருந்துள்ளது.

இந்நிலையில் சேகர் மூன்று ஆண்டுக்கு முன் வளர்மதி(30)யை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பின்பும் சேகரை தன்னுடன் இருக்குமாறு தனலட்சுமி வற்புறுத்தி வந்ததால் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது.

கடந்த 26ம் தேதி இரவு எப்போதும் தனிமையில் சந்தித்துக் கொள்ளும் சோளக்காட்டிற்கு சேகரை வருமாறு தனலட்சுமி வற்புறுத்தியுள்ளார். தனலட்சுமி தொல்லை பொறுக்காத சேகர், தனலட்சுமியை கொல்வது அல்லது இருவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்வது என்ற முடிவுடன் ஒரு கேனில் மண்ணெண்ணெயுடன் சென்றுள்ளார்.

இருவரும் உல்லாசமாக இருந்துவிட்டு மண்ணெண்ணெய் ஊற்றி தீ தங்களுக்குத் தானே தீ வைத்துக்கொள்வது என முடிவு செய்துள்ளனர். அதன்படி, ஒருவர் மீது ஒருவர் மண்ணெண்ணை ஊற்றி முதலில் சேகர் மீது தனலட்சுமி நெருப்பு பற்ற வைத்துள்ளார். நிர்வாணமான சேகரின் உடலில் "தீ' மளமளவென பரவி எரிந்தபோது வலி தாங்காமல் கத்தி அங்குமிங்கும் ஓடியுள்ளார். எங்கே தன்னையும் கட்டிப் பிடிப்பானோ என பயந்த தனலட்சுமி சேகரின் உடைகளை எடுத்துக்கொண்டு ஓடியுள்ளார்.

சேகரின் மரணம் குறித்து புலிவலம் போலீஸார் நடத்தி விசாரணையில், தனலட்சுமி சேகரை எரித்துக் கொன்றதை ஒப்புக்கொண்டு வாக்கு மூலமளித்தார். புலிவலம் போலீஸார், தனலட்சுமியை கைது செய்து துறையூர் கோர்ட்டில் நீதிபதி தோத்திரமேரி முன் நேற்று ஆஜர்படுத்தினர். 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிடப்பட்டதை அடுத்து திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.

===========

அன்புள்ள வாசகர்களே,

498A பற்றி பதிவு எழுதத் தொடங்கி விட்டு, கள்ளக்காதல் நிகழ்வுகளைப் பற்றியும் அதனால் விளையும் கொலைகளைப் பற்றியும் விவரிக்கும் காரணம் என்ன என்னும் வினா உங்கள் மனத்தில் தோன்றினால் அதை மறுமொழியில் கேளுங்கள். தகுந்த விடையளிப்பது என் கடமை!

மனைவி ஓடலாம், ஆனால் கணவன் ஓடினால் கைது ஆவான்

காதல் திருமணம் செய்த 3 நாளில் மனைவியை பிரிந்து சென்ற கணவன் கைது

புவனகிரி,அக்.30- 2009. தினத்தந்தி

கடலூர் மாவட்டம் புவன கிரி அருகே உள்ள கண்ணங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைப் பிள்ளை. இவரது மகள் ஜெயந்தி (வயது 21).இவர் புவனகிரி யூனியன் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக தற்காலிகமாக வேலை பார்த்து வந்தார்.

தற்போது கீரப்பாளையம் மேட்டுத்தெருவில் குடியிருந்து வருகிறார்.அப்போது அதே தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சரவணன்(21) என்பவருக்கும் ,ஜெயந்திக்கும் பழக்கம் ஏற்பட்டது.இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.அதையடுத்து 2 பேரும் வீட்டை விட்டு வெளி யேறி அங்குள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

கைது

அதன் பிறகு 3 நாட்கள் ஜெயந்தியோடு குடும்பம் நடத்திய சரவணன் பெருமாத்தூரில் உள்ள அவரது சித்தி வீட்டில் விட்டு சென்றார்.போகும் போது தாலியையும் கழற்றி வாங்கி கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.அதை தொடர்ந்து சரவணன் அங்கு செல்லவில்லை. இதனால் தான் ஏமாற்றப் பட்டதை அறிந்த ஜெயந்தி இது பற்றி புவனகிரி போலீசில் புகார் செய்தார்.அதில், தன்னுடைய கணவனை சேர்த்து வைக்குமாறு புகார் கூறினார்.அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.மேலும் சரவணனை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.விசாரணையில் சரவணன் ஜெயந்தியோடு வாழ மறுத்துவிட்டார். அதையடுத்து சரவணனை போலீசார் கைது செய்தனர்.
==================

திருமணம் செய்து கொண்டால் கட்டாயம் மனைவியின் புகாரின் பேரில் எல்லா கணவன்மார்களும் ஒரு நாள் கைது ஆகப் போவது நிச்சயம். சிலருக்கு உடனே சிறப்பு நடக்கும், பலருக்கு 14 ஆண்டுகள் கழித்து நிகழும். ஐயமிருந்தால் "என் வயதான பெற்றோர் நம் வீட்டில் நம்முடன் சேர்ந்து வாழப் போகிறார்கள்" என்று உங்கள் ஆசை மனைவியிடம் சொல்லிப் பாருங்களேன்!

பிறந்த ஆண் குழந்தையை உதறி விட்டு ஓடிய தாய்!

இனிமேல் இப்படித்தான் நடக்கும். ஆண் குழந்தையைப் பெற்றால் அந்தத் தாய் படப்போகும் துயரங்களை அவர்கள் உணரத் தொடங்கி விட்டனர். இனி ஆண் சிசுக் கொலை பரவலாகும் நிலை நிச்சயம் ஏற்படப்போகிறது. அந்த ஆண் வளர்ந்து பெரியவனாகி அவன் ஒரு பெண்ணைக் காதலித்து திருமணம் செய்தபின், மருமகள் போடப்போகும் 498A வழக்குகளில் சிக்கி சிறைக்குப் போகும் அவலத்தையும், கள்ளக்காதல் கொலையையும், அதற்கு அந்த ஆணையே காரணமாக்கும் மனோரமாவின் இயக்க நடவடிக்கைகளையும் தவிர்ப்பது எப்படி என்று தாய்மார்கள் யோசிக்கத் தொடங்கி விட்டனர்!

இப்போது செய்தியை வாசியுங்கள்:-

தூத்துக்குடி, அக்.30- 2009. செய்தி - தினத்தந்தி

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தாய் உதறிவிட்டு சென்ற ஆண் குழந்தை சமூகநலத்துறையில் ஒப்படைக்கப்பட்டது.

ஆண் குழந்தை

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 10-ந் தேதி மாலை 61/4 மணிக்கு ஒரு இளம் கர்ப்பிணி பெண் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

அப்போது அவர் முத்தையாபுரத்தை சேர்ந்த செந்தில்குமார் மனைவி சகுந்தலா(24) என்ற முகவரி கொடுத்தார். இதைத்தொடர்ந்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சகுந்தலாவுக்கு மறுநாள் அதிகாலை 21/4 மணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

தாய் ஓட்டம்

இந்தநிலையில் குழந்தையை உதறிவிட்டு சகுந்தலா ஆஸ்பத்திரியில் இருந்து ஓடிவிட்டார். இதனால் தவித்து கொண்டு இருந்த குழந்தையை ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் தனியாக வைத்து பாதுகாத்து வந்தனர்.

இது குறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையை போட்டுவிட்டு ஓடிய தாயை தேடிவந்தனர். ஆனால் இதுவரை கிடைக்கவில்லை.

ஒப்படைப்பு

இதைத்தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த ஆண் குழந்தை நேற்று காலை சமூகநலத்துறையில் ஒப்படைக்கப்பட்டது.

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி டீன் ரவிசங்கர் குழந்தையை சமூகநலத்துறை அலுவலர் முத்துநாயகத்திடம் ஒப்படைத்தார். அப்போது அரசு ஆஸ்பத்திரி உறைவிட மருத்துவர் விசுவநாதன் உடன் இருந்தார்

ஆகா, இவளல்லவோ தெய்வீகப் பெண்!

நிச்சயமாக இந்தப் புதுமைப் பெண்ணுக்கு கோயில் எழுப்ப வேண்டும். ஏனெனில் நம் நாட்டில் திருமணம் செய்துகொள்ளும் ஆண்களின் உன்னத நிலையை அப்பட்டமாக வெளிக்காட்டிய கைங்கரியத்தை இவர் செய்துள்ளார். இவளை திருமண சீர்திருத்த இயக்கத்தின் தலைவியாக அமர்த்த நாம் பரிந்துரை செய்யலாம்!

தினமும் நாம் (குறைந்தது அரை டசன் கேசுகளாவது) செய்தித்தாள்களில் வாசிக்கும் செய்தி இதுபோல்தான் இருக்கும். அதாவது - ஒரு அப்பாவிப் பெண்ணைக் காதலித்து கைவிட்டு விட்டான் ஒரு போக்கிரி ஆண். அந்த அபலை காவல் நிலையத்தில் கண்ணீரும் கம்பலையுமாக புகார் கொடுத்தாள். அவளுக்கு ஆதரவாக பெண்கள் இயக்கத் தலைவியும் சென்றார். உடனே அந்த ஆணைக் கைது செய்து சிறையிலடைத்தார்கள்.

அந்தப் பெண் தன் பேட்டியில், "நான் ஒரு உன்னத தமிழ்ப்பெண். என்னைக் காதலித்த அந்த ஆணுடன்தான் நான் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துவேன். அவனுடன் திருமணம் நடக்க அவனுடைய பெற்றோர்கள்தான் தடையாக உள்ளனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என் காதலர் நான் இன்னொருவனுடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகிக்கிறார். அந்த நபர் என் நண்பர்தான். அவருடன் இரவில் நெடுநேரம் செல்ஃபோனில் பேசிக்கொண்டிருப்பேன். அதைப்போய் ஒரு குற்றமாகக் கருதி என் காதலர் என்னுடன் சண்டை போட்டார். அதனால்தான் புகார் கொடுத்தேன்" என்றார்.
- இப்படித்தான் இதுபோன்ற காமக் கதைகள் ஓடும். உடனே நம் பெண்ணியவாதிகளும் ஜொள்ளியவாதிகளும், "ஐயகோ, அந்தப் பெண்னை கைவிட்டுவிட்டானே காமாந்தகாரன், சண்டாளன், இவனை என்ன செய்தாலும் தகும்" என்று கும்மியடித்து கோலாட்டம் போடுவார்கள்.

சரி அந்த முட்டாள் ஆணின் மீது கேசு போட்டு கைது செய்கிறார்களே, அது எந்தக் குற்றப் பிரிவின் கீழ் என்று விசாரித்தால், கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான வன்முறை, ஏமாற்றல், கற்பழிப்பு, பெண்களை பொது இடத்தில் மானபங்கம் செய்தல் இதுபோன்று ஆண்களை ஆண்களாக அவர்கள் பிறந்தத்தற்காகவே குற்றவாளியாக்குவதற்காக கட்டமைக்கப்பட்டிருக்கும் 40-க்கும் அதிகமான சட்டங்களில் சிலவற்றைப் போட்டு ஊத்தி மூடி விடுவார்கள்.

ஆனால், அதேபோல் ஒரு பெண் ஒருவனைக் காதல் செய்து விட்டு இன்னொருவனோடு ஓடினால், அதுவும் ஒருவனோடு திருமணம் நிச்சயம் ஆனபிறகு அந்தத் திருமண நாளன்றும், அல்லது திருமணம் முடிந்த பின்பும் இன்னொருவனோடு ஓடினால் அந்தப் பெண்மீது என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?

ஒரு புண்ணாக்கும் முடியாது. அந்தக் கணவன் வாயில் விரல் போட்டு சப்பிக்கொண்டிருக்க வேண்டியதுதான்!

சந்தேகமிருந்தால் "தேவதையைக் கண்டேன்" என்னும் திரைப் படத்தில் தனுஷ் பேசுவதை இந்த வலைப்பதிவில் பாருங்கள்.

ஆகையால் இளைஞர்களே, நீங்கள் கட்டாயம் திருமணம் செய்து கொள்ளுங்கள், இதோ இந்த உன்னதப் பெண்ணின் பண்பாடு செறிந்த நடவடிக்கையைக் கண்ட பெருமிதத்துடன்!!

செய்தி - தினமலர். அக்டோபர் 29,2009.

கள்ளக்காதலுடன் ஓடிய தாயை பார்த்ததும் அழுத குழந்தைகள்.

திண்டுக்கல் : கள்ளக்காதலனுடன் பத்து மாதங்களுக்கு முன்பு ஓடிப்போன தாயை கோர்ட்டில் பார்த்ததும், அவரது இரண்டு ஆண் குழந்தைகளும் கதறி அழுது தங்களுடன் வருமாறு அழைத்தனர்.

திண்டுக்கல் அருகேயுள்ள கள்ளிமந்தையம் செரியன்நகரைச் சேர்ந்தவர் சாமுவேல் (35). இவருக்கும் உஷா (27) என்பவருக்கும், ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. சாம்பிரசன்னா (5), சுதன் (3) என்ற இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நர்ஸ் வேலை பார்த்த உஷா தான் படிக்கும் போதே காதலித்த பிரகாஷ் என்பவருடன் கடந்த ஜனவரி மாதம் ஓடிப்போனார். (திருமணத்துக்கு முன்பே ஒருவனைக் காதலித்தவள் இன்னொருவனுடன் திருமணம் செய்து கொண்டு அவன் வாழ்க்கையை ஏன் கெடுக்கிறாள்? இதற்கு எல்லாம் தெரிந்த "டோண்டு" தான் பதில் சொல்ல வேண்டும்)

இது குறித்து சாமுவேல் கள்ளிமந்தையம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

சாமுவேல் தனது நண்பர்கள், உறவினர்களுடன் சென்று திருவாரூரில் காதலனுடன் தங்கியிருந்த உஷாவை அழைத்து வந்து கள்ளிமந்தையம் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். போலீசார் நேற்று உஷாவை திண்டுக்கல் ஜே.எம்.,1 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டில், கணவனுடன் செல்ல மறுத்த உஷா, தன் தாய் வீட்டிற்கு செல்வதாக தெரிவித்தார்.

கோர்ட் முடிந்து வாசலுக்கு வந்த தாயைப் பார்த்ததும், இரு குழந்தைகளும் கதறி அழுதன. ""அம்மா நம்ம வீட்டுக்கு வாம்மா, அப்பாவுடன் சேர்ந்து நாலு பேரும் ஒன்றாக இருக்கலாம்'' என அழைத்தனர். இதனை கேட்டு கோர்ட் ஊழியர்களும், அங்கிருந்தவர்களும் கண் கலங்கினர். ஆனாலும் உஷா தன் கணவனுடன் செல்ல மறுத்து விட்டார்.

"உஷா காதலனுடன் செல்வதற்காகவே என்னுடன் வர மறுக்கிறார்." அவரை அழைத்து வந்த காதலன் பிரகாஷ் கோர்ட்டிற்கு வந்திருப்பதாக சாமுவேல் தெரிவித்தார்.

உஷாவிடம் கேட்ட போது, "என் கணவர் என்னிடம் பணம் கேட்டு அடித்து தகராறு செய்ததால் நான் வெறுத்துப்போய் தாய் வீட்டிற்கு செல்கிறேன். (அட்ரா சக்கை! இதைச் சொன்னால்தானே கேள்வி கேட்கும் கணவனை 498A போட்டு பயமுறுத்தி, அடக்கி வைத்து கள்ளக் காதலுக்கும் சேர்த்து அவனிடமிருந்து மிரட்டிப் பணம் பறிக்க முடியும்! கணவனிடம் சேர்ந்து குடும்பம் நடத்த ஒப்பாமல் ஓடிப்போகும் மனைவிகள், கணவர்களிடமிருந்து பணம் பறிக்க 40+ வித சட்டங்கள் உள்ளன. நீதிபதிகளும், அவள் அதற்கு சட்டடப்படி தகுதியுள்ளவளா என்றெல்லாம் ஆராய்வதற்கு முன்னமையே, "முதலில் மனைவி கேட்ட பணத்தைக் கொடு" என்று தீர்ப்பு அளித்து வருகிறார்கள். பிறகென்ன, கொண்டாட்டம்தான்! கள்ளக் காதல் மனைவிகளுக்கு சட்டங்கள், போலீஸ், பெண்ணியவாதிகள், நீதிபதிகள் போன்றோர் உபயத்தினால் கணவன் காசில் தினந்தோறும் தீபாவளிதான்!. கேடுகெட்ட சமுதாயமய்யா இது!!) எனக்கு படிக்கும் காலத்தில் இருந்தே காதலன் இருப்பது என் குடும்பத்தாருக்கும்,கணவன் குடும்பத்தாருக்கும் தெரியும். தற்போது காதலன் வேறு பெண்ணை மணந்து அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதால், அவருடன் செல்ல வாய்ப்பு இல்லை. நான் என் தாய் வீட்டில் தங்கப்போகிறேன்,'' என்றார். (ஆகா, இவளல்லவா, பாரதி கண்ட புதுமைப் பெண்! வாழ்க மனோரமாவின் இயக்கம்!)

=========================

"ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, பெண்கள் ஆனந்த முழுச் சுதந்திரம் அடைந்து விட்டார்கள் என்று ..."

ஐயோ பாவம் செம்மலை!

1.
அதிமுக மாஜி அமைச்சர் மனைவி-மருமகள் அடிதடி
சனிக்கிழமை, டிசம்பர் 15, 2007

சேலம்: அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செம்மலை குடும்பத்தில் மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே நடந்த சண்டை வீதிக்கு வந்து கைகலப்பில் முடிந்தது.

சேலத்தை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை. இவர் மனைவி புஷ்பா. இவர்களது மகன் எழில் அமுதனுக்கும், மேட்டூரைச் சேர்ந்த டிஎஸ்பி முத்துசாமி மகள் வாணி பிரீதாவுக்கும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் தனது மாமியார் புஷ்பாவும், கணவரும் ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்துவதாக மேட்டூர் மகளிர் காவல் நிலையத்தில் வாணி பிரீதா புகார் செய்தார். அந்த வழக்கு சூரமங்கலத்திற்கு மாற்றப்பட்டது.

அதன் பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி அந்த வழக்கு ஈரோடு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர் எழில்அமுதன்-வாணி பிரீதா இருவரும் விவகாரத்து கேட்டு தொடர்ந்த வழக்கு சேலம் குடும்ப நல நீதிமன்றத்திற்கு வந்தது.

இந்த வழக்கு விசாரணைக்காக இருதரப்பினரும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். அப்போது வாணி பிரீதாவுக்கும், அவரது மாமியார் புஷ்பாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கடைசியில் அடிதடியில் முடிந்தது.

இதில் மாமியாரும்-மருமகளும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். பின்னர் உடன் வந்திருந்த உறவினர்கள் அவர்களை சமாதனப்படுத்தி அழைத்து சென்றனர்.

இதனால் சேலம் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

http://thatstamil.oneindia.in/news/2007/12/01/tn-minister-wife-and-daughter-inlaw-exchange-blows.html

2.
வரதட்சணை கொடுமை வழக்கு: அ.தி.மு.க. எம்.பி. குடும்பத்துடன் ஆஜர்

வரதட்சணை கொடுமை வழக்கு தொடர்பாக சேலம் தொகுதி அ.தி.மு.க. எம்.பி. செம்மலை, தனது மனைவி மற்றும் மகனுடன் சேலம் மகளிர் கோர்ட்டில் ஆஜரானார்.

அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், தற்போதைய சேலம் தொகுதி எம்.பி.யுமான செம்மலையின் 2 வது மகன் எழில் அமுதன். இவருக்கும், சேலம் மாவட்டம் குஞ்சாண்டிழூரை சேர்ந்த முத்துசாமியின் மகள் வாணி பிரிதாவுக்கும் கடந்த 2004 ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் வாணி பிரிதா, தன்னுடைய கணவர் எழில் அமுதன், மாமியார் புஷ்பா, மாமனார் செம்மலை ஆகியோர் மீது மேட்டூர் போலீசில், வரதட்சணை கொடுமை புகார் செய்தார்.

புகார் அடிப்படையில் செம்மலை எம்.பி., அவருடைய மனைவி புஷ்பா, மகன் எழில் அமுதன் ஆகியோர் மீது சேலம் அனைத்து மகளிர் கோர்ட்டில் வரதட்சணை கொடுமை வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்தது.

இந்த நிலையில் நேற்று காலை மகளிர் கோர்ட்டு நீதிபதி கோபால் முன்னிலையில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.

செம்மலை எம்.பி., அவருடைய மனைவி புஷ்பா, மகன் எழில் அமுதன் ஆகியோர் நேற்று கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். அப்போது சாட்சிகள் அளித்த தகவல்களின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரிடமும் கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டன.

அப்போது செம்மலை எம்.பி. இந்த வழக்கு பொய்யான வழக்கு என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கு என்றும் பதில் அளித்தார். இந்த பதில்கள் பதிவு செய்யப்பட்டன. அதேபோல் அவருடைய மனைவி புஷ்பா, மகன் எழில் அமுதன் ஆகியோர் அளித்த பதில்களும் பதிவு செய்யப்பட்டன.

பின்னர் இந்த வழக்கு விசாரணை 14 ந் தேதிக்கு (நாளை) தள்ளி வைக்கப்பட்டது.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=18458

3.

சேலம், அக் 23-

சேலம் பேர்லேண்ட்ஸ் பகுதியில் வசித்து வருபவர் செம்மலை எம்.பி. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரான இவர் மீதும், இவரது மனைவி புஷ்பா, கணவர் எழில்அமுதன் மீதும் அவரது மருமகள் வாணிபிரித்தா வரதட்சணை புகார் கூறி இருந்தார்.

இந்த மனு மீது முதலில் மேட்டூர் போலீசார் விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கு ஈரோட்டுக்கு மாற்றப்பட்டது.

பிறகு சேலம் சூரமங்கலம் மகளிர் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதன் பின்னர் இந்த வழக்கு விசாரணை சேலம் மகளிர் கோர்ட்டில் நடந்தது.

இதனால் இன்று கோர்ட்டுக்கு செம்மலை எம்.பி, மற்றும் மனைவி குடும்பத்தினர் வந்து இருந்தனர். இதை நீதிபதி கோபால் விசாரித்து இன்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் கூறப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் செம்மலை எம்.பி. உள்பட அனைவரையும் விடுதலை செய்வதாக நீதிபதி தீர்ப்பில் கூறி இருந்தார்.

இதை கேட்ட செம்மலை எம்.பி மற்றும் அவரது வீட்டார் மகிழ்ச்சி அடைந்தனர்.

பின்னர் செம்மலை எம்.பி கூறியதாவது:-

இந்த தீர்ப்பு குடும்ப கவுரவத்திற்கு கிடைத்த நல்ல அத்தாட்சி. எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டு கூறி இருந்ததை மக்களும் நம்ப வில்லை, நீதிமன்றமும் நம்பவில்லை. எங்களுக்கு ஏற்பட்ட மன உளச்சலுக்கு இந்த தீர்ப்பு நல்ல மருந்து.

இவ்வாறு அவர் கூறினார்.

மருமகள் வாணிப்பிரித்தா கூறும்போது, மன வேறுபாடு காரணமாக அப்போது பிரச்சினை ஏற்பட்டது. கெட்ட நேரத்தில் நடந்த சம்பவம். இப்போது மன வேறுபாடுகளை நீங்கி கணவருடன் சேர்ந்து வாழ்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

(அடுத்த முறை 498A வழக்கு போடும்போது "டைட்"டாகப் போடுவார்!)
http://www.maalaimalar.com/2009/10/23164357/SLM05231009.html

ஆண்களை அழிக்க இன்னொரு ஆயுதம்!

தினமலர் செய்தி ஆசிரியர் லெனின் எந்தக் குற்றத்தைப் புரிந்ததாக அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தார்கள் தெரியுமா? "தமிழ்நாடு பெண்களை செக்ஸ் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம் 1998" (Tamil Nadu Prohibition of Harassment of Women Act, 1998). நீங்களே சொல்லுங்கள், அவர் எந்தப் பெண்ணை செக்ஸ் கொடுமை செய்தார்?

இதில் நகைமுறண் என்ன தெரியுமா? இந்தச் சட்டம் போடப்பட்டது சரிகா ஷா என்னும் எதிராஜ் கல்லூரி மாணவி 1998-ல் சிலரால் கடுமையாகத் தாக்கப்பட்டு இறந்து போனதன் பிறகு. அது போன்ற வெளிப்படையான தாக்குதல்கள் பெண்களுக்கு பொது இடங்களில் நடக்கக் கூடாது என்பதற்காகப் போடப்பட்ட கடுமையான சட்டம் அது. ஆனால் அன்று நிகழ்ந்தது போல் ஈவ்டீசிங் தாக்குதல்களுக்கு உண்மையிலேயே உட்படுத்தப்பட்ட அப்பாவிப் பெண்களுக்கு இந்தச் சட்டம் உதவுகிறதோ இல்லையோ, அரசியல் காரணங்களுக்காக சிலரைக் கைது செய்யவும், சில பெண்கள் ஆண்களைப் பழி வாங்குவதற்கு ஏதுவாகவும் தான் இது பயன்படுத்தப் படுகிறது.

ஏற்கனவே பெண்களுக்கு எதிரான இதுபோன்ற நடவடிக்கைகளைத் தண்டிப்பதற்கு இ.பி.கோ 354, 509, 294 என்னும் சட்டப் பிரிவுகள் இருக்கின்றன. இவைகளைக் கொண்டு இத்தகைய குற்றங்களைப் புரிவோர்களைக் கடுமையாகத் தண்டிக்க இயலும். ஆனால் நம் நாட்டில் பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களைக் கையிலெடுத்தால் போதும். உடனே அரசியல்வாதிகளும், பெண்ணியவாதிகளும், வக்கீல்களும், நீதிபதிகளும் சேர்ந்து "சட்டங்களை இன்னும் கடுமையாக்க வேண்டும்" என்று கூக்குரலிடுவார்கள். ஒரே இறைச்சலாக இருக்கும். உடனே ஒரு knee- jerk reaction கொடுத்து, ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கடுக்காக ஒரே வித குற்றங்கள் பெயரைச் சொல்லி மேன்மேலும் கடுமையாக்கப்பட்ட பல சட்டங்களை இயற்றி விடுவார்கள். இதுதான் நம் நாட்டில் இருக்கும் நடைமுறை. இதுபோன்ற ஆக்டபஸ் சட்டங்கள்தான், கெடுமதிப் பெண்களுக்கும், அவர்களை வழி நடத்தும் வக்கீல்களுக்கும் நல்ல அறுவடைக் களமாக அமைகிறது. இந்தச் சட்டத்தின் உட்கூறுகளைக் கவனியுங்கள்:

The Tamil Nadu Prohibition of Harassment of Women Act defines public sexual harassment as harassment by a man, including any indecent conduct, which could cause or causes intimidation, shame, fear or embarrassment, including the threat or actual use of force.

இச்சட்டத்தின் இன்னொரு கொடுங்கோன்மைப் பகுதி என்னவென்றால் குற்றம் சாட்டப்பட்டவன் தான் தன்னை நிரபராதி என்று நிரூபிக்க வேண்டும். அதாவது குற்றம் சாட்டப்பட்டவுடனேயே (அதாவது ஒரு பெண் புகார் கொடுத்தவுடனேயே) அந்த ஆண் குற்றம் புரிந்தவனாகக் கருதப்படுவான். பிராசிக்யூஷன் நிரூபிக்க வேண்டிய தேவை இல்லை. ஆனால் அவன் அக்குற்றத்தை தான் செய்யவில்லை என்று அவன்தான் சாட்சிகளைக் கொண்டு நிரூபிக்க வேண்டும் (the onus of proving innocence lies on those accused). இதுதான் ஆண்களுக்கு எதிரான பலவிதச் சட்டங்களின் அடிப்படைக் கட்டமைப்பு!

இப்போது இந்த தமிழ்நாட்டு பெண்களுக்கு எதிரான செக்ஸ் கொடுமைச் சட்டத்தின் நடைமுறைப் பயன்பாட்டுக்கு வருவோம். இன்றைக்கு பொது இடங்களில் ஆண்களும் பெண்களும் கலந்துதான் நடமாட வேண்டியிருக்கிறது. லிஃப்ட், துணிக்கடை, சினிமா தியேட்டர், நடைபாதை, ஷாப்பிங் மால், மற்றும் அரசு அலுவலங்கள் இவற்றிலெல்லாம் அன்றாடம் ஆண்களும் பெண்களும் குறுகிய இடங்களில் செல்ல வேண்டியிருக்கிறது. அப்போது ஆணின் கை அருகிலிருக்கும் பெண்ணின் மேல் படும். உடனே அவள் அந்த ஆணின்மீது இந்த செக்ஸ் குற்றத்தை சுமத்தலாம். "அப்படியெல்லாம் பெண்கள் துணிந்து செக்ஸ் புகார் கொடுக்கத் தயங்கமட்டார்களா" என்று நீங்கள் ஐயப்பட்டால் உங்களுக்கு இந்தக் காலப் பெண்களைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை என்று பொருள். அவர்கள் இன்றைக்கு எந்தவித பொய்ப் புகார் கொடுக்கவும் ரெடி. ஏனென்றால் அவர்களுக்கு அதனால் முன்காலம் போல் சமூகத்தில் கெட்ட பெயரோ அவமானமோ ஏற்படுவது இல்லை. மேலும் இக்காலப் பெண்கள் பெரிசுகளின் அயிப்பிராயங்களைப்பற்றிக் கவலைப்படுவதும் இல்லை. அதுபோல் புகார் கொடுக்கும் பெண் ஒரு ஹீரோயினாக, ஆண்களை எதிர்த்துப் போராடத் துணிந்த வீராங்கனையாக கொண்டாடப் படுவார்!

சில நாட்களுக்கு முன் ஒரு இசையரங்கில் இரு நிகழ்ச்சிகளுக்குமிடையே எல்லோரும் கேண்டீனுக்கு எழுந்து செல்லும் போது, ஒரு கிழவனார் தட்டுத்தடுமாறி இரு பக்க இருக்கைகளுக்கு இடையே நடந்து சென்று கொண்டிருந்தார். எதிலோ கால் இடறித் தத்தளித்து தன் முன்னால் சென்று கொண்டிருந்த பெண்மணியின் (இவரும் நடுத்தர வயதுதான்) தோளில் கைவைத்து தாங்கி நின்று விட்டார். அவ்வளவுதான். அந்த பாப் தலைப் பெண்மணி திரும்பி அந்த கிழவனைப் பார்த்து கண்டபடி ஆங்கிலத்தில் உரத்த குரலில் ஏசத் தொடக்கி விட்டார். "உன்னை ஏழு சட்டப் பிரிவுகளில் உள்ளே தள்ளிவிடுவேன்" என்று மிரட்டவும் செய்தார். இதனால் அரண்டு போன கிழவர், "அம்மணீ, எனக்கு முடக்கு வாதம் உள்ளது. கீழே விழ இருந்தேன். என்னையறியாமல் உங்கள் மேல் கைவைத்துவிட்டேன். மன்னித்து விடுங்கள்" என்று கம்மிய குரலில் கெஞ்சுகிறார். ஊஹுங், அந்த மேட்டுக்குடிப் பெண்மணி விடுவதாக இல்லை. சுற்றிலும் நூற்றுக் கணக்கான ஆண்களும் பெண்களும் இருந்தனர். அனைவரும் நமக்கெதுக்கு வம்பு என்று கம்மென்றிருந்தனர். அந்தக் கிழவனார் கூனிக் குறுகி தட்டுத் தடுமாறி வெளியே சென்றார். ஒருவர் கூட உதவவில்லை. இந்த நிலை உங்கள் ஒவ்வொருவருக்கும் நேரலாம். லிஃப்டில் அடைத்துக் கொண்டு செல்லும் நேரத்தில் ஒரு மூலையில் இருக்கும் தளத்தெரிவு பட்டனை அழுத்துவதற்காக நீங்கள் அவசரமாக கைநீட்டும் போது அங்கு நின்று கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் மீது உங்கள் கரம் பட்டுவிடலாம். உடனே அவர் உங்கள் மீது இந்தச் சட்டத்தை எவிவிடும் சாத்தியம் உள்ளது. டேஞ்சர் ஐயா! ஆதலால் பொது இடங்களில் பெண்களைக் கண்டால் குறைந்த பட்சம் 10 அடியாவது இடைவெளி விட்டு நில்லுங்கள். உருப்படியாக வீடு வந்து சேரலாம்!

இப்போது நேற்றைய நிகழ்வுக்கு வருவோம். எப்படியெல்லாம் இந்தச் சட்டம் ஆண்களுக்கு எதிராக எய்யப்பட்டு ஆண்களை முழுதாக காயடித்து சமூகத்தில் இரண்டாம் தரப் பிரஜையாக மாற்றப் பயன் படுகிறது என்று பாருங்கள். திருமண நாளன்று இன்னொருவனுடன் ஓடும் புதுமைப் பெண்களைத் தண்டிக்க ஒரு சட்டமும் இல்லை. அந்த கணவனாகப் போகிறவன் மாலையும் கையுமாக "பே பே" என்று விழித்துக் கொண்டு நிற்கிறான். மணப்பெண்ணோ இன்னொருவனுடன் அன்று விடியற்காலையே "ட்ரியோ" என்று ஓடிவிட்டாள். போலீசார் பிடித்து வந்தால், "எனக்கு இவனுடன் போவதுதான் இஷ்டம்" என்கிறாள். அவளை விட்டு விடுகிறார்கள். அந்த ஆண் பட்ட அவமானம், தலை குனிவு இதெல்லாம் பற்றி சமூகத்திற்குக் கவலையில்லை. சட்டத்திலும் நிவாரணமில்லை. அத்துணை கேவலமான நிலைமை!

இந்த நாட்டில் ஒரு ஆண் பிறந்தவுடனேயே ஒரு கிரிமினல் குற்றவாளியாகிறான். அவனைப் பெற்றெடுத்த குற்றத்தை அவனுடைய பெற்றோர்களும் புரிகிறார்கள். அதற்கான தண்டனை நிச்சயம் உண்டு. It is only a question of time. சம்பிரதாயமான முறையில் குற்றம் பதிவு செய்யப்பட சில ஆண்டுகள் பிடிக்கலாம். அவ்வளவே!

இனி செய்தி:

சென்னை, அக்.28- 2009. தினத்தந்தி

நள்ளிரவில் ஜி.ஆர்.டி. நட்சத்திர ஓட்டல் அருகே நடுரோட்டில் காதலர்கள் இருவர் கடும் சண்டை போட்டபடி இருந்தனர். காதலர் காதலியை சரமாரியாக அடித்து உதைத்தார். காதலி கதறி அழுதார். இந்த காட்சியை பார்த்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்து விட்டனர்.

போலீஸ் விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் கலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்றும், எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் அசோக்நகரில் வசிப்பதாகவும் கூறினார். அவருடன் வந்த வாலிபரின் பெயர் கார்த்தீஸ் (32) என்பதாகும். என்ஜினீயரிங் பட்டதாரியான கார்த்தீஸ் தியாகராயநகரில் கால்சென்டர் நடத்தி வருகிறார்.

கார்த்தீசும், கலாவும் உயிருக்குயிராக காதலித்து வந்துள்ளனர். `அலைபாயுதே' சினிமா பாணியில் இருவரும் முதலில் மோதிரம் மாற்றி ரகசிய திருமணம் செய்துள்ளனர். இந்த விஷயம் தெரிந்து கலாவின் பெற்றோர் ஏற்றுக்கொண்டனர். கார்த்தீசின் தாயார் இதை கடுமையாக எதிர்த்தார். பின்னர் அவரும் திருமணத்துக்கு சம்மதித்தார். இருவரும் வெவ்வேறு சாதி என்றாலும் காதலில் இணைந்து ஊரறிய திருமணத்துக்கு தயாரானார்கள்.

இந்த நிலையில், கலாவை ஊரறிய திருமணம் செய்துகொள்ள கார்த்தீஸ் திடீரென்று மறுத்தார். இதற்கு நியாயம் கேட்க சென்றபோதுதான், கலாவுக்கும், கார்த்தீசுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் கார்த்தீஸ் கலாவை அடித்து உதைத்தது தெரியவந்தது. போலீசார் கார்த்தீசிடமும், கலாவிடமும் கவுன்சிலிங் மூலம் பேசினார்கள். கார்த்தீஸ் இல்லாமல் என்னால் வாழ முடியாது என்று கலா சொன்னார்.

ஆனால் கார்த்தீஸோ, படையப்பா படத்தில் வரும் நீலாம்பரி போல கலாதான் என்னை விரட்டி, விரட்டி காதலித்து ரகசிய திருமணத்தையும் என்னோடு நடத்திக்கொண்டார். நீலாம்பரி போன்ற குணம் கொண்ட அவரோடு நான் வாழமாட்டேன் என்று பிடிவாதமாக கூறினார். அப்படியானால் ஜெயிலுக்கு போகவேண்டும் என்று போலீசார் கூறினார்கள். ஜெயிலுக்கு போகவும் தயார், ஆனால் கலாவோடு வாழமாட்டேன் என்று கார்த்தீஸ் கூறினார்.

இதனால் போலீசார் வேறு வழியில்லாமல் கலாவிடம் புகார் வாங்கி பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கார்த்தீசை நேற்று கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தும்வரை போலீசார் சமாதானம் பேசி பார்த்தனர்.

கலாவும், "கார்த்தீசை ஜெயிலுக்கு அனுப்புவது எனது நோக்கமல்ல என்றும், அவர்மீது அளவில்லாத காதல் கொண்டுள்ளேன், அவர்தான் என்றைக்கும் எனது கணவர், அவர் ஜெயிலுக்கு போய் திருந்தி வந்தால் நல்லபடியாக அவரோடு வாழ தயார்" என்றும் போலீசாரிடம் கூறினார்.

அதன்பிறகு வேறு வழியில்லாமல் கார்த்தீஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டார். கார்த்தீஸ் மீது போட்டுள்ள வழக்கு தற்செயலாக நடந்துவிட்டது என்றும், அது நிரந்தரம் அல்ல என்றும், கண்டிப்பாக அவரோடு வாழ்ந்தே தீருவேன் என்றும் கலா போலீசாரிடம் உறுதிபட கூறினார்.

=============

இப்போதெல்லாம் பல ஆண்கள் இதுபோன்ற பெண்களுடன் வாழ்வதைவிட சிறைவாசமே மேல் என்னும் முடிவை எடுக்கின்றனர். இதேபோல் தன்னுடன் வாழாத முன்னாள் மனைவிக்கு அநியாயமாக பணம் கொடுக்கச் சொல்லி வற்புறுத்தும் நீதிமன்ற ஆணைகளுக்கும் பணியாமல் சிறை செல்லவும் இக்காலக் கணவர்கள் தயாராக இருக்கின்றனர்!

வக்கீலின் மனைவி கட்சிக்காரருடன் ஓட்டம்!

இது புதுசு!

28 வயதான வக்கீலின் மனைவி 20 வயது வாலிபனான தனது கணவரின் கட்சிக்காரருடன் ஓடிப் போய்விட்டார்.

கும்பகோணம் கல்யாணராமன் தெருவில் வசிப்பவர் வக்கீல் பாலமுருகன். இவர் கும்பகோணம் பார் அசோசியேஷன் செயலராகவும், அஇஅதிமுக வக்கீல் அணிச் செயலராகவும் பதவி வகிக்கிறார்.

இவருடைய மனைவியின் பெயர் சரோஜினி (வயது 28). இவர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.

இந்த வக்கீலின் வீட்டுக்கு மேலக்காவேரியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்னும் 20 வயது இளைஞர் ஒரு வழக்கு தொடர்பாக, கடந்த ஆறு மாத காலமாக அடிக்கடி வந்து சந்தித்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த இளைஞருக்கும் வக்கீல் மனைவி சரோஜினிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.

அந்த வக்கீலின் மனைவி சரோஜினி, சுப்பிரமணியன் என்னும் அந்த இளைஞருடன் ஓடிப்போய் விட்டாள் (மன்னிக்கவும், "விட்டார்". கள்ளக் காதலில் ஈடுபடும் பெண் குலத்திலகங்களை மரியாதையுடன் விளிக்கவேண்டும் அல்லவா!) என்று வக்கீல் கணவர் பாலமுருகன் கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அந்தப் புகாரின் பேரில் கட்சிக்காரர் சுப்பிரமணியன் மீது, வக்கீல் மனைவியை கடத்திச் சென்றதாக வழக்குப் பதிவு செய்து அந்த ஜோடியை போலீசார் தேடி வருகின்றனர்.

இதில் ஒரு முக்கியமான விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும். கள்ளக்காதல் (adultery), இழுத்துக் கொண்டு ஓடுதல் (elopement) இதுபோன்ற புகார்களின் மேல் அதில் சம்பந்தப் பட்டுள்ள ஆண் மேல்தான் வழக்குப் பதிவு செய்யமுடியும். கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்களுக்கு முழுதாக சட்டங்களிலிருந்து விதிவிலக்கு அளிப்பட்டுள்ளது நம் நாட்டில்.

உங்கள் மனைவி உங்கள் கண்ணெதிரிலேயே இன்னொருவனுடன் செக்ஸில் ஈடுபட்டுக் கொண்டிருந்தால் கூட அந்த ஆணுக்கு எதிராகத்தான் நீங்கள் வழக்கு தொடுக்கலாமேயன்றி உங்கள் மனைவியின்மீது எந்தவித நடவடிக்கையையும் எடுக்க இயலாது; அதற்கு இந்திய சட்டங்களில் இடமில்லை. சந்தேகமிருந்தால் சட்டம் தெரிந்த யாரையாவது கேட்டுத் தெளிவு பெறுங்கள். மேலும் அதைக் காரணம் காட்டி விவாகரத்து கூட பெற முடியாது. மனைவி சொல்வதைத்தான் நீதிபதிகள் நம்புவார்கள். "நான் பத்தினித் தெய்வம். என் கணவர் ஒரு சந்தேகப் பிராணி. என்மேல் அபாண்டமாக பழி சுமத்துகிறார். இந்த அபலையின் பரிதாப நிலையைப் பாருங்கள்" என்று நீதிபதியின் முன் கண்ணீர் சிந்தி ஒரு டிராமா போடுவாள். அவவ்ளவுதான். அப்படியே உருகி அவள் கேட்டபடி தீர்ப்பு வழங்குவார்கள். உடனே பெண்ணியவாதிகளும் ஜொள்ளியவாதிகளும் சேர்ந்து கோரசாக "ஐயோ பாவம், அந்த அபலைப் பெண். இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் எத்தகைய கொடுமைகளுக்கு அவள் ஆளாகிறாள்" என்று கட்டிப் பிடித்து அழுவார்கள். அவ்வளவுதான். கணவனின் புகார் அம்பேல்!

அப்படியே கணவனுக்கு வீரம் வந்து கள்ளக்காதலில் ஈடுபடும் மனைவியிடம் அவன் அதுபற்றி கேள்வி கேட்டால், அவள் உடனே 498A, D.V. Act, Sec 125 of CrPC போன்ற ஆயுதங்களைக் கையிலெடுத்து உங்களையும், உங்கள் வயதான பெற்றோரையும் கைது செய்ய வைத்து, உங்களுக்குச் சொந்தமான வீடு, பணம் அனைத்தையும் பிடுங்கிக் கொண்டு நடுத்தெருவில் நிறுத்தி விடுவாள்!

எதிர்வரும் காலம் திருமணம் செய்துகொள்ளும் ஆண்களுக்கு மிகச் சிரமமான காலம் தான்!

அது சரி. இதுபோன்ற வக்கீல்களும் நீதிபதிகளும் சேர்ந்துதானே கணவனிடம் பணத்தைப் பிடுங்கி ஓடிப்போன மனைவியிடம் கொடுக்க வைக்கிறார்கள்!

இப்போது வக்கீலின் முறை ஆகி விட்டது. அடுத்தது யார்?

(செய்தி: Deccan Chronicle)

நீதிக்கு முரணான சட்டத்தின் மூன்றாண்டு நிறைவு!

ஆம். இந்த நூற்றாண்டில் முட்டாள்தனத்தின் சிகரமாக விளங்குவது "பெண்கள் வன்முறைத் தடுப்புச் சட்டம்" (The Protection Of Women From Domestic Violence Act - "D.V. Act"). பெண்களைக் காப்பாற்றும் ஒரு புனிதமான நோக்கில் இயற்றப் பட்டதாக அதன் பெயரைப் பார்த்தவுடன் தோன்றும் இந்தச் சட்டம் உண்மையில் பெண்களைக் கொடுமை செய்து தங்களுக்குச் சொந்தமான இருப்பிடத்தையே கெடுமதியினருக்கு தாரை வார்த்துவிட்டு நடுத்தெருவில் நிற்க வைக்கும் ஒரு உன்னத(!)ச் சட்டம் என்பது அதன் பயன்பாட்டின் விளவுகளைப் பர்த்தால் தெளிவாக விளங்கும்!

இந்தக் கொடுங்கோன்மைச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டு, திருமணமான இளைஞர்களையும் அவர்களைப் பெற்றெடுத்த பாவத்தைச் செய்த பெற்றோர்களையும் தன் சொத்து சுகம் அனைத்தையும் திமிர் பிடித்தலையும் பணக்காரப் பெண்களிடம் இழந்து, தற்கொலைக்குத் தள்ளும் செயலாக்கத்தைத் தொடங்கி இன்றோடு 3 ஆண்டுகள் நிறைகின்றன.

இந்த மூன்று ஆண்டுகளில் இந்த சட்டத்தைக் கையிலெடுத்து சில கெடுமதிப் பெண்களும் அவர்களின் அநியாயத்திற்குத் துணை போகும் வக்கீல்களும் நாசமாக்கிய குடும்பங்கள் அநேகம்.

இந்த சட்டத்தின் அதி உன்னதமான வரையறை என்ன தெரியுமா? "குடும்பத்தில் வன்முறையை கணவன் தான் செய்வான். அவன்மீதும், அவனுடைய ரத்த உறவுகள் மீதும் தான் இச்சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடியும்" என்பது! மனைவி எந்தவிதக் கொடுமை செய்தாலும் அதைக் கருத்தில் கொள்ள வாய்ப்பே கிடையாது இச்சட்டத்தில். ஏனெனில் வன்முறையில் பாதிக்கப்படுபவள் மனைவிதான் என்று அறுதியிட்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. இதைவிட நடைமுறைக்குப் புறம்பான சட்டத்தை இயற்ற முடியுமா?

சரி, இந்தச் சட்டத்தை இதுபோல் இயற்றி அதைத் தீவிரமாக அமலாக்கம் செய்ததன் நோக்கம் என்ன? அவர்கள் பொதுவில் தம்பட்டம் அடிப்பது போல் நம் நாட்டு அபலைப் பெண்கள் அன்றாடம் அனுபவிக்கும் குடும்ப வன்முறையிலிருந்து நிவாரணம் அளிப்பதற்காகவா? உண்மையில் குடிகாரப் புருஷன் கையால் அன்றாடம் வன்முறையைச் சந்திக்கும் அடிமட்டப் பெண்களுக்கு இதனால் நிவாரணம் கிட்டியுள்ளதா? அதெப்படிக் கிட்டும்? அவர்கள் வக்கீல்களுக்கு ஃபீசாக அள்ளி அள்ளிக் கொடுக்க முடியுமா? அவர்களுடைய கணவன்மார்களிடமிருந்து இந்தச் சட்டத்தை வைத்து கணிசமான துகையை கறக்க முடியுமா? அவர்களிடமிருப்பதோ குடிசை வீடுதான். கணவனுடைய பெற்றோரும் அன்றாடம் காய்ச்சியாக இருப்பார்கள். பிறகு அவர்களிடமிருந்து என்ன பெயரும்? அதனால் இந்த சட்டத்தின் டார்கெட் மத்தியதர மற்றும் உயர் மத்திய தர வகுப்பினர்தான். அந்தப் பாவம் செய்தவர்கள்தான் இந்தக் கொடுங்கோன்மைச் சட்டத்தால் பீடிக்கப்பட்டு கோர்ட்டு வராண்டாவில் லோலோவென்று அலைந்து கொண்டு தங்கள் பொன்னான இளமைக் காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்!

இந்த D.V. Act சட்டத்தைப் பற்றிய சில விவரங்கள்:-

இந்தச் சட்டம் திருமணம் ஆன பெண்களுக்கு மட்டுமின்றி, "குடும்பம் போல்" சேர்ந்து இருக்கும் உள்ள அனைத்து உறவுகளுக்கும் பொருந்தும் - அது ஒருசில மணி நேரங்களேயானும் சரி! இந்த விளக்கத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் அளித்துள்ளார். அந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பைப் பற்றி (M.Palani Vs Meenakshi) பிறிதொரு இடுகையில் பார்ப்போம்!

இது முழுக்க முழுக்க வக்கீல்களால் தயாரிக்கப்பட்டு அவர்களுடைய எண்ணப்பாங்கின்படி கட்டமைக்கப்பட்டது.

இது அமேரிக்க பன்னாட்டு நிறுவனங்களின் லாப நோக்கில் அமைக்கப்பட்டது.

இந்த சட்டத்தின் அடிப்படை அமைப்பின்படி ஒரு மனைவி (அல்லது சிறிது நேரம் ஒரு ஆணுடன் உறவு கொண்டு இருந்த பெண்) கணவன் மற்றும் கணவனின் ரத்த உறவுகள் எதைச் செய்தாலும், செய்யாமல் இருந்தாலும் அதை வன்முறையாகக் கருதி புகார் கொடுக்கலாம். அதாவது பேசினால் "பேசி வன்முறை செய்தான்" என்கலாம்; பேசாவிட்டால் "பேசாமல் கொடுமை செய்தான்" என்கலாம்! அந்தப் பெண் தண்ணி போட காசு கொடுக்கவில்லையென்றால் வன்முறை; இரவு ஏன் நேரம் கழித்து பார்ட்டிக்குப் போய் வருகிறாய் என்றால் வன்முறை; கண்டவனோடு உனக்கு என்ன உறவு என்று கெட்டால் வன்முறை; அவளுடைய "கருமேனியை சிவப்பாக்கும் கிரீமை" வாங்கி வரவில்லை யென்றால் அது பொருளாதாரம் சர்ந்த வன்முறை - இப்படி அடுக்கிக் கொண்டே போகிறார்கள். இதுபோல் பற்பல கேசுகள் இந்த மூன்றாண்டுகளில் பதியப்பட்டுள்ளன!

இதில் இன்னும் பல வேடிக்கைகள் உள்ளன. நீங்கள் ஒரு ஆணாகவோ, அல்லது உங்கள் வீட்டில் ஒரு ஆண்மகன் இருந்தாலோ இதைப் படிக்கப் படிக்க பகீரென்று இருக்கும்.

இந்தச் சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படும் தீர்வுகள் இரண்டு வகை:

1. புகார் கொடுத்த பெண்ணுக்கு உறைவிடம். அதாவது அந்தப் பெண்ணின் மேல்தான் தவறாக இருந்தாலும், அவள் பொய்ப் புகார் கொடுத்திருந்தாலும், அவள்தான் உங்கள் மீது வன்முறை செய்திருந்தாலும், அவள் புகார் கொடுத்தால் நீங்கள் உங்களுக்குச் சொந்தமான வீட்டிலிருந்து வெளியேறி, அதை அவளுக்கு தாரை வார்த்துவிட வேண்டும். இதைக் கேட்டால் உங்களுக்கு இது உண்மையாக இருக்குமோ என்ற நம்பிக்கையின்மை வருகிறது அல்லவா? இப்படித்தான் இந்தச் சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படும் தீர்ப்புகள் அமைகின்றன. ஐயமிருந்தால் கூகிளில் தேடிப்பாருங்கள். அல்லது உங்களுக்குத் தெரிந்த வக்கீலிடம் கேட்டுப் பாருங்கள்!

2. "பணம்". ஆம் ஐயா! "பணம் கொடு, கணவனே, மனைவி கேட்ட பணம் கொடு" -இதுதான் இச்சட்டத்தின் தாரக மந்திரம்! "அவள் கேட்கும் பணத்தைக் கொடுத்துவிடு. இல்லாவிட்டால் சிறைக்குப் போ!"

"ஐயா, அவள்தான் ஒரு காரணமுமில்லாமல் வீட்டைவிட்டு ஓடிப்போய் பொய்ப் புகார் கொடுத்திருக்கிறாள். கள்ளக் காதலுக்காகப் பணம் கேட்கிறாள்"

"அதெல்லாம் நான் கேட்கத் தயாரில்லை. இந்தச் சட்டப்படி மனைவி புகார் கொடுத்துள்ளார். அவள் கேட்கும் பணத்தைக் கொடுத்துவிடு"

"ஐயா, என்னை விட அவள் நான்கு மடங்கு அதிகம் சம்பாதிக்கிறாள். என்னையும் என் வயதான பெற்றோரையும் கொடுமைப் படுத்தி வாழ்க்கையை நரகமாக்கியிருக்கிறாள்"

"அதற்கெல்லாம் இந்த சட்டத்தில் நிவாரணம் கிடையாது. அவள் கேட்கும் பணத்தை உடனே கொடுக்க வில்லையெனில் ஜெயிலுக்குப் போ!"

இதுதானய்யா இந்த்ச் சட்டத்தைக் கையிலெடுத்து நடக்கும் நீதி(!) மன்றத் தீர்ப்புகள்!

இன்னொரு முக்கிய முட்டாள்தனம்:

மனைவி (மற்றும் மனைவி போன்றவள்) பொய்ப் புகார் கொடுத்தால் அவள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று திட்டவட்டமாக இந்தச் சட்டத்தில் வரையறுத்துள்ளார்கள்! இதுபோல் அநியாயம் எங்காவது நடக்குமா?

மற்றொரு பொய்யான கட்டுக்கதை:

இதை சிவில் சட்டம் என்று பெயரிட்டுவிட்டு, கிரிமினல் கோர்ட்டில் பதிவு செய்து தீர்ப்புகள் அளிக்கப்படும்படி அமைத்திருக்கிறார்கள். இதுபோன்ற புனைசுருட்டு எந்த நாகரிகமடைந்த நாட்டிலும் நடக்காது!

இந்த கொடுங்கோன்மை சட்டத்தின் நடைமுறையை (case laws), மற்றும் அதன் தாக்கத்தை நீங்கள் முழுதாக அறிந்து கொண்டால் நம் நாட்டிற்கு ஆஃப்கானிய தாலிபான் ஆட்சி வந்தால் தேவலை என்று எண்ணத் தொடங்கினால் ஆச்சரியப் படுவதற்கில்லை!

சரி. இப்போது இந்தச் சட்டத்தில் சிறிதும் வன்முறையே செய்ய இயலா புனிதர்களாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் நம் பெண் குலத்திலகங்களின் கைவண்ணங்கள் சிலவற்றைக் காணுங்கள்:

1.
வீட்டை காலி செய்ய சொன்ன வீட்டு உரிமையாளருக்கு கொலை மிரட்டல் செய்த பெண் கைது

திருவண்ணாமலை, அக்.25- 2009. செய்தி - தினத்தந்தி

திருவண்ணாமலையில் வீட்டை காலிசெய்ய சொன்ன வீட்டு உரிமை யாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வீட்டை காலி செய்ய

திருவண்ணாமலை கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் மாதவன் (வயது60). இவருடைய வீட்டில் பழனி என்பவர் தனது மனைவியுடன் கடந்த 4 மாதங்களாக வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.

வீட்டு உரிமையாளரிடம் மாதவி அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. பக்கத்தில் உள்ளவர்களிடம் மாதவனை பற்றி அவதூராக பேசியதாக தெரிகிறது. இதனால் வீட்டை காலிசெய்யும்படி மாதவன் கூறி உள்ளார்.

கொலை மிரட்டல்

இதனால் ஆத்திரம் அடைந்த தேவி காய்கறி வெட்டும் அரிவாள்மனையை எடுத்துவந்து மாதவனை கொலைசெய்து விடுவதாக மிரட்டி உள்ளார். இது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்தில் மாதவன் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2.
சூலத்தால் குத்தி குழந்தை கொலை : குடும்ப தகராறில் தாயும் தற்கொலை

அக்டோபர் 24, 2009. தினமலர்

சிறுபாக்கம் : குடும்பத் தகராறில், இரண்டு குழந்தைகளை சூலத்தால் குத்திக் கிழித்த தாய், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒரு வயது குழந்தை சம்பவ இடத்திலேயே இறந்தது. நான்கு வயது சிறுவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த, டி.புடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோமதுரை. விவசாயி. இவரது மனைவி சுதா (28). இவர்களது மகள் பெரியநாயகி ( 11), நந்திமங்கலத்தில் உள்ள தாத்தா வீட்டில் தங்கி படித்து வருகிறார். மகன்கள் சுதாகர் (4) சுபாஷ் (1) பெற்றோருடன் வசித்து வந்தனர்.

இரண்டு மாதங்களுக்கு முன், கணவருடன் ஏற்பட்ட தகராறில் கோபித்துக் கொண்டு நந்திமங்கலத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்ற சுதா, அங்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டு அங்கேயே தங்கிவிட்டார். கோமதுரை மாமனார் வீட்டுக்கு சென்று சமாதானம் செய்து, சுதாவை நேற்று முன்தினம் அழைத்து வந்துள்ளார். வீட்டிற்கு வந்ததும் மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த சுதா, நேற்று காலை தனது மகன்கள் சுதாகர் (4) சுபாஷ் (1) இருவரையும், அதே ஊரில் உள்ள குரவனார்கோவிலுக்கு அழைத்து சென்றார். அங்கு, சாமி முன் நட்டு வைத்திருந்த சூலத்தை பிடுங்கி இரண்டு குழந்தைகளின் வயிற்றில் குத்தினார். படுகாயமடைந்த இரண்டு குழந்தைகளும், துடிதுடித்து கதறினர். சுதா அருகில் இருந்த கருவேலம் மரத்தில் தனது சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடிவந்து பார்த்தபோது, படுகாயமடைந்த குழந்தை சுபாஷ் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தான். சிறுவன் சுதாகர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான். சிறுவனை கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். பெற்ற தாயே குழந்தைகளை சூலத்தால் குத்தி, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், டி.புடையூர் கிராம மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

3.
கழுத்தை நெரித்து கொல்ல முயற்சி; நகைகள் கொள்ளை
என்ஜினீயர் மனைவியின் 7 மாத கர்ப்பிணி தோழி கைது
பரபரப்பு வாக்குமூலம்

சென்னை, அக்.23- 2009. தினத்தந்தி

சென்னையில் என்ஜினீயர் மனைவியின் கழுத்தை நெரித்து கொல்ல முயன்ற அவரது கர்ப்பிணி தோழி கைது செய்யப்பட்டார். அவர் கொள்ளையடித்து சென்ற நகைகளும் மீட்கப்பட்டது.

கொலை முயற்சி

சென்னை ஜாபர்கான்பேட்டை ஆர்.வி.நகர் 75-வது தெருவில் வசிப்பவர் சந்துரு என்ற ராஜகோபால் (வயது 28). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், சென்னையில் உள்ள கம்ப்னிட்டர் கம்பெனி ஒன்றில் பணிபுரிகிறார். இவரது மனைவி பெயர் சுபஸ்ரீ (25). இவர்களுக்கு 11/2 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. தினமும் ராஜகோபால் வேலைக்கு சென்றபிறகு வீட்டில் கை குழந்தையோடு சுபஸ்ரீ தனியாக இருப்பார். வேலைக்காரி வந்து வீட்டு வேலைகளை செய்வார்.

நேற்று முன்தினம் மாலையில் சுபஸ்ரீ தனியாக இருக்கும்போது அவரை கழுத்தை நெரித்து கொல்ல முயற்சி நடந்தது. அவர் மயங்கி விழுந்து கிடந்தார். சுபஸ்ரீ அணிந்திருந்த நகைகள் மற்றும் வீட்டில் உள்ள 40 சவரன் நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த சுபஸ்ரீயை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்த பிறகு சுபஸ்ரீ உயிர் பிழைத்துக்கொண்டார்.

குற்றவாளிகள் யார்?

இந்த கொலை முயற்சி மற்றும் நகை கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் யார் என்று கண்டுபிடித்து கைது செய்யும்படி கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். இணை கமிஷனர் சக்திவேலு, துணை கமிஷனர் சம்பத்குமார் ஆகியோர் மேற்பார்வையில், உதவி கமிஷனர் பரந்தாமன், இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆகியோர் தலைமையில் இதற்காக தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் சம்பவ நடந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் சுபஸ்ரீயின் வீட்டுக்கு தாடி வைத்த ஒருவர் உள்பட 3 ஆண்களும், சுடிதார் அணிந்திருந்த பெண் ஒருவரும் வந்து நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்ததாக தெரிய வந்தது. அவர்கள் யார்? என்று போலீசார் விசாரித்தனர். சுபஸ்ரீயின் செல்போனில் யார், யார் பேசியுள்ளனர் என்று ஆய்வு செய்யப்பட்டது.

பள்ளி தோழி

போலீசாரின் தீவிர விசாரணையில், சுபஸ்ரீயை கொல்ல முயற்சித்து அவரது நகைகளை கொள்ளையடித்தவர்கள் யார் என்று கண்டறியப்பட்டது. சுபஸ்ரீயின் வீட்டுக்கு வந்திருந்த சுடிதார் அணிந்த பெண்ணும், அவருடன் வந்திருந்த 3 ஆண்களும்தான் குற்றவாளிகள் என்று தெரிய வந்தது. சுடிதார் அணிந்த பெண்ணின் பெயர் முத்தரசி (27). அவருடன் தாடியுடன் வந்திருந்த வாலிபரின் பெயர் சரவணன் என்பதாகும். சரவணனும், முத்தரசியும் கணவன்-மனைவி ஆவார்கள். திருவேற்காட்டில் அவர்கள் வசித்து வந்தனர்.

முத்தரசி, சுபஸ்ரீயின் பள்ளி தோழி ஆவார். அவரை நேற்று காலையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில், சுபஸ்ரீயை கொல்ல முயற்சித்து நகைகளை கொள்ளையடித்த குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார். கொள்ளைப்போன நகைகளின் ஒருபகுதி அவரிடமிருந்து மீட்கப்பட்டது. சுபஸ்ரீயை கொல்ல முயன்று நகைகளை கொள்ளையடித்தது ஏன்? என்று முத்தரசி போலீசில் பரபரப்பான வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

ஒன்றாக படித்தோம்

நானும், சுபஸ்ரீயும் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பில் இருந்து 10-ம் வகுப்பு வரை ஒன்றாக படித்தோம். நெருக்கமான தோழிகளாக பழகினோம். 10-ம் வகுப்பில் சுபஸ்ரீ பெயிலாகி விட்டாள். இதனால் அவள் படிப்பை நிறுத்திவிட்டாள். நான் தொடர்ந்து படித்தேன்.

மதுரையில் உள்ள சட்ட கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும்போது நான் சரியாக படிக்கவில்லை என்று குற்றம்சுமத்தி என்னை கல்லூரியில் இருந்து நீக்கிவிட்டார்கள். நான் சிறு, சிறு திருட்டு வேலைகள் செய்ததும் கல்லூரியில் இருந்து நீக்குவதற்கு இது ஒரு காரணமாகும். அதன்பிறகு எனது பெற்றோர் சரவணனுக்கு என்னை திருமணம் செய்து வைத்தனர். சரவணன் 10-ம் வகுப்பு பெயிலானவர்.சென்னை துறைமுகத்தில் அவர் தற்காலிக ஊழியராக வேலை பார்த்தார். 6 மாதத்திற்கு முன்பு அந்த வேலை பறிபோய் விட்டது. இதனால் நாங்கள் குடும்பம் நடத்த கஷ்டப்பட்டோம். எனது நகைகளை அடகுவைத்து அதில் வந்த பணத்தை வைத்து குடும்பத்தை நடத்தினோம். இந்த நிலையில் நான் கர்ப்பமானேன். எனது கணவருக்கு வேலை தேடி பார்த்தும் வேலை கிடைக்கவில்லை.

எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம். இந்த நிலையில் சுபஸ்ரீயோடு எனக்கு மீண்டும் பழக்கம் தொடர ஆரம்பித்தது. ஒருமுறை அவரது வீட்டுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு வந்தேன். அப்போது அவர் வசதியாக வாழ்வதை தெரிந்து கொண்டேன். சுபஸ்ரீ வீட்டில் பகலில் தனியாக இருப்பதையும் அறிந்துகொண்டேன். சுபஸ்ரீயை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டோம். அதற்கான சமயம் பார்த்து காத்திருந்தோம்.

சீமந்த விழா

இந்த நிலையில் எனக்கு கர்ப்பம் 7 மாதம் ஆகிவிட்டது. சீமந்த விழா நடத்த முடிவு செய்திருந்தோம். சீமந்த விழாவுக்கு அழைப்பதுபோல சுபஸ்ரீயின் வீட்டுக்கு சென்று பின்னர் அவரை மிரட்டி பணம், நகைகளை பறிக்க முடிவு செய்தோம். திட்டமிட்டப்படி புதன்கிழமை அன்று காலை 11.30 மணிக்கு முதலில் சுபஸ்ரீ வீட்டுக்கு சென்றோம். நானும், எனது கணவரும் வீட்டுக்குள் சென்றோம். எங்களோடு வந்திருந்த கணவரின் நண்பர்கள் வீட்டுக்கு வெளியில் நின்று கொண்டனர்.

நாங்கள் சென்றபோது வீட்டில் வேலைக்காரி இருந்தாள். சுபஸ்ரீயிடம் எனக்கு சீமந்த விழா நடத்தப்போகிறோம். அதற்கு நீ கண்டிப்பாக வரவேண்டும். என்னுடைய நகைகள் எல்லாம் அடகு வைக்கப்பட்டுள்ளது. எனவே சீமந்த விழாவில் அணிவதற்கு உன்னுடைய நகைகளை 2 நாட்கள் இரவலுக்கு தரவேண்டும் என்று கேட்டேன். அதற்கு சுபஸ்ரீ முதலில் மறுத்தாள். பின்னர் மாலையில் வந்தால் தருவதாக கூறினாள்.

பின்னர் நாங்கள் இருவரும் வந்துவிட்டோம். பிற்பகல் 2.30 மணியளவில் மீண்டும் சுபஸ்ரீயின் வீட்டுக்கு சென்றோம். அப்போது அவருடைய கணவர் வீட்டில் மதிய சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டிருந்தார். கணவரிடம் சுபஸ்ரீ என்னை அறிமுகப்படுத்தி வைத்தாள். கணவர் வீட்டில் இருந்ததால் மாலை 4 மணிக்கு மீண்டும் வருவதாக சொல்லிவிட்டு வந்துவிட்டோம். மாலை 4 மணிக்கு மீண்டும் சென்றோம். அப்போது சுபஸ்ரீ மட்டும் தனியாக இருந்தாள். நானும், எனது கணவரும், கணவரின் நண்பர்கள் 2 பேரும் சுபஸ்ரீயோடு பேசிக்கொண்டிருந்தோம். எங்களுக்கு டீ போட்டுக்கொடுத்து உபசரித்தாள். சீமந்த விழாவில் அணிந்துகொள்ள காலையில் நகைகளை தருவதாக சொன்ன சுபஸ்ரீ மாலையில் நகைகளை தர மறுத்தாள். நான் அவளோடு எவ்வளவோ பேசிப்பார்த்தும் நகைகளை தரமுடியாது என்று மறுத்துவிட்டாள்.

கழுத்தை நெரித்தோம்

இதனால் கோபம்கொண்ட நான், அவளை படுக்கை அறைக்கு இழுத்து சென்று கட்டிலில் தள்ளி அடித்து உதைத்தேன். நகைகளை தராவிட்டால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டினேன். சுபஸ்ரீ அதற்கும் பணியவில்லை. இதனால் நான் எனது துப்பட்டவால் அவளது கழுத்தை இறுக்கினேன். சத்தம்போடாமல் இருக்க எனது கணவர் சுபஸ்ரீயின் வாயை பொத்தினார். இதில் சுபஸ்ரீ மூச்சு பேச்சு இல்லாமல் அப்படியே சாய்ந்துவிட்டாள்.

அவள் இறந்துவிட்டாள் என்று கருதி அவள் அணிந்திருந்த நகைகள் மற்றும் பீரோவில் இருந்த நகைகளை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் வீட்டை விட்டு வெளியேறிவிட்டோம். அன்றையதினம் இரவு எனக்கு சீமந்த விழா நடந்தது. அப்போது சுபஸ்ரீயிடம் கொள்ளையடித்த நகைகளை நான் அணிந்துகொண்டேன். விழா முடிந்து எல்லோரும் தூங்கிக்கொண்டிருக்கும்போது அதிகாலையில் போலீசார் என்னை பிடித்துவிட்டனர்.

இவ்வாறு முத்தரசி கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

======================

இப்போதைக்கு இது போதும். மேன்மேலும் நூற்றுக் கணக்கில் வந்து கொண்டேயிருக்கும், மெல்லியலாளர்களாகிய பெண்குலங்களின் கொடூரமான வன்முறைத் தாண்டவங்களை மீண்டும் இன்னொரு இடுகையில் பார்ப்போம்!

கள்ளக்காதலில் நல்லதா விளையும்!

திரு.வி.க.நகரில் 2-வது பயங்கர சம்பவம்:
கள்ளக்காதல் போட்டியில் குத்துச்சண்டை வீரர் படுகொலை
வெட்டி சாய்த்த நண்பர்கள் கைது

சென்னை, அக்.23- 2009. செய்தி - தினத்தந்தி

சென்னை திரு.வி.க. நகரில் குத்துச்சண்டை வீரர் ஒருவர் கள்ளக்காதல் போட்டியில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவரது நண்பர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். இன்னொரு நண்பரை போலீசார் தேடுகிறார்கள்.

சென்னை திரு.வி.க.நகர் பகுதியில் உள்ள காந்திநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சந்திரன் (வயது 23). திருமணம் ஆகாத இவர், புதிதாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு கான்கிரீட் கம்பி பதிக்கும் வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ், குட்டை சுரேஷ், ஜானி என்ற ஜானகிராமன் ஆகியோர் சந்திரனின் நண்பர்கள் ஆவார்கள். இவர்களும் கான்கிரீட் கம்பி பதிக்கும் வேலைதான் செய்து வந்தனர்.

சந்திரன் பார்க்க அழகாக இருப்பார். இவர் குத்துச்சண்டை பயிற்சி பெற்றுள்ளார். சாதாரண குத்துச்சண்டை போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். பாடிபில்டரும் கூட. இவருக்கு நிறைய பெண்கள் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

காதல் போட்டி

ரம்யா என்ற இளம் பெண் ஒருவரோடு ராஜேஷ் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்தார். ரம்யா கே.கே.நகரில் வசித்து வந்தார். அவரது தாய் வீடு திரு.வி.க.நகரில் உள்ளது. திருமணமான அவர் தாய் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும்போது ராஜேசுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ராஜேஷை அடிக்கடி சந்தித்து உல்லாச விருந்து படைத்து வந்தார். ராஜேஷின் நண்பர்களுக்கும் ரம்யா விருந்து படைப்பது உண்டு.

இந்த நிலையில், ரம்யாவுக்கு குத்துச்சண்டை வீரர் சந்திரனுடன் பழக்கம் ஏற்பட்டது. ராஜேஷ் கோஷ்டியை உதறிவிட்டு சந்திரனோடு நெருக்கமாக பழக ஆரம்பித்தார். சந்திரனுக்கும் இன்ப விருந்து படைத்தார்.

இந்த விஷயம் ராஜேசுக்கும், அவரது நண்பர்களுக்கும் தெரிந்து அவர்கள் கோபம் அடைந்தனர். சந்திரனை எச்சரித்தனர். ரம்யாவுடன் உள்ள தொடர்பை விட்டுவிடும்படி கூறினார்கள். "உனக்கு நிறைய பெண்கள் பழக்கம் உள்ளது. எங்களுக்கு ரம்யா ஒருத்திதான் இருக்கிறாள். அவளை தட்டிப் பறிப்பது நியாயமல்ல. அவளை எங்களுக்கு கொடுத்துவிடு" என்று ராஜேஷ், சந்திரனிடம் கெஞ்சினார்.

அதற்கு சந்திரன், "பல் இருக்கிறவன் கடிக்கத்தான் செய்வான், ரம்யாதான் என்னை விரும்பி காதலிக்கிறாள். என்னால் அவளை விடமுடியாது" என்று கூறிவிட்டார்.

இது சந்திரன் மீது அவர்களுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ராஜேசும், அவரது நண்பர்களும் சந்திரன்மீது கடும் கோபம் கொண்டனர். காதலியை தட்டிப் பறித்த சந்திரனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர்.

வெட்டிக்கொலை

நேற்று முன்தினம் இரவு திரு.வி.க.நகர் சமூகநலக்கூடம் அருகே ராஜேஷ், அவரது நண்பர்கள் குட்டை சுரேஷ், ஜானி என்ற ஜானகிராமன் ஆகியோர் ஒன்றாக உட்கார்ந்து மது அருந்தினார்கள். அப்போது சந்திரன் அந்த வழியாக சென்றார். அவரையும் மது அருந்தும்படி அழைத்தனர். அவர்களுடைய சதித்திட்டம் தெரியாமல், சந்திரன் அவர்களோடு உட்கார்ந்து மது அருந்தினார்.

திடீரென்று 3 பேரும் சேர்ந்து சந்திரனை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். சந்திரன் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். அவரை அப்படியே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். சந்திரனை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சந்திரன் பரிதாபமாக இறந்து போனார்.

2-வது கொலை சம்பவம்

திரு.வி.க.நகரில் கடந்த வாரம்தான் பங்க் ராஜ் என்ற ரவுடி வெட்டி கொல்லப்பட்டார். அந்த கொலையின் ரத்தம் காயும் முன்பே, சந்திரன் கொலை செய்யப்பட்டது போலீஸ் வட்டாரத்துக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில், இணை கமிஷனர் சேஷசாயி, துணை கமிஷனர் பாஸ்கர் ஆகியோர் மேற்பார்வையில் திரு.வி.க.நகர் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

கொலையாளிகள் குட்டை சுரேஷ், ஜானி என்ற ஜானகிராமன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ராஜேஷை கைது செய்ய போலீசார் தேடி வருகிறார்கள்.

சென்னை நகரில் நடக்கும் கொலை சம்பவங்களுக்கு பெரும்பாலும் கள்ளக்காதல் பிரச்சினைகளே காரணமாக இருப்பதாகவும், கள்ளக்காதல் கலாசாரம் அதிகரிப்பதால்தான் குற்ற செயல்களும் அதிகரிக்கிறது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவிக்கு 3 ஆயுள் தண்டனை

வன்முறையில் ஆண்கள் மட்டும்தான் ஈடுபடுகிறார்கள் என்று சட்டம் (The Protection Of Women From Domestic Violence Act) இயற்றியிருக்கிறார்கள். அத்தகைய சட்டம் ஏற்படக் காரணமானவர்கள், அதை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்கள், அதனைக் கைக்கொண்டு குடும்பங்களைச் சிதைத்து, கணவனையும் அவனது பெற்றோர்களையும் நடுத்தெருவில் நிற்கவைக்கும் பெண் குலத்திலகங்கள், மனைவிகளின் பெயரைச் சொல்லி ஆதாயம் தேட முயற்சிக்கும் பெண்ணியவாதிகள், அரசியல்வாதிகள் போன்றோருக்கு இந்தச் செய்தியை சமர்ப்பிக்கிறோம்!

சேலம், அக்.22 - 2009. செய்தி - தினத்தந்தி

கள்ளக்காதல் மோகத்தில் கணவனை சதி திட்டம் தீட்டி கொலை செய்த வழக்கில் மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்கு 3 ஆயுள் தண்டனையும், 7 பேர் கொண்ட கூலிப்படைக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

கள்ளக்காதல்

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம் சித்துக்குட்டை காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 32). விவசாயி. அதே பகுதியைச் சேர்ந்தவர்

பெரியண்ணன் (32) விவசாயி. இருவரும் உறவினர்கள்.

பெரியண்ணனுக்கும், விஜயா என்ற பெண்ணுக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. இதனால் பெரியண்ணன் அதே பகுதியைச் சேர்ந்த ராணி சந்திரா (28) என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்ய முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து, இருவருக்கும் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக உருவானது.

கண்டித்தார்

இந்த நிலையில் பெரியண்ணனின் மனைவி விஜயா கர்ப்பமானார். இதனால் ராணி சந்திராவுக்கும், பெரியண்ணனுக்கும் திருமணம் நடைபெறவில்லை. இதன் பிறகு ராணி சந்திராவிற்கும், செல்வத்திற்கும் திருமணம் நடந்தது.

செல்வத்தை திருமணம் செய்த பிறகும், பெரியண்ணனுடன் ராணி சந்திரா பழக்கத்தை தொடர்ந்து வந்தார். மேலும் செல்போனில் மணிக்கணக்கில் பேசி வந்தார். இதை அறிந்த செல்வம் மனைவியை கண்டித்தார்.

கூலிப்படையை ஏவி கொலை

இதனால் ஆத்திரம் அடைந்த ராணி சந்திரா, பெரியண்ணனிடம், "எனது கணவர் உயிருடன் இருக்கும் வரை நான் உன்னிடம் பேச முடியாது'' என கூறினார்.

இதையடுத்து பெரியண்ணன், பவானியைச் சேர்ந்த கூலிப்படை கும்பலுடன் சேர்ந்து கடந்த 18.6.2007 அன்று செல்வத்தை கொலை செய்தார்.

இந்த கொலை தொடர்பாக அப்போதைய சங்ககிரி போலீசார் விசாரணை நடத்தி, பெரியண்ணன், ராணி சந்திரா, பவானியை சேர்ந்த கூலிப்படை கும்பல் அரைப்பள்ளன் என்கிற செந்தில் என்கிற செந்தில் குமார் (32), காசி என்கிற காசி விஸ்வநாதன் (29), ராமு என்கிற ராம்குமார் (23), சரா என்கிற சரவணன் (22), சக்தி என்கிற சக்திவேல் (23), ஒயிட் என்கிற வெள்ளையன் என்கிற செல்வம் (23), வீரான் என்கிற பீர்முகமது (27), முருகேசன் (35) ஆகிய 10 பேரை கைது செய்தனர்.

அவர்கள் மீது கொலை செய்தல், சதி திட்டம் தீட்டுதல், கூட்டமாக வருதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சேலம் 1-வது விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது.

3 ஆயுள் தண்டனை

வழக்கை விசாரித்த நீதிபதி கலைவாணி நேற்று தீர்ப்பு கூறினார்.

குற்றம் சாட்டப்பட்ட பெரியண்ணனுக்கு 3 ஆயுள் தண்டனையும், ரூ.32 ஆயிரம் அபராதமும், ராணி சந்திராவிற்கு 3 ஆயுள் தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. கூலிப்படையைச் சேர்ந்த அரைப்பள்ளனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 3 ஆண்டு சிறையும் ரூ.23 ஆயிரம் அபராதமும், காசி விஸ்வநாதன், ராம்குமார், சரவணன், சக்திவேல், செல்வன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை, 6 ஆண்டு 2 மாதம் ஜெயில் தண்டனையும், ரூ.28 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

வீரான் என்கிற பீர்முகமதுவிற்கு இரட்டை ஆயுள், 9 ஆண்டு ஜெயில் மற்றும் ரூ.29 ஆயிரம் அபராதமும், முருகேசனுக்கு ஆயுள் தண்டனையும், பிற பிரிவுகளில் 6 ஆண்டு ஜெயில், 2 மாத சிறையும் ரூ.18 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனைகளை அனைவரும் ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி கலைவாணி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

தர்மம் கடைசியில்தான் வெல்லுமாம்!

நீலு சோப்ரா என்பவருக்கு வயது 80. அவருடைய மனைவி க்ரிஷன் சரூப்பின் வயது 76. இவர்கள் மீதும் இவர்களுடைய மகனான ராஜேஷ் மீதும், இவர்களுடைய மருமகள் 498A மற்றும் 406, 114 போன்ற சட்டப் பிரிவுகளிலும் புகார் கொடுத்து வழக்குத் தொடுத்திருந்தார். இது நடந்தது 1993-ல்.

இந்தப் புகார் பொய்யானது, இதில் துளிக்கூட உணமையில்லை என்று அந்தப் புகாரை தள்ளுபடி செய்யும்படி கோரி அவர்கள் வழக்குத் தொடுத்தனர்.

இந்த விஷயத்தில் ஒரு முக்கியமான நுணுக்கத்தை நீங்கள் அவதானிக்க வேண்டும் ஒரு மனைவி தன்னை கணவனும் அவனுடைய பெற்றோர் மற்றும் உறவினர்களும் கொடுமைப்படுத்துவதாக ஒரு புகாரைக் கொடுத்தால் போதும். அதன் மேல் நடவடிக்கை எடுத்து வழக்கு நடத்துவது அரசின் பொறுப்பு. புகார் கொடுப்பதோடு சரி. மற்றச் சிலவு முழுதும் மக்களின் வரிப்பணத்தில்!

ஆனால் அந்தப் புகார் பொய்யானது என்றால் கணவன் தரப்பினர்தான் தன் சொந்தக் காசில் வழக்காடவேண்டும்!

சரி, இப்போது இந்தக் கிழவர்கள் கதைக்கு வருவோம்!

தங்கள் மேல் தொடுக்கப்பட்ட பொய் வழக்கை எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று அவர்கள் கோரிக்கை கீழ்க் கோர்ட்டிலும் டில்லி உயர்நீதி மன்ரத்திலும் தள்ளுபடி செய்துவிட்டனர்.

அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

இந்தப் போராட்டத்தினிடையே கணவன் ராஜேஷ் செத்தே போயிட்டான்!

ஆனால் அவனுடைய வயதான பெற்றோர் தொடர்ந்து போராடினர்.

உச்ச நீதி மன்றத்தில் நேற்றைய முன் தினம் (19-10-2009) அந்தப் பொய்ப் புகாரைத் தள்ளுபடி செய்து (quash) தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் சொல்லப்பட்டிருப்பது என்ன?

தன் புடவைகளையும் நகைகளையும் அவர்கள் திருடி விட்டனர் என்றும் வரதட்சனைக் கொடுமை செய்தனர் என்று பொத்தம் பொதுவாக அந்த மருமகள் புகார் கொடுத்திருக்கிறாரேயன்றி, அந்தப் புகாரில் எந்தவொரு விவரமும் இல்லை. இதன் அடிப்படையில் செயல்படுவது நீதிக்கு விரோதமனது என்று கூறியிருக்கின்றனர். அந்த நீதிபதிகள்.

A bench of justices VS Sirpurkar and Deepak Verma said:

"Under such circumstances, it would be an abuse of the process of law to allow the prosecution to continue against the aged parents of Rajesh, the present appellants herein, on the basis of vague and general complaint which is silent about the precise acts of the appellants," the bench said while quashing the case registred nearly 16 years ago."

இதனிடையே 16 ஆண்டுகள் கழிந்து விட்டன!

இந்தப் பதினாறு ஆண்டுகளில் தன் மகனையும் இழந்த வயதான அந்தப் பெற்றோர்கள் எந்தப்பாடு பட்டிருப்பார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள்!

இந்தப் பதினாறு ஆண்டுகளுக்கு யார் பதில் சொல்வது?

தன் வேலையில் ஒரு அரசு அதிகாரி தவறு செய்தால் அவருக்கு தண்டனை உண்டல்லவா? நிதிபதிகளும் அரசு பணியாளர்கள் தானே? தவறான தீர்ப்பு வழங்கி இந்த வயதான தம்பதிகளை 16 ஆண்டுகள் அலைக்கழித்து தன் மகனுடைய சாவையும் அனுபவிக்கச் செய்த கீழக்கோர்ட்டு நிதிபதிகளுக்கு என்ன தண்டனை?

அதுபோல் பொய் வழக்கு போட்ட அந்த பெண்குலத் திலகத்திற்கு என்ன தண்டனை?

மக்களே, சிந்திப்பீர்!

"பெண்ணியவாதம் ஒரு தீவிரவாதம்"

"சட்டத்தின் மூலம் குடும்ப வாழ்வை தாங்கிக் காக்க இயலாது; அதை அழிக்கத்தான் இயலும்"

" இன்றைக்கு காந்திஜி உயிருடன் இருந்தால் அவரையும் குடும்ப வன்முறைச் சட்டத்தில் கைது செய்து உள்ளே தள்ளச் செய்திருப்பார்கள் நம் நாட்டின் பெண்னியவாதிகள்!"

செய்தி இங்கே.

முந்திக்கிட்டான்யா!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்து விடுவாரோ என்று பயந்து மனைவியை கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். மாலூரில் இந்த பயங்கர சம்பவம் நடந்து உள்ளது.

கோலார் தங்கவயல், அக்.21- 2009. செய்தி - தினத்தந்தி

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் அரிசிகெரே பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 34). கல் உடைக்கும் தொழிலாளி. இவருக்கு நேத்ராவதி (28) என்ற மனைவியும், ஒரு பெண், ஒரு ஆண் குழந்தையும் இருந்தனர்.

தற்போது மஞ்சுநாத் கோலார் மாவட்டம் மாலூர் கொண்டசெட்டிஹள்ளி கிராமத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை செய்து வந்தார். இவர் கள்ளக்காதல் விவகாரத்தில் தனது மனைவி நேத்ராவதியை எரித்துக் கொலை செய்ததாக போலீசாரிடம் ஒப்புக் கொண்டார். இதைத்தொடந்து, மஞ்சுநாத்தை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியானது.

கள்ளத்தொடர்பு

மஞ்சுநாத்தின் சொந்த ஊரான அரிசிகெரேயில் வசித்தபோது, அவரது மனைவி நேத்ராவதிக்கும், தும்கூர் மாவட்டம் பாவகடா பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் மஞ்சுநாத் தனது மனைவி நேத்ராவதியிடம், ரவிச்சந்திரன் உடனான உறவை துண்டித்து விடும்படி கண்டித்து இருக்கிறார். ஆனால், நேத்ராவதி அப்போது மட்டும் பேச்சுக்கு ஒப்புக் கொண்டு, ரவிச்சந்திரனிடம் தொடர்ந்து கள்ளத்தொடர்பு வைத்ததாக கூறப்படுகிறது.

இதனால் மஞ்சுநாத், நேத்ராவதியை அரிசிகெரேயில் விட்டு விட்டு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு மாலூருக்கு வந்து விட்டார். இந்த நிலையில், ஊர் பெரியவர்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவி இருவரையும் அழைத்து பேசி சமரசம் செய்து, சேர்ந்து வாழும்படி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். அதன்பிறகு மஞ்சுநாத் மனைவி மற்றும் குழந்தைகளுடன் கொண்டசெட்டிஹள்ளிக்கு வந்து குடியேறினார்.

ஆனாலும், அதன்பிறகும் நேத்ராவதி தனது கள்ளத்தொடர்பை விடவில்லை. கள்ளக்காதலன் ரவிச்சந்திரனுடன் செல்போனில் பேசுவதுடன் கள்ளதொடர்பும் வைத்திருந்தார்.

எரித்துக் கொலை

இதனால் வேதனை அடைந்த மஞ்சுநாத், தனது மனைவி நேத்ராவதியை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பது என்று முடிவு செய்தார். அதன்படி, நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு நேத்ராவதியை எழுப்பி வெளியே அழைத்து வந்தார். அப்போது, அங்கு நேத்ராவதியின் கள்ளக்காதலன் ரவிச்சந்திரன் நின்று கொண்டிருந்தார்.

இதனால் மனைவி நேத்ராவதியும், கள்ளக்காதலன் ரவிச்சந்திரனும் சேர்ந்து தன்னை கொலை செய்து விடுவார்களோ என்று மஞ்சுநாத்துக்கு பயம் வந்து விட்டது. உடனே வீட்டுக்குள் ஓடி சென்று உருட்டுக்கட்டையை எடுத்து வந்து, ரவிச்சந்திரனை தலையில் ஓங்கி அடித்தார். இதில், பலத்த காயம் அடைந்த ரவிச்சந்திரன் அங்கிருந்து ஓடி விட்டார்.

அதன்பிறகு போலீசில் மனைவி நேத்ராவதி புகார் செய்து விடுவாளோ என்று பயந்து, அவரை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலை செய்தார். பின்னர் பொழுது விடிவதற்குள் மனைவியின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி அருகே கம்பனஹள்ளி கிராமத்தில் உள்ள தைல மர தோப்புக்கு எடுத்து சென்றார். அங்கு நேத்ராவதியின் உடலை தீ வைத்து எரித்தார்.

அதன்பிறகு ஊருக்கு செல்வதற்காக மஞ்சுநாத் தான் வேலை செய்யும் குவாரி உரிமையாளரிடம் ரூ.1,500 வாங்கிக் கொண்டு புறப்பட்டார். ஆனால் அதற்குள் போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்து விட்டனர் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

மருமகள்கள் சித்திரவதையிலிருந்து மாமியார்களைக் காக்க ஒரு சங்கம்

செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 20, 2009. செய்தி: தட்ஸ்தமிழ்

ஹைதராபாத்: மருமகள்கள் சித்திரவதையிலிரு்நது தங்களைக் காத்துக் கொள்வதற்காக ஆந்திராவில் மாமியார்கள் சேர்ந்து தனிச் சங்கம் கண்டுள்ளனர்.

வரதட்சணைக் கொடுமை வழக்குகளில் முதலில் சிக்குவது கணவன்மார்கள்தான். அதற்கு அடுத்த டார்கெட் மாமியார்கள்.

ஆனால் வரதட்சணைக் கொடுமை சட்டத்தை பல பெண்கள் தவறாகப் பயன்படுத்தி கணவர்களையும், மாமியார்களையும், அவர்களது குடும்பத்தினரையும் சிறையில் தள்ளி விடுவதாக சமீப காலமாக புகார்கள் வருகின்றன.

சில மாதங்களுக்கு முன்பு மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவன்மார்கள் சங்கம் தொடங்கப்பட்டது. மாநாடு கூட நடத்தினர்.

இந்த நிலையில் ஆந்திராவில் மாமியார்கள் சேர்ந்து ஒரு சங்கம் ஆரம்பித்துள்ளனர்.

இதுகுறித்து சங்கத்தின் அமைப்பாளர்களான பத்மஜா, உமா ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

சமீபகாலமாக மருமகள்களால் ஏராளமான மாமியார்கள் வீடுகளில் சித்ரவதை செய்யப்படுகிறார்கள். பல மாமியார்களுக்கு சரியான நேரத்திற்கு உணவு கூட கிடைப்பதில்லை.

மருமகள்கள் பலர் மாமியாரை கடுமையாக சித்ரவதை செய்து விட்டு போலீசில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக போலீசில் சிக்க வைத்து வருகிறார்கள்.

இந்த கொடுமைகளுக் கெல்லாம் முடிவு கட்டத்தான் நாங்கள் மாமியார் பாதுகாப்புச்சங்கத்தை தொடங்கி உள்ளோம்.

தற்போது 30 பேர் உறுப்பினர்களாகி உள்ளனர். விரைவில் ஆயிரம் பேர் வரை உறுப்பினராக சேர்க்க முடிவு செய்துள்ளோம் என்றனர்.

தங்களது பிரச்சினைகள் உள்ளிட்டவை தொடர்பாக மாமியார்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களையும் இந்த சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

அவை - 9704683163, 9573605415

===========

விரைவிலேயே இச்சங்கத்தின் கிளை தமிழ் நாட்டிலும் துவக்கப்பட இருக்கிறது. அது பற்றிய அறிவிப்பை எதிர்பாருங்கள்!

குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை

அக்டோபர் 16,2009. செய்தி: தினத்தந்தி

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே, ஐந்து வயது குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்த தாய்க்கு, ஆயுள் தண்டனை வழங்கி, பெரம்பலூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பெரம்பலூர் ரெங்கா நகரைச் சேர்ந்தவர் அப்துல்ரஹீம்(35);

இவரது மனைவி வகிதா(30). அப்துல்ரஹீம், ஏழு ஆண்டுக்கு முன், கூலி வேலைக்கு ரியாத்துக்கு சென்றார். வகிதா, தனது ஐந்து வயது மகள் பர்கானாவுடன், திருச்சி மாவட்டம் கொளக்குடியில் உள்ள தன் அப்பா ஜமால்முகமது வீட்டில் வசித்து வந்தார். கடந்த 2007ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி, அப்துல்ரஹீம், வகிதாவுக்கு போன் செய்து, "உனது நடத்தையில் சந்தேகம் உள்ளது.

அதனால், பெரம்பலூரில் எனது தாய் வீட்டில் தங்கியிரு. மகள் பர்கானாவை பெரம்பலூரில் உள்ள பள்ளியில் சேர்த்து படிக்க வை' என்று கூறினார். அன்றிரவு, வகிதா தனது மகள் பர்கானாவுடன் பெரம்பலூரில் உள்ள தன் மாமியார் பஷீரா வீட்டுக்கு வந்து தங்கினார். அடுத்த நாள் (21ம் தேதி) காலை 9 மணிக்கு, வகிதா தனது மாமியார் பஷீராவிடம், பர்கானாவுக்கு இட்லி வாங்கி வருமாறு கூறி கடைக்கு அனுப்பினார்.

வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பர்கானாவை அழைத்து, தன் சேலை முந்தானையால் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, வகிதா தப்பி ஓடி விட்டார். போலீசார், வகிதாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின், வகிதா ஜாமீனில் வெளியில் வந்தார். இவ்வழக்கு, பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. பின், பெரம்பலூர் மகிளா கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது. வழக்கை விசாரித்த மகிளா கோர்ட் நீதிபதி, நேற்று, வகிதாவுக்கு ஆயுள் தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் ஆறு மாத காலம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். வகிதா, திருச்சி பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

பணம் பறிப்பதெற்கென்றே ஒரு சட்டம்!

இ.பி.கோ செக்ஷன் 498A யில் கட்டமைக்கப்பட்டுள்ள முக்கிய பகுதிகள்தான் அதன் பரவலான துஷ்பிரயோகத்திற்கு வழி வகுக்கின்றன:

1. சுவிட்சைப் போட்டவுடனேயே லைட் எரிவது போல் புகார் கொடுத்தவுடனேயே எந்தவித விசாரணையுமின்றி கணவரும், மாமியாரும், நாத்தனாரும் (ஆகா, ஜாலி!!) கைது செய்யப் படுவார்கள். ஆங்! மாமனாரை விட்டுட்டேனே! என்ன திமிர் புடிச்சவன்யா அந்த ஆளு. போடு உள்ளார! நாத்தனாருக்கு 3 வயசுல புள்ளை இருக்கா, அவனும் கொடுமை பண்ணினான்னு எழுது. ஜெயில்ல போயி சாகட்டும், களுதைங்க! - இதுதான் இந்த புதுமைப் பெண்குலத் திலகங்களின் மனப்பான்மை. இல்லாவிடில் 80 வயது கிழவர்கள் மீதும் 3 வயதுக் குழந்தைகள் மீதும் புகார் கொடுப்பார்களா!

2. இந்தச் சட்டம் cognizable, non-bailable and non-compoundable ஆக இருப்பதால் பழி வாங்குவது சுலபமாக இருக்கிறது

3. பொய்ப்புகார் என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தாலும் புகாரின் மேல் நடவடிக்கை எடுக்க வற்புறுத்தல்கள் இருப்பதால் பொய் வழக்கு போடுவதை ஊக்குவிப்பதற்காகவே இயற்றப்பட்டுள்ள சட்டமாக இது அமைந்திருக்கிறது. மேலும் 15 ஆண்டுகளுக்கு முன் வரதட்சனை கேட்டார்கள் என்று இன்று கூட புகார் கொடுக்கும் வகையில் இதன் நடைமுறை இருக்கிறது.

4. "வரதட்சணைக் கொடுமை" என்ற சொல்லாட்சி வந்தவுடனேயே பெண்ணியவாதிகளும் ஜொள்ளுக் கிழங்களும் சேர்ந்து "ஐயகோ! இளம் பெண்கள் வரதட்சணைக் கொடுமைகளுக்கு ஆளாகிறார்களே; கணவன், மாமியார், மாமனாரை கைது செய்வது சமூகக் கட்டாயம் அல்லவா!" என்று கோஷ்டிகானமாக ஒப்பாரி வைப்பார்கள். இது இந்தச் சட்டத்தை வைத்து வியாபரம் செய்பவர்களுக்கு சாதகமாக அமைகிறது.

5. கெடுமதி கொண்ட பெண் பிசாசுகளும், அவர்களுக்குத் துணைபோகும் வக்கீல்களும் சேர்ந்து இந்தச் ச்ட்டத்தை கையிலெடுத்து கணவன் மற்றும் அவனுடைய ரத்த உறவுகளைக் கொடுமைப்படுத்தி மிரட்டிப் பணம் பறிக்கும் ஈனச் செயல்தான் இப்பொது நடந்து கொண்டிருக்கிறது. உண்மையில் கஷ்டப்படும் பெண்கள் எவருக்கும் இச்சட்டத்தால் யாதொரு பயனும் இல்லை.

இதன்கீழ் காணும் செய்தியைப் பாருங்கள்:

ஒரு ஆண்டு காலமாக கணவன் வீட்டிலேயே அந்த மனைவி வசிக்கவில்லை. ஆனால் அந்த நேரத்தில் கணவன் வீட்டார் அவளைக் கொடுமை செய்தார்களாம்.

கொடுமைகள் செய்து கொலை செய்ய முயற்சித்தார்களாம். அதனால்தான் பிறந்த வீட்டிற்கு ஓடினாளாம். ஆனால் திரும்பி அங்கு சென்று வாழ முயற்சி செய்கிறாளாம். ஆனால் கணவன் உள்ளே விடவில்லையாம். எவ்வளவு முறணான புகார்கள் பாருங்கள்!

எல்லாவற்றிற்கும் மேல் காந்தியடிகளையே அவமானப்படுத்தும் வகையாக, பொய்க் கேசு போட்டு நடவடிக்கை எடுக்க வற்புறுத்தி உண்ணா விரதம் வேறு!

வெட்கக்கேடு!

சரி. செய்தியை படியுங்கள்.

ஆண்டிப்பட்டி அருகே வரதட்சணை கேட்டு பெண்ணை கொலை செய்ய முயற்சி.
கணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு

கண்டமனூர்,அக்.19- 2009. செய்தி - தினத்தந்தி

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது,

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா சித்தார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ் (வயது 35) இவருக்கும் தெப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த பாண்டியராஜன் என்பவருடைய மகள் உமா ராணிக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் உமா ராணி யிடம் வரதட்சணை கேட்டு கணவர் காமராஜ் அடிக்கடி சண்டைபோட்டு வந்ததாக கூறப்படுகிறது. தீ வைத்து கொலை செய்யவும் முயற்சி செய்ததாக தெரிகிறது. இதன்காரணமாக கடந்த 1 ஆண்டாக உமாராணி கணவரை பிரிந்து தெப்பம்பட்டியில் உள்ள தாய் வீட்டில் வீட்டில் வசித்து வருகிறார்.

உண்ணா விரதம்

இதனையடுத்து கடந்த மாதம் உமாராணி தன்கண வருடன் சேர்ந்து வாழ்வதற்காக மீண்டும் கணவர் வீட்டிற்கு சென்றார். அப்போது கணவர் வீட்டில் உமாராணியையாரும் ஏற்றுக்கொள்ள வில்லை. மேலும் உமா ராணியை அவரது கணவர் வீட்டினர் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் இவரது புகார் குறித்து போலீசார் முறையான விசாரணை செய்ய வில்லை என்று தெரிகிறது. இதனையடுத்து நேற்று காலை உமாராணி தனது கணவர் வீட்டு முன்பு உண்ணாவிரதம் இருக்க முயற்சி செய்தார்.

வழக்கு பதிவு

இது குறித்த தகவல் கிடைத்ததும் ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பூங்கோதை உத்தரவின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுசிலா மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். உண்ணாவிரதம் இருக்க முயன்ற உமாராணியை அவர்கள் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இருதரப்பினரிடமும் விசாரணை செய்வதற்காக கணவர் குடும்பத்தாரை போலீசார் அழைத்தனர். ஆனால் யாரும் வரவில்லை. (இதற்குப் பெயர்தான் "கட்டப் பஞ்சாயத்து"!)

இதனைத்தொடர்ந்து கணவர் காமராஜ், மாமனார் ராஜ்(62), மாமியார் செல்லத்தாய்(58), கொளுந் தனார் சுந்தரம்(34), நாத்தனார் புனிதா(37) புனிதாவின் கணவர் ராஜாக்கனி(39) ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

திருமணமாகி 16 ஆண்டுக்குப்பின் வந்ததே 498A வழக்கு!

"எங்கோ யாருக்கோ என்னவோ வரதட்சணை வழக்கு நடக்குது, நமக்கென்ன அக்கறை. நம்ப பொண்டாட்டியா, சேச்சே, அது மாதிரி கேசெல்லாம் போடமாட்டா, இது என்னவோ லூசு உளறிகிட்டு கெடக்குது"

இதுபோலத்தான் இந்த வலைப்பதிவை வாசிக்கும் பல எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள் கெக்கேலி கொட்டி சிரித்துவிட்டு, பெரண்டு படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்!

ஆனால் அவர்களுக்குத் தெரியாது, இந்த வழக்கு பூதங்களின் வீச்சும் தாக்கமும்.

காதல் மணம் புரிந்து கொண்டு 15 ஆண்டுகள் மகிழ்ச்சியான மண வாழ்வில் இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னும், ஒரு நாள் கணவன் தன் வயதான பெற்றோரை உடன் அழைத்துக் கொள்ளப் போகிறேன் என்று சொன்ன மாத்திரத்தில் குழந்தைகளோடு வீட்டை விட்டு ஓடிப் போய் 498A கேசு போட்ட நிகழ்வுகளை நேரில் கண்டிருக்கிறோம்.

அதனால், யாரும் தங்களுக்கு இது நடக்காது என்று குறட்டை விட்டுக் கொண்டிருக்க வேண்டாம். பொய் கேசு போட்டு பழி வாங்குவதற்கு சுலபமாக வழி வகுத்துக் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், என்றைக்கு வேண்டுமானாலும் உங்களை இது போன்ற வழக்குகள் தீண்டலாம். The enemy will choose the time and place of attack!

இப்போது இந்த 498A கேசைப் பற்றிப் படியுங்கள்:

தேனி அருகே வரதட்சணை கேட்டு பெண்ணிடம் கொடுமை
கணவர் கைது

தேனி,அக்.15- 2009. செய்தி - தினத்தந்தி

தேனி அருகே பெண் ஒருவரிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக அந்த பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வரதட்சணை கொடுமை

தேனி அருகே உள்ள வடபுதுப்பட்டி ரைஸ்மில் தெருவில் வசித்து வருபவர் ராஜா. இவரது மனைவி வீரலட்சுமி (வயது 31). இவர் களுக்கு திருமணம் ஆகி 16 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜவுளி வியாபாரம் செய்வதற்காக வீரலட்சுமி தனது 221/2பவுன் தங்க நகையை கணவரிடம் கொடுத்துள்ளார்.

ஆனால் ஜவுளி வியாபாரம் செய்த ராஜாவுக்கு தொழில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, மீண்டும் வேறு தொழில் செய்ய வேண்டும் என்று கூறி ரூ.50 ஆயிரம் பணத்தை தனது மனைவி வீரலட்சுமியின் பெற்றோரிடம் வாங்கி வா என்று ராஜா வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் பணம் வாங்கி வராவிட்டால் தீ வைத்து கொளுத்தி விடுவேன் என்றும் அவர் மிரட்டியதாக தெரிகிறது.

கைது

இதுகுறித்து வீரலட்சுமி தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மனைவியை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிஞ்சு மகனின் வாழ்வைக் குலைக்கும் தாய்

எல்லாமே பணத்திற்காகத்தான்!

இப்போதெல்லாம் மணமான பெண்கள் 498A மற்றும் குடும்ப வன்முறை போன்ற சட்டங்களின் கீழ் பொய் வழக்கு போட்டு கணவனையும் அவனுடைய பெற்றோரையும் கைது செய்ய வைத்து, கோர்ட்டுக்கு இழுத்து, தன் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி சிறிதும் அக்கரையில்லாமல் அத்தனை பேர்களுடைய வாழ்வையும் அலங்கோலம் செய்வதன் அறுதி நோக்கம் என்ன? பணம், ஐயா, பணம்!

இல்லாவிட்டால் ஏன் சில வக்கீல்கள் குடும்பம் சம்பந்தமான எந்த விதப் பிரச்னையையும் இதுபோன்ற பொய் வழக்குகளாக மாற்றும் குடிசைத் தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள்! இதுபோல் கேசு மேல் கேசாகப் போட்டு, பெண்கள் கண்ணீர் சிந்தினால், "அவர்கள் கேட்ட பணத்தைக் கொடு" என்று கண்ணை மூடிக்கொண்டு கணவன் மீது ஆணையிடும் போக்கு கொண்ட நிதிபதிகளின் உதவியால் கணவனிடமிருந்து ஜீவனாம்சம், மெயிண்டனென்ஸ் என்னும் வகையில் ஒரு கணிசமான தொகையைக் கறந்து விடலாம் என்பதுதான் அவர்களது குறிக்கோள். ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி சொன்னது போல் இந்தவித சட்டங்களின் நடைமுறை ஒரு Legal Extortion!

அதுபோல் குழந்தைகளின் காப்புப் பொறுப்பு அளிப்பதிலும் பிரச்னைகளைச் செய்து தன் குழந்தைகளையே பணம் பிடுங்குவதற்காக பிணைக்கைதிகளாக மாற்றும் போக்கும் பல பெண்களுக்கு இருக்கிறது. இதற்கு தெரிந்தோ தெரியாமலோ நீதிபதிகளும் துணை போகிறார்கள்.

இந்த நிலை மாற வேண்டுமானால், குடும்ப நல நீதிபதிகளாக பெருமளவில் இளைஞர்களை நியமிக்க வேண்டும்; அவர்களில் 50% இளம் பெண்கள் இருக்கவேண்டும். அவர்களுக்குத்தான் தற்கால சமூக நிலை பற்றி முழுதாக புரிந்து கொள்ள இயலும்.

இப்போது ஒரு "மாஜி" தாயின் திருவிளையாடலைப் பாருங்கள்!

மாஜி 'தாய்' வழக்கால் தத்து மகன் அச்சம்

அக்டோபர் 16,2009. தினத்தந்தி

மும்பை: பத்து ஆண்டுக்கு மேல் விலகி இருந்த மாஜி மனைவி, திடீரென மகன் மீது உரிமை கோரி கோர்ட்டுக்கு சென்றாள். தத்து கொடுக்கப்பட்ட மகன் நிலை இப்போது கேள்விக்குறியாக உள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையை சேர்ந்தவர் ராகேஷ் மேத்தா. இவரது மகன் கரண் மேத்தா(12). இச்சிறுவனை, அவரது உறவினர், திரண் என்பவருக்கு ராகேஷ் தத்து கொடுத்தார்; இதை அவரின் மாஜி மனைவி எதிர்த்து உள்ளார். "அவருக்கு மகன் மீது அன்பில்லை என்ற அடிப்படையில், கரண் மேத்தாவை, அவரின் முன்னாள் மனைவி மீத்தாவிடம் ஒப்படைக்க வேண்டும்' என்று குடும்ப நலக் கோர்ட் நீதிபதி, வி.ஜே.லோகியா உத்தரவிட்டார். அதற்கு, ராகேஷ் ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெற்றதோடு, மேல் முறையீடும் செய்துள்ளார்.ராகேஷ் தனது மனுவில் கூறியிருப்பதாவது:

கரணின் ஒன்றரை வயதிலேயே அவன் தாய், அவனை விட்டு சென்று விட்டார். அதன் பின், 2006ம் ஆண்டு, இருவரும், விவாகரத்து பெற்றோம். 2007ம் ஆண்டு, மறுமணம் செய்து கொண்டேன். மீத்தா, கடந்தாண்டு, குடும்ப நலக் கோர்ட்டில் கரணை தன்னிடம் ஒப்படைக்க கோரி மனு தாக்கல் செய்யும் வரை, அவனை சந்திக்கவில்லை. அதன், பின், கரணை தன்வசம் இழுக்க, அவனை ஐந்து முறை சந்தித்துள்ளார். ஆனால், கரண் மீத்தாவிடம் பேச மறுத்துள்ளான். கரணின் நல்வாழ்விற்காகவே, குழந்தைகள் இல்லாத தம்பதியருக்கு, அவனை தத்து கொடுத்தேன். அவர்கள் தங்கள் சொத்தை கரணுக்கு முறைப்படி வழங்குவதற்காக, இத்தகைய ஏற்பாட்டை செய்தனர். மேலும், கரண் என் இரண்டாவது மனைவியுடன் சந்தோஷமாக உள்ளான். எனவே, கரணை என்னுடன் இருக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

கள்ளக்காதல் - தீபாவளி சிறப்புச் செய்தி!

கள்ளக்காதல்களும் அவற்றின் விளைவால் நம் பெண்குலத்திலகங்கள் செயலாக்கும் கணவன் கொலை, பெற்ற குழந்தைகள் படுகொலை, பெற்றோர் கொலை, தற்கொலை போன்றவை நாள்தோறும் பொங்கிப் பெருகிவரும் வேகத்தைப் பார்த்தால் அனைத்து தினசரி நாளேடுகளும் "கள்ளக்காதல் சிறப்பு மலர்" வெளியிடவேண்டிய கட்டாயம் ஏற்படுமோ என்று தோன்றுகிறது. தவிர, கள்ளக்காதல்களைப் பற்றிய செய்திகளை உடனுக்குடன் மக்களுக்குத் தெரிவிக்க ஏதுவாக ஒரு தனி நாளேடு மற்றும் வாரப்பத்திரிக்கை வெளிவரும் சாத்தியங்கள் உள்ளதாகத் தோன்றுகிறது. நாமும் ஒரு தனி வலைப்பதிவு தொடங்கலாம்!

இந்தக் கள்ளக்காதல் சமாசாரத்தின் வீச்சையும், தாக்கத்தையும் நன்கு அறிந்ததால்தான் ஆச்சி மனோரமா அவர்கள் இதைக் கையிலெடுத்து கணவர்களின் "ஆண்மைக் குறைவு" என்னும் கோஷத்துடன் போராட்டக் களத்தில் குதித்திருக்கிறார்!

மேலும் தேசிய பெண்கள் வாரியமும் (National Commission for Women) கள்ளக்காதலை சட்டபூர்வமாக அங்கீகரிப்பதன் அவசியத்தை உணர்ந்து, அதை நாட்டின் தலையாய பிரச்னையாகக் கருதி, கள்ளக்காதல் மூலமாகப் பிறக்கும் குழந்தைகளுக்கும் (illegitimate children) சேர்த்து அந்தக் குழந்தைகளுக்கு சிறிதும் தொடர்பில்லாத கணவன்தான் படியளக்கவேண்டும்; அது அவனுடைய அடிப்படை கடமைகளில் ஒன்று என்று வரையறுத்து சட்டங்களை இயற்றும்படி அரசுக்கு தாக்கீது அனுப்பியுள்ளது. (Link)

அதேபோல் கள்ளக்காதலைக் காரணம் காட்டி கணவன் விவாகரத்து கேட்டாலும் அவனுக்கு கிட்டுவதில்லை. ஆனால் மனைவி மட்டும் ஜீவனாம்சம், மெயின்டெனென்ஸ் என்று பல வகைகளில் பல சட்டப்பிரிவுகளின் அடிப்படையில் பணம் கேட்டால் உடனே அதை கணவன் கொடுத்தே தீரவேண்டும், இல்லாவிட்டால் சிறைவாசம்; பணம் கைவசம் இல்லாவிட்டால் கிட்னியை விற்றாவது கொடு என்று ஆணையிட்டு விடுவார்கள். திருமணம் என்னும் ஒன்றைச் செய்துகொண்டு விட்டால் ஆணுக்கு கடமைகளும், மனைவிக்கு உரிமைகளும் சுமார் 46 வகை சட்டப் பிரிவுகளின் மூலம் உறுதி செய்யப்படுகின்றன.

உங்களுக்குத் தெரியுமா:

கள்ளக்காதலில் ஈடுபடும் மனைவியை தண்டிக்க இந்திய சட்டங்களில் இடமேயில்லை என்பது!

Women cannot be punished for adultery

இனி, ஒரு புதுவித கள்ளக் காதல் லீலையைப் பற்றிப் படியுங்கள்:-

கள்ளக்காதலால் வந்தவினை - கணவனிடமே ரூ.10 லட்சம் மோசடி

இன்ஜினியர் மனைவி- போலீஸ் ஏட்டு கைது

ஆலந்தூர், அக். 16, 2009. (தினகரன்)

கத்தார் நாட்டில் வேலை செய்யும் இன்ஜினியரின் மனைவிக்கு, போலீஸ் ஏட்டுவுடன் கள்ளக்காதல் ஏற்பட்டதால், கணவரிடமே ரூ.10 லட்சம் மோசடி செய்துள்ளார். இதுபற்றி கணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், அந்தப் பெண்ணும், போலீஸ் ஏட்டும் கைது செய்யப்பட்டனர்.

பரங்கிமலை கணபதி காலனியை சேர்ந்தவர் சிவஞானம் (50). கத்தார் நாட்டில் இன்ஜினியராக வேலை செய்கிறார். இவர் சென்னை புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

என் மனைவி மல்லிகா (46). நான் கத்தாரில் இருந்து 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊருக்கு வந்து மனைவி மற்றும் குடும்பத்தினருடன் ஒரு மாதம் தங்கிவிட்டுச் செல்வேன். காரம்பாக்கத்தில் வசிக்கும் முரளிதரன் (46) என்பவரிடம் இருந்து ரூ.18 லட்சத்துக்கு ஒரு இடத்தை வாங்கலாம் என்று என் மனைவி கூறினார். அதனால் முரளிதரனிடம் ரூ.10 லட்சம் அட்வான்ஸ் கொடுத்தேன். அதன்பின் 2007ல் ஊருக்கு மீண்டும் வந்தேன். அப்போது, முரளிதரனை சந்தித்து இடத்தை என் பெயருக்கு பதிவு செய்து தருமாறு கேட்டேன். அதற்கு அவர் தான் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் ஏட்டாக இருப்பதாகவும், விரைவில் ஏற்பாடு செய்கிறேன் என்றும் சாக்குப்போக்கு கூறினார்.

போலீஸ் என்பதால் ஏமாற்ற மாட்டார் என்று நம்பி நான் மீண்டும் கத்தார் நாட்டுக்கு சென்றுவிட்டேன். கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் ஊருக்கு வந்தேன். அப்போது என் மனைவி மல்லிகாவுக்கும் முரளிதரனுக்கும் கள்ளக்காதல் இருப்பது தெரிந்தது. அவர்கள் இருவரும் குடும்பம் நடத்தியதை நேரில் பார்த்து திடுக்கிட்டேன்.

கத்தாரில் இருந்து நான் அனுப்பிய பணத்தையெல்லாம், முரளிதரனுடன் சேர்ந்து செலவழித்து உல்லாசமாக இருந்துள்ளார். மேலும், அந்த இடத்தை மல்லிகா பெயருக்கே அவர் கிரயம் செய்து கொடுத்துள்ளார்.

இப்படி எனக்கு துரோகம் செய்த மனைவி மல்லிகா, போலீஸ் ஏட்டு முரளிதரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, மனுவில் சிவஞானம் கூறியிருந்தார். அவருக்கு ஆதரவாக மல்லிகாவின் சகோதரர்களும் புகார் கொடுத்தனர்.

இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரிக்க கமிஷனர் உத்தரவிட்டார். அதன்படி உதவி கமிஷனர் நவநீத கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் ஆரோக்கிய பிரகாசம், மணி, சப் இன்ஸ்பெக்டர் சாலினி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து, முரளிதரனையும் மல்லிகாவையும் கைது செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

நிர்க்கதியான குழந்தைகள்

முதலில் பரிதாபமான குழந்தைகள் பற்றிய ஒரு செய்தி:

மனைவி அடித்து கொலை: கணவன் கைது

மேடவாக்கம் : 14-10-2009. செய்தி: தினமலர்

பெரும்பாக்கத்தில், குடும்பத் தகராறு காரணமாக, மனைவியை கட்டையால் அடித்துக் கொலை செய்த கணவனை, போலீசார் கைது செய்தனர்.

பெரும்பாக்கம், கலைஞர் நகர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் செல்வம்(38) கொத்தனார். இவரின் மனைவி ஜோதி(35). இவர்களுக்கு ஸ்ரீதர்(12), சீதாராமன் (9) மற்றும் ஸ்ரீராம்(5) ஆகிய மகன்கள் உள்ளனர். செல்வத்திற்கு குடி பழக்கம் உண்டு. வேலை பார்த்து சம்பாதிக்கும் பணத்தை குடித்து செலவழிப்பதால், கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டுப் பத்திரத்தைக் கேட்டு மனைவியிடம் செல்வம் தகராறு செய்தார். பத்திரத்தை தர மறுத்ததால், ஆத்திரமடைந்த செல்வம், அருகில் இருந்த கட்டையால் ஜோதியின் தலையில் பலமாக தாக்கினார். இதில், சம்பவ இடத்திலேயே ஜோதி இறந்தார். இதையடுத்து, செல்வம் தலைமறைவானர்.

தகவலறிந்த போலீசார், ஜோதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், செல்வம் கொலை செய்தது தெரியவந்ததும், அவரை பெரும் பாக்கம் ஏரியின் அருகே சுற்றி வளைத்துப் பிடித்து, விசாரணை நடத்தினர். இதில், ஜோதியை கட்டையால் அடித்துக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து, செல்வம் கைது செய்யப் பட்டு, கோர்ட் உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

நிர்க்கதியான குழந்தைகள்:

தாய் கொலை செய்யப்பட்டார்; தந்தை சிறையில் அடைக்கப்பட்டு விட்டார் என்ற நிலையில் குழந்தைகள் மூவரும் ஆதரவற்றவர்களாகிவிட்டனர். நேற்று முன் தினம் முதல் அவர்கள் சாப்பாட்டிற்கு வழியின்றி தவித்தனர். இரக்கப்பட்ட போலீசார் கடந்த இரண்டு நாட்களாக அவர்களுக்கு உணவு வழங்கினர். தற்காலிகமாக அவர்களின் உறவினரான தாயம்மாள் என்பவரிடம் குழந்தைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
======================

உங்கள் சிந்தனைக்கு:

வசதி படித்த பெண்கள் தங்கள் கணவர்களிடமிருந்து பணம் பறிப்பதற்கு எந்தெந்த முறைகளில் சட்டமியற்றலாம் என்று பாடுபட்டுக் கொண்டிருக்கும் தேசிய பெண்கள் நல வாரியத் தலைவர் திருமதி. கிரிஜா வியாஸ் அவர்கள் சிறிதளவேனும் உணமையிலேயே எப்போதும் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஏழைப் பெண்களின் நலனைக் கவனித்தால் என்ன?

"கணவனை அடி" என்னும் தாரக மந்திரத்தை மணமான பெண்களுக்கு போதித்து வரும் தமிழக பெண்கள் நல வாரியத் தலைவர் திருமதி. ராமாத்தாள் அவர்கள் அடிமட்டத்திலிருக்கும் ஏழைப் பெண்கள் குடிகார புருஷனிடம் தினம் அடி வாங்கி நிற்கும் நிலையை மாற்ற அந்த ஆண்களுக்கு de-addiction மற்றும் அறிவுரைகளை வழங்கி அந்தப் பெண்களுக்கு உதவினால் என்ன?
ஆனால் ஒரு பிரச்னை. இது போன்ற இயக்கங்களுக்குத் தெரிந்ததெல்லாம் கைது, வழக்கு, வக்கீல், ஃபீஸ், ஜீவனாம்சம், சிறை வாசம் - இவைதானே!

ஆனால் இதுபோன்ற ஏழைகள் கையில் பணமும் இருக்காதே, என்ன செய்வது?

அதனால்தான் இவர்கள் யாரும் இந்த அடிமட்ட பெண்களைப் பற்றி கவலைப் படுவதில்லை! எந்தச் சட்டமும் இவர்களுக்கு உதவுவதும் இல்லை.

சரி, மனோரமா அம்மையாராவது ஏதாவது செய்யலாமே! அதெப்படி? அவர் தற்போது கையிலெடுத்திருக்கும் சமுதாயத்தின் அதி முக்கியப் பிரச்னையான, 'ஆண்மைக் குறைவு' (அதாவது விறைப்புக் குறைவு மற்றும் 'துரித ஸ்கலிதம்') உள்ள ஆண்களை திருமணம் செய்து கொடுத்து இளம் பெண்களை வஞ்சிக்கும் அவலத்தை எதிர்த்து ஓலமிட்டுக் கொண்டிருக்கிறாரே! ஏதோ நம் தமிழ்ப் பெண்கள் திருமணம் செய்து கொள்வதே கலவி சுகத்திற்கு மட்டுமே என்பது போலவும், அவர்கள்தம் வாழ்வில் வேறு சிந்தனையோ குறிக்கோளோ இன்றி செக்ஸ் திருப்தியை மட்டுமே முக்கியமாகக் கொண்டு அலைவது போலவும் தோற்றமளிக்கும்படியாக பேட்டி கொடுத்துக்கொண்டு, நம் சமூகத்தின் குடும்ப வாழ்க்கை முறையையே கொச்சைப் படுத்தும் பேச்சுக்களை நிறுத்தி விட்டு, இது போன்ற ஆதரவற்ற சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு உதவ அவர் முன் வந்தால் என்ன? ஆனால் அதில் ஒரே ஒரு பிரச்னை, பெண்கள், செக்ஸ், ஆண்மைக் குறைவு போன்ற கோஷங்கள் பெற்றுத்தரும் விளம்பரம் அதுபோல் உண்மையாக குழந்தைகளுக்கு உதவி செய்வதில் கிட்டாது!
=============

ஒரு கொசுறு செய்தி:

தமிழகத்தில் தீபாவளி அன்று, 150 கோடி ரூபாய்க்கு சரக்கு விற்பனை செய்ய, "டாஸ்மாக்" நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 10 நாள் விற்பனை செய்யக்கூடிய வகையில், சரக்கு இருப்பு வைக்க உத்தரவிடப் பட்டுள்ளது. தமிழகத்தில் 7,432 டாஸ்மாக் கடைகள் உள்ளன. தீபாவளியை முன்னிட்டு, மதுபானங்கள் அதிகம் விற்கப்படும் திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட் டங்களுக்கு, வழக்கமான சரக்கு சப்ளையை விட, இரு மடங்கு சரக்குகள் குடோன்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளன. (தினமலர்)

கள்ளக்காதலில் கற்பை எதிர்பார்த்த சாமியார் கள்ளக்காதலியுடன் தீக்குளிப்பு

பழிக்கு பழி வாங்குவதற்காக உடலில் தீ வைத்து கொண்டு கள்ளக்காதலியை கட்டி பிடித்த சாமியார் இருவரும் கருகி பலியானார்கள்

சென்னை, அக். 13- 2009

சென்னை ஒட்டேரி கொசப்பேட்டை வெங்கடாத்திரி நாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி (30). இவரது கணவர் யுவராஜ் (45). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விஜயலட்சுமி, கணவர் யுவராஜ் மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

பின்னர் விஜயலட்சுமி அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் (40) என்ற சாமியாருடன் தொடர்பு வைத்திருந்தார். சங்கருடன் தாலி கட்டாத கணவன் - மனைவியாக வாழ்ந்து வந்தார்.

விஜயலட்சுமிக்கு வேறு சில ஆண்களுடனும் கள்ளக்காதல் இருந்துள்ளது. இதை சங்கர் கண்டித்துள்ளார். ஆனால் விஜயலட்சுமியோ நான் உனக்கு பொண்டாட்டி இல்லை, கள்ளக்காதலி மட்டுமே. பிடிக்கவில்லை என்றால் பிரிந்து விடலாம் என்று திமிராக பேசி உள்ளார்.

இப்படி அடிக்கடி இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு விஜயலட்சுமி வேறொரு கள்ளக் காதலனை பார்ப்பதற்கு வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். இதை சாமியார் சங்கர் எதிர்த்துள்ளார். மேலும் கண்டித்து அடித்து உதைத்துள்ளார். ஆனால் அதையும் மீறி விஜயலட்சுமி வீட்டை விட்டு புறப்படத் தயாரானார்.

திடீரென ஆவேசமான சங்கர் மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். கொளுந்து விட்டு எரிந்த தீயுடன் ஓடிச்சென்று கள்ளக் காதலி விஜயலட்சுமியை கட்டிப் பிடித்தார். இதனால் அவர் மீதும் தீ பற்றியது.

விஜயலட்சுமி உடும்பு பிடியில் சிக்கியது போல் தப்பிக்க முடியாமல் அவதிப்பட்டார். அவரது உடலிலும் தீ கொளுந்து விட்டு எரிந்தது. இருவரும் தீயில் கருகினர்.

பலத்த காயம் அடைந்த இருவரையும் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இருவரும் பரிதாபமாக பலியானார்கள்.

ஓட்டேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முன்னதாக ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுல் ஸ்டேன்லியிடம் விஜயலட்சுமி மரண வாக்குமூலம் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

"நான் மற்ற ஆண்களுடன் பழகுவதை தவறாக நினைத்து எனது கணவர் என்னை விட்டு பிரிந்து சென்றார். (அது அந்தக் கணவனின் தவறு. கள்ளக்காதலைப் போய் தவறாக நினைக்கலாமா? அது ஒவ்வொரு மணமான பெண்ணுக்கும் உள்ள அடிப்படை உரிமை அல்லவா! அதற்காகத்தானே மனோரமா போன்றவர்கள் அயராது பாடுபடுகிறார்கள்!)

அதன் பிறகு சாமியார் சங்கருடன் குடித்தனம் நடத்தினேன். அவரும் என்னை சந்தேகித்தார். வீட்டை விட்டு வெளியே புறப்பட தயாரான போது தீக்குளித்த அவர் என்னை கட்டி பிடித்து கொண்டு என் உடலிலும் தீ பரவ காரணமானார். ஆண் நண்பர்களின் தொடர்பு என் உயிருக்கு உலை வைத்து விட்டது."

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

செய்தி: மாலைமலர், தினத்தந்தி

=======================


ஐயோ, பாவம் அந்த விஜயலட்சுமி அம்மையார். அவர் மட்டும் தொடர்ந்து உயிரோடு இருந்திருந்தால் அவருக்கு சிறப்பான எதிர்காலம் இருந்திருக்கும். மாதர் திலகம் மனோரமா அவர்கள் கள்ளக்காதலுக்கு கணவனின் ஆண்மைக் குறைவுதான் காரணம் (அதாவது அவனுடைய ஆண்குறியின் விறைப்புத் தன்மை மனைவியின் தேவைக்கேற்ப இல்லை - அதுதானே பொருள்!) என்று போராடத் துவங்கியிருக்கும் இயக்கத்தில் சேர்ந்து அவர் புகழ் பெற்றிருக்கலாம். அவருடைய கள்ளக்காதலர்களுக்கும் சேர்த்து முன்னாள் கணவனையே படியளக்க வைத்திருக்கலாம். அதற்குத்தானே தேசிய பெண்கள் வாரியம் சட்டம் இயற்றக் கோரியிருக்கிறது!

கள்ளக்காதலர்களுக்கு இனிமேல் வளமான எதிர்காலம் காத்திருக்கிறது நம் நாட்டில்!

சரி, அந்த அப்பாவி கணவர்களின் கதி? அவன்தானே அய்யா கள்ளக்காதல் செய்யும் மனைவிக்கு பணம் கொடுத்து அழவேண்டும்? அவன் ஏன் திருமணம் செய்துகொண்டான்; அனுபவிக்கட்டும்!

மனைவியின் கள்ளக்காதலுக்கு கணவன் பணம் கொடுக்கவேண்டும்!

கள்ளக்காதல் விவகாரங்கள் பொங்கிப் பெருகி வரும் இன்னாட்களில் ஒவ்வொரு நாளும் பல புது ரக கள்ளக்காதல் லீலைகளும் வன்முறைகளும், கொலைகளும் வெளி வருகின்றன. இனிமேல் பத்திரிக்கைகள் திருமண விளம்பரங்கள் போடும் அளவிற்கு கள்ளக்காதல் ஜோடி கேட்டு விளம்பரங்கள் வெளிவரும் நாள் சீக்கிறமே வரலாம். அதற்குள் கள்ளக்காதல் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு, அதற்கு கணவனையே காரணமாக ஆக்கி, கள்ளக்காதல் இயக்கத் தலைவராக ஆச்சி (இல்லை, 'மறச்சி' - சரி ஏதோ ஒண்ணு!) மனோரமா நியமிக்கப்படும் நிலை வரலாம்.

இப்போதே தேசிய பெண்கள் ஆணையத்தில் (National Commission for Women) ஒரு மனைவி கள்ளக்காதலில் குழந்தைகள் பெற்றால் அந்தக் குழந்தைக்கும் சோரம் போன மனைவிக்கும் சேர்த்து அவளுடைய கணவன் தான் படியளக்கவேண்டும் என்று சட்டமியற்றும்படி கேட்டிருக்கிறார்கள். அதன் சுட்டி இதோ!

NCW wants maintenance even for adulterous wives and illegitimate children.

இப்போது ஒரு "கள்ளக்காதல் கத்திக் குத்து"க் கதையைப் படியுங்கள்:

மோகனூர் அருகே ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக்காதலிக்கு கத்திகுத்து. கூலி தொழிலாளி கைது

மோகனூர், அக்.12- 2009 தினத்தந்தி

மோகனூர் அருகே ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக்காதலியை கத்தியால் குத்தியதாக கூலி தொழிலாளியை மோகனூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள பரளி கிராமம் மல்லுமாச்சம் பட்டியை சேர்ந்தவர் தங்க வேல் (வயது 50). கூலி தொழிலாளி. இவருக்கு அடுத்த வீட்டில் வசிப்பவர் சித்ரா(25). இவரது கணவர் லட்சுமணன்(37).

இந்த நிலையில் தங்கவேலுவின் மனைவி இறந்து விட்டதாக தெரிகிறது. அவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இதை தொடர்ந்து பக்கத்து வீட்டை சேர்ந்த சித்ராவுடன் தங்கவேலுக்கு பழக்கம் ஏற்பட்டது . அது நாளடைவில் கள்ளகாதலாக மாறியது.

கள்ளக்காதலனுடன் ஓட்டம்

இதை அறிந்த லட்சுமணன் மனைவியை கண்டித்தார். இதனால் கணவர் மீது வெறுப்பு அடைந்த சித்ரா தங்கவேலுவை கூட்டி கொண்டு தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் தங்கவேலுவும், சித்ராவும் பரமத்தி வேலூர் அருகே உள்ள ஒரு கோழிப்பண்ணையில் வேலை செய்து வருவது லட்சுமணனுக்கு தெரியவந்தது.

குடும்பம் நடத்த அழைப்பு

இதை தொடர்ந்து லட்சுமணன் தனது உறவினர்களுடன் சித்ரா வேலைபார்க்கும் கோழிப்பண்ணைக்கு சென்று தனது மனைவியை குடும்பம் நடத்தவரும்படி அழைத்ததாக தெரிகிறது.

அதைத்தொடர்ந்து சித்ரா குடும்பம் நடத்த சம்மதித்ததால் அவரை மல்லுமாச்சம்பட்டிக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தி வந்தார்.

சித்ராவை தூக்கி சென்றார்

இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்கு வந்த தங்கவேல் சித்ராவை மறக்க முடியவில்லை என்றும் அவரை உல்லாசமாக இருக்கலாம் வா என அழைத்ததாக தெரிகிறது. அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதை தொடர்ந்து தண்ணீர் குழாயில் சித்ரா தண்ணீர் பிடித்து கொண்டு இருந்த போது அவரை அலாக்காக தங்கவேல் தனது வீட்டிற்கு தூக்கி சென்று அங்கு வைத்து அவரை ஆசைக்கு இணங்குமாறு அழைத்ததாக தெரிகிறது.

கத்திகுத்து

அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே தங்கவேல் தான் வைத்து இருந்த கத்தியை எடுத்து எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்க கூடாது என கூறி சித்ராவை உடலில் பல்வேறு இடங்களில் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டதாக தெரிகிறது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து உடனடியாக அவரை நாமக்கலில் உள்ள அரசு ஆஸ் பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

கூலி தொழிலாளி கைது

இதை தொடர்ந்து சித்ரா இது குறித்து மோகனூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கவேலுவை கைது செய்து அவரிடம் மேற் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

நண்பரின் மனைவியுடன் கள்ளக்காதல்; போலீஸ்காரர் கைது

ஸ்ரீபெரும்புதூர், அக்.13- 2009 (தினத்தந்தி)

நண்பரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்ததாக போலீஸ்காரர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

போலீஸ்காரர்கள்

ஸ்ரீபெரும்புதூர் சிவன் கோவில் தெருவில் வசிப்பவர் ரமேஷ்குமார் (வயது 31). இவர் சென்னை சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வினிதா (28). இவர்களுக்கு 3 வயதில் மகனும், 1 வயதில் மகளும் இருக்கின்றனர்.

காவலர் பயிற்சியின் போது ரமேஷ்குமாருக்கும், காஞ்சீபுரம் புல்லலூர் காலனியை சேர்ந்தவர் ஜெகன்நாதன் (29) என்பவருக்கும் நட்பு ஏற்பட்டதாக தெரிகிறது. தற்போது ஜெகன்நாதன் காஞ்சீபுரம் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

கள்ளக்காதல்

நண்பர்கள் என்பதால் ஜெகன்நாதன் அடிக்கடி ரமேஷ்குமாரின் வீட்டிற்கு செல்வார். இந்த நிலையில் ஜெகன்நாதனுக்கும், வினிதாவுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கணவர் வீட்டில் இல்லாத போது கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு ரமேஷ்குமார் இரவு பணிக்கு சென்று விட்டார். அந்த நேரத்தில் ஜெகன்நாதன் வந்து தங்கியுள்ளார். எதிர்பாராதவிதமாக ரமேஷ்குமார் அதிகாலை 41/2 மணிக்கே வீடு திரும்பினார். உள்ளே ஜெகன்நாதன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார்.

போலீஸ்காரர் கைது

அதனை தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் இன்ஸ்பெக்டர் ஜான் விக்டர் விரைந்து சென்று விசாரணை நடத்தினார். பின்னர் ரமேஷ்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸ்காரர் ஜெகன்நாதனை கைது செய்தனர். போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

================================

நன்றாகக் கவனியுங்கள். கள்ளக் காதலில் ஈடுபட்ட ஆண் மட்டும் தான் கைது ஆனான். கள்ளக் காதல் ஜல்ஸா செய்த மனைவி?

கள்ளக்காதல் (adultery) சட்டப்படி கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவி மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாது. அப்படித்தான் சட்டம் சொல்கிறது. அவள் அடுத்த ஆளைத் தேடுவாள். அவளைத் திருமணம் செய்து கொண்ட முட்டாள்தனத்திற்காக அவளுடைய கணவன் அந்த சோரம் போகும் பெண்டாட்டியை வாழ்நாள் முழுதும் சுமந்து கொண்டு சவரட்சணை செய்ய வேண்டியதுதான். அது அவன் தலையெழுத்து!

According to the present law, only a man can be prosecuted for the offence of adultery with the woman being granted immunity from proceedings on account of her position in society.

Section 497 of Indian Penal Code is copied below:

"497. Adultery.—Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall NOT be punishable as an abettor."
Section 497 unequivocally conveys that the adulteress "wife" is absolutely free from criminal responsibility. She is also not to be punished (even) for "abetting" the offence. Section 497, by necessary implication, assumes that the "wife" was a hapless victim of adultery and not either a perpetrator or an accomplice thereof. Adultery, as viewed under IPC, is thus an offence against the husband of the adulteress wife and, thereby, an offence relating to "marriage".

Premarital, extramarital or unwed sexual activities are not barred or prohibited hence no offence punishable in any Indian law. A wife’s sexual intercourse with other/s is also no offence, hence no prosecution or punishment to her. Even her sex partner also cannot be punished, if was unaware of her wedlock or had sex with consent or connivance of her husband. Her husband alone can prosecute him but not the police, court or the wife. After divorce also her earning husband has to maintain or pay till she remarries (if unable), even if she is permanently & continuously enjoying sex with all other/s. Pre marital sexual intercourses with other/s cannot be a ground to seek divorce under Hindu/Special Marriage Act. Thus a female’s physical sexual relations with persons/s of her choice (with their consent) is not an offence or prohibited / barred in any Indian law and she is at liberty to enjoy the sex freely and fearlessly. A male’s physical sexual relations with any 16+ female (with her consent) is no offence or barred / prohibited in any Indian Law, unless she is in the wedlock of somebody else and is done knowing her wedlock or without her husband’s consent or connivance. Courts have to believe that children born during the wedlock are her husband’s legitimate ones. He is bound to maintain or pay their expenses; till sons are 18+ and daughters are married. Prostitution (commercial sex trade, offering sex for monetary gain) alone is an offence punishable in Indian laws.

இதற்கு மனோரமா, ராமாத்தாள் போன்றோர் என்ன பதில் வைத்திருக்கிறார்கள்? ஆண்கள் எக்கேடோ கெட்டு அழிந்து போகட்டும் என்றா!

எம்.பி வரை எம்பியிருக்கும் 498A கேசுகள்!

முன்னாள் அமைச்சரும் இன்னாள் எம்.பியுமான செம்மலை மற்றும் அவர் குடும்பத்தினர் மீது 498A கேசு தொடுத்துள்ளனர்.

எம்.பி வரை படர்ந்துள்ள 498A பாம்பு சீக்கிறமே அமைச்சர்கள், நீதிபதிகள் போன்று சமூகத்தில் அனைத்து நிலைகளில் உள்ள பல பெரிய மனிதர்களையும் பீடித்த பின்னர்தான், பொய்க் கேசு போடுவதற்கென்றே அமைக்கப்பட்டுள்ள Sec 498A of IPC, Domestic Violence Act, Sec 125 of CrPC போன்ற கொடுங்கோன்மை சட்டங்களிலிருந்து மக்களுக்கு விமோசனம் கிடைக்கும்.

இப்போதெல்லாம் உங்களுக்கு யாரையாவது பிடிக்கவில்லை, அவர்களைப் பழி வாங்க வேண்டுமென்று தோன்றினால் அதற்கு சும்மா அடிச்சான், பிடிச்சான் போன்ற ஜுஜுபி கேசெல்லாம் வேலைக்கு ஆகாது! அதுக்குத்தான் கைவசம் நல்ல தீபாவளி லட்டு கணக்காக பொம்பளை சம்பந்தமான பல சட்டங்களைப் போட்டு வைத்திருக்கிறார்களே ஐயா! சமீபத்தில் தினமலர் செய்தி ஆசிரியரை எந்த சட்டத்தில் கைது செய்தார்கள் பார்த்தீர்கள் இல்லையா - பெண்கள் வன்கொடுமை சட்டத்தில்! அது தான் கூரான ஈட்டி. அதுபோல் 498A மற்றும் குடும்ப வன்முறைச் சட்டம் - இப்படி எதேனும் ஒரு பெண் கொடுமை தொடர்பான சட்டத்தை ஏவி விட்டால், ஆசாமி காலி!

குடும்ப வன்முறைச் சட்டம் (Prevention of domestic violence against women act) ஒரு கந்தல் சட்டம். இதை வைத்துக் கொண்டு யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் சிக்க வைக்கலாம். உதாரணத்திற்கு திருவாளர் டோண்டு தன் வீட்டில் மௌனமாக வலைப்பதிவு எழுதிக் கொண்டு குடும்ப வன்முறை செய்கிறார் என்று நீங்கள் (அவருக்குச் சம்பந்தமில்லாதவர்) புகார் கொடுக்கலாம். அதன் மீது ஆக்ஷன் எடுப்பார்கள். இது போல் நிகழ்ந்த சில கேசுகளைப் பற்றி சீக்கிறமே விரிவாக எழுதுகிறேன்.
இப்போதைக்கு செம்மலையின் நிலையைப் பாருங்கள்:-

வரதட்சணை கொடுமை வழக்கு.

அ.தி.மு.க. எம்.பி. செம்மலை மனைவி, மகனுடன் கோர்ட்டில் ஆஜர்.

சேலம், அக்.13- 2009. செய்தி - தினத்தந்தி.

சேலம் தொகுதி அ.தி.மு.க. எம்.பி. செம்மலை, மனைவி மற்றும் மகனுடன் சேலம் மகளிர் கோர்ட்டில் ஆஜரானார். வரதட்சணை கொடுமை வழக்கில் அவரிடம் விசாரணை நடந்தது.

அ.தி.மு.க. எம்.பி.

அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், தற்போதைய சேலம் தொகுதி எம்.பி.யுமான செம்மலையின் 2-வது மகன் எழில் அமுதன். இவருக்கும், சேலம் மாவட்டம் குஞ்சாண்டினிரை சேர்ந்த முத்துசாமியின் மகள் வாணி பிரிதாவுக்கும் கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் வாணி பிரிதா, தன்னுடைய கணவர் எழில் அமுதன், மாமியார் புஷ்பா, மாமனார் செம்மலை ஆகியோர் மீது மேட்டூர் போலீசில், வரதட்சணை கொடுமை புகார் செய்தார். இந்த புகார் தொடர்பான விசாரணை சேலம் சூரமங்கலம் மகளிர் போலீசாராலும், பின்னர் ஈரோடு மகளிர் போலீசாராலும் நடத்தப்பட்டது.

விசாரணையை தொடர்ந்து செம்மலை எம்.பி., அவருடைய மனைவி புஷ்பா, மகன் எழில் அமுதன் ஆகியோர் மீது சேலம் அனைத்து மகளிர் கோர்ட்டில் வரதட்சணை கொடுமை வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்தது.

இந்த நிலையில் நேற்று காலை மகளிர் கோர்ட்டு நீதிபதி கோபால் முன்னிலையில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.

கோர்ட்டில் ஆஜர்

செம்மலை எம்.பி., அவருடைய மனைவி புஷ்பா, மகன் எழில் அமுதன் ஆகியோர் நேற்று கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். அப்போது சாட்சிகள் அளித்த தகவல்களின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரிடமும் கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டன.

அப்போது செம்மலை எம்.பி. இந்த வழக்கு பொய்யான வழக்கு என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கு என்றும் பதில் அளித்தார். இந்த பதில்கள் பதிவு செய்யப்பட்டன. அதேபோல் அவருடைய மனைவி புஷ்பா, மகன் எழில் அமுதன் ஆகியோர் அளித்த பதில்களும் பதிவு செய்யப்பட்டன.

விசாரணை தள்ளி வைப்பு

பின்னர் இந்த வழக்கு விசாரணை 14-ந் தேதிக்கு (நாளை) தள்ளி வைக்கப்பட்டது.