பிஞ்சு மகனின் வாழ்வைக் குலைக்கும் தாய்

எல்லாமே பணத்திற்காகத்தான்!

இப்போதெல்லாம் மணமான பெண்கள் 498A மற்றும் குடும்ப வன்முறை போன்ற சட்டங்களின் கீழ் பொய் வழக்கு போட்டு கணவனையும் அவனுடைய பெற்றோரையும் கைது செய்ய வைத்து, கோர்ட்டுக்கு இழுத்து, தன் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி சிறிதும் அக்கரையில்லாமல் அத்தனை பேர்களுடைய வாழ்வையும் அலங்கோலம் செய்வதன் அறுதி நோக்கம் என்ன? பணம், ஐயா, பணம்!

இல்லாவிட்டால் ஏன் சில வக்கீல்கள் குடும்பம் சம்பந்தமான எந்த விதப் பிரச்னையையும் இதுபோன்ற பொய் வழக்குகளாக மாற்றும் குடிசைத் தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள்! இதுபோல் கேசு மேல் கேசாகப் போட்டு, பெண்கள் கண்ணீர் சிந்தினால், "அவர்கள் கேட்ட பணத்தைக் கொடு" என்று கண்ணை மூடிக்கொண்டு கணவன் மீது ஆணையிடும் போக்கு கொண்ட நிதிபதிகளின் உதவியால் கணவனிடமிருந்து ஜீவனாம்சம், மெயிண்டனென்ஸ் என்னும் வகையில் ஒரு கணிசமான தொகையைக் கறந்து விடலாம் என்பதுதான் அவர்களது குறிக்கோள். ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி சொன்னது போல் இந்தவித சட்டங்களின் நடைமுறை ஒரு Legal Extortion!

அதுபோல் குழந்தைகளின் காப்புப் பொறுப்பு அளிப்பதிலும் பிரச்னைகளைச் செய்து தன் குழந்தைகளையே பணம் பிடுங்குவதற்காக பிணைக்கைதிகளாக மாற்றும் போக்கும் பல பெண்களுக்கு இருக்கிறது. இதற்கு தெரிந்தோ தெரியாமலோ நீதிபதிகளும் துணை போகிறார்கள்.

இந்த நிலை மாற வேண்டுமானால், குடும்ப நல நீதிபதிகளாக பெருமளவில் இளைஞர்களை நியமிக்க வேண்டும்; அவர்களில் 50% இளம் பெண்கள் இருக்கவேண்டும். அவர்களுக்குத்தான் தற்கால சமூக நிலை பற்றி முழுதாக புரிந்து கொள்ள இயலும்.

இப்போது ஒரு "மாஜி" தாயின் திருவிளையாடலைப் பாருங்கள்!

மாஜி 'தாய்' வழக்கால் தத்து மகன் அச்சம்

அக்டோபர் 16,2009. தினத்தந்தி

மும்பை: பத்து ஆண்டுக்கு மேல் விலகி இருந்த மாஜி மனைவி, திடீரென மகன் மீது உரிமை கோரி கோர்ட்டுக்கு சென்றாள். தத்து கொடுக்கப்பட்ட மகன் நிலை இப்போது கேள்விக்குறியாக உள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையை சேர்ந்தவர் ராகேஷ் மேத்தா. இவரது மகன் கரண் மேத்தா(12). இச்சிறுவனை, அவரது உறவினர், திரண் என்பவருக்கு ராகேஷ் தத்து கொடுத்தார்; இதை அவரின் மாஜி மனைவி எதிர்த்து உள்ளார். "அவருக்கு மகன் மீது அன்பில்லை என்ற அடிப்படையில், கரண் மேத்தாவை, அவரின் முன்னாள் மனைவி மீத்தாவிடம் ஒப்படைக்க வேண்டும்' என்று குடும்ப நலக் கோர்ட் நீதிபதி, வி.ஜே.லோகியா உத்தரவிட்டார். அதற்கு, ராகேஷ் ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெற்றதோடு, மேல் முறையீடும் செய்துள்ளார்.ராகேஷ் தனது மனுவில் கூறியிருப்பதாவது:

கரணின் ஒன்றரை வயதிலேயே அவன் தாய், அவனை விட்டு சென்று விட்டார். அதன் பின், 2006ம் ஆண்டு, இருவரும், விவாகரத்து பெற்றோம். 2007ம் ஆண்டு, மறுமணம் செய்து கொண்டேன். மீத்தா, கடந்தாண்டு, குடும்ப நலக் கோர்ட்டில் கரணை தன்னிடம் ஒப்படைக்க கோரி மனு தாக்கல் செய்யும் வரை, அவனை சந்திக்கவில்லை. அதன், பின், கரணை தன்வசம் இழுக்க, அவனை ஐந்து முறை சந்தித்துள்ளார். ஆனால், கரண் மீத்தாவிடம் பேச மறுத்துள்ளான். கரணின் நல்வாழ்விற்காகவே, குழந்தைகள் இல்லாத தம்பதியருக்கு, அவனை தத்து கொடுத்தேன். அவர்கள் தங்கள் சொத்தை கரணுக்கு முறைப்படி வழங்குவதற்காக, இத்தகைய ஏற்பாட்டை செய்தனர். மேலும், கரண் என் இரண்டாவது மனைவியுடன் சந்தோஷமாக உள்ளான். எனவே, கரணை என்னுடன் இருக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

1 மறுமொழி:

')) said...

One in three Hong Kong teenagers would consider selling sex for money as the trend of so-called “compensated dating” sweeps the city, a survey found Sunday.
Of nearly 600 youngsters aged 12 to 20 questioned in the wealthy city of seven million, 34 percent said they would consider offering compensated dating, a euphemism for prostitution, as a full-time job.

Sixty percent of those who said they would consider compensated dating said they would do it mainly to earn quick cash, while 23 percent said they would do it for their own sexual gratification.


A survey earlier this year found that teenagers in the fashion-conscious city often got involved in compensated dating to earn money for designer clothes and brand-name products.

http://www.cnn.com/video/#/video/world/2009/10/12/chiou.compensated.daters.cnn


Very Soon Indian women's will appear for the same news & the credit goes to NCW