செழித்து வளரும் 498A

ஜெய பேரிகை கொட்டடா!

குடும்ப வாழ்க்கையை 498A கொண்டு சிதைத்து விட்டோம் என்று!

எங்கெங்கு நோக்கினும் 498A கேசுகள். பெற்றுவிட்டோமே பெண் விடுதலை!!
-------------------------
1.

ராயபுரம், ஜுலை.30- 2009

ராயபுரத்தில், கூடுதலாக 60 பவுன் நகை கேட்டு, மருமகளை கொடுமைப்படுத்தியதாக மாமியார்-நாத்தனார் கைது செய்யப்பட்டனர்.

சென்னை ராயபுரம் காசிமாநகரை சேர்ந்த மாசிலாமணியின் மகள் பொற்செல்விக்கும் (வயது 28), ராயபுரம் வெங்கடேசன் தெருவை சேர்ந்த ஜெலேந்திரனின் மகன் பரணி குமாருக்கும், கடந்த 13-7-2006-ல் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது பெண் வீட்டின் சார்பில், பொற்செல்விக்கு 40 பவுன் நகையும், ஒரு மோட்டார் சைக்கிளும், வீட்டு உபயோக பொருட்களும், மணமகன் வீட்டாருக்கு கொடுத்தனர்.

திருமணம் நடந்த 3 மாதத்தில், பரணி குமார் வேலைக்காக குவைத் சென்று விட்டார். அவர் அங்கு ஸ்டோர் கீப்பராக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில், வண்ணார பேட்டை துணை போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணனிடம், பொற்செல்வி ஒரு புகார் கொடுத்தார்.
அந்த புகாரில், கூறப்பட்டு இருப்பதாவது:-

"எனக்கு திருமணம் ஆகி 3 மாதங்கள் தான் எனது கணவர் ஊரில் இருந்தார். அந்த 3 மாதமும் அவரின் பெற்றோர்கள், எங்களை சந்தோஷமாக இருக்க விட வில்லை. எனது கணவரும், வேலைக்காக குவைத் சென்று விட்டார்.

தற்போது எனது மாமனாரும், மாமியாரும் என்னிடம், "நீ உன் கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றால், மேலும் 60 பவுன் நகையை உங்கள் வீட்டில் இருந்து கொண்டு வர வேண்டும்'' என்று கூறி கொடுமைப்படுத்தினார்கள். மேலும், எனது கணவரின் சகோதரி இறந்ததற்கு நான்தான் காரணம் என்று கூறி அடிக்கடி என்னை, எனது கணவரும், நாத்தனார் ஜெயந்தியும் கடுமையாக திட்டினார்கள்.எனவே போலீசார் இது குறித்து நடவடிக்கை எடுத்து, என்னை எனது கணவருடன் சேர்ந்து வாழ ஏற்பாடு செய்ய வேண்டும்.''

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

மாமியார்-நாத்தனார் கைது

இதைத்தொடர்ந்து, பொற்செல்வியின் மாமனார் ஜெலேந்திரன், மாமியார் அமுதா, கணவர் பரணிக்குமார், நாத்தனார் ஜெயந்தி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அமுதா(52), ஜெயந்தி (30) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்கள் இருவரும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். மற்ற 2 பேரும் தேடப்பட்டு வருகிறார்கள்.

2.

ராமநாதபுரம், ஜுலை.30- 2009

ராமநாதபுரத்தில் கூடு தல் வரதட்சணை கேட்டு பெண்ணை துன்புறுத் திய கணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் கொத்த தெருவை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மனைவி வாசுகி(வயது 32). இவர்களுக்கு திருமணமாகி 15 வருடங்களாகின்றன. ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை கள் உள்ளனர். தியாகராஜன் வெளிநாடு சென்று விட்டு ஊருக்கு வந்து கட்டிட தொழி லாளியாக வேலை பார்த்து வருகிறார்.

திருமணத்தின் போது வாசுகிக்கு 35 பவுன் நகையும், ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களும் சீர் வரிசையாக கொடுக்கப்பட் டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தியாகராஜன் தனது மனைவியிடம் மேலும் 20 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகிய வற்றை வரதட்சணையாக வாங்கி வரும்படி கொடுமைப் படுத்தியதுடன் கொலை மிரட்டலும் விடுத்தாராம். இதற்கு தியாகராஜனின் பெரியப்பா கருப்பையா (67) உடந்தையாக இருந்தாராம்.

இதுகுறித்து வாசுகி ராம நாதபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மல்லிகா வழக்கு பதிந்து தியாகராஜன், கருப்பையா ஆகி யோரை கைது செய்தார்.

3.

சேலம்,ஜுலை.30- 2009

சேலம் அருகே 2-ம் திருமணம் செய்து மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவரை போலீசார் கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த மாமியாரையும் போலீசார் கைது செய்தனர்.

சேலம் அருகே உள்ளது வீராணம். இங்குள்ள ஆச்சாங்குட்டப்பட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 30). கூலி தொழிலாளி. இவரதுமனைவி மகாலட்சுமி (26). கணவன் - மனைவி ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் மகாலட்சுமியின் வாழ்வில் வரதட்சணை என்னும் புயல் வீச தொடங்கியது.

அவரிடம் வரதட்சணை கேட்டு கணவன் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் உறவு பெண்ணை 2-ம் திருமணம் செய்து கொண்டார். இது குறித்து மகாலட்சுமி சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனனிடம் புகார் செய்தார்.

அவர் இது குறித்து விசாரிக்க வீராணம் போலீசுக்கு உத்தரவிட்டார். சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் விசாரணை நடத்தி ஆறுமுகத்தையும், உடந்தையாக இருந்த தாய் செல்லம்மாளையும் (55) கைது செய்தனர். ஆறுமுகம் மீது வரதட்சணை கொடுமை, 2-ம் திருமணம் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

4.

தேனி,ஜுலை.28- 2009

சின்னமனூர் அருகே மனைவியிடம் வரதட் சணை கேட்டு கொடுமைப் படுத்தியதாக அந்த பெண்ணின் கணவரை தேனி மகளிர் போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.

தேனி மாவட்டம், சின்ன மனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டை வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா(வயது35). இவரது மனைவி பிச்சையம்மாள் (27). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் கருப்பையா வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தியதாக கூறப் படுகிறது. மேலும் பிச்சையம்மாளிடம் ரூ.3 லட்சம் வரதட் சணை கொண்டு வந்தால்தான் குடும்பம் நடத்த முடியும் என கருப்பையாவும், அவரது உறவினர்கள் 5 பேரும் கூறி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த பிச்சையம்மாள் தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில்கணவரின் குடும்பத்தினர் மீது வரதட் சணை கேட்டு கொடுமைப் படுத்தியதாக புகார் கொடுத்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தியதாக கருப்பையாவை கைது செய்தனர். மேலும் அவரது குடும்பத்தினரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மகனை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டிய தாய் கள்ளக்காதலனுடன் கைது

நெஞ்சை உறைய வைக்கும் கொடூர சம்பவம்:


மகனை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த தாய் கள்ளக்காதலனுடன் கைது

மதுரை, ஜுலை.30- 2009. செய்தி: தினத்தந்தி.

கள்ளக்காதலை கண்டித்த மகனை கொலை செய்து பிணத்தை துண்டு, துண்டாக அறுத்து பிரிட்ஜில் வைத்து வெளியே வீசிய, தாய் கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகை வியாபாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்டு அவருடைய பிணம் துண்டு துண்டாக வெட்டப்பட்டு பல இடங்களில் வீசப்பட்டது. போலீசாருக்கு பெரும் சவாலாக விளங்கிய இந்த வழக்கில் சமீபத்தில் துப்பு துலங்கி கொலையாளி கைது செய்யப்பட்டான்.
சென்னை நகரையே உலுக்கிய இந்த கொடூர படுகொலை போல மதுரையிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
கள்ளக்காதலை கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த தாய் தனது மகனை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்து ஒவ்வொரு பாகமாக வெளியே எறிந்துள்ளார்.
கேட்கும் போதே நெஞ்சை நடு, நடுங்க வைக்கும் இந்த பயங்கர கொலை தமிழகத்தையே அதிர்ச்சியில் மூழ்க வைத்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
மதுரை மீனாட்சி நகர் முதல் தெருவைச்சேர்ந்தவர் மேரி (வயது 47). இவருடைய கணவர் துரைராஜ் 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவர் பார்த்து வந்த பினின் வேலை மேரிக்கு கிடைத்தது. பழங்காநத்தம் பகுதியில் உள்ள காதிகிராப்டில் மேரி பினினாக வேலை பார்த்து வந்தார்.
மேரிக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி கணவர் வீட்டுக்கு சென்று விட்டனர். மேரியின் ஒரே மகன் கிருஷ்ண மூர்த்தி (வயது 24). இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவனும் மனைவியும் சிவகாசியில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். திருமணமான 2 மாதத்திலேயே இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் மனைவி தீக்குளித்து இறந்து விட்டார். இதனால் கிருஷ்ண மூர்த்தி மதுரைக்கு திரும்பி வந்து தாய் மேரியுடன் வசிக்க ஆரம்பித்தார்.
மேரிக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருந்தது. மதுரை எஸ்.எஸ். காலனி பிள்ளையார் கோவில் தெருவில் எலக்ட்ரிக் கடை வைத்திருக்கும் பாட்சா (வயது 38) என்பவருடன் மேரிக்கு தொடர்பு ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.
மேரியின் வீட்டுக்கு பாட்சா அடிக்கடி வர ஆரம்பித்தார். இந்த விஷயம் கிருஷ்ணமூர்த்திக்கு தெரிய வந்தது. அவர் தாயை கண்டித்தார். "இந்த வயதில் இப்படி ஒரு அசிங்கம் தேவையா? அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் பேசுவதை கேட்டாலே அவமானமாக இருக்கிறது'' என்று சத்தம் போட்டார்.
ஆனாலும் மேரியால் தனது கள்ளத்தொடர்பை கை விட முடிய வில்லை. மகன் மீண்டும் மீண்டும் கண்டித்ததால், `இவன் உயிரோடு இருப்பதால்தானே இடைனிறாக இருக்கிறது. இவனை தீர்த்துக்கட்டி விட்டால் என்ன' என்று விபரீதமாக யோசிக்க ஆரம்பித்தார் மேரி. காதலர் பாட்சாவிடம் தனது திட்டத்தை கூறினார். அவரும் சம்மதம் தெரிவித்தார். சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து இருவரும் காத்திருந்தனர்.
தலையணையால் அமுக்கி கொலை
கடந்த சனிக்கிழமை இரவு கிருஷ்ணமூர்த்தி வீட்டுக்கு சாப்பிட வந்தார். உடனே மேரி செல்போனில் பாட்சாவுடன் தொடர்பு கொண்டு, "என் மகன், வீட்டுக்கு வந்திருக்கிறான். அவனை கொலை செய்ய இதுதான் நல்ல நேரம் உடனே புறப்பட்டு வாருங்கள்'' என்று அழைத்தார். பாட்சாவும் மேரியின் வீட்டுக்கு புறப்பட்டு வந்தார்.

பாட்சாவை பார்த்ததும் கிருஷ்ண மூர்த்திக்கு கடும் கோபம் ஏற்பட்டது. "இங்கு வராதே என்று பல முறை சொல்லியும் ஏன் வந்தாய்'' என்று சத்தம் போட்டார். தாயையும் கண்டித்தார்.
உடனே மேரியும் பாட்சாவும் சேர்ந்து கிருஷ்ண மூர்த்தியை தாக்கினார்கள். தலையணையால் கிருஷ்ணமூர்த்தியின் முகத்தில் வைத்து அமுக்கினார்கள். மூச்சு விட முடியாமல் துடிதுடித்த அவர் சிறிது நேரத்தில் உயிர் இழந்தார்.

கிருஷ்ண மூர்த்தியின் உடலை என்ன செய்வது என்று மேரியும் பாட்சாவும் யோசித்தனர். மூட்டையாக கட்டிவெளியே கொண்டு போனால் அக்கம்பக்கத்தினர் சந்தேகப்படுவார்களே என்று பயந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை முழுவதும் கிருஷ்ணமூர்த்தியின் உடல் வீட்டுக்குள்ளேயே இருந்தது. அன்று மாலை மேரியின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கியது. பக்கத்து வீட்டுக்காரர்கள் இது குறித்து மேரியிடம் கேட்டனர். அதற்கு அவர் வீட்டில் எலி செத்துக்கிடக்கிறது, பூனை செத்துக்கிடக்கிறது என்று பொய் சொல்லி சமாளித்தார்.
திங்கட்கிழமை வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார். அப்போது துர்நாற்றம் அதிகமாகவே ஊதுபத்தி, சாம்பிராணி கொளுத்தி வைத்தார்.
உடலை துண்டு துண்டாக வெட்டினர்
இனிமேலும் துர்நாற்றத்தை மறைக்கமுடியாது என்பது தெரிய வந்ததும் அடுத்து என்ன செய்யலாம் என்று மேரியும் பாட்சாவும் யோசித்தனர்.
உலகத்தில் எந்த தாயும் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத ஒரு கொடூர எண்ணம் மேரியின் மனதில் உருவானது. மகனின் உடலை துண்டு துண்டாக வெட்டி யாருக்கும் தெரியாமல் பல இடங்களில் வீசி எறிந்து விடலாம் முடிவு செய்தார்.
திங்கட்கிழமை இரவு மேரியும் பாட்சாவும் சேர்ந்து கிருஷ்ணமூர்த்தியின் உடலை அரிவாளால் துண்டு துண்டாக வெட்டினார்கள். முதலில் கழுத்தை தனியாக அறுத்தனர். அதன்பிறகு 2 கைகளையும் வெட்டி எடுத்தார்கள். கால்களையும் தனித்தனியாக துண்டித்தனர்.
காய்கறிகளை தனித்தனி பிளாஸ்டிக் பைகளில் கட்டி வைப்பது போல 2 கைகளையும் தலையையும் ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு பார்சலாக கட்டினார்கள். கால்களை ஒரு சாக்கு பையில் போட்டு கட்டினார்கள்.
உடலை என்ன செய்வது என்று யோசித்த அவர்களுக்கு வீட்டில் இருந்த பிரிட்ஜை பார்த்ததும் புது யோசனை உதித்தது. உடலை எடுத்து பிரிட்ஜில் வைத்து மூடினார்கள்.
அதன் பிறகு மேரியும் பாட்சாவும் 2 பார்சல்களையும் எடுத்துக்கொண்டு, ஒரு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். அவர்களுடன் பாட்சாவின் நண்பர் ஜோசப் ஆண்டனி என்பவரும் சேர்ந்து கொண்டார். பார்சல்களை வீசுவதற்கு சரியான இடத்தை தேடி அலைந்தனர்.
மதுரை எல்லீஸ் நகர் ஆக்கி மைதானம் அருகே உள்ள கிருதுமால் நதி ஓடையில் தலை, கைகள் இருந்த பார்சலை வீசினார்கள். அங்கிருந்து பொன்மேனி பஸ் டெப்போவுக்கு எதிரே உள்ள கால்வாய்க்கு சென்றனர். கால்கள் இருந்த பார்சலை அங்கு வீசி விட்டு வீட்டுக்கு திரும்பினார்கள்.
செவ்வாய்க்கிழமை மேரியின் வீட்டில் இருந்து தொடர்ந்து துர்நாற்றம் வீசிக்கொண்டே இருந்தது. உடனே மேரி செண்ட் பாட்டில் வாங்கி வந்து வீடு முழுவதும் அடித்தார். அப்போதும் நாற்றம் போக வில்லை.
செவ்வாய்க்கிழமை இரவு கிருஷ்ணமூர்த்தியின் உடலை வெளியே வீச மேரியும் பாட்சாவும் முடிவு செய்தனர். உடலை பார்சலாக கட்டி எடுத்து சென்றால் குட்டு அம்பலமாகி விடும் என்பதால் பிரிட்ஜோடு தூக்கி செல்ல திட்டமிட்டனர். பாட்சா ஒரு டிரைசைக்கிளை எடுத்து வந்தார். பிரிட்ஜை ரிப்பேருக்கு எடுத்து செல்வதாக கூறிவிட்டு அதை டிரைசைக்கிளில் ஏற்றினார்கள். பிரிட்ஜில் கிருஷ்ணமூர்த்தியின் உடல் பாகம் இருந்ததால் அதில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதை பக்கத்து வீட்டுக்காரர்கள் கவனித்தனர். ஆனாலும் அவர்களுக்கு உண்மை என்ன என்பது புரிய வில்லை.
கால்களை வீசிய அதே கால்வாய் பகுதிக்கு பிரிட்ஜை எடுத்து சென்ற இருவரும் உடலை வெளியே எடுத்து கால்வாய் ஒட்டி உள்ள செப்டிக் டாங்கில் போட்டனர். அதன்பிறகு மேரி தனது வீட்டுக்கு திரும்பி விட்டார். பாட்சா பிரிட்ஜை டிரைசைக்கிளில் எடுத்துக்கொண்டு தனது வீட்டுக்கு கொண்டு சென்றார். அங்கு பிரிட்ஜை இறக்கி அதை தண்ணீர் விட்டு கழுவி எதிர் வீட்டு முன் வைத்து விட்டு வீட்டுக்கு சென்றார்.
கிருஷ்ணமூர்த்தியின் உடலை அப்புறப்படுத்திய பிறகும் மேரியின் வீட்டில் இருந்து வந்த துர்நாற்றம் போகவில்லை. இதனால் சந்தேகம் வலுத்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து மேரியிடம் விசாரித்தனர். வீட்டுக்குள் சென்று பார்த்தனர். முதலில் எதுவும் சொல்ல மறுத்த மேரி பின்னர் நடந்த விவரங்களை தெரிவித்தார். அவர் கூறிய தகவலால் உறைந்து போன போலீசார் மின்னல் வேகத்தில் நடவடிக்கையில் இறங்கினார்கள். முதலில் மேரியை கைது செய்தனர். அதன்பிறகு பாட்சாவை மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்த பிரிட்ஜ் கைப்பற்றப்பட்டது. அவருடைய நண்பர் ஜோசப் ஆண்டனியும் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணமூர்த்தியின் உடல் பாகங்கள் எங்கெங்கு வீசப்பட்டன என்பதை விசாரணையில் தெரிந்து கொண்டு அந்த இடங்களுக்கு சென்று உடல் பாகங்களை கைப்பற்றினார்கள்.
கிருஷ்ணமூர்த்தியின் உடல் இருந்த பிரிட்ஜை டிரைசைக்கிளில் ஏற்றிச்செல்வதற்கு ஒரு வாலிபர் உதவி செய்து இருப்பதாக தெரிய வந்தது அவரை தேடி வருகிறார்கள். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
10 மாதம் சுமந்து பெற்ற மகனை கள்ளக்காதலுக்காக கொலை செய்ததோடு அவன் உடலை துண்டு துண்டாக வெட்டுவதற்கு ஒரு தாய்க்கு எப்படி மனது வந்தது என்று மதுரை நகர மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.
மேரி வாக்குமூலம்
நடந்த சம்பவம் குறித்து மேரி அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
"என் கணவர் துரைராஜ் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். எனக்கு 2 மகள்கள், ஒரு மகன். அவர்கள் அனைவருக்கும் திருமணம் செய்து கொடுத்து விட்டு, மதுரையில் தனியாக வசித்து வந்தேன். இந்த நிலையில் என் மகன் கிருஷ்ணமூர்த்தி கஞ்சா உள்பட போதைப் பழக்கத்திற்கு அடிமை ஆனான்.
இதனால் அவர்கள் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த மனவருத்தத்தில் எனது மருமகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாள். அதன்பிறகு என் மகன் என்னுடன் தான் வசித்து வந்தான். அவனுக்கு கஞ்சா அடிக்கும் பழக்கம் உள்ளதால் தினமும் என்னிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வான். நானும் அவன் கேட்கும் பணத்தை கொடுத்துவந்தேன்.
இந்த நிலையில் எனக்கும், எல்லீஸ் நகர் பகுதியில் கோழிக் கடை மற்றும் எலக்ரானிக்ஸ் கடை வைத்திருக்கும் பாட்சா இடையே இருந்த தொடர்பு, எனது மகனுக்கு தெரியவந்தது. இதற்கு அவன் கடும் எதிர்ப்பு தெரிவித்து தினமும் என்னிடம் சண்டை போட்டான்.
மேலும் அவன் என்னிடம் தினமும் ரூ.300 பணம் கேட்டு வற்புறுத்தி வந்தான். பணம் தராவிட்டால் எனக்கும், பாட்சாவுக்கும் இடையே உள்ள கள்ளக்காதலை அம்பலப்படுத்தி விடுவதாக கூறி மிரட்டினான். தொடர்ந்து அவன் எனக்கும், பாட்சாவுக்கு கொடுத்த வந்த தொல்லையால், நாங்கள் இருவரும் சேர்ந்து அவனை கொலை செய்ய திட்டமிட்டோம்.
அதன்படி கடந்த 25-ந் தேதி இரவு வழக்கம் போல் கிருஷ்ணமூர்த்தி கஞ்சா அடித்து விட்டு போதையில் வீட்டிற்கு சாப்பிட வந்தான். இது தான் தக்க சமயம் என்று நினைத்து பாட்சாவிற்கு செல்போனில் தகவல் கொடுத்தேன்.
துண்டு துண்டாக வெட்டினோம்
அவர் வந்த பிறகு இருவரும் சேர்ந்து தலையணையால் அமுக்கி கிருஷ்ணமூர்த்தியை கொன்றோம். உடலை துண்டு துண்டாக வீசி, பார்சலாக வெளியே கொண்டு சென்று வீசினோம். உடல் பகுதியை மட்டும் பிரிட்ஜில் வைத்து இருந்து பிரிட்ஜோடு வெளியே கொண்டு சென்று உடலை வீசி எறிந்தோம்.
ஆனால் என் வீட்டில் அடித்த துர்நாற்றம், பிரிட்ஜை வெளியே கொண்டு சென்ற போது ஏற்பட்ட துர்நாற்றம் காரணமாக அந்தப் பகுதி மக்கள் சந்தேகப்பட்டு, போலீசாருக்கு தகவல் கொடுத்து விட்டனர். உடனே போலீசார் என் வீட்டிற்கு வந்து விசாரணை செய்து என்னையும், பாட்சாவையும் கைது செய்தனர்.''
இவ்வாறு மேரி வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார்.
==============
"குடும்ப வன்முறைச் சட்டம்" மற்றும் 498A பிரிவு கொள்வது என்ன?
ஆண்கள் மட்டும்தான் வன்முறையைச் செய்வார்கள். ஒரு பெண் தன் கண்வனமீது எந்தப் புகார் கொடுத்தாலும் அதை அப்படியே ஏற்றுக் கொண்டு கணவனையும் அவனது பெற்றோரையும் உடன்பிறப்புக்களையும் தண்டிக்கவேண்டும்!
தூக்குத் தூக்கி என்னும் படத்தில் வரும் வசனம் "கொலையும் செய்வாள் பத்தினி". இன்னும் கொஞ்சம் நாட்களில் இதை "கொலை மட்டும் செய்வாள் பத்தினி" என்று மாற்றவேண்டிய கட்டாயம் வருமோ என்று பயமாக இருக்கிறது!

இரண்டு வயது குழந்தையை கள்ளக்காதலனுடன் சேர்ந்து அடித்துக் கொன்ற தாய்

"குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்" (The Protection Of Women From Domestic Violence Act, 2005, or "DV Act") வரையறைத்திருப்பது இவ்வாறு:

"குடும்ப வன்முறை" என்பது கணவன் அல்லது அவனது உறவினர்களால் அவனது மனைவியின்மேல் செய்யப்படுவது மட்டுமே. இந்தச் சட்டப்படி அந்த மனைவி தன் மீது உடலாலோ, உள்ளத்தாலோ, உளவியல் ரீதியாகவோ, செக்ஸ் தொடர்பாகவோ, பொருளாதார ரீதியாகவோ வன்முறை செய்யப்பட்டதாகக் கருதினால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். எவ்வாறு? முதலில் அவளுடைய கணவன் மற்றும் கணவனுடைய பெற்றோர் உறவினர் தங்கள் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள். யார் வீட்டை விட்டு? அவர்களுக்குச் சொந்தமான வீட்டைவிட்டு!அவர்கள் செய்த குற்றம்? இத்தகைய பெண்ணை மனைவியாக (மருமகளாக) அடைந்ததுதான்!

இந்த முழுமுட்டாள் தனமான சட்டத்தைப் பற்றி பிறிதொரு இடுகையில் விவரமாக எழுதுகிறேன். தற்பொது இந்த சுட்டிகளில் இதைப் பற்றி எழுதியுள்ளதைப் படியுங்கள்:

http://mynation.net/study-report-dvact.htm

http://www.498a.org/domesticViolence.htm

சரி. இப்போது "வன்முறையே செய்யத் தெரியாத" ஒரு மெல்லியலாளின் செயல்பாடு பற்றிய இன்றைய செய்தியை வாசியுங்கள்:-
------------------

இரண்டு வயது குழந்தையை கள்ளக்காதலனுடன் சேர்ந்து அடித்துக் கொன்ற பெண் கைது

ஜூலை 29,2009, செய்தி: தினமலர்

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே வாழ்க்கைக்கு இடையூறாக இருப்பதாக கூறி தனது இரண்டு வயது பெண் குழந்தையை அடித்துக்கொன்ற பெண், அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர், அல்லம்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முருகன்(40). அவர் மனைவி மாரீஸ்வரி(34), இரண்டு வயது பெண் குழந்தை புனிதாவுடன் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தில் வசித்து வந்தார். மாரீஸ்வரிக்கும், அதே ஊர் கட்டட தொழிலாளி காந்தாரிமுத்துவுக்கும்(43) கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. அதனால் கடந்த மூன்று மாதத்திற்கு முன் மாரீஸ்வரியை பிரிந்து முருகன், அல்லம்பட்டி சென்றுவிட்டார்.

காந்தாரிமுத்துவுடன், மாரீஸ்வரி குழந்தையை வைத்துக் கொண்டு ஒரே வீட்டில் வசித்தார்.

அடித்துக் கொலை:

தங்களது (கள்ளக்காதல்) வாழ்க்கைக்கு குழந்தை புனிதா, இடையூறாக இருப்பதாக கருதிய இருவரும் கடந்த 26ம் தேதி மாலை வீட்டிலிருந்த புனிதாவை கையால் அடித்தனர். மயங்கி விழுந்த குழந்தை புனிதா, ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அது எப்படி இறந்தது என தெரியாதென இருவரும் நாடகமாடினர்.

பிரேத பரிசோதனை முடிவில் குழந்தை அடித்துக் கொல்லப்பட்டது தெரியவந்தது. போலீசார் முறைப்படி விசாரித்ததில், குழந்தை புனிதாவை அடித்துக் கொன்றதை தாய் மாரீஸ்வரி, காந்தாரிமுத்து ஒப்புக்கொண்டனர். அதையடுத்து நேற்று கைது செய்யப்பட்ட இருவரும் விளாத்திகுளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.
-----------------------------

வாழ்க தாய்க்குலம்! வெல்க கள்ளக் காதல்!!

(இதற்கும் 498A-க்கும் என்ன சம்பந்தம்? - Dr. டோண்டு)

முறை தவறிய காதலை மறைக்க மாணவி நடத்திய நாடகம்

ஜூலை 28,2009. செய்தி: தினமலர்

கோவை: பெரியப்பா மகனுடனான தவறான உறவை மறைக்க, பிளஸ் 2 மாணவி கடத்தல் நாடகமாடியது அம்பலமானது.

சேலம் மாவட்டம், மொரப்பூரைச் சேர்ந்த ஜவுளி வியாபாரியின் 17 வயது மகள், கோவை, காந்திபுரத்தில் உறவினர் வீட்டில் தங்கி, சாய் பாபா காலனியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த 24ம் தேதி பள்ளிக்கு சென்ற இவர், தலைமை ஆசிரியரிடம் திடுக் புகார் தெரிவித்தார். "நான் பள்ளி அருகே நடந்து வந்த போது, காரில் வந்த நான்கு பேர் கடத்திச் சென்று மானபங்கம் செய்தனர். பின்னர், கையில் கடிதத்தை திணித்துவிட்டு, மீண்டும் பள்ளி அருகே தள்ளிவிட்டு தப்பிவிட்டனர்' என தெரிவித்திருந்தார்.

அக்கடிதத்தில், ஆபாச வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் நடந்ததாகக் கூறப்பட்ட கடத்தல் சம்பவம், பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் போலீசார் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

விசாரணையில் திருப்பம்:

சம்பவம் குறித்து அந்த மாணவி முன்னுக்குப் பின் முரணான தகவலை தெரிவித்ததால் போலீசார் குழப்பமடைந்தனர். உண்மை கண்டறிய மாநகர போலீஸ் துணைக் கமிஷனர் காமினி, இன்ஸ்பெக்டர் நேரு தலைமையில் தனி குழு அமைக்கப்பட்டது.
சம்பவம் நடப்பதற்கு முன் மாணவியுடன் மொபைல் போனில் பேசியதாகக் கூறப்பட்ட, மேட்டூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.அவருக்கு தொடர்பில்லை என தெரிந்ததும் விடுவிக்கப்பட்டார்.

மாணவி மீது சந்தேகமடைந்த போலீசார், அவரது பள்ளி நோட்டு புத்தகங்களை கைப்பற்றி பார்வையிட்டனர். அதில், பல்வேறு விதமான மிரட்டல் கடிதங்கள், மாணவியின் கைப்பட எழுதப்பட்டிருந்தன. இது குறித்து விசாரித்த போது, கடத்தல் நாடகமாடியது அம்பலமானது.

போலீசாரிடம் மாணவி அளித்த வாக்குமூலம்:

எனது பெற்றோர், குடும்பப் பிரச்னை காரணமாக பிரிந்துவிட்டனர். படிக்க வசதியில்லாமல் அவதிப்பட்ட என்னை, காந்திபுரத்தில் வசிக்கும் பெரியப்பா அழைத்து வந்து படிக்க வைக்கிறார். அவ்வீட்டில் தங்கியிருந்த போது அவரது மகன் அருண்குமாருடன் பழக்கம் ஏற்பட்டது; இருவரும் எல்லை மீறி நடந்து கொண்டோம். படிப்பில் ஆர்வம் குறைந்த நிலையில் தேர்வும் வந்தது. தேர்வில் பங்கேற்காமல் தவிர்க்க, நானும் அருண்குமாரும் கடத்தல் நாடகமாடினோம்.

போலீசாரையும், உறவினர்களையும் நம்ப வைக்க, கடத்தல்காரர்கள் எழுதியது போன்று போலி கடிதங்களையும் தயார் செய்து, அதில் ஒரு கடிதத்தை எடுத்துச் சென்றேன். நான் கடத்தப்பட்டு மானபங்கம் செய்யப்பட்டதாக, தலைமை ஆசிரியரிடம் கூறி அழுதேன். எனினும், போலீஸ் விசாரணையின் போது, பதிலளித்து தப்ப முடியாமல் சிக்கிக்கொண்டேன்.

இவ்வாறு மாணவி தெரிவித்தார்.

இதையடுத்து, அருண்குமார்(20) மீது இந்திய தண்டனைச் சட்டம் 376 (கற்பழிப்பு) வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இவர், டிப்ளமோ முடித்து, தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.

வழக்கின் விசாரணை அதிகாரி, இன்ஸ்பெக்டர் நேரு கூறியதாவது: பிளஸ் 2 மாணவி, தவறான உறவை மறைக்கவும், தேர்வில் பங்கேற்காமல் தவிர்க்கவும் கடத்தல் நாடகமாடி எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். சந்தேக நபர்களை ஒவ்வொருவராக அழைத்து காண்பித்த போதிலும், "இவன், அவனல்ல' என்றே பதிலளித்தார். எங்களுக்கு சந்தேகம் வலுக்கவே, நோட்டு புத்தகங்களை பார்வையிட்டோம்; நாடகம் அம்பலமானது. இவ்வாறு நேரு தெரிவித்தார்.

========================

உங்கள் சிந்தனைக்கு:-

இந்த அநியாயத்தைப் பாருங்கள். நடத்தை கெட்டு அண்ணனுடன் ஜல்சா செய்தவள் பெண். கடத்தல் பொய் நாடகமாடியது பெண். ஆனால் கைது செய்யப்பட்டது மட்டும் ஆண்! வேலிமேல் வேட்டி விழுந்தலும் வேலி வேட்டி மேல் விழுந்தாலும் கிழிந்து கந்தலாவது வேட்டி மட்டும்தான். இதுதான் இந்த சமூகத்தின் ஆணெதிர்ப்புச் சட்டங்களின் நடைமுறை!

ஆமாம், "கற்பழிப்பு" என்றால் என்ன? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!!

தீவிரமாகும் விவாகரத்து நோய்

ஜூலை 27,2009: செய்தி - தினமலர்

பாரம்பரிய பெருமையும், கலாசார பின்னணியும் கொண்ட தமிழகத்தில் ஆண்டுதோறும், 4,000த்துக்கும் மேற்பட்ட விவாகரத்து வழக்குகள் தாக்கலாகின்றன. இதில், ஆண்டுக்கு 20 சதவீத, "வளர்ச்சி' இருப்பது, கூடுதல் வேதனை. .

குடும்பத்தில், கணவன் - மனைவிக்கிடையே ஏற்படும் பிரச்னைகளை, உறவினர்களால் தீர்க்க முடியாதபட்சத்தில், போலீஸ் துறையை அணுகுகின்றனர். அங்கு சமரச முயற்சியில் ஈடுபடும் போலீசாரின் முயற்சிகளும் தோல்வியடைந்தால், பிரச்னை கோர்ட்டுக்குச் செல்கிறது.இப்படி குடும்பம், நண்பர்கள், சமூகம் என எல்லாராலும் தீர்க்க முடியாமல், குடும்ப நல கோர்ட்டில் வழக்கு பதிவு செய்ய வரும் தம்பதியர்களுக்கு, கோர்ட்டில் கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது. அந்த முயற்சியும் தோல்வியடையும்போது, வழக்கைச் சந்திக்கின்றனர்.சில வழக்குகளில், வக்கீல்கள் சொன்னபடி தம்பதியர்கள் சொல்வதாலும், அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகளாலும், தங்களது குடும்ப விவகாரங்கள் அனைத்தையும் வெளியே சொல்ல வேண்டிய நிலைக்கு தம்பதிகள் ஆளாகின்றனர்; கூடவே வழக்கையும் சந்திக்கின்றனர்.சென்னை குடும்ப நல கோர்ட்டில், 2006ம் ஆண்டில் மட்டும் 3,374 வழக்குகள், 2007ம் ஆண்டின் முடிவில் 3,874 வழக்குகள், 2008ம் ஆண்டில் 4,125 வழக்குகள் என விவாகரத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் அதிகரித்து கொண்டே போகின்றன. ஆண்டிற்கு 20 சதவீதம் அதிகரிக்கிறது.சென்னையில் மட்டும் திருமண முறிவு 5 சதவீதமாக இருந்த நிலை மாறி, சில ஆண்டுகளில் 12 முதல் 15 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது.

இந்த வழக்குகளில் நடிகர் பிரசாந்த் முதல் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நடிகர் மற்றும் நடிகைகளும் அடங்குவர். இப்படி ஏழை, பணக்காரன், கூட்டுக் குடும்பம், தனிக்குடித்தனம் என்று எல்லாரையும் எளிதில் தாக்கும் நோயாகி விட்டது, விவாகரத்து.

இது குறித்து, சீனியர் வக்கீல் ஒருவர் கூறியதாவது: முன்பெல்லாம் பெண்கள் அறியாமையால், கண்ணைக் கட்டிக்கொண்டு வாழ்ந்தனர். அப்போது கூட தம்பதியருக்கிடையே விவாகரத்து பெரிதாக காணவில்லை. தற்போது பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்துள்ள இந்த காலகட்டத்தில் தான், விவாகரத்துகளும் பெருகியுள்ளன. பொருளாதார பாதிப்பும் சில விவாகரத்துகளுக்கு காரணமாய் அமைந்துவிடுகிறது.கூட்டுக் குடும்பங்கள் குறைந்து, தனிக்குடித்தனம் அதிகமாகி இருப்பதும் ஒரு காரணம் என்று சொல்கிற போதே, சில பெற்றோர்களாலும் விவாகரத்துகள் வருகின்றன என்பதையும், ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

குடும்பத்தில் கணவன் - மனைவிக்கிடையே, "தான்' என்கிற எண்ணத்தைக் (ஈகோ) குறைத்தாலே பல விவாகரத்து வழக்குகளை தவிர்த்துவிடலாம். இதேபோல, ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்கும் தன்மை, குழந்தைகளின் எதிர்காலம், திருமணம் என்ற பந்தத்திற்கு மரியாதை கொடுத்தல் போன்றவற்றை இருபாலரும் கடைபிடித்தால், விவாகரத்து பிரச்னையை குறைக்கலாம். முக்கியமாக கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.

மொபைல் போன் பேச்சு: விவாகரத்து முடிச்சு!:

சமரச முயற்சிகள் தோல்வியடைவது பற்றியும், இந்திய திருமணச் சட்டங்கள் கூறுவது குறித்தும் ஸ்ரீரக்ஷா ஆலோசனை மற்றும் மத்தியஸ்த மையத்தின் கவுரவத் தலைவரும் வக்கீலுமான ஆதிலட்சுமி லோகமூர்த்தி கூறியதாவது:

குடும்பத்தில் எந்தப் பிரச்னையாக இருந்தாலும், அதை சரிசெய்ய முயற்சிப்பதே எங்கள் நிறுவனத்தின் பணி. குறிப்பாக, விவாகரத்து சம்பந்தப் பட்ட வழக்குகளில் கணவன் - மனைவி இடையே சமரச முயற்சியாக கவுன்சிலிங் கொடுக்கிறோம். அதன் பிறகும் எங்களுக்கு விவாகரத்து தான் வேண்டும் என்கிறபோது, அவர்கள் வழக்கைச் சந்திக்கின்றனர்.இந்திய திருமணச் சட்டங்களில் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் என ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனியே சட்டங்கள் இயற்றியுள்ளனர். கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு, சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன.

பிரிந்து வாழும் இருவரில், ஒருவர் சேர்ந்து வாழ விருப்பப்பட்டாலும், திருமண முறிவு என்றில்லாமல், சமுதாயத்தில் பிரிந்து மட்டும் வாழ விரும்புகிறோம் என்று விருப்பம் தெரிவித்தாலும், விவாகரத்து தேவை என்பவர்களுக்கும் சட்டங்களில் தனியே பிரிவுகள் உள்ளன.இன்றைய பரபரப்பான கால சூழ்நிலையில், குடும்பங்களில் கணவனோ, மனைவியோ தொடர்ந்து, "டிவி' பார்த்துக்கொண்டும், பல மணி நேரம் மொபைல் போனில் பேசிக்கொண்டும் இருந்துவிட்டு, குடும்பத்தைக் கவனிக்க மறந்துவிடுகின்றனர். இங்கே ஆரம்பிக்கும் மனதளவிலான பிரச்னை, பின் விஸ்வரூபம் எடுத்து விவாகரத்தில் முடிகிறது.இவ்வாறு ஆதிலட்சுமி கூறினார்.
=====================================

என் கருத்து:-

இவர்கள் சொல்லாமல் விட்ட முக்கிய காரணி ஒன்று உள்ளது. அது என்ன என்பது உங்களுக்கு முழுமையகத் தெரிந்திருக்கும். அதை சுட்டிக் காண்பிக்க இன்னொரு செய்தியை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்:-

----------------

பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லாமல் புத்தகப் பைகளுடன் கன்னியாகுமரியில் சுற்றும் காதல் ஜோடிகள் - போலீசார் எச்சரித்து அனுப்புகின்றனர்

கன்னியாகுமரி, ஜுலை.24- 2009. செய்தி: தினத்தந்தி

கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் மத்தியில் தற்போது காதல்ஜோடிகளின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. அதிலும் பள்ளி-கல்லூரி காதல் ஜோடிகள்தான் அதிகம் என்பது அதிர்ச்சிதரும் தகவலாக உள்ளது.

நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் புத்தக பைகளையும் சுமந்துகொண்டு கன்னியாகுமரியில் காதல்ஜோடியாக வலம் வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் என்றால், மற்ற நாட்களில் மாணவ-மாணவிகள்தான் ஜோடியாக வலம் வருகின்றனர். அவர்கள் வீவ் டவர், காந்தி மண்டபம், சன்செட்பாய்ண்ட், ஆராட்டு மண்டபம் உள்ளிட்ட ஆள்நடமாட்டம் குறைந்த பகுதிகளில் ஒதுக்குப்புறமாக சென்று அமர்ந்துகொள்கின்றனர்.

நேரம் செல்லச் செல்ல காதல்ஜோடியினர் எல்லை மீறும் அவலமும் அரங்கேறி வருகிறது. எனவே, இதை பார்த்து ரசிப்பதற்காக சுற்றுப்புற பகுதியை சேர்ந்த பலரும் கன்னியாகுமரிக்கு வரும் அவலநிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, காதல்ஜோடிகள் அத்துமீறுவதை தடுக்க கன்னியாகுமரி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தினமும் பள்ளி-கல்லூரி காதல்ஜோடியினரை பிடித்து எச்சரித்து அனுப்பி வருகின்றனர். இருப்பினும் காதல் ஜோடிகளின் வருகை குறைந்தபாடில்லை.

கள்ளக் காதலனுடன் தனிக் குடுத்தனம்!

கள்ளத்தொடர்பால் கணவனுடன் சேர்ந்து வாழ மறுப்பு. நண்பனுக்கு மனைவியை விட்டுக்கொடுத்த கணவன்!

ஈரோடு, ஜுலை 24- 2009

காதலித்து திருமணம் செய்த மனைவியை, அவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த நண்பனுக்கு கணவர் விட்டுக்கொடுத்தார். அவர்களுடன் தங்கள் இரு குழந்தைகளையும் அவர் அனுப்பி வைத்தார்.

ஈரோடு மாவட்டம், பெரியசேமூர் அருகே உள்ள கனிராவுத்தான் குளத்தைச் சேர்ந்தவர், கார்த்திக் (வயது 32). தறிப்பட்டறை தொழிலாளி. வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையைச் சேர்ந்தவர், பார்வதிபிரியா (27).

அவர்கள் இருவரும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ரேவதி (8), ரஞ்சிதாதேவி (3) என்று 2 மகள்கள் உள்ளனர்.

கார்த்திக்கின் நண்பன் மணிவாசகம் (32). இவர் அடிக்கடி கார்த்திக்கின் வீட்டுக்கு வந்து செல்வார். அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட பழக்கம் கள்ளத்தொடர்பாக மாறியது. கார்த்திக் இல்லாத சமயத்தில் மணிவாசகம் அடிக்கடி வீட்டிற்கு வரத்தொடங்கினார்.

இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்தனர். இந்த தொடர்பு 2 ஆண்டுகளாக நீடித்தது. இதை அக்கம்பக்கத்தினர் கார்த்திக்கிடம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மனைவியை கார்த்திக் கண்டித்தார். அதை மீறி அவர்கள் கள்ளத்தொடர்பு நீடித்ததால், கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில், பார்வதிபிரியா மணிவாசகத்துடன் தனிமையில் இருந்ததை ஒரு நாள் கார்த்திக் பார்த்துவிட்டார். அதனால் மனைவியை கடுமையாக கண்டித்தார். ஆனால், பார்வதிபிரியாவுக்கு கள்ளக்காதலனை மறக்க முடியவில்லை. அதனால் பார்வதிபிரியா காதலனுடன் தனிக்குடித்தனம் போக முடிவு செய்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய அவர் மணிவாசகத்துடன் வசித்து வந்தார். அதுபற்றி ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கார்த்திக் புகார் செய்தார்

இந்த புகாரின் பேரில் போலீசார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. கார்த்திக் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவருடன் சேர்ந்து வாழ பார்வதிபிரியா மறுத்துவிட்டார். மணிவாசகத்துடன் தான் வாழ்வேன் என்று அவர் திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இதனால், மனைவியை நண்பனுக்கு விட்டுக்கொடுக்க கார்த்திக் முடிவு செய்தார். அதன்படி, கணவன்-மனைவி இருவரும் மணமுறிவு ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திட்டு பிரிந்து சென்றனர். குழந்தைகள் இருவரையும் பார்வதிபிரியாவுடன் அனுப்பி வைத்துவிட்டு வருத்தத்துடன் கார்த்திக் வீடு திரும்பினார்.

============

அப்பாடி, விட்டது சனி, கார்த்திக்குக்கு! இல்லாவிடில் அந்த பெண் குலத்திலகம் அவன்மேல் வரதட்சணை வழக்கு (Sec 498A of IPC) போட்டிருப்பாள். உடனே அவன், அவனது பெற்றோர், உறவினர் என்று ஒரு பட்டாளமே கைது ஆகியிருக்கும்!

இனிமேல் இதுபோன்ற நிகழ்வுகள் சர்வ சாதாரணமாக நடக்கும். எனெனில் கிளர்ந்து எழும் செக்ஸ் உணர்வுகளை திருப்தி செய்து கொள்வதுதான் வாழ்வின் ஒரே மையக் குறிக்கோள் என்றும், குடும்ப வாழ்வு, குழந்தைகள் நலம், பெற்றோர் நலவாழ்வு, உன்னதக் கோட்பாடுகள் கொண்ட வாழ்வு முறை என்பதெல்லாம் வெறும் குப்பை என்ற தீர்மானமான கருத்துக்கு நம் பெண்குலத்தை இழுத்துச் சென்று விட்டனர். மேலும் அத்தகைய மனப்பான்மையையும் அதுசார்ந்த செயல்பாடுகளையும் நியாயப்படுத்தும் வகையில் சட்டங்களையும் இயற்றிவிட்டனர்.

ஒரு மனைவி சோரம் போனால் அவளைத் தண்டிக்க சட்டமேயில்லை. ஆனால் ஒரு கணவன் தவறாகப் போனான் என்று ஒரு மனைவி சொன்னால் போதும் - எத்தகைய நிரூபணமும் தேவையில்லை. அவள் சொல் ஒன்றே போதும் - அந்த கணவன் குற்றவாளியாக தீர்மானிக்கப்படுவான். இதுதான் இந்திய சட்டங்களின் கண்ணோட்டம்.

மேலும் ஒரு ஆண் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன் என்று வாக்குக் கொடுத்து ஏமாற்றி விட்டான் என்று ஒரு பெண் சொன்னால் போதும். உடனே அது உண்மை என்று ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த ஆணைக் குற்றவாளியாக பதிவு செய்து கைது செய்துவிடுவார்கள். வேறு எந்த சாட்சியமோ, நிரூபணமோ தேவையில்லை. அந்த ஆணின் கூற்று எதுவுமே ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. ஏனெனில் இந்தியச் சட்டங்களின் பார்வையில் ஒரு ஆண்மகன் பிறந்தவுடனேயே குற்றவாளியாகி விடுகிறான்! அத்துடன் அவன் பிறந்த கணத்திலிருந்து அவனைப் பெற்றவர்களும் அவனது உடன் பிறப்புகளும் குற்றவாளியாகி விடுகின்றனர். எந்த நேரத்திலும் அவர்கள் கைது செய்யப்படலாம். எந்தக் குற்றமும் செய்யவேண்டியதில்லை. யாரோ ஒரு பெண் அவர்கள் மீது குற்றம் சுமத்தினால் போதுமானது.

நீங்கள் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள், இந்திய ஆண்கள் அனைவரும், "திருமணம்" என்று சொன்னாலேயே தெனலிராமன் வளர்த்த பூனையைப் போல் காத தூரம் ஓடும் நாள் வந்துவிடும்!

பரந்த மனப்பான்மையுடன் மாப்பிள்ளை தேவை!

இதை வாசிப்பவர்களில் யாரேனும் அதுபோல் "பரந்த மனப்பான்மை" கொண்டவர் மட்டுமின்றி, "மனைவி என்பவருக்கு எந்தக் கடமையும் கிடையாது; அவரிடமிருந்து எந்தவித "எதிர்பார்ப்பும்" இல்லை" என்ற கொள்கையும் உடையவர்களாக இருந்தால் விண்ணப்பிக்கலாமே!


ஆனால் இதுவரை நிகழ்ந்துள்ள மண முறிவுகளைக் காணும் போது, சினிமா நட்சத்திரங்களின் திருமணங்கள் பொதுவாக விரைவில் "அழுகும் பொருட்கள்" (They have a very low shelf life!) வகையைச் சார்ந்தவை ஆயிற்றே!

சரி. இப்போது செய்தியைப் பார்ப்போம்!

"'பரந்த மனப்பான்மையுடன்' எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மணமகன் வேண்டும்" - நடிகை சங்கவி பேட்டி


'அமராவதி' படத்தில், அஜீத் ஜோடியாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர், சங்கவி. `பொற்காலம்,' `ரசிகன்,' `கோயம்புத்தூர் மாப்பிள்ளை' உள்பட ஏராளமான தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.

தமிழ் தவிர தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து சங்கவி 100 படங்களை தாண்டி விட்டார். இவருக்கு, மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.

இதுபற்றி நிருபரிடம் சங்கவி கூறியதாவது:-

"சினிமாவில் எனக்கு நிறைய தோழிகள் இருக்கிறார்கள். மீனா, ஸ்ரீதேவி, மகேஸ்வரி, விந்தியா, ரம்பா, சினேகா, சங்கீதா, சந்தியா ஆகிய அனைவரும் என்னிடம் நட்புடன் பழகி வருகிறார்கள். இவர்களில் ரம்பா, சினேகா, சந்தியா ஆகிய மூன்று பேர்களை தவிர, மற்ற அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
அதனால் எங்க வீட்டில், எனக்கும் மாப்பிள்ளை பார்க்க தொடங்கி இருக்கிறார்கள்.

எனக்கு வரப்போகிறவர், எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவராக இருக்க வேண்டும். நல்லவராக, என்னை நன்றாக பார்த்துக்கொள்பவராக இருக்க வேண்டும். "நான் ஒரு நடிகை'' என்று குறுகிய கண்ணோட்டத்துடன் பார்க்காமல், பரந்த மனப்பான்மை உடையவராக இருந்தால் நல்லது.
அதோடு நிறைய படித்தவராக இருந்தால் ரொம்ப நல்லது. சினிமா உலகை சேர்ந்தவராக இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் என்னை சார்ந்து இருப்பவராக இருக்கக்கூடாது.

இவ்வாறு சங்கவி கூறினார்.
செய்தி: தட்ஸ்தமிழ்.

பெற்றுவிட்டோமே பெண் விடுதலை!

அனைத்து பென்ணியவாதிகளும், "பெண்களே, கற்பு, பண்பாடு, பாரம்பரியம், நன்னடத்தை என்ற சிறைகளில் உங்களை அடைத்து வைத்திருக்கிறார்கள். அவைகளை உடைத்துக் கொண்டு புறப்படுங்கள் புவியாள!" என்று ஓயாமல் முழக்கமிடுவதின் பலனாகத் தோன்றும் மனப் பிறழ்வு, பலவித சமூகக் கேடுகளுக்குக் காரணியாக அமைகின்றது. அவை கட்டிய புருஷனையும், அவனது பெற்றோரையும் மட்டும்தான் பாதிக்கும் என்று இதுகாறும் அந்தப் பெண்ணியவாதிகள் மனப்பால் குடித்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் அத்தகைய கட்டுப்பாடில்லா மனவெழுச்சி மனப்பான்மை அப்பெண்ணின் பெற்றோர் மீதும் பாயும் என்பதை நாள் தோறும் பல இளம் பெண்கள் நிருபித்துக் கொண்டிருக்கிறார்கள்!

இந்தச் செய்தியை வாசியுங்கள்:-


"எனது பெற்றோருடன் இதுகுறித்து பேசவோ, அவர்களுடன் வீட்டுக்கு செல்லவோ எனக்கு விருப்பம் இல்லை" என்றார் 17 வயதுப் பெண்.

மதுரை, ஜுலை.24- 2007 (தினத்தந்தி)

பெற்றோருக்கு தெரியாமல் காதலருடன் 17 வயது இளம்பெண்ணுக்கு இன்று நடக்க இருந்த திருமணத்துக்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது. மேலும் 18 வயது வரை அந்த பெண்ணை காப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

திருச்சி, லால்குடியை அடுத்த சிறுகாலப்பூரை சேர்ந்தவர் அறிவழகன். இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-

என் மகள் பவளராணிக்கு தற்போது 17 வயது நடந்து வருகிறது. நான் விவசாய வேலை பார்த்து வருகிறேன். எங்கள் ஊரைச்சேர்ந்த லாலா முத்துச்சாமி என்பவரது மகன் கமலேஷ். நான் கடந்த 23.6.2009 அன்று வேலை காரணமாக வெளினிர் சென்று விட்டேன். அப்போது என் மகளை கமலேஷ் கடத்தி சென்று விட்டார்.

இதற்கு அவரது தந்தையும், உறவினர் அப்பாத்துரை என்பவரும் உதவி செய்துள்ளனர். என் மகளுடன் கமலேஷ் சென்னையில் தங்கி இருப்பதாக தகவல் அறிந்தேன். இதுகுறித்து நான் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் செய்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனது மகளை கண்டுபிடித்து ஒப்படைக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.

- இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

பெற்றோருடன் செல்ல மறுப்பு

இந்த மனுவை விசாரித்து கடத்தி செல்லப்பட்டதாக கூறப்படும் பவளராணியை கண்டுபிடித்து ஆஜர்படுத்த ஏற்கனவே போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஆர்.மாலா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சு முன்பாக அந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது லால்குடி போலீசார் பவளராணியை நீதிபதிகள் முன்பாக ஆஜர்படுத்தினர். கடத்தப்பட்டது குறித்து அவரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
ஆனால் "என்னை யாரும் கடத்தி செல்லவில்லை. என் விருப்பத்தின்பேரில் நான் காதலிக்கும் ஒரு வாலிபருடன் எனக்கு நாளை (இன்று) திருமணம் நடக்க உள்ளது. அதற்கு அனுமதிக்க வேண்டும்" என்று அவர் பதில் அளித்தார்.

தொடர்ந்து கோர்ட்டில் இருந்த அந்த பெண்ணின் பெற்றோருடன் இந்த பிரச்சினை குறித்து பேசும்படி நீதிபதிகள் கூறியபோது, "எனது பெற்றோருடன் இதுகுறித்து பேசவோ, அவர்களுடன் வீட்டுக்கு செல்லவோ எனக்கு விருப்பம் இல்லை" என்றார்.

கண்ணீருடன் சென்றார்

பவளராணிக்கு 18 வயது பூர்த்தியடைய இன்னும் 2 மாதங்கள் உள்ளன. அதுவரை அந்த பெண்ணை மதுரையில் உள்ள பெண்கள் காப்பகத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கும்படி உத்தரவிட்ட நீதிபதிகள் இன்று நடக்க இருந்த திருமணத்துக்கு தடை விதித்தனர். மேலும் இந்த 2 மாத காலத்தில் அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்களோ, அந்த வாலிபர் தரப்பில் இருந்தோ யாரும் காப்பகத்தில் அவரை சந்திக்கவும் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை காப்பகத்துக்கு அழைத்து சென்றனர். அப்போது கோர்ட்டுக்கு வெளியே நின்றிருந்த அந்த பெண்ணின் பெற்றோர் வேதனை அடைந்து கண்ணீருடன் அந்த பெண்ணிடம் அவர்களது கோபத்தினை வெளிப்படுத்தினர். அந்த பெண்ணும் கண்ணீர் விட்டு அழுதபடியே அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

சென்ற இரண்டு நாட்களில் செய்தித்தாள்களில் வெளியான இரண்டு 498A வழக்கு விவரங்களை இதன்கீழ் இட்டிருக்கிறேன். சேலம், போடி மற்றும் அந்த ஊர்களின் அருகாமையில் வசிப்பவர்கள் அல்லது அங்கு சென்று விசாரிக்க இயன்றவர்கள் தயவுசெய்து குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நபர்கள் தரப்பு விவரங்களையும் கேட்டு தங்கள் பதிவிலோ அல்லது இங்கு மறுமொழியாகவோ அல்லது tamil498a [at] gmail [dot] com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கோ எழுதியனுப்பும்படி கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் செய்தித்தாட்களில் நிருபர்கள் காவல் நிலையத்திலும் குற்றவியல் நீமன்றங்களிலும் பதிவாகியுள்ள வழக்கு விவரங்களைத்தான் சேகரித்துப் போடுகிறார்கள். எதிர்த்தரப்பு நியாயத்தைப் பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை. அப்படியே அவர்கள் எழுதினாலும் செய்தி ஆசிரியர் அதைப் பிரசுரிக்கமாட்டார். இதுதான் நிதர்சனம்.

மேலும் "ஐயகோ! "இளம்" பெண்ணை வரதட்சணைக் கொடுமை செய்துவிட்டார்களே" என்று எழுதினால்தான் அது நம் நாட்டில் பரபரப்பான நியூஸ்! ஆனால், "அநியாயமாக கணவனையும், மாமியாரையும், நாத்தனாரையும் அவளுடைய 3 மாதக் குழந்தையையும் பொய் வரதட்சணை கேசில் பிடித்து உள்ளே போட்டார்களே, இது நியாயமா" என்றால் அது நியூஸ் வேல்யூ இல்லை. உடனே அந்த பேப்பர் ஆபீஸ் முன் பெண்ணியவியாதிகள் கொடி பிடிப்பார்கள். டோண்டு போன்றவர்கள் (பிரச்னை எவனுக்கோ தானே, தமக்கில்லையே என்ற கெத்தில்) "க்"கன்னாவில் புள்ளி வைக்கவில்லை என்று எழுதி தங்கள் மேதாவிலாசத்தை காண்பிப்பார்கள்.

உங்கள் உதவியை எதிர்நோக்குகிறோம். நன்றி.

இப்போது செய்திகள்:-

1.

சேலம், ஜுலை.22- 2009.

சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்தவர் ரகமத்துல்லா. இவரது மகன் சபீக்(வயது29). இவர் வெள்ளிப்பட்டறை ஒன்றில் வேலை செய்துவருகிறார். சபீக்குக்கும் சேலம் கோட்டை பகுதியைசேர்ந்த சாகிபானு(25) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது வரதட்சணையாக நகை மற்றும் பணம் சாகிபானுவின் பெற்றோர் கொடுத்துள்ளனர். மேலும் வீட்டுக்கு தேவையான சீர்வரிசை பொருட்களும் கொடுத்துள்ளனர்.

திருமணம் முடிந்து சாகிபானுவின் வாழ்க்கை சில காலம் சந்தோஷமாக கழிந்தது. இந்த நிலையில் கணவர் சபீக், மாமனார் ரகமத்துல்லா, மாமியார் சூரியபானு, அத்தான் இஸ்மாயில் ஆகியோர் சேர்ந்து சாகிபானுவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியதாக கூறப்படுகிறது.

பெற்றோரிடம் சென்று ரூ.15 ஆயிரம் ரொக்கம், 20 பவுன்நகை வரதட்சணையாக வாங்கி வரும்படி கூறி சாகிபானுவை துன்புறுத்தியுள்ளனர். அதற்கு அவர் மறுத்து காலம் கடத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் சாகிபானுவை வீட்டுக்குள் வைத்து சமையல் கியாசை திறந்து விட்டு கொல்லமுயன்றுள்ளனர்.
அதில் இருந்து உயிர்தப்பிய அவர், தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று நடந்த கொடுமைகளை கூறி கண்ணீர் வடித்தார். அதைத்தொடர்ந்து சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் ஜெயம் வரதட்சணை கொடுமை மற்றும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ரபீக்கை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் மாமனார் ரகமத்துல்லா, மாமியார் சூரியபானு, உறவினர் இஸ்மாயில் ஆகியோரை வலைவீசி தேடிவருகிறார்கள்.
--------

2.

தேனி மாவட்டம், போடி டி.வி.கே.கே.நகரைச் சேர்ந்த வர் மூக்கையா. இவருடைய மகன் சேகர் (வயது30). எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி பெயர் நாட்டரசி(20). இவர்களுக்கு திருமணம் ஆகி 11/2 வருடம் ஆகிறது. 6 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.

திருமணத்தின் போது 7 பவுன் தங்கநகை, வரதட் சணையாக கொடுக்கப்பட்ட தாக தெரிகிறது. சேகர் மதுப் பழக்கத்திற்கு அடிமையான தாக தெரிகிறது. இதனால் நகைகளை அடகு வைத்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மின்சார சாதனங்கள் கடை வைக்க வீட்டில் இருந்து பணம் வாங்கி வா என்று நாட்டரசியை கணவர் சேகர் மாமியார் மீனாட்சி(55), மாமனார் மூக்கையா ஆகியோர் கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து நாட்டரசி போடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நிர்மலாதேவி வழக்கு பதிவு செய்து கணவர் சேகர், மாமியார் மீனாட்சி ஆகியோரை கைது செய்து போடி கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். அவர்களை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

திருமணமாகி 9 ஆண்டுகளுக்குப்பின் 498A

9 ஆண்டுகள் என்ன, 100 ஆண்டுகள் கழித்துக்கூட கணவன் மற்றும் அவனது பெற்றோர், உறவினர், நண்பர்கள், மேலும் ரோட்டில் போகிறவர், வருகிறவர் அனைத்துப் பேருக்கும் எதிராக 498A கேசு போடலாம் என்கிறது அந்தச் சட்டம்.

இந்தச் செய்தியை வாசியுங்கள்:-

கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணை துன்புறுத்திய வர்மகலை வைத்தியர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேவகோட்டை ராம்நகர் வீட்டுவசதிவாரிய குடியிருப்பில் வசிப்பவர் ஜெபக்குமார். வர்மகலை வைத்தியர். இவரது மனைவி அமலா (வயது 26). சித்த மருத்துவ டாக்டர். இவர்களுக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் ஜெபக்குமார் மனைவி அமலாவிடம் அவரது தங்கையை தனக்கு 2-வது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். (அநேகமாக இதுதான் உண்மையில் பிரச்னையாக இருக்கலாம். ஆனால் கையிலெடுப்பது என்னவோ வரதட்சணைக் கொடுமை (498A) புகாரைத்தான். ஏனென்றால் அதன் மூலமாகத்தானே அனைவரையும் கைது செய்ய வைக்கலாம்!). மேலும் 30 பவுன் நகை, ரூ. 2லட்சம் பணம் கேட்டு, அடித்து துன்புறுத்தினாராம். இதுகுறித்து அமலா தேவகோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அனுராதா, சிவக்குமாரின் தந்தை அன்பையா, தாயார் ரெசிலம்மாள், அண்ணன் கிறிஸ்து ராஜா, அண்ணன் மனைவி டெய்சி, மற்றொரு அண்ணன் ராஜசேகர், அவரது மனைவி லதா, அக்கா ஜெயந்தி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து ஜெபக்குமார், ரெசிலம்மாள், கிறிஸ்து ராஜா, டெய்சி ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

செய்தி - தினத்தந்தி - 22-07-2009
---------------

இதைப் படிக்கும் வலைப் பதிவர்களில் மணமான பெண்கள் யாரேனும் இருக்கிறீர்களா? உங்களுக்கு ஒரு இலவச டிப்ஸ் :-

சக வலைப் பதிவர்களில் யாரேனும் உங்களிடன் பின்னூட்டக் குசும்பு செய்து அதனால் அந்த நபர்மேல் உங்களுக்கு அதீத கோபம் வந்து, அவரை எப்படியாவது பழி வாங்கவேண்டும் என்று துடிக்கிறீர்களா? உடனே அருகாமையிலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று ஒரு வெள்ளைப் பேப்பரை எடுத்து (பழுப்புப் பேப்பராக இருந்தலும் பரவாயில்லை) அந்த நபர் வரதட்சணைக் கொடுமை செய்தார் என்று புகார் கொடுத்து விடுங்கள். இதற்காக (498A) சட்டப் பிரிவுக்கு ஏற்றபடி அங்கு அநேகமாக ஒரு டெம்பிளேட் செய்து வைத்திருப்பார்கள். அப்படி கைவசம் ரெடியாக இல்லாவிட்டலும் இந்த 498A கேசு ஸ்பெஷலிஸ்டுகளான வக்கீல்கள் சிலர் இருப்பார்கள். அவர்கள் தகுந்த புகார்களை நன்கு ஜோடித்துக் கொடுப்பார்கள்.

வெறும் சோறு போதுமா? அதன்மேல் மசாலா, உப்பு புளி மிளகாய் வேண்டாமா! அதனால் அந்த நிபுணர்கள் 498A கூட இன்னும் சில செக்ஷன்கள் சேர்கிறமாதிரி, புளு ஃபிலிம் பார்த்தார்கள், அந்த நபர் என்னைக் கையைப் பிடித்து இழுத்தார் என்று ஜிகினா வேலை செய்து கொடுப்பார்கள். எந்த முகாந்திரமும் வேண்டாம்; எந்த விசாரணையும் வேண்டாம்; அந்த வலைப் பதிவர் உடனே கைது செய்யப் படுவார். பிறகு அவரிடமிருந்து ஒரு கணிசமான துகையைக் கறந்து கொண்டு உங்கள் புகாரை Quash செய்து விடலாம்.

இது போல்தான் இந்த சட்டப் பிரிவு பயன்படுத்தப் படுகிறது. குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பல நீதிபதிகள் இந்த சட்டத்தின் முழு துஷ்பிரயோகத்தை ஒப்புக் கொண்டாயிற்று. ஆனாலும் இது ஒரு கற்பக விருக்ஷம், காம தேனு, அட்சய பாத்திரமாக கணிசமான வக்கீல்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், மற்றும் இதர துறை சார்ந்த எனையோருக்கும் விளங்குவதால் ஒரு மாற்றமும் நடக்க மாட்டேனென்கிறது.

கள்ளக்காதலன் கதையும் கந்தல்தான்!

தாம்பரத்தில், இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினத்தை சேர்ந்த மோகன் என்பவரின் மகள் இளவரசி (வயது 25). இவரது கணவர் இஸ்ராத். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இளவரசி தாம்பரத்தில் உள்ள ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்த டிராவல்சுக்கு குரோம்பேட்டையை சேர்ந்த இன்சூரன்ஸ் ஏஜண்டான குருமூர்த்தி (வயது 29) அடிக்கடி வருவார். அப்போது இளவரசிக்கும், குருமூர்த்திக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.

இதுபற்றி இளவரசியின் கணவர் இஸ்ராத் தட்டிக்கேட்டபோது குருமூர்த்தி அவரை அடித்து விரட்டிவிட்டு தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் இளவரசியுடன் வசித்து வந்தார்.

குருமூர்த்தி ஏற்கனவே தங்கலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து விவாகரத்து செய்து விட்டு சுபா என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து அவருடன் குரோம்பேட்டையில் குடித்தனம் நடத்தி வந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளன.

இந்த நிலையில், `பாலிசி' எடுக்க வருபவர்களுடன் உல்லாசமாக இருக்கும்படி இளவரசியை குருமூர்த்தி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த இளவரசி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீஸ் விசாரணையின் போது இளவரசியின் `டைரி' சிக்கியது. அதில், "நான் பத்தினியாக இருந்தேன் (ஆகா! பத்தினிகள்தான் எத்தனை விதம்!!). என்னை கெடுத்து விட்டாய், உடலால்தான் கெட்டுள்ளேன், உள்ளத்தால் கெடவில்லை. சுபா மீதுதான் உனக்கு பாசம் உள்ளது. உன்னைவிட என் கணவர் இஸ்ராத் எவ்வளவோ நல்லவர். உனக்கு குழந்தைகள் உள்ளன. என் பாவம் உன்னை சும்மாவிடாது'' என்று எழுதப்பட்டு இருந்தது.

கள்ளக்காதலன் கைது

இதைத்தொடர்ந்து, இளவரசியின் தற்கொலைக்கு காரணமான குருமூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.

(செய்தி - தினமலர்)

மனப்பூர்வமான காதல் முடிவதும் 498-A கேசில்தான்!

இருவரும் நன்கு படித்தவர்கள். ஒருவரையொருவர் தீவிரமாகக் காதலித்தனராம். தற்கால சினிமா யுகத்தில் காதல் காவலர்களைச் சேர்த்து வைக்கும் இடமான காவல் நிலையத்தில் கல்யாணம் நடந்தது. திருமணம் நடந்த மூன்று மாதத்திற்குள்ளாகவே காதல் கணவனைச் சேர்த்து 13 பேர்கள் மேல் வரதட்சணைப் புகார் (498A) கொடுத்துவிட்டாள் மகராசி. உடனே அந்த “மனப்பூர்வமாகக் காதலித்த” கணவனையும் அவனது பெற்றோரையும் சகோதரி புருஷனையும் கைது செய்து விட்டனர். ஏனையோரைத் தேடி வருகின்றனராம்!

காதலாக இருந்தாலும், ஜாதகம் பார்த்து முடித்தாலும், சுயம்வரங்கள், மேட்ரிமனி வலைத்தளங்கள் மூலம் முடிவு செய்தாலும், அறிந்தவர்கள், நண்பர்கள் உறவினர்கள் மூலம் ஏற்பாடு செய்திருந்தாலும், கடைசியில் திருமணங்கள் சங்கமம் ஆவது 498A கேசுகளில்தான். அந்தரங்கமாக அன்பு அரவணைப்பில் குடும்பம் நடத்தவேண்டிய தம்பதிகள் அனைவரும் வக்கீலகள், போலீஸ்காரர்கள் சகிதமாக கோர்ட்டு வராண்டாக்களில் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இத்தகைய பெண்கள் திருமணம் செய்துகொள்வதே கணவனிடமிருந்து 498-A கேசு போட்டு உள்ளே தள்ளி பிறகு செட்டில் பண்ணுவதற்கு காசு பிடுங்குவதற்குத்தான். அப்போதுதானே இஷ்டப்படி கண்டவனோடு “உல்லாசமாக” இருக்கலாம்!!

இனி செய்தி:-


சேலம்,ஜுலை.17- 2009 - செய்தி: தினத்தந்தி

காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்ட பட்டதாரி பெண்ணிடம் 100 பவுன்நகை மற்றும் ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக காதல் கணவர், மாமியார் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம் தாதகாப்பட்டி அம்மன்நகரை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் தியாகராஜன்(வயது24). இவர் எம்.காம் முடித்து விட்டு சேலம் சட்டக்கல்லூரியில் பி.எல். இறுதியாண்டு படித்து வந்தார்.
சேலம் அருகே உள்ள இளம்பிள்ளையை சேர்ந்த சுந்தரவடிவேல்-நீலாவதி தம்பதிகளின் மகள் கிருஷ்ணபிரியா(22). இவர் திருச்செங்கோட்டில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்.சி.ஏ. படித்து பட்டம் பெற்றவர். தியாகராஜனும், கிருஷ்ணபிரியாவும் கடந்த 2003-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டுவரை 3 ஆண்டுகள் ஒரே கல்லூரியில் பி.காம் படித்துள்ளனர்.

இருவரும் இறுதியாண்டு படிக்கையில் இருவரும் மனப்பூர்வமாக காதலிக்க தொடங்கி விட்டனர். அதே நேரத்தில் தங்களது படிப்பையும் தொடர்ந்தனர்.இந்த நிலையில் இவர்களின் காதல் விஷயம் பெற்றோருக்கு தெரிந்து எதிர்ப்பு வலுத்தது. காதலன் தியாகராஜன் வீட்டில் வேறுபெண் பார்த்து திருமணம் ஏற்பாட்டை செய்தனர். இதையறிந்த தியாகராஜன், காதலியை சென்னைக்கு அழைத்து சென்று அங்கு ராயபுரத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் ஊர் திரும்பிய காதல்ஜோடி அவரவர்கள் வீட்டிலே இருந்தனர். இந்த நிலையில் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்ட விவரம் அறிந்து இருவீட்டாரும் ஊர்மக்கள் மத்தியில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, கடந்த மார்ச் மாதம் ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள கோவிலில் இருவீட்டார் சம்மதத்துடன் திருமண ஏற்பாடு நடந்தது. அதற்குள் காதலன் வீட்டில் உறவினர் தலையிட்டு, விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்து விட்டனர்.

அதைத் தொடர்ந்து திருமணத்துக்கு காதலன் சம்மதிக்கவில்லை என்ற முடிவுக்கு வந்த கிருஷ்ணபிரியா சேலம் மாநகர துணை கமிஷனர் ஜான் நிக்கல்சனை சந்தித்து புகார் கொடுத்தார்.
இது குறித்து சேலம் அனைத்து மகளிர் போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டது. அப்போது காதலன் தியாகராஜன் திருமணத்துக்கு சம்மதித்தார். அதன்பின்னர் தியாகராஜன்,கிருஷ்ணபிரியா இருவரும் போலீசார் முன்னிலையில் மாலைமாற்றி கொண்டனர்.

ஒருவாரம் காதலி வீட்டில் இருவரும் தங்கி இருந்த நிலையில், காதலனின் பெற்றோர் ஊரார் அறிய முறைப்படி திருமணம் நடத்த முடிவு செய்து மகன் தியாகராஜனை தங்களது வீட்டுக்கு அழைத்து சென்று விட்டனர். திருமணத்தை முறைப்படி நடத்துவதற்கான நாட்களை தள்ளி வந்தனர். கடந்த ஜுன் மாதம் திருமணநாள் குறித்தனர்.

இந்த நிலையில் தற்போது காதலனின் பெற்றோர், தங்கள் மகனுக்கு கிருஷ்ணபிரியாவை திருமணம் செய்வதென்றால் ரூ.5 லட்சம் ரொக்கம், 100 பவுன் நகை வரதட்சணையாக தரவேண்டும். அப்படி கொடுத்தால் மட்டுமே இருவருக்கும் திருமணம் நடக்கும். இல்லையேல் முடியாது என மறுத்ததாகவும், மேலும் மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து சேலம் அனைத்து மகளிர் போலீசில் காதல் கணவர், மாமியார், மாமனார், இவர்களது மருமகன் மற்றும் உறவினர்கள் 13 பேர் மீது கிருஷ்ணபிரியா நேற்று புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜெயம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

காதல் கணவர்-மாமியார் கைது

அதைத்தொடர்ந்து நேற்று காதல் கணவர் தியாகராஜன், மாமியார் உமாராணி(43), அவரது மருமகன் மனோகரன்(28) ஆகியோரை கைது செய்தார். மாமனார் செல்வம் உள்பட 10 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்

498A கூட செக்ஸ் கொடுமையும் சேர்த்துப் போடுவோம்!

முதலில் இந்தச் செய்தியை முழுதும் வாசியுங்கள்!
---------------------------

ஈரோடு, ஜுலை.16- 2009. செய்தி - தினத்தந்தி

செக்ஸ் கொடுமை செய்யும் கணவரின் அண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கிராம மக்களுடன் வந்த பட்டதாரிப்பெண், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் புகார் செய்தார்.

ஈரோடு நாதகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் சத்தியப்பிரியா (வயது 24). எம்.எஸ்சி. பட்டதாரி. இவர் தனது பெற்றோர் சந்திரசேகர்-வளர்மதி, எம்.எஸ்.மங்கலம் பஞ்சாயத்து தலைவர் குமரேசன் மற்றும் கிராம மக்கள் நூற்றுக்கணக்கானவர்களுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புகார் கொடுக்க வந்தார். இதனால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு பரபரப்பான சூழ்நிலை உருவானது. இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு அவிநாஷ்குமாரை நேரில் சந்தித்து புகார் மனுவை கொடுக்க சத்தியப்பிரியாவுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

அதன்பின்னர் அவர் போலீஸ் சூப்பிரண்டை நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்தார்.

புகார் மனு குறித்து சத்தியப்பிரியா நிருபர்களிடம் கண்ணீர் மல்க கூறியதாவது (கண்ணீர் பெண்களுக்கு ஒரு கைவந்த கலை; அது ஒரு சிறந்த ஆயுதம். அதை வைத்து யாரை வேண்டுமானாலும் வீழ்த்தலாம்!):-

எனது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் நாதகவுண்டன்பாளையம். எனக்கும் முள்ளாம்பரப்பு வீரப்பம்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் மகேஷ் (32) என்பவருக்கும் கடந்த 25-5-2008 அன்று திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது 50 பவுன் நகையும், ரூ.50 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட்டது.
கணவர் மகேஷ், மாமனார் ஆறுமுகம், மாமியார் தமிழரசி மற்றும் கணவரின் அண்ணன் தியாகு என்கிற தியாகராஜன் (37) ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தேன். தியாகராஜனுக்கு திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளனர். கணவர் வீட்டார் அனைவருமே சாக்கு வியாபாரம் செய்து வருகிறார்கள்.

என் கணவர் எப்போதும் தனது தாயார், அண்ணன் பேச்சை கேட்டுத்தான் நடப்பார். தாயார் இருக்கும்போது என்னிடம் அவர் சரியாக கூட பேசமாட்டார். திருமணம் ஆன முதல் 4 மாதங்கள்தான் அவருடன் சந்தோசமாக குடும்பம் நடத்தினேன். இந்த நிலையில் நான் கருவுற்றேன். அந்த சந்தோஷம் நிலைப்பதற்குள் எதிர்பாராதவிதமாக கரு கலைந்து விட்டது.

இதற்கிடையில் தியாகராஜன் என்னிடம் தவறாக நடக்க முயன்றார். அடிக்கடி செக்ஸ் கொடுமை செய்தார். இது குறித்து என் கணவரிடம் கூறினேன். ஆனால் அவர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. கூட்டுக்குடும்பம் என்றால் அப்படி, இப்படி இருக்கத்தான் செய்யும் என்றார்.

பின்னர் தனியாக தொழில் தொடங்க வேண்டும். உன் தந்தையிடம் சென்று ரூ.1 லட்சம் வாங்கி வா என்று கட்டாயப்படுத்தினார். நானும் என் தந்தையிடம் கேட்டேன். ஆனால் அவ்வளவு பணம் கொடுக்க வசதி இல்லை என்று என் தந்தை கூறிவிட்டார். மேலும் எங்களுக்கு செட்டிப்பாளையத்தில் சொந்தமாக உள்ள ரூ.25 லட்சம் மதிப்பிலான காலி இடத்தை தன் பெயரில் எழுதி தரும்படி கேட்டு அடித்து சித்ரவதை செய்தார்.
கணவரின் வீட்டாரும், அந்த நிலத்தை எழுதி வாங்கி வந்தால்தான் அவருடன் சேர்ந்து குடும்பம் நடத்த விடுவோம். இல்லை என்றால் உன் பெற்றோர் வீட்டுக்கே துரத்தி விடுவோம் என்று மிரட்டினார். கணவரும் அடிக்கடி பணம் வாங்கி வா, அல்லது நிலத்தை எழுதி வாங்கி வா என்று கொடுமைப்படுத்தினார்.

அதன்பின்னர் எனது நகைகளை பிடுங்கிக்கொண்டு, வீட்டை விட்டு விரட்டிவிட்டனர். இனிமேலும் இவருடன் வாழ முடியாது என்று முடிவு செய்து என் பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டேன். எனது நிலை குறித்து பெற்றோரிடம் கூறினேன்.

அதைத்தொடர்ந்து ஊர் பஞ்சாயத்து தலைவர் குமரேசன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. என் கணவர் மகேஷை அழைத்து பேசினார்கள். அவரிடம் ஊர்க்காரர்கள் பலரும் பேசினார்கள்.

அதைத்தொடர்ந்து, ஆவணி மாதம் வந்து என்னை அழைத்து செல்வதாக உறுதி அளித்துச்சென்றார். ஆனால் அதற்குள் விவாகரத்து நோட்டீசு அனுப்பி விட்டார்.

இதனால் நானும் என் குடும்பத்தாரும் அதிர்ச்சி அடைந்தோம். இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் புகார் மனு ஒன்றை கொடுத்து இருக்கிறேன். அதில் எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும். வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்த என் கணவர், மாமனார், மாமியார், கணவரின் அண்ணன் தியாகராஜன் ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அவரும், என் கணவரையும், அவரது குடும்பத்தையும் அழைத்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

என் கணவர் மட்டும் என்னுடன் தனியாக குடும்பம் நடத்த வந்தால் அவரை என்னால் திருத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு சத்தியப்பியா கூறினார்.

இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் கேட்டபோது, சத்தியப்பிரிவின் புகார் மனுவை ஈரோடு அனைத்து மகளிர்போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி இருக்கிறேன். சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர், மாமனார், மாமியாரை அழைத்து வந்து டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் விசாரணை நடத்த உத்தரவிட்டு இருக்கிறேன். அதன்பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
------------

முன்னுக்குப்பின் முரணான புகார்கள். கடைசியில் விஷயம் என்னவென்றால், 498ஏ சட்டத்தைக் கையிலெடுத்து பயமுறுத்தி கூட்டுக் குடும்பத்திலிருந்து கணவனைப் பிரித்து தனிக்குடுத்தனத்திற்கு வரவேண்டும்; அங்கு தன் ஆட்சி நடக்கவேண்டும். இதற்காக எந்தவித செக்ஸ் கொடுமைப் புகாரையும் ஜோடனை செய்து பதிவு செய்ய இக்காலப் பெண்கள் தயார்.

இதெல்லாம் என்ன ஜுஜிபி!

3 மாதக் குழந்தையும், 3 வயதுப் பையனும் வரதட்சணைக் கொடுமை செய்தனர், தன் கையையே தூக்க சக்தியில்லாத 80 வயது மாமனார் என் கையைப் பிடித்து இழுத்தார் என்றெல்லாம் பொய் வழக்கு போட்டு, யாதொரு விசாரணையுமின்றி மேலும் இது இயற்கைக்கு முரணாக, சாத்தியமில்லாத புகாராக இருக்கிறதே என்ற சிந்தனை கூட இல்லாமல் அவர்கள் கைது செய்யப்பட்ட நிகழ்வுகள் அநேகம்.

Sec 498A of IPC நம் நாட்டிற்கு பெண்ணிய வியாதிகள் அளித்துள்ள வரப்பிரசாதம். இதை கையிலெடுத்துக் கொண்டு கீழ்த்தரமான புத்தி கொண்ட மனைவிமார்களும் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து சில கெடுமதி வக்கீல்களும் அடிக்கிறார்கள் பகல் கொள்ளை (Every 498A case ends in outright extortion). இதை “சட்டபூர்வமான பயங்கரவாதம்” (Legal terrorism) என்று வர்ணித்திருக்கிறார் ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி. என்ன சொன்னால் என்ன, தினந்தோரும் பல அப்பாவிகள் இந்தக் கொடுங்கோன்மைச் சட்டத்திற்கு தொடர்ந்து பலியாகி வருகின்றனர் என்பதுதான் நிதர்சனம்.

ஆகையால் இந்திய ஆண்கள் இத்தகைய 498A of IPC மற்றும் (வன்முறை என்பது ஆண்தான் செய்வான், பெண் வன்முறையே செய்யமாட்டள் என்று வரையறுத்திருக்கும்) குடும்ப வன்முறைச் சட்டங்கள் திருத்தப்படும் வரை அல்லது நீக்கப்படும் வரை திருமணம் என்னும் புதைகுழியில் விழாமல் இருத்தல் நலம் - அவர்களுக்கும் அவர்தம் பெற்றோருக்கும்!

கன்னித்தன்மையாவது கத்தரிக்காயாவது!

அரசு செலவில் கூட்டு திருமணத்திற்கு வந்த பெண்களில் சிலர் திருட்டுத் திருமணம் செய்துகொள்ளவிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. ஆம். அவர்கள் ஏற்கனவே கர்ப்பமாயிருந்தனர் (ஏனய்யா, அவர்கள் பாவம், யாருடனோ உல்லாசமாக இருந்திருக்கின்றனர். அவர்கள்மேல் என்ன தவறு? அவர்கள் ஆசைப் பட்டார்கள். எந்தப் பாவிகளோ அவர்களுடன் உல்லாசமாக இருந்து அவர்களைக் “கற்பழித்து விட்டான்கள்”.)

அவர்கள் கர்ப்பமாக இருந்ததை மறைத்து பத்தினி வேடம் பூண்டு இன்னொருவனோடு அரசு சிலவில் திருமணம் செய்துகொள்ள முயற்சி செய்ததை அரசு மருத்துவ சோதனை மூலம் கண்டு பிடித்து திருப்பி அனுப்பி விட்டது.

இதை எதிர்த்து நம் பெண்ணிய வியாதிகள் இப்போது கூச்சல் போடுகின்றன. அதுபோல் மருத்துவ சோதனைச் செய்தது தவறாம். அந்தப் பெண்களின் மனம் பாடுபடுமாம். அவர்களைக் கட்டிக்கொள்ளப் போகும் இளிச்சவாயர்களைப் பற்றி இவர்களுக்கு எந்த அக்கரையுமில்லை.

இந்தச் செய்தியை வாசியுங்கள்:-

கூட்டு திருமண திட்டத்தில் பங்கேற்ற பெண்களுக்கு கற்பு பரிசோதனையா? ராஜ்யசபாவில் கடும் மோதல்
ஜூலை 14,2009. செய்தி - தினமலர்

புதுடில்லி : ம.பி.,யில் கூட்டுத் திருமணத் திட்டத்தின் கீழ், திருமணம் செய்ய வந்த பெண்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை நடத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் நேற்று ராஜ்யசபாவில் எதிரொலித்தது. பா.ஜ., காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் நிகழ்ந்தது.

மத்திய பிரதேசத்தில், "முதல்வர் கன்னியாதானத் திட்டத்தின்” கீழ், ஏராளமான ஏழைப் பெண்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. இதுவரை 90 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் திருமணம் நடத்தப்பட்டுள்ளது.

அரசின் சார்பில் ஒவ்வொரு ஜோடிக்கும் சீதனப் பொருட்கள் வழங்கப்பட்டு 5,000 ரூபாய் உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. இந்த திட்டம், ஏழைப் பெற்றோர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், கடந்த மாதம் 26ம் தேதி ஷாதோல் மாவட்டத்தில் 151 ஜோடிகளுக்கு, இந்த திட்டத்தின் கீழ் இலவசமாக கூட்டுத் திருமணம் நடத்தப்பட்டது. ஆனால், இத்திட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ள வந்த அனைத்து பெண்களுக்கும், கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், 13 பெண்கள் கர்ப்பமாக இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். இதைத் தொடர்ந்து, திருமணம் செய்ய வந்த பெண்களுக்கு கன்னித் தன்மை பரிசோதனை நடத்தப்பட்டதாக எழுந்த புகார், ராஜ்யசபாவிலும் எதிரொலித்தது. காங்கிரஸ் மற்றும் பா.ஜ., எம்.பி.,க்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுகுறித்து பேசிய காங்கிரஸ் உறுப்பினர் சந்தோஷ் பக்ரோடியா கூறியதாவது:

ம.பி.,யின் கூட்டுத் திருமணத் திட்டம் பாராட்டத்தக்கது. அத்திட்டத்தின் கீழ் திருமணம் செய்ய வந்த பெண்களுக்கு, கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டது துரதிருஷ்டவசமானது; வெட்கப்பட வேண்டியது என்றார். ஆனால், பா.ஜ., கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு பெண்கள் கமிஷனும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஷாதோல் மாவட்ட கலெக்டர் மறுப்பு : ம.பி.,யில் கூட்டுத் திருமணத் திட்டத்தில் கீழ், கடந்த மாதம் திருமணம் செய்ய வந்த பெண்களிடம் கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட புகாரை, ஷாதோல் மாவட்ட கலெக்டர் நீரஜ் துபே மறுத்துள்ளார். அவர் கூறியதாவது:

கூட்டுத் திருமணத் திட்டத்தில் திருமணம் செய்ய வந்த பெண்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்பட்டதாகக் கூறுவது தவறு. அவர்கள் கர்ப்பமாக இருக்கின்றனரா, இல்லையா என்பதைக் கண்டறிய சில மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன.

திருமணம் செய்ய வரும் பெண்களுக்கு, இதற்கு முன் திருமணம் நடக்கவில்லை என்பதை உறுதி செய்யவும், தேவையில்லாத பிரச்னைகளைத் தவிர்க்கவும் இத்தகைய சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில், சில பெண்கள் கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டதால், அவர்களை திருமணத்தில் பங்கேற்க அனுமதிக்கவில்லை என்றார்.

எங்கெங்கு பார்த்தாலும் 498A

பட்டணத்துப் பெண்கள்தான் படிக்கும்போதே முழு விடுதலை அடைந்து, ”மணமானபின் கணவனையும் மாமியார், மாமனாரையும் நான் ஏன் மதிக்க வேண்டும், என் இஷ்டம்போல் இருப்பேன்” என்று எக்காளமிட்டு, அது போதாதென்று அவ்ர்கள்மேல் 498A சட்டத்தையும் ஏவிவிட்டு, அவர்கள் கைது செய்யப்படுவதைப் பார்த்து தன் வாழ்க்கையில் பெரு வெற்றியடைந்து விட்டதாக இருமாந்து, பின் அவர்களிடமிருந்து ஒரு பெருந்தொகையை கொள்ளையடித்தபின் அந்தப் புகாரை வாபஸ் வாங்கும் (quashing the case or settling it otherwise) நடைமுறைதான் இதுகாறும் நிகழ்ந்து வந்தது.

தற்போது இந்த 498A சீக்கு நகர்ப்புறங்களைத் தாண்டி, இழுத்தடிச்சான்பட்டி, தெக்கனாம்பட்டி, ஊத்தாங்கால் மங்கலம் போன்ற பட்டி தொட்டி வரை வியாபித்து செழித்து வளர்ந்து வருகிறது. அந்தந்த ஊர்களில் வக்கீல்கள், தரகர்கள், புதுமைப் பெண்கள் கொண்ட குழுக்கள் உருவாகி, அப்பாவி கணவன்மார்கள் மேல் பொய் வழக்கு போட்டு நாலு காசு கொள்ளையடிக்க வேண்டாமா! இதுதானே காந்தி கனவு கண்ட கிராமப்புற வளர்ச்சி!
இனி செய்தி:

திண்டிவனம் அருகே கொல்லார் கிராமத்தில் உள்ள பள்ளத்தெருவை சேர்ந்தவர் ரதி (25). இவருக்கும் திண்டிவனம் ரோஷனை பொன்னையன் நகரை சேர்ந்த தாஸ் (30) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இரு வீட்டாரின் சம்மதத்தின் பேரில் கடந்த 27.8.04 அன்று கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றது.

திருமணம் நடைபெறுவதற்கு முன்பாக தாஸ் வீட்டார் 10 பவுன் நகையும், இரு சக்கர வாகனத்தையும் வரதட்சணையாக கேட்ட னர். அப்போது ரதியின் வீட்டார் 7 பவுன் நகையும் இரு சக்கர வாகனம் வாங்குவதற்காக 20 ஆயிரம் பணமும் கொடுத்தனர். இந்த நிலையில் தொடர்ந்து தாசின் தந்தை நந்தன், தாயார் சந்திரா, சகோதரி செங்கேனி ஆகியோர் சேர்ந்து தாசை தூண்டிவிட்டு ரூ.50 ஆயிரமும், 10 பவுன் நகையும் வாங்கி வரும்படி ரதியை வரதட்சணை கொடுமை செய்தனர்.
இதுகுறித்து திண்டிவனம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ரதி புகார் செய்தார். அதன் பேரில் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கண்டவனோடு ஓடுவதற்கு வழி காட்டிய நல்லாசிரியை

கணவர்களுடன் வாழப்பிடிக்காததால் ஆசிரியை-மாணவி தப்பி ஓட்டம். சென்னை சென்று வேறு நபர்களை திருமணம் செய்தது அம்பலம்

அந்தியூர், ஜுலை.9- 2009. செய்தி: தினத்தந்தி

பெற்றோர்கள் பார்த்து திருமணம் செய்து வைத்த மாப்பிள்ளைகளுடன் வாழப்பிடிக்காததால், அந்தியூரைச் சேர்ந்த ஆசிரியை மற்றும் மாணவி, சென்னைக்குச் சென்று தங்களுக்கு பிடித்தமானவர்களை திருமணம் செய்து கொண்ட விவரம் அவர்களை போலீசார் மீட்டபோது தெரியவந்தது.

இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவுட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் மருப்பூரான். லாரி டிரைவர். இவரது மனைவி சரஸ்வதி (வயது 27). படிப்பை பாதியில் விட்டவர்களுக்காக அந்தியூர் அருகே நகலூர் முனியப்பன்பாளையத்தில் செயல்படும் அன்னை இந்திரா பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

இதுபோல் அந்தியூர் பெருமாள்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன். விவசாயி. இவரது மனைவி கவிதா (17). இவரும் அதே இந்திரா பள்ளிக்கூடத்தில் படித்து வந்தார். இதனால் ஆசிரியை சரஸ்வதியும், மாணவி கவிதாவும் தோழிகள்போல் பழகி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 23-5-09 அன்று பள்ளிக்கூடம் சென்ற சரஸ்வதியும், கவிதாவும் மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் 2 பெண்களின் வீட்டாரும் அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளிலும், உறவினர்களின் வீடுகளிலும் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர்கள் எங்கே சென்றார்கள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

இதைத்தொடர்ந்து சரஸ்வதியைக் காணவில்லை என்று அவரது கணவர் மருப்பூரான் அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். மாணவி கவிதாவைக் காணவில்லை என்றும் போலீசில் புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில், பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் உத்தரவின் பேரில் சித்தோடு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலும், பவானி சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலும் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்கள் ஆசிரியை சரஸ்வதியையும், கவிதாவையும் தேடி வந்தார்கள்.

இதுபற்றி அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று சரஸ்வதி சென்னையிலும், கவிதா திருவாரூரிலும் தனிப்படை போலீசாரிடம் சிக்கினார்கள்.

"மிஸ்டுகாலால்'' வந்த பழக்கம்

இதைத்தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டு உடனடியாக பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டனர். அவர்களிடம் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தீவிர விசாரணை நடத்தினார்.

சரஸ்வதிக்கும், மருப்பூரானுக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில் சரஸ்வதிக்கு அவரது செல்போனில் ஒரு "மிஸ்டுகால்" வந்தது. சென்னையை சேர்ந்த பாலாஜி என்பவர் அந்த மிஸ்டு காலில் பேசியிருக்கிறார். இதன்பின்னர் அவர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி பழகிக்கொண்டனர். ஒருவரையொருவர் பார்க்காமலேயே காதல்மொழி பேசி தங்களது காதலை வளர்த்துக்கொண்டனர்.

கணவனை பிடிக்கவில்லை

இதுபோல் மாணவி கவிதாவும் ஏற்கனவே வேறு ஒருவரை காதலித்து திருமணம் செய்தவர். இதை அறிந்த அவரது பெற்றோர்கள் காதலனிடம் இருந்து கவிதாவை பிரித்து வந்து முருகேசனுக்கு திருமணம் செய்து வைத்தனர். இதனால் அவர்களும் தங்களுக்குள் பிரியம் இல்லாமல் இருந்தனர்.
இதுபற்றி சரஸ்வதியும், கவிதாவும் அடிக்கடி பேசி வந்தனர்.

இதில் தங்களுக்கு பிடிக்காத கணவர்களுடன் ஏன் வாழவேண்டும் என்று அவர்கள் இருவரும் முடிவு செய்தனர். அப்போது சரஸ்வதி, தனக்கு சென்னையில் பாலாஜி என்ற காதலர் இருக்கிறார், நாம் இருவரும் சென்னை செல்வோம். நான், பாலாஜியை திருமணம் செய்துகொள்கிறேன். உனக்கும் பாலாஜி மூலமாக வேறு ஒரு நல்ல பிடித்தமான வாலிபரை தேர்ந்தெடுத்து திருமணம் செய்துவைக்கிறேன் என்று கவிதாவிடம் கூறினார்.

இதை கவிதாவும் ஏற்றுக்கொண்டார். அதன்படி கடந்த 23-5-09 அன்று வழக்கம்போல் பள்ளிக்கூடம் செல்வதாக இருவரும் அவரவர்கள் வீட்டில் சொல்லிவிட்டு சென்றனர். ஆனால் அவர்கள் பள்ளிக்கூடத்துக்குச் செல்லாமல் சென்னைக்கு சென்றனர். அங்கு சென்றதும் கவிதாவை சரஸ்வதி, தனது காதலன் பாலாஜிக்கு அறி முகப்படுத்திவைத்தார்.

ஏற்கனவே திட்டமிட்டபடி சரஸ்வதியும், பாலாஜியும் திருமணம் செய்து கொண்டார்கள். பாலாஜி, திருவாரூரை சேர்ந்த பிரபாகரன் என்பவரை கவிதாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அவர்களும் திருமணம் செய்து கொண்டார்கள்.

மேற்கண்ட விவரங்களை சரஸ்வதியும், கவிதாவும் போலீசாரிடம் தெரிவித்தர்கள்.

இதன்பின்னர் அவர்களது பெற்றோர்களுக்கு போலீசார் தகவல் கொடுத்து அவர்களையும் வரவழைத்து பேசினார்கள். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து சரஸ்வதியையும், கவிதாவையும் பவானி கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள்.

மாணவி கவிதாவை தனது நண்பர் பாலாஜி மூலம் திருமணம் செய்த வாலிபர் பிரபாகரன் மீது போலீசார் கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து அவரையும் கைது செய்தனர். (கற்பே இல்லாத கேசு இது. “கற்பழிப்பு எங்கேயிருந்து வந்தது! இருந்தால் தானே அழிக்க முடியும்!) அவரை நேற்று மாலையில் பவானி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவருக்கு இன்று மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.

--------------

பார்த்தீர்களா கொடுமையை!

1. மனைவி உயிருடன் இருக்கும்போது விவாகரத்து பெறாமல் கணவன் இன்னொருத்தியை திருமணம் செய்து கொண்டால் உடனே அவன் கைது செய்யப்படுவான். ஆனால் மனைவி “கணவனைப் பிடிக்கவில்லை” என்று சொல்லி இன்னொருவனை இழுத்துக்கொண்டு போகலம். அவள் கைது செய்யப்படமட்டாள்

2. அந்தப் பெண் இன்னொருவனோடு ஓடிவிட்டாள். ஆனால் கைது செய்வது அந்த ஆணைத்தான். அதுவும் “கற்பழிப்பாம்”! கணவனை அம்போ என்று விட்டுவிட்டு கண்டவனோடு ஓடியவளுக்கு “கற்பு” எங்கிருந்து வந்தது? அதை எப்படி ஒருவன் “அழித்தானாம்”!

விந்தையான சட்டங்கள், நடைமுறைகள்!

மொத்தத்தில் கலாசாரச் சீரழிவு முழுமையாக நடந்து முடிந்து விட்டது!

ஆகையால் ஆண்களே, திருமணம் என்னும் பாம்புப் புற்றில் கை வைக்காதீர்கள்!

காதல் கசந்தால் 498A

விழுப்புரத்தில் மனைவியிடம் வரதட்சணை கொடுமை செய்த கணவனுக்கு வலைவீச்சு

விழுப்புரம், ஜுன்.26- 2009. தினத்தந்தி.

விழுப்புரத்தில் மனைவியிடம் வரதட்சணை கொடுமை செய்த கணவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம் வி.மருதூரை சேர்ந்த சண்முகத்தின் மகன் அசோக்குமார் (44). அதே பகுதியை சேர்ந்தவர் பவானி (32).
அசோக்குமாரும், பவானியும் ஒருவரையொருவர் உயிருக்கு உயிராக காதலித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் அசோக் குமார் தனது மனைவி பவானியிடம், உனது பெற்றோர் வீட்டில் இருந்து வரதட்சணை வாங்கி வரும்படி பவானியை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பவானி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அசோக்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.

பள்ளி மாணவிகளின் முழு விடுதலை

தற்போது இணையத்திலும், செல்ஃபோன்களிலும், சிடி மூலமாகவும் அதிகம் கண்டு களிக்கப்ப்டும் ஜிலுஜிலு காட்சிகள் பள்ளி மாணவிகள் தங்கள் யூனிஃபார்முடன் ஒரு பயமுமில்லாமல் உல்லாச ஜல்சாக்களில் ஈடுபடும் இயற்கை வீடியோக்கள்தான்! இவை தன்னிச்சையாக அவர்கள் இன்பம் துய்க்கும்போது மறைவிலிருந்து எடுக்கப்படுவதால் பெரிதும் விரும்பிப் பார்க்கப்படுகிறது.

இத்தகைய பெண்கள் பல ஆண் பையன்களுடன் பகிரங்கமாக கலவையிலும் மற்றும் வாய்ப் புணர்வில் ஈடுபடும் காட்சிகளை பார்க்குகளிலும், பீச்சிலும், இன்னும் ஆளரவம் அதிகமில்லாத பாழடைந்த இடங்களிலும், வள்ளுவர் கோட்டம் போன்ற விஸ்தாரமான மண்டபங்களிலும் காணலாம்.

(இது போன்ற ”முழு விடுதலை” பெற்ற பெண்கள் ஒவ்வொருவரையும் ஒரு பைத்தியக்காரன் பிற்காலத்தில் திருமணம் செய்து கொள்ளப் போகிறான்! அவன் கதி என்ன!! இது போன்ற பெண் திலகங்கள்தான் மணமானவுடன் கணவனிடம் பணம் கறக்க 498A பொய்க் கேசு போடுவார்கள்!)

வேலூர் போன்ற ஊர்களில் இன்னொருவர் பார்க்கிறார்களே என்பதைப் பற்றிக்கூடக் கொஞ்சமும் கவலைப் படாமல் அவர்கள் பாட்டுக்கு ஜல்சாக்களில் ஈடுபடுவதைப் பற்றி பல பத்திரிக்கைகளில் எழுதியிருந்ததைப் படித்திருப்பீர்கள்.

இந்த லிஸ்டில் இப்போது விழுப்புரமும் சேர்ந்திருக்கிறது.

இந்தச் செய்தியை வாசியுங்கள் (நன்றி - தினமலர்):-

விழுப்புரம் பகுதியில் பள்ளிக்கு செல்வதாக கூறி ஊர் சுற்றும் மாணவிகள். பெற்றோர்களே உஷார்!

விழுப்புரம் நகரத்தை சுற்றி ஏராளமான நகர்கள் உருவாகியுள்ளன. இதற்கு காரணம் கிராமப்பகுதியில் இருந்து ஏராளமானவர்கள் தங்களது பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக விழுப்புரம் நகரத்திலும் அதனை சுற்றியுள்ள பகுதியிலும் குடியேறியுள்ளது தான்.

விழுப்புரம் நகரத்தில் அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் அதிகம் உள்ளதால் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் தங்களது மகள்களை படிக்க வைக்க பஸ் மூலமாகவோ அல்லது சைக்கிள் மூலமாகவோ அனுப்பி வைக்கின்றனர். ஆனால் அவர்களின் மகள்கள் பள்ளிக்கு செல்கிறார்களா என்று தொடர்ந்து கண்காணிப்பது கிடையாது.

இதில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு ஒரு சில மாணவிகள் பள்ளிக் கூடத்திற்கே செல்லாமல் விழுப்புரம் நகரங்களில் இருந்து கிராமப்புறங்களுக்கு செல்லும் சாலைகளிலும் உதாரணத்திற்கு மக்கள் நடமாட்டம் இன்றி போக்குவரத்து இன்றி சாலைகளான பானாம்பட்டு, காகுப்பம், பொய்யப்பாக்கம் மற்றும் விழுப்புரம் நகராட்சி பூங்கா போன்ற இடங்களில் பள்ளி சீருடையிலேயே மாணவிகள் சுற்றித் திரிவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

அதேபோல் 10, 12-ம் வகுப்பு தேர்வுகளில் தோல்வியடைந்த மாணவிகளில் ஒரு சிலர் டியூசனுக்கு செல்வதாக கூறி டியூசனுக்கு செல்லாமல் ஊர் சுற்றி வருகின்றனர்.

இன்றைக்கு ஒரு சில மாணவிகளிடத்தில் செல் போன்கள் உள்ளது. செல்போன் இல்லாத மாணவிகளை பார்ப்பதே அரிதாக உள்ளது.அந்த செல்போன்களை அவர்களது பெற்றோர்கள் தான் வாங்கிக் கொடுத்தார்களா அல்லது வேறு யாராவது வாங்கி கொடுத்தார்களா என்பது தெரியவில்லை.

இப்படி பள்ளிக்கு, டியூசனுக்கு செல்லாமல் சுற்றித்திரியும் மாணவிகள் தங்களது வாழ்க்கையை பற்றி எண்ணிப் பார்க்காமலும் பெற்றோர்களை பற்றி சிறிதும் கவலைப்படாமலும் எல்லையை மீறி உலா வருகின்றனர்.

இதற்கு சாட்சியாக மேற்சொன்ன இடங்களில் மாணவிகளின் அந்த அத்துமீறிய காட்சிகளை காணலாம். ஆதலால் பெற்றோர்கள் தங்களது மகள்கள் தினமும் பள்ளிக்கு செல்கிறார்களா, டியூசனுக்கு செல்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டியது மிக முக்கியமாகும்.

ஒரு சில மாணவிகளின் பாதை மாற்றத்தினால் மற்ற மாணவிகளும் பாதை மாற நேரிடும். ஆதலால் ஒவ்வொரு பெற்றோரும் உஷாராக இருந்து தங்களின் மகள்களுக்கு நல்லதொரு அறிவுரையை கூறி அவர்களின் வாழ்க்கையை நெறிமுறைப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ஒரு சில மாணவிகளின் நீண்ட நாள் கண்காணிப்புக்கு பின்னர் தான் இதை சுட்டிக்காட்டு கிறோம்).

பெண்ணைக் கண்டிக்கலாகுமோ!

ஒரே நாளில் (ஜூலை 6, 2009) மூன்று தற்கொலைச் செய்திகள். மூவரும் இளம் பெண்கள். காரணம், பெற்றோர் கண்டித்தது.

இதுபோன்ற பெண்கள் திருமணமானபின் கணவனோ கண்வனின் பெற்றோரோ கண்டித்தால் இதைத் தவிர வேறு என்ன செய்வார்கள்!

ஆனால் ஒரு வித்தியாசம். மணமானபின் அவள் தற்கொலை செய்துகொண்டால் கணவனையும் அவனது பெற்றோரையும் கைது செய்து உள்ளெ தள்ளிவிடுவார்கள். இதற்கென்றே தனிச் சட்டங்கள் இருக்கின்றன!

இப்போது செய்திகள். நன்றி - தினத்தந்தி
-------------------------

1.
டி.வி.பார்ப்பதை தாய் கண்டித்ததால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை. ஆவடி, ஜுலை.6- 2009

ஆவடியை அடுத்த பட்டாபிராம் நவஜீவன் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் தேவன். இவரது மனைவி பானு. இவர்களுக்கு கவுசல்யா (வயது 16) மற்றும் நந்தினி (13) என்று 2 மகள்கள் உள்ளனர். கவுசல்யா ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். நந்தினி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 1-ந் தேதி மாலை இருவரும் பள்ளியில் இருந்து வீட்டுக்கு சென்றனர்.

கவுசல்யா சீருடையை கழற்றாமல் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார். இதை கவுசல்யாவின் தாய் கண்டித்தார். தாய் கண்டித்ததால் வருத்தம் அடைந்த கவுசல்யா அறைக்குள் சென்று விட்டார். வெகு நேரமாக கவுசல்யா வெளியே வராததால் உள்ளே சென்று பார்த்த போது கவுசல்யா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். அவரை உடனடியாக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கவுசல்யா நேற்று காலை மரணம் அடைந்தார்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
=======================
2.
சேத்தியாத்தோப்பு அருகேஇளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை. தாய் கண்டித்ததால் மனமுடைந்தார்

சேத்தியாத்தோப்பு, ஜுலை.6- 2009

சேத்தியாத்தோப்பு அருகே தாய் கண்டித்த தால் மனமுடைந்த இளம்பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கடலூர் மாவட்டம் சேத் தியாத்தோப்பு அருகே உள்ள மதுராந்தகநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் குண சேகரன்.இவரது மகள் குண பாரதி (வயது 25).இவர் சிதம் பரத்தில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் குணபாரதி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் சகஜமாக சிரித்து பேசிவந்ததாக தெரிகிறது.இதை பார்த்த அவரது தாய் ராஜகுமாரி, திருமண வயதாகும் நீ இப்படி எல்லோரிடம் சிரித்து பேசாதே என்று குண பாரதியை கண்டித்ததாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த குணபாரதி சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார்.இதை பார்த்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணா மலைநகர் மருத்துவ மனையில் அனுமதித்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.நேற்று முன்தினம் குண பாரதிக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இது பற்றி ராஜகுமாரி ஒரத்தூர் போலீசில் புகார் செய்தார்.அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோடீஸ்வரன் , சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
==============
3.

வேலகவுண்டம்பட்டி அருகே மாணவி தூக்கு போட்டு தற்கொலை. தந்தை கண்டித்ததால்

பரமத்திவேலூர்,ஜுலை.6- 2009

வேலகவுண்டம்பட்டி அருகே டியூசனுக்கு போகவில்லையே என மகளை கண்டித்ததால் மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள செட்டிப்பாளையம் புள்ளக்கவுண்டம் பட்டியை சேர்ந்தவர் மகாலிங்கம்(வயது 50). இவரது மனைவி நல்லம்மாள்(38). இவர்களது மகள் மனிஷா(வயது 14). இவள் மாணிக்கம் பாளையத்தில் உள்ள ஒரு பள்ளியில் 10- ம் வகுப்பு படித்து வந்தாள்.

இந்த நிலையில் சம்பவத் தன்று மனிஷா பள்ளிக்கு சென்று டினிசனுக்கு செல்லாமல் வீட்டிற்கு வந்து விட்டதாக தெரிகிறது. இதைதொடர்ந்து அவளது தந்தை மகாலிங்கம் தனது மகளை டினிசனுக்கு செல்லாததை கண்டித்ததாக தெரிகிறது.
இதனால் மாணவி மனிஷா மனம் உடைந்த நிலையில் இருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் அவள் தனது துப்பட்டாவால் கழுத்தில் சுருக்கு போட்டு கொண்டு வீட்டில் இருந்த மின்விசிறியில் தொங்கி தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக தெரிகிறது.
மாணவியின் தாய் நல்லம்மாள் கூலிவேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தவர் தனது கணவர் மகாலிங்கத்திடம் மகள் எங்கே? என கேட்டுள்ளார். மகள் வீட்டிற்குள் இருப்பதாக கூறியுள்ளார்.

இதையடுத்து நல்லம்மாள் வீட்டிற்குள் சென்று பார்த்த போது தனது மகள் மின்விசிறியில் தூக்கு போட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதை பார்த்து அலறினார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு மாணவியின் தந்தை மற்றும் அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தூக்கில் தொங்கி கொண்டு இருந்த மனிஷாவை துப்பட்டாவை அறுத்து உடனடியாக அவரை மீட்டு, திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் சேர்க்கப்பட்டாள். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக செத்தாள்.
இந்த சம்பவம் குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லைத் தல்லையில் போட்டுக் கொன்றாள் கணவனை

மற்றுமொரு கள்ளக் காதல் கொலை.

கோகுல் என்பவர் மறுமொழியில் கூறியுள்ளதுபோல் விவாகரத்தை சுலபமாகப் பெற முடிந்தால் இத்தகைய கொலைகளையாவது தடுக்கலாம். ஆனல் விவாகரத்து சட்டங்கள் தெளிவாக இல்லை. தற்கால சமூக அமைப்பு, மனநிலை, கண்ணோட்டம், ஊடகங்களின் தாக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்தச் சட்டங்கள் மாற்றப்படவேண்டும்.

தவிர நீதிபதிகளும் மனத்தளவில் விவாக ரத்துக்கு எதிராக இருக்கிறார்கள்.

இதில் உள்ள மற்றுமொரு பிரச்னை, ஜீவனாம்சம், குழந்தைகளின் பொறுப்பை யார் கையில் ஒப்படைப்பது போன்றவை. இவற்றையெல்லாம் ஒழுங்கு செய்து சீராக்கினல் இந்த கள்ளக் காதல் கொலைக்கு முற்றுப் புள்ளி வைக்கலாம்.

ஆனால் நம் அரசியவாதிகளும் பெண்ணிய அமைப்பாளர்களும் வேறு வேலை இருக்கிறதே! ஆண்களையும் அவனைப் பெற்றவர்களையும் கைது செய்து பணம் கறப்பதிலேயே அவர்கள் குறியாயிருப்பதால் முறையான செயலாகத்திற்கு அவர்களுக்கு நேரமும் இல்லை, முனைப்பும் இல்லை!

இனி செய்தி:-

-----------------------

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரைக் கொன்ற மனைவி கள்ளக் காதலனுடன் கைது.

ஆப்பிள் ஜுசில் தூக்கமாத்திரை கலந்து கொடுத்து தலையில் கல்லை போட்டு கொன்றது அம்பலம்

ஓசூர், ஜுன்.29- 2009. செய்தி - தினத்தந்தி

கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை. செய்த மனைவி கள்ளக் காதலனுடன் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சூளகிரி பக்கம் உள்ள காளிங்கவரம் பிரிவு ரோட்டில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் தலையில் கல்லை போட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தவர் கிருஷ்ணகிரி மாவட்டம் தவளம் கிராமத்தை சேர்ந்த திம்மராயன் மகன் முனிரத்தினம் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரது மனைவி காயத்ரி மற்றும் உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்களும் பிணமாக கிடந்தவர் முனிரத்தினம்தான் என்று உறுதி செய்தனர்.

திடுக்கிடும் தகவல்கள்

இதையடுத்து அவரை யார் கொலை செய்தார்கள்? எதற்காக கொலை செய்தார்கள்? என்று விசாரணை நடத்திய போது
இந்த கொலையில் துப்பு துலங்கியது. முனிரத்தினம் சொந்தமாக வேன் வாங்கி அதை அவரே ஓட்டி வந்தார். இந்த வேனை வாங்குவதற்கு கிருஷ்ணகிரி-சென்னை ரோட்டில் மெக்கானிக் கடை வைத்து இருக்கும் கிருஷ்ணன் என்கிற முத்து (வயது 29) உதவி செய்துள்ளார்.

அப்போது முனிரத்தினத்தின் வீட்டுக்கு கிருஷ்ணன் அடிக்கடி வந்து சென்றார். இந்த வேளையில் அவருக்கும் முனிரத்தினத்தின் மனைவி காயத்ரிக்கும் (32) பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.

இதை அறிந்த முனிரத்தினம் தனது மனைவி காயத்ரியை கண்டித்தார். இதனால் தங்களது கள்ளத் தொடர்புக்கு இடைனிறாக இருக்கும் கணவர் முனிரத்தினத்தை தீர்த்துக்கட்ட காயத்ரியும், கிருஷ்ணனும் திட்டம் போட்டதாக தெரிகிறது.

இதன்படி 17.6.09 அன்று இரவு முனிரத்தினத்தை கிருஷ்ணன், மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரிக்கு அழைத்து சென்றார். அங்கு ஏற்கனவே வாங்கி வைத்திருந்த 4 தூக்க மாத்திரையை ஆப்பிள் ஜுசில் கலந்து முனிரத்தினத்துக்கு கொடுத்தார்.

அதை குடித்த முனிரத்தினம் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, அவரை கிருஷ்ணன் தனது பட்டறையில் இருந்த வேனில் ஏற்றிக்கொண்டு சூளகிரி அருகே உள்ள காளிங்கவரம் பிரிவு ரோட்டிற்கு சென்றார். தூங்கிக் கொண்டு இருந்த முனிரத்தினத்தின் தலை மற்றும் கை பகுதியில் பெரிய பாறாங்கல்லை போட்டு கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இந்த கொலைக்கு காயத்ரியும் உடந்தையாக இருந்தார்.

பின்னர் அவர்கள் தங்களுக்கு ஒன்றும் தெரியாதது போல நடித்து வந்தனர். இதைத்தொடர்ந்து காயத்ரியிடம் , போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் தனது கணவரை இழந்து துயரப்படுவதாக கூறி அழுது புலம்பினார். இருந்த போதிலும் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

எப்படியும் போலீசாரிடம் சிக்கி விடுவோம் என்று பயந்த காயத்ரி தனது கள்ளக் காதலன் கிருஷ்ணனுடன் திடீரென தலைமறைவாகிட்டார். இதையடுத்து அவர்கள் பெங்களூர், மும்பை, பூனா, அகமதாபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி திரிந்தனர்.

காயத்ரி திடீரென தலைமறைவு ஆனதால் போலீசாருக்கு அவர் மீதான சந்தேகம் மேலும் வலுத்தது. அவரை போலீசார் வலை வீசி தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ஓசூருக்கு திரும்பி வந்த காயத்ரி மற்றும் கிருஷ்ணனை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரிடமும் நடத்திய விசாரணையில், அவர்கள் சேர்ந்து முனிரத்தினத்தை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். பின்னர் நடந்ததை போலீசாரிடம் வாக்கு மூலமாக அளித்தனர்.