சில மாதங்களுக்கு முன் ஹைதராபாத்தில் இரு பெண்கள் மீது ஆசிட் வீசியதற்காக மூன்று ஆண்களை என்கவுண்டரில் போட்டுத் தள்ளினார்கள் போலீசார். உடனே பல பெண்கள் இயக்கத்தினரும், பெண்ணிய வியாதிகளும், "பெண்" என்ற சொல்லைக் கேட்டவுடனேயே ஜொள்ளு விட்டு ஸ்கலிதமாகும் வெத்துவேட்டு ஆண்களும், "அவர்களை அப்படித்தான் கொல்ல வேண்டும். அநியாயமாக பெண்கள்மேல் ஆசிட் வீசியதற்கு அந்த ஆண்களை அப்படித்தான் கேள்வி முறையின்றி சுட்டுக் கொல்ல வேண்டும்" என்று கிரீச்சென்று கூக்குரலிட்டுக் கூத்தாடினார்கள்.
ஆனால் நேற்று ஒரு பெண், ஒரு போலீஸ்காரர் மீதே கலெக்டர் ஆபீசில் ஆசிட் ஊற்றினாளே, அவளை ஏன் என்கவுண்டரில் போடச் சொல்லிக் கேட்கவில்லை? எங்கே போனீங்க பெண்ணியவியாதிகளே! அன்று டை அடித்த தலையை பரப்பி வைத்துக் கொண்டு லிப்ஸ்டிக் போட்டு, கால் மேல் கால் போட்டுக்கொண்டு டிவி சேனலில் "அப்படிதான் ஆண்களை கொல்லவேண்டும். அதுதான் மிகவும் சரியான தண்டனை" என்று கோஷம் போட்ட பெரிய இடத்துப் பெண்மணிகள் எங்கே போனார்கள் இப்போது?
இந்த நாட்டில் வெகு சிக்கிறமே ஆண் குழந்தைகளை கருவிலேயே கொன்று விடுவார்கள். அல்லது கள்ளக் காதலுக்கு இடைஞ்சலாக இருக்கிறான் என்று வளர்ந்த பிறகு கொன்று விடுவார்கள் நம் பாரதி கண்ட புதுமைப் பெண்கள்.
சீ, வெட்கங்கெட்ட சமுதாயமடா இது!
இனி படியுங்கள் அந்த கண்றாவி செய்தியை:
திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம்
திருவள்ளூர் கலெக்டர் ஆபீசில் பரபரப்பு போலீஸ் காதலன் முகத்தில் ஆசிட் வீசிய காதலி கைது
திருவள்ளூர், ஆக. 26-
'திருமணம் செய்ய மாட்டேன்' என்று கூறிய காதலனின் முகத்தில் ஆசிட் வீசிய இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரி முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பாக்கம் முருகன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்து. இவரது மகள் சாந்தினி (எ) புவனேஸ்வரி (30). சென்னையில் உள்ள தனியார் ஏற்றுமதி கம்பெனியில் வேலை செய்கிறார். தினமும் பஸ்சில் வேலைக்கு செல்லும்போது சென்னை ராமாபுரம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்த சரவணன் (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சரவணன், சென்னை ஆயுதப்படையில் போலீஸ்காரராக இருக்கிறார். பஸ்சில் ஏற்பட்ட பழக்கம், காதலாக மாறியது.
இந்நிலையில், திருமணம் செய்துகொள்ளும்படி சாந்தினி வற்புறுத்தி வந்தார். திருமணத்துக்கு மறுத்த சரவணன், சாக்குபோக்கு சொல்லி தட்டிக் கழித்துவந்தார். ஆத்திரமடைந்த சாந்தினி, இதுபற்றி திருவள்ளூர் கலெக்டர் பழனிகுமாரிடம் புகார் செய்தார். புகாரை விசாரிக்க சமூகநலத் துறைக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன்படி, சமூக நல அலுவலர் லதா, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து சாந்தினி, சரவணனிடம் நேற்று விசாரணை நடத்தினார். அப்போது சாந்தினிக்கும் சரவணனுக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது. கோபத்தில் எழுந்த சாந்தினி, கைப்பையில் மறைத்து வைத்திருந்து ஆசிட்டை எடுத்து சரவணன் முகத்தில் வீசினார். முகம் வெந்து வலியால் துடித்த அவரை உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சரவணன் கொடுத்த புகாரின்பேரில், திருவள்ளூர் நகர போலீஸ் எஸ்ஐ லட்சுமிபதி வழக்குபதிவு செய்து சாந்தினியை கைது செய்தார். பின்னர் அவரை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் மத்திய சிறையில் அடைத்தார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
(செய்தி: தமிழ் முரசு. 27-08-2009)
Showing posts with label encounter. Show all posts
Showing posts with label encounter. Show all posts
ஆண்கள் ஆசிட் வீசினால் என்கவுண்டர். பெண்கள் வீசினால்?
Subscribe to:
Posts (Atom)