Showing posts with label கொடுமை. Show all posts
Showing posts with label கொடுமை. Show all posts

"என்னை தொடாதே. அந்த தகுதி உனக்கு இல்லை"

சிறுமி பர்பி, கண்ணீர் மல்க கூறுகையில்,"அப்பாவை பார்க்க வேண்டும் என, கேட்கும்போதெல்லாம், அம்மா என்னை கடுமையாக அடித்து துன்புறுத்துவார். விடுமுறை நாட்களில் அம்மா என்னுடன் நேரத்தை செலவிட மாட்டார். அவரது தோழிகளை வீட்டுக்கு வரவழைத்து பேசிக் கொண்டிருப்பார்" என்றார்.இவ்வாறு பர்பி கூறிக்கொண்டிருக்கும் போது, அவளது தாய் அனாமிகா வேகமாக வந்து, சமாதானப்படுத்த முயன்றார். இதைப் பார்த்த பர்பி, ஆவேசமாக,"என்னை தொடாதே. அந்த தகுதி உனக்கு இல்லை' என, அழத் துவங்கினாள்."


நீதிபதி அளித்த உணமையான சாக்லேட்!

செய்தி: தினமலர் - நவம்பர் 23,2009


கோல்கட்டா : வழக்கு விசாரணைக்காக கோர்ட்டுக்கு வந்த பத்து வயது சிறுமியை, நீதிபதியே, கடைக்கு அழைத்துச் சென்று சாக்லேட் வாங்கி கொடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் கோல்கட்டா கோர்ட்டில் நடந்தது. தனது தந்தையுடன் வசிக்க வேண்டும் என்ற, அந்த சிறுமியின் நீண்ட நாள் ஆசையையும் நீதிபதி நிறைவேற்றி வைத்தார்.

கோல்கட்டாவைச் சேர்ந்தவர் ராணா. இவரது மனைவி அனாமிகா. இவர்களுக்கு பத்து வயதில் பர்பி என்ற பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக ராணாவும், அனாமிகாவும் பிரிந்து வாழ்கின்றனர். குழந்தை பர்பி, அம்மாவுடன் தங்கி இருந்தாள். ஆனாலும், அப்பாவுடன் தங்கியிருக்க வேண்டும் என்பது தான், அவளது விருப்பம். குழந்தையை யார் வைத்துக் கொள்வது என்பதில் அனாமிகாவுக்கும், ராணாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. வேறு வழியின்றி இருவரும் கோர்ட் படியேறினர். கோல்கட்டா மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது.

விசாரணையின்போது, பர்பியும் கோர்ட் டுக்கு அழைத்து வரப்பட்டாள். "தந்தையுடன் தான், வசிப்பேன்' என, பர்பி உறுதியாக தெரிவித்தாள். இருந்தாலும், நீதிபதி முகோபாத்யாயா, இதில் அவசரப்பட்டு முடிவு எடுக்க விரும்பவில்லை. தந்தையின் மிரட்டல் காரணமாக, பயந்து போய் குழந்தை இவ்வாறு கூறுகிறதா என்பது உட்பட பல்வேறு சிந்தைனைகள் அவரது மனதில் ஓடின.நீதிபதி முகோபாத்யாயா, தனது இருக்கையை விட்டு எழுந்தார். நேராக சிறுமி பர்பி இருக்கும் இடத்துக்கு வந்தார். அடுத்ததாக கோர்ட்டில் நடந்த நிகழ்வு தான், அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

பர்பியின் கையை பிடித்து வெளியில் அழைத்துச் சென்றார், நீதிபதி. அருகில் இருக்கும் கடைக்குச் சென்று, சாக்லேட் வாங்கி கொடுத்தார். மகிழ்ச்சியுடன் அதை வாங்கிக் கொண்டாள், பர்பி. பின்னர், சிறுமிக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக பேச்சுக் கொடுத்தார்."இங்கே பார். இப்போது இருந்து நான் உனக்கு நண்பன். எந்த பள்ளியில் படிக்கிறாய்? உனது பொழுது போக்கு என்ன? உன் நண்பர்கள் யார்?' என, சிறுமியின் மனதுக்குள் இருப்பதை சிறிது, சிறிதாக கேட்டுத் தெரிந்து கொண்டார். நீதிபதியின் மென்மையான அணுகுமுறையால், அவர் மீது பர்பிக்கு நம்பிக்கை ஏற்பட்டது.

மீண்டும் கோர்ட்டுக்கு அழைத்து வந்தார். விசாரணை தொடர்ந்தது."உனக்கு ஏன் அம்மாவிடம் இருக்க பிடிக்கவில்லை' என, விஷயத்துக்கு வந்தார், நீதிபதி.இதற்கு சிறுமி பர்பி, கண்ணீர் மல்க கூறுகையில்,"அப்பாவை பார்க்க வேண்டும் என, கேட்கும்போதெல்லாம், அம்மா என்னை கடுமையாக அடித்து துன்புறுத்துவார். விடுமுறை நாட்களில் அம்மா என்னுடன் நேரத்தை செலவிட மாட்டார். அவரது தோழிகளை வீட்டுக்கு வரவழைத்து பேசிக் கொண்டிருப்பார்' என்றார்.இவ்வாறு பர்பி கூறிக்கொண்டிருக்கும் போது, அவளது தாய் அனாமிகா வேகமாக வந்து, சமாதானப்படுத்த முயன்றார். இதைப் பார்த்த பர்பி, ஆவேசமாக,"என்னை தொடாதே. அந்த தகுதி உனக்கு இல்லை' என, அழத் துவங்கினாள்.

பர்பியின் வாக்குமூலத்தை கேட்ட நீதிபதி, தனது தீர்ப்பை வாசித்தார். "பர்பியை அவளது தந்தையுடன் தங்கியிருக்க இந்த கோர்ட் உத்தரவிடுகிறது' என்றார். இதைக் கேட்ட பர்பி மகிழ்ச்சி அடைந்தாள். நேராக நீதிபதி இருக்கும் இடத்துக்கு சென்று,"நன்றி நீதிபதி அங்கிள்' என, கூறி விட்டு, வேகமாக தனது தந்தையின் கையை பிடித்தபடி, கோர்ட்டை விட்டு வெளியேறத் துவங்கினாள். சென்று கொண்டிருக்கும்போதே, நீதிபதியை நோக்கி தனது தலையை திருப்பி, மெல்ல புன்னகைத்தாள். அங்கு கூடியிருந்தவர்களின் முகங்களிலும் புன்னகை அரும்பியது.

============

இதுபோன்ற உணமையான "நீதி"பதிகளும் உள்ளனர்!

மன்னிக்க முடியாத குற்றம்!

ஆஞ்சனேயரை வணங்கிவிட்டு தன் அருமை மகனுடன் சிரித்துக்கொண்டு நிற்கும் இந்த அம்மையாருக்கு வயது சுமார் 60 இருக்கும். ஆனால் அவர்கள் முகத்தில் நீங்கள் காணும் மகிழ்ச்சி நெடுநாள் நீடிக்கவில்லை. ஏன்? என்னதான் நடந்தது?

பெங்களூரில் வசிக்கும் இவர் வீட்டுக் கதவு ஒருநாள் நள்ளிரவில் திடீரென்று தட்டப்பட்டது. அதிரடியாக உள்ளே நுழைந்தனர் சென்னையைச் சேர்ந்த சுமார் பதினோரு போலீசார். அவர்கள் இவரது முடியைப் பிடித்து அடித்து குண்டுக் கட்டாக அவர்கள் வந்த வண்டியில் தூக்கிப் போட்டு, பலநூறு கிலோமீட்டர் தூரம் இரவோடு இரவாக பொட்டலம் கட்டி இழுத்து வந்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

ஏன் இந்த அவசரம்? அவர் என்ன உலகம் முழுதும் தேடப்படும் ஒரு பயங்கரவாதியா? எங்காவது குண்டு வைத்தாரா?

ஐயோ, உங்களுக்கு என்ன தெரியும் - அந்த அம்மையார் சாதாரண குற்றத்தையா செய்திருக்கிறார்! கேட்டால் அதிர்ந்துபோய் அந்த நடவடிக்கை சரியானதுதான் என்பதை நீங்கள் உடனே ஒப்புக் கொள்வீர்கள். "எல்லாம் தெரிந்த" பெண்ணியவாத போலி அறிவுஜீவிகள் கூட அது சரிதான் என்பர்!

அந்த வயது முதிர்ந்த அம்மணியை அப்படி அடாவடியாகக் கைது செய்து இழுத்து வந்து சிறையிலடைக்காமல் மட்டும் இருந்திருந்தால் நம் நாட்டின் பாதுகாப்பு என்ன ஆகியிருக்கும், சட்டம், ஒழுங்கு என்ன கதியாகியிருக்கும், நினைத்துப் பாருங்கள்!

அப்படி அந்தப் பெண்மணி செய்ததாகச் சாட்டப் பட்டிருக்கும் குற்றம்தான் என்ன?

நம் நாட்டில் புகுந்து நம் நாட்டு அப்பாவி மக்களை இஷ்டப்படி சுட்டுப் பொசுக்கிவிட்டு, தற்போது நம் வரிப்பணத்தில் (சுட்டி) ஜெயிலில் சுக வாழ்க்கையை அனுபவித்து வரும் அஜ்மல் கசாப் போன்று தீவிரவாதம் ஏதாவது செய்தாரா?

சர்க்காருக்குச் சொந்தமான நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலத்தை கபளிகரம் செய்து ஏப்பம் விட்டாரா?

இன்னொருவர் நிலத்தை அபகரிக்க அதன் சொந்தக்காரரை மிரட்டினாரா?

2000 கோடி ஹவாலா மோசடி செய்தாரா?

57 கோடி ரூபாய் பி.எஃப் (PF) மோசடி செய்தாரா?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்காரர்கள் குற்றம் சாட்டும் (சுட்டி) 60,000 கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்தாரா?

இதெல்லாம் செய்திருந்தால்தான் பரவாயில்லையே. சாதாரணக் குற்றம்தானே என்று அவரை சும்மா விட்டிருக்கலாமே, அல்லது ஆசுபத்திரியில் படுக்க வைத்து ஃபிலிம் காட்டியிருக்கலாமே!

அவர் இவற்றையெல்லாம் விட மிகக் கொடிய பாதகம் அல்லவா புரிந்திருக்கிறார்!

அவர் செய்துள்ள அக்குற்றத்தின் முழுப் பரிமாணத்தை நீங்கள் அறிய வேண்டுமென்றால் சமீபத்தில் நம் நாட்டின் உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ள அதிகாரபூர்வ சுற்றறிக்கையை நீங்கள் அவசியம் வாசிக்க வேண்டும்.

அந்த சுற்றறிக்கை அப்படி என்னதான் சொல்கிறது?

"IPC Sec 498A சட்டம் பரவலாக தவறாக பயன்படுத்தப் படுகிறது. ஆகையால் ஒரு மனைவி புகார் கொடுத்தவுடன் அதில் சுட்டிய மனிதர்களைக் கைது செய்யாதீர்கள்."

இப்படி ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் (498A போன்று) 7 ஆண்டுகளுக்குக் குறைவாக தண்டனை விதிக்கப் பட்டிருக்கும் குற்றங்களின் அடிப்படையில் புகார் வந்தால் கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தடை விதித்து ஒரு சட்ட மாற்றத்தை இந்திய அரசின் சட்ட அமைச்சகத்தினர் கொண்டுவந்தார்கள். காரணம், பல லட்சக் கணக்கானவர்கள் சிறுசிறு குற்றம் புரிந்தவர்களாக குற்றம் சாட்டப்பட்டதால் கைது செய்ய்யப்பட்டு, ஆண்டுக் கணக்கில் ஒரு தீர்வும் இல்லமல் சிறையில் வாடுகிறார்கள்; அதனால் தனி மனித சுதந்திரம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது; சிறைகள் நிரம்பி வழிகின்றன; அரசுக்கு வெட்டிச் செலவும் ஆகிறது என்பதால் இதனைத் தடுக்க இந்த சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அத்திருத்தம் பாராளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரும் அதற்கு ஒப்புதல் அளித்துவிட்டார். ஆனால் இன்னமும் அந்த சட்டத் திருத்தம் ஒரு முறையான அரசு ஆணைமூலம் நடைமுறைக்குக் கொண்டு வரப்படவில்லை. காரணம்? வக்கீல்கள் தங்கள் வருமானம் போய்விடுமே என்று அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்களாம் (சுட்டி). இப்படிச் சொல்வது யார்? உள்துறை அமைச்சர் திரு. சிதம்பரம் அவர்கள்தான்! (மேல் விவரங்கள் இங்கே)

சரி, இந்த அரசாணையை நடைமுறைப் படுத்த வேண்டிய அமைச்சகம் எது? மத்திய உள்துறை அமைச்சகம்தான். ஏன் இன்னமும் அதை சட்ட பூர்வமாக்காமல் நாடாளுமன்றத்தையே கேலிக் கூத்தாக ஆக்கிக் கொண்டிருகிறார்கள்? அரசின் கடமை மக்களின் நன்மையை கருத்தில் கொள்வதா அல்லது பொய்க்கேசுகள் மூலம் ஜாமீன் எடுப்பது, ஈரங்கி வாங்குவது போன்ற வகைகளில் கட்சிக்காரர்களின் தலையைத் தடவி சில வக்கீல்கள் சம்பாதிப்பதற்குத் துணை போவதா? நீங்கள் இந்தக் கேள்வியை அமைச்சராவதற்குமுன் வக்கீல் தொழில் செய்தவராகிய தற்போதைய உள்துறை அமைச்சர் சிதம்பரம் அவர்களைத்தான் கேட்கவேண்டும்! (அவருடைய மனைவி திருமதி. சிதம்பரம் அவர்களும் ஒரு வக்கீல்தான் என்பது இங்கு தொடர்பில்லாத விஷயம்!)

இப்போது இந்த சுற்றறிக்கை மூலம் திரு. சிதம்பரம் அமைச்சராக இருக்கும் உள்துறை அமைச்சகம் இந்தச் சட்டம் வெகுவாக துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்று் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறது! சட்டத் திருத்ததை அமுல் செய்யாமல் வெறும் சுற்றறிக்கை விட்டுக் கொண்டிருப்பதன் மர்மம் என்ன?

மேற்குறிப்பிட்ட சுற்றறிக்கையில் கண்டுள்ள மேல் விவரங்களைப் பார்ப்போம்:-

In a communication sent to the Chief Secretaries and DGPs of all states and the Administrations of the Union Territories on October 13, the MHA has cited misuse of the clause.

“In some cases, every member of the husband’s family has been arrested, irrespective of whether they had a role in inflicting cruelty on the married woman or not. In some cases, the provisions have been used to settle personal scores. Cases have been reported where momentary anger has resulted in invocation of Section 498A, which resulted in the arrest of the members of the family shutting down any possibility of reconciliation in future and total collapse of the marriage. Even where there is a divorce proceeding, the case under Section 498A continues to persist because of the offence being non-compoundable,” the letter says.

இந்த 498A சட்டத்தின் துஷ்பிரயோகத்தால் அத்தகைய பொய்க் கேசு போடும் பெண்களின் கதி கடைசியில் என்ன ஆகிறது என்ப்தைப் பற்றி இந்தக் கடிதம் என்ன சொல்கிறது என்ப்தைப் பார்த்தீர்கள் அல்லவா! தீயது விதைத்தால் நல்லதா விளையும்!

சரி. அரசே ஒப்புக் கொள்கிறது. இந்த சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்றும், அதனால் பெண்கள் நலனே பதிக்கப்படுகிறது என்றும். பிறகு இந்த சட்டத்தைத் திருத்துவதுதானே?

இந்தக் கேள்விக்கு அந்தக் கடிதமே பதில் சொல்கிறது பாருங்கள்:-

The MHA letter, incidentally, says that in light of judicial pronouncements, an attempt was made earlier to find a via media by amending Section 498A to make the offence compoundable. “However, this could not be pursued because of the opposition from women organisations,” the letter says.

இப்பொது புரிகிறதா, வில்லன்கள் யாரென்று?

ஒரு சட்டத்திருத்தத்தை பாரளுமன்றம் நிறைவேற்றியும் வக்கீல்களின் வருமானத்தைக் காப்பாற்றுவதற்காக நிறுத்தி வைத்துள்ளனர்.

இன்னொரு சட்டத் திருத்தம் கொண்டுவருவதை பெண்ணிய இயக்கங்கள் "தங்கள் வருமானம் போய்விடுமே" என்ற பயத்தில் எதிர்ப்பதால் நிறுத்தி வைத்துள்ளார்கள்!

மக்களைப் பற்றி இவர்களுக்கு என்ன கவலை. It is evident that the government is playing into the hands of certain vested interests.

இந்த 498A சட்டம் முழுமையாக் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்று இதற்கு முன்னமையே ஒப்புக் கொண்டு அறிக்கை விட்டுள்ளவர்கள் யார்யார்?
  1. நம் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் அவர்கள்
  2. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் அவர்கள்
  3. இதை சட்டபூர்வ பயங்கரவாதம் என்று குறிப்பிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திரு.அர்ஜித் பசாயத் மற்றும் திரு.ஹெச்.கே.சீமா அவர்கள்
  4. ஆற்காடு இளவரசர் நவாப் முகம்மது அப்துல் அலி அவர்கள்

மற்றும் பல நீதிபதிகள், அரசியல்வாதிகள், மக்கள் நலத்தில் உண்மையான அக்கறை கொண்டோர்...

இதுதான் நம் நாட்டின் நிலைமை.

இது புரியாமல் பல ஜொள்ளுக் கிழங்கள் " ஐயகோ, பல அப்பாவி இளம் பெண்கள் இந்த ஆணாதிக்க சமூகத்தில் அபலைகளாக அலைகிறார்களே" என்று பிலாக்கணம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தச் சட்டத் திருத்தங்கள் நடைமுறைக்கு வரும் வரையில் மேலே நீங்கள் கண்ட படத்திலிருக்கும் வயதான அம்மமையார் போன்ற அப்பாவி முதியோர்களும், திருமணம் செய்து கொண்ட பாவத்திற்காக இளம் கணவர்களும், அவர்களின் சுற்றமும் சூழலும் ஒட்டு மொத்தமாகக் கைதாகி ஜெயிலுக்குப் போய்க்கொண்டிருக்க வேண்டியதுதான்!

ஆம். அந்த அம்மையார் ஒரு ஆணைப் பெற்றெடுத்து அவனுக்கு திருமணமும் செய்வித்த மன்னிக்க முடியாத குற்றத்தைத்தான் செய்துள்ளார்! அவர் நிச்சயம் கைது செய்யப்பட வேண்டியவர்தான் என்பதை இப்போது ஒப்புக் கொள்கிறீர்கள் அல்லவா?!

அவர் அனுபவித்த கொடுமைகளைப் பட்டியலிட்டு காவல் துறைத் தலைவருக்கு வடித்துள்ள கடிதத்தின் மூலம் அந்த சோகக்கதையை அறியலாம். நெஞ்சை திடப்படுத்திக் கொண்டு இங்கிருந்து அதனை டவுன்லோடு செய்து வாசியுங்கள்.

உங்கள் மனத்தில் தற்போது எழப்போகும் கேள்விகள்:-

  • தேசிய பெண்கள் வாரியத்தின் நோக்கில் இந்த முதிய அம்மையார் பெண்ணினத்தில் சேர்ந்தவராகக் கருத்தப்பட மாட்டாரா?

  • அது போன்ற இயக்கங்கள் தவறு செய்யும் பெண்களுக்காகத் தானா?

  • ஆண் பிள்ளையைப் பெறுவதே இந்நாட்டில் பெருங்குற்றமா?

  • இதுபோல் ஒருதலைச் சார்பான சட்டங்களின் தவறான பயன்பாடு இன்னும் அதிகமாகப் பெருகி ஒரு கட்டத்தில் சமூகக் கிளர்ச்சி ஒன்று ஏற்படும் அபாயம் உள்ளதே, ஏன் ஒருவரும் இதற்கான தீர்வை செயல்படுத்த மறுக்கிறார்கள்?

  • இந்நாட்டு ஆண்களைப் பொறுத்தவரை திருமணம் என்பதே பாம்புப் புற்றில் கைவிடுவது போன்று ஆகிவிட்டதே; சீக்கிறமே ஆண்சிசுக் கொலைகள் நடக்கத் தொடங்கிவிடுமா?"


பதில் உங்கள் கையில்!

ஆணின் உயிர் ஒரு செல்லாக்காசு!

ஒரு பெண் புகார் கொடுக்கிறார் என்றால் அதை உடனே கவனிக்கவேண்டியது நம் சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தினருக்கும் விதிக்கப்பட்ட கடமையல்லவா!

அதுவும் தன் கணவன்மேல் புகார் கொடுத்தால் அதை தலைபோகிற அவசரமாகக் கருதி அந்தப் பெண்பாவையின் துயர் துடைக்க காவல்துறை அதிவேகமாக - அது இரவு நேரமாக இருந்தாலும் சரி - விரைந்து சென்று அந்த குற்றவாளியை (அதுதான் கணவன் - சட்டத்தின் கண்முன் ஒவ்வொரு மணமான ஆணும் குற்றவாளிதானே!) கைது செய்து அவனைச் செவ்வனே "விசாரணை" செய்து அந்தப் பெண்ணுலத் திலகத்தின் மனத்தில் மகிழ்ச்சியூட்ட வேண்டாமா! இதுதானே நம் சமூகத்தின் கடமை. அதற்காகத்தானே அடுக்குமேல் அடுக்காக பல ஆணழிப்புச் சட்டங்களை உருவாக்கி பழி வாங்கிக் கொண்டிருக்கிறோம்.

இப்போது செய்தி:

முதலில் இன்றைய (ஆகஸ்டு 19, 2009) தினமலரில் வெளிவந்தது:

நீலாங்கரை: மனைவி கொடுத்த புகாரின் பேரில், விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லப்பட்ட நபர் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் நீலாங்கரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், செய்யார் அடுத்த பாலூரை சேர்ந்த நந்தன் என்பவரின் மகன் ரமேஷ் (34). இவரின் மனைவி உஷாராணி (32).கடந்த 14 ஆண்டுகளுக்கு முன், நீலாங்கரையில் உள்ள ஒரு தனியார் இறால் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது, உடன் வேலை பார்த்த உஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின், கொட்டிவாக்கம், வெங்கடேசபுரத்தில் வசித்து வந்தனர். இவர்களுக்கு, பிரியதர்ஷினி (12) என்ற மகளும், கீர்த்திவாசன் (9) என்ற மகனும் உள்ளனர். வெங்கடேசனுக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால், குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு வந்தது.

ரமேஷ் நேற்று முன்தினம் நள்ளிரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது, உஷாவுடன் தகராறு ஏற்பட்டது.இதில், மனைவியை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, 108 எண்ணுக்கு போன் செய்த உஷா, தன்னை கணவர் கொலை செய்ய முயற்சிப்ப தாக புகார் செய்தார்.இது தொடர்பாக, நீலாங் கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இரவுப் பணி பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் மூன்று போலீசார், வெங்கடேசபுரம் சென்று தகராறில் ஈடுபட்ட ரமேஷை நீலாங்கரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.பின், போலீஸ் ஸ்டேஷனில் வைத்து அவரை விசாரித்தனர்.

விசாரணை முடிந்ததும் ரமேஷிற்கு ஜாமீன் வழங்கி, வீட்டிற்கு அனுப் பினர். போலீஸ் ஸ்டேஷனை விட்டு வெளியேறிய ரமேஷ், திடீரென மயக்கம் போட்டு விழுந்தார்.உடனடியாக அவரை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென் றனர். அங்கு மருத்துவர்கள் கை விரித்து விட்டதால், அடையாறில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.அங்கு ரமேஷை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ரமேஷ் இறந்த தகவலறிந்து அவரின் உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.அவர்களை போலீசார் சமாதானப் படுத்தினர். பின், ரமேஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப் பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.இச்சம்பவம் குறித்து ரமேஷின் உறவினர்கள் கூறுகையில்,"நேற்று (நேற்று முன்தினம்) நள்ளிரவு உஷா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வந்தனர்.

வீட்டிற்கு அருகிலேயே ரமேஷை அடித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்து சென்றனர். அங்கும் ரமேஷை போலீசார் தாக்கினர்.போலீசார் அடித்ததால் தான் அவர் இறந்தார். எனவே, ரமேஷை கண்மூடித்தனமாக தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தான் அவரின் உடலை பெற்றுக் கொள்வோம்,' என்றனர்.இது குறித்து, துரைப்பாக்கம் உதவிக் கமிஷனர் முரளி கூறுகையில்,அவரின் உடலில் எந்தவித காயமும் இல்லை. இதயகோளாறு காரணமாக அவர் இறந்ததாக கூறப் படுகிறது.இருப்பினும், பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியவரும்,' என்றார். ரமேஷ் மரணம் குறித்து ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
-------------------------------------
Times of India Reports:

Ramesh’s relatives had a different version about the whole incident. According to them he had been staying away from his wife and was living with his sister. He was caught by a vehicle checking team when he was riding a two-wheeler and his bike was seized as he had no documents to support them. He had told the police that he would produce the papers for the two-wheeler and had gone to the house in Kottivakkam only to pick up the vehicle documents. His wife Usha thought that he had come to torture her and called the police, his relatives alleged. They said Ramesh had no history of any illness.

Ramesh had married Usha after a brief courtship, around
16 years ago. Police said the couple used to have regular fights and that they had been staying separately for a few months.

---------------------------------

அடுத்து தினத்தந்தியில் வெளிவந்துள்ள செய்தி:-

ஆலந்தூர், ஆக.19-

குடும்ப தகராறில் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட வாலிபர் மர்மமான முறையில் இறந்தார். போலீசார் அடித்து கொலை செய்து விட்டதாக கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்ததால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

காதல் திருமணம்

சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே உள்ள கொட்டிவாக்கம் வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 35). இவரது சொந்த ஊர் செய்யூர் அருகே உள்ள பாலூர் கிராமம் ஆகும்.

இவருடைய மனைவி உஷாராணி (32). இவருக்கு சொந்த ஊர் தஞ்சாவூர். கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் ரமேஷ்-உஷாராணி ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகளும், 9 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

தகராறு

உள்ளகரத்தில் உள்ள பெட்ரோல் பங்க்கில் ரமேஷ் வேலை பார்த்து வந்தார். ரமேஷ் மது அருந்தி விட்டு வருவதால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். இதனால் கடந்த ஒரு வாரமாக ரமேஷ் வீட்டிற்கு வராமல் இருந்தார். நேற்று முன்தினம் இரவு ரமேஷ் குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. உடனே இது பற்றி உஷாராணி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார்.

உடனே நீலாங்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன், 4 போலீசாருடன் சம்பவ இடத்திற்கு வந்தார்.

சாவு

குடிபோதையில் மனைவியுடன் தகராறு செய்த ரமேசை போலீசார் வீட்டின் முன் அடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் நீலாங்கரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் மயங்கி விழுந்தார்.

உடனே போலீசார் ரமேசை தூக்கிக் கொண்டு நீலாங்கரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளித்த டாக்டர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறினார்கள்.

இதையடுத்து போலீசார் தங்கள் காரில் அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ரமேஷ் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார்கள்.

மறுப்பு

இது பற்றிய தகவல் கொட்டிவாக்கம் பகுதியில் காட்டு தீ போல் பரவியது. ரமேசின் உறவினர்கள் அடையாறில் உள்ள மருத்துவமனையை முற்றுகையிட்டனர். போலீசார் அடித்ததால் தான் ரமேஷ் இறந்து விட்டதாக கூறி உடலை வாங்க மறுத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் அடையாறு துணைக்கமிஷனர் திருஞானம், துரைப்பாக்கம் உதவி கமிஷனர் முரளி மற்றும் போலீசார் விரைந்து சென்று சமரசம் பேசினார்கள். போலீசார் அடித்ததால் தான் ரமேஷ் இறந்து இருப்பதால் போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

நீண்ட நேரத்திற்கு பின் தனியார் மருத்துவமனையில் இருந்த ரமேஷ் உடலை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.

நடவடிக்கை

இது பற்றி போலீசார் கூறுகையில், ``குடிபோதையில் ரமேஷ் இருந்ததால் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தோம். சிறு வழக்கு போட்டு வீட்டிற்கு செல்லுமாறு கூறினோம். ஆனால் ரமேஷ் போலீஸ் நிலைய வாசலில் மயங்கி விழுந்தார். உடனே போலீசார் ரமேசை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே ரமேஷ் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மாரடைப்பு ஏற்பட்டதால் ரமேஷ் இறந்து இருக்கலாம்'' என்று தெரிவித்தனர்.

ஆனால் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும் வரை ரமேசின் உடலை வாங்க மாட்டோம் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

ஆர்.டி.ஓ. விசாரணை

இந்த நிலையில் ரமேசின் மர்ம சாவு பற்றி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்திட சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். ஆர்.டி.ஓ. விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை முடிவின் அறிக்கை பெற்றபிறகு தான் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தினால் கொட்டிவாக்கம், நீலாங்கரை கிழக்கு கடற்கரை சாலையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

மிஸ்டு கால் விளையாட்டு!

3 பெண் குழந்தைகளுடன் மாயமான பெண் எங்கே?

செல்போனில் `மிஸ்டுகால்' கொடுத்து விளையாட்டு காண்பித்து வருகிறார்

சேலம், ஜுலை.24- 2009. செய்தி - தினத்தந்தி

3 குழந்தைகளுடன் காணாமல்போன பெண், செல்போனில் மிஸ்டுகால் கொடுத்து விளையாட்டு காண்பித்து வருகிறார். அவரது தாய்மாமனிடம் விசாரிக்க போலீசார்
முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கிருஷ்ணகிரியில் உள்ள கிருஷ்ணப்பா `லே' அவுட் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். தையல் தொழிலாளி. இவரது மனைவி உமா(வயது30). இந்த தம்பதிகளுக்கு ரம்யா(12), சூர்யா(12), தீபிகா(5) என்ற 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களில் ரம்யாவும், சூர்யாவும் இரட்டையர்கள்.

கடந்த 11-ந் தேதி தனது குழந்தைகளான ரம்யா, சூர்யா ஆகியோரை சேலம் அடுத்துள்ள அயோத்தியாபட்டணத்தில் உள்ள தனியார் கிறிஸ்டியன் பள்ளியில் 8-ம் வகுப்பு சேர்த்து விட்டு அங்கேயே விடுதியில் விடுவதற்காக உமா பஸ்சில் சேலம் வந்தார். உடன் இளைய மகள் தீபிகாவையும் அழைத்து வந்தார்.

சேலம் 5 ரோட்டில் பஸ்சில் வந்து இறங்கியதும், தனது கணவர் சுப்பிரமணியனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நல்லபடியாக பஸ்சில் வந்து சேர்ந்து விட்டோம். இனி நான் பள்ளியிலும், விடுதியிலும் ரம்யா, சூர்யா ஆகியோரை சேர்த்து
விட்டு தீபிகாவுடன் ஊருக்கு புறப்பட்டு வந்து விடுவேன் என உமா தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் சொன்னபடி, உமா ஊர் திரும்பவில்லை. 2 குழந்தைகளை பள்ளியிலும் சேர்த்து விடவில்லை.

மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் மாயமானது குறித்து சேலம் அழகாபுரம் போலீஸ் நிலையத்தில் கணவர் சுப்பிரமணியன் புகார் தெரிவித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் துரை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தேடிவந்தார்.

`மிஸ்டுகால்' விட்ட உமா

மாயமான உமா, மகள்கள் ரம்யா, சூர்யா, தீபிகா ஆகியோரை தேடி நாமக்கல், தர்மபுரி ஆகிய இடங்களில் உள்ள உறவினர் வீடுகளுக்கு போலீசார் சென்று தேடுதல்வேட்டை நடத்தினார்கள். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் உமா, தனது கணவர் சுப்பிரமணியனின் செல்போனுக்கு,தன்னுடைய செல்போனில் இருந்து `மிஸ்டுகால்' விடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து அதே எண்ணுக்கு போலீசார் தொடர்பு கொண்டபோது நீண்ட `ரிங்' சென்றதே தவிர, அதை எடுத்து உமா பேச தயாராக வில்லை. மீண்டும் மீண்டும் தொடர்பு கொள்ள போலீசார் முயற்சித்தபோது செல்போன் `சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது.

ஏற்கனவே, சுப்பிரமணியன் கொடுத்த புகாரில், கிருஷ்ணகிரியை சேர்ந்த உமாவின் தாய்மாமன் சிவா மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்து இருந்தார். அதைத்தொடர்ந்து இன்று போலீசார் கிருஷ்ணகிரி சென்று, தாய்மாமனிடம் விசாரிக்க திட்டமிட்டு
இருப்பதாக இன்ஸ்பெக்டர் துரை தெரிவித்தார்.

இரண்டு மாத குழந்தைமீது வரதட்சணை புகார்!

”ஜோயா” (Zoya) என்னும் இரண்டே மாதக் குழந்தை (அதுவும் பெண் குழந்தை) மீது அக்குழந்தை தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தியதாக 498A வழக்கு பதிவு செய்துள்ளார் ஒரு பெண் குலத் திலகம். இதுவரை 3 வயதுக் குழந்தை மீதுதான் இத்தகைய புகார் கொடுக்கப்பட்டது. தற்போது இரண்டு மாதக் குழந்தை மேல் வரதட்சணைப் புகார் கொடுத்து சாதனை புரிந்துள்ளார் ஷகீலா என்னும் பெண் பேய்.


ஆனால் இன்னமும் இந்த 498ஏ சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்று கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் பல பெண்ணியவாதிகளும், வக்கீல்களும், கிரிஜா வியாஸ் போன்ற அரசியல்வாதிகளும். ஏனெனில் இந்த சட்டத்தின் மூலம் இந்தப் பேர்வழிகளுக்கு நிறைய பகல் கொள்ளை அடிக்க முடிகிறது.

இந்த ஜோயாவும் அந்தக் குழந்தையின் தாயும் இவர்களுக்கு பெண்ணாகத் தெரியவில்லையா? தேசிய பெண்கள் ஆணையமும், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சரும் என்ன செய்கிறார்கள்? வரதட்சணை புகார் கொடுத்து, கணவன்மாரையும் அவர்களது பெற்றோரையும், உற்றாரையும், நண்பர்களையும், சிறு குழந்தைகளையும் கைது செய்து சிறையிலடைத்து, அதன் பின் கட்டப் பஞ்சாயத்து செய்து அவர்களிடமிருந்து லட்சக் கணக்கில் பணம் கறந்த பின் வழக்கை சமரசத்தின் பேரில் முடிக்கும் நடைமுறைதான் அனைத்து 498ஏ கேசுகளிலும் நடந்து கொண்டு வருகிறது. இதில் நிறைய பணம் விளையாடுவதால் இந்த சட்டத்தின் நடைமுறைத் தவறுகளை நியாயப் படுத்திக் கொண்டு, இதைத் திருத்த எடுக்கப்படும் முயற்சிகளுக்கும் முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர்.

இனி இந்தச் செய்தியை வாசியுங்கள். இரண்டு மாதக் குழந்தை மீது 498ஏ புகார் கொடுத்துள்ள அந்தப் பெண் மேல் உங்களுக்குக் கோபம் வரவில்லையெனில் நிச்சயம் நீங்கள் மலம் தின்னும் பன்றியிலும் கேடு கெட்டவர் என்பது திண்ணம்!

------------------------------

செய்தி - தினமலர் - ஜூன் 24, 2009

மும்பை:மும்பையில் வரதட்சணை கொடுமை வழக்கில் சேர்க்கப்பட்ட இரண்டு மாத பெண் குழந்தைக்கு, செஷன்ஸ் கோர்ட் முன்ஜாமீன் வழங்கியது. அந்தக் குழந்தை, ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும், (நீதிபதிகளின் அறிவுக் கொழுந்துகளைப் பார்த்தீர்களா - 2 மாத சிசு கையெழுத்திட வேண்டுமாம்!) 10 ஆயிரம் ரூபாய்க்கான உத்தரவாதத்தைத் தர வேண்டும் என, தெரிவிக்கப் பட்டுள்ளது.

வரதட்சணை கொடுமை வழக்கில் இரண்டு மாத பெண் குழந்தை சேர்க்கப்பட்ட விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

மும்பையைச் சேர்ந்தவர் சம்சுதீன் கான்; இவரின் முதல் மனைவி ஷகிலா. முஸ்லிம் சட்டப்படி அவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து செய்து விட்டார். அதன்பின் ரேஷ்மா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. அதற்கு, ஜோயா என பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 14ம் தேதி சம்சுதீன் கான், அவரின் இரண்டாவது மனைவி ரேஷ்மா, சம்சுதீனின் தாயார், சகோதரி மற்றும் இரண்டு மாத குழந்தை ஜோயா உட்பட, மொத்தம் எட்டுப் பேருக்கு எதிராக ஷகிலா வரதட்சணை கொடுமை புகார் ஒன்றைக் கொடுத்தார். மும்பையின் புறநகர் பகுதியான குர்லாவில் உள்ள நேரு நகர் போலீஸ் நிலையத்தில் இந்த புகாரை அளித்தார்.

உடன், குழந்தை ஜோயா உட்பட எட்டு பேரையும் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து போலீசார் விசாரித்தனர். பின்னர் குழந்தை ஜோயாவை தவிர்த்து மற்றவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தனர். இருப்பினும், ஷகிலா கொடுத்த புகாரில் குழந்தையின் பெயர் இருந்தது.அதனால், மற்றவர்களுக்கு முன்ஜாமீன் பெறும் போது, குழந்தைக்கும் பெற வேண்டும் என, வக்கீல் தெரிவித்தார். இதையடுத்து, ஜோயா உட்பட எட்டு பேர் சார்பில் முன்ஜாமீன் கேட்டு மும்பை செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.நீதிபதி சர்தேசாய் முன் மனு விசாரணைக்கு வந்த போது, இரண்டு மாத குழந்தை ஜோயாவுடன் அவரின் தாயாரும், மற்றவர்களும் ஆஜராகினர். ஜோயா உட்பட ஏழு பேருக்கு மட்டும் முன்ஜாமீன் வழங்கப்பட்டது.

சும்சுதீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதனால், அவரின் சார்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டு, அது இன்று விசாரணைக்கு வருகிறது.ஜோயா குடும்பத்தினரின் வக்கீல் அனில் போலே இதுபற்றி கூறுகையில், "முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவில், குழந்தை ஜோயாவின் பெயர் மற்றும் வயதை குறிப் பிட்டிருந்தேன். ஆனால், போலீசாரோ, அரசு தரப்பு வக்கீலோ அதை கவனத்தில் கொள்ளவில்லை' என்றார்.
---------------
குழந்தை ஜோயாவின் தாய் ரேஷ்மா கான் பகல் 1 மணியிலிருந்து இரவு 10 மணிவரை தன் கைக் குழந்தையுடன் காவல் நிலையத்தில் கழிக்க வேண்டியிருந்தது மிகக் கொடுமை.
இந்தக் கொடுமையான நிகழ்ச்சியின் மேல் விவரங்களை இங்கு காணலாம்.

தற்கொலைகள்

செய்தி - 1


நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள வெப்படையை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 25) டெம்போ டிரைவர். இவரது மனைவி பவித்ரா (19). இவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 1- 1/2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை தன்னை தனது பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்று விடும்படி பவித்ரா தனது கணவரிடம் கூறியதாக தெரிகிறது. இதற்கு பழனிச்சாமி தனக்கு வேலை உள்ளது என்றும் வேண்டுமானால் உனது தாயாரை வரவழைத்து அவருடன் செல் என கூறியதாகவும் தெரிகிறது. நீங்கள் கொண்டு வந்து விடுங்கள் என கூறி கண வரிடம் பவித்ரா வாய் தகராறில் ஈடுபட்டதாக தெரி கிறது. இந்த நிலையில் பழனிச் சாமி வேலைக்கு சென்று விட்டார்.
பின்னர் மனம் உடைந்த நிலையில் இருந்த பவித்ரா வீட்டில் இருந்த மண் எண்ணையை உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீ வைத்து கொண்டு இறந்தார்.

இது குறித்து பள்ளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பவித்ராவிற்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகளே ஆவதால் ஈரோடு உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.


(தற்கொலைக்கான காரணத்தைக் கவனியுங்கள்)


செய்தி - 2


நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள மானத்தியை அடுத்த மேட்டுகாட்டு தோட்டத்தை சேர்ந்தவர் செந்தில்ராஜா (வயது 20). இவருக்கும் கொண்டிசெட்டிபட்டியை சேர்ந்த சுப்பிரமணி மகள் நித்யாவிற்கும் கடந்த 1-1/2 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

நித்யாவும், செந்தில் ராஜாவும், செந்தில்ராஜா வீட்டில் கூட்டு குடும்பமாக குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் நித்யா தனது கணவரிடம் கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.


இந்தநிலையில் கடந்த 24-ந் தேதி செந்தில்ராஜா நித்யா வீட்டிற்கு சென்று நித்யாவை மிரட்டி தன் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் அவரிடம் 30 ஆயிரம் பணமும், 30 பவுன் நகை யும் உனது தந்தையிடம் வர தட்சணையாக கொண்டு வரச்சொல். இல்லையெனில் உன் தாய் வீட்டிற்கு அனுப்ப மாட்டேன் என கூறியதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நித்யாவின் தந்தைக்கு செந்தில்ராஜா போன் செய்து உங்களது மகள் மருந்து குடித்து விட்டதாகவும், அவரை நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளதாகவும் கூறினார்.

செய்தி அறிந்து அதிர்ச் சியடைந்த நித்யாவின் தந்தை நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்த போது தன் மகள் இறந்து கிடந்ததாகவும், காலின் விரல்களில் காயம் இருப்பதாகவும் எனவே மகள் சாவில் மர்மம் இருப்பதாகவும் வேலகவுண்டம்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் வேலகவுண்டம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கிழவர்களும் கொட்டி அழவேண்டியிருக்கும்!

வயதான மும்பை தம்பதியருக்கு விவாகரத்து கனத்த மனதோடு தீர்ப்பு வழங்கினார் நீதிபதி : மே 03,2009. தினமலர்

மும்பை:மும்பையில் 42 ஆண்டுகள் ஒன்றாக குடும்பம் நடத்திய தம்பதியர் விவாகரத்து பெற்றனர்.பார்சி சமூகத்தவர்கள் தான் நீண்ட நாட்கள் சந்தோஷமாக வாழ்வதாக சமீபத்தில் செய்தி வெளியானது. இந்நிலையில், 42 ஆண்டுகள் ஒன்றாக குடும்பம் நடத்திய பார்சி தம்பதியருக்கு மும்பை ஐகோர்ட், கடந்த வாரம்
விவாகரத்து வழங்கியது. "கணவர் என்னை அடித்து உதைத்து உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்துகிறார்' என மும்பை கோர்ட்டில் 74 வயது பெண், கடந்த 2007ம் ஆண்டு மனு செய்திருந்தார்.

குடும்ப கோர்ட் மூலம் இவர்களுக்கு சமாதானம் சொல்லி வழக்கை தள்ளி போட்டு கொண்டு வந்தனர். "இனி அந்த மனுஷனோடு வாழவே முடியாது” என வயதான பெண், வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரசூட்டிடம் உறுதியாக சொல்லி விட்டார்.இந்த வழக்கின் போது உடனிருந்த வயதான தம்பதியரின் மகளிடம், "ஏம்மா நீயாவது பெற்றோரை சமாதானப்படுத்தியிருக்கலாமே?” என நீதிபதி கேட்டார். "நான் பிறந்த வீட்டில் இருந்தவரை முயற்சி செய்தேன். என் கணவர் வீட்டுக்கு சென்ற பிறகு இவர்கள் சண்டையை நிறுத்த முடியவில்லை” என மகள் கூறினார்.

இன்னும் கொஞ்ச நாளைக்கு இந்த வழக்கை தள்ளி போடலாமா?' என நீதிபதி, வயதான பெண்ணிடம் கேட்டார். "முடியாது” என இருதரப்பிலும் பதில் வரவே, "கனத்த மனதோடு இந்த விவாகரத்தை வழங்குகிறேன்' என கூறி தீர்ப்பில்
கையெழுத்திட்டார் நீதிபதி சந்திரசூட்.

கணவரிடமிருந்து இரண்டு கோடி ரூபாய்க்கு ஜீவனாம்சம் கேட்டிருந்தார் அந்த பெண். ஆனால், 45 லட்ச ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்க நீதிபதி உத்தரவிட்டார்.
---------------

எந்த நிலையிலும், எந்த வயதிலும், யார்மேல் பிழை இருந்தாலும் கணவன் தான் காசு கொடுத்து தன்னை மீட்டுக் கொள்ள வேண்டும். இந்தியாவில் திருமணம் என்பது ஆணைப் பொருத்தவரையில் பாம்புப் புற்றில் கையை விடுவதுபோல்தான்!

பெண்ணியத்தின் முழு வெற்றி

”பெற்றோருக்காக தாய்மாமனை கைபிடித்தார்; காதலுக்காக காதலனிடம் கழுத்தை நீட்டினார்”

சென்னையில் ஒரே வாரத்தில் 2 பேரை மணந்த புரட்சிப் பெண் 2 தாலிகளையும் கையில் ஏந்தியபடி யாருடன் வாழ்வது என்று தவிப்பு!

சென்னை, ஏப்.7- 2009. செய்தி: தினத்தந்தி

சென்னையில் ஒரே வாரத்தில் 2 பேரை மணந்து இளம் பெண் ஒருவர் புரட்சி செய்துள்ளார். இப்போது 2 கணவர்கள் கட்டிய தாலிகளையும் கையில் ஏந்தியபடி யாருடன் வாழ்வது என்று தவித்தபடி உள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் கீதா (வயது 26). இவரது தந்தை அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். சைதாப்பேட்டையில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் வாலிபர் ஒருவரோடு கீதாவுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்தார்கள்.

இந்த நிலையில், பட்டாளத்தில் வசிக்கும் தாய்மாமனுக்கு கீதாவை திருமணம் செய்து கொடுக்க அவரது பெற்றோர் ஏற்பாடு செய்தனர். தாய்மாமனை மணக்க கீதா சம்மதிக்கவில்லை. உடனே கீதாவின் தந்தை திருமணத்துக்கு சம்மதிக்காவிட்டால் தூக்கில் தொங்கி உயிரைவிடுவேன் என்று பயமுறுத்தினார். இதனால் காதலை மறைத்துவிட்டு, தாய்மாமனை மணக்க கீதா சம்மதித்தார்.

கடந்த மாதம் 29-ந் தேதி அன்று கீதாவுக்கு தாய்மாமன் தாலி கட்டினார். திருமணம் முடிந்தவுடன் பட்டாளத்தில் வசிக்கும் தாய்மாமனோடு கீதா 5 நாட்கள் இல்லற வாழ்க்கை நடத்தினார். பின்னர் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்ற கீதா திடீரென்று காணாமல் போய்விட்டார். தியாகராயநகருக்கு ஷாப்பிங் போய்விட்டு வருவதாக சென்ற அவர் மாயமாகிவிட்டார்.

இதுபற்றி கீதாவின் தாய்மாமன் ஓட்டேரி போலீசில் புகார் கொடுத்தார். ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். கீதாவின் பெற்றோர் மகளை காணவில்லை என்று அசோக்நகர் போலீசில் புகார் கொடுத்தனர். அசோக்நகர் போலீசாரும் கீதாவை தேடினார்கள்.

இதற்கிடையில், நேற்று முன்தினம் கழுத்தில் மாலையுடன் தனது காதலனோடு கீதா திடீரென்று அசோக்நகர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். தாய்மாமனை பிடிக்கவில்லை என்றும், எனவே அவர் கட்டிய 5 பவுன் தாலி சங்கிலியை கழற்றி வைத்துவிட்டு, காதலனோடு சென்றுவிட்டதாகவும், காஞ்சீபுரத்தில் கோவிலில் வைத்து காதலனோடு திருமணம் நடந்ததாகவும் கீதா போலீசாரிடம் திடுக்கிடும் தகவல்களை கூறினார். அவரது கழுத்தில் காதலன் கட்டிய மஞ்சள் கயிறு தாலியாக தொங்கியது.

இந்த தகவல் தெரிந்து கீதாவின் பெற்றோரும், முதல் கணவரான தாய்மாமனும் அசோக்நகர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். தாய்மாமனிடம் அவர் கட்டிய 5 பவுன் தங்க தாலியை கீதா கொடுத்தார். `என்னை மன்னித்துவிடுங்கள், உள்ளத்தை ஒருவருக்கும், உடலை ஒருவருக்கும் கொடுக்க எனக்கு மனசு வரவில்லை. காதலனோடு வாழ அனுமதி கொடுங்கள்' என்று தாய்மாமனிடம் கீதா கெஞ்சினார்.

ஆனால், கீதாவை எந்த சூழ்நிலையிலும் விட்டு கொடுக்கமாட்டேன் என்று தாய்மாமன் பிடிவாதமாக கூறினார். திருமணம் என்பது ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் ஒருமுறை தான் வரவேண்டும். சட்டையை மாற்றுவதுபோல மனைவிகளை மாற்றும் பண்பாட்டில் நான் பிறக்கவில்லை. கீதாவோடு வாழ்வேன் அல்லது கடைசிவரை அவள் நினைவாகவே வாழ்க்கையை கழிப்பேன் என்று தாய்மாமன் கூறிவிட்டார்.

இந்த நிலையில், கீதாவின் காதலனும் கீதாவை விட்டு கொடுக்கமாட்டேன் என்று பிடிவாதமாக கூறினார். இந்த விசித்திர வழக்கை அசோக்நகர் உதவி கமிஷனர் சேது, பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகாந்தா ஆகியோர் விசாரித்தார்கள். முதலில் தாலி கட்டிய தாய்மாமனுடன் அனுப்புவதா? அல்லது 2-வதாக கைபிடித்த காதலனோடு கீதாவை அனுப்பி வைப்பதா? என்பது புரியாமல் போலீசார் குழப்பம் அடைந்தனர்.

இந்த நிலையில், போலீசாரை மேலும் குழப்பும் வகையில் புதிய விவகாரம் ஒன்று வந்தது. கீதாவின் காதலனுக்கு ஏற்கனவே ஒரு பெண்ணை அவரது பெற்றோர் நிச்சயம் செய்திருந்தனர். நிச்சயம் செய்த பெண் வீட்டாரும் தகவல் தெரிந்து அசோக்நகர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார்கள். அவர்கள் கீதாவின் காதலனுக்கு உரிமை கொண்டாடினார்கள். நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை நிறுத்தமாட்டோம் என்று அவர்களும் பிடிவாதம் பிடித்தனர்.

புதிய விவகாரம் போலீசாருக்கு மேலும் தலைவலியை கொடுத்தது. இந்த புதிய புயல் கீதாவை நிலைகுலைய வைத்தது. ஒருபக்கம் தாய்மாமன், இன்னொரு பக்கம் காதல் கணவன், காதல் கணவனுக்கோ நிச்சயிக்கப்பட்ட பெண் உரிமை கொண்டாடும் நிலை இப்படி முக்கோண குழப்பத்தில் கீதா திணறினார். நேற்று முன்தினம் இந்த பிரச்சினை பற்றி அசோக்நகர் போலீஸ் நிலையத்தில் விடிய, விடிய விசாரணை நடந்தது.

இறுதியில் போலீசார் அனைவரிடமும் கவுன்சிலிங் மூலம் பேசி ஒரு முடிவுக்கு வந்தனர். தற்சமயம் கீதாவை அவரது பெற்றோரிடம் ஒப்படைப்பது என்றும், 2 தாலிகளையும் அவரிடம் கொடுத்துவிடுவது என்றும், ஒரு வாரம் நிதானமாக யோசித்து, யாருடன் வாழ்வது என்பதை கீதா முடிவு செய்யட்டும் என்றும் போலீசார் ஒரு தீர்வை சொன்னார்கள்.

இதற்கு அனைவரும் ஒப்புக்கொண்டனர். கீதா அவரது பெற்றோரோடு அனுப்பி வைக்கப்பட்டார். இதற்கிடையில், கீதாவின் காதலனை தனியாக அழைத்து போலீசார் ஆலோசனை வழங்கினார்கள். நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மணந்துகொண்டால் அந்த பெண்ணுக்கும் வாழ்வு கிடைக்கும், கீதாவும் அவரது தாய்மாமனோடு சந்தோஷமாக வாழ்வார். எனவே, யோசித்து நல்ல முடிவை எடுங்கள் என்று அறிவுரை வழங்கினார்கள். காதலனும் ஒரு வாரத்தில் யோசித்து நல்ல முடிவை சொல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் என்ற சொல்படி கீதாவின் திருமண வாழ்க்கை எந்த கணவரோடு என்பதை விரைவில் காலம் முடிவு செய்யும் என்று போலீசார் எதிர்பார்த்தபடி உள்ளனர்.
----------------------

நிச்சயம் அந்தத் தாய்மான் மேல் வரதட்சணை கேட்டான் என்று 498A கேசு போடப்பட்டு அவர் உள்ளே தள்ளப்படும் சாத்தியக்கூறுகள் உள்ளன. பாவம் அய்யா அந்தப் பரிதாப தாய்மாமன்!

கழுத்துக்கு இரண்டு மூன்று பேரைத் திருமணம் செய்து கொண்டு தமிழகப் பெண்கள் முழு விடுதலை அடைந்து விட்டார்கள் என்று கும்மியடிப்போம்!

ஆசிரியை அடித்ததில் பள்ளி மாணவி சாவு

ஜெயராகினி ஜெயராகினி என்னும் ஒரு பள்ளி ஆசிரியை ஒரு மாணவியை தலையில் அடித்து சாகடித்துவிட்டு, பின் பிணத்தை தண்ணிர்த் தொட்டியில் வீசி விட்டதாக இந்த செய்தி கூறுகிறது.


ஆனால், இதை எப்படி நம்புவது? நம் இந்திய நாட்டு சட்டங்களின் படி வன்முறை என்றால் அதை ஆண்தானே செய்வான். பெண்கள் எந்தவித வன்முறையும் செய்ய இயலாதவர்கள். ஆண்கள் மட்டுமே கிரிமினல்கள். இப்படித்தானே இந்திய குடும்ப வன்முறைச் சட்டம் அறுதியிட்டுக் கூறி வரையறுத்து, ஆண்களின் கழுத்தை அறுத்துக் கொண்டிருக்கிறது!

இப்போது முழுச் செய்தியையும் படியுங்கள்:

திருச்சி: தண்ணீர் தொட்டியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த மாணவி, ஆசிரியை அடித்ததில் இறந்தது தெரியவந்துள்ளது. ஆசிரியை மற்றும் அதை மறைக்க உதவிய பள்ளி அலுவலர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்.பி., கலியமூர்த்தி கூறியதாவது:

மணப்பாறை புனித மரியன்னை துவக்கப்பள்ளியில், இரண்டு நாட்களுக்கு முன் பள்ளிக்கு வந்த மாணவி ஸ்ரீரோகிணி மர்மமான முறையில் தண்ணீர் தொட்டியில் பிணமாக கிடந்தார். இந்த வழக்கில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது இறந்த மாணவியின் வகுப்பாசிரியை ஜெயராகினி (25) மேல் சந்தேகம் எழுந்தது. இறந்த மாணவி பள்ளிக்கே வரவில்லை என, அவர் கூறி வந்தது, எங்களுக்கு அவர் மேல் சந்தேகத்தை எழுப்பியது. மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையில், மதிய உணவு சாப்பிட்ட அரை மணி நேரத்தில் தான் இறப்பு நிகழ்ந்துள்ளது; தண்ணீர் தொட்டியில் மூழ்கியதால் இறக்கவில்லை என்பதும் தெரியவந்தது.

ஆசிரியை ஜெயராகினியிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டது. மாணவி விளையாடும் போது மற்றவர்களுடன் தகராறு செய்ததால், பிரம்பால் தலையில் அடித்ததாக கூறினார். அதில் ஸ்ரீரோகிணி மூர்ச்சையாகி இறந்துள்ளார். பின், வகுப்பறையிலேயே தூங்குவது போல் படுக்க வைத்து விட்டு, பள்ளி முடிந்த பின், அங்கு பணியாற்றும் அலுவலர்கள் ஆரோக்கியராஜ் மற்றும் சகாயராஜ் ஆகியோர் மூலம் மாணவியின் பிணத்தை, வேறு பள்ளிக்கு அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் வீசிவிட்டதாகவும் ஒப்புக் கொண்டார்.இதையடுத்து, மாணவி ஸ்ரீரோகிணியை கொலை செய்ததாக ஆசிரியை ஜெயராகினி, அவருக்கு உதவிய பள்ளி அலுவலர்கள் ஆரோக்கியராஜ், சகாயராஜ் ஆகியயோர் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கலியமூர்த்தி கூறினார்.

(செய்தி: தினமலர். 28-03-2009)

ஆண் உயிரும் ஒரு மனித உயிர்தான்

மதுரை: தேனி மாவட்டம் ஓடைப்பட்டி அருகே வாலிபரை தற்கொலை செய்ய மனைவி தூண்டிய புகார் குறித்து பதிலளிக்கும்படி எஸ்.பி.,க்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

மதுரை பசும்பொன்நகரை சேர்ந்த வேணி தாக்கல் செய்த மனு: என் மகன் பூவைராஜா(23) மதுரையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவருக்கும் தேனி மாவட்டம் சின்னமனூர் மூர்த்திநாயக்கன்பட்டியை சேர்ந்த ராமமூர்த்தி மகள் உமாமகேஸ்வரிக்கும் (31) காதல் ஏற்பட்டது.

உமாமகேஸ்வரி மதுரை கல்லூரி ஒன்றில் எம்.பி.ஏ., படித்து வந்தார். அவர்கள் 2008 ஜூலை 21ல் திருமணம் செய்து கொண்டு சென்னை, திருப்பதி போன்ற இடங்களுக்கு சென்று வந்தனர். பிறகு உமாமகேஸ்வரி பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அவரை தேடி சென்ற என் மகனை உமா மகேஸ்வரியின் தந்தை, தாய், சகோதரியின் கணவர் சிவக்குமார், மற்றும் சகோதரர் மிரட்டியுள்ளனர்.

ஜன., 8ம் தேதி உமாமகேஸ்வரியின் வீட்டிற்கு அருகில் என் மகன் விஷம் குடித்து இறந்தார். ஓடைப்பட்டி போலீசார் தற்கொலை பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவரை தற்கொலைசெய்ய தூண்டிதாக உமாமகேஸ்வரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிய கோரி ஐ.ஜி., எஸ்.பி.,யிடம் மனு கொடுக்கப்பட்டது. சிவக்குமார் போலீஸ் துறையில் பணிபுரிவதால் நடவடிக்கை இல்லை.

தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிய உத்தரவிட வேண்டும். இவ்வாறு கோரினார். மனுதாரர் சார்பில் பாபுராஜேந்திரன் ஆஜரானார். மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி பி.ஆர்.சிவக்குமார், "இதற்கு பதிலளிக்கும்படி தேனி எஸ்.பி.,க்கு நோட்டீஸ் அனுப்ப' உத்தரவிட்டார்.

தந்தையிடம் பேசியதற்காக குழந்தைகளுக்கு சூடு போட்டாள் தாய்

முன்குறிப்பு:

“குடும்ப வன்முறை என்பது ஆண்கள் மட்டும் செய்வது. பாதிக்கப்பட்டவ்ர் என்றால் மனைவிதான்” - இந்திய குடும்ப வன்முறைச் சட்டம்.
இப்போது செய்தி:

பள்ளிப்பாளையம், பிப்.3- 2009 - செய்தி - தினத்தந்தி

பள்ளிப்பாளையத்தில் தந்தையிடம் சென்று பேசியதற்காக குழந்தைகளுக்கு காலில் சூடு போட்டதாக தாய் மற்றும் அவரது அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிப் பாளையம் வெப்படையை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 32) விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி தனக்கோடி (30). இவர்களுக்கு தினேஷ் (10), மனோஜ் (8) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 6 மாதகாலமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலுச்சாமியின் தாயார் சரசு தனது பேரக்குழந்தைகளை ஆவலுடன் பார்க்க சென்றார்.

அப்போது அங்கு அவர்கள் தங்கள் கால்களில் தாய் சூடு போட்டதாக இருவரும் தனது பாட்டி சரசுவிடம் காண்பித்தனர். இதற்கு காரணம் என்ன என்று கேட்டதற்கு சிறுவர்கள் இருவரும் தனது தந்தையை பார்த்து பேசியதற்காக அம்மா சூடு போட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து சரசு தனது மருமகள் தனக்கோடியிடம் சென்று ”ஏன் இப்படி செய்தாய்?” எனக்கூறி சத்தம் போட்டார். உடனே தனக்கோடியும், அவரது அண்ணன் தமிழரசு (35) இருவரும் சேர்ந்து ”நாங்கள் இப்படித்தான் செய்வோம். நீ யார் கேட்பதற்கு?” எனக்கூறியதாக தெரிகிறது. ”மேலும் ஏதாவது கூறினால் கம்பியால் அடித்து தொலைத்து விடுவோம்” என மிரட்டியதாக தெரிகிறது.

இது குறித்து சரசு பள்ளிப்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சரசுவை மிரட்டியதற்காகவும், சிறுவர்களுக்கு சூடு போட்டதற்காகவும் வழக்குப்பதிவு செய்து தனக்கோடியையும், அவரது அண்ணன் தமிழரசுவையும் கைது செய்து மேற் கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்.
------------

குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் ரேணுகா சவுத்திரி அம்மையார் இதற்கு ஏதாவது நடவடிக்கை எடுப்பாரா? அடடா, அவருக்கு இதற்கெல்லாம் நேரம் ஏது? அவர்தான் மங்களூரில் Pub-ல் தண்ணி போட்டு ஆடுவதற்கு பணக்கார இளம் பெண்களுகளின் உரிமைகளை நிலை நாட்டுவதில் பிசியாக இருக்கிறாரே!

‘தேவதையை கண்டேன்’ சினிமா பாணியில்

"வேறொருவரை மணப்பதாக கூறும் காதலி மீது நடவடிக்கை எடுங்கள்"

- புறநகர் கமிஷனரிடம் வாலிபர் புகார்

ஆலந்தூர், ஜன. 28: ‘தேவதையை கண்டேன்’ என்ற படத்தில் வருவது போன்ற சம்பவம், சென்னையில் நடந்துள்ளது.

தன்னை 4 ஆண்டுகளாக காதலித்துவிட்டு, இப்போது வேறு நபரை திருமணம் செய்யப்போவதாக கூறும் காதலி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டிடம் காதலன் புகார் கொடுத்துள்ளார்.

அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியைச் சேர்ந்தவர் ஐசக் சுஜின் (25), இன்ஜினியர். இவர், சென்னை புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

நந்தம்பாக்கம் கணபதி காலனியைச் சேர்ந்த ஷாலினி (23) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒரு நண்பர் மூலம் எனக்கு பழக்கமானார். இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். சென்னையில் உள்ள ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் ஷாலினி படித்தார். அவருக்கு கல்லூரிக் கட்டணம் செலுத்துவது, நகை வாங்கிக் கொடுப்பது என தாராளமாக செலவு செய்தேன். எனது வீட்டுக்கும் ஷாலினியை அழைத்துச் செல்வேன். அப்போது மருமகள் போலவே அவரை எனது பெற்றோர் நடத்தினர்.

இந்நிலையில், கடந்த மாதம் வேறு நபருடன் தனக்கு திருமணம் நடக்கப்போகிறது. இனி என்னுடன் பேசாதீர்கள் என்று ஷாலினி கூறிவிட்டார். என்னால் ஷாலினியை மறக்க முடியவில்லை. அதனால் அவரது வீட்டுக்கு போய் பார்த்தேன். அப்போது ஷாலினியின் தந்தை, என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினார். 4 ஆண்டுகளாக என்னைக் காதலித்துவிட்டு வேறு நபரை மணக்கப் போதவதாகக் கூறும் ஷாலினி மீதும் கொலை மிரட்டல் விடுத்த அவரது தந்தை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ஜசக் சுஜின் மனுவில் கூறியுள்ளார். இதுகுறித்து விசாரிக்க பரங்கிமலை இன்ஸ்பெக்டருக்கு, கமிஷனர் ஜாங்கிட் உத்தரவிட்டுள்ளார்.

------------'

இது வித்தியாசமான புகார். ஆனால் தினமும் நாம் பார்க்கும் செய்தி, பல பெண்கள் தன் காதலனுடன் வருடக்கணக்கில் சுற்றி விட்டு, ”என்னை மணப்பதாக வாக்களித்து ஜாலியாக இருந்துவிட்டு (என்னவோ இவளுடைய ஒத்துழைப்பு இல்லாமல் அவன் மட்டும் தனக்குத்தானே ஜாலியாக இருந்தான் போல!) என்னை கைவிட்டுவிட்டான்” என்று பெண்கள் புகார் கொடுப்பதும் உடனே அந்த ஆண்களை கற்பழிப்பு கேசில் புக் செய்து கைது செய்வதும்தான் நடைமுறை.

குடும்ப நடந்த மனைவி வர மறுத்ததால் 4 குழந்தைகளின் தந்தை தூக்கில் தொங்கினார்

ஒரு மணமான பெண் தற்கொலை செய்துகொண்டால் உடனே சப்-கலெக்டர் விசாரணை நடத்த வேண்டும். அடுத்தபடி அந்தப் பெண்ணின் பெற்றோர் அல்லது உறவினர் ஒருவர் ”அந்தப் பெண்ணின் தற்கொலைக்கு அவளுடைய கணவனும் மாமியாரும்தான் காரணம், அவர்கள் வரதட்சணை கேட்டுக் கொடுமைப் படுத்தினார்கள்” என்று புகார் கொடுத்து விடுவார்கள் உடனே அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப் படுகிறார்கள். இது 100% கேசுகளில் அன்றாடம் நடப்பது.

ஆனால் மனைவி செய்யும் கொடுமையால் கணவன் தற்கொலை செய்துகொண்டால் கேட்பார் கிடையாது. ஒரு சலனமும் இருக்காது. ஒரு மூலையில் செய்தி வெளியிட்டுவிட்டு கப்சிப் ஆகிவிடுவார்கள் அந்த மனைவி மேலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவது கிடையாது.

ஏனெனில் இந்த நாட்டில் கணவனுடைய உயிர் செல்லாகாசு. பெண்களைப் பார்த்து ஜொள்ளுவிடும் ஆண்களே இப்படித்தான் எண்ணுகிறார்கள்.

ஆண்கள் மேம்பாட்டிற்காக ஒரு அமைச்சகம் உண்டா?
பத்திரிக்கைகள் உண்டா?
வளர்ச்சிப் பணிகள் உண்டா?
ஆண்கள் பாலியல் பலாத்காரங்களுக்கு உட்பட்டால் மேல் நடவடிக்கை உண்டா?
ஆண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு உண்டா?
பெண்களுக்கு உள்ளதுபோல் ஆண்கள் நலனுக்காக வாரியங்கள், என்.ஜி.ஓ-க்கள் உண்டா?

ம்ஹூம். ஒன்றும் கிடையாது. ஏனெனில் இந்த நாட்டில் ஆண்கள் அனைவருமே மனைவிகளின் “கருமேனியை சிவப்பாக்கும் கிரீம்” வாங்குவதற்காக பணம் கொட்டி அழும் இலவச ஏ.டி.எம் கார்டுகள். அவர்களுக்கென்று தனிப்பட்ட உரிமைகள் ஏதும் கிடையாது.

உரிமைகள் பெண்களுக்கே!

கடமைகள் ஆண்களூக்கே!!

சீக்கிரமே ஆண்சிசுக்கள் கர்ப்பத்திலேயே அழிக்கப்படும் காலம் வரப்போகிறது!

இப்போது செய்தியை வாசியுங்கள்:-

தஞ்சாவூர்,ஜன.21- 2009. குடும்பம் நடத்த மனைவி வர மறுத்ததால் 4 குழந்தைகளின் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கும்பகோணம் சன்னா குளம் பகுதியைச் சேர்ந்தவர் வீராசாமி. இவருடைய மகன் சசிகுமார்(வயது37). இவருக்கும் தஞ்சை கீழவஸ்தாசாவடி அம்மாக்குளம் பகுதியைச் சேர்ந்த முத்தரசிக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில் தனக்கு ஆண் குழந்தை இல்லையே என்ற ஏக்கத்தில் மனைவியுடன் தினந்தோறும் சசிகுமார் தகராறு செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கமும் உண்டு. அடிக்கடி குடித்துவிட்டு வந்து முத்தரசியிடம் சண்டை போட்டதால் கோபித்துக் கொண்டு தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு தஞ்சையில் உள்ள தாய் வீட்டிற்கு முத்தரசி வந்துவிட்டார்.

அங்கு கடந்த சில மாதங்களாக தாய் வீட்டில் தான் முத்தரசி வசித்து வருகிறார். மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த சசிகுமார், மனைவியை அழைத்து வந்து குடும்பம் நடத்துவதற்கு முடிவு செய்தார். அதன்படி நேற்றுமுன்தினம் தஞ்சையில் உள்ள மாமியார் வீட்டிற்கு சசிகுமார் வந்தார்.

அங்கிருந்த மனைவி முத்தரசியை தன்னுடன் வருமாறு அழைத்தார்.

ஆனால் அவர் மறுத்து விட்டார். இதனால் அவர் களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த சசிகுமார், வாழ்வதை விட சாவதே மேல் என்ற முடிவுக்கு வந்தார்.

தனது மாமியார் வீட்டிற்கு அருகில் உள்ள பால்வாடியின் பின்புறம் மரம் ஒன்று உள்ளது. உடனே அங்கு சென்ற சசிகுமார், தான் உடுத்தி இருந்த வேட்டியை அவிழ்த்து மரத்தின் ஒரு கிளையில் கட்டி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தகவலை அறிந்த தஞ்சை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதிவாணன், ஏட்டு வேலு ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

கள்ளக்காதல் கலாசாரம் பெருகுகிறது

கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக கணவனை தீர்த்து கட்ட அவசரப்படுத்திய வக்கீல் மனைவி - அரிவாள் வெட்டு வழக்கில் பரபரப்பு தகவல்கள்

(ஆண்கள் அனைவரும் கிரிமினல்கள், பெண்கள் அனைவரும் ‘வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்கள்’ என்ற பொய்ப் பிரசாரத்தைப் பரப்பிக்கொண்டு பகல் கொள்ளையடிக்கும் பெண்ணியவாதிகள், அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள், என்.ஜி.ஓக்கள் ஆகியோருக்கும், “அய்யோ பாவம், அபலைப் பெண்கள்” என்று உருகி, ஆணழிப்புச் சட்டங்களை ஆதரிப்போருக்கும், இந்த செய்தியை சமர்ப்பிக்கிறேன்!)

திருச்சி,ஜன.14- 2009 - செய்தி - தினத்தந்தி

கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக கணவனை தீர்த்து கட்டுவதற்கு வக்கீல் மனைவி வித்யா அவசரப்பட்டது பரபரப்பு தகவலாக வெளிவந்து உள்ளது.

திருச்சி சோமரசம் பேட்டை அருகில் உள்ள வாசன் சிட்டி நகரை சேர்ந்தவர் வக்கீல் வெங்கேடஷ் (வயது39). இவரது மனைவி வித்யா (30). இவர்களுக்கு உதயா என்ற ஒரு வயது பெண்குழந்தை உள்ளது. கடந்த 11-ந்தேதி இரவு வக்கீல் வெங்கேடஷ் வீட்டில் இருந்த போது ஒரு கும்பல் அவரை அரிவாளால் வெட்டியது. அவரை வெட்டி விட்டு தப்பி ஓட முயன்றவர்களில் ஒருவனை பொதுமக்களும் போலீசாரும் விரட்டி சென்று பிடித்தனர். பிடிபட்ட தணிகாசலம் என்பவனிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினார்கள்.

அப்போது வெங்கேடசை அரிவாளால் வெட்ட சொன்னது திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த இன்னொரு வக்கீலான ராஜேஷ் கண்ணா (37) என்பது தெரியவந்தது. வெங்கடேசின் மனைவி வித்யாவுடன் ராஜேஷ் கண்ணாவுக்கு இருந்த கள்ளத்தொடர்பின் காரணமாக தான் இந்த அரிவாள் வெட்டு சம்பவம் கூலிப்படை மூலம் நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையொட்டி வக்கீல் ராஜேஷ் கண்ணா, கூலிப்படையை சேர்ந்த தணிகாசலம், ரவி, செல்வம், வித்யா ஆகிய 5 பேரை சோமரசம் பேட்டை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். வித்யா கைக்குழந்தையுடன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் தெரிந்த விவரங்கள் வருமாறு:-

வெங்கடேஷ், ராஜேஷ் கண்ணாவின் எதிர் வீட்டில் ஒரே அப்பார்ட்மெண்டில் சில வருடங்களுக்கு முன்பு குடியிருந்திருக்கிறார். அப்போது தான் ராஜேஷ் கண்ணாவுடன் வித்யாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாம். இது அவரது கணவர் வெங்டேசுக்கு தெரிந்ததும் அவர் வீட்டை சோமரசம் பேட்டைக்கு மாற்றி இருக்கிறார். ஆனால் அதன் பின்னரும் ராஜேஷ் கண்ணா- வித்யா கள்ளத்தொடர்பு நீடித்திருக்கிறது. இதை வெங்கடேஷ் பல முறை கண்டித்து இருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த வித்யா தனது கள்ளக்காதலுக்கு கணவர் தடையாக இருக்கிறாரே என நினைத்து ராஜேஷ் கண்ணாவுடன் இதுபற்றி பேசி இருக்கிறார். அப்போது தான் அவர்கள் வெங்கடேசை தீர்த்து கட்டிவிட்டு ஒன்றாக சேர்ந்து வாழலாம் என முடிவு செய்திருக்கிறார்கள்.

இதற்காக ராஜேஷ் கண்ணா தன்னிடம் வழக்கு சம்பந்தமாக வந்து சென்ற அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை சேர்ந்த ரவி என்பவரை தேர்வு செய்து உள்ளனர். ரவி ஏற்கனவே ஒரு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்டவர். அவருக்கு கூலியாக ஒரு லட்சம் ரூபாய் பேசி முதல் கட்டமாக 20 ஆயிரத்தை வித்யாவே கொடுத்து இருக்கிறார். பணம் கொடுத்த பின்னரும் வேலையை விரைவாக முடிக்காதது ஏன் என்று கேட்டு வித்யா அவசரப்படுத்தினாராம். இதைத்தொடர்ந்தே ராஜேஷ் கண்ணா ஆட்கள் வெங்கடேசை அரிவாளால் வெட்டி இருக்கிறார்கள்.

மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையின்போது வெளியாகி உள்ளது.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கூலிப்படையை சேர்ந்த ராதாகிருஷ்ணன், குமார் ஆகிய இருவரும் இன்னும் சிக்கவில்லை. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜேஷ் கண்ணா சொத்துக்காக தனது தந்தையையே பிராந்தியில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்து இருக்கிறார். கள்ளக்காதலியை அடைவதற்காக, அவரது கணவனை கொலை செய்ய கூலிப்படையை ஏவி அரிவாளால் வெட்டி உள்ளார்.கூலிப்படையாக செயல்பட்ட ரவி, தணிகாசலம், செல்வம் ஆகிய 3 பேர் மீதும் ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன. எனவே இவர்கள் அனைவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கான நடவடிக்கையை போலீசார் எடுத்து வருகிறார்கள்.

குழந்தைகள் நலனுக்கு தந்தையின் அன்பும் அடிப்படைத் தேவை

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சுழற்பந்து வீச்சாளருமான அனில் கும்ப்ளேயின் மனைவியினுடைய முன்னாள் கணவர் திரு. குமார் ஜாகீர்தார். இவருடைய குழந்தை முன்னாள் மனைவியிடம்தான் கோர்ட்டாரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவருக்கு தன் குழந்தையை “பார்க்கும்” உரிமைதான் தரப்பட்டது. ஆனால் அவருக்கு குழந்தையை காண்பிக்காமல் தங்களுடன் பல ஊர்களுக்குக் கொண்டு சென்று குமாரை தவிக்கவிடுகின்றார் அவருடைய முன்னாள் மனைவி. இதை எதிர்த்து, தனக்கு குழந்தைக் காண அனுமதிக்கப்பட்டிருக்கும் உரிமையைப் பெற்றுத்தரக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார், குமார் ஜாகீர்தார்.


அதோடு நில்லாமல் தன்னைப்போல் குழந்தையை அன்புடன் கொஞ்சி விளையாடி வளர்க்கும் உரிமைகள் பறிக்கப்பட்டு, தன் பெற்ற குழந்தையையே காணக் கிடைக்காமல் ஏங்கித்தவிக்கும் தந்தையர்களின் உரிமைகளை நிலை நிறுத்த “இரு பெற்றோர்களுடனும் தான் வளர வேண்டும் எனக்கேட்கும் குழந்தைகளின் உரிமை இயக்கம்” (Child Rights Initiative for Shared Parenting - "CRISP”) என்னும் ஒரு அமைப்பைத் தொடங்கி குழந்தைகள், தந்தைகள் மற்றும் தாத்தா, பாட்டிகளின் உரிமைகளுக்காகப் பாடுபட்டுக்கொண்டிருக்கிறார்.
இந்த CRISP இயக்கத்தின் சென்னைக் கிளை நேற்று துவங்கப்பட்டது. அது பற்றிய “இந்தியன் எக்ஸ்பிரஸ்” செய்தியின் தமிழாக்கம் இது:

”ஆண்டொன்றுக்கு சுமார் இரண்டு லட்சம் குழந்தைகள் மணமுறிவினால் பாதிக்கப்பட்டு ஒற்றைப் பெற்றோரால் (single parent) வளர்க்கப்படுகிறார்கள். இதனால் அந்தக் குழந்தைகளின் மனநலம் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.
விவாகாகரத்து பற்றி தீர்ப்பளிக்கும் நீதிபதிகள், குழந்தைகளின் காப்புப் பொறுப்பை யாரிடம் அளிப்பது என்ற முடிவை கணவன், மனைவியினிடையே பரஸ்பரம் தொடுக்கப்படும் புகார்களின் அடிப்படையில் எடுக்காமல் அந்தக் குழந்தையின் நலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு தீப்பளிக்க வேண்டும்” என்றார் திரு. குமார்.

”குழந்தைகளுக்கும் உரிமைகள் உண்டு என்பதை நினைக்காமல் ஒருதலைச் சார்புடன் (biased) முடிவெடுத்து நீதிபதிகள் பெண்கள் கையிலேயே குழந்தைகளை ஒப்படைக்கிறார்கள்”

”இந்த முறையற்ற செய்கையினால் குழந்தைகள் தகப்பனின் அனபைப் பெறமுடியாமலேயே வளர்கிறார்கள். தங்கள் தந்தையிடமிருந்து முழுதுமாகப் பிரிக்கப்படுகிறார்கள்”

“இந்திய நகரங்களில் சுமார் 40% (ஐந்தில் இரண்டு) திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன. இதுபோன்ற குடும்ப விவகார வழக்குகள் நீதிமன்றங்களில் ஆமை வேகத்தில் நகர்ந்து குழந்தைகளின் காப்புப் பொறுப்பை நிர்ணயிக்க ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பிடிக்கிறது.
அதன் பின்னும் அளிக்கப்படும் தீர்ப்புகளில் தந்தை குழந்தையைக் காணும் உரிமை ஒரு மாதத்திற்கு ஒரு மணி நேரம் மட்டுமே கிட்டுகிறது. ஒரு டிவி சீரியலை விடக் குறைந்த நேரம் இது” என்று விசனப் படுகிறார் திரு. குமார்.

ஆனால் அந்தக் குழந்தையின் பராமரிப்புச் செலவிற்கு பணம் கொடுப்பது என்னவோ அந்தத் தந்தைதான். இது ஒரு கொடுமையான முரண்நகை (irony)!

மேலும் இந்திய நீதிமன்றங்கள் தங்கள் மனத்தில் ”கணவன் என்றால் பொருளீட்டுபவன்; மனைவிதான் குழந்தைகளைக் கவனிப்பவள்” என்னும் பழையகால அனுமானத்திலேயே உழன்றுகொண்டு கனவன்மார்களுக்கு எதிராகவே தீப்பளித்துவருகின்றனர். இன்றைய மாறுபட்ட சமூகச் சூழலை அவர்கள் கருத்தில் கொள்வதில்லை என்றும் அங்கலாய்க்கிறார் திரு குமார் ஜாகீர்தார்.

குடித்துக்கொண்டே ஆபாசப்படம் பார்க்கிறாள் மனைவி

"குடித்துக்கொண்டே ஆபாசப்படம் பார்க்கிறாள். தட்டிக்கேட்டால் அடித்து உதைக்கிறாள்" என்று 4 குழந்தைகளின் தந்தை புறநகர் போலீஸ் கமிஷனரிடம் மனைவி மீது புகார் செய்தார்.

ஆண்கள் குடித்து விட்டு வந்து அடிப்பதாகவும், ஆபாசப்படத்தை போட்டுப்பார்த்து அதேபோல நடக்க வற்புறுத்துவதாகவும் இதுவரை பெண்கள்தான் புகார் செய்து வந்தனர். இதற்கு மாறாக சென்னை புறநகர் கமிஷனர் அலுவலகத்துக்கு 4 குழந்தைகளுடன் வந்த அப்பாவி ஒருவர் புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

"எனது பெயர் கந்தவேல் (வயது38). எனது மனைவியின் பெயர் சகாயம் (வயது30). எங்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

ஆபாசப்படம் பார்க்கும் மனைவி

எனது மனைவி சகாயம் அவரது சகோதரர் அந்தோணி என்பவருடன் சேர்ந்து மது குடிக்கிறாள். குடிபோதையில் வீட்டிலேயே டி.வி.யில் ஆபாசப்படத்தை போட்டுப்பார்த்து ரசிக்கிறாள். இதை தட்டிக்கேட்டால் என்னை அடித்து உதைக்கிறாள்.

சம்பவத்தன்றும் இதேபோல ஆபாசப்படம் பார்த்துக்கொண்டிருந்தாள். இதனை கண்டித்த என்னையும், எனது குழந்தைகளையும் அடித்து, உதைத்து வீட்டை விட்டே துரத்திவிட்டாள்.

மிரட்டல்

நானும் வேறு வழி இல்லாமல் அதே பகுதியில் வேறு வீடு பார்த்து எனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறேன். ஏற்கனவே ஒரு முறை இதேபோல எனது மனைவி நடந்ததால் இதுபற்றி பல்லாவரம் போலீசில் புகார் செய்தேன். போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இருந்தாலும் நாளுக்கு நாள் அவளது தொல்லை அதிகரித்து வருகிறது. என்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டுகிறாள். எனவே அவள் மீதும் அவளுக்கு உடந்தையாக இருக்கும் உறவினர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.

மனுவை பெற்றுக்கொண்ட புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் இதுபற்றி விசாரணை நடத்த மீனம்பாக்கம் உதவி கமிஷனர் குப்புசாமிக்கு உத்தரவிட்டுள்ளார்.

~ செய்தி - தினத்தந்தி ஜன.4 - 2008.

====================

இதே பொண்ற புகாரை ஒரு மனைவி கொடுத்திருந்தால் உடனே நம் போலீஸ் சிங்கங்கள் பாய்ந்து வந்து கணவனையும அவனது பெற்றோரையும் கைது செய்திருப்பார்கள். அல்லது என்கவுண்டரில் போட்டுத் தள்ளியிருப்பார்கள். பெண்ணியவாதிகளும் ”அது சரிதான் இவர்களை இப்படித்தான் கொல்லவேண்டும்” என்று கூச்சலிட்டிருப்பார்கள்.

ஆனால் இப்போது தவறிழைத்திருப்பது மனைவிதானே, “அய்யோ, பாவம், பேதைப் பெண் என்று” பேசாமலிருந்து விடுவார்கள்.

ஐ.பி.எஸ். அதிகாரிக்கு 83 வயதில் விவாகரத்து

டிசம்பர் 28,2008 - நன்றி: தினமலர்

புதுடில்லி: மனைவியை விட்டு பிரிந்து 40 ஆண்டாக தனியாக வாழும் ஐ.பி.எஸ்.,அதிகாரிக்கு 83 வயதில் இப்போது விவாகரத்து கிடைத்துள்ளது.

டில்லியில் வசிப்பவர் கிஷன் பலானி; ஐ.பி.எஸ்., அதிகாரி. இவர் மனைவி விமலா; கருத்துவேறுபாடு காரணமாக நாற்பதாண்டாக இவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்தாண்டு குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கோரி மனு செய்தார் கிஷன்.

இதை விசாரித்த கோர்ட்,"இருவரும் பல ஆண்டாக பிரிந்து வாழ்வதால், இவர்கள் சேர்ந்து வாழ வாய்ப்பே இல்லை' என்று முடிவுக்கு வந்து, ஆதாரங்கள் அடிப்படையில் கிஷனுக்கு விவாகரத்து அளித்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, டில்லி ஐகோர்ட்டில் விமலா அப்பீல் செய்தார். இதன் மீதான விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, "எனக்கு மார்பக புற்றுநோய் உள்ளது. இதற்கு என் கணவர், கருத்து வேறுபாடு காரணமாக, மருத்துவ சிகிச்சை அளிக்காமல் மறுத்து வருகிறார்” என்று குற்றம் சாட்டினார்.

மத்திய அரசின் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் படி கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், விமலா காலம் தாழ்த்தி, தொடர்ந்து கணவர் மீது புகார் கூறி வந்தார். இந்த நிலையில், சமீபத்தில் ஐகோர்ட்டில் அப்பீல் மீதான இறுதிக்கட்ட விசாரணை நடந்தது. விசாரணைக்குப் பின், கிஷனுக்கு மனைவியிடம் இருந்து விவாகரத்து அளித்த குடும்ப நல கோர்ட் உத்தரவை உறுதி செய்தது.

நீதிபதி குப்தா தன் தீர்ப்பில்,"நாற்பதாண்டாக கணவன் - மனைவி என்று எந்த வகையிலும் இருவரும் சேர்ந்திருக்கவில்லை. இந்த நிலையில், உடல் நிலை சரியில்லாத போது, அவருக்கு சிகிச்சை அளிக்க கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், கணவன் மீது தொடர்ந்து குற்றம் சாட்டிக்கொண்டிருப்பது சரியல்ல. நாற்பதாண்டாக, தனிமையில் தவிப்பதையும், மன வேதனை அடைந்திருப்பதையும் கணவன் சொல்வதை கோர்ட் ஏற்றுக்கொள்கிறது. அவருக்கு விவாகரத்து அளிப்பது சரிதான் என்றும் முடிவு செய்கிறது' என்று தெரிவித்தார்.
----------------------
நம் நாட்டில் திருமண சட்டங்கள் எவ்வளவு அறிவுக்கு ஒவ்வாததாக அமைந்திருக்கின்றன தெரியுமா!

கணவனைத் தற்கொலைக்குத் தள்ளிய காரிகை

”மனைவியின் பொய்ப்பேச்சை மட்டும் கேட்டு கணவனுக்கு எதிராக காவல்துறை கடுமையாகச் செயல்படும்போது கணவனைக் காப்பாற்றுவது யார்? அந்த ஆண்டவன்தான் காப்பாற்றவேண்டும்!” என்று கூறியபடியே தன் தலையில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு
முயன்றான் ஒரு அப்பாவிக் கணவன்.

இது 2008 டிசம்பர் 24-ம் நாள் சென்னை நீலாங்கரை காவல்நிலையம் முன்பு நிகழ்ந்தது. அந்த கணவனின் பெயர் மோஹன். வயது 38. வெட்டுவான்கனியைச் சேர்ந்தவர்.

ஆனால் அவr தன்மேல் தீயைப் பற்Raவைத்துக்கொள்ளுமுன் ஒரு போலீஸ்காரரால் தடுக்கப்பட்டார். அதன்பின் அந்தக் கணவன் தற்கொலைக்கு முயற்சித்ததற்காக கைது செய்யப்பட்டான்.

அவன் ஏன் தற்கொலைக்குத் துணிந்தான்?

அவனுடைய மனைவி, கணவன் தன்னைக் கொடுமைப்படுத்தியதாக அவன்மேல் ஒரு பொய்ப் புகார் அளித்துள்ளாள். அந்தப் புகார் உண்மையானதுதானா என்பதை விசாரிக்காமல் போலீசார் இந்தக் கணவனை கைது செய்ய அவனுடைய வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

”நான் தினக்கூலிக்காரன். என் சொல்ப ஊதியத்தில்தான் என் குடும்பம் நடக்கிறது. அன்றாட வாழ்க்கைக்கான தேவைகளுக்கே என் ஊதியம் போதாமல் கஷ்டப்படும் நிலை. ஆனால் திடீரென்று என் மனைவி ரூ.5000 கொடுத்து ஒரு செல்ஃபோன் வாங்கியிருக்கிறாள். அந்தப் பணம் அவளுக்கு எங்கிருந்து வந்தது என்று கேட்டதற்காக நான் அவளைக் கொடுமை
செய்ததாக போலீசில் புகார் கொடுத்திருக்கிறாள். இந்த நாட்டில் ஒரு பெண் என்ன சொல்கிற்றாளோ, அதுதான் உண்மையாக ஏற்கப்படுகிறது. ஆண்கள் என்றாலே அவர்கள் எல்லோரும் கயவர்கள், கிரிமினல்கள் என்று முடிவு செய்துவிடுகிறார்கள். இந்த நிலையைக் கண்டு வெறுத்துப் போய்த்தான் நான்
தற்கொலைக்கு முயற்சித்தேன்” என்கிறார் அந்த மோகன்.

அது சரி, ஒரு மனைவி தற்கொலைக்கு முயற்சித்தால் என்றால்உடனே அவளுடைய கணவனை வளுடைய தற்கொலைக்குத் தூண்டினான் என்று கூறி கைத்து செய்துவிடுகிறார்களே. ஏன் அந்த மனைவியை இந்தக் கேசில் கைது செய்யவில்லை?

நல்ல மனம் படைத்த நண்பர்களே, நீங்கள் அனைவரும் சென்னை போலீஸ் கமிஷன்ருக்கு, போன் மூலமாகவோ, ஈமெயில் மூலமாகவோ, உடனே அந்தப் பெண்ணை கைது செய்யும்படி கோருங்கள்!

சென்னை போலீஸ் கமிஷனர் ஃபோன் நம்பர்: 044-044 - 28511003
ஈமெயில் : cop(@)vsnl.net

சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் : 044 - 23452549
ஈமெயில் : copmount(@)hotmail.com

J2
அடையாறு 044-24913552

செய்தி - மைநேஷன்

மூலம்: டெக்கன் கிராணிகிள்

மகன் செத்தாலும் பரவாயில்லை, புருஷன் மேல் போட்ட வழக்குதான் முக்கியம்!

சென்னை: மூளை செயலிழந்த சேலம் சிறுவனின் உடலுறுப்புகளை தானம் கொடுப்பதில் தந்தை கையெழுத்திட மறுத்ததால், சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே பூசாரிப்பட்டியைச் சேர்ந்தவர் கீதா. இவரது மகன் நாஞ்சில் வளவன் (8). கடந்த திங்கள் கிழமை பள்ளிக்குச் சென்றபோது மயங்கி விழுந்துவிட்டதாக கீதாவிற்கு தகவல் வந்தது. நாஞ்சில் வளவனின் மூளை செயலிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். நாஞ்சில் வளவனின் உடலுறுப்புகளை தானம் செய்வதாக கீதா கூறினார். சிறுவன், நேற்று அதிகாலை சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டான்.
டாக்டர்கள் செய்தது என்ன? : பரிசோதித்த டாக்டர்கள், நாஞ்சில் வளவனின் சிறுநீரகம் மற்றும் கல்லீரலை எடுத்து மற்றவர்களுக்கு பொருத்தலாம் என்றும், சிறுநீரகத்தை, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 15 வயது பெண்ணுக்கு பொருத்தலாம் என்றும் தெரிவித்தனர்.

உடலுறுப்பு தானம் பெறுவதற்கு முன், சம்பந்தப்பட்டவரின் பெற்றோரிடம் கையெழுத்து வாங்குவது வழக்கம். அது போல் நாஞ்சில் வளவனின் பெற்றோரிடம் கையெழுத்தை டாக்டர்கள் கேட்டனர். தாய் கீதா மட்டும் கையெழுத்து போட்டார். தந்தை வரவில்லை எனக் கூறினர்.டாக்டர்கள், "தந்தையின் ஒப்புதல் கையெழுத்து இருந்தால் தான் உடல் உறுப்பு தானம் செய்ய முடியும்; அதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். இல்லையேல் சட்டசிக்கல் ஏற்படும்' என்று கூறினர்.

மருத்துவமனை நிர்வாக அதிகாரிகள், நாஞ்சில் வளவனின் தந்தை இளங்கோவிடம் டெலிபோனில் பேசினர்.இளங்கோ, தனது மகனின் உடலுறுப்புகளை தானம் செய்ய பேச்சளவில் சம்மதம் தெரிவித்தார். எழுத்துப் பூர்வமாக கொடுக்க மறுத்துவிட்டார். இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம், நாஞ்சில் வளவனின் உடல் உறுப்புகளை தானம் பெறுவதை நிறுத்தி வைத்துள்ளது.

இரண்டு ஆண்டு சிறை எதற்கு?

இளங்கோவிற்கும், கீதாவிற்கும் ஒன்பது ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இரண்டு ஆண்டுகளில் இளங்கோ, வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கீதா, போலீசில் புகார் செய்துள்ளார். இதன் பிறகு இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.வரதட்சணை கொடுமை சம்பந்தமாக தொடுக்கப்பட்ட வழக்கில் இளங்கோவிற்கு இரண்டு ஆண்டு சிறை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இளங்கோ இந்தத் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்துள்ளதாக தெரிகிறது. கீதாவும் இளங்கோவிற்கு தண்டனையை அதிகரிக்கக் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளாராம்.தன் மீது உள்ள வழக்குகளை வாபஸ் வாங்கினால் வந்து கையெழுத்திடுவதாக இளங்கோ கூறியுள்ளார்.

அதைக் கேட்ட கீதாவும், உறவினர்களும், "நாஞ்சில் வளவன் செத்தாலும் பரவாயில்லை; வழக்கை வாபஸ் வாங்க முடியாது" என்று மருத்துவமனையில் கூச்சலிட்டனர்.மேலும், "மருத்துவமனை நிர்வாகம், நாஞ்சில் வளவன் உடலுறுப்புகளை தானம் பெற்றே தீரவேண்டும்' எனக் கூறி கீதா, மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து கூச்சலிட்டு, அழுது புரண்டார். அப்போது போலீசார் வந்து கீதாவை சமாதானப்படுத்தி, அப்புறப்படுத்தினர்.
மறுபடியும் டாக்டர்கள் மற்றும் போலீசார், இளங்கோவிடம் பேசினர். அவர்கள், இளங்கோவை அழைத்து வர சேலம் போலீசார் ஏற்பாடு செய்திருப்பதாகக் கூறியுள்ளனர்.இளங்கோ வருவாரா வரமாட்டாரா என புரியாத நிலையில், உறுப்பு தானம் பெற ஓர் உயிரும், தானம் அளிக்க போராடிவரும் ஓர் உயிரும் காத்துக் கொண்டிருக்கின்றன.

கணவன்-மனைவி பிரச்னை - லஞ்ச பெண் எஸ்.ஐ. கைது

அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் “கட்டப் பஞ்சாயத்து” நிலையங்களாக மாறிவருகின்றன. இதற்கு முன்பே ஒரு இன்ஸ்பெக்டர் லஞ்ச ஊழலில் கைதானார்.

முழுதும் தவறான பயன்படுத்தலுக்காகவே ஒரு சட்டத்தை (Sec 498A of IPC) இயற்றிவிட்டு, அதை அமுல்படுத்தும் துறையினர் யோக்கியர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க இயலுமா?

மிரட்டி காசு பிடுங்கும் கூட்டுக் களவாணித்தனத்திற்காகவே இந்தச் சட்டம் பயன்படுகிறது.

இந்தச் செய்தியை வாசியுங்கள்:-

டிசம்பர் 24,2008 - தினமலர்

சென்னை: கணவன், மனைவி பிரச்னையில் வழக்குப் பதிவு செய்ய 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ., கைது செய்யப்பட்டார். சென்னை மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய எஸ்.ஐ., அனிதா; போலீசாக இருந்தவர், 2004ம் ஆண்டு போலீஸ் இட ஒதுக்கீட்டில் எஸ்.ஐ.,யாக தேர்வானார்.மயிலாப்பூரைச் சேர்ந்தவர் அபர்ணா, அழகு கலை நிபுணராக உள்ளார். இவரது கணவர் சதீஷ், டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக மூன்று ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். தனியாக வாழ்ந்து வந்த அபர்ணாவுக்கு, தொல்லைகள் கொடுத்தார் சதீஷ். "பிரிந்து வாழும் கணவர் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொல்லை கொடுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மயிலாப்பூர் போலீசில் அபர்ணா புகார் கொடுத்தார். எஸ்.ஐ., அனிதா விசாரணை நடத்தினார். மனைவி அபர்ணா மீது, மயிலாப்பூர் போலீசில் சதீஷ் புகார் கொடுத்தார். அப்புகாரை பதிவு செய்த எஸ்.ஐ., புகார் மனு ரசீது கொடுத்தார். அபர்ணா கொடுத்த புகாரை கிடப்பில் போட்டார். இவரது புகாரில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய 1,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். முன்தொகையாக 500 ரூபாய் கொடுத்த அபர்ணா, மீதித் தொகையை பிறகு தருவதாக கூறிச் சென்றார். இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி., லட்சுமியிடம் புகார் கொடுத்தார். டி.எஸ்.பி., சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

ரசாயன கலவை பூசப்பட்ட 500 ரூபாய் லஞ்ச பணத்தை எஸ்.ஐ.,யிடம் அபர்ணா கொடுத்தார். அதை வாங்கிய எஸ்.ஐ., அனிதாவை, தனிப்படை போலீசார் கைது செய்தனர். மயிலாப்பூர் அப்பாசாமி தெருவில் வாடகை வீட்டில் எஸ்.ஐ., வசித்து வந்தார். தனிப்படை போலீசார், எஸ்.ஐ.,யின் வீட்டில் சோதனை நடத்தினர். விசாரணைக்கு பின் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
----------

தொடர்பான பதிவுகள்:-

1. கட்டப்பஞ்சாயத்து போலீஸ்
2. பெண் போலீஸாருக்கு ஐகோர்ட்டு சாட்டையடி!
3. வாலிபரின் கையை உடைத்த பெண் போலீஸ்