குடும்ப நடந்த மனைவி வர மறுத்ததால் 4 குழந்தைகளின் தந்தை தூக்கில் தொங்கினார்

ஒரு மணமான பெண் தற்கொலை செய்துகொண்டால் உடனே சப்-கலெக்டர் விசாரணை நடத்த வேண்டும். அடுத்தபடி அந்தப் பெண்ணின் பெற்றோர் அல்லது உறவினர் ஒருவர் ”அந்தப் பெண்ணின் தற்கொலைக்கு அவளுடைய கணவனும் மாமியாரும்தான் காரணம், அவர்கள் வரதட்சணை கேட்டுக் கொடுமைப் படுத்தினார்கள்” என்று புகார் கொடுத்து விடுவார்கள் உடனே அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப் படுகிறார்கள். இது 100% கேசுகளில் அன்றாடம் நடப்பது.

ஆனால் மனைவி செய்யும் கொடுமையால் கணவன் தற்கொலை செய்துகொண்டால் கேட்பார் கிடையாது. ஒரு சலனமும் இருக்காது. ஒரு மூலையில் செய்தி வெளியிட்டுவிட்டு கப்சிப் ஆகிவிடுவார்கள் அந்த மனைவி மேலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவது கிடையாது.

ஏனெனில் இந்த நாட்டில் கணவனுடைய உயிர் செல்லாகாசு. பெண்களைப் பார்த்து ஜொள்ளுவிடும் ஆண்களே இப்படித்தான் எண்ணுகிறார்கள்.

ஆண்கள் மேம்பாட்டிற்காக ஒரு அமைச்சகம் உண்டா?
பத்திரிக்கைகள் உண்டா?
வளர்ச்சிப் பணிகள் உண்டா?
ஆண்கள் பாலியல் பலாத்காரங்களுக்கு உட்பட்டால் மேல் நடவடிக்கை உண்டா?
ஆண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு உண்டா?
பெண்களுக்கு உள்ளதுபோல் ஆண்கள் நலனுக்காக வாரியங்கள், என்.ஜி.ஓ-க்கள் உண்டா?

ம்ஹூம். ஒன்றும் கிடையாது. ஏனெனில் இந்த நாட்டில் ஆண்கள் அனைவருமே மனைவிகளின் “கருமேனியை சிவப்பாக்கும் கிரீம்” வாங்குவதற்காக பணம் கொட்டி அழும் இலவச ஏ.டி.எம் கார்டுகள். அவர்களுக்கென்று தனிப்பட்ட உரிமைகள் ஏதும் கிடையாது.

உரிமைகள் பெண்களுக்கே!

கடமைகள் ஆண்களூக்கே!!

சீக்கிரமே ஆண்சிசுக்கள் கர்ப்பத்திலேயே அழிக்கப்படும் காலம் வரப்போகிறது!

இப்போது செய்தியை வாசியுங்கள்:-

தஞ்சாவூர்,ஜன.21- 2009. குடும்பம் நடத்த மனைவி வர மறுத்ததால் 4 குழந்தைகளின் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கும்பகோணம் சன்னா குளம் பகுதியைச் சேர்ந்தவர் வீராசாமி. இவருடைய மகன் சசிகுமார்(வயது37). இவருக்கும் தஞ்சை கீழவஸ்தாசாவடி அம்மாக்குளம் பகுதியைச் சேர்ந்த முத்தரசிக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில் தனக்கு ஆண் குழந்தை இல்லையே என்ற ஏக்கத்தில் மனைவியுடன் தினந்தோறும் சசிகுமார் தகராறு செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கமும் உண்டு. அடிக்கடி குடித்துவிட்டு வந்து முத்தரசியிடம் சண்டை போட்டதால் கோபித்துக் கொண்டு தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு தஞ்சையில் உள்ள தாய் வீட்டிற்கு முத்தரசி வந்துவிட்டார்.

அங்கு கடந்த சில மாதங்களாக தாய் வீட்டில் தான் முத்தரசி வசித்து வருகிறார். மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த சசிகுமார், மனைவியை அழைத்து வந்து குடும்பம் நடத்துவதற்கு முடிவு செய்தார். அதன்படி நேற்றுமுன்தினம் தஞ்சையில் உள்ள மாமியார் வீட்டிற்கு சசிகுமார் வந்தார்.

அங்கிருந்த மனைவி முத்தரசியை தன்னுடன் வருமாறு அழைத்தார்.

ஆனால் அவர் மறுத்து விட்டார். இதனால் அவர் களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த சசிகுமார், வாழ்வதை விட சாவதே மேல் என்ற முடிவுக்கு வந்தார்.

தனது மாமியார் வீட்டிற்கு அருகில் உள்ள பால்வாடியின் பின்புறம் மரம் ஒன்று உள்ளது. உடனே அங்கு சென்ற சசிகுமார், தான் உடுத்தி இருந்த வேட்டியை அவிழ்த்து மரத்தின் ஒரு கிளையில் கட்டி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தகவலை அறிந்த தஞ்சை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதிவாணன், ஏட்டு வேலு ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

1 மறுமொழி:

')) said...

ஒரு மயிரும் கிடையாது...
எல்லா நம்ம நாட்டொட தலையெழுத்து அத மாத்த தான் SAVE INDIAN FAMILY FOUNDATION போராடிகிட்டு இருக்கு விரைவில் வாய்மை வெற்றி பெரும்...

இதே அந்த பொம்பள செந்திருந்திச்சினா அவ்வளவு தான் மாமனார் மாமியார், பக்கத்து வீட்டுக்காரன் அடுத்த வீட்டு காரன் எல்லாரையும் வலச்சி பிடிச்சி கைதி பண்ணி உள்ள போட்டுருப்பாங்க