நவம்பர் 27,2009. செய்தி - தினமலர் (http://www.dinamalar.com/General_detail.asp?news_id=19275)
புதுடில்லி:"கணவன் என்பவன் மனைவிக்கு எப்போதும் பணம் கறக்கும் ஏ.டி.எம்., மிஷினா?' என்று ஆண்கள் உரிமை சங்கத்தினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.கடந்த 19ம் தேதி உலக ஆண்கள் தினமாக அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் பலர் டில்லியில் "இந்தியன் பேமிலி பவுன்டேஷன் (ஐ.எப்.எப்.,)' சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த பேரணியில் கலந்து கொண்டனர்.
பெண்களுக்கு அதிகாரம் கொடுத்து ஆண்களை அதிகாரமற்றவர்களாக மாற்றி விட்டனர்; ஆண்கள் ஏ.டி.எம்., மிஷின்கள் அல்ல' என இந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் கோஷம் எழுப்பினர்.டில்லியில் ஆசாத் மைதானத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஐ.எப்.எப்., நிறுவனர் பந்தி ஜெயின் குறிப் பிடுகையில், "கணவர் மீது பெண்கள் புகார் கொடுத்தால் 498ஏ பிரிவின் கீழ் ஆண்கள் தண்டிக்கப்படுகின்றனர். எந்த விசாரணையும் ஆண்களிடம் நடத்தப்படுவதில்லை. இந்த சட்டம் பெண்களுக்கு ஆதரவானது என்பதை விட மனைவிகளுக்கான சட்டம் என்று தான் சொல்ல வேண்டும்.
ஏனென்றால், மனைவிகள் புகார் கொடுத்ததும் கணவர் மட்டுமல்லாது, கணவரது தாய், சகோதரிகளும் கைது செய்யப்படுகின்றனர். 498ஏ பிரிவின் கீழ் பதிவு செய்யப்படும் பெரும்பாலான புகார்கள் அடிப்படையில்லாதவை. நானும் எனது மனைவியால் பாதிக்கப்பட்டவன் தான். கணிசமான தொகையை ஜீவனாம்சமாக கொடுத்து வருகிறேன்' என்றார்.
பேரணியில் கலந்து கொண்ட ராகேஷ் ஜெய்ஸ்வால் குறிப்பிடுகையில், "என் மனைவி என்னை விட்டு பிரிந்து சென்று இரண்டு ஆண்டுகள் ஆகிறது. தற்போது, ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்திருக் கிறார். ஓராண்டில் இரண்டரை லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் அவர் ஜீவனாம்சம் கேட்டு விண்ணப்பித்திருப்பது நியாயமில்லாதது' என்றார்.
கமல் கபாடியா(59) என்பவர் குறிப்பிடுகையில், "என் மருமகள் என் மகன் மீதும் மனைவி மற்றும் என் மீதும் 23 குற்றச்சாட்டுகளை சுமத்தி புகார் கொடுத்துள்ளார். இதில் ஒன்று கூட உண்மையில்லை. ஆனால், போலீசார் 498ஏ பிரிவை பயன்படுத்தி எங்களை தொல்லை செய்கின்றனர்' என்றார்.
கணவன்கள் ஏ.டி.எம்., மிஷின்களா? மனைவிகளுக்கு எதிராக போர்க்கொடி!
குறிச்சொற்கள் 125, 498a, aimwa, anti-male, biased laws, child custody, dv act, father, feminism, harassment, sif, பொய் வழக்கு
"என்னை தொடாதே. அந்த தகுதி உனக்கு இல்லை"
நீதிபதி அளித்த உணமையான சாக்லேட்!
செய்தி: தினமலர் - நவம்பர் 23,2009

கோல்கட்டா : வழக்கு விசாரணைக்காக கோர்ட்டுக்கு வந்த பத்து வயது சிறுமியை, நீதிபதியே, கடைக்கு அழைத்துச் சென்று சாக்லேட் வாங்கி கொடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் கோல்கட்டா கோர்ட்டில் நடந்தது. தனது தந்தையுடன் வசிக்க வேண்டும் என்ற, அந்த சிறுமியின் நீண்ட நாள் ஆசையையும் நீதிபதி நிறைவேற்றி வைத்தார்.
கோல்கட்டாவைச் சேர்ந்தவர் ராணா. இவரது மனைவி அனாமிகா. இவர்களுக்கு பத்து வயதில் பர்பி என்ற பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக ராணாவும், அனாமிகாவும் பிரிந்து வாழ்கின்றனர். குழந்தை பர்பி, அம்மாவுடன் தங்கி இருந்தாள். ஆனாலும், அப்பாவுடன் தங்கியிருக்க வேண்டும் என்பது தான், அவளது விருப்பம். குழந்தையை யார் வைத்துக் கொள்வது என்பதில் அனாமிகாவுக்கும், ராணாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. வேறு வழியின்றி இருவரும் கோர்ட் படியேறினர். கோல்கட்டா மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது.
விசாரணையின்போது, பர்பியும் கோர்ட் டுக்கு அழைத்து வரப்பட்டாள். "தந்தையுடன் தான், வசிப்பேன்' என, பர்பி உறுதியாக தெரிவித்தாள். இருந்தாலும், நீதிபதி முகோபாத்யாயா, இதில் அவசரப்பட்டு முடிவு எடுக்க விரும்பவில்லை. தந்தையின் மிரட்டல் காரணமாக, பயந்து போய் குழந்தை இவ்வாறு கூறுகிறதா என்பது உட்பட பல்வேறு சிந்தைனைகள் அவரது மனதில் ஓடின.நீதிபதி முகோபாத்யாயா, தனது இருக்கையை விட்டு எழுந்தார். நேராக சிறுமி பர்பி இருக்கும் இடத்துக்கு வந்தார். அடுத்ததாக கோர்ட்டில் நடந்த நிகழ்வு தான், அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
பர்பியின் கையை பிடித்து வெளியில் அழைத்துச் சென்றார், நீதிபதி. அருகில் இருக்கும் கடைக்குச் சென்று, சாக்லேட் வாங்கி கொடுத்தார். மகிழ்ச்சியுடன் அதை வாங்கிக் கொண்டாள், பர்பி. பின்னர், சிறுமிக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக பேச்சுக் கொடுத்தார்."இங்கே பார். இப்போது இருந்து நான் உனக்கு நண்பன். எந்த பள்ளியில் படிக்கிறாய்? உனது பொழுது போக்கு என்ன? உன் நண்பர்கள் யார்?' என, சிறுமியின் மனதுக்குள் இருப்பதை சிறிது, சிறிதாக கேட்டுத் தெரிந்து கொண்டார். நீதிபதியின் மென்மையான அணுகுமுறையால், அவர் மீது பர்பிக்கு நம்பிக்கை ஏற்பட்டது.
மீண்டும் கோர்ட்டுக்கு அழைத்து வந்தார். விசாரணை தொடர்ந்தது."உனக்கு ஏன் அம்மாவிடம் இருக்க பிடிக்கவில்லை' என, விஷயத்துக்கு வந்தார், நீதிபதி.இதற்கு சிறுமி பர்பி, கண்ணீர் மல்க கூறுகையில்,"அப்பாவை பார்க்க வேண்டும் என, கேட்கும்போதெல்லாம், அம்மா என்னை கடுமையாக அடித்து துன்புறுத்துவார். விடுமுறை நாட்களில் அம்மா என்னுடன் நேரத்தை செலவிட மாட்டார். அவரது தோழிகளை வீட்டுக்கு வரவழைத்து பேசிக் கொண்டிருப்பார்' என்றார்.இவ்வாறு பர்பி கூறிக்கொண்டிருக்கும் போது, அவளது தாய் அனாமிகா வேகமாக வந்து, சமாதானப்படுத்த முயன்றார். இதைப் பார்த்த பர்பி, ஆவேசமாக,"என்னை தொடாதே. அந்த தகுதி உனக்கு இல்லை' என, அழத் துவங்கினாள்.
பர்பியின் வாக்குமூலத்தை கேட்ட நீதிபதி, தனது தீர்ப்பை வாசித்தார். "பர்பியை அவளது தந்தையுடன் தங்கியிருக்க இந்த கோர்ட் உத்தரவிடுகிறது' என்றார். இதைக் கேட்ட பர்பி மகிழ்ச்சி அடைந்தாள். நேராக நீதிபதி இருக்கும் இடத்துக்கு சென்று,"நன்றி நீதிபதி அங்கிள்' என, கூறி விட்டு, வேகமாக தனது தந்தையின் கையை பிடித்தபடி, கோர்ட்டை விட்டு வெளியேறத் துவங்கினாள். சென்று கொண்டிருக்கும்போதே, நீதிபதியை நோக்கி தனது தலையை திருப்பி, மெல்ல புன்னகைத்தாள். அங்கு கூடியிருந்தவர்களின் முகங்களிலும் புன்னகை அரும்பியது.
============
இதுபோன்ற உணமையான "நீதி"பதிகளும் உள்ளனர்!
குறிச்சொற்கள் anti-male, biased laws, child custody, crisp, divorce, dv act, கொடுமை, பெண்ணியம், விஷவித்து
கட்டியவனை கட்டம் கட்டிடுவாய்ங்கப்பா உஷார்!
திருமணமானவுடனேயே நம் அபலைப் பெண்கள் மனத்தில் தோன்றும் கேள்விகளைப் பாருங்கள்!
(நன்றி: ஆனந்த விகடன்)
"சமீபத்தில்தான்" திருமணம் ஆகியது. உடனேயே, கணவன் மண்டையைப் போட்டவுடன் அவனுடைய இன்ஷ்யூரன்ஸ், பேங்க் சேமிப்பு இவற்றை, விள்ளாமல் விரியாமல் தான் கல்லா கட்டுவதில் ஏதேனும் சிக்கல் இருக்குமா என்று ஆலோசனை கேட்டு தெளிவுபடுத்திக் கொள்கிறார் இந்த பெண்குல விளக்கு. குடும்ப வாழ்க்கை எப்படி நன்றாக நடத்துவது போன்ற ஆலோசனைகள் எல்லாம் அனாவசியம், இதுதானப்பா தலையாய விஷயம்! அப்படி அந்த சோப்பிளாங்கி சாகாமல் அழும்பு பண்ணினால் இருக்கவே இருக்கிறது 498A, D.v.Act போன்ற ஆயுதங்கள். போட்டுத் தள்ளிட மாட்டோமா!
தேவைதான்!
சுயம்வரம், மேட்ரிமனி என்று காசு பார்க்கும் திருமண வியாபாரக் கடைக்காரர்களே இது போன்ற ஆலோசனைகளை இனிமேல் வழங்கி ஒரு பாவமும் அறியாத அபலைப் பெண்களுக்கு சேவை செய்யத் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்!
குறிச்சொற்கள் 125, 498a, aimwa, anti-male, biased laws, extortion, ஆண்பாவம், காசு, பொய் வழக்கு, ஜீவனாம்சம்
பொய்ப் புகார் கொடுத்து ஆட்டிப் படைக்கும் பெண்கள் : விடுபட தேசிய ஆண்கள் ஆணையம் தேவை
சென்னை : தினமலர் - நவம்பர் 20,2009
"புகார் மேல் புகார் கொடுத்து இஷ்டம் போல் ஆட்டிப் படைக்கும் பெண்களிடமிருந்து விடுபட, தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும்' என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு ஆண் கள் பாதுகாப்பு சங்கம், சென்னையில் ஆர்ப்பாட் டம் நடத்தியது. நாடு முழுவதும் ஆண்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் தங்களின் கோரிக் கைகளை வலியுறுத்தி, சென்னை மெமோரியல் ஹால் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
சங்கத்தின் மாநில தலைவர் அருள் துமிலன் தலைமை வகித்தார். "பெண்கள் கொடுக்கும் போலியான வரதட்சணை புகார்களின் மீது வழக்கு பதிவு செய்யக்கூடாது; வரதட்சணைக் கொடுமையில் சிக்கும் அரசு ஊழியர் களை பணி நீக்கம் செய்யக் கூடாது; கள்ளக்காதல் கொலைகளைத் தடுக்க இந்திய தண்டனைச் சட்டம் 497ல் திருத்தம் செய்து, ஆண், பெண் இருவருக்கும் தண்டனை வழங்க வேண்டும். புகார் மேல் புகார்களைக் கொடுத்து இஷ்டம் போல் ஆட்டி வைக்கும் பெண்களிடமிருந்து விடுபட, தேசிய ஆண்கள் ஆணையத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும்; இந்திய கலாசாரத் திற்கும், குடும்ப அமைப்புகளுக்கும் எதிராக 2005ல் கொண்டு வரப்பட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்' என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், ஏராளமான ஆண்கள் பங்கேற்றனர்.
சங்கத்தின் தலைவர் அருள் துமிலன் பேசுகையில், "சமூகத்தில் ஆண்களுக்கு பெண்களால் ஏற்படும் கொடுமைகள் அதிகம். ஆண்கள் வெளியில் சொல்வதில்லை. சொன்னாலும் நிவாரணம் கிடைப்பதில்லை. பெண்களால் பாதிக்கப்படும் ஆண்களுக்கு சங்கத் தின் மூலம் சட்ட உதவியும், பாதுகாப்பும் தருகிறோம். ஆண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் சங்கம் தொடர்ந்து ஈடுபடும். தேசிய ஆண்கள் ஆணையம் அமைய வேண்டியதன் அவசியத்தை மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம்' என்றார்.
குறிச்சொற்கள் 125, 498a, aimwa, anti-male, biased laws, commission for men, men's day, ஆண்கள் தினம், பொய் வழக்கு
உலக ஆண்கள் நாள் தர்ணா
இன்று உலக ஆண்கள் தினம் சென்னையில் அகில இந்திய ஆண்கள் நலச் சங்கம் (AIMWA)மற்றும் ஆண்கள் உரிமை பாதுகாப்புச் சங்கம் இவற்றின் ஆதரவில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. கோரிக்கைகளைக் கொண்ட கையேடுகள் நகரத்தில் பல இடங்களில் வினியோகிக்கப் பட்டன. பின்னர் "மெமோரியல் ஹால்" எதிரில் தர்ணா மற்றும் கோஷமிடுதலும் நடைபெற்றது. அவற்றின் முழு விவரங்கள் படங்களுடன் நாளை வெளிவரும்.
இன்று வினியோகிக்கப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய கையேட்டை இங்கு காணலாம்:
அகில இந்திய ஆண்கள் நலச் சங்கத்தின் உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்களை இதன்கீழ் காணலாம். மனைவியின் கொடுமையாலும் வன்முறையாலும் பாதிக்கப்படும் ஆண்களும் அவர்களது பெற்றோர், உடன்பிறந்தோர் மற்றும் உறவினர்களும் இந்த எண்களில் தொடர்பு கொண்டு இலவச உதவி பெறலாம்.
முக்கிய அறிவிப்பு:
இவர்கள் அனைவரும் இது போன்ற கொடுங்கோன்மைச் சட்டங்களின் தவறான பயன்பாட்டாலும் பொய் வழக்குகளாலும் கெடுமதி கொண்ட மனைவிகளின் கைகளில் சிக்கி பாதிக்கப்பட்ட தன்னார்வலர்கள். வக்கீல்களல்ல!
குறிச்சொற்கள் 125, 498a, adultery, aimwa, anti-male, biased laws, child custody, dv act, extortion, harassment, misuse, பொய் வழக்கு, வரதட்சணை
பிரபல பெண் சாராய வியாபாரி கைது
இந்தச் செய்தி அப்பட்டமான பொய்! நம்பாதீர்கள்!
பெண்கள் தவறே செய்ய மாட்டார்கள். குற்றம் செய்வது ஆண் மட்டும் தான்!
பெண்கள் அனைவருமே அபலைகள்! அவர்கள் கேட்கும் போது ஆண்கள் பணம் கொடுத்து அழவேண்டும். அதுதான் இந்நாட்டின் சட்டம்!! அதுதான் நீதியின் தீர்ப்பு!!
இப்போது செய்தி:
சென்னை, நவ.19 - 2009. செய்தி: தினத்தந்தி
அண்டாவில் வைத்து நள்ளிரவில் கூவி, கூவி வியாபாரம்
அரசு மதுவில் அதிக போதைக்காக ரசாயன பவுடர் கலந்து விற்பனை
பிரபல பெண் சாராய வியாபாரி கைது
அரசு மதுவில் அதிக போதைக்காக ரசாயன பவுடர் கலந்து விற்பனை செய்த பிரபல பெண் சாராய வியாபாரி கைது செய்யப்பட்டார்.
சாராய வியாபாரி அப்பம்மா
சென்னை வால்டாக்ஸ் ரோடு பகுதியில் உள்ள ஜமரா தோட்டத்தில் வசிப்பவர் அப்பம்மா(வயது 40). பிரபல சாராய வியாபாரியான இவர் 4 முறை ஜெயிலுக்கு போய் இருக்கிறார். இவர் தற்போது அரசு மது பாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து, நள்ளிரவில் அந்த மது பாட்டில்களை திறந்து அதில் உள்ள மதுவை அண்டாவில் ஊற்றி, பின்னர் அதில் தண்ணீரையும் ஊற்றி, அடுத்து அதில் அதிக போதைக்காக ரசாயன பவுடரையும் கலந்து "குவாட்டர்'' பாட்டில் ரூ.100-க்கு விற்பனை செய்வதாக அப்பம்மா மீது போலீசாருக்கு ரகசிய புகார் தெரிவிக்கப்பட்டது.
அப்பம்மாவை கையும், களவுமாக பிடித்து கைது செய்ய இணை கமிஷனர் சேஷசாயி உத்தரவிட்டார்.துணை கமிஷனர் பெரியய்யா, உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மேற்பார்வையில் பூக்கடை இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் இதற்காக தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது.
கைதானார்
நேற்று முன்தினம் நள்ளிரவில் அப்பம்மா அதிக போதை மதுவை அண்டாவில் வைத்து கூவி, கூவி, விற்கும் போது தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
குறிச்சொற்கள் 498a, anti-male, biased laws, பொய் வழக்கு, வன்முறை
ருசி கண்ட பூனை திரிக்கும் கயிறு!
பாதிரியார் கற்பழித்ததாக போலீசில் பெண் புகார்
நவம்பர் 18,2009. தினமலர்
திருச்சி : பாதிரியார் தன்னை கற்பழித்ததோடு, கொலை மிரட்டலும் விடுப்பதாக, பாதிக்கப்பட்ட பெண் (!), திருச்சி மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீசில், பூங்கோதை நேற்று அளித்த புகார் மனு விவரம்:
சிதம்பரத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகளான நான், சில ஆண்டுக்கு முன், சுந்தரவேல் என்பவரை காதலித்து திருமணம் செய்தேன். வரதட்சணை விவகாரம் தொடர்பாக கணவரை பிரிந்து வாழ்ந்தேன்.
திருச்சி செவன்த் டே கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்த பாதிரியார் சுதாகர், நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் உள்ள சிறுவர் விடுதியில், காப்பாளராக எனக்கு வேலை வாங்கிக் கொடுத்தார். இதை பயன்படுத்தி, அடிக்கடி அங்கு வந்த பாதிரியார் சுதாகர், கட்டாயப்படுத்தி என்னை கற்பழித்தார் ("அடிக்கடி" கற்பழிக்கும்போது இவர் என்ன செய்து கொண்டிருந்தார்? அதிருக்கட்டும் இவர் பாஷையில் "கற்பு" என்றால் என்ன அர்த்தம்? பதில்: இப்படித்தான் புகார் எழுதணும். அப்பத்தான் ரேப் செக்ஷன் சேர்க்கலாம்!).
வேறு ஒருவருக்கு என்னை திருமணம் (என்ன ஆச்சு முதல் புருஷன்? விவாகரத்து ஆச்சா இல்லையா?) செய்து வைத்த பாதிரியார், அதன்பிறகும் கட்டாய உறவை தொடர்ந்தார் (அடடா! இந்தப்பெண் பாவைக்குத் தெரியாமலெயே தொடர்ந்தாரா! அதெப்படி "கட்டாய உறவை" தொடர்ந்து செய்ய முடியும்? அதாவது, இவருக்கு அந்தப் பாதிரியாரின் உதவி தேவையாயிருந்த வரையில் அது நல்ல உறவு. வேலை முடிந்தவுடன் கட்டாய உறவு. உடனே போலீஸில் புகார். என்னய்யா "கற்பு" இது! ).
இதன் விளைவால் கர்ப்பம் தரித்த நிலையில், பெண் குழந்தை ஒன்று இறந்து பிறந்தது. இதன் பிறகும், பாதிரியாரின் செக்ஸ் டார்ச்சர் தாங்க முடியவில்லை (எவ்வளவு நாளா நடக்குதாம்?). இதனால், கணவருடன் அங்கிருந்து வெளியேறியதோடு, பாதிரியாரின் செயல் குறித்து ஓசூரில் உள்ள தலைமை அலுவலக நிர்வாகியிடம் புகார் கொடுத்தேன். ஆத்திரமடைந்த பாதிரியார், அடியாட்கள் உதவியுடன் என்னை அடித்து துன்புறுத்தினார். கட்டாயப்படுத்தி கற்பழித்ததோடு, கொலை மிரட்டலும் விடுத்து வரும் பாதிரியார் சுதாகர் மற்றும் அவருக்கு உறுதுணையாக உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளார் (ஏன் இப்ப புகார்? உள் கதை என்ன?).
பூங்கோதையின் புகார் குறித்து, திருச்சி மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.
குறிச்சொற்கள் anti-male, arrest, biased laws, extortion, father, harassment, husbands, lust, paramour, கள்ளக்காதல், பொய் வழக்கு
மன்னிக்க முடியாத குற்றம்!
ஆஞ்சனேயரை வணங்கிவிட்டு தன் அருமை மகனுடன் சிரித்துக்கொண்டு நிற்கும் இந்த அம்மையாருக்கு வயது சுமார் 60 இருக்கும். ஆனால் அவர்கள் முகத்தில் நீங்கள் காணும் மகிழ்ச்சி நெடுநாள் நீடிக்கவில்லை. ஏன்? என்னதான் நடந்தது?
பெங்களூரில் வசிக்கும் இவர் வீட்டுக் கதவு ஒருநாள் நள்ளிரவில் திடீரென்று தட்டப்பட்டது. அதிரடியாக உள்ளே நுழைந்தனர் சென்னையைச் சேர்ந்த சுமார் பதினோரு போலீசார். அவர்கள் இவரது முடியைப் பிடித்து அடித்து குண்டுக் கட்டாக அவர்கள் வந்த வண்டியில் தூக்கிப் போட்டு, பலநூறு கிலோமீட்டர் தூரம் இரவோடு இரவாக பொட்டலம் கட்டி இழுத்து வந்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
ஏன் இந்த அவசரம்? அவர் என்ன உலகம் முழுதும் தேடப்படும் ஒரு பயங்கரவாதியா? எங்காவது குண்டு வைத்தாரா?
ஐயோ, உங்களுக்கு என்ன தெரியும் - அந்த அம்மையார் சாதாரண குற்றத்தையா செய்திருக்கிறார்! கேட்டால் அதிர்ந்துபோய் அந்த நடவடிக்கை சரியானதுதான் என்பதை நீங்கள் உடனே ஒப்புக் கொள்வீர்கள். "எல்லாம் தெரிந்த" பெண்ணியவாத போலி அறிவுஜீவிகள் கூட அது சரிதான் என்பர்!
அந்த வயது முதிர்ந்த அம்மணியை அப்படி அடாவடியாகக் கைது செய்து இழுத்து வந்து சிறையிலடைக்காமல் மட்டும் இருந்திருந்தால் நம் நாட்டின் பாதுகாப்பு என்ன ஆகியிருக்கும், சட்டம், ஒழுங்கு என்ன கதியாகியிருக்கும், நினைத்துப் பாருங்கள்!
அப்படி அந்தப் பெண்மணி செய்ததாகச் சாட்டப் பட்டிருக்கும் குற்றம்தான் என்ன?
நம் நாட்டில் புகுந்து நம் நாட்டு அப்பாவி மக்களை இஷ்டப்படி சுட்டுப் பொசுக்கிவிட்டு, தற்போது நம் வரிப்பணத்தில் (சுட்டி) ஜெயிலில் சுக வாழ்க்கையை அனுபவித்து வரும் அஜ்மல் கசாப் போன்று தீவிரவாதம் ஏதாவது செய்தாரா?
சர்க்காருக்குச் சொந்தமான நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலத்தை கபளிகரம் செய்து ஏப்பம் விட்டாரா?
இன்னொருவர் நிலத்தை அபகரிக்க அதன் சொந்தக்காரரை மிரட்டினாரா?
2000 கோடி ஹவாலா மோசடி செய்தாரா?
57 கோடி ரூபாய் பி.எஃப் (PF) மோசடி செய்தாரா?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்காரர்கள் குற்றம் சாட்டும் (சுட்டி) 60,000 கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்தாரா?
இதெல்லாம் செய்திருந்தால்தான் பரவாயில்லையே. சாதாரணக் குற்றம்தானே என்று அவரை சும்மா விட்டிருக்கலாமே, அல்லது ஆசுபத்திரியில் படுக்க வைத்து ஃபிலிம் காட்டியிருக்கலாமே!
அவர் இவற்றையெல்லாம் விட மிகக் கொடிய பாதகம் அல்லவா புரிந்திருக்கிறார்!
அவர் செய்துள்ள அக்குற்றத்தின் முழுப் பரிமாணத்தை நீங்கள் அறிய வேண்டுமென்றால் சமீபத்தில் நம் நாட்டின் உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ள அதிகாரபூர்வ சுற்றறிக்கையை நீங்கள் அவசியம் வாசிக்க வேண்டும்.
அந்த சுற்றறிக்கை அப்படி என்னதான் சொல்கிறது?
"IPC Sec 498A சட்டம் பரவலாக தவறாக பயன்படுத்தப் படுகிறது. ஆகையால் ஒரு மனைவி புகார் கொடுத்தவுடன் அதில் சுட்டிய மனிதர்களைக் கைது செய்யாதீர்கள்."
இப்படி ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் (498A போன்று) 7 ஆண்டுகளுக்குக் குறைவாக தண்டனை விதிக்கப் பட்டிருக்கும் குற்றங்களின் அடிப்படையில் புகார் வந்தால் கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தடை விதித்து ஒரு சட்ட மாற்றத்தை இந்திய அரசின் சட்ட அமைச்சகத்தினர் கொண்டுவந்தார்கள். காரணம், பல லட்சக் கணக்கானவர்கள் சிறுசிறு குற்றம் புரிந்தவர்களாக குற்றம் சாட்டப்பட்டதால் கைது செய்ய்யப்பட்டு, ஆண்டுக் கணக்கில் ஒரு தீர்வும் இல்லமல் சிறையில் வாடுகிறார்கள்; அதனால் தனி மனித சுதந்திரம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது; சிறைகள் நிரம்பி வழிகின்றன; அரசுக்கு வெட்டிச் செலவும் ஆகிறது என்பதால் இதனைத் தடுக்க இந்த சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அத்திருத்தம் பாராளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரும் அதற்கு ஒப்புதல் அளித்துவிட்டார். ஆனால் இன்னமும் அந்த சட்டத் திருத்தம் ஒரு முறையான அரசு ஆணைமூலம் நடைமுறைக்குக் கொண்டு வரப்படவில்லை. காரணம்? வக்கீல்கள் தங்கள் வருமானம் போய்விடுமே என்று அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்களாம் (சுட்டி). இப்படிச் சொல்வது யார்? உள்துறை அமைச்சர் திரு. சிதம்பரம் அவர்கள்தான்! (மேல் விவரங்கள் இங்கே)
சரி, இந்த அரசாணையை நடைமுறைப் படுத்த வேண்டிய அமைச்சகம் எது? மத்திய உள்துறை அமைச்சகம்தான். ஏன் இன்னமும் அதை சட்ட பூர்வமாக்காமல் நாடாளுமன்றத்தையே கேலிக் கூத்தாக ஆக்கிக் கொண்டிருகிறார்கள்? அரசின் கடமை மக்களின் நன்மையை கருத்தில் கொள்வதா அல்லது பொய்க்கேசுகள் மூலம் ஜாமீன் எடுப்பது, ஈரங்கி வாங்குவது போன்ற வகைகளில் கட்சிக்காரர்களின் தலையைத் தடவி சில வக்கீல்கள் சம்பாதிப்பதற்குத் துணை போவதா? நீங்கள் இந்தக் கேள்வியை அமைச்சராவதற்குமுன் வக்கீல் தொழில் செய்தவராகிய தற்போதைய உள்துறை அமைச்சர் சிதம்பரம் அவர்களைத்தான் கேட்கவேண்டும்! (அவருடைய மனைவி திருமதி. சிதம்பரம் அவர்களும் ஒரு வக்கீல்தான் என்பது இங்கு தொடர்பில்லாத விஷயம்!)
இப்போது இந்த சுற்றறிக்கை மூலம் திரு. சிதம்பரம் அமைச்சராக இருக்கும் உள்துறை அமைச்சகம் இந்தச் சட்டம் வெகுவாக துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்று் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறது! சட்டத் திருத்ததை அமுல் செய்யாமல் வெறும் சுற்றறிக்கை விட்டுக் கொண்டிருப்பதன் மர்மம் என்ன?
மேற்குறிப்பிட்ட சுற்றறிக்கையில் கண்டுள்ள மேல் விவரங்களைப் பார்ப்போம்:-
In a communication sent to the Chief Secretaries and DGPs of all states and the Administrations of the Union Territories on October 13, the MHA has cited misuse of the clause.
“In some cases, every member of the husband’s family has been arrested, irrespective of whether they had a role in inflicting cruelty on the married woman or not. In some cases, the provisions have been used to settle personal scores. Cases have been reported where momentary anger has resulted in invocation of Section 498A, which resulted in the arrest of the members of the family shutting down any possibility of reconciliation in future and total collapse of the marriage. Even where there is a divorce proceeding, the case under Section 498A continues to persist because of the offence being non-compoundable,” the letter says.
இந்த 498A சட்டத்தின் துஷ்பிரயோகத்தால் அத்தகைய பொய்க் கேசு போடும் பெண்களின் கதி கடைசியில் என்ன ஆகிறது என்ப்தைப் பற்றி இந்தக் கடிதம் என்ன சொல்கிறது என்ப்தைப் பார்த்தீர்கள் அல்லவா! தீயது விதைத்தால் நல்லதா விளையும்!
சரி. அரசே ஒப்புக் கொள்கிறது. இந்த சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்றும், அதனால் பெண்கள் நலனே பதிக்கப்படுகிறது என்றும். பிறகு இந்த சட்டத்தைத் திருத்துவதுதானே?
இந்தக் கேள்விக்கு அந்தக் கடிதமே பதில் சொல்கிறது பாருங்கள்:-
The MHA letter, incidentally, says that in light of judicial pronouncements, an attempt was made earlier to find a via media by amending Section 498A to make the offence compoundable. “However, this could not be pursued because of the opposition from women organisations,” the letter says.
இப்பொது புரிகிறதா, வில்லன்கள் யாரென்று?
ஒரு சட்டத்திருத்தத்தை பாரளுமன்றம் நிறைவேற்றியும் வக்கீல்களின் வருமானத்தைக் காப்பாற்றுவதற்காக நிறுத்தி வைத்துள்ளனர்.
இன்னொரு சட்டத் திருத்தம் கொண்டுவருவதை பெண்ணிய இயக்கங்கள் "தங்கள் வருமானம் போய்விடுமே" என்ற பயத்தில் எதிர்ப்பதால் நிறுத்தி வைத்துள்ளார்கள்!
மக்களைப் பற்றி இவர்களுக்கு என்ன கவலை. It is evident that the government is playing into the hands of certain vested interests.
இந்த 498A சட்டம் முழுமையாக் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்று இதற்கு முன்னமையே ஒப்புக் கொண்டு அறிக்கை விட்டுள்ளவர்கள் யார்யார்?
- நம் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் அவர்கள்
- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் அவர்கள்
- இதை சட்டபூர்வ பயங்கரவாதம் என்று குறிப்பிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திரு.அர்ஜித் பசாயத் மற்றும் திரு.ஹெச்.கே.சீமா அவர்கள்
- ஆற்காடு இளவரசர் நவாப் முகம்மது அப்துல் அலி அவர்கள்
மற்றும் பல நீதிபதிகள், அரசியல்வாதிகள், மக்கள் நலத்தில் உண்மையான அக்கறை கொண்டோர்...
இதுதான் நம் நாட்டின் நிலைமை.
இது புரியாமல் பல ஜொள்ளுக் கிழங்கள் " ஐயகோ, பல அப்பாவி இளம் பெண்கள் இந்த ஆணாதிக்க சமூகத்தில் அபலைகளாக அலைகிறார்களே" என்று பிலாக்கணம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தச் சட்டத் திருத்தங்கள் நடைமுறைக்கு வரும் வரையில் மேலே நீங்கள் கண்ட படத்திலிருக்கும் வயதான அம்மமையார் போன்ற அப்பாவி முதியோர்களும், திருமணம் செய்து கொண்ட பாவத்திற்காக இளம் கணவர்களும், அவர்களின் சுற்றமும் சூழலும் ஒட்டு மொத்தமாகக் கைதாகி ஜெயிலுக்குப் போய்க்கொண்டிருக்க வேண்டியதுதான்!
ஆம். அந்த அம்மையார் ஒரு ஆணைப் பெற்றெடுத்து அவனுக்கு திருமணமும் செய்வித்த மன்னிக்க முடியாத குற்றத்தைத்தான் செய்துள்ளார்! அவர் நிச்சயம் கைது செய்யப்பட வேண்டியவர்தான் என்பதை இப்போது ஒப்புக் கொள்கிறீர்கள் அல்லவா?!
அவர் அனுபவித்த கொடுமைகளைப் பட்டியலிட்டு காவல் துறைத் தலைவருக்கு வடித்துள்ள கடிதத்தின் மூலம் அந்த சோகக்கதையை அறியலாம். நெஞ்சை திடப்படுத்திக் கொண்டு இங்கிருந்து அதனை டவுன்லோடு செய்து வாசியுங்கள்.
உங்கள் மனத்தில் தற்போது எழப்போகும் கேள்விகள்:-
- தேசிய பெண்கள் வாரியத்தின் நோக்கில் இந்த முதிய அம்மையார் பெண்ணினத்தில் சேர்ந்தவராகக் கருத்தப்பட மாட்டாரா?
- அது போன்ற இயக்கங்கள் தவறு செய்யும் பெண்களுக்காகத் தானா?
- ஆண் பிள்ளையைப் பெறுவதே இந்நாட்டில் பெருங்குற்றமா?
- இதுபோல் ஒருதலைச் சார்பான சட்டங்களின் தவறான பயன்பாடு இன்னும் அதிகமாகப் பெருகி ஒரு கட்டத்தில் சமூகக் கிளர்ச்சி ஒன்று ஏற்படும் அபாயம் உள்ளதே, ஏன் ஒருவரும் இதற்கான தீர்வை செயல்படுத்த மறுக்கிறார்கள்?
- இந்நாட்டு ஆண்களைப் பொறுத்தவரை திருமணம் என்பதே பாம்புப் புற்றில் கைவிடுவது போன்று ஆகிவிட்டதே; சீக்கிறமே ஆண்சிசுக் கொலைகள் நடக்கத் தொடங்கிவிடுமா?"
பதில் உங்கள் கையில்!
குறிச்சொற்கள் 498a, anti-male, arrest, biased laws, dv act, extortion, harassment, கொடுமை, பொய் வழக்கு, மாமியார், முதியோர்
"எனக்கு கணவரே தேவையில்லை, தீர்த்துக் கட்டிவிடு"
கள்ளக்காதல் கொலைகள் நிகழும் வேகத்தைப் பார்த்தால் இன்னும் சில நாட்களில் அனைத்து நாளிதழ் மற்றும் வேறுபல ஊடங்களிலும் கள்ளக்காதல் மற்றும் அதனால் நிகழும் கொலைகள் பற்றிய செய்திகள்தான் நிரம்பி இருக்கும் போலிருக்கிறது!
ஆமாம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகமும், அரசு வரிப்பணத்தில் அரசியல்வாதிகளாலும் பணக்காரப் பெண்மணிகளாலும் நிரப்பப்பட்டுள்ள "தேசிய பெண்கள் வாரியமும்" (National Commission for Women) என்ன செய்கின்றன? இந்த "கள்ளக்காதல்" (Adultery) சீக்கு பன்றிக்காய்ச்சலை விட வேகமாகப் பரவி, பல உயிர்களைப் பலி வாங்கிக் கொண்டிருக்கிறதே. இதைத் தடுக்க ஏதேனும் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டாமா?
இந்தக் கள்ளக்காதல் சோரம் போகும் அவலத்திற்கு ஆகும் முதல் நரபலி அந்தப் பெண்குலத் திலகத்தின் கணவன் தான்! அவன் தப்பித்தால், சில கேசுகளில் எக்குத்தப்பாக அந்தக் கள்ளக்காதலிகளும் பரிதாபமாக பலியாகிறார்கள்.
ஆனால், இந்த கள்ளக்காதல் கேவலங்களினால் நிகழும் மிகவும் பரிதாபத்திற்குறிய இழப்பு, இடையில் சிக்கி பலியாகும் குழந்தகள்தான்! இதைப்பற்றி எவரும் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. அனைத்து இயக்கங்களும், பெண்கள் அமைப்புக்களும், பெண்கள் வாரியங்களும் அந்தக் கள்ளக்காதல் மனைவிகளின் உரிமைகளைப் பற்றித்தான் கவலைப் படுகிறார்கள், கடமைகளைப் பற்றியல்ல. அவர்கள்தம் செக்ஸ் தேடுதலில் முழுத் திருப்தி அடைவதுதான் சமூகத்தின் முக்கியத் தேவை என்பது போல மனோரமா போன்ற திடீர் சமூக சேவகிகளும் பேசி வருகிறார்களேயன்றி ஒரு பாவமும் அறியாத இந்தக் குழந்தைகளின் நிலையைப் பற்றி யாரும் சிறிதளவேனும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. கணவன்மார்களின் "ஆண்மைக் குறைபாடு" பற்றி இயக்கம் நடத்தப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுக் கொண்டிருக்கும் மனோரமா அம்மையார் ஏனிந்தக் குழந்தைகளின் நிலையைப் பற்றிக் கவலைப்படக் கூடாது?
இந்த நிலைக்கு முக்கிய காரணம் கள்ளக் காதல் (Adultery) தொடர்பான சட்டங்கள் ஒரு தலைப் பட்சமாக அமைந்திருப்பதுதான். கள்ளக்காதல் செய்யும் பெண்கள் மீது ஒருவித நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது என்பதுதான் இப்போதிருக்கும் சட்டம். ஏனெனில் பெண்கள் அப்பாவிகள், ஒரு பாவமும் அறியாத அபலைகள். அவர்கள் வலைதான் விரிப்பார்கள்; ஆண்மகன் தான் காமாந்தகாரன், சண்டாளன், வெறி பிடித்தலைபவன்; அவன் வந்து சிக்கினால் அது அவன் குற்றம். இதுதான் இத்தகைய சட்டங்களின் அடிப்படை கருத்தாக்கம்!
Sec. 497 of Indian Penal Code:- "Adultery"
Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.
இதுதான் கள்ளக்காதல் தொடர்பான சட்டம். இது ஒருதலை சார்பாக உள்ளது எனவும் இதைத் திருத்தம் செய்து, தவறு செய்யும் ஆண், பெண் இருவருக்கும் சமமாகப் பொருந்தும்படியாக மாற்றியமைக்க வேண்டும் என்று நீதிபதி மலிமத் கமிட்டி மற்றும் சட்டக் கமிஷன் பரிந்துரை அளித்த பின்னும் தேசிய பெண்கள் வாரியமும் பல வலிமை வாய்ந்த இயக்கங்களும் சேர்ந்து எதிர்ப்பதால் அது இன்னமும் திருத்தப் படாமல் இருக்கிறது! (சுட்டி)
சரி. உங்களுக்கு இன்றைய கள்ளக்காதல் கோட்டா இதோ:-
மயிலாடுதுறை அருகே பயங்கரம்:
பரோலில் வந்த ஆயுள் கைதி கள்ளக்காதல் தகராறில் படுகொலை
மனைவி உள்பட 6 பேர் கைது
நாகப்பட்டினம், நவ.12 - 2009. செய்தி - தினத்தந்தி. (சுட்டி இதோ)
கள்ளக்காதல் தகராறில் பரோலில் வெளியே வந்த ஆயுள் சிறைக் கைதி கொலை செய்யப்பட்டார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த மணல்மேடு அருகே கழுக்காணிமுட்டம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்மோகன் (வயது 42). இவர் ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் இருந்து வந்தார்.
சமீபத்தில் பரோலில் வந்த ராஜ்மோகன் பரோல் காலம் முடிந்து மீண்டும் ஜெயிலுக்கு செல்லவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் மணல்மேடு அருகே உள்ள ஆத்தூர் கிராமத்தை சேர்ந்த பாலையா ஆத்தூர் கிராம நிர்வாக அலுவலர் தென்னரசுவிடம் நேரில் ஆஜராகி ராஜ்மோகனை கொலை செய்து அவரது பிணத்தை ஒரு வயலில் புதைத்துள்ளதாக தெரிவித்தார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கிராம நிர்வாக அலுவலர், பாலையாவை மணல்மேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலையாவை கைது செய்தனர். அப்போது பாலையா போலீசாரிடம் கூறியதாவது:-
கள்ளக்காதல்
நானும், ராஜ்மோகனும் திருச்சி மத்திய சிறையில் இருந்த போது நண்பர்களானோம். அந்த நேரத்தில் பரோலில் நான் வெளிவந்த போது ராஜ்மோகன் வீட்டிற்கு சென்று அவரது மனைவி இந்துமதிக்கு பணம் கொடுத்து உதவினேன்.
அதில் இந்துமதியுடன் எனக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இந்த விஷயம் ராஜ்மோகனுக்கு தெரிந்து இந்துமதியை துன்புறுத்தினார்.
இதனை தொடர்ந்து இந்துமதி எனக்கு கணவரே தேவையில்லை, அதனால் ராஜ்மோகனை தீர்த்து கட்டிவிடு என்று என்னிடம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து மயிலாடுதுறையில் ராஜ்மோகனை தற்செயலாக நான் சந்தித்தேன். அப்போது ராஜ்மோகன் தனக்கு பணம் தேவை என்று என்னிடம் தெரிவித்தார்.
உடனே நான் ஆத்தூர் கிராமத்தில் உள்ள எனது வீட்டிற்கு வந்து பணத்தை வாங்கி செல்லும்படி ராஜ்மோகனிடம் கூறினேன். அதன்படி ராஜ்மோகன் எனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். பின்னர் நானும், எனது நண்பர்களும், ராஜ்மோகனுடன் சேர்ந்து மது அருந்தினோம்.
அப்போது ராஜ்மோகனுக்கு அதிகமாக மதுவை, ஊற்றி கொடுத்தோம். இதில் நிலைதடுமாறி மயக்க நிலையில் இருந்த ராஜ்மோகனை நானும், எனது நண்பர்களும் மறைத்து வைத்திருந்த உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கினோம். இதில் நிலைக்குலைந்த ராஜ்மோகன் சம்பவ இடத்திலேயே செத்தார்.
இதனையடுத்து ராஜ்மோகன் உடலை ஆத்தூரில் உள்ள ஒரு வயலில் குழித்தோண்டி எனது நண்பர்கள் உதவியுடன் புதைத்துவிட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து கொலை செய்து புதைக்கப்பட்ட ராஜ்மோகன் பிணத்தை தோண்டி எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி நேற்று மதியம் புதைக்கப்பட்ட இடத்தை பாலையன் அடையாளம் காட்டினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்வர் தயாள், தாசில்தார் ஜோதிலிங்கம் ஆகியோர் முன்னிலையில் பிணம் தோண்டி எடுக்கப்பட்டது. ராஜ்மோகன் பிணத்தை குடும்பத்தினர் அடையாளம் காட்டினர்.
6 பேர் கைது
ராஜ்மோகன் கொலைச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து பாலையா, அவரது நண்பர்கள் சிவராஜன், ராமலிங்கம், செல்வராஜ், உத்திரங்குடி கலியமூர்த்தி மற்றும் கொலை செய்யப்பட்ட ராஜ்மோகனின் மனைவி இந்துமதி ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.
குறிச்சொற்கள் adultery, anti-male, biased laws, lust, manorama, paramour, கள்ள உறவு, கள்ளக்காதல், கொலை, மனோரமா, ராமாத்தாள், வெறி
பெருகுது 498A அறுவடை, ரொம்புது கல்லா!
கீழ்க்கண்ட புகார்களின் நடைமுறைக்கு ஒவ்வாத "டெம்பிளேட்" தன்மையையும், கற்பனை வளத்தையும், வெளிநாடுகளில் இதுபோன்ற பொய் வழக்கு ஜோடனைகளின் பருப்பு வேகாது என்பதால் அங்கு நடந்தவைக்கு நம்மூரில் வந்து புகார் கொடுக்கும் அவலத்தையும் காணுங்கள். இங்குதானே "ஐயோ பாவம், அபலைப் பெண்கள்" என்று கண்ணீர் விட்டுக் கதறி உருக வைத்து, "உன்னுடன் வாழாத மனைவி கேட்கும் ரொக்கத்தைக் கொடு, இல்லாவிடில் ஜெயிலுக்குப் போ" என்று உத்தரவுகள் பெற்று, ஆண்களை இலவச ஏ.டி.எம் மெஷீனாக மாற்றும் சடங்கு நடக்கும்!
தினந்தோறும் அறங்கேற்றப்படும் நம் புதுமைப் பெண்களின் புனிதத்தன்மையைக் கண்டு களித்து கலியாணம் செய்து கொண்டு வயதான பெற்றோருடன் கூட்டாக கைது செய்யப்பட்டு ஜெயிலுக்குப் போங்கள்!
1.
அருப்புக்கோட்டையில் இளம்பெண்ணிடம் வரதட்சணை கொடுமை; 4 பேர் மீது வழக்கு
அருப்புக்கோட்டை, நவ.10 - 2009. தினத்தந்தி
அருப்புக்கோட்டை அருகே வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக கணவன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய் யப்பட்டுள்ளது.
திருமணம்
அருப்புக்கோட்டை நல்லூர் முஸ்லிம் வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் செய்யது அலிபாத் திமா (வயது 22). இவருக்கும் அஜீஸ்நகர் பஜீருல் ஹக் என்பவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, மணமகள் வீட்டார் சார்பில் 10 பவுன் நகையும், 70 ஆயிரம் ரொக்கமும் தருவதாக பேசப்பட்டது. ஆனால் அப்போது 10 பவுன் நகையும், 16 ஆயிரம் ரொக்கமும் கொடுக்கப்பட் டது. மீதி ரொக்கப்பணத்தை 2 மாதம் கழித்து தருவதாக மணமகள் வீட்டார் சார்பில் பேசப்பட்டதாக தெரிகிறது.
கொடுமை
ஆனால் அதன்படி மீதி பணத்தை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இத னால் மீதி பணத்தை வாங்கி வரும்படி செய்யது அலி பாத்திமாவை கணவர்பஜீருல் ஹக், அவரது தாயார் ஆயிஷா பீவி, அண்ணன் காட்டுபாவா, தம்பிரியாஸ் ஆகியோர் துன் புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து செய்யது அலி பாத்திமா அருப்புக் கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்குப்பதிவு செய்து
பஜீருல் ஹக் உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.
2.
வரதட்சணை கொடுமை: கணவர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு
திண்டுக்கல்,அக்.28 - 2009. தினத்தந்தி
வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக, கணவர் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வரதட்சணை கொடுமை
திண்டுக்கல் மீனாட்சி நாயக்கன்பட்டி வடக்குபாறைப்பட்டியை சேர்ந்தவர் கவிதா (வயது 24). இவருக்கும், மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த சங்கர் (30) என்பவருக்கும் இடையே கடந்த 3.12.2009-ந்தேதியன்று திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 27 பவுன் தங்கநகை மற்றும் ரூ.45 ஆயிரம் ரொக்கபணம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. இதற்கிடையே கவிதா கறுப்பாக இருப்பதாகவும், படிக்கவில்லை என்றும் கூறி சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் கூறியதாக தெரிகிறது.
மேலும் கூடுதலாக 15 பவுன் தங்கநகை மற்றும் மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு ரூ.25 ஆயிரம் பணம் கேட்டு வீட்டை விட்டு விரட்டி விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திண்டுக்கல் 2-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கவிதா மனுதாக்கல் செய்தார்.
பெண் கைது
இந்த மனுவினை விசாரித்த மாஜிஸ்திரேட்டு உமாராணி, புகார் கூறிய சங்கர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கீதாதேவி புகார் கூறப்பட்ட சங்கர், அவரது தாயார் கமலா (57), உறவினர்கள் பாமா (38), பாக்கியலெட்சுமி (35), சுதர்கனா தேவி (46), ராஜேந்திரன் (46), ரகுநாதன் (40) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தார். இதில் திண்டுக்கல் முருகபவனத்தை சேர்ந்த சுதர்கனாதேவியை நேற்று போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
3.
தனி அறையில் அடைத்து கொடுமை: லண்டன் கணவர் மீது மனைவி புகார்
நவம்பர் 08,2009. தினமலர்
காரைக்குடி: வரதட்சணை கேட்டு தனி அறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய கணவர் உட்பட மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த பிரதீபாவுக்கும் (23), கல்லலை சேர்ந்த சண்முகம் மகன் ராமநாதனுக்கும் (29) கடந்த 2007 ல் திருமணம் நடந்தது.
கணவர் குடும்பத்தினர் லண்டனில் தொழில் செய்து வந்தனர். சில மாதங்களில் பிரதீபா அங்கு சென்றார்.ஐந்து லட்ச ரூபாய் வரதட்சணை கேட்டு, அங்கு தனி அறையில் பிரதீபா அடைக்கப்பட்டார். கணவருடன் தொடர்பு இல்லாத நிலையில், பெற்றோரிடம் பேசவும் தடை விதித்தனர். அங்குள்ள உறவினர்கள் உதவியுடன் கடந்த டிசம்பரில் பிரதீபா நாடு திரும்பினார்.கணவருடன் சேர்த்து வைக்க கோரி சென்னை குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். தற்போது நிலுவையில் உள்ளது.
கடந்த ஒன்றாம் தேதி லண்டனில் இருந்து பிரதீபாவின் மாமனார் சண்முகம், மாமியார் வசந்தா நாடு திரும்பினர். அவர்களிடம் பிரதீபாவின் பெற்றோர் பேச்சு நடத்தினர்.ஐந்து லட்ச ரூபாய் வரதட்சணை கொடுத்தால் மகனோடு சேர்ந்து வைப்பதாக கூறினர்.இதுகுறித்து காரைக்குடி மகளிர் போலீசில் பிரதீபா புகார் செய்தார்.கணவர் ராமநாதன்,அவரது பெற்றோர் மீது இன்ஸ்பெக்டர் ஜோஸ்பின் அமலராணி வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்.
4.
ஐதராபாத்தில் வரதட்சணை கொடுமை புகார்
கோவை : ஐதராபாத்தில் கணவர் குடும்பத்தினரால் துன்புறுத்தப்பட்ட பெண், நடவடிக்கை கோரி கோவை போலீசில் புகார் கொடுத்தார்.கோவைப்புதூர், சிறுவாணி நகரைச் சேர்ந்தவர் தேவா(32). இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த சுமலதா(28)வுக்கும் 2007ல் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பின் தேவா தனது குடும்பத்துடன் ஐதராபாத், குருமூர்த்தி லேன் பகுதியில் குடியேறினார்.சில நாட்களுக்கு முன், ஐதராபாத்திலிருந்து பெற்றோர் வீட்டுக்கு திரும்பிய சுமலதா, தன்னை கணவரும், அவரது குடும்பத்தினரும் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாகத் தெரிவித்தார். இது தொடர்பாக குனியமுத்தூர் போலீசில் சுமலதா புகார் கொடுத்தார். அதில், கணவர் தேவா, மாமியார் பட்டம்மாள், மாமனார் ராஜகோபால் மற்றும் உறுவினர் ரோகிணி ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
வழக்குப்பதிவு செய்த கோவை போலீசார், சம்பவம் நடந்த இடம் ஐதராபாத் என்பதால், மேல் நடவடிக்கைக்காக, முதல் தகவல் அறிக்கையை ஐதராபாத் போலீசாருக்கு அனுப்பி வைத்தனர்.
5.
வரதட்சணை கேட்டு மிரட்டல்:
பெண் வக்கீலை ஏமாற்றி திருமணம் செய்த போலி வக்கீல் கைது
சென்னை, அக்.25- 2009. செய்தி - தினத்தந்தி
பெண் வக்கீலை ஏமாற்றி திருமணம் செய்ததுடன், வரதட்சணை கேட்டு மிரட்டிய 'போலி' வக்கீல் கைது செய்யப்பட்டார்.
பெண் வக்கீல்
தஞ்சாவூர் முனிசிபல் காலனியை சேர்ந்தவர் மோசஸ். இவருடைய மகள் உஷா மோசஸ் (வயது 39). சென்னையில் வக்கீலாக வேலைபார்த்து வருகிறார். உஷா மோசஸ் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் கடந்த 2004-ம் ஆண்டு சென்னை ஜார்ஜ் டவுண் கோர்ட்டில் வக்கீல் ஒருவரிடம் ஜுனியராக வேலை பார்த்தேன். அப்போது மற்றொரு வக்கீல் ஒருவரின் அலுவலகத்தில் வேலைபார்த்து வந்த ஸ்ரீராமுலு என்ற பால் ஸ்ரீராம் (34) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஸ்ரீ ராமுலு திருத்தணி கிருஷ்ணசமுத்திரம் காலனி பகுதியை சேர்ந்தவர். வக்கீல் தொழில் பார்த்து வருவதாக கூறினார். அதற்கான அடையாள அட்டையையும் காண்பித்தார். அவருடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது.
மோசடி
அதைத் தொடர்ந்து ஸ்ரீ ராமுலுவும் நானும் திருமணம் செய்ய முடிவு செய்தோம். திருத்தணியில் கிறிஸ்தவ முறைப்படி எங்களுடைய திருமணம் 14.9.2005 அன்று நடந்தது. அதன் பிறகு சென்னை வரத முத்தையப்பன் தெருவில் வசித்து வந்தோம். திருமணத்திற்கு பிறகுதான் அவர் போலி வக்கீல் என்பது தெரியவந்தது.
பி.ஏ. பொருளாதாரம் படித்துள்ள ஸ்ரீராமுலு, ஆந்திர மாநிலத்தில் உள்ள சட்டக்கல்லூரி ஒன்றில் படிக்க சேர்ந்ததுடன் சரி, பட்டம் எதுவும் வாங்கவில்லை. எந்த கோர்ட்டிலும் வாதாடவில்லை என்பது தெரியவந்தது. இந்த மோசடி குறித்து கேட்ட போது, என்னுடன் தங்குவதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில், எனக்கு குழந்தை பிறக்கவில்லை என்பதை காரணம் காட்டி, தன்னுடைய சகோதரி மகள் சரிதா என்பவரை 2-வது திருமணம் செய்யப்போவதாக ஸ்ரீராமுலு கூறினார்.
இந்த நிலையில், ஸ்ரீராமுலு சரிதாவை எனக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். இது பற்றி அவரிடம் கேட்டதற்கு, என்னுடன் வாழ வேண்டும் என்றால் அதிக வரதட்சணை கொடுக்க வேண்டும் என்று மிரட்டி வருகிறார். அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு உஷா மோசஸ் புகாரில் கூறியிருந்தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் இணை கமிஷனர் சேஷசாயி, துணை கமிஷனர் பெரியய்யா ஆகியோர் மேற்பார்வையில் கொத்தவால்சாவடி இன்ஸ்பெக்டர் ஹரிக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். ஸ்ரீராமுலு மீது 406, 420, 467 பிரிவு 4, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டம் (இது எங்கிருந்து வந்தது!) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கைது
விசாரணையில் ஸ்ரீராமுலு திருத்தணியில் நடந்த அடிதடி வழக்கு ஒன்றில் தொடர்புடையவர் என்பதும், தன்னை போலீசார் தேடுகிறார்கள் என்பதை அறிந்தால் அவரை தலைமறைவாகி விடலாம் என்பதால் அவரை 'பொறி' வைத்து பிடிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஸ்ரீராமுலுவிடம் செல்போன் மூலம் உஷா மோசஸ் பேசினார்.
இனிமேல் சண்டை போடமாட்டேன் என்றும் கேட்ட வரதட்சணை பணத்தை தருவதாகவும், எனவே சென்னைக்கு வரவேண்டும் என்றும் ஸ்ரீராமுலுவிடம் கேட்டுக் கொண்டார். அவரது பேச்சை உண்மை என்று நம்பிய ஸ்ரீராமுலு நேற்று முன்தினம் சென்னை வந்த போது போலீசில் சிக்கிக் கொண்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் போலி வக்கீல் என்று கூறி ஏமாற்றியதையும், வரதட்சணை கேட்டு மிரட்டியதையும், 2-வது திருமணம் செய்ததையும் ஒப்புக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
குறிச்சொற்கள் 498a, anti-male, arrest, biased laws, child custody, desertion, divorce, dv act, extortion, harassment, பொய் வழக்கு
ஒட்டுமொத்த குடும்பத்தின் மீதும் 498A
இதற்கு முந்தைய இடுகையைப் படித்தீர்கள் அல்லவா. அதுபோல் 498A பொய் வழக்கில் எக்ஸ்ட்ராவாக சிறிது அஜால்குஜால் மசாலா சேர்க்கும் அளவிற்கு கற்பனை வளமில்லாத ஒரு வக்கீலை இந்த நங்கை மடவன்னம் அணுகியதால் கீழ்க்காணும் ஸ்டாண்டர்ட் டெம்பிளேட் புகார்தான் போட்டிருக்கிறார்.
ஆனால் இந்த 498A டெம்பிளேட்தான் 95% பொய்க் கேசுகளில் பயன்படுத்தப்படுகின்றன.
உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா? இன்னும் 498A பேய் பிடிக்கவில்லையா? கவலையை விடுங்கள் இந்த சீக்கு தற்போது பன்றிக் காய்ச்சலைவிட வெகுவேகமாகப் பரவி வருகிறது. ஆனால் ஒரு வேறுபாடு. காய்ச்சல் ஒருத்தர் ஒருத்தராகத்தான் பிடிக்கும். ஆனால் 498A கேசு குடும்பத்தில் உள்ள மொத்தப் பேரையும் ஹோல்சேலாக ஒரே கட்டில் அடைத்துவிடும்!
இப்பொது செய்தியைப் படித்துவிட்டு "பெண்கள் பாவம், ஒரு பாவமும் அறியாத பேதைகள்" என்று உரக்க கோஷமிடுங்கள்!
சாத்தூர் கோர்ட்டில் புகார்;
கூடுதல் வரதட்சணை வாங்கிவர மறுத்த புதுப்பெண் சித்ரவதை
கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு
விருதுநகர், நவ.6 - 2009. தினத்தந்தி
சாத்தூர் அருகே கூடுதல் வரதட்சணை வாங்கி வர மறுத்த புதுப்பெண்ணை சித்ரவதை செய்ததாக கணவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.
சாத்தூர் அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலட்சுமி (வயது 30). இவர் சாத்தூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனக்கும், சென்னை திருவான்மியூரை சேர்ந்த மளிகைக் கடை வியாபாரி ராமச்சந்திரன் என்பவக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது எனது பெற்றோர் 10 பவுன் நகை மற்றும் சீர்வரிசை செய்தனர்.
ஆனால் கடந்த சில மாதங்களாக எனது கணவர் கூடுதல் வரதட்சணை வாங்கி வருமாறு என்னிடம் வற்புறுத்தி வந்தார். நான் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் எனக்கு சாப்பாடு போடாமல் சித்ரவதை செய்தார். எனவே இந்த சித்ரவதைகளை தாங்க முடியாமல் நான் எனது தாய் வீட்டுக்கு வந்து விட்டேன். இந்த சித்ரவதைக்கு உடந்தையாக மாமனார் காசிபெருமாள், மாமியார் சரோஜா, நாத்தனார் கலாராணி, அவரது கணவர் சங்கர் ஆகியோர் உள்ளனர். எனவே இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மகாலட்சுமி தனது மனுவில் கூறியிருந்தார்.
5 பேர் மீது வழக்கு
வழக்கை விசாரித்த மாஜிஸ் திரேட்டு, இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு சாத்தூர் அனைத்து மகளிர் போலீசுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் ராமச்சந்திரன் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
குறிச்சொற்கள் 498a, anti-male, biased laws, extortion, misuse, ஆண்பாவம், பொய் வழக்கு
விபரீத கள்ளக்தாதல்!
வக்கீலின் மனைவி கட்சிக்காரருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு ஓடிய கதையைப் படித்தோம்.
இப்போது பெண் போலீஸ் ஆயுள் தண்டனைக் கைதியுடன் கொண்ட கள்ளக்காதலின் விளைவாக கொலையுண்டிருக்கிறார்.
பின்னே, கள்ளக்காதலில் நல்லதா விளையும்!
இந்தச் செய்திதான் இன்றைய செய்தித்தாள்களில் தலைப்பு நியூஸ். தினத்தந்தி இதன் விவரங்களை மூன்று பகுதிகளாக வெளியிட்டுள்ளது. அவற்றை உள்ளது உள்ளபடி இங்கு வெளியிட்டு அதை கள்ளக்காதலுக்குக் காரணம் ஆண்களே என்று வலியுறுத்துவதற்காக இயக்கம் துவங்க இருக்கும் ஆச்சி மனோரமாவுக்கு சமர்ப்பிக்கிறேன்!
தினத்தந்தி. நாள் நவ.5 - 2009
பகுதி - 1
சேலம் பெண்கள் சிறை காவலராக இருந்தவர் மாயம்:
பெண் போலீஸ் கற்பழித்து கொலை
ஜெயிலில், கைதியுடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் விபரீதம்
சேலம் சிறை காவலாக பணிபுரிந்த பெண் போலீஸ் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். ஜெயிலில், ஆயுள்தண்டனை கைதியுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொடூர கொலை நடந்துள்ளது.
காயத்ரி மாலா
சேலம், அஸ்தம்பட்டியில் உள்ள பெண்கள் கிளை சிறையில் முதல் நிலை காவலராக (போலீஸ்) பணியாற்றி வந்தவர், எஸ்.காயத்ரி மாலா (வயது 33). கோவையை சேர்ந்தவர். காயத்ரி மாலாவுக்கும், மதுரை மத்திய சிறையில் சப்-ஜெயிலராக பணியாற்றி வரும் தமிழ்ச் செல்வன் என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
தமிழ்ச்செல்வன், காயத்ரி மாலா இருவருமே ஏற்கனவே திருமணமாகி, விவாகரத்து பெற்றவர்கள். கடந்த 2002-ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக வேலைக்கு சேர்ந்த காயத்ரி மாலா, பதவி உயர்வு பெற்று, 8 மாதங்களுக்கு முன்பு கோவையில் இருந்து சேலத்திற்கு வந்தார். சேலத்தில் அய்யந்திரு மாளிகை ஹவுசிங் போர்டு குடியிருப்பில் காயத்ரி மாலா வசித்து வந்தார்.
திடீர் மாயம்
கோவை வரதராஜபுரம் ஆர்.வி.எல். நகரில் காயத்ரி மாலாவுக்கு சொந்தமாக வீடு உள்ளது. காயத்ரி மாலாவுக்கும், அவரது 2-வது கணவர் தமிழ்ச்செல்வனுக்கும் பிறந்த 4 வயது மகள் லட்சுமி பிரபா கோவையில் பெற்றோர் வீட்டில் இருப்பதால் வாரம் ஒரு முறை காயத்ரி மாலா கோவைக்கு சென்று தனது மகளை பார்த்து வருவது வழக்கம்.
கடந்த சனிக்கிழமை இரவு 7 மணிக்கு சேலம் புதிய பஸ் நிலையத்துக்கு வந்த காயத்ரி மாலா, அங்கிருந்து கோவைக்கு பஸ்சில் புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் கோவைக்கு செல்லவில்லை. திடீரென்று மாயமான அவருடைய செல்போன் இணைப்பும் துண்டிக்கப்பட்டு இருந்தது.
ஏரிக்கரையில் பிணம்
இது குறித்து, சேலம் பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், சங்ககிரி அருகே உள்ள ஆவாரம்பாளையம் ஏரிக்கரையில் ரெயில் பாதைக்கு சற்று தொலைவில் உள்ள ஒரு முட்புதரில் இருந்து துர்நாற்றம் வீசியது. நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள், அங்கு அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் பிணம் தலைகுப்புற கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த பெண் அணிந்து இருந்த சுடிதார் விலக்கப்பட்டு, சுடிதாரின் டாப்சும் கழற்றப்பட்ட நிலையில் அந்த பெண் அரை நிர்வாண கோலத்தில் கிடந்தார். மேலும் அந்த பெண்ணின் தலையில் சுமார் 25 கிலோ எடை கொண்ட பெரிய பாறாங்கல்லும் வைக்கப்பட்டு கிடந்தது. இது குறித்து சங்ககிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அடையாளம் தெரிந்தது
சங்ககிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். ஆனால் முகத்தில் பெரிய கல் வைக்கப்பட்டு, முகம் சிதைக்கப்பட்டு இருந்ததால் பிணமாக கிடந்தவர் யார் என்று அடையாளம் உடனடியாக தெரியவில்லை. இதனால் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையின் முடிவில் இறந்து கிடந்தது மாயமான காயத்ரி மாலாவாக இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்தது. இது குறித்து காயத்ரி மாலாவின் பெற்றோருக்கும், கணவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து காயத்ரி மாலாவின் தந்தை, தம்பி, அவரது மனைவி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை பார்த்து இறந்து கிடப்பது காயத்ரி மாலாதான் என்று அடையாளம் காட்டினார்கள். காயத்ரி மாலாவின் கணவர் தமிழ்செல்வனும் சம்பவ இடத்திற்கு வந்து காயத்ரி மாலாவை அடையாளம் காட்டினார். பின்னர் காயத்ரி மாலாவின் பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்வதற்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கற்பழித்து கொலையா?
காயத்ரி மாலா கோவைக்கு சென்றபோது அவருடன் யாராவது சென்றார்களா? அவர் கொண்டு சென்ற பை, அவரது செல்போன் போன்றவை என்ன ஆனது? போன்ற விவரங்கள் தெரிய வில்லை. அவரது ஆடைகள் அகற்றப்பட்டு கிடந்ததால் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என்ற சந்தேகமும் எழுந்தது.
அவரை கொலை செய்தது யார்? ஒருவரா? அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த கொலையில் தொடர்பு உள்ளதா? என்பது போன்ற கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
ஆயுள் தண்டனை கைதி
விசாரணையில், கோவையை சேர்ந்த சரவணன் என்ற சரவணகுமார் (32) என்ற ஆயுள் தண்டனை கைதி, காயத்ரி மாலாவை கொலை செய்ததும், அவர்கள் இருவருக்கும் இடையே கடந்த 7 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்த திடுக்கிடும் தகவலும் அம்பலம் ஆனது.
காயத்ரி மாலா, கடந்த 2002-ம் ஆண்டில் கோவை மத்திய சிறையில் காவலராக வேலை பார்த்து வந்தார். அப்போது திருச்செங்கோடு ரிக் உரிமையாளர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவணகுமார் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
கள்ளக்காதல்
அப்போது காவலர் காயத்ரி மாலாவுக்கும், சரவணகுமாருக்கும் அறிமுகம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. அதன்பிறகு தனது முதல் கணவரை காயத்ரி மாலா விவாகரத்து செய்தார். இதற்கிடையில், 5 ஆண்டுகளுக்கு முன்பு பயிற்சிக்காக வேலூர் சிறைக்கு சென்ற காயத்ரி மாலாவுக்கும், அங்கு பயிற்சியாளராக வந்த மதுரை சப்-ஜெயிலர் தமிழ்ச்செல்வனுக்கும் காதல் ஏற்பட்டு, காயத்ரிமாலா கர்ப்பம் ஆனார்.
பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுடைய 4 வயது மகள் பிரபா லட்சுமி, கோவையில் உள்ள காயத்ரி மாலாவின் பெற்றோர் வீட்டில் இருக்கிறாள். இந்த நிலையில், ஆயுள் தண்டனை கைதி சரவணகுமாருடன் இருந்த கள்ளக்காதலையும் காயத்ரிமாலா கைவிடவில்லை. கடந்த 7 ஆண்டுகளாக அவர்களுடைய தொடர்பு நீடித்து வந்தது.
தலைமறைவு சந்திப்பு
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் கோவை சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்த சரவணகுமார், மீண்டும் சிறைக்கு திரும்பாமல் தலைமறைவாகிவிட்டார். சேலம் மாவட்டம், ஓமலூரில் அவர் தங்கி இருந்தார். காயத்ரிமாலாவும் சேலம் சிறையில் பணிபுரிந்து வந்ததால், இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொள்வதற்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது.
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று கோவை சென்று பெற்றோரையும் மகளையும் பார்த்துவர காயத்ரிமாலா விரும்பினார். அப்போது சரவணகுமார் தனது செல்போனில் தொடர்பு கொண்டு தான் சங்ககிரியில் இருப்பதாகவும் எனவே சங்ககிரியில் இறங்கி தன்னை சந்திக்கும்படியும் காயத்ரிமாலாவிடம் தெரிவித்தார்.
கல்லால் தாக்கி கொலை
அதன்படி, கோவை செல்லும் வழியில் காயத்ரி மாலா சங்ககிரியில் இறங்கி சரவணகுமாரை சந்தித்து பேசினார். பின்னர் அங்கிருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆவாரம்பாளையம் ஏரிக்கரைக்குச் சென்று இருவரும் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
அதன்பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஆத்திரம் அடைந்த சரவணகுமார், பெரிய பாறாங்கல்லை தலையில் தூக்கிப்போட்டு காயத்ரி மாலாவை கொலை செய்ததாக போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.
செல்போன் மூலம் துப்பு
சரவணகுமார் எடுத்துச்சென்ற காயத்ரிமாலாவின் செல்போன், தாலி செயின், கைக்கெடிகாரம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினார்கள். அந்த செல்போன் மூலம் இந்த வழக்கில் போலீசார் துப்பு துலக்கி கொலையாளியை பிடித்து உள்ளனர்.
இந்த வழக்கில் 48 மணி நேரத்தில் துப்பு துலக்கிய சேலம் பள்ளப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையிலான தனி போலீஸ் படையினரை போலீஸ் கமிஷனர் சுனில்குமார்சிங் பாராட்டினார்.
=========
பகுதி - 2
ஜெயிலில் பெண் போலீசுடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி?
கைதான கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்
"பெண் போலீஸ் காயத்ரி மாலாவுடன் ஜெயிலில் தொடர்பு ஏற்பட்டது எப்படி?'' என்று, கைதான கொலையாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சேலம் பெண்கள் கிளைசிறை காவலர் காயத்ரிமாலா கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட சரவண குமார், சேலம் பள்ளப்பட்டி போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
கர்ப்பிணி மனைவி
"எனது பெயர் சரவணன் என்கிற சரவணகுமார் (வயது 32). ஓமலூரை அடுத்த செங்கரடில் வசித்து வருகிறேன். எனக்கு திருமணம் ஆகி வெள்ளையம்மாள் என்ற மனைவி இருக்கிறார். எனக்கு ஒரு குழந்தை உள்ளது. தற்போது எனது மனைவி 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
கடந்த 1997-ம் ஆண்டு திருச்செங்கோடு ரூரல் போலீஸ் நிலைய எல்லையில் ரிக் வாகன உரிமையாளர் செங்கோட கவுண்டர் என்பவரை கொலை செய்த வழக்கில் எனக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு நான் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன்.
சாப்பாடு வண்டியை தள்ளி செல்வேன்
அங்கு எனது நன்னடத்தை காரணமாக எனக்கு சாப்பாடு வண்டியை தள்ளி செல்லும் வேலை தரப்பட்டது. நான் கோவை பெண்கள் சிறைக்கு சாப்பாடு வண்டியை தினமும் தள்ளி செல்வேன். அப்போது எனக்கும் பெண்கள் சிறையில் பணிபுரிந்து வந்த காயத்ரிமாலாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் கள்ளத்தொடர்பாக மாறியது. கோவை மத்திய சிறையில் இருந்த நான் அவ்வப்போது நான் பரோலில் வீட்டுக்கு சென்று வந்தேன். ஆரம்பத்தில் போலீஸ் பாதுகாப்புடன் நான் சென்று வந்தேன். பின்னர் எனது நன்னடத்தை காரணமாக நான் தனியாகவே பரோலில் சென்று வீட்டில் உள்ளவர்களை பார்த்து விட்டு மீண்டும் சிறைக்கு வர அனுமதித்தார்கள்.
பரோலில் வந்து தலைமறைவு
இந்த கால கட்டத்தில் நான் காயத்ரி மாலாவுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தேன். இந்த நிலையில் கடந்த 15.2.2009 அன்று பரோலில் வீட்டுக்கு வந்த நான் மீண்டும் கோவை சிறைக்கு செல்லவில்லை. இதனால் 24-ந் தேதி என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதன் பிறகும் நான் காயத்ரி மாலாவுடன் உல்லாச வாழக்கையை தொடர்ந்து வந்தேன். இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி அவர் என்னிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். தான் கோவைக்கு செல்வதாக தனது கணவரிடம் கூறி விட்டதாகவும், நீ சங்ககிரிக்கு வா என்று கூறினார். அதன்படி நானும் சங்ககிரி பஸ் நிலையத்திற்கு முன்னதாகவே சென்று காயத்ரிமாலா வருகைக்காக காத்திருந்தேன்.
உல்லாசமாக இருக்க வற்புறுத்தினார்
பஸ்சில் அவர் வந்த நேரத்தில் நான் அவரிடம் 3 முறை தொடர்பு கொண்டு பேசினேன். அதே போல அவரும் என்னிடம் 3 முறை தொடர்பு கொண்டு பேசினார். சங்ககிரி பஸ் நிலையத்தில் காயத்ரிமாலா வந்து இறங்கியதும் 2 பேரும் சங்ககிரியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் ரெயில்வே பாதை அருகில் உள்ள ஆவாரம்பாளையம் ஏரிக்கு சென்றோம்.
அங்குதான் நாங்கள் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருப்பது வழக்கம். அதே போல 31-ந் தேதியும் நாங்கள் அங்கு உல்லாசமாக இருந்தோம். அப்போது நான் காயத்ரிமாலாவிடம் ரூ.5 ஆயிரம் கேட்டேன். அதற்கு அவர், `ரூ.5 ஆயிரம் தருகிறேன். ஆனால் நீ வாரம் ஒரு முறை என்னை சந்தித்து உல்லாசமாக இருக்க வேண்டும்' என்று நிர்பந்தித்தார்.
மிரட்டியதால் கொன்றேன்
அதற்கு நான், `எனது மனைவி தற்போது கர்ப்பிணியாக உள்ளார். என்னால் வாரம் ஒரு முறை வர முடியாது' என்று கூறினேன். அதை கேட்ட காயத்ரிமாலா, `நீ கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவன். இப்போது பரோலில் வெளியே வந்து விட்டு தலைமறைவாக இருக்கிறாய். நான் நினைத்தால் உன்னை போலீசில் மாட்டி விட்டு மீண்டும் சிறையில் அடைத்து விடுவேன். ஒழுங்காக நான் சொல்வதை கேள்' என்று மிரட்டினார்.
இவ்வாறு அவர் கூறியதும் எனக்கு ஆத்திரம் வந்தது. எங்கே நான் தலைமறைவாக இருப்பதை காயத்ரிமாலா சொல்லி விடுவாரோ என நினைத்தேன். இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். அதன்படி காயத்ரிமாலாவின் தலையில் கல்லை தூக்கிப்போட்டேன்.
செல்போன் காட்டி கொடுத்தது
இதில் அவர் மயங்கினார். அதன் பின்னர் அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலி செயின், தோடு, கைகெடிகாரம் மற்றும் செல்போன் போன்றவற்றை திருடினேன். பின்னர் அங்குள்ள புதரில் காயத்ரிமாலாவின் உடலை இழுத்துப்போட்டு அவரின் தலையில் பெரிய கல்லை போட்டு விட்டு ஓடி விட்டேன்.
காயத்ரிமாலாவை கொன்று விட்டு நான் கருப்பூர் அருகே செங்கரடில் உள்ள எனது வீட்டிற்கு சென்று விட்டேன். இந்த நிலையில் காயத்ரிமாலா காணாமல் போனது பற்றி அவரின் தந்தை பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார்.
போலீசார் காயத்ரிமாலாவின் செல்போன் எண்ணை கொண்டு யாருக்கெல்லாம் பேசினார்? என விசாரித்தார்கள். அதில் நான் அவரிடம் பேசி இருப்பது தெரிய வந்தது. இதன் பின்னர் போலீசார் என்னை பிடித்து விசாரித்தனர். இதனால் வேறு வழியின்றி நான் காயத்ரிமாலாவை கொன்றதை ஒப்புக் கொண்டேன்.''
இவ்வாறு சரவணகுமார் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
==========
பகுதி - 3
கொலை செய்யப்பட்ட பெண் காவலர் காயத்ரி மாலா, விவாகரத்து பெற்று மறுமணம் செய்தவர்
கொலை செய்யப்பட்ட பெண் காவலர் காயத்ரி மாலா, துணை ஜெயிலர் தமிழ்ச் செல்வனை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே திருமணம் ஆனவர். முதல் கணவரை விவாகரத்து செய்தபின் தமிழ்ச்செல்வனை மறுமணம் செய்து கொண்டார். முதல் கணவர் மூலம் காயத்ரிமாலாவுக்கு பிறந்த 12 வயது மகள், கோவையில் படித்து வருகிறாள்.
இதேபோல், தமிழ்ச் செல்வனும் கோமளா என்ற பெண்ணை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். அவருக்கு என்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும் ஒரு மகனும் 10-ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர்.
இதற்கிடையில், 2-வது மனைவி காயத்ரி மாலா மூலம் தமிழ்ச்செல்வனுக்குப் பிறந்த 4 வயது மகள், கோவையில் உள்ள அவருடைய பெற்றோர் வீட்டில் இருக்கிறாள். சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த காயத்ரி மாலா, வெளியே வக்கீல் ஒருவருடனும் நட்பாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.
என்னை 'டார்ச்சர்' செய்யும் பெண்ணை என்ன செய்வது?
ஹலோ தோழியே ..! (தினமலர் 2-11-2009)
என்னை 'டார்ச்சர்' செய்யும் பெண்ணை என்ன செய்வது?
பெண்கள் தான் ஆண்களால் பாதிக்கப்படுகின்றனர் என்று சொல்வது தவறு; ஆண்கள் பலரும், பெண்களால் பாதிக்கப்படுகின்றனர் என்ற அர்த்தத்தில், பாதிக்கப்பட்ட வாசகர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். இனி அவர்...
எனக்கு திருமணமாகி எட்டு மாதமாகிறது. நான் எம்.ஏ., எம்.பில்., முடித்துள்ளேன். பெண் பார்க்கும் போது, அவளது வெள்ளை நிறத்தில் மயங்கிய நான், மற்றவற்றை பற்றி விசாரிக்கத் தவறிவிட்டேன். பெண் டிகிரி படித்திருப்பதாக கூறினர். எனக்கு அப்பா, அம்மா கிடையாது. அதனால், என்னை எதைப் பற்றியும் யோசிக்க விடாமல் அவசர அவசரமாக தேதியை குறித்து திருமணம் செய்து வைத்தனர்.
முதலிரவிலேயே எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவள் கன்னித்தன்மையோடு இல்லை. விசாரித்த போது, அவள் ஏற்கனவே திருமணமானவள் என்பது தெரியவந்தது. எட்டாவது மட்டுமே படித்து இருக்கிறாள். அவர்களது கிராமத்திலேயே ஒருவனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இவள் அவனை, "டார்ச்சர்' செய்து, அவனை பைத்தியக்காரனாக்கிவிட்டு ஓடி வந்துவிட்டாளாம். இதைப்பற்றி, திருமணத்துக்கு முன் யாரும் என்னிடம் எதுவும் கூறவில்லை.
இருந்தும், தாலி கட்டிய பாவத்திற்காக அவளோடு வாழ்ந்தேன். ஆனால், தற்போது, என்னையும், "டார்ச்சர்' செய்கிறாள். இவளைப் போன்ற பெண்களுடன், எந்த ஆணாலும் வாழமுடியாது. ஒவ்வொரு நாளும் நரக வேதனையாக உள்ளது. இனியும் இவளுடன் சேர்ந்து வாழமுடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.
இப்படிப்பட்ட பெண்களும் இருக்கத்தானே செய்கின்றனர்? பின், ஏன் இந்த சமூகம் எதற்கெடுத்தாலும் ஆண்களையே குறை சொல்கிறது? இவளை நான் விவாகரத்து செய்வது முறைதானே? இதில் தவறொன்றும் இல்லையே! வழிகாட்டுங்கள் தோழிகளே' என்று, பெயர் வெளியிட விரும்பாத வாசகர் ஒருவர் கடிதம் எழுதியிருக்கிறார்.
என்ன தோழியே... இந்த வாசகருக்கு வழிகாட்ட விருப்பமா? எடுங்கள் பேனாவை! எழுதுங்கள் எங்களுக்கு...
ஹலோ தோழியே, தினமலர், 219, அண்ணா சாலை சென்னை 600 002.
குறிச்சொற்கள் anti-male, biased laws, harassment, husbands, maintenance, manorama, misuse, பொய் வழக்கு
தேவை கள்ளக்காதல் காப்பீட்டுத் திட்டம்!
Disclaimer:
ஏழை எளிய மக்களின் துயர் துடைக்க தமிழக அரசு தொடங்கியிருக்கும் "கலைஞர் காப்பீட்டுத் திட்டத்"திற்கும் இந்த இடுகைக்கும் தொடர்பு இல்லை. அதைக் குறைவு படுத்தும் நோக்கில் இந்த இடுகை எழுதப்படவில்லை.
எதெதெற்கோ இன்ஷ்யூர் செய்கிறார்கள். திருமணமான ஒரு கணவன், தன் மனைவியின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கிறான் என்ற காரணத்தினால் என்றைக்கு மனைவி கையால் சாகடிக்கப் போகிறானோ தெரியாது. அதனால் திருமணம் செய்துகொள்ளும் ஒவ்வொரு ஆண்மகனுக்கும் ஒரு சிறப்பு காப்பீடு தேவை. அதாவது, கள்ளக்காதல் வெறியின் மேலீட்டால் கொலை செய்யப்படும் கணவனின் குழந்தைகள், பெற்றோர், உடன்பிறப்புகளுக்கு நிவாரணம் வழங்கவும், மற்றும் ஜீவனாம்சம், மெயின்டெனென்ஸ், 498A, DV Act போன்ற கேசுகளிலிருந்து கணவர்களை பாதுகாக்கவும், மேலும் கள்ளக்காதலைத் தேடி மணமான பெண்கள் அலைவதன் காரணம் கணவனின் ஆண்மைத்தன்மை (இதற்கு என்ன விளக்கம் என்பதை மனோரமா அம்மையாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்) குறைவுதான் என்று கூறி ஒட்டுமொத்த ஆண்குலத்தையுமே இழிவு படுத்தும் மனோரமாவிடமிருந்து கணவர்களைக் காப்பாற்றவும், அவசியம் ஒரு "கள்ளக்காதல் காப்பீட்டுத் திட்டம்" தேவை. அப்போதுதான் எதிர்வரும் ஆண் சிசுக்கொலை நிகழ்வுகளிலிருந்து சமூகத்தைக் காப்பாற்ற முடியும்!
மேலும் கள்ளக்காதலன் கூட கணவன் போல் கண்ட்ரோல் செய்ய எத்தனித்தால் அவனையும் இந்தப் புதுமைப்பெண்கள் போட்டுத் தள்ளி விடுகிறார்கள். என்றாலும் கள்ளக் காதலனுக்கும் காப்பீடு வேண்டும் என்று கேட்பது ரொம்ப ஓவர். அதனால் கணவனுக்கு மட்டும் இப்போது கேட்போமே!
இப்போது கள்ளக்காதலினால் கணவனைக் கொலை செய்த காரிகை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பிடிபட்ட கதையைப் படியுங்கள்.
சிவகிரி, நவ.2 - 2009. தினத்தந்தி
சிவகிரி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, காதலனுடன் சேர்ந்து பெண் கொலை செய்தார். 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கொலையில் துப்பு துலங்கியது.
கள்ளத்தொடர்பு
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள குலவிளக்கு நத்தக்காடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது45), விவசாயி. இவரது மனைவி பொன்னாத்தாள். இவருக்கும், திருப்பூர் மாவட்டம் முத்தூரை சேர்ந்த மர அறுப்பு மில் அதிபர் தங்கவேல் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது.
இவர்களது கள்ளத் தொடர்பு பொன்னாத்தாளின் கணவர் சண்முகத்திற்கு தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர் பொன்னாத்தாளை கண்டித்தார். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
விவசாயி கொலை
இந்த நிலையில் கடந்த 12-3-2000 அன்று கரூர் மாவட்டம் தென்னிலை அருகே உள்ள மொஞ்சனூரில் சண்முகம் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது பிணத்தை தென்னிலை போலீசார் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து தீவிர புலன் விசாரணை நடத்தி வந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் போலீசார் அந்தப்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த ஒரு நபரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அதில், அவரது பெயர் முருகேசன் என்ற முகிலன் என்பதும், முத்தூரில் உள்ள தங்கவேலின் மர அறுப்பு மில்லில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. மேலும் முகிலன் முத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வீடு புகுந்து கைவரிசை காட்டி வந்ததும் தெரியவந்தது.
தீ வைத்து...
அவரிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தினார்கள். அப்போது மேலும் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. குலவிளக்கு நாத்தக்காடு பகுதியை சேர்ந்த விவசாயி சண்முகத்தை, தானும், சண்முகத்தின் மனைவி பொன்னாத்தாள், மாமனார் ரங்கசாமி, மகள்கள் செல்வி என்கிற அச்சுதா, வசந்தி, கள்ளக்காதலன் தங்கவேல் ஆகியோரும் சேர்ந்து அரிவாளால் வெட்டி கொலை செய்து, அவரது உடலை டிராக்டரில் கொண்டு வந்து மொஞ்சனூர் பகுதியில் தீ வைத்து எரித்து விட்டு தப்பி சென்றதையும் விசாரணையில் அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து போலீசார் முகிலனை சிவகிரி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்லமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து முகிலனை கைது செய்தனர்.
வலைவீச்சு
கொலை வழக்கில் தலைமறைவாக இருக்கும் பொன்னாத்தாள், அவரது கள்ளக் காதலன் தங்கவேல், தந்தை ரங்கசாமி, மகள்கள் செல்வி என்கிற அச்சுதா, வசந்தி ஆகிய 5 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கணவனை கொலை செய்த சம்பவத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு துப்பு துலங்கி இருப்பது அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குறிச்சொற்கள் 125, 498a, adultery, anti-male, biased laws, dv act, extortion, law, lust, maintenance, manorama, கள்ளக்காதல், கொலை, மனோரமா
கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்திய பெண் தீக்குளித்து தற்கொலை
கணவனை வேண்டாம் என்று உதறிவிட்டு கள்ளக் காதலனுடன் குடித்தனம் நடத்தியவள், கள்ளகாதலனுடன் சண்டை போட்டுச் செத்தாலும், ஒரிஜினல் புருஷன்தான் குற்றவாளி எனக்கருதி அவன் மீது விசாரணை நடத்துவார்களாம். ஏனென்றால் திருமணமான ஏழு ஆண்டுகளுக்குள் மனைவி இறந்தால் அது வரதட்சணைக் கொடுமையால்தான் என்ற முன்முடிவுடன் கணவனையும் அவனது பெற்றோரையும் குற்றவாளிகள் என்ற அனுமானத்துடன் (Section 498A & 304B of IPC and "Presumptive Section" 113-B of the Indian Evidence Act) ஆர்.டி.ஓ விசாரணை நடக்கவேண்டும். இதுதான் இந்தியச் சட்டங்களின் கேவல நிலைமை. பெண்டாட்டி கள்ளக்காதலனுடன் ஓடிப்போன கொடுமை போதாதென்று இந்தக் கேவலம் வேறு அவனுக்கு!
ஐயமிருந்தால் நான் மேற்குறிப்பிட்டிருக்கும் சட்டப் பிரிவுகளைப் பற்றி கூகிளில் தேடிப்பாருங்கள்.
நிச்சயம் அனைத்து ஆண்களும் திருமணம் செய்துகொண்டு இத்தகைய இன்பங்களை துய்க்கவேண்டும்!
இந்தச் செய்தியின் முடிவில் இருக்கிறது அந்த கொடுங்கோனமை சட்ட நடவடிக்கை.
ஆலந்தூர், நவ.1- 2009. தினத்தந்தி
திருமணமான 4 மாதத்தில் கணவனை விட்டு கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்திய பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
சென்னையை அடுத்த பள்ளிக்கரணை தந்தை பெரியார் நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 19). இவருடைய மனைவி சுபா (18). இவர் தீக்காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக செத்தார்.
இது பற்றி பள்ளிக்கரணை போலீசுக்கு தகவல் வந்தது. மடிப்பாக்கம் உதவிக்கமிஷனர் சங்கரபாண்டியன், பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் தினகரன் ஆகியோர் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது பற்றி விசாரணை நடத்தியபோது பல தகவல் கிடைத்தன. திண்டிவனம் அருகே உள்ள வெள்ளிமேடு பேட்டையை சேர்ந்தவர் சுபா. இவருக்கும் காஞ்சீபுரத்தை சேர்ந்த சசிக்குமார் என்பவருக்கும் கடந்த ஜுன் மாதம் 25-ந் தேதி திருமணம் நடந்தது. பின்னர் ஆடி மாதம் சுபாவை திண்டிவனம் அழைத்து வந்தனர்.
அப்போது சுபாவுக்கு அதே பகுதியை சேர்ந்த ரமேசுடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இது பற்றி அங்குள்ள போலீசில் புகார் செய்யப்பட்டது. அப்போது சுபா தனது கணவருடன் செல்ல விருப்பம் இல்லை. காதலன் ரமேசுடன் வாழ்வேன் என்று கூறினார்.
இதையடுத்து சுபா, காதலனுடன் கடந்த 2 மாதத்திற்கு முன்பு பள்ளிக்கரணை வந்து குடும்பம் நடத்தினார். இதற்கிடையே கூலி வேலை செய்யும் ரமேஷ், சுபாவை வேலைக்கு செல்லுமாறு கூறினார். இதற்கு சுபா மறுப்பு தெரிவித்தார். இதனால் சுபா, ரமேஷ் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சுபா வீட்டில் தீக்குளித்தார். இதை கண்ட ரமேஷ், சுபாவை காப்பாற்ற சென்றார். அப்போது அவரும் படுகாயம் அடைந்தார். 2 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சையின்றி சுபா பரிதாபமாக செத்தார்.
மேற்கண்ட தகவல்கள் விசாரணையில் வெளியாயின. இது பற்றி பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக ஆர்.டி.ஒ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
குறிச்சொற்கள் 498a, adultery, anti-male, biased laws, lust, paramour, suicide, கள்ளக்காதல், மனோரமா, வெறி
அநாதையாய் விடப்பட்ட ஆண் குழந்தை
தொடங்கிவிட்டது ஆணழிப்பு மனப்பான்மையின் வெற்றி!
தற்போது மணமாகும் வயதில் ஆண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர், அன்றாடம் நடக்கும் பொய் வரதட்சணை வழக்குகள், கைது, சிறைவாசம், மிரட்டல் பணம் பறிப்பு, கள்ளக்காதல் கொலைகள், ஆணின் பெற்றோரை சோத்துக்கு வழியில்லாமல் நடுத்தெருவில் நிறுத்தும் அவலங்கள், ஆண்களை அவர்கள் ஆணாகப் பிறந்ததாலேயே குற்றவாளியாகக் கருதும் நீதிபதிகள், இவற்றால் கதிகலங்கி திருமணம் என்றாலே காத தூரம் ஓடும் நிலைக்குத் தள்ளப்படுவதால் இனிமேல் "வேண்டாமய்யா ஆண்குழந்தை" என்னும் மனநிலைக்கு வந்துவிட்டனர் பெற்றோர்.
தூத்துக்குடியில் பிறந்த நிலையில் ஒரு ஆண் குழந்ததயை தவிக்க விட்டு ஓடிய தாயைப் பற்றி முந்தைய இடுகையொன்றில் பார்த்தோம்.
இப்போது இந்தச் செய்தியைப் படியுங்கள்:-
ராமேஸ்வரம் கோயிலில் அனாதையாக கிடந்த குழந்தை.
செய்தி: தினமலர். 2.11.2009
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் கோயிலில் நேற்று அதிகாலை சுவாமி சன்னதி அருகே யாரோ ஒரு தாய் பிறந்த 25 நாட்கள் ஆன ஆண் குழந்தையை பையில் போட்டு, விட்டு சென்றுள்ளார். கோயில் ஊழியர் மகாலட்சுமி பையில் குழந்தை இருப்பதை கண்டு குழந்தையை எடுத்து போலீசுக்கு தகவல் கொடுத்தார். குழந்தையை கேட்டு யாரும் வராத காரணத்தால் கோயில் ஊழியர் மகாலட்சுமியின் மகள் பேபி, "தானே குழந்தையை வளர்ப்பதாக" கூறியதையடுத்து போலீசார் குழந்தையை பேபியிடம் ஒப்படைத்தனர். பேபிக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளநிலையில் இந்த குழந்தையை தனது சொந்த குழந்தை போல் வளர்க்க உள்ளதாக கூறினார்.
குறிச்சொற்கள் 498a, adultery, anti-male, biased laws, child custody, dv act, extortion, maintenance, manorama, misuse, கள்ளக்காதல், பொய் வழக்கு
தோண்டித் துருவி விசாரிக்காமல் திருமணத்திற்கு ஒப்புதல் அளிக்காதீர்கள்
ஏனெனில் இப்போதெல்லாம் பல பிஞ்சிலேயே பழுத்து விடுகின்றன. பள்ளி செல்லும் நாட்களிலேயே காமக் களியாட்டங்கள் கோலாகலமாக நடக்கின்றன. இவைகளுக்குப் பெயர் காதலாம். இத்தகைய கலாசாரச் சீரழிவை சினிமாவும் ஊடகங்களும் திட்டம் போட்டுப் பரப்பி வருகின்றன. ஸ்கூல் யூனிஃபார்மிலேயே நடக்கும் கண்றாவிகளை ஊருக்கு ஒதுப்புறமான இடங்களிலும், வள்ளுவர் கோட்டம் போன்ற பொது அரங்குகளிலும், பார்க்குகளிலும் தினமும் பார்க்க முடிகிறது.
தங்கள் குழந்தைகளின் எண்ண ஓட்டங்களையும் செக்ஸ் சார்ந்த நடவடிக்கைகளையும் பற்றி பெற்றோர்களுக்கு அறவே தெரியாது. அவர்கள் ஒரு கற்பனை உலகில் இருப்பார்கள். ஆகையால் அவர்கள் கொடுக்கும் உருவகத்தை வைத்துக் கொண்டு முடிவெடுக்காதீர்கள். "ரோஜா" படத்தில் வருவதுபோல் வெகு சிலர்தான் தகுந்த நேரத்தில் வெளியில் சொல்வார்கள். பல பெண்கள் கல்யாணம் ஒரு பக்கம், கள்ளக்காதல் ஒரு பக்கம் என்று இருந்து விடலாம் என்று திட்டமிட்டு கமுக்கமாக இருப்பார்கள். இன்னும் சில கேசுகளில் பெற்றோருக்கு இத்தகைய பொருந்தாக் காதல்கள் தெரியவந்தபின் கூட கல்யாணம் ஆகிவிட்டால் சரியாகப் போய்விடும் என்று முடிவெடுத்து, மொத்தத்தையும் மறைத்து ஒரு ஆண்மகனைப் பலிகடா ஆக்குவார்கள்.
ஆகையால் ஆண்களும் அவர்களுடைய பெற்றோர்களும் திருமணம் பற்றிய முக்கிய முடிவெடுக்குமுன் உஷாராக நன்கு தீவிரமாக விசாரித்தபின் முடிவெடுக்க வேண்டும். ஜோசியக்காரர்களை நம்பாதீர்கள். ஜோசியம், ஜாதகம் என்பதெல்லாம் வெறும் புரட்டு. அதை வைத்து மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்துகிறது ஒரு கும்பல். அவர்களால் சீரழிந்த குடும்பங்கள் ஏராளம்.
இனி இந்தக் காதல் காவியத்தைப் படியுங்கள்:-
நாளை திருமணம் நடைபெற இருந்த இளம்பெண் காதலனுடன் போலீசில் தஞ்சம்.
2 மாதமாக தாலியை மறைத்து வைத்து பெற்றோருடன் வசித்தார்
கோபிசெட்டிபாளையம், அக். 31 - 2009 - தினத்தந்தி
நாளை திருமணம் நடைபெற இருந்த இளம்பெண் காதலனுடன் போலீசில் தஞ்சம் அடைந்தார். இவர் 2 மாதங்களாக தாலியை மறைத்து வைத்து பெற்றோருடன் வசித்து வந்து உள்ளார்.
இளம்பெண்
கோபியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். அவருடைய மகள் லட்சுமி (27) (பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது) 10-ம் வகுப்பு வரை படித்து உள்ள இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார்.
லட்சுமிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த அவருடைய பெற்றோர், பல்வேறு இடங்களில் மாப்பிள்ளை தேடினார்கள்.
அப்போது பவானியைச் சேர்ந்த குமார் என்பவருக்கும், லட்சுமிக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு, கடந்த ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. லட்சுமி-குமாரின் திருமணம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுவதாக இருந்தது. திருமணத்திற்கான ஏற்பாடுகளை லட்சுமியின் பெற்றோர்கள் தீவிரமாக செய்து வந்தனர். உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு அழைப்பிதழும் கொடுக்கப்பட்டு வந்தது.
மாயம்
இந்த நிலையில் வேலைக்கு சென்ற லட்சுமி கடந்த 26-ந் தேதி இரவு வீட்டிற்கு வரவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்க வில்லை.
எனவே லட்சுமியின் பெற்றோர் இது குறித்து கோபி போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் லட்சுமியை தேடி வந்தனர். லட்சுமி வீட்டை விட்டு திடீரென்று மாயமான தகவல் மாப்பிள்ளையின் வீட்டாருக்கு கிடைத்ததால், அவர்கள் திருமணத்தை நிறுத்தி விட்டனர்.
காதலனுடன் தஞ்சம்
இந்த நிலையில் லட்சுமி நேற்று மாலை கோபி போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது அவருடன் வந்தவரை, தான் காதல் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினார். இது தொடர்பாக லட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணை குறித்து போலீசார் கூறும் போது,
லட்சுமி வேலை செய்து வரும் பனியன் கம்பெனியில் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். இவரும், லட்சுமியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்து உள்ளனர்.
இந்த நிலையில் லட்சுமிக்கு, அவருடைய பெற்றோர்கள் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க தொடங்கியதால், லட்சுமியும், முத்துப்பாண்டியும் கடந்த ஆகஸ்டு 25-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். மேலும் அவர்கள் தாங்கள் திருமணம் செய்து கொண்டதை வக்கீலின் மூலம் திருமண ஒப்பந்தம் செய்து உள்ளனர்.
தாலி மறைப்பு
லட்சுமி, தான் காதல் திருமணம் செய்து கொண்டது, பெற்றோருக்கு தெரியக் கூடாது என்பதற்காக வீட்டிற்கு வரும் போது தாலியை கழற்றி மறைத்து வைத்து உள்ளார். இதனால், அவருடைய காதல் திருமணம் பெற்றோருக்கு தெரியவில்லை என்று போலீசார் கூறினர்.
மகள் திருமணம் செய்தது கூட தெரியாமல், அவளுக்கு மாப்பிள்ளை தேடி நிச்சயம் செய்த பெற்றோர், மாயமான மகள் போலீஸ் நிலையத்திற்கு வந்து இருப்பது குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது லட்சுமி பெற்றோரை பார்க்காமல் முகத்தை திருப்பி வைத்து கொண்டார். இதை பார்த்த அவருடைய பெற்றோர்கள், "உன்னை நம்பி கல்யாண ஏற்பாடு செய்தோம். இப்படி தலை குனிய வைத்து விட்டாயே!" என்று கூறி கதறி அழுதனர்.
காதலனுடன் சென்றார்
காதல் திருமணம் செய்து கொண்ட லட்சுமி தன்னுடைய காதல் கணவன் முத்துப்பாண்டியுடன் வாழப் போவதாக உறுதிப்பட தெரிவித்ததால், போலீசார் முத்துப்பாண்டியுடன் லட்சுமியை அனுப்பி வைத்தனர். (சரி, நிச்சயதார்த்தம் செய்த ஆண் மற்றும் அவனுடைய பெற்றோர் அடைந்த அவமானத்திற்கும், மனச் சஞ்சலத்திற்கும் யார் பதில் சொல்வது? இதையே அந்த ஆண் செய்திருந்தால் அவனைக் கைது செய்திருப்பார்கள்!)
குறிச்சொற்கள் anti-male, biased laws, அப்பாவி ஆண்கள், ஆண்பாவம், எச்சரிக்கை, கயமை, கலாசாரச் சீரழிவு, வெறி
ஆண் உயிரின் விலை என்ன?
நம் நாட்டில் திருமணமான ஆண்களின் தற்கொலை, பெண்கள் தற்கொலை எண்ணிக்கையைவிட இரண்டு மடங்கு என்று அரசின் தரவுகளே (தேசீய குற்றத் தரவுகள் மையம் (National Crime Records Bureau)) தெரிவிக்கின்றன. (சுட்டி) ஆனாலும் மணமான பெண்கள்தான் பெருமளவு தற்கொலை செய்து கொள்வது போன்ற ஒரு பொய்யான தோற்றத்தை சில பெண்ணியவாதிகளும், அவர்கள் சார்ந்த சில என்.ஜி.ஓ இயக்கங்களும் தங்கள் சுயநலத்திற்காகப் பரப்பி வருகின்றன. இந்த மாயத் தோற்றம் ஊடங்கள் மூலமும் திட்டமிட்டுப் பரப்பப்படுவதால் இதை (தமிழக சுகாதார அமைச்சர் உட்பட) பலர் அப்படியே நம்பி விடுகிறார்கள்.
மேலும் ஊடகங்களுக்கும் இது உதவியாக இருக்கிறது. ஏனெனில், "இளம் பெண் தற்கொலை", "அழகி தற்கொலை", "மாமியார் கொடுமையால் இளம் மனைவி தற்கொலை" - இப்படியெல்லாம் வெளிவந்தால்தான் அது பரபரப்பான நியூஸ்! "ஆண் தற்கொலை", "கணவன் மாண்டான்" என்று எழுதினால் ம்ஹூங், அதை யாரும் சீந்த மாட்டார்கள். சாதாரணமாகவே செய்தித்தாள்களில் செய்தி வெளியாவதில் ஒரு அமைப்புமுறை (pattern) இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். ஒரு சம்பவத்தில் 10 பேர் மாண்டால், "3 இளம் பெண்கள் உட்பட 10 பேர் பலி" என்றுதான் எழுதுவார்கள்!
இத்தகைய பொய்மை பரவுவதால் பலர் ஆதாயம் அடைகின்றனர். "ஐயகோ, இந்த நாட்டில் இன்னமும் ஆயிரக் கணக்கான பெண்கள் ஆண்களின் கைகளில் சிக்கி கொடுமைப் படுவதால் தற்கொலை செய்துகொண்டு மடிகிறார்களே" என்னும் கூப்பாட்டை அணையாமல் ஊதிக் கொண்டிருந்தால்தான் ஐ.நாவைச் சார்ந்த UNIFEM மற்றும் மக்கள் வரிப்பணத்திலிருந்து கணிசமான துகை இந்த நபர்கள் கையில் சிக்கும்! அதை வைத்து பெண்களின் துயர் துடைப்பதாகச் சொல்லிக்கொண்டு, சில மேட்டுக்குடிப் பெண்கள் "பப்"பிற்குச் சென்று தண்ணி போடும் உரிமைக்காகவும், ஏர் ஹோஸ்டஸ்கள் பொய் வழக்கு போடும் உரிமைக்காகவும், குடும்பப் பெண்களை தங்கள் வாழ்வைச் சிதைத்துக் கொண்டு கோர்ட்டு வராண்டாவில் லோலோவென்று அலைய வைக்கவும் போராடுகிறோம் என்று சிலவுக் கணக்கு எழுதிக் கொண்டிருக்கலாம்!!
ஆணின் உயிரின் மதிப்பை அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்:
(நன்றி: "பெண்கள் நாட்டின் கண்கள்")
சரி. இப்போது இந்த அப்பாவி ஆணின் தற்கொலைக் கதையை வாசியுங்கள்:
திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை சந்தித்தபின் புதுமாப்பிள்ளை `திடீர்' தற்கொலை
தாயாருக்கு உருக்கமான `எஸ்.எம்.எஸ்.'
தாம்பரம், அக்.31- 2009. செய்தி - தினத்தந்தி
சென்னையை அடுத்த குரோம்பேட்டை சாஸ்திரி காலனியை சேர்ந்தவர் யோமஹாசன் (வயது 27). பி.பி.ஏ. பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு சமீபத்தில் உறவினர் பெண்ணை திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை சந்தித்து விட்டு நேற்று முன்தினம் இரவு வந்த யோமஹாசன் வீட்டில் சோகமாக இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டில் படுக்கையறையில் தூங்க சென்றவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
யோமஹாசன், இறப்பதற்கு முன்பு தனது செல்போனில் தாயாருக்கு எஸ்.எம்.எஸ். டைப் செய்து வைத்திருந்தார். அதில் `எனது சாவுக்கு யாரும் காரணமல்ல, எனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணிற்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுங்கள்' என்று அதில் இருந்தது.
யோமஹாசன் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது மர்மமாக உள்ளது. இது தொடர்பாக குரோம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குறிச்சொற்கள் anti-male, biased laws, suicide, அப்பாவி ஆண்கள், ஆண்கள் தற்கொலை, ஆண்பாவம், தற்கொலை
பிறந்த ஆண் குழந்தையை உதறி விட்டு ஓடிய தாய்!
இனிமேல் இப்படித்தான் நடக்கும். ஆண் குழந்தையைப் பெற்றால் அந்தத் தாய் படப்போகும் துயரங்களை அவர்கள் உணரத் தொடங்கி விட்டனர். இனி ஆண் சிசுக் கொலை பரவலாகும் நிலை நிச்சயம் ஏற்படப்போகிறது. அந்த ஆண் வளர்ந்து பெரியவனாகி அவன் ஒரு பெண்ணைக் காதலித்து திருமணம் செய்தபின், மருமகள் போடப்போகும் 498A வழக்குகளில் சிக்கி சிறைக்குப் போகும் அவலத்தையும், கள்ளக்காதல் கொலையையும், அதற்கு அந்த ஆணையே காரணமாக்கும் மனோரமாவின் இயக்க நடவடிக்கைகளையும் தவிர்ப்பது எப்படி என்று தாய்மார்கள் யோசிக்கத் தொடங்கி விட்டனர்!
இப்போது செய்தியை வாசியுங்கள்:-
தூத்துக்குடி, அக்.30- 2009. செய்தி - தினத்தந்தி
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தாய் உதறிவிட்டு சென்ற ஆண் குழந்தை சமூகநலத்துறையில் ஒப்படைக்கப்பட்டது.
ஆண் குழந்தை
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 10-ந் தேதி மாலை 61/4 மணிக்கு ஒரு இளம் கர்ப்பிணி பெண் சிகிச்சைக்காக சேர்ந்தார்.
அப்போது அவர் முத்தையாபுரத்தை சேர்ந்த செந்தில்குமார் மனைவி சகுந்தலா(24) என்ற முகவரி கொடுத்தார். இதைத்தொடர்ந்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சகுந்தலாவுக்கு மறுநாள் அதிகாலை 21/4 மணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
தாய் ஓட்டம்
இந்தநிலையில் குழந்தையை உதறிவிட்டு சகுந்தலா ஆஸ்பத்திரியில் இருந்து ஓடிவிட்டார். இதனால் தவித்து கொண்டு இருந்த குழந்தையை ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் தனியாக வைத்து பாதுகாத்து வந்தனர்.
இது குறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையை போட்டுவிட்டு ஓடிய தாயை தேடிவந்தனர். ஆனால் இதுவரை கிடைக்கவில்லை.
ஒப்படைப்பு
இதைத்தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த ஆண் குழந்தை நேற்று காலை சமூகநலத்துறையில் ஒப்படைக்கப்பட்டது.
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி டீன் ரவிசங்கர் குழந்தையை சமூகநலத்துறை அலுவலர் முத்துநாயகத்திடம் ஒப்படைத்தார். அப்போது அரசு ஆஸ்பத்திரி உறைவிட மருத்துவர் விசுவநாதன் உடன் இருந்தார்
குறிச்சொற்கள் 125, 498a, adultery, anti-male, biased laws, maintenance, manorama, கள்ளக்காதல், குடும்ப வன்முறை, பொய் வழக்கு
ஆகா, இவளல்லவோ தெய்வீகப் பெண்!
நிச்சயமாக இந்தப் புதுமைப் பெண்ணுக்கு கோயில் எழுப்ப வேண்டும். ஏனெனில் நம் நாட்டில் திருமணம் செய்துகொள்ளும் ஆண்களின் உன்னத நிலையை அப்பட்டமாக வெளிக்காட்டிய கைங்கரியத்தை இவர் செய்துள்ளார். இவளை திருமண சீர்திருத்த இயக்கத்தின் தலைவியாக அமர்த்த நாம் பரிந்துரை செய்யலாம்!
தினமும் நாம் (குறைந்தது அரை டசன் கேசுகளாவது) செய்தித்தாள்களில் வாசிக்கும் செய்தி இதுபோல்தான் இருக்கும். அதாவது - ஒரு அப்பாவிப் பெண்ணைக் காதலித்து கைவிட்டு விட்டான் ஒரு போக்கிரி ஆண். அந்த அபலை காவல் நிலையத்தில் கண்ணீரும் கம்பலையுமாக புகார் கொடுத்தாள். அவளுக்கு ஆதரவாக பெண்கள் இயக்கத் தலைவியும் சென்றார். உடனே அந்த ஆணைக் கைது செய்து சிறையிலடைத்தார்கள்.
அந்தப் பெண் தன் பேட்டியில், "நான் ஒரு உன்னத தமிழ்ப்பெண். என்னைக் காதலித்த அந்த ஆணுடன்தான் நான் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துவேன். அவனுடன் திருமணம் நடக்க அவனுடைய பெற்றோர்கள்தான் தடையாக உள்ளனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என் காதலர் நான் இன்னொருவனுடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகிக்கிறார். அந்த நபர் என் நண்பர்தான். அவருடன் இரவில் நெடுநேரம் செல்ஃபோனில் பேசிக்கொண்டிருப்பேன். அதைப்போய் ஒரு குற்றமாகக் கருதி என் காதலர் என்னுடன் சண்டை போட்டார். அதனால்தான் புகார் கொடுத்தேன்" என்றார்.
- இப்படித்தான் இதுபோன்ற காமக் கதைகள் ஓடும். உடனே நம் பெண்ணியவாதிகளும் ஜொள்ளியவாதிகளும், "ஐயகோ, அந்தப் பெண்னை கைவிட்டுவிட்டானே காமாந்தகாரன், சண்டாளன், இவனை என்ன செய்தாலும் தகும்" என்று கும்மியடித்து கோலாட்டம் போடுவார்கள்.
சரி அந்த முட்டாள் ஆணின் மீது கேசு போட்டு கைது செய்கிறார்களே, அது எந்தக் குற்றப் பிரிவின் கீழ் என்று விசாரித்தால், கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான வன்முறை, ஏமாற்றல், கற்பழிப்பு, பெண்களை பொது இடத்தில் மானபங்கம் செய்தல் இதுபோன்று ஆண்களை ஆண்களாக அவர்கள் பிறந்தத்தற்காகவே குற்றவாளியாக்குவதற்காக கட்டமைக்கப்பட்டிருக்கும் 40-க்கும் அதிகமான சட்டங்களில் சிலவற்றைப் போட்டு ஊத்தி மூடி விடுவார்கள்.
ஆனால், அதேபோல் ஒரு பெண் ஒருவனைக் காதல் செய்து விட்டு இன்னொருவனோடு ஓடினால், அதுவும் ஒருவனோடு திருமணம் நிச்சயம் ஆனபிறகு அந்தத் திருமண நாளன்றும், அல்லது திருமணம் முடிந்த பின்பும் இன்னொருவனோடு ஓடினால் அந்தப் பெண்மீது என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?
ஒரு புண்ணாக்கும் முடியாது. அந்தக் கணவன் வாயில் விரல் போட்டு சப்பிக்கொண்டிருக்க வேண்டியதுதான்!
சந்தேகமிருந்தால் "தேவதையைக் கண்டேன்" என்னும் திரைப் படத்தில் தனுஷ் பேசுவதை இந்த வலைப்பதிவில் பாருங்கள்.
ஆகையால் இளைஞர்களே, நீங்கள் கட்டாயம் திருமணம் செய்து கொள்ளுங்கள், இதோ இந்த உன்னதப் பெண்ணின் பண்பாடு செறிந்த நடவடிக்கையைக் கண்ட பெருமிதத்துடன்!!
செய்தி - தினமலர். அக்டோபர் 29,2009.
கள்ளக்காதலுடன் ஓடிய தாயை பார்த்ததும் அழுத குழந்தைகள்.
திண்டுக்கல் : கள்ளக்காதலனுடன் பத்து மாதங்களுக்கு முன்பு ஓடிப்போன தாயை கோர்ட்டில் பார்த்ததும், அவரது இரண்டு ஆண் குழந்தைகளும் கதறி அழுது தங்களுடன் வருமாறு அழைத்தனர்.
திண்டுக்கல் அருகேயுள்ள கள்ளிமந்தையம் செரியன்நகரைச் சேர்ந்தவர் சாமுவேல் (35). இவருக்கும் உஷா (27) என்பவருக்கும், ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. சாம்பிரசன்னா (5), சுதன் (3) என்ற இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நர்ஸ் வேலை பார்த்த உஷா தான் படிக்கும் போதே காதலித்த பிரகாஷ் என்பவருடன் கடந்த ஜனவரி மாதம் ஓடிப்போனார். (திருமணத்துக்கு முன்பே ஒருவனைக் காதலித்தவள் இன்னொருவனுடன் திருமணம் செய்து கொண்டு அவன் வாழ்க்கையை ஏன் கெடுக்கிறாள்? இதற்கு எல்லாம் தெரிந்த "டோண்டு" தான் பதில் சொல்ல வேண்டும்)
இது குறித்து சாமுவேல் கள்ளிமந்தையம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
சாமுவேல் தனது நண்பர்கள், உறவினர்களுடன் சென்று திருவாரூரில் காதலனுடன் தங்கியிருந்த உஷாவை அழைத்து வந்து கள்ளிமந்தையம் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். போலீசார் நேற்று உஷாவை திண்டுக்கல் ஜே.எம்.,1 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டில், கணவனுடன் செல்ல மறுத்த உஷா, தன் தாய் வீட்டிற்கு செல்வதாக தெரிவித்தார்.
கோர்ட் முடிந்து வாசலுக்கு வந்த தாயைப் பார்த்ததும், இரு குழந்தைகளும் கதறி அழுதன. ""அம்மா நம்ம வீட்டுக்கு வாம்மா, அப்பாவுடன் சேர்ந்து நாலு பேரும் ஒன்றாக இருக்கலாம்'' என அழைத்தனர். இதனை கேட்டு கோர்ட் ஊழியர்களும், அங்கிருந்தவர்களும் கண் கலங்கினர். ஆனாலும் உஷா தன் கணவனுடன் செல்ல மறுத்து விட்டார்.
"உஷா காதலனுடன் செல்வதற்காகவே என்னுடன் வர மறுக்கிறார்." அவரை அழைத்து வந்த காதலன் பிரகாஷ் கோர்ட்டிற்கு வந்திருப்பதாக சாமுவேல் தெரிவித்தார்.
உஷாவிடம் கேட்ட போது, "என் கணவர் என்னிடம் பணம் கேட்டு அடித்து தகராறு செய்ததால் நான் வெறுத்துப்போய் தாய் வீட்டிற்கு செல்கிறேன். (அட்ரா சக்கை! இதைச் சொன்னால்தானே கேள்வி கேட்கும் கணவனை 498A போட்டு பயமுறுத்தி, அடக்கி வைத்து கள்ளக் காதலுக்கும் சேர்த்து அவனிடமிருந்து மிரட்டிப் பணம் பறிக்க முடியும்! கணவனிடம் சேர்ந்து குடும்பம் நடத்த ஒப்பாமல் ஓடிப்போகும் மனைவிகள், கணவர்களிடமிருந்து பணம் பறிக்க 40+ வித சட்டங்கள் உள்ளன. நீதிபதிகளும், அவள் அதற்கு சட்டடப்படி தகுதியுள்ளவளா என்றெல்லாம் ஆராய்வதற்கு முன்னமையே, "முதலில் மனைவி கேட்ட பணத்தைக் கொடு" என்று தீர்ப்பு அளித்து வருகிறார்கள். பிறகென்ன, கொண்டாட்டம்தான்! கள்ளக் காதல் மனைவிகளுக்கு சட்டங்கள், போலீஸ், பெண்ணியவாதிகள், நீதிபதிகள் போன்றோர் உபயத்தினால் கணவன் காசில் தினந்தோறும் தீபாவளிதான்!. கேடுகெட்ட சமுதாயமய்யா இது!!) எனக்கு படிக்கும் காலத்தில் இருந்தே காதலன் இருப்பது என் குடும்பத்தாருக்கும்,கணவன் குடும்பத்தாருக்கும் தெரியும். தற்போது காதலன் வேறு பெண்ணை மணந்து அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதால், அவருடன் செல்ல வாய்ப்பு இல்லை. நான் என் தாய் வீட்டில் தங்கப்போகிறேன்,'' என்றார். (ஆகா, இவளல்லவா, பாரதி கண்ட புதுமைப் பெண்! வாழ்க மனோரமாவின் இயக்கம்!)
=========================
"ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, பெண்கள் ஆனந்த முழுச் சுதந்திரம் அடைந்து விட்டார்கள் என்று ..."
குறிச்சொற்கள் 498a, adultery, anti-male, biased laws, desertion, harassment, husbands, lust, misuse, ஆண்பாவம், கள்ளக்காதல், மனோரமா, வெறி