Showing posts with label desertion. Show all posts
Showing posts with label desertion. Show all posts

பெருகுது 498A அறுவடை, ரொம்புது கல்லா!

கீழ்க்கண்ட புகார்களின் நடைமுறைக்கு ஒவ்வாத "டெம்பிளேட்" தன்மையையும், கற்பனை வளத்தையும், வெளிநாடுகளில் இதுபோன்ற பொய் வழக்கு ஜோடனைகளின் பருப்பு வேகாது என்பதால் அங்கு நடந்தவைக்கு நம்மூரில் வந்து புகார் கொடுக்கும் அவலத்தையும் காணுங்கள். இங்குதானே "ஐயோ பாவம், அபலைப் பெண்கள்" என்று கண்ணீர் விட்டுக் கதறி உருக வைத்து, "உன்னுடன் வாழாத மனைவி கேட்கும் ரொக்கத்தைக் கொடு, இல்லாவிடில் ஜெயிலுக்குப் போ" என்று உத்தரவுகள் பெற்று, ஆண்களை இலவச ஏ.டி.எம் மெஷீனாக மாற்றும் சடங்கு நடக்கும்!

தினந்தோறும் அறங்கேற்றப்படும் நம் புதுமைப் பெண்களின் புனிதத்தன்மையைக் கண்டு களித்து கலியாணம் செய்து கொண்டு வயதான பெற்றோருடன் கூட்டாக கைது செய்யப்பட்டு ஜெயிலுக்குப் போங்கள்!

1.
அருப்புக்கோட்டையில் இளம்பெண்ணிடம் வரதட்சணை கொடுமை; 4 பேர் மீது வழக்கு

அருப்புக்கோட்டை, நவ.10 - 2009. தினத்தந்தி

அருப்புக்கோட்டை அருகே வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக கணவன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய் யப்பட்டுள்ளது.

திருமணம்

அருப்புக்கோட்டை நல்லூர் முஸ்லிம் வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் செய்யது அலிபாத் திமா (வயது 22). இவருக்கும் அஜீஸ்நகர் பஜீருல் ஹக் என்பவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, மணமகள் வீட்டார் சார்பில் 10 பவுன் நகையும், 70 ஆயிரம் ரொக்கமும் தருவதாக பேசப்பட்டது. ஆனால் அப்போது 10 பவுன் நகையும், 16 ஆயிரம் ரொக்கமும் கொடுக்கப்பட் டது. மீதி ரொக்கப்பணத்தை 2 மாதம் கழித்து தருவதாக மணமகள் வீட்டார் சார்பில் பேசப்பட்டதாக தெரிகிறது.

கொடுமை

ஆனால் அதன்படி மீதி பணத்தை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இத னால் மீதி பணத்தை வாங்கி வரும்படி செய்யது அலி பாத்திமாவை கணவர்பஜீருல் ஹக், அவரது தாயார் ஆயிஷா பீவி, அண்ணன் காட்டுபாவா, தம்பிரியாஸ் ஆகியோர் துன் புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து செய்யது அலி பாத்திமா அருப்புக் கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்குப்பதிவு செய்து

பஜீருல் ஹக் உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.

2.
வரதட்சணை கொடுமை: கணவர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு

திண்டுக்கல்,அக்.28 - 2009. தினத்தந்தி

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக, கணவர் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வரதட்சணை கொடுமை

திண்டுக்கல் மீனாட்சி நாயக்கன்பட்டி வடக்குபாறைப்பட்டியை சேர்ந்தவர் கவிதா (வயது 24). இவருக்கும், மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த சங்கர் (30) என்பவருக்கும் இடையே கடந்த 3.12.2009-ந்தேதியன்று திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 27 பவுன் தங்கநகை மற்றும் ரூ.45 ஆயிரம் ரொக்கபணம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. இதற்கிடையே கவிதா கறுப்பாக இருப்பதாகவும், படிக்கவில்லை என்றும் கூறி சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் கூறியதாக தெரிகிறது.

மேலும் கூடுதலாக 15 பவுன் தங்கநகை மற்றும் மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு ரூ.25 ஆயிரம் பணம் கேட்டு வீட்டை விட்டு விரட்டி விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திண்டுக்கல் 2-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கவிதா மனுதாக்கல் செய்தார்.

பெண் கைது

இந்த மனுவினை விசாரித்த மாஜிஸ்திரேட்டு உமாராணி, புகார் கூறிய சங்கர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கீதாதேவி புகார் கூறப்பட்ட சங்கர், அவரது தாயார் கமலா (57), உறவினர்கள் பாமா (38), பாக்கியலெட்சுமி (35), சுதர்கனா தேவி (46), ராஜேந்திரன் (46), ரகுநாதன் (40) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தார். இதில் திண்டுக்கல் முருகபவனத்தை சேர்ந்த சுதர்கனாதேவியை நேற்று போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

3.
தனி அறையில் அடைத்து கொடுமை: லண்டன் கணவர் மீது மனைவி புகார்

நவம்பர் 08,2009. தினமலர்

காரைக்குடி: வரதட்சணை கேட்டு தனி அறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய கணவர் உட்பட மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த பிரதீபாவுக்கும் (23), கல்லலை சேர்ந்த சண்முகம் மகன் ராமநாதனுக்கும் (29) கடந்த 2007 ல் திருமணம் நடந்தது.

கணவர் குடும்பத்தினர் லண்டனில் தொழில் செய்து வந்தனர். சில மாதங்களில் பிரதீபா அங்கு சென்றார்.ஐந்து லட்ச ரூபாய் வரதட்சணை கேட்டு, அங்கு தனி அறையில் பிரதீபா அடைக்கப்பட்டார். கணவருடன் தொடர்பு இல்லாத நிலையில், பெற்றோரிடம் பேசவும் தடை விதித்தனர். அங்குள்ள உறவினர்கள் உதவியுடன் கடந்த டிசம்பரில் பிரதீபா நாடு திரும்பினார்.கணவருடன் சேர்த்து வைக்க கோரி சென்னை குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். தற்போது நிலுவையில் உள்ளது.

கடந்த ஒன்றாம் தேதி லண்டனில் இருந்து பிரதீபாவின் மாமனார் சண்முகம், மாமியார் வசந்தா நாடு திரும்பினர். அவர்களிடம் பிரதீபாவின் பெற்றோர் பேச்சு நடத்தினர்.ஐந்து லட்ச ரூபாய் வரதட்சணை கொடுத்தால் மகனோடு சேர்ந்து வைப்பதாக கூறினர்.இதுகுறித்து காரைக்குடி மகளிர் போலீசில் பிரதீபா புகார் செய்தார்.கணவர் ராமநாதன்,அவரது பெற்றோர் மீது இன்ஸ்பெக்டர் ஜோஸ்பின் அமலராணி வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்.

4.
ஐதராபாத்தில் வரதட்சணை கொடுமை புகார்

கோவை : ஐதராபாத்தில் கணவர் குடும்பத்தினரால் துன்புறுத்தப்பட்ட பெண், நடவடிக்கை கோரி கோவை போலீசில் புகார் கொடுத்தார்.கோவைப்புதூர், சிறுவாணி நகரைச் சேர்ந்தவர் தேவா(32). இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த சுமலதா(28)வுக்கும் 2007ல் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பின் தேவா தனது குடும்பத்துடன் ஐதராபாத், குருமூர்த்தி லேன் பகுதியில் குடியேறினார்.சில நாட்களுக்கு முன், ஐதராபாத்திலிருந்து பெற்றோர் வீட்டுக்கு திரும்பிய சுமலதா, தன்னை கணவரும், அவரது குடும்பத்தினரும் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாகத் தெரிவித்தார். இது தொடர்பாக குனியமுத்தூர் போலீசில் சுமலதா புகார் கொடுத்தார். அதில், கணவர் தேவா, மாமியார் பட்டம்மாள், மாமனார் ராஜகோபால் மற்றும் உறுவினர் ரோகிணி ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

வழக்குப்பதிவு செய்த கோவை போலீசார், சம்பவம் நடந்த இடம் ஐதராபாத் என்பதால், மேல் நடவடிக்கைக்காக, முதல் தகவல் அறிக்கையை ஐதராபாத் போலீசாருக்கு அனுப்பி வைத்தனர்.

5.
வரதட்சணை கேட்டு மிரட்டல்:
பெண் வக்கீலை ஏமாற்றி திருமணம் செய்த போலி வக்கீல் கைது

சென்னை, அக்.25- 2009. செய்தி - தினத்தந்தி

பெண் வக்கீலை ஏமாற்றி திருமணம் செய்ததுடன், வரதட்சணை கேட்டு மிரட்டிய 'போலி' வக்கீல் கைது செய்யப்பட்டார்.

பெண் வக்கீல்

தஞ்சாவூர் முனிசிபல் காலனியை சேர்ந்தவர் மோசஸ். இவருடைய மகள் உஷா மோசஸ் (வயது 39). சென்னையில் வக்கீலாக வேலைபார்த்து வருகிறார். உஷா மோசஸ் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் கடந்த 2004-ம் ஆண்டு சென்னை ஜார்ஜ் டவுண் கோர்ட்டில் வக்கீல் ஒருவரிடம் ஜுனியராக வேலை பார்த்தேன். அப்போது மற்றொரு வக்கீல் ஒருவரின் அலுவலகத்தில் வேலைபார்த்து வந்த ஸ்ரீராமுலு என்ற பால் ஸ்ரீராம் (34) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஸ்ரீ ராமுலு திருத்தணி கிருஷ்ணசமுத்திரம் காலனி பகுதியை சேர்ந்தவர். வக்கீல் தொழில் பார்த்து வருவதாக கூறினார். அதற்கான அடையாள அட்டையையும் காண்பித்தார். அவருடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது.

மோசடி

அதைத் தொடர்ந்து ஸ்ரீ ராமுலுவும் நானும் திருமணம் செய்ய முடிவு செய்தோம். திருத்தணியில் கிறிஸ்தவ முறைப்படி எங்களுடைய திருமணம் 14.9.2005 அன்று நடந்தது. அதன் பிறகு சென்னை வரத முத்தையப்பன் தெருவில் வசித்து வந்தோம். திருமணத்திற்கு பிறகுதான் அவர் போலி வக்கீல் என்பது தெரியவந்தது.

பி.ஏ. பொருளாதாரம் படித்துள்ள ஸ்ரீராமுலு, ஆந்திர மாநிலத்தில் உள்ள சட்டக்கல்லூரி ஒன்றில் படிக்க சேர்ந்ததுடன் சரி, பட்டம் எதுவும் வாங்கவில்லை. எந்த கோர்ட்டிலும் வாதாடவில்லை என்பது தெரியவந்தது. இந்த மோசடி குறித்து கேட்ட போது, என்னுடன் தங்குவதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில், எனக்கு குழந்தை பிறக்கவில்லை என்பதை காரணம் காட்டி, தன்னுடைய சகோதரி மகள் சரிதா என்பவரை 2-வது திருமணம் செய்யப்போவதாக ஸ்ரீராமுலு கூறினார்.

இந்த நிலையில், ஸ்ரீராமுலு சரிதாவை எனக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். இது பற்றி அவரிடம் கேட்டதற்கு, என்னுடன் வாழ வேண்டும் என்றால் அதிக வரதட்சணை கொடுக்க வேண்டும் என்று மிரட்டி வருகிறார். அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு உஷா மோசஸ் புகாரில் கூறியிருந்தார்.

இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் இணை கமிஷனர் சேஷசாயி, துணை கமிஷனர் பெரியய்யா ஆகியோர் மேற்பார்வையில் கொத்தவால்சாவடி இன்ஸ்பெக்டர் ஹரிக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். ஸ்ரீராமுலு மீது 406, 420, 467 பிரிவு 4, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டம் (இது எங்கிருந்து வந்தது!) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கைது

விசாரணையில் ஸ்ரீராமுலு திருத்தணியில் நடந்த அடிதடி வழக்கு ஒன்றில் தொடர்புடையவர் என்பதும், தன்னை போலீசார் தேடுகிறார்கள் என்பதை அறிந்தால் அவரை தலைமறைவாகி விடலாம் என்பதால் அவரை 'பொறி' வைத்து பிடிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஸ்ரீராமுலுவிடம் செல்போன் மூலம் உஷா மோசஸ் பேசினார்.

இனிமேல் சண்டை போடமாட்டேன் என்றும் கேட்ட வரதட்சணை பணத்தை தருவதாகவும், எனவே சென்னைக்கு வரவேண்டும் என்றும் ஸ்ரீராமுலுவிடம் கேட்டுக் கொண்டார். அவரது பேச்சை உண்மை என்று நம்பிய ஸ்ரீராமுலு நேற்று முன்தினம் சென்னை வந்த போது போலீசில் சிக்கிக் கொண்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் போலி வக்கீல் என்று கூறி ஏமாற்றியதையும், வரதட்சணை கேட்டு மிரட்டியதையும், 2-வது திருமணம் செய்ததையும் ஒப்புக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

ஆகா, இவளல்லவோ தெய்வீகப் பெண்!

நிச்சயமாக இந்தப் புதுமைப் பெண்ணுக்கு கோயில் எழுப்ப வேண்டும். ஏனெனில் நம் நாட்டில் திருமணம் செய்துகொள்ளும் ஆண்களின் உன்னத நிலையை அப்பட்டமாக வெளிக்காட்டிய கைங்கரியத்தை இவர் செய்துள்ளார். இவளை திருமண சீர்திருத்த இயக்கத்தின் தலைவியாக அமர்த்த நாம் பரிந்துரை செய்யலாம்!

தினமும் நாம் (குறைந்தது அரை டசன் கேசுகளாவது) செய்தித்தாள்களில் வாசிக்கும் செய்தி இதுபோல்தான் இருக்கும். அதாவது - ஒரு அப்பாவிப் பெண்ணைக் காதலித்து கைவிட்டு விட்டான் ஒரு போக்கிரி ஆண். அந்த அபலை காவல் நிலையத்தில் கண்ணீரும் கம்பலையுமாக புகார் கொடுத்தாள். அவளுக்கு ஆதரவாக பெண்கள் இயக்கத் தலைவியும் சென்றார். உடனே அந்த ஆணைக் கைது செய்து சிறையிலடைத்தார்கள்.

அந்தப் பெண் தன் பேட்டியில், "நான் ஒரு உன்னத தமிழ்ப்பெண். என்னைக் காதலித்த அந்த ஆணுடன்தான் நான் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துவேன். அவனுடன் திருமணம் நடக்க அவனுடைய பெற்றோர்கள்தான் தடையாக உள்ளனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என் காதலர் நான் இன்னொருவனுடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகிக்கிறார். அந்த நபர் என் நண்பர்தான். அவருடன் இரவில் நெடுநேரம் செல்ஃபோனில் பேசிக்கொண்டிருப்பேன். அதைப்போய் ஒரு குற்றமாகக் கருதி என் காதலர் என்னுடன் சண்டை போட்டார். அதனால்தான் புகார் கொடுத்தேன்" என்றார்.
- இப்படித்தான் இதுபோன்ற காமக் கதைகள் ஓடும். உடனே நம் பெண்ணியவாதிகளும் ஜொள்ளியவாதிகளும், "ஐயகோ, அந்தப் பெண்னை கைவிட்டுவிட்டானே காமாந்தகாரன், சண்டாளன், இவனை என்ன செய்தாலும் தகும்" என்று கும்மியடித்து கோலாட்டம் போடுவார்கள்.

சரி அந்த முட்டாள் ஆணின் மீது கேசு போட்டு கைது செய்கிறார்களே, அது எந்தக் குற்றப் பிரிவின் கீழ் என்று விசாரித்தால், கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான வன்முறை, ஏமாற்றல், கற்பழிப்பு, பெண்களை பொது இடத்தில் மானபங்கம் செய்தல் இதுபோன்று ஆண்களை ஆண்களாக அவர்கள் பிறந்தத்தற்காகவே குற்றவாளியாக்குவதற்காக கட்டமைக்கப்பட்டிருக்கும் 40-க்கும் அதிகமான சட்டங்களில் சிலவற்றைப் போட்டு ஊத்தி மூடி விடுவார்கள்.

ஆனால், அதேபோல் ஒரு பெண் ஒருவனைக் காதல் செய்து விட்டு இன்னொருவனோடு ஓடினால், அதுவும் ஒருவனோடு திருமணம் நிச்சயம் ஆனபிறகு அந்தத் திருமண நாளன்றும், அல்லது திருமணம் முடிந்த பின்பும் இன்னொருவனோடு ஓடினால் அந்தப் பெண்மீது என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?

ஒரு புண்ணாக்கும் முடியாது. அந்தக் கணவன் வாயில் விரல் போட்டு சப்பிக்கொண்டிருக்க வேண்டியதுதான்!

சந்தேகமிருந்தால் "தேவதையைக் கண்டேன்" என்னும் திரைப் படத்தில் தனுஷ் பேசுவதை இந்த வலைப்பதிவில் பாருங்கள்.

ஆகையால் இளைஞர்களே, நீங்கள் கட்டாயம் திருமணம் செய்து கொள்ளுங்கள், இதோ இந்த உன்னதப் பெண்ணின் பண்பாடு செறிந்த நடவடிக்கையைக் கண்ட பெருமிதத்துடன்!!

செய்தி - தினமலர். அக்டோபர் 29,2009.

கள்ளக்காதலுடன் ஓடிய தாயை பார்த்ததும் அழுத குழந்தைகள்.

திண்டுக்கல் : கள்ளக்காதலனுடன் பத்து மாதங்களுக்கு முன்பு ஓடிப்போன தாயை கோர்ட்டில் பார்த்ததும், அவரது இரண்டு ஆண் குழந்தைகளும் கதறி அழுது தங்களுடன் வருமாறு அழைத்தனர்.

திண்டுக்கல் அருகேயுள்ள கள்ளிமந்தையம் செரியன்நகரைச் சேர்ந்தவர் சாமுவேல் (35). இவருக்கும் உஷா (27) என்பவருக்கும், ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. சாம்பிரசன்னா (5), சுதன் (3) என்ற இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நர்ஸ் வேலை பார்த்த உஷா தான் படிக்கும் போதே காதலித்த பிரகாஷ் என்பவருடன் கடந்த ஜனவரி மாதம் ஓடிப்போனார். (திருமணத்துக்கு முன்பே ஒருவனைக் காதலித்தவள் இன்னொருவனுடன் திருமணம் செய்து கொண்டு அவன் வாழ்க்கையை ஏன் கெடுக்கிறாள்? இதற்கு எல்லாம் தெரிந்த "டோண்டு" தான் பதில் சொல்ல வேண்டும்)

இது குறித்து சாமுவேல் கள்ளிமந்தையம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

சாமுவேல் தனது நண்பர்கள், உறவினர்களுடன் சென்று திருவாரூரில் காதலனுடன் தங்கியிருந்த உஷாவை அழைத்து வந்து கள்ளிமந்தையம் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். போலீசார் நேற்று உஷாவை திண்டுக்கல் ஜே.எம்.,1 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டில், கணவனுடன் செல்ல மறுத்த உஷா, தன் தாய் வீட்டிற்கு செல்வதாக தெரிவித்தார்.

கோர்ட் முடிந்து வாசலுக்கு வந்த தாயைப் பார்த்ததும், இரு குழந்தைகளும் கதறி அழுதன. ""அம்மா நம்ம வீட்டுக்கு வாம்மா, அப்பாவுடன் சேர்ந்து நாலு பேரும் ஒன்றாக இருக்கலாம்'' என அழைத்தனர். இதனை கேட்டு கோர்ட் ஊழியர்களும், அங்கிருந்தவர்களும் கண் கலங்கினர். ஆனாலும் உஷா தன் கணவனுடன் செல்ல மறுத்து விட்டார்.

"உஷா காதலனுடன் செல்வதற்காகவே என்னுடன் வர மறுக்கிறார்." அவரை அழைத்து வந்த காதலன் பிரகாஷ் கோர்ட்டிற்கு வந்திருப்பதாக சாமுவேல் தெரிவித்தார்.

உஷாவிடம் கேட்ட போது, "என் கணவர் என்னிடம் பணம் கேட்டு அடித்து தகராறு செய்ததால் நான் வெறுத்துப்போய் தாய் வீட்டிற்கு செல்கிறேன். (அட்ரா சக்கை! இதைச் சொன்னால்தானே கேள்வி கேட்கும் கணவனை 498A போட்டு பயமுறுத்தி, அடக்கி வைத்து கள்ளக் காதலுக்கும் சேர்த்து அவனிடமிருந்து மிரட்டிப் பணம் பறிக்க முடியும்! கணவனிடம் சேர்ந்து குடும்பம் நடத்த ஒப்பாமல் ஓடிப்போகும் மனைவிகள், கணவர்களிடமிருந்து பணம் பறிக்க 40+ வித சட்டங்கள் உள்ளன. நீதிபதிகளும், அவள் அதற்கு சட்டடப்படி தகுதியுள்ளவளா என்றெல்லாம் ஆராய்வதற்கு முன்னமையே, "முதலில் மனைவி கேட்ட பணத்தைக் கொடு" என்று தீர்ப்பு அளித்து வருகிறார்கள். பிறகென்ன, கொண்டாட்டம்தான்! கள்ளக் காதல் மனைவிகளுக்கு சட்டங்கள், போலீஸ், பெண்ணியவாதிகள், நீதிபதிகள் போன்றோர் உபயத்தினால் கணவன் காசில் தினந்தோறும் தீபாவளிதான்!. கேடுகெட்ட சமுதாயமய்யா இது!!) எனக்கு படிக்கும் காலத்தில் இருந்தே காதலன் இருப்பது என் குடும்பத்தாருக்கும்,கணவன் குடும்பத்தாருக்கும் தெரியும். தற்போது காதலன் வேறு பெண்ணை மணந்து அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதால், அவருடன் செல்ல வாய்ப்பு இல்லை. நான் என் தாய் வீட்டில் தங்கப்போகிறேன்,'' என்றார். (ஆகா, இவளல்லவா, பாரதி கண்ட புதுமைப் பெண்! வாழ்க மனோரமாவின் இயக்கம்!)

=========================

"ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, பெண்கள் ஆனந்த முழுச் சுதந்திரம் அடைந்து விட்டார்கள் என்று ..."

வக்கீலின் மனைவி கட்சிக்காரருடன் ஓட்டம்!

இது புதுசு!

28 வயதான வக்கீலின் மனைவி 20 வயது வாலிபனான தனது கணவரின் கட்சிக்காரருடன் ஓடிப் போய்விட்டார்.

கும்பகோணம் கல்யாணராமன் தெருவில் வசிப்பவர் வக்கீல் பாலமுருகன். இவர் கும்பகோணம் பார் அசோசியேஷன் செயலராகவும், அஇஅதிமுக வக்கீல் அணிச் செயலராகவும் பதவி வகிக்கிறார்.

இவருடைய மனைவியின் பெயர் சரோஜினி (வயது 28). இவர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.

இந்த வக்கீலின் வீட்டுக்கு மேலக்காவேரியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்னும் 20 வயது இளைஞர் ஒரு வழக்கு தொடர்பாக, கடந்த ஆறு மாத காலமாக அடிக்கடி வந்து சந்தித்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த இளைஞருக்கும் வக்கீல் மனைவி சரோஜினிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.

அந்த வக்கீலின் மனைவி சரோஜினி, சுப்பிரமணியன் என்னும் அந்த இளைஞருடன் ஓடிப்போய் விட்டாள் (மன்னிக்கவும், "விட்டார்". கள்ளக் காதலில் ஈடுபடும் பெண் குலத்திலகங்களை மரியாதையுடன் விளிக்கவேண்டும் அல்லவா!) என்று வக்கீல் கணவர் பாலமுருகன் கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அந்தப் புகாரின் பேரில் கட்சிக்காரர் சுப்பிரமணியன் மீது, வக்கீல் மனைவியை கடத்திச் சென்றதாக வழக்குப் பதிவு செய்து அந்த ஜோடியை போலீசார் தேடி வருகின்றனர்.

இதில் ஒரு முக்கியமான விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும். கள்ளக்காதல் (adultery), இழுத்துக் கொண்டு ஓடுதல் (elopement) இதுபோன்ற புகார்களின் மேல் அதில் சம்பந்தப் பட்டுள்ள ஆண் மேல்தான் வழக்குப் பதிவு செய்யமுடியும். கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்களுக்கு முழுதாக சட்டங்களிலிருந்து விதிவிலக்கு அளிப்பட்டுள்ளது நம் நாட்டில்.

உங்கள் மனைவி உங்கள் கண்ணெதிரிலேயே இன்னொருவனுடன் செக்ஸில் ஈடுபட்டுக் கொண்டிருந்தால் கூட அந்த ஆணுக்கு எதிராகத்தான் நீங்கள் வழக்கு தொடுக்கலாமேயன்றி உங்கள் மனைவியின்மீது எந்தவித நடவடிக்கையையும் எடுக்க இயலாது; அதற்கு இந்திய சட்டங்களில் இடமில்லை. சந்தேகமிருந்தால் சட்டம் தெரிந்த யாரையாவது கேட்டுத் தெளிவு பெறுங்கள். மேலும் அதைக் காரணம் காட்டி விவாகரத்து கூட பெற முடியாது. மனைவி சொல்வதைத்தான் நீதிபதிகள் நம்புவார்கள். "நான் பத்தினித் தெய்வம். என் கணவர் ஒரு சந்தேகப் பிராணி. என்மேல் அபாண்டமாக பழி சுமத்துகிறார். இந்த அபலையின் பரிதாப நிலையைப் பாருங்கள்" என்று நீதிபதியின் முன் கண்ணீர் சிந்தி ஒரு டிராமா போடுவாள். அவவ்ளவுதான். அப்படியே உருகி அவள் கேட்டபடி தீர்ப்பு வழங்குவார்கள். உடனே பெண்ணியவாதிகளும் ஜொள்ளியவாதிகளும் சேர்ந்து கோரசாக "ஐயோ பாவம், அந்த அபலைப் பெண். இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் எத்தகைய கொடுமைகளுக்கு அவள் ஆளாகிறாள்" என்று கட்டிப் பிடித்து அழுவார்கள். அவ்வளவுதான். கணவனின் புகார் அம்பேல்!

அப்படியே கணவனுக்கு வீரம் வந்து கள்ளக்காதலில் ஈடுபடும் மனைவியிடம் அவன் அதுபற்றி கேள்வி கேட்டால், அவள் உடனே 498A, D.V. Act, Sec 125 of CrPC போன்ற ஆயுதங்களைக் கையிலெடுத்து உங்களையும், உங்கள் வயதான பெற்றோரையும் கைது செய்ய வைத்து, உங்களுக்குச் சொந்தமான வீடு, பணம் அனைத்தையும் பிடுங்கிக் கொண்டு நடுத்தெருவில் நிறுத்தி விடுவாள்!

எதிர்வரும் காலம் திருமணம் செய்துகொள்ளும் ஆண்களுக்கு மிகச் சிரமமான காலம் தான்!

அது சரி. இதுபோன்ற வக்கீல்களும் நீதிபதிகளும் சேர்ந்துதானே கணவனிடம் பணத்தைப் பிடுங்கி ஓடிப்போன மனைவியிடம் கொடுக்க வைக்கிறார்கள்!

இப்போது வக்கீலின் முறை ஆகி விட்டது. அடுத்தது யார்?

(செய்தி: Deccan Chronicle)

மருமகள்கள் சித்திரவதையிலிருந்து மாமியார்களைக் காக்க ஒரு சங்கம்

செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 20, 2009. செய்தி: தட்ஸ்தமிழ்

ஹைதராபாத்: மருமகள்கள் சித்திரவதையிலிரு்நது தங்களைக் காத்துக் கொள்வதற்காக ஆந்திராவில் மாமியார்கள் சேர்ந்து தனிச் சங்கம் கண்டுள்ளனர்.

வரதட்சணைக் கொடுமை வழக்குகளில் முதலில் சிக்குவது கணவன்மார்கள்தான். அதற்கு அடுத்த டார்கெட் மாமியார்கள்.

ஆனால் வரதட்சணைக் கொடுமை சட்டத்தை பல பெண்கள் தவறாகப் பயன்படுத்தி கணவர்களையும், மாமியார்களையும், அவர்களது குடும்பத்தினரையும் சிறையில் தள்ளி விடுவதாக சமீப காலமாக புகார்கள் வருகின்றன.

சில மாதங்களுக்கு முன்பு மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவன்மார்கள் சங்கம் தொடங்கப்பட்டது. மாநாடு கூட நடத்தினர்.

இந்த நிலையில் ஆந்திராவில் மாமியார்கள் சேர்ந்து ஒரு சங்கம் ஆரம்பித்துள்ளனர்.

இதுகுறித்து சங்கத்தின் அமைப்பாளர்களான பத்மஜா, உமா ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

சமீபகாலமாக மருமகள்களால் ஏராளமான மாமியார்கள் வீடுகளில் சித்ரவதை செய்யப்படுகிறார்கள். பல மாமியார்களுக்கு சரியான நேரத்திற்கு உணவு கூட கிடைப்பதில்லை.

மருமகள்கள் பலர் மாமியாரை கடுமையாக சித்ரவதை செய்து விட்டு போலீசில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக போலீசில் சிக்க வைத்து வருகிறார்கள்.

இந்த கொடுமைகளுக் கெல்லாம் முடிவு கட்டத்தான் நாங்கள் மாமியார் பாதுகாப்புச்சங்கத்தை தொடங்கி உள்ளோம்.

தற்போது 30 பேர் உறுப்பினர்களாகி உள்ளனர். விரைவில் ஆயிரம் பேர் வரை உறுப்பினராக சேர்க்க முடிவு செய்துள்ளோம் என்றனர்.

தங்களது பிரச்சினைகள் உள்ளிட்டவை தொடர்பாக மாமியார்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களையும் இந்த சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

அவை - 9704683163, 9573605415

===========

விரைவிலேயே இச்சங்கத்தின் கிளை தமிழ் நாட்டிலும் துவக்கப்பட இருக்கிறது. அது பற்றிய அறிவிப்பை எதிர்பாருங்கள்!

பிஞ்சு மகனின் வாழ்வைக் குலைக்கும் தாய்

எல்லாமே பணத்திற்காகத்தான்!

இப்போதெல்லாம் மணமான பெண்கள் 498A மற்றும் குடும்ப வன்முறை போன்ற சட்டங்களின் கீழ் பொய் வழக்கு போட்டு கணவனையும் அவனுடைய பெற்றோரையும் கைது செய்ய வைத்து, கோர்ட்டுக்கு இழுத்து, தன் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி சிறிதும் அக்கரையில்லாமல் அத்தனை பேர்களுடைய வாழ்வையும் அலங்கோலம் செய்வதன் அறுதி நோக்கம் என்ன? பணம், ஐயா, பணம்!

இல்லாவிட்டால் ஏன் சில வக்கீல்கள் குடும்பம் சம்பந்தமான எந்த விதப் பிரச்னையையும் இதுபோன்ற பொய் வழக்குகளாக மாற்றும் குடிசைத் தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள்! இதுபோல் கேசு மேல் கேசாகப் போட்டு, பெண்கள் கண்ணீர் சிந்தினால், "அவர்கள் கேட்ட பணத்தைக் கொடு" என்று கண்ணை மூடிக்கொண்டு கணவன் மீது ஆணையிடும் போக்கு கொண்ட நிதிபதிகளின் உதவியால் கணவனிடமிருந்து ஜீவனாம்சம், மெயிண்டனென்ஸ் என்னும் வகையில் ஒரு கணிசமான தொகையைக் கறந்து விடலாம் என்பதுதான் அவர்களது குறிக்கோள். ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி சொன்னது போல் இந்தவித சட்டங்களின் நடைமுறை ஒரு Legal Extortion!

அதுபோல் குழந்தைகளின் காப்புப் பொறுப்பு அளிப்பதிலும் பிரச்னைகளைச் செய்து தன் குழந்தைகளையே பணம் பிடுங்குவதற்காக பிணைக்கைதிகளாக மாற்றும் போக்கும் பல பெண்களுக்கு இருக்கிறது. இதற்கு தெரிந்தோ தெரியாமலோ நீதிபதிகளும் துணை போகிறார்கள்.

இந்த நிலை மாற வேண்டுமானால், குடும்ப நல நீதிபதிகளாக பெருமளவில் இளைஞர்களை நியமிக்க வேண்டும்; அவர்களில் 50% இளம் பெண்கள் இருக்கவேண்டும். அவர்களுக்குத்தான் தற்கால சமூக நிலை பற்றி முழுதாக புரிந்து கொள்ள இயலும்.

இப்போது ஒரு "மாஜி" தாயின் திருவிளையாடலைப் பாருங்கள்!

மாஜி 'தாய்' வழக்கால் தத்து மகன் அச்சம்

அக்டோபர் 16,2009. தினத்தந்தி

மும்பை: பத்து ஆண்டுக்கு மேல் விலகி இருந்த மாஜி மனைவி, திடீரென மகன் மீது உரிமை கோரி கோர்ட்டுக்கு சென்றாள். தத்து கொடுக்கப்பட்ட மகன் நிலை இப்போது கேள்விக்குறியாக உள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையை சேர்ந்தவர் ராகேஷ் மேத்தா. இவரது மகன் கரண் மேத்தா(12). இச்சிறுவனை, அவரது உறவினர், திரண் என்பவருக்கு ராகேஷ் தத்து கொடுத்தார்; இதை அவரின் மாஜி மனைவி எதிர்த்து உள்ளார். "அவருக்கு மகன் மீது அன்பில்லை என்ற அடிப்படையில், கரண் மேத்தாவை, அவரின் முன்னாள் மனைவி மீத்தாவிடம் ஒப்படைக்க வேண்டும்' என்று குடும்ப நலக் கோர்ட் நீதிபதி, வி.ஜே.லோகியா உத்தரவிட்டார். அதற்கு, ராகேஷ் ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெற்றதோடு, மேல் முறையீடும் செய்துள்ளார்.ராகேஷ் தனது மனுவில் கூறியிருப்பதாவது:

கரணின் ஒன்றரை வயதிலேயே அவன் தாய், அவனை விட்டு சென்று விட்டார். அதன் பின், 2006ம் ஆண்டு, இருவரும், விவாகரத்து பெற்றோம். 2007ம் ஆண்டு, மறுமணம் செய்து கொண்டேன். மீத்தா, கடந்தாண்டு, குடும்ப நலக் கோர்ட்டில் கரணை தன்னிடம் ஒப்படைக்க கோரி மனு தாக்கல் செய்யும் வரை, அவனை சந்திக்கவில்லை. அதன், பின், கரணை தன்வசம் இழுக்க, அவனை ஐந்து முறை சந்தித்துள்ளார். ஆனால், கரண் மீத்தாவிடம் பேச மறுத்துள்ளான். கரணின் நல்வாழ்விற்காகவே, குழந்தைகள் இல்லாத தம்பதியருக்கு, அவனை தத்து கொடுத்தேன். அவர்கள் தங்கள் சொத்தை கரணுக்கு முறைப்படி வழங்குவதற்காக, இத்தகைய ஏற்பாட்டை செய்தனர். மேலும், கரண் என் இரண்டாவது மனைவியுடன் சந்தோஷமாக உள்ளான். எனவே, கரணை என்னுடன் இருக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

வயதானவர்கள் கதி அதோகதிதான்

பெற்றோர்களின் கதி வருங்காலத்தில் இப்படித்தான் இருக்கும். இப்போதே முதியோர் இல்லங்கள் பெருமளவில் தொடங்கப்பட்டு விட்டன. வசதியுள்ளோர் அத்தகைய இல்லங்களில் தங்குகின்றனர். ஏழை முதியோர்கள் பாடு?

-------------------------------------
கோவை, செப்.18- 2009 . செய்தி - தினத்தந்தி

மகன்கள் மற்றும் மருமகள்களிடமிருந்து பாதுகாப்பு கேட்டு 73 வயது மூதாட்டி கோவை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோடு இந்திராநகரை சேர்ந்தவர் ராஜம்மாள்(வயது 73). இவரது கணவர் வடிவேலு இறந்து விட்டார். கணவர் இறந்த பிறகு கூலி வேலை செய்து சொந்தமாக வீடு கட்டினார்.

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தனது மகன்களான ஞானவேல்(42) மற்றும் செல்லத்துரை (40) ஆகியோருக்கு திருமணம் செய்து வைத்தார். ஆனால் 2 மகன்களும் தங்களின் வயதான அம்மாவுக்கு வீட்டின் ஒரு ஓரத்தில் சிறு அறையை மட்டும் ஒதுக்கி விட்டு, வீட்டின் முழு பகுதியையும் ஆக்கிரமித்து கொண்டனர்.

அது மட்டுமல்லாமல் தாய்க்கு உணவு வழங்குவதையும் நிறுத்திக்கொண்டனர். செலவுக்கும் பணம் கொடுப்பதில்லை. தள்ளாத வயதிலும், கூலி வேலை, வீட்டு வேலை செய்து ராஜம்மாள் பிழைப்பை நடத்தி வருகிறார். இதனால் இவரை மகன்களும், மருமகள்களும் மிரட்டி வருகின்றனர்.

தனது பெயரில் உள்ள வீட்டை ஆக்கிரமித்ததோடு மட்டுமல்லாமல், தன்னை வெளியேற்ற சதி நடப்பதை அறிந்த, ராஜம்மாள், கோவை 6-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வடவள்ளி வக்கீல் வெண்ணிலா மூலம் குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தார்.

எனவே தனது 2 மகன்கள் மற்றும் மருமகள்களிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் என்றும், தன்னை அவமரியாதை செய்யக்கூடாது என்றும், தனது பெயரில் உள்ள வீட்டை ஆக்கிரமித்து உள்ள மகன்களை காலிசெய்து கொடுத்தால், அதை வாடகைக்கு கொடுத்து, பிழைப்பு தேடிக்கொள்வேன் என்றும், அல்லது மாத வாடகையாக தலா ரூ.750 வழங்க வேண்டும் என்றும், மேலும் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் வழக்கில் கூறியிருந்தார்.

பாதுகாப்பு அளிக்க உத்தரவு

வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு ஜோதி, வடவள்ளி போலீசாரை அழைத்து, வயதான ராஜம்மாளுக்கு, மகன்கள் மற்றும் மருமகள்களிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டர்.

ஜீவனாம்சம் ,வீட்டை காலி செய்வது மற்றும் வாடகை குறித்த புகார்கள் மீதான விசாரணைக்காக வழக்கு வருகிற 25-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.