Showing posts with label divorce. Show all posts
Showing posts with label divorce. Show all posts

'டிவி' தொடர் பார்க்க விடாததால் மனைவி விவாகரத்து

மும்பை : "எனக்கு பிடித்த "டிவி' தொடர்களை பார்க்க அனுமதிக்க மறுக்கிறார்; இதனால், எங்களுக்குள் தினமும் சண்டை ஏற்படுகிறது. இதை மனதில் வைத்து, பலவகையில் என்னை துன்புறுத்துகிறார்!' - இப்படி சொல்லி, குடும்ப கோர்ட்டில் கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார் மனைவி. "திருமணத்தை முறிக்க விரும்பவில்லை; நான் சேர்ந்து வாழவே விரும்புகிறேன்' என்று கணவன் அப்பீல் செய்துள்ளார்.

செய்தி: தினமலர் - நவம்பர் 25,2009.
http://www.dinamalar.com/court_detail.asp?news_id=4542

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக இருக்கிறார் ஹர்ஷத்(34); இவர் மனைவி சீமா (31). சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்; திருமணம் ஆகி எட்டாண்டு ஆகிறது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. "என் கணவர் என்னை பலவகையில் கொடுமைப்படுத்துகிறார். எனக்கு பிடித்தமான "டிவி' தொடர்களை பார்க்க அனுமதிப்பதில்லை. இது தான் சண்டைகளுக்கு காரணம். அதனால், எனக்கு சரியான பாதுகாப்பு அளிப்பதில்லை. நள்ளிரவில் தனியாக ஆட்டோவில் பயணிக்க வைக்கிறார். இது போன்ற சித்ரவதைகளை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை' என்று குடும்ப நல கோர்ட்டில் மனு செய்தார் சீமா. வழக்கை விசாரித்த கோர்ட், அவர்களுக்கு விவாகரத்து அளித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து, மும்பை ஐகோர்ட்டில் கணவன் ஹர்ஷத் அப்பீல் செய்தார்.


"இந்திய சமுதாயத்தின் ஒரு முக்கிய அங்கம் திருமண பந்தம். அதை சாதாரணமாக முறிக்க முடியாது. "எந்த ஆதாரமும் இல்லாமல், என் மனைவி என் மீது சொன்னதை வைத்து விவாகரத்து கொடுத்திருப்பது சரியல்ல; திருமண முறிவு தொடர்பான வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் பல முறை சுட்டிக்காட்டிய கருத்துக்களை குடும்ப நல கோர்ட் காற்றில் பறக்க விட்டு, இப்படி விவாகரத்து அளித்துள்ளது. "எனக்கு திருமண முறிவுவேண்டாம். அதில் விருப்பமில்லை. என் குழந்தையை நான் வளர்க்க அனுமதிக்க வேண்டும்' என்று அப்பீல் மனுவில் அவர் கூறியுள்ளார்.

=====

பார்த்தீர்களா, பார்த்தீர்களா இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் அபலைப் பெண்கள் படும் அவலத்தை!

தனக்குப் பிடித்த டி.வி சேனலைப் பார்க்க இயலவில்லை. சரி, அந்தப் பெண்மணி தான் பெற்ற குழந்தையைக்கூட கவனிக்காமல் பொழுதுக்கும் டி.வி சீரியல்களைப் பர்த்துக் கொண்டிருந்திருக்கலாம், அதை கணவன் கண்டித்திருக்கலாம் - இப்படியெல்லாம் நீங்கள் நினைத்தால் அதற்கு உங்கள் ஆணாதிக்க மனப்பான்மைதான் காரணம்.

நல்ல வேளை, இந்தப் பெண்மணி விவாகரத்தோடு நிறுத்தி விட்டார். வேறு சில பெண்குலத் திலகங்கள் இன்னேரம் சட்டப் புத்தகத்தின் இண்டு இடுக்குகளில் உள்ள அத்தனை சட்டப் பிரிவுகளையும் கையிலெடுத்து கேசு மேல் கேசாக கணவன் மற்றும் அவனது பெற்றோர் மீது போட்டு நடுத்தெருவில் நிறுத்தியிருப்பார்கள்.

சரி, நீதி(!)மன்றங்கள் அவற்றுக்குச் செவி சாய்க்குமா என்றுதானே கேட்கிறீர்கள். ஹும். உங்களுக்கு நாட்டு நடப்பே தெரியாது போலிருக்கிறது!!

"என்னை தொடாதே. அந்த தகுதி உனக்கு இல்லை"

சிறுமி பர்பி, கண்ணீர் மல்க கூறுகையில்,"அப்பாவை பார்க்க வேண்டும் என, கேட்கும்போதெல்லாம், அம்மா என்னை கடுமையாக அடித்து துன்புறுத்துவார். விடுமுறை நாட்களில் அம்மா என்னுடன் நேரத்தை செலவிட மாட்டார். அவரது தோழிகளை வீட்டுக்கு வரவழைத்து பேசிக் கொண்டிருப்பார்" என்றார்.இவ்வாறு பர்பி கூறிக்கொண்டிருக்கும் போது, அவளது தாய் அனாமிகா வேகமாக வந்து, சமாதானப்படுத்த முயன்றார். இதைப் பார்த்த பர்பி, ஆவேசமாக,"என்னை தொடாதே. அந்த தகுதி உனக்கு இல்லை' என, அழத் துவங்கினாள்."


நீதிபதி அளித்த உணமையான சாக்லேட்!

செய்தி: தினமலர் - நவம்பர் 23,2009


கோல்கட்டா : வழக்கு விசாரணைக்காக கோர்ட்டுக்கு வந்த பத்து வயது சிறுமியை, நீதிபதியே, கடைக்கு அழைத்துச் சென்று சாக்லேட் வாங்கி கொடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் கோல்கட்டா கோர்ட்டில் நடந்தது. தனது தந்தையுடன் வசிக்க வேண்டும் என்ற, அந்த சிறுமியின் நீண்ட நாள் ஆசையையும் நீதிபதி நிறைவேற்றி வைத்தார்.

கோல்கட்டாவைச் சேர்ந்தவர் ராணா. இவரது மனைவி அனாமிகா. இவர்களுக்கு பத்து வயதில் பர்பி என்ற பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக ராணாவும், அனாமிகாவும் பிரிந்து வாழ்கின்றனர். குழந்தை பர்பி, அம்மாவுடன் தங்கி இருந்தாள். ஆனாலும், அப்பாவுடன் தங்கியிருக்க வேண்டும் என்பது தான், அவளது விருப்பம். குழந்தையை யார் வைத்துக் கொள்வது என்பதில் அனாமிகாவுக்கும், ராணாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. வேறு வழியின்றி இருவரும் கோர்ட் படியேறினர். கோல்கட்டா மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது.

விசாரணையின்போது, பர்பியும் கோர்ட் டுக்கு அழைத்து வரப்பட்டாள். "தந்தையுடன் தான், வசிப்பேன்' என, பர்பி உறுதியாக தெரிவித்தாள். இருந்தாலும், நீதிபதி முகோபாத்யாயா, இதில் அவசரப்பட்டு முடிவு எடுக்க விரும்பவில்லை. தந்தையின் மிரட்டல் காரணமாக, பயந்து போய் குழந்தை இவ்வாறு கூறுகிறதா என்பது உட்பட பல்வேறு சிந்தைனைகள் அவரது மனதில் ஓடின.நீதிபதி முகோபாத்யாயா, தனது இருக்கையை விட்டு எழுந்தார். நேராக சிறுமி பர்பி இருக்கும் இடத்துக்கு வந்தார். அடுத்ததாக கோர்ட்டில் நடந்த நிகழ்வு தான், அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

பர்பியின் கையை பிடித்து வெளியில் அழைத்துச் சென்றார், நீதிபதி. அருகில் இருக்கும் கடைக்குச் சென்று, சாக்லேட் வாங்கி கொடுத்தார். மகிழ்ச்சியுடன் அதை வாங்கிக் கொண்டாள், பர்பி. பின்னர், சிறுமிக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக பேச்சுக் கொடுத்தார்."இங்கே பார். இப்போது இருந்து நான் உனக்கு நண்பன். எந்த பள்ளியில் படிக்கிறாய்? உனது பொழுது போக்கு என்ன? உன் நண்பர்கள் யார்?' என, சிறுமியின் மனதுக்குள் இருப்பதை சிறிது, சிறிதாக கேட்டுத் தெரிந்து கொண்டார். நீதிபதியின் மென்மையான அணுகுமுறையால், அவர் மீது பர்பிக்கு நம்பிக்கை ஏற்பட்டது.

மீண்டும் கோர்ட்டுக்கு அழைத்து வந்தார். விசாரணை தொடர்ந்தது."உனக்கு ஏன் அம்மாவிடம் இருக்க பிடிக்கவில்லை' என, விஷயத்துக்கு வந்தார், நீதிபதி.இதற்கு சிறுமி பர்பி, கண்ணீர் மல்க கூறுகையில்,"அப்பாவை பார்க்க வேண்டும் என, கேட்கும்போதெல்லாம், அம்மா என்னை கடுமையாக அடித்து துன்புறுத்துவார். விடுமுறை நாட்களில் அம்மா என்னுடன் நேரத்தை செலவிட மாட்டார். அவரது தோழிகளை வீட்டுக்கு வரவழைத்து பேசிக் கொண்டிருப்பார்' என்றார்.இவ்வாறு பர்பி கூறிக்கொண்டிருக்கும் போது, அவளது தாய் அனாமிகா வேகமாக வந்து, சமாதானப்படுத்த முயன்றார். இதைப் பார்த்த பர்பி, ஆவேசமாக,"என்னை தொடாதே. அந்த தகுதி உனக்கு இல்லை' என, அழத் துவங்கினாள்.

பர்பியின் வாக்குமூலத்தை கேட்ட நீதிபதி, தனது தீர்ப்பை வாசித்தார். "பர்பியை அவளது தந்தையுடன் தங்கியிருக்க இந்த கோர்ட் உத்தரவிடுகிறது' என்றார். இதைக் கேட்ட பர்பி மகிழ்ச்சி அடைந்தாள். நேராக நீதிபதி இருக்கும் இடத்துக்கு சென்று,"நன்றி நீதிபதி அங்கிள்' என, கூறி விட்டு, வேகமாக தனது தந்தையின் கையை பிடித்தபடி, கோர்ட்டை விட்டு வெளியேறத் துவங்கினாள். சென்று கொண்டிருக்கும்போதே, நீதிபதியை நோக்கி தனது தலையை திருப்பி, மெல்ல புன்னகைத்தாள். அங்கு கூடியிருந்தவர்களின் முகங்களிலும் புன்னகை அரும்பியது.

============

இதுபோன்ற உணமையான "நீதி"பதிகளும் உள்ளனர்!

பெருகுது 498A அறுவடை, ரொம்புது கல்லா!

கீழ்க்கண்ட புகார்களின் நடைமுறைக்கு ஒவ்வாத "டெம்பிளேட்" தன்மையையும், கற்பனை வளத்தையும், வெளிநாடுகளில் இதுபோன்ற பொய் வழக்கு ஜோடனைகளின் பருப்பு வேகாது என்பதால் அங்கு நடந்தவைக்கு நம்மூரில் வந்து புகார் கொடுக்கும் அவலத்தையும் காணுங்கள். இங்குதானே "ஐயோ பாவம், அபலைப் பெண்கள்" என்று கண்ணீர் விட்டுக் கதறி உருக வைத்து, "உன்னுடன் வாழாத மனைவி கேட்கும் ரொக்கத்தைக் கொடு, இல்லாவிடில் ஜெயிலுக்குப் போ" என்று உத்தரவுகள் பெற்று, ஆண்களை இலவச ஏ.டி.எம் மெஷீனாக மாற்றும் சடங்கு நடக்கும்!

தினந்தோறும் அறங்கேற்றப்படும் நம் புதுமைப் பெண்களின் புனிதத்தன்மையைக் கண்டு களித்து கலியாணம் செய்து கொண்டு வயதான பெற்றோருடன் கூட்டாக கைது செய்யப்பட்டு ஜெயிலுக்குப் போங்கள்!

1.
அருப்புக்கோட்டையில் இளம்பெண்ணிடம் வரதட்சணை கொடுமை; 4 பேர் மீது வழக்கு

அருப்புக்கோட்டை, நவ.10 - 2009. தினத்தந்தி

அருப்புக்கோட்டை அருகே வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக கணவன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய் யப்பட்டுள்ளது.

திருமணம்

அருப்புக்கோட்டை நல்லூர் முஸ்லிம் வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் செய்யது அலிபாத் திமா (வயது 22). இவருக்கும் அஜீஸ்நகர் பஜீருல் ஹக் என்பவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, மணமகள் வீட்டார் சார்பில் 10 பவுன் நகையும், 70 ஆயிரம் ரொக்கமும் தருவதாக பேசப்பட்டது. ஆனால் அப்போது 10 பவுன் நகையும், 16 ஆயிரம் ரொக்கமும் கொடுக்கப்பட் டது. மீதி ரொக்கப்பணத்தை 2 மாதம் கழித்து தருவதாக மணமகள் வீட்டார் சார்பில் பேசப்பட்டதாக தெரிகிறது.

கொடுமை

ஆனால் அதன்படி மீதி பணத்தை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இத னால் மீதி பணத்தை வாங்கி வரும்படி செய்யது அலி பாத்திமாவை கணவர்பஜீருல் ஹக், அவரது தாயார் ஆயிஷா பீவி, அண்ணன் காட்டுபாவா, தம்பிரியாஸ் ஆகியோர் துன் புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து செய்யது அலி பாத்திமா அருப்புக் கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்குப்பதிவு செய்து

பஜீருல் ஹக் உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.

2.
வரதட்சணை கொடுமை: கணவர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு

திண்டுக்கல்,அக்.28 - 2009. தினத்தந்தி

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக, கணவர் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வரதட்சணை கொடுமை

திண்டுக்கல் மீனாட்சி நாயக்கன்பட்டி வடக்குபாறைப்பட்டியை சேர்ந்தவர் கவிதா (வயது 24). இவருக்கும், மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த சங்கர் (30) என்பவருக்கும் இடையே கடந்த 3.12.2009-ந்தேதியன்று திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 27 பவுன் தங்கநகை மற்றும் ரூ.45 ஆயிரம் ரொக்கபணம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. இதற்கிடையே கவிதா கறுப்பாக இருப்பதாகவும், படிக்கவில்லை என்றும் கூறி சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் கூறியதாக தெரிகிறது.

மேலும் கூடுதலாக 15 பவுன் தங்கநகை மற்றும் மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு ரூ.25 ஆயிரம் பணம் கேட்டு வீட்டை விட்டு விரட்டி விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திண்டுக்கல் 2-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கவிதா மனுதாக்கல் செய்தார்.

பெண் கைது

இந்த மனுவினை விசாரித்த மாஜிஸ்திரேட்டு உமாராணி, புகார் கூறிய சங்கர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கீதாதேவி புகார் கூறப்பட்ட சங்கர், அவரது தாயார் கமலா (57), உறவினர்கள் பாமா (38), பாக்கியலெட்சுமி (35), சுதர்கனா தேவி (46), ராஜேந்திரன் (46), ரகுநாதன் (40) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தார். இதில் திண்டுக்கல் முருகபவனத்தை சேர்ந்த சுதர்கனாதேவியை நேற்று போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

3.
தனி அறையில் அடைத்து கொடுமை: லண்டன் கணவர் மீது மனைவி புகார்

நவம்பர் 08,2009. தினமலர்

காரைக்குடி: வரதட்சணை கேட்டு தனி அறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய கணவர் உட்பட மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த பிரதீபாவுக்கும் (23), கல்லலை சேர்ந்த சண்முகம் மகன் ராமநாதனுக்கும் (29) கடந்த 2007 ல் திருமணம் நடந்தது.

கணவர் குடும்பத்தினர் லண்டனில் தொழில் செய்து வந்தனர். சில மாதங்களில் பிரதீபா அங்கு சென்றார்.ஐந்து லட்ச ரூபாய் வரதட்சணை கேட்டு, அங்கு தனி அறையில் பிரதீபா அடைக்கப்பட்டார். கணவருடன் தொடர்பு இல்லாத நிலையில், பெற்றோரிடம் பேசவும் தடை விதித்தனர். அங்குள்ள உறவினர்கள் உதவியுடன் கடந்த டிசம்பரில் பிரதீபா நாடு திரும்பினார்.கணவருடன் சேர்த்து வைக்க கோரி சென்னை குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். தற்போது நிலுவையில் உள்ளது.

கடந்த ஒன்றாம் தேதி லண்டனில் இருந்து பிரதீபாவின் மாமனார் சண்முகம், மாமியார் வசந்தா நாடு திரும்பினர். அவர்களிடம் பிரதீபாவின் பெற்றோர் பேச்சு நடத்தினர்.ஐந்து லட்ச ரூபாய் வரதட்சணை கொடுத்தால் மகனோடு சேர்ந்து வைப்பதாக கூறினர்.இதுகுறித்து காரைக்குடி மகளிர் போலீசில் பிரதீபா புகார் செய்தார்.கணவர் ராமநாதன்,அவரது பெற்றோர் மீது இன்ஸ்பெக்டர் ஜோஸ்பின் அமலராணி வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்.

4.
ஐதராபாத்தில் வரதட்சணை கொடுமை புகார்

கோவை : ஐதராபாத்தில் கணவர் குடும்பத்தினரால் துன்புறுத்தப்பட்ட பெண், நடவடிக்கை கோரி கோவை போலீசில் புகார் கொடுத்தார்.கோவைப்புதூர், சிறுவாணி நகரைச் சேர்ந்தவர் தேவா(32). இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த சுமலதா(28)வுக்கும் 2007ல் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பின் தேவா தனது குடும்பத்துடன் ஐதராபாத், குருமூர்த்தி லேன் பகுதியில் குடியேறினார்.சில நாட்களுக்கு முன், ஐதராபாத்திலிருந்து பெற்றோர் வீட்டுக்கு திரும்பிய சுமலதா, தன்னை கணவரும், அவரது குடும்பத்தினரும் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாகத் தெரிவித்தார். இது தொடர்பாக குனியமுத்தூர் போலீசில் சுமலதா புகார் கொடுத்தார். அதில், கணவர் தேவா, மாமியார் பட்டம்மாள், மாமனார் ராஜகோபால் மற்றும் உறுவினர் ரோகிணி ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

வழக்குப்பதிவு செய்த கோவை போலீசார், சம்பவம் நடந்த இடம் ஐதராபாத் என்பதால், மேல் நடவடிக்கைக்காக, முதல் தகவல் அறிக்கையை ஐதராபாத் போலீசாருக்கு அனுப்பி வைத்தனர்.

5.
வரதட்சணை கேட்டு மிரட்டல்:
பெண் வக்கீலை ஏமாற்றி திருமணம் செய்த போலி வக்கீல் கைது

சென்னை, அக்.25- 2009. செய்தி - தினத்தந்தி

பெண் வக்கீலை ஏமாற்றி திருமணம் செய்ததுடன், வரதட்சணை கேட்டு மிரட்டிய 'போலி' வக்கீல் கைது செய்யப்பட்டார்.

பெண் வக்கீல்

தஞ்சாவூர் முனிசிபல் காலனியை சேர்ந்தவர் மோசஸ். இவருடைய மகள் உஷா மோசஸ் (வயது 39). சென்னையில் வக்கீலாக வேலைபார்த்து வருகிறார். உஷா மோசஸ் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் கடந்த 2004-ம் ஆண்டு சென்னை ஜார்ஜ் டவுண் கோர்ட்டில் வக்கீல் ஒருவரிடம் ஜுனியராக வேலை பார்த்தேன். அப்போது மற்றொரு வக்கீல் ஒருவரின் அலுவலகத்தில் வேலைபார்த்து வந்த ஸ்ரீராமுலு என்ற பால் ஸ்ரீராம் (34) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஸ்ரீ ராமுலு திருத்தணி கிருஷ்ணசமுத்திரம் காலனி பகுதியை சேர்ந்தவர். வக்கீல் தொழில் பார்த்து வருவதாக கூறினார். அதற்கான அடையாள அட்டையையும் காண்பித்தார். அவருடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது.

மோசடி

அதைத் தொடர்ந்து ஸ்ரீ ராமுலுவும் நானும் திருமணம் செய்ய முடிவு செய்தோம். திருத்தணியில் கிறிஸ்தவ முறைப்படி எங்களுடைய திருமணம் 14.9.2005 அன்று நடந்தது. அதன் பிறகு சென்னை வரத முத்தையப்பன் தெருவில் வசித்து வந்தோம். திருமணத்திற்கு பிறகுதான் அவர் போலி வக்கீல் என்பது தெரியவந்தது.

பி.ஏ. பொருளாதாரம் படித்துள்ள ஸ்ரீராமுலு, ஆந்திர மாநிலத்தில் உள்ள சட்டக்கல்லூரி ஒன்றில் படிக்க சேர்ந்ததுடன் சரி, பட்டம் எதுவும் வாங்கவில்லை. எந்த கோர்ட்டிலும் வாதாடவில்லை என்பது தெரியவந்தது. இந்த மோசடி குறித்து கேட்ட போது, என்னுடன் தங்குவதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில், எனக்கு குழந்தை பிறக்கவில்லை என்பதை காரணம் காட்டி, தன்னுடைய சகோதரி மகள் சரிதா என்பவரை 2-வது திருமணம் செய்யப்போவதாக ஸ்ரீராமுலு கூறினார்.

இந்த நிலையில், ஸ்ரீராமுலு சரிதாவை எனக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். இது பற்றி அவரிடம் கேட்டதற்கு, என்னுடன் வாழ வேண்டும் என்றால் அதிக வரதட்சணை கொடுக்க வேண்டும் என்று மிரட்டி வருகிறார். அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு உஷா மோசஸ் புகாரில் கூறியிருந்தார்.

இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் இணை கமிஷனர் சேஷசாயி, துணை கமிஷனர் பெரியய்யா ஆகியோர் மேற்பார்வையில் கொத்தவால்சாவடி இன்ஸ்பெக்டர் ஹரிக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். ஸ்ரீராமுலு மீது 406, 420, 467 பிரிவு 4, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டம் (இது எங்கிருந்து வந்தது!) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கைது

விசாரணையில் ஸ்ரீராமுலு திருத்தணியில் நடந்த அடிதடி வழக்கு ஒன்றில் தொடர்புடையவர் என்பதும், தன்னை போலீசார் தேடுகிறார்கள் என்பதை அறிந்தால் அவரை தலைமறைவாகி விடலாம் என்பதால் அவரை 'பொறி' வைத்து பிடிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஸ்ரீராமுலுவிடம் செல்போன் மூலம் உஷா மோசஸ் பேசினார்.

இனிமேல் சண்டை போடமாட்டேன் என்றும் கேட்ட வரதட்சணை பணத்தை தருவதாகவும், எனவே சென்னைக்கு வரவேண்டும் என்றும் ஸ்ரீராமுலுவிடம் கேட்டுக் கொண்டார். அவரது பேச்சை உண்மை என்று நம்பிய ஸ்ரீராமுலு நேற்று முன்தினம் சென்னை வந்த போது போலீசில் சிக்கிக் கொண்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் போலி வக்கீல் என்று கூறி ஏமாற்றியதையும், வரதட்சணை கேட்டு மிரட்டியதையும், 2-வது திருமணம் செய்ததையும் ஒப்புக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

மருமகள்கள் சித்திரவதையிலிருந்து மாமியார்களைக் காக்க ஒரு சங்கம்

செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 20, 2009. செய்தி: தட்ஸ்தமிழ்

ஹைதராபாத்: மருமகள்கள் சித்திரவதையிலிரு்நது தங்களைக் காத்துக் கொள்வதற்காக ஆந்திராவில் மாமியார்கள் சேர்ந்து தனிச் சங்கம் கண்டுள்ளனர்.

வரதட்சணைக் கொடுமை வழக்குகளில் முதலில் சிக்குவது கணவன்மார்கள்தான். அதற்கு அடுத்த டார்கெட் மாமியார்கள்.

ஆனால் வரதட்சணைக் கொடுமை சட்டத்தை பல பெண்கள் தவறாகப் பயன்படுத்தி கணவர்களையும், மாமியார்களையும், அவர்களது குடும்பத்தினரையும் சிறையில் தள்ளி விடுவதாக சமீப காலமாக புகார்கள் வருகின்றன.

சில மாதங்களுக்கு முன்பு மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவன்மார்கள் சங்கம் தொடங்கப்பட்டது. மாநாடு கூட நடத்தினர்.

இந்த நிலையில் ஆந்திராவில் மாமியார்கள் சேர்ந்து ஒரு சங்கம் ஆரம்பித்துள்ளனர்.

இதுகுறித்து சங்கத்தின் அமைப்பாளர்களான பத்மஜா, உமா ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

சமீபகாலமாக மருமகள்களால் ஏராளமான மாமியார்கள் வீடுகளில் சித்ரவதை செய்யப்படுகிறார்கள். பல மாமியார்களுக்கு சரியான நேரத்திற்கு உணவு கூட கிடைப்பதில்லை.

மருமகள்கள் பலர் மாமியாரை கடுமையாக சித்ரவதை செய்து விட்டு போலீசில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக போலீசில் சிக்க வைத்து வருகிறார்கள்.

இந்த கொடுமைகளுக் கெல்லாம் முடிவு கட்டத்தான் நாங்கள் மாமியார் பாதுகாப்புச்சங்கத்தை தொடங்கி உள்ளோம்.

தற்போது 30 பேர் உறுப்பினர்களாகி உள்ளனர். விரைவில் ஆயிரம் பேர் வரை உறுப்பினராக சேர்க்க முடிவு செய்துள்ளோம் என்றனர்.

தங்களது பிரச்சினைகள் உள்ளிட்டவை தொடர்பாக மாமியார்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களையும் இந்த சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

அவை - 9704683163, 9573605415

===========

விரைவிலேயே இச்சங்கத்தின் கிளை தமிழ் நாட்டிலும் துவக்கப்பட இருக்கிறது. அது பற்றிய அறிவிப்பை எதிர்பாருங்கள்!

பெண் குழந்தைகளை 39 முறை கத்தியால் குத்திப் படுகொலை செய்த தாய்!

இந்தியாவின் நீதிமன்றங்களில் வரும் பெரும்பான்மையான விவாகரத்து வழக்குகளில் குழந்தைகளின் காப்புப் பொறுப்பு தாயின் வசம்தான் முழுமையாக ஒப்படைக்கப்படுகிறது. எவ்வளவுதான் தந்தை தன் குழந்தைகளின் மீது பாசம் வைத்திருந்தாலும், அவர்களின் நல்வாழ்வுக்காக எத்தகைய தியாகமும் செய்பவனாக இருந்தாலும், அதே நேரத்தில் அந்தத் தாய் குழந்தைகள் மீது சிறிதளவும் பாசம் இல்லாதவளாக, "தான், தன் சுகம்" என்று இருப்பவளாக இருந்தாலும், இந்திய நீதிமன்றங்கள் குழந்தைகளை தந்தைகள் வசம் ஒப்படைப்பதில்லை.

தந்தை என்பவர் வெறும் "விசிட்டர்" என்பது நீதிமன்றங்களின் முடிபு. ஆனால் நடைமுறையில் அந்த "விசிட்டுகள்" கூட அந்தத் தந்தைகளுக்குக் கிட்டுவதில்லை. ஏதேனும் சாக்கு போக்கு சொல்லி தந்தையர்களிடம் குழந்தைகளைக் காண்பிக்காமல் ஏமாற்றும் தாய்க்குலங்கள் அநேகம். அந்தக் கணவன் பிறகு கோர்ட்டுக்கு நடையாய் நடந்து "எனக்கு குழந்தையைக் காண்பியுங்கள்" என்று போராட வேண்டும்!

ஆனால் இதில் முரண்நகை என்னவென்றால், குழந்தைகளைக் கண்னால் காண்பதற்குக் கூட வாய்ப்புக் கிட்டுகிறதோ இல்லையோ, அந்த மாஜி மனைவியின் சிலவுக்கும் குழந்தைகளின் பராமரிப்புச் சிலவுக்கும் மாதா மாதம் அந்த கணவன் தான் பணம் கொடுத்து அழவேண்டும்! இல்லாவிட்டால் சிறை தண்டனை!!

இத்தகைய ஒருதலைச் சார்பான, ஆணுக்கு எதிரான, சட்டங்கள், தீர்ப்புகள் மலிந்தது இந்த நாடு.

சரி, இந்த நாட்டில் பிறந்த ஒரு தாயார் தன் குழந்தைகளை என்ன செய்தார், விவாக ரத்து பெற்ற தன் கணவன் மீது கொண்ட வெறுப்பால் தன் குழந்தைகள அவள் எப்படிக் கொன்றாள் என்பதை வாசியுங்கள்:-

2 மகள்களை கொன்ற இந்திய பெண். 33 ஆண்டு சிறைத் தண்டனை.

லண்டன், செப்.23- 2009

இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ்ஷைர் நகரில் வசிக்கும் இந்தியப்பெண் ரேகா குமாரி பேக்கர். 41 வயதான இவர் அங்கு உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்தார். அவருக்கு டவீனா பேக்கர், ஜாஸ்மின் பேக்கர் என்று 2 மகள்கள் இருந்தனர். டவீனாவுக்கு வயது 16. இளையவளுக்கு வயது 13. இருவரையும் கடந்த 2007-ம் ஆண்டு ஜுன் மாதம் 13-ந்தேதி அவர்களது தாயார் கத்தியால் குத்தி கொன்றார். 39 முறை கத்தியால் குத்தினார்.

இரு பெண் குழந்தைகளும் தூங்கிக் கொண்டிருந்தன. அவர்கள் உயிர் பிரிந்த பின்னும் மேன்மேலும் கத்தியால் குத்திக் கொண்டெ இருந்திருக்கிறார்.
மகள்களை யார் கவனித்துக்கொள்வது என்பது தொடர்பாக அவருக்கும், அவரது முன்னாள் கணவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து தான் அவர் கொலை செய்தார்.

Indian Express reports:

Kumari-Baker’s ex-husband, businessman David Baker, said “not a day passes” when he does not think of Davina and Jasmine. “I was robbed of my daughters by an act of calculated viciousness,” he said.

Times Of India reports:

The elder daughter Davina Baker, 16, was stabbed 39 times while her sister Jasmine Baker, 13, was attacked 29 times with a kitchen knife in a frenzied attack by their mother in 2007.

அந்த ரேகா குமாரி என்னும் பெண் பேயின் திருமுகத்தைக் கண்டு "ஆகா, இவளல்லவா, பெண்குலத்திலகம்" என்று துதிபாடத் துடிப்போருக்காக அந்தப் பெண்ணின் படத்தை இந்த வலைப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.

மனோரமா ஆச்சி, எங்கே இருக்கீங்க? அந்த புதுமைத் தாய் தன் இளம் பெண் குழந்தைகளை 39 முறை கத்தியால் குத்தியதற்கும் அவளுடைய கணவனின் ஆண்மையின்மை தான் காரணமா? "தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை எப்படி வேண்டுமானாலும் கொல்ல உரிமை வேண்டும்" என்பதற்காக எப்போது போராட்டம் தொடங்கப் போகிறீர்கள்?

கருத்து யுத்தம் வீடியோ





காணுங்கள். உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள்!

கலைஞர் டிவியில் நாளை கருத்து யுத்தம்

நாள்: 13-09-2009. ஞாயிறன்று பிற்பகல் 1-30 மணி முதல் 2-30 மணி வரை.

நிகழ்ச்சியின் பெயர்: "கருத்து யுத்தம்" .கலைஞர் டிவியில் காணத்தவறாதீர்கள்.

498A பொய் வழக்குகளால் பாதிக்கப்பட்டசுமார் 50 நபர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இத்தகைய வழக்குகளைப் போட்டு குடும்பங்களை சிதறடிக்கும் நபர்களும் அவர்களைத் தூண்டும் பெரிய இடத்துப் பேர்வழிகளும் பங்கேற்கின்றனர்.

கட்டாயம் நிகழ்ச்சியைப் பார்த்து உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவியுங்கள்.

நன்றி.

கோவையில் கோலாகலத் தொடக்கம்

இந்திய குடும்ப பாதுகாப்பு இயக்கம் கோயம்புத்தூரில் நேற்று (04-09-2009) தன் கிளையைத் தொடங்கியுள்ளது. அந்த நிகழ்ச்சி பற்றி தினமணி வெளியிட்டுள்ள செய்தி இதோ:-

ஆண்கள் உரிமையை பாதுகாக்க ஆண்கள் நலத்துறை அமைச்சகம் தேவை

கோவை, செப். 4: ஆண்கள் உரிமையை பாதுகாக்க ஆண்கள் நலத்துறை அமைச்சகம் தேவை என்று இந்திய குடும்ப பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து இந்த அமைப்பின் தமிழ்நாடு அமைப்பாளர் சுரேஷ்ராம், கோவையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:

கலாசாரத்துக்கும், பாரம்பரியத்துக்கும் பெயர்பெற்ற இந்தியாவில் குடும்ப பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.

அமெரிக்காவில் வளர் இளம் பெண்கள் (டீன் ஏஜ்) கருத்தரிக்கும் சம்பவம் அதிகமாக உள்ளது.

இதனால், அங்கு தந்தை இல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதுபோல, இந்தியாவிலும் இப்போது தந்தை இல்லா குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பெண்களுக்கு ஆதரவாக 44 சட்டப்பிரிவுகள் இருப்பதுதான் இதற்கு முக்கிய காரணம். வரதட்சிணை கொடுமை என பொய்யாக தகவல் கூறி பணம் பறிக்கும் சம்பவங்கள்தான் அதிகம் நடக்கின்றன.

வரதட்சிணை வழக்கில் ஆண்களுக்கு தண்டனை வழங்கப்படுவதில்லை.

ஆனால், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறிக்கப்படுகிறது.

குறிப்பாக படித்த, வசதி படைத்த ஆண்கள்தான் இவ் வழக்குகளால் பாதிக்கப்படுகின்றனர்.

சமுதாயத்தில் பெண்கள் செய்யும் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.

ஆனால், அவர்களை தண்டிக்க சட்டம் இல்லை. இதனால், குடும்ப உறவுகள் பாதிக்கப்படுகின்றன.

வரதட்சிணை வழக்குகளால் நீதிபதிகள், அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். ஓராண்டில் ஒரு லட்சத்து 12 ஆயிரம் பெண்கள் (மாமியார், நாத்தனார் உள்ளிட்ட உறவுகள்) கைது செய்யப்படுகின்றனர்.

தந்தை, தாய், மகன், மருமகள், பேரன், பேத்தி ஆகியோரை உள்ளடக்கியதுதான் குடும்பம். ஆனால், இப்போது தந்தை, தாய், மகன் அல்லது மகள் ஆகியோரைக் கொண்டதுதான் குடும்பம் என்று மாறி வருகிறது.

இதனால், வயதான பெற்றோர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

குடும்ப பிரச்னைகள் காரணமாக 2006-ல் நாடு முழுவதும் 52 ஆயிரத்து 483 ஆண்களும், 2007-ல் 55 ஆயிரத்து 452 ஆண்களும் தற்கொலை செய்துள்ளனர். அதேநேரத்தில் 2006-ல் 28 ஆயிரத்து 188 பெண்களும், 2007-ல் 29 ஆயிரத்து 869 பெண்களும் தற்கொலை செய்துள்ளனர்.

இருதரப்பையும் ஒப்பிடும்போது பெண்களைவிட, ஆண்கள் தற்கொலை செய்யும் விகிதம் இரு மடங்கு அதிகமாக உள்ளது.

பெண் உரிமை என்ற பெயரில் ஆண்களை அடிமைத்தனம் செய்யும் நிலை பரவி வருகிறது. எனவே, ஆண்களின் உரிமைகளைப் பாதுகாக்க தனிச் சட்டம், அமைச்சகம் தேவை என்றார்.

இந்த அமைப்பில் ஆலோசனை பெற விரும்புவோர் 9840587653 (சென்னை), 9894103539 (ஈரோடு), 9790019658, 9629450331 (கோவை) என்ற செல்போன்களில் தொடர்புகொள்ளலாம். மேலும், www.tamil498a.blogspot.com, www.savefamily.org, www.saveindianfamily.org என்ற இணையதள முகவரிகளில் தொடர்புகொள்ளலாம்.
-------

இந்தச் செய்திக் குறிப்பின் வலைச்சுட்டி இது.

================================

"தி ஹிந்து" ஆங்கில இதழில் வெளிவந்துள்ள செய்தி:

Movement protecting men’s rights launched

Staff Reporter

Coimbatore: Save Indian Family Movement, an organisation focusing on abuse of women-centric laws against men, advocating gender-neutral laws and amendments to the existing laws, has launched its Coimbatore Chapter.

Convenors of the Save Indian Family Movement, Suresh Ram and M.P. Kalaiselvan (Chennai), Manoj David (Bangalore) and G. Prakash (Coimbatore) addressed journalists at Coimbatore on Friday.

They pointed out that laws aimed at protecting women, such as Sec 498 A of Indian Penal Code, Dowry Prohibition Act and Prevention of Domestic Violence Act, had been largely misused against men and this had affected the Indian family system.

Adverting to the suicide statistics of 2005 and 2006, they pointed out that in 2005, 52,483 husbands committed suicide while the number was 28,188 for wives and in 2006, 55,452 husbands committed suicide as against 29,869 suicides by wives.

In the event of the death of a married woman, the husband and his family members were subjected to prolonged legal trails. Such laws could never be a remedy for the sufferings of women and arming them with ‘terrorising legal weapons’ only led to retribution.

They dubbed the cited legal provisions as ‘draconian women-centric laws’. More than 98 per cent of men faced domestic violence at the hands of their wives and in-laws in the form of verbal abuse, physical abuse, economic exploitation, cheating, infidelity and harassment, but there was no law to provide solace to them.

They said that laws needed to be gender neutral. Women-centric laws sought compensation for women in the event of a divorce even when the woman was a bread winner and saw fathers as incapable of bringing up children.

They demanded a separate Ministry for Men’s Welfare, gender equal laws, besides amendments to legal provisions to tone down these legislations.

For help or more information call 98403-24551/99410-12958 or visit www.saveindianfamily.org or ww.savefamily.org.

இதன் சுட்டி: http://www.hindu.com/2009/09/05/stories/2009090550920200.htm

நீதிபதிகளுக்கு சட்ட அறிவு போதாதென்கிறார் தலைமை நீதிபதி

"உயர் நீதிமன்ற நீதிபதிகள் உட்பட பல நீதிபதிகளுக்கு சட்ட அறிவே இல்லை. சட்ட நுணுக்கங்களையோ, யதார்த்த நிலையையோ, சாட்சியங்களின் தன்மையையோ கருத்தில் கொள்ளாமலும், சமூகப் பிரக்ஞை இல்லாமலும் இஷ்டத்திற்கு தீர்ப்பு அளிக்கிறார்கள்."

இப்படிச் சொன்னவர் யார்? சும்மா அப்பை சப்பையான ஆளில்லையா சொன்னவர்! இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திரு. கே.ஜி.பாலகிருஷ்ணன் அவர்கள்தான் அப்படிச் சொல்லி விசனப்பட்டிருக்கிறார்!

அவர் மேலும் கூறியிருப்பவை:-

என்ன ஆணையிடுகிறோம், அது செல்லுமா செல்லாதா, அது நிறைவேற்றத் தக்கதுதானா என்றெல்லாம் அலசிப் பார்க்காமல் தீர்ப்பு எழுதுகிறார்கள் நீதிபதிகள்.

அதுவும் 498A சட்டம் மிகவும் தவறான முறையில் பயன்படுத்தப்படுகிறது என்ப்தை மீண்டும் அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறார் தலைமை நீதிபதி அவர்கள்.

Balakrishnan pointed out that Section 498 (A) (anti-dowry law) under CrPC was one of the most abused laws.

“Judges are simply issuing summons and even warrants without properly verifying who are the accused. I have come across such cases in which the accused, sitting in Australia and other countries, are made accused when the case is lodged for the alleged offence of dowry,” he added.

தவிரவும் வழக்குகளை மிகவும் தாமதப் படுத்துகிறார்கள். நெறிப்படுத்துவதற்குத் தவறுகிறார்கள். அதனால் வழக்குகள் கோடிக் கணக்கில் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கின்றன.

இதுபோல் அவர் பேசியிருப்பது சென்ற ஆகஸ்டு 30-ம் நாள் போபாலில். "டெலிகிராஃப்" இதழில் வெளிவந்த அவருடைய பேச்சு விவரத்தின் சுட்டி இதோ.

ஆனால் என்ன பேசி என்ன ஆகப் போகிறது. நேற்று சென்னையில் 89 வயது முதியவர் மீது பிடி வாரண்டு அனுப்பியிருக்கிறார் ஒரு நீதிபதி. ஏன் தெரியுமா? அவருடைய மனைவிக்கு மாதம் 1500 ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்க வில்லையாம். அந்தக் கிழவனாரை அவருடைய குழந்தைகள் யாரும் கவனிப்பதில்லை. சோத்துக்கே லாட்டரி. குழந்தைகள் அனைவரும் அம்மா பக்கம். (அம்மாக்கள் செய்யும் முதல் வேலையே குழந்தைகள் மனத்தில் தகப்பன் மேல் வெறுப்பை ஊட்டி விஷ வித்தை விதைப்பதுதானே!)

அந்தக் கிழவனாரை சன் டிவியில் பேட்டி எடுத்தார்கள். அவர் பரிதாபமாக, "பணத்திற்கு நான் எங்கே போவேன் ஐயா, குழந்தைகள் கொடுத்தால் அதை மனைவிக்கு நீதிபதி சொல்லியபடி ஜீவனாம்சம் கொடுக்கிறேன்" என்று அழுதிருக்கிறார்.

ஆனால் அதையெல்லாம் நீதிபதி எங்கே காதில் வாங்கப் போகிறார். அவரைப் பொருத்த வரையில் மனைவி கேட்டு விட்டால் ஜீவனாம்சம் கொடுக்கவேண்டும். கொடுக்காவிட்டால் கைது செய்து சிறையில் அடைத்துவிடுவார்கள். இல்லையென்றால் கிட்னியை விற்றுத்தான் கொடுக்க வேண்டும். இத்தகைய அணுகுமுறையைத்தான் தலைமை நீதிபதி சாடியிருக்கிறார். ஆனால் என்ன பயன். ஆண்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படுகின்ற கொடுங்கோன்மை நிற்கப்போகிறதா என்ன!

ஆகையால் எந்த வயது ஆண்களும் 498A, ஜீவனாம்சச் சட்டங்கள் போன்றவற்றிலிருந்து தப்பவே முடியாது. "நமக்கு இருப்பது பெண் குழந்தைகள்தானே, ஆண்பிள்ளைகள் கிடையாதே" என்று எண்ணி இருமாப்புடன் பெண்ணியவாதம் பேசிக்கொண்டு, இங்கு வந்து அனானியாக பின்னூட்டமிட்டுச் செல்லும் பெரியவர்கள் கூட எதிர்வரும் நாட்களில் இதுபோன்ற நிலைக்கு ஆளாகலாம். யார் கண்டது!

இனி செய்தி. தட்ஸ்தமிழ் தளத்தில் வெளிவந்தது:

சென்னை: மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்காமல் நீதிமன்ற உத்தரவை அவமதித்த குற்றத்துக்காக 89 வயது முதியவர் ஒருவருக்கு சென்னை குடும்பல நல நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை வில்லிவாக்கம் பகுதியில் செங்குன்றம் ரோட்டில் வசித்து வருபவர் சிம்சன் கண்ணன்(89). இவருக்கும் இவரது மனைவி ராஜலட்சுமிக்கும் (80) கடந்த 1949ல் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு 4 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் மூலம் பல பேரன், பேத்திகளும் உள்ளனர். தற்போது சிம்சன் மனைவியுடன் கோபித்து கொண்டு தனியாக வசித்து வருகிறார்.

சமீபத்தில் அவர் தனது மனைவி, மகன்களுடன் சேர்ந்து கொண்டு தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், இதனால் தனக்கு அவரிடம் இருந்து விவாகரத்து வாங்கி தருமாறும் கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

திருமணம் நடந்த சுமார் 60 வருடங்களுக்கு பின்னர் 89 வயதில் ஒருவர் விவாகரத்து கேட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கு நடந்து கொண்டிருந்த நிலையில் சிம்சனின் மனைவி, கணவர் தன்னை பிரிந்துவிட்டால் தனக்கு ஜீவனாம்சமாக மாதம் ரூ. 1500 வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு செய்தார். இதை விசாரித்த நீதிபதி சிம்சன் கண்ணன் அவரது மனைவிக்கு ரூ. 1500 ஜீவனாம்சம் கொடுக்க உத்தரவிட்டார்.

ஆனால், சிம்சன் நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்துவிட்டார். அவர் ஜீவனாம்சம் வழங்கவில்லை. இதையடுத்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையடு்த்து சென்னை குடும்ப நல நீதிமன்றம் சிம்சனை நேரில் வந்து ஆஜராக உத்தரவிட்டது. ஆனால், அவர் வரவில்லை. வழக்கை விசாரித்த நீதிபதி நாராயணசாமி, 89 வயது சிம்சனுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்

கோவையில் குடும்பப் பாதுகாப்பு இயக்கப் பொதுக்கூட்டம்

"இந்திய குடும்ப பாதுகாப்பு இயக்கம்" (SAVE INDIAN FAMILY FOUNDATION) வரும் சனிக்கிழமை வெள்ளிக்கிழமை அன்று (செப்டம்பர் (5) 4-ம் தேதி, 2009) கோவையில் பத்திரிக்கையாளர் சந்திப்பும், ஒரு பொதுக்கூட்டமும் நிகழ்த்த இருக்கிறது.

உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவராலேயே "சட்டபூர்வ பயங்கரவாதம்" (Legal terrorism) என்று வர்ணிக்கப்பட்ட IPC 498A சட்டப்பிரிவு (வரதட்சணை கொடுமை சட்டம்), மற்றும் ஆண்களை மட்டும் குற்றவாளியாகக் கருதும் குடும்ப வன்முறைச் சட்டம் (D.V.Act) போன்ற பொய் வழக்குச் சட்டங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவதற்காகவும் மற்றும் திருமணத்தை எதிர் நோக்கியிருப்போருக்கும் இதுபோன்ற சட்டங்களைப் பற்றிய புரிதலை உணர்த்துவதற்காகவும் இந்த பொதுக்கூட்டம் நடைபெறுகின்றது.

நேரம்: காலை 11 மணி.
இடம்: பிரஸ் கிளப்,
5, மாநகராட்சி வணிக வளாகம்,
தண்டு மாரியம்மன் கோயில் எதிரில், அவிநாசி சாலை,
கோயம்புத்தூர் 641018

தொடர்புக்கு -- 9790019658

அனைவரும் திரளாகக் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்.

இன்றைக்கு இத்தகைய வழக்குகளில் பாதிக்கப்பட்டவர் அனைவரும் இதைப் பற்றிய பொது அறிவு இல்லாமல் இருந்ததால்தான் மிகுந்த துன்பத்திற்கு உள்ளானார்கள். அவர்கள் திருமணத்தின் போது இப்படி ஆகுமென்றா எதிர் பார்த்தார்கள். ஆனால் நீங்கள் எதிர்பார்க்கவில்லை என்பதற்காக அத்தகைய பொய்க் கேசுகள் போடாமல் இருக்கிறார்களா என்ன? நம் நாட்டில் ஆண்டுக்கு 76,000 பொய்க் கேசுகள் (498A) போடப்பட்டு ஒரு பாவமும் அறியாத வயதான தாய்மார்களும் இளம் பெண்களும் சின்னஞ்சிறு குழந்தைகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். ஆனால் 2% கேசுகள்தான் நிரூபிக்கப்படுகின்றன.

சட்டத்தில் ஓட்டை இருக்கலாம்; ஆனால் ஓட்டையே சட்டமானால்?

இந்த அறிவிப்பை பாதிக்கப்பட்டோருக்கும் தங்கள் நண்பர்களுக்கும் பரவலாக அனுப்பி வையுங்கள். நம்மாலான பொதுத் தொண்டு!

ஓடிப்போன மனைவியின் கைச்சிலவுக்காக கிட்னியை விற்கும் கணவன்!

சினிமாவைப் பார்த்து லவ் பண்ணி, கைக்காசெல்லாம் காதலிக்காக சிலவு செய்து ஒருபாடாக அவளைத் திருமணம் செய்துகொண்டு விடுகிறீர்கள். "ஆகா, என் மனத்தைக் கவர்ந்த காரிகையையே மணம் புரிந்து கொண்டேன், எனக்கு நிகர் இப்பாரில் யார் உளர்" என்று இறுமாந்து நிற்கிறீர்கள். ஆனால் அந்த மகிழ்ச்சியின் காலக்கெடு ஓரிரு மாதங்களே. காதல் மனைவியின் உள்ளக் கிடக்கை எது என்பது ஆண்களால் அறிய முடியாத புதிர். தன்னிஷ்டப்படி நடக்க கணவன் இடைஞ்சலாக இருந்தான் என்பதனால் சல்லி பெறாத விஷயத்திற்காக கோபித்துக் கொண்டு பிறந்த வீட்டிற்கு சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிடுகிறாள் அந்த வீராங்கனை. அங்கு சென்றவுடன் அவள் அறிவுரை கேட்பது சகுனி மாமாக்களிடமும் பெண்ணிய வாதம் பேசும் கிழக் கோட்டான்களிடமும்தான்.

"திரும்பியும் அவன் கிட்ட போய் நிக்க மாட்டேன்! அவனைப் பார்த்து விடணும் ஒரு கை!" என்பாள். உடனே அவர்கள், "சட்டங்கள் எல்லாமே உன் பக்கம்தான். எனக்குத் தெரிந்த வக்கீல் ஒருவர் இருக்கிறார். போலீசிடமும் மேலும் நீதி மன்றத்திலும் மிகுந்த செல்வாக்குள்ளவர். அவர் மூலம் ஒரு டஜன் கேசுகளை ஒண்ணு மேல ஒண்ணா போட்டு, ஜீவனாம்சம் (alimony), பராமரிப்புத்துகை (maintenance) என்று பல வகையில் தீட்டிப்பிடலாம் தீட்டி. அவனை ஓட்டாண்டியாக்கி நடுத்தெருவில் நிக்க வைத்து விடலாம். கவலைப் படாதே!" என்று கூறும் அறிவுரைகளினால் ஞானம் பெற்று, "ஆகா! பார்க்கிறேன் ஒரு கை!" என்று அடுக்கடுக்காக கேசுகளைப் போடத் தொடங்குகிறாள் அந்த புரட்சிப் பெண் திலகம்.

இப்படித்தான் முடிகின்றன 90%-க்கு மேற்பட்ட திருமணங்களும் (காதல் ரூட்டில் வந்தவை உட்பட).

ஆனால் ஒன்று மட்டும் உண்மை. இந்தியாவின் திருமணம் சார்ந்த சட்டங்களின் அடிப்படையில் தன்னிச்சைப்படி கணவனை விட்டு ஓடிப்போன மனைவியின் லிப்ஸ்டிக் சிலவுக்கும், செல்ஃபோன் சிலவுக்கும், அவள் தன்னிஷ்டப்படி உல்லாச வாழ்வு வாழ்வதற்கான சிலவுக்கும் சேர்த்து அந்தக் கண்வன் மாதாமாதம் பணம் கொடுத்து அழவேண்டும். அது அவன் கடமை.

ஆனால் அவனுக்கு அந்த மனைவியிடம் ஏதேனும் உரிமை இருக்கிறதா? ஒன்றும் கிடையாது. "சரீய்யா, அதான் மாசாமாசம் பணம் கொடுக்கிறேனே, இன்னமும் சட்டப்படி அவள் மனைவிதானே, ஒரு இரவு படுக்கை சுகத்தையாவது நான் கொடுக்கிற காசுக்கு கூலியா கொடுக்கக்கூடாதா" என்று கேட்டால், உடனே உங்களை "மனைவியை ரேப் பண்ண முயற்சித்தான்" என்று சொல்லி உள்ளே போட்டுவிடுவார்கள். நான் சும்மா சொல்லவில்லை. சட்டங்களும் அவற்றின் அடிப்படையில் அமைந்த தீர்ப்புக்களும் இப்படித்தான் சொல்கின்றன.

திருமணம் சம்பந்தப்பட்ட சட்டங்களில் இதுபோன்று ஓடிப்போன மனைவிகள் பல சட்டப் பிரிவுகளின் அடிப்படையில் மையிண்டெனன்ஸ் கேட்கலாம். அதாவது:

  1. குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் (Protection of Women against Domestic Violence Act) - இது போன்ற முட்டாள்தனமான சட்டம் உலகத்திலேயே கிடையாது. இதுதான் "பெண்குலம் வன்முறையே செய்யாது. ஆண்கள் மட்டும்தான் வன்முறையில் ஈடுபடுவார்கள்" என்று இருபாலரிடையே பிளவு செய்து வரையறுக்கிறது. இந்த சட்டத்தின்படி வீட்டை விட்டு ஓடிப்போன மனைவி புகார் கொடுத்தால் அவளுடைய கணவனும் அவனுடைய பெற்றோரும் தங்களுக்குச் சொந்தமான வீட்டைவிட்டே ஓடிவிடவேண்டும். கேசு போட்ட ராணியம்மா தன் மனத்துக்குகந்தவர்களுடன் அங்கு குடியேறி "உல்லாசமாக" வாழ்ந்து கொண்டிருக்கலாம்!

  2. Sec 125 of CrPC (இது மிகக் கொடுமை. பணம் கொடுக்காவிட்டால் உடனே கைதுதான்)

  3. Sec 24 of Hindu Marriage Act (உங்கள்மேல் கேசு போட அவளுக்கு நீங்களே பணம் கொடுக்கவேண்டும்!)

  4. Under Hindu Adoptions and Maintenance Act

இப்படிப் போட்டுப் பிரட்டிப் பிரட்டி செத்த பாம்பு அடிப்பதுபோல் அடித்து விடுவார்கள். "ஐயா எசமான்களே, இப்போ பொருளாதார நிலை சரியில்லை. மூணு மாசமா எனக்கு சம்பளமே வரல்ல. அப்படி இனிமே வந்தாலும் பாதி சம்பளம்தான் கிடைக்கும் போல இருக்கு. மெயிண்டனென்சை ரத்து செய்ங்க, அல்லது குறைச்சுப் போடுங்க" என்று அந்தப் புருஷன் கதறினால்கூட நீதிபதிகள் செவி சாய்க்கமட்டார்கள். "எப்படியாவது அந்தப் பெண் கேட்கிற பணத்தைக் கொடுத்துப்போடு. இல்லாவிட்டால் ஜெயிலுக்குப் போ" என்று ஆணையிட்டு விடுவார்கள். பிறகென்ன, அந்த முட்டாள் கணவன் தன் கிட்னியைத்தான் விற்க வேண்டும்!

ஆகையினால் மகா ஜனங்களே, நீங்களோ உங்கள் பையன்களோ திருமணத்தைப் பற்றி யோசிப்பதற்கு முன்னால் இந்தச் சட்டங்களைப் பற்றிய அறிவைப் பெறுங்கள். சீக்கிறமே எங்கள் அமைப்பு (Save Indian Family Foundation) ஒரு சட்ட விழிப்புணர்வுப் பட்டறையை நடத்தவிருக்கிறது. அது பற்றிய அறிவிப்பு விரைவிலேயே இங்கு வெளிவரும்.

இனி மேலே இடது பக்கத்தில் இருக்கும் செய்தியைப் படித்துவிட்டு இரண்டு சொட்டு கண்ணீர் விடுங்கள். வேறு என்ன செய்ய முடியும் நம்மால்!

மனைவிகளின் கொடுமையால் பாதிக்கப்பட்ட இந்திய கணவர்களின் மாநாடு

சிம்லாவில் மனைவியால் பாதிக்கப்பட்ட கணவர்கள் மாநாடு
சனிக்கிழமை, ஆகஸ்ட் 15, 2009.

சிம்லா: மனைவிகளின் கொடுமையால் பாதிக்கப்பட்ட இந்திய கணவர்களின் மாநாடு சுதந்திர தினமான இன்று சிம்லாவில் நடக்கிறது.

இந்தியாவில் கடந்த நூற்றாண்டு வரை பெண்கள் வீட்டு அடிமைகளாக நடத்தப்பட்டனர். திருமணத்துக்கு தந்தைக்கும், திருமணத்துக்கு பின் கணவருக்கும், வயதான காலத்தில் மகனுக்கும் அடிமைகளாக இருந்தனர்.

மேலும், ஒவ்வொருவரின் வாழ்க்கையின் முக்கிய கட்டமான திருமணத்தின் போது பெண்கள் வரதட்சனை என்ற பெயரில் பெரும் கொடுமைகளை அனுபவித்து வந்தனர். இதையடுத்து இந்தியாவில் வரதட்சனை ஒழிப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், தற்போது 21ம் நூற்றாண்டில் தகவல் தொழில்நுட்பம், பொறியியல், வி்ஞ்ஞானம் என அனைத்து துறைகளிலும் பெண்கள் நன்றாக முன்னேற்றம் கண்டுள்ள நிலையில் சிலர் இந்த வரதட்சணை ஒழிப்பு சட்டம் போன்றவற்றை தங்களது சொந்த லாபத்துக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

கணவன்மார்களை தங்களது கைக்குள் வைத்துள்ளவும், பிடிக்காத கணவரை கழட்டிவிடவும் வரதட்சணை வழக்கு தொடருவேன் என மிரட்டும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. இது தொடர்பாக நீதிமன்றத்துக்கு போனால் மானம் போய்விடும், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்பதால் பல ஆண்கள் அஞ்சி பேசாமல் இருந்துவிடுகின்றனர்.

மேலும், இது போன்ற வழக்குகளில் குழந்தைகள் தாயாரிடம் இருக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்படுவதால் குழந்தைகளை பிரிய விரும்பாத நல்ல தந்தையாக இருக்க நினைக்கும் ஆண்களும் பெரும் துன்பத்துக்கு ஆளாகி வருகிறார்கள்.

ஆண்கள் இது போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருவதை ஒரிசா பெண்கள் கமிஷனும் ஒத்துகொண்டுள்ளது. கணவனை கொடுமைப்படுத்த வரதட்சணை கேட்கபதாக பெண்கள் பொய் புகார் கொடுப்பது அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இது போன்ற பெண்களால் பாதிக்கப்பட்ட கணவர்கள் ஒன்றிணைந்து, ஹிமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் மாநாடு ஒன்றை இன்று துவக்கியுள்ளனர்.

இது குறித்து இந்திய குடும்ப அடிப்படைகளை காப்பாற்றுங்கள் என்ற பெங்களூர் அமைப்பின் உறுப்பினர் விரக் துலியா என்பவர் கூறுகையில்,

எங்கள் மாநாட்டை சுதந்திர தினத்தின் போது நடத்த திட்டமிட்டோம். இதன் மூலம் எங்கள் பிரச்சனையை அனைவரின் கவனத்துக்கும் கொண்டு வரலாம் என நம்புகிறோம்.

மூன்று நாள் நடக்கும் இந்த மாநாட்டில் சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களை சேர்ந்த 100 ஆண்கள் உரிமை அமைப்பிகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். அவர்கள் மனைவிகளால் பாதிக்கப்பட்ட சுமார் 30 ஆயிரம் கணவர்களின் பிரதிநிதிகளாக பங்கேற்கின்றனர்.

ஒரு வாரத்தில் 350 ஆண்களுக்கு பாதிப்பு...

ஆண்களின் உரிமைகளை காப்பதற்கு சுமார் 100 ஹெல்ப்லைன் எண்களை பயன்படுத்தி வருகிறோம். இந்த எண்களுக்கு வாரத்துக்கு 300 முதல் 350 போன்கள் வருகின்றன. எங்களது சங்கம் சார்பில் இது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லியை சந்தித்து மனு கொடுக்க இருக்கிறோம் என்றார்.

செய்தி: தட்ஸ்தமிழ்

பொங்கியெழும் கணவர்கள்!

"ரௌத்ரம்" - ஆம், அநியாயத்தை எதிர்த்துப் பொங்கியெழும் நியாயமான கோபம்!

இதைத்தான் காண்கிறோம் அவர்களின் கண்களில்!

ஆண்களை வதைக்கும் கொடுங்கோன்மை சட்டங்களைக் கைக்கொண்டு தொடுக்கப்படும் பொய் வழக்குகளில் சிக்கி, வயதான பெற்றோர்களுடன் சேர்ந்து கைதாகி சிறைக்குச் சென்று தங்கள் வாழ்வைத் தொலைத்து நிற்கும் பாதிக்கப்பட்ட கணவர்களின் கண்களில்!

ஆம். அவர்கள் முடிவெடுத்து விட்டனர். அவர்களுக்கு விடுதலை இல்லை. சுதந்திரம் இல்லை. ஒட்டுமொத்தமான ஆண்களுக்கும் அவர்களுடைய பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகளுக்கும் எதிராக தொடுக்கப்பட்டுள்ள ஒருதலைப்பட்சமான சட்டங்கள் களையப்படும் வரை. அவை 100% துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கெடுமதியும் கள்ளக்காதல் வெறியும் பிடித்து அலையும் பல பெண்கள், அவர்களுக்குத் துணை போகும் சில பெண்ணியவாதிகள், சில பணத்தாசை பிடித்த வக்கீல்கள் மற்றும் பல மேட்டுக்குடிப் பெண்டிரைக் கொண்ட பெண்கள் இயக்கக் கும்பல் - இவர்கள் ஒன்று சேர்ந்து பல லட்சங்களைக் கொள்ளையடிக்கும் (extortion and legal terrorism) இந்த நடைமுறை தடுக்கப்படும் வரை அவர்களுக்கு சுதந்திரம் இல்லை.


அதனால் வரும் ஆகஸ்டு 15-ம் நாள் சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் பங்கு கொள்ளப் போவதில்லை என்று இத்தகைய பாதிக்கப்பட்ட கணவர்கள் மற்றும்
அவர்களின் பெற்றோர், உடன்பிறப்புகளுக்காகப் பாடுபடும் இந்திய குடும்பப் பாதுகாப்பு இயக்கத்தினர் (Save Indian Family Foundation) முடிவெடுத்துள்ளனர்.

இந்தச் செய்தியை அவ்வியக்கத்தின் சென்னைப் பிரிவின் அமைப்பாளர் திரு. சுரேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.


நம் நாட்டின் பல இடங்களில் இத்தகைய கொடுங்கோன்மைச் சட்டங்களின் தவறான பயன்பட்டால் பொய் வழக்கு போடப்பட்டு சீரழியும் ஆண்கள் மற்றும் அவர்களுடைய் பெற்றோர் துயர் களைய இந்த இயக்கம் பாடுபடுகிறது. இத்தகைய சட்டங்களில் முக்கியமானவை இந்திய குற்றவியல் சட்டம் 498A பிரிவு (IPC Sec 498A) மற்றும் குடும்ப வன்முறைச் சட்டம் (Domestic Violence Act) ஆகும்.


திரு. சுரேஷ் மேலும் கூறுகிறார்:-


ஆண்களுக்கு எதிராக ஒருதலைப் பட்சமான சட்டங்கள் பல நம் நாட்டில் இருக்கின்றன. உதாரணமாக கள்ளக்காதலில் ஒரு ஆண் ஈடுபட்டால் அது குற்றம். அந்த ஆண் உடனே கைது செய்யப்படுவான். ஆனால் ஒரு பெண் சோரம் போனால் அது சட்டப்படி குற்றமில்லை. அதாவது உங்கள் மனைவி உங்கள் எதிரிலேயே இன்னொருவனுடன் கலவியில் ஈடுபட்டால் அந்த மனைவியின்மீது நடவடிக்கை எடுக்க இந்தியாவில் எந்த சட்டமும் இல்லை. ஆனால் கணவன் இது போல்
செய்தால் உடனே கைது. அவன்மேல் அத்துணை சட்டங்களும் பாயும். இதுதான் இந்திய சட்டங்களின் ஒருதலைப் பட்சமான கட்டமைப்பு (Blatant discrimination against men).


அதே போல் குடும்ப வன்முறைச் சட்டம் மனைவிக்கு எத்தகைய வன்முறையிலும் ஈடுபட சுதந்திரம் கொடுத்திருக்கிறது. ஏனெனில் கணவன் மட்டும்தான் வன்முறையில் ஈடுபடுவான் என்று கூறுகிறது அந்தச் சட்டம். அதன்படி கணவன் முகத்தைத் திருப்பிக் கொண்டாலோ, கேள்விக்கு பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தாலோ அது குற்றம்; அந்த மனைவி உடனே கிரிமினல் கோர்ட்டில் புகார் கொடுத்து அந்தக் கணவன்மீது நடவடிக்கை எடுக்க வைக்கலாம். ஆனால் அந்த மனைவி கணவனையும் அவனுடைய பெற்றோரையும் கண்டபடித் திட்டலாம், உணவு கொடுக்க மறுக்கலாம், அடிக்கலாம், அனைத்து வன்முறைகளிலும் ஈடுபடலாம். அவை குற்றமேயில்லை, இந்தச் சட்டத்தின்படி!



இப்படி ஒரு பாலருக்கு மட்டும் எத்தகைய குற்றமும் புரிய முழுச் சுதந்திரம் கொடுத்துவிட்டு, அனைத்து ஆண்களையும் அவர்கள் ஆணாகப் பிறந்ததாலேயே குற்றம் புரிந்தவர்களாகக் கருதப்படும் நிலை இந்தியாவில் இன்று இருக்கிறது (It is a crime to be born a male in India!).



இந்தச் சட்டங்களின் அடிப்படையில் ஆண்களுக்கு மட்டும் பொறுப்புக்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. அவனை விட்டுப் பிரிந்தபின்னும் அவனது முன்னாள் மனைவிக்கு கணவன் ஜீவனாம்சம் கொடுக்கவேண்டும். ஆம், விவாகரத்து பெற்ற பின்னும் கூட மாஜி மனைவிக்கு மெயிண்டெனென்ஸ் என்ற பெயரில் பணம் கொடுத்து அழவேண்டும்! ஆனால் மனைவிக்கு மட்டும் எவ்விதப் பொறுப்பும் கிடையாது, கடமையும் கிடையாது! மனைவிக்கு இருப்பது உரிமை மட்டுமே, கணவனுக்கு இருப்பதெல்லாம் கடமை மட்டுமே, எவ்வித உரிமையும் கிடையாது! என்ன அநியாயமய்யா இது! இப்படித்தான் இந்திய திருமணச் சட்டங்களும் குற்றவியல் பிரிவு 125 (Sec 125 of CrPC) போன்ற பல சட்டங்களும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.


பெற்றோர் இருவருடைய அரவணைப்பும் குழந்தைகளுக்குத் தேவை என்பதற்காகப் பாடுபடும் இயக்கமான "Children's Rights Iniative for Shared Parenting" (CRISP) என்னும் அமைப்பின் தலைவர் திரு. குமார் ஜாகீர்தார் (இவர்தான் கிரிகெட் விளையாட்டுக்காரர் அனில் கும்ப்ளேயின் மனைவியுடைய முந்தைய கணவர் - தான் பெற்ற குழந்தையை கண்ணால் காணும் உரிமையைக் கூட நீதிமன்றங்களின் மூலம் பெற இயலாமல் தவிப்பவர்) இன்னொரு மிகவும் பரபரப்பான சிக்கலைப் பற்றிச் சொல்கிறார்:


"இந்திய ஜனத்தொகையில் 40% குழந்தைகள். ஆனால் அந்தக் குழந்தைகளின் நலத்தை கவனிக்க ஒரு தனி அமைச்சகம் கிடையாது. குழந்தை என்றாலே பெண்கள்தான் அவர்களின் போஷகர்கள் என்று முடிவு செய்துவிடுகிறார்கள். தந்தைகளின் உரிமைகளைப் பற்றியோ, அந்தத் தந்தையின் அரவணைப்பு குழந்தைகளுக்கு கட்டாயம் தேவை என்பதைப் பற்றியோ இந்தச் சமுதாயமும் சட்டங்களை இயற்றுபவர்களும் சிந்திப்பதில்லை. பெண்களின் தேவைகளும் குழந்தைகளின் தேவைகளும் ஒன்றல்ல. விவகரத்து பெற்ற பெண் மறுமணம் செய்துகொள்வது அந்தப் பெண்ணின் நோக்கில் தேவையாக இருக்கலாம். ஆனால் அது அந்தக் குழந்தைக்கு நன்மை விளைவிக்கக் கூடியதா என்பதை எண்ணிப் பார்ப்பதில்லை. ஆனால் தம்பதிகள் பிரியும்போது குழந்தைகளை பெரும்பாலும் பிரிந்து சென்ற மனைவியின் வசம்தான் நீதிபதிகள் ஒப்படைக்கிறார்கள். அவர்கள் கணிப்பில் ஒட்டுமொத்த ஆண்கள் சமுதாயமும் கிரிமினல்கள், பொறுப்பற்றவர்கள் போலும்! இயற்கையின் நியதிப்படி ஒரு தந்தை தன் குழந்தைகளுக்கு அளிக்கும் பங்களிப்பை தாய் ஈடு செய்யமுடியாது. ஒரு குழந்தையின் வளர்ச்சியில் தந்தையின் பங்கு கணிசமானது. அது இந்தக் குழந்தைகளுக்கு மறுக்கப்படுகிறது."


இந்திய குடும்பப் பாதுகாப்பு இயக்கம் வரும் ஆகஸ்டு 15 அன்று மேற்கொள்ளப்போகும் நடவடிக்கைகள் பற்றி திரு. சுரேஷ் விளக்கினார்:


"அன்றைய தினம் காலையில் சென்னையில் நாங்கள் எங்கள் பிரச்னைகளைப் பற்றியும், இன்றைய சமூகத்தில் இத்தகைய ஆணெர்ப்புச் சட்டங்களால் நம் குடும்ப வாழ்வு முறையே எப்படிச் சிதறிப்போகின்றது என்பதைப் பற்றியும் இந்தச் சட்டங்களில் உடனடியாகத் திருத்தங்கள் செய்யவேண்டிய கட்டயம் பற்றியும் விளக்கும் துண்டுப் பிரசுரங்களை மெரீனா கடற்கரையில் வினியோகிக்கப் போகிறோம். மேலும் தமிழக ஆளுனர் அவர்களிடமும் சட்ட அமைச்சரிடமும் எங்கள் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் அளிக்க இருக்கிறோம்.


அன்றைய தினம் நாடு தழுவிய அளவில் எங்கள் போராட்டம் நிகழவிருக்கிறது. ஆகஸ்டு 15, 16 தேதிகளில் சிம்லாவில் நாட்டின் பல மாநிலங்களிலிருந்தும் இந்த இயக்கத்தின் தொடர்புள்ள 14 அரசு சாரா குழுமத்தினர் வந்து கூடி இரண்டாவது தேசிய மகாநாட்டை நடத்துகிறார்கள்."


இதுபற்றி Save Indian Family Foundation இயக்கத்தின் உறுப்பினர் திரு. விராக் அவர்கள் கூறுகிறார்:-


"இந்த அமைப்பின் முதல் மாநாடு கோவாவில் சென்ற ஆண்டு நடந்தது. இந்த ஆண்டின் மாநாட்டில் இந்த அமைப்பைச் சார்ந்த 14 அரசு சாரா இயக்கங்களிலிருந்து நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் சுமார் 100 செயல் வீரர்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். எங்கள் வாழ்வாதாரங்கள்யும், பெற்றோர் நலத்தையும் பாதிக்கும் இந்த மாபெரும் பிரச்னைகளை நாங்கள் எதிர்கொள்வதற்கான செயல் திட்டங்கள் பற்றியும், ஆண்கள் நலத்திற்காக ஒரு பிரத்தியேக ஆணையம் மற்றும் அமைச்சகம் - National Commission for Men and a seperate ministry for men's welfare (பெண்களுக்கு இருப்பது போலவே) கொண்டு வரவேண்டிய கட்டாயத்தை உணர்த்துவது பற்றியும் விவாதித்து செயல் திட்டங்களை வகுத்து முடிவெடுக்க இருக்கிறோம்.
இந்த மாநாட்டிற்கு சென்னையிலிருந்து 9 உறுப்பினர்கள் கலந்து கொள்ள விருக்கிறார்கள்.


வெகு நாட்களாக தங்கள் மேல் சுமத்தப்படும் கொடுமைகளையும் சித்திரவதைகளையும் மௌனமாக தாங்கிக் கொண்டிருந்த ஆண்கள் கடைசியில் இனிப் பொறுக்கமுடியாது என்று பொங்கியெழுந்துவிட்டனர்!

(செய்தி மற்றும் படம் உதவி - டைம்ஸ் ஆஃப் இந்தியா)

தீவிரமாகும் விவாகரத்து நோய்

ஜூலை 27,2009: செய்தி - தினமலர்

பாரம்பரிய பெருமையும், கலாசார பின்னணியும் கொண்ட தமிழகத்தில் ஆண்டுதோறும், 4,000த்துக்கும் மேற்பட்ட விவாகரத்து வழக்குகள் தாக்கலாகின்றன. இதில், ஆண்டுக்கு 20 சதவீத, "வளர்ச்சி' இருப்பது, கூடுதல் வேதனை. .

குடும்பத்தில், கணவன் - மனைவிக்கிடையே ஏற்படும் பிரச்னைகளை, உறவினர்களால் தீர்க்க முடியாதபட்சத்தில், போலீஸ் துறையை அணுகுகின்றனர். அங்கு சமரச முயற்சியில் ஈடுபடும் போலீசாரின் முயற்சிகளும் தோல்வியடைந்தால், பிரச்னை கோர்ட்டுக்குச் செல்கிறது.இப்படி குடும்பம், நண்பர்கள், சமூகம் என எல்லாராலும் தீர்க்க முடியாமல், குடும்ப நல கோர்ட்டில் வழக்கு பதிவு செய்ய வரும் தம்பதியர்களுக்கு, கோர்ட்டில் கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது. அந்த முயற்சியும் தோல்வியடையும்போது, வழக்கைச் சந்திக்கின்றனர்.சில வழக்குகளில், வக்கீல்கள் சொன்னபடி தம்பதியர்கள் சொல்வதாலும், அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகளாலும், தங்களது குடும்ப விவகாரங்கள் அனைத்தையும் வெளியே சொல்ல வேண்டிய நிலைக்கு தம்பதிகள் ஆளாகின்றனர்; கூடவே வழக்கையும் சந்திக்கின்றனர்.சென்னை குடும்ப நல கோர்ட்டில், 2006ம் ஆண்டில் மட்டும் 3,374 வழக்குகள், 2007ம் ஆண்டின் முடிவில் 3,874 வழக்குகள், 2008ம் ஆண்டில் 4,125 வழக்குகள் என விவாகரத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் அதிகரித்து கொண்டே போகின்றன. ஆண்டிற்கு 20 சதவீதம் அதிகரிக்கிறது.சென்னையில் மட்டும் திருமண முறிவு 5 சதவீதமாக இருந்த நிலை மாறி, சில ஆண்டுகளில் 12 முதல் 15 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது.

இந்த வழக்குகளில் நடிகர் பிரசாந்த் முதல் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நடிகர் மற்றும் நடிகைகளும் அடங்குவர். இப்படி ஏழை, பணக்காரன், கூட்டுக் குடும்பம், தனிக்குடித்தனம் என்று எல்லாரையும் எளிதில் தாக்கும் நோயாகி விட்டது, விவாகரத்து.

இது குறித்து, சீனியர் வக்கீல் ஒருவர் கூறியதாவது: முன்பெல்லாம் பெண்கள் அறியாமையால், கண்ணைக் கட்டிக்கொண்டு வாழ்ந்தனர். அப்போது கூட தம்பதியருக்கிடையே விவாகரத்து பெரிதாக காணவில்லை. தற்போது பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்துள்ள இந்த காலகட்டத்தில் தான், விவாகரத்துகளும் பெருகியுள்ளன. பொருளாதார பாதிப்பும் சில விவாகரத்துகளுக்கு காரணமாய் அமைந்துவிடுகிறது.கூட்டுக் குடும்பங்கள் குறைந்து, தனிக்குடித்தனம் அதிகமாகி இருப்பதும் ஒரு காரணம் என்று சொல்கிற போதே, சில பெற்றோர்களாலும் விவாகரத்துகள் வருகின்றன என்பதையும், ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

குடும்பத்தில் கணவன் - மனைவிக்கிடையே, "தான்' என்கிற எண்ணத்தைக் (ஈகோ) குறைத்தாலே பல விவாகரத்து வழக்குகளை தவிர்த்துவிடலாம். இதேபோல, ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்கும் தன்மை, குழந்தைகளின் எதிர்காலம், திருமணம் என்ற பந்தத்திற்கு மரியாதை கொடுத்தல் போன்றவற்றை இருபாலரும் கடைபிடித்தால், விவாகரத்து பிரச்னையை குறைக்கலாம். முக்கியமாக கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.

மொபைல் போன் பேச்சு: விவாகரத்து முடிச்சு!:

சமரச முயற்சிகள் தோல்வியடைவது பற்றியும், இந்திய திருமணச் சட்டங்கள் கூறுவது குறித்தும் ஸ்ரீரக்ஷா ஆலோசனை மற்றும் மத்தியஸ்த மையத்தின் கவுரவத் தலைவரும் வக்கீலுமான ஆதிலட்சுமி லோகமூர்த்தி கூறியதாவது:

குடும்பத்தில் எந்தப் பிரச்னையாக இருந்தாலும், அதை சரிசெய்ய முயற்சிப்பதே எங்கள் நிறுவனத்தின் பணி. குறிப்பாக, விவாகரத்து சம்பந்தப் பட்ட வழக்குகளில் கணவன் - மனைவி இடையே சமரச முயற்சியாக கவுன்சிலிங் கொடுக்கிறோம். அதன் பிறகும் எங்களுக்கு விவாகரத்து தான் வேண்டும் என்கிறபோது, அவர்கள் வழக்கைச் சந்திக்கின்றனர்.இந்திய திருமணச் சட்டங்களில் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் என ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனியே சட்டங்கள் இயற்றியுள்ளனர். கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு, சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன.

பிரிந்து வாழும் இருவரில், ஒருவர் சேர்ந்து வாழ விருப்பப்பட்டாலும், திருமண முறிவு என்றில்லாமல், சமுதாயத்தில் பிரிந்து மட்டும் வாழ விரும்புகிறோம் என்று விருப்பம் தெரிவித்தாலும், விவாகரத்து தேவை என்பவர்களுக்கும் சட்டங்களில் தனியே பிரிவுகள் உள்ளன.இன்றைய பரபரப்பான கால சூழ்நிலையில், குடும்பங்களில் கணவனோ, மனைவியோ தொடர்ந்து, "டிவி' பார்த்துக்கொண்டும், பல மணி நேரம் மொபைல் போனில் பேசிக்கொண்டும் இருந்துவிட்டு, குடும்பத்தைக் கவனிக்க மறந்துவிடுகின்றனர். இங்கே ஆரம்பிக்கும் மனதளவிலான பிரச்னை, பின் விஸ்வரூபம் எடுத்து விவாகரத்தில் முடிகிறது.இவ்வாறு ஆதிலட்சுமி கூறினார்.
=====================================

என் கருத்து:-

இவர்கள் சொல்லாமல் விட்ட முக்கிய காரணி ஒன்று உள்ளது. அது என்ன என்பது உங்களுக்கு முழுமையகத் தெரிந்திருக்கும். அதை சுட்டிக் காண்பிக்க இன்னொரு செய்தியை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்:-

----------------

பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லாமல் புத்தகப் பைகளுடன் கன்னியாகுமரியில் சுற்றும் காதல் ஜோடிகள் - போலீசார் எச்சரித்து அனுப்புகின்றனர்

கன்னியாகுமரி, ஜுலை.24- 2009. செய்தி: தினத்தந்தி

கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் மத்தியில் தற்போது காதல்ஜோடிகளின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. அதிலும் பள்ளி-கல்லூரி காதல் ஜோடிகள்தான் அதிகம் என்பது அதிர்ச்சிதரும் தகவலாக உள்ளது.

நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் புத்தக பைகளையும் சுமந்துகொண்டு கன்னியாகுமரியில் காதல்ஜோடியாக வலம் வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் என்றால், மற்ற நாட்களில் மாணவ-மாணவிகள்தான் ஜோடியாக வலம் வருகின்றனர். அவர்கள் வீவ் டவர், காந்தி மண்டபம், சன்செட்பாய்ண்ட், ஆராட்டு மண்டபம் உள்ளிட்ட ஆள்நடமாட்டம் குறைந்த பகுதிகளில் ஒதுக்குப்புறமாக சென்று அமர்ந்துகொள்கின்றனர்.

நேரம் செல்லச் செல்ல காதல்ஜோடியினர் எல்லை மீறும் அவலமும் அரங்கேறி வருகிறது. எனவே, இதை பார்த்து ரசிப்பதற்காக சுற்றுப்புற பகுதியை சேர்ந்த பலரும் கன்னியாகுமரிக்கு வரும் அவலநிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, காதல்ஜோடிகள் அத்துமீறுவதை தடுக்க கன்னியாகுமரி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தினமும் பள்ளி-கல்லூரி காதல்ஜோடியினரை பிடித்து எச்சரித்து அனுப்பி வருகின்றனர். இருப்பினும் காதல் ஜோடிகளின் வருகை குறைந்தபாடில்லை.

498A கூட செக்ஸ் கொடுமையும் சேர்த்துப் போடுவோம்!

முதலில் இந்தச் செய்தியை முழுதும் வாசியுங்கள்!
---------------------------

ஈரோடு, ஜுலை.16- 2009. செய்தி - தினத்தந்தி

செக்ஸ் கொடுமை செய்யும் கணவரின் அண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கிராம மக்களுடன் வந்த பட்டதாரிப்பெண், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் புகார் செய்தார்.

ஈரோடு நாதகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் சத்தியப்பிரியா (வயது 24). எம்.எஸ்சி. பட்டதாரி. இவர் தனது பெற்றோர் சந்திரசேகர்-வளர்மதி, எம்.எஸ்.மங்கலம் பஞ்சாயத்து தலைவர் குமரேசன் மற்றும் கிராம மக்கள் நூற்றுக்கணக்கானவர்களுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புகார் கொடுக்க வந்தார். இதனால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு பரபரப்பான சூழ்நிலை உருவானது. இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு அவிநாஷ்குமாரை நேரில் சந்தித்து புகார் மனுவை கொடுக்க சத்தியப்பிரியாவுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

அதன்பின்னர் அவர் போலீஸ் சூப்பிரண்டை நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்தார்.

புகார் மனு குறித்து சத்தியப்பிரியா நிருபர்களிடம் கண்ணீர் மல்க கூறியதாவது (கண்ணீர் பெண்களுக்கு ஒரு கைவந்த கலை; அது ஒரு சிறந்த ஆயுதம். அதை வைத்து யாரை வேண்டுமானாலும் வீழ்த்தலாம்!):-

எனது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் நாதகவுண்டன்பாளையம். எனக்கும் முள்ளாம்பரப்பு வீரப்பம்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் மகேஷ் (32) என்பவருக்கும் கடந்த 25-5-2008 அன்று திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது 50 பவுன் நகையும், ரூ.50 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட்டது.
கணவர் மகேஷ், மாமனார் ஆறுமுகம், மாமியார் தமிழரசி மற்றும் கணவரின் அண்ணன் தியாகு என்கிற தியாகராஜன் (37) ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தேன். தியாகராஜனுக்கு திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளனர். கணவர் வீட்டார் அனைவருமே சாக்கு வியாபாரம் செய்து வருகிறார்கள்.

என் கணவர் எப்போதும் தனது தாயார், அண்ணன் பேச்சை கேட்டுத்தான் நடப்பார். தாயார் இருக்கும்போது என்னிடம் அவர் சரியாக கூட பேசமாட்டார். திருமணம் ஆன முதல் 4 மாதங்கள்தான் அவருடன் சந்தோசமாக குடும்பம் நடத்தினேன். இந்த நிலையில் நான் கருவுற்றேன். அந்த சந்தோஷம் நிலைப்பதற்குள் எதிர்பாராதவிதமாக கரு கலைந்து விட்டது.

இதற்கிடையில் தியாகராஜன் என்னிடம் தவறாக நடக்க முயன்றார். அடிக்கடி செக்ஸ் கொடுமை செய்தார். இது குறித்து என் கணவரிடம் கூறினேன். ஆனால் அவர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. கூட்டுக்குடும்பம் என்றால் அப்படி, இப்படி இருக்கத்தான் செய்யும் என்றார்.

பின்னர் தனியாக தொழில் தொடங்க வேண்டும். உன் தந்தையிடம் சென்று ரூ.1 லட்சம் வாங்கி வா என்று கட்டாயப்படுத்தினார். நானும் என் தந்தையிடம் கேட்டேன். ஆனால் அவ்வளவு பணம் கொடுக்க வசதி இல்லை என்று என் தந்தை கூறிவிட்டார். மேலும் எங்களுக்கு செட்டிப்பாளையத்தில் சொந்தமாக உள்ள ரூ.25 லட்சம் மதிப்பிலான காலி இடத்தை தன் பெயரில் எழுதி தரும்படி கேட்டு அடித்து சித்ரவதை செய்தார்.
கணவரின் வீட்டாரும், அந்த நிலத்தை எழுதி வாங்கி வந்தால்தான் அவருடன் சேர்ந்து குடும்பம் நடத்த விடுவோம். இல்லை என்றால் உன் பெற்றோர் வீட்டுக்கே துரத்தி விடுவோம் என்று மிரட்டினார். கணவரும் அடிக்கடி பணம் வாங்கி வா, அல்லது நிலத்தை எழுதி வாங்கி வா என்று கொடுமைப்படுத்தினார்.

அதன்பின்னர் எனது நகைகளை பிடுங்கிக்கொண்டு, வீட்டை விட்டு விரட்டிவிட்டனர். இனிமேலும் இவருடன் வாழ முடியாது என்று முடிவு செய்து என் பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டேன். எனது நிலை குறித்து பெற்றோரிடம் கூறினேன்.

அதைத்தொடர்ந்து ஊர் பஞ்சாயத்து தலைவர் குமரேசன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. என் கணவர் மகேஷை அழைத்து பேசினார்கள். அவரிடம் ஊர்க்காரர்கள் பலரும் பேசினார்கள்.

அதைத்தொடர்ந்து, ஆவணி மாதம் வந்து என்னை அழைத்து செல்வதாக உறுதி அளித்துச்சென்றார். ஆனால் அதற்குள் விவாகரத்து நோட்டீசு அனுப்பி விட்டார்.

இதனால் நானும் என் குடும்பத்தாரும் அதிர்ச்சி அடைந்தோம். இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் புகார் மனு ஒன்றை கொடுத்து இருக்கிறேன். அதில் எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும். வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்த என் கணவர், மாமனார், மாமியார், கணவரின் அண்ணன் தியாகராஜன் ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அவரும், என் கணவரையும், அவரது குடும்பத்தையும் அழைத்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

என் கணவர் மட்டும் என்னுடன் தனியாக குடும்பம் நடத்த வந்தால் அவரை என்னால் திருத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு சத்தியப்பியா கூறினார்.

இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் கேட்டபோது, சத்தியப்பிரிவின் புகார் மனுவை ஈரோடு அனைத்து மகளிர்போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி இருக்கிறேன். சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர், மாமனார், மாமியாரை அழைத்து வந்து டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் விசாரணை நடத்த உத்தரவிட்டு இருக்கிறேன். அதன்பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
------------

முன்னுக்குப்பின் முரணான புகார்கள். கடைசியில் விஷயம் என்னவென்றால், 498ஏ சட்டத்தைக் கையிலெடுத்து பயமுறுத்தி கூட்டுக் குடும்பத்திலிருந்து கணவனைப் பிரித்து தனிக்குடுத்தனத்திற்கு வரவேண்டும்; அங்கு தன் ஆட்சி நடக்கவேண்டும். இதற்காக எந்தவித செக்ஸ் கொடுமைப் புகாரையும் ஜோடனை செய்து பதிவு செய்ய இக்காலப் பெண்கள் தயார்.

இதெல்லாம் என்ன ஜுஜிபி!

3 மாதக் குழந்தையும், 3 வயதுப் பையனும் வரதட்சணைக் கொடுமை செய்தனர், தன் கையையே தூக்க சக்தியில்லாத 80 வயது மாமனார் என் கையைப் பிடித்து இழுத்தார் என்றெல்லாம் பொய் வழக்கு போட்டு, யாதொரு விசாரணையுமின்றி மேலும் இது இயற்கைக்கு முரணாக, சாத்தியமில்லாத புகாராக இருக்கிறதே என்ற சிந்தனை கூட இல்லாமல் அவர்கள் கைது செய்யப்பட்ட நிகழ்வுகள் அநேகம்.

Sec 498A of IPC நம் நாட்டிற்கு பெண்ணிய வியாதிகள் அளித்துள்ள வரப்பிரசாதம். இதை கையிலெடுத்துக் கொண்டு கீழ்த்தரமான புத்தி கொண்ட மனைவிமார்களும் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து சில கெடுமதி வக்கீல்களும் அடிக்கிறார்கள் பகல் கொள்ளை (Every 498A case ends in outright extortion). இதை “சட்டபூர்வமான பயங்கரவாதம்” (Legal terrorism) என்று வர்ணித்திருக்கிறார் ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி. என்ன சொன்னால் என்ன, தினந்தோரும் பல அப்பாவிகள் இந்தக் கொடுங்கோன்மைச் சட்டத்திற்கு தொடர்ந்து பலியாகி வருகின்றனர் என்பதுதான் நிதர்சனம்.

ஆகையால் இந்திய ஆண்கள் இத்தகைய 498A of IPC மற்றும் (வன்முறை என்பது ஆண்தான் செய்வான், பெண் வன்முறையே செய்யமாட்டள் என்று வரையறுத்திருக்கும்) குடும்ப வன்முறைச் சட்டங்கள் திருத்தப்படும் வரை அல்லது நீக்கப்படும் வரை திருமணம் என்னும் புதைகுழியில் விழாமல் இருத்தல் நலம் - அவர்களுக்கும் அவர்தம் பெற்றோருக்கும்!

விட்டது சனி!

இது எப்படி இருக்கு!

அந்தியூர் அருகே கள்ளக்காதலனுடன் மனைவியை சேர்த்து வைத்த கணவன். போலீஸ் முன்னிலையில் சமரசம். (வரதட்சணை கேசு போடாமல் இத்தோடு விட்டார்களே என்று புருஷன் வெட்டிவிட்டு ஓடிவிட்டான் போல!)

அந்தியூர், ஜுன்.26- 2009. செய்தி - தினத்தந்தி

அந்தியூர் அருகே கள்ளக்காதலனுடன் மனைவியை கணவர் சேர்த்து வைத்தார். போலீசார் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த சமரசம் ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சத்தியா நகரைச் சேர்ந்தவர் பழனியம்மாள். இவரது மகள் நளினி(26). இவருக்கும், அதேபகுதியைச் சேர்ந்த கார்த்திக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

கணவனுக்கும், மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக நளினி கணவரை பிரிந்து அந்தியூர் சத்தியா நகரில் தனது தாயார் பழனியம்மாள் வீட்டில் வசித்து வருகிறார். அந்தப்பகுதியில் அவர் கூலி வேலைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் நளினிக்கும், அங்குள்ள ஒரு டீக்கடையில் வேலை செய்து வந்த மாணிக்கம் (வயது 26) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது அவர்களிடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவரும் ஊரைவிட்டு ஓடி விட்டனர்.

இது குறித்து பழனியம்மாள் அந்தியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் ஊரை விட்டு ஓடிய மாணிக்கமும், நளினியும் மீண்டும் ஊருக்கு திரும்பி வந்தனர்.

இருவரும் அந்தியூர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அங்கு பழனியம்மாளும், நளினியின் முதல் கணவர் கார்த்தியும் வந்தனர். போலீசார் அவர்களை அழைத்து பேசினர்.
அப்போது நளினி தான் வாழ்ந்தால் மாணிக்கத்துடன்தான் வாழ்வேன் என்றும், இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

இதனால் தனக்கு திருமணத்தின்போது அணிவித்த கால்கொலுசு மற்றும் நகைகளை நளினி தனது தாயாரிடம் ஒப்படைத்தார்.

நளினியை அவரது காதலன் மாணிக்கத்துடன் அனுப்பி வைக்க கார்த்தியும் சம்மதித்தார். பின்னர் அனைவரது ஆசியுடனும் மாணிக்கமும், நளினியும் அங்கிருந்து விடைபெற்றுச் சென்றனர்.

கணவன் = இலவச ஏ.டி.எம் மெஷின்

மே 06,2009: தினமலர்

மும்பையில் ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரியும், விமானப்பணி பெண்ணும் கடந்த 95ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

ஒன்றரை ஆண்டு காலம் சேர்ந்து வாழ்ந்த இவர்கள், சில காரணங்களால் விவாகரத்து செய்ய முடிவு செய்தனர். கடந்த 97ம் ஆண்டு விவாகரத்து கோரி மனு செய்யப்பட்டது. மாதம் இரண்டு லட்ச ரூபாய் சம்பாதிக்கும் கணவரிடமிருந்து மாதம் 20 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்ச தொகையை பெற்று தரும்படி அந்த பெண் கோரினார்.

இதை எதிர்த்து கணவர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. "பேஷன் டிசைன் படிப்பில் டிப்ளமோ வாங்கியுள்ள அந்த பெண்ணுக்கு கை நிறைய சம்பளத்தில், நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன.எனவே, அவருக்கு காலம் முழுக்க ஜீவனாம்சத்தை தர முடியாது' என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை பரிசீலனை செய்த நீதிபதிகள், ”தொழில் கல்வி படித்த நீங்கள் உங்கள் சொந்த காலில் நிற்க முயற்சி செய்ய வேண்டும். கணவரிடமிருந்து நீண்ட காலத்துக்கு ஜீவனாம்சத்தை நம்பியிருக்கக்கூடாது”, என அறிவுறுத்தினர்.

மாதம் 20 ஆயிரம் ரூபாயோ அல்லது மொத்தமாக 20 லட்சம் ரூபாயோ கொடுக்கும்படி சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பயங்கரவாதிகளிடமிருந்து தப்பிய பிரசாந்த்

Actor Prashanth - Click for bigger image
”சினிமாவில் மீண்டும் சாதிப்பேன்” - வழக்கில் மீண்ட பிரசாந்த் உற்சாகம்
மே 02,2009, தினமலர் - சென்னை:

"வரதட்சணை கொடுமை செய்தோமென்று சட்டத்தை தங்களுக்குச் சாதகமாகவும், தவறாகவும் பயன்படுத்திக்கொள்ள நினைத்த கிரகலட்சுமியின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டு, இறுதியில் நீதி வென்றுள்ளது,'' என நடிகர் பிரசாந்த் கூறினார்.

(டோண்டுவின் கவனத்திற்கு: இவர்மேல் எய்யப்பட்ட சட்டப் பிரிவுகள் Sec 498A IPC மற்றும் Sec 3&4 of Dowry Prohibition Act. It is also learnt that Sec 406 IPC - Criminal Breach of trust - had been added)

அவர் கூறியதாவது:

நான்கு ஆண்டு போராட்டத்திற்குப் பிறகு, எங்களது திருமணம் செல்லாது என குடும்ப நல கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது நிம்மதி அளிக்கிறது.

திருமணம் ஆன பின், மூன்றே மாதத்தில் கிரகலட்சுமி என்னை விட்டுப் பிரிந்து சென்றார். பிறகு, வேணுபிரசாத் என்பவரை ஏற்கனவே திருமணம் செய்து, நான்கு ஆண்டு குடும்பம் நடத்தியவர் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். கிரகலட்சுமியைப் பொறுத்தவரை வாழ்க்கையை விட பணம் தான் நோக்கமாக இருந்தது.

வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்ட நிலைமை, யாருக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது. கிரகலட்சுமியின் குடும்பமே சூதாட்டக் கிளப்பில் பங்கு கொள்பவர்கள். வரதட்சணை கொடுமை செய்தோமென்று, சட்டத்தை அவர்கள் தங்களுக்குச் சாதகமாகவும், தவறாகவும் பயன்படுத்திக் கொள்ள முயற்சித்தனர். இறுதியில் நீதி வென்றுவிட்டது. எங்களுக்கு எந்த பழிவாங்கும் எண்ணமும் கிடையாது.

எங்களுக்குப் பிறந்த குழந்தை தற்போது சட்டரீதியாக தாயிடம் இருக்க வேண்டும் என்பதால், எதிர்காலங்களில் மீட்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

குடும்ப வாழ்க்கையில், பிடிக்கவில்லையென்றால் பிரிந்துவிடுவது தான் நல்லது என்பதை தெரிந்துகொண்டேன். கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருந்த காலங்களில், நான் படப்பிடிப்பில் கவனம் செலுத்த முடியாமல், மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்தேன். அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க இருப்பதால், திருமணத்தைப் பற்றி யோசிக்கவில்லை. அது காதல் திருமணமாக இருக்குமா என்று தெரியவில்லை. இனி மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி சாதிப்பேன். இவ்வாறு பிரசாந்த் கூறினார். தந்தை தியாகராஜன் உடனிருந்தார்.

பலே ரம்யா!

இதுபோல் இனிமேல் தினமும் நடக்கும். ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கும். தவாறான அணுகுமுறையில் இயற்றப்பட்டு, துஷ்பிரயோகம் செய்வதற்கென்றே பிறப்பிக்கப்பட்ட முட்டாள்தனமான 498A, DV Act போன்ற ஆணழிப்புச் சட்டங்கள் திருத்தி யமைக்கப்படவில்லை யெனில், குடும்ப வாழ்க்கை என்பதே கேலிக்கூத்தாகி, அனைத்து ஆண்களும் அவர்களின் பெற்றோரும் கம்பி எண்ணிக் கொண்டிருக்க வேண்டியதுதான்!


இப்போது இந்த செய்தியை வாசியுங்கள்:-


பழநி அருகே உள்ள மானூரைச் சேர்ந்தவர் ரம்யா (26). திருமணமானவர். கணவனை விட்டு பிரிந்து பெற்றோருடன் இருந்த இவர் இதே ஊரை சேர்ந்த செந்தில்குமாரை காதலித்துள்ளார். தன்னை திருமணம் செய்ய செந்தில் மறுப்பதாக அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். கைதான செந்தில் ஜாமீனில் உள்ளார்.

ஏப்., 29ல் தன்னை காதலனுடன் சேர்த்து வைக்கக் கோரி ரம்யா மானூரில் ரோட்டில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். டி.எஸ்.பி., விஜய ரகுநாதனிடமும் முறையிட்டுள்ளார். டி.எஸ்.பி., கூறுகையில், "இந்து திருமண சட்டப்படி இப்பிரச்னை கையாளப்பட வேண்டியுள்ளது. முதல் கணவரிடம் இருந்து சட்டப்படி ரம்யா விவாகரத்து பெறவில்லை. எனவே, செந்தில்குமாருடன் நாங்கள் திருமணம் செய்து வைக்க இயலாது. அவருக்கு மனநல ஆலோசனை தர முடிவு செய்துள்ளோம். இரு தரப்பு வக்கீல்கள் முன்னிலையில் இப்பிரச்னை குறித்து இன்று பேச உள்ளோம்,' என்றார்.


சரி, பிறகு ஏன் அந்த செந்திலைக் கைது செய்தனர்?


இப்போது புரிகிறதா, இத்தகைய சட்டங்கள், சமுதாயம், காவல் துறை மற்றும் நீதிமன்றங்களின் அணுகுமுறைகள் இவற்றில் உள்ள குறைபாடுகள்!


இதுபோன்ற கொடுங்கோன்மை சட்டங்கள் டோண்டு, செல்வன் போன்றவர்களைத் தீண்டும் காலம் வரும்போது அவர்கள் உணர்வார்கள்!


செய்தி: தினமலர் மே 01,2009

பூஜாவின் தெய்வீகக் காதல்

முன்பு ஜெயகாந்தன் எழுதிய கதையொன்றில் இது போன்ற பதிவிரதை சொல்வாள், “அவன் பூட்டான்; இவன் வண்ட்டான்” என்று. அதுபோல் உள்ளாடை மாற்றுவதுபோன்று கணவனை மாற்றும் காரிகைகள் நிறைந்த உலகமடா இது. அவள் இருந்தும் கெடுப்பாள்; செத்தும் கெடுப்பாள்!

இந்த உன்னதக் காதல் கதையைப் படியுங்கள். அந்தக் கணவன் கதை ஒரு பரிதாபம். இந்தக் காதலன் கதை ஒரு கந்தல். வாழ்க பெண்ணியம். வளர்க பெண்கள் விடுதலை! வீழ்க ஆண்குலம்!

பூந்தமல்லி, ஏப்.19- 2009. காதலன் கை விட்டதால் துணை நடிகை பூஜா (தெனாவெட்டு, அதிசயமணல் மாதா உள்பட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.) தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதையொட்டி அவருடைய காதலனை போலீசார் கைது செய்தனர்.


சென்னையை அடுத்த போரூர் காரம்பாக்கம் பொன்னி நகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 50). இவர் ஷேர்-ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருடைய மனைவி காமாட்சி (45). இவர்களுடைய மகள்தான் துணை நடிகை பூஜா (25).

இவருக்கும் திலீப் குமார் (25) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஜெயலட்சுமி (3) என்ற 3 வயது பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் பூஜாவுக்கும், திலீப் குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு (இதற்க்குக் காரணம் மனைவியினுடைய பழைய காதலுடன் அவள் தொடர்ந்த கள்ளத் தொடர்பு) 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறார்கள். மேலும் திலீப் குமார் மனைவி வேண்டாம் என்று எழுதி கொடுத்து விட்டார். (நெலைமைய்யா!)

இந்த நிலையில் பூஜாவின் பழைய காதலன் நீலாங்கரையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜெகன் (25) அடிக்கடி பூஜாவை சந்தித்து தனது காதலை புதுப்பித்தார்.

இதைத்தொடர்ந்து பூஜா கடந்த 15 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு புறப்பட்டு ஜெகன் வீட்டுக்கு சென்றார். அவரை அழைத்துக் கொண்டு புதுக்கோடைக்கு சென்றார்.

மகள் மாயமானதால் பூஜாவின் தாயார் காமாட்சி வளசரவாக்கம் போலீசில் மகளை காணவில்லை என்று வளசரவாக்கம் போலீசில் புகார் செய்தார். புகாரில் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருடன் பூஜா ஓடி சென்றதாக கூறி இருந்தார். இது குறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே, பூஜாவின் காதலன் ஜெகன் வளசரவாக்கம் போலீசில் சரண் அடைந்தார். அப்போது அவர் போலீசாரிடம், ``பூஜா எனது காதலி; நானும், பூஜாவும் புதுக்கோட்டைக்கு சென்று நண்பர் வீட்டில் தங்கி விட்டோம். போலீசார் தேடுவதை அறிந்து போலீசில் சரண் அடைந்தேன்'' என்றார்.

அதன் பிறகு போலீசார் புதுக்கோட்டைக்கு சென்று பூஜாவை வளசரவாக்கத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது பூஜா போலீசாரிடம் கூறியதாவது:-

நானும், ஆட்டோ டிரைவர் ஜெகனும் உயிருக்கு உயிராக காதலித்தோம். இதையும் மீறி என்னை திலீப் குமாருக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார்கள். (இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்து அதற்கு 3 வயதாகிறது) திருமணத்திற்கு பிறகும் ஜெகனை காதலித்தேன். இதை அறிந்த திலீப் குமார் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் நான் என்னை திருமணம் செய்யுமாறு ஜெகனை வற்புறுத்தினேன். அவரும் என்னை கடந்த சில நாட்களுக்கு முன்பு அழைத்து சென்று எனக்கு தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். இவ்வாறு பூஜா கூறினார்.

ஆனால் ஜெகன் போலீசாரிடம் கூறுகையில், ``நான் தாலி கட்டியது உண்மைதான். ஆனால் பூஜாவுடன் குடும்பம் நடத்த முடியாது. அவருக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. இதனால் எனது பெற்றோர் ஏற்க மறுக்கிறார்கள்'' என்று தெரிவித்தார். ஆனால் பூஜா வாழ்ந்தால் ஜெகனுடன் தான் வாழ்வேன் என்று அடம் பிடித்தார். இதனால் உறவினர் மூலம் பிரச்சினைகளை தீர்த்து கொள்கிறோம் என்று எழுதி கொடுத்து விட்டு சென்று விட்டனர்.

இப்போது ஜெகனுடன் தன்னைச் சேர்த்து வைக்குமாறு போலீசாரிடம் கேட்டாராம் பூஜா. ஆனால் ஜெகன் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. 'உல்லாசமாக இருக்கலாம் என்பதால்தான் நான் பூஜாவுடன் புதுக்கோட்டைக்குச் சென்றேன். ஆனால் அவரைக் கல்யாணம் செய்வதெல்லாம் முடியாத காரியம். எனக்கு அதில் இஷ்டமில்லை. மீறி கட்டாயப்படுத்தினால் தற்கொலை செய்து கொள்வேன். எனக்கு ஏற்கெனவே மனைவி குழந்தைகள் உள்ளனர்' என கண்ணீர் விட்டு அழுதுள்ளார் ஜெகன்.

தலையிலடித்துக் கொண்ட போலீஸ், ஜெகனை எச்சரித்து அனுப்பியது. பூஜாவுக்கும், 'தயவு செய்து இந்தமாதிரி புகாரில் எல்லாம் சிக்க வேண்டாம்' என புத்திமதி கூறி அனுப்பி வைத்தது.

தாயாருடன் வீடு திரும்பிய பூஜா, ஜெகனை எப்படியாவது திருமணத்திற்கு சம்மதிக்க வேண்டும் என முடிவு செய்து அவருடன் போனில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால் ஜெகன் போனை எடுக்கவே இல்லை என்று தெரிகிறது.இதனால் மனம் உடைந்த பூஜா நேற்று இரவு தூக்க மாத்திரை உள்பட ஏகப்பட்ட மாத்திரைகளை மொத்தமாக விழுங்கி விட்டார்.

இதனால் மயங்கி கிடந்த பூஜாவை முகலிவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பூஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் அவருக்கு இன்னும் நினைவு திரும்பவில்லை. இது குறித்த தகவல் வளசரவாக்கம் போலீசாருக்கு தாமதமாக கிடைத்தது.

உடனே ஜெகனை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.