Showing posts with label குடும்வ வன்முறை. Show all posts
Showing posts with label குடும்வ வன்முறை. Show all posts

நிர்க்கதியான குழந்தைகள்

முதலில் பரிதாபமான குழந்தைகள் பற்றிய ஒரு செய்தி:

மனைவி அடித்து கொலை: கணவன் கைது

மேடவாக்கம் : 14-10-2009. செய்தி: தினமலர்

பெரும்பாக்கத்தில், குடும்பத் தகராறு காரணமாக, மனைவியை கட்டையால் அடித்துக் கொலை செய்த கணவனை, போலீசார் கைது செய்தனர்.

பெரும்பாக்கம், கலைஞர் நகர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் செல்வம்(38) கொத்தனார். இவரின் மனைவி ஜோதி(35). இவர்களுக்கு ஸ்ரீதர்(12), சீதாராமன் (9) மற்றும் ஸ்ரீராம்(5) ஆகிய மகன்கள் உள்ளனர். செல்வத்திற்கு குடி பழக்கம் உண்டு. வேலை பார்த்து சம்பாதிக்கும் பணத்தை குடித்து செலவழிப்பதால், கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டுப் பத்திரத்தைக் கேட்டு மனைவியிடம் செல்வம் தகராறு செய்தார். பத்திரத்தை தர மறுத்ததால், ஆத்திரமடைந்த செல்வம், அருகில் இருந்த கட்டையால் ஜோதியின் தலையில் பலமாக தாக்கினார். இதில், சம்பவ இடத்திலேயே ஜோதி இறந்தார். இதையடுத்து, செல்வம் தலைமறைவானர்.

தகவலறிந்த போலீசார், ஜோதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், செல்வம் கொலை செய்தது தெரியவந்ததும், அவரை பெரும் பாக்கம் ஏரியின் அருகே சுற்றி வளைத்துப் பிடித்து, விசாரணை நடத்தினர். இதில், ஜோதியை கட்டையால் அடித்துக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து, செல்வம் கைது செய்யப் பட்டு, கோர்ட் உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

நிர்க்கதியான குழந்தைகள்:

தாய் கொலை செய்யப்பட்டார்; தந்தை சிறையில் அடைக்கப்பட்டு விட்டார் என்ற நிலையில் குழந்தைகள் மூவரும் ஆதரவற்றவர்களாகிவிட்டனர். நேற்று முன் தினம் முதல் அவர்கள் சாப்பாட்டிற்கு வழியின்றி தவித்தனர். இரக்கப்பட்ட போலீசார் கடந்த இரண்டு நாட்களாக அவர்களுக்கு உணவு வழங்கினர். தற்காலிகமாக அவர்களின் உறவினரான தாயம்மாள் என்பவரிடம் குழந்தைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
======================

உங்கள் சிந்தனைக்கு:

வசதி படித்த பெண்கள் தங்கள் கணவர்களிடமிருந்து பணம் பறிப்பதற்கு எந்தெந்த முறைகளில் சட்டமியற்றலாம் என்று பாடுபட்டுக் கொண்டிருக்கும் தேசிய பெண்கள் நல வாரியத் தலைவர் திருமதி. கிரிஜா வியாஸ் அவர்கள் சிறிதளவேனும் உணமையிலேயே எப்போதும் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஏழைப் பெண்களின் நலனைக் கவனித்தால் என்ன?

"கணவனை அடி" என்னும் தாரக மந்திரத்தை மணமான பெண்களுக்கு போதித்து வரும் தமிழக பெண்கள் நல வாரியத் தலைவர் திருமதி. ராமாத்தாள் அவர்கள் அடிமட்டத்திலிருக்கும் ஏழைப் பெண்கள் குடிகார புருஷனிடம் தினம் அடி வாங்கி நிற்கும் நிலையை மாற்ற அந்த ஆண்களுக்கு de-addiction மற்றும் அறிவுரைகளை வழங்கி அந்தப் பெண்களுக்கு உதவினால் என்ன?
ஆனால் ஒரு பிரச்னை. இது போன்ற இயக்கங்களுக்குத் தெரிந்ததெல்லாம் கைது, வழக்கு, வக்கீல், ஃபீஸ், ஜீவனாம்சம், சிறை வாசம் - இவைதானே!

ஆனால் இதுபோன்ற ஏழைகள் கையில் பணமும் இருக்காதே, என்ன செய்வது?

அதனால்தான் இவர்கள் யாரும் இந்த அடிமட்ட பெண்களைப் பற்றி கவலைப் படுவதில்லை! எந்தச் சட்டமும் இவர்களுக்கு உதவுவதும் இல்லை.

சரி, மனோரமா அம்மையாராவது ஏதாவது செய்யலாமே! அதெப்படி? அவர் தற்போது கையிலெடுத்திருக்கும் சமுதாயத்தின் அதி முக்கியப் பிரச்னையான, 'ஆண்மைக் குறைவு' (அதாவது விறைப்புக் குறைவு மற்றும் 'துரித ஸ்கலிதம்') உள்ள ஆண்களை திருமணம் செய்து கொடுத்து இளம் பெண்களை வஞ்சிக்கும் அவலத்தை எதிர்த்து ஓலமிட்டுக் கொண்டிருக்கிறாரே! ஏதோ நம் தமிழ்ப் பெண்கள் திருமணம் செய்து கொள்வதே கலவி சுகத்திற்கு மட்டுமே என்பது போலவும், அவர்கள்தம் வாழ்வில் வேறு சிந்தனையோ குறிக்கோளோ இன்றி செக்ஸ் திருப்தியை மட்டுமே முக்கியமாகக் கொண்டு அலைவது போலவும் தோற்றமளிக்கும்படியாக பேட்டி கொடுத்துக்கொண்டு, நம் சமூகத்தின் குடும்ப வாழ்க்கை முறையையே கொச்சைப் படுத்தும் பேச்சுக்களை நிறுத்தி விட்டு, இது போன்ற ஆதரவற்ற சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு உதவ அவர் முன் வந்தால் என்ன? ஆனால் அதில் ஒரே ஒரு பிரச்னை, பெண்கள், செக்ஸ், ஆண்மைக் குறைவு போன்ற கோஷங்கள் பெற்றுத்தரும் விளம்பரம் அதுபோல் உண்மையாக குழந்தைகளுக்கு உதவி செய்வதில் கிட்டாது!
=============

ஒரு கொசுறு செய்தி:

தமிழகத்தில் தீபாவளி அன்று, 150 கோடி ரூபாய்க்கு சரக்கு விற்பனை செய்ய, "டாஸ்மாக்" நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 10 நாள் விற்பனை செய்யக்கூடிய வகையில், சரக்கு இருப்பு வைக்க உத்தரவிடப் பட்டுள்ளது. தமிழகத்தில் 7,432 டாஸ்மாக் கடைகள் உள்ளன. தீபாவளியை முன்னிட்டு, மதுபானங்கள் அதிகம் விற்கப்படும் திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட் டங்களுக்கு, வழக்கமான சரக்கு சப்ளையை விட, இரு மடங்கு சரக்குகள் குடோன்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளன. (தினமலர்)

எம்.பி வரை எம்பியிருக்கும் 498A கேசுகள்!

முன்னாள் அமைச்சரும் இன்னாள் எம்.பியுமான செம்மலை மற்றும் அவர் குடும்பத்தினர் மீது 498A கேசு தொடுத்துள்ளனர்.

எம்.பி வரை படர்ந்துள்ள 498A பாம்பு சீக்கிறமே அமைச்சர்கள், நீதிபதிகள் போன்று சமூகத்தில் அனைத்து நிலைகளில் உள்ள பல பெரிய மனிதர்களையும் பீடித்த பின்னர்தான், பொய்க் கேசு போடுவதற்கென்றே அமைக்கப்பட்டுள்ள Sec 498A of IPC, Domestic Violence Act, Sec 125 of CrPC போன்ற கொடுங்கோன்மை சட்டங்களிலிருந்து மக்களுக்கு விமோசனம் கிடைக்கும்.

இப்போதெல்லாம் உங்களுக்கு யாரையாவது பிடிக்கவில்லை, அவர்களைப் பழி வாங்க வேண்டுமென்று தோன்றினால் அதற்கு சும்மா அடிச்சான், பிடிச்சான் போன்ற ஜுஜுபி கேசெல்லாம் வேலைக்கு ஆகாது! அதுக்குத்தான் கைவசம் நல்ல தீபாவளி லட்டு கணக்காக பொம்பளை சம்பந்தமான பல சட்டங்களைப் போட்டு வைத்திருக்கிறார்களே ஐயா! சமீபத்தில் தினமலர் செய்தி ஆசிரியரை எந்த சட்டத்தில் கைது செய்தார்கள் பார்த்தீர்கள் இல்லையா - பெண்கள் வன்கொடுமை சட்டத்தில்! அது தான் கூரான ஈட்டி. அதுபோல் 498A மற்றும் குடும்ப வன்முறைச் சட்டம் - இப்படி எதேனும் ஒரு பெண் கொடுமை தொடர்பான சட்டத்தை ஏவி விட்டால், ஆசாமி காலி!

குடும்ப வன்முறைச் சட்டம் (Prevention of domestic violence against women act) ஒரு கந்தல் சட்டம். இதை வைத்துக் கொண்டு யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் சிக்க வைக்கலாம். உதாரணத்திற்கு திருவாளர் டோண்டு தன் வீட்டில் மௌனமாக வலைப்பதிவு எழுதிக் கொண்டு குடும்ப வன்முறை செய்கிறார் என்று நீங்கள் (அவருக்குச் சம்பந்தமில்லாதவர்) புகார் கொடுக்கலாம். அதன் மீது ஆக்ஷன் எடுப்பார்கள். இது போல் நிகழ்ந்த சில கேசுகளைப் பற்றி சீக்கிறமே விரிவாக எழுதுகிறேன்.
இப்போதைக்கு செம்மலையின் நிலையைப் பாருங்கள்:-

வரதட்சணை கொடுமை வழக்கு.

அ.தி.மு.க. எம்.பி. செம்மலை மனைவி, மகனுடன் கோர்ட்டில் ஆஜர்.

சேலம், அக்.13- 2009. செய்தி - தினத்தந்தி.

சேலம் தொகுதி அ.தி.மு.க. எம்.பி. செம்மலை, மனைவி மற்றும் மகனுடன் சேலம் மகளிர் கோர்ட்டில் ஆஜரானார். வரதட்சணை கொடுமை வழக்கில் அவரிடம் விசாரணை நடந்தது.

அ.தி.மு.க. எம்.பி.

அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், தற்போதைய சேலம் தொகுதி எம்.பி.யுமான செம்மலையின் 2-வது மகன் எழில் அமுதன். இவருக்கும், சேலம் மாவட்டம் குஞ்சாண்டினிரை சேர்ந்த முத்துசாமியின் மகள் வாணி பிரிதாவுக்கும் கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் வாணி பிரிதா, தன்னுடைய கணவர் எழில் அமுதன், மாமியார் புஷ்பா, மாமனார் செம்மலை ஆகியோர் மீது மேட்டூர் போலீசில், வரதட்சணை கொடுமை புகார் செய்தார். இந்த புகார் தொடர்பான விசாரணை சேலம் சூரமங்கலம் மகளிர் போலீசாராலும், பின்னர் ஈரோடு மகளிர் போலீசாராலும் நடத்தப்பட்டது.

விசாரணையை தொடர்ந்து செம்மலை எம்.பி., அவருடைய மனைவி புஷ்பா, மகன் எழில் அமுதன் ஆகியோர் மீது சேலம் அனைத்து மகளிர் கோர்ட்டில் வரதட்சணை கொடுமை வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்தது.

இந்த நிலையில் நேற்று காலை மகளிர் கோர்ட்டு நீதிபதி கோபால் முன்னிலையில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.

கோர்ட்டில் ஆஜர்

செம்மலை எம்.பி., அவருடைய மனைவி புஷ்பா, மகன் எழில் அமுதன் ஆகியோர் நேற்று கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். அப்போது சாட்சிகள் அளித்த தகவல்களின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரிடமும் கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டன.

அப்போது செம்மலை எம்.பி. இந்த வழக்கு பொய்யான வழக்கு என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கு என்றும் பதில் அளித்தார். இந்த பதில்கள் பதிவு செய்யப்பட்டன. அதேபோல் அவருடைய மனைவி புஷ்பா, மகன் எழில் அமுதன் ஆகியோர் அளித்த பதில்களும் பதிவு செய்யப்பட்டன.

விசாரணை தள்ளி வைப்பு

பின்னர் இந்த வழக்கு விசாரணை 14-ந் தேதிக்கு (நாளை) தள்ளி வைக்கப்பட்டது.

மாமியாரை கழுத்தை அறுத்துக் கொன்ற மருமகள்

தர்மபுரி அருகே பயங்கரம்:
82 வயது மாமியாரை கழுத்தை அறுத்துக் கொன்ற மருமகள்
குடும்ப தகராறில் வெறிச்செயல்

தர்மபுரி, அக்.8- 2009

தர்மபுரி அருகே குடும்ப தகராறில் 82 வயது மாமியாரை பிளேடால் கழுத்தை அறுத்து மருமகள் கொலை செய்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மருமகளை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மாமியார்- மருமகள் சண்டை

தர்மபுரி மாவட்டம் அதிய மான்கோட்டை அருகே உள்ள முக்கல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மனைவி நாகம்மாள் (வயது82). காளிப்பன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். நாகம்மாள் மகன் சின்ராஜ் வீட்டில் வசித்து வந்தார். இவரது மனைவி ஆண்டாள் (61). ஓய்வு பெற்ற மண் பரிசோதனை நிலைய அரசு ஊழியர் ஆவார். இவர்களுக்கு உமாராணி என்ற மகளும், சதானந்தம் என்ற மகனும் உள்ளனர். இவர் சேலம் மாவட்டம் கருமந்துறையில் உள்ள ஒரு பள்ளியில் வாத்தியாராக பணியாற்றி வருகிறார்.

சின்ராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலகுறைவால் இறந்தார். மகனும், மகளும் திருமணம் முடிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர். மாமியார் நாகம்மாளும், மருமகள் ஆண்டாளும் ஓரே வீட்டில் தங்கி வந்துள்னர். அவர்களுக்குள் மாமியார், மருமகள் சண்டை இருந்து வந்துள்ளது. இதனால் அடிக்கடி குடும்ப தகராறு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

மருமகள் கைது

இந்தநிலையில் மாமியார் நாகம்மாளுக்கும், மருமகள் ஆண்டாளுக்கும் நேற்று முன் தினம் இரவு பிரச்சினை ஏற் பட்டுள்ளது. இதில் ஒருவரை, ஒருவர் தாக்கியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த ஆண்டாள் பிளேடால் நாகம்மாளின் கழுத்தை அறுத்து படுகொலை செய்தார். இதில் சம்பவ இடத்திலேயே நாகம்மாள் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அதியமான் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மருமகள் ஆண்டாளை கைது செய்தனர். 82 வயதில் மாமியார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

======================= ================



மணமான பெண்களை வன்முறையில் ஈடுபடும்படி ஊக்குவிக்கும் தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் ராமாத்தாள் இந்தச் செய்தியைப் படித்து பரவசமடைவார் என்று நம்புகிறோம்!

அவர் “அனைத்துப் பிரச்னைக்கும் தீர்வு” என்று குறிப்பிட்டிருக்கும் ”குடும்ப வன்முறை சட்டம்” திட்டவட்டமாக வரையறுத்துச் சொல்வது என்னவென்றால் “குடும்ப வன்முறை என்பது கணவன் மட்டும் தான் செய்வான். வன்முறையில் பாதிக்கப்படுவது மனைவி மட்டுமே” என்பதுதான். அதன் அடிப்படையில் சமீபத்தில் ஒரு உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி மனைவி புகார் கொடுத்தால் மாமியாரை அவருடைய வீட்டிலிருந்தே வெளியேற்றி நடுத்தெருவில் நிற்க வைக்கலாம். ஏனெனில் சட்டத்தின் பார்வையில் மற்றும் நீதிபதிகளின் நோக்கில் மாமியார் மற்றும் நாத்தனார்கள் பெண்ணினமே இல்லை. மனைவி மட்டுமே பெண். அவளுக்குத்தான் அத்தனை உரிமையும்.

இதுபோல் ஏன் சட்டம் இயற்றுகிறார்கள்? அதன் பின்னணி என்ன? நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்க்கப் பெண்கள் கல்வி, பொருளாதாரம் போன்ற அனைத்துத் துறையிலும் இன்று பெரிதும் வளர்ச்சியடைந்துள்ளதையும், தற்கால ஆண்கள் வரதட்சணை போன்ற பழைய நடைமுறைகளிலிருந்து முழுதும் வெளி வந்துள்ள நிலையையும் அறவே மறைத்து, இன்னமும் வரதட்சணைக் கொடுமை நடப்பதாக தொடர்ந்து பொய்ப் பிரசாரம் செய்து கொண்டு, பொய் வழக்குகள் போட்டு குடும்பங்களைச் சிதைப்பதற்காகவே இதுபோன்ற கொடுங்கோன்மைச் சட்டங்களை இயற்றவைக்கும் கூட்டத்தில் இருப்பவர்கள் யார் யார்? Is it to serve certain vested interests?

பதில் கிடைக்கும் நாள் சீக்கிறமே வரும். இப்போதுதானே மாஜிஸ்டிரேட், எஸ்.பி வரையில் சட்டம் பாய்ந்திருக்கிறது! இன்னமும் உச்ச நீதிமன்ற நிதிபதிகள், அமைச்சர்கள், முதலமைச்சர்கள், பிரதம மந்திரி என்னும் அளவில் வரதட்சணை பொய் வழக்குகள் பொங்கிப் பரவி பஸ்மாசுரன் வரம் கொடுத்த சிவன் தலை மேலேயே கைவைக்கத் தலைப்படும் நிலை வரும்போது அனைவரும் கண் விழிப்பார்கள். அது வரை அப்பாவி கணவன்மார்களும் அவர்கள்தம் வயோதிக பெற்றோர்களும் இளம் உடன் பிறப்புக்களும் பொய் கேசில் சிக்கி ஜெயிலுக்குப் போக வேண்டியதுதான்!

சமீபத்தில் திருமதி. சுதா ராமலிங்கம் என்னும் வக்கீல் ஒரு டிவி பேட்டியில் கூறியிருக்கிறாரே, கைதாகி 15 நாட்கள் ஜெயிலில் இருந்து விட்டு வந்தால் என்ன குறைந்தா போய் விடப் போகிறது; அதைப்போய் பெரிசு பண்ணுகிறீர்களே என்று! அவரும் இத்தகைய சட்டங்களை ஊக்குவிப்பதில் முன்னணியில் நிற்கும் இயக்கங்களைச் சேர்ந்தவர்தான்.

வளரட்டும் பொய்க் கேசுகள்! சீக்கிறமே ஒரு தீர்வு கிடைக்கும்!