தெய்வத்தாய்

கணவருடன் ஏற்பட்ட தகராறில் 1 வயது குழந்தையை கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய் கைது

குன்னூர், நவ.29 - 2009. தினத்தந்தி

குன்னூர் அருகே வெலிங்டன் ஜெயந்தி நகரை சேர்ந்தவர் அரிகரன். இவரது மனைவி சியாமளா (வயது 26). இவர்களுக்கு 1 வயது ஆண் குழந்தை உள்பட 2 குழந்தைகள் உள்ளன. அரிகரன் சபரிமலை அய்யப்பனுக்கு மாலை அணிய முடிவு செய்து இருந்தார்.

இந்த நிலையில் அரிகரன் சபரிமலைக்கு மாலை போடுவது, அவரது மனைவி சியாமளாவுக்கு விருப்பம் இல்லாமல் இருந்தது. இதனால் அவர்களுக்கு கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

வாக்குவாதம்

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் அரிகரனுக்கும், சியாமளாவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் நடக்கும் போது அரிகரன் வெளியே செல்கிறேன் என்று கூறிவிட்டு, வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.

சியாமளா தனது குழந்தைக்கு காயம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டாலோ, சபரி மலைக்கு மாலை போடுவதை தனது கணவன் செய்யப்பட்டார் என்று நினைத்து இருந்தார்.

குழந்தை கொலை:

இந்த சமயத்தில் அரிகரன் வீட்டை விட்டு வெளியே சென்றவுடன், சியாமளா வீட்டின் பின்புறம் வைத்திருந்த தண்ணீர் தொட்டிக்குள் தனது ஒரு வயது ஆண் குழந்தையான அபினுவை போட்டு, மூடி விட்டார். இது குறித்து தனது கணவனிடம் அவர் எதுவும் கூறவில்லை. பின்னர் சிறிது நேரம் கழித்து தண்ணீர் தொட்டியை திறந்து பார்க்கும் குழந்தை அபினு இறந்து கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சியாமளா, தானும் தற்கொலை செய்து கொள்ள, வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து, வெலிங்டன் எம்.ஆர்.சி. வளாகத்தில் இருந்த கிணற்றில் குதித்து விட்டார். அவள் கிணற்றில் குதிப்பதை ராணுவ வீரர் ஒருவர் பார்த்துவிட்டார். உடனே அந்த ராணுவ வீரர் சியாமளாவை காப்பாற்றி னார்.

இதற்கிடையில் குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி கிடப்பது அந்த கிராம மக்களுக்கு தெரிய வந்தது. உடனடியாக இறந்த குழந் தையை எடுத்துக் கொண்டு கிராம மக்கள் குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் குழந்தை செத்து விட்டதாக கூறினார்கள்.

அதே நேரத்தில் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சியாமளாவையும் கிராம மக்கள் குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தாய் கைது

இது பற்றி தகவல் அறிந்த குன்னூர் போலீஸ் துணை சூப்பிரண்டு தர்மராஜ் உத்தரவின் பேரில் வெலிங்டன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லோகநாதன், சப்-இன்ஸ்பெக்டர் பிலிப் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசா ரணை நடத்தினர். தொடர்ந்து போலீசார் குழந்தையை கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய் சியாமளாவை கைது செய்தனர்.

பணம் கேட்டு மாமனாரை மிரட்டிய மருமகளுக்கு வலைவீச்சு

பெண்ணியவாதிகள் “போராடிப்” பெற்ற பொய்வழக்கு சட்டங்கள் எதற்குப் பயன்படுகின்றன பாருங்கள்?

வரதட்சணை முறை ஒழிய வேண்டுமானால், வரதட்சணை கேட்போரையும் கொடுப்போரையும் ஒருங்கே கைது செய்து சிறையிலடைக்க வேண்டும். குற்றம் நடந்த உடனேயே இரண்டு பேரையும் கைது செய்து வழக்கு நடத்தி தூக்கில் போடவேண்டும். இப்பொது உள்ளதுபோல் சாவகாசமாக ”ஒரு கல்ப கோடி காலம் முன் என்னிடம் வரதட்சணை கேட்டர்கள். நானும் கொடுத்தேன்” என்று புகார் கொடுப்போரை உடனே கைது செய்யவேண்டும்!

தற்போது உள்ள 498A சட்டம், திருமணம் நடந்து பல ஆண்டுகள் கழித்து கள்ளக்காதல், மிரட்டிப் பணம் பறித்தல், தனிக்குடித்தனம் போன்ற காரணங்களுக்காக பொய் வழக்கு போட்டுப் பணிய வைக்கத்தான் இந்தச் சட்டம் பயனபடுகிறது. பெண்கள் துயர் துடைக்கவோ, வரதட்சணை முறையை ஒழிக்கவோ இச்சட்டங்கள் பயன்படுவதில்லை.

இனி செய்தி:

மாலைமுரசு - மதுரை. நவ. 28, 2009

மதுரையில் ரூ. 5 லட்சம் கேட்டு மாமனாரை மிரட்டிய மருமகளை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை எச்.எம்.எஸ் கலனியை சேர்ந்தவர் எஸ்.ஏ.ராஜன் (62). இவரது மகன் சீனிவாசன். இவருக்கும் சீதா பிரியதர்ஷினி என்பவருக்கும் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமான சில மாதங்களிலேயே சீதாபிரியதர்ஷினிக்கு ஏற்கனவே 2003-ம் ஆண்டு திருமணமாகி இருப்பது தெரியவந்தது.

இதனால் இவருக்கும் சீனிவாசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதுதொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டும், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் இருக்கிறது.

இந்நிலையில் எச்.எம்.எச் காலனி வீட்டில் சீனிவாசனின் தந்தை ராஜன் இருந்தார். அப்போது சீதாபிரியதர்ஷனி மற்றும் சில பெண்கள் நுழைந்தனர்.

வீட்டில் நுழைந்த சீதாபிரியதர்ஷினி ராஜனிடம் ரூ. 5 லட்சம் கேட்டு மிரட்டினார். கொடுக்காவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இது குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசில் ராஜன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சீதாபிரியதர்ஷினியை வலைவீசி தேடி வருகின்றனர்.

எ‎ன்னே ஒரு அமர காதல் காவியம்!

வயதுக்கு வந்த இரண்டு பெண் குழந்தைகளின் தாய் இந்த 40 வயது முதிய தாய்க்குலம். இவருக்கு (ஒரு மரியாதை வேண்டாம்!) தன் கணவருடனுடனும் இரண்டு பெண் குழந்தைகளுடன் சேர்ந்து வாழும்போதே, ஒரு 20 வயது இளைஞனின் கலவிச் சுகம் தேவைப்பட்டது. இதை “கள்ளக்காதல்” என்றோ “கள்ள உறவு” என்றோ அழைக்கக் கூடாதாம்! பின்னே எப்படி அழைப்பது? தொடுப்பு என்கலாமா? அந்தக் காலமாக இருந்தால் “அவிசாரி” என்று சொல்லிவிடுவார்கள். இப்போது அதுபோல் சொன்னால் பெண்ணியவாதிகள் கோபப்படுவார்கள். எந்த எழவோ, போங்கள்!

லைலா - மஜ்னு, அம்பிகாபதி - அமராவதி போன்ற அமரக் காதல் காவியங்களின் வரிசையின் முன்னணியில் வைத்துப் போற்றப்படத்தக்க இந்த தெய்வீகக் காதல் கதையை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்!

உசிலம்பட்டி அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்தது பெண் சாவு; வாலிபர் கவலைக்கிடம்.

எழுமலை, நவ.27 - 2009. செய்தி - தினத்தந்தி

உசிலம்பட்டி அருகே 40 வயது பெண், 21 வயது ஆண் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்தனர். இதில் (கள்ளக்)காதலி (!) மரணமடைந்தார். காதலன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கோவை மில்லில் காதல்

மதுரை மாவட்டம் எழுமலை அருகே உள்ள டி.கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சின்னன் மகன் திருமலை(வயது 21). இவர் கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்தார். அதே மில்லில் அந்த பகுதியை சேர்ந்த செல்வராஜ் மனைவி விஜயாவும் (40) வேலை பார்த்தார்.

செல்வராஜ்-விஜயா தம்பதிக்கு பிளஸ்-2, 9-ம் வகுப்பு படிக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் திருமலைக்கும், விஜயாவிற்கும் பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது.

இவர்களின் தொடர்பு தெரிய வந்ததும், செல்வராஜ் தனது மனைவியை கண்டித்தார். இருப்பினும் அவர் கேட்கவில்லை. திருமலையுடன் உள்ள தொடர்பை துண்டிக்கவில்லை. இதனால் அங்கு பிரச்சினை அதிகரித்தது.

இதையடுத்து, திருமலையும், விஜயாவும் கோவையில் இருந்து கிருஷ்ணாபுரம் வந்தனர். இங்கு வசிக்க திட்டமிட்டனர். ஆனால் இங்கும் குடும்பத்தினரும், உறவினர்களும் அவர்களை ஏற்க மறுத்தனர். அவர்களது காதல் பற்றி சுற்றுப்பகுதியினர் கேலியாக பேசினர். (அதுபோல் பேசலாமா? என்னடா உலகம் இது!)

விஷம் குடித்தனர்

இதனால் கள்ளக்காதல் ஜோடி மனம் உடைந்தது. மீண்டும் கோவைக்கும் செல்ல முடியாது. இங்கும் வாழ முடியாது. இருதலைக்கொள்ளி எறும்பாக தவித்த காதல்ஜோடி இறுதியில் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தது.

அதன்படி நேற்று அருகே உள்ள மொட்டமலைக்கு திருமலையும் விஜயாவும் சென்றனர். அங்கு விஷம் குடித்துவிட்டு மயங்கிக் கிடந்தனர்.

நேற்று காலை அப்பகுதிக்கு சென்றவர்கள் இதைப்பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் இருவரும் மீட்கப்பட்டு உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி விஜயா உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் திருமலை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து எம்.கல்லுப்பட்டி போலீசில் கணவர் செல்வராஜ் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரவிச்சந்தர், சப்-இன்ஸ்பெக்டர் ரமாராணி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=529873&disdate=11/27/2009&advt=2

கணவன்கள் ஏ.டி.எம்., மிஷின்களா? மனைவிகளுக்கு எதிராக போர்க்கொடி!

நவம்பர் 27,2009. செய்தி - தினமலர் (http://www.dinamalar.com/General_detail.asp?news_id=19275)

புதுடில்லி:"கணவன் என்பவன் மனைவிக்கு எப்போதும் பணம் கறக்கும் ஏ.டி.எம்., மிஷினா?' என்று ஆண்கள் உரிமை சங்கத்தினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.கடந்த 19ம் தேதி உலக ஆண்கள் தினமாக அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் பலர் டில்லியில் "இந்தியன் பேமிலி பவுன்டேஷன் (ஐ.எப்.எப்.,)' சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

பெண்களுக்கு அதிகாரம் கொடுத்து ஆண்களை அதிகாரமற்றவர்களாக மாற்றி விட்டனர்; ஆண்கள் ஏ.டி.எம்., மிஷின்கள் அல்ல' என இந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் கோஷம் எழுப்பினர்.டில்லியில் ஆசாத் மைதானத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஐ.எப்.எப்., நிறுவனர் பந்தி ஜெயின் குறிப் பிடுகையில், "கணவர் மீது பெண்கள் புகார் கொடுத்தால் 498ஏ பிரிவின் கீழ் ஆண்கள் தண்டிக்கப்படுகின்றனர். எந்த விசாரணையும் ஆண்களிடம் நடத்தப்படுவதில்லை. இந்த சட்டம் பெண்களுக்கு ஆதரவானது என்பதை விட மனைவிகளுக்கான சட்டம் என்று தான் சொல்ல வேண்டும்.

ஏனென்றால், மனைவிகள் புகார் கொடுத்ததும் கணவர் மட்டுமல்லாது, கணவரது தாய், சகோதரிகளும் கைது செய்யப்படுகின்றனர். 498ஏ பிரிவின் கீழ் பதிவு செய்யப்படும் பெரும்பாலான புகார்கள் அடிப்படையில்லாதவை. நானும் எனது மனைவியால் பாதிக்கப்பட்டவன் தான். கணிசமான தொகையை ஜீவனாம்சமாக கொடுத்து வருகிறேன்' என்றார்.

பேரணியில் கலந்து கொண்ட ராகேஷ் ஜெய்ஸ்வால் குறிப்பிடுகையில், "என் மனைவி என்னை விட்டு பிரிந்து சென்று இரண்டு ஆண்டுகள் ஆகிறது. தற்போது, ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்திருக் கிறார். ஓராண்டில் இரண்டரை லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் அவர் ஜீவனாம்சம் கேட்டு விண்ணப்பித்திருப்பது நியாயமில்லாதது' என்றார்.

கமல் கபாடியா(59) என்பவர் குறிப்பிடுகையில், "என் மருமகள் என் மகன் மீதும் மனைவி மற்றும் என் மீதும் 23 குற்றச்சாட்டுகளை சுமத்தி புகார் கொடுத்துள்ளார். இதில் ஒன்று கூட உண்மையில்லை. ஆனால், போலீசார் 498ஏ பிரிவை பயன்படுத்தி எங்களை தொல்லை செய்கின்றனர்' என்றார்.

சீரழிவை நோக்கி ஒரு பயணம்

நம் நாட்டுப் பெண்களை தாங்கள் பெண்களாக இருப்பதையே வெறுக்கும்படி செய்யும் பெண்ணியவாதிகளின் ஓயாத பிரசாரத்தின் பலனாய் மணமான பெண்கள், அதுவும் காதல் மணம் புரிந்து கொண்ட பலர், இன்னொருவரோடு ஒத்துப் போக மனமில்லாமல் விவாகரத்தை வேண்டி நிற்கின்றனர். த்ங்கள் எதிர்காலத்தை வடிவமைத்து குடும்ப வாழ்வை மெலோங்கச் செய்ய வேண்டிய வயதில் கோர்ட்டு வராண்டாவில் வக்கீல் பின்னால் லோலோவென்று அலைந்து கொண்டிருக்கிறார்கள். தவிர, இவர்களில் பலர் கணவனிடமிருந்து காசுபிடுங்கும் ஆசையில் பொய்வழக்கு போட்டுத் திரிகிறார்கள்.

இவர்களாவது பரவாயில்லை, இன்னும் பலர் ஒரு ஆண்மகனிடம் அனுபவிக்கும் செக்ஸில் மட்டும் திருப்தி அடையாமல் பலவகை சுகத்தைத்தேடி கள்ளக்காதலில் ஈடுபடுகிறார்கள். இதுபோன்ற நிக்ழ்வுகள் அதிகமாகும்போதுதான் பெண்ணியவாதிகளின் அடிப்படை நோக்கமாகிய நம் குடும்ப வாழ்வு முறைச் சிதைவு முழுதாக நிறைவேறும்.
ஆனால் அந்தப் பெண்கள் கதி?

இந்தச் செய்தியைக் கூர்ந்து நோக்குங்கள்:-

கடலூரில் பெண் கற்பழித்துக் கொலை : கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
நவம்பர் 23,2009. செய்தி - தினமலர்

கடலூர் : கடலூரில், இளம் பெண்ணை கற்பழித்துக் கொலை செய்த வழக்கில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபரை, போலீசார் நேற்று கைது செய்தனர். கடலூர் பச்சையாங்குப்பம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகள் இந்துமதி(19). கடந்த 14ம் தேதி இரவு 7.30 மணியளவில் தோட்டத்திற்கு சென்றவர், மர்ம நபரால் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்துமதியின் மொபைல் போனில், சம்பவத்திற்கு சற்று நேரத்திற்கு முன் பேசிய அவரது காதலன் ராஜ்குமார் மற்றும் அந்தோணி இருதயராஜ் (27) ஆகியோர் மீது போலீசார் சந்தேகம் கொண்டனர். இந்நிலையில், ராஜ்குமார் 15ம் தேதி இரவு அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார், அந்தோணி இருதயராஜை தேடி வந்தனர். அவரை, நேற்று பிடித்து விசாரணை செய்தனர்.

அந்தோணி இருதயராஜ் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: நான்கு ஆண்டிற்கு முன் எனது பெற்றோர் ஆரோக்கியமேரி (35) என்ற பெண்ணை எனக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆரோக்கிய மேரிக்கு வயது அதிகமாக இருந்ததால், எங்களுக்குள் ஒத்துவரவில்லை. அவர் பிரிந்து சென்றுவிட்டார்.

பின், நான் புதுக்கோட்டைக்கு கரும்பு வெட்டச் சென்றபோது, டெய்ஸி ராணி என்பவரை திருமணம் செய்து கொண்டேன். அவர் வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்தார். அதை நான் கண்டித்தும் விடவில்லை. அதனால், நான் விலகி விழுப்புரம் மாவட்டம் வடபொன்பரப்பியில் உள்ள தனியார் பள்ளியில் டிரைவராக வேலைக்கு சேர்ந்தேன். அங்கு பணிபுரிந்த மாலதி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது மாலதியின் குடும்பத்தாருக்கு தெரியவரவே, தொடர்பை நிறுத்திக் கொள்வோம், உறவிற்கு வற்புறுத்த வேண்டாம் என மாலதி கூறினார்.

ஆத்திரமடைந்த நான், 2008 ஆக., 13ம் தேதி மாலதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன். பின்னர் புதுக்கோட்டை சென்று டெய்ஸி ராணியின் கழுத்தில் கத்தியால் வெட்டினேன். அதில், டெய்ஸி ராணி பிழைத்துக் கொண்டார்.

பின்,கடலூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தபோது இந்துமதியுடன் பழக்கம் ஏற்பட்டது. அவரை நான் காதலித்தேன். அவர் என்னை காதலிக்கவில்லை. தொடர்ந்து அவரின் மனதை மாற்ற போனில் பேசிவந்தேன். கடந்த 14ம் தேதி, புதுச்சேரியிலிருந்து கடலூர் வந்த நான், இந்துமதியிடம் பேசி, தோட்டத் திற்கு வரவழைத்து, கற்பழித்து கொலை செய்துவிட்டு தப்பியோடினேன். இவ்வாறு வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

கடலூர் முதுநகர் போலீசார், அந்தோணி இருதயராஜை கைது செய்து கடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பணம் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கிறேன்: மனைவியிடம் ரூ.25 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் கணவர்

சென்னை, நவ. 22 - 2009. செய்தி: மாலைமலர்

திருச்சியை சேர்ந்தவர் கலைசெல்வன் குவைத்தில் என்ஜினீயர் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மலர்விழி. இவர்களுக்கு 1997-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2002-ல் கோர்ட்டில் விவாக ரத்துக்கு மனு செய்தனர். கடந்த ஆண்டு கோர்ட்டு உத்தரவுபடி குழந்தை கலைச் செல்வன் வசம் வந்தது.

விவாகரத்து வழக்கு தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட முறை குவைத்தில் இருந்து தமிழகம் வந்து சென்றார். இதற்கு ஏராளமான பணம் செலவானது. இடைப்பட்ட காலத்தில் அவரது வேலையும் பறிபோனது.

வருமானத்திற்கு வழியின்றி சேமிப்பு பணத்தை செலவிட்டார். இதற்கிடையே மலர்விழி கொடுத்த வர தட்சணை கொடுமை வழக்கிலும் கலைசெல்வன் சிக்கினார். இதில் 3 மாதம் வரை ஜெயிலில் இருந்தார். ஒருவழியாக வெளியே வந்த அவர் மனைவி கொடுத்த புகாரில் இருந்து வெளியே வந்தார்.

ஒரு பக்கம் குழந்தையின் செலவு, தனது வழக்கு செலவு என்று கலைசெல்வன் சாப்பாட்டுக்கே திண்டாடும் நிலைக்கு செல்லப்பட்டார். தனது கஷ்ட நிலைமைக்கு காரணமான முன்னாள் மனைவி மலர்விழியின் நிலைமையோ தலைகீழ் என் கிறார் கலைசெல்வன்.

மேலும் கூறியதாவது:-

நான் திருமணம் செய்து கொண்டபோது மலர்விழி வேலை இல்லாமல் இருந்தார். நான் உழைத்து சம்பாதித்து அனுப்பிய பணத்தில், வேலைக்கு செல்ல முன்னேற்பாடுகள் செய்தாள். ஏராளமான பணத்தையும் வைத்து கொண்டார். தற்போது கல்லூரி ஒன்றில் பேராசிரியராக நல்ல சம்பளத்தில் உள்ளார். நானோ குழந்தையுடன் நடுத் தெருவில் நிற்கிறேன்.

எனவே மலர்விழியிடம் இருந்து மொத்தமாக ரூ.25 லட்சம் அல்லது மாதம் ரூ.3 ஆயிரம் வீதம் ஜீவனாம்சம் பெற்று தரவேண்டும் என கேட்டு குடும்ப நல கோர்ட்டில் மனு செய்துள்ளேன். அது வருகிற டிசம்பர் 15-ந்தேதி விசாரணைக்கு வருகிறது என்றார்.

'டிவி' தொடர் பார்க்க விடாததால் மனைவி விவாகரத்து

மும்பை : "எனக்கு பிடித்த "டிவி' தொடர்களை பார்க்க அனுமதிக்க மறுக்கிறார்; இதனால், எங்களுக்குள் தினமும் சண்டை ஏற்படுகிறது. இதை மனதில் வைத்து, பலவகையில் என்னை துன்புறுத்துகிறார்!' - இப்படி சொல்லி, குடும்ப கோர்ட்டில் கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார் மனைவி. "திருமணத்தை முறிக்க விரும்பவில்லை; நான் சேர்ந்து வாழவே விரும்புகிறேன்' என்று கணவன் அப்பீல் செய்துள்ளார்.

செய்தி: தினமலர் - நவம்பர் 25,2009.
http://www.dinamalar.com/court_detail.asp?news_id=4542

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக இருக்கிறார் ஹர்ஷத்(34); இவர் மனைவி சீமா (31). சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்; திருமணம் ஆகி எட்டாண்டு ஆகிறது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. "என் கணவர் என்னை பலவகையில் கொடுமைப்படுத்துகிறார். எனக்கு பிடித்தமான "டிவி' தொடர்களை பார்க்க அனுமதிப்பதில்லை. இது தான் சண்டைகளுக்கு காரணம். அதனால், எனக்கு சரியான பாதுகாப்பு அளிப்பதில்லை. நள்ளிரவில் தனியாக ஆட்டோவில் பயணிக்க வைக்கிறார். இது போன்ற சித்ரவதைகளை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை' என்று குடும்ப நல கோர்ட்டில் மனு செய்தார் சீமா. வழக்கை விசாரித்த கோர்ட், அவர்களுக்கு விவாகரத்து அளித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து, மும்பை ஐகோர்ட்டில் கணவன் ஹர்ஷத் அப்பீல் செய்தார்.


"இந்திய சமுதாயத்தின் ஒரு முக்கிய அங்கம் திருமண பந்தம். அதை சாதாரணமாக முறிக்க முடியாது. "எந்த ஆதாரமும் இல்லாமல், என் மனைவி என் மீது சொன்னதை வைத்து விவாகரத்து கொடுத்திருப்பது சரியல்ல; திருமண முறிவு தொடர்பான வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் பல முறை சுட்டிக்காட்டிய கருத்துக்களை குடும்ப நல கோர்ட் காற்றில் பறக்க விட்டு, இப்படி விவாகரத்து அளித்துள்ளது. "எனக்கு திருமண முறிவுவேண்டாம். அதில் விருப்பமில்லை. என் குழந்தையை நான் வளர்க்க அனுமதிக்க வேண்டும்' என்று அப்பீல் மனுவில் அவர் கூறியுள்ளார்.

=====

பார்த்தீர்களா, பார்த்தீர்களா இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் அபலைப் பெண்கள் படும் அவலத்தை!

தனக்குப் பிடித்த டி.வி சேனலைப் பார்க்க இயலவில்லை. சரி, அந்தப் பெண்மணி தான் பெற்ற குழந்தையைக்கூட கவனிக்காமல் பொழுதுக்கும் டி.வி சீரியல்களைப் பர்த்துக் கொண்டிருந்திருக்கலாம், அதை கணவன் கண்டித்திருக்கலாம் - இப்படியெல்லாம் நீங்கள் நினைத்தால் அதற்கு உங்கள் ஆணாதிக்க மனப்பான்மைதான் காரணம்.

நல்ல வேளை, இந்தப் பெண்மணி விவாகரத்தோடு நிறுத்தி விட்டார். வேறு சில பெண்குலத் திலகங்கள் இன்னேரம் சட்டப் புத்தகத்தின் இண்டு இடுக்குகளில் உள்ள அத்தனை சட்டப் பிரிவுகளையும் கையிலெடுத்து கேசு மேல் கேசாக கணவன் மற்றும் அவனது பெற்றோர் மீது போட்டு நடுத்தெருவில் நிறுத்தியிருப்பார்கள்.

சரி, நீதி(!)மன்றங்கள் அவற்றுக்குச் செவி சாய்க்குமா என்றுதானே கேட்கிறீர்கள். ஹும். உங்களுக்கு நாட்டு நடப்பே தெரியாது போலிருக்கிறது!!

"என்னை தொடாதே. அந்த தகுதி உனக்கு இல்லை"

சிறுமி பர்பி, கண்ணீர் மல்க கூறுகையில்,"அப்பாவை பார்க்க வேண்டும் என, கேட்கும்போதெல்லாம், அம்மா என்னை கடுமையாக அடித்து துன்புறுத்துவார். விடுமுறை நாட்களில் அம்மா என்னுடன் நேரத்தை செலவிட மாட்டார். அவரது தோழிகளை வீட்டுக்கு வரவழைத்து பேசிக் கொண்டிருப்பார்" என்றார்.இவ்வாறு பர்பி கூறிக்கொண்டிருக்கும் போது, அவளது தாய் அனாமிகா வேகமாக வந்து, சமாதானப்படுத்த முயன்றார். இதைப் பார்த்த பர்பி, ஆவேசமாக,"என்னை தொடாதே. அந்த தகுதி உனக்கு இல்லை' என, அழத் துவங்கினாள்."


நீதிபதி அளித்த உணமையான சாக்லேட்!

செய்தி: தினமலர் - நவம்பர் 23,2009


கோல்கட்டா : வழக்கு விசாரணைக்காக கோர்ட்டுக்கு வந்த பத்து வயது சிறுமியை, நீதிபதியே, கடைக்கு அழைத்துச் சென்று சாக்லேட் வாங்கி கொடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் கோல்கட்டா கோர்ட்டில் நடந்தது. தனது தந்தையுடன் வசிக்க வேண்டும் என்ற, அந்த சிறுமியின் நீண்ட நாள் ஆசையையும் நீதிபதி நிறைவேற்றி வைத்தார்.

கோல்கட்டாவைச் சேர்ந்தவர் ராணா. இவரது மனைவி அனாமிகா. இவர்களுக்கு பத்து வயதில் பர்பி என்ற பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக ராணாவும், அனாமிகாவும் பிரிந்து வாழ்கின்றனர். குழந்தை பர்பி, அம்மாவுடன் தங்கி இருந்தாள். ஆனாலும், அப்பாவுடன் தங்கியிருக்க வேண்டும் என்பது தான், அவளது விருப்பம். குழந்தையை யார் வைத்துக் கொள்வது என்பதில் அனாமிகாவுக்கும், ராணாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. வேறு வழியின்றி இருவரும் கோர்ட் படியேறினர். கோல்கட்டா மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது.

விசாரணையின்போது, பர்பியும் கோர்ட் டுக்கு அழைத்து வரப்பட்டாள். "தந்தையுடன் தான், வசிப்பேன்' என, பர்பி உறுதியாக தெரிவித்தாள். இருந்தாலும், நீதிபதி முகோபாத்யாயா, இதில் அவசரப்பட்டு முடிவு எடுக்க விரும்பவில்லை. தந்தையின் மிரட்டல் காரணமாக, பயந்து போய் குழந்தை இவ்வாறு கூறுகிறதா என்பது உட்பட பல்வேறு சிந்தைனைகள் அவரது மனதில் ஓடின.நீதிபதி முகோபாத்யாயா, தனது இருக்கையை விட்டு எழுந்தார். நேராக சிறுமி பர்பி இருக்கும் இடத்துக்கு வந்தார். அடுத்ததாக கோர்ட்டில் நடந்த நிகழ்வு தான், அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

பர்பியின் கையை பிடித்து வெளியில் அழைத்துச் சென்றார், நீதிபதி. அருகில் இருக்கும் கடைக்குச் சென்று, சாக்லேட் வாங்கி கொடுத்தார். மகிழ்ச்சியுடன் அதை வாங்கிக் கொண்டாள், பர்பி. பின்னர், சிறுமிக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக பேச்சுக் கொடுத்தார்."இங்கே பார். இப்போது இருந்து நான் உனக்கு நண்பன். எந்த பள்ளியில் படிக்கிறாய்? உனது பொழுது போக்கு என்ன? உன் நண்பர்கள் யார்?' என, சிறுமியின் மனதுக்குள் இருப்பதை சிறிது, சிறிதாக கேட்டுத் தெரிந்து கொண்டார். நீதிபதியின் மென்மையான அணுகுமுறையால், அவர் மீது பர்பிக்கு நம்பிக்கை ஏற்பட்டது.

மீண்டும் கோர்ட்டுக்கு அழைத்து வந்தார். விசாரணை தொடர்ந்தது."உனக்கு ஏன் அம்மாவிடம் இருக்க பிடிக்கவில்லை' என, விஷயத்துக்கு வந்தார், நீதிபதி.இதற்கு சிறுமி பர்பி, கண்ணீர் மல்க கூறுகையில்,"அப்பாவை பார்க்க வேண்டும் என, கேட்கும்போதெல்லாம், அம்மா என்னை கடுமையாக அடித்து துன்புறுத்துவார். விடுமுறை நாட்களில் அம்மா என்னுடன் நேரத்தை செலவிட மாட்டார். அவரது தோழிகளை வீட்டுக்கு வரவழைத்து பேசிக் கொண்டிருப்பார்' என்றார்.இவ்வாறு பர்பி கூறிக்கொண்டிருக்கும் போது, அவளது தாய் அனாமிகா வேகமாக வந்து, சமாதானப்படுத்த முயன்றார். இதைப் பார்த்த பர்பி, ஆவேசமாக,"என்னை தொடாதே. அந்த தகுதி உனக்கு இல்லை' என, அழத் துவங்கினாள்.

பர்பியின் வாக்குமூலத்தை கேட்ட நீதிபதி, தனது தீர்ப்பை வாசித்தார். "பர்பியை அவளது தந்தையுடன் தங்கியிருக்க இந்த கோர்ட் உத்தரவிடுகிறது' என்றார். இதைக் கேட்ட பர்பி மகிழ்ச்சி அடைந்தாள். நேராக நீதிபதி இருக்கும் இடத்துக்கு சென்று,"நன்றி நீதிபதி அங்கிள்' என, கூறி விட்டு, வேகமாக தனது தந்தையின் கையை பிடித்தபடி, கோர்ட்டை விட்டு வெளியேறத் துவங்கினாள். சென்று கொண்டிருக்கும்போதே, நீதிபதியை நோக்கி தனது தலையை திருப்பி, மெல்ல புன்னகைத்தாள். அங்கு கூடியிருந்தவர்களின் முகங்களிலும் புன்னகை அரும்பியது.

============

இதுபோன்ற உணமையான "நீதி"பதிகளும் உள்ளனர்!

கட்டியவனை கட்டம் கட்டிடுவாய்ங்கப்பா உஷார்!

திருமணமானவுடனேயே நம் அபலைப் பெண்கள் மனத்தில் தோன்றும் கேள்விகளைப் பாருங்கள்!


(நன்றி: ஆனந்த விகடன்)


"சமீபத்தில்தான்" திருமணம் ஆகியது. உடனேயே, கணவன் மண்டையைப் போட்டவுடன் அவனுடைய இன்ஷ்யூரன்ஸ், பேங்க் சேமிப்பு இவற்றை, விள்ளாமல் விரியாமல் தான் கல்லா கட்டுவதில் ஏதேனும் சிக்கல் இருக்குமா என்று ஆலோசனை கேட்டு தெளிவுபடுத்திக் கொள்கிறார் இந்த பெண்குல விளக்கு. குடும்ப வாழ்க்கை எப்படி நன்றாக நடத்துவது போன்ற ஆலோசனைகள் எல்லாம் அனாவசியம், இதுதானப்பா தலையாய விஷயம்! அப்படி அந்த சோப்பிளாங்கி சாகாமல் அழும்பு பண்ணினால் இருக்கவே இருக்கிறது 498A, D.v.Act போன்ற ஆயுதங்கள். போட்டுத் தள்ளிட மாட்டோமா!

தேவைதான்!

சுயம்வரம், மேட்ரிமனி என்று காசு பார்க்கும் திருமண வியாபாரக் கடைக்காரர்களே இது போன்ற ஆலோசனைகளை இனிமேல் வழங்கி ஒரு பாவமும் அறியாத அபலைப் பெண்களுக்கு சேவை செய்யத் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்!

கணவனைக் கொல்ல மனைவிக்கு சட்டப்படி உரிமை தேவை

கனவனை மனைவி கொன்றால் அது குற்றமல்ல என்னும் சட்டத்திருத்தம் உடனடியாக கொண்டுவரப்பட வேண்டும். இதற்காக அனைத்து பெண்ணியவாத அமைப்புக்களும் கட்டாயம் பாடுபடவேண்டும். தற்போதுள்ள சட்டங்களின் அடிப்படையில் திருமணமான ஏழு ஆண்டு காலத்தில் மனைவி இறந்தால் அது கணவன் மற்றும் அவனது பெற்றோர் செய்த கொடுமையால்தான் என்று அனுமானிக்கபட்டு, ஆர்.டி.ஓ விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. யாரேனும் அது வரதட்சணை போன்ற கொடுமையால்தான் நிகழ்ந்தது என்று சந்தேகப்பட்டாலும் படாவிட்டாலும், முன்தீர்மானம் செய்து கொண்டு அவர்களைத் தண்டிக்க வேண்டும் (presumptive Section 113B of the Evidence Act) என்பது சட்டம்.

தவிர குடும்ப வன்முறைக் குற்றங்களிலிருந்து மனைவிக்கு முழுவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிரது. D.V.Act என்னும் குடும்ப வன்முறைச் சட்டத்தின் கட்டமைப்பின்படி கணவன் முகத்தைத் திருப்பிக் கொண்டாலோ, கேள்விக்கு பதில் கூறாமல் இருந்தாலோ, மனைவியின் எந்த ஒரு தேவைக்கும் - அது உபயோகமற்ற டம்பாசாரித் தேவையாயிருந்தால் கூட - பணம் கொடுக்க மறுத்தாலோ அது குடும்ப வன்முறையாகக் கருதப்பட்டு கணவன் தண்டிக்கப்படுவான். ஆனால் மனைவி கணவனை அடித்தாலும், வெட்டினாலும், கெட்ட வார்த்தை கொண்டு திட்டினாலும், உணவிட மறுத்தாலும், பிறரோடு ஒப்பிட்டு தன்மானத்தை இழக்கும் வகையில் மனம் புண்படுத்தினாலும், கணவன் எதிரிலேயே இன்னொருவனுடன் செக்ஸ் உறவு கொண்டாலும் அந்த மனைவி என்னும் புனித பிம்பத்தின்மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க சட்டத்தில் இடமே கிடையாது! ஏனெனில் ஆணென்பவன் பிறவியிலேயே ஒரு கிரிமினல். வன்முறை என்பதை அவன் தான் செய்வான்; பெண்ணுக்கு செக்ஸ் ஆசையே கிடையாது; வெறிபிடித்தலைபவன் ஆணே. பெண் ஒரு அபலை. மெல்லியலாள். ஒரு பாவமும் அறியாதவள். அவள் கொலை செய்தால் கூட அவளைக் கொலை செய்யத் தூண்டியவர்கள் மிதுதான் குற்றம். இதுதான் இத்தகைய ஒருதலைச் சார்புச் சட்டங்களை இயற்றியவர்கள் மற்றும், அதற்கு ஒருபடி மேலேயே போய் தீர்ப்பளிப்பவர்கள் ஆகியோர் மனத்தில் பதிந்துள்ள கருத்தியல்.

ஆனால் இது போதாது. மனைவியின் பலவகைப்பட்ட (variety) செக்ஸ் தேடலுக்காக கள்ளக்காதல் அவசியம் தேவையாய் இருக்கிறது. ஒரே புருஷனுடன் எத்தனை நாள் இருப்பது. அதனால் அந்த புதுமைப் பெண்ணுக்கு மாற்று சுகம் கிட்ட வைக்கும் கடமை கணவனுக்கு உண்டு என்பதை இந்த சமுதாயம் இன்னும் அங்கீகரிக்காமல் இருப்பதே ஒரு ஆணாதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடு.

மேலும் அப்படி கள்ளக்காதலில் ஒரு மனைவி ஈடுபடும்போது அவளுடைய முட்டாள் கணவன் அதை எதிர்த்தால் அவனைத் தீர்த்துக் கட்ட வேண்டியிருக்கிறது. அதனால் இப்போதுள்ள ஆணாதிக்க சட்டங்களின் அடிப்படையில் கணவனை மனைவி கொல்வது குற்றமாகக் கருதப்படுகிறது. அதனால் மனைவிக்கு குற்றவாளி என்னும் பட்டம் சூட்டப்படுகிறது. இது அபாண்டம். இதை எதிர்த்து பெண்ணிய அமைப்புக்கள் கட்டாயம் போராட வேண்டும். தற்போது ஆச்சி மனோரமா அம்மையார்தான் இதைக் கையிலெடுத்துப் போராடத் துணிந்திருக்கிறார்கள் அதற்காக தற்கால முழு விடுதலை பெற்ற இளம் பெண்கள் பலர் அவருக்குக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

மேலும் தமிழக பெண்கள் வாரியத் தலைவர் ராமாத்தாள் அவர்களும் மணமான பெண்கள் இன்னொருவனோடு உறவு வைத்துக் கொள்வதை "கள்ளக்காதல்" என்று அழைக்கக் கூடாது என்று கூறியிருக்கிறார். இது மிகவும் சமூக முக்கியத்துவம் வாய்ந்த கூற்று. இத்தகைய அணுகுமுறை பெண்களின் விடுதலைக்கும் பெண்கள் முன்னேற்றத்திற்கும் வெகுவாகப் பயனளிக்கும் என்பது திண்ணம்.

ஆகையால் சீக்கிரமே கண்வனைக் கொல்ல மனைவிக்கு முழு சுதந்திரம் அளிக்கும் சட்டம் இயற்றப்படும் என்று எதிர்பார்த்து, கணவனை மண்ணெண்ணை ஊற்றிக் கொன்ற வீராங்கனையைப் பற்றியும், கோழைத்தனமாக தற்கொலை செய்து கொண்ட ஒரு கணவன் பற்றிய செய்தியையும் இங்கு இடுகிறேன்.

அவர்களின் சாவுக்கு மனைவிகளின் நடத்தைதான் காரணம் என்று நீங்கள் எண்ணினால் அது உங்களது ஆணாதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடு எனவும், அவ்வாறு எண்ணியதற்காக நீங்கள் சீக்கிறமே சிறைக்குச் செல்ல நேரிடும் என்றும் எச்சரிக்கப்படுகிறீர்கள்!

இப்போது செய்திகள்:-

1. உலக ஆண்கள் தினத்தன்று போலீஸ் அதிகாரி மனைவியால் கொளுத்தப்பட்டார்
செய்தி: டெக்கான் கிரானிக்கிள் (http://www.deccanchronicle.com/national/asi-set-fire-wife-intl-mens-day-751)

ஒரு சிறிய வாய்த் தகராறினல் கோபப்பட்டு ஒரு போலீஸ் அதிகாரியின் மனைவி கணவன் மீது மண்ணெண்ணையை ஊற்றிக் கொளுத்தி விட்டார். இது நடந்தது 19-11-2009 வியாழனன்று.

மனைவியால் இது போல் தீ வைத்து எறிக்கப்பட்டவர் 52 வயதான பலவந்த் பவார் எனப்படும் உதவி சார்-கண்காணிப்பாளர் (Assistant Sub-Inspector). கொளுத்தப்பட்ட அவர் தன் உடலின் 85% பகுதி எறிந்த நிலையில் ஔரங்காபாதிலுள்ள அரசு மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்.

இந்த தீவைக்கும் நிகழ்வு உலக ஆண்கள் தினத்தன்று நடந்தது ஒரு முரண்நகையே!

முதல்நாள் இரவு அவர்கள் இருவருக்குமிடையே ஏதோ வாக்குவாதம் நடந்ததாகவும், மறுநாள் கணவன் வீட்டுக்குள் நுழைந்ததும் மனைவி அவர்மேல் மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துவிட்டதாகவும் போலீசார் கூறுகின்றனர்.

அந்த கணவன் வேலை பார்ப்பது MIDC Cidco காவல் நிலையம்

========================================

2.

காரிமங்கலம் அருகே புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை
போலீசார் விசாரணை

காரிமங்கலம்,நவ.21 - 2009. தினத்தந்தி

காரிமங்கலம் அருகே புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுமாப்பிள்ளை

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள மொளப்பனஅள்ளியை சேர்ந்தவர் காவேரி. விவசாயி. இவரது மகன் காளியப்பன்(வயது 22). இவருக்கும் காரிமங்கலம் அருகே உள்ள பாறையூரைச் சேர்ந்த சித்ரா(19) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. காளியப்பனுக்கு வயிற்று வலி இருந்து வந்ததாக தெரிகிறது.

நேற்று முன்தினம் காளியப்பனின் பாட்டி இறந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த காளியப்பன் மனைவி சித்ராவிடம் சாப்பாடு கொண்டு வரும்படி கேட்டதாக தெரிகிறது. சித்ரா கணவருக்கு சாப்பாடு கொடுக்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. மேலும் வயிற்று வலியும் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கி கிடந்தார்.

பரிதாப சாவு

வீட்டில் இருந்து வெளியில் வந்த சித்ரா, கணவர் காளியப்பன் மயங்கி கிடப்தை கண்டு அதிர்ச்சி அடைந்து அருகில் சென்று பார்த்துள்ளார். அப்போது அவருக்கு அருகில் பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில் இருப்பதை கண்டு தனது மாமனார் காவேரிக்கு தகவல் கொடுத்தார். அவர் வந்து காளியப்பனை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காரிமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=528612&disdate=11/21/2009&advt=2

பெண்கள் இன்னமும் அடிமைகளாகத்தான் இருக்கிறார்கள்

ஆமாம், இந்த ஆணாதிக்க சமுதாயம் பெண்களுக்கு சுதந்திரம் ஏதும் கொடுக்காமல் கற்பு, பண்பாடு என்ற பழைய பஞ்சாங்கங்களைப் பேசிக்கொண்டு பெண்களை அடக்கி அபலைகளாக ஆக்கிக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் தொடர்ந்து திருமணமான இளம் பெண்கள் குடும்ப வன்முறையினால் பாதிக்கப் படுகிறார்கள். இன்னமும் கணவனுக்காக சமையல் செய்யச் சொல்லும் கொடுமை நடக்கிறது. தனிக்குடுத்தனம் செல்ல தைரியமில்லாத பல கோழை கணவர்கள் உள்ளனர். இவர்களை அடித்து ஜெயிலில் தள்ள வேண்டும். இப்போதுள்ள சட்டங்களின் கடுமை போதாது. ஆணாகப் பிறந்ததே குற்றம் என்று சட்டமியற்றி பிறந்த உடனேயே உள்ளே தள்ள வேண்டும். பிறகு காயடித்து செக்கு மாடுகளாக மாற்றி பெண்களின் அடிமைச் சேவகம் செய்ய வெளியே அனுப்ப வேண்டும்.

ஆகையால் இந்தியப் பெண்களே, அடங்க மறுங்கள்! பொங்கி எழுங்கள்! கள்ளக் காதல் உங்கள் பிறப்புரிமை! வாழ்க ஆச்சி மனோரமா!!



நன்றி: குமுதம்

பொய்ப் புகார் கொடுத்து ஆட்டிப் படைக்கும் பெண்கள் : விடுபட தேசிய ஆண்கள் ஆணையம் தேவை

சென்னை : தினமலர் - நவம்பர் 20,2009

"புகார் மேல் புகார் கொடுத்து இஷ்டம் போல் ஆட்டிப் படைக்கும் பெண்களிடமிருந்து விடுபட, தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும்' என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு ஆண் கள் பாதுகாப்பு சங்கம், சென்னையில் ஆர்ப்பாட் டம் நடத்தியது. நாடு முழுவதும் ஆண்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் தங்களின் கோரிக் கைகளை வலியுறுத்தி, சென்னை மெமோரியல் ஹால் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

சங்கத்தின் மாநில தலைவர் அருள் துமிலன் தலைமை வகித்தார். "பெண்கள் கொடுக்கும் போலியான வரதட்சணை புகார்களின் மீது வழக்கு பதிவு செய்யக்கூடாது; வரதட்சணைக் கொடுமையில் சிக்கும் அரசு ஊழியர் களை பணி நீக்கம் செய்யக் கூடாது; கள்ளக்காதல் கொலைகளைத் தடுக்க இந்திய தண்டனைச் சட்டம் 497ல் திருத்தம் செய்து, ஆண், பெண் இருவருக்கும் தண்டனை வழங்க வேண்டும். புகார் மேல் புகார்களைக் கொடுத்து இஷ்டம் போல் ஆட்டி வைக்கும் பெண்களிடமிருந்து விடுபட, தேசிய ஆண்கள் ஆணையத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும்; இந்திய கலாசாரத் திற்கும், குடும்ப அமைப்புகளுக்கும் எதிராக 2005ல் கொண்டு வரப்பட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்' என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், ஏராளமான ஆண்கள் பங்கேற்றனர்.

சங்கத்தின் தலைவர் அருள் துமிலன் பேசுகையில், "சமூகத்தில் ஆண்களுக்கு பெண்களால் ஏற்படும் கொடுமைகள் அதிகம். ஆண்கள் வெளியில் சொல்வதில்லை. சொன்னாலும் நிவாரணம் கிடைப்பதில்லை. பெண்களால் பாதிக்கப்படும் ஆண்களுக்கு சங்கத் தின் மூலம் சட்ட உதவியும், பாதுகாப்பும் தருகிறோம். ஆண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் சங்கம் தொடர்ந்து ஈடுபடும். தேசிய ஆண்கள் ஆணையம் அமைய வேண்டியதன் அவசியத்தை மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம்' என்றார்.

உலக ஆண்கள் நாள் தர்ணா

இன்று உலக ஆண்கள் தினம் சென்னையில் அகில இந்திய ஆண்கள் நலச் சங்கம் (AIMWA)மற்றும் ஆண்கள் உரிமை பாதுகாப்புச் சங்கம் இவற்றின் ஆதரவில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. கோரிக்கைகளைக் கொண்ட கையேடுகள் நகரத்தில் பல இடங்களில் வினியோகிக்கப் பட்டன. பின்னர் "மெமோரியல் ஹால்" எதிரில் தர்ணா மற்றும் கோஷமிடுதலும் நடைபெற்றது. அவற்றின் முழு விவரங்கள் படங்களுடன் நாளை வெளிவரும்.

இன்று வினியோகிக்கப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய கையேட்டை இங்கு காணலாம்:



அகில இந்திய ஆண்கள் நலச் சங்கத்தின் உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்களை இதன்கீழ் காணலாம். மனைவியின் கொடுமையாலும் வன்முறையாலும் பாதிக்கப்படும் ஆண்களும் அவர்களது பெற்றோர், உடன்பிறந்தோர் மற்றும் உறவினர்களும் இந்த எண்களில் தொடர்பு கொண்டு இலவச உதவி பெறலாம்.

முக்கிய அறிவிப்பு:

இவர்கள் அனைவரும் இது போன்ற கொடுங்கோன்மைச் சட்டங்களின் தவறான பயன்பாட்டாலும் பொய் வழக்குகளாலும் கெடுமதி கொண்ட மனைவிகளின் கைகளில் சிக்கி பாதிக்கப்பட்ட தன்னார்வலர்கள். வக்கீல்களல்ல!

பிரபல பெண் சாராய வியாபாரி கைது

இந்தச் செய்தி அப்பட்டமான பொய்! நம்பாதீர்கள்!

பெண்கள் தவறே செய்ய மாட்டார்கள். குற்றம் செய்வது ஆண் மட்டும் தான்!
பெண்கள் அனைவருமே அபலைகள்! அவர்கள் கேட்கும் போது ஆண்கள் பணம் கொடுத்து அழவேண்டும். அதுதான் இந்நாட்டின் சட்டம்!! அதுதான் நீதியின் தீர்ப்பு!!

இப்போது செய்தி:

சென்னை, நவ.19 - 2009. செய்தி: தினத்தந்தி

அண்டாவில் வைத்து நள்ளிரவில் கூவி, கூவி வியாபாரம்

அரசு மதுவில் அதிக போதைக்காக ரசாயன பவுடர் கலந்து விற்பனை

பிரபல பெண் சாராய வியாபாரி கைது

அரசு மதுவில் அதிக போதைக்காக ரசாயன பவுடர் கலந்து விற்பனை செய்த பிரபல பெண் சாராய வியாபாரி கைது செய்யப்பட்டார்.

சாராய வியாபாரி அப்பம்மா

சென்னை வால்டாக்ஸ் ரோடு பகுதியில் உள்ள ஜமரா தோட்டத்தில் வசிப்பவர் அப்பம்மா(வயது 40). பிரபல சாராய வியாபாரியான இவர் 4 முறை ஜெயிலுக்கு போய் இருக்கிறார். இவர் தற்போது அரசு மது பாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து, நள்ளிரவில் அந்த மது பாட்டில்களை திறந்து அதில் உள்ள மதுவை அண்டாவில் ஊற்றி, பின்னர் அதில் தண்ணீரையும் ஊற்றி, அடுத்து அதில் அதிக போதைக்காக ரசாயன பவுடரையும் கலந்து "குவாட்டர்'' பாட்டில் ரூ.100-க்கு விற்பனை செய்வதாக அப்பம்மா மீது போலீசாருக்கு ரகசிய புகார் தெரிவிக்கப்பட்டது.

அப்பம்மாவை கையும், களவுமாக பிடித்து கைது செய்ய இணை கமிஷனர் சேஷசாயி உத்தரவிட்டார்.துணை கமிஷனர் பெரியய்யா, உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மேற்பார்வையில் பூக்கடை இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் இதற்காக தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது.

கைதானார்

நேற்று முன்தினம் நள்ளிரவில் அப்பம்மா அதிக போதை மதுவை அண்டாவில் வைத்து கூவி, கூவி, விற்கும் போது தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

ருசி கண்ட பூனை திரிக்கும் கயிறு!

பாதிரியார் கற்பழித்ததாக போலீசில் பெண் புகார்
நவம்பர் 18,2009. தினமலர்

திருச்சி : பாதிரியார் தன்னை கற்பழித்ததோடு, கொலை மிரட்டலும் விடுப்பதாக, பாதிக்கப்பட்ட பெண் (!), திருச்சி மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீசில், பூங்கோதை நேற்று அளித்த புகார் மனு விவரம்:

சிதம்பரத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகளான நான், சில ஆண்டுக்கு முன், சுந்தரவேல் என்பவரை காதலித்து திருமணம் செய்தேன். வரதட்சணை விவகாரம் தொடர்பாக கணவரை பிரிந்து வாழ்ந்தேன்.

திருச்சி செவன்த் டே கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்த பாதிரியார் சுதாகர், நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் உள்ள சிறுவர் விடுதியில், காப்பாளராக எனக்கு வேலை வாங்கிக் கொடுத்தார். இதை பயன்படுத்தி, அடிக்கடி அங்கு வந்த பாதிரியார் சுதாகர், கட்டாயப்படுத்தி என்னை கற்பழித்தார் ("அடிக்கடி" கற்பழிக்கும்போது இவர் என்ன செய்து கொண்டிருந்தார்? அதிருக்கட்டும் இவர் பாஷையில் "கற்பு" என்றால் என்ன அர்த்தம்? பதில்: இப்படித்தான் புகார் எழுதணும். அப்பத்தான் ரேப் செக்ஷன் சேர்க்கலாம்!).

வேறு ஒருவருக்கு என்னை திருமணம் (என்ன ஆச்சு முதல் புருஷன்? விவாகரத்து ஆச்சா இல்லையா?) செய்து வைத்த பாதிரியார், அதன்பிறகும் கட்டாய உறவை தொடர்ந்தார் (அடடா! இந்தப்பெண் பாவைக்குத் தெரியாமலெயே தொடர்ந்தாரா! அதெப்படி "கட்டாய உறவை" தொடர்ந்து செய்ய முடியும்? அதாவது, இவருக்கு அந்தப் பாதிரியாரின் உதவி தேவையாயிருந்த வரையில் அது நல்ல உறவு. வேலை முடிந்தவுடன் கட்டாய உறவு. உடனே போலீஸில் புகார். என்னய்யா "கற்பு" இது! ).

இதன் விளைவால் கர்ப்பம் தரித்த நிலையில், பெண் குழந்தை ஒன்று இறந்து பிறந்தது. இதன் பிறகும், பாதிரியாரின் செக்ஸ் டார்ச்சர் தாங்க முடியவில்லை (எவ்வளவு நாளா நடக்குதாம்?). இதனால், கணவருடன் அங்கிருந்து வெளியேறியதோடு, பாதிரியாரின் செயல் குறித்து ஓசூரில் உள்ள தலைமை அலுவலக நிர்வாகியிடம் புகார் கொடுத்தேன். ஆத்திரமடைந்த பாதிரியார், அடியாட்கள் உதவியுடன் என்னை அடித்து துன்புறுத்தினார். கட்டாயப்படுத்தி கற்பழித்ததோடு, கொலை மிரட்டலும் விடுத்து வரும் பாதிரியார் சுதாகர் மற்றும் அவருக்கு உறுதுணையாக உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளார் (ஏன் இப்ப புகார்? உள் கதை என்ன?).

பூங்கோதையின் புகார் குறித்து, திருச்சி மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.

ஆண்களுக்கென்று ஒரு நாள்!

அகில உலக ஆண்கள் தினம் (International Men's Day) நாளை (19-11-2009) அன்று கொண்டாடப்படுகிறது. இது 1999-இல் மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள டிரினிடாட் & டொபாகோ நாட்டில் தொடங்கப்பட்டது. ஐ.நா-வால் அங்கீகரிக்கப்பட்ட தினமாகவும் இது விளங்குகிறது.

உலகில் ஆண்களைக் கெளரவப்படுத்தவும் ஆண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு கருதியும் இது கொண்டாடப்படுகிறது. மகத்தான தியாகங்கள் பல புரிந்து வரும் ஆண்குலத்தின் பெருமையை சமுதாயம் அங்கீகரிக்க இந்த நாள் ஒரு நினைவு படுத்தும் நாளாகவும் அமைகிறது.

இவ்வாண்டுக்கான உலக ஆண்கள் தினம் (International Men's Day) 2009 நவம்பர் 19-ம் நாள் இந்தியா மற்றும் உலக நாடுகள் அனைத்திலும் அனுசரிக்கிறார்கள். அன்றைய தினம் இந்தியாவில் டில்லி, மும்பை, லக்னௌ, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை போன்ற பல நகரங்களில் தர்ணாவும் ஊர்வலமும் நிகழ்த்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

ஆண்களுக்கென்று ஏன் ஒரு தனியான நாள் கொண்டாடப்பட வேண்டும் என்னும் கேள்வி இன்னும் சிலருக்கு எழுகிறது. சிறப்பான செயல்பாடுகள் அனைத்துமே பெண்களை முன்னிறுத்தித்தான் செய்யப்பட வேண்டும் என்னும் மனப்போக்கு மக்கள் மனத்தில் ஆழப் பதிந்து நிற்கிறது. ஆணுக்கும் பிரச்னைகள் உண்டு, அவனுக்கும் தீமைகள் இழைக்கப் படுகின்றன என்பதை அங்கீகரிக்கவே ஒரு போராட்டம் நடத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது!

சென்னையில் நாளை (19-11-2009) அன்று காலை அகில இந்திய ஆண்கள் நல சங்கம் - "AIMWA" (All India Men's Welfare Association) சில ஆண்கள் கல்லூரிகளுக்குச் சென்று கொள்கை விளக்கக் கையேடுகளை வினியோகம் செய்வர். பிறகு கார், மற்றும் இரு சக்கர ஊர்தியில் ஊர்வலமாகச் சென்று "ஆண்கள் பாதுகாப்பு இயக்கம்" நிகழ்த்தப் போகும் தர்ணாவில் கலந்து கொள்வர்.

இந்த தர்ணா நாளை (19-11-2009) காலை 11-00 மணி முதல் 12-00 மணி வரை சென்னை பார்க் டவுன் "மெமோரியல் ஹால்" எதிரில் நிகழ இருக்கிறது. இந்த இடம் சென்னை பொது மருத்துவ மனைக்கு எதிரிலும், இன்னொரு பக்கம் பார்க் டவுன் அஞ்சல் நிலையத்திற்கு எதிரிலும் உள்ளது.

ஆர்வமுள்ளவர்கள் சென்று பங்கெடுத்துக் கொள்ளலாம்.

நாளை இது பற்றி ஒரு செய்திக் குறிப்பும் வெளியாகும்.

நன்றி.

மூன்று பெண் குழந்தைகளின் தாய் கள்ளக்காதலுக்கு பலி!

பெரும்பாலான 498A பொய் வழக்குகளுக்கு பெண்களின் கள்ளக்காதலே அடிப்படைக் காரணியாக அமைந்திருப்பதைக் காண முடிகிறது. மேலும் சில பெண்ணியவாத அமைப்புகளும், மனோரமா போன்ற திடீர் சமூக சேவகிகளும் பெண்களின் பாலியல் தேவைகளைப் பற்றியும், ஆண்களின் ஆண்மை விறைப்புத் தன்மையைப் பற்றியும் பேட்டி கொடுத்துக் கொண்டு இத்தகைய கள்ளக்காதல்களுக்கு ஒரு அங்கீகாரத்தையும் தெய்வீகத்தனமையையும் ஊட்ட முயற்சித்து வருகிறார்கள் என்பது வருந்தத்தக்க விஷயம்.

ஆனால் அத்தகைய கள்ள உறவுகளால் விளையும் தீங்குகளைப் பற்றி இவர்கள் எவருக்கும் அக்கறையில்லை. கள்ளக்காதல் புரியும் பெண்களின் குழந்தைகளின் நிலை என்ன? அது போல் கள்ளக்காதல் கிளிகள் பெற்ற குழந்தைகள் தனக்குப் பிறந்தவைதானா என்ற ஐயப்பாட்டை மறக்க இயலாமல் புழுங்கிச் சாகும் கட்டிய கணவன் மனநிலை எப்படி இருக்கும்? அந்தக் குழந்தைகள் வளரப்போகும் சூழல்,அவர்களின் உளநிலை இவற்றைப் பற்றி கவலைப் படுவோர் எவர்?

எப்படியாவது நம் பாரம்பரிய குடும்பக் கட்டமைப்பை முழுமையாக சிதைத்து, அனைவரையும் தனி நபர்களாக ஆக்கி, கட்டுப்பாடற்ற செக்ஸ் கொள்ள வைத்து, சர்வதேச வர்த்தக நிறுவனங்களின் கல்லாவை உப்பிவிக்கும் நோக்கத்தில் செயல்படும் ஒரு பயங்கரமான போக்குதான் தற்போது நிலவுகிறது.

ஆனால் இந்தக் கள்ளக்காதல் கதைகள் பல கொலைகளில் முடிவதைக் காண்கிறோம். பெரும்பாலும் அந்த அப்பாவி கணவன், இல்லையேல் கள்ளக்காதலன், சில நேரங்களீல் கள்ளக்காதல் செய்யும் "அபலை" - இப்படி பல நிகழ்வுகள்.

அத்தகைய ஒரு கொலைச் செய்தியைத்தான் இப்போது காணப் போகிறோம். (ஓரிரு நாட்களாக கள்ளக்காதல் செய்திகளுக்கு லீவு விட்டிருந்தார்கள். இப்போது தொடங்கி விட்டனர் புதுக் கணக்கை!)


கள்ளக்காதலியை எரித்து கொன்றவரை காட்டிகொடுத்த மொபைல்போன்
நவம்பர் 18,2009 - தினமலர் (சுட்டி)

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே கள்ளக்காதலியை எரித்து கொன்றவரை போலீசார் கைது செய்தனர். இவர் நீண்டநேரம் மொபைல்போன் பேசியதை வைத்து போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

அருப்புக்கோட்டை- விருதுநகர் ரோடுபுதுகண்மாய் அருகே கடந்த மாதம் ஒரு பெண் அரை குறையாக எரிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரணை செய்து வந்தனர். இதை அறிந்து,விருதுநகர் அருகே மையிட்டான்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி,போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து, காணாமல் போன தன் மனைவி நாகரத்தினம் பற்றிய விவரங்களை கூறினார். போலீசார் விவரங்களை கூறியவுடன் தன் மனைவிபோல் இருக்கிறது என்றார். பின்னர், போலீசார் அவரை விசாரிக்கையில், நாகரத்தினம் மொபைல் போன் மற்றும் நகைகள் அணிந்து சென்றதை கூறினார். போலீசார் அந்த மொபைல்போன் எண்ணை வாங்கி சம்பந்தப்பட்ட மொபைல்போன் அலுவலகத்தில் விசாரணை செய்கையில் குறிப்பிட்ட எண்ணில் அதிக நேரம் பேசியது தெரிய வந்தது. அந்த எண்ணை வைத்து முகவரியை விசாரித்த போது, அது விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்த கணேசமூர்த்தியின் எண் என தெரிய வந்தது. போலீசார் கணேசமூர்த்தியை பிடித்து விசாரித்தனர்.

அதில், அவர் விருதுநகரில் உள்ள ஒரு தனியார் மில்லில் காவலராக வேலை செய்துவந்தார். அதே மில்லில் வேலை பார்த்து வந்த நாகரத்தினத்துடன் ஒரு ஆண்டாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. கடந்த மாதம் 22 ஆம் தேதி இருவரும் டூ வீலரில் அருப்புக்கோட்டையில் சினிமா பார்த்து விட்டு, பின் விருதுநகர் ரோட்டிலுள்ள புதுகண்மாய் அருகே பேசி கொண்டிருந்தனர். நாகரத்தினம் கணேசமூர்த்தியை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். இதில் ஆத்திரடைந்த கணேசமூர்த்தி, தான் வைத்திருந்த துண்டால் நாகரத்தினத்தின் கழுத்தை இறுக்கியுள்ளார். இதில் அவர் மயக்கமடைந்தார். அவர் கழுத்திலிருந்த ஆறு சவரன் நகை மற்றும் மொபைல்போனை எடுத்து கொண்டு, தன் டூ வீலரில் வைத்திருந்த பெட்ரோலை நாகரத்தினத்தின் மீது ஊற்றி தீ வைத்து விட்டு ஓடி விட்டார். போலீசார் கணேசமூர்த்தியை கைது செய்தனர். இறந்த நாகரத்தினத்திற்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். கணேசமூர்த்திக்கு திருமணமாகி, அவரது மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மன்னிக்க முடியாத குற்றம்!

ஆஞ்சனேயரை வணங்கிவிட்டு தன் அருமை மகனுடன் சிரித்துக்கொண்டு நிற்கும் இந்த அம்மையாருக்கு வயது சுமார் 60 இருக்கும். ஆனால் அவர்கள் முகத்தில் நீங்கள் காணும் மகிழ்ச்சி நெடுநாள் நீடிக்கவில்லை. ஏன்? என்னதான் நடந்தது?

பெங்களூரில் வசிக்கும் இவர் வீட்டுக் கதவு ஒருநாள் நள்ளிரவில் திடீரென்று தட்டப்பட்டது. அதிரடியாக உள்ளே நுழைந்தனர் சென்னையைச் சேர்ந்த சுமார் பதினோரு போலீசார். அவர்கள் இவரது முடியைப் பிடித்து அடித்து குண்டுக் கட்டாக அவர்கள் வந்த வண்டியில் தூக்கிப் போட்டு, பலநூறு கிலோமீட்டர் தூரம் இரவோடு இரவாக பொட்டலம் கட்டி இழுத்து வந்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

ஏன் இந்த அவசரம்? அவர் என்ன உலகம் முழுதும் தேடப்படும் ஒரு பயங்கரவாதியா? எங்காவது குண்டு வைத்தாரா?

ஐயோ, உங்களுக்கு என்ன தெரியும் - அந்த அம்மையார் சாதாரண குற்றத்தையா செய்திருக்கிறார்! கேட்டால் அதிர்ந்துபோய் அந்த நடவடிக்கை சரியானதுதான் என்பதை நீங்கள் உடனே ஒப்புக் கொள்வீர்கள். "எல்லாம் தெரிந்த" பெண்ணியவாத போலி அறிவுஜீவிகள் கூட அது சரிதான் என்பர்!

அந்த வயது முதிர்ந்த அம்மணியை அப்படி அடாவடியாகக் கைது செய்து இழுத்து வந்து சிறையிலடைக்காமல் மட்டும் இருந்திருந்தால் நம் நாட்டின் பாதுகாப்பு என்ன ஆகியிருக்கும், சட்டம், ஒழுங்கு என்ன கதியாகியிருக்கும், நினைத்துப் பாருங்கள்!

அப்படி அந்தப் பெண்மணி செய்ததாகச் சாட்டப் பட்டிருக்கும் குற்றம்தான் என்ன?

நம் நாட்டில் புகுந்து நம் நாட்டு அப்பாவி மக்களை இஷ்டப்படி சுட்டுப் பொசுக்கிவிட்டு, தற்போது நம் வரிப்பணத்தில் (சுட்டி) ஜெயிலில் சுக வாழ்க்கையை அனுபவித்து வரும் அஜ்மல் கசாப் போன்று தீவிரவாதம் ஏதாவது செய்தாரா?

சர்க்காருக்குச் சொந்தமான நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலத்தை கபளிகரம் செய்து ஏப்பம் விட்டாரா?

இன்னொருவர் நிலத்தை அபகரிக்க அதன் சொந்தக்காரரை மிரட்டினாரா?

2000 கோடி ஹவாலா மோசடி செய்தாரா?

57 கோடி ரூபாய் பி.எஃப் (PF) மோசடி செய்தாரா?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்காரர்கள் குற்றம் சாட்டும் (சுட்டி) 60,000 கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்தாரா?

இதெல்லாம் செய்திருந்தால்தான் பரவாயில்லையே. சாதாரணக் குற்றம்தானே என்று அவரை சும்மா விட்டிருக்கலாமே, அல்லது ஆசுபத்திரியில் படுக்க வைத்து ஃபிலிம் காட்டியிருக்கலாமே!

அவர் இவற்றையெல்லாம் விட மிகக் கொடிய பாதகம் அல்லவா புரிந்திருக்கிறார்!

அவர் செய்துள்ள அக்குற்றத்தின் முழுப் பரிமாணத்தை நீங்கள் அறிய வேண்டுமென்றால் சமீபத்தில் நம் நாட்டின் உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ள அதிகாரபூர்வ சுற்றறிக்கையை நீங்கள் அவசியம் வாசிக்க வேண்டும்.

அந்த சுற்றறிக்கை அப்படி என்னதான் சொல்கிறது?

"IPC Sec 498A சட்டம் பரவலாக தவறாக பயன்படுத்தப் படுகிறது. ஆகையால் ஒரு மனைவி புகார் கொடுத்தவுடன் அதில் சுட்டிய மனிதர்களைக் கைது செய்யாதீர்கள்."

இப்படி ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் (498A போன்று) 7 ஆண்டுகளுக்குக் குறைவாக தண்டனை விதிக்கப் பட்டிருக்கும் குற்றங்களின் அடிப்படையில் புகார் வந்தால் கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தடை விதித்து ஒரு சட்ட மாற்றத்தை இந்திய அரசின் சட்ட அமைச்சகத்தினர் கொண்டுவந்தார்கள். காரணம், பல லட்சக் கணக்கானவர்கள் சிறுசிறு குற்றம் புரிந்தவர்களாக குற்றம் சாட்டப்பட்டதால் கைது செய்ய்யப்பட்டு, ஆண்டுக் கணக்கில் ஒரு தீர்வும் இல்லமல் சிறையில் வாடுகிறார்கள்; அதனால் தனி மனித சுதந்திரம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது; சிறைகள் நிரம்பி வழிகின்றன; அரசுக்கு வெட்டிச் செலவும் ஆகிறது என்பதால் இதனைத் தடுக்க இந்த சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அத்திருத்தம் பாராளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரும் அதற்கு ஒப்புதல் அளித்துவிட்டார். ஆனால் இன்னமும் அந்த சட்டத் திருத்தம் ஒரு முறையான அரசு ஆணைமூலம் நடைமுறைக்குக் கொண்டு வரப்படவில்லை. காரணம்? வக்கீல்கள் தங்கள் வருமானம் போய்விடுமே என்று அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்களாம் (சுட்டி). இப்படிச் சொல்வது யார்? உள்துறை அமைச்சர் திரு. சிதம்பரம் அவர்கள்தான்! (மேல் விவரங்கள் இங்கே)

சரி, இந்த அரசாணையை நடைமுறைப் படுத்த வேண்டிய அமைச்சகம் எது? மத்திய உள்துறை அமைச்சகம்தான். ஏன் இன்னமும் அதை சட்ட பூர்வமாக்காமல் நாடாளுமன்றத்தையே கேலிக் கூத்தாக ஆக்கிக் கொண்டிருகிறார்கள்? அரசின் கடமை மக்களின் நன்மையை கருத்தில் கொள்வதா அல்லது பொய்க்கேசுகள் மூலம் ஜாமீன் எடுப்பது, ஈரங்கி வாங்குவது போன்ற வகைகளில் கட்சிக்காரர்களின் தலையைத் தடவி சில வக்கீல்கள் சம்பாதிப்பதற்குத் துணை போவதா? நீங்கள் இந்தக் கேள்வியை அமைச்சராவதற்குமுன் வக்கீல் தொழில் செய்தவராகிய தற்போதைய உள்துறை அமைச்சர் சிதம்பரம் அவர்களைத்தான் கேட்கவேண்டும்! (அவருடைய மனைவி திருமதி. சிதம்பரம் அவர்களும் ஒரு வக்கீல்தான் என்பது இங்கு தொடர்பில்லாத விஷயம்!)

இப்போது இந்த சுற்றறிக்கை மூலம் திரு. சிதம்பரம் அமைச்சராக இருக்கும் உள்துறை அமைச்சகம் இந்தச் சட்டம் வெகுவாக துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்று் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறது! சட்டத் திருத்ததை அமுல் செய்யாமல் வெறும் சுற்றறிக்கை விட்டுக் கொண்டிருப்பதன் மர்மம் என்ன?

மேற்குறிப்பிட்ட சுற்றறிக்கையில் கண்டுள்ள மேல் விவரங்களைப் பார்ப்போம்:-

In a communication sent to the Chief Secretaries and DGPs of all states and the Administrations of the Union Territories on October 13, the MHA has cited misuse of the clause.

“In some cases, every member of the husband’s family has been arrested, irrespective of whether they had a role in inflicting cruelty on the married woman or not. In some cases, the provisions have been used to settle personal scores. Cases have been reported where momentary anger has resulted in invocation of Section 498A, which resulted in the arrest of the members of the family shutting down any possibility of reconciliation in future and total collapse of the marriage. Even where there is a divorce proceeding, the case under Section 498A continues to persist because of the offence being non-compoundable,” the letter says.

இந்த 498A சட்டத்தின் துஷ்பிரயோகத்தால் அத்தகைய பொய்க் கேசு போடும் பெண்களின் கதி கடைசியில் என்ன ஆகிறது என்ப்தைப் பற்றி இந்தக் கடிதம் என்ன சொல்கிறது என்ப்தைப் பார்த்தீர்கள் அல்லவா! தீயது விதைத்தால் நல்லதா விளையும்!

சரி. அரசே ஒப்புக் கொள்கிறது. இந்த சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்றும், அதனால் பெண்கள் நலனே பதிக்கப்படுகிறது என்றும். பிறகு இந்த சட்டத்தைத் திருத்துவதுதானே?

இந்தக் கேள்விக்கு அந்தக் கடிதமே பதில் சொல்கிறது பாருங்கள்:-

The MHA letter, incidentally, says that in light of judicial pronouncements, an attempt was made earlier to find a via media by amending Section 498A to make the offence compoundable. “However, this could not be pursued because of the opposition from women organisations,” the letter says.

இப்பொது புரிகிறதா, வில்லன்கள் யாரென்று?

ஒரு சட்டத்திருத்தத்தை பாரளுமன்றம் நிறைவேற்றியும் வக்கீல்களின் வருமானத்தைக் காப்பாற்றுவதற்காக நிறுத்தி வைத்துள்ளனர்.

இன்னொரு சட்டத் திருத்தம் கொண்டுவருவதை பெண்ணிய இயக்கங்கள் "தங்கள் வருமானம் போய்விடுமே" என்ற பயத்தில் எதிர்ப்பதால் நிறுத்தி வைத்துள்ளார்கள்!

மக்களைப் பற்றி இவர்களுக்கு என்ன கவலை. It is evident that the government is playing into the hands of certain vested interests.

இந்த 498A சட்டம் முழுமையாக் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்று இதற்கு முன்னமையே ஒப்புக் கொண்டு அறிக்கை விட்டுள்ளவர்கள் யார்யார்?
  1. நம் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் அவர்கள்
  2. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் அவர்கள்
  3. இதை சட்டபூர்வ பயங்கரவாதம் என்று குறிப்பிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திரு.அர்ஜித் பசாயத் மற்றும் திரு.ஹெச்.கே.சீமா அவர்கள்
  4. ஆற்காடு இளவரசர் நவாப் முகம்மது அப்துல் அலி அவர்கள்

மற்றும் பல நீதிபதிகள், அரசியல்வாதிகள், மக்கள் நலத்தில் உண்மையான அக்கறை கொண்டோர்...

இதுதான் நம் நாட்டின் நிலைமை.

இது புரியாமல் பல ஜொள்ளுக் கிழங்கள் " ஐயகோ, பல அப்பாவி இளம் பெண்கள் இந்த ஆணாதிக்க சமூகத்தில் அபலைகளாக அலைகிறார்களே" என்று பிலாக்கணம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தச் சட்டத் திருத்தங்கள் நடைமுறைக்கு வரும் வரையில் மேலே நீங்கள் கண்ட படத்திலிருக்கும் வயதான அம்மமையார் போன்ற அப்பாவி முதியோர்களும், திருமணம் செய்து கொண்ட பாவத்திற்காக இளம் கணவர்களும், அவர்களின் சுற்றமும் சூழலும் ஒட்டு மொத்தமாகக் கைதாகி ஜெயிலுக்குப் போய்க்கொண்டிருக்க வேண்டியதுதான்!

ஆம். அந்த அம்மையார் ஒரு ஆணைப் பெற்றெடுத்து அவனுக்கு திருமணமும் செய்வித்த மன்னிக்க முடியாத குற்றத்தைத்தான் செய்துள்ளார்! அவர் நிச்சயம் கைது செய்யப்பட வேண்டியவர்தான் என்பதை இப்போது ஒப்புக் கொள்கிறீர்கள் அல்லவா?!

அவர் அனுபவித்த கொடுமைகளைப் பட்டியலிட்டு காவல் துறைத் தலைவருக்கு வடித்துள்ள கடிதத்தின் மூலம் அந்த சோகக்கதையை அறியலாம். நெஞ்சை திடப்படுத்திக் கொண்டு இங்கிருந்து அதனை டவுன்லோடு செய்து வாசியுங்கள்.

உங்கள் மனத்தில் தற்போது எழப்போகும் கேள்விகள்:-

  • தேசிய பெண்கள் வாரியத்தின் நோக்கில் இந்த முதிய அம்மையார் பெண்ணினத்தில் சேர்ந்தவராகக் கருத்தப்பட மாட்டாரா?

  • அது போன்ற இயக்கங்கள் தவறு செய்யும் பெண்களுக்காகத் தானா?

  • ஆண் பிள்ளையைப் பெறுவதே இந்நாட்டில் பெருங்குற்றமா?

  • இதுபோல் ஒருதலைச் சார்பான சட்டங்களின் தவறான பயன்பாடு இன்னும் அதிகமாகப் பெருகி ஒரு கட்டத்தில் சமூகக் கிளர்ச்சி ஒன்று ஏற்படும் அபாயம் உள்ளதே, ஏன் ஒருவரும் இதற்கான தீர்வை செயல்படுத்த மறுக்கிறார்கள்?

  • இந்நாட்டு ஆண்களைப் பொறுத்தவரை திருமணம் என்பதே பாம்புப் புற்றில் கைவிடுவது போன்று ஆகிவிட்டதே; சீக்கிறமே ஆண்சிசுக் கொலைகள் நடக்கத் தொடங்கிவிடுமா?"


பதில் உங்கள் கையில்!

இடியாப்பச் சிக்கல்

ராஜபாளையம், அக்.23- 2009

ராஜபாளையம் அருகே முகவூர் மாடசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் மாடசாமி (வயது22). இவரும் சங்கரன் கோவில் தாலுகா பந்தல்குடி கிராமத்தை சேர்ந்த கடல்கனியும்(20) காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடல்கனிக்கு அவரது பெற்றோர் வேறு இடத்தில் திருமணம் செய்து வைத்தனர். திருமணம் ஆனாலும் கடல்கனிக்கும், மாடசாமிக்கும் இடையே தொடர்பு இருந்தது.

பின்னர் சில ஆண்டுகளில் கடல்கனி தனது கணவரை பிரிந்து விட்டார். இதன்பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாடசாமியை திருமணம் செய்து கொண்டார்.

அப்போது கடல்கனி கர்ப்பமாக இருந்ததாக தெரிகிறது. மாடசாமியும், கடல்கனியும் தனிக்குடித் தனமாக வசித்து வந்தனர். இந்தநிலையில் கடல்கனிக்கு சில மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு தான் தந்தை இல்லை என மாடசாமி கருதினார்.

இதனால் கடல்கனியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை பிரிந்துவிட முடிவு செய்தார். ஆனால் கடல்கனி மாடசாமிக்கு தான் குழந்தை பிறந்தது என கூறினார். இதனால் இரண்டு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து மாடசாமி முகவூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். அங்கு அவருக்கு 2-வது திருமணம் செய்ய முயற்சி மேற்கொண்டனர்.

இந்த திருமணம் அவருக்கு நேற்று நடப்பதாக இருந்தது. இதையறிந்த கடல்கனி முகவூருக்கு தனது கைக்குழந்தையுடன் வந்தார். பின்னர் கணவர் மாடசாமி 2-வது திருமணம் செய்தால் கைக்குழந்தையுடன் உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் கடல்கனியை தளவாய்புரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

பலரும் அறிய காதல் லீலை - பாழாகிறது சமூக ஒழுங்கு

இது போன்ற குஜால் குமாரிகள் ஒவ்வொருவரும் இளம் வயதிலேயே அனைத்து சல்லாப சுகங்களையும் அனுபவித்து முடித்தபின், நல்ல பிள்ளை போல் நடித்து இன்னொரு விட்டில் பூச்சி ஆணைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள். "பேஷான ஜாதகம் போங்கோ. தசவிதப் பொருத்தமும் என்னமா அமைஞ்சிருக்கு" என்று புருடா விடும் ஜோசியனை நம்பியும், "அப்படியே மகாலட்சுமி மாதிரி இருக்காள்" என்று அசடு வழியும் கிழங்களின் சொற்படியும், ஒன்றையும் விசாரிக்காமல் இந்த ஜல்சா குமாரிகளை மணந்து கொள்ளப்போகிறார்கள் சில முட்டாள் ஆண்கள்.

இந்தப் பெண்களோ பழைய சல்லாபங்களை மறக்க முடியாததால் இல்லற வாழ்வில் மனம் பதிக்க மறுத்து கணவன் வீட்டிலிருந்து ஓட்டம் பிடித்துவிட்டு, அவனிடமிருந்து பணம் கறப்பதற்காக, "என் கணவனுக்கு ஆண்மை போதவில்லை. நான் செக்ஸில் திருப்தியே அடையவில்லை. அதனால் கணவன் எனக்கு 2 கோடி ரூபாய் கொடுக்கவேண்டும்" என்றும், "என்னை வரதட்சணை கேட்டு கணவன் வீட்டில் இருக்கும் 6 மாதக் குழந்தை தொடங்கி அவர்கள் வீட்டில் என்னைக் கடித்த கொசு வரையில் அனைவரும் பெரும் கொடுமை செய்தனர்" என்றும் புகார் கொடுப்பார்கள். மேலும் அதில் உப்பு, காரம் சேர்ப்பதற்காக, "கணவனுடைய 80 வயதான (தன் கையையே தூக்கச் சீவனில்லாத) தந்தை என்னைக் கையைப் பிடித்து இழுத்தார்", "75 வயதான என் மாமியார் 25 வயதான என்னை உதைத்தார்" என்று அந்தப் புகாரை அலங்காரம் செய்வார்கள். முத்தாய்ப்பாக, "இத்தகைய கொடுமைகளை எனக்கு இழைத்ததால் Sec 498A சட்டப்படி அவர்களைக் கைது செய்து உள்ளே போட வேண்டும். மேலும் அவர்கள் வீட்டை எனக்குக் கொடுத்துவிட்டு அவர்கள் நடுத்தெருவில் நிற்க வேண்டும். தவிர எனக்கு மாதா மாதம் 1 லட்ச ரூபாய் மெயிண்டெனன்ஸ் கொடுக்க வேண்டும்" இப்படிச் சொல்லிக் கேசு போட்டு நாற அடிப்பார்கள்.

உடனே அந்த லிஸ்டில் கண்ட அனைவரும் ஒரு வெள்ளிக்கிழமை சகல சௌபாக்கியங்களும் நிறைந்த நன்னாளின் நள்ளிரவில் கைது செய்யப்படும் சிறப்பும் நடந்தேறும். மேலும் இவர்கள் கேட்ட பணத்தையெல்லாம் கொடுக்கச் சொல்லி ஆணைகளும் வழங்கப்படும்!

இது போன்ற காதல் லீலைகள்தான் எதிர்வரும் கள்ளக்காதல், 498A, விவாகரத்து போன்ற சடங்குகளுக்கு அடித்தளம்!

சரி. இப்போது இன்றைய(நவம்பர் 11,2009)தினமலர் இணைய இதழில் வெளிவந்துள்ள சமூகப் பிரக்ஞையை வெளிப்படுத்தும் இந்தக் கட்டுரையை வாசியுங்கள். மேலும் அதன் இணையப் பக்கத்தில் கட்டுரைக்குக் கீழே நம் மக்கள் பதிந்துள்ள கருத்துரைகளையும் சற்றே காணுங்கள்!

அதன் சுட்டி இதோ.
----------------------

கோவை மாநகராட்சி வ.உ.சி. பூங்கா மற்றும் மிருகக்காட்சி சாலையில் ஆண், பெண் ஜோடிகள் பொது இடமென்றும் பாராமல் ஒழுங்கீனமான செயலில் ஈடுபடுகின்றனர். சமூக ஒழுங்கை சீர்குலையச் செய்யும் இவர்களை, மாநகராட்சி நிர்வாகமும், போலீசும் வேடிக்கை பார்ப்பது மக்களை முகம் சுழிக்க வைக்கிறது.

கோவை நகரவாசிகள், பள்ளி மாணவ, மாணவியரின் பிரதான பொழுது போக்கும் இடம் வ.உ.சி. பூங்கா மற்றும் மிருகக் காட்சி சாலை. பூங்கா மாலை 4.00 மணிக்கு திறக்கப்படுகிறது. மிருகக் காட்சிசாலை, செவ்வாய் தவிர பிற நாட்களில் காலை 10.00 முதல் மாலை 7.00 மணி வரை செயல்படுகிறது. மிருகக் காட்சிசாலையை பார்வையிட நகர் பகுதி பள்ளிகளில் இருந்து மட்டுமின்றி, புறநகர் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியரும் அதிகம் வருகின்றனர்.

ஒழுங்கீன செயல்கள்:

வ.உ. சி., பூங்கா மாலை 4.00 மணிக்கு திறக்கப்பட்டதும் ஆண், பெண் ஜோடிகள் நுழைந்து ஆங்காங்கு ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். புல்வெளியில், புதர் மறைவில், மரத்தின் பின்னால் என பல இடங்களிலும் தனியாக அமர்ந்து சேஷ்டையில் ஈடுபடுகின்றனர். ஒருவர் மீது ஒருவர் சாய்ந்தும், மடியில் படுத்தபடியும் காதல் விளையாட்டு புரிகின்றனர். இவர்களில் பலரும் வெளியூரைச் சேர்ந்தவர்கள் என்பதால், பூங்காவுக்கு வருவோரை பற்றிய எவ்வித கவலையும் கொள்வதில்லை. சமீபத்தில், இது போன்ற ஜோடிகளின் அத்துமீறல் அதிகரித்ததை தொடர்ந்து, ரேஸ் கோர்ஸ் போலீசுக்கு அதிகளவில் புகார்கள் சென்றன. மாலை நேரத்தில் திடீர் ரெய்டு நடத்திய போலீசார், பூங்காவில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்டிருந்த ஜோடிகளை பிடித்து கடும் எச்சரிக்கைக்கு பின் அனுப்பினர். ஓரிரு நாட்கள் போலீஸ் கண்காணிப்பும் தொடர்ந்த காரணத்தால், ஜோடிகளின் சில்மிஷ வேலைகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன. பின்னாளில் போலீசாரின் கண்காணிப்பு படிப்படியாக குறைந்து, தற்போது அத்துமீறல்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. இதை வேடிக்கை பார்த்து ரசிக்கவும், மொபைல் போன் கேமராவில் படம் பிடிக்கவும் சில வாலிபர்கள் சுற்றித்திரிகின்றனர்; சில ஜோடிகளை படம் பிடித்து மொபைல் போனில் பதிவு செய்யப்பட்ட போட்டோவை காண்பித்து மிரட்டி பணம் பறித்த சம்பவங்களும் நடந் துள்ளன. எனினும் ஆண், பெண் ஜோடிகள் வருவது குறைந்தபாடில்லை.

மாணவர்கள் "கட்':

வ.உ.சி., பூங்காவில் காதல் ஜோடிகளின் சில்மிஷ செயல்கள் ஒரு புறம் அதிகரித்திருக்க, மறுபுறம் பள்ளி மாணவர்கள் வகுப்பை "கட்' அடித்துவிட்டு, பூங்கா மற்றும் வ.உ.சி.,மைதானத்தில் சுற்றித்திரிவதும் அதிகம் நடக்கிறது. புத்தக மூட்டைகளை மைதானத்தின் ஓரத்தில் வைத்துவிட்டு, அங்குள்ள விளையாட்டு உபகரணங்களில் விளையாடுகின்றனர். மாலை நேரத்தில் பள்ளி வகுப்பு முடிந்து செல்வதை போல, வீட்டுக்கு கிளம்பிச் செல்கின்றனர். இந்த மாணவர்களில் சிலர் புகை பிடிக்கும் செயலிலும் ஈடுபடுகின்றனர்.

கஞ்சா ஆசாமிகள்:

கஞ்சா விற்கும் நபர்கள், பாலியல் தொழிலுக்கு ஆள் பிடிக்கும் புரோக்கர் நடமாட்டமும் வ.உ.சி., பூங்கா மற்றும் மைதானம் பகுதியில் அதிகரித்துள்ளது. கையில் "பேக்'குடன் சுற்றித் திரியும் நபர்கள் கஞ்சா பொட்டலங்களை திறந்தவெளியில் சர்வ சாதாரணமாக விற்கின்றனர். இதை வாங்கவும் "வாடிக்கையாளர்கள்' வருகின்றனர். இவர்கள், பள்ளி மாணவர்களிடம் பேச்சுக் கொடுப்பதால், மாணவர்களையும் கஞ்சா புகைக்கும் பழக்கம் தொற்றிக் கொள்ளும் அபாயமிருக்கிறது. இது போன்ற சட்டவிரோத செயல்களை தடுக்கவும், பொதுமக்கள் வந்து செல்லும் வ.உ.சி. பார்க்கில் ஆண், பெண் ஜோடிகளின் அத்துமீறலை முடிவுக்கு கொண்டு வரவும் மாநகர போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பது அவசியம்.

ஆசிரியை ஆவேசம்:

வ.உ.சி. பூங்காவுக்கு பள்ளிக் குழந்தைகளை அழைத்து வந்திருந்த ஆசிரியை கூறியதாவது:

வ.உ.சி. பூங்கா மட்டுமின்றி, மிருகக் காட்சி சாலை வளாகத்திலும் சிலர் ஜோடி, ஜோடியாக அமர்ந்துள்ளனர். பலரும் தங்களை கவனிப்பார்களே, என்ற கூச்சம் கூட அவர்களிடம் இல்லாதது கவலை அளிக்கிறது. மிருகங்களை பார்வையிட பள்ளிக் குழந்தைகளை அழைத்து வந்தால், இது போன்ற ஜோடிகள் தான் அதிகம் இருக்கின்றனர். இவர்களை பிள்ளைகள் வேடிக்கை பார்த்தபடி செல்லும்போது, நாங்கள் கண்டித்து அவர்களின் பார்வையை திசைதிருப்ப வேண்டியுள்ளது. இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண, கோவை மாநகராட்சி நிர்வாகம், கூடுதல் காவலாளிகளை நியமித்து கண்காணிக்கலாம். சில்மிஷ செயலில் ஈடுபடுவோரை, பார்க்கில் இருந்து வெளியேற்ற வேண்டும் அல்லது, பிடித்து போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு, ஆசிரியை தெரிவித்தார்.

"எனக்கு கணவரே தேவையில்லை, தீர்த்துக் கட்டிவிடு"

கள்ளக்காதல் கொலைகள் நிகழும் வேகத்தைப் பார்த்தால் இன்னும் சில நாட்களில் அனைத்து நாளிதழ் மற்றும் வேறுபல ஊடங்களிலும் கள்ளக்காதல் மற்றும் அதனால் நிகழும் கொலைகள் பற்றிய செய்திகள்தான் நிரம்பி இருக்கும் போலிருக்கிறது!

ஆமாம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகமும், அரசு வரிப்பணத்தில் அரசியல்வாதிகளாலும் பணக்காரப் பெண்மணிகளாலும் நிரப்பப்பட்டுள்ள "தேசிய பெண்கள் வாரியமும்" (National Commission for Women) என்ன செய்கின்றன? இந்த "கள்ளக்காதல்" (Adultery) சீக்கு பன்றிக்காய்ச்சலை விட வேகமாகப் பரவி, பல உயிர்களைப் பலி வாங்கிக் கொண்டிருக்கிறதே. இதைத் தடுக்க ஏதேனும் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டாமா?

இந்தக் கள்ளக்காதல் சோரம் போகும் அவலத்திற்கு ஆகும் முதல் நரபலி அந்தப் பெண்குலத் திலகத்தின் கணவன் தான்! அவன் தப்பித்தால், சில கேசுகளில் எக்குத்தப்பாக அந்தக் கள்ளக்காதலிகளும் பரிதாபமாக பலியாகிறார்கள்.

ஆனால், இந்த கள்ளக்காதல் கேவலங்களினால் நிகழும் மிகவும் பரிதாபத்திற்குறிய இழப்பு, இடையில் சிக்கி பலியாகும் குழந்தகள்தான்! இதைப்பற்றி எவரும் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. அனைத்து இயக்கங்களும், பெண்கள் அமைப்புக்களும், பெண்கள் வாரியங்களும் அந்தக் கள்ளக்காதல் மனைவிகளின் உரிமைகளைப் பற்றித்தான் கவலைப் படுகிறார்கள், கடமைகளைப் பற்றியல்ல. அவர்கள்தம் செக்ஸ் தேடுதலில் முழுத் திருப்தி அடைவதுதான் சமூகத்தின் முக்கியத் தேவை என்பது போல மனோரமா போன்ற திடீர் சமூக சேவகிகளும் பேசி வருகிறார்களேயன்றி ஒரு பாவமும் அறியாத இந்தக் குழந்தைகளின் நிலையைப் பற்றி யாரும் சிறிதளவேனும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. கணவன்மார்களின் "ஆண்மைக் குறைபாடு" பற்றி இயக்கம் நடத்தப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுக் கொண்டிருக்கும் மனோரமா அம்மையார் ஏனிந்தக் குழந்தைகளின் நிலையைப் பற்றிக் கவலைப்படக் கூடாது?

இந்த நிலைக்கு முக்கிய காரணம் கள்ளக் காதல் (Adultery) தொடர்பான சட்டங்கள் ஒரு தலைப் பட்சமாக அமைந்திருப்பதுதான். கள்ளக்காதல் செய்யும் பெண்கள் மீது ஒருவித நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது என்பதுதான் இப்போதிருக்கும் சட்டம். ஏனெனில் பெண்கள் அப்பாவிகள், ஒரு பாவமும் அறியாத அபலைகள். அவர்கள் வலைதான் விரிப்பார்கள்; ஆண்மகன் தான் காமாந்தகாரன், சண்டாளன், வெறி பிடித்தலைபவன்; அவன் வந்து சிக்கினால் அது அவன் குற்றம். இதுதான் இத்தகைய சட்டங்களின் அடிப்படை கருத்தாக்கம்!

Sec. 497 of Indian Penal Code:- "Adultery"

Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.


இதுதான் கள்ளக்காதல் தொடர்பான சட்டம். இது ஒருதலை சார்பாக உள்ளது எனவும் இதைத் திருத்தம் செய்து, தவறு செய்யும் ஆண், பெண் இருவருக்கும் சமமாகப் பொருந்தும்படியாக மாற்றியமைக்க வேண்டும் என்று நீதிபதி மலிமத் கமிட்டி மற்றும் சட்டக் கமிஷன் பரிந்துரை அளித்த பின்னும் தேசிய பெண்கள் வாரியமும் பல வலிமை வாய்ந்த இயக்கங்களும் சேர்ந்து எதிர்ப்பதால் அது இன்னமும் திருத்தப் படாமல் இருக்கிறது! (சுட்டி)

சரி. உங்களுக்கு இன்றைய கள்ளக்காதல் கோட்டா இதோ:-

மயிலாடுதுறை அருகே பயங்கரம்:
பரோலில் வந்த ஆயுள் கைதி கள்ளக்காதல் தகராறில் படுகொலை
மனைவி உள்பட 6 பேர் கைது

நாகப்பட்டினம், நவ.12 - 2009. செய்தி - தினத்தந்தி. (சுட்டி இதோ)

கள்ளக்காதல் தகராறில் பரோலில் வெளியே வந்த ஆயுள் சிறைக் கைதி கொலை செய்யப்பட்டார்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த மணல்மேடு அருகே கழுக்காணிமுட்டம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்மோகன் (வயது 42). இவர் ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் இருந்து வந்தார்.

சமீபத்தில் பரோலில் வந்த ராஜ்மோகன் பரோல் காலம் முடிந்து மீண்டும் ஜெயிலுக்கு செல்லவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் மணல்மேடு அருகே உள்ள ஆத்தூர் கிராமத்தை சேர்ந்த பாலையா ஆத்தூர் கிராம நிர்வாக அலுவலர் தென்னரசுவிடம் நேரில் ஆஜராகி ராஜ்மோகனை கொலை செய்து அவரது பிணத்தை ஒரு வயலில் புதைத்துள்ளதாக தெரிவித்தார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கிராம நிர்வாக அலுவலர், பாலையாவை மணல்மேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலையாவை கைது செய்தனர். அப்போது பாலையா போலீசாரிடம் கூறியதாவது:-

கள்ளக்காதல்

நானும், ராஜ்மோகனும் திருச்சி மத்திய சிறையில் இருந்த போது நண்பர்களானோம். அந்த நேரத்தில் பரோலில் நான் வெளிவந்த போது ராஜ்மோகன் வீட்டிற்கு சென்று அவரது மனைவி இந்துமதிக்கு பணம் கொடுத்து உதவினேன்.

அதில் இந்துமதியுடன் எனக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இந்த விஷயம் ராஜ்மோகனுக்கு தெரிந்து இந்துமதியை துன்புறுத்தினார்.

இதனை தொடர்ந்து இந்துமதி எனக்கு கணவரே தேவையில்லை, அதனால் ராஜ்மோகனை தீர்த்து கட்டிவிடு என்று என்னிடம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து மயிலாடுதுறையில் ராஜ்மோகனை தற்செயலாக நான் சந்தித்தேன். அப்போது ராஜ்மோகன் தனக்கு பணம் தேவை என்று என்னிடம் தெரிவித்தார்.

உடனே நான் ஆத்தூர் கிராமத்தில் உள்ள எனது வீட்டிற்கு வந்து பணத்தை வாங்கி செல்லும்படி ராஜ்மோகனிடம் கூறினேன். அதன்படி ராஜ்மோகன் எனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். பின்னர் நானும், எனது நண்பர்களும், ராஜ்மோகனுடன் சேர்ந்து மது அருந்தினோம்.

அப்போது ராஜ்மோகனுக்கு அதிகமாக மதுவை, ஊற்றி கொடுத்தோம். இதில் நிலைதடுமாறி மயக்க நிலையில் இருந்த ராஜ்மோகனை நானும், எனது நண்பர்களும் மறைத்து வைத்திருந்த உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கினோம். இதில் நிலைக்குலைந்த ராஜ்மோகன் சம்பவ இடத்திலேயே செத்தார்.

இதனையடுத்து ராஜ்மோகன் உடலை ஆத்தூரில் உள்ள ஒரு வயலில் குழித்தோண்டி எனது நண்பர்கள் உதவியுடன் புதைத்துவிட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து கொலை செய்து புதைக்கப்பட்ட ராஜ்மோகன் பிணத்தை தோண்டி எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி நேற்று மதியம் புதைக்கப்பட்ட இடத்தை பாலையன் அடையாளம் காட்டினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்வர் தயாள், தாசில்தார் ஜோதிலிங்கம் ஆகியோர் முன்னிலையில் பிணம் தோண்டி எடுக்கப்பட்டது. ராஜ்மோகன் பிணத்தை குடும்பத்தினர் அடையாளம் காட்டினர்.

6 பேர் கைது

ராஜ்மோகன் கொலைச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து பாலையா, அவரது நண்பர்கள் சிவராஜன், ராமலிங்கம், செல்வராஜ், உத்திரங்குடி கலியமூர்த்தி மற்றும் கொலை செய்யப்பட்ட ராஜ்மோகனின் மனைவி இந்துமதி ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.

பெருகுது 498A அறுவடை, ரொம்புது கல்லா!

கீழ்க்கண்ட புகார்களின் நடைமுறைக்கு ஒவ்வாத "டெம்பிளேட்" தன்மையையும், கற்பனை வளத்தையும், வெளிநாடுகளில் இதுபோன்ற பொய் வழக்கு ஜோடனைகளின் பருப்பு வேகாது என்பதால் அங்கு நடந்தவைக்கு நம்மூரில் வந்து புகார் கொடுக்கும் அவலத்தையும் காணுங்கள். இங்குதானே "ஐயோ பாவம், அபலைப் பெண்கள்" என்று கண்ணீர் விட்டுக் கதறி உருக வைத்து, "உன்னுடன் வாழாத மனைவி கேட்கும் ரொக்கத்தைக் கொடு, இல்லாவிடில் ஜெயிலுக்குப் போ" என்று உத்தரவுகள் பெற்று, ஆண்களை இலவச ஏ.டி.எம் மெஷீனாக மாற்றும் சடங்கு நடக்கும்!

தினந்தோறும் அறங்கேற்றப்படும் நம் புதுமைப் பெண்களின் புனிதத்தன்மையைக் கண்டு களித்து கலியாணம் செய்து கொண்டு வயதான பெற்றோருடன் கூட்டாக கைது செய்யப்பட்டு ஜெயிலுக்குப் போங்கள்!

1.
அருப்புக்கோட்டையில் இளம்பெண்ணிடம் வரதட்சணை கொடுமை; 4 பேர் மீது வழக்கு

அருப்புக்கோட்டை, நவ.10 - 2009. தினத்தந்தி

அருப்புக்கோட்டை அருகே வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக கணவன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய் யப்பட்டுள்ளது.

திருமணம்

அருப்புக்கோட்டை நல்லூர் முஸ்லிம் வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் செய்யது அலிபாத் திமா (வயது 22). இவருக்கும் அஜீஸ்நகர் பஜீருல் ஹக் என்பவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, மணமகள் வீட்டார் சார்பில் 10 பவுன் நகையும், 70 ஆயிரம் ரொக்கமும் தருவதாக பேசப்பட்டது. ஆனால் அப்போது 10 பவுன் நகையும், 16 ஆயிரம் ரொக்கமும் கொடுக்கப்பட் டது. மீதி ரொக்கப்பணத்தை 2 மாதம் கழித்து தருவதாக மணமகள் வீட்டார் சார்பில் பேசப்பட்டதாக தெரிகிறது.

கொடுமை

ஆனால் அதன்படி மீதி பணத்தை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இத னால் மீதி பணத்தை வாங்கி வரும்படி செய்யது அலி பாத்திமாவை கணவர்பஜீருல் ஹக், அவரது தாயார் ஆயிஷா பீவி, அண்ணன் காட்டுபாவா, தம்பிரியாஸ் ஆகியோர் துன் புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து செய்யது அலி பாத்திமா அருப்புக் கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்குப்பதிவு செய்து

பஜீருல் ஹக் உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.

2.
வரதட்சணை கொடுமை: கணவர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு

திண்டுக்கல்,அக்.28 - 2009. தினத்தந்தி

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக, கணவர் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வரதட்சணை கொடுமை

திண்டுக்கல் மீனாட்சி நாயக்கன்பட்டி வடக்குபாறைப்பட்டியை சேர்ந்தவர் கவிதா (வயது 24). இவருக்கும், மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த சங்கர் (30) என்பவருக்கும் இடையே கடந்த 3.12.2009-ந்தேதியன்று திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 27 பவுன் தங்கநகை மற்றும் ரூ.45 ஆயிரம் ரொக்கபணம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. இதற்கிடையே கவிதா கறுப்பாக இருப்பதாகவும், படிக்கவில்லை என்றும் கூறி சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் கூறியதாக தெரிகிறது.

மேலும் கூடுதலாக 15 பவுன் தங்கநகை மற்றும் மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு ரூ.25 ஆயிரம் பணம் கேட்டு வீட்டை விட்டு விரட்டி விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திண்டுக்கல் 2-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கவிதா மனுதாக்கல் செய்தார்.

பெண் கைது

இந்த மனுவினை விசாரித்த மாஜிஸ்திரேட்டு உமாராணி, புகார் கூறிய சங்கர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கீதாதேவி புகார் கூறப்பட்ட சங்கர், அவரது தாயார் கமலா (57), உறவினர்கள் பாமா (38), பாக்கியலெட்சுமி (35), சுதர்கனா தேவி (46), ராஜேந்திரன் (46), ரகுநாதன் (40) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தார். இதில் திண்டுக்கல் முருகபவனத்தை சேர்ந்த சுதர்கனாதேவியை நேற்று போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

3.
தனி அறையில் அடைத்து கொடுமை: லண்டன் கணவர் மீது மனைவி புகார்

நவம்பர் 08,2009. தினமலர்

காரைக்குடி: வரதட்சணை கேட்டு தனி அறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய கணவர் உட்பட மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த பிரதீபாவுக்கும் (23), கல்லலை சேர்ந்த சண்முகம் மகன் ராமநாதனுக்கும் (29) கடந்த 2007 ல் திருமணம் நடந்தது.

கணவர் குடும்பத்தினர் லண்டனில் தொழில் செய்து வந்தனர். சில மாதங்களில் பிரதீபா அங்கு சென்றார்.ஐந்து லட்ச ரூபாய் வரதட்சணை கேட்டு, அங்கு தனி அறையில் பிரதீபா அடைக்கப்பட்டார். கணவருடன் தொடர்பு இல்லாத நிலையில், பெற்றோரிடம் பேசவும் தடை விதித்தனர். அங்குள்ள உறவினர்கள் உதவியுடன் கடந்த டிசம்பரில் பிரதீபா நாடு திரும்பினார்.கணவருடன் சேர்த்து வைக்க கோரி சென்னை குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். தற்போது நிலுவையில் உள்ளது.

கடந்த ஒன்றாம் தேதி லண்டனில் இருந்து பிரதீபாவின் மாமனார் சண்முகம், மாமியார் வசந்தா நாடு திரும்பினர். அவர்களிடம் பிரதீபாவின் பெற்றோர் பேச்சு நடத்தினர்.ஐந்து லட்ச ரூபாய் வரதட்சணை கொடுத்தால் மகனோடு சேர்ந்து வைப்பதாக கூறினர்.இதுகுறித்து காரைக்குடி மகளிர் போலீசில் பிரதீபா புகார் செய்தார்.கணவர் ராமநாதன்,அவரது பெற்றோர் மீது இன்ஸ்பெக்டர் ஜோஸ்பின் அமலராணி வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்.

4.
ஐதராபாத்தில் வரதட்சணை கொடுமை புகார்

கோவை : ஐதராபாத்தில் கணவர் குடும்பத்தினரால் துன்புறுத்தப்பட்ட பெண், நடவடிக்கை கோரி கோவை போலீசில் புகார் கொடுத்தார்.கோவைப்புதூர், சிறுவாணி நகரைச் சேர்ந்தவர் தேவா(32). இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த சுமலதா(28)வுக்கும் 2007ல் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பின் தேவா தனது குடும்பத்துடன் ஐதராபாத், குருமூர்த்தி லேன் பகுதியில் குடியேறினார்.சில நாட்களுக்கு முன், ஐதராபாத்திலிருந்து பெற்றோர் வீட்டுக்கு திரும்பிய சுமலதா, தன்னை கணவரும், அவரது குடும்பத்தினரும் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாகத் தெரிவித்தார். இது தொடர்பாக குனியமுத்தூர் போலீசில் சுமலதா புகார் கொடுத்தார். அதில், கணவர் தேவா, மாமியார் பட்டம்மாள், மாமனார் ராஜகோபால் மற்றும் உறுவினர் ரோகிணி ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

வழக்குப்பதிவு செய்த கோவை போலீசார், சம்பவம் நடந்த இடம் ஐதராபாத் என்பதால், மேல் நடவடிக்கைக்காக, முதல் தகவல் அறிக்கையை ஐதராபாத் போலீசாருக்கு அனுப்பி வைத்தனர்.

5.
வரதட்சணை கேட்டு மிரட்டல்:
பெண் வக்கீலை ஏமாற்றி திருமணம் செய்த போலி வக்கீல் கைது

சென்னை, அக்.25- 2009. செய்தி - தினத்தந்தி

பெண் வக்கீலை ஏமாற்றி திருமணம் செய்ததுடன், வரதட்சணை கேட்டு மிரட்டிய 'போலி' வக்கீல் கைது செய்யப்பட்டார்.

பெண் வக்கீல்

தஞ்சாவூர் முனிசிபல் காலனியை சேர்ந்தவர் மோசஸ். இவருடைய மகள் உஷா மோசஸ் (வயது 39). சென்னையில் வக்கீலாக வேலைபார்த்து வருகிறார். உஷா மோசஸ் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் கடந்த 2004-ம் ஆண்டு சென்னை ஜார்ஜ் டவுண் கோர்ட்டில் வக்கீல் ஒருவரிடம் ஜுனியராக வேலை பார்த்தேன். அப்போது மற்றொரு வக்கீல் ஒருவரின் அலுவலகத்தில் வேலைபார்த்து வந்த ஸ்ரீராமுலு என்ற பால் ஸ்ரீராம் (34) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஸ்ரீ ராமுலு திருத்தணி கிருஷ்ணசமுத்திரம் காலனி பகுதியை சேர்ந்தவர். வக்கீல் தொழில் பார்த்து வருவதாக கூறினார். அதற்கான அடையாள அட்டையையும் காண்பித்தார். அவருடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது.

மோசடி

அதைத் தொடர்ந்து ஸ்ரீ ராமுலுவும் நானும் திருமணம் செய்ய முடிவு செய்தோம். திருத்தணியில் கிறிஸ்தவ முறைப்படி எங்களுடைய திருமணம் 14.9.2005 அன்று நடந்தது. அதன் பிறகு சென்னை வரத முத்தையப்பன் தெருவில் வசித்து வந்தோம். திருமணத்திற்கு பிறகுதான் அவர் போலி வக்கீல் என்பது தெரியவந்தது.

பி.ஏ. பொருளாதாரம் படித்துள்ள ஸ்ரீராமுலு, ஆந்திர மாநிலத்தில் உள்ள சட்டக்கல்லூரி ஒன்றில் படிக்க சேர்ந்ததுடன் சரி, பட்டம் எதுவும் வாங்கவில்லை. எந்த கோர்ட்டிலும் வாதாடவில்லை என்பது தெரியவந்தது. இந்த மோசடி குறித்து கேட்ட போது, என்னுடன் தங்குவதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில், எனக்கு குழந்தை பிறக்கவில்லை என்பதை காரணம் காட்டி, தன்னுடைய சகோதரி மகள் சரிதா என்பவரை 2-வது திருமணம் செய்யப்போவதாக ஸ்ரீராமுலு கூறினார்.

இந்த நிலையில், ஸ்ரீராமுலு சரிதாவை எனக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். இது பற்றி அவரிடம் கேட்டதற்கு, என்னுடன் வாழ வேண்டும் என்றால் அதிக வரதட்சணை கொடுக்க வேண்டும் என்று மிரட்டி வருகிறார். அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு உஷா மோசஸ் புகாரில் கூறியிருந்தார்.

இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் இணை கமிஷனர் சேஷசாயி, துணை கமிஷனர் பெரியய்யா ஆகியோர் மேற்பார்வையில் கொத்தவால்சாவடி இன்ஸ்பெக்டர் ஹரிக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். ஸ்ரீராமுலு மீது 406, 420, 467 பிரிவு 4, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டம் (இது எங்கிருந்து வந்தது!) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கைது

விசாரணையில் ஸ்ரீராமுலு திருத்தணியில் நடந்த அடிதடி வழக்கு ஒன்றில் தொடர்புடையவர் என்பதும், தன்னை போலீசார் தேடுகிறார்கள் என்பதை அறிந்தால் அவரை தலைமறைவாகி விடலாம் என்பதால் அவரை 'பொறி' வைத்து பிடிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஸ்ரீராமுலுவிடம் செல்போன் மூலம் உஷா மோசஸ் பேசினார்.

இனிமேல் சண்டை போடமாட்டேன் என்றும் கேட்ட வரதட்சணை பணத்தை தருவதாகவும், எனவே சென்னைக்கு வரவேண்டும் என்றும் ஸ்ரீராமுலுவிடம் கேட்டுக் கொண்டார். அவரது பேச்சை உண்மை என்று நம்பிய ஸ்ரீராமுலு நேற்று முன்தினம் சென்னை வந்த போது போலீசில் சிக்கிக் கொண்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் போலி வக்கீல் என்று கூறி ஏமாற்றியதையும், வரதட்சணை கேட்டு மிரட்டியதையும், 2-வது திருமணம் செய்ததையும் ஒப்புக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

துப்புத் துலக்கும் செல்ஃபோன்கள்

உங்கள் எல்லோருக்கும் தெரியும் "தி ஹிந்து" ஒரு தீவிர பெண்ணியவாதம் பேசும் (Ultra-feminist) நாளிதழ் என்பது. இதுபோன்ற பெண்ணியவாத ஊடகங்கள் பெரும்பாலும், "மனைவி கணவனைக் கத்தியால் குத்திக் கொலை செய்தாள்" என்ற செய்தியைக்கூட "மனைவி தன் கையில் கத்தியுடன் இருக்கும்போது அந்த கொடுமைகாரக் கணவன், தன் மனைவிமீது கொலைப்பழி விழவேண்டும் என்னும் தீய எண்ணத்தில் அந்தக் கத்திமீது தன் கழுத்து சரியாகப் பாயும் வகையில் விழுந்து மாண்டான்" என்றுதான் எழுதுவார்கள்!

அத்தகைய செய்தி வெளியாகும்போது, இன்னொரு பக்கத்தில் ஒரு ஆஸ்தான பெண்ணிய எழுத்தாளர் பெயரில் ஒரு பாஷ்யக் கட்டுரை வெளியாகும். அது "இதுபோல் தன்னை மனைவி கையால் மாய்த்துக் கொண்டு பெண்ணினத்திற்கு மாசு கற்பிக்கும் போக்கு ஆண்டாண்டு காலமாக பெண்களை அடிமைப்படுத்தி கொடுமைப் படுத்தும் ஆணாதிக்க ம்னப்பான்மையின் வெளிப்பாடு. நம்நாட்டுப் பெண்கள் விழிப்படைந்து தங்கள் உரிமைகளை உணர்ந்து, முழுமையான விடுதலையை இன்னமும் பெறவில்லை என்பதையே இத்தகைய நிகழ்வுகள் காட்டுகின்றன" என்ற ரீதியில் இருக்கும். இதற்கு பின்பாட்டு பாடுவதற்கென்று மறுநாள் அரை டஜன் பெயர்களில் ஆசிரியருக்குக் கடிதங்கள் பிரசுரமாகும். இதுதான் நாம் அன்றாடம் காணும் வாடிக்கை.

அதே நேரத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவதாகச் சொல்லிகொண்டு அதையே முழுநேரத் தொழிலாகச் செய்யும் இன்னும் சில "சமூக ஆர்வலர்கள்" இந்த "கேப்"பில் புகுந்து "கள்ளக்காதலை 'கள்ளக்காதல்' என்று அழைக்கக் கூடாது" என்பதுபோல் அறிக்கை விடுவார்கள். உடனே அரசியலில் துண்டு போட இடம் தேடிக்கொண்டிருக்கும் சில முன்னாள் நடிகர்கள் "மனைவி கள்ளக்காதல் செய்வதற்கு கணவன்தான் காரணம். ஆகையால் மனைவி கணவனைக் கொன்றால் மற்ற சட்டங்களில் உள்ளதுபோல அதற்கு கணவனையே பொறுப்பாளி என்று தீர்மானித்து, அவன் தப்பித்தவறிப் பிழைத்தால் அவனைக் கைது செய்து சிறையிலடைக்கவேண்டும்; அவன் செத்தால் அவனுடைய பெற்றோரைச் சிறையிலடைக்க வேண்டும். மேலும் அவர்களுடய சொத்தையும் பிடுங்க வேண்டும் (இதுதான் முக்கியமான கூறு!!) - இப்படி அறிக்கை விட்டு விளம்பரம் தேடிக்கொள்வார்கள்!

ஆனால், இன்றைய "தி ஹிந்து" இதழில் கள்ளக்காதலனுடன் கூட்டுச் சேர்ந்து கணவனைக் கொலை செய்த செய்தி பெரிய எழுத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. பூசி மெழுகாமல் "உள்ளது உள்ளபடி" இத்தகைய செய்திகளை அந்த நாளிதழ் வெளியிடத் தொடங்கியிருப்பது ஒரு காலத்தின் கட்டாயம் எனலாம். எனெனில் தற்காலத்தில் பல பத்தினிகள் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்வதை ஓவர்டைம் போட்டுச் செய்து கொண்டிருப்பதைக் காண்கிறோம். மேலும் கள்ளக்காதல் என்பது இருமுனையிலும் கூறான கத்தி என்பதை அது அந்தக் கள்ளக்காதலியையும் பதம் பார்க்கும் காட்சிகள் மூலம் காணமுடிகிறது.

சரி, இப்போது இன்றைய சூடான "க.கா.கொ"-விற்கு வருவோம்:-

கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி
தற்கொலை என்று நாடகமாடியவர்கள் கைது

அம்பத்தூர், நவ.10 - 2009. செய்தி: தினத்தந்தி. (சுட்டி)

கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்து விட்டு தற்கொலை என்று நாடகமாடியவர்கள் கைது செய்யப்பட்டனர்.

போலீசுக்கு போன்

ஆவடி வீட்டுவசதி வாரியக்குடியிருப்பில் வசித்து வந்தவர், சுதாகர் (வயது 38) ரியல் எஸ்டேட் புரோக்கர். இவரது மனைவி ஷீலா (32) இவர்களுக்கு நிவேதிதா (8) என்ற மகளும், விஜய் (2) என்ற மகனும் உள்ளனர்.

கடந்த மாதம் 26-ந் தேதி சுதாகர் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து அவரது மனைவி ஷீலா ஆவடி போலீஸ் நிலையத்திற்கு அதிகாலை 3 மணிக்கு போன் செய்து எனது கணவர் சுதாகரை யாரோ மர்ம ஆசாமிகள் கொலை செய்து விட்டு போகும் போது வீட்டின் கதவை வெளிப்புறம் தாழ்ப்பாள் போட்டுவிட்டு சென்றதாக கூறினார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் தலைமையிலான போலீசார் சுதாகரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

ரகசிய கண்காணிப்பு

பிரேத பரிசோதனையில் சுதாகர் கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

பிணத்தை மனைவியிடம் ஒப்படைத்த போலீசார் இறுதிச் சடங்கு முடியும் வரை மவுனம் காத்தனர். எனினும், சுதாகரின் மனைவியை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

அப்போது ஷீலா அதிகநேரம் செல் போனில் யாரோ ஒருவருடன் பேசுவது தெரியவந்தது. உஷாரான போலீசார் ஷீலா உபயோகப்படுத்தும் செல்போனின் விவரங்களை சேகரித்தனர்.

அதில், தினமும் இரவில் மணிக்கணக்கில் ராஜேஷ் (24) என்பவருடன் அவர் பேசியது தெரியவந்தது.

திட்டமிட்ட கொலை

ராஜேஷை பற்றி விசாரித்த போது, அவர் சுதாகரின் அக்காள் மகன் என்பதும் அவனுக்கு சுதாகர் கார் வாங்கி கொடுத்து டிராவல்ஸ் நிறுவனம் வைத்து கொடுத்ததும் தெரிய வந்தது. பின்னர் இருவருக்குள்ளும் ஏற்பட்ட பிரச்சிணை காரணமாக காரை திரும்ப வாங்கிக் கொண்டு சுதாகர் அவனை துரத்தியதும் விசாரணையில் தெரிந்தது.

இதன்காரணமாக சுதாகரை திட்டமிட்டு கொலை செய்திருக்கலாம். அதில் இருவருக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்பட்டனர்.

இருவரிடமும் துருவி, துருவி போலீசார் விசாரித்தபோது கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.

ஷீலா போலீசாரிடம் கொடுத்த வாக்கு மூலம் வருமாறு :-

உல்லாசமில்லை

எனது கணவர் சுதாகர் எனக்கு மாமன் முறை ஆகும். ரியல் எஸ்டேட் தொழிலில் கைநிறைய சம்பாதித்தார். உடல் பருமன் ஆகி குண்டாக இருப்பார். இதனால், வெளியில் அவருடன் செல்வதற்கு எனக்கு அசிங்கமாக இருக்கும். மேலும் உடல் பருமனாக இருப்பதால் அவரால் என்னுடன் உல்லாசமாக இருக்க முடியவில்லை. (இது கள்ளக்காதலை jutify செய்வதற்கு இவர்கள் கண்டுபிடித்துள்ள லேட்டஸ்ட் அஜால்குஜால் சாக்கு. உணமையில் இத்தகைய பெண்குலத் திலகங்கள் கள்ளக்காதலுக்கு அலைவதே வரையிட்டியான உல்லாசத்திற்காகத்தான். ஒருவனிடம் மட்டும் சுகம் கிடைத்தால் அடங்குமா அந்த வெறி! ஆண்குழந்தைகளைப் பெற்றவர்கள் ராத்தூக்கம் இல்லாமல் அலைவதுதான் அவர்களுடைய விதி!)

அவரது அக்கா மகன் ராஜேஷிற்கு கார் ஓட்ட தெரியும் என்பதால் அவனுக்கு வங்கியில் கடன் பெற்று ஒரு கார் வாங்கி கொடுத்து டிராவல்ஸ் நிறுவனம் வைத்து கொடுத்தார்.

ஒருநாள் கடைக்கு செல்லவேண்டும் என்று என் கணவரிடம் கூறினேன். அவரோ ராஜேஷுடன் காரில் அனுப்பி வைத்தார். அவனும் என்னை `மாமி மாமி' என்று பாசமாக அழைத்தான். அவனது அன்பில் நான் மயங்கினேன்.

கணவர் கண்டிப்பு

என்னை விட 8 வயது குறைந்த ராஜேஷுடன் உல்லாசமாக இருக்க முடிவு செய்தேன். ஒருநாள் தலைவலிக்கிறது என்று பாசாங்கு செய்தேன். அவனும் தைலம் தேய்த்தான். இதுதான் சந்தர்ப்பம் என்று அவனை இழுத்து அணைத்துக் கொண்டேன். இருவரும் உல்லாசமாக இருந்தோம் அன்று தொடங்கி தினமும் உல்லாசமாக இருந்து வந்தோம். கள்ள உறவு என் கணவருக்கு தெரிந்து விட்டது. அவர் இருவரையும் கண்டித்தார். இதைத் தொடர்ந்து தினமும் எனக்கும் அவருக்கும் சண்டை வந்தது. என்னால் ராஜேஷை பார்க்காமல் இருக்க முடியவில்லை.

திட்டம் தீட்டினோம்

ஒருநாள் நான் உணர்ச்சி வசப்பட்டு பேச்சு வாக்கில், "இனி என் கணவன் உயிருடன் இருந்தால் நாம் ஒன்று சேர்வதற்கு வாய்ப்பில்லை'' என்று கண்ணீர் மல்க கூறினேன். இதைக் கேட்டு மனமுடைந்த ராஜேஷ் விரைவில் சுதாகருக்கு முடிவு கட்டிவிட்டு உன்னுடன் காலமெல்லாம் வாழ்வேன் என்று கூறினான்.

சம்பவத்தன்று நாங்கள் எதிர்பார்த்தது போல் வீட்டிற்கு வந்த சுதாகர் உடனடியாக அசந்து தூங்கி விட்டார். இந்த தகவலை செல்போன் மூலம் ராஜேஷிற்கு நான் கூறினேன்.

அதன்படி ராஜேஷ் நைலான் கயிற்றுடன் எங்கள் வீட்டிற்கு வந்தான். பின்னர் இருவரும் சேர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சுதாகரின் காலை டவலால் கட்டிபோட்டோம். ராஜேஷ் நைலான் கயிற்றால் இறுக்க நான் கணவர் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு பிடித்துக் கொண்டேன்.

சிறிது நேரத்தில் எனது கணவர் துடித்து, துடித்து செத்தார்.

பிணத்தின் அருகில் உல்லாசம்

பின்னர் சுதாகர் இறந்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு நாங்கள் இருவரும் படுக்கை அறையில் உல்லாசமாக இருந்தோம்.
பின்னர், வெளிப்புறமாக தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு ஒன்றும் தெரியாததுபோல் ராஜேஷ் அவனது வீட்டிற்கு சென்றுபடுத்துவிட்டான்.

மறுநாள் சுதாகரை எழுப்புவது போல் நடித்தேன். அவர் பிணமாக இருந்தார். அழுது புலம்பி ஊரை கூட்டினோம். எல்லோரும் நம்பினார்கள். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் அல்லது அவரே தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று நம்ப வைத்தோம். ஆனால் போலீசார் எங்களை கண்காணித்து பிடித்துவிட்டனர்.

இவ்வாறு ஷீலா கூறினார்.

சிறையில் அடைப்பு

ஷீலா அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து ஷீலாவையும், ராஜேஷையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கள்ளக்காதலுக்கு அடிமையாகும் பலியாடுகள்!

இப்பொதெல்லாம் திருமணம் ஆன பெண்கள், கள்ளக்காதலுக்காக கணவனையோ, பெற்ற குழந்தைகளையோ, கள்ளக்காதலனைக் காதலிக்கும் இன்னொரு பெண்ணையோ, (இதில்கூட சக்களத்தி சண்டை!) கள்ளக்காதலனை மணக்கப்போகும் பெண்ணையோ கொலை செய்வது சர்வசாதாரணமாக நிகழ்ந்து வருவதை நீங்கள் தினம் காண்கிறீர்கள். இது போன்ற சீரழிவு எதைக் காண்பிக்கிறது? பெண்கள் முன்னேற்றத்திற்காகப் படுபடுகிறேன் என்று பறைசாற்றிக் கொண்டு பலவழிகளில் பணம் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் பெண்ணியவாதிகள் தங்கள் முயற்சியில் அடைந்துள்ள வெற்றியைத்தானே சுட்டிக் காண்பிக்கிறது!

ஆம், நம் பாரம்பரிய குடும்ப வாழ்வை முறையைச் சிதைத்து, பெண்கள் மனத்தில் தங்கள் உடல் சுகமும், விதவிதமான செக்ஸ் அனுபவத் தேடலும்தான் வாழ்வின் ஒரே குறிக்கோள் என்றும், அத்தகைய வெறித்தேடுதலுக்கு எதிரியாகத் தோன்றும் எவரையும் கொன்று போட்டால்கூட பரவாயில்லை என்றும் நம்ப வைத்து, அவர்களின் மனப்பாங்கை தரம் தாழ்த்தும் தங்கள் முயற்சியில் அவர்கள் வெற்றி அடைந்து வருகிறார்கள்!

இப்போதெல்லாம் ஒரு மணமான பெண்ணோ, ஆணோ கொல்லப்பட்டால் அதில்
"கள்ளக்காதல்" ஆங்கிள் இருக்கிறதா என்று துப்பறிய வேண்டிய கட்டாயத்திற்கு காவல் துறையினர் தள்ளப்பட்டுள்ளனர்! அதனால் அந்தப் பெண்மணியை சந்தித்தவர்கள், அவர் செல்ஃபோனில் தொடர்பு கொண்ட நபர்கள் இவர்கள் மேல் சந்தேகக்கண் படத்தொடங்கி அதனால் பல கேசுகளில் முக்கிய தடயங்கள் சிக்குவதை நாம் கண்டு வருகிறோம்.

மேலும், இத்தகைய கள்ளக் காதல்களினால் அந்தக் கள்ளக்காதலிகளே பலியாகும் நிகழ்ச்சிகளும் நிறைய நடக்கின்றன. அத்தகைய ஒரு செய்தியை இப்போது வாசியுங்கள்:

புதுப்பெண்ணை கொலை செய்து உடலை புதைத்தது ஏன்? கைதான கள்ளக்காதலர் பரபரப்பு வாக்குமூலம்

திருச்சி, நவ.5- 2009 தினத்தந்தி

புதுப்பெண்ணை கொலை செய்து வயலில் உடலை புதைத்தது ஏன் என்பது பற்றி கைதான கள்ளக் காதலர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

புதைக்கப்பட்ட பெண் பிணம்

திருச்சியை அடுத்த முத்தரசநல்லூர் வயல்வெளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அரை குறையாக மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் ஒரு பெண் பிணம் கிடந்தது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஜீயபுரம் போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அப்போது பிணமாக கிடந்த பெண்ணின் பெயர் லால்குடி பக்கம் உள்ள கொத்தமங்கலத்தை சேர்ந்த முத்துக்குமார் மனைவி அன்பரசி (19) என்பதும், முத்தரசநல்லூர் காமராஜர்புரத்தை சேர்ந்த பெயிண்டர் அங்கமுத்து (வயது25)வுக்கும், அந்த பெண்ணுக்கும் பழக்கம் இருந்ததும் தெரியவந்தது.

பெயிண்டர் கைது

அன்பரசியின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கமுத்துவை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

இதில் அங்கமுத்து தான் அன்பரசியை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, பிணத்தை வயலில் புதைத்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் நேற்று அங்கமுத்துவை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அங்கமுத்து போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

செல்போன் மூலம் காதல்

எனது நண்பர்கள் மூலம் அன்பரசியின் செல்போன் நம்பர் கிடைத்தது. செல்போனில் அடிக்கடி பேசி அன்பரசியுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டேன். நாங்கள் தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்தோம். அவர் என்னை பார்க்க அடிக்கடி முத்தரசநல்லூருக்கு வந்து செல்வார்.

இந்த நிலையில் கடந்த வாரம் எனது வீட்டுக்கு வந்த அன்பரசி தனக்கு திருமணமாகி 2 மாதங்கள் ஆகிவிட்டதாகவும், கணவன் முத்துக்குமாரை எனக்கு பிடிக்கவில்லை. அதனால் உன்னுடனே இருந்து விடுகிறேன் என்றும் கூறினாள். நான் ஏற்கனவே எங்கள் ஊரைச்சேர்ந்த நந்தினி என்ற பெண்ணை காதலித்து வந்தேன். அவளையே திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருந்தேன்.

இதனால் அன்பரசி எனது வீட்டில் இருந்தால் பிரச்சினை ஏற்படும் என நினைத்து அவளை இருங்களூரில் உள்ள எனது அக்காள் வீட்டில் தங்க வைத்தேன். இந்த நிலையில் எனது வீட்டில் அன்பரசி என்னுடன் இருந்ததை காதலி நந்தினி பார்த்து விட்டாள்.

துப்பட்டாவால் இறுக்கி...

அன்பரசியை பார்த்ததும் என்னிடம் தகராறு செய்த நந்தினி நான் விஷம் குடித்து தற்கொலை செய்து விடுவேன் என விஷம் பாட்டிலை கையில் வைத்துக்கொண்டு மிரட்டினாள். நான் அவளை சமாதானம் செய்து, நந்தினியை அவளது வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு திரும்பி வந்தேன். அப்போது அன்பரசி என்னிடம் நீ என்னைத்தான் திருமணம் செய்து கொள்ளவேண்டும். அதுவரை நான் இங்கிருந்து செல்ல முடியாது என கூறி தகராறு செய்தாள்.

இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இவள் இருந்தால் காதலி நந்தினி நம்மை விட்டு போய்விடுவாள், திருமணம் செய்து கொள்ள முடியாமல் போய்விடும் என நினைத்து அன்பரசியின் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி நெரித்தேன். இதில் அவள் மூச்சு திணறி கீழே விழுந்ததும் யாருக்கும் தெரியாமல் உடலை தூக்கி கொண்டு சென்று வயல்வெளியில் புதைத்தேன்.

இவ்வாறு அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக தெரிகிறது.

அங்கமுத்து நேற்று மாலை திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட் எண்-3 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

ஒட்டுமொத்த குடும்பத்தின் மீதும் 498A

இதற்கு முந்தைய இடுகையைப் படித்தீர்கள் அல்லவா. அதுபோல் 498A பொய் வழக்கில் எக்ஸ்ட்ராவாக சிறிது அஜால்குஜால் மசாலா சேர்க்கும் அளவிற்கு கற்பனை வளமில்லாத ஒரு வக்கீலை இந்த நங்கை மடவன்னம் அணுகியதால் கீழ்க்காணும் ஸ்டாண்டர்ட் டெம்பிளேட் புகார்தான் போட்டிருக்கிறார்.

ஆனால் இந்த 498A டெம்பிளேட்தான் 95% பொய்க் கேசுகளில் பயன்படுத்தப்படுகின்றன.

உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா? இன்னும் 498A பேய் பிடிக்கவில்லையா? கவலையை விடுங்கள் இந்த சீக்கு தற்போது பன்றிக் காய்ச்சலைவிட வெகுவேகமாகப் பரவி வருகிறது. ஆனால் ஒரு வேறுபாடு. காய்ச்சல் ஒருத்தர் ஒருத்தராகத்தான் பிடிக்கும். ஆனால் 498A கேசு குடும்பத்தில் உள்ள மொத்தப் பேரையும் ஹோல்சேலாக ஒரே கட்டில் அடைத்துவிடும்!

இப்பொது செய்தியைப் படித்துவிட்டு "பெண்கள் பாவம், ஒரு பாவமும் அறியாத பேதைகள்" என்று உரக்க கோஷமிடுங்கள்!

சாத்தூர் கோர்ட்டில் புகார்;
கூடுதல் வரதட்சணை வாங்கிவர மறுத்த புதுப்பெண் சித்ரவதை
கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு

விருதுநகர், நவ.6 - 2009. தினத்தந்தி

சாத்தூர் அருகே கூடுதல் வரதட்சணை வாங்கி வர மறுத்த புதுப்பெண்ணை சித்ரவதை செய்ததாக கணவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.

சாத்தூர் அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலட்சுமி (வயது 30). இவர் சாத்தூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எனக்கும், சென்னை திருவான்மியூரை சேர்ந்த மளிகைக் கடை வியாபாரி ராமச்சந்திரன் என்பவக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது எனது பெற்றோர் 10 பவுன் நகை மற்றும் சீர்வரிசை செய்தனர்.

ஆனால் கடந்த சில மாதங்களாக எனது கணவர் கூடுதல் வரதட்சணை வாங்கி வருமாறு என்னிடம் வற்புறுத்தி வந்தார். நான் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் எனக்கு சாப்பாடு போடாமல் சித்ரவதை செய்தார். எனவே இந்த சித்ரவதைகளை தாங்க முடியாமல் நான் எனது தாய் வீட்டுக்கு வந்து விட்டேன். இந்த சித்ரவதைக்கு உடந்தையாக மாமனார் காசிபெருமாள், மாமியார் சரோஜா, நாத்தனார் கலாராணி, அவரது கணவர் சங்கர் ஆகியோர் உள்ளனர். எனவே இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மகாலட்சுமி தனது மனுவில் கூறியிருந்தார்.

5 பேர் மீது வழக்கு

வழக்கை விசாரித்த மாஜிஸ் திரேட்டு, இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு சாத்தூர் அனைத்து மகளிர் போலீசுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் ராமச்சந்திரன் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இப்படியும் வழக்கு போடுவார்கள், உஷார்!

திருவண்ணாமலையில் உல்லாசத்துக்கு மறுத்த மனைவிக்கு கொலை மிரட்டல்.
கணவன் மீது போலீசில் புகார்

திருவண்ணாமலை, அக்.30- 2009 - தினத்தந்தி

திருவண்ணாமலை அருகே உல்லாசத்துக்கு மறுத்த மனைவியை கொலை செய்து விடுவதாக மிரட்டிய கணவர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அடுத்த பெருமணம் கிராமத்தை சேர்ந்தவர் அரிகரன் (வயது 25). இவருக்கும் ஜெயலட்சுமி (19) என்பவருக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் ஜெயலட்சுமி திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:-

கொலை மிரட்டல்

எனது கணவர் அரிகரன் தினமும் குடித்து விட்டு என்னை அடித்து துன்புறுத்துகிறார். நேரம் காலம் பார்க்காமல் உல்லாசத்துக்கு அழைக்கிறார், மறுத்தால் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார்.

இதனால் அவரை விட்டு பிரிந்து தாய் வீட்டுக்கு வந்து விட்டேன். கணவர் வீட்டில் உள்ள எனது சீர்வரிசை பொருட்களை மீட்டு தர வேண்டும்.

5 பேர் மீது வழக்கு

என்னை சித்ரவதை செய்த கணவர் அரிகரன், அதற்கு துணையாக இருந்த மாமனார் வீராசாமி, மாமியார் பூங்கோதை, அரிகரனின் தம்பி சரவணன், அவரது மனைவி விமலா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கண்டவாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

விபரீத கள்ளக்தாதல்!

வக்கீலின் மனைவி கட்சிக்காரருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு ஓடிய கதையைப் படித்தோம்.

இப்போது பெண் போலீஸ் ஆயுள் தண்டனைக் கைதியுடன் கொண்ட கள்ளக்காதலின் விளைவாக கொலையுண்டிருக்கிறார்.

பின்னே, கள்ளக்காதலில் நல்லதா விளையும்!

இந்தச் செய்திதான் இன்றைய செய்தித்தாள்களில் தலைப்பு நியூஸ். தினத்தந்தி இதன் விவரங்களை மூன்று பகுதிகளாக வெளியிட்டுள்ளது. அவற்றை உள்ளது உள்ளபடி இங்கு வெளியிட்டு அதை கள்ளக்காதலுக்குக் காரணம் ஆண்களே என்று வலியுறுத்துவதற்காக இயக்கம் துவங்க இருக்கும் ஆச்சி மனோரமாவுக்கு சமர்ப்பிக்கிறேன்!

தினத்தந்தி. நாள் நவ.5 - 2009

பகுதி - 1

சேலம் பெண்கள் சிறை காவலராக இருந்தவர் மாயம்:
பெண் போலீஸ் கற்பழித்து கொலை
ஜெயிலில், கைதியுடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் விபரீதம்

சேலம் சிறை காவலாக பணிபுரிந்த பெண் போலீஸ் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். ஜெயிலில், ஆயுள்தண்டனை கைதியுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொடூர கொலை நடந்துள்ளது.

காயத்ரி மாலா

சேலம், அஸ்தம்பட்டியில் உள்ள பெண்கள் கிளை சிறையில் முதல் நிலை காவலராக (போலீஸ்) பணியாற்றி வந்தவர், எஸ்.காயத்ரி மாலா (வயது 33). கோவையை சேர்ந்தவர். காயத்ரி மாலாவுக்கும், மதுரை மத்திய சிறையில் சப்-ஜெயிலராக பணியாற்றி வரும் தமிழ்ச் செல்வன் என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

தமிழ்ச்செல்வன், காயத்ரி மாலா இருவருமே ஏற்கனவே திருமணமாகி, விவாகரத்து பெற்றவர்கள். கடந்த 2002-ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக வேலைக்கு சேர்ந்த காயத்ரி மாலா, பதவி உயர்வு பெற்று, 8 மாதங்களுக்கு முன்பு கோவையில் இருந்து சேலத்திற்கு வந்தார். சேலத்தில் அய்யந்திரு மாளிகை ஹவுசிங் போர்டு குடியிருப்பில் காயத்ரி மாலா வசித்து வந்தார்.

திடீர் மாயம்

கோவை வரதராஜபுரம் ஆர்.வி.எல். நகரில் காயத்ரி மாலாவுக்கு சொந்தமாக வீடு உள்ளது. காயத்ரி மாலாவுக்கும், அவரது 2-வது கணவர் தமிழ்ச்செல்வனுக்கும் பிறந்த 4 வயது மகள் லட்சுமி பிரபா கோவையில் பெற்றோர் வீட்டில் இருப்பதால் வாரம் ஒரு முறை காயத்ரி மாலா கோவைக்கு சென்று தனது மகளை பார்த்து வருவது வழக்கம்.

கடந்த சனிக்கிழமை இரவு 7 மணிக்கு சேலம் புதிய பஸ் நிலையத்துக்கு வந்த காயத்ரி மாலா, அங்கிருந்து கோவைக்கு பஸ்சில் புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் கோவைக்கு செல்லவில்லை. திடீரென்று மாயமான அவருடைய செல்போன் இணைப்பும் துண்டிக்கப்பட்டு இருந்தது.

ஏரிக்கரையில் பிணம்

இது குறித்து, சேலம் பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், சங்ககிரி அருகே உள்ள ஆவாரம்பாளையம் ஏரிக்கரையில் ரெயில் பாதைக்கு சற்று தொலைவில் உள்ள ஒரு முட்புதரில் இருந்து துர்நாற்றம் வீசியது. நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள், அங்கு அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் பிணம் தலைகுப்புற கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த பெண் அணிந்து இருந்த சுடிதார் விலக்கப்பட்டு, சுடிதாரின் டாப்சும் கழற்றப்பட்ட நிலையில் அந்த பெண் அரை நிர்வாண கோலத்தில் கிடந்தார். மேலும் அந்த பெண்ணின் தலையில் சுமார் 25 கிலோ எடை கொண்ட பெரிய பாறாங்கல்லும் வைக்கப்பட்டு கிடந்தது. இது குறித்து சங்ககிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அடையாளம் தெரிந்தது

சங்ககிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். ஆனால் முகத்தில் பெரிய கல் வைக்கப்பட்டு, முகம் சிதைக்கப்பட்டு இருந்ததால் பிணமாக கிடந்தவர் யார் என்று அடையாளம் உடனடியாக தெரியவில்லை. இதனால் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையின் முடிவில் இறந்து கிடந்தது மாயமான காயத்ரி மாலாவாக இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்தது. இது குறித்து காயத்ரி மாலாவின் பெற்றோருக்கும், கணவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து காயத்ரி மாலாவின் தந்தை, தம்பி, அவரது மனைவி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை பார்த்து இறந்து கிடப்பது காயத்ரி மாலாதான் என்று அடையாளம் காட்டினார்கள். காயத்ரி மாலாவின் கணவர் தமிழ்செல்வனும் சம்பவ இடத்திற்கு வந்து காயத்ரி மாலாவை அடையாளம் காட்டினார். பின்னர் காயத்ரி மாலாவின் பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்வதற்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கற்பழித்து கொலையா?

காயத்ரி மாலா கோவைக்கு சென்றபோது அவருடன் யாராவது சென்றார்களா? அவர் கொண்டு சென்ற பை, அவரது செல்போன் போன்றவை என்ன ஆனது? போன்ற விவரங்கள் தெரிய வில்லை. அவரது ஆடைகள் அகற்றப்பட்டு கிடந்ததால் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என்ற சந்தேகமும் எழுந்தது.

அவரை கொலை செய்தது யார்? ஒருவரா? அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த கொலையில் தொடர்பு உள்ளதா? என்பது போன்ற கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

ஆயுள் தண்டனை கைதி

விசாரணையில், கோவையை சேர்ந்த சரவணன் என்ற சரவணகுமார் (32) என்ற ஆயுள் தண்டனை கைதி, காயத்ரி மாலாவை கொலை செய்ததும், அவர்கள் இருவருக்கும் இடையே கடந்த 7 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்த திடுக்கிடும் தகவலும் அம்பலம் ஆனது.

காயத்ரி மாலா, கடந்த 2002-ம் ஆண்டில் கோவை மத்திய சிறையில் காவலராக வேலை பார்த்து வந்தார். அப்போது திருச்செங்கோடு ரிக் உரிமையாளர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவணகுமார் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

கள்ளக்காதல்

அப்போது காவலர் காயத்ரி மாலாவுக்கும், சரவணகுமாருக்கும் அறிமுகம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. அதன்பிறகு தனது முதல் கணவரை காயத்ரி மாலா விவாகரத்து செய்தார். இதற்கிடையில், 5 ஆண்டுகளுக்கு முன்பு பயிற்சிக்காக வேலூர் சிறைக்கு சென்ற காயத்ரி மாலாவுக்கும், அங்கு பயிற்சியாளராக வந்த மதுரை சப்-ஜெயிலர் தமிழ்ச்செல்வனுக்கும் காதல் ஏற்பட்டு, காயத்ரிமாலா கர்ப்பம் ஆனார்.

பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுடைய 4 வயது மகள் பிரபா லட்சுமி, கோவையில் உள்ள காயத்ரி மாலாவின் பெற்றோர் வீட்டில் இருக்கிறாள். இந்த நிலையில், ஆயுள் தண்டனை கைதி சரவணகுமாருடன் இருந்த கள்ளக்காதலையும் காயத்ரிமாலா கைவிடவில்லை. கடந்த 7 ஆண்டுகளாக அவர்களுடைய தொடர்பு நீடித்து வந்தது.

தலைமறைவு சந்திப்பு

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் கோவை சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்த சரவணகுமார், மீண்டும் சிறைக்கு திரும்பாமல் தலைமறைவாகிவிட்டார். சேலம் மாவட்டம், ஓமலூரில் அவர் தங்கி இருந்தார். காயத்ரிமாலாவும் சேலம் சிறையில் பணிபுரிந்து வந்ததால், இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொள்வதற்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று கோவை சென்று பெற்றோரையும் மகளையும் பார்த்துவர காயத்ரிமாலா விரும்பினார். அப்போது சரவணகுமார் தனது செல்போனில் தொடர்பு கொண்டு தான் சங்ககிரியில் இருப்பதாகவும் எனவே சங்ககிரியில் இறங்கி தன்னை சந்திக்கும்படியும் காயத்ரிமாலாவிடம் தெரிவித்தார்.

கல்லால் தாக்கி கொலை

அதன்படி, கோவை செல்லும் வழியில் காயத்ரி மாலா சங்ககிரியில் இறங்கி சரவணகுமாரை சந்தித்து பேசினார். பின்னர் அங்கிருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆவாரம்பாளையம் ஏரிக்கரைக்குச் சென்று இருவரும் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

அதன்பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஆத்திரம் அடைந்த சரவணகுமார், பெரிய பாறாங்கல்லை தலையில் தூக்கிப்போட்டு காயத்ரி மாலாவை கொலை செய்ததாக போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

செல்போன் மூலம் துப்பு

சரவணகுமார் எடுத்துச்சென்ற காயத்ரிமாலாவின் செல்போன், தாலி செயின், கைக்கெடிகாரம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினார்கள். அந்த செல்போன் மூலம் இந்த வழக்கில் போலீசார் துப்பு துலக்கி கொலையாளியை பிடித்து உள்ளனர்.

இந்த வழக்கில் 48 மணி நேரத்தில் துப்பு துலக்கிய சேலம் பள்ளப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையிலான தனி போலீஸ் படையினரை போலீஸ் கமிஷனர் சுனில்குமார்சிங் பாராட்டினார்.

=========

பகுதி - 2

ஜெயிலில் பெண் போலீசுடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி?
கைதான கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்

"பெண் போலீஸ் காயத்ரி மாலாவுடன் ஜெயிலில் தொடர்பு ஏற்பட்டது எப்படி?'' என்று, கைதான கொலையாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சேலம் பெண்கள் கிளைசிறை காவலர் காயத்ரிமாலா கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட சரவண குமார், சேலம் பள்ளப்பட்டி போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

கர்ப்பிணி மனைவி

"எனது பெயர் சரவணன் என்கிற சரவணகுமார் (வயது 32). ஓமலூரை அடுத்த செங்கரடில் வசித்து வருகிறேன். எனக்கு திருமணம் ஆகி வெள்ளையம்மாள் என்ற மனைவி இருக்கிறார். எனக்கு ஒரு குழந்தை உள்ளது. தற்போது எனது மனைவி 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

கடந்த 1997-ம் ஆண்டு திருச்செங்கோடு ரூரல் போலீஸ் நிலைய எல்லையில் ரிக் வாகன உரிமையாளர் செங்கோட கவுண்டர் என்பவரை கொலை செய்த வழக்கில் எனக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு நான் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன்.

சாப்பாடு வண்டியை தள்ளி செல்வேன்

அங்கு எனது நன்னடத்தை காரணமாக எனக்கு சாப்பாடு வண்டியை தள்ளி செல்லும் வேலை தரப்பட்டது. நான் கோவை பெண்கள் சிறைக்கு சாப்பாடு வண்டியை தினமும் தள்ளி செல்வேன். அப்போது எனக்கும் பெண்கள் சிறையில் பணிபுரிந்து வந்த காயத்ரிமாலாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் கள்ளத்தொடர்பாக மாறியது. கோவை மத்திய சிறையில் இருந்த நான் அவ்வப்போது நான் பரோலில் வீட்டுக்கு சென்று வந்தேன். ஆரம்பத்தில் போலீஸ் பாதுகாப்புடன் நான் சென்று வந்தேன். பின்னர் எனது நன்னடத்தை காரணமாக நான் தனியாகவே பரோலில் சென்று வீட்டில் உள்ளவர்களை பார்த்து விட்டு மீண்டும் சிறைக்கு வர அனுமதித்தார்கள்.

பரோலில் வந்து தலைமறைவு

இந்த கால கட்டத்தில் நான் காயத்ரி மாலாவுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தேன். இந்த நிலையில் கடந்த 15.2.2009 அன்று பரோலில் வீட்டுக்கு வந்த நான் மீண்டும் கோவை சிறைக்கு செல்லவில்லை. இதனால் 24-ந் தேதி என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதன் பிறகும் நான் காயத்ரி மாலாவுடன் உல்லாச வாழக்கையை தொடர்ந்து வந்தேன். இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி அவர் என்னிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். தான் கோவைக்கு செல்வதாக தனது கணவரிடம் கூறி விட்டதாகவும், நீ சங்ககிரிக்கு வா என்று கூறினார். அதன்படி நானும் சங்ககிரி பஸ் நிலையத்திற்கு முன்னதாகவே சென்று காயத்ரிமாலா வருகைக்காக காத்திருந்தேன்.

உல்லாசமாக இருக்க வற்புறுத்தினார்

பஸ்சில் அவர் வந்த நேரத்தில் நான் அவரிடம் 3 முறை தொடர்பு கொண்டு பேசினேன். அதே போல அவரும் என்னிடம் 3 முறை தொடர்பு கொண்டு பேசினார். சங்ககிரி பஸ் நிலையத்தில் காயத்ரிமாலா வந்து இறங்கியதும் 2 பேரும் சங்ககிரியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் ரெயில்வே பாதை அருகில் உள்ள ஆவாரம்பாளையம் ஏரிக்கு சென்றோம்.

அங்குதான் நாங்கள் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருப்பது வழக்கம். அதே போல 31-ந் தேதியும் நாங்கள் அங்கு உல்லாசமாக இருந்தோம். அப்போது நான் காயத்ரிமாலாவிடம் ரூ.5 ஆயிரம் கேட்டேன். அதற்கு அவர், `ரூ.5 ஆயிரம் தருகிறேன். ஆனால் நீ வாரம் ஒரு முறை என்னை சந்தித்து உல்லாசமாக இருக்க வேண்டும்' என்று நிர்பந்தித்தார்.

மிரட்டியதால் கொன்றேன்

அதற்கு நான், `எனது மனைவி தற்போது கர்ப்பிணியாக உள்ளார். என்னால் வாரம் ஒரு முறை வர முடியாது' என்று கூறினேன். அதை கேட்ட காயத்ரிமாலா, `நீ கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவன். இப்போது பரோலில் வெளியே வந்து விட்டு தலைமறைவாக இருக்கிறாய். நான் நினைத்தால் உன்னை போலீசில் மாட்டி விட்டு மீண்டும் சிறையில் அடைத்து விடுவேன். ஒழுங்காக நான் சொல்வதை கேள்' என்று மிரட்டினார்.

இவ்வாறு அவர் கூறியதும் எனக்கு ஆத்திரம் வந்தது. எங்கே நான் தலைமறைவாக இருப்பதை காயத்ரிமாலா சொல்லி விடுவாரோ என நினைத்தேன். இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். அதன்படி காயத்ரிமாலாவின் தலையில் கல்லை தூக்கிப்போட்டேன்.

செல்போன் காட்டி கொடுத்தது

இதில் அவர் மயங்கினார். அதன் பின்னர் அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலி செயின், தோடு, கைகெடிகாரம் மற்றும் செல்போன் போன்றவற்றை திருடினேன். பின்னர் அங்குள்ள புதரில் காயத்ரிமாலாவின் உடலை இழுத்துப்போட்டு அவரின் தலையில் பெரிய கல்லை போட்டு விட்டு ஓடி விட்டேன்.

காயத்ரிமாலாவை கொன்று விட்டு நான் கருப்பூர் அருகே செங்கரடில் உள்ள எனது வீட்டிற்கு சென்று விட்டேன். இந்த நிலையில் காயத்ரிமாலா காணாமல் போனது பற்றி அவரின் தந்தை பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

போலீசார் காயத்ரிமாலாவின் செல்போன் எண்ணை கொண்டு யாருக்கெல்லாம் பேசினார்? என விசாரித்தார்கள். அதில் நான் அவரிடம் பேசி இருப்பது தெரிய வந்தது. இதன் பின்னர் போலீசார் என்னை பிடித்து விசாரித்தனர். இதனால் வேறு வழியின்றி நான் காயத்ரிமாலாவை கொன்றதை ஒப்புக் கொண்டேன்.''

இவ்வாறு சரவணகுமார் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

==========

பகுதி - 3

கொலை செய்யப்பட்ட பெண் காவலர் காயத்ரி மாலா, விவாகரத்து பெற்று மறுமணம் செய்தவர்

கொலை செய்யப்பட்ட பெண் காவலர் காயத்ரி மாலா, துணை ஜெயிலர் தமிழ்ச் செல்வனை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே திருமணம் ஆனவர். முதல் கணவரை விவாகரத்து செய்தபின் தமிழ்ச்செல்வனை மறுமணம் செய்து கொண்டார். முதல் கணவர் மூலம் காயத்ரிமாலாவுக்கு பிறந்த 12 வயது மகள், கோவையில் படித்து வருகிறாள்.

இதேபோல், தமிழ்ச் செல்வனும் கோமளா என்ற பெண்ணை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். அவருக்கு என்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும் ஒரு மகனும் 10-ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர்.

இதற்கிடையில், 2-வது மனைவி காயத்ரி மாலா மூலம் தமிழ்ச்செல்வனுக்குப் பிறந்த 4 வயது மகள், கோவையில் உள்ள அவருடைய பெற்றோர் வீட்டில் இருக்கிறாள். சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த காயத்ரி மாலா, வெளியே வக்கீல் ஒருவருடனும் நட்பாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.