கள்ளக்காதலுக்கு அடிமையாகும் பலியாடுகள்!

இப்பொதெல்லாம் திருமணம் ஆன பெண்கள், கள்ளக்காதலுக்காக கணவனையோ, பெற்ற குழந்தைகளையோ, கள்ளக்காதலனைக் காதலிக்கும் இன்னொரு பெண்ணையோ, (இதில்கூட சக்களத்தி சண்டை!) கள்ளக்காதலனை மணக்கப்போகும் பெண்ணையோ கொலை செய்வது சர்வசாதாரணமாக நிகழ்ந்து வருவதை நீங்கள் தினம் காண்கிறீர்கள். இது போன்ற சீரழிவு எதைக் காண்பிக்கிறது? பெண்கள் முன்னேற்றத்திற்காகப் படுபடுகிறேன் என்று பறைசாற்றிக் கொண்டு பலவழிகளில் பணம் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் பெண்ணியவாதிகள் தங்கள் முயற்சியில் அடைந்துள்ள வெற்றியைத்தானே சுட்டிக் காண்பிக்கிறது!

ஆம், நம் பாரம்பரிய குடும்ப வாழ்வை முறையைச் சிதைத்து, பெண்கள் மனத்தில் தங்கள் உடல் சுகமும், விதவிதமான செக்ஸ் அனுபவத் தேடலும்தான் வாழ்வின் ஒரே குறிக்கோள் என்றும், அத்தகைய வெறித்தேடுதலுக்கு எதிரியாகத் தோன்றும் எவரையும் கொன்று போட்டால்கூட பரவாயில்லை என்றும் நம்ப வைத்து, அவர்களின் மனப்பாங்கை தரம் தாழ்த்தும் தங்கள் முயற்சியில் அவர்கள் வெற்றி அடைந்து வருகிறார்கள்!

இப்போதெல்லாம் ஒரு மணமான பெண்ணோ, ஆணோ கொல்லப்பட்டால் அதில்
"கள்ளக்காதல்" ஆங்கிள் இருக்கிறதா என்று துப்பறிய வேண்டிய கட்டாயத்திற்கு காவல் துறையினர் தள்ளப்பட்டுள்ளனர்! அதனால் அந்தப் பெண்மணியை சந்தித்தவர்கள், அவர் செல்ஃபோனில் தொடர்பு கொண்ட நபர்கள் இவர்கள் மேல் சந்தேகக்கண் படத்தொடங்கி அதனால் பல கேசுகளில் முக்கிய தடயங்கள் சிக்குவதை நாம் கண்டு வருகிறோம்.

மேலும், இத்தகைய கள்ளக் காதல்களினால் அந்தக் கள்ளக்காதலிகளே பலியாகும் நிகழ்ச்சிகளும் நிறைய நடக்கின்றன. அத்தகைய ஒரு செய்தியை இப்போது வாசியுங்கள்:

புதுப்பெண்ணை கொலை செய்து உடலை புதைத்தது ஏன்? கைதான கள்ளக்காதலர் பரபரப்பு வாக்குமூலம்

திருச்சி, நவ.5- 2009 தினத்தந்தி

புதுப்பெண்ணை கொலை செய்து வயலில் உடலை புதைத்தது ஏன் என்பது பற்றி கைதான கள்ளக் காதலர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

புதைக்கப்பட்ட பெண் பிணம்

திருச்சியை அடுத்த முத்தரசநல்லூர் வயல்வெளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அரை குறையாக மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் ஒரு பெண் பிணம் கிடந்தது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஜீயபுரம் போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அப்போது பிணமாக கிடந்த பெண்ணின் பெயர் லால்குடி பக்கம் உள்ள கொத்தமங்கலத்தை சேர்ந்த முத்துக்குமார் மனைவி அன்பரசி (19) என்பதும், முத்தரசநல்லூர் காமராஜர்புரத்தை சேர்ந்த பெயிண்டர் அங்கமுத்து (வயது25)வுக்கும், அந்த பெண்ணுக்கும் பழக்கம் இருந்ததும் தெரியவந்தது.

பெயிண்டர் கைது

அன்பரசியின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கமுத்துவை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

இதில் அங்கமுத்து தான் அன்பரசியை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, பிணத்தை வயலில் புதைத்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் நேற்று அங்கமுத்துவை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அங்கமுத்து போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

செல்போன் மூலம் காதல்

எனது நண்பர்கள் மூலம் அன்பரசியின் செல்போன் நம்பர் கிடைத்தது. செல்போனில் அடிக்கடி பேசி அன்பரசியுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டேன். நாங்கள் தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்தோம். அவர் என்னை பார்க்க அடிக்கடி முத்தரசநல்லூருக்கு வந்து செல்வார்.

இந்த நிலையில் கடந்த வாரம் எனது வீட்டுக்கு வந்த அன்பரசி தனக்கு திருமணமாகி 2 மாதங்கள் ஆகிவிட்டதாகவும், கணவன் முத்துக்குமாரை எனக்கு பிடிக்கவில்லை. அதனால் உன்னுடனே இருந்து விடுகிறேன் என்றும் கூறினாள். நான் ஏற்கனவே எங்கள் ஊரைச்சேர்ந்த நந்தினி என்ற பெண்ணை காதலித்து வந்தேன். அவளையே திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருந்தேன்.

இதனால் அன்பரசி எனது வீட்டில் இருந்தால் பிரச்சினை ஏற்படும் என நினைத்து அவளை இருங்களூரில் உள்ள எனது அக்காள் வீட்டில் தங்க வைத்தேன். இந்த நிலையில் எனது வீட்டில் அன்பரசி என்னுடன் இருந்ததை காதலி நந்தினி பார்த்து விட்டாள்.

துப்பட்டாவால் இறுக்கி...

அன்பரசியை பார்த்ததும் என்னிடம் தகராறு செய்த நந்தினி நான் விஷம் குடித்து தற்கொலை செய்து விடுவேன் என விஷம் பாட்டிலை கையில் வைத்துக்கொண்டு மிரட்டினாள். நான் அவளை சமாதானம் செய்து, நந்தினியை அவளது வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு திரும்பி வந்தேன். அப்போது அன்பரசி என்னிடம் நீ என்னைத்தான் திருமணம் செய்து கொள்ளவேண்டும். அதுவரை நான் இங்கிருந்து செல்ல முடியாது என கூறி தகராறு செய்தாள்.

இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இவள் இருந்தால் காதலி நந்தினி நம்மை விட்டு போய்விடுவாள், திருமணம் செய்து கொள்ள முடியாமல் போய்விடும் என நினைத்து அன்பரசியின் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி நெரித்தேன். இதில் அவள் மூச்சு திணறி கீழே விழுந்ததும் யாருக்கும் தெரியாமல் உடலை தூக்கி கொண்டு சென்று வயல்வெளியில் புதைத்தேன்.

இவ்வாறு அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக தெரிகிறது.

அங்கமுத்து நேற்று மாலை திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட் எண்-3 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

1 மறுமொழி:

')) said...

அட இங்கப்பார்ரா...

படிக்கவே கேளிக்கூத்தா இருக்கு... இரண்டு மாசத்துலயே கட்டின புருசன் கசந்து விட்டான்... கள்ளக்காதலை நோக்கி ஒடிய பத்தினி தெய்வத்துக்கு! அங்கு சென்றால் ஒர நல்லக்காதல் அந்த கள்ளக்காதலனுக்கு!
கள்ளக்காதலுக்கும் நல்லகாதலுக்கு நடந்த சண்டையில் கள்ளக்காதல்(முன்பு இதுவும் நல்லக்காதல்) இறந்துவிட்டது.

புண்ணியவான் அந்த கள்ளக்காதலியை கட்டிய கணவன். இல்லவிட்டால் ipc498a. crpc125 போன்ற பல லக்கி நம்பர்கள் இருக்கின்றன உயிரோடு குடும்பத்தை சிறுகசிறுக கொள்வதற்கு