ஒரே நாளில் (ஜூலை 6, 2009) மூன்று தற்கொலைச் செய்திகள். மூவரும் இளம் பெண்கள். காரணம், பெற்றோர் கண்டித்தது.
இதுபோன்ற பெண்கள் திருமணமானபின் கணவனோ கண்வனின் பெற்றோரோ கண்டித்தால் இதைத் தவிர வேறு என்ன செய்வார்கள்!
ஆனால் ஒரு வித்தியாசம். மணமானபின் அவள் தற்கொலை செய்துகொண்டால் கணவனையும் அவனது பெற்றோரையும் கைது செய்து உள்ளெ தள்ளிவிடுவார்கள். இதற்கென்றே தனிச் சட்டங்கள் இருக்கின்றன!
இப்போது செய்திகள். நன்றி - தினத்தந்தி
-------------------------
1.
டி.வி.பார்ப்பதை தாய் கண்டித்ததால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை. ஆவடி, ஜுலை.6- 2009
ஆவடியை அடுத்த பட்டாபிராம் நவஜீவன் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் தேவன். இவரது மனைவி பானு. இவர்களுக்கு கவுசல்யா (வயது 16) மற்றும் நந்தினி (13) என்று 2 மகள்கள் உள்ளனர். கவுசல்யா ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். நந்தினி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 1-ந் தேதி மாலை இருவரும் பள்ளியில் இருந்து வீட்டுக்கு சென்றனர்.
கவுசல்யா சீருடையை கழற்றாமல் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார். இதை கவுசல்யாவின் தாய் கண்டித்தார். தாய் கண்டித்ததால் வருத்தம் அடைந்த கவுசல்யா அறைக்குள் சென்று விட்டார். வெகு நேரமாக கவுசல்யா வெளியே வராததால் உள்ளே சென்று பார்த்த போது கவுசல்யா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். அவரை உடனடியாக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கவுசல்யா நேற்று காலை மரணம் அடைந்தார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
=======================
2.
சேத்தியாத்தோப்பு அருகேஇளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை. தாய் கண்டித்ததால் மனமுடைந்தார்
சேத்தியாத்தோப்பு, ஜுலை.6- 2009
சேத்தியாத்தோப்பு அருகே தாய் கண்டித்த தால் மனமுடைந்த இளம்பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கடலூர் மாவட்டம் சேத் தியாத்தோப்பு அருகே உள்ள மதுராந்தகநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் குண சேகரன்.இவரது மகள் குண பாரதி (வயது 25).இவர் சிதம் பரத்தில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் குணபாரதி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் சகஜமாக சிரித்து பேசிவந்ததாக தெரிகிறது.இதை பார்த்த அவரது தாய் ராஜகுமாரி, திருமண வயதாகும் நீ இப்படி எல்லோரிடம் சிரித்து பேசாதே என்று குண பாரதியை கண்டித்ததாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த குணபாரதி சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார்.இதை பார்த்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணா மலைநகர் மருத்துவ மனையில் அனுமதித்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.நேற்று முன்தினம் குண பாரதிக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இது பற்றி ராஜகுமாரி ஒரத்தூர் போலீசில் புகார் செய்தார்.அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோடீஸ்வரன் , சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
==============
3.
வேலகவுண்டம்பட்டி அருகே மாணவி தூக்கு போட்டு தற்கொலை. தந்தை கண்டித்ததால்
பரமத்திவேலூர்,ஜுலை.6- 2009
வேலகவுண்டம்பட்டி அருகே டியூசனுக்கு போகவில்லையே என மகளை கண்டித்ததால் மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள செட்டிப்பாளையம் புள்ளக்கவுண்டம் பட்டியை சேர்ந்தவர் மகாலிங்கம்(வயது 50). இவரது மனைவி நல்லம்மாள்(38). இவர்களது மகள் மனிஷா(வயது 14). இவள் மாணிக்கம் பாளையத்தில் உள்ள ஒரு பள்ளியில் 10- ம் வகுப்பு படித்து வந்தாள்.
இந்த நிலையில் சம்பவத் தன்று மனிஷா பள்ளிக்கு சென்று டினிசனுக்கு செல்லாமல் வீட்டிற்கு வந்து விட்டதாக தெரிகிறது. இதைதொடர்ந்து அவளது தந்தை மகாலிங்கம் தனது மகளை டினிசனுக்கு செல்லாததை கண்டித்ததாக தெரிகிறது.
இதனால் மாணவி மனிஷா மனம் உடைந்த நிலையில் இருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் அவள் தனது துப்பட்டாவால் கழுத்தில் சுருக்கு போட்டு கொண்டு வீட்டில் இருந்த மின்விசிறியில் தொங்கி தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக தெரிகிறது.
மாணவியின் தாய் நல்லம்மாள் கூலிவேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தவர் தனது கணவர் மகாலிங்கத்திடம் மகள் எங்கே? என கேட்டுள்ளார். மகள் வீட்டிற்குள் இருப்பதாக கூறியுள்ளார்.
இதையடுத்து நல்லம்மாள் வீட்டிற்குள் சென்று பார்த்த போது தனது மகள் மின்விசிறியில் தூக்கு போட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதை பார்த்து அலறினார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு மாணவியின் தந்தை மற்றும் அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தூக்கில் தொங்கி கொண்டு இருந்த மனிஷாவை துப்பட்டாவை அறுத்து உடனடியாக அவரை மீட்டு, திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் சேர்க்கப்பட்டாள். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக செத்தாள்.
இந்த சம்பவம் குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணைக் கண்டிக்கலாகுமோ!
கல்லைத் தல்லையில் போட்டுக் கொன்றாள் கணவனை
மற்றுமொரு கள்ளக் காதல் கொலை.
கோகுல் என்பவர் மறுமொழியில் கூறியுள்ளதுபோல் விவாகரத்தை சுலபமாகப் பெற முடிந்தால் இத்தகைய கொலைகளையாவது தடுக்கலாம். ஆனல் விவாகரத்து சட்டங்கள் தெளிவாக இல்லை. தற்கால சமூக அமைப்பு, மனநிலை, கண்ணோட்டம், ஊடகங்களின் தாக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்தச் சட்டங்கள் மாற்றப்படவேண்டும்.
தவிர நீதிபதிகளும் மனத்தளவில் விவாக ரத்துக்கு எதிராக இருக்கிறார்கள்.
இதில் உள்ள மற்றுமொரு பிரச்னை, ஜீவனாம்சம், குழந்தைகளின் பொறுப்பை யார் கையில் ஒப்படைப்பது போன்றவை. இவற்றையெல்லாம் ஒழுங்கு செய்து சீராக்கினல் இந்த கள்ளக் காதல் கொலைக்கு முற்றுப் புள்ளி வைக்கலாம்.
ஆனால் நம் அரசியவாதிகளும் பெண்ணிய அமைப்பாளர்களும் வேறு வேலை இருக்கிறதே! ஆண்களையும் அவனைப் பெற்றவர்களையும் கைது செய்து பணம் கறப்பதிலேயே அவர்கள் குறியாயிருப்பதால் முறையான செயலாகத்திற்கு அவர்களுக்கு நேரமும் இல்லை, முனைப்பும் இல்லை!
இனி செய்தி:-
-----------------------
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரைக் கொன்ற மனைவி கள்ளக் காதலனுடன் கைது.
ஆப்பிள் ஜுசில் தூக்கமாத்திரை கலந்து கொடுத்து தலையில் கல்லை போட்டு கொன்றது அம்பலம்
ஓசூர், ஜுன்.29- 2009. செய்தி - தினத்தந்தி
கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை. செய்த மனைவி கள்ளக் காதலனுடன் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சூளகிரி பக்கம் உள்ள காளிங்கவரம் பிரிவு ரோட்டில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் தலையில் கல்லை போட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தவர் கிருஷ்ணகிரி மாவட்டம் தவளம் கிராமத்தை சேர்ந்த திம்மராயன் மகன் முனிரத்தினம் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரது மனைவி காயத்ரி மற்றும் உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்களும் பிணமாக கிடந்தவர் முனிரத்தினம்தான் என்று உறுதி செய்தனர்.
திடுக்கிடும் தகவல்கள்
இதையடுத்து அவரை யார் கொலை செய்தார்கள்? எதற்காக கொலை செய்தார்கள்? என்று விசாரணை நடத்திய போது
இந்த கொலையில் துப்பு துலங்கியது. முனிரத்தினம் சொந்தமாக வேன் வாங்கி அதை அவரே ஓட்டி வந்தார். இந்த வேனை வாங்குவதற்கு கிருஷ்ணகிரி-சென்னை ரோட்டில் மெக்கானிக் கடை வைத்து இருக்கும் கிருஷ்ணன் என்கிற முத்து (வயது 29) உதவி செய்துள்ளார்.
அப்போது முனிரத்தினத்தின் வீட்டுக்கு கிருஷ்ணன் அடிக்கடி வந்து சென்றார். இந்த வேளையில் அவருக்கும் முனிரத்தினத்தின் மனைவி காயத்ரிக்கும் (32) பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.
இதை அறிந்த முனிரத்தினம் தனது மனைவி காயத்ரியை கண்டித்தார். இதனால் தங்களது கள்ளத் தொடர்புக்கு இடைனிறாக இருக்கும் கணவர் முனிரத்தினத்தை தீர்த்துக்கட்ட காயத்ரியும், கிருஷ்ணனும் திட்டம் போட்டதாக தெரிகிறது.
இதன்படி 17.6.09 அன்று இரவு முனிரத்தினத்தை கிருஷ்ணன், மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரிக்கு அழைத்து சென்றார். அங்கு ஏற்கனவே வாங்கி வைத்திருந்த 4 தூக்க மாத்திரையை ஆப்பிள் ஜுசில் கலந்து முனிரத்தினத்துக்கு கொடுத்தார்.
அதை குடித்த முனிரத்தினம் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, அவரை கிருஷ்ணன் தனது பட்டறையில் இருந்த வேனில் ஏற்றிக்கொண்டு சூளகிரி அருகே உள்ள காளிங்கவரம் பிரிவு ரோட்டிற்கு சென்றார். தூங்கிக் கொண்டு இருந்த முனிரத்தினத்தின் தலை மற்றும் கை பகுதியில் பெரிய பாறாங்கல்லை போட்டு கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இந்த கொலைக்கு காயத்ரியும் உடந்தையாக இருந்தார்.
பின்னர் அவர்கள் தங்களுக்கு ஒன்றும் தெரியாதது போல நடித்து வந்தனர். இதைத்தொடர்ந்து காயத்ரியிடம் , போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் தனது கணவரை இழந்து துயரப்படுவதாக கூறி அழுது புலம்பினார். இருந்த போதிலும் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
எப்படியும் போலீசாரிடம் சிக்கி விடுவோம் என்று பயந்த காயத்ரி தனது கள்ளக் காதலன் கிருஷ்ணனுடன் திடீரென தலைமறைவாகிட்டார். இதையடுத்து அவர்கள் பெங்களூர், மும்பை, பூனா, அகமதாபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி திரிந்தனர்.
காயத்ரி திடீரென தலைமறைவு ஆனதால் போலீசாருக்கு அவர் மீதான சந்தேகம் மேலும் வலுத்தது. அவரை போலீசார் வலை வீசி தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ஓசூருக்கு திரும்பி வந்த காயத்ரி மற்றும் கிருஷ்ணனை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரிடமும் நடத்திய விசாரணையில், அவர்கள் சேர்ந்து முனிரத்தினத்தை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். பின்னர் நடந்ததை போலீசாரிடம் வாக்கு மூலமாக அளித்தனர்.
குறிச்சொற்கள் 498a, child custody, crisp, husbands, law, lust, parents, கள்ளக்காதல், கொலைவெறி, வெறி
சீரழியும் குடும்பங்கள்
ஜூனியர் விகடன் (01-07-2009) இதழில் வெளி வந்துள்ள கட்டுரை இது.
(இதன் மின் வடிவத்தை அனுப்பி வைத்த தமிழ் சரவணன் அவர்களுக்கு நன்றி)
---------------------------------
'புதருக்குள் பெண் பிணம், கணவனை கட்டையால் அடித்துக் கொன்ற மனைவி, ரயில் முன் பாய்ந்து கள்ளக் காதல் ஜோடி தற்கொலை' - தினம் இப்படி ஆவடியைச் சுற்றி சம்பவங்கள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது! ஆவடி குறித்து நம் ஆக்ஷன் செல்லுக்கு (எண்:9790962188) வந்திருந்த அதிகபட்ச புகார்களும் இதே ரேஞ்சில்தான் இருக்கிறது.
'போலீஸ் ஸ்டேஷனில் கட்டப் பஞ்சாயத்து செய்கிறார்கள், வீட்டை விற்கச் சொல்லி ரவுடிகள் மிரட்டுகிறார்கள், கள்ளக் காதலியுடன் சேர்ந்துகொண்டு கணவர் துன்புறுத்துகிறார், கொலையைத் தற்கொலையாக மாற்றிவிட்டார்கள், பள்ளிக்கூடம் போன பெண்ணை கடத்திக்கொண்டு போய்விட்டார்கள். ஈவ் டீசிங் தொல்லை தாங்க முடியவில்லை...' இப்படியாக வரிசையான குற்றச் சாட்டுகள். ஆவடியில் மட்டும் ஏன் இப்படி?
இப்பகுதியில் குடியிருக்கும் இந்து மக்கள் கட்சிப் பிரமுகர் சம்பத் நம்மிடம், ''பிரமாண்டமான தொழில் நகரமாக வளர்ந்திருக்க வேண்டிய பகுதி இது. ஆனால், பத்தாண்டுகள் பின்தங்கி நிற்கிறது. காரணம், ரவுடியிஸம்.
இப்பகுதி இளைஞர்கள் தாங்கள் ரோட்டில் நடந்தால், எல்லோரும் பயப்படவேண்டும் என ஆசைப்படுகிறார்கள். கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள்கூட கட்டப்பஞ்சாயத்து அஸைன்மென்டுகளில் ஈடுபடுகிறார்கள். சென்னையைச் சேர்ந்த ரவுடி கும்பலுக்கும் இவர்களுக்கும் நெருக்க மான தொடர்பு இருக்கிறது. புறநகர்ப் பகுதி களில் திட்டமிட்டு ரவுடிக் குழுக்களை உருவாக்குவது இவர்கள்தான். இப்பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சிகளுடன் இந்த ரவுடி கும்பல் பின்னிப் பிணைந்துள்ளது.
ரயில் போக்குவரத்தே இல்லாத ஸ்ரீபெரும்புதூர் ஏரியாவில் நல்ல தொழில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால், தொழிற்பேட்டையான அம்பத்தூர், ஆவடி ஏரியாக்களில் புதிதாக எந்தத் தொழிற்சாலையும் தொடங்கப்படவில்லை. காரணம், ஒரு தொழிற்சாலை ஆரம்பிப்பதற்கு முன்பே, கும்பலாக மாமூல் கேட்டு வந்துவிடுகிறார்கள். ரியல் எஸ்டேட் துறையும் இப்படித்தான். கிழக்குக் கடற்கரைச் சாலை, தாம்பரம் ஏரியாக்களைவிட இங்கே 25 சதவிகிதம் விலை குறைவாக இருக்கிறது. இப்படியாக ஆவடியின் பொருளாதாரமே ரவுடிகளால் சீரழிந்து விட்டது.
பொருளாதாரச் சீரழிவு ஒரு புறம் என்றால், சமுதாயச் சீரழிவு அதைவிட மோசம். புறநகர் பகுதியின் குறிப்பிட்ட சில தியேட்டர்களில் பலான படங்கள் தவிர, வேறெதையும் ஓட்டுவதில்லை. இந்தப் படங்களைப் பார்க்கும் ரசிகர்களின் ஈவ் டீசிங் தொல்லையிலிருந்து யாரும் தப்ப முடியாது. யாராவது எதிர்த்துப் பேசிவிட்டால், வீட்டுக்கே வந்து கலாட்டா செய்வார்கள். போலீசுக்குப் போனாலும் பயனில்லை. எனவே, பாதிக்கப்பட்டவர்கள் வேறு ஒரு ரவுடிக் கும்பலை நாடி, ஆதரவு கேட்கிறார்கள்.
அதேபோல், கள்ளக் காதல் விவகாரங்களும் இந்தப் பகுதிகளில் ஏராளம். வெளியே சொல்ல முடியாத அளவுக்கு முறையற்ற உறவுகளும் அதிகரித்திருக்கின்றன. மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரிகளை அரசு இப்பகுதியில் ஆய்வு செய்ய அனுப்பி னால், ஏதாவது நன்மை கிடைக்கலாம்'' என்றார் சம்பத்.
''ஆவடியில் இருந்து எங்களுக்கு வரும் புகார்கள் பெரும்பாலும், கள்ளக் காதல் சம்பந்தப்பட்டவையாகவே இருக் கின்றன!'' என்கிறார் கலைச்செல்வி கருணாலயா என்கிற தொண்டு நிறுவனத் தின் நிறுவனர் புருஷோத்தமன். அவர் நம்மிடம், ''ஒரு முஸ்லிம் குடும்பம். பக்கத்துப் பக்கத்து வீடுகளில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். ஒரு நாள் தன் கணவன், அவருடைய அண்ணன் மனைவியுடன் அந்தரங்கமாக இருந்ததை நேரில் பார்த்துவிட்ட மனைவி, அங்கேயே சத்தம் போட்டு கலாட்டா செய்திருக்கிறார். அதற்குப்பிறகு அந்தக் குடும்பம் செய்ததுதான் அநியாயம். சத்தம் போட்டு கலாட்டா செய்த அந்தப் பெண்ணை வீட்டுக்குள்ளேயே சிறை வைத்து, ஜன்னல் வழியே சாப்பாடு கொடுத்துள்ளனர். இந்த விஷயம் அந்தப் பெண்ணின் அப்பா மூலமாக சமூக நல வாரியத்தின் கவனத்துக்கு வந்து, போலீஸ் மூலமாக அந்தப் பெண்ணை மீட்டோம். ஆனால், கணவன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு, இவளை நட்டாற்றில் விட்டுவிட்டான்.
இன்னொரு புகார் ஒரு இளைஞனைப் பற்றியது. அவனும் அவனுடைய அம்மாவும் ரோட்டோரம் தள்ளு வண்டியில் பழ வியாபாரம் செய்து வந்திருக்கிறார்கள். இவர்களின் கடைக்கு எதிரே நாற்பது வயது விதவைப் பெண்மணி ஒருவரின் வீடு. அந்தப் பையனுக்கும் விதவைப் பெண்மணிக்கும் தொடர்பு ஏற்பட்டு, இப்போது அவன் அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டான். இருவருக்கும் இருபது வயது வித்தி யாசம்! இந்தத் தவறான உறவு எதிர்காலத்தில் இரண்டு குடும்பங்களையும் பாதிக்கும் என்பதால் விதவைப் பெண்மணியிடமிருந்து பையனை மீட்டுக் கொடுக்கச் சொல்லி, அவனுடைய அம்மா போராடிக்கொண்டு இருக்கிறார்.
இன்னொரு வீட்டில், கட்டிய புருஷனை விட்டுவிட்டு அவனுடைய தம்பியுடன் ஓடிவிட்டாள் ஒரு பெண். வியாபாரம், வியாபாரம் என்று பணமே குறிக்கோளாக இருந்ததால், மனைவியைக் கோட்டை விட்டுவிட்டார் அந்தக் கணவர்'' என்றவர்,
''தனி மனித ஒழுக்கம் பற்றிய மதிப்பீடுகளை இங்குள்ள இயந்திர வாழ்க்கை தவிடு பொடியாக்கி வருகிறது. இதுதான் இவ்வாறான மனசாட்சியற்ற செயல்களுக்கு அடிப்படைக் காரணம். இதில் தொலைக்காட்சியும் முக்கியப் பங்கு வகிக்கிறது. வசதிக்கு மீறிய வாழ்க்கை மீதான ஆசையும், அதற்குப் போதாத பொருளாதார நிலையும்கூட கள்ளக் காதலுக்கு ஒருவகையில் காரணி. தன்னு டைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத புருஷனை விட்டு விட்டு வேறொருவரை தேடிப் போகும் பெண்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். மாமனார், மாமியார், கணவன் ஆகியோரைப் பழி வாங்குவதற்காகவும் சில பெண்கள் இந்த மாதிரியான காரியங்களில் இறங்கி விடுகிறார்கள். மனம்விட்டுப் பேசக்கூடிய, முதிர்ச்சியோடு அறிவுரை சொல்லக்கூடிய நண்பர்களையோ தோழிகளையோ இன்றைய நடுத்தர வயதினர் வளர்த்துக் கொள்ளாமல் இருப்பதும்கூட இந்தப் பக்குவமற்ற போக்குக்கு ஒரு காரணம்.
அடுத்த தலைமுறையையாவது கவனத்தில் கொண்டு இனிமேல் பள்ளி, கல்லூரிகளில் வாழ்க்கைக் கல்வியைக் கட்டாயப் பாடமாக்குவதுதான் சரியான தீர்வாக இருக்கும். அதேபோல், ஒவ்வொரு குடும்பத் தலைவரும் தன்னுடைய பிள்ளைகளுக்கு ரோல் மாடலாக விளங்கவேண்டும். இது நம் சமுதாயத் தலைவர்களுக்கும் பொருந்தும். இல்லையென்றால், 'அவரே இப்படி... நாம செஞ்சா என்ன?' என்று எண்ணவைத்துவிடும்'' என்று புருஷோத்தமன் பலமாக எச்சரிக்கை மணியடித்துப் பேசினார். அதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.
ஆவடியில் நடக்கும் விதிவிலக்கான சம்பவங்களுக்கு மட்டுமா இது பொருந்தும்? நிம்மதியைத் தொலைத்து, தவறான பாதை நாடுபவர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கும் இது பொருந்துமே!
- எம்.பாலச்சந்திரன்படம்: வி.செந்தில்குமார்
--------------------------
இந்த செய்தியின் கீழ் பதியப்பட்டுள்ள மறுமொழி இது:-
---------------------
//மாமனார், மாமியார், கணவன் ஆகியோரைப் பழி வாங்குவதற்காகவும் சில பெண்கள் இந்த மாதிரியான காரியங்களில் இறங்கி விடுகி றார்கள்.//
ஆம் இந்த கட்டுரை நூத்துக்கு நூறு உண்மை... பழிவாங்குகிறேன் என்ற போர்வையில் "வரதட்சணை கொடுமை சட்டம்" போன்ற அப்பாவி பெண்களுக்கா இயற்றப்பட்டதை இது போல் பெண்கள் பயன்படுத்தி அணைவரையும் சிறையில் அடைப்பது போன்ற கொடுமைகள் தினம் தொறும் நடந்தேறிவருகின்றது...
இச்சட்டத்தால் நாட்டில் இதுவரைக்கும் சுமார் ஒருலட்சடத்தி ஐம்பதாயிரம் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்(எல்லாம் விசாரனை கைதிகள்தாம்) மற்றும் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 20 ஆயிரம் தந்தையில்லா குழந்தைகள் வளர்ந்து வருகின்றனர்... ஆனால் இதில் கொடுமை என்னவேன்றால் இது போல் பொய் கேசுகளில் 100 - க்கு 2 - மட்டுமே உண்மை என்று நிரூபிக்கப் பட்டிருக்கிறது. மீதி 98% சதவீதம் பொய் கேசுகள். இது அரசு கொடுத்துள்ள புள்ளி விவரம்!
இன்னும் சில ஆண்டுகளில் திருமணம் குடும்பம் என்ற அமைப்பே இல்லாமல் போகும்... நம் நாட்டில் என்பது நிச்சயம்!
விட்டது சனி!
இது எப்படி இருக்கு!
அந்தினிர் அருகே கள்ளக்காதலனுடன் மனைவியை சேர்த்து வைத்த கணவன். போலீஸ் முன்னிலையில் சமரசம். (வரதட்சணை கேசு போடாமல் இத்தோடு விட்டார்களே என்று புருஷன் வெட்டிவிட்டு ஓடிவிட்டான் போல!)
அந்தினிர், ஜுன்.26- 2009. செய்தி - தினத்தந்தி
அந்தினிர் அருகே கள்ளக்காதலனுடன் மனைவியை கணவர் சேர்த்து வைத்தார். போலீசார் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த சமரசம் ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் அந்தினிர் சத்தியா நகரைச் சேர்ந்தவர் பழனியம்மாள். இவரது மகள் நளினி(26). இவருக்கும், அதேபகுதியைச் சேர்ந்த கார்த்திக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
கணவனுக்கும், மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக நளினி கணவரை பிரிந்து அந்தினிர் சத்தியா நகரில் தனது தாயார் பழனியம்மாள் வீட்டில் வசித்து வருகிறார். அந்தப்பகுதியில் அவர் கூலி வேலைக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் நளினிக்கும், அங்குள்ள ஒரு டீக்கடையில் வேலை செய்து வந்த மாணிக்கம் (வயது 26) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது அவர்களிடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவரும் ஊரைவிட்டு ஓடி விட்டனர்.
இது குறித்து பழனியம்மாள் அந்தினிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் ஊரை விட்டு ஓடிய மாணிக்கமும், நளினியும் மீண்டும் ஊருக்கு திரும்பி வந்தனர்.
இருவரும் அந்தினிர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அங்கு பழனியம்மாளும், நளினியின் முதல் கணவர் கார்த்தியும் வந்தனர். போலீசார் அவர்களை அழைத்து பேசினர்.
அப்போது நளினி தான் வாழ்ந்தால் மாணிக்கத்துடன்தான் வாழ்வேன் என்றும், இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்தார்.
இதனால் தனக்கு திருமணத்தின்போது அணிவித்த கால்கொலுசு மற்றும் நகைகளை நளினி தனது தாயாரிடம் ஒப்படைத்தார்.
நளினியை அவரது காதலன் மாணிக்கத்துடன் அனுப்பி வைக்க கார்த்தியும் சம்மதித்தார். பின்னர் அனைவரது ஆசியுடனும் மாணிக்கமும், நளினியும் அங்கிருந்து விடைபெற்றுச் சென்றனர்.
குறிச்சொற்கள் divorce, harassment, husbands, lust, victims, ஆண்பாவம், கள்ளக்காதல், வெறி
மனைவியரால் ஆண்களுக்கு புது ஆபத்து
வரதட்சணை கொடுமை வழக்கில் சிக்கும் ஆண்களில் 56 சதவீதம் பேர் கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் : ஆய்வில் வெளியாகும் தகவல்.
பெங்களூர், மே.29- 2009. செய்தி - மாலை மலர்
குடும்பங்களில் வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களை பாதுகாக்க கடந்த 2005-ம் ஆண்டு குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு ஏராளமான கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் மீது வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து “சேவ் இந்தியா பேமிலி பவுண்டேசன்” (Save Indian Family Foundation) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் வெளியாகும் தகவல்கள் வருமாறு:-
வரதட்சணை ஒழிப்பு சட்டம் அல்லது குடும்ப வன்முறை சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குபதிவு செய்யப்படும் ஆண்களில் 56 சதவீதம் பேர் கம்ப்யூட்டர் என்ஜினீயர்களாகவோ அல்லது தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்களாகவோ அல்லது தொழில் அதிபர்களாகவோ இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் 24 ல் இருந்து 28 வயதுக்குட்பட்டவர்கள்.கடந்த ஆண்டு சுமார் 1,200 பேரிடம் நடத்திய ஆய்வில் மேற்கண்ட தகவல் தெரியவந்தது. இந்த சட்டம் ஒரு தலைபட்சமாகவே இருக்கிறது. இதனால் அப்பாவி ஆண்களும் பாதிக்கப்படுகிறார்கள்.
கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் மற்றும் தொழில் அதிபர்களிடம் ஏராளமாக பணம் இருப்பதால் அவற்றை அடைய வரதட்சணை கொடுமை அல்லது குடும்ப வன்முறை ஆகிய சட்டங்களின் கீழ் புகார் கொடுக்கப்படுகின்றன.
நாடு முழுவதும் வரதட்சணை தொடர்பான வழக்குகள் ஆண்டுக்கு ஆண்டு 20 சதவீதம் அதிகரித்து வருகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் இவ்வாறு வரதட்சணை வழக்குகள் அதிகரித்து உள்ளன.
கடந்த 2003-ம் ஆண்டு 50,703 பேர் மீது வரதட்சணை ஒழிப்பு சட்டம் பாய்ந்தது. இது 2007-ம் ஆண்டில் 75,930 ஆக உயர்ந்தது. இவ்வாறு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஆய்வு நடத்திய அமைப்பு, வரதட்சணை ஒழிப்பு சட்டமும், குடும்ப வன்முறை தடுப்பு சட்டமும் யாருக்கும் பாதகமாக இருக்காத வகையில் தகுந்த மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி, இந்திய தலைமை நீதிபதி, சட்ட ஆணையம் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோரை கேட்டுக்கொண்டுள்ளது.
இதற்கிடையே குடும்ப வன்முறை ஒழிப்பு சட்டமானது ஒரு தலைபட்சமாக இருப்பதாக இந்திய சர்வதேச சட்ட மையத்தைச் சேர்ந்த எம்.ஜி.குமார் கூறினார். இதுகுறித்து அவர் கூறுகையில் ““நான் சந்தித்த பல வழக்குகளில் பெரும்பாலான ஆண்கள், அவர்கள் எந்த தவறும் செய்யாமலேயே புகாருக்கு ஆளாகி இருப்பது தெரியவந்தது”” என்று தெரிவித்தார்.
மூத்த வக்கீல் ஒருவர் கூறுகையில், ““எனக்கு தெரிந்த ஒரு கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஒரு பெண்ணை திருமணம் செய்தார். கிட்டத்தட்ட ஆதரவற்ற நிலையில் இருந்த அந்த பெண்ணிடம், அவருடைய உறவினர்கள் சென்று கணவர் மீது வழக்கு தொடரும்படி கூறி உள்ளனர். இது முழுக்க முழுக்க பணம் பறிப்பதற்காக தொடரப்பட்ட வழக்கு என்பது எனக்கு தெரியவந்தது. இதைதொடர்ந்து அந்த பெண்ணின் கணவருக்கு நீதி கிடைப்பதற்காக நான் வாதாடினேன்”” என்றார்.
மிஸ்டு கால் விளையாட்டு!
3 பெண் குழந்தைகளுடன் மாயமான பெண் எங்கே?
செல்போனில் `மிஸ்டுகால்' கொடுத்து விளையாட்டு காண்பித்து வருகிறார்
சேலம், ஜுலை.24- 2009. செய்தி - தினத்தந்தி
3 குழந்தைகளுடன் காணாமல்போன பெண், செல்போனில் மிஸ்டுகால் கொடுத்து விளையாட்டு காண்பித்து வருகிறார். அவரது தாய்மாமனிடம் விசாரிக்க போலீசார்
முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கிருஷ்ணகிரியில் உள்ள கிருஷ்ணப்பா `லே' அவுட் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். தையல் தொழிலாளி. இவரது மனைவி உமா(வயது30). இந்த தம்பதிகளுக்கு ரம்யா(12), சூர்யா(12), தீபிகா(5) என்ற 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களில் ரம்யாவும், சூர்யாவும் இரட்டையர்கள்.
கடந்த 11-ந் தேதி தனது குழந்தைகளான ரம்யா, சூர்யா ஆகியோரை சேலம் அடுத்துள்ள அயோத்தியாபட்டணத்தில் உள்ள தனியார் கிறிஸ்டியன் பள்ளியில் 8-ம் வகுப்பு சேர்த்து விட்டு அங்கேயே விடுதியில் விடுவதற்காக உமா பஸ்சில் சேலம் வந்தார். உடன் இளைய மகள் தீபிகாவையும் அழைத்து வந்தார்.
சேலம் 5 ரோட்டில் பஸ்சில் வந்து இறங்கியதும், தனது கணவர் சுப்பிரமணியனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நல்லபடியாக பஸ்சில் வந்து சேர்ந்து விட்டோம். இனி நான் பள்ளியிலும், விடுதியிலும் ரம்யா, சூர்யா ஆகியோரை சேர்த்து
விட்டு தீபிகாவுடன் ஊருக்கு புறப்பட்டு வந்து விடுவேன் என உமா தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் சொன்னபடி, உமா ஊர் திரும்பவில்லை. 2 குழந்தைகளை பள்ளியிலும் சேர்த்து விடவில்லை.
மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் மாயமானது குறித்து சேலம் அழகாபுரம் போலீஸ் நிலையத்தில் கணவர் சுப்பிரமணியன் புகார் தெரிவித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் துரை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தேடிவந்தார்.
`மிஸ்டுகால்' விட்ட உமா
மாயமான உமா, மகள்கள் ரம்யா, சூர்யா, தீபிகா ஆகியோரை தேடி நாமக்கல், தர்மபுரி ஆகிய இடங்களில் உள்ள உறவினர் வீடுகளுக்கு போலீசார் சென்று தேடுதல்வேட்டை நடத்தினார்கள். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் உமா, தனது கணவர் சுப்பிரமணியனின் செல்போனுக்கு,தன்னுடைய செல்போனில் இருந்து `மிஸ்டுகால்' விடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து அதே எண்ணுக்கு போலீசார் தொடர்பு கொண்டபோது நீண்ட `ரிங்' சென்றதே தவிர, அதை எடுத்து உமா பேச தயாராக வில்லை. மீண்டும் மீண்டும் தொடர்பு கொள்ள போலீசார் முயற்சித்தபோது செல்போன் `சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது.
ஏற்கனவே, சுப்பிரமணியன் கொடுத்த புகாரில், கிருஷ்ணகிரியை சேர்ந்த உமாவின் தாய்மாமன் சிவா மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்து இருந்தார். அதைத்தொடர்ந்து இன்று போலீசார் கிருஷ்ணகிரி சென்று, தாய்மாமனிடம் விசாரிக்க திட்டமிட்டு
இருப்பதாக இன்ஸ்பெக்டர் துரை தெரிவித்தார்.
குறிச்சொற்கள் victims, ஆண்பாவம், கள்ளக்காதல், குடும்பம், கொடுமை, கொலைகாரி lust, சமூகம்
வாழைப்பழத்தில் விஷம் கலந்து கொடுத்து பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூர தாய்
”பெண்கள் எவ்வித வன்முறையிலும் ஈடுபட மாட்டார்கள். வன்முறை என்றால் அதை ஆண்தான் செய்வான். அதனால் குடும்ப வன்முறை வழக்குகளில் ஆண்கள்தான் குற்றவாளிகள். கணவனுக்கு எதிராக மனைவி தொடுக்கும் புகார் ஒன்றே போதும், வேறு சாட்சியங்கள் தேவையில்லை.” - இதுதான் இந்திய சட்டங்களின் மற்றும் அளிக்கப்படும் தீர்ப்புகளின் அடிப்படைக் கருத்தாக்கம்.
இந்தச் செய்தியை வாசித்து விட்டு அனைத்து பெண்களும் எவ்வளவு மென்மையானவர்கள்; அன்பே உருவானவர்கள், அவர்கள் எவ்வித வன்முறையையும் செய்யவே முனைய மாட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்:-
-----------------
பத்தனம்திட்டை,ஜுன்.24- 2009 . செய்தி - தினத்தந்தி
பச்சிளம் குழந்தைக்கு வாழைப்பழத்தில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற தாயை, போலீசார் கைது செய்தனர்.
தாய்மையின் பெருமையை பறைசாற்றுவதற்காக `பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு' என்று சொல்வது உண்டு. ஆனால் ஈன்றெடுத்த பிள்ளைகளையும் சுமையாக நினைக்கும் தாய்மார்கள் இருக்கத்தான் செய்வார்கள் போலும்.
அன்னையின் அரவணைப்பு இருக்க, எந்தவித அச்சமுமின்றி துள்ளி விளையாடிய ஒரு பச்சிளம் குழந்தைக்கு, பெற்ற தாயே விஷம் வைத்து கொன்ற சம்பவம் இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது.
இது பற்றிய விவரம் வருமாறு:-
பத்தனம்திட்டை மாவட்டம் பீருமேடு அருகே உள்ள ராஜமுடி காலனியைச் சேர்ந்தவர் ரவீந்திரன். இவருடைய மனைவி பாக்கியம் (வயது34). கணவன்-மனைவி இருவரும் கூலிவேலை செய்து வந்தனர். இவர்களுக்கு 4 குழந்தைகள் பிறந்தன.
4-வதாக பிறந்த கார்த்திகா என்ற பெண் குழந்தைக்கு தற்போது 11/2 வயது ஆகிறது. படுசுட்டியான இந்தக்குழந்தை, நேற்று முன் தினம் இரவு தனது தாயுடன் தூங்கிக் கொண்டிருந்தது. அப்போது அதன் வாயில் இருந்து திடீரென நுரை- நுரையாக வெளிவந்தது.
இதனால் பாக்கியம் கூச்சலிட்டு, பக்கத்து வீட்டுக் காரர்களை உதவிக்கு அழைத்தார். பின்னர் அவர்களின் துணையுடன் தனது குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார்.
அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் அது இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் மரணத்தில் சந்தேகம் அடைந்த அவர்கள் இது குறித்து போலீசுக்கும் தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் பீருமேடு போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் பாக்கியம் தான் தனது குழந்தைக்கு பழத்தில் விஷம் வைத்து கொலை செய்துவிட்டு, நாடக மாடியது தெரியவந்தது.
இதையடுத்து பாக்கியத்தை போலீசார் கைது செய்தனர்.
குடும்ப வறுமை மற்றும் பெண் குழந்தை என்ற காரண த்தால் இந்த கொலைக்கு துணிந்ததாகவும், நாயை கொல்வதற்காக பக்கத்து வீட்டில் இருந்து வாங்கி வைத்திருந்த விஷ மருந்தை வாழைப்பழத்தில் கலந்து குழந்தைக்கு கொடுத்து கொன்றதாகவும், பாக்கியம் போலீசில் வாக்குமூலம் கொடுத்ததாக தெரிகிறது.
