எங்கே செல்கிறது குடும்பம்?

Linkஏப்ரல் 13,2012 தினமலர்


உசிலம்பட்டி : கருமாத்தூர் அருகே கருவேப்பிலை கிராமத்தில் சித்தியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த அண்ணன் மகனை கண்டித்த சித்தப்பாவை, கொலை செய்த அண்ணன் மகன், அவரது தாய்,சித்தி ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த ஏப். 8 ல், கருவேப்பிலை கிராமத்தைச் சேர்ந்த அலெக்ஸ்பாண்டி 38 என்பவர் தோட்டத்தில் படுத்திருந்த போது தலையில் பாறாங்கல்லை போட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். இது குறித்து உசிலம்பட்டி டி.எஸ்.பி., குமார், செக்காணூரணி இன்ஸ்பெக்டர் ஜான்பிரிட்டோ மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் கள்ளத்தொடர்பின் காரணமாக அவரது அண்ணன் பாண்டி மகன் பிரசாத் 19, மனைவி பராசக்தி 35, அண்ணன் மனைவி பூமா 40
ஆகியோர் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது .

இவர்களிடம் நடத்திய விசாரணையில், அலெக்ஸ்பாண்டியின் மனைவி பராசக்தி. அலெக்ஸ்பாண்டியின் அண்ணன் பாண்டி. அவரது மனைவி பூமா. பாண்டி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.

அண்ணன் இறந்த பின் அவரது மனைவி பூமாவும் அவரது மகன் பிரசாத்தும் அலெக்ஸ்பாண்டியுடன் வசித்து வந்தனர். பிரசாத் பாலிடெக்னிக்கில் 3ம் ஆண்டு படிக்கிறார்.

பிரசாத்திற்கும் அவரது சித்தி பராசக்திக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இந்த விசயம் தெரிந்த அலெக்ஸ்பாண்டி தனது மனைவியையும், அண்ணன் மகனையும் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரசாத், சித்தி பராசக்தி, தாய் பூமாவுடன் சேர்ந்து சித்தப்பாவை கொலை செய்ய திட்டமிட்டார். ஏப். 7 இரவில் தோட்டத்தில் நெல் நாற்று பிடுங்கச் செல்வதாக பராசக்தியும், பூமாவும் அலெக்ஸ்பாண்டியை அழைத்துச் சென்றனர்.

இரவு அங்கு வந்த பிரசாத், தாய், சித்தி இணைந்து தூங்கிக் கொண்டிருந்த அலெக்ஸ்பாண்டியின் தலையில் கல்லை போட்டு கொன்றதாக ஒப்புக்கொண்டனர். மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

கணவனின் குடும்பத்தை கூட்டமாக பொய் வழக்கில் சிக்கவைக்கும் இளம் மருமகள்கள்

பொய் வரதட்சணை வழக்குகளின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றது. பின்வரும் செய்தியில் பாருங்கள். மருமகளின் நகைகளை அடகுவைக்க கணவனின் ஒட்டுமொத்தக் குடும்பமும் அடகுகடைக்குச் சென்றார்களாம். உங்களால் நம்பமுடிகிறதா?


வரதட்சணை கேட்டு பட்டதாரி பெண் சித்ரவதை
சென்னை இன்ஜினியருக்கு வலைவீச்சு
ஏப்ரல் 16,2012 Dinamalar

தேனி : வரதட்சணை கேட்டு, இன்ஜினியரிங் பட்டதாரி பெண்ணை அடித்து சித்ரவதை செய்த சென்னையைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரை, மகளிர் போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம் ஊஞ்சாம்பட்டி, சரவணக்குடில் பகுதியை சேர்ந்தவர் நதியா, 25; பி.இ., படித்துள்ளார். இவருக்கும், சென்னை டாடா இண்டஸ்ட்ரீசில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வரும் கார்த்திக்கிற்கும், 2010 ஜூன் 24ல் திருமணம் நடந்தது. 65 சவரன் நகையும், 2.50 லட்ச ரூபாய் மதிப்புள்ள சீர் வரிசைகளும் கொடுத்தனர்.

திருமணமான மூன்றாவது மாதத்தில், வீடு வாங்குவதற்காக பீரோவில் வைத்திருந்த நதியாவின் நகைகளை எடுத்து, கணவன் கார்த்திக், அவரது தந்தை மனோகரன், தாய் ராஜதிலகம், தங்கை சுகாசினி, அவரது கணவர் ராஜா ஆகியோர் அடகு வைத்தனர். மேலும், கூடுதல் வரதட்சணையாக 10 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டினர். பணம் கொடுக்காவிட்டால், விவாகரத்து செய்வதாகக் கூறி வெற்றுப் பேப்பரில் கையெழுத்து கேட்டு அடித்து துன்புறுத்தினர்.

தேனி அனைத்து மகளிர் போலீசில் நதியா புகார் செய்தார். போலீசார், கார்த்திக் உட்பட ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். சாப்ட்வேர் இன்ஜினியரை கைது செய்வதற்காக போலீசார் சென்னை சென்றுள்ளனர்.


கூகிள் கம்பெனி கூடவா இப்படி!!

நேற்று வந்த மடல் இப்படிச் சொல்கிறது:

“Your blog at http://tamil498a.blogspot.com/ has been reviewed and confirmed as in violation of our Terms of Service for: NONE. In accordance to these terms, we've removed the blog and the URL is no longer accessible.”


:))

மீட்சி பெற்றது இந்தப் பதிவு

தமிழிஷ் டாட் காம் தளத்திற்கு இணைப்பு கொடுத்த காரணத்தைக் கூறி எரிதமென்று வகைப் படுத்தப்பட்டு முடக்கி வைக்கப்பட்ட இந்த வலைப்பதிவு இப்போது தானாகவே மீண்டும் கண்ணெதிரெ தோன்றத் தொடங்கிவிட்டது.

சுமார் இரண்டு மாதங்களாக மடக்கிப் போடப்பட்டது இந்தப் பதிவு. ஆனால் இதற்குக் காரணமான தமிழிஷ் நல்ல பிள்ளையாக உடனே உயிர் பெற்றுவிட்டதுதான் ஒரு முரண்!

ஆகையால் உங்கள் பதிவில் எந்த தளத்திற்கும் இணைப்பு கொடுக்காதீர்கள். சரியான மென்பொருள் அமைப்பினால் தமிழ்மணம்.காம் தளத்தினால் எந்த ஒரு பிரச்னையும் இதுவரை தோன்றவில்லை என்பதை அறியமுடிகிறது. மற்ற தளங்களைப் பற்றி இதுபோல் அறுதியிட்டுக் கூறமுடியாது. எச்சரிக்கையுடன் இருப்பது நலம்.

தற்போது இந்த வலைப்பதிவு www.தமிழ்498a.காம் என்னும் முகவரியில் தொடர்ந்து இயங்குகிறது. அங்கு சென்று அண்மைய இடுகைகளைப் பார்வையிடும்படி வாசகர்களை வேண்டுகிறோம்!

நன்றி!

எல்லா திருமணங்களையும் இனி பதிவு செய்ய வேண்டும் - அரசு உத்தரவு

இன்றைய முக்கிய செய்தி:-

"அனைத்து திருமணங்களும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். உரிய நாளுக்குள் பதிவு செய்யாவிட்டால் அல்லது தவறான தகவல் அளித்தால் குற்ற வழக்கு தொடரப்படும்” என்று பதிவுத் துறை தலைவர் தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் 24ம் தேதி முதல் இது அமலுக்கு வந்துள்ளது.


திருமணப் பதிவு விண்ணப்பத்தின் முக்கிய பகுதி வரதட்சணை பற்றியது. அந்தப் படிவத்தில் கணவன், மனைவி இருவரும் ”வரதட்சணை கேட்கவோ, கொடுக்கவோ, பெறவோ” இல்லை என்று வாக்குமூலமளித்து சாட்சியங்கள் முன் கையொப்பமிடவேண்டும். அதன் பிறகே திருமணம் பதிவு செய்யப்படும்.

9. We hereby declare:-
...
(v) no dowry was demanded, given and taken.


இதனால் கணவன்மார்களுக்கு ஒரு நன்மை, இனிமேல் கெடுமதிப் பெண்கள் திடீரென்று நினைத்துக்கொண்டு தற்போது பொய் 498A புகார்களில் சொல்வதுபோல், “திருமணத்தன்று ஒரு கோடி ரூபாய் வரதட்சணை கொடுத்தேன்” என்று அண்டப்புளுகு புளுக முடியாது. ஆனால், இதையும் தாண்டி இந்த சட்டத்தில் இண்டு இடுக்கு கண்டுபிடித்து, வேறு வித பொய்ப் புகார்கள் கொடுப்பதற்கு வழிவகைகள் தேடி வன்கொடுமை செய்யலாம், அதற்கென்றெ இருக்கும் ஸ்பெஷலிஸ்ட் வக்கீல்கள் இதற்குத் துணை போகலாம். பொய் சொல்பவர்களையும், சோரம் போகிறவர்களையும் சட்டம் போட்டு முழுவதும் தடுக்க இயலாது.

ஆனால் இந்த அரசாணை ஒரு “ஸ்பீட் பிரேக்கர்”. அவ்வளவுதான்!

இனி இந்த செய்தியின் மேல்விவரம்:-

தமிழக அரசின் பதிவுத் துறை தலைவர் சிவக்குமார் வெளியிட்டுள்ள உத்தரவு:தமிழக அரசு இந்த ஆண்டு இயற்றிய திருமணங்கள் பதிவுச் சட்டப்படி, பல மதங்களைச் சேர்ந்த இந்திய குடிமக்கள், நவம்பர் 24ம் தேதி முதல், தமிழகத்தில் நடக்கும் அனைத்து திருமணங்களையும் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். பல்வேறு மதச் சட்டங்களின் கீழ் திருமணம் பதிவு செய்திருந்தாலும், இந்தச் சட்டத்தின் மூன்றாவது பிரிவின் கீழும் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.இந்த சட்டப்படி, பதிவுத் துறைத் தலைவர், தலைமை திருமணப் பதிவாளராகவும், மாவட்ட பதிவாளர்கள் அனைவரும் மாவட்ட திருமணப் பதிவாளர்களாகவும், சார்பதிவாளர்கள் அனைவரும் திருமணப் பதிவாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.திருமணப் பதிவுக்கான விண்ணப்பங்கள் இலவசமாக, அனைத்து பதிவு அலுவலகங்களிலும் வழங்கப்படும்.

கட்டாய திருமணப் பதிவுக்கான விவரங்கள் மற்றும் படிவங்கள், துறையின் இணையதளத்தில் (www.tnreginet.net) வெளியிடப்பட்டுள்ளன. இதிலிருந்து விவரங்களை அறிந்து, படிவங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.திருமணப் பதிவுக்கான படிவம் மற்றும் விண்ணப்பத்தில் எவ்வித அடித்தலோ அல்லது பிழைகளோ இன்றி பூர்த்தி செய்து, மணமக்கள், திருமணம் நடத்தி வைத்தவர் மற்றும் இரு சாட்சிகளின் கையெழுத்துடன், திருமணம் நடந்ததற்கான ஆதாரம், இருப்பிட மற்றும் வயது தொடர்பான ஆதார ஆவணங்களுடன், திருமணம் நடந்த 90 நாட்களுக்குள் 100 ரூபாய் கட்டணத்துடன் (90 நாட்களுக்கு மேலானால், 150 ரூபாய் கட்டணம்) திருமணம் நடந்த எல்லைக்கு உட்பட்ட சார்பதிவாளரிடம் அளிக்க வேண்டும். அல்லது அஞ்சல் வழி அனுப்ப வேண்டும்.

திருமணத்துக்கான சாட்சிகளின் முகவரி மற்றும் ஆள் அறிவதற்கான அடையாள சான்று நகல்கள் இணைக்க வேண்டும். விண்ணப்பமும், ஆதாரங்களும் முறையாக இருந்தால், சம்பந்தப்பட்ட திருமணப் பதிவாளர், மனுதாரருக்கு ஒப்புதல் அளிப்பார். உரிய வகையில் இல்லாத மனுக்கள், குறைகளை சரிசெய்து திரும்ப அளிக்குமாறு மனுதாரரிடம் திரும்ப அளிக்கப்படும்.மணமக்கள் அல்லது சாட்சிகளின் அடையாளங்கள் குறித்தும், அவர்கள் அளித்த தகவல்களின் உண்மைத்தன்மை குறித்தும் சந்தேகம் ஏற்பட்டால், மணமக்களுக்கு வாய்ப்பளித்து, விசாரணைக்குப் பின், திருமணப் பதிவாளர் திருப்தி அடையாவிட்டால், அத்தகைய திருமணப் பதிவுகள் அவரால் மறுக்கப்படும்.இந்த மறுப்பு உத்தரவு மீது, சம்பந்தப்பட்ட நபர்கள், உத்தரவு பெற்ற 30 நாட்களுக்குள் மாவட்ட பதிவாளரிடம் மேல்முறையீடு செய்யலாம்.

அந்த மேல்முறையீடு மீது மாவட்ட பதிவாளர் பிறப்பிக்கும் உத்தரவு திருப்தி இல்லையெனில், 30 நாட்களுக்குள் பதிவுத் துறைத் தலைவருக்கு மேல்முறையீடு செய்யலாம். பதிவுத் துறை தலைவரின் உத்தரவே இறுதியானது.திருமணங்கள் பதிவுச் சட்டம் அமலுக்கு வந்துள்ள நவம்பர் 24ம் தேதி முதல் நடக்கும் அனைத்து திருமணங்களும், எந்த ஜாதி மற்றும் மதமாயிருப்பினும், உரிய நாளில் பதிவு செய்யாவிட்டாலோ, தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிந்தாலோ, விதி மீறல் இருந்தாலோ, சம்பந்தப்பட்ட நபர் மீது குற்ற வழக்கு தொடரப்பட்டு, நிரூபிக்கப்பட்டால், அபராதம் விதிக்கப்படும்.இவ்வாறு பதிவுத் துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

தெய்வத்தாய்

கணவருடன் ஏற்பட்ட தகராறில் 1 வயது குழந்தையை கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய் கைது

குன்னூர், நவ.29 - 2009. தினத்தந்தி

குன்னூர் அருகே வெலிங்டன் ஜெயந்தி நகரை சேர்ந்தவர் அரிகரன். இவரது மனைவி சியாமளா (வயது 26). இவர்களுக்கு 1 வயது ஆண் குழந்தை உள்பட 2 குழந்தைகள் உள்ளன. அரிகரன் சபரிமலை அய்யப்பனுக்கு மாலை அணிய முடிவு செய்து இருந்தார்.

இந்த நிலையில் அரிகரன் சபரிமலைக்கு மாலை போடுவது, அவரது மனைவி சியாமளாவுக்கு விருப்பம் இல்லாமல் இருந்தது. இதனால் அவர்களுக்கு கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

வாக்குவாதம்

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் அரிகரனுக்கும், சியாமளாவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் நடக்கும் போது அரிகரன் வெளியே செல்கிறேன் என்று கூறிவிட்டு, வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.

சியாமளா தனது குழந்தைக்கு காயம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டாலோ, சபரி மலைக்கு மாலை போடுவதை தனது கணவன் செய்யப்பட்டார் என்று நினைத்து இருந்தார்.

குழந்தை கொலை:

இந்த சமயத்தில் அரிகரன் வீட்டை விட்டு வெளியே சென்றவுடன், சியாமளா வீட்டின் பின்புறம் வைத்திருந்த தண்ணீர் தொட்டிக்குள் தனது ஒரு வயது ஆண் குழந்தையான அபினுவை போட்டு, மூடி விட்டார். இது குறித்து தனது கணவனிடம் அவர் எதுவும் கூறவில்லை. பின்னர் சிறிது நேரம் கழித்து தண்ணீர் தொட்டியை திறந்து பார்க்கும் குழந்தை அபினு இறந்து கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சியாமளா, தானும் தற்கொலை செய்து கொள்ள, வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து, வெலிங்டன் எம்.ஆர்.சி. வளாகத்தில் இருந்த கிணற்றில் குதித்து விட்டார். அவள் கிணற்றில் குதிப்பதை ராணுவ வீரர் ஒருவர் பார்த்துவிட்டார். உடனே அந்த ராணுவ வீரர் சியாமளாவை காப்பாற்றி னார்.

இதற்கிடையில் குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி கிடப்பது அந்த கிராம மக்களுக்கு தெரிய வந்தது. உடனடியாக இறந்த குழந் தையை எடுத்துக் கொண்டு கிராம மக்கள் குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் குழந்தை செத்து விட்டதாக கூறினார்கள்.

அதே நேரத்தில் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சியாமளாவையும் கிராம மக்கள் குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தாய் கைது

இது பற்றி தகவல் அறிந்த குன்னூர் போலீஸ் துணை சூப்பிரண்டு தர்மராஜ் உத்தரவின் பேரில் வெலிங்டன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லோகநாதன், சப்-இன்ஸ்பெக்டர் பிலிப் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசா ரணை நடத்தினர். தொடர்ந்து போலீசார் குழந்தையை கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய் சியாமளாவை கைது செய்தனர்.

பணம் கேட்டு மாமனாரை மிரட்டிய மருமகளுக்கு வலைவீச்சு

பெண்ணியவாதிகள் “போராடிப்” பெற்ற பொய்வழக்கு சட்டங்கள் எதற்குப் பயன்படுகின்றன பாருங்கள்?

வரதட்சணை முறை ஒழிய வேண்டுமானால், வரதட்சணை கேட்போரையும் கொடுப்போரையும் ஒருங்கே கைது செய்து சிறையிலடைக்க வேண்டும். குற்றம் நடந்த உடனேயே இரண்டு பேரையும் கைது செய்து வழக்கு நடத்தி தூக்கில் போடவேண்டும். இப்பொது உள்ளதுபோல் சாவகாசமாக ”ஒரு கல்ப கோடி காலம் முன் என்னிடம் வரதட்சணை கேட்டர்கள். நானும் கொடுத்தேன்” என்று புகார் கொடுப்போரை உடனே கைது செய்யவேண்டும்!

தற்போது உள்ள 498A சட்டம், திருமணம் நடந்து பல ஆண்டுகள் கழித்து கள்ளக்காதல், மிரட்டிப் பணம் பறித்தல், தனிக்குடித்தனம் போன்ற காரணங்களுக்காக பொய் வழக்கு போட்டுப் பணிய வைக்கத்தான் இந்தச் சட்டம் பயனபடுகிறது. பெண்கள் துயர் துடைக்கவோ, வரதட்சணை முறையை ஒழிக்கவோ இச்சட்டங்கள் பயன்படுவதில்லை.

இனி செய்தி:

மாலைமுரசு - மதுரை. நவ. 28, 2009

மதுரையில் ரூ. 5 லட்சம் கேட்டு மாமனாரை மிரட்டிய மருமகளை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை எச்.எம்.எஸ் கலனியை சேர்ந்தவர் எஸ்.ஏ.ராஜன் (62). இவரது மகன் சீனிவாசன். இவருக்கும் சீதா பிரியதர்ஷினி என்பவருக்கும் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமான சில மாதங்களிலேயே சீதாபிரியதர்ஷினிக்கு ஏற்கனவே 2003-ம் ஆண்டு திருமணமாகி இருப்பது தெரியவந்தது.

இதனால் இவருக்கும் சீனிவாசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதுதொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டும், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் இருக்கிறது.

இந்நிலையில் எச்.எம்.எச் காலனி வீட்டில் சீனிவாசனின் தந்தை ராஜன் இருந்தார். அப்போது சீதாபிரியதர்ஷனி மற்றும் சில பெண்கள் நுழைந்தனர்.

வீட்டில் நுழைந்த சீதாபிரியதர்ஷினி ராஜனிடம் ரூ. 5 லட்சம் கேட்டு மிரட்டினார். கொடுக்காவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இது குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசில் ராஜன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சீதாபிரியதர்ஷினியை வலைவீசி தேடி வருகின்றனர்.