புதுமாப்பிள்ளையை கொலை செய்து எரித்த மனைவி, கள்ளக்காதலன் கைது

செய்தி: தினமலர் ஜூலை 31,2008 சிவகங்கை:

திருமணமாகி 2 மாதத்தில் காளையார்கோவிலை சேர்ந்த புதுமாப்பிள்ளையை காரில் கடத்தி கொலை செய்த மனைவி, அவரது கள்ளக்காதலன் உட்பட 6 பேரை சிவகங்கை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே காஞ்சிரத்தை சேர்ந்த பொன்னுச்சாமி மகன் பொன்னுமுத்து (29). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவருக்கும், கருங்காலி கிராமத்தை சேர்ந்த கோபால் மகள் செந்திலாவுக்கும் (21) 2008 மே 18ம் தேதி திருமணம் நடந்தது.

ஜூலை 1-ம் தேதி வீட்டிலிருந்து புதுமணத் தம்பதியர் காளையார்கோவிலில் உள்ள மருத்துவமனைக்கு சென்றனர். அவர்கள் வீடு திரும்பவில்லை. காணாமல் போன அன்று செந்திலா 32 பவுன் தங்க நகைகள் அணிந்து சென்றதாகவும், அவர்களை கண்டுபிடித்து தருமாறு பொன்னுமுத்து தாயார் புஷ்பம் காளையார் கோவில் போலீசாரிடம் புகார் செய்தார்.

கள்ளக்காதல்:

போலீஸ் விசாரணையில் செந்திலா திருமணத்திற்கு முன் சிவகங்கை- தொண்டி ரோட்டிலுள்ள ஒரு தனியார் எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலை பார்த்தார். இவரும், அங்கு வேலை பார்த்த ஏரியூர் அருகே மாம்பட்டி பிச்சைமணி மகன் புவனேஸ்வரனும்(29) காதலித்தனர். வீட்டில் திருமண பேச்சு நடந்தபோது, காதலை வெளிக்காட்டிக் கொள்ளாமல் செந்திலா திருமணத்திற்கு சம்மதித்துள்ளார். திருமணத்திற்கு பின்னரும் காதலனுடன் செந்திலா கள்ளத்தொடர்பு வைத்திருந்தார்.

கணவரை கைகழுவி விட்டு காதலனுடன் வாழ செந்திலா முடிவு செய்துள்ளார். இதற்கு புவனேஸ்வரன் தீட்டிய திட்டப்படி ஜூலை1-ம் தேதி நகைகளுடன் மருத்துவமனைக்கு செல்வதாக கூறி புறப்பட்டுள்ளார். பொன்னுமுத்துவும் உடன்வருவதாக வலியுறுத்தியதால், வேறு வழியின்றி அவரையும் அழைத்து கொண்டு பஸ்சில் காளையார்கோவில் சென்றனர்.
அங்கு மருத்துவமனை செல்லாமல் சிவகங்கையில் நண்பர்களை பார்த்து விட்டு வருவதாக கூறிய செந்திலா, பொன்னுமுத்துவை வீட்டிற்கு செல்லுமாறு கூறியுள்ளார். பொன்னுமுத்து மறுத்துள்ளார். வேறு வழியின்றி அவருடன் செந்திலா காளையார் கோவிலில் இருந்து சிவகங்கைக்கு பஸ்சில் வந்துள்ளார். பஸ் ஸ்டாண்டு அருகில் சுமோ காரில் காத்திருந்த புவனேஸ்வரன் மற்றும் கூட்டாளிகள் இருந்த இடத்திற்கு செந்திலா செல்ல, பொன்னுமுத்துவும் அங்கு சென்றுள்ளார். புவனேஸ்வரன் மற்றும் கூட்டாளி களை, "தன்னுடன் பணியாற்றியவர்கள்" என செந்திலா அறிமுகம் செய்துள்ளார்.

மன்றாடிய புதுமாப்பிள்ளை:

புதுமண தம்பதிகளுக்கு விருந்து கொடுப்பதாக புவனேஸ்வரன் கூற பொன்னுமுத்து தயங்கியுள்ளார். செந்திலா வலியுறுத்தியதால், பொன்னுமுத்து சம்மதித்து காரில் ஏறியுள்ளார். எம்.ஜி.ஆர்.சிலை அருகி லுள்ள ஓட்டல் ஒன்றுக்கு அவர்கள் சென்றனர்.

ஓட்டலில் சாப்பிட்ட பின் ஊருக்கு செல்ல செந்திலாவை பொன்னுமுத்து அழைத்துள்ளார். காரில் கொண்டுபோய் விடுவதாக கூறி புவனேஸ்வரனும் கும்பலும் கூற "அப்பாவியாக" பொன்னுமுத்துவும் காரில் ஏறியுள்ளார். சிவகங்கையை கடந்த சிறிது தூரத்திலேயே, செந்திலாவும், புவனேஸ்வரனும் திருமணம் செய்து கொள்ள விரும்பு வதாக கூறிய கும்பல், வீட்டிற்கு திரும்பி செல்லுமாறு பொன்னுமுத்துவை மிரட்டியுள்ளனர்.

இதை ஏற்க மறுத்த பொன்னுமுத்து, மனைவியை தன்னுடன் அனுப்புமாறு தகராறு செய்துள்ளார். செந்திலாவும் கும்பலுடன் சேர்ந்து காரிலிருந்து ஓடிவிடுமாறு மிரட்டியுள்ளார். மறுத்த பொன்னுமுத்துவை காரில் கடத்தி கொலை செய்து விழுப்புரம் பகுதியிலுள்ள காட்டில் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.

கும்பல் கைது:

பின்னர் கும்பல் மதுரை மாவட்டம் சத்திரபட்டி அருகே கடவூரில் புவனேஸ்வரன் கூட்டாளி ராஜாவின் நண்பர் ஒருவர் வீட்டில் தங்கினர். தகவல் கிடைத்த சிவகங்கை தனிப்படை போலீசார் செந்திலா, அவரது காதலன் புவனேஸ்வரன், கூட்டாளிகளான மதுரை ஜோசப் தெரு குமார் மகன் ராஜேஷ்(23), மதுரை மேலஅனுப்பானடி ரெங்க பாண்டியன் மகன் முருகன்(16), மதுரை புதுமீனாட்சிநகர் இகிமுத்து மகன் ராஜா(18), மதுரை கீழ்மதுரை காமராஜர்புரம் பிரகாஷ் மகன் சோமசுந்தரம்(22) ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.

இக்கும்பலிடம் எஸ்.பி. கண்ணன், டி.எஸ்.பி. சாம்சன் ஆகியோர் விசாரித்தனர். இவர்களிடம் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-----------------

இத்தனைக்கும் பிறகு அந்த அப்பாவிக் கணவன் வரதட்சிணைக் கொடுமை செய்ததாகக் கூறி வழக்குப் போடுவாளோ என்னவோ!!

உங்களுக்குத் தெரியுமா? குடும்ப வன்முறைச் சட்டப்படி வன்முறை என்றால் கணவன் தான் செய்வான். மனைவி பாவம், ஒரு பாவமும் அறியாத பேதை!

இந்த நிகழ்வுகளையெல்லாம் நோக்கும்போது அரபு நாட்டுச் சட்டங்கள்தான் சரியானவை என்று தோன்றுகிறது!

மகளிர் கட்டப்பஞ்சாயத்து போலீஸ்!

குங்குமம் கட்டுரை - 31-07-2008 இதழ்











கட்டுரை முழுதையும் பி.டி.எஃப் (PDF) கோப்பாக டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

80 வயது தாத்தா வரதட்சிணை கொடுமை செய்தாராம்!

வரதட்சணை கொடுமை வழக்கில் மதுரை பல் மருத்துவர் கைது

தூத்துக்குடி - ஜூலை 28,2008 :: செய்தி - தினமலர்

மனைவியிடம் ஐந்து லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு துன்புறுத்திய வழக்கில் மதுரை பல் மருத்துவர், அவரது தாயாரையும் போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி செல்வநாயகபுரத்தைச் சேர்ந்த பல் மருத்துவர் சக்தி தேவி (27) க்கும் மதுரை அண்ணாநகர் பல்மருத்துவர் பிரவீண் குமாருக்கும்(30), கடந்த ஆண்டு ஆக., 27ல் திருமணம் நடந்தது. வரதட்சணையாக 80 சவரன் நகை பிரவீண் குமாருக்கு தரப்பட்டது.

இந்நிலையில் கிளினிக் கட்டுவதற்கு பிரவீண்குமார், மனைவி சக்திதேவியை அவரது பெற்றோரிடம் கூடுதலாக ஐந்து லட்சம் ரூபாய் வரதட்சணை வாங்கி வரும்படி வற்புறுத்தினார்.அதற்கு சக்திதேவி மறுக்கவே, இருவருக்குமிடையே பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில் வரதட்சணை கேட்டு பிரவீண்குமார் மற்றும் குடும்பத்தார் தன்னை துன்புறுத்துவதாக சக்திதேவி தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். பிரவீண்குமார், அவரது தாயார் விஜயலட்சுமி(55) ஆகியோரை நேற்று கைது செய்த போலீசார், பிரவீண்குமாரின் தாத்தா சண்முகத்தை(80 வயது) தேடி வருகின்றனர்.
---------------------------

மதுரைவாழ் அன்பர்கள் யாரேனும் அந்த பல்வைத்தியர் பிரவீண் குமார் தரப்பு செய்தியை அறிந்து இங்கு மறுமொழியாக எழுதும்படி வேண்டுகிறேன் (தமிழில் எழுத இயலாவிடில் ஆங்கிலத்திலும் எழுதலாம்).

நன்றி.

பெரிய இடத்து சம்பந்தம் ஆபத்துதான்!

ஐ.ஏ.எஸ் அதிகாரி, அரசியலில் பெரிய செல்வாக்குள்ள குடும்பம் என்று தெரிவு செய்து அவர்கள் வீட்டுப் பெண்ணை மணந்து கொண்டால் ஆண்களுக்கும், அவர்கள்தம் பெற்றோருக்கும் என்ன கதி காத்திருக்கிறது என்பதற்கு இந்த தினமலர் செய்தி ஒரு படிப்பினையாகும்:

ஐ.ஏ.எஸ்., அதிகாரி சம்பந்திக்கு முன்ஜாமீன்

ஜூலை 24,2008

சென்னை:ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் மகள் கொடுத்த வரதட்சணை புகாரில், அவரது மாமனார், மாமியாருக்கு சென்னை ஐகோர்ட் முன்ஜாமீன்
வழங்கியது.

முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி கற்பூர சுந்தரபாண்டியனின் மகள் வினோதினி. வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக தனது கணவர் அரவிந்த் மீது
சென்னை அசோக் நகர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அரவிந்த் கைது செய்யப்பட்டார்.

முன்ஜாமீன் கோரி அரவிந்தின் தந்தை நடராஜன், தாயார் தனலட்சுமி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

வினோதினிக்கும், அரவிந்துக்கும் 1997ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. எனது மகனை திட்டிவிட்டு, தனது பெற்றோர் வீட்டுக்கு வினோதினி சென்றுவிட்டார். பின்னர் அவரது தந்தை எங்களை மிரட்டினார். கடந்த 15ம் தேதி விவாகரத்து நோட்டீசை வினோதினிக்கு அரவிந்த் அனுப்பினார். அதன்
பிறகே இந்த புகார் கொடுக்கப்பட்டுள்ளது. உள் நோக்கம் கொண்டு, பொய்யான புகாரை கொடுத்துள்ளார்.


இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை நீதிபதி ரகுபதி விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில் வக்கீல் அபுடுகுமார் ராஜரத்தினம் வாதாடினார். இருவருக்கும் முன்ஜாமீன் வழங்கி யும், தேவைப்படும்போது அசோக் நகர் போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்

--------------------------------

இதற்கு முந்தைய செய்தி:

ஓய்வு ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் மருமகன் வரதட்சணை
கொடுமை வழக்கில் கைது
ஜூலை 21,2008,00:00 IST

சென்னை : ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் மருமகன்,
வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய வழக்கில் கைது
செய்யப்பட்டார்.

சென்னை தி.நகரில் வசித்து வரும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி கற்பூர சுந்தரபாண்டியன் மகள் டாக்டர் வினோதினி ராஜேஸ்வரி(33). இவருக்கும், தி.நகர் நடேசன் சாலையைச் சேர்ந்த இன்ஜினியர் அரவிந்த்(37) என்பவருக்கும் 1997ம் ஆண்டு திருமணம் நடந்தது. 200
சவரன், நான்கு லட்சம் ரூபாய் மற்றும் வெள்ளிப் பொருட்களுடன் சீர் வரிசைகள் செய்து திருமணத்தை கற்பூர சுந்தரபாண்டியன் நடத்தினார்.

திருமணம் முடிந்ததில் இருந்தே கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. அவர்களுக்கு ஏழு வயதில்
பெண் குழந்தை உள்ளது. ஒன்றரை ஆண்டுகளாக கணவரை
பிரிந்து தனியாக வாழ்கிறார் வினோதினி ராஜேஸ்வரி.

அசோக் நகர் மகளிர் போலீஸ் நிலையத்தில் வினோதினி ராஜேஸ்வரி, "திருமணத்திற்கு பிறகு எனது கணவர் புது கார், அபார்ட்மென்ட் வீடு கேட்டார். திருமணத்திற்கு அதிகளவில் செலவானதால் அவர்கள் கேட்டதை எனது தந்தையால் வாங்கிக் கொடுக்க முடியவில்லை. நள்ளிரவில் வீட்டிற்கு வரும் எனது கணவர், உடன் நண்பர்களை அழைத்து வந்தார். குடித்துவிட்டு அடித்து உதைத்தார். அவரை பிரிந்துச் சென்ற பின்பும் எனக்கு கொலை மிரட்டல்கள் வரத் துவங்கின" என புகார் கொடுத்தார்.

அசோக் நகர் உதவி கமிஷனர் சேது தலைமையிலான போலீசார், இன்ஜினியர் அரவிந்திடம் விசாரணை நடத்தினர்.

கணவன், மனைவி இருவரையும் நேரில் அழைத்து தொண்டு நிறுவன பெண் சாந்தி என்பவர் கவுன்சிலிங் கொடுத்தார்.

"குழந்தையின் நலன் கருதி மனைவியுடன் சேர்ந்து வாழ்கிறேன்" என, அரவிந்த் கூறினார்.

"என்னுடன் சேர்ந்து வாழ்வதாக பொய் சொல்லும் அரவிந்த் அவரது பெண் தோழிகளுடன் நெருக்கமாக பழகுகிறார். கணவருடன் சேர்ந்து வாழ மாட்டேன்" - என வினோதினி ராஜேஸ்வரி கூறினார்.

கணவன் மீது சுமத்திய குற்றச்சாட்டில் வினோதினி ராஜேஸ்வரி உறுதியாக இருந்ததால், அரவிந்த் மீது பெண் கொடுமை தடுப்பு, வரதட்சணை தடுப்பு சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்ட அரவிந்த், சிறையில் அடைக்கப்பட்டார். அரவிந்த் குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர் ஹரி ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வரதட்சணை வழக்கில் மாஜிஸ்திரேட் மனைவி கைது

கோவை : வரதட்சணை கொடுமை வழக்கில், மாஜிஸ்திரேட் மனைவி சிறையில் அடைக்கப்பட்டார்.

வடமதுரை, குருந்தாச்சல் நகர் ரங்கம்மாள் கார்டனைச் சேர்ந்தவர் ஜக்கிரியா (வயது: 30), 2004-ல் ஜமீலா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின், கணவர் ஜக்கிரியாவும், குடும்பத்தினரும் வரதட்சணை கேட்டு ஜமீலாவை துன்புறுத்தியதாக ஜமீலா கோவை அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். இதில், கணவர் ஜக்கிரியா, மாமியார் குளோரி, கணவரின் அக்கா ரோஜா ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டனர். இப்புகாரின் அடிப்படையில் போலீசார் நேற்று ரோஜாவை கைது செய்தனர். ஜே.எம்.எண் மூன்றாம் கோர்ட் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட ரோஜா, 15 நாள் நீதிமன்ற காவலுக்காக மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட ரோஜா, மாஜிஸ்திரேட் ஒருவரின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

~ செய்தி - தினமலர் ஜூலை 19,2008

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து இப்போது ஒரு மாஜிஸ்டிரேட் மனைவியையே தீண்டிவிட்டது இந்த 498a வரதட்சிணைச் சட்டம்!

கணவருக்கு 'ஜீவனாம்சம்' ரூ.8 லட்சம் தந்த மனைவி

படிக்க வைத்த கணவருக்கு மனைவி ரூ.8 லட்சம் நஷ்டஈடு வழங்கினார்.
சென்னையில் நடந்த விவாகரத்து வழக்கில் கோர்ட்டு தீர்ப்புபடி நடவடிக்கை.
~ செய்தி: தினத்தந்தி சென்னை, ஜூலை.18, 2008
விவகாரத்து வழக்குகள்:
சென்னையில் உள்ள குடும்ப நல கோர்ட்டில் விதவிதமான முறையில் தற்போது விவாகரத்து வழக்குகள் வருகின்றன. கணவர் கொடுமைப் படுத்தியதாக மனைவியால் தொடரப்படும் வழக்கு, காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதிகளில் மனைவி, கணவன் சந்தேகப்படுவதால் விவாகரத்து வழங்க வேண்டும் என்று தொடரப்படும் வழக்குகளும் அதிகரித்து வருகின்றன.
சாதாரணமாக படிப்பு குறைவாக உள்ள குடும்பத்தில் இருந்து இதுபோன்ற வழக்குகள் அதிகம் வருவதில்லை. அதிகம் படித்து, அதிகம் சம்பளம் பெறுவோர் இடையேதான் இதுபோன்ற வழக்குகள் தொடரப்படுகின்றன.
இதுபோன்ற வழக்குகள் அதிகரித்து வருவதால், சென்னையில் கூடுதலாக 2 குடும்ப நல கோர்ட்டுகளை அமைக்க வேண்டும் என்று பெண்கள் வக்கீல்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மனைவியை படிக்க வைத்தார்
சென்னை குடும்ப நல கோர்ட்டில் வித்தியாசமான வழக்கு ஒன்று வந்தது. சென்னையை சேர்ந்த பட்டதாரி பெண்ணும், ஆந்திராவை சேர்ந்த பட்டதாரி வாலிபரும் ஒருவரையருவர் நேசித்தனர். இவர்களுடைய நேசம் காதலாக மலர்ந்து இறுதியில் 2000-ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். பட்டதாரியான தனது மனைவியை பி.எச்.டி. ஆராய்ச்சி படிப்பு படிக்க கணவர் என்ற முறையில் தேவையான உதவிகளை செய்துவந்தார். அந்த பெண்ணும் கணவர் விருப்பத்திற்கு ஏற்ப வெற்றிகரமாக அந்த படிப்பை முடித்தார். அவருக்கு பல்கலைக்கழகத்திலும் பேராசிரியர் பதவி கிடைத்தது.
கணவருக்கு 8 லடசம்- கோர்ட்டு தீர்ப்பு
இருவரும் ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தனர். காலப்போக்கில் அவர்களிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டது. இதனால், இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். பிரிந்து வாழும் அவர்கள் விவாகரத்து செய்ய முடிவு செய்தனர். இவர்களது விவாகரத்து வழக்கை, சென்னை முதன்மை குடும்ப நல கோர்ட்டு நீதிபதி விமலா விசாரித்தார்.
விசாரணையின் போது, எனது மனைவியை படிக்க வைக்க நான் படாதபாடு பட்டேன் என்று தெரிவித்தார். இறுதியில் தன்னை படிக்க வைத்ததற்காக கணவருக்கு ரூ.8 லட்சம் வழங்க மனைவி சம்மதித்தார். இதை கோர்ட்டு ஏற்று இருவருக்கும் விவாகரத்து செய்து வைத்தது.

விவாகரத்தால் பாதிக்கப்படும் குழந்தைகள் நலன்

பெற்றோரின் விவாகரத்தால் பிள்ளைகளின் எதிர்காலம், மனநிலை பாதிக்கப்படுவது ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தங்களுடைய சொந்த விருப்பு, வெறுப்புகளால் கணவன் & மனைவி விவாகரத்து செய்து விடுகின்றனர். ஆனால், பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றி அவர்கள் சிறிதும் கவலைப்படுவது இல்லை.

பெற்றோரின் விவாகரத்தால் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது என்பது, பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக்கு கடந்த 1958ல் பிறந்து 50 வயதை நெருங்கிவிட்ட 17 ஆயிரம் பேரின் வாழ்க்கையை ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர். அந்த காலக் கட்டத்தில் விவாகரத்து குறைவு என்றாலும், விவாகரத்து செய்த தம்பதிகளின் பிள்ளைகள் படிப்பிலும் மனநிலையிலும் பாதிப்பு தெரிந்தது.

அதேபோல், விவாகரத்து என்பது மிகவும் சகஜமாகி விட்ட 1970க்குப் பிறகு பிறந்த பிள்ளைகளின் மனநிலையையும் ஆய்வாளர்கள் கண்காணித்தனர். இவர்களிலும் பெற்றோரின் விவாகரத்தை சந்தித்த பிள்ளைகளின் மனநிலை, படிப்பு போன்றவை பாதிக்கப்பட்டு, சமூகத்தில் பின்தங்கிய நிலையிலேயே அதிகம் பேர் இருந்தனர்.

இதன் மூலம், ஆண்டும் வயதும் வேறுபட்டாலும் பெற்றோரின் விவாகரத்தால் பிள்ளைகளுக்கு ஏற்படும் பாதிப்பு ஒரே மாதிரி இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

செய்தி: தினகரன் 15.07.2008

மாமியாரையும் கணவனையும் கொன்ற மனைவிக்கு ஆயுள் தணடனை

செய்தி: தினமலர் - ஜூலை 15,2008

திருவள்ளூர் : மாமியாரையும், கணவனையும் கொலை செய்து விட்டு நாடகமாடிய மனைவிமற்றும் கள்ளக்காதலனுக்கு விரைவு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனையும் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சென்னை மாதவரம் பால் பண்ணை அசிசி நகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் அருள்நாதன் (42). தனியார் தொண்டு நிறுவனத்தில் சட்ட ஆலோசகராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி மேரி சேவியர் (32). தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். அருள்நாதனுடன் அவரது தாய் சவரியம்மாள் (80) வசித்து வந்தார். அவர்களது சொந்த கிராமத்தில் வேலை இல்லாமல் இருந்து வந்த அருள் நாதனின் அண்ணன் மகன் டேவிட் ஆரோக்கியராஜ் (26) என்பவரை அழைத்து வந்து தன்னுடன் தங்க வைத்தார்.

கம்ப்யூட்டர் நிறுவனமொன்றை டேவிட் துவங்கினார். அங்கு கம்ப்யூட்டர் பயிற்சி பெற ஆசிரியை மேரி சேவியர் சென்று வந்தார். அப்போது, அவர்களுக்குள் கள்ள உறவு ஏற்பட்டது. இதை அறிந்த அருள் நாதனின் தாய் அவர்களை கண்டித்தார். தனது மகனிடமும் இதுகுறித்து தெரிவித்தார். அருள்நாதனும் மனைவியையும், டேவிட்டையும் கண்டித்தார். இதனால், ஆத்திரமடைந்த மனைவியும், டேவிட்டும் அவர்களை கொலை செய்ய திட்டமிட்டனர்.

இந்நிலையில், 2006ம் ஆண்டு மே 26ம் தேதி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து சவரியம்மாள் இறந்ததாக கூறி, பிணத்தை அவரது சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம் காட்டி நாயக்கன்பள்ளிக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர். அதன் பிறகு அடுத்த மாதம் 16ம் தேதி அதிகாலை அருள்நாதன் காயங்களுடன் இறந்தார்.

இதுகுறித்து மாதவரம் பால்பண்ணை போலீசார் விசாரித்தனர். விசாரணையில் மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து கணவனை கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளை அடித்துச் சென்று விட்டதாக மேரி கூறினார். ஆனால், போலீசார் விசாரணையில், அப்படி எதுவும் நடக்கவில்லை என்பது தெரிந்தது. மேலும் விசாரணையில், மேரியும், டேவிட்டும் சேர்ந்து தான் அருள்நாதனை கொலை செய்தது தெரியவந்தது. இந்நிலையில் அருள் நாதனின் சகோதரர் ராயப்பன் என்பவர் போலீசில் தனது தாய் சவரியம்மாள் சாவில் மர்மம் உள்ளதாகவும் விசாரணை நடத்துமாறும் கோரியிருந்தார்.

இதை அடுத்து போலீசார் சவரியம்மாள் புதைக்கப்பட்ட இடத்திற்குச் சென்று அங்கு அதிகாரிகள் முன்னிலையில் பிணத்தைத் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. பிணத்தின் தலையில் ஆழமான காயம் இருப்பது தெரிந்தது. இதை அடுத்து மீண்டும் மேரி மற்றும் டேவிட் ஆகியோரிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் தான் திட்டமிட்டு சவரியம்மாளை இரும்பு ராடால் தாக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். டேவிட்டின் சித்தி தான் மேரி சேவியர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை அடுத்து மாமியார் மற்றும் கணவனை கொலை செய்த வழக்கில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு திருவள்ளூர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இவ்வழக்கு நீதிபதி சேகர் முன்னிலையில் விசாரணை நடந்து வந்தது. இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட டேவிட் ஆரோக்கியராஜ் மற்றும் மேரி சேவியர் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், கட்டத் தவறினால் எட்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் மாதவரம் பால் பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஜோசப் மற்றும் அசோகன் ஆகியோர் விசாரணை நடத்தினர். அரசு தரப்பு வக்கீல் ஸ்ரீதர் ஆஜராகி வாதாடினார்

புனிதமா, புதுமையா?

பெண்கள் மென்மையானவர்கள், பேணிக் காக்கப்பட வேண்டியவர்கள். ஆம், இந்த நிகழ்வுகளைக் கண்ணுற்ற பின் உங்கள் மனத்தில் தோன்றப்போகும் எண்ணங்கள் இவையே!

  1. கள்ளக்காதலனோடு சேர்ந்து மனைவியால் கொலை செய்யப்பட்ட கணவர் உடல் தோண்டியெடுப்பு
    ஜூலை 11,2008

  2. சிவகாசி:கள்ளக்காதல் தகராறில் காதலனோடு சேர்ந்து மனைவியால் கொல்லப்பட்ட கணவரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.திருத்தங்கல் கே.வி.கே., சாமி காலனியை சேர்ந்த அச்சுத்தொழிலாளி பாண்டி(35). இவரது மனைவி அழகு மீனா (32). மாடு மேய்க்க செல்லும் போது இவருக்கும், திருத்தங்கல் ராஜாங்கத் திற்கும்(37) கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
    ராஜாங்கம், அழகு மீனாவிற்கு மொபைல்போன் வாங்கி கொடுத்தார். இது பாண்டிக்கு தெரிந்து,மனைவியை கண்டித்தார். மொபைல் போனை ராஜாங்கத்திடம் கொடுத்த அழகுமீனா, கணவர் கண்டிப்பதாக புலம்பினார்.ஆத்திரம் அடைந்த ராஜாங்கம், தனது நண்பர் செல்வம் (25) மூலம் பாண்டியை ஏப்ரல் 8ம்தேதி திருத்தங்கலில் உள்ள தனது தோட்டத்திற்கு அழைத்து வந்தார். அங்கு ராஜாங்கத்திற்கும், பாண்டிக்கும் தகராறு ஏற்பட்டது.
    அப்போது அங்கு வந்த அழகுமீனா அவர்களை விலக்கிவிட்டார். கணவரை வீட்டிற்கு போகச்சொல்லிவிட்டு பின்னால் வருவதாக கூறினார். நெடுநேரம் ஆகியும் மனைவி வரவில்லை. சந்தேகமடைந்த பாண்டி, மனைவியை தேடி சென்ற போது அழகுமீனாவும், ராஜாங்கமும் தகாத உறவில் ஈடுபட்டிருப்பதை பார்த்தார். இதை கண்டித்த பாண்டிக்கும், ராஜாங்கத்திற்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
    கோபமடைந்த ராஜாங்கம், மண்வெட்டியால் பாண்டியின் பின் தலையில்தாக்கினார். அழகு மீனாவும்,செல்வமும் சேர்ந்து சரமாரியாக தாக்கியதில் பாண்டி இறந்தார். கொலை செய் யப்பட்ட பாண்டியின் உடலை திருத்தங்கல்-விருதுநகர் ரயில்வே தண்டவாளத்தில் போட்டு விட்டு மூவரும் சென்றனர். அந்த வழியாக வந்த ரயில், ஏறியதில் பாண்டியின் உடல் துண்டானது. விருதுநகர் ரயில்வே போலீசார், அடையாளம் தெரியாதவர் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்து, பாண்டியின் உடலை ஏப்ரல் 9ம் தேதி சிவகாசி நகராட்சி சுடுகாட்டில் புதைத்தனர்.
    கணவரை கொலை செய்த மனைவி ஏதுவும் தெரியாததுபோல் நடமாடி வந்தார். பாண்டி யின் தாய் காளியம்மாள், தனது மகனை காணவில்லை என ஜூன் 16ல் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், அழகுமீனாவிடம் நடத்திய விசாரணையில், கள்ளக்காதல் தொடர்பில் பாண்டி கொலை செய்யப்பட்ட உண்மை வெளி யானது. இவ்வழக்கில் கள்ளக்காதலன் ராஜாங்கம் மற்றும் செல்வம், அழகுமீனா ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.பின்னர் பாண்டியின் உடலை, "சூப்பர் இம்போஸ், டி.என்.ஏ.' சோதனை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.
    நேற்று சிவகாசி நகராட்சி சுடுகாட்டில் தாசில்தார் ராமசாமி தலைமையில், இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாண்டியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. மதுரை தடய அறிவியல் ஆய்வக துறை உதவி பேராசிரியர்நடராஜன் தலைமையில்ஏழு பேர் கொண்ட குழுவினர் உடலை பரிசோதனைசெய்தனர்.பாண்டியின் உடலை பார்த்து கதறி அழுத அவரது தாய், உடன் அழைத்து வந்திருந்த இருதய நோயால் பாதிக்கப்பட்ட மூன்று வயதே ஆன பேத்தியை(பாண்டியின் மகள்) எப்படி காப்பாற்ற போகிறேன் என புலம்பினார்.

    (நன்றி: தினமலர்)

  3. கணவனைக் கொன்றார் மனைவி - கடலில் போட்டார் கள்ளக் காதலன்!
    ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் கள்ளகாதலனுடன் இணைந்து கணவரைக் கொலை செய்து உடலை துண்டு துண்டாக்கி வீட்டில் புதைத்தார் மனைவி. அந்த உடல் பாகங்களை தினசரி கடலுக்கு மீன் பிடிக்கப் போகும் போது கடலில் போட்டு வந்துள்ளார் அவரது கள்ளக் காதலன்.ராமேஸ்வரம் மண்டபம் பகுதியை சேந்தவர் சரவணன் (38). கூலி தொழிலாளி. இவரது மனைவி களஞ்சிய ராணி (28). இவர்களுக்கு திருமணாகி ஒரு மகன் உள்ளான்.அதே பகுதியை சேர்ந்தவர் வேலு (28). இவர் மீனவர். இவருடன் களஞ்சிய ராணிக்கு கள்ள தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த அவரது கணவர் களஞ்சிய ராணியை கடுமையாக கண்டித்தார்.ஆனால் களஞ்சிய ராணி அவரது பேச்சுக்கு கட்டுப்பட மறுத்து தனது கள்ள காதலனுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது.இதையடுத்து கணவனை தீர்த்து கட்டிவிட்டால் வேலுவுடன் தொடர்ந்து உல்லாசமாக வாழலாம் என நினைத்த களஞ்சிய ராணி, சரவணனை கொலை செய்து துண்டு துண்டாக வீட்டில் புதைத்து வைத்தார்.அந்த உடல் பாகங்களை, வேலு மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் போது ஒவ்வொரு பாகமாக எடுத்துச் சென்று கடலில் வீசி எறிந்துள்ளார்.இந்த நிலையில், தனது கணவனை காணவில்லை என்று களஞ்சிய ராணியே காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.களஞ்சிய ராணி மீது சந்தேகம் ஏற்பட்டு அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் சரவணனை கள்ளகாதலன் வேலுவுடன் இணைந்து கொலை செய்து கடலில் வீசியதை களஞ்சிய ராணி ஒப்புக்கொண்டார்.அதன் பேரில் களஞ்சிய ராணியை போலீசார் கைது செய்தனர்.ஆனால் வேலு தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
    (நன்றி. தட்ஸ்தமிழ்)

இரு உயிர்களைப் பலி வாங்கிய பொய் வரதட்சிணைப் புகார்

பொய்யான வரதட்சணை புகார்: திருப்பத்தூர் அருகே மகனை கொன்று தாய் தற்கொலை. உடலை வாங்க மறுத்து உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

~ செய்தி: தினத்தந்தி - திருப்பத்தூர் (வேலூர்) , ஜுலை.11- 2008


திருப்பத்தூர் அருகே பொய்யான வரதட்சணை புகாரால் அவமானம் அடைந்த பெண், தனது மகனை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த ப.முத்தம்பட்டி அண்டிவட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (வயது 28). கூலி தொழிலாளி. இவரது மனைவி கீதா (30). கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். கடந்த 6-ந் தேதி குடிபோதையில் பழனி வரதட்சணை கேட்டு மனைவி கீதாவை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து கீதா திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன் தினம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சூரியகலா மற்றும் போலீசார் கீதாவின் கணவர் பழனி, மாமனார் தவமணி (55), மாமியார் அமுதா (46), பழனியின் அக்காள் உமாமகேஸ்வரி (31), அம்மு ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்ததுடன் பழனி, தவமணி, அமுதா ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

தாய், சேய் தற்கொலை

உமாமகேஸ்வரி, தன் மீது வரதட்சணை புகார் கொடுத்தது குறித்து மனவேதனை அடைந்தார். மேலும் கணவர் இறந்து விட்டதால் தனது மகன்கள் ஹேமநாத் (15), அமர்நாத் (12) ஆகியோரின் நிலை குறித்து கவலையடைந்த உமாமகேஸ்வரி, வாழ்வதை விட சாவதே மேல் என்று முடிவு செய்தார். அதன்படி தனது இளைய மகன் அமர்நாத்தை சேலையில் தூக்கில் தொங்கவிட்டார். சிறிது நேரத்தில் அவன் பரிதாபமாக செத்தான். பின்னர் தானும் அதே சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

இதனை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் திருப்பத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் வீட்டை சோதனை செய்ததில் கடிதம் ஒன்று சிக்கியது. அதில், "தனது சாவுக்கு காரணம் நாத்தனார் கீதா தான் என்றும், மூத்த மகன் ஹேமநாத்தை தம்பி பழனிதான் காப்பாற்ற வேண்டும்'' என்றும் எழுதப்பட்டு இருந்தது. போலீசார் கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிந்ததும், தாய்- மகன் உடலை எடுத்துச் செல்லும் படி உறவினர்களிடம் போலீசார் கூறினர். அதற்கு, இறந்தவருக்கு கணவன் கிடையாது, தாய், தந்தை, தம்பி ஆகியோரை போலீசார் கைது செய்து விட்டனர். எனவே உடலை வாங்கிச் செல்ல மாட்டோம் என்றும், உமா மகேஸ்வரி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள கீதாவை கைது செய்ய வேண்டும், கீதா கொடுத்த பொய்யான வரதட்சணை புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து 3 பேரை கைது செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

எம்.எல்.ஏ., போலீசார் சமரசம்

அப்போது ஆஸ்பத்திரிக்கு வந்த சூரியகுமார் எம்.எல்.ஏ., ஒன்றிய குழுத் தலைவர் ராஜமாணிக்கம், தி.மு.க. நகர செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் குலோத்துங்கன், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் மனோகரன், சுரேஷ்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பூஞ்சோலை, பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் உமாமகேஸ்வரியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கீதா கொடுத்த வரதட்சணை கொடுமை வழக்கை பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சூரியகலாவை, வேலூர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி விட்டோம் என்றும், கீதாவை உடனடியாக கைது செய்கிறோம் என்றும், உமாமகேஸ்வரியின் தகப்பனார் தவமணி, தாயார் அமுதா, தம்பி பழனி ஆகிய 3 பேரையும் நிபந்தனை ஜாமினீல் விடுதலை செய்வதாகவும் போலீசார் கூறினார்கள். பின்னர் அவர்கள் உமாமகேஸ்வரி, அவரது மகன் அமர்நாத் ஆகியோரது உடலை பெற்றுச் சென்றனர். மேற்கண்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

--------------------

இப்போது சொல்லுங்கள், இந்த 498a சட்டம் பெண்களுக்கும் சமூகத்திற்கும் நன்மை செய்கிறதா, பெருங்கேடு விளைவிக்கிறதா என்று!

மனைவி எனும் முதலையிலிருந்து விடுபட்ட பிரசாந்த்

திருமணம் என்னும் புதை குழியில் விழுந்து, ஒரு கொடுமையான மனைவியால் அலைக்கழிக்கப்பட்ட நடிகர் பிரசாந்த், திரைப்படங்களில் மரங்களைச் சுற்றி வலம் வர வேண்டியவர் கோர்ட்டுகளைச் சுற்றி வரவேண்டிய சூழ்நிலை எற்பட்டது நீங்கள் அறிந்ததே. ஏற்கனவே மணமான அந்தப் பெண் 498a போன்ற ஆண் எதிரிச் சட்டங்களைத் துணை கொண்டு பணம் பிடுங்க முயற்சி செய்த சோகக் கதையை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் ஒரு திரைப் படமாக எடுக்க இருக்கிறார் என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்.

பிரசாந்தின் மனைவி போட்ட பொய் கேசுகளிலிருந்து அவரை விடுவிக்க 50 கோடி ரூபாய் வரை கேட்டார்களாம்! இதுபோல் பணம் பிடுங்கும் சட்டமாக கெடுமதி கொண்ட பெண்களால் மாற்றப்பட்ட இ.பி.கோ 498a பிரிவு இன்னும் எத்துணை ஆண்களைப் பலி வாங்கப் போகிறதோ!

பெண் போலீஸாருக்கு ஐகோர்ட்டு சாட்டையடி!

விசாரணைக்கு அழைத்து வருபவர்களை பெண் போலீசார்
துன்புறுத்தக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு

விசாரணைக்காக அழைத்து வருபவர்களை பெண் போலீஸ்
நிலையத்தில் துன்புறுத்தக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அடித்ததாக புகார்

முன்ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக்கோரி ரோசையா என்பவர், சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். சிந்தாதிரிப்பேட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் வைத்து கையே உடைந்து போகும் அளவிற்கு தன்னை பெண் போலீஸ் அதிகாரிகள் அடித்ததாக மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த பிரச்சினை குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஒருவரை நியமித்து, விசாரித்து ஐகோர்ட்டில் அறிக்கையை தாக்கல் செய்யவேண்டுமென்று நீதிபதி ஆர்.ரகுபதி இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

கண்டனம்

இந்த மனு நீதிபதி ஆர்.ரகுபதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மகளிர் போலீஸ் நிலையத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்று சில விதிமுறைகளை வகுத்து இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அந்த உத்தரவில் அவர் கூறியிருப்பதாவது:-

மகளிர் போலீஸ் நிலையங்கள் சமரச மையமாக செயல்பட
வேண்டும்.

வயதானவர்களையும், கைக்குழந்தையுடன் வரும் பெண்களையும், சிறுவர்களையும், கர்ப்பிணி பெண்களையும் அவர்களது வயது, உடல் நலம் வித்தியாசம் பார்க்காமல் விசாரணை என்ற பெயரில் போலீஸ் நிலையங்களுக்கு வரவழைத்து கொடுமைப்படுத்துவதாகவும், அவர்களைத்
தாக்குவதாகவும் புகார்கள் வருகின்றன. தேவையில்லாமல் கைது நடவடிக்கைகளில் இறங்குவதாகவும் குற்றச்சாட்டுகள் வருகின்றன. இந்த போக்கு மாற வேண்டும். இதன் மூலம் சட்டம் கொண்டு வந்த நோக்கமே பாதிக்கப்பட்டுவிட்டது.

சாதாரண பிரச்சினையை கூட மகளிர் போலீஸ் நிலையத்தில் பெரிதாக்கி விடுகிறார்கள்.

புகார் உண்மையானதுதானா என்பதை ஆராயாமலேயே மேல் நடவடிக்கைகளில் இறங்குகின்றனர். விசாரணை என்ற பெயரில் குடும்பத்தையே துன்புறுத்துகின்றனர்.

குற்றம் சாட்டப்பட்டவரை துன்புறுத்தும் நோக்கில் சில கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த கைது நடவடிக்கைகளும் வாரத்தின் கடைசி நாளான வெள்ளியன்று மேற்கொள்ளப்படுகிறது. இதனால் இரண்டு நாட்கள் அவர்கள் ஜாமீனில் வரமுடியாது.

கணவன்-மனைவி பிரச்னைகளை போலீஸ் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். அதனால் அவர்கள் மீண்டும் ஒன்று சேர வழி பிறக்கும். இத்தகைய வழக்குகளை பெண் போலீஸார்தான் திறமையாகக் கையாள்வர் என்று சட்டம் இயற்றுபவர்கள் கருதியுள்ளனர். தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் மகளிர் போலீஸ் நிலையங்கள் உள்ளன. இந்த போலீஸ் நிலையங்கள்
எல்லாம் கணவன் மனைவி ஒன்று சேரவதற்கான சமரச மையங்களாக இருக்கும் என்று ஒவ்வொருவரும் எதிர்பார்த்தனர். ஆனால் நடைமுறை அனுபவத்தைப் பார்த்தால், சிறிய சிறிய பிரனைகளுக்குக் கூட பெரிய அளவிலான குற்றம் என்று வர்ணம் பூசப்படுகிறது.

கணவனுக்கும் குடும்பத்தினருக்கும் எதிராக குற்றச் சாட்டுக்களைக் கூறுமாறு பெண்கள்ஊக்கப்படுத்தப் படுகின்றனர். இதனால் தேவையில்லாமல் கைது நடவடிக்கைகளில் இறங்கி, குடும்பத்தினரையும் போலீஸ் நிலையங்களுக்கு இழுக்கின்றனர். இதனால் வரதட்சிணைத் தடுப்புச் சட்டத்தின் நோக்கமே
பாழடிக்கப் படுகிறது.

அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களில் சட்ட விதிகள் மீரப்படுவதாக அடிக்கடி குற்றச் சாட்டுக்கள் வருவதால் அரசுக்கு கீழ்க்கண்ட பரிந்துரைகளை தெரிவிக்கிறேன்:-

  • வரதட்சணை சாவு, தற்கொலை போன்ற கடுமையான குற்றங்களை தவிர மற்ற புகார்களை வரதட்சணை தடுப்பு அதிகாரிகள் அனுமதி பெற்றுத்தான் பெண் போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
  • வயதானவர்கள், உடம்புக்கு சரியில்லாதவர்கள், மைனர்கள் போன்றோரை பெண் போலீசார் கைது செய்யக்கூடாது.
  • இப்படிப்பட்டவர்களை கைது செய்யவேண்டுமென்றால் போலீஸ்
    சூப்பிரண்டுக்கு தகவல் கொடுத்து அவர்களது அனுமதி பெற்றுத்தான் கைது செய்யவேண்டும்.
  • ஒருவர் தப்பி ஓடிவிடுவார் என்று இருந்தால் கூட, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அதற்கான உத்தரவை கோர்ட்டில் பெற்றபின் அவரைக் கைது செய்யலாம்.
  • முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட 30 நாட்களுக்குள் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யவேண்டும்.
  • விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வருபவர்களை பிரம்பால், கையால் தாக்க கூடாது. அதே சமயம், பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அவர்களுக்கு சீதன பொருட்களை உடனடியாக பெற்றுத் தந்துவிட வேண்டும்.
  • கோர்ட்டு நடவடிக்கை மற்றும் சட்டம் பற்றித் தெரிந்துகொள்ள பெண் போலீசாருக்கு தேவையான பயிற்சி முகாம் நடத்த வேண்டும். இதற்காக டி.ஜி.பி. தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
  • மகளிர் போலீஸ் நிலையத்தில் உள்ள போலீசாருக்கு தனி சீருடை வழங்கலாம். புகார்தாரர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்களின் குழந்தையைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அரசு இல்லங்களில் தங்க அனுமதிக்கலாம்.


இவ்வாறு நீதிபதி தனது இடைக்கால உத்தரவில்
குறிப்பிட்டிருந்தார்.

செய்தி: தினமலர், தினத்தந்தி


வாலிபரின் கையை உடைத்த பெண் போலீஸ்

செய்தி: தினத்தந்தி - 5 ஜூலை, 2008

போலீஸ் நிலையத்தில் வாலிபர் கை உடைப்பு: பெண் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டரை விசாரிக்க வேண்டும்போலீஸ் கமிஷனருக்கு ஐகோர்ட்டு உத்தரவு

கையே உடைந்து போகும் அளவுக்கு அடித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து பெண் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டரை விசாரித்து கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பழகியதால் திருமணம்

சென்னை புதுப்பேட்டை வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் குருவையா. இவர் மனைவி நரம்மா. இவர்களுடைய மகன் ரோமையா (வயது 24). இவர் வசிக்கு வீட்டருகே சுப்புலட்சுமி வசித்து வருகிறார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வேலை பார்க்கிறார். இவரது மகள் ராதிகா (20).

ராதிகாவுடன் ரோமையா பழகி வருவதால், 2 பேருக்கும் திருமணம் செய்ய வேண்டும் என்று சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சுப்புலட்சுமி புகார் கொடுத்தார். அதைத் தொடர்ந்து 27.9.07 அன்று 2 பேருக்கும் பதிவுத் திருமணம் நடந்தது. அதன் பிறகு 5 நாட்கள் வேறொரு இடத்தில் 2 பேரும் குடும்பம் நடத்தினர்.

விவாகரத்து வழக்கு

பின்னர் ரோமையா, சென்னை குடும்பநல கோர்ட்டில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார். தனக்கு சிலர் கட்டாயத் திருமணம் செய்து விட்டதாக வழக்கில் கூறி இருந்தார். இந்த நிலையில் ரோமையா மீது சிந்தாதிரிப்பேட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் ராதிகா வரதட்சணைக் கொடுமை புகார் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் ரோமையா மனு
தாக்கல் செய்தார். சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் 3 வாரங்கள் தொடர்ந்து அவர் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 6 நாட்கள் தொடர்ந்து ரோமையா கையெழுத்து போட்டு வந்தார்.

லத்தியால் அடி

இந்த நிலையில் ஐகோர்ட்டை மீண்டும் ரோமையா அணுகி, முன்ஜாமீன் நிபந்தனையை தளர்த்தும்படி கேட்டுக் கொண்டார். இந்த வழக்கை நீதிபதி ஆர்.ரகுபதி விசாரித்தார். ரோமையா தரப்பில் வக்கீல் உதயபானு ஆஜரானார். முன்ஜாமீன் பெற்று 6 நாட்களுக்குள் நிபந்தனையை தளர்த்த முடியாது என்று நீதிபதி கூறினார்
.
நிபந்தனையின் அடிப்படையில் கையெழுத்து போடச் சென்ற போது, அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி, ரோமையாவிடம் , ``இன்ஸ்பெக்டர் கட்டி வைத்த பெண்ணை நீ விவாகரத்து செய்யக் கூடாது'' என்று கூறி லத்தியால் அடித்ததாகவும், இதனால் உடைந்து போகும் அளவுக்கு கையில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் ரோமையா தரப்பில் கூறப்பட்டது.

கோர்ட்டில் விசாரணை

அதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் நவனீதம், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி ஆகியோரை கோர்ட்டுக்கு வரவழைத்து நீதிபதி விசாரணை நடத்தினார். வரதட்சணை கொடுமை வழக்கில், எப்.ஐ.ஆர். போடாமல் விசாரித்து வருவதாக இன்ஸ்பெக்டர் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. எப்.ஐ.ஆர். போடாமல் விசாரணை நடத்துவதை நீதிபதி கண்டித்தார்.

மேலும் அவர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு பதவிக்கும் குறையாத அதிகாரியை போலீஸ் கமிஷனர் நியமித்து, நவனீதம், விஜயகுமாரி ஆகியோர் மீது கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும். அதுதொடர்பாக அறிக்கை தயாரித்து, 7-ந் தேதி கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது

சட்டம் படுத்தும் பாடு



நன்றி: தினமலர்

ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது


மனைவியை பிரிப்பதாக கணவரிடமும், கணவரை சேர்த்து வைப்பதாக மனைவியிடமும் பணம் வாங்கியதாக குற்றச்சாட்டு


சென்னை, ஜுலை.2-
சென்னையில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.


கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது


சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் சியாமளா. இவரது கணவர் பெயர் சதீஷ்குமார். கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவருக்கும், சியாமளாவுக்கும் கடந்த 2002-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 5 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. சதீஷ்குமார் லண்டனில் வேலை பார்க்கிறார். இனிதாக இல்லற வாழ்க்கை நடத்திய இவர்களுக்குள் திடீரென்று கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சதீஷ்குமார், இன்னொரு பெண்ணோடு தொடர்பு வைத்துள்ளதாகவும், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும், சியாமளா அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி (வயது 56) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். சதீஷ்குமார் கைது செய்யப்பட்டார். பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுதலையானார். தினமும் அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி, ஜாமீன் நிபந்தனைப்படி கையெழுத்து போட்டு வருகிறார்.


லஞ்ச புகார்


இந்த நிலையில், இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி, சதீஷ்குமாரிடமும், சியாமளாவிடமும் லஞ்சம் கேட்டு தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தது. சதீஷ்குமாரை சேர்த்து வைப்பதாக சியாமளாவிடமும், சியாமளாவை பிரித்து வைப்பதாக சதீஷ்குமாரிடமும் பணம் கேட்டு இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சியாமளாவிடம் ரூ.25 ஆயிரம் பணம் கேட்டு, பின்னர் ரூ.10 ஆயிரமாவது தரவேண்டுமென்று ராஜலட்சுமி மிரட்டியுள்ளார்.


இது தொடர்பாக சியாமளா, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார். லஞ்ச ஒழிப்பு இயக்குனர் நடராஜன் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். சூப்பிரண்டு ஆசியம்மாள், துணை சூப்பிரண்டு அலிபாஷா ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் கனகராஜ் ஜோசப், வேதரத்தினம் ஆகியோர் இதுதொடர்பாக விசாரித்தார்கள்.


கைதானார்


நேற்று சியாமளாவிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கும்போது இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சென்னை நகரில் இந்த ஆண்டு இதுவரை லஞ்ச புகாரில் 3 இன்ஸ்பெக்டர்களும், 2 சப்-இன்ஸ்பெக்டர்களும், 2 போலீஸ் ஏட்டுகளும் கைதாகியுள்ளனர்.


~ செய்தி: தினத்தந்தி. படம்: Times of India (02-07-2008)


மனைவி புகார் கொடுத்தால் போதும்; கணவன் கைது செய்யப்படுவான் என்னும் சட்ட நடைமுறை தொடர்ந்து இருக்கும் வரை இதுபோன்ற பல அராஜகங்களை வரும் நாட்களில் எதிர் பார்க்கலாம்.


ஆண்களே, இப்ப்டியும் ஒரு திருமணம் உங்களுக்குத் தேவையா!!