புனிதமா, புதுமையா?

பெண்கள் மென்மையானவர்கள், பேணிக் காக்கப்பட வேண்டியவர்கள். ஆம், இந்த நிகழ்வுகளைக் கண்ணுற்ற பின் உங்கள் மனத்தில் தோன்றப்போகும் எண்ணங்கள் இவையே!

  1. கள்ளக்காதலனோடு சேர்ந்து மனைவியால் கொலை செய்யப்பட்ட கணவர் உடல் தோண்டியெடுப்பு
    ஜூலை 11,2008

  2. சிவகாசி:கள்ளக்காதல் தகராறில் காதலனோடு சேர்ந்து மனைவியால் கொல்லப்பட்ட கணவரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.திருத்தங்கல் கே.வி.கே., சாமி காலனியை சேர்ந்த அச்சுத்தொழிலாளி பாண்டி(35). இவரது மனைவி அழகு மீனா (32). மாடு மேய்க்க செல்லும் போது இவருக்கும், திருத்தங்கல் ராஜாங்கத் திற்கும்(37) கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
    ராஜாங்கம், அழகு மீனாவிற்கு மொபைல்போன் வாங்கி கொடுத்தார். இது பாண்டிக்கு தெரிந்து,மனைவியை கண்டித்தார். மொபைல் போனை ராஜாங்கத்திடம் கொடுத்த அழகுமீனா, கணவர் கண்டிப்பதாக புலம்பினார்.ஆத்திரம் அடைந்த ராஜாங்கம், தனது நண்பர் செல்வம் (25) மூலம் பாண்டியை ஏப்ரல் 8ம்தேதி திருத்தங்கலில் உள்ள தனது தோட்டத்திற்கு அழைத்து வந்தார். அங்கு ராஜாங்கத்திற்கும், பாண்டிக்கும் தகராறு ஏற்பட்டது.
    அப்போது அங்கு வந்த அழகுமீனா அவர்களை விலக்கிவிட்டார். கணவரை வீட்டிற்கு போகச்சொல்லிவிட்டு பின்னால் வருவதாக கூறினார். நெடுநேரம் ஆகியும் மனைவி வரவில்லை. சந்தேகமடைந்த பாண்டி, மனைவியை தேடி சென்ற போது அழகுமீனாவும், ராஜாங்கமும் தகாத உறவில் ஈடுபட்டிருப்பதை பார்த்தார். இதை கண்டித்த பாண்டிக்கும், ராஜாங்கத்திற்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
    கோபமடைந்த ராஜாங்கம், மண்வெட்டியால் பாண்டியின் பின் தலையில்தாக்கினார். அழகு மீனாவும்,செல்வமும் சேர்ந்து சரமாரியாக தாக்கியதில் பாண்டி இறந்தார். கொலை செய் யப்பட்ட பாண்டியின் உடலை திருத்தங்கல்-விருதுநகர் ரயில்வே தண்டவாளத்தில் போட்டு விட்டு மூவரும் சென்றனர். அந்த வழியாக வந்த ரயில், ஏறியதில் பாண்டியின் உடல் துண்டானது. விருதுநகர் ரயில்வே போலீசார், அடையாளம் தெரியாதவர் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்து, பாண்டியின் உடலை ஏப்ரல் 9ம் தேதி சிவகாசி நகராட்சி சுடுகாட்டில் புதைத்தனர்.
    கணவரை கொலை செய்த மனைவி ஏதுவும் தெரியாததுபோல் நடமாடி வந்தார். பாண்டி யின் தாய் காளியம்மாள், தனது மகனை காணவில்லை என ஜூன் 16ல் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், அழகுமீனாவிடம் நடத்திய விசாரணையில், கள்ளக்காதல் தொடர்பில் பாண்டி கொலை செய்யப்பட்ட உண்மை வெளி யானது. இவ்வழக்கில் கள்ளக்காதலன் ராஜாங்கம் மற்றும் செல்வம், அழகுமீனா ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.பின்னர் பாண்டியின் உடலை, "சூப்பர் இம்போஸ், டி.என்.ஏ.' சோதனை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.
    நேற்று சிவகாசி நகராட்சி சுடுகாட்டில் தாசில்தார் ராமசாமி தலைமையில், இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாண்டியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. மதுரை தடய அறிவியல் ஆய்வக துறை உதவி பேராசிரியர்நடராஜன் தலைமையில்ஏழு பேர் கொண்ட குழுவினர் உடலை பரிசோதனைசெய்தனர்.பாண்டியின் உடலை பார்த்து கதறி அழுத அவரது தாய், உடன் அழைத்து வந்திருந்த இருதய நோயால் பாதிக்கப்பட்ட மூன்று வயதே ஆன பேத்தியை(பாண்டியின் மகள்) எப்படி காப்பாற்ற போகிறேன் என புலம்பினார்.

    (நன்றி: தினமலர்)

  3. கணவனைக் கொன்றார் மனைவி - கடலில் போட்டார் கள்ளக் காதலன்!
    ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் கள்ளகாதலனுடன் இணைந்து கணவரைக் கொலை செய்து உடலை துண்டு துண்டாக்கி வீட்டில் புதைத்தார் மனைவி. அந்த உடல் பாகங்களை தினசரி கடலுக்கு மீன் பிடிக்கப் போகும் போது கடலில் போட்டு வந்துள்ளார் அவரது கள்ளக் காதலன்.ராமேஸ்வரம் மண்டபம் பகுதியை சேந்தவர் சரவணன் (38). கூலி தொழிலாளி. இவரது மனைவி களஞ்சிய ராணி (28). இவர்களுக்கு திருமணாகி ஒரு மகன் உள்ளான்.அதே பகுதியை சேர்ந்தவர் வேலு (28). இவர் மீனவர். இவருடன் களஞ்சிய ராணிக்கு கள்ள தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த அவரது கணவர் களஞ்சிய ராணியை கடுமையாக கண்டித்தார்.ஆனால் களஞ்சிய ராணி அவரது பேச்சுக்கு கட்டுப்பட மறுத்து தனது கள்ள காதலனுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது.இதையடுத்து கணவனை தீர்த்து கட்டிவிட்டால் வேலுவுடன் தொடர்ந்து உல்லாசமாக வாழலாம் என நினைத்த களஞ்சிய ராணி, சரவணனை கொலை செய்து துண்டு துண்டாக வீட்டில் புதைத்து வைத்தார்.அந்த உடல் பாகங்களை, வேலு மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் போது ஒவ்வொரு பாகமாக எடுத்துச் சென்று கடலில் வீசி எறிந்துள்ளார்.இந்த நிலையில், தனது கணவனை காணவில்லை என்று களஞ்சிய ராணியே காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.களஞ்சிய ராணி மீது சந்தேகம் ஏற்பட்டு அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் சரவணனை கள்ளகாதலன் வேலுவுடன் இணைந்து கொலை செய்து கடலில் வீசியதை களஞ்சிய ராணி ஒப்புக்கொண்டார்.அதன் பேரில் களஞ்சிய ராணியை போலீசார் கைது செய்தனர்.ஆனால் வேலு தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
    (நன்றி. தட்ஸ்தமிழ்)