காணுங்கள். உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள்!
கருத்து யுத்தம் வீடியோ
குறிச்சொற்கள் 125, 498a, advocates, arrest, biased laws, CrPC, divorce, dv act, harassment, law, misuse, police officer, ஆண்பாவம், பொய் வழக்கு, வரதட்சணை
ஐ.பி.எஸ். அதிகாரி மீது 498A வழக்கு
சென்னை, செப்.8- 2009. செய்தி: தினத்தந்தி.
சுட்டி: http://www.dailythanthi.com/article.asp?NewsID=512726&disdate=9/8/2009&advt=1
ஐ.பி.எஸ். போலீஸ் அதிகாரி மீது அவரது மனைவி சென்னை போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகார் மனு மீது விசாரணை நடத்தும்படி வரதட்சணை தடுப்பு உதவி போலீஸ் கமிஷனருக்கு, கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சேர்ந்தவர் தண்டியப்பன். இவரது மகள் ஷர்மிளா நேற்று காலையில் சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
இளம் பெண் ஷர்மிளாவோடு சீனியர் வக்கீல் சுதா ராமலிங்கமும் (இந்தப் பெயரை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!) வந்திருந்தார். ஷர்மிளாவின் கணவர் பெயர் எஸ்.ஆர்.சாமுவேல் என்பதாகும். ஐ.பி.எஸ். அதிகாரியான அவர், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றுகிறார்.
தனது கணவர் மீது ஷர்மிளா கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் எம்.பி.ஏ. பட்டப்படிப்பு படித்துவிட்டு, சென்னையில் உள்ள வங்கி ஒன்றில் உதவி மானேஜர் அந்தஸ்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தேன்.
இந்த நிலையில், பரமக்குடியில் இருந்து மாப்பிள்ளை வீட்டார் என்னை வந்து பெண் பார்த்தார்கள். எனது பெற்றோரையும் சந்தித்து பேசினார்கள். எனது கணவரும் முறைப்படி எனது அலுவலகத்தில் வந்து என்னை பெண் பார்த்தார்.
`நான் ஐ.பி.எஸ். அதிகாரி என்றும், நீ இந்த வங்கி வேலையை ராஜினாமா செய்துவிட்டு, ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத வேண்டும்' என்றும் கூறினார். நானும் அவரை திருமணம் செய்ய சம்மதித்து எனது வங்கி வேலையை ராஜினாமா செய்துவிட்டேன்.
2.2.2009 அன்று சுயமரியாதை முறைப்படி சென்னையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் எங்களது திருமணம் நடந்தது. அமைச்சர் ஒருவர் தலைமை தாங்கி எங்கள் திருமணத்தை நடத்தி வைத்தார்.
திருமணத்துக்கு முன்புவரை நெற்றியில் விபூதி, குங்குமம் அணிந்து முருகர் பக்தன் என்றும், திருப்பதி ஏழுமலையான் பக்தன் என்றும் எனது கணவர் பக்தி பரவசத்தோடு காட்சி அளித்தார். திருமணத்துக்கு பிறகுதான் அவரது சுயரூபம் தெரிய ஆரம்பித்தது.
நாங்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் சுத்த சைவம். அசைவம் சாப்பிட மாட்டோம்.
எனது கணவர் கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்துவாக மதம் மாறிவிட்டதாகவும், சாமுவேல் என்ற பெயரை `சாம்வேல்' என்று மாற்றிவிட்டதாகவும்' கூறினார். அவரை நல்லவர் என்று நம்பி நான் மோசம் போனேன். திருமணம் முடிந்த பிறகு அவர் எங்கள் வீட்டுக்கு வர மறுத்துவிட்டார்.
சென்னை எழும்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தான் எங்களது முதலிரவு நடந்தது. முதலிரவின்போது நன்றாக குடித்துவிட்டு போதையில் வந்தார்.
அசைவம் சாப்பிட மாட்டேன் என்று சொன்னவர் சிக்கன் பிரியாணியை வரவழைத்து சாப்பிட்டார். என்னையும் கட்டாயப்படுத்தி சிக்கன் பிரியாணியை சாப்பிட சொன்னார்.
அசைவம் எனக்கு பிடிக்காததால், அவர் கொடுத்த பிரியாணியை சாப்பிட்டுவிட்டு நான் வாந்தி எடுத்தேன். திருமணத்துக்கு முன்பு வரதட்சணை எதுவும் வேண்டாம் என்று எனது கணவர் கூறினார். இருந்தாலும் எனது பெற்றோர் 78 சவரன் நகைகள் எனக்கு வரதட்சணையாக போட்டு அனுப்பினார்கள்.
முதலிரவு அறைக்குள் நுழைந்தவுடன் நீ போட்டிருக்கும் நகைகளை எல்லாம் கழற்றி எடுத்துக்கொண்டு வா என்று உத்தரவுபோட்டார். நானும் நகைகளை கழற்றி ஒரு தட்டில் எடுத்து வைத்தேன்.
நகைகளை கையில் தூக்கி பார்த்து `நான் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி, எனக்கு வரதட்சணையாக இவ்வளவு நகைகள்தான் போடுவீர்களா' என்று கேவலமாக பேசினார். எங்கள் வீட்டுக்கு விருந்து சாப்பிட வரும்படி பெற்றோர்கள் அழைத்தார்கள். பிடிவாதமாக வர மறுத்துவிட்டார். 14.2.2009 அன்று விமானத்தில் என்னை டெல்லி அழைத்து சென்றார். எனது பெற்றோர் விமானநிலையத்துக்கு வந்து தான் வழி அனுப்பினார்கள். டெல்லியில் ஒரு நண்பர் வீட்டில் தங்கினோம். அங்கும் நண்பர் முன்பே என்னை கேவலமாக பேசினார்.
காஷ்மீரிலும் என்னை ஒரு சிறை பறவை போலவே வீட்டில் அடைத்து வைத்திருந்தார். வேலைக்காரர்கள் முன்னிலையில் என்னிடம் அன்பாக பேசுவதுபோல் நடிப்பார்.
வேலைக்காரர்கள் போனதும் என்னை அடித்து உதைத்து சித்ரவதை செய்வார். ஒருகட்டத்தில் என்னை கொலை செய்யவும் துணிந்துவிட்டார்.
போனில் பேசி அடியாட்களை வீட்டுக்கு வரும்படி அழைத்தார். ரூ.5 லட்சம் கூலி தருகிறேன். ஒரு பெண்ணை கொலை செய்து காஷ்மீர் பனிகட்டியில் புதைக்க வேண்டும் என்று என் முன்னாலேயே பேசினார். போதைப்பொருள் வழக்கில் எனது பெற்றோரை சிக்கவைத்துவிடுவேன் என்றும் மிரட்டினார்.
இனிமேலும் அவரோடு வாழ்ந்தால் உயிருக்கு ஆபத்து என்று பயந்தேன். எனது பெற்றோருக்கு தகவல் கொடுத்துவிட்டு, அவரிடமிருந்து தப்பி சென்னை வந்துவிட்டேன்.
அவர் முழுக்க, முழுக்க என்னை ஏமாற்றி மோசடி திருமணம் செய்துவிட்டார். கிறிஸ்தவனாக இருந்துகொண்டே இந்துவாக மதம் மாறிவிட்டதாக பொய் சொன்னார். வரதட்சணை கேட்டு என்னை தினந்தோறும் அடித்து உதைத்து சித்ரவதை செய்தார். அவர்மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு ஷர்மிளா தனது புகார் மனுவில் கூறியுள்ளார்.
ஷர்மிளா கொடுத்த புகார் மனு தொடர்பாக அவரது வக்கீல் சுதா ராமலிங்கம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
எனது கட்சிக்காரர் ஷர்மிளா கணவரால் மிகவும் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார். சுயமரியாதை திருமணம் என்பது இந்து பெண்ணுக்கும், இந்து மாப்பிள்ளைக்கும் தான் நடக்க வேண்டும். கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் இந்து பெண்ணை சுயமரியாதை திருமணம் செய்துகொள்ள முடியாது. அது சட்டப்படி குற்றமாகும்.
ஷர்மிளாவின் கணவர் சாமுவேல் வழுக்கை தலை உடையவர் ஆவார். ஷர்மிளாவை பெண் பார்க்க வந்தபோது தலையில் தொப்பியோடு வந்துள்ளார். ஏழுமலையானுக்கு மொட்டை போட்டுள்ளதால் தலையில் தொப்பி வைத்திருப்பதாக கூறியிருக்கிறார். திருமணத்தின்போது தலை நிறைய முடியோடு வந்துள்ளார்.
முதலிரவில் அவரது முடியின் ரகசியம் அம்பலமாகிவிட்டது. அவர் தலையில் `விக்' அணிந்து ஏமாற்றி உள்ளார். முதலிரவின்போது `விக்'கை கழற்றி வைத்துவிட்டு வழுக்கை தலையோடு இருந்துள்ளார். முதலிரவின்போதே சாமுவேலின் வழுக்கை தலையை பார்த்து, ஷர்மிளாவின் வாழ்க்கையும் வழுக்க ஆரம்பித்துவிட்டது. சாமுவேல் செய்த கொடுமையால் கர்ப்பமாக இருந்த ஷர்மிளாவின் வயிற்றில் இருந்த குழந்தையும் `அபார்ஷன்' ஆகிவிட்டது.
கிறிஸ்தவராக இருந்துகொண்டு இந்து என்று பொய் சொல்லிக்கொண்டு சுயமரியாதை திருமணம் நடத்தி மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. சாமுவேல் வடமாநில பெண் ஒருவரை ஏற்கனவே திருமணம் செய்து விவாகரத்து பெற்றுள்ளார். கடந்த 2 மாத காலமாக தீர ஆலோசித்து தான் இந்த புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. சாமுவேல் செய்த குற்றத்துக்கு 10 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை வாங்கி கொடுக்க சட்டத்தில் இடம் உள்ளது.
இவ்வாறு வக்கீல் சுதா ராமலிங்கம் தெரிவித்தார்.
ஷர்மிளா கொடுத்த புகார் மீது விசாரணை நடத்தும்படி வரதட்சணை கொடுமை தடுப்பு உதவி கமிஷனர் விமலாவுக்கு, கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். அரசு வக்கீலிடம் சட்ட ஆலோசனை பெற்று இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போலீஸ் வட்டாரத்தில் நேற்று இரவு தெரிவிக்கப்பட்டது.
============
இதுபோல் பரவலாக மேல் மட்டங்களில் 498A கேசுகள் மேலும் பற்பல குற்றப் பிரிவுகளோடு சேர்த்துப் போடப்பட்டு ஜெகஜ்ஜோதியாக வலம் வந்தால்தான் ஒரு விமோசனம் கிட்டும்! தொடரட்டும் வி.ஐ.பி 498A கேசுகள்!
=====================
தினமலர் அளித்துள்ள மேலதிக விவரங்கள்:-
சுட்டி: http://www.dinamalar.com/new/fpnnewsdetail.asp?News_id=4887
சென்னை :வரதட்சணை கேட்டு, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர், என்னை அடித்து கொடுமைப்படுத்தினர். ஐ.பி.எஸ்., அதிகாரியான என் கணவர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தனியார் வங்கியில் பணியாற்றும் பெண் அதிகாரி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை, முத்தமிழ் நகர், வடக்கு அவென்யூ சாலையில் வசிக்கிறார் எம்.பி.ஏ., பட்டதாரி சர்மிளா. சென்னையில், கரூர் வைசியா வங்கியில், உதவி மேலாளராக வேலை பார்க்கிறார்.
அவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:என் கணவர், ராமநாதபுரத்தைச் சேர்ந்த சாமுவேல். ஜம்மு - காஷ்மீர் ஒதுக்கீடு ஐ.பி.எஸ்., அதிகாரி. ஜம்முவில் 13வது பட்டாலியன் கமாண்டன்டாக பணியாற்றி வருகிறார்.அவர், கிறிஸ்தவ யாதவ சமுதாயத்தைச் சேர்ந்தவர். நான் இந்து யாதவ சமுதாயத்தைச் சேர்ந்தவள். இரு குடும்பத்தினர் சம்மதத்துடன் சுயமரியாதை திருமணமாக, இந் தாண்டு பிப்ரவரி 2ம் தேதி சென்னையில் எங்கள் திருமணம் நடந்தது.சென்னை எழும்பூரில் உள்ள ஓட்டலில், எங்கள் முதல் இரவு நடந்தது. ஓட்டல் அறைக்கு நள்ளிரவில் குடிபோதையில் வந்த சாமுவேல், என்னையும், என் குடும்பத்தாரையும், ஆபாசமாகவும், கேவலமாகவும் பேசி, "டார்ச்சர்' செய்தார்.
கணவருடன், பிப்ரவரி 14ம் தேதி, டில்லி வழியாக காஷ்மீர் சென்றேன். அங்கும் என்னையும், என் குடும்பத்தாரையும் அசிங்கமாகப் பேசி, அடித்து சித்ரவதை செய்தார்.என் கணவர், போனில் யாரிடமோ, ஒரு பெண்ணை கொலை செய்து அதை விபத்தாக மாற்றி விடுவதாக பேசிக் கொண்டிருந்தார். அதை நான் கேட்டேன். ஐ.பி.எஸ்., அதிகாரியாக உள்ள அவர், என்னை கொலை செய்யக் கூட தயங்க மாட்டார் என்ற பயம் வந்து விட்டது. சென்னையில் உள்ள என் குடும்பத்தாரை போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தில் சிறையில் தள்ளி விடுவதாக மிரட்டினார்.என் கணவர் சாமுவேல், மனநோயாளி போல் என்னிடம் நடந்து கொண்டார். கடும் குளிர்பிரதேசமான காஷ்மீரில், படுக்கையில் இருந்த என்னை நள்ளிரவில் கீழே தள்ளி விட்டுள்ளார். காய்ச்சல், குளிர் ஜுரத்தில் படுத்தேன். மருத்துவ சிகிச்சை பெறக் கூட அனுமதிக்கவில்லை. இரவு நேரத்தில் வீட்டின் பால்கனியில் பல மணி நேரம் என்னை நிற்க வைத்து கொடுமை படுத்தினார்.
இதற்கிடையே, நான் சென்னைக்கு திரும்பி விட்டேன்.என் பெற்றோரிடம், வரதட்சணை அதிகமாக வேண்டும் என கேட்டு மிரட்டினார். மதுரையில் உள்ள போலீஸ் கமிஷனர், மற்றும் சில அரசியல் பிரமுகர்கள், தன் குடும்பத்தினருக்கு நெருக்கம் என கூறி மிரட்டினார். என்னை ஏமாற்றி மோசடியாக திருமணம் செய்து, என் நகைகளை அபகரித்துக்கொண்ட ஐ.பி.எஸ்., அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
கமிஷனர் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை கமிஜனர் ஆசியம்மாளிடம், இந்த புகாரை சர்மிளா அளித்தார். அவர் மனு, குடும்ப நல வழக்குகளை விசாரிக்கும் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மனைவிக்கு கள்ளத்தொடர்பால் விவாகரத்து முடிவு : ஐ.பி.எஸ்., அதிகாரி சாமுவேல் வாக்குமூலம்:
சர்மிளா புகார் கொடுத்த தகவல் அறிந்து வந்த சாமுவேல், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகளிடம் கூறியதாவது:
எனது மனைவி சர்மிளா, பொய்யான புகாரைக் கொடுத்துள்ளார். எனது மனைவிக்கு வெறொருவருடன் தொடர்புள்ளது. அதை மறைக்கத்தான் இப்படி என் மீது அவதூறாக புகார் கொடுத்துள்ளார்.மனைவியை விவாகரத்து செய்ய, குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளேன். நீதிபதியின் முடிவுக்கு கட்டுப்படுவேன். என் மீதான புகாரை சட்ட ரீதியாக எதிர்கொள்ளவுள்ளேன். இவ்வாறு போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இது குறித்து போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது:
சாமுவேல், 1999ம் ஆண்டு நேரடியாக தேர்வான ஐ.பி.எஸ்., அதிகாரி என தெரியவந்துள்ளது. அவரது மனைவி சர்மிளா கொடுத்துள்ள புகார், மத்திய குற்றப்பிரிவில் உள்ள வரதட்சணை தடுப்புப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.புகார் கொடுத்த சர்மிளாவை அழைத்து விசாரிக்க, அப்பிரிவின் உதவி கமிஷனர் விமலாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சாமுவேலிடமும் விசாரிக்க வரதட்சணை தடுப்புப் பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். ஐ.பி.எஸ்., அதிகாரி சாமுவேல், ஜம்முவில் நடந்ததைச் சொல்வதற்கு வாய்ப்பளிக்க வேண்டும். இப்பிரச்னை விசாரணை அளவிலேயே உள்ளது. இருவரிடமும் விசாரிக்க வேண்டும். கோர்ட்டில் வழக்கு உள்ளதால், கோர்ட் முடிவை பொறுத்து வழக்கு பதிவு செய்யப்படும். இவ்வாறு கமிஷனர் கூறினார்.
==========
அதுசரி. சாதாரண கணவனாக இருந்தால் ஒரு விசாரணையுமின்றி புகார் கொடுத்தவுடனேயே கைது செய்து விடுவார்கள். இப்போது விசாரனை செய்கிறார்களாம்!!
நடக்கட்டும். எப்படியாவது இந்தப் பொய்க் கேசுச் சட்டங்களிலிருந்து அப்பாவி கணவர்களுக்கு விமோசனம் கிட்டினால் சரி!
குறிச்சொற்கள் 498a, father, harassment, husbands, IPS, misuse, police officer, ஆண்பாவம், பொய் வழக்கு, வரதட்சணை