Showing posts with label குடும்ப வன்முறை. Show all posts
Showing posts with label குடும்ப வன்முறை. Show all posts

தெய்வத்தாய்

கணவருடன் ஏற்பட்ட தகராறில் 1 வயது குழந்தையை கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய் கைது

குன்னூர், நவ.29 - 2009. தினத்தந்தி

குன்னூர் அருகே வெலிங்டன் ஜெயந்தி நகரை சேர்ந்தவர் அரிகரன். இவரது மனைவி சியாமளா (வயது 26). இவர்களுக்கு 1 வயது ஆண் குழந்தை உள்பட 2 குழந்தைகள் உள்ளன. அரிகரன் சபரிமலை அய்யப்பனுக்கு மாலை அணிய முடிவு செய்து இருந்தார்.

இந்த நிலையில் அரிகரன் சபரிமலைக்கு மாலை போடுவது, அவரது மனைவி சியாமளாவுக்கு விருப்பம் இல்லாமல் இருந்தது. இதனால் அவர்களுக்கு கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

வாக்குவாதம்

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் அரிகரனுக்கும், சியாமளாவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் நடக்கும் போது அரிகரன் வெளியே செல்கிறேன் என்று கூறிவிட்டு, வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.

சியாமளா தனது குழந்தைக்கு காயம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டாலோ, சபரி மலைக்கு மாலை போடுவதை தனது கணவன் செய்யப்பட்டார் என்று நினைத்து இருந்தார்.

குழந்தை கொலை:

இந்த சமயத்தில் அரிகரன் வீட்டை விட்டு வெளியே சென்றவுடன், சியாமளா வீட்டின் பின்புறம் வைத்திருந்த தண்ணீர் தொட்டிக்குள் தனது ஒரு வயது ஆண் குழந்தையான அபினுவை போட்டு, மூடி விட்டார். இது குறித்து தனது கணவனிடம் அவர் எதுவும் கூறவில்லை. பின்னர் சிறிது நேரம் கழித்து தண்ணீர் தொட்டியை திறந்து பார்க்கும் குழந்தை அபினு இறந்து கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சியாமளா, தானும் தற்கொலை செய்து கொள்ள, வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து, வெலிங்டன் எம்.ஆர்.சி. வளாகத்தில் இருந்த கிணற்றில் குதித்து விட்டார். அவள் கிணற்றில் குதிப்பதை ராணுவ வீரர் ஒருவர் பார்த்துவிட்டார். உடனே அந்த ராணுவ வீரர் சியாமளாவை காப்பாற்றி னார்.

இதற்கிடையில் குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி கிடப்பது அந்த கிராம மக்களுக்கு தெரிய வந்தது. உடனடியாக இறந்த குழந் தையை எடுத்துக் கொண்டு கிராம மக்கள் குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் குழந்தை செத்து விட்டதாக கூறினார்கள்.

அதே நேரத்தில் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சியாமளாவையும் கிராம மக்கள் குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தாய் கைது

இது பற்றி தகவல் அறிந்த குன்னூர் போலீஸ் துணை சூப்பிரண்டு தர்மராஜ் உத்தரவின் பேரில் வெலிங்டன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லோகநாதன், சப்-இன்ஸ்பெக்டர் பிலிப் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசா ரணை நடத்தினர். தொடர்ந்து போலீசார் குழந்தையை கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய் சியாமளாவை கைது செய்தனர்.

கணவனைக் கொல்ல மனைவிக்கு சட்டப்படி உரிமை தேவை

கனவனை மனைவி கொன்றால் அது குற்றமல்ல என்னும் சட்டத்திருத்தம் உடனடியாக கொண்டுவரப்பட வேண்டும். இதற்காக அனைத்து பெண்ணியவாத அமைப்புக்களும் கட்டாயம் பாடுபடவேண்டும். தற்போதுள்ள சட்டங்களின் அடிப்படையில் திருமணமான ஏழு ஆண்டு காலத்தில் மனைவி இறந்தால் அது கணவன் மற்றும் அவனது பெற்றோர் செய்த கொடுமையால்தான் என்று அனுமானிக்கபட்டு, ஆர்.டி.ஓ விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. யாரேனும் அது வரதட்சணை போன்ற கொடுமையால்தான் நிகழ்ந்தது என்று சந்தேகப்பட்டாலும் படாவிட்டாலும், முன்தீர்மானம் செய்து கொண்டு அவர்களைத் தண்டிக்க வேண்டும் (presumptive Section 113B of the Evidence Act) என்பது சட்டம்.

தவிர குடும்ப வன்முறைக் குற்றங்களிலிருந்து மனைவிக்கு முழுவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிரது. D.V.Act என்னும் குடும்ப வன்முறைச் சட்டத்தின் கட்டமைப்பின்படி கணவன் முகத்தைத் திருப்பிக் கொண்டாலோ, கேள்விக்கு பதில் கூறாமல் இருந்தாலோ, மனைவியின் எந்த ஒரு தேவைக்கும் - அது உபயோகமற்ற டம்பாசாரித் தேவையாயிருந்தால் கூட - பணம் கொடுக்க மறுத்தாலோ அது குடும்ப வன்முறையாகக் கருதப்பட்டு கணவன் தண்டிக்கப்படுவான். ஆனால் மனைவி கணவனை அடித்தாலும், வெட்டினாலும், கெட்ட வார்த்தை கொண்டு திட்டினாலும், உணவிட மறுத்தாலும், பிறரோடு ஒப்பிட்டு தன்மானத்தை இழக்கும் வகையில் மனம் புண்படுத்தினாலும், கணவன் எதிரிலேயே இன்னொருவனுடன் செக்ஸ் உறவு கொண்டாலும் அந்த மனைவி என்னும் புனித பிம்பத்தின்மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க சட்டத்தில் இடமே கிடையாது! ஏனெனில் ஆணென்பவன் பிறவியிலேயே ஒரு கிரிமினல். வன்முறை என்பதை அவன் தான் செய்வான்; பெண்ணுக்கு செக்ஸ் ஆசையே கிடையாது; வெறிபிடித்தலைபவன் ஆணே. பெண் ஒரு அபலை. மெல்லியலாள். ஒரு பாவமும் அறியாதவள். அவள் கொலை செய்தால் கூட அவளைக் கொலை செய்யத் தூண்டியவர்கள் மிதுதான் குற்றம். இதுதான் இத்தகைய ஒருதலைச் சார்புச் சட்டங்களை இயற்றியவர்கள் மற்றும், அதற்கு ஒருபடி மேலேயே போய் தீர்ப்பளிப்பவர்கள் ஆகியோர் மனத்தில் பதிந்துள்ள கருத்தியல்.

ஆனால் இது போதாது. மனைவியின் பலவகைப்பட்ட (variety) செக்ஸ் தேடலுக்காக கள்ளக்காதல் அவசியம் தேவையாய் இருக்கிறது. ஒரே புருஷனுடன் எத்தனை நாள் இருப்பது. அதனால் அந்த புதுமைப் பெண்ணுக்கு மாற்று சுகம் கிட்ட வைக்கும் கடமை கணவனுக்கு உண்டு என்பதை இந்த சமுதாயம் இன்னும் அங்கீகரிக்காமல் இருப்பதே ஒரு ஆணாதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடு.

மேலும் அப்படி கள்ளக்காதலில் ஒரு மனைவி ஈடுபடும்போது அவளுடைய முட்டாள் கணவன் அதை எதிர்த்தால் அவனைத் தீர்த்துக் கட்ட வேண்டியிருக்கிறது. அதனால் இப்போதுள்ள ஆணாதிக்க சட்டங்களின் அடிப்படையில் கணவனை மனைவி கொல்வது குற்றமாகக் கருதப்படுகிறது. அதனால் மனைவிக்கு குற்றவாளி என்னும் பட்டம் சூட்டப்படுகிறது. இது அபாண்டம். இதை எதிர்த்து பெண்ணிய அமைப்புக்கள் கட்டாயம் போராட வேண்டும். தற்போது ஆச்சி மனோரமா அம்மையார்தான் இதைக் கையிலெடுத்துப் போராடத் துணிந்திருக்கிறார்கள் அதற்காக தற்கால முழு விடுதலை பெற்ற இளம் பெண்கள் பலர் அவருக்குக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

மேலும் தமிழக பெண்கள் வாரியத் தலைவர் ராமாத்தாள் அவர்களும் மணமான பெண்கள் இன்னொருவனோடு உறவு வைத்துக் கொள்வதை "கள்ளக்காதல்" என்று அழைக்கக் கூடாது என்று கூறியிருக்கிறார். இது மிகவும் சமூக முக்கியத்துவம் வாய்ந்த கூற்று. இத்தகைய அணுகுமுறை பெண்களின் விடுதலைக்கும் பெண்கள் முன்னேற்றத்திற்கும் வெகுவாகப் பயனளிக்கும் என்பது திண்ணம்.

ஆகையால் சீக்கிரமே கண்வனைக் கொல்ல மனைவிக்கு முழு சுதந்திரம் அளிக்கும் சட்டம் இயற்றப்படும் என்று எதிர்பார்த்து, கணவனை மண்ணெண்ணை ஊற்றிக் கொன்ற வீராங்கனையைப் பற்றியும், கோழைத்தனமாக தற்கொலை செய்து கொண்ட ஒரு கணவன் பற்றிய செய்தியையும் இங்கு இடுகிறேன்.

அவர்களின் சாவுக்கு மனைவிகளின் நடத்தைதான் காரணம் என்று நீங்கள் எண்ணினால் அது உங்களது ஆணாதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடு எனவும், அவ்வாறு எண்ணியதற்காக நீங்கள் சீக்கிறமே சிறைக்குச் செல்ல நேரிடும் என்றும் எச்சரிக்கப்படுகிறீர்கள்!

இப்போது செய்திகள்:-

1. உலக ஆண்கள் தினத்தன்று போலீஸ் அதிகாரி மனைவியால் கொளுத்தப்பட்டார்
செய்தி: டெக்கான் கிரானிக்கிள் (http://www.deccanchronicle.com/national/asi-set-fire-wife-intl-mens-day-751)

ஒரு சிறிய வாய்த் தகராறினல் கோபப்பட்டு ஒரு போலீஸ் அதிகாரியின் மனைவி கணவன் மீது மண்ணெண்ணையை ஊற்றிக் கொளுத்தி விட்டார். இது நடந்தது 19-11-2009 வியாழனன்று.

மனைவியால் இது போல் தீ வைத்து எறிக்கப்பட்டவர் 52 வயதான பலவந்த் பவார் எனப்படும் உதவி சார்-கண்காணிப்பாளர் (Assistant Sub-Inspector). கொளுத்தப்பட்ட அவர் தன் உடலின் 85% பகுதி எறிந்த நிலையில் ஔரங்காபாதிலுள்ள அரசு மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்.

இந்த தீவைக்கும் நிகழ்வு உலக ஆண்கள் தினத்தன்று நடந்தது ஒரு முரண்நகையே!

முதல்நாள் இரவு அவர்கள் இருவருக்குமிடையே ஏதோ வாக்குவாதம் நடந்ததாகவும், மறுநாள் கணவன் வீட்டுக்குள் நுழைந்ததும் மனைவி அவர்மேல் மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துவிட்டதாகவும் போலீசார் கூறுகின்றனர்.

அந்த கணவன் வேலை பார்ப்பது MIDC Cidco காவல் நிலையம்

========================================

2.

காரிமங்கலம் அருகே புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை
போலீசார் விசாரணை

காரிமங்கலம்,நவ.21 - 2009. தினத்தந்தி

காரிமங்கலம் அருகே புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுமாப்பிள்ளை

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள மொளப்பனஅள்ளியை சேர்ந்தவர் காவேரி. விவசாயி. இவரது மகன் காளியப்பன்(வயது 22). இவருக்கும் காரிமங்கலம் அருகே உள்ள பாறையூரைச் சேர்ந்த சித்ரா(19) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. காளியப்பனுக்கு வயிற்று வலி இருந்து வந்ததாக தெரிகிறது.

நேற்று முன்தினம் காளியப்பனின் பாட்டி இறந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த காளியப்பன் மனைவி சித்ராவிடம் சாப்பாடு கொண்டு வரும்படி கேட்டதாக தெரிகிறது. சித்ரா கணவருக்கு சாப்பாடு கொடுக்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. மேலும் வயிற்று வலியும் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கி கிடந்தார்.

பரிதாப சாவு

வீட்டில் இருந்து வெளியில் வந்த சித்ரா, கணவர் காளியப்பன் மயங்கி கிடப்தை கண்டு அதிர்ச்சி அடைந்து அருகில் சென்று பார்த்துள்ளார். அப்போது அவருக்கு அருகில் பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில் இருப்பதை கண்டு தனது மாமனார் காவேரிக்கு தகவல் கொடுத்தார். அவர் வந்து காளியப்பனை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காரிமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=528612&disdate=11/21/2009&advt=2

பிறந்த ஆண் குழந்தையை உதறி விட்டு ஓடிய தாய்!

இனிமேல் இப்படித்தான் நடக்கும். ஆண் குழந்தையைப் பெற்றால் அந்தத் தாய் படப்போகும் துயரங்களை அவர்கள் உணரத் தொடங்கி விட்டனர். இனி ஆண் சிசுக் கொலை பரவலாகும் நிலை நிச்சயம் ஏற்படப்போகிறது. அந்த ஆண் வளர்ந்து பெரியவனாகி அவன் ஒரு பெண்ணைக் காதலித்து திருமணம் செய்தபின், மருமகள் போடப்போகும் 498A வழக்குகளில் சிக்கி சிறைக்குப் போகும் அவலத்தையும், கள்ளக்காதல் கொலையையும், அதற்கு அந்த ஆணையே காரணமாக்கும் மனோரமாவின் இயக்க நடவடிக்கைகளையும் தவிர்ப்பது எப்படி என்று தாய்மார்கள் யோசிக்கத் தொடங்கி விட்டனர்!

இப்போது செய்தியை வாசியுங்கள்:-

தூத்துக்குடி, அக்.30- 2009. செய்தி - தினத்தந்தி

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தாய் உதறிவிட்டு சென்ற ஆண் குழந்தை சமூகநலத்துறையில் ஒப்படைக்கப்பட்டது.

ஆண் குழந்தை

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 10-ந் தேதி மாலை 61/4 மணிக்கு ஒரு இளம் கர்ப்பிணி பெண் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

அப்போது அவர் முத்தையாபுரத்தை சேர்ந்த செந்தில்குமார் மனைவி சகுந்தலா(24) என்ற முகவரி கொடுத்தார். இதைத்தொடர்ந்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சகுந்தலாவுக்கு மறுநாள் அதிகாலை 21/4 மணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

தாய் ஓட்டம்

இந்தநிலையில் குழந்தையை உதறிவிட்டு சகுந்தலா ஆஸ்பத்திரியில் இருந்து ஓடிவிட்டார். இதனால் தவித்து கொண்டு இருந்த குழந்தையை ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் தனியாக வைத்து பாதுகாத்து வந்தனர்.

இது குறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையை போட்டுவிட்டு ஓடிய தாயை தேடிவந்தனர். ஆனால் இதுவரை கிடைக்கவில்லை.

ஒப்படைப்பு

இதைத்தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த ஆண் குழந்தை நேற்று காலை சமூகநலத்துறையில் ஒப்படைக்கப்பட்டது.

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி டீன் ரவிசங்கர் குழந்தையை சமூகநலத்துறை அலுவலர் முத்துநாயகத்திடம் ஒப்படைத்தார். அப்போது அரசு ஆஸ்பத்திரி உறைவிட மருத்துவர் விசுவநாதன் உடன் இருந்தார்

சேச்சே, பெண்கள் மென்மையானவர்கள், வன்முறையே செய்யமாட்டார்கள்!

ஆமாம் அய்யா, அப்படித்தான் மெத்தப் படித்தவர்கள் சட்டம் இயற்றியிருக்கிறார்கள். குடும்ப வன்முறை தடுப்புச்சட்டம் (The Protection Of Women From Domestic Violence Act, 2005) வரையறுத்துள்ளபடி வன்முறை என்பது ஆண்கள் மட்டும்தான் செய்வான். பெண்கள் வன்முறையே செய்யமாட்டார்கள் என்றுதான் இந்தச் சட்டத்தில் நிறுவப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஆண்கள் மீது இந்தச் சட்டத்தை ஏவி விட்டு வன்கொடுமை செய்து கொண்டு வருகிறார்கள் நடுத்தர வர்க்க இளம் மனைவிகள். அதைத் தூண்டிவிடும் வகையில் பேசி வருகிறார் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் ராமாத்தாள் அவர்கள்.

இந்தச் செய்தியை வாசியுங்கள். மென்னியலாளரின் வக்கிரங்கள் வெளிப்படும்:

குழந்தைகள் கொலை: தாய், பாட்டி கைது
அக்டோபர் 09,2009, செய்தி: தினத்தந்தி.

தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் குறைப்பிரசவத்தில் பிறந்த இரட்டை பெண் குழந்தைகளை கொலை செய்த தாய், பாட்டி கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அடுத்த கவர்னகிரி சிலோன் காலனி ஆட்டோ டிரைவர் துரைப்பாண்டி.

அவருக்கும், அதே பகுதி சுப்பையா மகள் ரேவதிக்கும்(22), எட்டு மாதத்திற்கு முன் திருமணம் நடந்தது. கர்ப்பமடைந்த ரேவதிக்கு, செப்., 24ல் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. ஏழே மாதத்தில் பிறந்த அக்குழந்தைகள் இங்குபேட்டரில் வைத்து பாதுகாக்கப்பட்டன. படுகொலை: நேற்று காலை 7.30 மணியளவில் தாய்ப்பால் தருவதற்காக அக்குழந்தைகள் மருத்துவமனையில் இருந்த தாய் ரேவதியிடம் தரப்பட்டன. அதில் ரேவதி, ஒரு பெண் குழந்தையின் கழுத்தை திருகி கொலை செய்தார்.

மற்றொரு பெண் குழந்தையின் கழுத்தை ரேவதியின் தாயார் தேனிலா(42) கத்தி, பிளேடால் அறுத்துக் கொலை செய்தார். தாய்ப்பால் குடித்தவுடன் அக்குழந்தைகள் திடீரென மயங்கிவிட்டதாக, ரேவதி டாக்டர்களிடம் நாடகமாடினார். அக்குழந்தைகளை பரிசோதனை செய்த டாக்டர் லூர்டஸ் அல்பிலோ, அவை கொல்லப்பட்டதை உறுதி செய்தார். பிறந்த 14வது நாளில் ஈவு இரக்கமின்றி குழந்தைகளை கொலை செய்த தாய் ரேவதி, பாட்டி தேனிலாவை தென்பாகம் போலீசார் கைது செய்தனர்.

"தலைப்பிரவத்தில் பெண் குழந்தைகள் பிறந்ததோடு, அவை குறைப்பிரசவமாக இருந்ததால் அவற்றை எதிர்காலத்தில் நன்றாக வளர்க்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. அதனால், கொலை செய்தோம்” என, இருவரும் தெரிவித்தனர். அரசு மருத்துவமனையில் நடந்த கொடூர கொலை சம்பவம் அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.