வயதுக்கு வந்த இரண்டு பெண் குழந்தைகளின் தாய் இந்த 40 வயது முதிய தாய்க்குலம். இவருக்கு (ஒரு மரியாதை வேண்டாம்!) தன் கணவருடனுடனும் இரண்டு பெண் குழந்தைகளுடன் சேர்ந்து வாழும்போதே, ஒரு 20 வயது இளைஞனின் கலவிச் சுகம் தேவைப்பட்டது. இதை “கள்ளக்காதல்” என்றோ “கள்ள உறவு” என்றோ அழைக்கக் கூடாதாம்! பின்னே எப்படி அழைப்பது? தொடுப்பு என்கலாமா? அந்தக் காலமாக இருந்தால் “அவிசாரி” என்று சொல்லிவிடுவார்கள். இப்போது அதுபோல் சொன்னால் பெண்ணியவாதிகள் கோபப்படுவார்கள். எந்த எழவோ, போங்கள்!
லைலா - மஜ்னு, அம்பிகாபதி - அமராவதி போன்ற அமரக் காதல் காவியங்களின் வரிசையின் முன்னணியில் வைத்துப் போற்றப்படத்தக்க இந்த தெய்வீகக் காதல் கதையை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்!
உசிலம்பட்டி அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்தது பெண் சாவு; வாலிபர் கவலைக்கிடம்.
எழுமலை, நவ.27 - 2009. செய்தி - தினத்தந்தி
உசிலம்பட்டி அருகே 40 வயது பெண், 21 வயது ஆண் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்தனர். இதில் (கள்ளக்)காதலி (!) மரணமடைந்தார். காதலன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவை மில்லில் காதல்
மதுரை மாவட்டம் எழுமலை அருகே உள்ள டி.கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சின்னன் மகன் திருமலை(வயது 21). இவர் கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்தார். அதே மில்லில் அந்த பகுதியை சேர்ந்த செல்வராஜ் மனைவி விஜயாவும் (40) வேலை பார்த்தார்.
செல்வராஜ்-விஜயா தம்பதிக்கு பிளஸ்-2, 9-ம் வகுப்பு படிக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் திருமலைக்கும், விஜயாவிற்கும் பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது.
இவர்களின் தொடர்பு தெரிய வந்ததும், செல்வராஜ் தனது மனைவியை கண்டித்தார். இருப்பினும் அவர் கேட்கவில்லை. திருமலையுடன் உள்ள தொடர்பை துண்டிக்கவில்லை. இதனால் அங்கு பிரச்சினை அதிகரித்தது.
இதையடுத்து, திருமலையும், விஜயாவும் கோவையில் இருந்து கிருஷ்ணாபுரம் வந்தனர். இங்கு வசிக்க திட்டமிட்டனர். ஆனால் இங்கும் குடும்பத்தினரும், உறவினர்களும் அவர்களை ஏற்க மறுத்தனர். அவர்களது காதல் பற்றி சுற்றுப்பகுதியினர் கேலியாக பேசினர். (அதுபோல் பேசலாமா? என்னடா உலகம் இது!)
விஷம் குடித்தனர்
இதனால் கள்ளக்காதல் ஜோடி மனம் உடைந்தது. மீண்டும் கோவைக்கும் செல்ல முடியாது. இங்கும் வாழ முடியாது. இருதலைக்கொள்ளி எறும்பாக தவித்த காதல்ஜோடி இறுதியில் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தது.
அதன்படி நேற்று அருகே உள்ள மொட்டமலைக்கு திருமலையும் விஜயாவும் சென்றனர். அங்கு விஷம் குடித்துவிட்டு மயங்கிக் கிடந்தனர்.
நேற்று காலை அப்பகுதிக்கு சென்றவர்கள் இதைப்பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் இருவரும் மீட்கப்பட்டு உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி விஜயா உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் திருமலை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து எம்.கல்லுப்பட்டி போலீசில் கணவர் செல்வராஜ் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரவிச்சந்தர், சப்-இன்ஸ்பெக்டர் ரமாராணி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=529873&disdate=11/27/2009&advt=2
என்னே ஒரு அமர காதல் காவியம்!
குறிச்சொற்கள் adultery, lust, கயமை, கள்ள உறவு, கள்ளக்காதல், கற்பு, பெண் விடுதலை, மனோரமா, வெறி
தோண்டித் துருவி விசாரிக்காமல் திருமணத்திற்கு ஒப்புதல் அளிக்காதீர்கள்
ஏனெனில் இப்போதெல்லாம் பல பிஞ்சிலேயே பழுத்து விடுகின்றன. பள்ளி செல்லும் நாட்களிலேயே காமக் களியாட்டங்கள் கோலாகலமாக நடக்கின்றன. இவைகளுக்குப் பெயர் காதலாம். இத்தகைய கலாசாரச் சீரழிவை சினிமாவும் ஊடகங்களும் திட்டம் போட்டுப் பரப்பி வருகின்றன. ஸ்கூல் யூனிஃபார்மிலேயே நடக்கும் கண்றாவிகளை ஊருக்கு ஒதுப்புறமான இடங்களிலும், வள்ளுவர் கோட்டம் போன்ற பொது அரங்குகளிலும், பார்க்குகளிலும் தினமும் பார்க்க முடிகிறது.
தங்கள் குழந்தைகளின் எண்ண ஓட்டங்களையும் செக்ஸ் சார்ந்த நடவடிக்கைகளையும் பற்றி பெற்றோர்களுக்கு அறவே தெரியாது. அவர்கள் ஒரு கற்பனை உலகில் இருப்பார்கள். ஆகையால் அவர்கள் கொடுக்கும் உருவகத்தை வைத்துக் கொண்டு முடிவெடுக்காதீர்கள். "ரோஜா" படத்தில் வருவதுபோல் வெகு சிலர்தான் தகுந்த நேரத்தில் வெளியில் சொல்வார்கள். பல பெண்கள் கல்யாணம் ஒரு பக்கம், கள்ளக்காதல் ஒரு பக்கம் என்று இருந்து விடலாம் என்று திட்டமிட்டு கமுக்கமாக இருப்பார்கள். இன்னும் சில கேசுகளில் பெற்றோருக்கு இத்தகைய பொருந்தாக் காதல்கள் தெரியவந்தபின் கூட கல்யாணம் ஆகிவிட்டால் சரியாகப் போய்விடும் என்று முடிவெடுத்து, மொத்தத்தையும் மறைத்து ஒரு ஆண்மகனைப் பலிகடா ஆக்குவார்கள்.
ஆகையால் ஆண்களும் அவர்களுடைய பெற்றோர்களும் திருமணம் பற்றிய முக்கிய முடிவெடுக்குமுன் உஷாராக நன்கு தீவிரமாக விசாரித்தபின் முடிவெடுக்க வேண்டும். ஜோசியக்காரர்களை நம்பாதீர்கள். ஜோசியம், ஜாதகம் என்பதெல்லாம் வெறும் புரட்டு. அதை வைத்து மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்துகிறது ஒரு கும்பல். அவர்களால் சீரழிந்த குடும்பங்கள் ஏராளம்.
இனி இந்தக் காதல் காவியத்தைப் படியுங்கள்:-
நாளை திருமணம் நடைபெற இருந்த இளம்பெண் காதலனுடன் போலீசில் தஞ்சம்.
2 மாதமாக தாலியை மறைத்து வைத்து பெற்றோருடன் வசித்தார்
கோபிசெட்டிபாளையம், அக். 31 - 2009 - தினத்தந்தி
நாளை திருமணம் நடைபெற இருந்த இளம்பெண் காதலனுடன் போலீசில் தஞ்சம் அடைந்தார். இவர் 2 மாதங்களாக தாலியை மறைத்து வைத்து பெற்றோருடன் வசித்து வந்து உள்ளார்.
இளம்பெண்
கோபியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். அவருடைய மகள் லட்சுமி (27) (பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது) 10-ம் வகுப்பு வரை படித்து உள்ள இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார்.
லட்சுமிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த அவருடைய பெற்றோர், பல்வேறு இடங்களில் மாப்பிள்ளை தேடினார்கள்.
அப்போது பவானியைச் சேர்ந்த குமார் என்பவருக்கும், லட்சுமிக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு, கடந்த ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. லட்சுமி-குமாரின் திருமணம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுவதாக இருந்தது. திருமணத்திற்கான ஏற்பாடுகளை லட்சுமியின் பெற்றோர்கள் தீவிரமாக செய்து வந்தனர். உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு அழைப்பிதழும் கொடுக்கப்பட்டு வந்தது.
மாயம்
இந்த நிலையில் வேலைக்கு சென்ற லட்சுமி கடந்த 26-ந் தேதி இரவு வீட்டிற்கு வரவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்க வில்லை.
எனவே லட்சுமியின் பெற்றோர் இது குறித்து கோபி போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் லட்சுமியை தேடி வந்தனர். லட்சுமி வீட்டை விட்டு திடீரென்று மாயமான தகவல் மாப்பிள்ளையின் வீட்டாருக்கு கிடைத்ததால், அவர்கள் திருமணத்தை நிறுத்தி விட்டனர்.
காதலனுடன் தஞ்சம்
இந்த நிலையில் லட்சுமி நேற்று மாலை கோபி போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது அவருடன் வந்தவரை, தான் காதல் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினார். இது தொடர்பாக லட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணை குறித்து போலீசார் கூறும் போது,
லட்சுமி வேலை செய்து வரும் பனியன் கம்பெனியில் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். இவரும், லட்சுமியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்து உள்ளனர்.
இந்த நிலையில் லட்சுமிக்கு, அவருடைய பெற்றோர்கள் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க தொடங்கியதால், லட்சுமியும், முத்துப்பாண்டியும் கடந்த ஆகஸ்டு 25-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். மேலும் அவர்கள் தாங்கள் திருமணம் செய்து கொண்டதை வக்கீலின் மூலம் திருமண ஒப்பந்தம் செய்து உள்ளனர்.
தாலி மறைப்பு
லட்சுமி, தான் காதல் திருமணம் செய்து கொண்டது, பெற்றோருக்கு தெரியக் கூடாது என்பதற்காக வீட்டிற்கு வரும் போது தாலியை கழற்றி மறைத்து வைத்து உள்ளார். இதனால், அவருடைய காதல் திருமணம் பெற்றோருக்கு தெரியவில்லை என்று போலீசார் கூறினர்.
மகள் திருமணம் செய்தது கூட தெரியாமல், அவளுக்கு மாப்பிள்ளை தேடி நிச்சயம் செய்த பெற்றோர், மாயமான மகள் போலீஸ் நிலையத்திற்கு வந்து இருப்பது குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது லட்சுமி பெற்றோரை பார்க்காமல் முகத்தை திருப்பி வைத்து கொண்டார். இதை பார்த்த அவருடைய பெற்றோர்கள், "உன்னை நம்பி கல்யாண ஏற்பாடு செய்தோம். இப்படி தலை குனிய வைத்து விட்டாயே!" என்று கூறி கதறி அழுதனர்.
காதலனுடன் சென்றார்
காதல் திருமணம் செய்து கொண்ட லட்சுமி தன்னுடைய காதல் கணவன் முத்துப்பாண்டியுடன் வாழப் போவதாக உறுதிப்பட தெரிவித்ததால், போலீசார் முத்துப்பாண்டியுடன் லட்சுமியை அனுப்பி வைத்தனர். (சரி, நிச்சயதார்த்தம் செய்த ஆண் மற்றும் அவனுடைய பெற்றோர் அடைந்த அவமானத்திற்கும், மனச் சஞ்சலத்திற்கும் யார் பதில் சொல்வது? இதையே அந்த ஆண் செய்திருந்தால் அவனைக் கைது செய்திருப்பார்கள்!)
குறிச்சொற்கள் anti-male, biased laws, அப்பாவி ஆண்கள், ஆண்பாவம், எச்சரிக்கை, கயமை, கலாசாரச் சீரழிவு, வெறி
40 வயதுக்காரிக்கு 20 வயது கள்ளக்காதலன்!
கள்ளக்காதல் படுத்தும் பாடு!
20 வயது லாரி கிளீனருடன் ஓடிய 40 வயது பெண் கவுன்சிலர்
"கணவர் வேண்டாம்... காதலனே போதும்'' என்று போலீசாரிடம் எழுதிக் கொடுத்தார்
பெங்களூர், செப்.24- 2009. தினத்தந்தி
கணவர், குழந்தைகளை விட்டு விட்டு கிராம பஞ்சாயத்து பெண் கவுன்சிலர் ஒருவர், தன்னை விட 20 வயது குறைந்த லாரி கிளீனரான தனது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.
பஞ்சாயத்து பெண் உறுப்பினர்
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் சனிவார சந்தே கிராம பஞ்சாயத்து உறுப்பினராக இருப்பவர் மஞ்சுளா (வயது 40). இவருக்கும், ரவி என்பவருக்கும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 14 மற்றும் 10 வயதில் 2 பிள்ளைகள் உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு மஞ்சுளா வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை கணவர் ரவியும், உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனாலும், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
வாலிபருடன் ஓட்டம்
இதற்கிடையே, மஞ்சுளாவுக்கும், 20 வயதான லாரி கிளீனர் சீனிவாஸ் என்ற வாலிபருக்கும் ஏற்கனவே கள்ளக்காதல் இருந்தது. மஞ்சுளா தனது இளம் காதலர் சீனிவாசுடன் செல்வதற்காக வீட்டை விட்டு ஓடியது தெரிய வந்தது.
சீனிவாஸ் லாரி உரிமையாளரின் பணத்தை திருடிக்கொண்டு அந்த பணத்தில் மஞ்சுளாவை கூட்டிக்கொண்டு பெங்களூருக்கு வந்தார். இங்கு அவர்கள் லாட்ஜில் அறை எடுத்து தங்கிக் கொண்டு பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தனர்.
ஓட்டலில் தங்கினர்
பின்னர் கள்ளக்காதல் ஜோடி பெங்களூரில் இருந்து குஷால் நகருக்கு சென்றனர். அங்கு ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினர்.
இதற்கிடையே, லாரி உரிமையாளர் தனது பணத்தை திருடிச் சென்ற சீனிவாசை பற்றி விசாரித்தார். அப்போது சீனிவாஸ், மஞ்சுளாவுடன் உல்லாசமாக சுற்றித்திரிவது தெரியவந்தது. உடனடியாக அவர் இதுபற்றி மஞ்சுளாவின் கணவர் ரவிக்கு தகவல் தெரிவித்தார்.
பொதுமக்களிடம் பிடிபட்டனர்
இதனால் அதிர்ச்சி அடைந்த ரவி தனது உறவினர் மற்றும் ஊர் பெரியவர்களுடன் குஷால் நகரில் உள்ள ஓட்டலுக்கு சென்று, அங்கு சீனிவாசுடன் தங்கி இருந்த மஞ்சுளாவை மடக்கி பிடித்தார்.
மஞ்சுளாவை கணவர் ரவியுடன் சேர்ந்து வாழும்படி பெரியவர்கள் அறிவுரை கூறினர். எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் மஞ்சுளா தனது நிலையில் இருந்து சற்றும் இறங்கி வரவில்லை. வாழ்ந்தால் சீனிவாசுடனே வாழ்வேன் என்று உறுதியாக கூறி விட்டார். குழந்தைகளை என்னுடன் அனுப்ப வேண்டாம், நீங்களே வளர்த்துக் கொள்ளுங்கள் என்றும் கூறி விட்டார்.
கணவருடன் வாழ பிடிக்கவில்லை
இதையடுத்து, மஞ்சுளாவையும், சீனிவாசையும் அவர்கள் அழைத்துக் கொண்டு போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அங்கு போலீசார் மஞ்சுளாவிடம் பேசினர். ஆனாலும், அதிலும் மஞ்சுளா மசியவில்லை. தனது இளம் காதலருடன் சேர்ந்து வாழ்வதில் உறுதியாக இருந்தார்.
`எனக்கு கணவர் ரவியுடன் சேர்ந்து வாழ்வதற்கு விருப்பம் இல்லை. நான் எனது காதலர் சீனிவாசுடன் சேர்ந்து வாழவே விரும்புகிறேன்' என்று பொதுமக்கள் முன்னிலையில் போலீசாரிடம் எழுதி கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து, மஞ்சுளா, அவரது இளம் காதலர் சீனிவாசுடன் அங்கிருந்து சென்றார். அவரது கணவர் ரவி தனது 2 குழந்தைகளுடன் சோகத்துடன் வீட்டுக்கு திரும்பினார்
===============
இதையே அந்த ஆண் செய்திருந்தால் அவன்மீது ஆயிரக் கணக்கான கேசுகளைப் போட்டு உள்ளே தள்ளியிருப்பார்கள். மேலும் அந்தப் பெண்குலத் திலகம் அவன்மீது ஜீவனாம்சக் கேசு போடுவாள். உடனே நம் நீதிபதிகள், "அவள் பாவம், கள்ளக் காதலனுடன் சேர்ந்து குடும்பம் நடத்தப் பணம் வேண்டாமா, நீ உன் கிட்னியை விற்றாவது ஜீவனாம்சம் கொடுக்கத்தான் வேண்டும்" என்று தீர்ப்பு அளிப்பார்.
தேவையா இந்தத் திருமணங்கள்!
மனோரமா ஆச்சி, ஆண்களைப் பாதுகாக்க எப்போது இயக்கம் தொடங்கப் போறீங்க?
ஆண்மைக்குறைவுள்ள ஆண்களிடம் இருந்தும், `எய்ட்ஸ்' நோய் உள்ள ஆண்களிடம் இருந்தும் பெண்களை காப்பாற்றுவதற்காக, புதிய இயக்கம் தொடங்கப்போவதாக நடிகை மனோரமா கூறியுள்ளார்.
இது செய்தி.
சரி. பெண்மைக் குறையுள்ள, பெண்மையே இல்லாத மற்றும் "எயிட்ஸ்" நோய் உள்ள பெண்களிடமிருந்து அப்பாவி ஆண்களைக் காப்பாற்றுவதற்கு அந்த மனோரமா அம்மையார் ஏன் ஒரு இயக்கம் தொடங்கக் கூடாது? ஏன் இந்த ஓரவஞ்சனை, அதுவும் ஒரு ஆணைப் பெற்ற தாயாக இருந்தும்?
ஆண்கள் மட்டும்தான் நோயுள்ளவர்களாக இருப்பார்களா? பெண்களுக்கு நோய்களே இருக்காதா? அவற்றை மறைத்து திருமணங்களே நடப்பதில்லையா? திருமணத்திற்கப்புறம் நோயாளி மனைவிகளை வைத்துக் கொண்டு அல்லாடும் கணவன்மார்கள் எத்தனை பேர்!
இல்லற வாழ்வு மீதும், ஆணுடனான கலவை மீதும் இயல்பாகவே வெறுப்புணர்வு கொண்ட பெண்கள் (frigidity), ஓரினச் சேர்க்கையில் நாட்டம் கொண்ட பெண்கள் (lesbians), மாதவிடாய் நேரங்களில் பயங்கர வன்முறையுணர்வுடன் தாக்கத்தொடங்கும் நோய் (ENDOMETRIOSIS) கொண்ட பெண்கள், வெள்ளை வெட்டை போன்ற பெண்ணுறுப்பு சம்பந்தமான சீக்குகளுடன் உள்ள பெண்கள், டிப்ரஷன், ஹிஸ்டீரியா போன்ற மனோவியாதி கொண்ட பெண்கள் - இவர்கள் போன்றவர்களுடைய அனைத்து நோய்களையும் மறைத்து பட்டுப் புடவை, சல்வார் சூட் போட்டு அலங்கரித்து ஆண்களிடம் கட்டிக் கொடுத்து விடுகிறார்களே, அந்த ஆண்களை யார் காப்பாற்றுவது?
தமிழ்நாட்டில், கள்ளக்காதல் கொலைகள் பெருகுவதற்கு, ஆண்மைக்குறைவு என்ற குறைபாடுதான் முக்கிய காரணமாம், இந்த மனோரமா அம்மையார் கண்டுபிடித்திருக்கிறார். இதற்கு அவருக்கு நோபெல் பரிசு கொடுக்கவேண்டும்!
பள்ளி நாட்களிலேயே கள்ள உறவு கொண்டு பின் அதை அப்படியே மறைத்துவிட்டு, குனிந்த தலை நிமிராத கன்னிப் பெண்போல் நடித்து, அதை நம்பிய ஒரு அப்பாவி ஆணுடன் திருமணம் செய்து கொண்ட பின்னும் அந்தப் பழைய கள்ள உறவு விடாமல் தொடரும் கேசுகள் எத்தனை எத்தனை? என்னதான் கணவன் படுக்கையறையில் திருப்தி செய்தாலும், ஆசை அடங்காமல் அலைபாயும் மனம் கொண்ட பெண்கள் எத்தனை பேர்! அத்தகைய செக்ஸ் வெறியால் அவர்கள் தங்கள் குழந்தைகளையே கொல்லத் துணியும் கேசுகள் எத்தனை!
தன் மனைவியின் பாலியல் தொடர்பான நடத்தைகளையும் குறைபாடுகளையும் ஆண்மகன் வெளியில் சொல்வதில்லை. ஆனால் ஒரு ஆணை அவன் ஆண்மைக் குறைவுள்ளவன் என்று எளிதாகக் கூறிவிடுகின்றனர்.
சமீபத்தில் கர்நாடகாவில் அரசு சார்ந்த அமைப்பு ஒன்று சுயம்வரம் நிகழ்த்தியது. அப்போது பெண்களின் கன்னித்தன்மையை சோதனை செய்தார்கள் என்றும், அது பெண்களுக்கு எதிரான செயல் என்றும் "ஐயகோ, பெண்ணினத்தையே கேவலப்படுத்திவிட்டார்களே" என்று கூக்குரலிட்டனர் பல பெண்ணிய வியாதிகளும் சில ஜொள்ளு பெட்டைக் கிழவர்களும். ஆனால் அந்த சோதனைகளில் சில பெண்மணிகள் கர்ப்பமாக இருந்ததைக் கண்டு பிடித்தனர். அதனால் தப்பித்தனர் ஆண்கள்!
ஆனால் இப்போது மனோரமா ஒட்டுமொத்த ஆணினத்தையே கேவலப் படுத்திப் பேசியிருக்கிறார். அதை எதிர்த்து ஒரு குரலும் இல்லை. வெட்கக்கெடு!
பெண்கள் திருமணத்திற்கு முன் பெண்கள் பாலுறவு கொண்டிருக்காமல் கன்னித்தன்மை உள்ளவர்களா, திருமணத்திற்கு முந்தைய உல்லாசங்கள் மூலம் அபார்ஷன் செய்து கொள்ளாதவர்களா, அல்லது குறைந்த பட்சம் கர்ப்பிணியாகவாவது இல்லாமல் இருக்கிறார்களா எனபதைக் கண்டறிவது முக்கியம் என்று "வீர மறத்தி" மனோரமா அவர்கள் பாடுபடவேண்டும். செய்வார்களா!
கோவையில் குடும்பப் பாதுகாப்பு இயக்கப் பொதுக்கூட்டம்
"இந்திய குடும்ப பாதுகாப்பு இயக்கம்" (SAVE INDIAN FAMILY FOUNDATION) வரும் சனிக்கிழமை வெள்ளிக்கிழமை அன்று (செப்டம்பர் (5) 4-ம் தேதி, 2009) கோவையில் பத்திரிக்கையாளர் சந்திப்பும், ஒரு பொதுக்கூட்டமும் நிகழ்த்த இருக்கிறது.
உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவராலேயே "சட்டபூர்வ பயங்கரவாதம்" (Legal terrorism) என்று வர்ணிக்கப்பட்ட IPC 498A சட்டப்பிரிவு (வரதட்சணை கொடுமை சட்டம்), மற்றும் ஆண்களை மட்டும் குற்றவாளியாகக் கருதும் குடும்ப வன்முறைச் சட்டம் (D.V.Act) போன்ற பொய் வழக்குச் சட்டங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவதற்காகவும் மற்றும் திருமணத்தை எதிர் நோக்கியிருப்போருக்கும் இதுபோன்ற சட்டங்களைப் பற்றிய புரிதலை உணர்த்துவதற்காகவும் இந்த பொதுக்கூட்டம் நடைபெறுகின்றது.
நேரம்: காலை 11 மணி.
இடம்: பிரஸ் கிளப்,
5, மாநகராட்சி வணிக வளாகம்,
தண்டு மாரியம்மன் கோயில் எதிரில், அவிநாசி சாலை,
கோயம்புத்தூர் 641018
தொடர்புக்கு -- 9790019658
அனைவரும் திரளாகக் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்.
இன்றைக்கு இத்தகைய வழக்குகளில் பாதிக்கப்பட்டவர் அனைவரும் இதைப் பற்றிய பொது அறிவு இல்லாமல் இருந்ததால்தான் மிகுந்த துன்பத்திற்கு உள்ளானார்கள். அவர்கள் திருமணத்தின் போது இப்படி ஆகுமென்றா எதிர் பார்த்தார்கள். ஆனால் நீங்கள் எதிர்பார்க்கவில்லை என்பதற்காக அத்தகைய பொய்க் கேசுகள் போடாமல் இருக்கிறார்களா என்ன? நம் நாட்டில் ஆண்டுக்கு 76,000 பொய்க் கேசுகள் (498A) போடப்பட்டு ஒரு பாவமும் அறியாத வயதான தாய்மார்களும் இளம் பெண்களும் சின்னஞ்சிறு குழந்தைகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். ஆனால் 2% கேசுகள்தான் நிரூபிக்கப்படுகின்றன.
சட்டத்தில் ஓட்டை இருக்கலாம்; ஆனால் ஓட்டையே சட்டமானால்?
இந்த அறிவிப்பை பாதிக்கப்பட்டோருக்கும் தங்கள் நண்பர்களுக்கும் பரவலாக அனுப்பி வையுங்கள். நம்மாலான பொதுத் தொண்டு!
குறிச்சொற்கள் 498a, child custody, divorce, dv act, கயமை, சமூகம், பொய் வழக்கு, வரதட்சணை, வன்முறை, விவாகரத்து
மிஸ்டு காலுக்கு மயங்காதே!
ஆண்டிப்பட்டி,ஆக.28- 2008. தினத்தந்தி
செல்போனில் `மிஸ்டு கால்' கொடுத்து அழைத்ததால் ஏற்பட்ட காதலில் சிக்கிய வாலிபரை மகளிர் போலீசார் கைது செய்தனர்.
மிஸ்டுகால் காதல்
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பேரூராட்சி சக்கம்பட்டியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவருடைய மகன் அறிவழகன்(வயது22). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அடிக்கடி செல் போனில் `மிஸ்டு கால்' வந்தது.
இதைத்தொடர்ந்து அந்த செல்போன் எண்ணில் அறிவழகன் பேசத்தொடங்கினார். எதிர்முனையில் ஒரு பெண் பேசியதை தொடர்ந்து அடிக்கடி இருவரும் செல்போனில் பேசினார்கள்.
தொடர்ந்து `மிஸ்டு கால்' மூலம் பேசியதில் அந்த பெண்ணுக்கும் அறிவழகனுக்கும் காதல் மலர்ந்தது. அப்போது தான் அந்த பெண் வேலூர் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள அப்துல்லா புரத்தை சேர்ந்த தனபால் என்பவரின் மகள் உஷா(16) என்பது தெரிய வந்தது. பின்னர் இருவரும் சென்னையில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்துக் கொண்டதாக தெரிகிறது.
இந்நிலையில் காதலனை சந்திக்க சென்னைக்கு சென்ற உஷாவை வாலிபர் அறிவழகன் தனது சொந்த ஊரான ஆண்டிப்பட்டிக்கு கடத்தி வந்து விட்டதாக கூறப்படுகிறது. மகளை காணாததால் தேடிய தனபால் மகள் ஆண்டிப் பட்டியில் இருப் பதை அறிந்து இங்கு வந்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பூங்கோதை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது இருவரும் டி.சுப்புலாபுரத்தில் இருப்பது தெரியவந்தது. அதன்பேரில் அறிவழகனையும், உஷாவையும் போலீசார் அழைத்து வந்தனர். பின்னர் 2 பேரையும் போலீசார் ஆண்டிப்பட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள்.
வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு சுந்தரய்யா குற்றம் சாட்டப்பட்ட அறிவழகனை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இளம் பெண் உஷாவை மருத்துவ பரிசோதனை செய்து அதன் அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும் அவரை அரசு பெண்கள் காப்பகத்தில் வைக்கவும் மாஜிஸ்திரேட்டு அறிவுறுத்தி இருக்கிறார்.