மிஸ்டு காலுக்கு மயங்காதே!

ஆண்டிப்பட்டி,ஆக.28- 2008. தினத்தந்தி

செல்போனில் `மிஸ்டு கால்' கொடுத்து அழைத்ததால் ஏற்பட்ட காதலில் சிக்கிய வாலிபரை மகளிர் போலீசார் கைது செய்தனர்.

மிஸ்டுகால் காதல்

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பேரூராட்சி சக்கம்பட்டியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவருடைய மகன் அறிவழகன்(வயது22). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அடிக்கடி செல் போனில் `மிஸ்டு கால்' வந்தது.

இதைத்தொடர்ந்து அந்த செல்போன் எண்ணில் அறிவழகன் பேசத்தொடங்கினார். எதிர்முனையில் ஒரு பெண் பேசியதை தொடர்ந்து அடிக்கடி இருவரும் செல்போனில் பேசினார்கள்.

தொடர்ந்து `மிஸ்டு கால்' மூலம் பேசியதில் அந்த பெண்ணுக்கும் அறிவழகனுக்கும் காதல் மலர்ந்தது. அப்போது தான் அந்த பெண் வேலூர் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள அப்துல்லா புரத்தை சேர்ந்த தனபால் என்பவரின் மகள் உஷா(16) என்பது தெரிய வந்தது. பின்னர் இருவரும் சென்னையில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்துக் கொண்டதாக தெரிகிறது.

இந்நிலையில் காதலனை சந்திக்க சென்னைக்கு சென்ற உஷாவை வாலிபர் அறிவழகன் தனது சொந்த ஊரான ஆண்டிப்பட்டிக்கு கடத்தி வந்து விட்டதாக கூறப்படுகிறது. மகளை காணாததால் தேடிய தனபால் மகள் ஆண்டிப் பட்டியில் இருப் பதை அறிந்து இங்கு வந்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பூங்கோதை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது இருவரும் டி.சுப்புலாபுரத்தில் இருப்பது தெரியவந்தது. அதன்பேரில் அறிவழகனையும், உஷாவையும் போலீசார் அழைத்து வந்தனர். பின்னர் 2 பேரையும் போலீசார் ஆண்டிப்பட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள்.

வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு சுந்தரய்யா குற்றம் சாட்டப்பட்ட அறிவழகனை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இளம் பெண் உஷாவை மருத்துவ பரிசோதனை செய்து அதன் அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும் அவரை அரசு பெண்கள் காப்பகத்தில் வைக்கவும் மாஜிஸ்திரேட்டு அறிவுறுத்தி இருக்கிறார்.

3 மறுமொழிகள்:

')) said...

தெரியாத ஆணை போனில் அழைத்து "காதலை" "வளர்த்துக்கொண்டால்" அதற்குப் பெயர் விபச்சாரம்.

')) said...

மைனர் பெண்ணை திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என்று கூட தெரியாத முண்டமா அந்த அறிவு ?

')) said...

செந்தழல் ரவி,

ஆண்கள் அனைவரும் இனிமேல் எந்தப் பெண்ணாவது மிஸ்டு கால் கொடுத்து டாவு அடித்தாலோ, அல்லது தலையை ஒரு வெட்டு வெட்டி, கண்ணை ஒரு சுழற்று சுழற்றி காமத்துடன் அழைத்தாலோ, முதலில் அவளுடைய Birth Certificate-ஐ வாங்கி மேஜர் தானா என்பதை உறுதி செய்து கொண்டு மேற்கொண்டு தொழிலில் இறங்க வேண்டும். அப்போதும் அவன் கைதிலிருந்து தப்ப முடியாது என்ப்து வேறு விஷயம். ஏனெனில் அந்தப் புதுமைப் பெண், "அவன் என்னை கற்பழித்தான்" ("கற்பு" - ம், சிரிப்புத்தான்!) என்று புகார் கொடுத்தால் அவளது சொல் ஒன்றே போதும் என்று ஏற்றுக் கொண்டு அவன்தான் குற்றவாளி என்று தீர்ப்பளித்துவிடுவார்கள். ஏனெனில் நீதிபதிகளின் கண்ணோட்டத்தில் ஒரு இந்தியப் பெண் ஒருவனைச் சுட்டி அவன் தான் என்னைக் கற்பழித்தான் என்று சொன்னால் அது பொய்யாகவே இருக்காது! இது எப்படி இருக்கு!!

ஆனால் யதார்த்த நிலை என்ன? தயவு செய்து நீங்கள் பார்க்குகளுக்கோ, மண்டபங்களுக்கோ, பாழடைந்த கோட்டைகளுக்கோ, வள்ளுவர் கோட்டத்திற்கோ, வேலூருக்கோ சென்று பாருங்கள். ஸ்கூலில் படிக்கும் பெண்கள் யூனிஃபார்முடன் பையன்களை சுண்டி இழுத்து முடிச்சு முடிச்சாக அமர்ந்து கொண்டு வாய்ப் புணர்வில் ஈடுபடும் கண்றாவிகளைக் காணலாம் (இதைப் பற்றி ஜூனியர் விகடனில் கூட எழுதியிருந்தார்கள்). மாட்டிக்கிட்டால் பெண்ணின் பெயரைக்கூட கமுக்கமாக மறைத்து விடுவார்கள். நீங்கள் சொல்லியதுபோல் உடனே ஆண் கைது செய்யப்பட்டு சிறைக்குப் போவான். அந்தப் பெண் திலகமோ சில ஆண்டுகள் கழித்து இன்னொருவனைத் திருமணம் செய்து கொண்டு அவன் வாழ்வைப் பாழடிப்பாள்!

கொடுமை ஐயா இது!