கள்ளக்காதலில் உள்ள ரிஸ்குகள்

இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு 57,500 மணமான ஆண்கள் குடும்பச் சச்சரவின் காரணமாக, அதாவது மனைவியின் நடத்தைகளின் காரணமாக, தற்கொலை செய்துகொண்டு சாகிறார்கள். ஆனால் ஆண்டொன்றுக்கு மணமான பெண்கள் தற்கொலை அளவு 30,000 தான். இந்தத் தரவு இந்திய அரசே வெளியிட்டது (National Crime Records Bureau).

ஆனால் தாங்கள் கொள்ளை அடிப்பதற்காக இந்த உண்மையை மறைத்து ஏதோ இன்னமும் இந்தியாவில் மணமான பெண்கள் வரதட்சணைக்காக அன்றாடம் கொலை செய்யப்படுவது போன்ற பிரமையை உண்டாக்கி அந்தப் புனைசுருட்டை நாளிதழகள் மற்றும் ஊடகங்கள் மூலம் பரப்பி வருகிறார்கள் ஒரு கூட்டத்தினர். அவர்கள் ஏன் அப்படிச் செய்கின்றனர் என்பதைத் தெரிந்துகொள்ள நீங்கள் ராக்கெட் தொழில்நுட்பம் பயில வேண்டியதில்லை. ஆங்கிலத்தில் "vested interests" என்று அழைக்கப்படும் அதிசுயநல ஆர்வம்தான்!

தேசிய பெண்கள் வாரியம் (National Commission for Women) என்னும் தனி அமைப்பு உள்ளது. இதன் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சிலவுக்கு பல கோடி ரூபாய்களை அரசு ஒதுக்குகிறது. தவிர ஐக்கிய நாடுகள் சபை (UNIFEM) மூலம் பல கோடி டாலர்கள் கொட்டுகின்றன. மேலும் பல வக்கீல்களுக்கு இத்தகைய கேசுகள் மூலம் ஏராளமான வருமானம் கிட்டுகிறது. தவிர All India Democratic Women Association போன்ற அரசியல் கட்சி சார்ந்த அமைப்புகள் பல பெண்கள் பெயரைச் சொல்லி பகல் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கின்றன. வரதட்சணைக் கொடுமைப் பிரச்னை இன்னும் இருக்கிறது என்று தொடர்ந்து கூக்குரலிட்டுக் கொண்டிருந்தால் தானே இவர்களின் உண்டியல் நிரம்பிக் கொண்டிருக்கும்! அதனால் இந்த மேட்டுக்குடி ரவிக்-டை-லிப்ஸ்டிக் பெண்மணிகள் "ஐயகோ, நம் நாட்டில் இன்னமும் பல கோடி பெண்கள் ஆண்களாலும் அவர்களுடயை பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகளாலும் வரதட்சணைக் கொடுமையால் எரிக்கப் படுகிறார்களே, அவர்களைத் தண்டிக்க இன்னமும் கடுமையான சட்டங்கள் தேவையாயிற்றே" என்று கோஷ்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அத்தகைய சட்டங்களில் ஒன்றுதான் இபிகோ 304-B என்னும் "வரதட்சணைச் சாவு" சட்டம். அதாவது சாதாரண மனிதர்கள் செத்தால் சாதாரணச் சட்டம்; மணமாகி 7 வருடங்களுக்குள் மனைவி செத்தால் அது சிறப்புச் சட்டம். இந்தச் சட்டத்தின் அடிப்படையில் மனைவியின் பெற்றோரோ உறவினர்களோ, அந்த மனைவியின் சாவுக்கு வரதட்சணைதான் காரணம் என்று சொன்னால் பொதும், as an afterthought. யாதொரு சாட்சியமோ, நிரூபணமோ தேவையில்லை. மற்ற எல்லாவித வழக்குகளுக்கும் பொருந்தும் Evidence Act இந்தச் சட்டத்திற்குப் பொருந்தாது. எவ்வித தடயமோ, சாட்சியமோ, ஆதாரமோ தேவையில்லாமல் விசாரணையுமில்லால் அந்த கணவனையும் அவனது பெற்றோரையும் 7 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை போட்டுத் தள்ளி விடுவார்கள் அதற்கு இந்தச் சட்டம் வழி செய்கிறது. அதற்குத் தேவை அந்த மனைவி இறந்து போன பிறகு அந்தப் பெண்ணின் பெற்றோரோ, அல்லது ஒன்றுவிட்ட மாமனின் மைத்துனன் மகளோ, "அவள் வரத்ட்சணைக் கொடுமையால்தான் இறந்தாள் என்று எனக்குத் தோன்றுகிறது" என்று புகார் கொடுத்தால் போதும்!

சாதாரண சொத்து விவரம் வெளியிடுவதற்கே அது தவறாகப் பயன்படுத்தப்படுமோ என்று பயப்படுவதாகச் சொல்லி அந்த விவரங்களை வெளியிடத் தயங்கும் நீதிபதிகள், இந்த 304-B, 498A சட்டங்கள் எல்லாவித விதிவிலக்குகளும் செய்யப்பட்டு தவறாகப் பயன்படுத்துவதற்கென்றே கட்டமைக்கப்பட்டுள்ளதை ஏன் மாற்றச் சொல்லக்கூடாது!

அதிருக்கட்டும், கள்ளக் காதல்கள் பெருகிவிட்ட தற்காலத்தில் கள்ளக் காதலனுடன் "உல்லாசமாக" இருக்கும் வேளையில் அல்லது அவனுடன் ஏற்படும் பிணக்கினால் இறந்தால் எப்படி வரதட்சனை வழக்கு போடுவது? பிரச்னைதான். ஆனால் சொல்ல முடியாது, இந்தச் சட்டங்கள் கள்ளக் காதலனுக்கும் பொருந்தும்படியான மாற்றங்கள் வந்தாலும் வரும்.

இந்தச் செய்தியை வாசியுங்கள்:

ஸ்டவ்' கசிந்து தீப்பிடித்ததால் கள்ளக்காதலன் வீட்டில் சமையல் செய்த பெண் கருகி சாவு

அம்பத்தூர், ஆக.26- 2009. செய்தி - தினத்தந்தி

கள்ளக் காதலன் வீட்டில் சமையல் செய்தபோது `ஸ்டவ்' கசிந்து தீப்பிடித்ததால் பெண் கருகி செத்தாள். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொளத்தூர் பொன்னியம்மன்மேடு லட்சுமியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேணு. இவர் துணிப்பின்னல் (எம்பிராய்டரி) வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பாரதி (வயது 35). சித்தாளாக வேலை பார்த்து வந்தாள். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.

பாரதி வேலை பார்த்த இடத்தில் மேஸ்திரியாக இருந்தவர் ரவி (42). இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி விட்டது. இவர் அம்பத்தூர் சூரப்பேடு கிராமத்தில் வசித்து வருகிறார்.

கடந்த 2 வருடங்களாக ரவிக்கும், பாரதிக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. கொளத்தூர் அம்பேத்கார் நகர் 3-வது தெருவில் தனியாக வீடெடுத்து பாரதியுடன், ரவி குடும்பம் நடத்தி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு செல்வதாக கூறி விட்டு இருவரும் அங்கு சென்றனர். அங்கு தங்கி இருந்து மது அருந்தினார்கள். பின்னர் சமையல் செய்தபோது `ஸ்டவ்' கசிந்து வீட்டில் தீப்பிடித்தது.

இதில் பாரதி தீக்காயம் அடைந்தாள். அவளை காப்பாற்ற சென்ற ரவிக்கு லேசான காயம் ஏற்பட்டது. கருகிய நிலையில் பாரதி, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள். அங்கு சிகிச்சை பலனின்றி பாரதி பரிதாபமாகச் செத்தாள்.

இது குறித்து கொளத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாபாய் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

1 மறுமொழி:

Anonymous said...

இந்த தேவ---யக்கள் என்று திருந்துவார்களோ... படுப்பதற்கு பலபேர் வேண்டும் மற்றும் பணம் பிடுங்குவதற்கு இருக்கவே இருக்கு maintanace case... அப்புறம் வரதட்சணை கொடுமை சட்டம்..., நல்ல பொழப்பு இது...