Showing posts with label paramour. Show all posts
Showing posts with label paramour. Show all posts

சீரழிவை நோக்கி ஒரு பயணம்

நம் நாட்டுப் பெண்களை தாங்கள் பெண்களாக இருப்பதையே வெறுக்கும்படி செய்யும் பெண்ணியவாதிகளின் ஓயாத பிரசாரத்தின் பலனாய் மணமான பெண்கள், அதுவும் காதல் மணம் புரிந்து கொண்ட பலர், இன்னொருவரோடு ஒத்துப் போக மனமில்லாமல் விவாகரத்தை வேண்டி நிற்கின்றனர். த்ங்கள் எதிர்காலத்தை வடிவமைத்து குடும்ப வாழ்வை மெலோங்கச் செய்ய வேண்டிய வயதில் கோர்ட்டு வராண்டாவில் வக்கீல் பின்னால் லோலோவென்று அலைந்து கொண்டிருக்கிறார்கள். தவிர, இவர்களில் பலர் கணவனிடமிருந்து காசுபிடுங்கும் ஆசையில் பொய்வழக்கு போட்டுத் திரிகிறார்கள்.

இவர்களாவது பரவாயில்லை, இன்னும் பலர் ஒரு ஆண்மகனிடம் அனுபவிக்கும் செக்ஸில் மட்டும் திருப்தி அடையாமல் பலவகை சுகத்தைத்தேடி கள்ளக்காதலில் ஈடுபடுகிறார்கள். இதுபோன்ற நிக்ழ்வுகள் அதிகமாகும்போதுதான் பெண்ணியவாதிகளின் அடிப்படை நோக்கமாகிய நம் குடும்ப வாழ்வு முறைச் சிதைவு முழுதாக நிறைவேறும்.
ஆனால் அந்தப் பெண்கள் கதி?

இந்தச் செய்தியைக் கூர்ந்து நோக்குங்கள்:-

கடலூரில் பெண் கற்பழித்துக் கொலை : கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
நவம்பர் 23,2009. செய்தி - தினமலர்

கடலூர் : கடலூரில், இளம் பெண்ணை கற்பழித்துக் கொலை செய்த வழக்கில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபரை, போலீசார் நேற்று கைது செய்தனர். கடலூர் பச்சையாங்குப்பம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகள் இந்துமதி(19). கடந்த 14ம் தேதி இரவு 7.30 மணியளவில் தோட்டத்திற்கு சென்றவர், மர்ம நபரால் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்துமதியின் மொபைல் போனில், சம்பவத்திற்கு சற்று நேரத்திற்கு முன் பேசிய அவரது காதலன் ராஜ்குமார் மற்றும் அந்தோணி இருதயராஜ் (27) ஆகியோர் மீது போலீசார் சந்தேகம் கொண்டனர். இந்நிலையில், ராஜ்குமார் 15ம் தேதி இரவு அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார், அந்தோணி இருதயராஜை தேடி வந்தனர். அவரை, நேற்று பிடித்து விசாரணை செய்தனர்.

அந்தோணி இருதயராஜ் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: நான்கு ஆண்டிற்கு முன் எனது பெற்றோர் ஆரோக்கியமேரி (35) என்ற பெண்ணை எனக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆரோக்கிய மேரிக்கு வயது அதிகமாக இருந்ததால், எங்களுக்குள் ஒத்துவரவில்லை. அவர் பிரிந்து சென்றுவிட்டார்.

பின், நான் புதுக்கோட்டைக்கு கரும்பு வெட்டச் சென்றபோது, டெய்ஸி ராணி என்பவரை திருமணம் செய்து கொண்டேன். அவர் வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்தார். அதை நான் கண்டித்தும் விடவில்லை. அதனால், நான் விலகி விழுப்புரம் மாவட்டம் வடபொன்பரப்பியில் உள்ள தனியார் பள்ளியில் டிரைவராக வேலைக்கு சேர்ந்தேன். அங்கு பணிபுரிந்த மாலதி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது மாலதியின் குடும்பத்தாருக்கு தெரியவரவே, தொடர்பை நிறுத்திக் கொள்வோம், உறவிற்கு வற்புறுத்த வேண்டாம் என மாலதி கூறினார்.

ஆத்திரமடைந்த நான், 2008 ஆக., 13ம் தேதி மாலதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன். பின்னர் புதுக்கோட்டை சென்று டெய்ஸி ராணியின் கழுத்தில் கத்தியால் வெட்டினேன். அதில், டெய்ஸி ராணி பிழைத்துக் கொண்டார்.

பின்,கடலூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தபோது இந்துமதியுடன் பழக்கம் ஏற்பட்டது. அவரை நான் காதலித்தேன். அவர் என்னை காதலிக்கவில்லை. தொடர்ந்து அவரின் மனதை மாற்ற போனில் பேசிவந்தேன். கடந்த 14ம் தேதி, புதுச்சேரியிலிருந்து கடலூர் வந்த நான், இந்துமதியிடம் பேசி, தோட்டத் திற்கு வரவழைத்து, கற்பழித்து கொலை செய்துவிட்டு தப்பியோடினேன். இவ்வாறு வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

கடலூர் முதுநகர் போலீசார், அந்தோணி இருதயராஜை கைது செய்து கடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ருசி கண்ட பூனை திரிக்கும் கயிறு!

பாதிரியார் கற்பழித்ததாக போலீசில் பெண் புகார்
நவம்பர் 18,2009. தினமலர்

திருச்சி : பாதிரியார் தன்னை கற்பழித்ததோடு, கொலை மிரட்டலும் விடுப்பதாக, பாதிக்கப்பட்ட பெண் (!), திருச்சி மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீசில், பூங்கோதை நேற்று அளித்த புகார் மனு விவரம்:

சிதம்பரத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகளான நான், சில ஆண்டுக்கு முன், சுந்தரவேல் என்பவரை காதலித்து திருமணம் செய்தேன். வரதட்சணை விவகாரம் தொடர்பாக கணவரை பிரிந்து வாழ்ந்தேன்.

திருச்சி செவன்த் டே கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்த பாதிரியார் சுதாகர், நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் உள்ள சிறுவர் விடுதியில், காப்பாளராக எனக்கு வேலை வாங்கிக் கொடுத்தார். இதை பயன்படுத்தி, அடிக்கடி அங்கு வந்த பாதிரியார் சுதாகர், கட்டாயப்படுத்தி என்னை கற்பழித்தார் ("அடிக்கடி" கற்பழிக்கும்போது இவர் என்ன செய்து கொண்டிருந்தார்? அதிருக்கட்டும் இவர் பாஷையில் "கற்பு" என்றால் என்ன அர்த்தம்? பதில்: இப்படித்தான் புகார் எழுதணும். அப்பத்தான் ரேப் செக்ஷன் சேர்க்கலாம்!).

வேறு ஒருவருக்கு என்னை திருமணம் (என்ன ஆச்சு முதல் புருஷன்? விவாகரத்து ஆச்சா இல்லையா?) செய்து வைத்த பாதிரியார், அதன்பிறகும் கட்டாய உறவை தொடர்ந்தார் (அடடா! இந்தப்பெண் பாவைக்குத் தெரியாமலெயே தொடர்ந்தாரா! அதெப்படி "கட்டாய உறவை" தொடர்ந்து செய்ய முடியும்? அதாவது, இவருக்கு அந்தப் பாதிரியாரின் உதவி தேவையாயிருந்த வரையில் அது நல்ல உறவு. வேலை முடிந்தவுடன் கட்டாய உறவு. உடனே போலீஸில் புகார். என்னய்யா "கற்பு" இது! ).

இதன் விளைவால் கர்ப்பம் தரித்த நிலையில், பெண் குழந்தை ஒன்று இறந்து பிறந்தது. இதன் பிறகும், பாதிரியாரின் செக்ஸ் டார்ச்சர் தாங்க முடியவில்லை (எவ்வளவு நாளா நடக்குதாம்?). இதனால், கணவருடன் அங்கிருந்து வெளியேறியதோடு, பாதிரியாரின் செயல் குறித்து ஓசூரில் உள்ள தலைமை அலுவலக நிர்வாகியிடம் புகார் கொடுத்தேன். ஆத்திரமடைந்த பாதிரியார், அடியாட்கள் உதவியுடன் என்னை அடித்து துன்புறுத்தினார். கட்டாயப்படுத்தி கற்பழித்ததோடு, கொலை மிரட்டலும் விடுத்து வரும் பாதிரியார் சுதாகர் மற்றும் அவருக்கு உறுதுணையாக உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளார் (ஏன் இப்ப புகார்? உள் கதை என்ன?).

பூங்கோதையின் புகார் குறித்து, திருச்சி மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.

"எனக்கு கணவரே தேவையில்லை, தீர்த்துக் கட்டிவிடு"

கள்ளக்காதல் கொலைகள் நிகழும் வேகத்தைப் பார்த்தால் இன்னும் சில நாட்களில் அனைத்து நாளிதழ் மற்றும் வேறுபல ஊடங்களிலும் கள்ளக்காதல் மற்றும் அதனால் நிகழும் கொலைகள் பற்றிய செய்திகள்தான் நிரம்பி இருக்கும் போலிருக்கிறது!

ஆமாம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகமும், அரசு வரிப்பணத்தில் அரசியல்வாதிகளாலும் பணக்காரப் பெண்மணிகளாலும் நிரப்பப்பட்டுள்ள "தேசிய பெண்கள் வாரியமும்" (National Commission for Women) என்ன செய்கின்றன? இந்த "கள்ளக்காதல்" (Adultery) சீக்கு பன்றிக்காய்ச்சலை விட வேகமாகப் பரவி, பல உயிர்களைப் பலி வாங்கிக் கொண்டிருக்கிறதே. இதைத் தடுக்க ஏதேனும் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டாமா?

இந்தக் கள்ளக்காதல் சோரம் போகும் அவலத்திற்கு ஆகும் முதல் நரபலி அந்தப் பெண்குலத் திலகத்தின் கணவன் தான்! அவன் தப்பித்தால், சில கேசுகளில் எக்குத்தப்பாக அந்தக் கள்ளக்காதலிகளும் பரிதாபமாக பலியாகிறார்கள்.

ஆனால், இந்த கள்ளக்காதல் கேவலங்களினால் நிகழும் மிகவும் பரிதாபத்திற்குறிய இழப்பு, இடையில் சிக்கி பலியாகும் குழந்தகள்தான்! இதைப்பற்றி எவரும் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. அனைத்து இயக்கங்களும், பெண்கள் அமைப்புக்களும், பெண்கள் வாரியங்களும் அந்தக் கள்ளக்காதல் மனைவிகளின் உரிமைகளைப் பற்றித்தான் கவலைப் படுகிறார்கள், கடமைகளைப் பற்றியல்ல. அவர்கள்தம் செக்ஸ் தேடுதலில் முழுத் திருப்தி அடைவதுதான் சமூகத்தின் முக்கியத் தேவை என்பது போல மனோரமா போன்ற திடீர் சமூக சேவகிகளும் பேசி வருகிறார்களேயன்றி ஒரு பாவமும் அறியாத இந்தக் குழந்தைகளின் நிலையைப் பற்றி யாரும் சிறிதளவேனும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. கணவன்மார்களின் "ஆண்மைக் குறைபாடு" பற்றி இயக்கம் நடத்தப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுக் கொண்டிருக்கும் மனோரமா அம்மையார் ஏனிந்தக் குழந்தைகளின் நிலையைப் பற்றிக் கவலைப்படக் கூடாது?

இந்த நிலைக்கு முக்கிய காரணம் கள்ளக் காதல் (Adultery) தொடர்பான சட்டங்கள் ஒரு தலைப் பட்சமாக அமைந்திருப்பதுதான். கள்ளக்காதல் செய்யும் பெண்கள் மீது ஒருவித நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது என்பதுதான் இப்போதிருக்கும் சட்டம். ஏனெனில் பெண்கள் அப்பாவிகள், ஒரு பாவமும் அறியாத அபலைகள். அவர்கள் வலைதான் விரிப்பார்கள்; ஆண்மகன் தான் காமாந்தகாரன், சண்டாளன், வெறி பிடித்தலைபவன்; அவன் வந்து சிக்கினால் அது அவன் குற்றம். இதுதான் இத்தகைய சட்டங்களின் அடிப்படை கருத்தாக்கம்!

Sec. 497 of Indian Penal Code:- "Adultery"

Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.


இதுதான் கள்ளக்காதல் தொடர்பான சட்டம். இது ஒருதலை சார்பாக உள்ளது எனவும் இதைத் திருத்தம் செய்து, தவறு செய்யும் ஆண், பெண் இருவருக்கும் சமமாகப் பொருந்தும்படியாக மாற்றியமைக்க வேண்டும் என்று நீதிபதி மலிமத் கமிட்டி மற்றும் சட்டக் கமிஷன் பரிந்துரை அளித்த பின்னும் தேசிய பெண்கள் வாரியமும் பல வலிமை வாய்ந்த இயக்கங்களும் சேர்ந்து எதிர்ப்பதால் அது இன்னமும் திருத்தப் படாமல் இருக்கிறது! (சுட்டி)

சரி. உங்களுக்கு இன்றைய கள்ளக்காதல் கோட்டா இதோ:-

மயிலாடுதுறை அருகே பயங்கரம்:
பரோலில் வந்த ஆயுள் கைதி கள்ளக்காதல் தகராறில் படுகொலை
மனைவி உள்பட 6 பேர் கைது

நாகப்பட்டினம், நவ.12 - 2009. செய்தி - தினத்தந்தி. (சுட்டி இதோ)

கள்ளக்காதல் தகராறில் பரோலில் வெளியே வந்த ஆயுள் சிறைக் கைதி கொலை செய்யப்பட்டார்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த மணல்மேடு அருகே கழுக்காணிமுட்டம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்மோகன் (வயது 42). இவர் ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் இருந்து வந்தார்.

சமீபத்தில் பரோலில் வந்த ராஜ்மோகன் பரோல் காலம் முடிந்து மீண்டும் ஜெயிலுக்கு செல்லவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் மணல்மேடு அருகே உள்ள ஆத்தூர் கிராமத்தை சேர்ந்த பாலையா ஆத்தூர் கிராம நிர்வாக அலுவலர் தென்னரசுவிடம் நேரில் ஆஜராகி ராஜ்மோகனை கொலை செய்து அவரது பிணத்தை ஒரு வயலில் புதைத்துள்ளதாக தெரிவித்தார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கிராம நிர்வாக அலுவலர், பாலையாவை மணல்மேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலையாவை கைது செய்தனர். அப்போது பாலையா போலீசாரிடம் கூறியதாவது:-

கள்ளக்காதல்

நானும், ராஜ்மோகனும் திருச்சி மத்திய சிறையில் இருந்த போது நண்பர்களானோம். அந்த நேரத்தில் பரோலில் நான் வெளிவந்த போது ராஜ்மோகன் வீட்டிற்கு சென்று அவரது மனைவி இந்துமதிக்கு பணம் கொடுத்து உதவினேன்.

அதில் இந்துமதியுடன் எனக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இந்த விஷயம் ராஜ்மோகனுக்கு தெரிந்து இந்துமதியை துன்புறுத்தினார்.

இதனை தொடர்ந்து இந்துமதி எனக்கு கணவரே தேவையில்லை, அதனால் ராஜ்மோகனை தீர்த்து கட்டிவிடு என்று என்னிடம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து மயிலாடுதுறையில் ராஜ்மோகனை தற்செயலாக நான் சந்தித்தேன். அப்போது ராஜ்மோகன் தனக்கு பணம் தேவை என்று என்னிடம் தெரிவித்தார்.

உடனே நான் ஆத்தூர் கிராமத்தில் உள்ள எனது வீட்டிற்கு வந்து பணத்தை வாங்கி செல்லும்படி ராஜ்மோகனிடம் கூறினேன். அதன்படி ராஜ்மோகன் எனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். பின்னர் நானும், எனது நண்பர்களும், ராஜ்மோகனுடன் சேர்ந்து மது அருந்தினோம்.

அப்போது ராஜ்மோகனுக்கு அதிகமாக மதுவை, ஊற்றி கொடுத்தோம். இதில் நிலைதடுமாறி மயக்க நிலையில் இருந்த ராஜ்மோகனை நானும், எனது நண்பர்களும் மறைத்து வைத்திருந்த உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கினோம். இதில் நிலைக்குலைந்த ராஜ்மோகன் சம்பவ இடத்திலேயே செத்தார்.

இதனையடுத்து ராஜ்மோகன் உடலை ஆத்தூரில் உள்ள ஒரு வயலில் குழித்தோண்டி எனது நண்பர்கள் உதவியுடன் புதைத்துவிட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து கொலை செய்து புதைக்கப்பட்ட ராஜ்மோகன் பிணத்தை தோண்டி எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி நேற்று மதியம் புதைக்கப்பட்ட இடத்தை பாலையன் அடையாளம் காட்டினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்வர் தயாள், தாசில்தார் ஜோதிலிங்கம் ஆகியோர் முன்னிலையில் பிணம் தோண்டி எடுக்கப்பட்டது. ராஜ்மோகன் பிணத்தை குடும்பத்தினர் அடையாளம் காட்டினர்.

6 பேர் கைது

ராஜ்மோகன் கொலைச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து பாலையா, அவரது நண்பர்கள் சிவராஜன், ராமலிங்கம், செல்வராஜ், உத்திரங்குடி கலியமூர்த்தி மற்றும் கொலை செய்யப்பட்ட ராஜ்மோகனின் மனைவி இந்துமதி ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.

கள்ளக்காதலுக்கு அடிமையாகும் பலியாடுகள்!

இப்பொதெல்லாம் திருமணம் ஆன பெண்கள், கள்ளக்காதலுக்காக கணவனையோ, பெற்ற குழந்தைகளையோ, கள்ளக்காதலனைக் காதலிக்கும் இன்னொரு பெண்ணையோ, (இதில்கூட சக்களத்தி சண்டை!) கள்ளக்காதலனை மணக்கப்போகும் பெண்ணையோ கொலை செய்வது சர்வசாதாரணமாக நிகழ்ந்து வருவதை நீங்கள் தினம் காண்கிறீர்கள். இது போன்ற சீரழிவு எதைக் காண்பிக்கிறது? பெண்கள் முன்னேற்றத்திற்காகப் படுபடுகிறேன் என்று பறைசாற்றிக் கொண்டு பலவழிகளில் பணம் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் பெண்ணியவாதிகள் தங்கள் முயற்சியில் அடைந்துள்ள வெற்றியைத்தானே சுட்டிக் காண்பிக்கிறது!

ஆம், நம் பாரம்பரிய குடும்ப வாழ்வை முறையைச் சிதைத்து, பெண்கள் மனத்தில் தங்கள் உடல் சுகமும், விதவிதமான செக்ஸ் அனுபவத் தேடலும்தான் வாழ்வின் ஒரே குறிக்கோள் என்றும், அத்தகைய வெறித்தேடுதலுக்கு எதிரியாகத் தோன்றும் எவரையும் கொன்று போட்டால்கூட பரவாயில்லை என்றும் நம்ப வைத்து, அவர்களின் மனப்பாங்கை தரம் தாழ்த்தும் தங்கள் முயற்சியில் அவர்கள் வெற்றி அடைந்து வருகிறார்கள்!

இப்போதெல்லாம் ஒரு மணமான பெண்ணோ, ஆணோ கொல்லப்பட்டால் அதில்
"கள்ளக்காதல்" ஆங்கிள் இருக்கிறதா என்று துப்பறிய வேண்டிய கட்டாயத்திற்கு காவல் துறையினர் தள்ளப்பட்டுள்ளனர்! அதனால் அந்தப் பெண்மணியை சந்தித்தவர்கள், அவர் செல்ஃபோனில் தொடர்பு கொண்ட நபர்கள் இவர்கள் மேல் சந்தேகக்கண் படத்தொடங்கி அதனால் பல கேசுகளில் முக்கிய தடயங்கள் சிக்குவதை நாம் கண்டு வருகிறோம்.

மேலும், இத்தகைய கள்ளக் காதல்களினால் அந்தக் கள்ளக்காதலிகளே பலியாகும் நிகழ்ச்சிகளும் நிறைய நடக்கின்றன. அத்தகைய ஒரு செய்தியை இப்போது வாசியுங்கள்:

புதுப்பெண்ணை கொலை செய்து உடலை புதைத்தது ஏன்? கைதான கள்ளக்காதலர் பரபரப்பு வாக்குமூலம்

திருச்சி, நவ.5- 2009 தினத்தந்தி

புதுப்பெண்ணை கொலை செய்து வயலில் உடலை புதைத்தது ஏன் என்பது பற்றி கைதான கள்ளக் காதலர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

புதைக்கப்பட்ட பெண் பிணம்

திருச்சியை அடுத்த முத்தரசநல்லூர் வயல்வெளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அரை குறையாக மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் ஒரு பெண் பிணம் கிடந்தது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஜீயபுரம் போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அப்போது பிணமாக கிடந்த பெண்ணின் பெயர் லால்குடி பக்கம் உள்ள கொத்தமங்கலத்தை சேர்ந்த முத்துக்குமார் மனைவி அன்பரசி (19) என்பதும், முத்தரசநல்லூர் காமராஜர்புரத்தை சேர்ந்த பெயிண்டர் அங்கமுத்து (வயது25)வுக்கும், அந்த பெண்ணுக்கும் பழக்கம் இருந்ததும் தெரியவந்தது.

பெயிண்டர் கைது

அன்பரசியின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கமுத்துவை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

இதில் அங்கமுத்து தான் அன்பரசியை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, பிணத்தை வயலில் புதைத்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் நேற்று அங்கமுத்துவை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அங்கமுத்து போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

செல்போன் மூலம் காதல்

எனது நண்பர்கள் மூலம் அன்பரசியின் செல்போன் நம்பர் கிடைத்தது. செல்போனில் அடிக்கடி பேசி அன்பரசியுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டேன். நாங்கள் தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்தோம். அவர் என்னை பார்க்க அடிக்கடி முத்தரசநல்லூருக்கு வந்து செல்வார்.

இந்த நிலையில் கடந்த வாரம் எனது வீட்டுக்கு வந்த அன்பரசி தனக்கு திருமணமாகி 2 மாதங்கள் ஆகிவிட்டதாகவும், கணவன் முத்துக்குமாரை எனக்கு பிடிக்கவில்லை. அதனால் உன்னுடனே இருந்து விடுகிறேன் என்றும் கூறினாள். நான் ஏற்கனவே எங்கள் ஊரைச்சேர்ந்த நந்தினி என்ற பெண்ணை காதலித்து வந்தேன். அவளையே திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருந்தேன்.

இதனால் அன்பரசி எனது வீட்டில் இருந்தால் பிரச்சினை ஏற்படும் என நினைத்து அவளை இருங்களூரில் உள்ள எனது அக்காள் வீட்டில் தங்க வைத்தேன். இந்த நிலையில் எனது வீட்டில் அன்பரசி என்னுடன் இருந்ததை காதலி நந்தினி பார்த்து விட்டாள்.

துப்பட்டாவால் இறுக்கி...

அன்பரசியை பார்த்ததும் என்னிடம் தகராறு செய்த நந்தினி நான் விஷம் குடித்து தற்கொலை செய்து விடுவேன் என விஷம் பாட்டிலை கையில் வைத்துக்கொண்டு மிரட்டினாள். நான் அவளை சமாதானம் செய்து, நந்தினியை அவளது வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு திரும்பி வந்தேன். அப்போது அன்பரசி என்னிடம் நீ என்னைத்தான் திருமணம் செய்து கொள்ளவேண்டும். அதுவரை நான் இங்கிருந்து செல்ல முடியாது என கூறி தகராறு செய்தாள்.

இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இவள் இருந்தால் காதலி நந்தினி நம்மை விட்டு போய்விடுவாள், திருமணம் செய்து கொள்ள முடியாமல் போய்விடும் என நினைத்து அன்பரசியின் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி நெரித்தேன். இதில் அவள் மூச்சு திணறி கீழே விழுந்ததும் யாருக்கும் தெரியாமல் உடலை தூக்கி கொண்டு சென்று வயல்வெளியில் புதைத்தேன்.

இவ்வாறு அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக தெரிகிறது.

அங்கமுத்து நேற்று மாலை திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட் எண்-3 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

விபரீத கள்ளக்தாதல்!

வக்கீலின் மனைவி கட்சிக்காரருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு ஓடிய கதையைப் படித்தோம்.

இப்போது பெண் போலீஸ் ஆயுள் தண்டனைக் கைதியுடன் கொண்ட கள்ளக்காதலின் விளைவாக கொலையுண்டிருக்கிறார்.

பின்னே, கள்ளக்காதலில் நல்லதா விளையும்!

இந்தச் செய்திதான் இன்றைய செய்தித்தாள்களில் தலைப்பு நியூஸ். தினத்தந்தி இதன் விவரங்களை மூன்று பகுதிகளாக வெளியிட்டுள்ளது. அவற்றை உள்ளது உள்ளபடி இங்கு வெளியிட்டு அதை கள்ளக்காதலுக்குக் காரணம் ஆண்களே என்று வலியுறுத்துவதற்காக இயக்கம் துவங்க இருக்கும் ஆச்சி மனோரமாவுக்கு சமர்ப்பிக்கிறேன்!

தினத்தந்தி. நாள் நவ.5 - 2009

பகுதி - 1

சேலம் பெண்கள் சிறை காவலராக இருந்தவர் மாயம்:
பெண் போலீஸ் கற்பழித்து கொலை
ஜெயிலில், கைதியுடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் விபரீதம்

சேலம் சிறை காவலாக பணிபுரிந்த பெண் போலீஸ் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். ஜெயிலில், ஆயுள்தண்டனை கைதியுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொடூர கொலை நடந்துள்ளது.

காயத்ரி மாலா

சேலம், அஸ்தம்பட்டியில் உள்ள பெண்கள் கிளை சிறையில் முதல் நிலை காவலராக (போலீஸ்) பணியாற்றி வந்தவர், எஸ்.காயத்ரி மாலா (வயது 33). கோவையை சேர்ந்தவர். காயத்ரி மாலாவுக்கும், மதுரை மத்திய சிறையில் சப்-ஜெயிலராக பணியாற்றி வரும் தமிழ்ச் செல்வன் என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

தமிழ்ச்செல்வன், காயத்ரி மாலா இருவருமே ஏற்கனவே திருமணமாகி, விவாகரத்து பெற்றவர்கள். கடந்த 2002-ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக வேலைக்கு சேர்ந்த காயத்ரி மாலா, பதவி உயர்வு பெற்று, 8 மாதங்களுக்கு முன்பு கோவையில் இருந்து சேலத்திற்கு வந்தார். சேலத்தில் அய்யந்திரு மாளிகை ஹவுசிங் போர்டு குடியிருப்பில் காயத்ரி மாலா வசித்து வந்தார்.

திடீர் மாயம்

கோவை வரதராஜபுரம் ஆர்.வி.எல். நகரில் காயத்ரி மாலாவுக்கு சொந்தமாக வீடு உள்ளது. காயத்ரி மாலாவுக்கும், அவரது 2-வது கணவர் தமிழ்ச்செல்வனுக்கும் பிறந்த 4 வயது மகள் லட்சுமி பிரபா கோவையில் பெற்றோர் வீட்டில் இருப்பதால் வாரம் ஒரு முறை காயத்ரி மாலா கோவைக்கு சென்று தனது மகளை பார்த்து வருவது வழக்கம்.

கடந்த சனிக்கிழமை இரவு 7 மணிக்கு சேலம் புதிய பஸ் நிலையத்துக்கு வந்த காயத்ரி மாலா, அங்கிருந்து கோவைக்கு பஸ்சில் புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் கோவைக்கு செல்லவில்லை. திடீரென்று மாயமான அவருடைய செல்போன் இணைப்பும் துண்டிக்கப்பட்டு இருந்தது.

ஏரிக்கரையில் பிணம்

இது குறித்து, சேலம் பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், சங்ககிரி அருகே உள்ள ஆவாரம்பாளையம் ஏரிக்கரையில் ரெயில் பாதைக்கு சற்று தொலைவில் உள்ள ஒரு முட்புதரில் இருந்து துர்நாற்றம் வீசியது. நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள், அங்கு அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் பிணம் தலைகுப்புற கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த பெண் அணிந்து இருந்த சுடிதார் விலக்கப்பட்டு, சுடிதாரின் டாப்சும் கழற்றப்பட்ட நிலையில் அந்த பெண் அரை நிர்வாண கோலத்தில் கிடந்தார். மேலும் அந்த பெண்ணின் தலையில் சுமார் 25 கிலோ எடை கொண்ட பெரிய பாறாங்கல்லும் வைக்கப்பட்டு கிடந்தது. இது குறித்து சங்ககிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அடையாளம் தெரிந்தது

சங்ககிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். ஆனால் முகத்தில் பெரிய கல் வைக்கப்பட்டு, முகம் சிதைக்கப்பட்டு இருந்ததால் பிணமாக கிடந்தவர் யார் என்று அடையாளம் உடனடியாக தெரியவில்லை. இதனால் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையின் முடிவில் இறந்து கிடந்தது மாயமான காயத்ரி மாலாவாக இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்தது. இது குறித்து காயத்ரி மாலாவின் பெற்றோருக்கும், கணவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து காயத்ரி மாலாவின் தந்தை, தம்பி, அவரது மனைவி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை பார்த்து இறந்து கிடப்பது காயத்ரி மாலாதான் என்று அடையாளம் காட்டினார்கள். காயத்ரி மாலாவின் கணவர் தமிழ்செல்வனும் சம்பவ இடத்திற்கு வந்து காயத்ரி மாலாவை அடையாளம் காட்டினார். பின்னர் காயத்ரி மாலாவின் பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்வதற்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கற்பழித்து கொலையா?

காயத்ரி மாலா கோவைக்கு சென்றபோது அவருடன் யாராவது சென்றார்களா? அவர் கொண்டு சென்ற பை, அவரது செல்போன் போன்றவை என்ன ஆனது? போன்ற விவரங்கள் தெரிய வில்லை. அவரது ஆடைகள் அகற்றப்பட்டு கிடந்ததால் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என்ற சந்தேகமும் எழுந்தது.

அவரை கொலை செய்தது யார்? ஒருவரா? அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த கொலையில் தொடர்பு உள்ளதா? என்பது போன்ற கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

ஆயுள் தண்டனை கைதி

விசாரணையில், கோவையை சேர்ந்த சரவணன் என்ற சரவணகுமார் (32) என்ற ஆயுள் தண்டனை கைதி, காயத்ரி மாலாவை கொலை செய்ததும், அவர்கள் இருவருக்கும் இடையே கடந்த 7 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்த திடுக்கிடும் தகவலும் அம்பலம் ஆனது.

காயத்ரி மாலா, கடந்த 2002-ம் ஆண்டில் கோவை மத்திய சிறையில் காவலராக வேலை பார்த்து வந்தார். அப்போது திருச்செங்கோடு ரிக் உரிமையாளர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவணகுமார் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

கள்ளக்காதல்

அப்போது காவலர் காயத்ரி மாலாவுக்கும், சரவணகுமாருக்கும் அறிமுகம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. அதன்பிறகு தனது முதல் கணவரை காயத்ரி மாலா விவாகரத்து செய்தார். இதற்கிடையில், 5 ஆண்டுகளுக்கு முன்பு பயிற்சிக்காக வேலூர் சிறைக்கு சென்ற காயத்ரி மாலாவுக்கும், அங்கு பயிற்சியாளராக வந்த மதுரை சப்-ஜெயிலர் தமிழ்ச்செல்வனுக்கும் காதல் ஏற்பட்டு, காயத்ரிமாலா கர்ப்பம் ஆனார்.

பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுடைய 4 வயது மகள் பிரபா லட்சுமி, கோவையில் உள்ள காயத்ரி மாலாவின் பெற்றோர் வீட்டில் இருக்கிறாள். இந்த நிலையில், ஆயுள் தண்டனை கைதி சரவணகுமாருடன் இருந்த கள்ளக்காதலையும் காயத்ரிமாலா கைவிடவில்லை. கடந்த 7 ஆண்டுகளாக அவர்களுடைய தொடர்பு நீடித்து வந்தது.

தலைமறைவு சந்திப்பு

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் கோவை சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்த சரவணகுமார், மீண்டும் சிறைக்கு திரும்பாமல் தலைமறைவாகிவிட்டார். சேலம் மாவட்டம், ஓமலூரில் அவர் தங்கி இருந்தார். காயத்ரிமாலாவும் சேலம் சிறையில் பணிபுரிந்து வந்ததால், இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொள்வதற்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று கோவை சென்று பெற்றோரையும் மகளையும் பார்த்துவர காயத்ரிமாலா விரும்பினார். அப்போது சரவணகுமார் தனது செல்போனில் தொடர்பு கொண்டு தான் சங்ககிரியில் இருப்பதாகவும் எனவே சங்ககிரியில் இறங்கி தன்னை சந்திக்கும்படியும் காயத்ரிமாலாவிடம் தெரிவித்தார்.

கல்லால் தாக்கி கொலை

அதன்படி, கோவை செல்லும் வழியில் காயத்ரி மாலா சங்ககிரியில் இறங்கி சரவணகுமாரை சந்தித்து பேசினார். பின்னர் அங்கிருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆவாரம்பாளையம் ஏரிக்கரைக்குச் சென்று இருவரும் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

அதன்பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஆத்திரம் அடைந்த சரவணகுமார், பெரிய பாறாங்கல்லை தலையில் தூக்கிப்போட்டு காயத்ரி மாலாவை கொலை செய்ததாக போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

செல்போன் மூலம் துப்பு

சரவணகுமார் எடுத்துச்சென்ற காயத்ரிமாலாவின் செல்போன், தாலி செயின், கைக்கெடிகாரம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினார்கள். அந்த செல்போன் மூலம் இந்த வழக்கில் போலீசார் துப்பு துலக்கி கொலையாளியை பிடித்து உள்ளனர்.

இந்த வழக்கில் 48 மணி நேரத்தில் துப்பு துலக்கிய சேலம் பள்ளப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையிலான தனி போலீஸ் படையினரை போலீஸ் கமிஷனர் சுனில்குமார்சிங் பாராட்டினார்.

=========

பகுதி - 2

ஜெயிலில் பெண் போலீசுடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி?
கைதான கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்

"பெண் போலீஸ் காயத்ரி மாலாவுடன் ஜெயிலில் தொடர்பு ஏற்பட்டது எப்படி?'' என்று, கைதான கொலையாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சேலம் பெண்கள் கிளைசிறை காவலர் காயத்ரிமாலா கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட சரவண குமார், சேலம் பள்ளப்பட்டி போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

கர்ப்பிணி மனைவி

"எனது பெயர் சரவணன் என்கிற சரவணகுமார் (வயது 32). ஓமலூரை அடுத்த செங்கரடில் வசித்து வருகிறேன். எனக்கு திருமணம் ஆகி வெள்ளையம்மாள் என்ற மனைவி இருக்கிறார். எனக்கு ஒரு குழந்தை உள்ளது. தற்போது எனது மனைவி 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

கடந்த 1997-ம் ஆண்டு திருச்செங்கோடு ரூரல் போலீஸ் நிலைய எல்லையில் ரிக் வாகன உரிமையாளர் செங்கோட கவுண்டர் என்பவரை கொலை செய்த வழக்கில் எனக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு நான் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன்.

சாப்பாடு வண்டியை தள்ளி செல்வேன்

அங்கு எனது நன்னடத்தை காரணமாக எனக்கு சாப்பாடு வண்டியை தள்ளி செல்லும் வேலை தரப்பட்டது. நான் கோவை பெண்கள் சிறைக்கு சாப்பாடு வண்டியை தினமும் தள்ளி செல்வேன். அப்போது எனக்கும் பெண்கள் சிறையில் பணிபுரிந்து வந்த காயத்ரிமாலாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் கள்ளத்தொடர்பாக மாறியது. கோவை மத்திய சிறையில் இருந்த நான் அவ்வப்போது நான் பரோலில் வீட்டுக்கு சென்று வந்தேன். ஆரம்பத்தில் போலீஸ் பாதுகாப்புடன் நான் சென்று வந்தேன். பின்னர் எனது நன்னடத்தை காரணமாக நான் தனியாகவே பரோலில் சென்று வீட்டில் உள்ளவர்களை பார்த்து விட்டு மீண்டும் சிறைக்கு வர அனுமதித்தார்கள்.

பரோலில் வந்து தலைமறைவு

இந்த கால கட்டத்தில் நான் காயத்ரி மாலாவுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தேன். இந்த நிலையில் கடந்த 15.2.2009 அன்று பரோலில் வீட்டுக்கு வந்த நான் மீண்டும் கோவை சிறைக்கு செல்லவில்லை. இதனால் 24-ந் தேதி என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதன் பிறகும் நான் காயத்ரி மாலாவுடன் உல்லாச வாழக்கையை தொடர்ந்து வந்தேன். இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி அவர் என்னிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். தான் கோவைக்கு செல்வதாக தனது கணவரிடம் கூறி விட்டதாகவும், நீ சங்ககிரிக்கு வா என்று கூறினார். அதன்படி நானும் சங்ககிரி பஸ் நிலையத்திற்கு முன்னதாகவே சென்று காயத்ரிமாலா வருகைக்காக காத்திருந்தேன்.

உல்லாசமாக இருக்க வற்புறுத்தினார்

பஸ்சில் அவர் வந்த நேரத்தில் நான் அவரிடம் 3 முறை தொடர்பு கொண்டு பேசினேன். அதே போல அவரும் என்னிடம் 3 முறை தொடர்பு கொண்டு பேசினார். சங்ககிரி பஸ் நிலையத்தில் காயத்ரிமாலா வந்து இறங்கியதும் 2 பேரும் சங்ககிரியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் ரெயில்வே பாதை அருகில் உள்ள ஆவாரம்பாளையம் ஏரிக்கு சென்றோம்.

அங்குதான் நாங்கள் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருப்பது வழக்கம். அதே போல 31-ந் தேதியும் நாங்கள் அங்கு உல்லாசமாக இருந்தோம். அப்போது நான் காயத்ரிமாலாவிடம் ரூ.5 ஆயிரம் கேட்டேன். அதற்கு அவர், `ரூ.5 ஆயிரம் தருகிறேன். ஆனால் நீ வாரம் ஒரு முறை என்னை சந்தித்து உல்லாசமாக இருக்க வேண்டும்' என்று நிர்பந்தித்தார்.

மிரட்டியதால் கொன்றேன்

அதற்கு நான், `எனது மனைவி தற்போது கர்ப்பிணியாக உள்ளார். என்னால் வாரம் ஒரு முறை வர முடியாது' என்று கூறினேன். அதை கேட்ட காயத்ரிமாலா, `நீ கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவன். இப்போது பரோலில் வெளியே வந்து விட்டு தலைமறைவாக இருக்கிறாய். நான் நினைத்தால் உன்னை போலீசில் மாட்டி விட்டு மீண்டும் சிறையில் அடைத்து விடுவேன். ஒழுங்காக நான் சொல்வதை கேள்' என்று மிரட்டினார்.

இவ்வாறு அவர் கூறியதும் எனக்கு ஆத்திரம் வந்தது. எங்கே நான் தலைமறைவாக இருப்பதை காயத்ரிமாலா சொல்லி விடுவாரோ என நினைத்தேன். இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். அதன்படி காயத்ரிமாலாவின் தலையில் கல்லை தூக்கிப்போட்டேன்.

செல்போன் காட்டி கொடுத்தது

இதில் அவர் மயங்கினார். அதன் பின்னர் அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலி செயின், தோடு, கைகெடிகாரம் மற்றும் செல்போன் போன்றவற்றை திருடினேன். பின்னர் அங்குள்ள புதரில் காயத்ரிமாலாவின் உடலை இழுத்துப்போட்டு அவரின் தலையில் பெரிய கல்லை போட்டு விட்டு ஓடி விட்டேன்.

காயத்ரிமாலாவை கொன்று விட்டு நான் கருப்பூர் அருகே செங்கரடில் உள்ள எனது வீட்டிற்கு சென்று விட்டேன். இந்த நிலையில் காயத்ரிமாலா காணாமல் போனது பற்றி அவரின் தந்தை பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

போலீசார் காயத்ரிமாலாவின் செல்போன் எண்ணை கொண்டு யாருக்கெல்லாம் பேசினார்? என விசாரித்தார்கள். அதில் நான் அவரிடம் பேசி இருப்பது தெரிய வந்தது. இதன் பின்னர் போலீசார் என்னை பிடித்து விசாரித்தனர். இதனால் வேறு வழியின்றி நான் காயத்ரிமாலாவை கொன்றதை ஒப்புக் கொண்டேன்.''

இவ்வாறு சரவணகுமார் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

==========

பகுதி - 3

கொலை செய்யப்பட்ட பெண் காவலர் காயத்ரி மாலா, விவாகரத்து பெற்று மறுமணம் செய்தவர்

கொலை செய்யப்பட்ட பெண் காவலர் காயத்ரி மாலா, துணை ஜெயிலர் தமிழ்ச் செல்வனை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே திருமணம் ஆனவர். முதல் கணவரை விவாகரத்து செய்தபின் தமிழ்ச்செல்வனை மறுமணம் செய்து கொண்டார். முதல் கணவர் மூலம் காயத்ரிமாலாவுக்கு பிறந்த 12 வயது மகள், கோவையில் படித்து வருகிறாள்.

இதேபோல், தமிழ்ச் செல்வனும் கோமளா என்ற பெண்ணை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். அவருக்கு என்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும் ஒரு மகனும் 10-ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர்.

இதற்கிடையில், 2-வது மனைவி காயத்ரி மாலா மூலம் தமிழ்ச்செல்வனுக்குப் பிறந்த 4 வயது மகள், கோவையில் உள்ள அவருடைய பெற்றோர் வீட்டில் இருக்கிறாள். சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த காயத்ரி மாலா, வெளியே வக்கீல் ஒருவருடனும் நட்பாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.

கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்திய பெண் தீக்குளித்து தற்கொலை

கணவனை வேண்டாம் என்று உதறிவிட்டு கள்ளக் காதலனுடன் குடித்தனம் நடத்தியவள், கள்ளகாதலனுடன் சண்டை போட்டுச் செத்தாலும், ஒரிஜினல் புருஷன்தான் குற்றவாளி எனக்கருதி அவன் மீது விசாரணை நடத்துவார்களாம். ஏனென்றால் திருமணமான ஏழு ஆண்டுகளுக்குள் மனைவி இறந்தால் அது வரதட்சணைக் கொடுமையால்தான் என்ற முன்முடிவுடன் கணவனையும் அவனது பெற்றோரையும் குற்றவாளிகள் என்ற அனுமானத்துடன் (Section 498A & 304B of IPC and "Presumptive Section" 113-B of the Indian Evidence Act) ஆர்.டி.ஓ விசாரணை நடக்கவேண்டும். இதுதான் இந்தியச் சட்டங்களின் கேவல நிலைமை. பெண்டாட்டி கள்ளக்காதலனுடன் ஓடிப்போன கொடுமை போதாதென்று இந்தக் கேவலம் வேறு அவனுக்கு!

ஐயமிருந்தால் நான் மேற்குறிப்பிட்டிருக்கும் சட்டப் பிரிவுகளைப் பற்றி கூகிளில் தேடிப்பாருங்கள்.

நிச்சயம் அனைத்து ஆண்களும் திருமணம் செய்துகொண்டு இத்தகைய இன்பங்களை துய்க்கவேண்டும்!

இந்தச் செய்தியின் முடிவில் இருக்கிறது அந்த கொடுங்கோனமை சட்ட நடவடிக்கை.

ஆலந்தூர், நவ.1- 2009. தினத்தந்தி

திருமணமான 4 மாதத்தில் கணவனை விட்டு கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்திய பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை தந்தை பெரியார் நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 19). இவருடைய மனைவி சுபா (18). இவர் தீக்காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக செத்தார்.

இது பற்றி பள்ளிக்கரணை போலீசுக்கு தகவல் வந்தது. மடிப்பாக்கம் உதவிக்கமிஷனர் சங்கரபாண்டியன், பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் தினகரன் ஆகியோர் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது பற்றி விசாரணை நடத்தியபோது பல தகவல் கிடைத்தன. திண்டிவனம் அருகே உள்ள வெள்ளிமேடு பேட்டையை சேர்ந்தவர் சுபா. இவருக்கும் காஞ்சீபுரத்தை சேர்ந்த சசிக்குமார் என்பவருக்கும் கடந்த ஜுன் மாதம் 25-ந் தேதி திருமணம் நடந்தது. பின்னர் ஆடி மாதம் சுபாவை திண்டிவனம் அழைத்து வந்தனர்.

அப்போது சுபாவுக்கு அதே பகுதியை சேர்ந்த ரமேசுடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இது பற்றி அங்குள்ள போலீசில் புகார் செய்யப்பட்டது. அப்போது சுபா தனது கணவருடன் செல்ல விருப்பம் இல்லை. காதலன் ரமேசுடன் வாழ்வேன் என்று கூறினார்.

இதையடுத்து சுபா, காதலனுடன் கடந்த 2 மாதத்திற்கு முன்பு பள்ளிக்கரணை வந்து குடும்பம் நடத்தினார். இதற்கிடையே கூலி வேலை செய்யும் ரமேஷ், சுபாவை வேலைக்கு செல்லுமாறு கூறினார். இதற்கு சுபா மறுப்பு தெரிவித்தார். இதனால் சுபா, ரமேஷ் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சுபா வீட்டில் தீக்குளித்தார். இதை கண்ட ரமேஷ், சுபாவை காப்பாற்ற சென்றார். அப்போது அவரும் படுகாயம் அடைந்தார். 2 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சையின்றி சுபா பரிதாபமாக செத்தார்.

மேற்கண்ட தகவல்கள் விசாரணையில் வெளியாயின. இது பற்றி பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக ஆர்.டி.ஒ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

கள்ளக்காதலனை எரித்துக்கொன்ற அபலைப்பெண்

துறையூர். தினமலர் - 30-10-2009

துறையூர் அருகே கள்ளத்தொடர்பை துண்டித்துக்கொள்வதாக கூறிய கள்ளக்காதலனை எரித்துக்கொன்ற காதலியை போலீஸார் கைது செய்தனர்.

துறையூர் அருகே கண்ணனூரை சேர்ந்த லாரி டிரைவர் சேகர்(35). இவர் கடந்த 27ம் தேதி கண்ணனூர் அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறம் குழந்தை என்பவரின் சோளைக்காட்டில் எரிந்து கருகிய நிலையில் நிர்வாணமாக இறந்து கிடந்தார். சேகரின் மர்ம மரணம் குறித்து புலிவலம் போலீஸார் விசாரித்து வந்தனர்.

போலீஸ் விசாரணையில், சேகருக்கும் அதே ஊரை சேர்ந்த கணவனால் கைவிடப்பட்டு தனியே வசித்த தனலட்சுமி(55)க்கும் கள்ளக்காதல் இருந்தது தெரிந்தது. இருவருக்கும் கடந்த 15 ஆண்டாக தொடர்பு இருந்துள்ளது.

இந்நிலையில் சேகர் மூன்று ஆண்டுக்கு முன் வளர்மதி(30)யை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பின்பும் சேகரை தன்னுடன் இருக்குமாறு தனலட்சுமி வற்புறுத்தி வந்ததால் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது.

கடந்த 26ம் தேதி இரவு எப்போதும் தனிமையில் சந்தித்துக் கொள்ளும் சோளக்காட்டிற்கு சேகரை வருமாறு தனலட்சுமி வற்புறுத்தியுள்ளார். தனலட்சுமி தொல்லை பொறுக்காத சேகர், தனலட்சுமியை கொல்வது அல்லது இருவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்வது என்ற முடிவுடன் ஒரு கேனில் மண்ணெண்ணெயுடன் சென்றுள்ளார்.

இருவரும் உல்லாசமாக இருந்துவிட்டு மண்ணெண்ணெய் ஊற்றி தீ தங்களுக்குத் தானே தீ வைத்துக்கொள்வது என முடிவு செய்துள்ளனர். அதன்படி, ஒருவர் மீது ஒருவர் மண்ணெண்ணை ஊற்றி முதலில் சேகர் மீது தனலட்சுமி நெருப்பு பற்ற வைத்துள்ளார். நிர்வாணமான சேகரின் உடலில் "தீ' மளமளவென பரவி எரிந்தபோது வலி தாங்காமல் கத்தி அங்குமிங்கும் ஓடியுள்ளார். எங்கே தன்னையும் கட்டிப் பிடிப்பானோ என பயந்த தனலட்சுமி சேகரின் உடைகளை எடுத்துக்கொண்டு ஓடியுள்ளார்.

சேகரின் மரணம் குறித்து புலிவலம் போலீஸார் நடத்தி விசாரணையில், தனலட்சுமி சேகரை எரித்துக் கொன்றதை ஒப்புக்கொண்டு வாக்கு மூலமளித்தார். புலிவலம் போலீஸார், தனலட்சுமியை கைது செய்து துறையூர் கோர்ட்டில் நீதிபதி தோத்திரமேரி முன் நேற்று ஆஜர்படுத்தினர். 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிடப்பட்டதை அடுத்து திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.

===========

அன்புள்ள வாசகர்களே,

498A பற்றி பதிவு எழுதத் தொடங்கி விட்டு, கள்ளக்காதல் நிகழ்வுகளைப் பற்றியும் அதனால் விளையும் கொலைகளைப் பற்றியும் விவரிக்கும் காரணம் என்ன என்னும் வினா உங்கள் மனத்தில் தோன்றினால் அதை மறுமொழியில் கேளுங்கள். தகுந்த விடையளிப்பது என் கடமை!

வக்கீலின் மனைவி கட்சிக்காரருடன் ஓட்டம்!

இது புதுசு!

28 வயதான வக்கீலின் மனைவி 20 வயது வாலிபனான தனது கணவரின் கட்சிக்காரருடன் ஓடிப் போய்விட்டார்.

கும்பகோணம் கல்யாணராமன் தெருவில் வசிப்பவர் வக்கீல் பாலமுருகன். இவர் கும்பகோணம் பார் அசோசியேஷன் செயலராகவும், அஇஅதிமுக வக்கீல் அணிச் செயலராகவும் பதவி வகிக்கிறார்.

இவருடைய மனைவியின் பெயர் சரோஜினி (வயது 28). இவர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.

இந்த வக்கீலின் வீட்டுக்கு மேலக்காவேரியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்னும் 20 வயது இளைஞர் ஒரு வழக்கு தொடர்பாக, கடந்த ஆறு மாத காலமாக அடிக்கடி வந்து சந்தித்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த இளைஞருக்கும் வக்கீல் மனைவி சரோஜினிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.

அந்த வக்கீலின் மனைவி சரோஜினி, சுப்பிரமணியன் என்னும் அந்த இளைஞருடன் ஓடிப்போய் விட்டாள் (மன்னிக்கவும், "விட்டார்". கள்ளக் காதலில் ஈடுபடும் பெண் குலத்திலகங்களை மரியாதையுடன் விளிக்கவேண்டும் அல்லவா!) என்று வக்கீல் கணவர் பாலமுருகன் கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அந்தப் புகாரின் பேரில் கட்சிக்காரர் சுப்பிரமணியன் மீது, வக்கீல் மனைவியை கடத்திச் சென்றதாக வழக்குப் பதிவு செய்து அந்த ஜோடியை போலீசார் தேடி வருகின்றனர்.

இதில் ஒரு முக்கியமான விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும். கள்ளக்காதல் (adultery), இழுத்துக் கொண்டு ஓடுதல் (elopement) இதுபோன்ற புகார்களின் மேல் அதில் சம்பந்தப் பட்டுள்ள ஆண் மேல்தான் வழக்குப் பதிவு செய்யமுடியும். கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்களுக்கு முழுதாக சட்டங்களிலிருந்து விதிவிலக்கு அளிப்பட்டுள்ளது நம் நாட்டில்.

உங்கள் மனைவி உங்கள் கண்ணெதிரிலேயே இன்னொருவனுடன் செக்ஸில் ஈடுபட்டுக் கொண்டிருந்தால் கூட அந்த ஆணுக்கு எதிராகத்தான் நீங்கள் வழக்கு தொடுக்கலாமேயன்றி உங்கள் மனைவியின்மீது எந்தவித நடவடிக்கையையும் எடுக்க இயலாது; அதற்கு இந்திய சட்டங்களில் இடமில்லை. சந்தேகமிருந்தால் சட்டம் தெரிந்த யாரையாவது கேட்டுத் தெளிவு பெறுங்கள். மேலும் அதைக் காரணம் காட்டி விவாகரத்து கூட பெற முடியாது. மனைவி சொல்வதைத்தான் நீதிபதிகள் நம்புவார்கள். "நான் பத்தினித் தெய்வம். என் கணவர் ஒரு சந்தேகப் பிராணி. என்மேல் அபாண்டமாக பழி சுமத்துகிறார். இந்த அபலையின் பரிதாப நிலையைப் பாருங்கள்" என்று நீதிபதியின் முன் கண்ணீர் சிந்தி ஒரு டிராமா போடுவாள். அவவ்ளவுதான். அப்படியே உருகி அவள் கேட்டபடி தீர்ப்பு வழங்குவார்கள். உடனே பெண்ணியவாதிகளும் ஜொள்ளியவாதிகளும் சேர்ந்து கோரசாக "ஐயோ பாவம், அந்த அபலைப் பெண். இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் எத்தகைய கொடுமைகளுக்கு அவள் ஆளாகிறாள்" என்று கட்டிப் பிடித்து அழுவார்கள். அவ்வளவுதான். கணவனின் புகார் அம்பேல்!

அப்படியே கணவனுக்கு வீரம் வந்து கள்ளக்காதலில் ஈடுபடும் மனைவியிடம் அவன் அதுபற்றி கேள்வி கேட்டால், அவள் உடனே 498A, D.V. Act, Sec 125 of CrPC போன்ற ஆயுதங்களைக் கையிலெடுத்து உங்களையும், உங்கள் வயதான பெற்றோரையும் கைது செய்ய வைத்து, உங்களுக்குச் சொந்தமான வீடு, பணம் அனைத்தையும் பிடுங்கிக் கொண்டு நடுத்தெருவில் நிறுத்தி விடுவாள்!

எதிர்வரும் காலம் திருமணம் செய்துகொள்ளும் ஆண்களுக்கு மிகச் சிரமமான காலம் தான்!

அது சரி. இதுபோன்ற வக்கீல்களும் நீதிபதிகளும் சேர்ந்துதானே கணவனிடம் பணத்தைப் பிடுங்கி ஓடிப்போன மனைவியிடம் கொடுக்க வைக்கிறார்கள்!

இப்போது வக்கீலின் முறை ஆகி விட்டது. அடுத்தது யார்?

(செய்தி: Deccan Chronicle)

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவிக்கு 3 ஆயுள் தண்டனை

வன்முறையில் ஆண்கள் மட்டும்தான் ஈடுபடுகிறார்கள் என்று சட்டம் (The Protection Of Women From Domestic Violence Act) இயற்றியிருக்கிறார்கள். அத்தகைய சட்டம் ஏற்படக் காரணமானவர்கள், அதை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்கள், அதனைக் கைக்கொண்டு குடும்பங்களைச் சிதைத்து, கணவனையும் அவனது பெற்றோர்களையும் நடுத்தெருவில் நிற்கவைக்கும் பெண் குலத்திலகங்கள், மனைவிகளின் பெயரைச் சொல்லி ஆதாயம் தேட முயற்சிக்கும் பெண்ணியவாதிகள், அரசியல்வாதிகள் போன்றோருக்கு இந்தச் செய்தியை சமர்ப்பிக்கிறோம்!

சேலம், அக்.22 - 2009. செய்தி - தினத்தந்தி

கள்ளக்காதல் மோகத்தில் கணவனை சதி திட்டம் தீட்டி கொலை செய்த வழக்கில் மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்கு 3 ஆயுள் தண்டனையும், 7 பேர் கொண்ட கூலிப்படைக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

கள்ளக்காதல்

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம் சித்துக்குட்டை காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 32). விவசாயி. அதே பகுதியைச் சேர்ந்தவர்

பெரியண்ணன் (32) விவசாயி. இருவரும் உறவினர்கள்.

பெரியண்ணனுக்கும், விஜயா என்ற பெண்ணுக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. இதனால் பெரியண்ணன் அதே பகுதியைச் சேர்ந்த ராணி சந்திரா (28) என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்ய முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து, இருவருக்கும் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக உருவானது.

கண்டித்தார்

இந்த நிலையில் பெரியண்ணனின் மனைவி விஜயா கர்ப்பமானார். இதனால் ராணி சந்திராவுக்கும், பெரியண்ணனுக்கும் திருமணம் நடைபெறவில்லை. இதன் பிறகு ராணி சந்திராவிற்கும், செல்வத்திற்கும் திருமணம் நடந்தது.

செல்வத்தை திருமணம் செய்த பிறகும், பெரியண்ணனுடன் ராணி சந்திரா பழக்கத்தை தொடர்ந்து வந்தார். மேலும் செல்போனில் மணிக்கணக்கில் பேசி வந்தார். இதை அறிந்த செல்வம் மனைவியை கண்டித்தார்.

கூலிப்படையை ஏவி கொலை

இதனால் ஆத்திரம் அடைந்த ராணி சந்திரா, பெரியண்ணனிடம், "எனது கணவர் உயிருடன் இருக்கும் வரை நான் உன்னிடம் பேச முடியாது'' என கூறினார்.

இதையடுத்து பெரியண்ணன், பவானியைச் சேர்ந்த கூலிப்படை கும்பலுடன் சேர்ந்து கடந்த 18.6.2007 அன்று செல்வத்தை கொலை செய்தார்.

இந்த கொலை தொடர்பாக அப்போதைய சங்ககிரி போலீசார் விசாரணை நடத்தி, பெரியண்ணன், ராணி சந்திரா, பவானியை சேர்ந்த கூலிப்படை கும்பல் அரைப்பள்ளன் என்கிற செந்தில் என்கிற செந்தில் குமார் (32), காசி என்கிற காசி விஸ்வநாதன் (29), ராமு என்கிற ராம்குமார் (23), சரா என்கிற சரவணன் (22), சக்தி என்கிற சக்திவேல் (23), ஒயிட் என்கிற வெள்ளையன் என்கிற செல்வம் (23), வீரான் என்கிற பீர்முகமது (27), முருகேசன் (35) ஆகிய 10 பேரை கைது செய்தனர்.

அவர்கள் மீது கொலை செய்தல், சதி திட்டம் தீட்டுதல், கூட்டமாக வருதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சேலம் 1-வது விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது.

3 ஆயுள் தண்டனை

வழக்கை விசாரித்த நீதிபதி கலைவாணி நேற்று தீர்ப்பு கூறினார்.

குற்றம் சாட்டப்பட்ட பெரியண்ணனுக்கு 3 ஆயுள் தண்டனையும், ரூ.32 ஆயிரம் அபராதமும், ராணி சந்திராவிற்கு 3 ஆயுள் தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. கூலிப்படையைச் சேர்ந்த அரைப்பள்ளனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 3 ஆண்டு சிறையும் ரூ.23 ஆயிரம் அபராதமும், காசி விஸ்வநாதன், ராம்குமார், சரவணன், சக்திவேல், செல்வன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை, 6 ஆண்டு 2 மாதம் ஜெயில் தண்டனையும், ரூ.28 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

வீரான் என்கிற பீர்முகமதுவிற்கு இரட்டை ஆயுள், 9 ஆண்டு ஜெயில் மற்றும் ரூ.29 ஆயிரம் அபராதமும், முருகேசனுக்கு ஆயுள் தண்டனையும், பிற பிரிவுகளில் 6 ஆண்டு ஜெயில், 2 மாத சிறையும் ரூ.18 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனைகளை அனைவரும் ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி கலைவாணி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

முந்திக்கிட்டான்யா!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்து விடுவாரோ என்று பயந்து மனைவியை கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். மாலூரில் இந்த பயங்கர சம்பவம் நடந்து உள்ளது.

கோலார் தங்கவயல், அக்.21- 2009. செய்தி - தினத்தந்தி

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் அரிசிகெரே பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 34). கல் உடைக்கும் தொழிலாளி. இவருக்கு நேத்ராவதி (28) என்ற மனைவியும், ஒரு பெண், ஒரு ஆண் குழந்தையும் இருந்தனர்.

தற்போது மஞ்சுநாத் கோலார் மாவட்டம் மாலூர் கொண்டசெட்டிஹள்ளி கிராமத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை செய்து வந்தார். இவர் கள்ளக்காதல் விவகாரத்தில் தனது மனைவி நேத்ராவதியை எரித்துக் கொலை செய்ததாக போலீசாரிடம் ஒப்புக் கொண்டார். இதைத்தொடந்து, மஞ்சுநாத்தை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியானது.

கள்ளத்தொடர்பு

மஞ்சுநாத்தின் சொந்த ஊரான அரிசிகெரேயில் வசித்தபோது, அவரது மனைவி நேத்ராவதிக்கும், தும்கூர் மாவட்டம் பாவகடா பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் மஞ்சுநாத் தனது மனைவி நேத்ராவதியிடம், ரவிச்சந்திரன் உடனான உறவை துண்டித்து விடும்படி கண்டித்து இருக்கிறார். ஆனால், நேத்ராவதி அப்போது மட்டும் பேச்சுக்கு ஒப்புக் கொண்டு, ரவிச்சந்திரனிடம் தொடர்ந்து கள்ளத்தொடர்பு வைத்ததாக கூறப்படுகிறது.

இதனால் மஞ்சுநாத், நேத்ராவதியை அரிசிகெரேயில் விட்டு விட்டு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு மாலூருக்கு வந்து விட்டார். இந்த நிலையில், ஊர் பெரியவர்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவி இருவரையும் அழைத்து பேசி சமரசம் செய்து, சேர்ந்து வாழும்படி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். அதன்பிறகு மஞ்சுநாத் மனைவி மற்றும் குழந்தைகளுடன் கொண்டசெட்டிஹள்ளிக்கு வந்து குடியேறினார்.

ஆனாலும், அதன்பிறகும் நேத்ராவதி தனது கள்ளத்தொடர்பை விடவில்லை. கள்ளக்காதலன் ரவிச்சந்திரனுடன் செல்போனில் பேசுவதுடன் கள்ளதொடர்பும் வைத்திருந்தார்.

எரித்துக் கொலை

இதனால் வேதனை அடைந்த மஞ்சுநாத், தனது மனைவி நேத்ராவதியை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பது என்று முடிவு செய்தார். அதன்படி, நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு நேத்ராவதியை எழுப்பி வெளியே அழைத்து வந்தார். அப்போது, அங்கு நேத்ராவதியின் கள்ளக்காதலன் ரவிச்சந்திரன் நின்று கொண்டிருந்தார்.

இதனால் மனைவி நேத்ராவதியும், கள்ளக்காதலன் ரவிச்சந்திரனும் சேர்ந்து தன்னை கொலை செய்து விடுவார்களோ என்று மஞ்சுநாத்துக்கு பயம் வந்து விட்டது. உடனே வீட்டுக்குள் ஓடி சென்று உருட்டுக்கட்டையை எடுத்து வந்து, ரவிச்சந்திரனை தலையில் ஓங்கி அடித்தார். இதில், பலத்த காயம் அடைந்த ரவிச்சந்திரன் அங்கிருந்து ஓடி விட்டார்.

அதன்பிறகு போலீசில் மனைவி நேத்ராவதி புகார் செய்து விடுவாளோ என்று பயந்து, அவரை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலை செய்தார். பின்னர் பொழுது விடிவதற்குள் மனைவியின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி அருகே கம்பனஹள்ளி கிராமத்தில் உள்ள தைல மர தோப்புக்கு எடுத்து சென்றார். அங்கு நேத்ராவதியின் உடலை தீ வைத்து எரித்தார்.

அதன்பிறகு ஊருக்கு செல்வதற்காக மஞ்சுநாத் தான் வேலை செய்யும் குவாரி உரிமையாளரிடம் ரூ.1,500 வாங்கிக் கொண்டு புறப்பட்டார். ஆனால் அதற்குள் போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்து விட்டனர் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கள்ளக்காதலில் கற்பை எதிர்பார்த்த சாமியார் கள்ளக்காதலியுடன் தீக்குளிப்பு

பழிக்கு பழி வாங்குவதற்காக உடலில் தீ வைத்து கொண்டு கள்ளக்காதலியை கட்டி பிடித்த சாமியார் இருவரும் கருகி பலியானார்கள்

சென்னை, அக். 13- 2009

சென்னை ஒட்டேரி கொசப்பேட்டை வெங்கடாத்திரி நாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி (30). இவரது கணவர் யுவராஜ் (45). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விஜயலட்சுமி, கணவர் யுவராஜ் மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

பின்னர் விஜயலட்சுமி அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் (40) என்ற சாமியாருடன் தொடர்பு வைத்திருந்தார். சங்கருடன் தாலி கட்டாத கணவன் - மனைவியாக வாழ்ந்து வந்தார்.

விஜயலட்சுமிக்கு வேறு சில ஆண்களுடனும் கள்ளக்காதல் இருந்துள்ளது. இதை சங்கர் கண்டித்துள்ளார். ஆனால் விஜயலட்சுமியோ நான் உனக்கு பொண்டாட்டி இல்லை, கள்ளக்காதலி மட்டுமே. பிடிக்கவில்லை என்றால் பிரிந்து விடலாம் என்று திமிராக பேசி உள்ளார்.

இப்படி அடிக்கடி இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு விஜயலட்சுமி வேறொரு கள்ளக் காதலனை பார்ப்பதற்கு வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். இதை சாமியார் சங்கர் எதிர்த்துள்ளார். மேலும் கண்டித்து அடித்து உதைத்துள்ளார். ஆனால் அதையும் மீறி விஜயலட்சுமி வீட்டை விட்டு புறப்படத் தயாரானார்.

திடீரென ஆவேசமான சங்கர் மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். கொளுந்து விட்டு எரிந்த தீயுடன் ஓடிச்சென்று கள்ளக் காதலி விஜயலட்சுமியை கட்டிப் பிடித்தார். இதனால் அவர் மீதும் தீ பற்றியது.

விஜயலட்சுமி உடும்பு பிடியில் சிக்கியது போல் தப்பிக்க முடியாமல் அவதிப்பட்டார். அவரது உடலிலும் தீ கொளுந்து விட்டு எரிந்தது. இருவரும் தீயில் கருகினர்.

பலத்த காயம் அடைந்த இருவரையும் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இருவரும் பரிதாபமாக பலியானார்கள்.

ஓட்டேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முன்னதாக ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுல் ஸ்டேன்லியிடம் விஜயலட்சுமி மரண வாக்குமூலம் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

"நான் மற்ற ஆண்களுடன் பழகுவதை தவறாக நினைத்து எனது கணவர் என்னை விட்டு பிரிந்து சென்றார். (அது அந்தக் கணவனின் தவறு. கள்ளக்காதலைப் போய் தவறாக நினைக்கலாமா? அது ஒவ்வொரு மணமான பெண்ணுக்கும் உள்ள அடிப்படை உரிமை அல்லவா! அதற்காகத்தானே மனோரமா போன்றவர்கள் அயராது பாடுபடுகிறார்கள்!)

அதன் பிறகு சாமியார் சங்கருடன் குடித்தனம் நடத்தினேன். அவரும் என்னை சந்தேகித்தார். வீட்டை விட்டு வெளியே புறப்பட தயாரான போது தீக்குளித்த அவர் என்னை கட்டி பிடித்து கொண்டு என் உடலிலும் தீ பரவ காரணமானார். ஆண் நண்பர்களின் தொடர்பு என் உயிருக்கு உலை வைத்து விட்டது."

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

செய்தி: மாலைமலர், தினத்தந்தி

=======================


ஐயோ, பாவம் அந்த விஜயலட்சுமி அம்மையார். அவர் மட்டும் தொடர்ந்து உயிரோடு இருந்திருந்தால் அவருக்கு சிறப்பான எதிர்காலம் இருந்திருக்கும். மாதர் திலகம் மனோரமா அவர்கள் கள்ளக்காதலுக்கு கணவனின் ஆண்மைக் குறைவுதான் காரணம் (அதாவது அவனுடைய ஆண்குறியின் விறைப்புத் தன்மை மனைவியின் தேவைக்கேற்ப இல்லை - அதுதானே பொருள்!) என்று போராடத் துவங்கியிருக்கும் இயக்கத்தில் சேர்ந்து அவர் புகழ் பெற்றிருக்கலாம். அவருடைய கள்ளக்காதலர்களுக்கும் சேர்த்து முன்னாள் கணவனையே படியளக்க வைத்திருக்கலாம். அதற்குத்தானே தேசிய பெண்கள் வாரியம் சட்டம் இயற்றக் கோரியிருக்கிறது!

கள்ளக்காதலர்களுக்கு இனிமேல் வளமான எதிர்காலம் காத்திருக்கிறது நம் நாட்டில்!

சரி, அந்த அப்பாவி கணவர்களின் கதி? அவன்தானே அய்யா கள்ளக்காதல் செய்யும் மனைவிக்கு பணம் கொடுத்து அழவேண்டும்? அவன் ஏன் திருமணம் செய்துகொண்டான்; அனுபவிக்கட்டும்!

நண்பரின் மனைவியுடன் கள்ளக்காதல்; போலீஸ்காரர் கைது

ஸ்ரீபெரும்புதூர், அக்.13- 2009 (தினத்தந்தி)

நண்பரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்ததாக போலீஸ்காரர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

போலீஸ்காரர்கள்

ஸ்ரீபெரும்புதூர் சிவன் கோவில் தெருவில் வசிப்பவர் ரமேஷ்குமார் (வயது 31). இவர் சென்னை சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வினிதா (28). இவர்களுக்கு 3 வயதில் மகனும், 1 வயதில் மகளும் இருக்கின்றனர்.

காவலர் பயிற்சியின் போது ரமேஷ்குமாருக்கும், காஞ்சீபுரம் புல்லலூர் காலனியை சேர்ந்தவர் ஜெகன்நாதன் (29) என்பவருக்கும் நட்பு ஏற்பட்டதாக தெரிகிறது. தற்போது ஜெகன்நாதன் காஞ்சீபுரம் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

கள்ளக்காதல்

நண்பர்கள் என்பதால் ஜெகன்நாதன் அடிக்கடி ரமேஷ்குமாரின் வீட்டிற்கு செல்வார். இந்த நிலையில் ஜெகன்நாதனுக்கும், வினிதாவுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கணவர் வீட்டில் இல்லாத போது கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு ரமேஷ்குமார் இரவு பணிக்கு சென்று விட்டார். அந்த நேரத்தில் ஜெகன்நாதன் வந்து தங்கியுள்ளார். எதிர்பாராதவிதமாக ரமேஷ்குமார் அதிகாலை 41/2 மணிக்கே வீடு திரும்பினார். உள்ளே ஜெகன்நாதன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார்.

போலீஸ்காரர் கைது

அதனை தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் இன்ஸ்பெக்டர் ஜான் விக்டர் விரைந்து சென்று விசாரணை நடத்தினார். பின்னர் ரமேஷ்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸ்காரர் ஜெகன்நாதனை கைது செய்தனர். போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

================================

நன்றாகக் கவனியுங்கள். கள்ளக் காதலில் ஈடுபட்ட ஆண் மட்டும் தான் கைது ஆனான். கள்ளக் காதல் ஜல்ஸா செய்த மனைவி?

கள்ளக்காதல் (adultery) சட்டப்படி கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவி மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாது. அப்படித்தான் சட்டம் சொல்கிறது. அவள் அடுத்த ஆளைத் தேடுவாள். அவளைத் திருமணம் செய்து கொண்ட முட்டாள்தனத்திற்காக அவளுடைய கணவன் அந்த சோரம் போகும் பெண்டாட்டியை வாழ்நாள் முழுதும் சுமந்து கொண்டு சவரட்சணை செய்ய வேண்டியதுதான். அது அவன் தலையெழுத்து!

According to the present law, only a man can be prosecuted for the offence of adultery with the woman being granted immunity from proceedings on account of her position in society.

Section 497 of Indian Penal Code is copied below:

"497. Adultery.—Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall NOT be punishable as an abettor."
Section 497 unequivocally conveys that the adulteress "wife" is absolutely free from criminal responsibility. She is also not to be punished (even) for "abetting" the offence. Section 497, by necessary implication, assumes that the "wife" was a hapless victim of adultery and not either a perpetrator or an accomplice thereof. Adultery, as viewed under IPC, is thus an offence against the husband of the adulteress wife and, thereby, an offence relating to "marriage".

Premarital, extramarital or unwed sexual activities are not barred or prohibited hence no offence punishable in any Indian law. A wife’s sexual intercourse with other/s is also no offence, hence no prosecution or punishment to her. Even her sex partner also cannot be punished, if was unaware of her wedlock or had sex with consent or connivance of her husband. Her husband alone can prosecute him but not the police, court or the wife. After divorce also her earning husband has to maintain or pay till she remarries (if unable), even if she is permanently & continuously enjoying sex with all other/s. Pre marital sexual intercourses with other/s cannot be a ground to seek divorce under Hindu/Special Marriage Act. Thus a female’s physical sexual relations with persons/s of her choice (with their consent) is not an offence or prohibited / barred in any Indian law and she is at liberty to enjoy the sex freely and fearlessly. A male’s physical sexual relations with any 16+ female (with her consent) is no offence or barred / prohibited in any Indian Law, unless she is in the wedlock of somebody else and is done knowing her wedlock or without her husband’s consent or connivance. Courts have to believe that children born during the wedlock are her husband’s legitimate ones. He is bound to maintain or pay their expenses; till sons are 18+ and daughters are married. Prostitution (commercial sex trade, offering sex for monetary gain) alone is an offence punishable in Indian laws.

இதற்கு மனோரமா, ராமாத்தாள் போன்றோர் என்ன பதில் வைத்திருக்கிறார்கள்? ஆண்கள் எக்கேடோ கெட்டு அழிந்து போகட்டும் என்றா!

தேவை ஒரு கள்ளக்காதல் பாதுகாப்பு இயக்கம்!

மனோரமாவும் கேப்டன் விஜயகாந்தும் தான் கவனிக்க வேண்டும்!

ஸ்ரீவில்லிபுத்தூர், அக்.3- 2009. செய்தி - தினத்தந்தி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது பெருமாள்சேரி. இந்த பகுதியை சேர்ந்தவர் ராக்கப்பன் (வயது35). இவரது மனைவி பழனியம்மாள் (25). இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வாழ்ந்து வந்தார். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் மல்லபுரம் பகுதியை சேர்நத மாரிகுரு (29) என்ற வாலிபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.

இந்தக் கள்ளக்காதலால் பழனியம்மாள் தற்போது 7 மாதம் கர்ப்பமாக உள்ளார். இதற்கிடையில் மாரிகுரு (கள்ளக் காதலன்) தனது அக்கா மகள் தாமரைச் செல்வியை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் பழனியம்மாள் உறவை துண்டித்துக் கொண்டார். இதனால் பழனியம்மாள் குடும்ப நடத்த பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பம் நடத்த பணம் கேட்டு மாரிகுரு வீட்டிற்கு பழனியம்மாள் வந்துள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த மாரிகுரு வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து பழனியம்மாள் மீது ஊற்றியதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த பழனியம்மாள் தனக்குதானே தீ வைத்துக் கொண்டுள்ளார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர்.

இந்தசம்பவம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் சேகர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி மாரிகுருவை கைது செய்தார்.

பாட்டு டீச்சர் கொலை. கள்ளக்காதல் அம்பலம்



(செய்தி: தினமலர், தினகரன், தினத்தந்தி)

முந்தைய செய்திகள்:

சென்னை அசோக்நகர் இரட்டைக் கொலையில் புதிய திருப்பம்
அனந்தலட்சுமிக்கு, நள்ளிரவில் வந்த செல்போன் அழைப்புகள்
போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

சென்னை, செப்.27- 2009

சென்னை அசோக்நகரில் நடந்த இரட்டைக் கொலையில் புதிய திருப்பமாக, கொலையுண்ட அனந்தலட்சுமிக்கு நள்ளிரவில் வந்த செல்போன் அழைப்புகள் பற்றி பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

தாய்-மகன் கொலை

சென்னை அசோக்நகர் போஸ்டல் காலனியில் வசித்து வந்த அனந்தலட்சுமி (வயது 39), அவரது மகன் சூரஜ் (13) ஆகியோர் பட்டப்பகலில் கத்திரிக்கோலால் குத்தி படுகொலை செய்யப்பட்டனர். அனந்தலட்சுமியின் கணவர் ராமசுப்பிரமணி, பெங்களூர் மருந்து கம்பெனியில் மாதம் ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் வேலை பார்த்து வருகிறார். அவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள்.

கொலை செய்யப்பட்ட அனந்தலட்சுமி அணிந்திருந்த நகைகள் மற்றும் பணத்தை பறித்துச்சென்ற கொலையாளி, வீட்டில் பீரோவில் இருந்த 40 பவுன் நகைகளை அப்படியே விட்டுச்சென்று இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. சென்னையை உலுக்கிய இந்த இரட்டைக் கொலை பற்றி விசாரிப்பதற்காக 8 தனி போலீஸ் படைகள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு படையும் வெவ்வேறு கோணத்தில் விசாரணையை மேற்கொண்டன.

புதிய திருப்பம்

முதல் கட்ட விசாரணையில், தெரிந்த நபர்தான் இந்தக் கொலையை செய்திருக்கிறார் என்பது தெரியவந்தது. இத்தகைய கொலைகளில் துப்பு துலக்குவதில் செல்போன் உரையாடல்கள் முக்கிய பங்கு வகித்து உள்ளன. இந்த வழக்கிலும் செல்போன் தொடர்புதான், புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

மிகவும் முன் எச்சரிக்கையாக நடந்துகொள்வதாக கருதி, அனந்தலட்சுமி மற்றும் சூரஜின் செல்போன்களை கொலையாளி எடுத்துச் சென்றுவிட்டான். ஆனால், போலீசார் மிகவும் சாதுரியமாக செயல்பட்டு, அவர்களுடைய தொலைபேசி எண்களைக்கொண்டு, அந்த செல்போன் நிறுவன அலுவலகம் மூலம் பல விவரங்களை போலீசார் சேகரித்து உள்ளனர். அதில் பரபரப்பான தகவல்கள் கிடைத்து உள்ளன.

நள்ளிரவு அழைப்புகள்

குறிப்பிட்ட செல்போன் எண்களில் இருந்து அனந்தலட்சுமிக்கு அடிக்கடி அழைப்புகள் வந்திருந்தன. மேலும் அனந்தலட்சுமியின் செல்போனில் இருந்தும் அந்த எண்களுக்கு பல முறை பேசப்பட்டு இருந்தது. இவர்கள் எந்த நேரத்தில், எங்கிருந்து பேசினர் என்ற விவரங்கள் அனைத்தும் செல்போன் எக்ஸ்சேஞ்சில் இருந்து கிடைத்தது.

அதை பரிசோதித்துப் பார்த்ததில் சில `அழைப்பு'கள் நள்ளிரவு நேரத்தில் மட்டுமே பேசப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அதிலும் குறிப்பாக சில அழைப்புகள், ஒன்றரை மணி நேரம் வரை நீடித்துள்ளது.

அந்த வகையில் கடைசியாக அனந்தலட்சுமி பேசிய `செல்போன் அழைப்பு' 40 நிமிடங்கள் பேசப்பட்டதாக தெரிய வந்தது. கொலை நடந்த அன்று, குறிப்பிட்ட அந்த எண்ணுக்கு அனந்தலட்சுமி அதிகமாக பேசி இருந்தார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆட்டோ டிரைவர் உள்பட 15 பேர்

அனந்தலட்சுமியுடன் செல்போனில் பேசிய 15 நபர்களை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். அவரது வீட்டுக்கு அடிக்கடி வரும் ஆட்டோ டிரைவரிடமும் தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விசாரணையில் போலீசாருக்கு கொலைக்கான முக்கிய துப்பு கிடைத்துள்ளது. சந்தோஷ் என்ற 35 வயது வாலிபரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சில தகவல்கள் கூறுகின்றன. அனந்தலட்சுமிக்கு யாருடன் நட்பு உள்ளது என்பது பற்றியும் விசாரிக்கப்படுகிறது.

வித்தியாசமான கொலை

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

இரட்டைக் கொலை விவகாரத்தில் ஒரே கோணத்தில் மட்டும் விசாரணையை நடத்தவில்லை. பிடிபட்ட நபர்களிடம் மேற்கொள்ளப்படும் விசாரணையில்தான் சில விவகாரம் உறுதி செய்யப்படும். தற்போது எங்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம் ஓரளவு உறுதியாகி இருக்கிறது.

கத்திரிக்கோலால் கொலை செய்வது சற்று வித்தியாசமானது. ஏனென்றால், மிகுந்த வேகத்தில் குத்தினால்தான் உடலுக்குள் கத்திரிக்கோல் இறங்கும். எனவே கொலை செய்து கொள்ளை அடிக்கும் நோக்கம் இருந்திருந்தால், கொலையாளி கத்தி அல்லது அரிவாளைத்தான் கொண்டு வந்திருப்பான்.

வாக்குவாதம்

ஏதோ ஒரு விவகாரம் பற்றி பேசுவதற்காக தெரிந்த நபர்தான் வீட்டுக்கு வந்திருக்க வேண்டும். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் நடந்திருக்கிறது. அப்போது தகராறு முற்றி, அருகில் இருந்த கத்திரிக்கோலால் அனந்தலட்சுமியின் கழுத்தில் கொலையாளி குத்தி இருக்கிறான். ரத்தம் பீரிட்டு வந்ததும், தன் மீது தெளித்து விடக் கூடாது என்பதற்காக கழுத்தை அவன் அழுத்திப் பிடித்து இருக்கிறான். அப்போது கழுத்து எலும்பில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.

தாயைத் தாக்கிய போது தடுக்க வந்த மகனும் அதே வகையில் குத்தி கொலை செய்யப்பட்டு இருக்கிறான். அதே நேரத்தில் ஆதாயத்துக்காக (கொள்ளையடிப்பதற்காக) கொலை நடந்ததா? என்ற கோணத்தில் நடத்தும் விசாரணையையும் நாங்கள் கைவிடவில்லை.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
== =============

அசோக்நகர் இரட்டைக் கொலையில் திருப்பம்.
பாட்டு டீச்சரின் நண்பர் தலைமறைவு
பதிவு செய்த நாள்: செப்டம்பர் 30, 2009

சென்னை, : சென்னை அசோக் நகர் போஸ்டல் காலனி 3வது தெருவை சேர்ந்தவர் ராமசுப்பிரமணியம். இவரது மனைவி அனந்தலட்சுமி, மகள் சோபனா, மகன் சூரஜ். அனந்தலட்சுமி, சூரஜ் ஆகியோர் வீட்டில் தனியாக இருந்தபோது படுகொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து, தனிப்படை தீவிரமாக விசாரித்து வருகிறது.

அனந்தலட்சுமியுடன் 5 ஆண்கள் அடிக்கடி செல்போனில் பேசியிருப்பது தெரிந்தது. பெங்களூரில் ராமசுப்பிரமணியம் வேலை செய்வதால், அசோக் நகர் வீட்டில் அனந்தலட்சுமி தனியாக இருக்கும் போது அவர்கள் வந்து சென்றுள்ளனர்.

அதில் கேரள ஜோசியர் சந்தோஷடீம் ஒருவர். அவரிடம் விசாரணை நடத்திய போது, கொலைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியுள்ளார்.

மற்றவர்களில் 2 பேர், அனந்தலட்சுமியின் கணவர் ராமசுப்பிரமணியத்தின் சென்னை அலுவலகத்தில் பணியாற்றிய வர்கள். இவர்களில் கணேஷ் என்பவர் வேறு கம்பெனிக்கு சென்று விட்டார். ஆனாலும், ராமசுப்பிரமணியம் கேட்டுக் கொண்டபடி, வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி அனந்தலட்சுமியிடம் கொடுத்து வந்துள்ளார் கணேஷ். கிறிஸ்டோபர் என்பவரும் அனந்தலட்சுமிக்கு உதவி செய்து வந்துள்ளார். இதனால் 2 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினர்.

கிறிஸ்டோபரின் நண்பர் வேல்முருகன், மருந்து கம்பெனி விற்பனை பிரதிநிதி. கிறிஸ்டோபருடன் அனந்தலட்சுமியின் வீட்டுக்கு சென்று வந்துள்ளார்.

அவர் தனியாக இருப்பதை அறிந்து கிறிஸ்டோபருக்கு தெரியாமல் அடிக்கடி அனந்தலட்சுமியை சந்தித்துள்ளார். போனில் இருவரும் மணிக்கணக்கில் பேசியுள்ளனர். இதனால் ஈக்காடுதாங்கலில் தங்கி இருக்கும் வேல்முருகனின் வீட்டுக்கு சென்றனர். ஆனால், அனந்தலட்சுமி கொலை செய்யப்பட்ட 24ம் தேதி முதல், வீட்டை பூட்டி விட்டு சென்றது தெரியவந்தது. அவருடைய சொந்த ஊரான நெல்லையில் போலீசார் விசாரித்தனர். அங்கும் வேல்முருகன் வரவில்லை.

இதனால், அவரது உறவினர்கள் உள்ள திருச்சி, மதுரை, புதுவை ஆகிய இடங்களுக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். இவர் 24ம் தேதி வரை சென்னையில் இருந்துள்ளார். அன்று பகலில்தான் கொலை நடந்துள்ளது. இதனால் அவர் மீதான சந்தேகம் வலுத்துள்ளது.

அவரது செல்போன் எண்ணை வைத்து நடத்திய விசாரணையில், அனந்தலட்சுமி மட்டுமின்றி மேலும் பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. திருமணமான பெண்களையே தனது வலையில் வீழ்த்தியுள்ளார். வெளி ஊர்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார். இதுபற்றிய புகார் எழுந்ததால், வேல்முருகனை வேலையில் இருந்து மருந்து கம்பெனி நிர்வாகம் நீக்கியுள்ளது. எனினும், 6 மாதமாக சம்பளம் இல்லாமலேயே வீட்டு வாடகை,
சாப்பாடு, ஊர் சுற்ற என்று எல்லாவற்றுக்கும் பணத்துக்கு கஷ்டப்படாமல் ஜாலியாக இருந்துள்ளார். அதற்கு தேவையான பணத்தை பல பெண்களிடம் கறந்துள்ளார். இதனால் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
===========

இன்றைய செய்தி:

சென்னை, அக்.2, 2009:

சென்னை அசோக் நகர் போஸ்டல் காலனியை சேர்ந்த பாட்டு டீச்சர் அனந்தலட்சுமி, அவரது மகன் சூரஜ் ஆகியோர் கடந்த 24ம் தேதி வீட்டில் படுகொலை செய்யப்பட்டனர். விசாரணையில் அனந்தலட்சுமிக்கு ஆண் நண்பர்கள் அதிகம் இருந்தது தெரிய வந்தது.

அவர்களில் நெல்லையை சேர்ந்த வேல்முருகன் என்பவர் அனந்தலட்சுமியுடன் நெருங்கி பழகியது தெரிந்தது. அவர் சென்னை ஈக்காட்டுதாங்கலில் வசித்தார். திருமணமாகாதவர். மெடிக்கல் ரெப். வேலை பார்த்து வந்தார். வேல்முருகன் பற்றி பகீர் தகவல்கள் தெரிய வந்தன.

திருமணமான பெண்கள் பலரிடம் நெருங்கி பழகி தன் வலையில் விழ வைத்துள்ளார் வேல்முருகன். அனந்தலட்சுமி வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார். மேற்கு மாம்பலத்தில் வசிக்கும் சானியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண், அனந்தலட்சுமி வீட்டுக்கு வந்து செல்வார். இவர் கேரளாவை சேர்ந்தவர், திருமணமானவர். அவருடன் பழக ஆரம்பித்து அவரது வீட்டுக்கும் சென்று வந்துள்ளார் வேல்முருகன். இந்த விஷயம் தெரிந்து ஆத்திரம் அடைந்த அனந்தலட்சுமி, இருவரையும் பிரித்து வைத்துள்ளார். இது தொடர்பாக ஒரு வாரமாக அனந்தலட்சுமியுடன் வேல்முருகன் தகராறு செய்துள்ளார்.

சானியாவுடன் தன்னை சேர்த்து வைக்குமாறு கூறியுள்ளார். அனந்தலட்சுமி கேட்கவில்லை. தன்னுடன்தான் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி இருக்கிறார். (அப்படிப்போடு! கள்ளக்காதலில் கூட சக்களத்தி சண்டை டோய்!) வேல்முருகன் சகவாசத்தை நிறுத்தாவிட்டால், கணவரிடம் கூறிவிடுவதாக சொல்லி சானியாவையும் அனந்தலட்சுமி மிரட்டி உள்ளார். வேல்முருகன் மற்றும் சானியாவுடன் அனந்தலட்சுமி தகராறு செய்ததே கொலையில் முடிந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், அனந்தலட்சுமியின் பிரேதப் பரிசோதனையில் அவர் பகல் ஒரு மணிக்கும், சூரஜ் 2 மணிக்கும் இறந்தது தெரிய வந்தது. பகல் 1.30 மணிக்கு சூரஜ் வீட்டுக்கு வெளியே விளையாடி இருக்கிறான். இதனால் வேல்முருகன் வந்ததும் சூரஜ்ஜை விளையாட அனந்தலட்சுமி அனுப்பி இருக்கலாம். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் அனந்தலட்சுமியை வேல்முருகன் கொலை செய்திருக்கலாம்.

வீட்டுக்கு தான் வந்தது சூரஜுக்கு தெரிந்ததால், அவனை வீட்டுக்குள் அழைத்து சமையல் அறையில் அவனையும் கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

வேல்முருகனின் செல்போனை ஆய்வு செய்ததில், அனந்தலட்சுமி தவிர வேறு 4 பெண்களின் எண்களும் இருந்தன. அவற்றில் விருகம்பாக்கம் பெண் டாக்டரும் ஒருவர். மாதக் கணக்கில் அவருடன் வேல்முருகன் பழகியுள்ளார்.

செலவுக்கு அவ்வப்போது பணமும் பெற்றுள்ளார். அவரது நடவடிக்கை பிடிக்காததால் தொடர்பை பெண் டாக்டர் துண்டித்துள்ளார். பின்னர், அம்பத்தூரை சேர்ந்த பெண் ஊழியரை வேல்முருகன் வளைத்துள்ளார், அவரும் திருமணமானவர். கிண்டியில் ஒரு பெண்ணுடன் வேல்முருகன் தொடர்பு வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், அனந்தலட்சுமியின் கணவர் ராமசுப்பிரமணியத்தின் கம்பெனியில் பணியாற்றிய கிறிஸ்டோபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இவரும் நெல்லையை சேர்ந்தவர். வேல்முருகனும் கிறிஸ்டோபரும் நெருங்கிய நண்பர்கள். இருவருக்கும் திருமணமாகவில்லை. இதனால் அடிக்கடி அனந்தலட்சுமியை இருவரும் சந்தித்து வந்துள்ளனர். அதில் வேல்முருகன் வலையில் அனந்தலட்சுமி வீழ்ந்திருக்கிறார்.

விசாரணையில் இதுபோன்ற பல தகவல்கள் கிடைத்ததால், வேல்முருகனை பிடிக்க தமிழகம் முழுவதும் போலீசார் வலை விரித்தனர். இந்நிலையில் அவர் ஊட்டி நீதிமன்றத்தில் சரணடைய முயன்றார். ஆனால், மாஜிஸ்திரேட் விடுமுறை என்பது தெரிய வந்ததால், அங்கிருந்து மேட்டுப்பாளையம் வந்து நீதிமன்றத்தில் நேற்று மாலை சரணடைந்தார். அதைத் தொடர்ந்து அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனால் அவரை காவலில் எடுத்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

================

இந்தக் கள்ளக்காதல் தகராறில் ஒரு பாவமும் அறியாத அந்தச் சிறுவன் சூரஜ் பலியானதுதான் பரிதாபம்.

ஆனால் அனந்த லட்சுமியின் பெண் தப்பினாள். கணவனும் தப்பினான். அவன் பெங்களூரில் இருந்ததால் உயிர் தப்பியிருக்கிறான். ஏனெனில் சமீபத்தில் டஜன் கணக்கில் நிகழ்ந்துள்ள கள்ளக்காதல் கொலைகளைப் பார்க்கும்போது, கணவன் தான் முதலில் பலியாகியிருப்பான்!

அதுசரி, ஒரு வயது வந்த பெண் தன்னுடன் வளரும்போது ஒரு தாய் இதுபோல் கணடவனோடு உறவு வைத்துக் கொண்டிருந்தாரே, அந்தப் பெண்ணும் அந்தப் பையனும் எப்படிப்பட்ட சூழலில் வளர்ந்திருந்திருக்கிறார்களோ!

கள்ளக்காதல் கொலை ஸ்பெஷல்

வார இறுதியில் வலைப்பதிவு வாசகர்களாகிய உங்களுக்கும், அரசியல் குட்டையைக் குழப்பி அதிலிருந்து எப்படி மீன் பிடிப்பது என்று விளங்காமல் இன்னும் மேன்மேலும் குழம்பிக் கொண்டிருக்கும் "கேப்டன்" [*] மற்றும் இப்போது அந்தக் குட்டையில் இறங்கத் துடித்துக் கொண்டு வாயில் வந்ததை பினாத்திக் கொண்டிருக்கும் மனோரமா ("ஆச்சி" இல்லை, இல்லை "மறத்தி"!) போன்றோருக்கும் சில கள்ளக் காதல் + கொலை செய்திகளை சமர்ப்பிக்கிறோம்! (கொஞ்சம் பழசு, அட்ஜஸ்ட் பண்ணிக் கோங்க!)

[*](அதென்ன கேப்டன்? எந்த ராணுவத்தில் கேப்டனாக இருந்தார்? அல்லது எந்தக் கப்பலில்? அல்லது சின்ன வயதில் தீபாவளியன்று "கேப்" மட்டும் வெடிப்பதில் எக்ஸ்பர்ட் என்பதால் "கேப்டன்" என்ற பட்டம் கிட்டியிருக்குமோ? எப்படியோ போகட்டும்; நமக்கு வேலையிருக்கிறது. இதை எழுதி முடிப்பதற்குள் இன்னும் இரண்டு பெண்குலத் திலகங்கள் தங்கள் கள்ளக் காதலர்களுடன் கூட்டுச் சேர்ந்து தன் பெற்றோரையும் பெற்ற குழந்தைகளையும் கொலை செய்து ஏரக் கட்டியிருப்பார்கள்!)

க.கா+கொ - 1

மருமகனுடன் உல்லாசமாக இருப்பதற்கு தடையாக இருந்த மகளைக் கொன்று விட்டு, அந்தப் பழியை கணவர் மீது போட்டு சிறையில் தள்ளி விட்டு, மருமகனுடன் உல்லாசமாக இருந்து வந்த பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மதுரையை உலுக்கியுள்ள இந்த சம்பவம் குறித்த பரபரப்பு விவரம்...

மதுரை பைபாஸ் சாலை சொக்கலிங்க நகரைச் சேர்ந்தவர் பரமசிவம். 65 வயதாகும் இவரை பாம்பே பரமசிவம் என்றுதான் அழைப்பார்கள். மும்பையில் பல காலம் வசித்து வந்த பரமசிவம், மும்பை தமிழ்ச் சங்கத்திற்குத் தலைவராகவும் இருந்துள்ளார்.

பின்னர் மதுரை திரும்பிய பரமசிவம் ஹோட்டல்களை வைத்து தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சங்கம்மாள். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மகள் உள்ளார்.

முதல் மனைவி இறந்த பின்னர் மேலூரைச் சேர்ந்த பாக்கியலட்சுமி (50) என்ற பெண்ணை 2வது கல்யாணம் செய்து கொண்டார். பாக்கியலட்சுமி, பரமசிவத்திற்கு உறவுக்காரப் பெண் ஆவார்.

பாக்கியலட்சுமிக்கு வரலட்சுமி, மீனா என இரு மகள்களும், ஒரு மகனும் பிறந்தனர்.

வரலட்சுமியை, காண்டிராக்டரான ராஜமாணிக்கம் (இவருக்கு வயது 38) என்பவரைக் கல்யாணம் செய்து வைத்தனர். பிரசவத்தின்போது வரலட்சுமி எதிர்பாராதவிதமாக இறந்து போனார்.

இதனால் ராஜமாணிக்கம் மனைவியை இழந்து வாடிக் கொண்டிருந்தார். அவரது வீட்டுக்குச் சென்று அவ்வப்போது ஆறுதல் கூறுவாராம் பாக்கியலட்சுமி. ஆறுதல் கூறப் போன அவருக்கும், மருமகனுக்கும் இடையே தகாத தொடர்பு ஏற்பட்டது. இருவரும் கள்ளக்காதலில் வீழ்ந்தனர்.

இந்த உறவு இருவருக்கும் பிடித்துப் போக இப்படியே இருந்து விடலாம் என தீர்மானித்தனர். இருவரும் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டுமானால், அதற்கு நீங்கள் மறுபடியும் எனது வீட்டுக்கே மருமகனாக வர வேண்டும் என்று கூறிய பாக்கியலட்சுமி, தனது 2வது மகள் மீனாவை, கல்யாணம் செய்து வைப்பதாக ராஜமாணிக்கத்திற்கு உறுதியளித்தார்.

பின்னர் தனது கணவரிடம் பேசி அவரது சம்மதத்தைப் பெற்று மீனாவை, ராஜமாணிக்கத்திற்கு 2வது திருமணம் செய்து வைத்தார். இதன் மூலம் எந்தவிதத் தடையும் இல்லாமல் பாக்கியலட்சுமி, ராஜமாணிக்கம் கள்ளத் தொடர்பு தொடர்ந்தது.

தனது கணவருக்கு மும்பையில் உள்ள சொத்துக்களை அப்படியே அபகரிப்பதற்காக, அவரது முதல் தாரத்து மகளான ஜெயலட்சுமியை, தனது தம்பிக்கே கட்டி வைத்துள்ளார் பாக்கியலட்சுமி.

அனைவரும் கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் இருந்துள்ளனர். மீனா மூலமாக தனது மாமியாருடன் நெருங்கி விட்ட ராஜமாணிக்கம், தங்கு தடையில்லாமல் இந்த முறையற்ற காம லீலையில் ஈடுபட்டு வந்தார்.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இருவரும் உல்லாசமாக இருப்பார்களாம். அடிக்கடி கோவிலுக்குப் போவது, விசேஷங்களுக்குப் போவதாக கூறி விட்டு ஊர் ஊராக போய் ஜாலியாக இருந்துள்ளனர்.

ஒரு நாள் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் ராஜமாணிக்கமும், பாக்கியலட்சுமியும் ஜாலியாக இருந்துள்ளனர். அப்போது மீனா அங்கு வந்து விட்டார். தனது தாயும், கணவரும் இருந்த கோலத்தைப் பார்த்து அவருக்கு இதயமே வெடித்து விட்டது போலாகி விட்டது.

இப்படி அசிங்கமாக நடந்து கொண்டு விட்டீர்களே என்று தாயிடமும், கணவரிடமும் கண்ணீர் வீட்டுக் கதறியுள்ளார். ஆனால் இருவருமே அதை ஒரு பிரச்சினையாகவே எடுத்துக் கொள்ளவில்லையாம்.

மகள் பார்த்து விட்டாளே என்று எந்த கூச்ச நாச்சமும் இல்லாமல் மருமகனுடனான கள்ளத் தொடர்பை தொடர்ந்து வந்துள்ளார் பாக்கியலட்சுமி. ராஜமாணிக்கமும் மனைவியைக் கண்டுகொள்ளாமல் உல்லாசமாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் தாயுடனான கள்ளக் காதலை விடுமாறு கணவரிடம் வற்புறுத்தி வந்துள்ளார் மீனா. ஆனால் அவர் கேட்பதாக இல்லை. இந்த நிலையில்தான் கடந்த மார்ச் மாதம் 3ம் தேதி கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது பரமசிவம் வீட்டின் மேல் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார். பாக்கியலட்சுமி வெளியில் போயிருந்தார். மாமியாருடனான சந்தோஷ உறவுக்கு இடையூறாக இருக்கிறாளே என்று ஆத்திரமடைந்த ராஜமாணிக்கம், மீனாவின் கழுத்தை சேலையால் நெரித்துள்ளார்.

அந்த சமயத்தில் பாக்கியலட்சுமி வீட்டுக்கு வந்தார். மகளின் கழுத்தை மருமகன் நெரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த அவர், மருமகனுடன் சேர்ந்து மகளைக் கொலை செய்தார். பின்னர் இருவரும் மீனாவை தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது போல செட் செய்து விட்டு வீட்டுக் கதவை வெளியில் பூட்டினர்.

பிறகு வெளியிலிருந்து வீட்டுக்கு வந்தது போல காட்டிக் கொண்டு மகள் தற்கொலை செய்து விட்டதாக கூறி கதறி அழுது நாடகமாடினர். சப்தம் கேட்டு கீழே இறங்கி வந்த பரமசிவத்தைப் பார்த்து, மகளிடம் மோசமாக நடந்து கொள்ள� முயன்றார், ஆனால் மீனா மறுக்கவே அவளைக் கொலை செய்து விட்டதாக அசிங்கமான புகாரை தனது கணவர் மீது சுமத்தினார் பாக்கியலட்சுமி.

இதையடுத்து போலீஸார் அப்பாவியான பரமசிவத்தைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறைக்குப் போன பிறகுதான் தனது மனைவி மற்றும் மருமகனின் மோசமான நடத்தை பரமசிவத்திற்குத் தெரிய வந்தது.

மகளைக் கொன்று விட்டு, கணவரையும் சிறைக்கு அனுப்பி விட்ட சந்ேதாஷத்தில் இருந்த பாக்கியலட்சுமி, மருமகனுடன் முன்பை விட படு தீவிரமாக உல்லாசம் அனுபவித்தார். அது மட்டுமல்லாமல் அவருடன் ஜோடி போட்டுக் கொண்டு ஊர் ஊராக போய் ஜாலியாக இருந்துள்ளார்.

இந்த நிலையில், தனது மனைவி மற்றும் மருமகனின் நடத்தை குறித்து போலீஸில் விரிவாக சொல்லி இருவரையும் கைது செய்ய வைக்க பரமசிவம் சிறையில் இருந்தபடியே நடவடிக்கை மேற்கொண்டார்.

இது ராஜமாணிக்கத்திற்குத் தெரிய வந்தது. இதையடுத்து வழக்கை திசை திருப்புதவற்காக மீனா வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்தார்.

அதன்படி சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த விசாரணையில் ராஜமாணிக்கம், பாக்கியலட்சுமியின் குட்டு வெளிப்பட்டது. இருவரின் கள்ளக்காதலும் வெளி வந்தது.

இதையடுத்து வாடிப்பட்டியில் பாக்கியலட்சுமியை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். ராஜமாணிக்கம் தலைமறைவாகி விட்டார்.

அவர் தற்போது மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நேற்று நீதிபதி ராஜசூர்யா முன்பு விசாரணைக்கு வந்தது.

தனது மனுவில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, நானும், எனது மாமியாரும் சேர்ந்து மீனாவைக் கொன்றதாக சிபிசிஐடி போலீஸார் செய்தி பரப்பியுள்ளனர். இது கிரிமினல் அவமதிப்புச் செயலாகும்.

எனவே சிபிசிஐடி போலீஸ் மீது கிரிமினல் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய அனுமதி அளிக்க வேண்டும். எனக்கு முன்ஜாமீன் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இந்த வாதத்தை விசாரித்த நீதிபதி ராஜசூர்யா, சிபிசிஐடி மீது கிரிமினல் அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி வழங்கினார். மேலும், இந்த வழக்கு தொடரப்பட்டால், அன்றைய தினமே முன்ஜாமீன் மீதான மனுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உத்தரவிட்டார்.

செய்தி - தட்ஸ்தமிழ்.

---------------

க.கா+கொ - 2

கணவனை கொலை செய்துவிட்டு கள்ளக் காதலனான தனது வீட்டு டிரைவருடன் தப்பியோடிய பெண் காதனுடன் தற்கொலை செய்து கொண்டார்.




குற்றாலம் வைரம் நகரில் உள்ள லாட்ஜில் நேற்று காலை கணவன்-மனைவி என்ற பெயரில் ஒரு தம்பதி அறை எடுத்தது. அவர்கள் தங்கியிருந்த கதவு இரவு 11 மணி வரை திறக்கப்படாததால் ஜன்னல் கதவை விடுதி ஊழியர்கள் திறந்து பார்த்தனர்.

அப்போது அந்த ஆணும் பெண்ணும் மின் விசிறியில் தூக்கு மாட்டிக் கொண்டு பிணமாக தொங்கிக் கொண்டிருந்தனர். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் வந்து விசாரணை நடத்தியதில் தற்கொலை செய்து கொண்டது திண்டிவனத்தைச் சேர்ந்த கள்ளக் காதல் ஜோடி தாமோதரன் என்ற சண்முகநாதன் (32) மற்றும் வைதேகி (35) என தெரியவந்தது.

இந்த வைதேகி பெண் போலீஸாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் திண்டிவனத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரான வழக்கறிஞர் நடராஜன் என்பவரது மனைவி ஆவார். இருவரும் காதல் திருமணம் முடித்தவர்கள். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந் நிலையில் தான் தனது வீட்டு கார் டிரைவரான தாமோதரனுடன் வைதேகிக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இந்தக் கள்ளக் காதலை நடராஜன் கண்டித்ததால் கணவன், மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டது. இந் நிலையில் போலீஸ் வேலையை வைதேகி ராஜினாமா செய்துள்ளார். தாமோதரனும் வேலையை விட்டு நீக்கப்பட்டார்.

ஆனாலும் நடராஜன் வெளியே சென்றுவிடும்போதெல்லாம் தாமோதரன் வைதேகி வீட்டுக்கு வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார்.

இதை அறிந்த நடராஜன் வைதேகியை கண்டிக்கவே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இந் நிலையில் கடந்த 3ம் தேதி நடராஜன் தனது படுக்கை அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இது குறித்து திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த ஆரம்பித்தனர். இதையடுத்து வைதேகியும், தாமோதரனும் தலைமறைவாயினர். இதனால் நடராஜனை மனைவியும் கள்ளக் காதலனும் தான் கொலை செய்திருக்க வேண்டும் எனக் கருதிய போலீசார் அவர்களைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில் தான் இந்த கள்ளக் காதல் ஜோடி ஒவ்வொரு ஊராக சுற்றிவிட்டு கடைசியாக குற்றாலத்துக்கு வந்து லாட்ஜில் தங்கியுள்ளனர். எப்படியும் போலீசாரிடம் பிடிபட்டு விடுவோம் என்ற அச்சத்தில் இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இவர்கள் தூக்கு போட்டுக் கொண்ட அறையில் இருந்து வைதேகி எழுதிய கடிதம் ஒன்றும் கிடைத்துள்ளது. அதில், எங்கள் தற்கொலைக்கு யார் தூண்டுதலும் காரணம் இல்லை. எங்கள் படத்தை யாருக்கும் கொடுக்க கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தனது திண்டிவனம் வீட்டு போன் நம்பர் மற்றும் திண்டிவனம் காவல் நிலைய எண்ணையும் எழுதி வைத்துள்ளார்.

செய்தி - தட்ஸ்தமிழ்

திமுக முன்னாள் எம்.எல்.ஏயின் தம்பியை கள்ளக் காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி

முன்னாள் எம்.எல்.ஏ. தம்பி கொலையில் மனைவி, கள்ளக்காதலன் கைது. பரபரப்பு வாக்குமூலம்

விளாத்திகுளம், செப்.25- 2009. செய்தி - தினத்தந்தி, தினமலர்

முன்னாள் எம்.எல்.ஏ. தம்பி கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். கைதான கள்ளக்காதலன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் சங்கரராமு மகன் குட்டி என்ற ராஜராஜன் (வயது 40). விவசாயி.

இவருக்கு கிருஷ்ணகுமாரி (36) என்ற மனைவியும், கோகுல் (13) என்ற மகனும், ரம்யா (8) என்ற மகளும் உள்ளனர். கிருஷ்ணகுமாரி சத்துணவு அமைப்பாளராக உள்ளார்.


ராஜராஜனின் அண்ணன் குமரகுருபர ராமநாதன் விளாத்திகுளம் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. ஆவார். இவர் தற்போது ம.தி.மு.க. மாவட்ட பொருளாளராக உள்ளார். ராஜராஜன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் ராஜராஜன் கொலை தொடர்பாக அதே ஊரை சேர்ந்த ஷாஜகான் (24) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

கைதான ஷாஜகான் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

எனது சொந்த ஊர் அரியநாயகிபுரம். எனக்கு திருமணம் ஆகவில்லை. 9-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். எங்களது வீட்டின் பக்கத்திலேயே ராஜராஜனின் வீடு உள்ளது. எனவே அவரிடம் பழக்கம் இருந்ததால் அவரது வீட்டிற்கு சென்று அனைவரிடமும் அன்பாக பழகுவேன்.

கடந்த 2 மாதங்களாக ராஜராஜன் மனைவி கிருஷ்ணகுமாரிக்கும், எனக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. ஆனால் என்னை யாரும் சந்தேகப்படவில்லை. நான் சென்னையில் ஒரு பழைய இரும்புக்கடையில் வேலை செய்து வருகிறேன். அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வேன்.

கடந்த மாதம் நான் சென்னையில் இருந்தபோது கிருஷ்ணகுமாரி, செல்போனில் என்னிடம், தனது கணவர் குடித்துவிட்டு வந்து அடிக்கடி தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறினார். இந்தநிலையில் கடந்த வாரம் நான் ரம்ஜான் கொண்டாடுவதற்காக ஊருக்கு வந்து இருந்தேன்.

அப்போது, தனது கணவரை கொலை செய்தால்தான் நாம் சந்தோஷமாக இருக்க முடியும் என்று கிருஷ்ணகுமாரி என்னிடம் கூறினார். இதனால் ரம்ஜான் பண்டிகை அன்று நான், ராஜராஜன் மற்றும் எனது நண்பர்கள் அலியாஸ், ராஜேந்திரன், காளிமுத்து, வேல்சாமி, முருகேசன் ஆகியோர் அரியநாயகிபுரம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் மது அருந்தினோம். பின்னர் அனைவரும் வீட்டுக்கு வந்துகொண்டு இருந்தோம்.

அப்போது மற்றவர்களை அனுப்பிவிட்டு ராஜராஜனை மட்டும் தனியாக அழைத்துக் கொண்டு வந்து மீண்டும் 2 பேரும் மது அருந்தினோம். இதனால் ராஜராஜன் அதிக போதையில் இருந்தார்.

அப்போது நான் அருகில் கிடந்த உருட்டைக்கட்டையால் ராஜராஜன் கழுத்தில் அடித்தேன். இதனால் படுகாயம் அடைந்த அவர் அந்த இடத்திலேயே செத்தார்.

பின்னர் அவரிடம் இருந்த செல்போனை எடுத்து அதில் இருந்த சிம்கார்டை தனியாக கழற்றிக்கொண்டு வந்து கிருஷ்ணகுமாரியிடம், செல்போனையும், சிம்கார்டையும் கொடுத்துவிட்டு ராஜராஜனை கொலை செய்ததை கூறினேன். பிறகு கிருஷ்ணகுமாரியிடம் என்னுடைய ரத்தக்கறை படிந்த சட்டையை கொடுத்துவிட்டு வேறு சட்டை வாங்கி அணிந்து கொண்டு வீட்டுக்கு சென்றுவிட்டேன். ஆனால் போலீசார் என்னை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை செய்ததில் ராஜராஜனை நான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டேன்.

இவ்வாறு ஷாஜகான் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக தெரிகிறது.

இதையொட்டி கிருஷ்ணகுமாரியை போலீசார் கைது செய்தனர். மேலும் ஷாஜகான் வீட்டில் இருந்த கிருஷ்ணகுமாரியின் தற்போதுள்ள போட்டோ மற்றும் சின்ன வயதில் எடுத்த போட்டோக்களையும் கைப்பற்றினர். கிருஷ்ணகுமாரியிடம் இருந்து ராஜராஜனின் செல்போன், சிம்கார்டை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட 2 பேரும் விளாத்திகுளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் வைக்கப்பட்டனர்.

இவ்வாறு போலீசார் கூறினர். முதலில், கணவர் கொலை செய்யப்பட்டது குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என, கிருஷ்ணகுமாரி நாடகமாடினார். போலீசார், "உரிய முறையில்' விசாரித்தபோது நடந்த சம்பவம் அனைத்தையும் விவரித்தார். கிருஷ்ணகுமாரி, அவரது கள்ளக்காதலன் ஷாஜகானை விளாத்திகுளம் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் அவர்களை சிறையிலடைத்தனர்.
===========
மனோரமா, ஆச்சி,
உங்க இயக்கம் என்ன ஆச்சீ?

40 வயதுக்காரிக்கு 20 வயது கள்ளக்காதலன்!

கள்ளக்காதல் படுத்தும் பாடு!

20 வயது லாரி கிளீனருடன் ஓடிய 40 வயது பெண் கவுன்சிலர்
"கணவர் வேண்டாம்... காதலனே போதும்'' என்று போலீசாரிடம் எழுதிக் கொடுத்தார்

பெங்களூர், செப்.24- 2009. தினத்தந்தி

கணவர், குழந்தைகளை விட்டு விட்டு கிராம பஞ்சாயத்து பெண் கவுன்சிலர் ஒருவர், தன்னை விட 20 வயது குறைந்த லாரி கிளீனரான தனது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.

பஞ்சாயத்து பெண் உறுப்பினர்

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் சனிவார சந்தே கிராம பஞ்சாயத்து உறுப்பினராக இருப்பவர் மஞ்சுளா (வயது 40). இவருக்கும், ரவி என்பவருக்கும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 14 மற்றும் 10 வயதில் 2 பிள்ளைகள் உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு மஞ்சுளா வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை கணவர் ரவியும், உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனாலும், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

வாலிபருடன் ஓட்டம்

இதற்கிடையே, மஞ்சுளாவுக்கும், 20 வயதான லாரி கிளீனர் சீனிவாஸ் என்ற வாலிபருக்கும் ஏற்கனவே கள்ளக்காதல் இருந்தது. மஞ்சுளா தனது இளம் காதலர் சீனிவாசுடன் செல்வதற்காக வீட்டை விட்டு ஓடியது தெரிய வந்தது.

சீனிவாஸ் லாரி உரிமையாளரின் பணத்தை திருடிக்கொண்டு அந்த பணத்தில் மஞ்சுளாவை கூட்டிக்கொண்டு பெங்களூருக்கு வந்தார். இங்கு அவர்கள் லாட்ஜில் அறை எடுத்து தங்கிக் கொண்டு பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தனர்.

ஓட்டலில் தங்கினர்

பின்னர் கள்ளக்காதல் ஜோடி பெங்களூரில் இருந்து குஷால் நகருக்கு சென்றனர். அங்கு ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினர்.

இதற்கிடையே, லாரி உரிமையாளர் தனது பணத்தை திருடிச் சென்ற சீனிவாசை பற்றி விசாரித்தார். அப்போது சீனிவாஸ், மஞ்சுளாவுடன் உல்லாசமாக சுற்றித்திரிவது தெரியவந்தது. உடனடியாக அவர் இதுபற்றி மஞ்சுளாவின் கணவர் ரவிக்கு தகவல் தெரிவித்தார்.

பொதுமக்களிடம் பிடிபட்டனர்

இதனால் அதிர்ச்சி அடைந்த ரவி தனது உறவினர் மற்றும் ஊர் பெரியவர்களுடன் குஷால் நகரில் உள்ள ஓட்டலுக்கு சென்று, அங்கு சீனிவாசுடன் தங்கி இருந்த மஞ்சுளாவை மடக்கி பிடித்தார்.

மஞ்சுளாவை கணவர் ரவியுடன் சேர்ந்து வாழும்படி பெரியவர்கள் அறிவுரை கூறினர். எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் மஞ்சுளா தனது நிலையில் இருந்து சற்றும் இறங்கி வரவில்லை. வாழ்ந்தால் சீனிவாசுடனே வாழ்வேன் என்று உறுதியாக கூறி விட்டார். குழந்தைகளை என்னுடன் அனுப்ப வேண்டாம், நீங்களே வளர்த்துக் கொள்ளுங்கள் என்றும் கூறி விட்டார்.

கணவருடன் வாழ பிடிக்கவில்லை

இதையடுத்து, மஞ்சுளாவையும், சீனிவாசையும் அவர்கள் அழைத்துக் கொண்டு போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அங்கு போலீசார் மஞ்சுளாவிடம் பேசினர். ஆனாலும், அதிலும் மஞ்சுளா மசியவில்லை. தனது இளம் காதலருடன் சேர்ந்து வாழ்வதில் உறுதியாக இருந்தார்.

`எனக்கு கணவர் ரவியுடன் சேர்ந்து வாழ்வதற்கு விருப்பம் இல்லை. நான் எனது காதலர் சீனிவாசுடன் சேர்ந்து வாழவே விரும்புகிறேன்' என்று பொதுமக்கள் முன்னிலையில் போலீசாரிடம் எழுதி கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து, மஞ்சுளா, அவரது இளம் காதலர் சீனிவாசுடன் அங்கிருந்து சென்றார். அவரது கணவர் ரவி தனது 2 குழந்தைகளுடன் சோகத்துடன் வீட்டுக்கு திரும்பினார்

===============

இதையே அந்த ஆண் செய்திருந்தால் அவன்மீது ஆயிரக் கணக்கான கேசுகளைப் போட்டு உள்ளே தள்ளியிருப்பார்கள். மேலும் அந்தப் பெண்குலத் திலகம் அவன்மீது ஜீவனாம்சக் கேசு போடுவாள். உடனே நம் நீதிபதிகள், "அவள் பாவம், கள்ளக் காதலனுடன் சேர்ந்து குடும்பம் நடத்தப் பணம் வேண்டாமா, நீ உன் கிட்னியை விற்றாவது ஜீவனாம்சம் கொடுக்கத்தான் வேண்டும்" என்று தீர்ப்பு அளிப்பார்.

தேவையா இந்தத் திருமணங்கள்!

தன் சுகம், தன் வெறி, பெற்ற குழந்தைகளின் கதியென்ன தாயே!

கணவனும் பெற்றோரும் கள்ளக்காதலைக் கண்டித்ததால் கள்ளக் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது. ஆனால் அந்தப் பெண்ணுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. அந்தக் குழந்தைகளைப் பற்றி பெற்ற தாய் எண்ணிப் பார்க்கவில்லை.

தாய்மையின் பெருமையைப் பற்றியெல்லாம் பழைய பஞ்சாங்கம் போல் பேசித் திரியாதீர். இது பெண்விடுதலைக் காலம். அந்தப் பெண்ணின் பாலியல் ஆசைகள் முழுமையாக திருப்தி செய்யப்படவேண்டும். அதுதான் முக்கியம். அதை விடுத்து குழந்தைகள், தாய்மை, பண்பாடு, கற்பு போன்ற பத்தாம் பசலிக் கோட்பாடுகளைக் கூறி பெண்ணினத்தை அடிமைப் படுத்த விடமாட்டோம்!

மனோரமா அம்மையாரின் கூற்றுப்படி அனைத்து கள்ளக்காதல்களும் கணவன்மார்கள் ஆண்மையில்லாமல் இருப்பதால்தான் நிகழ்கிறதாம். ஆண்மையின் அளவுகோல் என்ன, சில பெண்களிடம் மேலோங்கி நிற்கும் பாலியல் வெறியின் அளவுகோல் என்ன, கட்டின் புருஷனையும், பெற்ற பிள்ளைகளையும் விட்டுவிட்டு கள்ளக் காதலனோடு ஓடும் பெண்கள் கணவன் தன்னைத் திருப்தி செய்யாததால்தான் ஓடுகிறார்களா, அல்லது எளிதில் திருப்தியாகாமல் வகை வகையான செக்ஸ் அனுபவங்களைத் தேடி ஓடுகிறார்கள, அல்லது திருமணத்திற்கு முன்பே இருந்த கள்ள உறவை விடமுடியாமல் தொடர்கிறர்களா என்பதெல்லாம் நாம் அறியோம். வேண்டுமானால் இந்த விஷயத்தைப் பற்றிப் போராட இயக்கம் தொடங்கியிருக்கும் மனோரமா அம்மையாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

இனி இன்றைய செய்தியைப் பார்ப்போம்.

பேரணாம்பட்டு அருகே கள்ளக்காதல் ஜோடி தூக்கு போட்டு தற்கொலை

பேரணாம்பட்டு, செப்.17- 2009. செய்தி - தினத்தந்தி.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கள்ளக்காதல் ஜோடி

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த எருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன் வெங்கடேசன் (வயது 27). திருமணமாகாதவர். இவர் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். மேலும் அங்கேயே ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்தார். இவரது வீட்டின் பக்கத்தில் பேரணாம்பட்டு அருகே உள்ள பரவைக்கல் மந்திரிபட்டி பகுதியை சேர்ந்த காஞ்சனா (27) என்பவர் திருமணமாகி, தனது கணவர் வரதராஜனுடன் வசித்து வந்தார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அப்போது வெங்கடேசனுக்கும், காஞ்சனாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இது காஞ்சனாவின் கணவர் வரதராஜுக்கு தெரிய வந்ததும் அவர் தனது மனைவியை கண்டித்துள்ளார்.

இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெங்கடேசனும், காஞ்சனாவும் பெங்களூரில் இருந்து எருக்கம்பட்டுக்கு புறப்பட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் தனது மனைவியை காணாத வரதராஜன், வெங்கடேசனுடன் காஞ்சனா சென்றிருக்கலாம் என்று கருதி எருக்கம்பட்டு கிராமத்திற்கு வந்து வெங்கடேசனின் தந்தை சுப்பிரமணியிடம் நடந்த சம்பவம் குறித்து கூறினார். அதற்கு சுப்பிரமணி, அவர்கள் இருவரும் வந்ததும் பேசி முடிவு எடுக்கலாம் என்று கூறியதை அடுத்து வரதராஜன் அங்கிருந்து சென்று விட்டார்.

இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு வெங்கடேசனும், காஞ்சனாவும் எருக்கம்பட்டிற்கு வந்துள்ளனர். அப்போது சுப்பிரமணி, திருமணமான பெண்ணை அழைத்து கொண்டு வந்திருக்கிறாயே என்று வெங்கடேசனை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த வெங்கடேசன் அதே பகுதியில் உள்ள தனது நண்பர் கார்த்தி என்பவரது வீட்டிற்கு காஞ்சனாவுடன் சென்று உள்ளார்.

பின்னர் இருவரும் கார்த்தி வீட்டில் சாப்பிட்டு உள்ளனர். அப்போது கார்த்தி வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.

தூக்கு போட்டு தற்கொலை

இந்தநிலையில் கள்ளக்காதல் ஜோடி வெங்கடேசன், காஞ்சனா இருவரும் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். சிறிது நேரம் கழித்து வீட்டிற்குள் சென்று பார்த்த கார்த்தி, இருவரும் தூக்கில் தொங்குவது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து பேரணாம்பட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பேரணாம்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பேரணாம்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பஞ்சாட்சாரம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கணவனுக்கு ஒரு வெட்டு கள்ளக் காதலனுக்கு ஒரு வெட்டு

முதலில் கணவனைக் கொன்ற கதை (தினமலர்)

குடிபோதை கணவரை வெட்டி கொலை செய்த மனைவி கைது: கழிவுநீர் தொட்டியில் உடல் மீட்பு .செப்டம்பர் 16,2009.

தூத்துக்குடி மாவட்டம் கலியாவூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கல்யாணி(55). அவரது மனைவி பூலம்மாள்(47). திருமணமாகி 30 ஆண்டுகள் ஆன அவர்களுக்கு குழந்தையில்லை.

மதுகுடிக்கும் பழக்கமுள்ள கல்யாணி, பணம் கேட்டு அடிக்கடி மனைவி பூலம்மாளை அடித்து உதைப்பார். கடந்த 10ம் தேதி குடிபோதையில் வந்த கல்யாணி, பணம் கேட்டு பூலம்மாளிடம் வாக்குவாதம் செய்தார். தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த பூலம்மாள், கணவர் கல்யாணியை கீழே தள்ளினார். அரிவாளால் அவரது கழுத்தில் வெட்டினார்.

படுகாயமடைந்த கல்யாணி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடலை வீட்டின் முன்புறமுள்ள கழிவு நீர்த் தொட்டிக்குள் போட்டு அதில் மண்ணைப் போட்டு, தொட்டியை மூடினார்.

"கணவர் எங்கே?' என கேட்டவர்களிடம், வெளியூர் சென்று விட்டதாக கூறினார். வீட்டின் அருகே துர்நாற்றம் வீசியதால் முறப்பநாடு போலீசுக்கு தகவல் சென்றது. போலீசார், பூலம்மாளிடம் விசாரித்துள்ளனர். "முறைப்படி'யான விசாரணையில், கணவரைக் கொன்று உடலை கழிவுநீர் தொட்டிக்குள் போட்டு மறைத்ததை ஒப்புக் கொண்டார்.

பூலம்மாளை போலீசார் நேற்று கைது செய்து, கல்யாணி உடலை மீட்டனர். கள்ளத்தொடர்பு காரணமாக, கொலை நடந்திருக்கலாம் என சந்தேகப்படும் போலீசார், கொலையில் உடந்தையாக இருந்ததாக பூலம்மாள் உறவினர் ஒருவரை தேடிவருகின்றனர்.
====================

செய்தி - 2

கள்ளக்காதலனை அரிவாளால் வெட்டிய பெண் போலீசில் சரண்

ஓட்டப்பிடாரம், செப்.16- 2009 (தினத்தந்தி)

கள்ளக்காதலனை அரிவாளால் வெட்டிய பெண் போலீசில் சரண் அடைந்தார். "கள்ளக்காதலனை நம்பி கணவரை கைவிட்டதாக" அவர் வாக்குமூலம் அளித்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேலமங்கலத்தை சேர்ந்த கலைச்செல்வன் மனைவி காஞ்சனா (வயது 35). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கலைச்செல்வன் நீண்ட காலமாக வெளிநாட்டில் வேலைபார்த்து வந்தார்.

காஞ்சனாவும், அவரது குழந்தைகளும் ஊரில் வசித்து வந்தனர். அப்போது காஞ்சனாவுக்கும், அதே ஊரை சேர்ந்த சேர்மராஜ் (35) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சேர்மராஜ் தங்கை சேர்மக்கனிக்கும், காஞ்சனா தம்பி ரத்தினவேலுவுக்கும் திருமணம் நடந்தது.

இதன் பின்னர் சேர்மராஜும், காஞ்சனாவும் உறவினர்கள் ஆகினர். இதன் பின்னர் அவர்களின் தொடர்பு மேலும் வலுத்தது. இந்த விவகாரம் வெளிநாட்டில் வேலைபார்த்த காஞ்சனாவின் கணவர் கலைச்செல்வனுக்கு தெரியவந்தது. ஊருக்கு வந்த அவர் மனைவியை கண்டித்தார். ஆனால் காஞ்சனாவுக்கு, சேர்மராஜை கைவிட மனம் இல்லை.

கடைசியில் கணவரா?, கள்ளக்காதலனா? என்ற கேள்வியில், காஞ்சனா கணவரை பிரிந்தார். இதனால் 2 ஆண்டுகளுக்கு முன்பு கலைச்செல்வன், காஞ்சனாவை விவாகரத்து செய்துவிட்டார். பின்னர் குழந்தைகளுடன், காஞ்சனா தனி வீட்டில் வசித்து வந்தார்.

இதன் பின்னர் சேர்மராஜ் அடிக்கடி காஞ்சனா வீட்டுக்கு வந்து போனார். இது அவரது குழந்தைகளுக்கு பிடிக்கவில்லை. எனவே சேர்மராஜை விட்டு பிரிய காஞ்சனா முடிவு செய்தார். ஆனால் நீண்ட நாட்களாக நீடித்த கள்ளத்தொடர்பை விட்டுவிட சேர்மராஜவக்கு மனம் இல்லை.

இதனால் அவர்களுக்குள் தகராறு இருந்துவந்தது. இந்த பிரச்சினைக்கு முடிவுகட்ட நேற்று முன்தினம் இரவு தனது வீட்டுக்கு வரும்படி காஞ்சனா, சேர்மராஜை அழைத்தார். அதன்படி அவரும் சென்றார். அப்போது இருவருக்கும் நீண்டநேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்த காஞ்சனா அரிவாளால், சேர்மராஜ் கழுத்தின் பின்புறத்தில் வெட்டியதாக கூறப்படுகிறது.

சேர்மராஜ் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். உடனே காஞ்சனா அங்கிருந்து ஓடிவிட்டார். படுகாயம் அடைந்த சேர்மராஜை, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் பசுவந்தனை சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசங்கரி வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) இசக்கி விசாரணை நடத்தினார். இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்ட காஞ்சனா சரண் அடைந்தார்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், "எனக்கும், சேர்மராஜுக்கும் நேற்று முன்தினம் இரவு வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, எனது கணவரை பிரிய நீதான் காரணம் என்றும், கள்ளக்காதலனை நம்பி கணவரை கைவிட்டு வாழ்க்கையை தொலைத்துவிட்டேன் என்றும் சேர்மராஜிடம் கூறினேன்.

இனிமேல் என்னை சந்திக்க வர வேண்டாம் என்றும் அவரிடம் தெரிவித்த போது, அவர் அலட்சியப்படுத்தினார். இதனால் ஆத்திரத்தில் அரிவாளால் வெட்டினேன்" என்று காஞ்சனா வாக்குமூலம் அளித்ததாக தெரிகிறது.

================

இரண்டு நிகழ்வுக்குமே கணவனின் ஆண்மையின்மைதான் காரணமாக இருந்திருக்குமோ? நமக்கென்ன தெரியும்? மனோரமா அம்மையார் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்!

வீட்டுக்கு வீடு 498A வழக்கு

இப்போதிருக்கும் நிலவரத்தைப் பார்க்கும்போது கூடிய சீக்கிறமே நம் நாட்டில் வீட்டிற்கு ஒரு 498A வழக்கு போடப்பட்டிருக்கும் நிலைமை ஏற்படும் என்று தோன்றுகிறது.

"எங்கள் வீட்டில் எல்லாமே பெண்கள்தானே! எங்கள் மேல் எப்படி அந்த வழக்கு போடமுடியும்?" என்று கேட்கிறீர்களா? கொஞ்சம் பொறுங்கள். கீழ்க்கண்ட கேள்விகளில் ஏதேனும் ஒன்றிற்கு உங்கள் பதில் "ஆமாம்" என்றிருந்தால் நிச்சயம் நீங்கள் 498A கேசுகளிலிருந்து தப்ப முடியாது:

  • உங்கள் நண்பர், உறவினர் யார் வீட்டிலாவது ஆண் பிள்ளைகள் இருக்கிறார்களா?
  • உங்கள் நெருங்கிய நண்பர் அல்லது உறவினர் எவரேனும் திருமணம் செய்து கொண்டுள்ளார்களா? அவரோடு நெருங்கிப் பழகி அவருடைய வீட்டிற்குச் சென்று வருவதுண்டா?
  • அக்கம் பக்கத்தில் எவர் வீட்டிலாவது குடும்பப் பூசல் ஏற்பட்டு அங்கு சென்று நீங்கள் எப்போதாவது அறிவுரையோ உதவியோ கொடுத்ததுண்டா?
  • எந்த மணமான பெண்ணிடமாவது ஏதாவது ஒரு காரணத்தினல் தகராறு ஏற்பட்டதுண்டா?
  • உங்கள் கீழ் பணிபுரியும் பெண் எவரிடமாவது கடுமையாக நடந்து கொண்டதுண்டா? அல்லது அவர்கள் எதிர்பார்த்தபடி நடந்து கொள்ளத் தவறியதுண்டா?

சரி, அவர்கள் கொடுக்கும் புகார் எப்படியிருக்கும்?

பதில்: எப்படி வேண்டுமானாலும் இருக்கும். அது அவர்களுடைய வக்கீலின் கற்பனைத் திறமை, இதுபோன்ற பொய் வழக்கு போட ஏதுவான சட்டங்களைப் பற்றிய அவருடைய அறிவு, புகாரில் கையெழுத்து போடும் புதுமைப் பெண்ணின் கீழ்த்தர மனப்பான்மையின் பாதாள நிலை இதைப் பொருத்து மாறும்.

மாதிரிக்கு இன்றைய தினத்தந்தியில் வெளிவந்துள்ள செய்தியை படியுங்கள்:-

பரமக்குடி,செப்.9-

மனைவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்ட வெளிநாட்டு என்ஜினீயர் மீது பரமக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

என்ஜினீயர்

பரமக்குடி பவுண்டு தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகன் ஜெயஆனந்த்(வயது 33). இவர் நெதர்லாந்தில் என்ஜினீயராக உள்ளார். இவருக்கும் திருச்சி உறையூரைச் சேர்ந்த மோகன்தாஸ் என்பவரது மகள் சங்கீதவாணிக்கும்(26) கடந்த 6.7.2006ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது பெண் வீட்டார் சார்பில் 60 பவுன் தங்க நகை மற்றும் சீர்வரிசைகள் கொடுத்துள்ளனர்.

இதற்கிடையே வாலிபர் ஜெயஆனந்த் தனக்கு தகுதி யில்லாத பெண்ணை திருமணம் செய்து வைத்து விட்டார்கள் என்று கூறி மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்தாராம். இதனைத் தொடர்ந்து திருமணம் முடிந்த ஒரு மாதத்தில் தம்பதிகள் நெதர்லாந்து சென்று விட்டனர். பின்னர் அங்கிருந்து சங்கீதவாணி பிரசவத்திற்காக தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். (இந்தக் கூற்றுகளில் தெரிகின்ற முரண்பாடுகளைக் கவனியுங்கள்)

வழக்கு

இந்த நிலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் அதனை கணவன் உள்பட அவரது வீட்டார் யாரும் பார்க்க வரவில்லையாம். மேலும் சங்கீதவாணி யின் நடத்தை குறித்து தவறாக பேசியதுடன் கூடுதலாக பணம் மற்றும் நகை கேட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த சங்கீதவாணி இதுகுறித்து பரமக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் புகார் செய்தார்.

இதைத்தொடர்ந்து மனுவை விசாரித்த நீதிபதி புகார் குறித்து நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் வெளிநாட்டு என்ஜினீயர் ஜெய ஆனந்த், இவரது தந்தை பாலசுப்பிரமணியன் ஆகியோர் மீது பரமக்குடி அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலர் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.