Showing posts with label அப்பாவி ஆண்கள். Show all posts
Showing posts with label அப்பாவி ஆண்கள். Show all posts

'டிவி' தொடர் பார்க்க விடாததால் மனைவி விவாகரத்து

மும்பை : "எனக்கு பிடித்த "டிவி' தொடர்களை பார்க்க அனுமதிக்க மறுக்கிறார்; இதனால், எங்களுக்குள் தினமும் சண்டை ஏற்படுகிறது. இதை மனதில் வைத்து, பலவகையில் என்னை துன்புறுத்துகிறார்!' - இப்படி சொல்லி, குடும்ப கோர்ட்டில் கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார் மனைவி. "திருமணத்தை முறிக்க விரும்பவில்லை; நான் சேர்ந்து வாழவே விரும்புகிறேன்' என்று கணவன் அப்பீல் செய்துள்ளார்.

செய்தி: தினமலர் - நவம்பர் 25,2009.
http://www.dinamalar.com/court_detail.asp?news_id=4542

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக இருக்கிறார் ஹர்ஷத்(34); இவர் மனைவி சீமா (31). சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்; திருமணம் ஆகி எட்டாண்டு ஆகிறது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. "என் கணவர் என்னை பலவகையில் கொடுமைப்படுத்துகிறார். எனக்கு பிடித்தமான "டிவி' தொடர்களை பார்க்க அனுமதிப்பதில்லை. இது தான் சண்டைகளுக்கு காரணம். அதனால், எனக்கு சரியான பாதுகாப்பு அளிப்பதில்லை. நள்ளிரவில் தனியாக ஆட்டோவில் பயணிக்க வைக்கிறார். இது போன்ற சித்ரவதைகளை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை' என்று குடும்ப நல கோர்ட்டில் மனு செய்தார் சீமா. வழக்கை விசாரித்த கோர்ட், அவர்களுக்கு விவாகரத்து அளித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து, மும்பை ஐகோர்ட்டில் கணவன் ஹர்ஷத் அப்பீல் செய்தார்.


"இந்திய சமுதாயத்தின் ஒரு முக்கிய அங்கம் திருமண பந்தம். அதை சாதாரணமாக முறிக்க முடியாது. "எந்த ஆதாரமும் இல்லாமல், என் மனைவி என் மீது சொன்னதை வைத்து விவாகரத்து கொடுத்திருப்பது சரியல்ல; திருமண முறிவு தொடர்பான வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் பல முறை சுட்டிக்காட்டிய கருத்துக்களை குடும்ப நல கோர்ட் காற்றில் பறக்க விட்டு, இப்படி விவாகரத்து அளித்துள்ளது. "எனக்கு திருமண முறிவுவேண்டாம். அதில் விருப்பமில்லை. என் குழந்தையை நான் வளர்க்க அனுமதிக்க வேண்டும்' என்று அப்பீல் மனுவில் அவர் கூறியுள்ளார்.

=====

பார்த்தீர்களா, பார்த்தீர்களா இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் அபலைப் பெண்கள் படும் அவலத்தை!

தனக்குப் பிடித்த டி.வி சேனலைப் பார்க்க இயலவில்லை. சரி, அந்தப் பெண்மணி தான் பெற்ற குழந்தையைக்கூட கவனிக்காமல் பொழுதுக்கும் டி.வி சீரியல்களைப் பர்த்துக் கொண்டிருந்திருக்கலாம், அதை கணவன் கண்டித்திருக்கலாம் - இப்படியெல்லாம் நீங்கள் நினைத்தால் அதற்கு உங்கள் ஆணாதிக்க மனப்பான்மைதான் காரணம்.

நல்ல வேளை, இந்தப் பெண்மணி விவாகரத்தோடு நிறுத்தி விட்டார். வேறு சில பெண்குலத் திலகங்கள் இன்னேரம் சட்டப் புத்தகத்தின் இண்டு இடுக்குகளில் உள்ள அத்தனை சட்டப் பிரிவுகளையும் கையிலெடுத்து கேசு மேல் கேசாக கணவன் மற்றும் அவனது பெற்றோர் மீது போட்டு நடுத்தெருவில் நிறுத்தியிருப்பார்கள்.

சரி, நீதி(!)மன்றங்கள் அவற்றுக்குச் செவி சாய்க்குமா என்றுதானே கேட்கிறீர்கள். ஹும். உங்களுக்கு நாட்டு நடப்பே தெரியாது போலிருக்கிறது!!

பலரும் அறிய காதல் லீலை - பாழாகிறது சமூக ஒழுங்கு

இது போன்ற குஜால் குமாரிகள் ஒவ்வொருவரும் இளம் வயதிலேயே அனைத்து சல்லாப சுகங்களையும் அனுபவித்து முடித்தபின், நல்ல பிள்ளை போல் நடித்து இன்னொரு விட்டில் பூச்சி ஆணைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள். "பேஷான ஜாதகம் போங்கோ. தசவிதப் பொருத்தமும் என்னமா அமைஞ்சிருக்கு" என்று புருடா விடும் ஜோசியனை நம்பியும், "அப்படியே மகாலட்சுமி மாதிரி இருக்காள்" என்று அசடு வழியும் கிழங்களின் சொற்படியும், ஒன்றையும் விசாரிக்காமல் இந்த ஜல்சா குமாரிகளை மணந்து கொள்ளப்போகிறார்கள் சில முட்டாள் ஆண்கள்.

இந்தப் பெண்களோ பழைய சல்லாபங்களை மறக்க முடியாததால் இல்லற வாழ்வில் மனம் பதிக்க மறுத்து கணவன் வீட்டிலிருந்து ஓட்டம் பிடித்துவிட்டு, அவனிடமிருந்து பணம் கறப்பதற்காக, "என் கணவனுக்கு ஆண்மை போதவில்லை. நான் செக்ஸில் திருப்தியே அடையவில்லை. அதனால் கணவன் எனக்கு 2 கோடி ரூபாய் கொடுக்கவேண்டும்" என்றும், "என்னை வரதட்சணை கேட்டு கணவன் வீட்டில் இருக்கும் 6 மாதக் குழந்தை தொடங்கி அவர்கள் வீட்டில் என்னைக் கடித்த கொசு வரையில் அனைவரும் பெரும் கொடுமை செய்தனர்" என்றும் புகார் கொடுப்பார்கள். மேலும் அதில் உப்பு, காரம் சேர்ப்பதற்காக, "கணவனுடைய 80 வயதான (தன் கையையே தூக்கச் சீவனில்லாத) தந்தை என்னைக் கையைப் பிடித்து இழுத்தார்", "75 வயதான என் மாமியார் 25 வயதான என்னை உதைத்தார்" என்று அந்தப் புகாரை அலங்காரம் செய்வார்கள். முத்தாய்ப்பாக, "இத்தகைய கொடுமைகளை எனக்கு இழைத்ததால் Sec 498A சட்டப்படி அவர்களைக் கைது செய்து உள்ளே போட வேண்டும். மேலும் அவர்கள் வீட்டை எனக்குக் கொடுத்துவிட்டு அவர்கள் நடுத்தெருவில் நிற்க வேண்டும். தவிர எனக்கு மாதா மாதம் 1 லட்ச ரூபாய் மெயிண்டெனன்ஸ் கொடுக்க வேண்டும்" இப்படிச் சொல்லிக் கேசு போட்டு நாற அடிப்பார்கள்.

உடனே அந்த லிஸ்டில் கண்ட அனைவரும் ஒரு வெள்ளிக்கிழமை சகல சௌபாக்கியங்களும் நிறைந்த நன்னாளின் நள்ளிரவில் கைது செய்யப்படும் சிறப்பும் நடந்தேறும். மேலும் இவர்கள் கேட்ட பணத்தையெல்லாம் கொடுக்கச் சொல்லி ஆணைகளும் வழங்கப்படும்!

இது போன்ற காதல் லீலைகள்தான் எதிர்வரும் கள்ளக்காதல், 498A, விவாகரத்து போன்ற சடங்குகளுக்கு அடித்தளம்!

சரி. இப்போது இன்றைய(நவம்பர் 11,2009)தினமலர் இணைய இதழில் வெளிவந்துள்ள சமூகப் பிரக்ஞையை வெளிப்படுத்தும் இந்தக் கட்டுரையை வாசியுங்கள். மேலும் அதன் இணையப் பக்கத்தில் கட்டுரைக்குக் கீழே நம் மக்கள் பதிந்துள்ள கருத்துரைகளையும் சற்றே காணுங்கள்!

அதன் சுட்டி இதோ.
----------------------

கோவை மாநகராட்சி வ.உ.சி. பூங்கா மற்றும் மிருகக்காட்சி சாலையில் ஆண், பெண் ஜோடிகள் பொது இடமென்றும் பாராமல் ஒழுங்கீனமான செயலில் ஈடுபடுகின்றனர். சமூக ஒழுங்கை சீர்குலையச் செய்யும் இவர்களை, மாநகராட்சி நிர்வாகமும், போலீசும் வேடிக்கை பார்ப்பது மக்களை முகம் சுழிக்க வைக்கிறது.

கோவை நகரவாசிகள், பள்ளி மாணவ, மாணவியரின் பிரதான பொழுது போக்கும் இடம் வ.உ.சி. பூங்கா மற்றும் மிருகக் காட்சி சாலை. பூங்கா மாலை 4.00 மணிக்கு திறக்கப்படுகிறது. மிருகக் காட்சிசாலை, செவ்வாய் தவிர பிற நாட்களில் காலை 10.00 முதல் மாலை 7.00 மணி வரை செயல்படுகிறது. மிருகக் காட்சிசாலையை பார்வையிட நகர் பகுதி பள்ளிகளில் இருந்து மட்டுமின்றி, புறநகர் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியரும் அதிகம் வருகின்றனர்.

ஒழுங்கீன செயல்கள்:

வ.உ. சி., பூங்கா மாலை 4.00 மணிக்கு திறக்கப்பட்டதும் ஆண், பெண் ஜோடிகள் நுழைந்து ஆங்காங்கு ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். புல்வெளியில், புதர் மறைவில், மரத்தின் பின்னால் என பல இடங்களிலும் தனியாக அமர்ந்து சேஷ்டையில் ஈடுபடுகின்றனர். ஒருவர் மீது ஒருவர் சாய்ந்தும், மடியில் படுத்தபடியும் காதல் விளையாட்டு புரிகின்றனர். இவர்களில் பலரும் வெளியூரைச் சேர்ந்தவர்கள் என்பதால், பூங்காவுக்கு வருவோரை பற்றிய எவ்வித கவலையும் கொள்வதில்லை. சமீபத்தில், இது போன்ற ஜோடிகளின் அத்துமீறல் அதிகரித்ததை தொடர்ந்து, ரேஸ் கோர்ஸ் போலீசுக்கு அதிகளவில் புகார்கள் சென்றன. மாலை நேரத்தில் திடீர் ரெய்டு நடத்திய போலீசார், பூங்காவில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்டிருந்த ஜோடிகளை பிடித்து கடும் எச்சரிக்கைக்கு பின் அனுப்பினர். ஓரிரு நாட்கள் போலீஸ் கண்காணிப்பும் தொடர்ந்த காரணத்தால், ஜோடிகளின் சில்மிஷ வேலைகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன. பின்னாளில் போலீசாரின் கண்காணிப்பு படிப்படியாக குறைந்து, தற்போது அத்துமீறல்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. இதை வேடிக்கை பார்த்து ரசிக்கவும், மொபைல் போன் கேமராவில் படம் பிடிக்கவும் சில வாலிபர்கள் சுற்றித்திரிகின்றனர்; சில ஜோடிகளை படம் பிடித்து மொபைல் போனில் பதிவு செய்யப்பட்ட போட்டோவை காண்பித்து மிரட்டி பணம் பறித்த சம்பவங்களும் நடந் துள்ளன. எனினும் ஆண், பெண் ஜோடிகள் வருவது குறைந்தபாடில்லை.

மாணவர்கள் "கட்':

வ.உ.சி., பூங்காவில் காதல் ஜோடிகளின் சில்மிஷ செயல்கள் ஒரு புறம் அதிகரித்திருக்க, மறுபுறம் பள்ளி மாணவர்கள் வகுப்பை "கட்' அடித்துவிட்டு, பூங்கா மற்றும் வ.உ.சி.,மைதானத்தில் சுற்றித்திரிவதும் அதிகம் நடக்கிறது. புத்தக மூட்டைகளை மைதானத்தின் ஓரத்தில் வைத்துவிட்டு, அங்குள்ள விளையாட்டு உபகரணங்களில் விளையாடுகின்றனர். மாலை நேரத்தில் பள்ளி வகுப்பு முடிந்து செல்வதை போல, வீட்டுக்கு கிளம்பிச் செல்கின்றனர். இந்த மாணவர்களில் சிலர் புகை பிடிக்கும் செயலிலும் ஈடுபடுகின்றனர்.

கஞ்சா ஆசாமிகள்:

கஞ்சா விற்கும் நபர்கள், பாலியல் தொழிலுக்கு ஆள் பிடிக்கும் புரோக்கர் நடமாட்டமும் வ.உ.சி., பூங்கா மற்றும் மைதானம் பகுதியில் அதிகரித்துள்ளது. கையில் "பேக்'குடன் சுற்றித் திரியும் நபர்கள் கஞ்சா பொட்டலங்களை திறந்தவெளியில் சர்வ சாதாரணமாக விற்கின்றனர். இதை வாங்கவும் "வாடிக்கையாளர்கள்' வருகின்றனர். இவர்கள், பள்ளி மாணவர்களிடம் பேச்சுக் கொடுப்பதால், மாணவர்களையும் கஞ்சா புகைக்கும் பழக்கம் தொற்றிக் கொள்ளும் அபாயமிருக்கிறது. இது போன்ற சட்டவிரோத செயல்களை தடுக்கவும், பொதுமக்கள் வந்து செல்லும் வ.உ.சி. பார்க்கில் ஆண், பெண் ஜோடிகளின் அத்துமீறலை முடிவுக்கு கொண்டு வரவும் மாநகர போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பது அவசியம்.

ஆசிரியை ஆவேசம்:

வ.உ.சி. பூங்காவுக்கு பள்ளிக் குழந்தைகளை அழைத்து வந்திருந்த ஆசிரியை கூறியதாவது:

வ.உ.சி. பூங்கா மட்டுமின்றி, மிருகக் காட்சி சாலை வளாகத்திலும் சிலர் ஜோடி, ஜோடியாக அமர்ந்துள்ளனர். பலரும் தங்களை கவனிப்பார்களே, என்ற கூச்சம் கூட அவர்களிடம் இல்லாதது கவலை அளிக்கிறது. மிருகங்களை பார்வையிட பள்ளிக் குழந்தைகளை அழைத்து வந்தால், இது போன்ற ஜோடிகள் தான் அதிகம் இருக்கின்றனர். இவர்களை பிள்ளைகள் வேடிக்கை பார்த்தபடி செல்லும்போது, நாங்கள் கண்டித்து அவர்களின் பார்வையை திசைதிருப்ப வேண்டியுள்ளது. இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண, கோவை மாநகராட்சி நிர்வாகம், கூடுதல் காவலாளிகளை நியமித்து கண்காணிக்கலாம். சில்மிஷ செயலில் ஈடுபடுவோரை, பார்க்கில் இருந்து வெளியேற்ற வேண்டும் அல்லது, பிடித்து போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு, ஆசிரியை தெரிவித்தார்.

தோண்டித் துருவி விசாரிக்காமல் திருமணத்திற்கு ஒப்புதல் அளிக்காதீர்கள்

ஏனெனில் இப்போதெல்லாம் பல பிஞ்சிலேயே பழுத்து விடுகின்றன. பள்ளி செல்லும் நாட்களிலேயே காமக் களியாட்டங்கள் கோலாகலமாக நடக்கின்றன. இவைகளுக்குப் பெயர் காதலாம். இத்தகைய கலாசாரச் சீரழிவை சினிமாவும் ஊடகங்களும் திட்டம் போட்டுப் பரப்பி வருகின்றன. ஸ்கூல் யூனிஃபார்மிலேயே நடக்கும் கண்றாவிகளை ஊருக்கு ஒதுப்புறமான இடங்களிலும், வள்ளுவர் கோட்டம் போன்ற பொது அரங்குகளிலும், பார்க்குகளிலும் தினமும் பார்க்க முடிகிறது.

தங்கள் குழந்தைகளின் எண்ண ஓட்டங்களையும் செக்ஸ் சார்ந்த நடவடிக்கைகளையும் பற்றி பெற்றோர்களுக்கு அறவே தெரியாது. அவர்கள் ஒரு கற்பனை உலகில் இருப்பார்கள். ஆகையால் அவர்கள் கொடுக்கும் உருவகத்தை வைத்துக் கொண்டு முடிவெடுக்காதீர்கள். "ரோஜா" படத்தில் வருவதுபோல் வெகு சிலர்தான் தகுந்த நேரத்தில் வெளியில் சொல்வார்கள். பல பெண்கள் கல்யாணம் ஒரு பக்கம், கள்ளக்காதல் ஒரு பக்கம் என்று இருந்து விடலாம் என்று திட்டமிட்டு கமுக்கமாக இருப்பார்கள். இன்னும் சில கேசுகளில் பெற்றோருக்கு இத்தகைய பொருந்தாக் காதல்கள் தெரியவந்தபின் கூட கல்யாணம் ஆகிவிட்டால் சரியாகப் போய்விடும் என்று முடிவெடுத்து, மொத்தத்தையும் மறைத்து ஒரு ஆண்மகனைப் பலிகடா ஆக்குவார்கள்.

ஆகையால் ஆண்களும் அவர்களுடைய பெற்றோர்களும் திருமணம் பற்றிய முக்கிய முடிவெடுக்குமுன் உஷாராக நன்கு தீவிரமாக விசாரித்தபின் முடிவெடுக்க வேண்டும். ஜோசியக்காரர்களை நம்பாதீர்கள். ஜோசியம், ஜாதகம் என்பதெல்லாம் வெறும் புரட்டு. அதை வைத்து மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்துகிறது ஒரு கும்பல். அவர்களால் சீரழிந்த குடும்பங்கள் ஏராளம்.

இனி இந்தக் காதல் காவியத்தைப் படியுங்கள்:-

நாளை திருமணம் நடைபெற இருந்த இளம்பெண் காதலனுடன் போலீசில் தஞ்சம்.

2 மாதமாக தாலியை மறைத்து வைத்து பெற்றோருடன் வசித்தார்

கோபிசெட்டிபாளையம், அக். 31 - 2009 - தினத்தந்தி

நாளை திருமணம் நடைபெற இருந்த இளம்பெண் காதலனுடன் போலீசில் தஞ்சம் அடைந்தார். இவர் 2 மாதங்களாக தாலியை மறைத்து வைத்து பெற்றோருடன் வசித்து வந்து உள்ளார்.

இளம்பெண்

கோபியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். அவருடைய மகள் லட்சுமி (27) (பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது) 10-ம் வகுப்பு வரை படித்து உள்ள இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார்.

லட்சுமிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த அவருடைய பெற்றோர், பல்வேறு இடங்களில் மாப்பிள்ளை தேடினார்கள்.

அப்போது பவானியைச் சேர்ந்த குமார் என்பவருக்கும், லட்சுமிக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு, கடந்த ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. லட்சுமி-குமாரின் திருமணம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுவதாக இருந்தது. திருமணத்திற்கான ஏற்பாடுகளை லட்சுமியின் பெற்றோர்கள் தீவிரமாக செய்து வந்தனர். உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு அழைப்பிதழும் கொடுக்கப்பட்டு வந்தது.

மாயம்

இந்த நிலையில் வேலைக்கு சென்ற லட்சுமி கடந்த 26-ந் தேதி இரவு வீட்டிற்கு வரவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்க வில்லை.

எனவே லட்சுமியின் பெற்றோர் இது குறித்து கோபி போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் லட்சுமியை தேடி வந்தனர். லட்சுமி வீட்டை விட்டு திடீரென்று மாயமான தகவல் மாப்பிள்ளையின் வீட்டாருக்கு கிடைத்ததால், அவர்கள் திருமணத்தை நிறுத்தி விட்டனர்.

காதலனுடன் தஞ்சம்

இந்த நிலையில் லட்சுமி நேற்று மாலை கோபி போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது அவருடன் வந்தவரை, தான் காதல் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினார். இது தொடர்பாக லட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணை குறித்து போலீசார் கூறும் போது,

லட்சுமி வேலை செய்து வரும் பனியன் கம்பெனியில் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். இவரும், லட்சுமியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்து உள்ளனர்.

இந்த நிலையில் லட்சுமிக்கு, அவருடைய பெற்றோர்கள் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க தொடங்கியதால், லட்சுமியும், முத்துப்பாண்டியும் கடந்த ஆகஸ்டு 25-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். மேலும் அவர்கள் தாங்கள் திருமணம் செய்து கொண்டதை வக்கீலின் மூலம் திருமண ஒப்பந்தம் செய்து உள்ளனர்.

தாலி மறைப்பு

லட்சுமி, தான் காதல் திருமணம் செய்து கொண்டது, பெற்றோருக்கு தெரியக் கூடாது என்பதற்காக வீட்டிற்கு வரும் போது தாலியை கழற்றி மறைத்து வைத்து உள்ளார். இதனால், அவருடைய காதல் திருமணம் பெற்றோருக்கு தெரியவில்லை என்று போலீசார் கூறினர்.

மகள் திருமணம் செய்தது கூட தெரியாமல், அவளுக்கு மாப்பிள்ளை தேடி நிச்சயம் செய்த பெற்றோர், மாயமான மகள் போலீஸ் நிலையத்திற்கு வந்து இருப்பது குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது லட்சுமி பெற்றோரை பார்க்காமல் முகத்தை திருப்பி வைத்து கொண்டார். இதை பார்த்த அவருடைய பெற்றோர்கள், "உன்னை நம்பி கல்யாண ஏற்பாடு செய்தோம். இப்படி தலை குனிய வைத்து விட்டாயே!" என்று கூறி கதறி அழுதனர்.

காதலனுடன் சென்றார்

காதல் திருமணம் செய்து கொண்ட லட்சுமி தன்னுடைய காதல் கணவன் முத்துப்பாண்டியுடன் வாழப் போவதாக உறுதிப்பட தெரிவித்ததால், போலீசார் முத்துப்பாண்டியுடன் லட்சுமியை அனுப்பி வைத்தனர். (சரி, நிச்சயதார்த்தம் செய்த ஆண் மற்றும் அவனுடைய பெற்றோர் அடைந்த அவமானத்திற்கும், மனச் சஞ்சலத்திற்கும் யார் பதில் சொல்வது? இதையே அந்த ஆண் செய்திருந்தால் அவனைக் கைது செய்திருப்பார்கள்!)

ஆண் உயிரின் விலை என்ன?

நம் நாட்டில் திருமணமான ஆண்களின் தற்கொலை, பெண்கள் தற்கொலை எண்ணிக்கையைவிட இரண்டு மடங்கு என்று அரசின் தரவுகளே (தேசீய குற்றத் தரவுகள் மையம் (National Crime Records Bureau)) தெரிவிக்கின்றன. (சுட்டி) ஆனாலும் மணமான பெண்கள்தான் பெருமளவு தற்கொலை செய்து கொள்வது போன்ற ஒரு பொய்யான தோற்றத்தை சில பெண்ணியவாதிகளும், அவர்கள் சார்ந்த சில என்.ஜி.ஓ இயக்கங்களும் தங்கள் சுயநலத்திற்காகப் பரப்பி வருகின்றன. இந்த மாயத் தோற்றம் ஊடங்கள் மூலமும் திட்டமிட்டுப் பரப்பப்படுவதால் இதை (தமிழக சுகாதார அமைச்சர் உட்பட) பலர் அப்படியே நம்பி விடுகிறார்கள்.

மேலும் ஊடகங்களுக்கும் இது உதவியாக இருக்கிறது. ஏனெனில், "இளம் பெண் தற்கொலை", "அழகி தற்கொலை", "மாமியார் கொடுமையால் இளம் மனைவி தற்கொலை" - இப்படியெல்லாம் வெளிவந்தால்தான் அது பரபரப்பான நியூஸ்! "ஆண் தற்கொலை", "கணவன் மாண்டான்" என்று எழுதினால் ம்ஹூங், அதை யாரும் சீந்த மாட்டார்கள். சாதாரணமாகவே செய்தித்தாள்களில் செய்தி வெளியாவதில் ஒரு அமைப்புமுறை (pattern) இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். ஒரு சம்பவத்தில் 10 பேர் மாண்டால், "3 இளம் பெண்கள் உட்பட 10 பேர் பலி" என்றுதான் எழுதுவார்கள்!

இத்தகைய பொய்மை பரவுவதால் பலர் ஆதாயம் அடைகின்றனர். "ஐயகோ, இந்த நாட்டில் இன்னமும் ஆயிரக் கணக்கான பெண்கள் ஆண்களின் கைகளில் சிக்கி கொடுமைப் படுவதால் தற்கொலை செய்துகொண்டு மடிகிறார்களே" என்னும் கூப்பாட்டை அணையாமல் ஊதிக் கொண்டிருந்தால்தான் ஐ.நாவைச் சார்ந்த UNIFEM மற்றும் மக்கள் வரிப்பணத்திலிருந்து கணிசமான துகை இந்த நபர்கள் கையில் சிக்கும்! அதை வைத்து பெண்களின் துயர் துடைப்பதாகச் சொல்லிக்கொண்டு, சில மேட்டுக்குடிப் பெண்கள் "பப்"பிற்குச் சென்று தண்ணி போடும் உரிமைக்காகவும், ஏர் ஹோஸ்டஸ்கள் பொய் வழக்கு போடும் உரிமைக்காகவும், குடும்பப் பெண்களை தங்கள் வாழ்வைச் சிதைத்துக் கொண்டு கோர்ட்டு வராண்டாவில் லோலோவென்று அலைய வைக்கவும் போராடுகிறோம் என்று சிலவுக் கணக்கு எழுதிக் கொண்டிருக்கலாம்!!

ஆணின் உயிரின் மதிப்பை அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்:



(நன்றி: "பெண்கள் நாட்டின் கண்கள்")

சரி. இப்போது இந்த அப்பாவி ஆணின் தற்கொலைக் கதையை வாசியுங்கள்:

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை சந்தித்தபின் புதுமாப்பிள்ளை `திடீர்' தற்கொலை

தாயாருக்கு உருக்கமான `எஸ்.எம்.எஸ்.'

தாம்பரம், அக்.31- 2009. செய்தி - தினத்தந்தி

சென்னையை அடுத்த குரோம்பேட்டை சாஸ்திரி காலனியை சேர்ந்தவர் யோமஹாசன் (வயது 27). பி.பி.ஏ. பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு சமீபத்தில் உறவினர் பெண்ணை திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை சந்தித்து விட்டு நேற்று முன்தினம் இரவு வந்த யோமஹாசன் வீட்டில் சோகமாக இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டில் படுக்கையறையில் தூங்க சென்றவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

யோமஹாசன், இறப்பதற்கு முன்பு தனது செல்போனில் தாயாருக்கு எஸ்.எம்.எஸ். டைப் செய்து வைத்திருந்தார். அதில் `எனது சாவுக்கு யாரும் காரணமல்ல, எனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணிற்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுங்கள்' என்று அதில் இருந்தது.

யோமஹாசன் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது மர்மமாக உள்ளது. இது தொடர்பாக குரோம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.