Showing posts with label victims. Show all posts
Showing posts with label victims. Show all posts

கணவனைக் கொல்ல மனைவிக்கு சட்டப்படி உரிமை தேவை

கனவனை மனைவி கொன்றால் அது குற்றமல்ல என்னும் சட்டத்திருத்தம் உடனடியாக கொண்டுவரப்பட வேண்டும். இதற்காக அனைத்து பெண்ணியவாத அமைப்புக்களும் கட்டாயம் பாடுபடவேண்டும். தற்போதுள்ள சட்டங்களின் அடிப்படையில் திருமணமான ஏழு ஆண்டு காலத்தில் மனைவி இறந்தால் அது கணவன் மற்றும் அவனது பெற்றோர் செய்த கொடுமையால்தான் என்று அனுமானிக்கபட்டு, ஆர்.டி.ஓ விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. யாரேனும் அது வரதட்சணை போன்ற கொடுமையால்தான் நிகழ்ந்தது என்று சந்தேகப்பட்டாலும் படாவிட்டாலும், முன்தீர்மானம் செய்து கொண்டு அவர்களைத் தண்டிக்க வேண்டும் (presumptive Section 113B of the Evidence Act) என்பது சட்டம்.

தவிர குடும்ப வன்முறைக் குற்றங்களிலிருந்து மனைவிக்கு முழுவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிரது. D.V.Act என்னும் குடும்ப வன்முறைச் சட்டத்தின் கட்டமைப்பின்படி கணவன் முகத்தைத் திருப்பிக் கொண்டாலோ, கேள்விக்கு பதில் கூறாமல் இருந்தாலோ, மனைவியின் எந்த ஒரு தேவைக்கும் - அது உபயோகமற்ற டம்பாசாரித் தேவையாயிருந்தால் கூட - பணம் கொடுக்க மறுத்தாலோ அது குடும்ப வன்முறையாகக் கருதப்பட்டு கணவன் தண்டிக்கப்படுவான். ஆனால் மனைவி கணவனை அடித்தாலும், வெட்டினாலும், கெட்ட வார்த்தை கொண்டு திட்டினாலும், உணவிட மறுத்தாலும், பிறரோடு ஒப்பிட்டு தன்மானத்தை இழக்கும் வகையில் மனம் புண்படுத்தினாலும், கணவன் எதிரிலேயே இன்னொருவனுடன் செக்ஸ் உறவு கொண்டாலும் அந்த மனைவி என்னும் புனித பிம்பத்தின்மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க சட்டத்தில் இடமே கிடையாது! ஏனெனில் ஆணென்பவன் பிறவியிலேயே ஒரு கிரிமினல். வன்முறை என்பதை அவன் தான் செய்வான்; பெண்ணுக்கு செக்ஸ் ஆசையே கிடையாது; வெறிபிடித்தலைபவன் ஆணே. பெண் ஒரு அபலை. மெல்லியலாள். ஒரு பாவமும் அறியாதவள். அவள் கொலை செய்தால் கூட அவளைக் கொலை செய்யத் தூண்டியவர்கள் மிதுதான் குற்றம். இதுதான் இத்தகைய ஒருதலைச் சார்புச் சட்டங்களை இயற்றியவர்கள் மற்றும், அதற்கு ஒருபடி மேலேயே போய் தீர்ப்பளிப்பவர்கள் ஆகியோர் மனத்தில் பதிந்துள்ள கருத்தியல்.

ஆனால் இது போதாது. மனைவியின் பலவகைப்பட்ட (variety) செக்ஸ் தேடலுக்காக கள்ளக்காதல் அவசியம் தேவையாய் இருக்கிறது. ஒரே புருஷனுடன் எத்தனை நாள் இருப்பது. அதனால் அந்த புதுமைப் பெண்ணுக்கு மாற்று சுகம் கிட்ட வைக்கும் கடமை கணவனுக்கு உண்டு என்பதை இந்த சமுதாயம் இன்னும் அங்கீகரிக்காமல் இருப்பதே ஒரு ஆணாதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடு.

மேலும் அப்படி கள்ளக்காதலில் ஒரு மனைவி ஈடுபடும்போது அவளுடைய முட்டாள் கணவன் அதை எதிர்த்தால் அவனைத் தீர்த்துக் கட்ட வேண்டியிருக்கிறது. அதனால் இப்போதுள்ள ஆணாதிக்க சட்டங்களின் அடிப்படையில் கணவனை மனைவி கொல்வது குற்றமாகக் கருதப்படுகிறது. அதனால் மனைவிக்கு குற்றவாளி என்னும் பட்டம் சூட்டப்படுகிறது. இது அபாண்டம். இதை எதிர்த்து பெண்ணிய அமைப்புக்கள் கட்டாயம் போராட வேண்டும். தற்போது ஆச்சி மனோரமா அம்மையார்தான் இதைக் கையிலெடுத்துப் போராடத் துணிந்திருக்கிறார்கள் அதற்காக தற்கால முழு விடுதலை பெற்ற இளம் பெண்கள் பலர் அவருக்குக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

மேலும் தமிழக பெண்கள் வாரியத் தலைவர் ராமாத்தாள் அவர்களும் மணமான பெண்கள் இன்னொருவனோடு உறவு வைத்துக் கொள்வதை "கள்ளக்காதல்" என்று அழைக்கக் கூடாது என்று கூறியிருக்கிறார். இது மிகவும் சமூக முக்கியத்துவம் வாய்ந்த கூற்று. இத்தகைய அணுகுமுறை பெண்களின் விடுதலைக்கும் பெண்கள் முன்னேற்றத்திற்கும் வெகுவாகப் பயனளிக்கும் என்பது திண்ணம்.

ஆகையால் சீக்கிரமே கண்வனைக் கொல்ல மனைவிக்கு முழு சுதந்திரம் அளிக்கும் சட்டம் இயற்றப்படும் என்று எதிர்பார்த்து, கணவனை மண்ணெண்ணை ஊற்றிக் கொன்ற வீராங்கனையைப் பற்றியும், கோழைத்தனமாக தற்கொலை செய்து கொண்ட ஒரு கணவன் பற்றிய செய்தியையும் இங்கு இடுகிறேன்.

அவர்களின் சாவுக்கு மனைவிகளின் நடத்தைதான் காரணம் என்று நீங்கள் எண்ணினால் அது உங்களது ஆணாதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடு எனவும், அவ்வாறு எண்ணியதற்காக நீங்கள் சீக்கிறமே சிறைக்குச் செல்ல நேரிடும் என்றும் எச்சரிக்கப்படுகிறீர்கள்!

இப்போது செய்திகள்:-

1. உலக ஆண்கள் தினத்தன்று போலீஸ் அதிகாரி மனைவியால் கொளுத்தப்பட்டார்
செய்தி: டெக்கான் கிரானிக்கிள் (http://www.deccanchronicle.com/national/asi-set-fire-wife-intl-mens-day-751)

ஒரு சிறிய வாய்த் தகராறினல் கோபப்பட்டு ஒரு போலீஸ் அதிகாரியின் மனைவி கணவன் மீது மண்ணெண்ணையை ஊற்றிக் கொளுத்தி விட்டார். இது நடந்தது 19-11-2009 வியாழனன்று.

மனைவியால் இது போல் தீ வைத்து எறிக்கப்பட்டவர் 52 வயதான பலவந்த் பவார் எனப்படும் உதவி சார்-கண்காணிப்பாளர் (Assistant Sub-Inspector). கொளுத்தப்பட்ட அவர் தன் உடலின் 85% பகுதி எறிந்த நிலையில் ஔரங்காபாதிலுள்ள அரசு மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்.

இந்த தீவைக்கும் நிகழ்வு உலக ஆண்கள் தினத்தன்று நடந்தது ஒரு முரண்நகையே!

முதல்நாள் இரவு அவர்கள் இருவருக்குமிடையே ஏதோ வாக்குவாதம் நடந்ததாகவும், மறுநாள் கணவன் வீட்டுக்குள் நுழைந்ததும் மனைவி அவர்மேல் மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துவிட்டதாகவும் போலீசார் கூறுகின்றனர்.

அந்த கணவன் வேலை பார்ப்பது MIDC Cidco காவல் நிலையம்

========================================

2.

காரிமங்கலம் அருகே புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை
போலீசார் விசாரணை

காரிமங்கலம்,நவ.21 - 2009. தினத்தந்தி

காரிமங்கலம் அருகே புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுமாப்பிள்ளை

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள மொளப்பனஅள்ளியை சேர்ந்தவர் காவேரி. விவசாயி. இவரது மகன் காளியப்பன்(வயது 22). இவருக்கும் காரிமங்கலம் அருகே உள்ள பாறையூரைச் சேர்ந்த சித்ரா(19) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. காளியப்பனுக்கு வயிற்று வலி இருந்து வந்ததாக தெரிகிறது.

நேற்று முன்தினம் காளியப்பனின் பாட்டி இறந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த காளியப்பன் மனைவி சித்ராவிடம் சாப்பாடு கொண்டு வரும்படி கேட்டதாக தெரிகிறது. சித்ரா கணவருக்கு சாப்பாடு கொடுக்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. மேலும் வயிற்று வலியும் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கி கிடந்தார்.

பரிதாப சாவு

வீட்டில் இருந்து வெளியில் வந்த சித்ரா, கணவர் காளியப்பன் மயங்கி கிடப்தை கண்டு அதிர்ச்சி அடைந்து அருகில் சென்று பார்த்துள்ளார். அப்போது அவருக்கு அருகில் பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில் இருப்பதை கண்டு தனது மாமனார் காவேரிக்கு தகவல் கொடுத்தார். அவர் வந்து காளியப்பனை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காரிமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=528612&disdate=11/21/2009&advt=2

பலரும் அறிய காதல் லீலை - பாழாகிறது சமூக ஒழுங்கு

இது போன்ற குஜால் குமாரிகள் ஒவ்வொருவரும் இளம் வயதிலேயே அனைத்து சல்லாப சுகங்களையும் அனுபவித்து முடித்தபின், நல்ல பிள்ளை போல் நடித்து இன்னொரு விட்டில் பூச்சி ஆணைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள். "பேஷான ஜாதகம் போங்கோ. தசவிதப் பொருத்தமும் என்னமா அமைஞ்சிருக்கு" என்று புருடா விடும் ஜோசியனை நம்பியும், "அப்படியே மகாலட்சுமி மாதிரி இருக்காள்" என்று அசடு வழியும் கிழங்களின் சொற்படியும், ஒன்றையும் விசாரிக்காமல் இந்த ஜல்சா குமாரிகளை மணந்து கொள்ளப்போகிறார்கள் சில முட்டாள் ஆண்கள்.

இந்தப் பெண்களோ பழைய சல்லாபங்களை மறக்க முடியாததால் இல்லற வாழ்வில் மனம் பதிக்க மறுத்து கணவன் வீட்டிலிருந்து ஓட்டம் பிடித்துவிட்டு, அவனிடமிருந்து பணம் கறப்பதற்காக, "என் கணவனுக்கு ஆண்மை போதவில்லை. நான் செக்ஸில் திருப்தியே அடையவில்லை. அதனால் கணவன் எனக்கு 2 கோடி ரூபாய் கொடுக்கவேண்டும்" என்றும், "என்னை வரதட்சணை கேட்டு கணவன் வீட்டில் இருக்கும் 6 மாதக் குழந்தை தொடங்கி அவர்கள் வீட்டில் என்னைக் கடித்த கொசு வரையில் அனைவரும் பெரும் கொடுமை செய்தனர்" என்றும் புகார் கொடுப்பார்கள். மேலும் அதில் உப்பு, காரம் சேர்ப்பதற்காக, "கணவனுடைய 80 வயதான (தன் கையையே தூக்கச் சீவனில்லாத) தந்தை என்னைக் கையைப் பிடித்து இழுத்தார்", "75 வயதான என் மாமியார் 25 வயதான என்னை உதைத்தார்" என்று அந்தப் புகாரை அலங்காரம் செய்வார்கள். முத்தாய்ப்பாக, "இத்தகைய கொடுமைகளை எனக்கு இழைத்ததால் Sec 498A சட்டப்படி அவர்களைக் கைது செய்து உள்ளே போட வேண்டும். மேலும் அவர்கள் வீட்டை எனக்குக் கொடுத்துவிட்டு அவர்கள் நடுத்தெருவில் நிற்க வேண்டும். தவிர எனக்கு மாதா மாதம் 1 லட்ச ரூபாய் மெயிண்டெனன்ஸ் கொடுக்க வேண்டும்" இப்படிச் சொல்லிக் கேசு போட்டு நாற அடிப்பார்கள்.

உடனே அந்த லிஸ்டில் கண்ட அனைவரும் ஒரு வெள்ளிக்கிழமை சகல சௌபாக்கியங்களும் நிறைந்த நன்னாளின் நள்ளிரவில் கைது செய்யப்படும் சிறப்பும் நடந்தேறும். மேலும் இவர்கள் கேட்ட பணத்தையெல்லாம் கொடுக்கச் சொல்லி ஆணைகளும் வழங்கப்படும்!

இது போன்ற காதல் லீலைகள்தான் எதிர்வரும் கள்ளக்காதல், 498A, விவாகரத்து போன்ற சடங்குகளுக்கு அடித்தளம்!

சரி. இப்போது இன்றைய(நவம்பர் 11,2009)தினமலர் இணைய இதழில் வெளிவந்துள்ள சமூகப் பிரக்ஞையை வெளிப்படுத்தும் இந்தக் கட்டுரையை வாசியுங்கள். மேலும் அதன் இணையப் பக்கத்தில் கட்டுரைக்குக் கீழே நம் மக்கள் பதிந்துள்ள கருத்துரைகளையும் சற்றே காணுங்கள்!

அதன் சுட்டி இதோ.
----------------------

கோவை மாநகராட்சி வ.உ.சி. பூங்கா மற்றும் மிருகக்காட்சி சாலையில் ஆண், பெண் ஜோடிகள் பொது இடமென்றும் பாராமல் ஒழுங்கீனமான செயலில் ஈடுபடுகின்றனர். சமூக ஒழுங்கை சீர்குலையச் செய்யும் இவர்களை, மாநகராட்சி நிர்வாகமும், போலீசும் வேடிக்கை பார்ப்பது மக்களை முகம் சுழிக்க வைக்கிறது.

கோவை நகரவாசிகள், பள்ளி மாணவ, மாணவியரின் பிரதான பொழுது போக்கும் இடம் வ.உ.சி. பூங்கா மற்றும் மிருகக் காட்சி சாலை. பூங்கா மாலை 4.00 மணிக்கு திறக்கப்படுகிறது. மிருகக் காட்சிசாலை, செவ்வாய் தவிர பிற நாட்களில் காலை 10.00 முதல் மாலை 7.00 மணி வரை செயல்படுகிறது. மிருகக் காட்சிசாலையை பார்வையிட நகர் பகுதி பள்ளிகளில் இருந்து மட்டுமின்றி, புறநகர் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியரும் அதிகம் வருகின்றனர்.

ஒழுங்கீன செயல்கள்:

வ.உ. சி., பூங்கா மாலை 4.00 மணிக்கு திறக்கப்பட்டதும் ஆண், பெண் ஜோடிகள் நுழைந்து ஆங்காங்கு ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். புல்வெளியில், புதர் மறைவில், மரத்தின் பின்னால் என பல இடங்களிலும் தனியாக அமர்ந்து சேஷ்டையில் ஈடுபடுகின்றனர். ஒருவர் மீது ஒருவர் சாய்ந்தும், மடியில் படுத்தபடியும் காதல் விளையாட்டு புரிகின்றனர். இவர்களில் பலரும் வெளியூரைச் சேர்ந்தவர்கள் என்பதால், பூங்காவுக்கு வருவோரை பற்றிய எவ்வித கவலையும் கொள்வதில்லை. சமீபத்தில், இது போன்ற ஜோடிகளின் அத்துமீறல் அதிகரித்ததை தொடர்ந்து, ரேஸ் கோர்ஸ் போலீசுக்கு அதிகளவில் புகார்கள் சென்றன. மாலை நேரத்தில் திடீர் ரெய்டு நடத்திய போலீசார், பூங்காவில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்டிருந்த ஜோடிகளை பிடித்து கடும் எச்சரிக்கைக்கு பின் அனுப்பினர். ஓரிரு நாட்கள் போலீஸ் கண்காணிப்பும் தொடர்ந்த காரணத்தால், ஜோடிகளின் சில்மிஷ வேலைகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன. பின்னாளில் போலீசாரின் கண்காணிப்பு படிப்படியாக குறைந்து, தற்போது அத்துமீறல்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. இதை வேடிக்கை பார்த்து ரசிக்கவும், மொபைல் போன் கேமராவில் படம் பிடிக்கவும் சில வாலிபர்கள் சுற்றித்திரிகின்றனர்; சில ஜோடிகளை படம் பிடித்து மொபைல் போனில் பதிவு செய்யப்பட்ட போட்டோவை காண்பித்து மிரட்டி பணம் பறித்த சம்பவங்களும் நடந் துள்ளன. எனினும் ஆண், பெண் ஜோடிகள் வருவது குறைந்தபாடில்லை.

மாணவர்கள் "கட்':

வ.உ.சி., பூங்காவில் காதல் ஜோடிகளின் சில்மிஷ செயல்கள் ஒரு புறம் அதிகரித்திருக்க, மறுபுறம் பள்ளி மாணவர்கள் வகுப்பை "கட்' அடித்துவிட்டு, பூங்கா மற்றும் வ.உ.சி.,மைதானத்தில் சுற்றித்திரிவதும் அதிகம் நடக்கிறது. புத்தக மூட்டைகளை மைதானத்தின் ஓரத்தில் வைத்துவிட்டு, அங்குள்ள விளையாட்டு உபகரணங்களில் விளையாடுகின்றனர். மாலை நேரத்தில் பள்ளி வகுப்பு முடிந்து செல்வதை போல, வீட்டுக்கு கிளம்பிச் செல்கின்றனர். இந்த மாணவர்களில் சிலர் புகை பிடிக்கும் செயலிலும் ஈடுபடுகின்றனர்.

கஞ்சா ஆசாமிகள்:

கஞ்சா விற்கும் நபர்கள், பாலியல் தொழிலுக்கு ஆள் பிடிக்கும் புரோக்கர் நடமாட்டமும் வ.உ.சி., பூங்கா மற்றும் மைதானம் பகுதியில் அதிகரித்துள்ளது. கையில் "பேக்'குடன் சுற்றித் திரியும் நபர்கள் கஞ்சா பொட்டலங்களை திறந்தவெளியில் சர்வ சாதாரணமாக விற்கின்றனர். இதை வாங்கவும் "வாடிக்கையாளர்கள்' வருகின்றனர். இவர்கள், பள்ளி மாணவர்களிடம் பேச்சுக் கொடுப்பதால், மாணவர்களையும் கஞ்சா புகைக்கும் பழக்கம் தொற்றிக் கொள்ளும் அபாயமிருக்கிறது. இது போன்ற சட்டவிரோத செயல்களை தடுக்கவும், பொதுமக்கள் வந்து செல்லும் வ.உ.சி. பார்க்கில் ஆண், பெண் ஜோடிகளின் அத்துமீறலை முடிவுக்கு கொண்டு வரவும் மாநகர போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பது அவசியம்.

ஆசிரியை ஆவேசம்:

வ.உ.சி. பூங்காவுக்கு பள்ளிக் குழந்தைகளை அழைத்து வந்திருந்த ஆசிரியை கூறியதாவது:

வ.உ.சி. பூங்கா மட்டுமின்றி, மிருகக் காட்சி சாலை வளாகத்திலும் சிலர் ஜோடி, ஜோடியாக அமர்ந்துள்ளனர். பலரும் தங்களை கவனிப்பார்களே, என்ற கூச்சம் கூட அவர்களிடம் இல்லாதது கவலை அளிக்கிறது. மிருகங்களை பார்வையிட பள்ளிக் குழந்தைகளை அழைத்து வந்தால், இது போன்ற ஜோடிகள் தான் அதிகம் இருக்கின்றனர். இவர்களை பிள்ளைகள் வேடிக்கை பார்த்தபடி செல்லும்போது, நாங்கள் கண்டித்து அவர்களின் பார்வையை திசைதிருப்ப வேண்டியுள்ளது. இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண, கோவை மாநகராட்சி நிர்வாகம், கூடுதல் காவலாளிகளை நியமித்து கண்காணிக்கலாம். சில்மிஷ செயலில் ஈடுபடுவோரை, பார்க்கில் இருந்து வெளியேற்ற வேண்டும் அல்லது, பிடித்து போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு, ஆசிரியை தெரிவித்தார்.

கள்ளக்காதலுக்கு அடிமையாகும் பலியாடுகள்!

இப்பொதெல்லாம் திருமணம் ஆன பெண்கள், கள்ளக்காதலுக்காக கணவனையோ, பெற்ற குழந்தைகளையோ, கள்ளக்காதலனைக் காதலிக்கும் இன்னொரு பெண்ணையோ, (இதில்கூட சக்களத்தி சண்டை!) கள்ளக்காதலனை மணக்கப்போகும் பெண்ணையோ கொலை செய்வது சர்வசாதாரணமாக நிகழ்ந்து வருவதை நீங்கள் தினம் காண்கிறீர்கள். இது போன்ற சீரழிவு எதைக் காண்பிக்கிறது? பெண்கள் முன்னேற்றத்திற்காகப் படுபடுகிறேன் என்று பறைசாற்றிக் கொண்டு பலவழிகளில் பணம் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் பெண்ணியவாதிகள் தங்கள் முயற்சியில் அடைந்துள்ள வெற்றியைத்தானே சுட்டிக் காண்பிக்கிறது!

ஆம், நம் பாரம்பரிய குடும்ப வாழ்வை முறையைச் சிதைத்து, பெண்கள் மனத்தில் தங்கள் உடல் சுகமும், விதவிதமான செக்ஸ் அனுபவத் தேடலும்தான் வாழ்வின் ஒரே குறிக்கோள் என்றும், அத்தகைய வெறித்தேடுதலுக்கு எதிரியாகத் தோன்றும் எவரையும் கொன்று போட்டால்கூட பரவாயில்லை என்றும் நம்ப வைத்து, அவர்களின் மனப்பாங்கை தரம் தாழ்த்தும் தங்கள் முயற்சியில் அவர்கள் வெற்றி அடைந்து வருகிறார்கள்!

இப்போதெல்லாம் ஒரு மணமான பெண்ணோ, ஆணோ கொல்லப்பட்டால் அதில்
"கள்ளக்காதல்" ஆங்கிள் இருக்கிறதா என்று துப்பறிய வேண்டிய கட்டாயத்திற்கு காவல் துறையினர் தள்ளப்பட்டுள்ளனர்! அதனால் அந்தப் பெண்மணியை சந்தித்தவர்கள், அவர் செல்ஃபோனில் தொடர்பு கொண்ட நபர்கள் இவர்கள் மேல் சந்தேகக்கண் படத்தொடங்கி அதனால் பல கேசுகளில் முக்கிய தடயங்கள் சிக்குவதை நாம் கண்டு வருகிறோம்.

மேலும், இத்தகைய கள்ளக் காதல்களினால் அந்தக் கள்ளக்காதலிகளே பலியாகும் நிகழ்ச்சிகளும் நிறைய நடக்கின்றன. அத்தகைய ஒரு செய்தியை இப்போது வாசியுங்கள்:

புதுப்பெண்ணை கொலை செய்து உடலை புதைத்தது ஏன்? கைதான கள்ளக்காதலர் பரபரப்பு வாக்குமூலம்

திருச்சி, நவ.5- 2009 தினத்தந்தி

புதுப்பெண்ணை கொலை செய்து வயலில் உடலை புதைத்தது ஏன் என்பது பற்றி கைதான கள்ளக் காதலர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

புதைக்கப்பட்ட பெண் பிணம்

திருச்சியை அடுத்த முத்தரசநல்லூர் வயல்வெளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அரை குறையாக மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் ஒரு பெண் பிணம் கிடந்தது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஜீயபுரம் போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அப்போது பிணமாக கிடந்த பெண்ணின் பெயர் லால்குடி பக்கம் உள்ள கொத்தமங்கலத்தை சேர்ந்த முத்துக்குமார் மனைவி அன்பரசி (19) என்பதும், முத்தரசநல்லூர் காமராஜர்புரத்தை சேர்ந்த பெயிண்டர் அங்கமுத்து (வயது25)வுக்கும், அந்த பெண்ணுக்கும் பழக்கம் இருந்ததும் தெரியவந்தது.

பெயிண்டர் கைது

அன்பரசியின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கமுத்துவை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

இதில் அங்கமுத்து தான் அன்பரசியை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, பிணத்தை வயலில் புதைத்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் நேற்று அங்கமுத்துவை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அங்கமுத்து போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

செல்போன் மூலம் காதல்

எனது நண்பர்கள் மூலம் அன்பரசியின் செல்போன் நம்பர் கிடைத்தது. செல்போனில் அடிக்கடி பேசி அன்பரசியுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டேன். நாங்கள் தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்தோம். அவர் என்னை பார்க்க அடிக்கடி முத்தரசநல்லூருக்கு வந்து செல்வார்.

இந்த நிலையில் கடந்த வாரம் எனது வீட்டுக்கு வந்த அன்பரசி தனக்கு திருமணமாகி 2 மாதங்கள் ஆகிவிட்டதாகவும், கணவன் முத்துக்குமாரை எனக்கு பிடிக்கவில்லை. அதனால் உன்னுடனே இருந்து விடுகிறேன் என்றும் கூறினாள். நான் ஏற்கனவே எங்கள் ஊரைச்சேர்ந்த நந்தினி என்ற பெண்ணை காதலித்து வந்தேன். அவளையே திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருந்தேன்.

இதனால் அன்பரசி எனது வீட்டில் இருந்தால் பிரச்சினை ஏற்படும் என நினைத்து அவளை இருங்களூரில் உள்ள எனது அக்காள் வீட்டில் தங்க வைத்தேன். இந்த நிலையில் எனது வீட்டில் அன்பரசி என்னுடன் இருந்ததை காதலி நந்தினி பார்த்து விட்டாள்.

துப்பட்டாவால் இறுக்கி...

அன்பரசியை பார்த்ததும் என்னிடம் தகராறு செய்த நந்தினி நான் விஷம் குடித்து தற்கொலை செய்து விடுவேன் என விஷம் பாட்டிலை கையில் வைத்துக்கொண்டு மிரட்டினாள். நான் அவளை சமாதானம் செய்து, நந்தினியை அவளது வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு திரும்பி வந்தேன். அப்போது அன்பரசி என்னிடம் நீ என்னைத்தான் திருமணம் செய்து கொள்ளவேண்டும். அதுவரை நான் இங்கிருந்து செல்ல முடியாது என கூறி தகராறு செய்தாள்.

இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இவள் இருந்தால் காதலி நந்தினி நம்மை விட்டு போய்விடுவாள், திருமணம் செய்து கொள்ள முடியாமல் போய்விடும் என நினைத்து அன்பரசியின் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி நெரித்தேன். இதில் அவள் மூச்சு திணறி கீழே விழுந்ததும் யாருக்கும் தெரியாமல் உடலை தூக்கி கொண்டு சென்று வயல்வெளியில் புதைத்தேன்.

இவ்வாறு அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக தெரிகிறது.

அங்கமுத்து நேற்று மாலை திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட் எண்-3 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கள்ளக்காதலனை எரித்துக்கொன்ற அபலைப்பெண்

துறையூர். தினமலர் - 30-10-2009

துறையூர் அருகே கள்ளத்தொடர்பை துண்டித்துக்கொள்வதாக கூறிய கள்ளக்காதலனை எரித்துக்கொன்ற காதலியை போலீஸார் கைது செய்தனர்.

துறையூர் அருகே கண்ணனூரை சேர்ந்த லாரி டிரைவர் சேகர்(35). இவர் கடந்த 27ம் தேதி கண்ணனூர் அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறம் குழந்தை என்பவரின் சோளைக்காட்டில் எரிந்து கருகிய நிலையில் நிர்வாணமாக இறந்து கிடந்தார். சேகரின் மர்ம மரணம் குறித்து புலிவலம் போலீஸார் விசாரித்து வந்தனர்.

போலீஸ் விசாரணையில், சேகருக்கும் அதே ஊரை சேர்ந்த கணவனால் கைவிடப்பட்டு தனியே வசித்த தனலட்சுமி(55)க்கும் கள்ளக்காதல் இருந்தது தெரிந்தது. இருவருக்கும் கடந்த 15 ஆண்டாக தொடர்பு இருந்துள்ளது.

இந்நிலையில் சேகர் மூன்று ஆண்டுக்கு முன் வளர்மதி(30)யை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பின்பும் சேகரை தன்னுடன் இருக்குமாறு தனலட்சுமி வற்புறுத்தி வந்ததால் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது.

கடந்த 26ம் தேதி இரவு எப்போதும் தனிமையில் சந்தித்துக் கொள்ளும் சோளக்காட்டிற்கு சேகரை வருமாறு தனலட்சுமி வற்புறுத்தியுள்ளார். தனலட்சுமி தொல்லை பொறுக்காத சேகர், தனலட்சுமியை கொல்வது அல்லது இருவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்வது என்ற முடிவுடன் ஒரு கேனில் மண்ணெண்ணெயுடன் சென்றுள்ளார்.

இருவரும் உல்லாசமாக இருந்துவிட்டு மண்ணெண்ணெய் ஊற்றி தீ தங்களுக்குத் தானே தீ வைத்துக்கொள்வது என முடிவு செய்துள்ளனர். அதன்படி, ஒருவர் மீது ஒருவர் மண்ணெண்ணை ஊற்றி முதலில் சேகர் மீது தனலட்சுமி நெருப்பு பற்ற வைத்துள்ளார். நிர்வாணமான சேகரின் உடலில் "தீ' மளமளவென பரவி எரிந்தபோது வலி தாங்காமல் கத்தி அங்குமிங்கும் ஓடியுள்ளார். எங்கே தன்னையும் கட்டிப் பிடிப்பானோ என பயந்த தனலட்சுமி சேகரின் உடைகளை எடுத்துக்கொண்டு ஓடியுள்ளார்.

சேகரின் மரணம் குறித்து புலிவலம் போலீஸார் நடத்தி விசாரணையில், தனலட்சுமி சேகரை எரித்துக் கொன்றதை ஒப்புக்கொண்டு வாக்கு மூலமளித்தார். புலிவலம் போலீஸார், தனலட்சுமியை கைது செய்து துறையூர் கோர்ட்டில் நீதிபதி தோத்திரமேரி முன் நேற்று ஆஜர்படுத்தினர். 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிடப்பட்டதை அடுத்து திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.

===========

அன்புள்ள வாசகர்களே,

498A பற்றி பதிவு எழுதத் தொடங்கி விட்டு, கள்ளக்காதல் நிகழ்வுகளைப் பற்றியும் அதனால் விளையும் கொலைகளைப் பற்றியும் விவரிக்கும் காரணம் என்ன என்னும் வினா உங்கள் மனத்தில் தோன்றினால் அதை மறுமொழியில் கேளுங்கள். தகுந்த விடையளிப்பது என் கடமை!

நீதிக்கு முரணான சட்டத்தின் மூன்றாண்டு நிறைவு!

ஆம். இந்த நூற்றாண்டில் முட்டாள்தனத்தின் சிகரமாக விளங்குவது "பெண்கள் வன்முறைத் தடுப்புச் சட்டம்" (The Protection Of Women From Domestic Violence Act - "D.V. Act"). பெண்களைக் காப்பாற்றும் ஒரு புனிதமான நோக்கில் இயற்றப் பட்டதாக அதன் பெயரைப் பார்த்தவுடன் தோன்றும் இந்தச் சட்டம் உண்மையில் பெண்களைக் கொடுமை செய்து தங்களுக்குச் சொந்தமான இருப்பிடத்தையே கெடுமதியினருக்கு தாரை வார்த்துவிட்டு நடுத்தெருவில் நிற்க வைக்கும் ஒரு உன்னத(!)ச் சட்டம் என்பது அதன் பயன்பாட்டின் விளவுகளைப் பர்த்தால் தெளிவாக விளங்கும்!

இந்தக் கொடுங்கோன்மைச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டு, திருமணமான இளைஞர்களையும் அவர்களைப் பெற்றெடுத்த பாவத்தைச் செய்த பெற்றோர்களையும் தன் சொத்து சுகம் அனைத்தையும் திமிர் பிடித்தலையும் பணக்காரப் பெண்களிடம் இழந்து, தற்கொலைக்குத் தள்ளும் செயலாக்கத்தைத் தொடங்கி இன்றோடு 3 ஆண்டுகள் நிறைகின்றன.

இந்த மூன்று ஆண்டுகளில் இந்த சட்டத்தைக் கையிலெடுத்து சில கெடுமதிப் பெண்களும் அவர்களின் அநியாயத்திற்குத் துணை போகும் வக்கீல்களும் நாசமாக்கிய குடும்பங்கள் அநேகம்.

இந்த சட்டத்தின் அதி உன்னதமான வரையறை என்ன தெரியுமா? "குடும்பத்தில் வன்முறையை கணவன் தான் செய்வான். அவன்மீதும், அவனுடைய ரத்த உறவுகள் மீதும் தான் இச்சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடியும்" என்பது! மனைவி எந்தவிதக் கொடுமை செய்தாலும் அதைக் கருத்தில் கொள்ள வாய்ப்பே கிடையாது இச்சட்டத்தில். ஏனெனில் வன்முறையில் பாதிக்கப்படுபவள் மனைவிதான் என்று அறுதியிட்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. இதைவிட நடைமுறைக்குப் புறம்பான சட்டத்தை இயற்ற முடியுமா?

சரி, இந்தச் சட்டத்தை இதுபோல் இயற்றி அதைத் தீவிரமாக அமலாக்கம் செய்ததன் நோக்கம் என்ன? அவர்கள் பொதுவில் தம்பட்டம் அடிப்பது போல் நம் நாட்டு அபலைப் பெண்கள் அன்றாடம் அனுபவிக்கும் குடும்ப வன்முறையிலிருந்து நிவாரணம் அளிப்பதற்காகவா? உண்மையில் குடிகாரப் புருஷன் கையால் அன்றாடம் வன்முறையைச் சந்திக்கும் அடிமட்டப் பெண்களுக்கு இதனால் நிவாரணம் கிட்டியுள்ளதா? அதெப்படிக் கிட்டும்? அவர்கள் வக்கீல்களுக்கு ஃபீசாக அள்ளி அள்ளிக் கொடுக்க முடியுமா? அவர்களுடைய கணவன்மார்களிடமிருந்து இந்தச் சட்டத்தை வைத்து கணிசமான துகையை கறக்க முடியுமா? அவர்களிடமிருப்பதோ குடிசை வீடுதான். கணவனுடைய பெற்றோரும் அன்றாடம் காய்ச்சியாக இருப்பார்கள். பிறகு அவர்களிடமிருந்து என்ன பெயரும்? அதனால் இந்த சட்டத்தின் டார்கெட் மத்தியதர மற்றும் உயர் மத்திய தர வகுப்பினர்தான். அந்தப் பாவம் செய்தவர்கள்தான் இந்தக் கொடுங்கோன்மைச் சட்டத்தால் பீடிக்கப்பட்டு கோர்ட்டு வராண்டாவில் லோலோவென்று அலைந்து கொண்டு தங்கள் பொன்னான இளமைக் காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்!

இந்த D.V. Act சட்டத்தைப் பற்றிய சில விவரங்கள்:-

இந்தச் சட்டம் திருமணம் ஆன பெண்களுக்கு மட்டுமின்றி, "குடும்பம் போல்" சேர்ந்து இருக்கும் உள்ள அனைத்து உறவுகளுக்கும் பொருந்தும் - அது ஒருசில மணி நேரங்களேயானும் சரி! இந்த விளக்கத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் அளித்துள்ளார். அந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பைப் பற்றி (M.Palani Vs Meenakshi) பிறிதொரு இடுகையில் பார்ப்போம்!

இது முழுக்க முழுக்க வக்கீல்களால் தயாரிக்கப்பட்டு அவர்களுடைய எண்ணப்பாங்கின்படி கட்டமைக்கப்பட்டது.

இது அமேரிக்க பன்னாட்டு நிறுவனங்களின் லாப நோக்கில் அமைக்கப்பட்டது.

இந்த சட்டத்தின் அடிப்படை அமைப்பின்படி ஒரு மனைவி (அல்லது சிறிது நேரம் ஒரு ஆணுடன் உறவு கொண்டு இருந்த பெண்) கணவன் மற்றும் கணவனின் ரத்த உறவுகள் எதைச் செய்தாலும், செய்யாமல் இருந்தாலும் அதை வன்முறையாகக் கருதி புகார் கொடுக்கலாம். அதாவது பேசினால் "பேசி வன்முறை செய்தான்" என்கலாம்; பேசாவிட்டால் "பேசாமல் கொடுமை செய்தான்" என்கலாம்! அந்தப் பெண் தண்ணி போட காசு கொடுக்கவில்லையென்றால் வன்முறை; இரவு ஏன் நேரம் கழித்து பார்ட்டிக்குப் போய் வருகிறாய் என்றால் வன்முறை; கண்டவனோடு உனக்கு என்ன உறவு என்று கெட்டால் வன்முறை; அவளுடைய "கருமேனியை சிவப்பாக்கும் கிரீமை" வாங்கி வரவில்லை யென்றால் அது பொருளாதாரம் சர்ந்த வன்முறை - இப்படி அடுக்கிக் கொண்டே போகிறார்கள். இதுபோல் பற்பல கேசுகள் இந்த மூன்றாண்டுகளில் பதியப்பட்டுள்ளன!

இதில் இன்னும் பல வேடிக்கைகள் உள்ளன. நீங்கள் ஒரு ஆணாகவோ, அல்லது உங்கள் வீட்டில் ஒரு ஆண்மகன் இருந்தாலோ இதைப் படிக்கப் படிக்க பகீரென்று இருக்கும்.

இந்தச் சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படும் தீர்வுகள் இரண்டு வகை:

1. புகார் கொடுத்த பெண்ணுக்கு உறைவிடம். அதாவது அந்தப் பெண்ணின் மேல்தான் தவறாக இருந்தாலும், அவள் பொய்ப் புகார் கொடுத்திருந்தாலும், அவள்தான் உங்கள் மீது வன்முறை செய்திருந்தாலும், அவள் புகார் கொடுத்தால் நீங்கள் உங்களுக்குச் சொந்தமான வீட்டிலிருந்து வெளியேறி, அதை அவளுக்கு தாரை வார்த்துவிட வேண்டும். இதைக் கேட்டால் உங்களுக்கு இது உண்மையாக இருக்குமோ என்ற நம்பிக்கையின்மை வருகிறது அல்லவா? இப்படித்தான் இந்தச் சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படும் தீர்ப்புகள் அமைகின்றன. ஐயமிருந்தால் கூகிளில் தேடிப்பாருங்கள். அல்லது உங்களுக்குத் தெரிந்த வக்கீலிடம் கேட்டுப் பாருங்கள்!

2. "பணம்". ஆம் ஐயா! "பணம் கொடு, கணவனே, மனைவி கேட்ட பணம் கொடு" -இதுதான் இச்சட்டத்தின் தாரக மந்திரம்! "அவள் கேட்கும் பணத்தைக் கொடுத்துவிடு. இல்லாவிட்டால் சிறைக்குப் போ!"

"ஐயா, அவள்தான் ஒரு காரணமுமில்லாமல் வீட்டைவிட்டு ஓடிப்போய் பொய்ப் புகார் கொடுத்திருக்கிறாள். கள்ளக் காதலுக்காகப் பணம் கேட்கிறாள்"

"அதெல்லாம் நான் கேட்கத் தயாரில்லை. இந்தச் சட்டப்படி மனைவி புகார் கொடுத்துள்ளார். அவள் கேட்கும் பணத்தைக் கொடுத்துவிடு"

"ஐயா, என்னை விட அவள் நான்கு மடங்கு அதிகம் சம்பாதிக்கிறாள். என்னையும் என் வயதான பெற்றோரையும் கொடுமைப் படுத்தி வாழ்க்கையை நரகமாக்கியிருக்கிறாள்"

"அதற்கெல்லாம் இந்த சட்டத்தில் நிவாரணம் கிடையாது. அவள் கேட்கும் பணத்தை உடனே கொடுக்க வில்லையெனில் ஜெயிலுக்குப் போ!"

இதுதானய்யா இந்த்ச் சட்டத்தைக் கையிலெடுத்து நடக்கும் நீதி(!) மன்றத் தீர்ப்புகள்!

இன்னொரு முக்கிய முட்டாள்தனம்:

மனைவி (மற்றும் மனைவி போன்றவள்) பொய்ப் புகார் கொடுத்தால் அவள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று திட்டவட்டமாக இந்தச் சட்டத்தில் வரையறுத்துள்ளார்கள்! இதுபோல் அநியாயம் எங்காவது நடக்குமா?

மற்றொரு பொய்யான கட்டுக்கதை:

இதை சிவில் சட்டம் என்று பெயரிட்டுவிட்டு, கிரிமினல் கோர்ட்டில் பதிவு செய்து தீர்ப்புகள் அளிக்கப்படும்படி அமைத்திருக்கிறார்கள். இதுபோன்ற புனைசுருட்டு எந்த நாகரிகமடைந்த நாட்டிலும் நடக்காது!

இந்த கொடுங்கோன்மை சட்டத்தின் நடைமுறையை (case laws), மற்றும் அதன் தாக்கத்தை நீங்கள் முழுதாக அறிந்து கொண்டால் நம் நாட்டிற்கு ஆஃப்கானிய தாலிபான் ஆட்சி வந்தால் தேவலை என்று எண்ணத் தொடங்கினால் ஆச்சரியப் படுவதற்கில்லை!

சரி. இப்போது இந்தச் சட்டத்தில் சிறிதும் வன்முறையே செய்ய இயலா புனிதர்களாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் நம் பெண் குலத்திலகங்களின் கைவண்ணங்கள் சிலவற்றைக் காணுங்கள்:

1.
வீட்டை காலி செய்ய சொன்ன வீட்டு உரிமையாளருக்கு கொலை மிரட்டல் செய்த பெண் கைது

திருவண்ணாமலை, அக்.25- 2009. செய்தி - தினத்தந்தி

திருவண்ணாமலையில் வீட்டை காலிசெய்ய சொன்ன வீட்டு உரிமை யாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வீட்டை காலி செய்ய

திருவண்ணாமலை கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் மாதவன் (வயது60). இவருடைய வீட்டில் பழனி என்பவர் தனது மனைவியுடன் கடந்த 4 மாதங்களாக வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.

வீட்டு உரிமையாளரிடம் மாதவி அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. பக்கத்தில் உள்ளவர்களிடம் மாதவனை பற்றி அவதூராக பேசியதாக தெரிகிறது. இதனால் வீட்டை காலிசெய்யும்படி மாதவன் கூறி உள்ளார்.

கொலை மிரட்டல்

இதனால் ஆத்திரம் அடைந்த தேவி காய்கறி வெட்டும் அரிவாள்மனையை எடுத்துவந்து மாதவனை கொலைசெய்து விடுவதாக மிரட்டி உள்ளார். இது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்தில் மாதவன் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2.
சூலத்தால் குத்தி குழந்தை கொலை : குடும்ப தகராறில் தாயும் தற்கொலை

அக்டோபர் 24, 2009. தினமலர்

சிறுபாக்கம் : குடும்பத் தகராறில், இரண்டு குழந்தைகளை சூலத்தால் குத்திக் கிழித்த தாய், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒரு வயது குழந்தை சம்பவ இடத்திலேயே இறந்தது. நான்கு வயது சிறுவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த, டி.புடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோமதுரை. விவசாயி. இவரது மனைவி சுதா (28). இவர்களது மகள் பெரியநாயகி ( 11), நந்திமங்கலத்தில் உள்ள தாத்தா வீட்டில் தங்கி படித்து வருகிறார். மகன்கள் சுதாகர் (4) சுபாஷ் (1) பெற்றோருடன் வசித்து வந்தனர்.

இரண்டு மாதங்களுக்கு முன், கணவருடன் ஏற்பட்ட தகராறில் கோபித்துக் கொண்டு நந்திமங்கலத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்ற சுதா, அங்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டு அங்கேயே தங்கிவிட்டார். கோமதுரை மாமனார் வீட்டுக்கு சென்று சமாதானம் செய்து, சுதாவை நேற்று முன்தினம் அழைத்து வந்துள்ளார். வீட்டிற்கு வந்ததும் மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த சுதா, நேற்று காலை தனது மகன்கள் சுதாகர் (4) சுபாஷ் (1) இருவரையும், அதே ஊரில் உள்ள குரவனார்கோவிலுக்கு அழைத்து சென்றார். அங்கு, சாமி முன் நட்டு வைத்திருந்த சூலத்தை பிடுங்கி இரண்டு குழந்தைகளின் வயிற்றில் குத்தினார். படுகாயமடைந்த இரண்டு குழந்தைகளும், துடிதுடித்து கதறினர். சுதா அருகில் இருந்த கருவேலம் மரத்தில் தனது சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடிவந்து பார்த்தபோது, படுகாயமடைந்த குழந்தை சுபாஷ் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தான். சிறுவன் சுதாகர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான். சிறுவனை கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். பெற்ற தாயே குழந்தைகளை சூலத்தால் குத்தி, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், டி.புடையூர் கிராம மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

3.
கழுத்தை நெரித்து கொல்ல முயற்சி; நகைகள் கொள்ளை
என்ஜினீயர் மனைவியின் 7 மாத கர்ப்பிணி தோழி கைது
பரபரப்பு வாக்குமூலம்

சென்னை, அக்.23- 2009. தினத்தந்தி

சென்னையில் என்ஜினீயர் மனைவியின் கழுத்தை நெரித்து கொல்ல முயன்ற அவரது கர்ப்பிணி தோழி கைது செய்யப்பட்டார். அவர் கொள்ளையடித்து சென்ற நகைகளும் மீட்கப்பட்டது.

கொலை முயற்சி

சென்னை ஜாபர்கான்பேட்டை ஆர்.வி.நகர் 75-வது தெருவில் வசிப்பவர் சந்துரு என்ற ராஜகோபால் (வயது 28). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், சென்னையில் உள்ள கம்ப்னிட்டர் கம்பெனி ஒன்றில் பணிபுரிகிறார். இவரது மனைவி பெயர் சுபஸ்ரீ (25). இவர்களுக்கு 11/2 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. தினமும் ராஜகோபால் வேலைக்கு சென்றபிறகு வீட்டில் கை குழந்தையோடு சுபஸ்ரீ தனியாக இருப்பார். வேலைக்காரி வந்து வீட்டு வேலைகளை செய்வார்.

நேற்று முன்தினம் மாலையில் சுபஸ்ரீ தனியாக இருக்கும்போது அவரை கழுத்தை நெரித்து கொல்ல முயற்சி நடந்தது. அவர் மயங்கி விழுந்து கிடந்தார். சுபஸ்ரீ அணிந்திருந்த நகைகள் மற்றும் வீட்டில் உள்ள 40 சவரன் நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த சுபஸ்ரீயை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்த பிறகு சுபஸ்ரீ உயிர் பிழைத்துக்கொண்டார்.

குற்றவாளிகள் யார்?

இந்த கொலை முயற்சி மற்றும் நகை கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் யார் என்று கண்டுபிடித்து கைது செய்யும்படி கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். இணை கமிஷனர் சக்திவேலு, துணை கமிஷனர் சம்பத்குமார் ஆகியோர் மேற்பார்வையில், உதவி கமிஷனர் பரந்தாமன், இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆகியோர் தலைமையில் இதற்காக தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் சம்பவ நடந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் சுபஸ்ரீயின் வீட்டுக்கு தாடி வைத்த ஒருவர் உள்பட 3 ஆண்களும், சுடிதார் அணிந்திருந்த பெண் ஒருவரும் வந்து நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்ததாக தெரிய வந்தது. அவர்கள் யார்? என்று போலீசார் விசாரித்தனர். சுபஸ்ரீயின் செல்போனில் யார், யார் பேசியுள்ளனர் என்று ஆய்வு செய்யப்பட்டது.

பள்ளி தோழி

போலீசாரின் தீவிர விசாரணையில், சுபஸ்ரீயை கொல்ல முயற்சித்து அவரது நகைகளை கொள்ளையடித்தவர்கள் யார் என்று கண்டறியப்பட்டது. சுபஸ்ரீயின் வீட்டுக்கு வந்திருந்த சுடிதார் அணிந்த பெண்ணும், அவருடன் வந்திருந்த 3 ஆண்களும்தான் குற்றவாளிகள் என்று தெரிய வந்தது. சுடிதார் அணிந்த பெண்ணின் பெயர் முத்தரசி (27). அவருடன் தாடியுடன் வந்திருந்த வாலிபரின் பெயர் சரவணன் என்பதாகும். சரவணனும், முத்தரசியும் கணவன்-மனைவி ஆவார்கள். திருவேற்காட்டில் அவர்கள் வசித்து வந்தனர்.

முத்தரசி, சுபஸ்ரீயின் பள்ளி தோழி ஆவார். அவரை நேற்று காலையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில், சுபஸ்ரீயை கொல்ல முயற்சித்து நகைகளை கொள்ளையடித்த குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார். கொள்ளைப்போன நகைகளின் ஒருபகுதி அவரிடமிருந்து மீட்கப்பட்டது. சுபஸ்ரீயை கொல்ல முயன்று நகைகளை கொள்ளையடித்தது ஏன்? என்று முத்தரசி போலீசில் பரபரப்பான வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

ஒன்றாக படித்தோம்

நானும், சுபஸ்ரீயும் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பில் இருந்து 10-ம் வகுப்பு வரை ஒன்றாக படித்தோம். நெருக்கமான தோழிகளாக பழகினோம். 10-ம் வகுப்பில் சுபஸ்ரீ பெயிலாகி விட்டாள். இதனால் அவள் படிப்பை நிறுத்திவிட்டாள். நான் தொடர்ந்து படித்தேன்.

மதுரையில் உள்ள சட்ட கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும்போது நான் சரியாக படிக்கவில்லை என்று குற்றம்சுமத்தி என்னை கல்லூரியில் இருந்து நீக்கிவிட்டார்கள். நான் சிறு, சிறு திருட்டு வேலைகள் செய்ததும் கல்லூரியில் இருந்து நீக்குவதற்கு இது ஒரு காரணமாகும். அதன்பிறகு எனது பெற்றோர் சரவணனுக்கு என்னை திருமணம் செய்து வைத்தனர். சரவணன் 10-ம் வகுப்பு பெயிலானவர்.சென்னை துறைமுகத்தில் அவர் தற்காலிக ஊழியராக வேலை பார்த்தார். 6 மாதத்திற்கு முன்பு அந்த வேலை பறிபோய் விட்டது. இதனால் நாங்கள் குடும்பம் நடத்த கஷ்டப்பட்டோம். எனது நகைகளை அடகுவைத்து அதில் வந்த பணத்தை வைத்து குடும்பத்தை நடத்தினோம். இந்த நிலையில் நான் கர்ப்பமானேன். எனது கணவருக்கு வேலை தேடி பார்த்தும் வேலை கிடைக்கவில்லை.

எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம். இந்த நிலையில் சுபஸ்ரீயோடு எனக்கு மீண்டும் பழக்கம் தொடர ஆரம்பித்தது. ஒருமுறை அவரது வீட்டுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு வந்தேன். அப்போது அவர் வசதியாக வாழ்வதை தெரிந்து கொண்டேன். சுபஸ்ரீ வீட்டில் பகலில் தனியாக இருப்பதையும் அறிந்துகொண்டேன். சுபஸ்ரீயை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டோம். அதற்கான சமயம் பார்த்து காத்திருந்தோம்.

சீமந்த விழா

இந்த நிலையில் எனக்கு கர்ப்பம் 7 மாதம் ஆகிவிட்டது. சீமந்த விழா நடத்த முடிவு செய்திருந்தோம். சீமந்த விழாவுக்கு அழைப்பதுபோல சுபஸ்ரீயின் வீட்டுக்கு சென்று பின்னர் அவரை மிரட்டி பணம், நகைகளை பறிக்க முடிவு செய்தோம். திட்டமிட்டப்படி புதன்கிழமை அன்று காலை 11.30 மணிக்கு முதலில் சுபஸ்ரீ வீட்டுக்கு சென்றோம். நானும், எனது கணவரும் வீட்டுக்குள் சென்றோம். எங்களோடு வந்திருந்த கணவரின் நண்பர்கள் வீட்டுக்கு வெளியில் நின்று கொண்டனர்.

நாங்கள் சென்றபோது வீட்டில் வேலைக்காரி இருந்தாள். சுபஸ்ரீயிடம் எனக்கு சீமந்த விழா நடத்தப்போகிறோம். அதற்கு நீ கண்டிப்பாக வரவேண்டும். என்னுடைய நகைகள் எல்லாம் அடகு வைக்கப்பட்டுள்ளது. எனவே சீமந்த விழாவில் அணிவதற்கு உன்னுடைய நகைகளை 2 நாட்கள் இரவலுக்கு தரவேண்டும் என்று கேட்டேன். அதற்கு சுபஸ்ரீ முதலில் மறுத்தாள். பின்னர் மாலையில் வந்தால் தருவதாக கூறினாள்.

பின்னர் நாங்கள் இருவரும் வந்துவிட்டோம். பிற்பகல் 2.30 மணியளவில் மீண்டும் சுபஸ்ரீயின் வீட்டுக்கு சென்றோம். அப்போது அவருடைய கணவர் வீட்டில் மதிய சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டிருந்தார். கணவரிடம் சுபஸ்ரீ என்னை அறிமுகப்படுத்தி வைத்தாள். கணவர் வீட்டில் இருந்ததால் மாலை 4 மணிக்கு மீண்டும் வருவதாக சொல்லிவிட்டு வந்துவிட்டோம். மாலை 4 மணிக்கு மீண்டும் சென்றோம். அப்போது சுபஸ்ரீ மட்டும் தனியாக இருந்தாள். நானும், எனது கணவரும், கணவரின் நண்பர்கள் 2 பேரும் சுபஸ்ரீயோடு பேசிக்கொண்டிருந்தோம். எங்களுக்கு டீ போட்டுக்கொடுத்து உபசரித்தாள். சீமந்த விழாவில் அணிந்துகொள்ள காலையில் நகைகளை தருவதாக சொன்ன சுபஸ்ரீ மாலையில் நகைகளை தர மறுத்தாள். நான் அவளோடு எவ்வளவோ பேசிப்பார்த்தும் நகைகளை தரமுடியாது என்று மறுத்துவிட்டாள்.

கழுத்தை நெரித்தோம்

இதனால் கோபம்கொண்ட நான், அவளை படுக்கை அறைக்கு இழுத்து சென்று கட்டிலில் தள்ளி அடித்து உதைத்தேன். நகைகளை தராவிட்டால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டினேன். சுபஸ்ரீ அதற்கும் பணியவில்லை. இதனால் நான் எனது துப்பட்டவால் அவளது கழுத்தை இறுக்கினேன். சத்தம்போடாமல் இருக்க எனது கணவர் சுபஸ்ரீயின் வாயை பொத்தினார். இதில் சுபஸ்ரீ மூச்சு பேச்சு இல்லாமல் அப்படியே சாய்ந்துவிட்டாள்.

அவள் இறந்துவிட்டாள் என்று கருதி அவள் அணிந்திருந்த நகைகள் மற்றும் பீரோவில் இருந்த நகைகளை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் வீட்டை விட்டு வெளியேறிவிட்டோம். அன்றையதினம் இரவு எனக்கு சீமந்த விழா நடந்தது. அப்போது சுபஸ்ரீயிடம் கொள்ளையடித்த நகைகளை நான் அணிந்துகொண்டேன். விழா முடிந்து எல்லோரும் தூங்கிக்கொண்டிருக்கும்போது அதிகாலையில் போலீசார் என்னை பிடித்துவிட்டனர்.

இவ்வாறு முத்தரசி கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

======================

இப்போதைக்கு இது போதும். மேன்மேலும் நூற்றுக் கணக்கில் வந்து கொண்டேயிருக்கும், மெல்லியலாளர்களாகிய பெண்குலங்களின் கொடூரமான வன்முறைத் தாண்டவங்களை மீண்டும் இன்னொரு இடுகையில் பார்ப்போம்!

சேச்சே, பெண்கள் மென்மையானவர்கள், வன்முறையே செய்யமாட்டார்கள்!

ஆமாம் அய்யா, அப்படித்தான் மெத்தப் படித்தவர்கள் சட்டம் இயற்றியிருக்கிறார்கள். குடும்ப வன்முறை தடுப்புச்சட்டம் (The Protection Of Women From Domestic Violence Act, 2005) வரையறுத்துள்ளபடி வன்முறை என்பது ஆண்கள் மட்டும்தான் செய்வான். பெண்கள் வன்முறையே செய்யமாட்டார்கள் என்றுதான் இந்தச் சட்டத்தில் நிறுவப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஆண்கள் மீது இந்தச் சட்டத்தை ஏவி விட்டு வன்கொடுமை செய்து கொண்டு வருகிறார்கள் நடுத்தர வர்க்க இளம் மனைவிகள். அதைத் தூண்டிவிடும் வகையில் பேசி வருகிறார் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் ராமாத்தாள் அவர்கள்.

இந்தச் செய்தியை வாசியுங்கள். மென்னியலாளரின் வக்கிரங்கள் வெளிப்படும்:

குழந்தைகள் கொலை: தாய், பாட்டி கைது
அக்டோபர் 09,2009, செய்தி: தினத்தந்தி.

தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் குறைப்பிரசவத்தில் பிறந்த இரட்டை பெண் குழந்தைகளை கொலை செய்த தாய், பாட்டி கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அடுத்த கவர்னகிரி சிலோன் காலனி ஆட்டோ டிரைவர் துரைப்பாண்டி.

அவருக்கும், அதே பகுதி சுப்பையா மகள் ரேவதிக்கும்(22), எட்டு மாதத்திற்கு முன் திருமணம் நடந்தது. கர்ப்பமடைந்த ரேவதிக்கு, செப்., 24ல் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. ஏழே மாதத்தில் பிறந்த அக்குழந்தைகள் இங்குபேட்டரில் வைத்து பாதுகாக்கப்பட்டன. படுகொலை: நேற்று காலை 7.30 மணியளவில் தாய்ப்பால் தருவதற்காக அக்குழந்தைகள் மருத்துவமனையில் இருந்த தாய் ரேவதியிடம் தரப்பட்டன. அதில் ரேவதி, ஒரு பெண் குழந்தையின் கழுத்தை திருகி கொலை செய்தார்.

மற்றொரு பெண் குழந்தையின் கழுத்தை ரேவதியின் தாயார் தேனிலா(42) கத்தி, பிளேடால் அறுத்துக் கொலை செய்தார். தாய்ப்பால் குடித்தவுடன் அக்குழந்தைகள் திடீரென மயங்கிவிட்டதாக, ரேவதி டாக்டர்களிடம் நாடகமாடினார். அக்குழந்தைகளை பரிசோதனை செய்த டாக்டர் லூர்டஸ் அல்பிலோ, அவை கொல்லப்பட்டதை உறுதி செய்தார். பிறந்த 14வது நாளில் ஈவு இரக்கமின்றி குழந்தைகளை கொலை செய்த தாய் ரேவதி, பாட்டி தேனிலாவை தென்பாகம் போலீசார் கைது செய்தனர்.

"தலைப்பிரவத்தில் பெண் குழந்தைகள் பிறந்ததோடு, அவை குறைப்பிரசவமாக இருந்ததால் அவற்றை எதிர்காலத்தில் நன்றாக வளர்க்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. அதனால், கொலை செய்தோம்” என, இருவரும் தெரிவித்தனர். அரசு மருத்துவமனையில் நடந்த கொடூர கொலை சம்பவம் அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

பாட்டு டீச்சர் கொலை. கள்ளக்காதல் அம்பலம்



(செய்தி: தினமலர், தினகரன், தினத்தந்தி)

முந்தைய செய்திகள்:

சென்னை அசோக்நகர் இரட்டைக் கொலையில் புதிய திருப்பம்
அனந்தலட்சுமிக்கு, நள்ளிரவில் வந்த செல்போன் அழைப்புகள்
போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

சென்னை, செப்.27- 2009

சென்னை அசோக்நகரில் நடந்த இரட்டைக் கொலையில் புதிய திருப்பமாக, கொலையுண்ட அனந்தலட்சுமிக்கு நள்ளிரவில் வந்த செல்போன் அழைப்புகள் பற்றி பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

தாய்-மகன் கொலை

சென்னை அசோக்நகர் போஸ்டல் காலனியில் வசித்து வந்த அனந்தலட்சுமி (வயது 39), அவரது மகன் சூரஜ் (13) ஆகியோர் பட்டப்பகலில் கத்திரிக்கோலால் குத்தி படுகொலை செய்யப்பட்டனர். அனந்தலட்சுமியின் கணவர் ராமசுப்பிரமணி, பெங்களூர் மருந்து கம்பெனியில் மாதம் ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் வேலை பார்த்து வருகிறார். அவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள்.

கொலை செய்யப்பட்ட அனந்தலட்சுமி அணிந்திருந்த நகைகள் மற்றும் பணத்தை பறித்துச்சென்ற கொலையாளி, வீட்டில் பீரோவில் இருந்த 40 பவுன் நகைகளை அப்படியே விட்டுச்சென்று இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. சென்னையை உலுக்கிய இந்த இரட்டைக் கொலை பற்றி விசாரிப்பதற்காக 8 தனி போலீஸ் படைகள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு படையும் வெவ்வேறு கோணத்தில் விசாரணையை மேற்கொண்டன.

புதிய திருப்பம்

முதல் கட்ட விசாரணையில், தெரிந்த நபர்தான் இந்தக் கொலையை செய்திருக்கிறார் என்பது தெரியவந்தது. இத்தகைய கொலைகளில் துப்பு துலக்குவதில் செல்போன் உரையாடல்கள் முக்கிய பங்கு வகித்து உள்ளன. இந்த வழக்கிலும் செல்போன் தொடர்புதான், புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

மிகவும் முன் எச்சரிக்கையாக நடந்துகொள்வதாக கருதி, அனந்தலட்சுமி மற்றும் சூரஜின் செல்போன்களை கொலையாளி எடுத்துச் சென்றுவிட்டான். ஆனால், போலீசார் மிகவும் சாதுரியமாக செயல்பட்டு, அவர்களுடைய தொலைபேசி எண்களைக்கொண்டு, அந்த செல்போன் நிறுவன அலுவலகம் மூலம் பல விவரங்களை போலீசார் சேகரித்து உள்ளனர். அதில் பரபரப்பான தகவல்கள் கிடைத்து உள்ளன.

நள்ளிரவு அழைப்புகள்

குறிப்பிட்ட செல்போன் எண்களில் இருந்து அனந்தலட்சுமிக்கு அடிக்கடி அழைப்புகள் வந்திருந்தன. மேலும் அனந்தலட்சுமியின் செல்போனில் இருந்தும் அந்த எண்களுக்கு பல முறை பேசப்பட்டு இருந்தது. இவர்கள் எந்த நேரத்தில், எங்கிருந்து பேசினர் என்ற விவரங்கள் அனைத்தும் செல்போன் எக்ஸ்சேஞ்சில் இருந்து கிடைத்தது.

அதை பரிசோதித்துப் பார்த்ததில் சில `அழைப்பு'கள் நள்ளிரவு நேரத்தில் மட்டுமே பேசப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அதிலும் குறிப்பாக சில அழைப்புகள், ஒன்றரை மணி நேரம் வரை நீடித்துள்ளது.

அந்த வகையில் கடைசியாக அனந்தலட்சுமி பேசிய `செல்போன் அழைப்பு' 40 நிமிடங்கள் பேசப்பட்டதாக தெரிய வந்தது. கொலை நடந்த அன்று, குறிப்பிட்ட அந்த எண்ணுக்கு அனந்தலட்சுமி அதிகமாக பேசி இருந்தார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆட்டோ டிரைவர் உள்பட 15 பேர்

அனந்தலட்சுமியுடன் செல்போனில் பேசிய 15 நபர்களை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். அவரது வீட்டுக்கு அடிக்கடி வரும் ஆட்டோ டிரைவரிடமும் தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விசாரணையில் போலீசாருக்கு கொலைக்கான முக்கிய துப்பு கிடைத்துள்ளது. சந்தோஷ் என்ற 35 வயது வாலிபரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சில தகவல்கள் கூறுகின்றன. அனந்தலட்சுமிக்கு யாருடன் நட்பு உள்ளது என்பது பற்றியும் விசாரிக்கப்படுகிறது.

வித்தியாசமான கொலை

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

இரட்டைக் கொலை விவகாரத்தில் ஒரே கோணத்தில் மட்டும் விசாரணையை நடத்தவில்லை. பிடிபட்ட நபர்களிடம் மேற்கொள்ளப்படும் விசாரணையில்தான் சில விவகாரம் உறுதி செய்யப்படும். தற்போது எங்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம் ஓரளவு உறுதியாகி இருக்கிறது.

கத்திரிக்கோலால் கொலை செய்வது சற்று வித்தியாசமானது. ஏனென்றால், மிகுந்த வேகத்தில் குத்தினால்தான் உடலுக்குள் கத்திரிக்கோல் இறங்கும். எனவே கொலை செய்து கொள்ளை அடிக்கும் நோக்கம் இருந்திருந்தால், கொலையாளி கத்தி அல்லது அரிவாளைத்தான் கொண்டு வந்திருப்பான்.

வாக்குவாதம்

ஏதோ ஒரு விவகாரம் பற்றி பேசுவதற்காக தெரிந்த நபர்தான் வீட்டுக்கு வந்திருக்க வேண்டும். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் நடந்திருக்கிறது. அப்போது தகராறு முற்றி, அருகில் இருந்த கத்திரிக்கோலால் அனந்தலட்சுமியின் கழுத்தில் கொலையாளி குத்தி இருக்கிறான். ரத்தம் பீரிட்டு வந்ததும், தன் மீது தெளித்து விடக் கூடாது என்பதற்காக கழுத்தை அவன் அழுத்திப் பிடித்து இருக்கிறான். அப்போது கழுத்து எலும்பில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.

தாயைத் தாக்கிய போது தடுக்க வந்த மகனும் அதே வகையில் குத்தி கொலை செய்யப்பட்டு இருக்கிறான். அதே நேரத்தில் ஆதாயத்துக்காக (கொள்ளையடிப்பதற்காக) கொலை நடந்ததா? என்ற கோணத்தில் நடத்தும் விசாரணையையும் நாங்கள் கைவிடவில்லை.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
== =============

அசோக்நகர் இரட்டைக் கொலையில் திருப்பம்.
பாட்டு டீச்சரின் நண்பர் தலைமறைவு
பதிவு செய்த நாள்: செப்டம்பர் 30, 2009

சென்னை, : சென்னை அசோக் நகர் போஸ்டல் காலனி 3வது தெருவை சேர்ந்தவர் ராமசுப்பிரமணியம். இவரது மனைவி அனந்தலட்சுமி, மகள் சோபனா, மகன் சூரஜ். அனந்தலட்சுமி, சூரஜ் ஆகியோர் வீட்டில் தனியாக இருந்தபோது படுகொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து, தனிப்படை தீவிரமாக விசாரித்து வருகிறது.

அனந்தலட்சுமியுடன் 5 ஆண்கள் அடிக்கடி செல்போனில் பேசியிருப்பது தெரிந்தது. பெங்களூரில் ராமசுப்பிரமணியம் வேலை செய்வதால், அசோக் நகர் வீட்டில் அனந்தலட்சுமி தனியாக இருக்கும் போது அவர்கள் வந்து சென்றுள்ளனர்.

அதில் கேரள ஜோசியர் சந்தோஷடீம் ஒருவர். அவரிடம் விசாரணை நடத்திய போது, கொலைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியுள்ளார்.

மற்றவர்களில் 2 பேர், அனந்தலட்சுமியின் கணவர் ராமசுப்பிரமணியத்தின் சென்னை அலுவலகத்தில் பணியாற்றிய வர்கள். இவர்களில் கணேஷ் என்பவர் வேறு கம்பெனிக்கு சென்று விட்டார். ஆனாலும், ராமசுப்பிரமணியம் கேட்டுக் கொண்டபடி, வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி அனந்தலட்சுமியிடம் கொடுத்து வந்துள்ளார் கணேஷ். கிறிஸ்டோபர் என்பவரும் அனந்தலட்சுமிக்கு உதவி செய்து வந்துள்ளார். இதனால் 2 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினர்.

கிறிஸ்டோபரின் நண்பர் வேல்முருகன், மருந்து கம்பெனி விற்பனை பிரதிநிதி. கிறிஸ்டோபருடன் அனந்தலட்சுமியின் வீட்டுக்கு சென்று வந்துள்ளார்.

அவர் தனியாக இருப்பதை அறிந்து கிறிஸ்டோபருக்கு தெரியாமல் அடிக்கடி அனந்தலட்சுமியை சந்தித்துள்ளார். போனில் இருவரும் மணிக்கணக்கில் பேசியுள்ளனர். இதனால் ஈக்காடுதாங்கலில் தங்கி இருக்கும் வேல்முருகனின் வீட்டுக்கு சென்றனர். ஆனால், அனந்தலட்சுமி கொலை செய்யப்பட்ட 24ம் தேதி முதல், வீட்டை பூட்டி விட்டு சென்றது தெரியவந்தது. அவருடைய சொந்த ஊரான நெல்லையில் போலீசார் விசாரித்தனர். அங்கும் வேல்முருகன் வரவில்லை.

இதனால், அவரது உறவினர்கள் உள்ள திருச்சி, மதுரை, புதுவை ஆகிய இடங்களுக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். இவர் 24ம் தேதி வரை சென்னையில் இருந்துள்ளார். அன்று பகலில்தான் கொலை நடந்துள்ளது. இதனால் அவர் மீதான சந்தேகம் வலுத்துள்ளது.

அவரது செல்போன் எண்ணை வைத்து நடத்திய விசாரணையில், அனந்தலட்சுமி மட்டுமின்றி மேலும் பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. திருமணமான பெண்களையே தனது வலையில் வீழ்த்தியுள்ளார். வெளி ஊர்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார். இதுபற்றிய புகார் எழுந்ததால், வேல்முருகனை வேலையில் இருந்து மருந்து கம்பெனி நிர்வாகம் நீக்கியுள்ளது. எனினும், 6 மாதமாக சம்பளம் இல்லாமலேயே வீட்டு வாடகை,
சாப்பாடு, ஊர் சுற்ற என்று எல்லாவற்றுக்கும் பணத்துக்கு கஷ்டப்படாமல் ஜாலியாக இருந்துள்ளார். அதற்கு தேவையான பணத்தை பல பெண்களிடம் கறந்துள்ளார். இதனால் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
===========

இன்றைய செய்தி:

சென்னை, அக்.2, 2009:

சென்னை அசோக் நகர் போஸ்டல் காலனியை சேர்ந்த பாட்டு டீச்சர் அனந்தலட்சுமி, அவரது மகன் சூரஜ் ஆகியோர் கடந்த 24ம் தேதி வீட்டில் படுகொலை செய்யப்பட்டனர். விசாரணையில் அனந்தலட்சுமிக்கு ஆண் நண்பர்கள் அதிகம் இருந்தது தெரிய வந்தது.

அவர்களில் நெல்லையை சேர்ந்த வேல்முருகன் என்பவர் அனந்தலட்சுமியுடன் நெருங்கி பழகியது தெரிந்தது. அவர் சென்னை ஈக்காட்டுதாங்கலில் வசித்தார். திருமணமாகாதவர். மெடிக்கல் ரெப். வேலை பார்த்து வந்தார். வேல்முருகன் பற்றி பகீர் தகவல்கள் தெரிய வந்தன.

திருமணமான பெண்கள் பலரிடம் நெருங்கி பழகி தன் வலையில் விழ வைத்துள்ளார் வேல்முருகன். அனந்தலட்சுமி வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார். மேற்கு மாம்பலத்தில் வசிக்கும் சானியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண், அனந்தலட்சுமி வீட்டுக்கு வந்து செல்வார். இவர் கேரளாவை சேர்ந்தவர், திருமணமானவர். அவருடன் பழக ஆரம்பித்து அவரது வீட்டுக்கும் சென்று வந்துள்ளார் வேல்முருகன். இந்த விஷயம் தெரிந்து ஆத்திரம் அடைந்த அனந்தலட்சுமி, இருவரையும் பிரித்து வைத்துள்ளார். இது தொடர்பாக ஒரு வாரமாக அனந்தலட்சுமியுடன் வேல்முருகன் தகராறு செய்துள்ளார்.

சானியாவுடன் தன்னை சேர்த்து வைக்குமாறு கூறியுள்ளார். அனந்தலட்சுமி கேட்கவில்லை. தன்னுடன்தான் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி இருக்கிறார். (அப்படிப்போடு! கள்ளக்காதலில் கூட சக்களத்தி சண்டை டோய்!) வேல்முருகன் சகவாசத்தை நிறுத்தாவிட்டால், கணவரிடம் கூறிவிடுவதாக சொல்லி சானியாவையும் அனந்தலட்சுமி மிரட்டி உள்ளார். வேல்முருகன் மற்றும் சானியாவுடன் அனந்தலட்சுமி தகராறு செய்ததே கொலையில் முடிந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், அனந்தலட்சுமியின் பிரேதப் பரிசோதனையில் அவர் பகல் ஒரு மணிக்கும், சூரஜ் 2 மணிக்கும் இறந்தது தெரிய வந்தது. பகல் 1.30 மணிக்கு சூரஜ் வீட்டுக்கு வெளியே விளையாடி இருக்கிறான். இதனால் வேல்முருகன் வந்ததும் சூரஜ்ஜை விளையாட அனந்தலட்சுமி அனுப்பி இருக்கலாம். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் அனந்தலட்சுமியை வேல்முருகன் கொலை செய்திருக்கலாம்.

வீட்டுக்கு தான் வந்தது சூரஜுக்கு தெரிந்ததால், அவனை வீட்டுக்குள் அழைத்து சமையல் அறையில் அவனையும் கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

வேல்முருகனின் செல்போனை ஆய்வு செய்ததில், அனந்தலட்சுமி தவிர வேறு 4 பெண்களின் எண்களும் இருந்தன. அவற்றில் விருகம்பாக்கம் பெண் டாக்டரும் ஒருவர். மாதக் கணக்கில் அவருடன் வேல்முருகன் பழகியுள்ளார்.

செலவுக்கு அவ்வப்போது பணமும் பெற்றுள்ளார். அவரது நடவடிக்கை பிடிக்காததால் தொடர்பை பெண் டாக்டர் துண்டித்துள்ளார். பின்னர், அம்பத்தூரை சேர்ந்த பெண் ஊழியரை வேல்முருகன் வளைத்துள்ளார், அவரும் திருமணமானவர். கிண்டியில் ஒரு பெண்ணுடன் வேல்முருகன் தொடர்பு வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், அனந்தலட்சுமியின் கணவர் ராமசுப்பிரமணியத்தின் கம்பெனியில் பணியாற்றிய கிறிஸ்டோபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இவரும் நெல்லையை சேர்ந்தவர். வேல்முருகனும் கிறிஸ்டோபரும் நெருங்கிய நண்பர்கள். இருவருக்கும் திருமணமாகவில்லை. இதனால் அடிக்கடி அனந்தலட்சுமியை இருவரும் சந்தித்து வந்துள்ளனர். அதில் வேல்முருகன் வலையில் அனந்தலட்சுமி வீழ்ந்திருக்கிறார்.

விசாரணையில் இதுபோன்ற பல தகவல்கள் கிடைத்ததால், வேல்முருகனை பிடிக்க தமிழகம் முழுவதும் போலீசார் வலை விரித்தனர். இந்நிலையில் அவர் ஊட்டி நீதிமன்றத்தில் சரணடைய முயன்றார். ஆனால், மாஜிஸ்திரேட் விடுமுறை என்பது தெரிய வந்ததால், அங்கிருந்து மேட்டுப்பாளையம் வந்து நீதிமன்றத்தில் நேற்று மாலை சரணடைந்தார். அதைத் தொடர்ந்து அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனால் அவரை காவலில் எடுத்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

================

இந்தக் கள்ளக்காதல் தகராறில் ஒரு பாவமும் அறியாத அந்தச் சிறுவன் சூரஜ் பலியானதுதான் பரிதாபம்.

ஆனால் அனந்த லட்சுமியின் பெண் தப்பினாள். கணவனும் தப்பினான். அவன் பெங்களூரில் இருந்ததால் உயிர் தப்பியிருக்கிறான். ஏனெனில் சமீபத்தில் டஜன் கணக்கில் நிகழ்ந்துள்ள கள்ளக்காதல் கொலைகளைப் பார்க்கும்போது, கணவன் தான் முதலில் பலியாகியிருப்பான்!

அதுசரி, ஒரு வயது வந்த பெண் தன்னுடன் வளரும்போது ஒரு தாய் இதுபோல் கணடவனோடு உறவு வைத்துக் கொண்டிருந்தாரே, அந்தப் பெண்ணும் அந்தப் பையனும் எப்படிப்பட்ட சூழலில் வளர்ந்திருந்திருக்கிறார்களோ!

பெண் குழந்தைகளை 39 முறை கத்தியால் குத்திப் படுகொலை செய்த தாய்!

இந்தியாவின் நீதிமன்றங்களில் வரும் பெரும்பான்மையான விவாகரத்து வழக்குகளில் குழந்தைகளின் காப்புப் பொறுப்பு தாயின் வசம்தான் முழுமையாக ஒப்படைக்கப்படுகிறது. எவ்வளவுதான் தந்தை தன் குழந்தைகளின் மீது பாசம் வைத்திருந்தாலும், அவர்களின் நல்வாழ்வுக்காக எத்தகைய தியாகமும் செய்பவனாக இருந்தாலும், அதே நேரத்தில் அந்தத் தாய் குழந்தைகள் மீது சிறிதளவும் பாசம் இல்லாதவளாக, "தான், தன் சுகம்" என்று இருப்பவளாக இருந்தாலும், இந்திய நீதிமன்றங்கள் குழந்தைகளை தந்தைகள் வசம் ஒப்படைப்பதில்லை.

தந்தை என்பவர் வெறும் "விசிட்டர்" என்பது நீதிமன்றங்களின் முடிபு. ஆனால் நடைமுறையில் அந்த "விசிட்டுகள்" கூட அந்தத் தந்தைகளுக்குக் கிட்டுவதில்லை. ஏதேனும் சாக்கு போக்கு சொல்லி தந்தையர்களிடம் குழந்தைகளைக் காண்பிக்காமல் ஏமாற்றும் தாய்க்குலங்கள் அநேகம். அந்தக் கணவன் பிறகு கோர்ட்டுக்கு நடையாய் நடந்து "எனக்கு குழந்தையைக் காண்பியுங்கள்" என்று போராட வேண்டும்!

ஆனால் இதில் முரண்நகை என்னவென்றால், குழந்தைகளைக் கண்னால் காண்பதற்குக் கூட வாய்ப்புக் கிட்டுகிறதோ இல்லையோ, அந்த மாஜி மனைவியின் சிலவுக்கும் குழந்தைகளின் பராமரிப்புச் சிலவுக்கும் மாதா மாதம் அந்த கணவன் தான் பணம் கொடுத்து அழவேண்டும்! இல்லாவிட்டால் சிறை தண்டனை!!

இத்தகைய ஒருதலைச் சார்பான, ஆணுக்கு எதிரான, சட்டங்கள், தீர்ப்புகள் மலிந்தது இந்த நாடு.

சரி, இந்த நாட்டில் பிறந்த ஒரு தாயார் தன் குழந்தைகளை என்ன செய்தார், விவாக ரத்து பெற்ற தன் கணவன் மீது கொண்ட வெறுப்பால் தன் குழந்தைகள அவள் எப்படிக் கொன்றாள் என்பதை வாசியுங்கள்:-

2 மகள்களை கொன்ற இந்திய பெண். 33 ஆண்டு சிறைத் தண்டனை.

லண்டன், செப்.23- 2009

இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ்ஷைர் நகரில் வசிக்கும் இந்தியப்பெண் ரேகா குமாரி பேக்கர். 41 வயதான இவர் அங்கு உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்தார். அவருக்கு டவீனா பேக்கர், ஜாஸ்மின் பேக்கர் என்று 2 மகள்கள் இருந்தனர். டவீனாவுக்கு வயது 16. இளையவளுக்கு வயது 13. இருவரையும் கடந்த 2007-ம் ஆண்டு ஜுன் மாதம் 13-ந்தேதி அவர்களது தாயார் கத்தியால் குத்தி கொன்றார். 39 முறை கத்தியால் குத்தினார்.

இரு பெண் குழந்தைகளும் தூங்கிக் கொண்டிருந்தன. அவர்கள் உயிர் பிரிந்த பின்னும் மேன்மேலும் கத்தியால் குத்திக் கொண்டெ இருந்திருக்கிறார்.
மகள்களை யார் கவனித்துக்கொள்வது என்பது தொடர்பாக அவருக்கும், அவரது முன்னாள் கணவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து தான் அவர் கொலை செய்தார்.

Indian Express reports:

Kumari-Baker’s ex-husband, businessman David Baker, said “not a day passes” when he does not think of Davina and Jasmine. “I was robbed of my daughters by an act of calculated viciousness,” he said.

Times Of India reports:

The elder daughter Davina Baker, 16, was stabbed 39 times while her sister Jasmine Baker, 13, was attacked 29 times with a kitchen knife in a frenzied attack by their mother in 2007.

அந்த ரேகா குமாரி என்னும் பெண் பேயின் திருமுகத்தைக் கண்டு "ஆகா, இவளல்லவா, பெண்குலத்திலகம்" என்று துதிபாடத் துடிப்போருக்காக அந்தப் பெண்ணின் படத்தை இந்த வலைப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.

மனோரமா ஆச்சி, எங்கே இருக்கீங்க? அந்த புதுமைத் தாய் தன் இளம் பெண் குழந்தைகளை 39 முறை கத்தியால் குத்தியதற்கும் அவளுடைய கணவனின் ஆண்மையின்மை தான் காரணமா? "தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை எப்படி வேண்டுமானாலும் கொல்ல உரிமை வேண்டும்" என்பதற்காக எப்போது போராட்டம் தொடங்கப் போகிறீர்கள்?

பெண்கள் பாதுகாப்பு சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்

பெண்கள் பாதுகாப்பு சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கெடுபிடி

புதுடில்லி: செப்டம்பர் 20,2009

"பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையைத் தவிர்க்க, பெண்கள் பாதுகாப்புச் சட்டத்தை, அனைத்து மாநிலங்களும், தீவிரமாக அமல்படுத்த வேண்டும்' என, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

வடமாநிலங்களில் நடக்கும் கட்டாயத் திருமணத்தைத் தடுத்தால், அங்கு பெண்கள் தற்கொலையும், கவுரவத்தைக் காப்பாற்றுவதற்காக நடக்கும் கொலைகளையும் தவிர்க்க முடியும். பெண்களைப் பாதுகாக்க, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும், தற்போதைய நிலைமை மோசமாகவே உள்ளது. கற்பழிப்பு மற்றும் வன்முறையால் பெண்கள் உயிரிழக்கையில், அதற்கான முதல் தகவல் அறிக்கையை, காவல் நிலையங்கள் பதிவு செய்வதே இல்லை என, புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. பெண்களுக்கு எதிரான எந்தக் குற்றத்திற்கும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய காவல் நிலையங்கள் தயங்கக் கூடாது.

குற்றம் நடந்த மூன்று மாதங்களுக்குள், பாரபட்சமற்ற புலனாய்வின் அடிப்படையில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட வேண்டும். புலனாய்வுக்கான தகவல்களைப் பெறுவதில் எந்தக் குறைபாடும் இல்லாமல் பார்த்துக் கொள்வது, காவல் துறை மற்றும் நிர்வாகத்தினரின் கடமை. காவல் துறையில் பெண்களை அமர்த்துவதில் 33 சதவீத இட ஒதுக்கீட்டை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவியரைப் பாதுகாக்கும் வகையில், குற்றம் அதிகம் நடக்கும் இடங்களை அடையாளம் கண்டு, அங்கு கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும்.

மாணவியர் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்க, விரைவு மற்றும் குடும்ப நல கோர்ட்டுகளை அமைக்க வேண்டும். பெண் குழந்தைகள் இறப்பைத் தடுக்க, காவல் துறையினர், சுகாதாரத் துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும். கற்பழிக்கப்பட்ட பெண்களின் மறுவாழ்வுக்கு முக்கியத்துவம் தந்து, அவர்களுக்கு அறிவுரை வழங்க, உளவியல் படித்தவர்களைப் பணியமர்த்த வேண்டும். இவை உட்பட, மேலும் 31 நடவடிக்கைகளை, விரைந்து எடுக்குமாறு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரியானா மாநிலத்தில் ஒரு கிராமத்தில், ஒரே கோத்திரம் கொண்ட பெண்ணை மணந்ததற்காக, கட்டப் பஞ்சாயத்து நடத்தப்பட்டு, அந்த உத்தரவின் பேரில் ஒருவர் கொல்லப்பட்டார். இதையடுத்தே, பெண்கள் பாதுகாப்பு குறித்து மத்திய அரசு மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

http://www.dinamalar.com/new/General_detail.asp?news_id=17154

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், பெற்றோர் உள்பட குடும்பத்தில் 7 பேரைக் கொன்ற இளம் பெண்!

ஆகா, இந்திய இளம் பெண்கள் முழு சுதந்திரம் அடைந்து விட்டனர். அவர்களின் ஆசைகளுக்குக் குறுக்கே யார் வந்தாலும் கொலைதான்! அது கணவனாயிருந்தலும், மாமியார், மாமனாராக இருந்தாலும், பெற்றோராக இருந்தாலும் சரி.

ஏனிந்த நிலை? அவர்களை எதிரிகளாக பாவிக்க வேண்டும் என்னும் மனப்பான்மையை வளர்ப்பவர்கள் யார்? இந்த சமூகத்திலுள்ள "ரவிக்" + "பாப்" தலைப் பெண்ணியத் தலைவிகளா? நம் பண்பாட்டு விழுமியங்களைத் தகர்த்து, அதுதான் பெண் விடுதலை என்னும் தொடர் போதனைகளா?

இத்தகைய பெண்ணியவாதிகளின் பேச்சைக் கேட்டுக்கொண்டு இயற்றப் பட்டுள்ள சட்டங்களின் அடிப்படையில், திருமணமான இளம் பெண்கள் தங்கள் கணவன்மார்களையும் அவர்தம் பெற்றோரையும் உற்றோரையும் தங்கள் வீட்டை விட்டே விரட்டலாம். அவர்கள் மீது மனம் போனபடி பொய் கிரிமினல் வழக்கு தொடுத்து கைது செய்விக்கலாம். ஆனால் என்ன பொய் சொன்னாலும் அந்த இளம் பெண்கள்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க இயலாது.

அத்தகைய கொடுங்கோன்மைச் சட்டங்களைக் கையிலெடுத்து இந்தியாவில் இதுவரை 1,40,000 வயதான தாய்மார்களும், கண்வன்மார்களின் சகோதரிகளும், சிறு பெண் குழந்தைகளும் கைது செய்து சிறையிலடத்திருக்கிறார்கள்.

இந்த சீரழிவின் அடிப்படைக் காரணி என்ன? இளம் பெண்கள் மனத்தில் விஷ வித்தை விதைத்து, "உங்கள் இஷ்டம் போல் இருங்கள், சிலவு செய்யுங்கள். யாரோடு வெண்டுமானாலும் குலாவிக்கொண்டு உல்லாசமாக இருங்கள். எவர் குறுக்கே வந்தாலும் புறந்தள்ளுங்கள். ஏனெனில் பெண்கள் தன்னிச்சைப்படி வாழ்வதை இந்தப் பழமைவாதிகள் 'பண்பாடு, கலாச்சாரம், கற்பு' என்னும் பத்தாம் பசலிக் கோட்பாடுகளைக் கொண்டு அடக்கி வந்திருக்கிறார்கள். இனிமேல் அதற்கு இடம் கொடுக்க்காதீர்கள்" என்ற மனப்பான்மையை திட்டம் போட்டு வளர்த்து வருகின்றனர் பல பெண்ணியவாதிகளும், சமூகத்தில் பெரிய மனிதர்களாக உலாவி வரும் வயடானவர்களும். இத்தகைய தவறான போக்குக்கு அரசு இயந்திரமும், சட்டங்களும், தீதிமன்றங்களும், ஊடகங்களும் துணை போகின்றன என்பதுதான் விசனப்பட வேண்டிய விஷயம்.

இதன்கீழ் வரும் செய்தியைப் படித்துவிட்டு அதற்கு மனோரமா அம்மையார் என்ன பதில் வைத்திருக்கிறார் என்ற கேள்வியைக் கேளுங்கள். அதே நேரத்தில் "குடும்ப வன்முறை என்பது பெண்கள் செய்யவே மாட்டார்கள். ஆண்தான் செய்வான்" [*] என்று சட்டம் இயற்றியிருக்கும் செயலைக் கண்டித்து ஓரிரு வார்த்தைகள் பேசுங்கள்.

---------------------
[*] The Protection Of Women From Domestic Violence Act, 2005, Section 3

2. Definitions.-In this Act, unless the context otherwise requires,-
(a) "aggrieved person" means any woman who is, or has been, in a domestic relationship with the respondent and who alleges to have been subjected to any act of domestic violence by the respondent;


(q) "respondent" means any adult male person who is, or has been, in a domestic relationship with the aggrieved person and against whom the aggrieved person has sought any relief under this Act:Provided that an aggrieved wife or female living in a relationship in the nature of a marriage may also file a complaint against a relative of the husband or the male partner;
-----------------------------------------
நம் சமுதாயம் ஒரு எரிமலை வாயின்மேல் அமர்ந்திருக்கிறது என்பது மட்டும் நிச்சயம்.

இப்போது செய்தி:

ரோதக் (ஹரியாணா), செப்.21, 2009. செய்தி - தினத்தந்தி.

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், பெற்றோர் உள்பட குடும்பத்தில் 7 பேரை விஷம் கொடுத்தும், கழுத்தை நெரித்தும் கொன்றதாக 19 வயது இளம் பெண்ணையும் அவரது காதலனையும் போலீசார் கைது செய்தனர்.

அரியானாவில் நடந்த இந்த கொடூர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

அரியானா மாநிலம் ரோதக் மாவட்டத்தில் உள்ள கபூல்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்தர். இவரது மகள் சோனம் (வயது 19). இவரும் அதே ஊரைச் சேர்ந்த நவீன் என்ற வாலிபரும் ஒரே கல்லூரியில் படித்து வந்தனர். அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.
அவர்களுடைய காதலுக்கு, சோனத்தின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சாப்பாட்டில் விஷம்

ஆனால் காதல், சோனத்தின் கண்களை மறைத்தது. குடும்பத்தில் உள்ளவர்களை தீர்த்துக் கட்டினால்தான் தனது காதல் நிறைவேறும் என்று கருதிய அவர், அதற்கான காரியத்தில் துணிச்சலுடன் இறங்கினார். விஷம் கொடுத்து எல்லோரையும் கொல்ல தீர்மானித்த சோனம், தனது காதலன் நவீனிடம் சொல்லி விஷத்தை வாங்கி வரச் செய்தார். பின்னர் அந்த விஷத்தை இரவில் யாருக்கும் தெரியாமல் சாப்பாட்டில் கலந்தார்.
அதை சாப்பிட்ட சோனத்தின் தந்தை சுரேந்தர், தாயார் புரோமில்லா, பாட்டி போரி, சகோதரர் அர்விந்த் மற்றும் விஷால், சோனிகா, மோனிகா என்ற 3 குழந்தைகள் ஆகிய 7 பேர் சிறிது நேரத்தில் படுக்கையில் மயங்கி விழுந்தனர்.

பரிதாப சாவு

உடனே சோனம் தனது காதலன் நவீனை வீட்டுக்கு வரவழைத்தார். மயக்கத்தில் கிடப்பவர்கள் பிழைத்துக் கொண்டால் என்ன செய்வது என்ற பயந்த இருவரும், அவர்களுடைய கழுத்தை நெரித்தனர். இதனால் 7 பேரும் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

ஒரே வீட்டில் 7 பேர் இறந்து கிடப்பது பற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது, சோனம் வீட்டின் குளியல் அறையில் லேசாக மயங்கிய நிலையில் கிடந்தார்.

பின்னர் நடந்த பிரேத பரிசோதனையில், 7 பேரும் விஷம் கொடுத்தும் கழுத்தை நெரித்தும் கொல்லப்பட்டு இருப்பதாக தெரிய வந்தது.

இதனால், மயங்கிய நிலையில் கிடந்த சோனத்தின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்திய போது, 7 பேரும் விஷம் கொடுத்தும் கழுத்தை நெரித்தும் கொல்லப்பட்டது தெரிய வந்தது. மேலும், தான் சிக்கி விடக்கூடாது என்பதற்காக சோனம் மயக்க மாத்திரைகளை சாப்பிட்டு, தானும் பாதிக்கப்பட்டவர் போல் மயங்கி கிடந்ததும் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து சோனத்தையும் அவரது காதலன் நவீனையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் விஷம் கலந்த உணவை சாப்பிட்டவர்களில் சோனத்தின் தாத்தா தக்தீர் சிங்கும் ஒருவர். அவர் வீட்டுக்கு வெளியே தனியாக ஓர் இடத்தில் படுத்து இருந்ததால் அவரது கழுத்து நெரிக்கப்படவில்லை. இதனால் தக்தீர் சிங் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மேற்கண்ட தகவல்களை மாவட்ட மூத்த போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் ராவ் தெரிவித்தார்.

காதலனுடன் சேர்ந்து இளம்பெண் ஒருவர் ஈவு இரக்கம் இன்றி தனது குடும்பத்தையே தீர்த்துக் கட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கணவனுக்கு ஒரு வெட்டு கள்ளக் காதலனுக்கு ஒரு வெட்டு

முதலில் கணவனைக் கொன்ற கதை (தினமலர்)

குடிபோதை கணவரை வெட்டி கொலை செய்த மனைவி கைது: கழிவுநீர் தொட்டியில் உடல் மீட்பு .செப்டம்பர் 16,2009.

தூத்துக்குடி மாவட்டம் கலியாவூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கல்யாணி(55). அவரது மனைவி பூலம்மாள்(47). திருமணமாகி 30 ஆண்டுகள் ஆன அவர்களுக்கு குழந்தையில்லை.

மதுகுடிக்கும் பழக்கமுள்ள கல்யாணி, பணம் கேட்டு அடிக்கடி மனைவி பூலம்மாளை அடித்து உதைப்பார். கடந்த 10ம் தேதி குடிபோதையில் வந்த கல்யாணி, பணம் கேட்டு பூலம்மாளிடம் வாக்குவாதம் செய்தார். தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த பூலம்மாள், கணவர் கல்யாணியை கீழே தள்ளினார். அரிவாளால் அவரது கழுத்தில் வெட்டினார்.

படுகாயமடைந்த கல்யாணி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடலை வீட்டின் முன்புறமுள்ள கழிவு நீர்த் தொட்டிக்குள் போட்டு அதில் மண்ணைப் போட்டு, தொட்டியை மூடினார்.

"கணவர் எங்கே?' என கேட்டவர்களிடம், வெளியூர் சென்று விட்டதாக கூறினார். வீட்டின் அருகே துர்நாற்றம் வீசியதால் முறப்பநாடு போலீசுக்கு தகவல் சென்றது. போலீசார், பூலம்மாளிடம் விசாரித்துள்ளனர். "முறைப்படி'யான விசாரணையில், கணவரைக் கொன்று உடலை கழிவுநீர் தொட்டிக்குள் போட்டு மறைத்ததை ஒப்புக் கொண்டார்.

பூலம்மாளை போலீசார் நேற்று கைது செய்து, கல்யாணி உடலை மீட்டனர். கள்ளத்தொடர்பு காரணமாக, கொலை நடந்திருக்கலாம் என சந்தேகப்படும் போலீசார், கொலையில் உடந்தையாக இருந்ததாக பூலம்மாள் உறவினர் ஒருவரை தேடிவருகின்றனர்.
====================

செய்தி - 2

கள்ளக்காதலனை அரிவாளால் வெட்டிய பெண் போலீசில் சரண்

ஓட்டப்பிடாரம், செப்.16- 2009 (தினத்தந்தி)

கள்ளக்காதலனை அரிவாளால் வெட்டிய பெண் போலீசில் சரண் அடைந்தார். "கள்ளக்காதலனை நம்பி கணவரை கைவிட்டதாக" அவர் வாக்குமூலம் அளித்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேலமங்கலத்தை சேர்ந்த கலைச்செல்வன் மனைவி காஞ்சனா (வயது 35). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கலைச்செல்வன் நீண்ட காலமாக வெளிநாட்டில் வேலைபார்த்து வந்தார்.

காஞ்சனாவும், அவரது குழந்தைகளும் ஊரில் வசித்து வந்தனர். அப்போது காஞ்சனாவுக்கும், அதே ஊரை சேர்ந்த சேர்மராஜ் (35) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சேர்மராஜ் தங்கை சேர்மக்கனிக்கும், காஞ்சனா தம்பி ரத்தினவேலுவுக்கும் திருமணம் நடந்தது.

இதன் பின்னர் சேர்மராஜும், காஞ்சனாவும் உறவினர்கள் ஆகினர். இதன் பின்னர் அவர்களின் தொடர்பு மேலும் வலுத்தது. இந்த விவகாரம் வெளிநாட்டில் வேலைபார்த்த காஞ்சனாவின் கணவர் கலைச்செல்வனுக்கு தெரியவந்தது. ஊருக்கு வந்த அவர் மனைவியை கண்டித்தார். ஆனால் காஞ்சனாவுக்கு, சேர்மராஜை கைவிட மனம் இல்லை.

கடைசியில் கணவரா?, கள்ளக்காதலனா? என்ற கேள்வியில், காஞ்சனா கணவரை பிரிந்தார். இதனால் 2 ஆண்டுகளுக்கு முன்பு கலைச்செல்வன், காஞ்சனாவை விவாகரத்து செய்துவிட்டார். பின்னர் குழந்தைகளுடன், காஞ்சனா தனி வீட்டில் வசித்து வந்தார்.

இதன் பின்னர் சேர்மராஜ் அடிக்கடி காஞ்சனா வீட்டுக்கு வந்து போனார். இது அவரது குழந்தைகளுக்கு பிடிக்கவில்லை. எனவே சேர்மராஜை விட்டு பிரிய காஞ்சனா முடிவு செய்தார். ஆனால் நீண்ட நாட்களாக நீடித்த கள்ளத்தொடர்பை விட்டுவிட சேர்மராஜவக்கு மனம் இல்லை.

இதனால் அவர்களுக்குள் தகராறு இருந்துவந்தது. இந்த பிரச்சினைக்கு முடிவுகட்ட நேற்று முன்தினம் இரவு தனது வீட்டுக்கு வரும்படி காஞ்சனா, சேர்மராஜை அழைத்தார். அதன்படி அவரும் சென்றார். அப்போது இருவருக்கும் நீண்டநேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்த காஞ்சனா அரிவாளால், சேர்மராஜ் கழுத்தின் பின்புறத்தில் வெட்டியதாக கூறப்படுகிறது.

சேர்மராஜ் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். உடனே காஞ்சனா அங்கிருந்து ஓடிவிட்டார். படுகாயம் அடைந்த சேர்மராஜை, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் பசுவந்தனை சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசங்கரி வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) இசக்கி விசாரணை நடத்தினார். இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்ட காஞ்சனா சரண் அடைந்தார்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், "எனக்கும், சேர்மராஜுக்கும் நேற்று முன்தினம் இரவு வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, எனது கணவரை பிரிய நீதான் காரணம் என்றும், கள்ளக்காதலனை நம்பி கணவரை கைவிட்டு வாழ்க்கையை தொலைத்துவிட்டேன் என்றும் சேர்மராஜிடம் கூறினேன்.

இனிமேல் என்னை சந்திக்க வர வேண்டாம் என்றும் அவரிடம் தெரிவித்த போது, அவர் அலட்சியப்படுத்தினார். இதனால் ஆத்திரத்தில் அரிவாளால் வெட்டினேன்" என்று காஞ்சனா வாக்குமூலம் அளித்ததாக தெரிகிறது.

================

இரண்டு நிகழ்வுக்குமே கணவனின் ஆண்மையின்மைதான் காரணமாக இருந்திருக்குமோ? நமக்கென்ன தெரியும்? மனோரமா அம்மையார் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்!

மனோரமா ஆச்சி, ஆண்களைப் பாதுகாக்க எப்போது இயக்கம் தொடங்கப் போறீங்க?

ஆண்மைக்குறைவுள்ள ஆண்களிடம் இருந்தும், `எய்ட்ஸ்' நோய் உள்ள ஆண்களிடம் இருந்தும் பெண்களை காப்பாற்றுவதற்காக, புதிய இயக்கம் தொடங்கப்போவதாக நடிகை மனோரமா கூறியுள்ளார்.

இது செய்தி.

சரி. பெண்மைக் குறையுள்ள, பெண்மையே இல்லாத மற்றும் "எயிட்ஸ்" நோய் உள்ள பெண்களிடமிருந்து அப்பாவி ஆண்களைக் காப்பாற்றுவதற்கு அந்த மனோரமா அம்மையார் ஏன் ஒரு இயக்கம் தொடங்கக் கூடாது? ஏன் இந்த ஓரவஞ்சனை, அதுவும் ஒரு ஆணைப் பெற்ற தாயாக இருந்தும்?

ஆண்கள் மட்டும்தான் நோயுள்ளவர்களாக இருப்பார்களா? பெண்களுக்கு நோய்களே இருக்காதா? அவற்றை மறைத்து திருமணங்களே நடப்பதில்லையா? திருமணத்திற்கப்புறம் நோயாளி மனைவிகளை வைத்துக் கொண்டு அல்லாடும் கணவன்மார்கள் எத்தனை பேர்!

இல்லற வாழ்வு மீதும், ஆணுடனான கலவை மீதும் இயல்பாகவே வெறுப்புணர்வு கொண்ட பெண்கள் (frigidity), ஓரினச் சேர்க்கையில் நாட்டம் கொண்ட பெண்கள் (lesbians), மாதவிடாய் நேரங்களில் பயங்கர வன்முறையுணர்வுடன் தாக்கத்தொடங்கும் நோய் (ENDOMETRIOSIS) கொண்ட பெண்கள், வெள்ளை வெட்டை போன்ற பெண்ணுறுப்பு சம்பந்தமான சீக்குகளுடன் உள்ள பெண்கள், டிப்ரஷன், ஹிஸ்டீரியா போன்ற மனோவியாதி கொண்ட பெண்கள் - இவர்கள் போன்றவர்களுடைய அனைத்து நோய்களையும் மறைத்து பட்டுப் புடவை, சல்வார் சூட் போட்டு அலங்கரித்து ஆண்களிடம் கட்டிக் கொடுத்து விடுகிறார்களே, அந்த ஆண்களை யார் காப்பாற்றுவது?

தமிழ்நாட்டில், கள்ளக்காதல் கொலைகள் பெருகுவதற்கு, ஆண்மைக்குறைவு என்ற குறைபாடுதான் முக்கிய காரணமாம், இந்த மனோரமா அம்மையார் கண்டுபிடித்திருக்கிறார். இதற்கு அவருக்கு நோபெல் பரிசு கொடுக்கவேண்டும்!

பள்ளி நாட்களிலேயே கள்ள உறவு கொண்டு பின் அதை அப்படியே மறைத்துவிட்டு, குனிந்த தலை நிமிராத கன்னிப் பெண்போல் நடித்து, அதை நம்பிய ஒரு அப்பாவி ஆணுடன் திருமணம் செய்து கொண்ட பின்னும் அந்தப் பழைய கள்ள உறவு விடாமல் தொடரும் கேசுகள் எத்தனை எத்தனை? என்னதான் கணவன் படுக்கையறையில் திருப்தி செய்தாலும், ஆசை அடங்காமல் அலைபாயும் மனம் கொண்ட பெண்கள் எத்தனை பேர்! அத்தகைய செக்ஸ் வெறியால் அவர்கள் தங்கள் குழந்தைகளையே கொல்லத் துணியும் கேசுகள் எத்தனை!

தன் மனைவியின் பாலியல் தொடர்பான நடத்தைகளையும் குறைபாடுகளையும் ஆண்மகன் வெளியில் சொல்வதில்லை. ஆனால் ஒரு ஆணை அவன் ஆண்மைக் குறைவுள்ளவன் என்று எளிதாகக் கூறிவிடுகின்றனர்.

சமீபத்தில் கர்நாடகாவில் அரசு சார்ந்த அமைப்பு ஒன்று சுயம்வரம் நிகழ்த்தியது. அப்போது பெண்களின் கன்னித்தன்மையை சோதனை செய்தார்கள் என்றும், அது பெண்களுக்கு எதிரான செயல் என்றும் "ஐயகோ, பெண்ணினத்தையே கேவலப்படுத்திவிட்டார்களே" என்று கூக்குரலிட்டனர் பல பெண்ணிய வியாதிகளும் சில ஜொள்ளு பெட்டைக் கிழவர்களும். ஆனால் அந்த சோதனைகளில் சில பெண்மணிகள் கர்ப்பமாக இருந்ததைக் கண்டு பிடித்தனர். அதனால் தப்பித்தனர் ஆண்கள்!

ஆனால் இப்போது மனோரமா ஒட்டுமொத்த ஆணினத்தையே கேவலப் படுத்திப் பேசியிருக்கிறார். அதை எதிர்த்து ஒரு குரலும் இல்லை. வெட்கக்கெடு!

பெண்கள் திருமணத்திற்கு முன் பெண்கள் பாலுறவு கொண்டிருக்காமல் கன்னித்தன்மை உள்ளவர்களா, திருமணத்திற்கு முந்தைய உல்லாசங்கள் மூலம் அபார்ஷன் செய்து கொள்ளாதவர்களா, அல்லது குறைந்த பட்சம் கர்ப்பிணியாகவாவது இல்லாமல் இருக்கிறார்களா எனபதைக் கண்டறிவது முக்கியம் என்று "வீர மறத்தி" மனோரமா அவர்கள் பாடுபடவேண்டும். செய்வார்களா!

கோவை கூட்டத்தைப் பற்றிய செய்திகள்

தினகரன் - கோவை பதிப்பு - பக்கம் - 13 (5-09-2009)

தம்பதிகள் ஒற்றுமைக்கு விழிப்புணர்வு இயக்கம்

கோவை, செப். 5: பிரிவில் இருந்து தம்பதிகளை பாதுகாக்க விழிப்புணர்வு இயக்கம் துவக்கப்பட்டுள்ளது.

சென்னை மந்தைவெளியில் இந்திய குடும்ப பாதுகாப்பு இயக்கம் செயல்படுகிறது. இதன், மாநில அமைப்பாளர் சுரேஷ்ராம் கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் குடும்ப பிரச்னை தொடர்பாக ஆண்டுக்கு 75 ஆயிரம் வழக்குகள் பதிவாகின்றன. ஒரு வழக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டு முதல் அதிகபட்சம் 5 ஆண்டு வரை நடக்கிறது. குடும்பம் சிதைந்து விடுகிறது. இந்திய அளவில் கடந்த 2005-ம் ஆண்டு புள்ளி விவரப்படி 52 ஆயிரத்து 483 கணவன்களும், 28 ஆயிரத்து 188 மனைவிகளும் குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 2006ல் 55 ஆயிரத்து 452 கணவன்களும், 29 ஆயிரத்து 869 மனைவிகளும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
குடும்ப வழக்குகள், குடும்ப பிரச்னை தொடர்பாக கணவன், மனைவி இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், 40 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். மாவட்ட அளவிலும் இந்த இயக்கம் விரிவு படுத்தப்படுகிறது.

கோவை மாவட்ட அமைப்பாளராக பிரகாஷ், ஈரோடு மாவட்ட அமைப்பாளராக கிருஷ்ணா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். குடும்ப பிரச்னையால் பாதிக்கப்பட்ட ஆண், பெண்கள் தங்கள் குடும்பம் மற்றும் இந்திய கலாச்சாரத்தை பாதுகாக்க இந்த இயக்கத்தை தொடர்பு கொள்ளலாம். சட்டஉதவி மற்றும் ஆலோசனை இலவசமாக அளிக்கப்படும். இதுதொடர்பான தகவல்களுக்கு 99410-12958, 96294-50331 ஆகிய மொபைல் போன்களில் தொடர்பு கொள்ளலாம்.

=================

முக்கிய குறிப்பு:-

மேற்கண்ட அறிவிப்பை வாசித்துவிட்டு சில பெண்மணிகள் இந்த இயக்கத்தின் செயல்வீரர்களைத் தொடர்பு கொண்டுள்ளார்கள். அவர்கள் அனைவருமே கண்வன்மார் மீது 498A வழக்குத் தொடுத்து தம் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள். அவர்களுடன் நிகழ்ந்த உரையாடல் பற்றிய விவரங்களை அடுத்த இடுகையில் காணலாம்!

==================

-------------------

7-9-2009. நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் - சென்னைப் பதிப்பு - பக்கம்: 6


ஆண்கள் ஆசிட் வீசினால் என்கவுண்டர். பெண்கள் வீசினால்?

சில மாதங்களுக்கு முன் ஹைதராபாத்தில் இரு பெண்கள் மீது ஆசிட் வீசியதற்காக மூன்று ஆண்களை என்கவுண்டரில் போட்டுத் தள்ளினார்கள் போலீசார். உடனே பல பெண்கள் இயக்கத்தினரும், பெண்ணிய வியாதிகளும், "பெண்" என்ற சொல்லைக் கேட்டவுடனேயே ஜொள்ளு விட்டு ஸ்கலிதமாகும் வெத்துவேட்டு ஆண்களும், "அவர்களை அப்படித்தான் கொல்ல வேண்டும். அநியாயமாக பெண்கள்மேல் ஆசிட் வீசியதற்கு அந்த ஆண்களை அப்படித்தான் கேள்வி முறையின்றி சுட்டுக் கொல்ல வேண்டும்" என்று கிரீச்சென்று கூக்குரலிட்டுக் கூத்தாடினார்கள்.

ஆனால் நேற்று ஒரு பெண், ஒரு போலீஸ்காரர் மீதே கலெக்டர் ஆபீசில் ஆசிட் ஊற்றினாளே, அவளை ஏன் என்கவுண்டரில் போடச் சொல்லிக் கேட்கவில்லை? எங்கே போனீங்க பெண்ணியவியாதிகளே! அன்று டை அடித்த தலையை பரப்பி வைத்துக் கொண்டு லிப்ஸ்டிக் போட்டு, கால் மேல் கால் போட்டுக்கொண்டு டிவி சேனலில் "அப்படிதான் ஆண்களை கொல்லவேண்டும். அதுதான் மிகவும் சரியான தண்டனை" என்று கோஷம் போட்ட பெரிய இடத்துப் பெண்மணிகள் எங்கே போனார்கள் இப்போது?

இந்த நாட்டில் வெகு சிக்கிறமே ஆண் குழந்தைகளை கருவிலேயே கொன்று விடுவார்கள். அல்லது கள்ளக் காதலுக்கு இடைஞ்சலாக இருக்கிறான் என்று வளர்ந்த பிறகு கொன்று விடுவார்கள் நம் பாரதி கண்ட புதுமைப் பெண்கள்.

சீ, வெட்கங்கெட்ட சமுதாயமடா இது!

இனி படியுங்கள் அந்த கண்றாவி செய்தியை:

திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம்

திருவள்ளூர் கலெக்டர் ஆபீசில் பரபரப்பு போலீஸ் காதலன் முகத்தில் ஆசிட் வீசிய காதலி கைது

திருவள்ளூர், ஆக. 26-

'திருமணம் செய்ய மாட்டேன்' என்று கூறிய காதலனின் முகத்தில் ஆசிட் வீசிய இளம்பெண் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரி முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பாக்கம் முருகன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்து. இவரது மகள் சாந்தினி (எ) புவனேஸ்வரி (30). சென்னையில் உள்ள தனியார் ஏற்றுமதி கம்பெனியில் வேலை செய்கிறார். தினமும் பஸ்சில் வேலைக்கு செல்லும்போது சென்னை ராமாபுரம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்த சரவணன் (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சரவணன், சென்னை ஆயுதப்படையில் போலீஸ்காரராக இருக்கிறார். பஸ்சில் ஏற்பட்ட பழக்கம், காதலாக மாறியது.

இந்நிலையில், திருமணம் செய்துகொள்ளும்படி சாந்தினி வற்புறுத்தி வந்தார். திருமணத்துக்கு மறுத்த சரவணன், சாக்குபோக்கு சொல்லி தட்டிக் கழித்துவந்தார். ஆத்திரமடைந்த சாந்தினி, இதுபற்றி திருவள்ளூர் கலெக்டர் பழனிகுமாரிடம் புகார் செய்தார். புகாரை விசாரிக்க சமூகநலத் துறைக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன்படி, சமூக நல அலுவலர் லதா, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து சாந்தினி, சரவணனிடம் நேற்று விசாரணை நடத்தினார். அப்போது சாந்தினிக்கும் சரவணனுக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது. கோபத்தில் எழுந்த சாந்தினி, கைப்பையில் மறைத்து வைத்திருந்து ஆசிட்டை எடுத்து சரவணன் முகத்தில் வீசினார். முகம் வெந்து வலியால் துடித்த அவரை உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சரவணன் கொடுத்த புகாரின்பேரில், திருவள்ளூர் நகர போலீஸ் எஸ்ஐ லட்சுமிபதி வழக்குபதிவு செய்து சாந்தினியை கைது செய்தார். பின்னர் அவரை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் மத்திய சிறையில் அடைத்தார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

(செய்தி: தமிழ் முரசு. 27-08-2009)

பசை இருந்தால்தானே காதல் ஒட்டும்!

அயனாவரம் : காதலுக்கு, "குட்பை' சொல்லியும், ஏற்க மறுத்து தகராறு செய்த காதலனை போலீசார் ஈவ்-டீசிங் வழக்கில் கைது செய்தனர். (செய்தி: தினமலர் - 2009 ஆகஸ்டு 25)

சென்னை ஜி.கே.எம்., காலனியைச் சேர்ந்த டேரிக் யூட்டஸ் மகன் லியாநாத் யூட்டஸ்(27); ஷிப்பிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது பக்கத்து வீட்டில் கடந்த 14 ஆண்டுகளாக வசித்தவர் எட்வர்டின் மகள் ஷெரீல்(26). கடந்த ஓராண்டாக இருவரும் காலித்தனர். லியாநாத் சம்பாதிக்கும் 30 ஆயிரம் ரூபாய் பணத்தில், பாதி பணம் காதலிக்கு செலவழித்து வந்தார். இரண்டு மாதங்களுக்கு முன் லியாநாத் வேலை இழந்தார். இதையறிந்த ஷெரீல், வீட்டை அண்ணா நகருக்கு மாற்றிவிட்டார். அண்ணாநகர் வீட்டிற்கு அடிக்கடி சென்று காதலை ஏற்கும்படி லியாநாத் கூறினார்.

இதற்கிடையே, அயனாவரம் வெள்ளாளர் தெருவில் உறவினர் வீட்டிற்கு வந்த ஷெரீலை, லியாநாத், நடுரோட்டில் கையை பிடித்து இழுத்தார். இதனால், காதல் ஜோடியிடையே தகராறு ஏற்பட்டது. ஷெரீல் கொடுத்த புகாரின் பேரில், அயனாவரம் இன்ஸ்பெக்டர் எட்வர்டு, ஈவ்-டீசிங் வழக்கில் லியாநாத்தை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் அடைத்தார்.

--------------- ------------------

சுத்த விவரம் புரியாத ஆளய்யா, இவரு! இன்னொரு இலவச ஏ.டி.எம் மெஷினைத் தேடிப் போயிருப்பாள்(ர்) அந்தக் காதல் இளவரசி என்பது அறியாமல் பழைய டயலாகையெல்லாம் நம்பிப் போய் கையைப் பிடித்திருக்கிறார். சட்டம் தெரியாதவங்க!!

விட்டில் பூச்சிகள் பிழைப்பது எங்கே!!

ஆணின் உயிர் ஒரு செல்லாக்காசு!

ஒரு பெண் புகார் கொடுக்கிறார் என்றால் அதை உடனே கவனிக்கவேண்டியது நம் சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தினருக்கும் விதிக்கப்பட்ட கடமையல்லவா!

அதுவும் தன் கணவன்மேல் புகார் கொடுத்தால் அதை தலைபோகிற அவசரமாகக் கருதி அந்தப் பெண்பாவையின் துயர் துடைக்க காவல்துறை அதிவேகமாக - அது இரவு நேரமாக இருந்தாலும் சரி - விரைந்து சென்று அந்த குற்றவாளியை (அதுதான் கணவன் - சட்டத்தின் கண்முன் ஒவ்வொரு மணமான ஆணும் குற்றவாளிதானே!) கைது செய்து அவனைச் செவ்வனே "விசாரணை" செய்து அந்தப் பெண்ணுலத் திலகத்தின் மனத்தில் மகிழ்ச்சியூட்ட வேண்டாமா! இதுதானே நம் சமூகத்தின் கடமை. அதற்காகத்தானே அடுக்குமேல் அடுக்காக பல ஆணழிப்புச் சட்டங்களை உருவாக்கி பழி வாங்கிக் கொண்டிருக்கிறோம்.

இப்போது செய்தி:

முதலில் இன்றைய (ஆகஸ்டு 19, 2009) தினமலரில் வெளிவந்தது:

நீலாங்கரை: மனைவி கொடுத்த புகாரின் பேரில், விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லப்பட்ட நபர் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் நீலாங்கரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், செய்யார் அடுத்த பாலூரை சேர்ந்த நந்தன் என்பவரின் மகன் ரமேஷ் (34). இவரின் மனைவி உஷாராணி (32).கடந்த 14 ஆண்டுகளுக்கு முன், நீலாங்கரையில் உள்ள ஒரு தனியார் இறால் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது, உடன் வேலை பார்த்த உஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின், கொட்டிவாக்கம், வெங்கடேசபுரத்தில் வசித்து வந்தனர். இவர்களுக்கு, பிரியதர்ஷினி (12) என்ற மகளும், கீர்த்திவாசன் (9) என்ற மகனும் உள்ளனர். வெங்கடேசனுக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால், குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு வந்தது.

ரமேஷ் நேற்று முன்தினம் நள்ளிரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது, உஷாவுடன் தகராறு ஏற்பட்டது.இதில், மனைவியை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, 108 எண்ணுக்கு போன் செய்த உஷா, தன்னை கணவர் கொலை செய்ய முயற்சிப்ப தாக புகார் செய்தார்.இது தொடர்பாக, நீலாங் கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இரவுப் பணி பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் மூன்று போலீசார், வெங்கடேசபுரம் சென்று தகராறில் ஈடுபட்ட ரமேஷை நீலாங்கரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.பின், போலீஸ் ஸ்டேஷனில் வைத்து அவரை விசாரித்தனர்.

விசாரணை முடிந்ததும் ரமேஷிற்கு ஜாமீன் வழங்கி, வீட்டிற்கு அனுப் பினர். போலீஸ் ஸ்டேஷனை விட்டு வெளியேறிய ரமேஷ், திடீரென மயக்கம் போட்டு விழுந்தார்.உடனடியாக அவரை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென் றனர். அங்கு மருத்துவர்கள் கை விரித்து விட்டதால், அடையாறில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.அங்கு ரமேஷை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ரமேஷ் இறந்த தகவலறிந்து அவரின் உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.அவர்களை போலீசார் சமாதானப் படுத்தினர். பின், ரமேஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப் பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.இச்சம்பவம் குறித்து ரமேஷின் உறவினர்கள் கூறுகையில்,"நேற்று (நேற்று முன்தினம்) நள்ளிரவு உஷா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வந்தனர்.

வீட்டிற்கு அருகிலேயே ரமேஷை அடித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்து சென்றனர். அங்கும் ரமேஷை போலீசார் தாக்கினர்.போலீசார் அடித்ததால் தான் அவர் இறந்தார். எனவே, ரமேஷை கண்மூடித்தனமாக தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தான் அவரின் உடலை பெற்றுக் கொள்வோம்,' என்றனர்.இது குறித்து, துரைப்பாக்கம் உதவிக் கமிஷனர் முரளி கூறுகையில்,அவரின் உடலில் எந்தவித காயமும் இல்லை. இதயகோளாறு காரணமாக அவர் இறந்ததாக கூறப் படுகிறது.இருப்பினும், பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியவரும்,' என்றார். ரமேஷ் மரணம் குறித்து ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
-------------------------------------
Times of India Reports:

Ramesh’s relatives had a different version about the whole incident. According to them he had been staying away from his wife and was living with his sister. He was caught by a vehicle checking team when he was riding a two-wheeler and his bike was seized as he had no documents to support them. He had told the police that he would produce the papers for the two-wheeler and had gone to the house in Kottivakkam only to pick up the vehicle documents. His wife Usha thought that he had come to torture her and called the police, his relatives alleged. They said Ramesh had no history of any illness.

Ramesh had married Usha after a brief courtship, around
16 years ago. Police said the couple used to have regular fights and that they had been staying separately for a few months.

---------------------------------

அடுத்து தினத்தந்தியில் வெளிவந்துள்ள செய்தி:-

ஆலந்தூர், ஆக.19-

குடும்ப தகராறில் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட வாலிபர் மர்மமான முறையில் இறந்தார். போலீசார் அடித்து கொலை செய்து விட்டதாக கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்ததால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

காதல் திருமணம்

சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே உள்ள கொட்டிவாக்கம் வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 35). இவரது சொந்த ஊர் செய்யூர் அருகே உள்ள பாலூர் கிராமம் ஆகும்.

இவருடைய மனைவி உஷாராணி (32). இவருக்கு சொந்த ஊர் தஞ்சாவூர். கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் ரமேஷ்-உஷாராணி ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகளும், 9 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

தகராறு

உள்ளகரத்தில் உள்ள பெட்ரோல் பங்க்கில் ரமேஷ் வேலை பார்த்து வந்தார். ரமேஷ் மது அருந்தி விட்டு வருவதால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். இதனால் கடந்த ஒரு வாரமாக ரமேஷ் வீட்டிற்கு வராமல் இருந்தார். நேற்று முன்தினம் இரவு ரமேஷ் குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. உடனே இது பற்றி உஷாராணி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார்.

உடனே நீலாங்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன், 4 போலீசாருடன் சம்பவ இடத்திற்கு வந்தார்.

சாவு

குடிபோதையில் மனைவியுடன் தகராறு செய்த ரமேசை போலீசார் வீட்டின் முன் அடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் நீலாங்கரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் மயங்கி விழுந்தார்.

உடனே போலீசார் ரமேசை தூக்கிக் கொண்டு நீலாங்கரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளித்த டாக்டர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறினார்கள்.

இதையடுத்து போலீசார் தங்கள் காரில் அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ரமேஷ் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார்கள்.

மறுப்பு

இது பற்றிய தகவல் கொட்டிவாக்கம் பகுதியில் காட்டு தீ போல் பரவியது. ரமேசின் உறவினர்கள் அடையாறில் உள்ள மருத்துவமனையை முற்றுகையிட்டனர். போலீசார் அடித்ததால் தான் ரமேஷ் இறந்து விட்டதாக கூறி உடலை வாங்க மறுத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் அடையாறு துணைக்கமிஷனர் திருஞானம், துரைப்பாக்கம் உதவி கமிஷனர் முரளி மற்றும் போலீசார் விரைந்து சென்று சமரசம் பேசினார்கள். போலீசார் அடித்ததால் தான் ரமேஷ் இறந்து இருப்பதால் போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

நீண்ட நேரத்திற்கு பின் தனியார் மருத்துவமனையில் இருந்த ரமேஷ் உடலை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.

நடவடிக்கை

இது பற்றி போலீசார் கூறுகையில், ``குடிபோதையில் ரமேஷ் இருந்ததால் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தோம். சிறு வழக்கு போட்டு வீட்டிற்கு செல்லுமாறு கூறினோம். ஆனால் ரமேஷ் போலீஸ் நிலைய வாசலில் மயங்கி விழுந்தார். உடனே போலீசார் ரமேசை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே ரமேஷ் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மாரடைப்பு ஏற்பட்டதால் ரமேஷ் இறந்து இருக்கலாம்'' என்று தெரிவித்தனர்.

ஆனால் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும் வரை ரமேசின் உடலை வாங்க மாட்டோம் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

ஆர்.டி.ஓ. விசாரணை

இந்த நிலையில் ரமேசின் மர்ம சாவு பற்றி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்திட சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். ஆர்.டி.ஓ. விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை முடிவின் அறிக்கை பெற்றபிறகு தான் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தினால் கொட்டிவாக்கம், நீலாங்கரை கிழக்கு கடற்கரை சாலையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

ஓட்டப் பந்தய வீராங்கனை!

கணவனை கைவிட்டு விட்டு கள்ளக் காதலனுடன் மனைவி ஓட்டம்.

செய்தி: தினமலர் - 13-08-2009

கொடுமுடி: கொடுமுடி அருகே உள்ள வருந்தியாபாளையத்தில், கணவனை கைவிட்டு விட்டு காதலனுடன் ஓடிய பெண்ணிடம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

கொடுமுடி அருகே வருத்தியாபாளையத்தைச் சேர்ந்தவர் நித்யா (23); விளக்கேத்தியைச் சேர்ந்த உலகநாதன் (28). இருவருக்கும் மூன்றாண்டுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப்பின், டி.பார்ம்., படிக்க நித்யா விரும்பினார். மனைவியின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, பெருந்துறையில் உள்ள கல்லூரியில் படிக்க வைத்தார் உலகநாதன்.படிப்பு முடிந்த நிலையில், ஏற்கனவே தன்னை காதலித்த கல்வெட்டுப் பாளையத்தைச் சேர்ந்த துளசிமணியுடன் (30), நித்யா சில நாட்களுக்கு முன் மாயமானார். மனைவி வேறொருவருடன் மாயமானது குறித்து கொடுமுடி போலீசில் முறையிட்டார். துளசிமணியுடன் மாயமான நித்யாவை அழைத்து வந்த போலீசார், கணவருடன் சேர்ந்து வாழும்படி அறிவுரை கூறினர்;


ஆனால், கணவனுடன் செல்ல நித்யா மறுத்துவிட்டார்.கோபமான உலகநாதன், படிப்புக்காக செலவழித்த பணத்தை திருப்பித் தருமாறு கேட்டார்; அதற்கும் நித்யா மறுத்துவிட்டார். நொந்துபோன போலீசார், இருவரையும் நீதிமன்றம் சென்று தங்களது பிரச்னையை தீர்த்துக்கொள்ள அறிவுறுத்தினர்; இருவரும் தனித்தனியே பிரிந்து சென்றனர்.

===========

கள்ளக் காதலனுடன் ஓடிப் போனவளுடன் "பேச்சு வார்த்தை" நடத்துகிறார்களாம்! வெட்கக் கேடு!

அது சரி, இதேபோல் கணவன் மனைவியை விட்டுச் சென்றால் உடனே அவனைக் கைது செய்கிறார்களே, அது ஏன்?

மனைவி எப்போது வேண்டுமனாலும் கணவனை அம்போ என்று விட்டுவிட்டு கள்ளக் காதலனுடன் கைகோர்த்துச் சென்றுவிடலாம். அப்போது போலிசார் அவளுக்கு அறிவுரை கூறி தாஜா செய்வார்கள். அவள் முறுக்கிக் கொண்டு முடியாது என்று போய் விடுவாள். அவளை ஒன்றும் செய்யாமல் விட்டுவிடுவார்கள். ஆனால் கணவன் அதுபோல் செய்தால் அவனை உடனே கைது செய்து உள்ளே போட்டு விடுவார்கள். ஏனென்றால் சட்டங்கள் அப்படித்தான் சொல்கின்றனவாம்!

வெட்கக் கேடு ஐயா!

இப்போது இந்த நாட்டில் திருமணம் செய்துகொண்டு அடிமைப்பட்டுக் கிடக்கும் ஆண்களுக்கு சுதந்திர தினம் வேறு ஒரு கேடா!!

பெற்ற குழந்தைகளை நடுத்தெருவில் விட்டு கள்ளக் காதலனுடன் ஓடிய தாய்

"பெண் என்றால் பேயும் இரங்கும்" என்பது பழமொழி. ஆனால் பெண்ணே, அதுவும் பெற்ற தாயே பேயானால்?

இதுபோல் பெண்கள் weaker sex, அவர்களுக்கு ஆண்கள் விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற patriarchal மனப்பான்மையால் தான் (இதற்கு தக்கதொரு தமிழ்ச் சொல்லை அறியத்தாருங்கள்!) இன்றைக்கு பல பெண்களுக்கு " தாங்கள் என்ன வேணுமானாலும் செய்யலாம், எந்தவித குற்றங்களையும் புரியாம். நமக்கு எந்த தண்டனையும் கிட்டாது" என்ற மனப்பான்மை ஊறி, அதனால் மிகவும் திமிர் பிடித்தவர்களாக மாறி விட்டார்கள் என்பதுதான் நாம் நிதர்சனமாகக் காணும் கசப்பான உண்மை!

நாள் தோறும் நிகழும் கள்ளக்காதலால் உந்தப்படும் கொலைகளைப் பற்றி எழுத பல வலைப் பதிவுகள் தேவை என்னும் நிலை தோன்றிவிட்டது. நாளிதழ்களில் கள்ளக் காதல்களை தெரியப்படுத்த தனி இதழ்களைத்தான் வெளியிடவேண்டும்.

இயற்கையில் பாலுணர்வு உந்துதல் பெண்களுக்குத்தான் அதிகம் படைக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில் அவர்கள் ருதுவான காலம் முதல் சினை முட்டை தயார் நிலையை எய்தும்போது இன விருத்திக்கான குறியீடுகளால் ஆண் விந்தணுவைத் தேடும். அப்போது அந்தப் பெண்ணுக்கு பாலுணர்வு மேலிடும். அப்போது பொங்கியெழும் அந்த இச்சையை கட்டுப் படுத்தி கணவன், மனைவி என்னும் குடும்ப அமைப்பின் அடிப்படையில் அதை ஒழுக்கமாக வகைப்படுத்துவது நம் பண்பாடும், சமூகக் கட்டமைப்பும்தான். ஆனால் தற்காலத்தில் பல பெண்ணியவாதிகளின் ஓயாத கூக்குரலால் உந்தப்படும் சமுதாய பண்பாட்டு மறுப்பாலும், ஊடகங்கள், சினிமா போன்ற சாதனங்கள் மூலம் நடக்கும் போதனைகளாலும் நம் சமுதாய, கலாசார விழுமியங்கள் சிதைந்து சீரழிந்த காரணத்தால்தன் கள்ளக்காதல் கொலைகள் பெருகி விட்டன.

"டை" அடித்த கிராப் தலையும், லிப்ஸ்டிக்குமாக கால் மேல் கால் போட்டு, ஏர் கண்டிஷன் அறைகளில் அமர்ந்து கொண்டு, "ஏழைப் பெண்களை முன்னேற்றுகிறோம்" என்று அறை கூவும் பெண்ணிய வாதிகள் தங்கள் நுணி நாக்கால் பேசும் ஆங்கிலத்தில் சொல்லும் அறிவுரைகள் எல்லாமே:

"ஏ இந்தியப் பெண்களே! கற்பு, கலாசாரம், பண்பாடு என்று சொல்லியே நம்மை காலங்காலமாக சிறைப் படுத்தி விட்டனர் இந்த ஆண்கள். அவைகளை சுக்கு நூறாக கட்டுடையுங்கள். மனம் போனபடி வாழுங்கள். நாங்கள் இருக்கிறோம் உங்களுக்குத் துணையாக. நம் சட்டங்கள் இருக்கின்றன. நீங்கள் கள்ளக் காதலுக்காக கணவனையும் ஏன், உங்கள் பெற்றோர்களையும் மற்றும் நீங்கள் பெற்ற பச்சிளம் பாலகர்களையும் கூட ஈவு இரக்கமின்றிக் கொன்று போட்டால் உடனே நாங்கள் 'கள்ளக் காதல் என்னும் சொல்லாட்சி தவறு. பெண்கள் கொன்றாலும் அவர்கள் பேதைகள். அவர்களை அவ்வாறு தங்கள் குழந்தைகளையே கொல்லத் தூண்டும் வகையில் நடந்து கொண்ட இந்த ஆண் சமுதாயத்தின் மேல் தான் தவறு' என்று அறிக்கை கொடுப்போம். நீங்கள் நடத்துங்கள்" - இந்த வகையில்தான் இருக்கும்!

கடந்த சில நாட்களில் செய்திதாளில் வெளிவந்துள்ள கள்ளக் காதல் நிகழ்வுகளும் அதில் ஈடுபட்ட தாய்மார்களின் ஈவு இரக்கமற்ற நடத்தைகளும் படிப்பவர் மனத்தில் மிகுந்த கவலையை அளிக்கும் என்பது திண்ணம். அதுவும் தன் குழந்தைகளை நடுத்தெருவில் தவிக்க விட்டு கள்ளக் காதலனுடன் ஓடியுள்ள அந்தத் தாய்க்குலத் திலகத்தின் விவரம் உங்கள் மனத்தை மிகவும் கிலேசப்படுத்தும்.
மனதை திடப்படுத்திக்கொண்டு செய்திகளை வாசியுங்கள்:

முறையற்ற உறவால் தொடரும் விபரீதம்!
கள்ளக்காதலனுடன் தாய் ஓடியதால் நடுவழியில் தவித்த 2 குழந்தைகள்
ஊர் மக்கள் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்

குழித்துறை, ஆக.10- 2009

கள்ளக்காதலனுடன் தாய் ஓடியதால் அனாதையாக நடுவழியில் தவித்த 2 குழந்தைகளை பொது மக்கள் போலீஸ் நிலை யத்தில் ஒப்படைத்தனர்.

மனித மான்பை கெடுக்கும் கள்ளக்காதலால் நடந்த இந்த கொடூர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

2 குழந்தைகளின் தாய்

மார்த்தாண்டம் அருகே உள்ள காஞ்சிரகோடு பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமாரி என்ற பாப்பா (வயது 30). இவருக்கு திருமணமாகி கணவரும், 2 குழந்தைகளும் உள்ளனர். மூத்த மகள் சால்மா (7) 2-ம் வகுப்பு படித்து வருகிறாள். 2-வது மகன் சானு (6) ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்த நிலையில் வசந்த குமாரிக்கும், அதே பகுதியில் உள்ள ஒரு ஆட்டோ டிரைவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் வசந்தகுமாரி முதல் கணவரை விட்டு விட்டு 2 குழந்தைகளு டன் ஆட்டோ டிரைவருடன் ஓடிச்சென்றாள்.

இவர்கள் இருவரும் மத்தி கோடு என்ற இடத்தில் ஒரு வாடகை வீட்டில் 2 குழந்தை களுடன் குடும்பம் நடத்தி வந்ததாக தெரிகிறது.

2-வது கள்ளக்காதல்

இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள வேறு ஒருவருடன் வசந்தகுமாரிக்கு தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. சம்பவத்தன்று வசந்த குமாரி 2 குழந்தைகளையும், ஆட்டோ டிரைவராகிய கள்ளக்காதலனையும் விட்டு விட்டு 2-வது கள்ளக்காதலனுடன் ஓடிப்போய் விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த ஆட்டோ டிரைவர் 2 குழந்தைகளையும் நேற்று முன்தினம் மார்த்தாண்டம் அருகே உள்ள சிராயன்குழி நுள்ளிவிளை என்ற இடத்தில் விட்டு விட்டு தலைமறை வானார்.

நடுவழியில் பரிதவிப்பு

தாய்-தந்தை உயிரோடு இருந்தும் அனாதைகளாக தள்ளப்பட்ட 2 குழந்தைகளும் ஆதரவின்றி நடுவழியில் நின்று கதறி அழுதன. இதை பார்த்த அந்த ஊர் மக்கள் மனதிரங்கி குழந்தைகளை குழித்துறை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் குழந்தைகளை ஏற்றுக்கொண்டு ஓடி போன வசந்தகுமாரி குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

================

ராமநத்தம் அருகே கள்ளக்காதலனுடன் 2 குழந்தைகளின் தாய் ஓட்டம்

திட்டக்குடி,ஆக.10- 2009

ராமநத்தம் அருகே கள்ளக்காதலனுடன் சென்ற 2குழந்தைகளின் தாயை போலீசார் தேடிவருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருமணமாகி 9 ஆண்டுகள்

ராமநத்தத்தை அடுத்த ஆவட்டியை சேர்ந்தவர் வெள்ளிவேல். விவசாயி. இவரது மனைவி அம்புரோஸ்(வயது27). திருமணமாகி 9 ஆண்டுகள்ஆகின்றன. இவர்களுக்கு ஆகாஷ்(5), அபிஷேக்(11/2) என்ற இரு மகன்கள் உள்ளனர்.

இவர்களின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் காமராஜ். இவரது மகன் பிரதிவிராஜ் (22). இவர் வெள்ளிவேலுக்கு உறவினர் ஆவார்.

கள்ளக்காதலனுடன் ஓட்டம்

அம்புரோசுக்கும் பிரதிவிராஜவக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 1-ந்தேதியில் இருந்து பிரதிவிராஜ், அம்புரோஸ் ஆகியோர் அம்புரோசின் 11/2 வயதுகுழந்தையுடன் காணவில்லை. அம்புரோசின் வீட்டில் இருந்த18 பவுன் தங்கநகை மற்றும் ரூ.65ஆயிரம் ரொக்கப்பணத்துடன் அவர்கள் ஓடிவிட்டது தெரியவந்தது.

போலீசில் புகார்

இது குறித்து ராமநத்தம் போலீசில் வெள்ளிவேல் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து,விசாரணை நடத்திவருகிறார்.

===================

ஓடும் ரெயில்முன் பாய்ந்து 2 குழந்தைகளின் தாய் கள்ளக்காதலனுடன் தற்கொலை

திருவனந்தபுரம், ஆக.6- 2009

ஓடும் ரெயில்முன் பாய்ந்து 2 குழந்தைகளின் தாய், கள்ளக்காதலனுடன் தற்கொலை செய்து கொண்டார்.

குடும்பம்

வெஞ்ஞாரமூடு அருகே உள்ள பிரப்பன்கோடு பகுதி யைச் சேர்ந்தவர் கோபன். ரப்பர் வெட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி கிரிஜா (வயது35). இவர்களுக்கு கோபிகா, கோகுல் ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.

இவர்களின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் தீப குமார் (வயது28). கட்டுமான தொழி லாளியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

உறவினர் என்பதால் தீபகுமார் அடிக்கடி கிரிஜா வீட்டுக்குச் சென்று அவருடன் பழகி வந்தார். நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறிய தாக தெரிகிறது. இருவரும் தங்கள் குடும்பத்தினருக்கு தெரியாமல் பல நாட்கள் கள்ளக்காதலை வளர்த்து வந்துள்ளனர்.

இது பற்றி வெளியே தெரியவந்ததும், அவர்கள் இருவரையும் அவரவர் குடும்பத்தினர் கண்டித்தனர்.

தற்கொலை

இதனால் மனம் உடைந்த தீபகுமாரும், கிரிஜாவும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் இருவரும் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி கடைக்காவூர் ரெயில் நிலையம் அருகே உள்ள கொச்சுபாலம் சென்றனர். அப்போது அந்த வழியாக கொல்லத்தில் இரு ந்து திருவனந்தபுரம் நோக்கி வந்த ஐலண்டு எக்ஸ்பிரஸ் ரெயில் முன் அவர்கள் இருவரும் பாய்ந்தனர். இதில் அவர்கள் உடல் சிதறி அதே இடத்தில் பலியாகினர்.

இது பற்றி அறிந்ததும் கடைக்காவூர் போலீசார் அங்கு விரைந்து சென்று, இருவரின் பிணங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

(செய்தி: நன்றி - தினத்தந்தி)

மனைவியின் புகாரால் கைது - கணவன் தற்கொலை

குடும்பத் தகராறுகள் காரணமாக பெண்கள்தான் பெருமளவில் தற்கொலை செய்துகொள்வதாக ஒரு பொய்யான கருத்து செய்தி ஏடுகளாலும் ஊடகங்களாலும் பரப்பப்படுகிறது. இது ஒரு மாயை. ஆனால் உண்மை நிலையின்படி, நம் நாட்டில் ஆண்கள்தான் பெண்களைவிட 50% அதிகம் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இது அரசே வெளியிட்டுள்ள (National Crime Records Bureau) தரவு. ஆனால் பெண்கள்தான் அதிக அளவு ஆண்களால் கொடுமைப் படுத்தப்படுவதாகவும், அதனால் அந்தப் பேதைகள் தற்கொலைக்குத் தள்ளப்படுவதாகவும் ஒரு கற்பனைக் கதையை சில பெண்ணியவாதிகள் கோரஸாக கூச்சல் போட்டு, ஊடகங்கள் மூலமாகப் பரப்பி வருகின்றனர். இதற்குக் காரணம் பணம்!

ஆம். இதுபோன்ற கட்டுக் கதையைப் பரப்பிக் கொண்டிருந்தால்தானே UNIFEM என்னும் அமைப்பிலிருந்தும், மற்றும் பல அரசுத் துறைகளிலிருந்தும், பெண்களை முன்னேற்றுகிறேன் பேர்வழி என்று பல கோடி ரூபாய்களைக் கறந்து, டை அடித்த "பாப்" தலையும் லிப்ஸ்டிக்குமாக ஏர்கண்டிஷன் ரூம்பில் உட்கார்ந்துகொண்டு, இந்த நாட்டின் அனைத்து மணமான ஆண்களையும் பொய் வழக்குகளில் சிக்கவைத்து கைது செய்து சித்திரவதை செய்வது பெண்கள் முன்னேற்றத்திற்கு எவ்வளவு அவசியம் என்பதைப் பற்றி டி.வி சேனல்களில் கால்மேல் கால் போட்டுக்கொண்டு நீட்டி முழக்கி பேசிக்கொண்டிருக்க இயலும்! இதுதான் பிழைப்பு பல மேட்டுக்குடிப் பெண்களுக்கு!

மேலும் National Commission for Women என்ற அமைப்பை ஏற்படுத்தி, பல கோடி ரூபாய்கள் வரிப்பணத்தை செலவு செய்து, ஏழைப் பெண்களைப் பற்றி துளியும் கவலைப் படாமல், Bar-இலும் Pub-இலும் தண்ணி போட்டு கூத்தடிக்கும் பணக்காரப் பெண்மணிகளுக்காக ஏரோப்பிளேனில் பறந்து கொண்டிருப்பார்கள் இந்த மேதைகள்!

இனி செய்தியை வாசியுங்கள்:-

ஆலந்தூர், ஆக.3- 2009. செய்தி - தினத்தந்தி

குடும்ப தகராறு பிரச்சினையில் மனைவி புகார் கொடுத்து சிறைக்கு அனுப்பியதால் அவமானம் தாங்காமல் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர் மோகன். இவரது தம்பி ஏழுமலை(வயது 38). இவர் புதுச்சேரி வில்லியனூர் பகுதியை சேர்ந்தவர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏழுமலைக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதில் ஏழுமலையை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஏழுமலை ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் புதுச்சேரியில் இருந்து பள்ளிக்கரணை பகுதியில் உள்ள அவரது அண்ணன் வீட்டிற்கு வந்தார். மனைவி தன்னை சிறைக்கு அனுப்பியதை எண்ணி அவர் மனமுடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் தனக்கு அவமானமாக உள்ளதாக அடிக்கடி ஏழுமலை கூறி வந்தார்.

இந்த நிலையில் ஏழுமலை தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்தார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஏழுமலை பரிதாபமாக செத்தார். இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளத் தொடர்பு குற்றத்திற்கு ஆண் - பெண் சமமான தண்டனை வேண்டும்

சென்னை, ஜுலை.31- 2009. செய்தி - தினத்தந்தி

ஆண் - பெண் இருவருக்கும் கள்ளத் தொடர்புக்கு சமமான தண்டனை வழங்க வேண்டும் என்று ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.

தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்க தலைவர் டி.அருள்துமிலன், பொதுச் செயலாளர் எஸ்.மதுசூதனன் ஆகியோர் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே கள்ளத் தொடர்பும் அதனைத் தொடர்ந்த கொலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது தாங்கள் அறிந்ததே. பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான கடந்த ஆட்சியில் கள்ளத் தொடர்பு தொடர்பான குற்றங்களின் தண்டனையை அதிகரிக்கும் நோக்கில் இந்திய தண்டனை சட்டம் 497-ல் சில திருத்தங்களை கொண்டு வர விரும்பியது.

அதற்கான சுற்றறிக்கைகள் அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பப்பட்டன. ஆனால், இந்திய கலாச்சாரத்தை வேரோடு புதைக்க எண்ணுகின்ற சில பெண்கள் அமைப்புகளின் எதிர்பால் இந்த சட்டத் திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை.

மேலும், இந்திய தண்டனை சட்டம் 497-ல் தவறு செய்யும் பெண்களை பாதிக்கப்பட்டவர்களாக பாவித்து விடுவித்துவிடும் மென்மையான அணுகுமுறையால் இந்த சட்டத்தை மீறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இதனால், ஏற்படும் கொலைகளின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும், இந்த கள்ளத் தொடர்பால் கணவனை கொல்வது சர்வ சாதாரண கதையாகி பல குடும்பங்கள் சீரழிந்து இந்திய கலாச்சாரத்திற்கே அச்சுறுத்தலாக மாறி வருவதை தங்களின் கனிவான பார்வைக்கு கொண்டு வருகிறேன்.

இந்த நிலையில், தான் பெற்ற 24 வயது மகனை, அவனை பெற்ற தாயே துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த கொடுமை நம் தமிழ் சங்கம் வளர்த்த மதுரையில் நடந்துள்ளது.

இந்த கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்திற்கு உரியது. எனவே, முதல்-அமைச்சர் கருணாநிதி, போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டு மத்திய அரசை வற்புறுத்தி இந்த பாராளுமன்ற கூட்டத் தொடரிலேயே இந்திய தண்டனை சட்டம் 497-ல் திருத்தம் செய்து கள்ளத் தொடர்பில் ஈடுபடும் ஆண்-பெண் இருவரும் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தும்படி சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.