அடங்கா வெறி

கட்டிலடங்கா வெறியுடன் திரியும் மனைவிகளின் கள்ளக் காதல்கள் இன்னும் எத்தனை உயிர்களைக் காவு வாங்கப் போகிறதோ!

இனி மெல்லச் சாகும் குடும்ப வாழ்க்கை முறை!

காம வெறி பிடித்தலையும் காரிகைகள் Black Widow spider போல் கண்டவனுடன் கலவை கொண்டு காரியம் முடிந்தபின் "என்னைக் கற்பழித்தான் இந்தக் காமுகன்" என்று கூக்குரலிட்டால் போதும், உடனே கொண்டு செல்வர் அந்த அசட்டு ஆணை காராக்கிரகத்திற்கு. அந்தப் பெண் பேதையோ தேடிச் செல்வாள் அடுத்த விட்டில் பூச்சியை நோக்கி. ஏன்? அவள் காமம் தான் இன்னும் தணியவில்லையே! கண்டிக்க வேண்டிய சமூகம்தான் அவளுக்கு சாதகமான சட்டங்கள் மற்றும் தீர்ப்புகள் மூலம் கட்டவிழ்த்து விட்டதே!

பூதப்பாண்டி அருகே நிகழ்ந்த பயங்கரத்தைக் காணுங்கள்! குழந்தைகளை எண்ணிப் பார்த்தாளா அந்த வெறி விடித்த பேய்!

மனைவியுடன் என்ஜினீயர் சரமாரியாக வெட்டிக்கொலை
கள்ளக்காதலன் கைது

அழகியபாண்டிபுரம், ஆக.10- 2009. செய்தி - தினத்தந்தி

நாகர்கோவிலை அடுத்த பூதப்பாண்டி அருகே என்ஜினீயரும் அவருடைய மனைவியும் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப் பட்டனர். இந்த வெறிச்செயலில் ஈடு பட்ட மனைவியின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

இதுபற்றி போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

என்ஜினீயர்

குமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்த தடிக்காரன்கோணம் அருகே உள்ள சைபன் ஏரியா காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரகுமார் (வயது 46). என்ஜினீயர். பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலைபார்த்தார். இவ ருடைய மனைவி லீலா (40). இவர்களுக்கு அஜின் குமார் (14), விஜின்குமார் (13) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

இந்தநிலையில், ராஜேந்திர குமாருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மனநிலை பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. அதைத்தொடர்ந்து அவர் பெங்களூரில் தான் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு தடிக்காரன் கோணம் அருகில் உள்ள சைபன் ஏரியாவுக்கு குடும்பத்தோடு குடி வந்தார்.

காவலாளியுடன் தவறான உறவு

அப்போது அவரது வீட்டு தோட்ட காவலாளியாக தடிக் காரன்கோணம் குட்டி பொத்தை பகுதியைச் சேர்ந்த சார்லஸ்(46) என்பவரை வேலைக்கு அமர்த்தினார். இவருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். ஆனால் சார்லசின் மனைவி விவாகரத்து வாங்கிக் கொண்டு தனியாக தனது பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார்.

இதனால், சார்லஸ் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக ராஜேந்திரகுமாரின் வீட்டி லேயே சாப்பிட்டு, அங்கேயே தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். ராஜேந்திரகுமாருக்கு மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததால் அவருடைய மனைவி லீலா தனது வீட்டில் தங்கியிருந்த சார்லசுடன் தவறான உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சார்லஸ் சொல்வதை யெல்லாம் லீலா கேட்டு வந்ததாக தெரிகிறது.

திருவிழாவுக்கு செல்வதில் பிரச்சினை

இந்தநிலையில் நேற்று முன் தினம் மாலை தடிக்காரன் கோணம் பகுதியில் உள்ள ஒரு ஆலய திருவிழாவுக்கு ராஜேந்திரகுமார் மற்றும் லீலா தங்களது மகன்களுடன் புறப்பட்டனர். அப்போது வீட்டில் இருந்த சார்லஸ் லீலாவிடம், "நீங்கள் திரு விழாவுக்கு செல்லக்கூடாது " என்று கூறினார்.

ஆனால் லீலா அதை கேட்காமல் தனது கணவர் ராஜேந்திரகுமாருடன் ஆலய திருவிழாவுக்கு சென்றார். இதுவரை தனது பேச்சை கேட்டு நடந்த லீலா தற்போது தான் சொல்லியும் கேட்காமல் திருவிழாவுக்கு செல்கிறாளே என்ற ஆத்திரம் சார்லசுக்கு ஏற்பட்டது. இதனால் லீலாவை தீர்த்துக்கட்ட வேண்டும் என்ற முடிவோடு கையில் அரிவாளுடன் சார்லஸ் வீட்டிலேயே காத்திருந்தார்.

சரமாரி வெட்டிக்கொலை

அப்போது கணவன்- மனைவி இருவரும் மகன்களை ஆலயத்தில் விட்டுவிட்டு, இரவு சுமார் 9.30 மணி அளவில் வீட்டுக்கு வந்தனர். வீட்டுக்குள் சென்ற அவர்களை சார்லசும் அரிவாளுடன் பின்தொடர்ந்து சென்றார். பின்னர் சார்லஸ் லீலாவைப் பார்த்து, "நான் சொல்லச் சொல்ல கேட்க மாட்டாயா?" என்று கேட்டுக்கொண்டே அரிவாளால் லீலாவின் கழுத்தில் பலமுறை வெட்டியதாக தெரிகிறது.

இதில் பயங்கர சத்தத்துடன் லீலா ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். இந்த சத்தம் கேட்டு பக்கத்து அறையில் இருந்த ராஜேந்திரகுமார் ஓடிவந்து சார்லசை தடுக்க வந்தார். அவரையும் சார்லஸ் காது, கன்னம், கழுத்து ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டினார். இதனால் ராஜேந்திரகுமாரும் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். சிறிது நேரத்தில் கணவன்- மனைவி 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தனர்.

கிராம நிர்வாக அதிகாரியிடம் சரண்

இதைத்தொடர்ந்து, சார்லஸ் அங்கிருந்து தப்பியோடி கழுவன்திட்டை பகுதியில் மறைந்திருந்தார். பின்னர் அவர் தெரிசனங்கோப்பு கிராம நிர்வாக அதிகாரியிடம் நேற்று காலையில் சரண் அடைந்து, மேற்கண்ட தகவல்களை தெரிவித்தார்.

அதையடுத்து கிராம நிர்வாக அதிகாரி மருதநாயகம் புகாரின்பேரில் கீரிப்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுதேசன், சப்-இன்ஸ்பெக்டர் கோகிலா ஆகியோர் கொலை வழக் குப்பதிவு செய்து சார்லசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கதறி அழுதனர்

கொலை செய்யப்பட்ட என்ஜினீயர் ராஜேந்திரகுமார்- லீலா ஆகியோரின் மகன்களில் அஜின்குமார் 9-ம் வகுப்பும், விஜின்குமார் 8-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

அதிகாலையில் ஆலயத்தில் இருந்து திரும்பிய அவர்கள் பெற்றோர் பிணமாக கிடப்பதைப் பார்த்து கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது

1 மறுமொழி:

Anonymous said...

கட்டிலடங்கா வெறியுடன் என்பது கட்டிலில் அடங்கா வெறி என்று அர்த்தமா ?