கோவையில் குடும்பப் பாதுகாப்பு இயக்கப் பொதுக்கூட்டம்

"இந்திய குடும்ப பாதுகாப்பு இயக்கம்" (SAVE INDIAN FAMILY FOUNDATION) வரும் சனிக்கிழமை வெள்ளிக்கிழமை அன்று (செப்டம்பர் (5) 4-ம் தேதி, 2009) கோவையில் பத்திரிக்கையாளர் சந்திப்பும், ஒரு பொதுக்கூட்டமும் நிகழ்த்த இருக்கிறது.

உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவராலேயே "சட்டபூர்வ பயங்கரவாதம்" (Legal terrorism) என்று வர்ணிக்கப்பட்ட IPC 498A சட்டப்பிரிவு (வரதட்சணை கொடுமை சட்டம்), மற்றும் ஆண்களை மட்டும் குற்றவாளியாகக் கருதும் குடும்ப வன்முறைச் சட்டம் (D.V.Act) போன்ற பொய் வழக்குச் சட்டங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவதற்காகவும் மற்றும் திருமணத்தை எதிர் நோக்கியிருப்போருக்கும் இதுபோன்ற சட்டங்களைப் பற்றிய புரிதலை உணர்த்துவதற்காகவும் இந்த பொதுக்கூட்டம் நடைபெறுகின்றது.

நேரம்: காலை 11 மணி.
இடம்: பிரஸ் கிளப்,
5, மாநகராட்சி வணிக வளாகம்,
தண்டு மாரியம்மன் கோயில் எதிரில், அவிநாசி சாலை,
கோயம்புத்தூர் 641018

தொடர்புக்கு -- 9790019658

அனைவரும் திரளாகக் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்.

இன்றைக்கு இத்தகைய வழக்குகளில் பாதிக்கப்பட்டவர் அனைவரும் இதைப் பற்றிய பொது அறிவு இல்லாமல் இருந்ததால்தான் மிகுந்த துன்பத்திற்கு உள்ளானார்கள். அவர்கள் திருமணத்தின் போது இப்படி ஆகுமென்றா எதிர் பார்த்தார்கள். ஆனால் நீங்கள் எதிர்பார்க்கவில்லை என்பதற்காக அத்தகைய பொய்க் கேசுகள் போடாமல் இருக்கிறார்களா என்ன? நம் நாட்டில் ஆண்டுக்கு 76,000 பொய்க் கேசுகள் (498A) போடப்பட்டு ஒரு பாவமும் அறியாத வயதான தாய்மார்களும் இளம் பெண்களும் சின்னஞ்சிறு குழந்தைகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். ஆனால் 2% கேசுகள்தான் நிரூபிக்கப்படுகின்றன.

சட்டத்தில் ஓட்டை இருக்கலாம்; ஆனால் ஓட்டையே சட்டமானால்?

இந்த அறிவிப்பை பாதிக்கப்பட்டோருக்கும் தங்கள் நண்பர்களுக்கும் பரவலாக அனுப்பி வையுங்கள். நம்மாலான பொதுத் தொண்டு!

1 மறுமொழி:

')) said...

Need awareness to Mens. Here corrupted official torture is too much for 498A cases and they are trying to extract money in any form. Otherwise they will threat like we will file a false case and you are going to run around the courts for many years... Believe me this is real story, because I am one of them victim in this case. I have all the evidences but I'm outside of the India for long time... The Judge will issue arrest warrant without seeing any face value...