பெரிய இடத்து சம்பந்தம் ஆபத்துதான்!

ஐ.ஏ.எஸ் அதிகாரி, அரசியலில் பெரிய செல்வாக்குள்ள குடும்பம் என்று தெரிவு செய்து அவர்கள் வீட்டுப் பெண்ணை மணந்து கொண்டால் ஆண்களுக்கும், அவர்கள்தம் பெற்றோருக்கும் என்ன கதி காத்திருக்கிறது என்பதற்கு இந்த தினமலர் செய்தி ஒரு படிப்பினையாகும்:

ஐ.ஏ.எஸ்., அதிகாரி சம்பந்திக்கு முன்ஜாமீன்

ஜூலை 24,2008

சென்னை:ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் மகள் கொடுத்த வரதட்சணை புகாரில், அவரது மாமனார், மாமியாருக்கு சென்னை ஐகோர்ட் முன்ஜாமீன்
வழங்கியது.

முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி கற்பூர சுந்தரபாண்டியனின் மகள் வினோதினி. வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக தனது கணவர் அரவிந்த் மீது
சென்னை அசோக் நகர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அரவிந்த் கைது செய்யப்பட்டார்.

முன்ஜாமீன் கோரி அரவிந்தின் தந்தை நடராஜன், தாயார் தனலட்சுமி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

வினோதினிக்கும், அரவிந்துக்கும் 1997ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. எனது மகனை திட்டிவிட்டு, தனது பெற்றோர் வீட்டுக்கு வினோதினி சென்றுவிட்டார். பின்னர் அவரது தந்தை எங்களை மிரட்டினார். கடந்த 15ம் தேதி விவாகரத்து நோட்டீசை வினோதினிக்கு அரவிந்த் அனுப்பினார். அதன்
பிறகே இந்த புகார் கொடுக்கப்பட்டுள்ளது. உள் நோக்கம் கொண்டு, பொய்யான புகாரை கொடுத்துள்ளார்.


இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை நீதிபதி ரகுபதி விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில் வக்கீல் அபுடுகுமார் ராஜரத்தினம் வாதாடினார். இருவருக்கும் முன்ஜாமீன் வழங்கி யும், தேவைப்படும்போது அசோக் நகர் போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்

--------------------------------

இதற்கு முந்தைய செய்தி:

ஓய்வு ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் மருமகன் வரதட்சணை
கொடுமை வழக்கில் கைது
ஜூலை 21,2008,00:00 IST

சென்னை : ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் மருமகன்,
வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய வழக்கில் கைது
செய்யப்பட்டார்.

சென்னை தி.நகரில் வசித்து வரும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி கற்பூர சுந்தரபாண்டியன் மகள் டாக்டர் வினோதினி ராஜேஸ்வரி(33). இவருக்கும், தி.நகர் நடேசன் சாலையைச் சேர்ந்த இன்ஜினியர் அரவிந்த்(37) என்பவருக்கும் 1997ம் ஆண்டு திருமணம் நடந்தது. 200
சவரன், நான்கு லட்சம் ரூபாய் மற்றும் வெள்ளிப் பொருட்களுடன் சீர் வரிசைகள் செய்து திருமணத்தை கற்பூர சுந்தரபாண்டியன் நடத்தினார்.

திருமணம் முடிந்ததில் இருந்தே கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. அவர்களுக்கு ஏழு வயதில்
பெண் குழந்தை உள்ளது. ஒன்றரை ஆண்டுகளாக கணவரை
பிரிந்து தனியாக வாழ்கிறார் வினோதினி ராஜேஸ்வரி.

அசோக் நகர் மகளிர் போலீஸ் நிலையத்தில் வினோதினி ராஜேஸ்வரி, "திருமணத்திற்கு பிறகு எனது கணவர் புது கார், அபார்ட்மென்ட் வீடு கேட்டார். திருமணத்திற்கு அதிகளவில் செலவானதால் அவர்கள் கேட்டதை எனது தந்தையால் வாங்கிக் கொடுக்க முடியவில்லை. நள்ளிரவில் வீட்டிற்கு வரும் எனது கணவர், உடன் நண்பர்களை அழைத்து வந்தார். குடித்துவிட்டு அடித்து உதைத்தார். அவரை பிரிந்துச் சென்ற பின்பும் எனக்கு கொலை மிரட்டல்கள் வரத் துவங்கின" என புகார் கொடுத்தார்.

அசோக் நகர் உதவி கமிஷனர் சேது தலைமையிலான போலீசார், இன்ஜினியர் அரவிந்திடம் விசாரணை நடத்தினர்.

கணவன், மனைவி இருவரையும் நேரில் அழைத்து தொண்டு நிறுவன பெண் சாந்தி என்பவர் கவுன்சிலிங் கொடுத்தார்.

"குழந்தையின் நலன் கருதி மனைவியுடன் சேர்ந்து வாழ்கிறேன்" என, அரவிந்த் கூறினார்.

"என்னுடன் சேர்ந்து வாழ்வதாக பொய் சொல்லும் அரவிந்த் அவரது பெண் தோழிகளுடன் நெருக்கமாக பழகுகிறார். கணவருடன் சேர்ந்து வாழ மாட்டேன்" - என வினோதினி ராஜேஸ்வரி கூறினார்.

கணவன் மீது சுமத்திய குற்றச்சாட்டில் வினோதினி ராஜேஸ்வரி உறுதியாக இருந்ததால், அரவிந்த் மீது பெண் கொடுமை தடுப்பு, வரதட்சணை தடுப்பு சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்ட அரவிந்த், சிறையில் அடைக்கப்பட்டார். அரவிந்த் குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர் ஹரி ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.