அநாதையாய் விடப்பட்ட ஆண் குழந்தை

Abandoned male childதொடங்கிவிட்டது ஆணழிப்பு மனப்பான்மையின் வெற்றி!

தற்போது மணமாகும் வயதில் ஆண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர், அன்றாடம் நடக்கும் பொய் வரதட்சணை வழக்குகள், கைது, சிறைவாசம், மிரட்டல் பணம் பறிப்பு, கள்ளக்காதல் கொலைகள், ஆணின் பெற்றோரை சோத்துக்கு வழியில்லாமல் நடுத்தெருவில் நிறுத்தும் அவலங்கள், ஆண்களை அவர்கள் ஆணாகப் பிறந்ததாலேயே குற்றவாளியாகக் கருதும் நீதிபதிகள், இவற்றால் கதிகலங்கி திருமணம் என்றாலே காத தூரம் ஓடும் நிலைக்குத் தள்ளப்படுவதால் இனிமேல் "வேண்டாமய்யா ஆண்குழந்தை" என்னும் மனநிலைக்கு வந்துவிட்டனர் பெற்றோர்.

தூத்துக்குடியில் பிறந்த நிலையில் ஒரு ஆண் குழந்ததயை தவிக்க விட்டு ஓடிய தாயைப் பற்றி முந்தைய இடுகையொன்றில் பார்த்தோம்.

இப்போது இந்தச் செய்தியைப் படியுங்கள்:-

ராமேஸ்வரம் கோயிலில் அனாதையாக கிடந்த குழந்தை.

செய்தி: தினமலர். 2.11.2009

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் கோயிலில் நேற்று அதிகாலை சுவாமி சன்னதி அருகே யாரோ ஒரு தாய் பிறந்த 25 நாட்கள் ஆன ஆண் குழந்தையை பையில் போட்டு, விட்டு சென்றுள்ளார். கோயில் ஊழியர் மகாலட்சுமி பையில் குழந்தை இருப்பதை கண்டு குழந்தையை எடுத்து போலீசுக்கு தகவல் கொடுத்தார். குழந்தையை கேட்டு யாரும் வராத காரணத்தால் கோயில் ஊழியர் மகாலட்சுமியின் மகள் பேபி, "தானே குழந்தையை வளர்ப்பதாக" கூறியதையடுத்து போலீசார் குழந்தையை பேபியிடம் ஒப்படைத்தனர். பேபிக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளநிலையில் இந்த குழந்தையை தனது சொந்த குழந்தை போல் வளர்க்க உள்ளதாக கூறினார்.

1 மறுமொழி:

Anonymous said...

ஆண் குழந்தை என்றல் சாபக்கேடு என்றாகிவிட்டது, WCD அமைச்சகமே 317 IPC இதற்கு இல்லையா????