கள்ளக்காதலைக் கணவன் கண்டித்தான், மகனை எரித்துக் கொன்றாள் தாய்

பக்கத்து வீட்டுக்காரனோடு சல்லாபித்ததைக் கண்டித்த கணவன் மீது ஏற்பட்ட ஆத்திரத்தில் சிறுவன் (மகன்) உயிரோடு எரித்துக்கொலை - தாய் கைது

செய்யாறு, ஜன.16- 2009. - செய்தி - தினத்தந்தி


இந்த சம்பவம்பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவில் உள்ள உக்கல் கிராமத்தை சேர்ந்தவர் வேலு (வயது 32). சலவை தொழிலாளி. இவருடைய மனைவி சுமதி (26). திருமணமாகி 6 வருடம் ஆகிறது. இவர்களுக்கு முருகன் (5) என்ற மகன் இருந்தான்.

பக்கத்து வீட்டை சேர்ந்த மணி என்பவருடன் சுமதி அடிக்கடி பேசியதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று காலையிலும் வேலு, சுமதி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கணவன் மீது ஏற்பட்ட ஆத்திரத்தில் சுமதி தனது மகன் முருகன் மீது மண்எண்ணையை ஊற்றி தீ வைத்தார். இதில் முருகனின் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்து படுகாயம் அடைந்தான்.உடனடியாக அவனை காஞ்சி புரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாப மாக செத்தான்.

இதுகுறித்து தூசி போலீசில் வேலு புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து சுமதியை கைது செய்தார். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின் றனர்.
-----------------

இதே அந்த மனைவி செத்திருந்தால் கணவனும் மாமியாரும் தீவைத்துக் கொளுத்திவிட்டார்கள் என்று முடிவு செய்து - எவ்வித சாட்சியமும் தேeவையில்லை - அவர்களை 7 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை வரை தீட்டிவிடுவார்கள்.

ஏனெனில் இந்திய சட்டங்களை கட்டமைக்கும் பெரியமனிதர்கள் மற்றும் நீதிபதிகளின் எண்ணப்ப்பாங்கின்படி மனைவி என்பவள் பண்பின் சிகரம்; பொறுமையின் சின்னம்; கணவனும் அவனுடைய பெற்றோரும், உடன்பிறந்த சகோதரிகளும் கிரிமினல்கள்.

இந்த நிலை மாறவேண்டுமானால் பெண்ணியவாதிகள் பேச்சை யாரும் பெரிதுபடுத்தக் கூடாது. ஊடகங்கள் நடுநிலையோடு செய்தி வெளியிடவேண்டும். மக்கள் தங்களை மூளைச்சலவைக்கு உட்படுத்திக் கொள்ளாமல் உண்மையை உணரவேண்டும்.