நான்கு பேரை மணந்து இரட்டைக்கொலை செய்த ஐயங்கார் சங்கீதா

முன்னுரை:

ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி அனந்தகிருஷ்ணன், அவரது மனைவி யமுனாபாய் ஆகியோர், கடந்த 1-ம் தேதி சைதாப்பேட்டையில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில், பெரியகாஞ்சிபுரத்தைச் சேர்ந்த தினேஷ், புகழேந்தி, செந்தில்நாதன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அப்போது, காதல் மனைவி சங்கீதா சொன்னதால்தான், கொலைகளை செய்ததாக போலீசாரிடம் சொன்னார் தினேஷ்.
(பார்ப்பன சாதிப் பெண்கள் சிலரின் தற்போதைய கேவல நடத்தைகளையும், 498A - வரதட்சணைக் கொடுமைச் சட்டம் எவ்வாறு சகட்டுமேனிக்கு கெடுமதியினர் கையில் பகல் கொள்ளைக்கு பயன்படுகிறது என்பதையும் இந்த கொலையின் மூலம் தெளிவாக வெளியாகிறது. இதற்குப் பிறகும் “ஐயோ பாவம் பெண்கள். போலிஸ் ஸ்டேஷனுக்குப் போகக்கூட அஞ்சி கொடுமயை அனுபவித்து வருகிறார்கள் நம் பேதைப் பெண்கள்” என்று பசப்பி வருகிறார்களே. எவ்வளவு கேவலமான சமூகமய்யா நம்முடையது!)

நான்கு கணவர்கள் - 498A பொய்வழக்கு பகல் கொள்ளை:

போலீசில் சங்கீதா அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் இது.

கணவன் எண் - 1 . அடித்த கொள்ளை ரூ. 1 லட்சம்.

“நான் பிளஸ் 2 முடித்ததும் 17 வயதிலேயே, வறுமையின் காரணமாக பெற்றோர் 48 வயதான கண்ணனுக்கு திருமணம் செய்து வைத்தனர். தீபாராதனை தட்டில் விழும் பணத்தை நம்பித்தான் எங்கள் குடும்பம் இருந்தது. எதுவுமே தெரியாத வயதில் திருமணம் செய்ததால், கணவர் என்னை செக்ஸ் கொடுமைப்படுத்தினார். அவர் செய்த சித்ரவதைகளை தாங்கிக் கொண்டு, 5 ஆண்டுகள் அவருடன் வாழ்ந்தேன். கொடுமை தாங்கமுடியாததால் பெற்றோர் வீட்டுக்கு வந்தேன். பின்னர் விவாகரத்து பெற்றேன். அதற்காக, எனக்கு ஜீவனாம்சமாக ரூ.1 லட்சம் கொடுத்தார் கண்ணன்.

கணவன் எண் - 2. 498A கொள்ளை ரூ. 3 லட்சம்
அதன்பிறகு, எப்போதும் கோயிலில் இருப்பேன். கோயிலுக்கு அரக்கோணத்தைச் சேர்ந்த ஜெகநாதன் அடிக்கடி வருவார். என்னுடைய அழகில் மயங்கி என்னை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்தார்; நான் மறுத்தேன். ஆனால், என் பெற்றோர்தான் அவருக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்தனர். அவரும் என்னைவிட இருமடங்கு வயதில் பெரியவர். அவரும் என்னை செக்ஸ் சித்ரவதை செய்தார். குடித்துவிட்டு வந்து கண்ட இடங்களில் கடிப்பார். பல நேரங்களில் மது குடித்து விட்டு தூங்கி விடுவார்.அதன் பிறகுதான், எனக்கு செக்ஸில் அதிக ஆர்வம் ஏற்பட்டது. என் கணவரால் என்னை திருப்திப்படுத்த முடியவில்லை. உல்லாசமாகவும் ஆடம்பரமாகவும் வாழ ஆசைப்பட்டேன். பக்கத்து தெருவில் வசித்த வாலிபருடன் பழகினேன். ஜெகநாதன் போதையில் தூங்கியதும், நாங்கள் சந்தோசமாக இருப்போம். அதை ஜெகநாதன் பார்த்து விட்டார். அதனால், அவர் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நான் அவர் மீது வரதட்சணை புகார் செய்தேன். அதற்காக எனக்கு அவர் ரூ.3 லட்சம் வரை கொடுத்தார். நான் ஜெகநாதனுடன் 2 ஆண்டுகள்தான் வாழ்ந்தேன்.

கணவன் எண் - 3

பின்னர், பெற்றோருடன் காஞ்சிபுரத்தில் இருந்தேன். என்னுடன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்த உமாசங்கரை திருமணம் செய்தேன். அவருக்கு ஆரம்பத்தில் என்னுடைய 2 கணவர்கள் பற்றி தெரியாது. அதன் பிறகுதான் தெரிந்தது. ஆனாலும், என்னுடன் அவர் வாழ்ந்து வந்தார். இதற்கு, அவரது சகோதரிகளும், தம்பியும் சம்மதிக்கவில்லை. என் பழைய வாழ்க்கை பற்றி தரக்குறைவாக உமாசங்கரின் அக்கா பேசினார். எனக்கு முன் கோபம் அதிகம். நானும் அவரும் ஒருநாள் நடுரோட்டில் குடிமிப்பிடி சண்டை போட்டோம்.

கணவன் எண் - 4

காஞ்சிபுரம் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சேர்க்கப்பட்டிருந்தேன். அங்கு, தனது உறவினரை பார்க்க வந்த தினேஷடீடன் எனக்கு காதல் ஏற்பட்டது. எனக்கு 3 கணவர்களும் செய்த கொடுமை பற்றி கூறினேன். அவர் என் மீது பரிதாபப்பட்டார். ஆனால், உமாசங்கர் எனக்காக பேசவில்லை. அதனால் அவரை உதறி விட்டு தினேஷடீடன் குடும்பம் நடத்தினேன். ஏற்கனவே, திருமணம் செய்த 3 பேரும், என் ஜாதியை சேர்ந்தவர்கள்.தினேஷின் பெற்றோருக்கு என்னுடைய 3 திருமணம் பற்றி தெரியாது. செக்ஸில் முழுமையாக தினேஷை திருப்தி செய்தேன். அவரும் வாட்ட சாட்டமாக இருப்பார். நாங்கள் பதிவு திருமணம் செய்தோம். இரவில் ஆண்களைப் போல நடந்து கொள்வேன். அது, அவருக்கு சந்தோசத்தை கொடுத்தது.

எங்களது குடும்ப வாழ்க்கைக்கு பணம் தேவைப்பட்டது.அப்போதுதான் அனந்தகிருஷ்ணன், தனக்கு குழந்தை இல்லை. ஆனால் எங்களிடம் ரூ.5 லட்சம் ரொக்கமும், 300 சவரன் நகையும் இருப்பதாக தெரிவித்தார். நானும், தினேஷும் வறுமையில் இருந்தோம். அதனால் அனந்தகிருஷ்ணனை கொலை செய்து விட்டு நகை, பணத்துடன் வந்தால் கோவாவுக்கு சென்று டிராவல்ஸ் ஆரம்பிக்கலாம் என்று தினேஷிடம் கூறினேன்.

சாகச சங்கீதா ஒரு ஐயங்கார் பெண்மணி (அதனால் மரியாதையாகக் குறிப்பிடவேண்டும். இல்லாவிட்டால் டோண்டு சண்டைக்கு வருவார்!)

சென்னை போலீஸ் கமிஷனர் கூறியது:

"கொலைக்கு மூளையாக செயல்பட்ட சங்கீதா, ஐயங்கார் பிரிவைச் சேர்ந்தவர். கொலையான தம்பதி ஐயங்கார் அல்லாத பிராமணர் சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்குள் எப்படி பழக்கம் ஏற்பட்டது என்ற விவரம், சங்கீதாவை கைது செய்த பின்னர் தெரிய வரும்.அவரிடம் 75 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் என்று தெரிகிறது. ஆனால், சங்கீதாவின் மூன்றாவது திருமணத்திற்கு கொலையான தம்பதியர் சென்றுள்ளனர். இத்தகவலை சங்கீதாவின் மூன்றாவது கணவர் உமாசங்கர் உறுதிப்படுத்தியுள்ளார். சங்கீதாவின் நான்காவது கணவர் தினேஷ். "தோழியின் பெற்றோரை கொலை செய்ய வேண்டும்' என சங்கீதா கூறிய பொய்யை தினேஷ் நம்பி கொலை வழக்கில் சிக்கியுள்ளார்.... "

கொள்ளையடித்த நகையை விற்றதில் கிடைத்த ரூ.75 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு சங்கீதா தப்பி ஓடி இருக்கிறார். அவர் இருக்கும் இடம் தெரியவந்துள்ளதாகவும், விரைவில் பிடித்து விடுவோம் என்றும் போலீசார் கூறினார்கள். தமிழக போலீஸ் வரலாற்றில் சங்கீதா போன்ற ஒரு சாகச கொலைகாரியை இப்போது தான் முதன் முதலாக பார்க்கிறோம் என்று போலீசார் ஆச்சரியமாக கூறினார்கள். ...அவரது கிரிமினல் லீலைகள் பற்றி மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மனோகரா படத்தில் வரும் வில்லி வசந்த சேனை கதாபாத்திரத்தை போல சங்கீதாவும் மாபாதகியாக செயல்பட்டு உள்ளதாக போலீசார் சொல்கிறார்கள்.

போலிசாரையும் மயக்குகிறாள் சாகச காதகி:-

1. சிரித்து பேசி மயக்க முயற்சி

சங்கீதாவிடம் போலீசார் விசாரித்தபோது, அவர்களையும் மயக்கும் விதமாக சிரித்து, சிரித்து பேசினார். தனது மேலாடைகளை அடிக்கடி, கீழே விழ வைத்தார். இதனால் பயந்துபோன போலீசார், பெண் போலீசார் முன்னிலையில் விசாரணை நடத்தினர். பின்னர், அவரது வாக்குமூலம் டைப் செய்யப்பட்டது. அவரிடம் இருந்து வெறும் 6 சவரன் நகை மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், பல நூறு சவரன்களை அவர் மறைத்து வைத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையே, போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட தினேஷ், செந்தில்நாதன், புகழேந்தி ஆகியோரை, கொலை நடந்த இடத்துக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு எப்படி கொலை செய்தோம் என்பதை போலீசார் முன்னிலையில் அவர்கள் நடித்துக் காட்டினர். அதை போலீசார் வீடியோ படம் எடுத்துள்ளனர்.
2. டிடெக்டிவ் ஏஜென்சிக்கு வந்தவர்களுக்கும் வலை
அனந்தகிருஷ்ணன் இறந்தது பற்றி பத்திரிகை, டி.வி.மூலமாக தெரிந்து கொண்டேன். எங்களை பிடிக்க முடியாது என்று நினைத்தேன். எனக்கு 10க்கும் மேற்பட்ட காதலர்கள் உள்ளனர். சென்னையிலேயே 2 காதலர்கள் உள்ளனர். அவர்களிடமும் அடிக்கடி செலவுக்கு பணம் வாங்குவேன். அவர்களுடன் பீச், பார்க், சினிமா என்று பல இடங்களில் சுற்றித் திரிந்தேன். தனியார் டிடெக்டிவ் ஏஜென்சியில் வேலை பார்த்தேன். வசதியான பலர் தங்கள் பிரச்னைகளுக்கு உளவியல் ரீதியாக தீர்வு காண வருவார்கள். அப்படிப்பட்டவர் களை நோட்டமிட்டு, அவர்களை என் வலையில் விழ வைக்க முயன்றேன். சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கொலை செய்யும் அளவுக்கு சென்றதால் போலீசில் சிக்கிக் கொண்டேன்.இவ்வாறு சங்கீதா கூறியுள்ளார்.போலீசில் சிக்காமல் இருந்திருந்தால், இன்னும் பலரை ஏமாற்றி பணம் பறித்திருப்பார் சங்கீதா. அவருடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

----------

செய்திகள்: தினமலர், தினத்தந்தி, தினகரன்

18 மறுமொழிகள்:

')) said...

4=1 = 5 கணவர். புதுத் தகவல்!

இன்றைய (8-1-2009) தினத்தந்தி செய்தி

திமன்ற காவலில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்
சென்னை தொழில் அதிபரை 5-வது திருமணம் செய்த சாகசக்காரி சங்கீதா
சைதாப்பேட்டை இரட்டை கொலைவழக்கில் மேலும் திடுக்கிடும் தகவல்கள்

சென்னை, ஜன.8-

சைதாப்பேட்டை இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாகசக்காரி சங்கீதா 5-வதாக சென்னை தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து பணம் பறித்த திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. சங்கீதா கோர்ட்டு உத்தரவின்பேரில் நேற்று ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

நடித்து காட்டினார்

சென்னை சைதாப்பேட்டையில் நடந்த கணவன்-மனைவி இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தினேஷ், புகழேந்தி, செந்தில்நாதன் ஆகிய 3 பேரையும் போலீஸ் காவலில் வைத்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியும், கொலைக்கு மூளை செயல்பட்ட சாகசக் கொலைகாரியுமான சங்கீதாவை தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுத்தார்.

நேற்று சங்கீதாவையும், அவரது காதல் கணவர் தினேஷ் மற்றும் அவருடன் கைதான செந்தில்நாதன், புகழேந்தி ஆகியோரையும் ஒன்றாக வைத்து தனிப்படை போலீசார் விசாரித்தனர். பின்னர் கொலை நடந்த வீட்டுக்கு அவர்களை அழைத்து சென்று விசாரித்தனர்.

அப்போது தினேசும், மற்ற இருவர்களும் கொலை செய்தது எப்படி என்று நடித்துக் காட்டினார்கள். பெரிய காஞ்சீபுரத்தில் உள்ள தினேசின் வீட்டுக்கும் இவர்களை அழைத்து சென்று விசாரணை நடந்தது.

கத்தி பறிமுதல்

வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கொலைக்கு பயன்படுத்திய கத்தியையும், தினேஷ் மற்றும் இருவரின் ரத்தக்கறை படிந்த ஆடைகளையும் போலீசார் கைப்பற்றினார்கள். விசாரணையின்போது சங்கீதாவும், தினேசும் ஒருவரையொருவர் முறைத்து பார்த்துக்கொண்டிருந்தனர்.

சங்கீதா தன்னை ஏமாற்றி, கொலை வழக்கில் சிக்க வைத்துவிட்டதாக தினேஷ் ஆத்திரத்தோடு உள்ளார். கோபத்தில் சங்கீதாவை தாக்கிவிடக்கூடாது என்பதற்காக போலீசார் தினேசை பத்திரமாக பார்த்துக்கொண்டனர்.

இவர்களிடமிருந்து 26 சவரன் கொள்ளை நகைகளையும், ரூ.3 ஆயிரம் ரொக்கப்பணத்தையும் போலீசார் கைப்பற்றினர். சங்கீதாவிடம் விசாரணை நடத்திய காட்சிகளையும், கொலை செய்தது எப்படி என்று தினேசும், அவரது கூட்டாளிகளும் நடித்து காட்டிய காட்சிகளையும் போலீசார் வீடியோ படமாக எடுத்தனர்.

5-வது கணவர்

சங்கீதா, கொலை செய்யப்பட்ட அனந்தகிருஷ்ணனோடு சென்னை அண்ணாசாலை ஒயிட்ஸ் ரோட்டில் உள்ள துப்பறியும் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துள்ளார். அப்போதுதான் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது. துப்பறியும் நிறுவனத்தின் உதவி தேடி வந்த ஏராளமானவர்களையும் சங்கீதா மிரட்டி பணம் பறித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

கள்ளக்காதலில் ஈடுபட்ட தனது மனைவியின் நடவடிக்கைகளை கண்காணித்து தகவல் தெரிவிக்கும்படி தொழில் அதிபர் ஒருவர் துப்பறியும் நிறுவனத்தின் உதவியை நாடி உள்ளார். இந்த விஷயத்தை வெளியில் சொல்லிவிடுவோம் என்று பயமுறுத்தி அந்த தொழில் அதிபரிடம் சங்கீதா பணம் கறந்துள்ளார். இதுபற்றி துப்பறியும் நிறுவனத்திலும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

5-வது திருமணம்

இதற்கிடையில் ஏற்கனவே 4 பேரை மணந்து மோசடி செய்த சங்கீதா, 5-வது திருமணமும் செய்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

துப்பறியும் நிறுவனத்தோடு தொடர்புள்ள தொழில் அதிபர் ஒருவரைத்தான் சங்கீதா 5-வது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி சங்கீதாவிடம் கேட்டபோது, `அந்த தொழில் அதிபர் தன்னிடம் பெரிய அளவில் செக்ஸ் தொல்லை கொடுத்தார்' என்று மட்டும் மழுப்பலாக பதில் அளிதார். இதுபற்றி விரிவாக விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

சங்கீதாவை வருகிற 21-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

இதன்பேரில், சங்கீதா சென்னை புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

முகத்தை மூடியபடி

சங்கீதா நேற்று கோர்ட்டுக்கு அழைத்துவரப்பட்டபோது, முகத்தை தனது சேலையால் மூடிக்கொண்டார். சிவப்பு பார்டர் போட்ட நைலக்ஸ் சேலையும், அதே நிறத்தில் ஜாக்கெட்டும் சங்கீதா அணிந்திருந்தார். கோர்ட்டில் அவரை பார்க்க ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்தனர்.
-------------

அடுத்து அந்த சங்கீதாவை சினிமாவில் நடிக்க புக் செய்து விடுவார்களோ!
- இவ்வளவு பிரபலமாகிவிட்டாரே! (”ளே” என்றால் டோண்டுவுக்கு கோபம் வந்துவிடும்!)

')) said...

//சாகச சங்கீதா ஒரு ஐயங்கார் பெண்மணி (அதனால் மரியாதையாகக் குறிப்பிடவேண்டும். இல்லாவிட்டால் டோண்டு சண்டைக்கு வருவார்!)
சென்னை போலீஸ் கமிஷனர் கூறியது:

"கொலைக்கு மூளையாக செயல்பட்ட சங்கீதா, ஐயங்கார் பிரிவைச் சேர்ந்தவர். கொலையான தம்பதி ஐயங்கார் அல்லாத பிராமணர் சமூகத்தை சேர்ந்தவர்கள்.//

கொலைக்கு மூளையாக செயலபடுவதில் சங்கராச்சாரிகளை மிஞ்சி விடுவார் போல் இருக்கிறது.

')) said...

"ithellam jaathi perukku kedu vilaivikka vantha Kodali Kambukal"...vera ennatha sollrathu...Sorry, I am unable to digest this incident...autrocious..how dare a lady alone has created such a big scandel along with 2 murder...what is happening to the so called civilized society....Immediate punishment, if the charges are proved, is the only remedy....and it should be not less than 14 years RI.....

Anonymous said...

கொலைக்காரர்கள், குற்றவாளிகள், திருடர்கள் எந்த ஜாதிகளில் இல்லை. இதில் கொலைகாரி ஐயங்கார் வகுப்பை சேர்ந்தவர் என்பதால் என்ன தண்டனை அதிகரிக்க போகிறதா? அல்லது குறையபோகிறதா? அவள் இந்த வகுப்பை சேர்ந்தவர் என்பதை திரும்ப திரும்ப சொல்வதில் பதிவர் வேறு எதையோ சொல்ல ஆசை படுபவர் போல் தெரிகிறது.

நம் நாட்டில் உள்ள ஜாதியில் "நாடார், தேவர், முதலியார், வன்னியர், கம்பர், ஐயர், கவுண்டர், செட்டியார், ஹரிஜன், அனைத்து மேல் ஜாதி, கீழ் ஜாதி எல்லாவற்றிலும் நல்லவர்களும் இருக்கிறார்கள், கேட்டவர்களும் இருக்கிறார்கள்.

அனைத்து குற்றவாளிகளை பிடிக்கும் போதும் இந்த மாதிரி ஜாதி பெயரை சொல்லித்தான் போலிசோ,பத்திரிகைகளோ செய்தி வெளியிடுகிறதா?
இந்த நாட்டில் பிரமணர்களை தவிர அனைவரும் ஜாதியயை ஏன் பின்பற்ற வேண்டும்? உங்களுடைய இட ஒதுக்கீட்டிர்க்ககவா?
பகுத்தறிவு வாதிகளே நீங்கள் எதிர்க்க வேண்டியது பிரமணர்களை அல்ல
ஜாதி மோகம் கொண்டு அலையும் இவர்களை போன்ற மேல் ஜாதி,கீழ் ஜாதிக்காரர்களை. முதலில் இவர்களை திருத்துங்கள்.

')) said...

//இரவில் ஆண்களைப் போல நடந்து கொள்வேன்//

இது இன்னாபா இது...புரியலையே.

Anonymous said...

!!இவருடைய நான்காவது கணவர் தினேஷ் மீது 498A வழக்கு தொடத்தாலூம் தொடுப்பார் கற்புகரசி சங்கிதா!!
பம்மல் வித்தியா வரிசையில் அவருடைய அக்கா சகசக்காரி சங்கிதா... தொடரட்டும் இந்த பட்டியல் 498A துணையுடன்

Anonymous said...

BASIC PROBLEM IS POVERTY...THEN SEXUAL ASSAULT...

')) said...

Mr. Anonymous,

According to you, poor women can kill anyone, is it?

Do you claim that any woman can commit debauchery and satisfy her lust and finally kill people and then when caught, she would give a sob story that poverty and sexual assault has turned her a killer. The "sexual assault" theory itself is so hollow that she claims her "old" husband assaulted her "sexually", but she was not satisfied.

The problem is not she but people like you!

So long as our country has "Jollu" idiots like you, such murders will continue!

Anonymous said...

ஆண், பெண் கற்பு நிலை - 2

http://dondu.blogspot.com/2005/10/2_14.html

பெண்கள் தங்கள் உடல் இச்சையை தணித்துக்கொள்ளட்டும்.
ஆனால் மிகுந்த தற்பாதுகாப்புடன் செயல்படவேண்டும்.கருவுறக் கூடாது. கருகலைப்பு உடலுக்கு கெடுதல். பால்வினை நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஆணுறை உபயோகத்தை வலியுறுத்த வேண்டும். ரொம்ப முக்கியம், பரம ரகசியமாகச் செயல்படவேண்டும். மாட்டிக் கொள்ளக் கூடாது.
என்னதான் இருந்தாலும் இப்போது இருக்கும் சமூகக் கட்டுப்பாடுகள் கடுமையானவை. ஆகவே மாட்டிக் கொள்ளக் கூடாது.

')) said...

//என்னதான் இருந்தாலும் இப்போது இருக்கும் சமூகக் கட்டுப்பாடுகள் கடுமையானவை.//

டோண்டுவுக்கு இப்போதைய நிலவரம் தெரியாது போலிருக்கிறது. சமூகக் கட்டுப்பாடாவது, புடலங்காயாவது! பெண்களுக்கு இப்போதெல்லாம் ஒரு கட்டுப்பாடும் கிடையாது. பெயர் வாய்ந்த பெரிய இடத்துப் பெண்மணிகளெல்லாம் ”கற்பு, பண்பாடு இதெல்லாம் கட்டுப்பெட்டித்தனம்; இதையெல்லம் தூக்கியெறியுங்கள்” என்று பெண்களுக்கு தொடர்ந்து போதனை செய்து வருகின்றனர். மேலும் தங்கள் வாழ்விலும் இதுபோல் தினமும் ஒரு கணவனையோ, ஆண் உடனிருப்பையோ மாற்றிக் கொண்டு பெண்ணின வெற்றிக்கு எடுத்துக் காட்டாக நடந்து காண்பிக்கின்றனர்.

அதனால் பெண்கள் எதற்கும் கவலைப்படாமல் தன்னிச்சைப்படி யாரிடம் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், வெளிப்படையாக உறவு கொள்ளலாம். இன்றைய சமூகத்தினால் அவர்கள் பெண்ணினத்தின் வெற்றிக்கு உதாரணமாகக் கொண்டாடப்படுவார்கள்.

“மணமான பெண்கள் எப்பொதும் தங்கள் கைவசம் ஆணுறைகளை தயாராக வைத்துகொண்டு யாருடன் வேண்டுமானாலும் உறவு கொள்ளுங்கள். உங்கள் கணவர்கள் நொந்து நாசமாகப் போகட்டும்” என்று இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் ரேணுகா சவுத்திரியே அறிவுரை கூறியிருக்கும்போது டோண்டு சொல்வது மட்டும் எப்படித் தப்பாகும்?

')) said...

தமிழ்நாடு மாதர் சங்கத் தலைவி இவரை 5 கணவர்கள் இருப்பதால் கலியுக பாஞ்சாலி என்று கூறி இவர் இப்படி ஆனதற்கு 5 கணவர்கள் தான் காரணமென்று அவர்கள் மீது 498A கேஸ் போடாமல் இருந்தால் சரிதான்!

நம்ம ஊரு அரசியலுக்கு ஏற்ற ஆள் தான் இவர். அத்தனை தகுதியையும் சேர்த்துவைத்திருக்கிறhர்.

இனி வரும் செய்திகளில் சாதியைத் தவிர்த்தால் உங்களுடைய குறிக்கோளில் அதிக கவனம் செலுத்தலாம் என்று நம்புகிறேன். என்ன செய்வது பள்ளியில் சேரும்போதே அரசாங்கம் நம்மை சாதியைக் கேட்டு பிஞ்சுப் பருவத்திலேயே மனதில் சாதி என்னும் சகதியை பூசிவிட்டார்கள். அது அவ்வளவு சீக்கிரத்தில் விடுமா.

')) said...

பெண் பாலியல் தொழிலாளி இல்லாத சாதியே கிடையாது. ஒழுக்கம் கெட்ட பெண்கள் எல்லா சாதியிலும் இருக்கிறார்கள்.

சிவகாசி ஜெயலட்சுமியின் சாதியை சொல்லாத போலிஸ் (அதுல போலிசே பொறிதான்) சங்கீதாவின் சாதியை வெளியே சொல்லுவது படுகேவலமானது.

')) said...

//இனி வரும் செய்திகளில் சாதியைத் தவிர்த்தால் உங்களுடைய குறிக்கோளில் அதிக கவனம் செலுத்தலாம் என்று நம்புகிறேன்.//

உண்மைதான் பாமரன். நான் குறிப்பிட்டதன் காரணம் மேல்சாதி என்று கருத்தப்பட்டவர்களே இப்படித்தான் நடந்து கொள்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்ட எண்ணியதால்தான்.

ஆனால் நீங்கள் சொல்வதுபோல் இனிமேல் சாதிக் குறியீடுகளைத் தவிர்த்துவிடுகிறேன். எல்லா சாதியிலும் (மதங்களிலும்) பாதிக்கப்பட்ட கணவன்மார்கள் உள்ளனரே! அவர்களுக்காகக் குரல் கொடுப்பதுதானே என் குறிக்கோள்.

கருத்துரை கூறிய அனைவர்க்கும் என் நன்றிகள்.

Anonymous said...

இதுல என்னத்துக்கு ஜாதிய இழுகறீங்க?

குடித்து கொண்டே ஆபாசப்படம் பார்க்கிறாள் ( கிறிஸ்துவ) மனைவி என்று ஏன் தலைப்பு வெக்கல?

')) said...

//இதுல என்னத்துக்கு ஜாதிய இழுகறீங்க? //

என் முந்தைய பதிலில் விளக்கம் கொடுத்து விட்டேன் என்று நினைக்கிறேன்.

அதென்னமோ, சாதி பெயரைச் சொன்னாலே வலைப்பதிவுக்கு இன்னும் நாலுபேர் கூட வர்ராங்க!! :)

எனினும் அதை இனிமேல் “இழுப்பதில்லை” என்பது தீர்மானமான முடிவு!

நன்றி.

Anonymous said...

super yomen maa

Anonymous said...

//கொலைக்கு மூளையாக செயலபடுவதில் சங்கராச்சாரிகளை மிஞ்சி விடுவார் போல் இருக்கிறது//

சரியா தெரியல சங்கராச்சாரியா இல்ல மு க அழகிரியானு

Anonymous said...

KOLAI BRAHMANARKALUKKU PUDHIDHU ENBADHAL ADHAI KURIPPITTILRUKKIRARKAL ENRU NINAIKKIREN.