கள்ள உறவில் நல்லதா விளையும்!

பெண்கள் அனைவருமே கற்பைப் போற்றி, “கணவனையன்றி மாற்றானைக் கண்ணெடுத்தும் பார்ப்பேனோ” என்று விரதம் காப்பவர்கள் போலவும், ஆண்கள் அனைவருமே செக்ஸ் வெறி பிடித்து அலையும் கயவர்கள் போலவும் இந்த சமுதாயத்தில் பெண்ணியவாதிகளும், ஜொள்ளுவிடும் கிழங்களும், பத்திரிக்கைகளும், ஊடகங்களும் உண்மையை அப்பட்டமாக மறைத்து ஒருதலைப் பட்சமாக சித்தரிப்பது இப்போது ஃபேஷனாகப் போய்விட்டது. கற்பு என்னும் சொல்லே இக்காலப் பெண்கள் மனத்தளவில் ஒரு கெட்ட வார்த்தையாக மாறிப்போய்விட்ட காலகட்டத்தில் இப்படி ஆண்களை மட்டமாகச் சித்தரிப்பதை அனைத்து ஆண்களும் ஏன் வாய்மூடி மௌனியாக சகித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது.

இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வெளிவந்துள்ள “ஆண்கள் எல்லோரும் ஏன் மனைவியை ஏமாற்றுகிறார்கள்?” என்ற தலைப்பிட்ட கட்டுரையைப் பாருங்கள். ஏன், பெண்கள் கணவனை ஏமாற்றி கள்ளக்காதலில் ஈடுபடுவதேயில்லையா? ஏனிந்த விஷமத்தனமான சித்தரிப்பு?

ஏன் உண்மையை மறைக்கிறார்கள்? பென்ணியவாதிகளுக்குப் பயந்தா? அல்லது, பெண்கள் அனைவரும் கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்று தொடர்ந்து சித்தரிப்பதால் அவர்களுக்கு ஏதேனும் ஆதாயம் கிட்டுகிறதா?

இன்றைய பெண்களின் கற்பு நெறிக்கு இதோ சில சாம்பிள்கள்:-

1. பெண் கொலை வழக்கில் மருமகள்- கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை ஈரோடு விரைவு நீதிமன்றம் தீர்ப்பு - ஈரோடு, ஜன.22- 2009

ஈரோடு மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள எஸ்.பெரியபாளையம் வெள்ளியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யம்மாள் (வயது 63). இவர் பால் வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மகன் அய்யாசாமி, திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஜோதி (37).

அய்யாசாமி வேலை பார்த்த கம்பெனியிலேயே வெள்ளியம்பாளையம் கே.டி.கே.தங்கமணி நகரை சேர்ந்த சிவராமன் (28) என்பவரும் வேலை பார்த்து வருகிறார். அடிக்கடி அய்யாசாமி வீட்டுக்கு வந்து சென்றதால் ஜோதியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. யாருக்கும் தெரியாமல் இருவரும் தங்கள் கள்ளக்காதலை வளர்த்து வந்தனர்.

அய்யம்மாளின் சகோதரர்கள் தங்களின் பூர்வீக சொத்தில் 5 சென்ட் நிலத்தை அய்யமாளுக்கு கொடுத்தனர். அதை அவர் தனது மகள் கோவிந்தம்மாளுக்கு மட்டும் கொடுக்க இருந்தார். இதனால் அய்யம்மாள் மீது மருமகள் ஜோதிக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதற்கிடையில் ஜோதி-சிவராமன் இருவரின் கள்ளத்தொடர்பு அய்யம்மாளுக்கு தெரியவந்தது. அவர் ஜோதியை கண்டித்தார். எனவே அய்யம்மாளை கொலை செய்ய திட்டமிட்டார்.

கடந்த 2-8-2007 அன்று மாலை அய்யம்மாள் வெளியே சென்றிருந்த போது சிவராமன் வீட்டுக்கு வந்து ஜோதியுடன் உல்லாசமாக இருந்தார். அப்போது திடீரென்று வந்த அய்யம்மாள் அவர்களை பார்த்து விட்டு கண்டித்தார். பின்னர் மாட்டை கொண்டு வர நல்லாறு ஓடை பக்கம் சென்றார். அவரை பின் தொடர்ந்து சென்ற ஜோதி, சிவராமன் ஆகியோர் அய்யம்மாளை கழுத்தை நெரித்தும், கல்லால் முகத்தில் தாக்கியும் கொலை செய்தனர்.

இந்த வழக்கில் சிவராமன், ஜோதிக்கு ஆயுள் தண்டனையும், கொலையை மறைக்க முயன்ற சிவராமனுக்கு மேலும் 3 ஆண்டுகள் ஜெயில்தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.

2. வாணியம்பாடி அருகே அம்மிக்கல்லை தலையில் போட்டு பெண் படுகொலை. கள்ளக்காதலன் கைது - ஆம்பூர்,ஜன.22-2009

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள மிட்டானங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி அம்சா (வயது 45). இவர்களுக்கு மோகன் என்ற மகன் உள்ளார். அம்சா கூலி வேலைக்கு சென்றபோது பத்தாப்பேட்டையை சேர்ந்த குமரவேல் (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதுபற்றி கோவிந்தனுக்கு தெரிந்ததும் அவர் மனைவியை கண்டித்தார். இதனால் அம்சா கணவனை விட்டு பிரிந்து சென்று பத்தாப்பேட்டையில் கள்ளக்காதலன் குமரவேலுவுடன் குடும்பம் நடத்தி வந்தார்.

குமரவேல் பீடி தொழில் செய்து வந்தார். அவருக்கு போதுமான வருமானம் இல்லாததால் அம்சாவிடம் பணம் கேட்டார். அம்சா தனக்கு சொந்தமான நிலத்தை விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தை குமாரவேலுவிடம் கொடுத்தார். இதை குமரவேலு குடித்து அழித்துவிட்டார்.

இதனால் குமரவேலுவுக்கும், அம்சாவுக்கும் தகராறு ஏற்பட்டது. தினமும் அம்சா பணத்தை கேட்டு தொந்தரவு செய்தார். இதனால் அம்சா மீது குமரவேலுவுக்கு வெறுப்பு ஏற்பட்டது.

நேற்று முன்தினம் இரவு அம்சாவும், குமரவேலும் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது அம்சா மறுபடியும் பணத்தை கேட்க ஆரம்பித்தார். இதனால் ஆவேசம் அடைந்த குமரவேலு அருகில் இருந்த பலகையை எடுத்து அம்சாவின் தலையில் தாக்கினார். இதில் அவர் கீழே விழுந்தார். மேலும் ஆத்திரம் அடங்காத குமரவேலு அருகில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து அம்சாவின் தலையில் போட்டார். இதில் படுகாயம் அடைந்து அம்சா ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்து போனார்.

3. அடகு வைத்த தங்க நகைகளை திருப்பிக் கேட்டதால் கழுத்தை அறுத்து கொன்றேன். கள்ளக்காதலியை கொலை செய்த புதுமாப்பிள்ளை வாக்கு மூலம்

தேனி மாவட்டம், ஆண்டிப் பட்டி அருகே உள்ள வைகை அணைப் பூங்கா அருகே கடந்த 15-ந் தேதி ஒரு பெண் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடந்தார். இது பற்றிய தகவல் கிடைத்ததும் ஆண்டிப்பட்டி போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணையில் அவர் தேனியைச் சேர்ந்த வேலையா என்பவரின் மனைவி கலாவதி (வயது32) என்று தெரிய வந்தது. கொலை செய்தது யார்? என்ன காரணம் என்பது தெரியாமல் இருந்தது.

இதற்கிடையே தேனி சிவராம் நகரைச் சேர்ந்த கார்த்திகேயன்(26), அல்லி நகரம் கிராம நிர்வாக அதிகாரி வனக்காமு மூலம் ஆண்டிப்பட்டி போலீசில் சரண் அடைந்தார். போலீ சாரிடம் கொடுத்த வாக்கு மூலத்தில் அவர் தெரிவித்து இருப்பதாவது:-

நான் தேனியில் ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வந்தேன். எனக்கும் கலாவதிக்கும் 3 வருடத்துக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்த தங்க நகைகளை வாங்கி அடகு வைத்தேன்.

இந்நிலையில் 4 மாதங் களுக்கு முன்பு எனக்கு திருமணம் நடந்தது. இதனால் கலாவதியுடன் அதிகமாக தொடர்பு கொண்டு பேச முடியவில்லை. இதற்கிடையே அவரை சந்தித்த போது உனக்கு திருமணம் ஆகி விட்டது. எனது தங்க நகைகளை மீட்டு என்னிடம் கொடுத்து விடு என்று என்னை வற்புறுத்தி வந்தார்.

அவளுடைய தொல்லை தாங்காமல் சம்பவத்தன்று அவளை வைகை அணைப் பூங்காவிற்கு மொபட்டில் அழைத்து வந்தேன். வரும் போது கத்தியை எடுத்து வந்தேன். பூங்காவில் மறை வான பகுதிக்கு அழைத்துச் சென்று அவளிடம் பேசினேன். அப்போது கழுத்தை அறுத்து கொலை செய்தேன். அவள் அணிந்து இருந்த தங்க சங்கிலி, அவளிடம் இருந்து செல் போன், கால் கொழுசு, கைக்கடிகாரம் ஆகிய வற்றை யும் எடுத்துச் சென்று விட்டேன். போலீஸ் என்னை தேடுவதை அறிந்ததும் நான் போலீசில் சரண் அடைந்தேன்.

4. ஏற்காடு ஓட்டலில் விஷம் குடித்தார் - 3 பேரை திருமணம் செய்த பெண் தற்கொலை - கள்ளக்காதலனுக்கு தீவிர சிகிச்சை

சேலம் வி.எம்.ஆர். தியேட்டர் அருகில் வசித்து வந்தவர் சங்கீதா (வயது 33). இவருக்கு சுனில் (4) என்ற மகனும், சிபானா (3) என்ற மகளும் உள்ளனர். சங்கீதா (சங்கீதா - என்ற பெயர் நினைவிருக்கிறதா!) 3 பேரை திருமணம் செய்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக அவர்களை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (27). இவர் சேலம் சொர்ணபுரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் அரிகிருஷ்ணனுக்கும், சங்கீதாவிற்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் நெருங்கி பழகினர். இதனால் சங்கீதா வீட்டிலேயே அரிகிருஷ்ணன் இருந்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் ஏற்காட்டிற்கு வந்தனர். அங்குள்ள இயற்கை எழில்மிகு நிறைந்த இடங்களை சுற்றிப்பார்த்தனர். பின்னர் ஒரு தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கினார்கள். நேற்று காலை அவர்கள் இருவரும் அறையிலேயே விஷம் குடித்து விட்டதாக தெரிகிறது. இதில் வாயிலில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்துள்ளனர்.

இதை பார்த்த ஓட்டல் ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஏற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், சங்கீதா வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அரிகிருஷ்ணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியநாயகம், சப்-இன்ஸ்பெக்டர் சம்பத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் சங்கீதாவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், எதற்காக அவர்கள் விஷம் குடித்தனர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

5 மறுமொழிகள்:

')) said...

இதோ இன்னொரு ஜல்ஸா கொலை கேசு:-

காசிமேடு மீனவர் கொலையில் துப்பு துலங்கியது:
கள்ளக்காதலனை ஏவி, கணவனை கொன்றதாக மனைவி கைது
போலீசில் பரபரப்பு வாக்குமூலம்


ராயபுரம், ஜன.23-

காசிமேடு மீனவர் கொலையில் துப்பு துலங்கியது. அவரை கொலை செய்ததாக, அவரது மனைவி, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கடலில் மிதந்த பிணம்

சென்னை காசிமேடு கடற்கரையில் கடந்த 14-ந் தேதி ஒரு ஆண் பிணம் மிதந்து வந்தது. அந்த பிணத்தை கைப்பற்றிய காசிமேடு போலீசார், அதை பிரேத பரிசோதனைக்கு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனையில், பிணமாக கிடந்தவர் காணாமல் போன காசிமேடு காசிபுரம் பகுதியைச் சேர்ந்த மீனவர் வடிவேல் (வயது 42) என்பது தெரிய வந்தது. மேலும் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்து யாரோ கடலில் வீசி உள்ளது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து துணை கமிஷனர் காமினி உத்தரவின்பேரில், உதவி கமிஷனர் மாடசாமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் இசக்கி பாண்டியன், தயாளன், சாந்தி, ஏட்டுகள் பேச்சிமுத்து, ரவி, ஜோசப் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

பின்னர் அந்த தனிப்படை வடிவேலின் மனைவி இந்திராவிடம் விசாரணை நடத்தியது. மேலும், வடிவேலின் செல்போனுக்கு கடைசியாக வந்த நம்பர்களை வைத்து விசாரணை நடத்தியதில், வியாசர்பாடி நேரு நகர் பகுதியில் வசித்து வரும் வெங்கடேசன் (வயது 27) என தெரிய வந்தது.

கள்ளத்தொடர்பு

அவரிடம் தனிப்படை போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், வெங்கடேசனுக்கும், வடிவேலின் மனைவி இந்திராவுக்கும் நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததும், இதற்கு இடைனிறாக இருந்ததால் வடிவேலுவை நண்பர்களுடன் சேர்ந்து தீர்த்து கட்டியதும் தெரிய வந்தது.

அவர் கொடுத்த தகவலின் பேரில், வெங்கடேசனின் தம்பி வேல் (வயது 26), வியாசர்பாடி நேரு நகரைச் சேர்ந்த முருகவேல் (வயது 28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இன்னொரு நண்பர் மான்டேன் தலைமறைவாகி விட்டார். கொலை சதி செய்ததாக வடிவேலின் மனைவி இந்திராவையும் போலீசார் கைது செய்தனர்.

வாக்குமூலம்

இதுகுறித்து வெங்கடேசன், போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

நான் ஆட்டோ டிரைவர் வேலை செய்கிறேன். எனக்கும், இந்திராவுக்கும் பல வருடங்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. வடிவேல் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றால், நான் இந்திராவுடன் உல்லாசமாக இருப்பேன். இந்த விஷயம் வடிவேலுவுக்கு தெரிந்து விட்டது.

இதனால் அவர் குடித்து விட்டு இந்திராவை தினமும் அடித்து உதைத்து சித்ரவதை செய்து வந்தார். அவரின் கொடுமை தாங்காமல் என்னிடம் இந்திரா பல முறை கதறி அழுதார்.

மது ஊற்றி கொலை

வடிவேல் உயிரோடு இருந்தால் நாம் சந்தோஷமாக இருக்க முடியாது, அவரை காலி செய்தால்தான் நாம் சந்தோஷமாக இருக்க முடியும் என இந்திரா என்னிடம் கூறினாள்.

அதனால் நான் என் தம்பி வேல், நண்பர்கள் முருகவேல், மான்டேன் ஆகியோர் சேர்ந்து வடிவேலுவை காசிமேடு கடற்கரைக்கு இரவில் அழைத்துச் சென்று மதுவை அதிகமாக ஊற்றிக் கொடுத்து கழுத்தை நெரித்து கொலை செய்து கடலில் வீசி விட்டு வந்தோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்ட வெங்கடேசன், கள்ளக்காதலி இந்திரா, வேல், முருகவேல் ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொல்லப்பட்ட வடிவேலுவுக்கு பார்கவி (வயது 22) என்ற மகளும், அருண் (வயது 20), கௌதம் (வயது 18) ஆகிய மகன்களும் உள்ளனர்.

')) said...

இது ரொம்ப சாதாரணமாக நடக்குது..
இந்த சம்பவங்கள்
ஒரு பாடமாக
அமைய
வேண்டும்..

தேவா....

')) said...

இன்றைக்கு வெளிவந்துள்ள இந்தக் கதை மிகவும் சுவாரசியமாக இறுக்கிரது!

கள்ளக்காதலிலும் ஒரு ஒழுங்கு வேண்டாமா!!

சாலையில் தூங்கிய பெண் இறந்த சம்பவம்: வேறொருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் கழுத்தை நெரித்து கொலை செய்தேன்
போலீஸ் விசாரணையில் கள்ளக்காதலன் வாக்குமூலம்

தொண்டி,ஜன.23-

சாலையில் படுத்திருந்த பெண் டிராக்டர் மோதி இறந்து போனதாக கூறப்பட்ட சம்பவத்தில் வேறொருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கள்ளக்காதலன் போலீசில் வாக்குமூலம் அளித் துள்ளார்.

திருவாடானை தாலுகா பதனக்குடி கிராமத்தை சேர்ந் தவர் முனியம்மாள். விதவை பெண்ணான இவருக்கும் அதே ஊரைச்சேர்ந்த ராஜேந்திரன்(வயது 37) என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி இரவு முனியம்மாள் தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார். அவரை பின் தொடர்ந்து ராஜேந்திரனும் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார்.

இவர்களது வயலுக்கு அருகே பதனக்குடியை சேர்ந்த சிவசாமி உடையார் என்பவருக்கு சொந்தமான வயல் உள்ளது. அப்போது அவரும் தண்ணீர் பாய்ச்சுவதற்காக வந்துள்ளார். இவர்கள் 3 பேரும் வயலுக்கு தண்ணீர் செல்ல மடையை திறந்து வைத்து விட்டு மணக்கொள்ளை என்ற இடத்தில் பதனக்குடி-வெள்ளையபுரம் சாலையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் ராஜேந்திரன் மட்டும் அவரது வயலுக்கு தண்ணீரை திருப்பி விட சென்று விட்டார். அவர் வருவதற்கு வெகுநேரம் ஆகும் என்பதை அறிந்த சிவசாமி உடையாரும், முனியம்மாளும் சல்லாபத்தில் இருந்துள்ளனர். அப்போது ராஜேந்திரன் திடீரென அங்கு வந்து விட்டார். தன்னுடைய கள்ளக்காதலி வேறு ஒருவருடன் சல்லாபத்தில் இருப்பதை கண்ட அவர் ஆத்திரத்தில் மண்வெட்டியால் சிவசாமி உடையாரை பலமாக தாக்கினாராம். இதில் சிவசாமி உடையார் விலா எலும்புகள் முறிந்து மயங்கமடைந்தார்.

இதனால் அவர் இறந்து விட்டதாக எண்ணிய ராஜேந் திரன், முனியம்மாளின் குரல் வளையை நெரித்துள்ளார். இதில் முனியம்மாள் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி உயிர் இழந்தார். மேலும் அவர் முனியம்மாளின் தலையில் மண் வெட்டியால் பலமாக தாக்கியுள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்த கொலையை விபத்து போல மாற்ற ராஜேந்திரன் திட்ட மிட்டார். இதன்படி நள்ளிரவில் சிறுகம்பைனிர் ஆற்றுப் பகுதியில் மணல் திருடி விட்டு முகப்பு விளக்கை அணைத்தபடி வந்த டிராக்டர்கள் சாலையில் படுத்திருந்த 2 பேர் மீதும் மோதிவிட்ட தாக நாடகமாடியுள்ளார். இந்த நிலையில் மணல் திருட்டை பிடிப்பதற்காக திருவாடானை தாசில்தார் வரதராஜன் அந்த பகுதியில் நள்ளிரவில் திடீரென ரோந்து சென்றுள்ளார்.

இச்சம்பவம் குறித்து அவர் திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்டான்லிக்கு தகவல் கொடுத்தார். டி.எஸ்.பி. உத்தரவின் பேரில் தொண்டி இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிலைமணி, குழந்தைசாமி, தனிப்பிரிவு காவலர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முனி யம்மாளின் பிணத்தை கைப்பற்றி திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிருக்கு போராடிய சிவசாமியை தீவிர சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து இறந்த முனியம்மாளின் உறவினர் மேனகா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விபத்து என வழக்கு பதிவு செய்தனர். இருந்த போதிலும் முனியம்மாளின் சாவில் சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் ராஜேந்திரன் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். அதைத்தொடர்ந்து அவரிடம் போலீசார் துருவித்துருவி விசாரணை நடத்தினர். இதில் அவர் மேற்கண்ட விவரங்களை போலீசாரிடம் கூறி முனியம்மாளை கொலை செய்ததை ஒப்புக்கொண் டார்.

இதைத்தொடர்ந்து ராஜேந் திரன் மீது எஸ்.பி.பட்டினம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் திரு வாடானை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு மதுரை சிறை யில் அடைக்கப்பட்டார்.

')) said...

கட்ரை(கட்டுக்கதை) எழுதியவரின் மனைவி 498A என்னும் எய்ட்ஸநோயை அவருடைய குடும்பத்தில் பரப்பி வுட்டுருந்தா தெரியும்...

')) said...

இந்த காமபிசாசெல்லாம் உட்காந்து யோசிப்பாங்களோ?
இல்ல இல்ல படுத்துக்கிட்டு யோசிப்பாங்க...

அடி பாதகத்தி இந்த மாதிரி __________ மும்பை ரெட்லைட்டுக்கு போன காசுக்கு காசுஆச்ச .............