தந்தையிடம் பேசியதற்காக குழந்தைகளுக்கு சூடு போட்டாள் தாய்

முன்குறிப்பு:

“குடும்ப வன்முறை என்பது ஆண்கள் மட்டும் செய்வது. பாதிக்கப்பட்டவ்ர் என்றால் மனைவிதான்” - இந்திய குடும்ப வன்முறைச் சட்டம்.
இப்போது செய்தி:

பள்ளிப்பாளையம், பிப்.3- 2009 - செய்தி - தினத்தந்தி

பள்ளிப்பாளையத்தில் தந்தையிடம் சென்று பேசியதற்காக குழந்தைகளுக்கு காலில் சூடு போட்டதாக தாய் மற்றும் அவரது அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிப் பாளையம் வெப்படையை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 32) விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி தனக்கோடி (30). இவர்களுக்கு தினேஷ் (10), மனோஜ் (8) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 6 மாதகாலமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலுச்சாமியின் தாயார் சரசு தனது பேரக்குழந்தைகளை ஆவலுடன் பார்க்க சென்றார்.

அப்போது அங்கு அவர்கள் தங்கள் கால்களில் தாய் சூடு போட்டதாக இருவரும் தனது பாட்டி சரசுவிடம் காண்பித்தனர். இதற்கு காரணம் என்ன என்று கேட்டதற்கு சிறுவர்கள் இருவரும் தனது தந்தையை பார்த்து பேசியதற்காக அம்மா சூடு போட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து சரசு தனது மருமகள் தனக்கோடியிடம் சென்று ”ஏன் இப்படி செய்தாய்?” எனக்கூறி சத்தம் போட்டார். உடனே தனக்கோடியும், அவரது அண்ணன் தமிழரசு (35) இருவரும் சேர்ந்து ”நாங்கள் இப்படித்தான் செய்வோம். நீ யார் கேட்பதற்கு?” எனக்கூறியதாக தெரிகிறது. ”மேலும் ஏதாவது கூறினால் கம்பியால் அடித்து தொலைத்து விடுவோம்” என மிரட்டியதாக தெரிகிறது.

இது குறித்து சரசு பள்ளிப்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சரசுவை மிரட்டியதற்காகவும், சிறுவர்களுக்கு சூடு போட்டதற்காகவும் வழக்குப்பதிவு செய்து தனக்கோடியையும், அவரது அண்ணன் தமிழரசுவையும் கைது செய்து மேற் கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்.
------------

குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் ரேணுகா சவுத்திரி அம்மையார் இதற்கு ஏதாவது நடவடிக்கை எடுப்பாரா? அடடா, அவருக்கு இதற்கெல்லாம் நேரம் ஏது? அவர்தான் மங்களூரில் Pub-ல் தண்ணி போட்டு ஆடுவதற்கு பணக்கார இளம் பெண்களுகளின் உரிமைகளை நிலை நாட்டுவதில் பிசியாக இருக்கிறாரே!

1 மறுமொழி:

')) said...

இதுபோல் கெடுமதி பெண்கள் கொலை கூட செய்வார்கள். மனிதத்தன்மை யென்றால் என்ன வென்று தெரியாத கூட்டம்