பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க மாணவி ஆர்த்தி ஆர்வம்

வாங்கம்மா, வாங்க! நீங்கதான் பாக்கி.

ரேணுகா சவுத்திரி, கிரிஜா வியாஸ் மற்றும் இங்க இருக்கிற AIDWA வக்கீல்கள் எல்லாரும் சேர்ந்து பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிச்சு, பல்லாயிரக்கணக்கான வயோதிகத் தாய்மார்களையும் கர்ப்பிணிப் பெண்களையும் பொய் வழக்குகளில் கைது செய்வித்து அதனால் பெரும் லாபமடைந்து பெண் குலத்திற்கு மாபெரும் தொண்டுகளை ஆற்றி வருகிறார்கள்.

வாங்கம்மா, நீங்களும் சேர்ந்து கும்மி அடியுங்க. இதில நல்ல வருமானம் இருக்கு!

-------------

பெரியகுளம்: தினமலர் நடத்திய போட்டியில் பரிசு பெற்ற பெரியகுளம் கல்லூரி மாணவி ஆர்த்தி எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ்., படித்து பெண் சிசுக்கொலை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க பாடுபடுவேன் என தெரிவித்தார். பெரியகுளம் ஜெயராஜ் செல்லத்துரை கல்லூரி தகவல் தொழில் நுட்பம் (ஐ.டி.,) முதலாமாண்டு மாணவி ஆர்த்தி (18). இவர் சென்னையில் 2008ம் ஆண்டு டிச., மாதம் தினமலர், தி ஹிந்து, ஏர் இந்தியா ஆகிய நிறுவனங் கள் இணைந்து வழங்கிய நேர்காணல் போட்டியில் கலந்து கொண்டார். ஆர்த்தி எழுதிய கட்டுரைகளுக்கு தேனி மாவட்ட அளவில் 2ம் இடம் கிடைத்தது. "விழிப்புணர்வு பற்றிய ஓட்டம்' என்ற ரேங் அவார்டு (சீல்டு) வழங்கப் பட்டது.எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ்., படித்து பெண் சிசுக்கொலை, பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க பாடுபடுவேன் என ஆர்த்தி தெரிவித்தார்.