தந்தையைக் கொல்ல மகனை ஏவிய தாய்க்குலம்!

சரஞ்சீத் சிங் மல்ஹி என்பவர் பஞ்சாப் விவசாய பல்கலைக் கழக பேராசிரியர். லூதியானாவிலுள்ள அவருடைய வீட்டிற்குள் திடீரென்று புகுகின்றனர் சுமார் பதினெட்டு பிராயம் மதிகத்தக்க மூன்று பையன்கள். அவர்கள் மூவரும் அவர்மீது பாய்ந்து கத்திகளால் சரமாறியாகக் குத்திவிட்டு தாங்கள் வந்த மாருதி காரில் தப்பி விடுகின்றனர். சிறிது நேரத்தில் அக்கம்பக்கத்தினர் அவரை மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அவர் பிணமாகி விட்டார்.

அந்த பேராசிரியரைக் குத்தியது யார்? அவருடைய மகனேதான்! தன் நண்பர்களையும் துணை சேர்த்துக் கொண்டு இந்தக் கொடுமையை இழத்திருக்கிறான் அவன். அந்த இளம் பையனை தன் தந்தையையே கொலை செய்யுமளவுக்குத் தூண்டியது யார்? அவனுடைய தாயார்தான்! வாழ்க தாய்க்குலப் பெருமை!

பேராசிரியர் மல்ஹியும் அவருடைய மனைவியும் பிரிந்து வாழ்கின்றனர்.சிம்ரட் என்ற மகனையும் சிம்ரன் என்ற மகளையும் தன்னுடனேயே அழைத்துச் சென்றுவிடுகிறாள் மனைவி. பிறகு அந்த மகன் மனத்தில் தந்தைமேல் அதீத வெறுப்புணர்ச்சியை வளர்க்கிறாள். அந்த வெறுப்பியல் மனப்பான்மையின் மேலீட்டால் அந்த இளைஞன் போதைக்கு அடிமையாகி “டிரக் அடிக்ட்” ஆகிறான். அவன் பல முறை தன் தந்தையைக் கொலை செய்ய முயற்சிக்கிறான். கடைசியில் 2009 மார்ச் 26-ம் நாள் தீர்த்துவிடுகிறான். தற்போது அந்த கொலைகார சிம்ரட்டையும் அவனுக்குத் துணைபோனவர்களையும், கொலையைத் தூண்டிய மனைவி நிமஞ்சீத் கௌரையும் காவல் துறை கைது செய்திருக்கிறது.

இனிமேல் இதுபோல் நிறைய நடக்கும். அதற்காகத் தானே பாப் தலையும் லிப்ஸ்டிக்குமாக பெண்ணியவாதிகள் கொலை வெறியைப் பரப்பி வருகிறார்கள்!

செய்தி இங்கே: http://tinyurl.com/killer-motherhood

1 மறுமொழி:

')) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதயுடன்)
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவன்
உலவு.காம்