சொன்னபடி கேளு!

சென்னையை அடுத்த பாடி சீனிவாச நகர் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் அமைந்தகரை போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக உள்ளார். இவருடைய மனைவி கோமதி (வயது 49) இவர்களுக்கு ராஜகுமாரி (19) என்ற மகளும், பெருமாள் (12) என்ற மகனும் உள்ளனர்.

கடந்த 2 மாதத்திற்கு முன்பு கோமதியின் தந்தை உடல் நலம் இல்லாமல் இறந்தார். அவருடைய தாய் மட்டும் திருமுல்லைவாயலில் தனியாக இருக்கிறார். திருமுல்லைவாயலில் தனியாக இருக்கும் தாயை பார்க்கவும், ஆறுதல் கூறவும் கோமதி கணவனை அழைத்தார். அவர், ``தேர்தல் வேலை தொடங்கி விட்டதால் பாதுகாப்பு வேலை உள்ளது. ஆகவே விடுமுறை தரமாட்டார்கள். தேர்தல் முடியட்டும் பார்க்கலாம்'' என்று கூறினார்.

இதனால் கோமதி சம்பவத்தன்று கணவனிடம் சண்டை போட்டார். அதற்கு ஆறுமுகம், ”எனக்கும் பாசம் உள்ளது, ஆனால் எங்கள் வேலை அப்படி'' என்று மனைவியிடம் கூறி விட்டு வேலைக்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த கோமதி வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து கொரட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அகஸ்டின் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

-----------------

புருஷனோ, பிள்ளைகளோ எப்படிப் போனால் என்ன, நான் சொன்னது நடக்கணும். இந்த மனப்பான்மையைத்தான் ஒவ்வொரு குடும்பத்திலும் காண்கிறோம்.

1 மறுமொழி:

Anonymous said...

Had the husband is not a Police, he would have been arrested under 304B!
The story would be that he demanded dowry and she commited suicide!
The Police will never check for truth and hold the husband responsible for her death!