கணவனை பிரிந்த மனைவி வேலை பார்த்தாலும் ஜீவனாம்சம் பெறலாம்: மும்பை ஐகோர்ட் உத்தரவு

நாக்பூர் : கணவனை விட்டு பிரிந்த மனைவி வேலை பார்ப்பவராக இருந்தாலும், அவருக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என, மும்பை ஐகோர்ட்டின் நாக்பூர் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் பல்தானாவைச் சேர்ந்தவர் ரவீந்திர பாட்டீல். இவரின் மனைவி கவிதா. இருவருக்கும் ஒரு வயது குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக ரவீந்திர பாட்டீலும், கவிதாவும் பிரிந்தனர். உடன் தனக்கும், குழந்தைக்கும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் எனக் கோரி, நாக்பூர் செசன்ஸ் கோர்ட்டில் கணவருக்கு எதிராக கவிதா வழக்குத் தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த செசன்ஸ் கோர்ட், "கவிதாவுக்கு மாதம் 400 ரூபாயும், குழந்தைக்கு 500 ரூபாயும் ஜீவனாம்சமாக வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார் ரவீந்திர பாட்டீல். வழக்கு விசாரணைக்கு வந்த போது, "என் மனைவி பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்க்கிறார். மாதம் 1,800 ரூபாய் சம்பாதிக்கிறார். அதனால், அவருக்கு ஜீவனாம்சம் தர வேண்டியதில்லை' என, ரவீந்திர பாட்டீல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு கவிதாவோ, "2000ம் ஆண்டில், என் கணவர் வீட்டை விட்டு துரத்திய பின்னரே, நான் பள்ளியில் வேலைக்கு சேர்ந்தேன். எனக்கும், என் குழந்தைக்கும் அவர் பராமரிப்பு செலவை தராததால், நான் வேலைக்கு செல்ல நேரிட்டது. அந்த வேலையும் நிரந்தரமான வேலை அல்ல' என, தெரிவித்தார்.
கவிதா தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஏற்றுக் கொண்ட மும்பை ஐகோர்ட்டின் நாக்பூர் பெஞ்ச் நீதிபதிகள் கூறியதாவது: கவிதாவுக்கும், அவரின் குழந்தைக்கும் ரவீந்திர பாட்டீல் மாதம்தோறும் பராமரிப்புத் தொகை வழங்க வேண்டும். பிரிந்த மனைவியையும், அவரின் குழந்தையையும் கவுரவமாக வாழ வைக்க வேண்டியது கணவரின் கடமை. அதனால், மனைவி வேலை பார்க்கிறார் எனக் கூறி, அவருக்கு பராமரிப்புத் தொகை கொடுக்க மறுக்க முடியாது.

கணவரால் கைவிடப்பட்ட உதவியற்ற பெண், வேலை பார்க்கிறார் எனக் கூறியும், அந்த வேலை மூலம் கிடைக்கும் சம்பளத்தில் அவர் தன்னையும், குழந்தையையும் பராமரித்துக் கொள்வார் என, நினைத்துக் கொண்டும் ஜீவனாம்சம் தர மறுக்க முடியாது. ஒருவர் தன் அனைத்து அடிப்படை தேவைகளையும் நிறைவேற்ற போதுமான பணத்தை கொண்டிருக்க வேண்டியது அவசியம். பணவீக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கும் தற்போதைய சூழ்நிலையில், வாழ்க்கைத் தேவைக்கான அலவன்ஸ் கேட்பதை குற்றம் சொல்ல முடியாது. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

----------------

நண்பர்களே, திருமணத்திற்குப்பின் வாழ்நாள் பூராவும் ஒரு கணவன் எதிர் கொள்ள வேண்டிய பிரச்னைகள் என்னென்ன; சட்டங்கள் எந்த அளவுக்கு கணவனுக்கு எதிராக இருக்கின்றன; மேலும் ஒரு மனைவி கணவனை விட்டுச் சென்றாலும், குற்றம் முழுதும் மனைவியின் மேல் இருந்தாலும் கணவன் தன்னை விற்றாவது அவளுக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்று சட்டங்களும், அதன்பேரில் அளிக்கப்படும் தீர்ப்புகளும் அமைகின்றன என்பதை விளக்கமாகத் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? இந்தப் பதிவில் மறுமொழி இடுங்கள். விளக்கமளிக்கிறேன்.

2 மறுமொழிகள்:

Anonymous said...

Better to have prostitue. Every day new wife! Trouble free life. Happier life.

No corrupted Lawyers, courts, magistrates,police, maintenance, false cases.

')) said...

Why the court has not ordered that a Women also needs carnal pleasure and Divorced Husband should arrange and provide a boy friend to her.