தொடரும் பொய் வழக்குகள்

இன்றுதான் செய்தித்தாள்களில் படித்தோம் - காவல்துறையினர் சகட்டுமேனிக்கு மக்களைக் கைதுசெய்து அவர்களின் தனிமனித உரிமைக்கும், சமூகத்தின் அவர்களுக்கு இருக்கும் மதிப்பு, நற்பெயர் இவற்றிற்கும் களங்கம் விளைவிக்கும் போக்கை நிறுத்தவேண்டும் என்று, இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி அவர்கள் ஒரு தீர்ப்பில் கூறியுள்ளதை. தகுந்த விசாரணையின்றி, வெறும் புகார்களின் அடிப்படையிலோ, சந்தேகத்தின் அடிப்படையிலோ ஒரு தனி மனிதனின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் கைது, சிறையிலடைத்தல் போன்ற செயல்பாடுகளைத் தவிர்க்க வெண்டும் என்று அந்த நீதிபதி வலியுறுத்தியிருக்கிறார்.

ஆனால் நடப்பது என்ன? ஒரு பெண் ஒரு கிழிந்த காகிதத்தில் "என்னை என் கணவர், அவருடைய தாய், தந்தை, அண்ணன், அண்ணி, தங்கை, அவளுடைய ஒரு மாத சிசு அனைவரும் வரதட்சணை கேட்டு கொடுமை செய்தார்கள்" என்று கிறுக்கிக் கொடுத்தால் போதும். உடனே அவர்கள் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படுவார்கள். திங்கள் மாலை வரை ஜாமீனில் வெளிவரக்கூடாது என்பதற்காகவே!

இதுபோன்ற சட்டம் ஒன்றை வைத்துக்குக் கொண்டு, கணவர்கள், அவர்களுடைய வயதான பெற்றோர் போன்றவர்களின் உயிருடனும், உரிமைகளுடனும் ஒரு கோர விளையாட்டை நடத்திக் கொண்டிருக்கிறார்கள், கெடுமதியும் பேராசையும் பிடித்த பேய்ப்பெண்கள் சிலர். இத்தகைய கொடுமைக்கு காவல்துறையும் துணைபோகிறது. உச்ச நீதிமன்றமே இதனை "சட்டபூர்வமான பயங்கரவாதம்" என்று வர்ணித்துள்ளது.

மேலும் சென்னை உயர்நீதி மன்றத்தில் இதுபோன்ற புகார்கள் வந்தால் உடனே கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது; தீரவிசாரித்த பின்னர் தேவை இருந்தால் மட்டுமே கைது செய்யவேண்டும்; மேலும் கண்வனின் பெற்றோர், உறவினர்களைக் கைது செய்யக்கூடாது என்று ஒரு தீர்ப்பில் ஆணையிட்டுக் கூறியிருக்கிறார்கள். இதனை காவல்துறைத் தலைவர் அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் அனுப்பியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஆனால் அந்தக் கொடுமை தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதன்கீழ் இன்றைய தினமணியில் வெளிவந்துள்ள செய்தியைப் பாருங்கள்:

வள்ளியூர், நவ. 12: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே வரதட்சிணை கேட்டு மனைவியை கொடுமை செய்ததாக, அவரது கணவர் உள்ளிட்ட 3 பேரை போலீஸஜ்ர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
திசையன்விளை அருகே உள்ள அழகப்பபுரத்தைச் சேர்ந்த சங்கரலிங்கம் ஆசாரி மகன் மகராஜன் (22). இவர் பலசரக்கு கடை நடத்தி வருகிறார்.
இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த துரைராஜ் மகளான அருணாவுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் காதல் திருமணம் நடைபெற்றது.
பின்னர், அருணாவை மகராஜனின் அண்ணன் குமார் (31), தாய் சுப்பம்மாள் ஆகிய இருவரும் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தினராம்.
இதுதொடர்பாக அருணா திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பேரில், ஆய்வாளர் ஜெயராஜ் வழக்குப் பதிந்து மகராஜன், குமார், சுப்பம்மாள் ஆகிய மூவரையும் கைது செய்தார்.
-----------------
இதுபோல் தொடர்ந்து நடந்தால் இந்திய ஆண்கள் திருமணம் என்னும் சமூகக் கட்டமைப்பு முறையின்மீதே நம்பிக்கை இழந்துவிடுவார்கள் என்பது திண்ணம்!

3 மறுமொழிகள்:

Anonymous said...

தமிழக போலீஸ் பொய் வழக்குகளில் அப்பாவிகளை கைது செய்தும் கொடுமை செய்வார்கள். கொடுமையான குற்றங்கள் அவர்கள் கண்ணெதிரே நடந்தாலும் அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டும் குற்றத்திற்கு துணை போவர்கள் . மொத்தத்தில் மானிட உரிமை மீறலில் முதலிடம் வகிப்பவர்கள்.

சமிபத்தில் சென்னை சட்டக் கல்லூரியில் நடந்த இந்த வன்முறையை போலீஸ் எப்படி வேடிக்கை பார்கிறார்கள் என்று இங்கே பாருங்கள்.

WARNING: Violent content.
http://dinamani.com/videos/lawst1.wmv
எச்சரிக்கை : இளகிய மனம் , இதய நோயாளிகள், 18வயது பார்க்க வேண்டாம்.

Anonymous said...

சென்னை எழும்பூர் கோர்ட்டில் வக்கீல் வெட்டிக் கொலை
சனிக்கிழமை, பிப்ரவரி 23, 2008
இலவச நியூஸ் லெட்டர் பெற


சென்னை: சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 வக்கீல்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தவர் ரஜினிகாந்த். இவருக்கு 7 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் ஆனது.

சமீபத்தில் நடந்த எழும்பூர் வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலில் ரஜினிகாந்த் தரப்பில் போட்டியிட்டவர்கள் தோல்வி அடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், வெற்றி பெற்ற குழுவினரை சரிவர செயல்படவிடாமல் தடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்த ஒரு கும்பல் வழக்கறிஞர் ரஜினிகாந்த்தை சரமாரியாக வெட்டித் தள்ளியது. இதில் கழுத்து, வாய், மார்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த வெட்டு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் ரஜினிகாந்த்.

இந்த சம்பவத்தின்போது சுந்தரராஜன் என்பவருக்கும் வெட்டு விழுந்தது. அவர் படுகாயமடைந்தார்.

இந்த சம்பவத்தால் கோர்ட் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார்.

5 பேர் கைது:

கொலையாளிகளைப் பிடிக்க 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இவர்களின் தீவிர வேட்டையில், வழக்கறிஞர் துரைக்கண்ணன், வால்டாக்ஸ் சாலையைச் சேர்ந்த ஜெயச்சந்திரன், செம்பியத்தைச் சேர்ந்த கராத்தே பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ரஜினிகாந்த்தை வெட்ட துரைக்கண்ணன் பயன்படுத்திய, ரத்தக்கறை படிந்த நீண்ட பட்டாக் கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது. காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

இவர்கள் தவிர மேலும் 2 பேரும் பின்னர் கைது செய்யப்பட்டனர்.

வெட்டிக் கொல்லப்பட்ட வக்கீல் ரஜினிகாந்த், முன்னாள் திமுக எம்.எல்.ஏ செங்கை சிவத்தின் சகோதரர் மகள் லலிதாவைத்தான் மணந்துள்ளார். ரஜினிகாந்த் கொல்லப்பட்டதை கேள்விப்பட்டதும் லலிதா துடித்துக் கதறினார்.

மக்கள் நடமாட்டம் அதிகம் மிக்க எழும்பூர் கோர்ட் வளாகத்தில் நடந்துள்ள இந்த கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எழும்பூர் நீதிமன்றத்திற்கு அருகில்தான் மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சில மாதங்களுக்கு முன்புதான் இந்த நீதிமன்றத்தில் நீதிபதி முருகானந்தம், வக்கீல் ஒருவரால் தாக்கப்பட்டார் என்பதும் நினைவிருக்கலாம். இதையடுத்து புறக் காவல் நிலையமும் நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டது.
http://thatstamil.oneindia.in/news/2008/02/23/tn-advocate-murdered-in-egmore-court-3-colleagues.html

Anonymous said...

Chennai: If in Patna it was journalists, in Tamil Nadu capital, lawyers took the law into their hands and allegedly beat up the Magistrate at Egmore Metropolitan Court in Muruganantham.

One advocate allegedly barged into the Magistrate's chambers demanding bail for his client, which he had earlier refused.

There was a heated exchange following which the Magistrate claims 20 advocates rushed in and beat him up.

The Magistrate has filed a complaint of assault with the local police.

DCP, Triplicane told CNN-IBN that a special team has been formed to investigate the case. However, He refused to divulge more details.

Meanwhile, a meeting has been scheduled later in the day at the Egmore Magistrate's Court to sort out the issue.

Representatives of the Madras High Court Advocate's Association, the Egmore Bar Association, the Chief Metropolitan Magistrate and the Judicial Officers' Association are expected to be present.
http://ibnlive.in.com/news/chennai-lawyers-turn-lawless-beat-up-judge/51554-3-1.html