விதவைப் பெண்ணை விற்க முயன்ற பெண்கள்

கொடுமை செய்வது என்பது ஆண்கள் மட்டுமே என்று குடும்ப வன்முறைச் சட்டத்தில் எழுதி வைத்து ஆண்களை வஞ்சனை செய்கிறார்களே, பெண்கள் ஒரு பாவமும் அறியாத பேதைகளா? கீழ்க்கண்ட செய்தியை வாசியுங்கள்:

சண்டிகார்: பஞ்சாபில், விதவைப் பெண்ணை 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்க முயன்ற இரு பெண்களை போலீசார் கைது செய்தனர்.

பஞ்சாப், லூதியானாவைச் சேர்ந்த விதவை குர்மீத் கவுர். இவரை கர்ஜித் கவுர், சரண்ஜித் கவுர் என்ற இரு பெண்கள், வேறு ஒரு நபரிடம் 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்க முயன்றுள்ளனர். இதற்காக அந்த நபரிடம் இருந்து முன்பணமாக 10 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளனர்.இதுகுறித்து தகவல் அறிந்த ஜர்னல் சிங் என்பவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, விதவைப் பெண்ணை விற்க முயன்ற இரு பெண்களையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.