வரதட்சணை தற்போது கேட்கப்படுகிறதா?

வரதட்சணைக் கொடுமைச் சட்டத்தின் அடிப்படையில் காவல் நிலையங்களில் மணமான பெண்களால் பதியப்படும் புகார்கள் இப்படித் தான் தொடங்குகின்றன:

  1. திருமணத்தின்போது 30 லட்சம் வரதட்சணை கொடுத்தோம். 300 பவுன் நகை போட்டோம்.
  2. மேலும் திருமணத்தை விமரிசையாக 10 லட்சத்துக்கு மேல் சிலவு செய்து நடத்தினோம்
  3. ஆனால் திருமணத்துக்குப் பின் மேலும் 2 லட்சம் ரூபாய் கேட்டு மிகவும் துன்புறுத்தினார்கள்.
  4. என் தகப்பனார் மிக ஏழை என்பதால் அவரால் இவ்வளவு கொடுக்கமுடியாது என்று பலமுறை எடுத்துச் சொல்லியும் கேட்காமல் என்னை அடித்துத் துன்புறுத்தினார்கள்
  5. என் கணவர், அவருடைய 85 வயது தந்தை, 80 வயது தாய், 27 வயது சகோதரி, அவளுடைய 2 வயது மகள் எல்லோரும் என்னை அடித்து கண்டபடி ஏசி கொடுமை செய்தனர்
  6. நான் என் பெற்றோரிடம் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் என்று நொந்துபோய் சொன்னேன்.
இதோடு சேர்த்து:
  • "என்னை கெட்ட வார்த்தை சொல்லித் திட்டினார்கள்"
  • மாமனார் தகாத முறையில் நடந்துகொண்டார்"
  • அவர்கள் எல்லோரும் மது அருந்திவிட்டு பாலியலைத் தூண்டும் விதமான மோசமான சினிமாப்படங்களைப் போட்டுப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்"
- இதுபோன்ற கொசுறு குற்றங்களையும் சேர்த்துக் கொள்வார்கள்.

வக்கீல்கள் இதுபோல் ஒரு template வைத்திருக்கிறார்கள். பெயர் போன்ற விவரங்களை உட்செலுத்தி உடனே ஒரு புகார் மனுவை தயார் செய்து அருகிலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிந்து விடுவார்கள். பிரகென்ன, அவளுடைய அப்பாவிக் கணவன், அவனுடைய வயதான பெற்றோர், நிறை மாத கர்ப்பிணியான அவனுடைய சகோதரி, அவளுடைய 2 வயது குழந்தை அனைவரையும் உடனே கைது செய்து விடுவார்கள். ஏனெனில் இந்த Sec 498A IPC ஒரு cognizable offence. தனியாக கோர்ட்டில் போட்டுத் தன் ஜாமீன் பெறமுடியும். கணவனுடைய தாயாரும், சகோதரியும் பெண்ணினத்தில் அடங்க மாட்டார்கள், இந்த சட்டத்தை தாங்கிப் பிடிக்கும் NCW, AIDWA போன்ற இயக்கத்தினர்கள் மற்றும் அமைச்சர் ரேணுகா சவுத்திரி போன்றோர் கணிப்பில்!

சரி, இந்த பதிவைக் காணுறும் நண்பர்களே, தயவுசெய்து நீங்களே சொல்லுங்கள்:

1. நீங்கள் வரதட்சணை கொடுத்தீர்களா? அல்லது கேட்டீர்களா?

2. உங்கள் உறவினர், நண்பர்கள் யாரேனும் வரதட்சணை கேட்டு அல்லது கொடுத்து உங்களுக்கு நேரடியான செய்தி உண்டா?

3. கடந்த பத்து வருட கால கட்டத்தில் உங்களுக்குத் தெரிந்து யாரேனும் மனைவியை மீண்டும் மீண்டும் வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தினார்களா?

4. உங்களுக்குத் தெரிந்து மனைவியை தற்கொலைக்குத் தூண்டுமளவுக்கு யாரேனும் வரதட்சணைக் கொடுமை செய்தார்களா?

5. முடிவாக உங்களுக்குத் தெரிந்து யாரேனும் இந்த 468A, Domestic Violence act, maintenance case, divorce போன்ற கேசுகளில் சிக்கியிருக்கிறார்களா?

தயவு செய்து உங்கள் பதில்களை மறுமொழியாக இடுங்கள் - தமிழிலோ, ஆங்கிலத்திலோ.

நன்றி.

4 மறுமொழிகள்:

Anonymous said...

1. We both well educated, no dowry was demanded and given.
2.-------
3. I am seeing this type of false dowry harassment cases only in news papers.
4.Never.
5. I am the victim of false 498a, DP4,506(2)along with my 5 family members including 4 women.

Anonymous said...

I'm the victim of false 498a along with my 3 family members including 1 women. Before going to file any FIR, the women inspector also a women should see the truth. My wife cheated me and filed a false case and bribed the police women... what a pathetic india..

')) said...

All just for info only.

1. no

2. yes

3. yes. My wife's friend suffering

4. no news

5. no

Anonymous said...

Missed 2 more points:

1. If they dont have child, then husband is impotant and harassed her to hide his problem.

2. If they have child, then husband and his family tried to kill the child.