கள்ளக் காதலனுடன் உடன்கட்டை!

பெரியகுளம்: பெரியகுளத்தில் கள்ளக்காதலன் கொலை செய்யப்பட்டதால் கள்ளக்காதலி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுவல்லவோ கற்பு!
செய்தி: தினமலர்


தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை காந்திஜி தெருவை சேர்ந்தவர் முத்து (40). இவருக்கும் பாண்டி (42) என்பவரது மனைவி செங்கொடிக்கும் (37) கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் பாண்டி மனைவியை பிரிந்து விட்டார். செங்கொடியின் தந்தை பாலு (62) தனது மகளின் வாழ்க்கையை சீரழித்து விட்டதாக ஆத்திரமடைந்து முத்துவை ஈட்டியால் குத்தி நேற்று முன்தினம் கொலை செய்தார். வத்தலக் குண்டு காந்திநகரில் கள்ளக்காதலன் வீட்டில் வசித்து வந்த செங்கொடி கள்ளக் காதலன் முத்து கொலை செய்யப்பட்ட தகவலை கேட்டு விஷம் குடித்தார். வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
------------------
இதற்கும் அந்த பரிதாப பாண்டியை காரணமாக்கி அவர்மேல் வரதட்சணைக் கொடுமை வழக்கு போட்டாலும் போடுவார்கள்! சட்டம்தன் கைவசம் இருக்கிறதே, போட்டுத் தாக்கவேண்டியதுதானே!
இது போன்ற பெண்களுக்கு திருமணம் ஒன்று வேறு கேடா!