பொய் கேசு போடுவது இப்படித்தான்!

சாத்தூரில் வரதட்சணை கேட்டு பெண்ணை சித்ர வதை செய்ததாக கணவர் உள்பட 4 பேர் மீது வழக் குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சாத்தூர் அருகே உள்ள ஜெக நாதபுரம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி பொன்னுத்தாயி (வயது 24). இவர் சாத்தூர் அனைத்து மக ளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ள ஒரு புகார் மனு வில் கூறியிருப்பதாவது:-

எனக்கும், மனோகரனுக்கும் 3 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற் போது எனது கணவருக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எங்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதன் விளைவாகஎனது கணவர் மனோகரன், அவரது தந்தை ஆறுமுகச்சாமி, மாமி யார் முத்துலட்சுமி, தம்பி மணிகண்டன் ஆகியோர் ரூ.3 லட்சம் கேட்டு என்னை சித்ரவதை செய்கின்றனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.


இது குறித்து போலீசார் மனோகரன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.