பரந்து விரியும் 498A கேசுகள்

இப்போதெல்லாம் நம் பெண்குலத் திலகங்கள் திருமணம் செய்துகொள்வதே 498A கேசு போடுவதற்காகத்தானோ என்று தோன்றும் வகையில் ஊருக்கு ஊர் இத்தகைய கேசுகள் கப்பும் கிளையுமாக வளர்ந்துகொண்டே செல்கின்றன.

கல்யாண புரோக்கர்கள் இருப்பதுபோல் இப்போது 498A புரோக்கர்கள் தோன்றிவிட்டனர். இது எவ்வளவு உண்மை என்பது உங்களுக்கு விளங்க வேண்டுமானால் உங்கள் அருகாமையிலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கோ, குடும்ப நிதிமன்ற வாசல்களுக்கோ சென்று பாருங்கள். "என்னம்மா, குடும்பத் தகறாரா? கவலையே படாதீங்க, நம்ம பலான வக்கீல் கிட்ட அளைச்சுக்கிட்டு போறேன். புருசன், மாமனார், மாமியார், நாத்தி, அவளோட கொயந்தை அத்தனை பேரையும் புடிச்சு உள்ள போட்டுடலாம். அப்பறம் புருசன்காரன் கிட்டேயிருந்து கணிசமா கறந்துடலாம்." இப்படிச் சொல்லி ஆசை காண்பித்து அழைத்துச் செல்ல ஆட்கள் அலைந்து கொண்டிருப்பார்கள். புருஷனையும் மாமியாரையும் உள்ள போடலாம்னு சொன்னவுடனேயே நம் பெண் பாவைக்கு வாயில் ஜலம் ஊறும். "ஆகா! ஜாலி" என்று குதித்துக்கொண்டு அந்த ஆளுடன் பலான வக்கீலிடம் சென்று அவர் எழுதிக் கொடுக்கும் 498A டெம்பிளேட் புகாரில் கையெழுத்துப் போட்டு விடுவார்.

மேலும் குற்றவாளிகளாக கணவன் வீட்டினர், மற்றும் அவனுடைய உறவினர், நண்பர்கள் இவர்களில் யார் யார் மேல் அந்த புதுமைப் பெண்ணுக்கு கோபம் இருக்கிறதோ, அவர்கள் அனைவரும் என்னை வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தினார்கள். அதிலும் மாமியார் என்னை காலால் உதைத்தார் (அவர் பாவம், டயாபிடீஸ், பிளட் பிரஷரில் அவஸ்தைப் பட்டுக்கொண்டு காலைத்தூக்க சீவனற்றுக் கிடப்பார்), மாமனார் புளூ ஃபிலிம் பார்த்தார், என்னைக் கையைப் பிடித்து இழுத்தார் (அவர் தன் கையையே தூக்க இயலாதவராக இருப்பார். இந்த மருமகளோ அத்லெடிக் சாம்பியனாக இருப்பார்) என்றெல்லாம் ஜோடிக்கப்பட்ட புகாரில் மனமொப்பி கையெழுத்திட்டு விடுவார், இந்த பாரதி கண்ட புதுமைப் பெண்!

பிறகென்ன, கணவனிடம் பேரம் பேசிக் கறக்கவேண்டியதுதான் பாக்கி. 99% கேசுகள் (498A) இத்தகைய Extortion-ல் தான் முடிகின்றன!

இப்போது சமீபத்திய அறுவடைக் கேசுகளைப் பாருங்கள்:-

1. திருப்பரங்குன்றம், ஆக.11- 2009

வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாக 2 பெண்கள் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் அவர்களின் கணவர் குடும்பத்தார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கூடுதல் வரதட்சணை

திருப்பாலை எம்.எம். நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் அங்கயற்கண்ணி(வயது 38). இவருக்கும் நாகை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த

சிவகாசி மகன் சுரேசுக்கும்(40) கடந்த 98-ம் ஆண்டு திருமணம் நடந்தது. சுரேஷ் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். திருமணத்தின்போது அங்கயற்கண்ணிக்கு அவரது பெற்றோர் 50 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசைகள் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அங்கயற்கண்ணியிடம் அவருடைய மாமனார் சிவகாசி, மாமியார் சகுந்தலா, மைத்துனர் ரமேஷ் ஆகிய 3 பேரும் கூடுதலாக வரதட்சணை

வாங்கிவரும்படி வற்புறுத்தினார்களாம். அவர் மறுக்கவே அவரை அடித்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

இது பற்றி திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அங்கயற்கண்ணி புகார் செய்தார். அதன் பேரில் சிவகாசி, சகுந்தலா, ரமேஷ்

ஆகியோர் மீது இன்ஸ்பெக்டர் கோகிலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
==================
2. மதுரை :: என்ஜினீயர் மனைவி புகார்

மதுரை உத்தங்குடி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ரேகா(வயது 23). இவருடைய கணவர் பாபு(25). இவர்களுக்கு கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது. பாபு என்ஜினீயராக இருக்கிறார். இவர்கள் மேலூர் மூவேந்தர் நகரில் வசித்து வந்தனர். திருமணத்தின்போது ரேகாவின் பெற்றோர் அவருக்கு 55 பவுன் நகையும் பாபுக்கு 6 பவுன் தங்க செயினும் போட்டனர். மேலும் ரொக்கமாக 50 ஆயிரம் ரூபாயும், ரூ. 1 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசைகளும் கொடுத்தாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரேகாவிடம் மேலும் ரூ. 5 லட்சம் வரதட்சணை கேட்டு பாபு, அவருடைய தந்தை ராஜேந்திரன், உறவினர்கள் அடக்கி ஜெயலட்சுமி, விஜயலட்சுமி,

மணிகண்டன் ஆகியோர் சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீசில் ரேகா புகார் செய்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் சாரதா 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
=============
3. திருவாரூர், ஆக.10- 2009

திருவாரூர் சுந்தரவிளாகம் பகுதியைச் சேர்ந்தவர் நல்ல முகமது. இவரது மனைவி ஆசியாபீவி. இவர்களது மகன் சம்சுசித்திக். இவருக்கும், சென்னை ஆலத்தூரைச் சேர்ந்த ஜாபர் அலி மகள் கதிஜாபானுவுக்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில் சம்சுசித்திக், தனது மனைவி கதிஜாபானுவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார். இதற்கு அவரது குடும்பத் தினரும் உடந்தையாக இருந்துள்ளனர். இது குறித்து திருவாரூர் அனைத்து மகளிர் போலீசில் கதிஜாபானு புகார் கொடுத்தார். புகாரில் திருமணத்திற்கு வரதட்சணையாக கொடுத்த நகையை எனது கணவர் வீட்டினர் பறித்துக்கொண்டனர். மேலும் ரூ.50 ஆயிரம் வரதட்சணையாக கேட்டு துன்புறுத்தி கொடுமைப் படுத்தியதாக தெரிவித்திருந் தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்சுசித்திக்கை கைது செய்தனர். மேலும், அவரது தாய் ஆசியாபீவி, சகோதரர் மாலிக், ஆயிஷா ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.

===========================
4. சூளகிரி, ஆக.6- 2009

ஓசூர் அருகே இளம் பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக காதல் கணவர் கைது செய்யப் பட்டார்.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

காதல் திருமணம்

ஓசூர் அடுத்த மூக்கண்டப்பள்ளி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பெருமாள் (வயது 29). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி

சுதா (20). கடந்த ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது.

சுதாவின் வீட்டில் குடியிருந்த போது, "மலர்ந்த காதலால்" பெருமாள் திருமணம் செய்து கொண்டார். அதே நேரத்தில், இவர் இன்னொரு பெண்ணுடன் ஏற்கனவே

தொடர்பு வைத்திருப்பதாக கூறப்படுகிறது. தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் அவர் நர்சாக வேலை பார்த்து வருகிறார். பெருமாளின் காதல் திருமணம் அறிந்த அவர்

வேதனைப்பட்டுள்ளார்.

கள்ள தொடர்பு

தன்னுடைய `மலரும் நினை வுகளை' ஞாபகப்படுத்தி அடிக்கடி பெருமாளுக்கு கடிதம் எழுதியுள்ளார். குறிப்பாக, கடிதத்தில் ``உன்னை மறக்க முடியவில்லை. நீ

இல்லாமல் என்னால் வாழ முடியாது'' என குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதத்தை பார்த்து சுதா வெகுண்டெழுந்தார்.

அதனால், காதல் தம்பதி களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. வேறு பெண்ணின் தொடர்பை கைவிடும்படி சுதா கண்டித்துள்ளார். எனினும் பெருமாள் வழக்கம் போல

அந்த பெண்ணுடன் ரகசியமாக பழகி வந்துள்ளார். அதன் காரணமாக, அவர்களுக்குள் தகராறு முற்றியது.

கணவர் கைது

பிரச்சினையை திசை திருப்ப (யார் திசை திருப்புகிறார்கள் என்பதைக் கவனியுங்கள்!) சுதாவிடம் வரதட்சனை கேட்டு பெருமாள் கொடுமைப் படுத்தி உள்ளார். மேலும், வீட்டையும் தனது பெயருக்கு எழுதி தரக்கோரி அடித்து, உதைத்து சித்ரவதை செய்துள்ளார்.

பெருமாளின் கொடுமை தாங்க முடியாமல் சுதா ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

டவுன் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுரேஷ்குமார் வழக்குபதிவு செய்து பெருமாளை கைது செய்தார். தொடர்ந்து, விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் எம்.

ஜி.ஆர்.நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது.

====================

5. ஸ்ரீவில்லிபுத்தூர், ஆக.6- 2009

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரூ. 10 லட்சம் பணம் கேட்டு மனை வியை கொடுமைப்படுத்திய கணவன் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

திருமணம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது குன்னூர். இந்த பகுதியை சேர்ந்தவர் ஜெய ஆனந்தன். இவரது மகள் சுபா (வயது 32). இவருக்கும் திருச்சி

அருகே உள்ள அரியமங்கலத்தை சேர்ந்த மனோகரனுக்கும் சிலஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது சுபாவுக்கு 101 பவுன் நகை மற்றும் ரூ.25 லட்சம் ரொக்கம் கொடுக்கப்பட்ட தாக தெரிகிறது. இந்தநிலையில் புதிய தொழில் தொடங்க வேண்டும் என்று கூறி மனோ கரன், மனைவி சுபாவிடம் உன் பெற்றோர் வீட் டில் ரூ.10 லட்சம் வாங்கி வருமாறு கூறினார்.

வழக்குபதிவு

ஆனால் பணம் வாங்கி வர சுபா மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மனோகரன், சுபாவை சித்ரவதை செய்ததாக தெரிகிறது. இதற்கு மனோகரனின் தந்தை வெங்கடேஷ்வரன், தாய் சுகுணாபாய், சகோதரர் பிரபாகரன், அவரது மனைவி பிரபாவதி ஆகியோர் உடந்தையாக இருந்தனர்.

இதுகுறித்து சுபா ஸ்ரீவில்லி புத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் மனோகரன், வெங்கடேஷ்வரன், சுகுணாபாய், பிரபாகரன், பிரபாவதி மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

==================

6. தேனி,ஆக.10- 2009

பெரியகுளம் அருகே பெண்ணிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக, அந்த பெண்ணின் கணவர் உள்பட 3 பேர் மீது தேனி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

வரதட்சணை கொடுமை

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் கிராமத்தில், டாக்டர் ராஜேந்திர பிரசாத் தெருவினை சேர்ந்தவர் ராதாகிருஷ் ணன்(வயது 31). இவருக்கும், சின்னமனூர் வ.உ.சி.நகரை சேர்ந்த கலைவாணி(26) என்பவருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது, 25 பவுன் தங்க நகையும், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசையும் மணமகள் வீட்டார் கொடுத்ததாக தெரிகிறது.

6 மாதம் கணவருடன் தனிக்குடித்தனம் இருந்து விட்டு, கலைவாணியும் அவரது கணவரும் தாமரைக் குளத்திற்கு வந்துள்ளனர். அங்கு கணவர் ராதாகிருஷ்ணன்,

மாமனார் பாலகிருஷ்ணன், மாமியார் ராமுத்தாய் ஆகியோர் சேர்ந்து மேலும் 10 பவுன் தங்கநகையும், ஒரு லட்சம் பணமும் வரதட்சணை கேட்டு கலைவாணியை துன் புறுத்தியதாக கூறப்படுகிறது. கலைவாணியின் கழுத்தில் துண்டைப்போட்டு இறுக்கியும் துன்புறுத்தியதாக தெரிகிறது.

வழக்குபதிவு

இதுகுறித்து தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கலைவாணி புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனார்கலி, சப்-இன்ஸ்பெக்டர்

பாரிஷா பேகம் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
================

7. திருக்கோவிலூர், ஆக.10- 2009

திருக்கோவிலூர் அருகே வரதட்சணை கேட்டு பெண்ணை கொடுமைப் படுத்தியதாக கணவர் கைது செய்யப் பட்டார்.

வரதட்சணை கொடுமை

திருக்கோவிலூர் அருகே உள்ள புதுகருவாச்சியை சேர்ந்த சரவணன் (வயது 35) கூலி தொழிலாளி. இவரது மனைவி பூமாதேவி (31). இவர்களுக்கு கடந்த 14

வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் சரவண னுக்கும், காமாட்சி என்ற பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கணவன் - மனைவி இருவருக்கும்

தகராறு ஏற்பட்டது.

2-வது திருமணம்

இதன் பிறகு சரவணன் தனது மனைவி பூமாதேவி யிடம் ரூ.50 ஆயிரம் பணம், 15 பவுன் நகை வரதட்சணை யாக வாங்கி வரும்படி கொடுமைப்படுத்தியதாக

கூறப்படுகிறது.

இந்த சம்பவத்திற்கு பிறகு சரவணன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த காமாட்சி என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இது பூமாதேவிக்கு தெரிய வந்தது.

இதனால் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீசில் பூமாதேவி தனது கணவர் மீது புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ராஜகுமாரி, ஏட்டு சந்திரா ஆகியோர் வழக்குப் பதிவு செய்து சரவணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

(செய்தி - தினத்தந்தி)
====================

1 மறுமொழி:

')) said...

அம்மா தாங்கமுடியல சாமீ.... ஒவ்வொரு மகளிர் காவல் நிலையத்திலயேயும் டெய்லி நாலஞ்சி கேசு பதிவு செய்யனும் எதாவது -ட்டதிட்டம் இருக்கா? நல்ல வருமானம்... அப்புறம் என்ன எழுவுக்கு இதுபோல் -----கள் திருமணம் செய்து கொள்கின்றனர்... ஒரு முனுமாசம் முடிச்சா உடனே பொய்கேசு போட்டுவிடுறது... கோரட்டுகேசுன்னு அலைஞ்சி குடும்பமே நடுத்தெருவுல நிக்கு அப்புறம் சில கட்டப்பஞ்சயாத்து நாய்கள வச்சி பஞ்சாயத்து பேசுறது... இதெ பொலப்பா போச்சி
டவுரி அபிசர் விசாரிக்கனும் அவசரகதியில் கைது செய்யக்கூடாதுன்னு சட்டம் இருக்கு (ஆமாம் உண்மையிலேயே இருக்கா???) என்னைக்கு இந்த கொடுமை ஒயுமோ தெரியல...