பெண்ணைக் கண்டிக்கலாகுமோ!

ஒரே நாளில் (ஜூலை 6, 2009) மூன்று தற்கொலைச் செய்திகள். மூவரும் இளம் பெண்கள். காரணம், பெற்றோர் கண்டித்தது.

இதுபோன்ற பெண்கள் திருமணமானபின் கணவனோ கண்வனின் பெற்றோரோ கண்டித்தால் இதைத் தவிர வேறு என்ன செய்வார்கள்!

ஆனால் ஒரு வித்தியாசம். மணமானபின் அவள் தற்கொலை செய்துகொண்டால் கணவனையும் அவனது பெற்றோரையும் கைது செய்து உள்ளெ தள்ளிவிடுவார்கள். இதற்கென்றே தனிச் சட்டங்கள் இருக்கின்றன!

இப்போது செய்திகள். நன்றி - தினத்தந்தி
-------------------------

1.
டி.வி.பார்ப்பதை தாய் கண்டித்ததால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை. ஆவடி, ஜுலை.6- 2009

ஆவடியை அடுத்த பட்டாபிராம் நவஜீவன் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் தேவன். இவரது மனைவி பானு. இவர்களுக்கு கவுசல்யா (வயது 16) மற்றும் நந்தினி (13) என்று 2 மகள்கள் உள்ளனர். கவுசல்யா ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். நந்தினி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 1-ந் தேதி மாலை இருவரும் பள்ளியில் இருந்து வீட்டுக்கு சென்றனர்.

கவுசல்யா சீருடையை கழற்றாமல் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார். இதை கவுசல்யாவின் தாய் கண்டித்தார். தாய் கண்டித்ததால் வருத்தம் அடைந்த கவுசல்யா அறைக்குள் சென்று விட்டார். வெகு நேரமாக கவுசல்யா வெளியே வராததால் உள்ளே சென்று பார்த்த போது கவுசல்யா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். அவரை உடனடியாக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கவுசல்யா நேற்று காலை மரணம் அடைந்தார்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
=======================
2.
சேத்தியாத்தோப்பு அருகேஇளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை. தாய் கண்டித்ததால் மனமுடைந்தார்

சேத்தியாத்தோப்பு, ஜுலை.6- 2009

சேத்தியாத்தோப்பு அருகே தாய் கண்டித்த தால் மனமுடைந்த இளம்பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கடலூர் மாவட்டம் சேத் தியாத்தோப்பு அருகே உள்ள மதுராந்தகநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் குண சேகரன்.இவரது மகள் குண பாரதி (வயது 25).இவர் சிதம் பரத்தில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் குணபாரதி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் சகஜமாக சிரித்து பேசிவந்ததாக தெரிகிறது.இதை பார்த்த அவரது தாய் ராஜகுமாரி, திருமண வயதாகும் நீ இப்படி எல்லோரிடம் சிரித்து பேசாதே என்று குண பாரதியை கண்டித்ததாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த குணபாரதி சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார்.இதை பார்த்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணா மலைநகர் மருத்துவ மனையில் அனுமதித்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.நேற்று முன்தினம் குண பாரதிக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இது பற்றி ராஜகுமாரி ஒரத்தூர் போலீசில் புகார் செய்தார்.அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோடீஸ்வரன் , சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
==============
3.

வேலகவுண்டம்பட்டி அருகே மாணவி தூக்கு போட்டு தற்கொலை. தந்தை கண்டித்ததால்

பரமத்திவேலூர்,ஜுலை.6- 2009

வேலகவுண்டம்பட்டி அருகே டியூசனுக்கு போகவில்லையே என மகளை கண்டித்ததால் மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள செட்டிப்பாளையம் புள்ளக்கவுண்டம் பட்டியை சேர்ந்தவர் மகாலிங்கம்(வயது 50). இவரது மனைவி நல்லம்மாள்(38). இவர்களது மகள் மனிஷா(வயது 14). இவள் மாணிக்கம் பாளையத்தில் உள்ள ஒரு பள்ளியில் 10- ம் வகுப்பு படித்து வந்தாள்.

இந்த நிலையில் சம்பவத் தன்று மனிஷா பள்ளிக்கு சென்று டினிசனுக்கு செல்லாமல் வீட்டிற்கு வந்து விட்டதாக தெரிகிறது. இதைதொடர்ந்து அவளது தந்தை மகாலிங்கம் தனது மகளை டினிசனுக்கு செல்லாததை கண்டித்ததாக தெரிகிறது.
இதனால் மாணவி மனிஷா மனம் உடைந்த நிலையில் இருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் அவள் தனது துப்பட்டாவால் கழுத்தில் சுருக்கு போட்டு கொண்டு வீட்டில் இருந்த மின்விசிறியில் தொங்கி தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக தெரிகிறது.
மாணவியின் தாய் நல்லம்மாள் கூலிவேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தவர் தனது கணவர் மகாலிங்கத்திடம் மகள் எங்கே? என கேட்டுள்ளார். மகள் வீட்டிற்குள் இருப்பதாக கூறியுள்ளார்.

இதையடுத்து நல்லம்மாள் வீட்டிற்குள் சென்று பார்த்த போது தனது மகள் மின்விசிறியில் தூக்கு போட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதை பார்த்து அலறினார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு மாணவியின் தந்தை மற்றும் அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தூக்கில் தொங்கி கொண்டு இருந்த மனிஷாவை துப்பட்டாவை அறுத்து உடனடியாக அவரை மீட்டு, திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் சேர்க்கப்பட்டாள். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக செத்தாள்.
இந்த சம்பவம் குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

5 மறுமொழிகள்:

')) said...

The blogger believes whatever has been published by the newspapers. If he is so innocent then only god can save him. To highlight his opinion he has used three news items.

Anonymous said...

THe blogger has believed whatever has been published by the newspapers. I do not.

')) said...

Mr. V. Rajagopal,

I am fully aware of the was news regime works since I was a news correspondent once.

The news items which I have quoted were all verbatim copy of the FIR's filed in various courts.

There are correspondents of Thinath thanthi, Dinamalar etc whose task is to go round the police stations and Magistrate courts and collect such information as filed over there.

They have neither the time nor inclination to dwell deep into the happenings, make inquiries etc, because they have to be filed on the same day to catch the edition.

Investigative journalism and doctoring of the facts are the handiwork of magazines and tabloids.

If you have any information to disprove these news items, come out with facts.

Do not try to confuse others with hypothetical ideas.

')) said...

பாரட்ட தக்க விசயம்... ஆரம்பத்துலயே இந்த புண்ணியவான் மாப்ள தப்பிச்கிட்டாரு.. இல்லாட்டி கள்கக்காதல் கொலை அல்லது 498ஏ வரதட்சணை கொடுமை பொய்வழக்கு... ஏமாந்த சோனகிரி தலையில் இது போல் பெண்களை குடும்ப மானம் மயிறு மட்டை என்று கட்டி வைத்து... அப்பாவி கூட்டத்தை போலீஸ் கோர்ட்டு என்ற அலையவிடுவது வாடிக்கை... இதல்லம் இப்போது வழக்க மாக நடக்கம் வேடிக்கை..

http://www.dinamalar.com/sambavamnewsdetail.asp?News_id=11273

')) said...

ஐயோ பாவம் ராஜகோபால்! இந்த ஒரு செய்தியை மட்டும் படித்து விட்டு ஒரு முடிவுக்கு வந்து விட்டார்.

அனுபவம் தான் சிறந்த ஆசான். நெருப்பு சுட்டால் தான் உணரமுடியும்.