வயது தெரிந்து லவ் பண்ணுங்கப்பா!

இதோ இன்னொரு பாரதி கண்ட புதுமைப்பெண்!


இப்போதெல்லாம் இளம் பெண்களை பள்ளிக்கு அனுப்பிவிட்டு பெற்றோர்கள் அவர்கள் வீட்டுக்குத் திரும்பி வருவார்களா, அல்லது “உல்லாசமாக” யாருடனாவது கிளம்பி விடுவார்களா என்று கிலி பிடித்து அலைகின்றனர்!


ஆனால் மைனர் பெண்ணை இழுத்துக்கொண்டு போனான் என்று சட்டப்பிடியில் சிக்கி அந்தப் பையன் கைதாகி விடுவான். பெண் ஆசைப்பட்டு அந்த ஆணை இழுத்துக்கொண்டு ஓடினாலும், “மைனர் பெண்ண இழுத்துக்கொண்டு போய் கற்பழித்தான்” என்று பெற்றோர்கள் புகார் கொடுத்து அந்தப் பையனை உள்ளே தள்ள ஏற்பாடு செய்து விடுவார்கள். பிறகு சில ஆண்டுகள் கழித்து ஒன்றும் நடக்காததுபோல் இன்னொரு சோப்ளாங்கி ஆணைப் பிடித்து திருமணமும் நடத்தி விடுவார்கள். பிறகு விவரம் தெரிந்தபின் அந்த கணவன் “கிக்கிரி பிக்கிரி” என்றால் இருக்கவே இருக்கிறது “வரதட்சணை கேசு" (498A) என்னும் அஸ்திரம்!


நல்ல கொண்டாட்டமய்யா இந்த புதுமைப் பெண்களுக்கு! உல்லாசத்திற்கு உல்லாசமும் ஆயிற்று. வசதியான வாழ்க்கைக்கு கணவனும் ஆயிற்று!!


இப்போது செய்தியைப் படியுங்கள்:-


பள்ளி மாணவி காதலனுடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம்


மீஞ்சூர்,மே.26- 2009 - செய்தி : தினத்தந்தி


மீஞ்சூர் அருகே உள்ளது செங்கழுனீர்மேடு கிராமம். இந்த கிராமத்தில் வசிக்கும் சரவணன் என்பவரின் மகள் சுகன்யா(வயது17) இவர் மணலி புதுநகரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம்வகுப்பு படித்து வந்தார். விடுமுறையில் வீட்டில் இருந்த சுகன்யாவை காணவில்லை என்று காட்டூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.


இதை தொடர்ந்து பொன்னேரி டி.எஸ்.பி. ரங்கராஜன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சாமிமாணிக்கம் சப்-இன்ஸ்பெக்டர் முகமதுசெரிப், ராமச்சந்திரன், தமிழ்செல்வன் ஆகிய போலீசார் சுகன்யாவை தேடிவந்தனர்.


இந்தநிலையில் நேற்று சுகன்யா காதல் கணவரான மீஞ்சூர் காலனியை சேர்ந்த பாலா என்கிற பாலசுப்பிரமணி(25) உடன் மீஞ்சூர் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.


அப்போது சுகன்யா பாலசுப்பிரமணியை காதலித்து வந்ததாகவும் தாங்கள் திருமணம் செய்துகொள்ள ஓடிவிட்டதாகவும் கூறினார். ஆனால் சுகன்யா மைனர் என்பதாலும் தந்தை சரவணன் கொடுத்த புகாரின்பேரில் பாலசுப்பிரமணி கைது செய்யப்பட்டார்.


சுகன்யா பெற்றோருடன் செல்ல மறுத்துவிட்டார். பின்னர் சுகன்யாவையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 மறுமொழி:

')) said...

இப்போ ரேப்பு கேசு! கல்யாணத்துக்கு அப்புறம் என்ன மாதிரி ஏமாந்தவன் தலையில ஆப்பு கேசு (அதாங்க 498ஏ dowry case)...
நடத்துங்க உங்க கூத்த... எல்லாம் நல்லத்துக்குத்தான்