கைதுசெய்த கணவனை ஏன் வெளியே விட்டாய்?

கைது செய்யப்பட்ட கணவனையும் அவரது வீட்டாரையும் ஏன் ஜாமீனில் வெளியே விட்டீர்கள் என்று பெண்வீட்டார், கபூர்தாலாவில் செவ்வாய் அன்று சுமார் 6 மணி நேரம் SSPயின் வீட்டு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கபூர்தாலா : தன் கணவன் மீதும் இன்னும் சிலர் மீதும் புகார் கொடுத்த ஒரு பெண்ணும் அவரது வீட்டாரும், கபூர்தாலாவில் செவ்வாய் அன்று சுமார் 6 மணி நேரம் SSPயின் வீட்டு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால், SSP திரு ராகேஷ் அகர்வால் ஆவர்களோ, குற்றம் சுமத்தப்பட்டவரை வெளியே விட்டதில் எந்த முறைகேடும் இல்லை. பெண் வீட்டார், போலீஸை நெருக்க முயல்கின்றனர் என்று கூறினார். திரு அகர்வால் " ...குற்றம் சுமத்தப்பட்டவர்கள், தாங்கள் நிரபராதி என்றும், உண்மையை நிலைநாட்ட தங்களுக்கு உதவி வேண்டும் .." என்று கூறினர் என்றார். மேலும் SSP கூறியதாவது ..." முதல் நாள் இரவு 10 மணி அளவில் என் வீட்டுக்கு வந்தனர். அவர்களை அடுத்த நாள் அலுவலகம் வரச்சொன்னேன்..ஆனால் அதற்குள்ளே ஆர்ப்பாட்டம் தொடங்கி விட்டனர், ..." என்றார்

----

செய்தி: Times of India