பாவம், பேதைப் பெண்!

டில்லிக்கு அருகாமையிலுள்ள கூர்கான்வ் என்னுமிடத்தில் வசிக்கும் ஷில்பி என்னும் பெண் தன் மாமனார் மற்றும் மாமியாரைக் கொல்ல கொலையாட்களை ஏற்பாடு செய்தது தெரியவந்து அவள் தற்போது அந்தக் குற்றத்திற்குத் துணை போன தன் தாய் மற்றும் சகோதரர்களுடன் கம்பி எண்ணுகிறாள். அந்த ஷில்பி தன் கணவனின் பெற்றோரிடமிருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அபகரிக்கத் திட்டமிட்டாள். மாமனாரின் பெயர் கர்னல் ராஜீவ் குமார் கோயல். ஷில்பா அந்தக் கொலைக்காக அவளுடைய கார் டிரைவரிடம் ரூ. 50 லட்சம் கூலியாகப் பேசி முன்பணமாக ரூ.15,000 கொடுத்திருக்கிறாள். இது எப்படியோ வெளியே தெரிந்துவிட்டது. தகுந்த சாட்சியங்களுடன் கேஸ் பதிவாகி இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாட்டிக்கொண்ட ஷில்பி என்ன செய்திருக்கிறாள் தெரியுமா - தன் மாமனார், மாமியார் மேல் வரதட்சிணை கேசு போட்டிருக்கிறாள் (Sec 498A of IPC).

திருமணம் என்பது ஒரு "டிக் டிக்" என்று அடித்துக் கொண்டிருக்கும் டைம் பாம் - அது எந்த நேரமும் 498-A , குடும்ப வன்முறைச் சட்டம், வரத்ட்சிணை ஒழிப்புச் சட்டம் போன்ற வடிவில் மேலெழும்பி தங்களை தாக்கும் என்பதை இந்திய ஆண்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்!