போலீஸ் கணவன் மீது பெண் வரதட்சணை புகார்

செய்தி - தினமலர் :: ஆகஸ்ட் 20,2008

மேலூர்: வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக, போலீஸ் வேலை பார்க்கும் கணவன் உட்பட 6 பேர் மீது, பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.

மதுரை மாங்குளத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் மகள் பொன்முத்து(30). அத்தை மகன் மணிகண்டனுக்கும், இவருக்கும் திருமணம் நிச்சயம் செய்த போது, 15 சவரன் நகையும், 40 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் தருவதாக பேசப்பட்டுள்ளது. ஆனால், இதை பெண் வீட்டார் தரமுடியாமல் போகவே, நிச்சயம் செய்த திருமணம் நின்று போயுள்ளது. இதன் பிறகு, மேலூர் போலீசில் புகார் செய்யப்பட்டு இவர்களுக்கு 8.2.06ல் திருமணம் நடைபெற்றுள்ளது.
சென்னையில் உள்ள, போலீஸ் பட்டாலியனில் மணிகண்டனுக்கு வேலை கிடைக்கவே, பொன்முத்துவை அவரது பெற்றோர் வீட்டில் அவர் விட்டு சென்றுள்ளார். சேர்ந்து வாழ பலமுறை அழைத்தும் வரதட்சணை நகை, பணம் கொடுக்காத வரை வாழ முடியாது என்று மணிகண்டன் கூறி உள்ளார்.மேலூர் கோர்ட் உத்தரவின்படி, மகளிர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்கு பதிவு செய்து மணிகண்டன், அவரது தாயார் தொட்டிச்சி(45), சகோதரர்கள் சுரேஷ்(28), ராஜ்குமார்(26), தாய்மாமன்கள் செல்லத்துரை(55), நாகராஜன்(48) ஆகியோரை தேடி வருகின்றனர்.

--------------

இதில் ஒரு முக்கியமன விஷயத்தைக் கவனியுங்கள். அந்தப் பெண் தரப்பு செய்தியைத்தான் பிரசுரிக்கிரார்கள். ஏனெனில், "அய்யோ பாவம், ஒரு பெண்ணை வரதட்சினைக் கொடுமை செய்தார்கள்" என்றால்தன் வாசிப்பவர்கள் மனம் உருகிவிடுவார்கள். அந்த கணவன் மற்றும் அவர்கள்வீட்டார்கள் வில்லன் லிஸ்டில் வந்துவிடுவார்கள். நியாயம் எந்தப் பக்கம் என்பதெல்லாம் கவலையே கிடையாது!

ஆண்களே வேண்டாம் இந்த விஷப் பரீட்சை! கல்யாணம் என்றாலே காததூரம் ஓடுங்கள்! 498A உங்களைத் துரத்துகிறது!

1 மறுமொழி:

Anonymous said...

check out Page 2 of Times of India Chennai today - 22nd August.
Detailed articles on w498A.