ஆணின் உயிர் என்ன மட்டமா?

இரண்டு தற்கொலைகள்!
---------------------------------
செய்தி - 1

வரதட்சணை கேட்டு மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வாலிபருக்கு 8 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

திருவள்ளூர் மாவட்டம் புழல் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 24). ஆட்டோ டிரைவர். இவருக்கு கடந்த 8-3-2007 அன்று திருமணம் நடந்தது. மனைவி காஞ்சனா தேவி. திருமணத்தின் போது நகை-பணம் மற்றும் வீட்டு பொருட்கள், சீதனம் தரப்பட்டது. இருப்பினும் வரதட்சணையாக புதிய ஆட்டோ, பிரிட்ஜ், டி.வி. போன்றவற்றை வாங்கி வருமாறு மனைவியை சரவணன் துன்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த காஞ்சனா தேவி மறு மாதமே 16-4-2007 அன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. நீதிபதி எம்.சேகர் முன்னிலையில் நடந்த இந்த வழக்கில் வக்கீல் ஸ்ரீதர் ஆஜராகி வாதிட்டார். முடிவில் நீதிபதி, சரவணனுக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு கூறினார். தற்கொலை செய்து கொள்ள தூண்டிய குற்றத்திற்காக 7 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 5 அயிரம் அபராதமும் வரதட்சணை கொடுமைக்காக 8 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும் சித்திரவதை செய்த குற்றத்திற்காக 2 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்தார். (செய்தி: தினமலர்)

செய்தி - 2

அய்யப்பன் சென்னையிலுள்ள ஒரு ஆட்டோ ஓட்டுனர். அவருடைய மனைவி முத்துலட்சுமி ஒரு சிறிய தகறாரில் கணவனைத் திட்டிவிட்டு, அவனைப் பற்றி பெண்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்போகிறேன் என்று அச்சுறுத்திவிட்டு பிறந்த வீட்டுக்குச் சென்றிருக்கிறார். பிறகு அய்யப்பன் வீட்டிலில்லாத நேரத்தில் சில போலிஸ்காரர்கள் அவரைப் பற்றி அக்கம் பக்கத்தில் விசாரித்திருக்கிறார்கள். இதைக் கேள்விப்பட்ட அய்யப்பன் அவமானம் தாங்காமல் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்துவிட்டார். (செய்தி: டைம்ஸ் ஆஃப் இந்தியா 02-08-2008)

இந்த இரண்டு செய்திகளையும் பாருங்கள். மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டியதாக கணவனுக்கு 8 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கிவிட்டார்கள். இந்த அய்யப்பனை தற்கொலைக்குத் தூண்டிய அவருடைய மனைவி மற்றும், உடந்தையான அவளுடைய குடும்பத்தினர், காவல் துறையினர் ஆகியோரை எந்த சட்டம் கேட்கப் போகிறது??

1 மறுமொழி:

Anonymous said...

நல்லாக கேட்டீங்க!

பொம்பளை போலிஸ் ஸ்டேஷன் வாழ்க்கையை தொலைத்ததோர் ஏராளம்- பெண்களையும் சேர்த்து.

இதுக்கபுறமாவது போலிஸ் ஸ்டேஷன் பக்க இந்தக் கூறு கெட்ட சிறுக்கிக போகம இருக்க அனுமன் அருளட்டும்!